Saturday, February 15, 2025
முகப்புசெய்திசென்னை -மதுரவாயல்: தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!

சென்னை -மதுரவாயல்: தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!

-

னிக்கிழமை (25/8) மாலை மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் ஒருவர் கொலை செய்து வீசப்பட்டிருந்தார். விசாரணைக்காக போலீசு வந்தது. கொலை சம்பவம் என்பதால் பகுதி மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் வேடிக்கை பார்த்த பகுதி இளைஞர்களை குறிவைத்த போலீசு அவர்களைத் தூக்க முடிவு செய்தது. வழக்கமாக குற்றவாளிகள் கிடைக்காமல் இப்படி அப்பாவிகள் மீது வழக்கு போடுவது போலீசின் உத்தி. அருகில் நின்று கொண்டிருந்த புரட்சிகர மாணவர் இளைஞர்-முன்னணி தோழர்கள் திவாகரும், குமரேசனும் மாணவர்களுக்கே உரிய துணிவோடு கொலையில் சம்பந்தமற்ற அப்பாவி இளைஞர்களை எதற்காக கைது செய்கிறீர்கள் என்று போலீசு கும்பலை எதிர்த்துக் கேட்டனர். உடனே தோழர்களை தாக்கிய காக்கிச்சட்டை ரவுடிகள் அவர்களையும் வண்டிக்குள் திணித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு பறந்தனர்.

போலீசு அந்த இளைஞர்களையும், தோழர்களையும் கைது செய்யவில்லை மாறாக கடத்தியிருக்கிறது. போலீசு ரவுடிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்களும் தோழர்களும் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருக்கின்றனர்.

தகவலை அறிந்த பு.மா.இ.மு தோழர்கள் பகுதி மக்களை அணிதிரட்டிக் கொண்டு காக்கிச்சட்டை குண்டர்களுக்கு எதிராக முழக்கமிட்டபடியே மதுரவாயல் காவல் நிலையத்திற்கு முன்பு கூடினர். பொய் வழக்கில்  கைது செய்யப்பட்ட தோழர்களையும், இளைஞர்களையும் உடனடியாக விடுவிக்க கோரியும், அவர்கள் எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தையும் கேட்ட போது நீங்கள் காவல்துறை ஆய்வாளரை தாக்கியுள்ளீர்கள் எனவே தான் கைது செய்துள்ளோம் என்றார் உதவி ஆணையர் சீனிவாசன். போலீசின் அபாண்டமான குற்றச்சாட்டை மறுத்த தோழர்கள் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்காவிட்டால் முற்றுகைப் போராட்டம் நட்த்துவோம் என்று கூறி காவல் நிலையத்தின் வாயிலிலேயே அமர்ந்தனர்.

முழக்கமிட்டபடி அமர்ந்திருந்த தோழர்களை போலீசு கும்பல் முதலில் அமைதியான முறையில் சுற்றி வளைத்துக் கொண்டு நின்றது. அதற்கடுத்த சில நிமிடங்களில் கடித்து குதறுவதற்காக காத்திருக்கும் வெறிநாய்களைப் போல தோழர்கள் மீது பாய்ந்தது. அவர்களுடைய லத்திக் கம்புகள் தோழர்களுடைய எலும்புகளை முறித்தன, தோல்களை உரித்தெடுத்தன. கண்ணில் தென்பட்ட சிவப்புச் சட்டை உருவங்கள் அனைத்தையும் விளாசி எடுத்தன லத்திக்கம்புகள். பட்டப்பகலில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாசிச ஜெயாவின் வளர்ப்புப்பிராணிகள் இவ்வாறு வெறியாட்டம் போட்டன.

இவ்வாறு கொலைவெறித்தாக்குதல் நடத்தியதுடன் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டவர்களை கைதும் செய்திருக்கிறது. இந்த காட்டுமிராண்டி தாக்குதலில் ஒரு தோழருடைய மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, இரு தோழர்களுடைய எலும்புகள் விரிசல் விட்டு உடைந்திருக்கின்றன. பலத்த காயம் அடைந்திருக்கும் இந்த மூன்று தோழர்களும் கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அபாய கட்டத்தோடு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேற்று கைது செய்யப்பட்டவர்களில் பதினாறு பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாற்பத்து மூன்று மாணவர்கள் இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.  பு.மா.இ.மு தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளையும் கையிலெடுத்துப்போராடி வருவது ஆளும் வர்க்கத்திற்கும் அதன் ஏவல் நாய்களான போலீசுக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனவே தான் தோழர்களை சிறைக்குள் தள்ளுவதன் மூலம் அவர்களை போராட்டக்களத்திலிருந்து அப்புறப்படுத்திவிடலாம் என்று கனவு காணுகிறார்கள். நக்சல்பாரி இயக்கத் தோழர்கள் என்றுமே சிறையைக்கண்டு அஞ்சியதில்லை.

பாசிச ஜெயாவின் ஆட்சியில் புழல் மட்டுமா சிறைச்சாலையாக இருக்கிறது. தமிழகமே சிறைச்சலையாகத்தான் இருக்கிறது. அத்தகைய மிகப்பெரிய சிறைக்குள்ளிருந்து கொண்டு புழல் என்கிற சிறிய சிறைக்கு அஞ்சுபவர்கள் அல்ல இந்தத் தோழர்கள். போராட்டக் களத்திலிருந்து பு.மா.இ.முவை ஒழிக்க வேண்டும் என்று ஆட்டம் போடும் போலீசின் கொழுப்பும், திமிரும் உழைக்கும் மக்களது போராட்டத்தால் ஒடுக்கப்படுவது உறுதி.

  1. மக்கள் வரி பணத்தில் வாழும் நாய் நீ. மக்கள் சொத்தை ஏமாற்றிவிட்டு வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கும் ஜெயாவா இழுத்துக்கொண்டு போய் கோர்ட்டுல நிறுத்து, ஜெயில் போடு. சமுக அக்கரையோடு, அதற்க்காக போராடும் தோழர்களை ஏன்டா? வதைக்கிறிங்க!

  2. மோசமான் அணுகுமுறை
    //பாசிச ஜெயாவின் ஆட்சியில் புழல் மட்டுமா சிறைச்சாலையாக இருக்கிறது. தமிழகமே சிறைச்சலையாகத்தான் இருக்கிறது// மிக சரியான வார்த்தை.

  3. ஜனநாய முறையில் நடக்கும் இது போன்ற போராட்டங்களில் போலீஸ் தடியடியை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவது ஜனநாயக, மனித உரிமைகளை மீறும் கண்டனத்துக்குரிய செயல்..

  4. மக்களின் வரிப்பணத்தில் கொழுக்கும் அரசாங்க ரவுடிகளின் அராஜகத்திற்க்கு அளவேயில்லை. ஆனால் இது முடிவல்ல! இளம்தோழர்களின் துவளாத நெஞ்சுறுதி அவர்களை விரைவில் கலங்கடிக்கும்.

    பொய்கேசுல உள்ள தள்ளவும், லத்தி சார்ஜ்ப் பண்ணவும் காத்திருந்து திட்டம் போட்டு, தாக்குதலை துவங்கியுள்ளது, போலீசு. லத்தியைவிட புமாஇமுவின் செங்கொடி பலமானது, திரும்பியிருந்தால், லத்தி தாங்கியிருக்காது. கடைக்கோடி மக்களின் வியர்வைத்தான் சம்பளமாக விழுங்குகின்றன இந்த போலீசு நாய்கள்.ஆனால், வாலட்டுவதோ திருடர்களுக்கு!

    சென்னை அருகேயுள்ள வாலாஜாபாத் பஸ் ஸ்டான்டில் பூ விற்கும் 28 வயது இளம் பூக்காரர் கூறியது, ” நான் புத்தி தெரிந்த வயதிலிருந்து இங்கதான் பூ விக்கறேன். ஒரு தடவை போலிசுக்கரான் ஒருத்தன் நிறைய பூ வாங்கிட்டு கம்முனுப் போனான். அவனை கூப்பிட்டு பூக்கு உரிய காசைக்கேட்டேன். ‘வீட்டுப்பக்கம் வா தர்றேன்’ என்று திமிராக முறைத்தான். நான் விடாமல், எனக்கு வீடேல்லாம் தெரியாது. இப்பவே பணம் கொடுங்கள் என்றேன். அனைவரின் முன்னிலையிலும் கேட்டதால், எரிச்சலடைந்தவனாய் பணம் கொடுத்துவிட்டு சென்றான். இரண்டு நாட்கள் கழித்து என் கடை இல்லாதபடி செய்துவிட்டான்.

    அதற்காக நான் சோர்ந்துவிடவில்லை. பிறகு, சைக்கிளில் பூ விற்கிறேன். மறுபடியும், ஒரு பெண் போலிசு அதைப்போலவே செய்தார். நான் விடவில்லை. அப்பவும் பணம் வாங்கினேன். இரவு, பகல் என்று 10 கி.மி சைக்கிள் மிதித்து பூ வாங்கி வருகிறேன். அதை என் பொண்டாட்டி கைவலிக்க கஷ்டப்பட்டு, கட்டி தருது, நடுவுல இவனுங்க யாரு என் உழைப்பை தின்னறதுக்கு. எங்கப்பா எனக்கு சொத்து வைக்கல, எனக்கு,நிறைய தைரியத்தை வைச்சிட்டு போயிருக்காரு, என்றார்…. இந்த உழைப்பாளிகளின் வாரிசுகள்தான் எம் புமாஇமு சகோதர்கள்.

    தலைவனு சொல்ற வெள்ளை வேட்டி, சட்டை கட்டினவங்களெல்லாம் நமக்கு சல்யூட் அடிக்கறானுங்க.ஆனால் புமாஇமுல ,சிவப்பு சட்டைப் போட்ட சின்ன குழந்தைகள்கூட சட்டம் பேசுதே என்ற பொறுமல் ஒருபுறம். புமாஇமு ஆர்ப்பாட்டம், கூட்டம் எதுனாலும் போலீசுக்கு காய்ச்சல் மறுபுறம். காய்ச்சல் தொடரும்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க