26.09.2013 அன்று மதியம் 1.30 மணிக்கு சென்னை உயர்நீதி மன்றம் ஆவின் வாயிலில் குஜராத் முஸ்லீம் இனப்படுகொலைக் குற்றவாளி, இந்தியாவின் ராஜபட்சே நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து வழக்குரைஞர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்படும் நரேந்திர மோடி, மதச்சார்பின்மை கொள்கையிலோ, ஜனநாயகத்திலோ நம்பிக்கை இல்லாத ஹிட்லரைப் போன்ற ஒரு பாசிஸ்ட்.
- 2002-ல் சங்க பரிவாரத்தினரால் மோடி அரசின் பின்பலத்துடன் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்து இன்று வரை வாயளவில் கூட வருத்தம் தெரிவிக்க மறுத்து வரும் ஒரு மனித குல விரோதி.
2000 பேரைக் கொன்றொழித்த குஜராத் இனப்படுகொலை மோடியின் ஆசியுடன்தான் நடந்தது என்ற உண்மையை வாக்கு மூலமாக அளித்ததற்காக தன்னுடைய அமைச்சர் ஹரேன் பாண்டியாவை கூலிப் படையை வைத்துக் கொலை செய்த இரக்கமற்ற கொலைகாரன்.
- தனது உயிருக்கு ஆபத்து என்ற கட்டுக் கதையை உருவாக்கி இமேஜை உயர்த்திக் கொள்வதற்காக மோடியால் நடத்தப்பட்ட போலி மோதல் கொலைகளின் எண்ணிக்கை 22.
- மோடியின் அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சரான மாயா கோத்னானிக்கு நரோடா பாட்டியா குடியிருப்பில் 95 பேரைக் கொலை செய்த வழக்கில் 28 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
- குஜராத் அரசு தரப்பு மீது நம்பிக்கையே இல்லை என்று மோடியை சாடினார் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி வி.என்.கரே.
- “அப்பாவிக் குழந்தைகளும் ஆதரவில்லாப் பெண்களும் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது இந்த நவீன கால நீரோக்கள் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்கள்” என்று காரி உமிழ்ந்தார் உச்சநீதி மன்ற நீதிபதி அரிஜித் பசாயத்.
- மோடியின் மீது குற்ற விசாரணை நடத்த வேண்டுமென சிபாரிசு செய்திருக்கிறார் உச்ச நீதிமன்றத்தால் அமைகஸ் கியூரியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரன்.
- சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவித்த இராஜபக்சே திருச்சிக்கு வந்தால் நாம் அனுமதிப்போமா? மோடியும் சொந்த மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த இராஜபக்சேதான்.
மதச்சார்பின்மை, ஜனநாயகத்தின் எதிரி, இந்தியாவின் ராஜபக்சே மோடியை விரட்டியடிப்போம் ! தமிழகத்தின் மரபான மதச்சார்பின்மையை காப்போம் ! வாரீர் !!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.
கொலைகார நரேந்திர மோடி தமிழகம் வருகையைக் கண்டித்து தூத்துக்குடி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
இன்று காலை 11.45 மணியளவில் தூத்துக்குடி மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மற்றும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் முன்பு கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதில் சிறுபான்மையினர்கள், மனித உரிமை ஆர்வலர்களை கொலை செய்த கொலைகார நரேந்திர மோடியை பெரியார் பிறந்த தமிழகத்தில் அனுமதியோம், போலி என்கவுண்டரில் பலரை கொலை செய்த இந்து மதவெறியன் நரேந்திர மோடியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! பார்த்துச் சொன்னவர் ‘இன்றைய உலகப் போலீஸு’ எனப் பெயர் பெற்றிருக்கும் அமெரிக்கா!
மதத் துவேஷத்தைத் தூண்டிவிட்டு, பல்லாயிர மக்களின் சொத்துக்கள் மற்றும் கற்புக்களை சூறையாடி, கொலைகளும் செய்திட்ட மோடியின் சூழ்ச்சியை அறிந்ததால்…
தனது நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கவே இல்லை!
இவனது மதத்துவேஷத்திற்கும் இனவெறிக் கொலைகளுக்கும் தமிழக அரியணையில் இருப்பவர் ஆதரவு மட்டும் அளிக்கவில்லை. ஊக்கமும் அரவணைப்பும் தருகிறார் என்பதற்கு… கரசேவகராய் சிலரை அலங்கரித்து அன்றனுப்பி, தேசத்தின் அமைதியை இடித்தே நிரூபிக்கப்பட்ட சான்று!
நம்மை ஆளும் அரசே இவனுக்குத் துதி பாடிடும்போது…
“மோடியே தமிழகத்திற்குள் புகாதே” என்ற புலம்பலிலும்,
கருப்புக்கொடி சுமந்த அலைச்சலிலும்
நமது நேரத்தையும் சக்தியயும் வீணடிப்பது அவசியம்தானா?
ஆணவத்துடன் வரட்டும்…நிசப்தத்தை கண்டு அதிர்ச்சியில் அமரட்டும்!
மாத்தி யோசிங்க… சகோதர, சகோதரிகளே!
திசையையே மாற்றி யோசிங்க!
தேர்தலின்போது… விசாலமாய் முழங்கி,
இலவசங்களுக்கு கை விரித்து, வாய் பிளந்து நிற்கும் கூட்டங்களின் சிந்தனையை தெளிவாக்கி, அவர்களது வாக்கினால்…
இனவெறிக்கொலைகள் புரிந்திடும் இக்கயவர்கள் உட்பட, கொள்ளையர்கள், சாதிப்பூசல்களில் சுகம்காணும் அயோக்கியர்கள் அனைவரையும் நிரந்தமாய் முடக்கலாமே!
எரிவதை புடுங்கி… கொதிப்பதை அடக்கும் வித்தையை செய்து,
அடுக்கடுக்காய் பலமுறைகள் நிரூபித்திருக்கும் தமிழக மக்களால்… இனியும் இயலும்.
– கடலூர் ஜங்க்ஷன் முகம்மது கவுஸ்
சகோதரர் கவுஸ் அவர்களே…. இஸ்லாமியர்கள் மோடி வருவதை எதிர்த்தால் தான் காவிகள் அதை வைத்து அரசியல் பண்ண முடியும். அவர்கள் அதை தான் எதிர்பார்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய சமூகம் இந்த மோடியின் திருச்சி வருகையை கண்டுக்கொள்ளவே இல்லை. இதனால் காவிகள் கலவரம் நடத்த வழியே இல்லாமல் கண்டிப்பாக ஏமாந்து போயிருப்பார்கள். ஆனால் ம.க.இக. போன்ற நடுநிலையாளர்கள், மனித நேயம் உள்ளவர்கள், நியாயம் புரிந்தவர்கள், மத வெறி அற்றவர்கள் இந்துக்கள் என்று காவிகள் சொல்லும் அவர்களது சமூகத்தை சேர்ந்த சகோதரர்களே இந்த மோடியின் குரூரத்தை உணர்ந்து, பதவிக்காக மக்களை பிரித்து பல ஆயிரம் உயிர்களை மேலுலகம் அனுப்பிய இந்த பார்பன அடிமையின் வருகையை எதிர்ப்பது அந்த நியாயமற்ற நயவஞ்சக கூட்டத்திற்கு கிடைத்த செருப்படிகளே ஆகும்.
வினவிற்கு ஒரு கேள்வி
முஸ்லிம் இனபடுகொலை என்கிறீர்களே முஸ்லிம் என்பது ஒரு இனமா
இனிமேல் மதவெறி கொலை என்று குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
ஒட்டு மொத்த பார்பனர்களும், அவர்களின் அடிமை சிலபேரை தவிர மற்ற இந்து சகோதரர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக துவேசங்களுடனும்,வெறுப்புணர்ச்சி யுடனும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இஸ்லாமியர்களை வெறுப்பதால் அவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. பார்பன மீடியாக்களின் இஸ்லாமிய எதிர்ப்பு சித்தரிப்பினால், பொய் பிரசாரங்களால் அந்த சகோதரர்களுக்கு இஸ்லாமிய வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம் தவிர அப்படி வெறுப்பதற்காக வேற காரணங்களும் அவர்களுக்கில்லை. மக்களிடையே இஸ்லாமிய வெறுப்பை வளர்பதினால் மக்களை பிரிப்பதினால் கிடைக்கும் முழு லாபத்தையும் அடையப்போவது பார்பனர்கள் தான்.அவர்கள் மட்டும் தான். பின் எதற்காக இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டும், சுன்னத் செய்துக்கொண்டும் ஒரு பார்பான் கோட்சே காந்தியை கொள்ள வேண்டும்?
பார்பனர்களுக்கு நன்றாக புரிந்திருக்கிறது ஜனநாயக தேர்தல் முறைகளில் 3% இருக்கும் தன இனம் அதிகாரத்தை கைப்பற்றவே முடியாது என்ற உண்மை. தன்னுடைய வர்ணாசிரம, ஜாதிய பித்தலாட்டங்களால் காலம் காலமாக நசுக்கிவைத்துள்ள பெரும்பான்மை இந்து மக்களிடம் ஆதரவு பெற்று அதிகாரத்தை பெற முடியுமா ? அதற்காகத்தான் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு சூழ்ச்சி. இது நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு பல முயற்சிகள் செய்தாலும் இந்த இஸ்லாமிய எதிர்ப்பை பற்ற வைக்க முடியவில்லை. 1987 பாபர் மசூதி பிரச்சனையை பார்பனர்கள் கையில் எடுத்த பிறகுத்தான் மாற்றம் தொடங்கியது. 1992 பாபர் மசூதி இடிப்புக்கு பிறகுதான் நாடெங்கிலும் இந்த தந்திரம் செயல்பட தொடங்கியது. அதுவரை மக்கள் ஒன்றாக அமைதியைத்தான் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. பார்பனர்கள் அந்த சூழ்ச்சியின் பலனை அதிகாரங்களாக அறுவடை செய்தார்கள். பலமாநிலங்களில் அதிகாரம் அவர்களின் கைகளுக்கு வந்தது. இரு முறை இந்தியாவின் ஆட்சியையும் பார்பன கைகளுக்கு வந்தது. இந்திய மக்களின் நிம்மதி, மற்றும் ஒற்றுமை தொலைந்தது. வெறுப்பு வளர்ந்தது. இன்னும்… இந்தியாவின் முன்னேற்றம் தொலையும், பின்னேற்றம் அடையும். இவர்களின் தந்திரம் பலிப்பது நீடித்தால்.
“Tiruchi witnesses protests against Modi’s visit” என்று தலைப்பிட்டு தமிழகச் செய்திகளில் மோடிக்கு எதிரான போராட்டங்களைப் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது the hindu.. அதில் ” Several members of the Makkal Kalai Ilakiya Kazhagam, who staged a black flag demonstration near the Palakkarai warehouse, were picked up by the police. Members of the Human Rights Protection Council, … were also arrested after they staged black flag demonstrations at different places.” என்றும் குறிப்பிட்டுள்ளது. திட்டமிட்டு புரச்சிகர அமைப்புகளின் போராட்டங்களை ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துவந்தாலும், தவிர்க்க முடியாத நிலையில் வேறு வழியின்றி வெளியிடவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது இவ்வமைப்புகளின் மக்களுடனான தொடர்பும் தொடர் போராட்டங்களும். ஆனால், போன ஞாயிறு நடந்த மோடிக்கு எதிரான பிரம்மாண்டமான கூட்டத்தைப் பற்றி பெயரலவுக்குக் கூட செய்தி வெளியிடாத ஊடகங்கள், ப.ஜ.க. தொண்டர்கள் தமிழகம் முழுவதுமிருந்து கூட்டம் கூட்டமாகக் வந்து கலந்து கொண்டனர் என்று புளுகி இருக்கின்றன. hindu: “A morale-booster for the BJP leadership” என்று தலைப்புப் போட்டு ப.ஜ.க.வுடன் சேர்ந்து பூரித்திருக்கிறது! என்ன ஒரு பார்ப்பனிய நேர்மை!
//பார்பனர்களுக்கு நன்றாக புரிந்திருக்கிறது ஜனநாயக தேர்தல் முறைகளில் 3% இருக்கும் தன இனம் அதிகாரத்தை கைப்பற்றவே முடியாது என்ற உண்மை.
தன்னுடைய வர்ணாசிரம, ஜாதிய பித்தலாட்டங்களால் காலம் காலமாக நசுக்கிவைத்துள்ள பெரும்பான்மை இந்து மக்களிடம் ஆதரவு பெற்று அதிகாரத்தை பெற முடியுமா ? அதற்காகத்தான் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு சூழ்ச்சி.
இது நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு பல முயற்சிகள் செய்தாலும் இந்த இஸ்லாமிய எதிர்ப்பை பற்ற வைக்க முடியவில்லை. 1987 பாபர் மசூதி பிரச்சனையை பார்பனர்கள் கையில் எடுத்த பிறகுத்தான் மாற்றம் தொடங்கியது. 1992 பாபர் மசூதி இடிப்புக்கு பிறகுதான் நாடெங்கிலும் இந்த தந்திரம் செயல்பட தொடங்கியது.
அதுவரை மக்கள் ஒன்றாக அமைதியைத்தான் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு.
பார்பனர்கள் அந்த சூழ்ச்சியின் பலனை அதிகாரங்களாக அறுவடை செய்தார்கள். பலமாநிலங்களில் அதிகாரம் அவர்களின் கைகளுக்கு வந்தது. இரு முறை இந்தியாவின் ஆட்சியையும் பார்பன கைகளுக்கு வந்தது.
இந்திய மக்களின் நிம்மதி, மற்றும் ஒற்றுமை தொலைந்தது. வெறுப்பு வளர்ந்தது. இன்னும்…
இந்தியாவின் முன்னேற்றம் தொலையும், பின்னேற்றம் அடையும்… இவர்களின் தந்திரம் பலிப்பது நீடித்தால்!//
தேசத்தின் யதார்த்தமான அவல நிலையை இதைவிட சுறுக்கமாக, வெகுளியாய் வாழும் மக்களுக்கு உணர்ந்திட இயலாது சகோதரர் முன்னா அவர்களே!
நன்றி!