மோடி இப்படியொரு திடீர் ஆதரவை அவரே எதிர்பார்த்திராத ஒரு நபரிடமிருந்து வருமென்று நினைத்திருக்க மாட்டார். சமீபத்தில் 63-வது பிறந்த நாளை கொண்டாடிய மோடிக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பல முற்போக்காளர்களால் வியந்தோதப்படும் மனித உரிமைப் போராளியுமான வி.ஆர். கிருஷ்ணய்யரிடமிருந்து வாழ்த்து கடிதம் வந்திருந்தது. அதில் வரும் 2014 மக்களவைத் தேர்தலுக்கு மிகச்சரியான பிரதமர் வேட்பாளர் மோடி தான் என கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். அதற்கு மூன்று காரணங்களை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஒன்று சூரிய மின்சக்தி, இரண்டு மது ஒழிப்பு, மூன்று மோடியும தன்னைப் போலவே ஒரு சோசலிஸ்டு!
ஏற்கெனவே கடந்த ஜூன் மாத துவக்கத்தில் மோடி பாஜகவின் தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து கிருஷ்ண அய்யர் அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் மது ஒழிப்பையும், ஊழலற்ற நிர்வாகத்தையும் குஜராத்தில் கொண்டு வரும் பட்சத்தில் நல்ல தலைவராக மோடி உருவெடுக்க முடியும் என்று வழிகாட்டியிருந்தார்.
கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்து பல முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை வழங்கியவர்களில் ஒருவர் வி.ஆர்.கிருஷ்ண அய்யர் என்பதை மறுக்க முடியாது. பல வழக்குகளில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மக்கள் தரப்பில் நின்று விளக்கம் சொல்ல முயற்சித்தவர் தான். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அரசே இலவசமாக சட்ட உதவி வழங்க வகை செய்யும் அரசியல் சாசனம் பிரிவு 21-ஐ நடைமுறைப்படுத்த அரசுக்கு உத்திரவிட்டவர். இசுலாமிய தனிநபர் சட்டங்களை வைத்தும் ஓரளவு நியாயமான தீர்ப்புகளை வழங்கியவர்களில் முக்கியமானவர் கிருஷ்ண அய்யர் என்பதும் ஊரறிந்த உண்மை.
1980-ல் ஓய்வுபெற்ற பிறகும் மனித உரிமை செயல்பாட்டாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். மதானி நீண்ட காலம் சிறையில் வாடுவது பற்றி குடியரசுத் தலைவருக்கு பல முறை கடிதம் எழுதியவர். பல்வேறு தூக்குத் தண்டனை கைதிகளின் மறுவாழ்வுக்காக கடைசி நிமிடம் வரை குடியரசுத் தலைவருக்கு பகிரங்க கடிதம் எழுதி வருபவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளனுக்காக கூட குரல் கொடுத்து வருபவர் தான். 2008-ல் இரானில் பகாய் சமய வழிபாட்டு தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சர்வதேச மனித உரிமை அமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட போது அதில் கையெழுத்திட்ட நீதிபதிகளில் இவரும் ஒருவர். இந்தியாவில் இசுலாமியர்கள் தாக்கப்படும்போதெல்லாம் பலமுறை அவர்களுக்காக குரல் கொடுத்தவர். 2002-குஜராத் படுகொலையை முதல்வர் மோடியே நன்கு திட்டம் தீட்டி நடத்திய இனப்படுகொலை என்று காட்டமாக அறிக்கை விட்டவர்.
இப்பேற்பட்ட மனித உரிமைப் போராளிதான் இன்று தனது பார்வையில் மோடி சோசலிஸ்டாக படுவதை வெட்கமில்லாமல் பொது சபையில் முன் வைக்கிறார்.
1957 கேரள சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற கிருஷ்ணய்யரை தனது அமைச்சரவையில் சட்ட அமைச்சராக நம்பூதிரிபாடு சேர்த்துக் கொண்டார். இவரது காலத்தில் தான் கேரளாவில் நிலச்சீர்திருத்தம் முன்னோடி மாநிலம் என்ற வகையில் ஓரளவு நிறைவேற்றப்பட்டது. அறுபதுகளில் நீதித்துறைக்கு சென்று விட்ட இவர், ஓய்வு பெற்ற பின்னர் 1987-ல் குடியரசுத் தலைவர் தேர்தலில் சி.பி.எம்-ன் வேட்பாளராக காங்கிரசின் வெங்கட்ராமனை எதிர்த்து நின்றார். அப்போதும் அத்வானியிடம் ஆதரவு கேட்க இவர் தவறவில்லை. ஆனால் அத்வானியோ சோவியத் யூனியனை ஆதரிப்பவர்களை நாங்கள் எப்படி ஆதரிக்க முடியும் என்று கேட்டு கிருஷ்ணய்யரின் மூக்கை உடைத்தார். இப்படி ஆதரவு கேட்டது பற்றி சிபிஎம் கட்சியினர் கொஞ்சமும் முணுமுணுக்கவில்லை.
இப்போது மோடியின் முறை. மோடியின் நிலைமையும் மக்கள் அரங்கில் மிகவும் பரிதாபகரமாக இருப்பதால் இதனை வேண்டாமென்றும் தட்ட முடியாது. வேண்டும் என்றும் பிடித்து மடியில் போட முடியாது. சொந்த கட்சியிலேயே சூன்யம் வைக்க பலரும் வலம் வருகையில் இதுபோன்ற யோக்யர்களின் சான்றிதழ் கொஞ்சம் அவருக்கு தேவைப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஓட்டை பிரிப்பதை தாண்டி அதில் ஒரு இழவும் இல்லை. எனினும் இடதுசாரி முகாம் மற்றும் சிபிஎம்மின் பிரச்சாரத்தை எதிர்கொள்வதற்கு கிருஷ்ணய்யரின் ஆதரவு மோடிக்கு தேவைப்படலாம். ராமனுக்கு விபீஷ்ணன் வேலை பார்க்க ஒருவர் கிடைத்திருப்பதாகவும் இதனைச் சொல்லலாம்.
சோசலிச குஜராத்தின் வாடகைத் தாய்மார்கள் பற்றி கிருஷ்ணய்யருக்கு தெரியாமல் இருக்கலாம். புள்ளிவிவரப் பொய்கள் மூலம் குஜராத்தின் வளர்ச்சி பொய்யாக கட்டியமைக்கப்படுவது இந்த நீதியரசருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் நலனிலான சோசலிசத்தை முதலாளிகளின் நலனுக்கான ராமராஜ்யத்திற்குள் புகுத்த முடியாது என்பது மோடிக்கு தெரியும். ஆனால் கிருஷ்ணய்யரை பொறுத்த வரை ஜெயிக்கும் குதிரைக்கு சோசலிசம் எனப் பெயர் வைத்து சாவதற்குள் (இப்போது அவருக்கு வயது 98) தான் கனவுகண்டது போல அல்லது குறைந்தபட்சம் நம்பூதிரிபாடு வகையறாக்களின் கனவு போன்ற தோற்றத்தில் சோசலிச இந்தியாவை பார்க்கும் ஆவல் இருந்திருக்கலாம். ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன் அவருக்கு இந்துமத வெறியனாக, இசுலாமியர்களை கருவறுக்கும் வடிவமாக தெரிந்த மோடி இப்போது எப்படி ஒரு சோசலிஷ்டாக, அகிம்சா மூர்த்தியாக மாறினார் என்பதை பார்க்க வேண்டும்.
இந்தியாவை புண்ணிய பூமியாக பாவித்து, இந்து ஞானமரபின் ஆன்மிக தரிசனத்தை உயர்ந்த ஒன்றாக, கம்யூனிசத்திற்கு நிகராக நிறுவ விரும்பிய நம்பூதிரிபாடு போன்ற போலி கம்யூனிஸ்டுகளின் பாதிப்பு கிருஷ்ணய்யரிடம் உண்டு.
அது இல்பொருள் உவமையணியாக இப்போது கிருஷ்ணய்யரிடம் வெளிப்படுகிறது. பழைய மன்னர்களிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி பரிசில் பெற்றுச் சென்றார்கள் வறிய புலவர்கள். அவர்கள் தம் வயிற்றுப்பாட்டுக்காக புலமையை விற்றார்கள். கிருஷ்ணய்யர் போன்ற போலி முற்போக்காளர்களோ தம் நேர்மையை அகண்ட இந்துராஷ்டிரத்துக்காக விற்கிறார்கள். இதில் விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சமாக மோடிக்கு ஒரு சோசலிச பட்டம் வேறு.
லஞ்ச, ஊழல் இல்லாத நிர்வாகத்தை தர மோடி முயற்சிப்பதாக கிருஷ்ணய்யர் சொல்லியதுடன், காந்தியின் வழியில் அரசியல், சமூக, பொருளாதார விசயங்களை அவர் பின்பற்றுவதாக வேறு கூறியுள்ளார். இதனை மோடி ஏற்றுக் கொள்வாரா எனத் தெரியவில்லை. மேலும் வறுமை ஒழிப்பு, சுவராஜ்யம் போன்றவற்றுக்காக மோடி பாடுபட வேண்டும் என்றும் கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். காந்தியின் ராமராஜ்யம் தான் மோடியின் சுவராஜ்யம் என்பது 2002-ல் நடந்த குஜராத் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்ட வி.ஆர். கிருஷ்ணய்யருக்கு தெரியாததல்ல.
எனினும் சில முற்போக்காளர்கள் கிருஷ்ணய்யரின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கலாம். அவருக்கு அதிக வயது என்பதால் டிமன்ஷியா போன்ற நினைவாற்றல் குன்றும் நோயாக இருக்கலாமோ என்றும் அவர்கள் கருதலாம். ஆனால் உண்மை அதுவல்ல. சிபிஎம் கட்சி மட்டுமல்ல சிபிஎம் சார்ந்த அறிஞர் பெருமக்கள் பலரும் நல்ல இந்து மதம், நல்ல இந்து ஞான மரபு என்ற ஒன்று இருப்பதாக கூறுகிறார்கள். பார்ப்பனிய வருண தருமம், சாதிய சமூகம், ஏற்றத்தாழ்வுதான் இந்துமதத்தின் ஆன்மா என்று அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இத்தகைய பார்ப்பனியத்தை எதிர்த்து வந்த மரபை போற்றுவதற்கு பதிலாக பார்ப்பனியத்திற்குள்ளேயே நல்ல பார்ப்பனியத்தை கண்டுபிடிக்கிறார்கள் இந்த சிகாமணிகள். கிருஷ்ணய்யரின் மோடி ரசிப்புக்கு உள்ளே இப்படி ஒரு இடதுசாரி பார்ப்பனியத்திற்கான அடிப்படை உண்டு.
ஒரிஜினல் பார்ப்பனியம் போன்று இடது சாரி பார்ப்பனியமும் அம்பலப்படுத்த வேண்டியவைதான். கிருஷ்ணய்யரின் இறுதிகால விருப்பமும் கூட.
இப்போது தமிழ் நாட்டில் பி.ஜே.பி
காங்கிரசுக்கு
மாற்றாக நினைக்கிறார்கள்….
கொதிக்கும் வாணலியில் இருந்துநேராக எரியும் அடுப்பில் விழுவதை ஒத்தது!
வினவு நீங்க எழுதிய கடைசி 20 பதிவுகளில் 12 பதிவுகள் மோடியைப் பற்றியது. மோடியை பிரபலமாக்க நீங்க தான் கடுமையாக முயற்சி செய்துட்டு இருக்கீங்க, அவரது ஆதரவாளர்களை விட. நீங்க மட்டுமல்ல பல பதிவர்களும்.
“மோடியை திரை கிழிக்கும் பிரச்சாரம் – பாஜக அலறல் !” எனக்கு என்னவோ இத்தனை பதிவு போடுற நீங்க தான் அலறிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.
ஒருத்தரை வலுவிழக்க செய்ய அவரைப் பற்றி பேசாமல் இருந்தாலே போதுமானது. இதை நீங்களும் உணரப்போவதில்லை மற்ற எதிர்ப்பாளர்களும் உணரப்போவதில்லை.
உங்கள் மோடி எதிர்ப்பு கூட்டம் / போராட்டமும் சரி! மோடிக்கு திருச்சியில் வரப் போகிற கூட்டமும் சரி !மக்களின் மன நிலையை பிரதிபலிக்கப்போவதில்லை. தேர்தல் முடிவு மட்டுமே இதற்கு பதில் கூறும். அது வரை இரு தரப்பினரும் மாற்றி மாற்றி இதே போல கத்திக்கொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்க வேண்டியது தான்.
எப்போது ஒரு எதிரியைப் பற்றி அதிகம் நினைக்கிறீர்களோ / பேசுகிறீர்களோ அவர் வளர்ந்து வருகிறார் என்பது தான் நடைமுறை உண்மை. இதை நீங்கள் காரணங்கள் கூறி பட்டியலிட்டு மறுக்கலாம் / கிண்டலடிக்கலாம் ஆனால் இது தான் உண்மை.
இதன்படி ராஜபக்ஷே குறித்தோ, ஹிட்லர் குறித்தோ இல்லை ஈராக், ஆப்கானை சுடுகாடாக்கிய கிளிண்டன், புஷ், ஒபாமா குறித்தோ பேசக்கூடாது. செத்தவரெல்லாம் ஈ, கொசுக்களைப் போன்றவர்கள். இன்னும் சிறுமிகளை வன்புணர்ச்சி செய்த ஆஸ்ரம் பாபு, கொலைகார ஜயேந்திரன் இவர்களைப் பற்றியும் பேசக்கூடாது. பார்க்க வேண்டியதெல்லாம் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள், சினிமாக்கள் மட்டுமே.
குஜராத்தில் நூற்றுக்கணக்கான இசுலாமிய மக்களை கொலை செய்த ஒரு கூட்டத்தின் தலைவனை தண்டிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை வெறும் ஓட்டுப் போடும் விசயமாக பார்க்குமளவு மூளை மந்தமாகவும், இதயம் ஈரமில்லாமலும் இருப்பதற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
வினவு அவர்களே-
கிரியார் சொல்வது புரியவில்லையா ? (அ) புரியாதமாதிரி இருக்கிறீர்களா ? அவர் உஙகள் பதிவை குறைசொல்ல்வில்லை. வினவு நீங்க எழுதிய கடைசி 20 பதிவுகளில் 12 பதிவுகள் மோடியைப் பற்றியது.( அதாவது 50 விழுக்காடுககு மேலாக ). அறைத்தமாவையே ஏன் அறைக்கிறீர் என்று.
ராஜபக்ஷே ,ஹிட்லர்,ஈராக்-ஆப்கானை சுடுகாடாக்கிய கிளிண்டன், புஷ், ஒபாமா, சிறுமிகளை வன்புணர்ச்சி செய்த ஆஸ்ரம் பாபு, கொலைகார ஜயேந்திரன் பற்றி தொட்ர்சசியாக எத்தனை பதிவு இட்டுள்ளீர் ?
வினவு தங்கள் பதிலுக்கு நன்றி
இது [ராஜபக்சே / ஹிட்லர்] போன்ற கேள்விகள் வரும் என்று நிச்சயம் எதிர்பார்த்தேன்.
நான் யாருடைய குற்றங்களையும் கூற வேண்டாம் என்று கூறவில்லை. நிச்சயம் கூறுங்கள். எனக்கும் சமூகக் கோபங்கள் உண்டு. ஒன்றையே இடைவெளி இல்லாமல் கூறிக்கொண்டு இருந்தால், உங்கள் கூக்குரலுக்கு மதிப்பு இருக்காது. எதுவுமே அளவோடு இருக்கும் வரையே அதற்கு மதிப்பு. அது புகழ்ச்சியாக இருந்தாலும் இகழ்ச்சியாக இருந்தாலும்.
எனக்கு இது போல மோடியை பாராட்டி பேசும் விவாதங்களிலோ / விமர்சித்து பேசும் விவாதங்களிலோ ஆர்வமில்லை. முன்னரே கூறியபடி தொடர்ந்து இதே வேலையாக பாராட்டி பேசிக்கொண்டு இருந்தாலும் நிச்சயம் எரிச்சல் தான் வரும்.
இது என் மனதில் பட்டது கூறினேன் அவ்வளவே! இந்த விவாதங்களில் எனக்கு ஆர்வம் இல்லை.
நன்றி
இந்த போரடிக்கும் விசயத்தை குஜராத்தில் தமது சொந்த பந்தங்களை இழந்து இன்றுவரை பயந்து போய் இருக்கும் இசுலாமிய மக்களிடம் சொன்னால் ஒருவேளை அவர்கள் உங்களுக்கு புரிய வைக்கக் கூடும். ஊரே எழவு வீடாக அழுது கொண்டிருக்கும் போது ஒரு சேஞ்சுக்காக ஏதாவது குத்தாட்டப் போட்டு பார்க்கச் சொல்வது போல இருக்கிறது உங்களது எரிச்சல். கிரி அவர்களே இத்தனை கிரியேட்டிவாக யோசிக்கும் நீங்கள் அந்த கொலைகார மோடியை ஏதாவது கிரியேட்டிவாக யோசித்து தண்டித்து விட்டால் நாங்கள் ஏன் மோடியை பேசப் போகிறாம். இல்லை என்றால் உங்களைப் போன்ற சினிமாவால் வாழ்க்கையை ரசிக்கும் நண்பர்களின் இதயத்தை தட்டி எழுப்புவது வரை மோடியை பற்றி தொடர்ந்து பேசுவோம். மோடி குறித்து ஆதரித்தாலும், விமரசித்தாலும் எரிச்சல் வருகிறது எனும் அளவுக்கு இந்த விசயத்தை மலிவாக கொச்சைப் பொடுத்தும் அளவுக்கு உங்கள் சிந்தனை கெட்டுப் போயிருக்கிறது. அதனால் உங்களது எரிச்சல் என்பது கடுமையான ஆட்கொல்லி நோய் என்பதறிக.
கிரியின் கேள்விக்கு வினவின் பதில் சிறு பிள்ளை தனமாக உள்ளதை யாராலும் மறுக்க முடியாது … எனகென்னமோ வினவு தளத்தின் குறியிடுவொர் மாறிவிட்டது போல தெரிகிறது …புதியவர் யாராக இருந்தாலும் தயவு செய்து வினவின் பிற பதிவை பார்த்து விட்டு பதில் போடவும் …..வினவின் பெயரை கெடுக்க வேண்டாம் …வினவு என்றுமே கீழ் தரமாக தாக்கி பதில் அளித்ததே இல்லை ..
கொங்கு மண்டல பதிவர்கள் சிலர் மறைமுகமாக சாதிய பெருமை பேசுகிறார்கள்…எ.கா. விவசாய குடும்பம், விவசாய பாரம்பரியம், மண் சார்ந்த மக்கள்….இறுதியில் தான் சார்ந்த சாதியை உச்சி முகர்ந்து வாழ்த்தி மகிழ்கின்றனர்….இதில் இந்துத்துவா ஆதரவும் கலந்தது கட்டி அடிப்பார்கள்….
http://www.giriblog.com/2013/06/i-support-modi-for-pm-candidate.html
முஸ்லிம்களுக்காக ரத்த கண்ணீர் வடிக்கும் இந்த _______ கென்யாவில் கொல்லப்பட்ட இந்தியர்களுக்காக ஒரு முதலை கண்ணீர் கூட வடிக்க தயாரில்லை.
போங்க நீங்களும் உங்க வெட்டி ______ நியாயமும்
முஸ்லிம்களுக்காக ரத்த கண்ணீர் வடிக்கும் இந்த _______ கென்யாவில் கொல்லப்பட்ட இந்தியர்களுக்காக ஒரு முதலை கண்ணீர் கூட வடிக்க தயாரில்லை.
போங்க நீங்களும் உங்க வெட்டி ______ நியாயமும்
——————————————————–
ஒன்று கென்யாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் இருவரும் இந்துக்கள் அல்லவா ..
அதனால்தான் வினவு அதனை கண்டு கொள்ளவில்லை ………
மற்றொன்று கொன்றவர்கள் முஸ்லிம் அப்பாவிகள்…………..
முஸ்லீம்களுக்கு எதிராக வினவு கட்டுரை எழுதாது
கிரி”யார்” வலம் போனால் என்ன..இடம் போனால் என்ன என்று
இருந்ததினால் நாங்கள் இழந்தது 1,50,000 தமிழர்கள்
முதலில் உன் பெயரில் இருக்கும் ஜாதியை நீக்கி விட்டு சமத்துவ விவாதத்துக்கு __________
நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்….
அக்கிரகாரத்தில் அம்பிகள் குடுமியை நீக்கட்டும்..
பிறகு பார்க்கலாம்….
“RSS, which has initiated and supported Modi sees in him someone nearer to their ideology of Hindutava and anti-Muslim. Real Modi was, however, exposed when he blessed the massacre of Muslims in Gujarat a decade ago. Not a word of regret even after years only underlines his anti-Muslim thinking. How can India have a person like him as the Prime Minister?
The repercussions of such a person at the helm of BJP, not possessing even a semblance of liberalism, can be dangerous. Obsessed with driving a wedge between Hindus and Muslims, he can vitiate the young mind. Liberalism or idealism already receding to the background, bigotism and the extremism will go to allocate what is left of the composite culture.”
– Kuldip Nayar
ஏன் அதிகமாக கட்டுரைகள் எழுதப்படுகிறது என்பது புரிகிறதா?
இவ்வளவு நாள் கிருஷ்ணய்யர் சொன்ன போதெல்லாம் தெரியாத சாதி, மோடியை ஆதரித்ததும் அவர் அய்யர் ஆயிட்டார். செம காமெடி சென்ஸ் உள்ள ஆள் நீங்க… 😀 😀 😀
பார்ப்பனியத்திற்குள்ளேயே நல்ல பார்ப்பனியத்தை கண்டுபிடிக்கிறார்கள் இந்த சிகாமணிகள்.
என்ன செய்வது…சீனு/வலிப்போக்கன்…
நிறைய பூணூல்கள் சுருட்டிக்கொண்டு இருக்கும்…
நேரம் கிடைக்கும்போது சூத்திரன் கழுத்தை இறுக்கும்
இப்படி கும்மி அடிக்கும் வினவு முதலில் எத்துனை தடவை ராஜபக்ஷே எதிராக கோடி தூகியிருப்ப …இலங்கையில் இழந்தது 2 லட்சம் பேர் என்பதை மறந்த நீ 2000 பேருக்கு ஆதரவ பேசுறே ..? வைகோவையும் சீமானையும் எதிர்க்கும் நீ ..மோடியை எதிர்த்து காங்கிரசுக்கு ஆதரவு குடுகுரியா ?? இல்லை மூன்றாவது அணியா ?? இப்படி மொட்டையாக மோடிய எதிர்தபதற்கு .. உன்னுடைய ஆதரவு என்னனு சொல்லலாம் இல்ல …தைரியம் இருந்தால் ? அனால் ஒன்னு மோடிய எதிர்த்தாலும் சேரி எவன எதிர்த்தாலும் சேரி ..திருப்பியும் காங்கிரசோ இல்ல கருணாநிதியோ வரணும் நு நெனப்பு இருந்தா …??உன்னுடைய கொள்கைய தெளிவா சொல்லு >?? அப்புறம் ஊருக்கு ஒபதேசம் பண்ணலாம்
என்ன அழகிரி இந்த வினவு கூட்டத்தின் சுயரூபம் உங்களுக்கு இன்னுமா புரியல ???
வினவின் எதிர்ப்பு :
1) தூக்கு தண்டனைக்கு(கொலைக்கு ) எதிர்ப்பு
2) பா ஜா கா எதிர்ப்பு
3) காங்கிரஸ் எதிர்ப்பு
4) (போலி) கமுநிஸ்ட் எதிர்ப்பு
5) இந்துத்வா எதிர்ப்பு
6) முஸ்லிம் கருணை கொலை எதிர்ப்பு
7) முஸ்லிம் மத குரு எதிர்ப்பு
வினவு ஆதரவு :
1) நக்சல் கொலைகளுக்கு …இதுவரை ஒரு கட்டுரை இல்லை
2) மும்பை தாக்குதலுக்கு எதிராக … எதுவரை ஒன்றும் இல்லை
3) பல தீவிரவாத தாக்குதலுக்கு …இதுவரை ஒரு கட்டுரை இல்லை
4) இலங்கை இனப்படுகொலை …சில கட்டுரைகள் ..
இப்படி முன்னுக்கு முரணான நிலைப்பாடு …
கூட்டி கழித்து பாரத்தால் வினவின் அடிப்படை கொள்கையே அடிப்படை இல்லை …உயிர் எங்கு போனாலும் அது தவறு தான் என்ற அடிப்படை கருத்திற்கு எதிராக வினவின் போராட்டம் இல்லை என்பது இவர்கள் நக்சல் கொலைக்கு ஆதரவான நிலைபாடு சாட்சி …
இவங்குளுகு வந்த ரதம் அவங்களுக்கு வந்த தக்காளி சட்னி என்ற நிலைப்பாடு போல தான் உள்ளது …
வினவின் விமர்சனம் வரவேற்கிறேன் …அதே சமயம் சமுக அவலங்களுக்கு வினைவின் விடை தான் என்ன …? தெளிவாக சொல்ல வேண்டும் …வர வேண்டிய தேர்தலில் யாருக்கு வினவின் ஆதரவு ?(இல்லை அனைவரும் தேர்தலை புறகணிக்க வேண்டுமா )
மொட்டைக எதிர்த்து எல்லோரையும் குழப்பாமல்
தெளிவாக உங்கள் கொள்கையை விளக்கவும் ..
அனைவரும் தங்களை போலவே சிந்திக்க வேண்டும் குறியிட வேண்டும் என்ற எண்ணத்தில் குரியிடுவோரை தாக்கி சும்மா வறட்டு பதில் கூறி சப்பை கட்டு கட்டாமல் தெளிவான பதில் அளித்தால் நன்றாக இருக்கும்
Is Vinavu aware of Nambudiribadu gave his house to party ? Your article has highlighted Krishna Iyer’s records. Just because he has supported Modi you don’t like him. I too don’t like him for erasing death punishment. As long as its available in law you can’t ask why judges prefer death and not life .
mr alagiri please boycot elections that is only solution to slove this problem and also think about alternate politics like naxal.
இந்த பயம் தான் என்னுடைய வெற்றி வினவு …:) நீ எபோது என்னுடைய கட்டுரையை வெளியிடாமல் தடுத்தாயோ இதை விட பெரிய முதலாளித்துவம் எதுவும் இல்லை …எனக்கு நன்றாக தெரியும் அந்த கட்டுரைக்கு உன்னிடம் பதில் இல்லை …மற்றவர்கள் படித்து சிந்திப்பார்கள் என்ற பயம் …. நல்லது …
அழகிரி உங்கள் பதிலை வேறு கட்டுரையில் போட்டுவிட்டு அதையே எல்லா கட்டுரைகளிலும் காப்பி பேஸ்ட் செய்யாதீர்கள். மேலும் உங்கள் கருத்து மோடி குறித்த பாடல் கட்டுரையில் வருவதுதான் பொருத்தமானது என்பதால் அங்கே மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. நிதானமாக யோசிக்கவும்.
மன்னிக்கவும் 🙂
தொடரும் கள்ள மௌனம்…
வெளிச்சத்திற்கு வரும் V. R. கிருஷ்ண (அய்யர்) னின் சாதி முகம்.
அகில இந்தியா முழுவதும் முற்போக்கு வாதி எனவும், சிந்தனை சிற்பி எனவும் மனித உரிமை ஆர்வலர் எனவும் வெகுஜன ஊடகங்கள் மட்டுமல்லாது தலித் இயக்கங்கள் முதற்கொண்டு மற்ற தோழமை இயக்கங்களாலும் புகழப்படுகின்ற முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு V. R. கிருஷ்ணனின் சாதி முகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
ஆம், திருவாளர் V. R. கிருஷ்ணன் தான் நீதிபதி என்பதை விடவும் ,மனித உரிமைக்கு குரல் கொடுக்கும் பேர்வழி என்பதை விடவும் “அய்யர்” என அறியப்படுவதைத்தான் விரும்புகின்றார் என்பதுதான் உண்மை.
இதை மேலும் விளக்க திரு.V. R. கிருஷ்ணனுக்கு அனுப்பப்ட்ட இரு கடிதங்களின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.
11/1/2011
சென்னை
திரு .
நீதிபதி V. R. கிருஷ்ணன்,(முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி),
சத்கமய
மகாத்மா காந்தி சாலை
கொச்சின் – 682001
கேரளா, இந்தியா
ஐயா ,
தங்களுக்கு ஒரு விண்ணப்பம்.
தங்களின் ஒய்வில்லாத உழைப்பை கண்டு ஊக்கம் பெறுபவர்களில் நானும் ஒருவன் . முற்போக்காக சிந்திப்பவர்களில் பலர் தங்களை போற்றுகின்றனர்கள் . பெரிதும் மதிக்கின்றனர் . மேலும் தாங்கள் தற்கால புதிய சிந்தனைகளின் குறியீடாக கருதப்படுகின்றீர்கள். தீண்டாமை ஒழிப்பு, தூக்கு தண்டனை ஒழிப்பு ஆகியவற்றிலிருந்து நாட்டின் மேலமை நீதிமன்றங்களின் கன்னியத்தை காப்பதுவரை தங்கள் குரல் மதிக்கப்படுகின்றது. மக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
அய்யா, ஒரு குறிப்பிட்ட விடயம் உங்கள் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அது உங்களின் பெயராக அறியப்படுகின்ற V. R. கிருஷ்ண அய்யர் என்பதாகும். இந்தியாவில் உள்ள சாதிகளின் சமூக நிலைகளை பற்றி யாரும் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. நீங்கள் சமூக மாற்பாடு குறித்தும், சட்டத்தை பற்றியும் பல புத்தகங்களை எழுதியுள்ளீர்கள். அய்யர் எனும் வார்த்தை உணர்த்தும் விடயங்கள் பல. தாங்கள் அச்சு மற்றும் காணொளி ஊடகங்களால் நீதிபதி அய்யர் எனவே அடிக்கடி குறிப்பிடப்படுகின்றீர். நீங்கள் இதை அறிவீர்களா? விக்கிப்பீடியா எனும் தகவல் களஞ்சியத்திலே கூட உங்கள் பெயர் “நீதிபதி அய்யர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா? சாதியின் பெயரால் அடையாளப் படுத்திகொள்வதும், சாதீயத்தைக் கடைபிடிப்பதும் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதனின் குணமாக இருக்க முடியாது. பாபா சாகேப் B. R. அம்பேத்கர் அவர்கள் சாதியை மக்களை பிளவு படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சாதனம் என்று மிகச்சரியாக விளக்கியுள்ளார். யாரும் சாதியை அவரப்போல துள்ளியமாக எப்போதும் விளக்கியதில்லை.
அய்யர் எனப்படும் வார்த்தை ஒரு சாதாரண இணைப்புச்சொல்லாக இருக்கவே முடியாது. அது ஒரு சாதியை குறிக்கின்றது. தென்னகத்தில் நம் மக்கள் “ தந்தை பெரியாரின் தலைமையில் ஒரு நீண்ட விளக்க கூட்டங்களை நடத்தியுள்ளனர். ஏன் அது செய்யப்பட்டது? ஏனென்றால் “ பிராமணாள் மட்டும்” என்ற வாசகங்களை உணவு விடுதி மற்றும் பிற இடங்களில் இருந்து அகற்றுவதற்காக நடத்தப்பட்ட்து. பார்ப்பனியத்தை கடைபிடிப்பது மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.சாதியை கடைபிடிப்பது என்பது பர்பனியத்தின் கொள்கையே. எனவேதான் தந்தை பெரியார் இதன் தீமையை உணர்ந்த பின் தன் சாதிப் பெயரை துறந்தார். மேலும் தன் ஆதரவாளர்களை அவ்வாறே செய்ய பனித்தார். பார்ப்பனர்கள் என்பவர்கள் பார்ப்பன பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் அல்ல.பார்ப்பனர்கள் என்பவர்கள் பார்ப்பனியத்தை கடைபிடிப்பவர்களே. நீங்கள் பார்ப்பனர் அல்ல என நம்புகிறேன்.
எனவே சாதியின் பெயரால் அடையாளப் படுத்திக்கொள்வதும், பெயருக்குக் பின்னால் அய்யர் என சேர்த்துக் கொள்வதும் உங்களுக்கோ, உங்களை நம்புபவர்களுக்குகோ நீதி வழங்காது. வரலாற்றின் நீண்ட பக்கங்களில் 90 அல்லது 100 வருடங்கள் எல்லாம் ஒன்றுமில்லை. உங்களை மதிக்கும் ஒருவனாக எனக்கு தங்கள் பெயர் தங்களுக்கு அநீதி அளிப்பதில் விருப்பம் இல்லை. தாங்கள் மதிப்பிற்கு, தேவைக்கு அதிகமாக கவலைப்படுபவர் இல்லை என்றாலும் உங்கள் மதிப்பு உங்களோடு மட்டும் தொடர்புடையது இல்லை. அது இந்நாட்டில் முற்போக்காக சிந்திப்பவர்களில் பெரும்ப்பான்மையோரின் மதிப்பிலும் தொடர்புடையது. எனவே தாங்களின் பெயருக்குப் பின்னால் அய்யர் என்ற இணைப்பை தவிர்க்கவும். தாங்கள் சாதியை எதிர்க்கின்றீர் என பொதுமக்களுக்கு தெரிவிக்கவும். ஊடகங்களுக்கு உங்கள் பெயருக்குப் பின்னர் அய்யர் என இடவேண்டாம் என கூறவும்.
இப்படிக்கு
சரவணன்.
இக்கடிதம் 17-1-2011 அன்று V. R. கிருஷ்ண அய்யர் என்ற முத்திரையுடன் பெறப்பட்டது. இதன் பின் எவ்வித பதிலோ, விளக்கமோ, பொது அறிவிப்போ இல்லாததால் கீழ்கண்ட கடிதம் மீண்டும் அனுப்பப்பட்டது.
சென்னை
9-2-2011
திரு நீதிபதி V. R. கிருஷ்ணன்,(முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி),
சத்கமய
மகாத்மா காந்தி சாலை
கொச்சின் – 682001
கேரளா, இந்தியா
அய்யா,
பார்வை – எனது 11-1-2011 நாளிட்ட கடிதம்.
நான் தங்கள் பெயருக்குப் பின்னால் அய்யர் என்ற வார்த்தையை இணைக்க வேண்டாம் என்றும் சாதியை எதிர்க்கின்றீர்கள் என அறிவிக்கக் கோரியும் வேண்டுகோள் விடுத்தேன். துரதிர்ஷ்டவசமாக, தாங்கள் தற்போதுவரை அதை செய்யவில்லை. தங்களின் மௌனம், தாங்கள் உண்மையாகவே விருப்பத்துடன் தான் ” அய்யர் ” என அடையாளப்படுத்திக்கொள்கின்றீர்கள் என ஒரு பார்வையை உருவாக்கிவிடும் . எனவே ஒருவர் மிக எளிதாக தங்களின் உள்ளுணர்வு தாங்கள் சாதீயத்தை கடைபிடிப்பதை அனுமதிக்கின்றது எனவும் தாங்கள் சுயமாகவே விருப்பத்துடன் இந்த மனித தன்மையற்ற செயலை கடைபிடிப்பதாக எண்ணுவார்.
தங்களை மதித்து போற்றிய அனைவருமே தாம் தவறு செய்துவிட்டதாக கருத இடம் அளிக்ககூடாது.
தாங்கள் உண்மையாகவே பொறுப்புள்ள மனிதாகவோ அல்லது முற்போக்குவாதியாகவோ தங்களை கருதினால் தாங்களின் பெயருக்குப் பின்னால் அய்யர் என்ற இணைப்பை தவிர்க்கவும். தாங்கள் சாதியை எதிர்க்கின்றீர் என பொதுமக்களுக்கு தெரிவிக்கவும். ஊடகங்களுக்கு உங்கள் பெயருக்குப் பின்னர் அய்யர் என இடவேண்டாம் என கூறவும்.
தாங்கள் இந்த செயலை செய்ய தவறினால் விரைவில் மக்கள் உங்களை ஒரு அடிப்படைவாதியாகவோ அல்லது இரட்டைவேடதாரியாகவோதான் அடையாளம் காணுவார்கள் . தயவு செய்து அதை அ னுமதிக்க வேண்டாம்.
இதற்கும் இதுவரையில் பதிலோ விளக்கமோ பொது அறிவிப்போ இல்லை.
மேற்கண்ட கடிதமும் கிருஸ்ணய்யர் என்ற முத்திரையுடன் தான் பெறப்பட்டது.
மேலும் திருவாளர் கிருஸ்ணணின் மின்னஞல் முகவரிக்கும் மேற்கண்ட கடிதங்கள் அனுப்பப்பட்டன . பதில் இல்லை.
திரு. கிருஸ்னணின் இத்தகைய மவுனத்தை நம்மால் எளிதில் புரிந்து கொள்ளமுடிகின்றது. அவரால் சாதியை துறக்க முடியாது. இந்நாட்டில் சாதி என்பது ஒருவனுக்கு எத்தகைய அந்தஸ்த்தை வழங்குகின்றது என்பதை அதை அனுபவிப்பவர்கள் உணர்வார்கள் . எனவே ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் அதை எளிதாக துறக்க முற்பட்டுவது இல்லை. ஒடுக்கப்பட்டவர்கள் துறக்க விரும்பினாலும் அதை துறக்க முடியாது. சாதி விருப்பம் அல்ல . அது பிறவியால் நிர்ணயம் செய்யப்படுகின்றது. பர்ப்பன பட்டம் என்பது வெறுமனே ஒரு இணைப்பு சொல் அல்ல . அது பார்ப்பனர்களுக்கு வழங்கிய உரிமைகள் ,சலுகைகள், வசதிகள் ,வாய்ப்புகள் வறலாறு முழுதும் ஏராளம் உள்ளன. தகுதியும் திறமையும் இல்லமல் போனலும் அந்த வெற்றுப்பட்டமே பார்ப்பனர்களை இந்நாள் வரையிலும் தாங்கிப்பிடித்திருக்கின்றது.வேள்வியில் முக்கிய பாகங்களை பெற்றது முதல் அரச குடும்பத்து மகளிரை பெண்டாள்வது வரை பார்ப்பனர்கள் அனுபவித்த சலுகைகள் ஏராளம். பெரியார் குறிப்பிட்டதைப்போல் ” கள்ளிக்கடை, தாசி வீடு முதல் கடவுள் சந்நிதானம் வரை தங்களுக்கு என்று ஒரு இடமும் மற்றவர்களுக்கு ஒரு இடமும் ஏற்படுத்திக்கொண்டனர்.உழைக்கும் மக்கள் அனைவரும் வரி கட்டி மாய்ந்த பொழுதும் எவ்வித உடல் உழைப்பும் இல்லாமல் வருவாயும் உடல் சுகமும் அனுபவித்தவர்கள் பார்ப்பனர்கள் . ராஜ ராஜன் காலத்தில் விதிக்கப்பட்ட வரிகளே இதற்கு சான்று.இவ்வாறு இந்த பார்ப்பன பட்டம் அளித்த சலுகைகள் ஏராளம் ஏராளம்! இவ்வித சலுகைகள் அரசன் காலத்தோடு முற்றுப்பெறவில்லை. அதற்குப்பின் வந்த வெவ்வேறு
அரசர் வம்சத்திலும், முகலாய , நாயக்க மன்னர்கள்முதற்கொண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் மற்றும் சுதந்திர இந்தியா வரை இந்த சலுககள் வெவ்வேறு வடிவத்தில் தொடர்கின்றது. இந்தியாவின் அரசியல் அமைப்புச்சட்டதிலும் பார்ப்பனியம் தனக்கு பாதுகாப்பை தேடிக்கொண்டது. கர்ப கிரகதில் காம லீலை அனுபவித்தாலும் பூசை செய்யும் உரிமை பார்ப்பானுக்கே உண்டு. கொலை குற்றவாளியானாலும் சங்கராச்சாரியாக தொடர பார்ப்பனுக்கே உரிமை உண்டு.
வெறும் மனித உரிமை போராளியாக வாழ்வதை விட ,முக்கியத்துவம் வாய்ந்த பிற்ப்பால் தன்னை உயர்ந்தவன் என காட்டிக்கொள்ள பேருதவி புரியும் பார்ப்பன பட்டமே பெரிதும் தேவை என கற்ற்றிந்த நீதிபதி திருவாளர் கிருஸ்ணன் நன்கு உணர்ந்துள்ளார்கள். உணராதவர்கள் நாம்தான்.
சாதியை தாங்கிப் பிடித்துக்கொண்டே ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ,மனித உரிமை பற்றி பேசுபவர்கள் , ஜனநாயகத்தைப்பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதுபவர்கள் என இந்த போலி மனிதர்கள் நிறைய உள்ளனர். V.R. கிருஸ்ணன் ஒரு சான்று அவ்வளவே. இவர்களிடைய குரல் நிச்சயம் ஒடுக்கப்பட்டவர்களுகனது அல்ல. இவர்கள் பேசும் அத்தனை உரிமைகளும் இவர்கள் சார்ந்துள்ள இனத்தின் நலம் சார்ந்தது. இவர்களால் எவ்வித மாற்றமும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஏற்படப்போவது இல்லை.
உண்மையில் சாதிய சுரண்டலை விட ஒரு பொருளாதார குற்றம் இல்லை. சாதியின் பெயரைச் சொல்லி சக மனிதனின் உழைப்பை திருடுவதை விட பெரிய ஊழல் இல்லை. சாதியை விட ஒரு பெரிய்ய ஜனநாயக விரோதம் இல்லை. ஆனால் சாதியைப்பற்றி பேசமல் இந்நாட்டில் ஒருவர் ஊழல், ஜனநாயகம், மனித உரிமை என வெற்று முழக்கங்களை இட முடியும் . மாமனிதர் பட்டமும் வாங்கமுடியும். வெற்கம்.
எந்த சாதி முறை தங்களை தாழ்ந்தவனாக அறிவித்து அடிப்படை உரிமைகளைக் கூட பறித்து மீழாத்துயரில் தள்ளியதோ அதே சாதி பட்டத்தை தன் பெயருக்கு பின்னால் இட்டுக்கொள்ளும் செயலும் அறிவீனமே.தமிழ்நாட்டில் ’பறையர்’ ’, தேவேந்திர ர் ‘, நாடார், தேவர் என்ற இன்ன பிற பட்டங்களை காவித்திரிவதும் மக்களுக்காக பாடுபட்ட சில தலைவர்களுக்கும் சாதி பெயரை சூடி மகிழ்வதும் முட்டால்தனமேயன்றி வேறல்ல. பச்சைத்தமிழன் என பெரியாரால் பாராட்டப்பெற்ற காமராஜரின் பெயருக்குப் பின்னால் ‘நாடார் ’ வாலைத்தொங்கவிடுவது ,அப்படிச்செய்பவர்களின் வயிற்றுப்பிழைப்பிற்கு வேண்டுமானால் உபயோகப்படுமேயன்றி அவரின் புகழுக்கு பெருமை சேர்க்காது. அதேபோல் தோழர் இம்மானுவேலிற்குப் பின் ‘தேவேந்திர்ர் பட்டத்தைச் சேர்ப்பதும் சமூக நீதிக்காக போராடி உயிர் நீத்த அவருக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. சாதியே பார்ப்பனியத்தின் கொள்கை. சிலர் பார்ப்பனியத்தை எதிப்பதாற்கான ஒரு குறியீடாக தன் சாதிப்பெயரை காட்டிக்கொண்டாலும் சாதிப்பெயரை இட்டுக்கொள்வதன் மூலம் பார்ப்பனியத்திற்கான ஆதரவையே வழங்குகிறார்கள்.. இச்சமுதாயத்திலிருந்து சாதியை செயலால், சிந்தனையால் முற்றிலுமாக ஒழிப்பதால் மட்டுமே மனித வாழ்வை மேம்படுத்த முடியும் .
எனவே சாதியை எதிர்ப்பதே மனித உரிமை, ஜனநாயகத்தை ,ஊழலை பேசுபவர்களின் முதல் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர வேறு அல்ல.
//ஆம், திருவாளர் V. R. கிருஷ்ணன் தான் நீதிபதி என்பதை விடவும் ,மனித உரிமைக்கு குரல் கொடுக்கும் பேர்வழி என்பதை விடவும் “அய்யர்” என அறியப்படுவதைத்தான் விரும்புகின்றார் என்பதுதான் உண்மை.//
யாரோ ஒருத்தர் 2 கடிதம் எழுதி அதுக்கு பதில் தரலைன்னா அவர் ‘“அய்யர்” என அறியப்படுவதைத்தான் விரும்புகின்றார்’-ஆம்.
கொஞ்சநாள் முன்பு இதே கேள்வியை விகடனும் கேட்டு அவர் பதிலும் சொல்லியிருக்கிறார்.
சின்னபுள்ளத்தனமா இருக்கு.
Mr. Saravanan,
On the face of it, your First name indicates that you are from the Tamil speaking Hindu community. On further analysis it suggests that you are more likely from a Non-Brahmin community. Since your name reveals so much about your identity, I request you to change the same.
Thanks,
20121245 🙂
எனது மேற்கண்ட கட்டுரை எதிலும் வெளியிடப்படவில்லை. கீற்றிற்கு அனுப்பினேன் வெளியிடவில்லை . காலம் தற்பொழுது கிருஸ்ணனின் முகத்திரையை கிழித்துள்ளதால் பொருத்தம் காரணமாக இதை அனுப்பி உள்ளேன்.
நன்றி,
செ.சரவணன்.
இதைத்தான் நான் திரும்பவும் சொல்கிறேன்…
பூணூல்கள் திருந்த வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை
Dear friends, Iam the admirer of Justice V.R.Krishna Iyer’s Socio-Political philosophy. But I strongly condemned the view Justice Krishna Iyer on Modi and sent a letter to him as follows.
To
His Lordship Justice V.R.Krishna Iyer,
My Lord,
I always hold your Lordship in highest esteem forever. Your Lordship’s judgments, integrity and honesty, philosophy on Social Justice, Liberty, Equality and Fraternity have strengthened the confidence of laymen, minorities and the dalits. In fact your Lordships’s judgments and legal acumen has made our judiciary to assert its independence, honesty and integrity and have shown the way for liberal thinking in the later decades of our independence.
However, the recent comments of your Lordship on Narendra Modi’s qualification to the post of Prime Minister of India has pained and shocked the conscience of the minorities, the dalits and the underdogs of our society. My Lord it is not an exaggeration to say that your Lordships’s comments have amounted to glorifying the judas of our Indian Secular fabric. Like this world has not forgotten the horror and agony of the Second World War, our country has not forgotten the horrible incident of Gujarat riots that happened in the year 2002. Our people have not forgotten the tacit or indirect role played by Narendra Modi in killing thousands and thousands of Muslims in Gujarat Riots. For the simple reason the SIT had given clean chit to Modi, it cannot be said he had been immunized from his criminal background. It cannot be forgotten that Narendra Modi at the behest and inducement of hindutuva forces conspired and instilled fear and insecurity in the minds of Muslims, dalits and other minorities in Gujarat. In a Germany of Hitler, the Jews cannot think independently except to vote in favour of Nazi’s. Therefore this letter may kindly be treated as my strong protest on your Lordships’s comments on Narendra Modi’s qualification for being the future Prime Minister of India. Let us save India from the venomous clutches of Religious Fundamentalism.
A.MOHAN
Advocate.
Dear Mohan,
I have a few points for you:
1. // conscience of the minorities, the dalits and the underdogs of our society
//instilled fear and insecurity in the minds of Muslims
Justice is based upon evidence and not upon the ‘conscience’ of someone. Lets assume that Jihadi terror over the world creates an impression in me that Islam is a religion of terror. Then the sight of a bearded Muslim would instill terror in me and fellow citizens of my community. Can we order eviction of Muslims from our country? Is it even fair.
2. // For the simple reason the SIT had given clean chit to Modi, it cannot be said he had been immunized from his criminal background.
Then what else is required? Just because you think that someone is guilty of a crime doesn’t mean he should be convicted. Being a lawyer you should be aware of the constitutional methods.
3. //In a Germany of Hitler, the Jews cannot think independently except to vote in favour of Nazi’s
What is the relevance of this sentence to the current situation?
Jihadi is not practised by any government it is not included in any kind of democracy at anywhere in the world ,but in gujarat the mass killing was done by the democratic leaders of government supported by some beaurocrats same as Hitler Nazis.So the condition in gujarat is relevant to Nazis.