privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !

உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !

-

மேற்கு உத்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள முசாஃபர் நகர் மாவட்டத்தில் முசுலீம்களுக்கு எதிராக ஜாட் சாதியினரைத் தூண்டிவிட்டு ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பல் நடத்திய கலவரத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதோடு, ஏறத்தாழ 40,000-க்கும் மேற்பட்டோர் தமது சொந்த கிராமங்களை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர்.  இந்த 40,000 பேரில் ஆகப் பெரும்பான்மையோர் முசுலீம்கள் என்ற புள்ளிவிவரத்திலிருந்து இக்கலவரத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.  மேலும், சாதி இந்துக்களை ஒன்றுதிரட்டி முசுலீம்களுக்கு எதிராக நிறுத்தும் “குஜராத் மாதிரி” உ.பி.யிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை இக்கலவரம் எடுத்துக்காட்டியிருக்கிறது.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள்
முசாஃபர்நகர் மாவட்டக் கலவரத்தின்போது ஈவிரக்கமற்ற முறையில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சிறுமிகள்

கடந்த ஆகஸ்டு 27 அன்று முசாஃபர் மாவட்டத்திலுள்ள கவால் கிராமத்தைச் சேர்ந்த ஷானவாஸ் என்ற முசுலீம் இளைஞர், மாலிகாபூர் கிராமத்தைச் சேர்ந்த சச்சின் மற்றும் கவுரவ் என்ற இரு ஜாட் சாதி இளைஞர்களால் கொல்லப்பட்டார்.  ஷானவாஸைக் கொன்றுவிட்டுத் தப்பியோட முயன்ற அவ்விருவரும் அக்கிராமத்தைச் சேர்ந்த முசுலீம்கள் சிலரால் துரத்திப் பிடிக்கப்பட்டு, பின் அடித்துக் கொல்லப்பட்டனர்.  இது போன்ற அடிதடிக் கொலைகள் அடிக்கடி நடக்கும் முசாஃபர் நகர் மாவட்டத்தில், இந்தக் கொலைகள் வெறும் புள்ளிவிவரமாக மறைந்து விடவில்லை.  இதனை ஜாட் சாதியினருக்கும் முசுலீம்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டிவிடுவதற்கான வெடிமருந்தாகப் பயன்படுத்திக் கொண்டது, ஆர்.எஸ்.எஸ்.

ஜாட் சாதியைச் சேர்ந்த அவ்விரு இளைஞர்களின் சகோதரியை ஷானவாஸ் பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்ததால்தான், அவர்கள் ஷானவாஸைக் கொல்லத் துணிந்ததாக ஒரு தரப்பும்; ஷானவாஸும் சச்சினின் சகோதரியும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததையடுத்து நடந்துள்ள ‘கௌரவ’க் கொலை இது என இன்னொரு தரப்பும்; இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதில் ஏற்பட்ட பிரச்சினையடுத்துதான் இக்கொலைகள் நடந்தது எனவும் இக்கொலைகளுக்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.  இவை எதுவுமே உறுதி செய்யப்படாத நிலையில் ஆர்.எஸ்.எஸ். கும்பலோ, “முசுலீம்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்துப் பெண்களை மயக்கித் திருமணம் செது கொள்கிறார்கள்; இதற்கான பயிற்சி மதரஸாக்களில் நடத்தப்படுகிறது” என இவ்விவகாரத்தை முசுலீம் தீவிரவாதத்தோடு முடிச்சுப் போட்டதோடு, முசுலீம்களுக்கு எதிராக ஜாட் சாதியினரைத் தூண்டிவிடும் சதித் திட்டத்தோடு, “ஜாட்கள் தமது பெண்களின் கௌரவத்தைக் காக்க வேண்டும்” எனப் பிரச்சாரம் செய்தது.

இறந்து போன ஜாட் இளைஞர்களின் சவ ஊர்வலம் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி அரசியல் ஊர்வலமாகவே நடத்தப்பட்டது.  அவ்வூர்வலத்தில், “பாகிஸ்தானுக்குப் போ, இல்லையென்றால் மயானத்திற்குப் போ”, “ஒரு உயிருக்கு நாங்கள் நூறு உயிரை எடுப்போம்”, “இந்து ஒற்றுமை ஓங்குக” என முழக்கங்கள் எழுப்பப்பட்டு, வெடிகுண்டின் திரி கொளுத்தப்பட்டது.  இச்சமயத்தில், “இரண்டு இளைஞர்களை ஒரு முசுலீம் கும்பல் கொலை செய்வது போன்ற” காட்சிப் பதிவை முகநூலில் பதிவேற்றம் செய்து வெளியிட்ட பா.ஜ.க.வின் சர்தானா தொகுதி எம்.எல்.ஏ. சங்கீத் சோம், “முசாஃபர் நகரில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.  தங்கள் சகோதரியின் மானத்தைக் காக்க முசுலீம்களுடன் போராடி உயிரிழந்த இந்து இளைஞர்கள் இவர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.  இந்தக் காட்சிப் பதிவு உண்மையில் 2010-இல் பாகிஸ்தானிலுள்ள சியோல் கோட் நகரில் பதிவு செய்யப்பட்டது எனப் பின்னர் அம்பலமானாலும், அதற்குள்ளாகவே இப்பொய்ச் செய்தி ஜாட்   சாதியினரை முசுலீம்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் வேலையைச் செய்து முடித்திருந்தது.

இன்னொருபுறமோ, முசாஃபர் நகரில் ஆகஸ்டு 30, வெள்ளியன்று மதியம் தொழுகை முடிந்த கையோடு, முசுலீம்கள் திடீரென ஓர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் நடத்தினர்.  இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காதிர் ரானா, எம்.எல்.ஏ. ஜமில் அகமது உள்ளட்டோர் கலந்து கொண்டனர்.  இவர்கள் முசுலீம்களை ஜாட்டுகளுக்கு எதிராகத் தூண்டிவிடும் வண்ணம் உரையாற்றியதாகக் கூறப்படுகிறது.

கலவரத்தில் காயமடைந்த சிறுமிகள்
முசாஃபர்நகர் மாவட்டக் கலவரத்தின்போது ஈவிரக்கமற்ற முறையில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சிறுமிகள்

இதற்குப் பதிலடி கொடுப்பது போல, ஆகஸ்டு 31 அன்று கொல்லப்பட்ட இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்ற பெயரில் ஜாட் சாதி பஞ்சாயத்துக் கூட்டத்தை நடத்தியது, பா.ஜ.க.  இதன் பின், செப்டம்பர் 5-ஆம் தேதி ஜாட்டுகளுக்கு ஆதரவாக மாவட்ட கடையடைப்புப் போராட்டம் பா.ஜ.க.வால் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது.  இந்தச் சூழலில் செப்.7 அன்று ஜாட் சாதி மகா பஞ்சாயத்துக் கூட்டம் நடத்தப்பட்டது.  இக்கூட்டத்திற்கு அண்டை மாவட்டங்களிலிருந்து மட்டுமல்ல, அண்டை மாநிலமான அரியானாவிலிருந்தும் ஜாட் சாதியினர் திரட்டப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.  இக்கூட்டத்தில் ஒரு இலட்சம் பேர் திரண்டிருந்ததும், அவர்கள் பல்வேறு ஆயுதங்களோடு கூட்டத்திற்கு வந்திருந்ததும் இக்கூட்டத்திற்கு “மகளை, மருமகளைக் காக்கும் மகா பஞ்சாயத்து” எனப் பெயரிடப்பட்டிருந்ததும், இக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ். திட்டப்படி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டதை அம்பலப்படுத்திக் காட்டின.  இது மட்டுமின்றி, முசுலீம்களுக்கு எதிரான கலவரமும் அன்றுதான் வெடித்தது.

ஆகஸ்டு 27 அன்று ஷானவாஸும், ஜாட் சாதியைச் சேர்ந்த சச்சினும் கவுரவும் கொல்லப்பட்டனர்.  இதன்பின் ஆங்காங்கே இந்து-முசுலீம்களுக்கிடையே மோதல்கள் வெடித்து வந்தாலும் செப்டம்பர் 7 அன்றுதான் முழு அளவிலான கலவரம் வெடித்தது.  இடைப்பட்ட நாட்களில் கலவரத்தைத் தடுத்து நிறுத்தவும், கலவரத்தைத் தூண்டும் நோக்கில் இரண்டு தரப்பிலும் செயல்பட்டவர்களைக் கைது செய்யவும் வாப்புகள் இருந்தும் அவை அனைத்தையும் சமாஜ்வாதி அரசு திட்டமிட்டே புறக்கணித்தது.  முசாஃபர் மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமலில் இருந்தும் ஜாட் சாதியினர் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களோடு பஞ்சாயத்துக்களை நடத்தவும், முசுலீம்கள் ஊர்வலம் நடத்தவும் அனுமதிக்கப்பட்டனர்.  இந்து மதவெறியைத் தூண்டிவிடும் திட்டத்தோடு சமூக வலைத் தளங்கள் பயன்படுத்தப்பட்டதைத் தடை செய்யவும் அரசு முன்வரவில்லை.  கலவரத் தீயில் குளிர் காயலாம் என்ற உள்நோக்கத்தோடு சமாஜ்வாதி அரசு செயல்பட்டது என்பதைத் தாண்டி, இந்த மெத்தனத்திற்கு வேறு காரணம் எதையும் கூற முடியாது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மைய ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற கனவோடு அலையும் பா.ஜ.க., குறிப்பாக பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்து விட வேண்டும் என்ற வெறியோடு அலையும் நரேந்திர மோடி கும்பல், 80 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள உத்திரப் பிரதேசத்தில் அதிகத் தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.  சாதி அரசியலில் ஊறிப் போன உ.பி.யில், ‘வளர்ச்சி’ அரசியலைப் பேசி மோடியை வெற்றிபெற வைக்க முடியாது என்பதைக் கண்டுகொண்டு விட்ட இக்கும்பல், முசுலீம்களுக்கு எதிராக சாதி இந்துக்களை ஒன்றுதிரட்டும் உத்தியைக் கையில் எடுத்திருக்கிறது.

குஜராத் முசுலீம் படுகொலையில் மோடியின் தளபதியாகச் செயல்பட்டவனும், குஜராத்தில் நடந்துள்ள பல்வேறு போலி மோதல் கொலை வழக்குகளில் தொடர்புடையவனுமான அமித் ஷா உ.பி.யின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அன்றே உ.பி.யில் பா.ஜ.க.வின் திட்டமென்ன என்பது வெளிச்சத்திற்கு வந்து விட்டது.  அமித் ஷா தேர்தல் பொறுப்பாளராக உ.பி.க்குச் சென்றவுடனேயே, அயோத்தி பாபர் மசூதி வளாகத்தினுள் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் ராமர் கூடாரத்திற்குப் போனதும், அதனைத் தொடர்ந்து விசுவ இந்து பரிசத் கோசி யாத்திரையை அறிவித்ததும் நரேந்திர மோடி கும்பல் இந்து மதவெறியைக் கிளறிவிட்டு ஓட்டுப் பொறுக்குவதில் எள்ளளவும் தயங்கப் போவதில்லை என்பதை எடுத்துக் காட்டின.  முசாஃபர் நகரில் அக்கும்பல் நடத்தியுள்ள கலவரத்தை இவற்றின் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும்.  குறிப்பாக, இக்கலவரத்தின்பொழுது, “நரேந்திர மோடி ஒருவரால்தான் முசுலீம்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க முடியும்” எனத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது தற்செயலானது அல்ல.

மசூதியில் தஞ்சமடைந்துள்ள முஸ்லீம்கள்
ஜாட் சாதிவெறியும் மதவெறியும் கொண்ட கும்பலிடமிருந்து தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியேறி, ஜூல்லா கிராமத்திலுள்ள மசூதியில் தஞ்சமடைந்துள்ள முஸ்லீம்கள்

முசாஃபர் நகர் அமைந்துள்ள மேற்கு உ.பி. 18 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.  இப்பகுதியின் மொத்த மக்கள்தொகையில் ஜாட் சாதியினரும் முசுலீம்களும்தான் பெரும்பான்மையாக உள்ளனர்.  ஜாட் சாதியினர் மத்தியில் அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தள் கட்சியின் செல்வாக்கு சரிந்து விழுந்து விட்டதால், அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ள பா.ஜ.க. இறங்கியிருக்கிறது.  சமாஜ்வாதி கட்சி மேற்கு உ.பி.யில் கணிசமான இடங்களை வெல்ல முசுலீம் ஓட்டுக்களைத் தன்பக்கம் இழுக்கும் திட்டத்தில் இருக்கிறது.  இதுதான் முசாஃபர் நகர் கலவரத்தின் பின்னணி.

ஆர்.எஸ்.எஸ். கும்பல் பழைய பாணியில், அதாவது ராமர் கோவில், காஷ்மீர் பிரச்சினை, பாக். எதிர்ப்பு முசுலீம் தீவிரவாதம் எனப் பிரச்சாரம் செய்து இந்தக் கலவரத்தை நடத்தவில்லை.  மாறாக, சாதி அடையாளம் மற்றும் சாதி கௌரவத்தையும் முசுலீம் எதிர்ப்பையும் ஒன்றாக்கி இந்தக் கலவரத்தை நடத்தி முடித்திருக்கிறது.  பா.ம.க. ராமதாசு நாடகக் காதல் என்ற கதையை ஊதிப்பெருக்கி தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியைத் தூண்டிவிட்டதைப் போல, ஆர்.எஸ்.எஸ். லவ் ஜிகாத் என்பதை ஊதிப் பெருக்கி, அதன் மூலம் ஜாட் சாதி ஓட்டுக்களைக் கவர முயலுகிறது.  “ஜாட்டுகள், முதலில் நாம் இந்துக்கள் என உணரத் தலைப்பட்டுள்ளனர்.  இது போல மற்ற இந்து சாதிகளும் முசுலீம்களுடன் மோத ஆரம்பித்தால், பா.ஜ.க.விற்குப் பெரும்பலன் கிடைக்கும்” என ஆர்.எஸ்.எஸ்.-இன் வியூகத்தை நப்பாசையுடன் விவரிக்கிறார், சுயம் சேவக் ஒருவர்.

உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி பதவிக்கு வந்த பின், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் ஏறத்தாழ 20-க்கும் மேற்பட்ட இந்து மதவெறிக் கலவரங்கள் நடந்துள்ளன.  மற்ற ஓட்டுக்கட்சிகளும் முதலாளித்துவ அறிஞர்களும், “சட்டம்-ஒழுங்கைக் காப்பதில் சமாஜ்வாதி அரசு தோற்றுவிட்டதை இக்கலவரங்கள் காட்டுவதாக”க் கூறி விமர்சித்து வருகின்றன.  ஆனால், சமாஜ்வாதி கட்சியோ இப்படிபட்ட கலவரங்களின்பொழுது முசுலீம்களுக்குச் சாதகமாக சில நடவடிக்கைகளை எடுப்பதாகக் காட்டிக் கொள்வதன் மூலம் தனது சிறுபான்மையினக் காவலன் நாடகத்தைத்  தொடர்ந்து நடத்த முடியும் எனக் கருதுகிறது.  இந்த விசயத்தில் பா.ஜ.க.வும் சமாஜ்வாதிக் கட்சியும், “நீ அடி, நான் அணைத்துக் கொள்கிறேன்” என இருப்பது, விசுவ இந்து பரிசத் அயோத்தியில் கோசி யாத்திரை நடத்த முயன்றபொழுதே அம்பலத்திற்கு வந்துவிட்டது.

பா.ஜ.க எம்.எல்.ஏ சங்கீத் சோம்
முசுலீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி விடும் நோக்கில் போலியான காட்சிகளை பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ சங்கீத் சோம்

சிறுபான்மையினரான முசுலீம்களை அச்சத்தில் வைத்திருப்பதன் மூலம் அவர்களைத் தம் பக்கம் இழுப்பது என்ற இந்த தந்திரத்தின் அடிப்படையில்தான் முசாஃபர் நகரில் கலவரச் சூழலை உடனடியாகக் கட்டுப்படுத்தாமல் வளரவிட்டது, சமாஜ்வாதி அரசு.  ஆனால், நிலைமை கைமீறிப் போ, அக்கலவரம் சமாஜ்வாதிக் கட்சியையே பதம் பார்த்துவிட்டது.  கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசுலீம்கள் சமாஜ்வாதி அரசுக்கு எதிராக ஆத்திரத்துடன் இருப்பதைக் கண்டுகொண்ட பிறகுதான், கலவரத்தைத் தூண்டுவதில் முன்னணியில் நின்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களைக் கைது செயத் தொடங்கியது, அம்மாநில அரசு.

மேற்கு உ.பி. பகுதியில் முசுலீம்களுக்கும் ஜாட்டுகளுக்கும் மத்தியில் இதுகாறும் நிலவி வந்ததாகக் கூறப்படும் நல்லிணக்கத்தை இக்கலவரம் முற்றிலுமாகக் கலைத்துப் போட்டு விட்டது.  அகதிகளாக வெளியேறியிருக்கும் முசுலீம்கள், “நாங்கள் எந்த நம்பிக்கையில் சோந்த ஊருக்குத் திரும்ப முடியும்?” என அச்சத்துடன் வினவும்பொழுது, இந்து மதவெறி கொண்ட ஜாட்டுகளோ, “நாங்கள் அவர்களைத் திரும்பச் சொல்லி கெஞ்சப் போவதில்லை” எனத் திமிரோடு அறிவிக்கிறார்கள்.  முசுலீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்த கிராமங்களிலிருந்து அவர்கள் துரத்தியடித்துவிட்டு, அவற்றை ஜாட்டுகள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ்.-இன் தீய உள்நோக்கம் இக்கலவரத்தின் மூலம் சாத்தியமாகியிருக்கிறது.

பீகாரில் யாதவ்-முசுலீம் முரண்பாட்டை ஏற்படுத்தி, நெவாடா மற்றும் பெட்டியாவில் ஏற்கெனவே கலவரங்களை நடத்தி முடித்திருக்கிறது, ஆர்.எஸ்.எஸ்.  மேலும் அசாமில் சில்சார், மத்தியப்பிரதேசத்தில் இந்தூர், ஜம்முவில் கிஷ்த்வர் ஆகிய இடங்களிலும் சமீபத்தில் முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறிக் கலவரங்கள் நடந்துள்ளன.  40 சதவீதம் முசுலீம் மக்கள் தொகை கொண்ட மேற்கு வங்கத்தில் இந்து மதவெறியைக் கக்குவதில் கைதேர்ந்தவனான வருண் காந்தி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறான்.  இவையனைத்தும் நாடாளுமன்றத் தேர்தல்களையொட்டி முசுலீம்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்துவரும் வட மாநிலங்களில் இந்து மதவெறியைக் கிளறிவிட்டு, சாதி இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்துகொள்ளும் மோடி வித்தையில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் இறங்கியிருப்பதை எடுத்துக் காட்டுகின்றன.

குப்பன்
__________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013

__________________________________

  1. //இன்னொருபுறமோ, முசாஃபர் நகரில் ஆகஸ்டு 30, வெள்ளியன்று மதியம் தொழுகை முடிந்த கையோடு, முசுலீம்கள் திடீரென ஓர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் நடத்தினர். இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காதிர் ரானா, எம்.எல்.ஏ. ஜமில் அகமது உள்ளட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் முசுலீம்களை ஜாட்டுகளுக்கு எதிராகத் தூண்டிவிடும் வண்ணம் உரையாற்றியதாகக் கூறப்படுகிறது.//

    “கூறப்படுகிறது”.

    //“பாகிஸ்தானுக்குப் போ, இல்லையென்றால் மயானத்திற்குப் போ”, “ஒரு உயிருக்கு நாங்கள் நூறு உயிரை எடுப்போம்”, “இந்து ஒற்றுமை ஓங்குக” என முழக்கங்கள் எழுப்பப்பட்டு, வெடிகுண்டின் திரி கொளுத்தப்பட்டது.//

    “முழக்கங்கள் எழுப்பப்பட்டு” 😀 நல்லா கொழுத்தறீங்க.

    வினவு எப்படியெல்லாம் பொய் சொல்லும்குறதுக்கு இன்னொரு உதாரணம்.

    இரு இந்துக்கள் அடித்துக் கொல்லப்பட்ட பிறகு காவல் துறை 2 முஸ்லீம் கொலைகாரர்களை பிடித்து விட்டது. ஆனால், உபி மந்திரி ஆசம் கான் உத்தரவின் பேரில் அன்று இரவே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பிறகு தான் கலவரமே ஆரம்பமானது. இதை நான் சொல்லலை. ஸ்டிங் ஆப்பரேஷனில் போலீஸ்காரர் சொல்கிறார்.

    அதைப்பற்றி எதையும் காணோம்? ஏன்? ஆசம் கான்ன் முஸ்லீம்கிறதுனாலயா?

    இன்னும் எத்தனை நாள் எரியவிட்டு குளிர் காய்வீர்கள். ஆத்திரக்காரர்கள் இருக்கும் வரை உங்களின் பொய்களை நம்பத்தான் போகிறார்கள். முட்டாள்கள்.

    • Hello Seeeeeeenu!

      Since Hindus (very few) are become a terrorist Muslims tooo learn from them!!!!

      By killing Mr Gandhi, Rss teach Muslim terrorist for the method of killing!!!!

      By Killing 3000 Indians at Gujarat, Criminal Modi gang teach Muslim terrorist how to react!!!

      These Hind and Muslim terrorist are almost similar!!!

      Hindu terrorist make a ACTION!!!

      Muslim terrorist make a REACTION!!!

      So BOTH of them should be punished according to Indian constitutional Law.

      Since our constitution is following secular and socialist approach , there is no place for Religious fundamentalism and Religious Terrorism !!!!!

      Mandieela arrrucha?(Did u understand at least little bit in your brain?)

              • Hi RSS Gandhi killer SEEEEnu,

                Tell…! where can people like me to learn?
                Since I am born and brought up under working class I learned about this wold from the SCHOOL OF LENIN.

                If I learn from my beloved leader and my teacher Lenin..,Where will u have pain?

                If I learn from him[Lenin ] only TATA and Reliance will cry against communism !!
                But Why are u crying now?

                Di muttal Seenu mandieela konchmavathu eeeruth?

                • தம்பி,

                  கொஞ்சம் மரியாதையே பேசக்கத்துக்க. லெனின் ஸ்கூல் புள்ளைங்க மாதிரி கழசடையா பேசாத…

                  • லெனின் ஸ்கூல் பிள்ளைங்களுக்கு நீ மரியாதை கற்று தர வேணாம்.தன்னை விட வயதில் சிரியவரையும் ஏழ்மையில் வாடிய பிச்சை காரனையும் கூட சகா என்றும் சகோ என்றும் அழைத்தவர் லெனின் . அவர் மாணவர்கள் பண்பிலும் நேசத்திலும் சிறந்தவர்கள்

                  • Hari Said…//Communism itself is a jewish conpiracy to undermine the working class?//

                    Hello Harikumar,

                    Thanks for making me to keep remembering the following point!!!

                    [1] Yes it is first conceived by a man Marx born in Jew race!! He like to integrate all the working class people.And my Leader Lenin improved lot in several aspects!!

                    [2] But YOUR RSS IDEOLOGY IS BASED ON Nazi Hitler!!! By speaking against communism u support Hitler and his ideology Nazism!!!

                    [3] You are a true man so that u r accepting that RSS ideology is based on Nazism

                    With regards,

                    K.Senthilkumaran

                  • Hari Said…//Communism itself is a jewish conpiracy to undermine the working class?//

                    It is nice to see in India that …..

                    [1] The two ideologies Marxism-Leninism and Nazism and fighting with each other!!!

                    [2] We as the people who are integrating working class people based on communism

                    [3] You are the people who killed 3000 Muslim-Indians in Gujarat during 2002 genocide based on Nazi-Hitler Ideology Pure Racism.

                    With Regards,
                    K.Senthilkumaran

                • // Di muttal Seenu mandieela konchmavathu eeeruth? //

                  நீங்க என்னதான் லெனின் ஸ்கூல்லே படிச்ச அறிவாளியா இருந்தாலும் மத்தவங்களை இப்படியெல்லாம் மரியாதை இல்லாம மட்டம் தட்டிப் பேசப்படாது செந்தில்.. இதை மேட்டிமை உணர்வு என்று லெனின் கூறியிருப்பார்.. தேடிப் படியுங்கள்..

                  • //நீங்க என்னதான் லெனின் ஸ்கூல்லே படிச்ச அறிவாளியா இருந்தாலும் மத்தவங்களை இப்படியெல்லாம் மரியாதை இல்லாம மட்டம் தட்டிப் பேசப்படாது செந்தில்.. இதை மேட்டிமை உணர்வு என்று லெனின் கூறியிருப்பார்.. தேடிப் படியுங்கள்..//

                    hI AMMMMPEEEEE,

                    //அதான் இப்டி பெனத்துற// WHO WRITE THIS!!! YES SEEEEENU!!!

                    IF U DO NOT RESPECT ME THEN WHY SHOULD I GIVE RESPECT TO U.?

                    Hello Ammmmmmmmbeeeeeeeeeeee, This place is not a sankara madam…..!
                    This is the place for doing discussion meaning fully. But why u peoples like ammmmmpeees and seeeeeeeeeeeeeenus are doing NAKKAL AND KINDAL?

                    WITH REGARDS,
                    K.SENTHILKUMARAN

                  • //நீங்க என்னதான் லெனின் ஸ்கூல்லே படிச்ச அறிவாளியா இருந்தாலும் மத்தவங்களை இப்படியெல்லாம் மரியாதை இல்லாம மட்டம் தட்டிப் பேசப்படாது செந்தில்.. இதை மேட்டிமை உணர்வு என்று லெனின் கூறியிருப்பார்.. தேடிப் படியுங்கள்..//

                    [1] Seenu said …அதான் இப்டி பெனத்துற
                    [2] Payasaid said மதரஸா படிச்சு பெயிலானவன்..

                    hi Ampeeeeeeee,

                    [a] If u PEOPLE did not give respect to others then how can u [useless fellows] expect respect RESPECT!!!!!!!

                    [b] The concept of insulting other CAST people is AVAILABLE in your people[BRAMIN] gene DNA!!!So only through GENETIC ENGINEERING `2it can be removed.Till that time…

                    [c] our beloved leader and Teacher Lenin Teach us how to face u Guys.

                    ” … Let us take the weapons Which ever the weapons the the opponent takes….”

                    “……So that while u r insulting me ,,I too use ur method of opposing u…….”

                    If u r behaving decently and using proper world I too…

                    Other wise U guys will get the DOUBLE IMPACT OF BOLD WORDS from me.

                    with regards,
                    K.Senthilkumaran

                    • அதாவது செந்தில் இந்த அம்பிங்களுக்கு அவாள் எப்டி பேசனாலும் இனிக்கும்.பதிலுக்கு நாம பேசுனா வலிக்கும்.பையான்னு ஒரு லூசு என்னிய பைத்தியம் ங்கிறான்.அப்பல்லாம் இந்த தும்பிக்கு கண் தெரியல போல.

                    • // Mandieela arrrucha?(Did u understand at least little bit in your brain?)//

                      இதை முதலில் சொன்னது நீங்க தானே..

                      // Other wise U guys will get the DOUBLE IMPACT OF BOLD WORDS from me. //

                      அய்யோ..

                    • அப்டியே மனுதர்மம் ரத்தத்துல ஊறி கிடக்கு.

                      சூத்திரன் கொலை செய்தால் தண்டனை சிரச்சேதம்.

                      பாப்பான் கொலை செய்தால் தண்டனை சிகைச்சேதம்.

                      எடுத்த எடுப்பிலேயே முட்டாள்கள் ஆத்திரக்காரர்கள் என்று கமண்டு போட்டது சீனுதான்.அதெப்டி அய்யிரே உங்களவா தவறுன்னு வந்தா மட்டும் கண் தெர்யாம போயிடுது.பதிலுக்கு எங்களவா சொன்னா அய்யோ ன்னு நக்கல் வேற.

                    • // எடுத்த எடுப்பிலேயே முட்டாள்கள் ஆத்திரக்காரர்கள் என்று கமண்டு போட்டது சீனுதான்.அதெப்டி அய்யிரே உங்களவா தவறுன்னு வந்தா மட்டும் கண் தெர்யாம போயிடுது.//

                      நான் பதிலளித்தது இந்தப் பின்னூட்டத்துக்கு..:

                      ” hI AMMMMPEEEEE,

                      //அதான் இப்டி பெனத்துற// WHO WRITE THIS!!! YES SEEEEENU!!!

                      IF U DO NOT RESPECT ME THEN WHY SHOULD I GIVE RESPECT TO U.? ”

                      கோழியா முட்டையா எது முதலில் வந்தது என்று ஆராய ஆரம்பித்தால் என்ன சொல்வது..?

                    • /////
                      // Mandieela arrrucha?(Did u understand at least little bit in your brain?)//

                      இதை முதலில் சொன்னது நீங்க தானே..

                      // Other wise U guys will get the DOUBLE IMPACT OF BOLD WORDS from me. //

                      அய்யோ..
                      /////

                      அம்பி,

                      நானே அந்த கொழந்த பையன் சொல்றது எதையும் கண்டுக்கல. நீங்க வேற உங்க டயத்த வேஸ்ட் பன்னிக்கிட்டு… 😀

          • பையா
            உன் வக்கிர புத்திய அடிக்கடி காமிக்காத கேள்வி கேட்பது மிஸ்டர் செந்தில் குமரன் அவருக்கு பதில் சொல்ல உனக்கு வக்கில்ல உனக்கு அறிவும் கில்ல . உன்னிடத்தில் பட்லும் இல்ல .பின்னே எதுக்கு மதரஸாவை இழுக்குற .நீங்கலெல்லாம் அறிவு பூர்வமா சிந்திக்கவே மாட்டிங்களா? நீ என்ன செய்யுவ உங்க அறை ட்ர்வ்சர் ஸ்கூல் தான் உங்க மூளைய மழுங்கடிச்சுடுச்சே.ஒருநாளாவது ஒரு ஐந்து நிமிஷம் கண்ணை மூடி நாம ஏன் இப்படி வக்கிர புத்தியொட இருக்கோம்னு யோசிச்சு பாத்திருக்கியா? சிந்தி சிந்திச்சு பார் அப்போ எவன் நல்லவன் எவன் கெட்டவன்னு புரியும்

      • அந்த தம்பி சொல்ரதுக்கு எதுனா பதில் சொல்லு.இப்டி நக்கல் அடிச்சா பதில் ஆயிடுமா.

        நாலு வரி மறுப்பு எழுத துப்பு கெட்ட மங்குனிக்கு லொள்ள பாரு,எகத்தாளத்த பாரு.தூத்தேறி.

        • ‘ஏட்டு’ எரிமலை,

          முதல்ல கேள்வி கேட்டது நான். அந்த ஸ்கூல் போற தம்பி பதிலுக்கு கேள்வி தான் கேட்டுது.

          சரி! சொல்றேன்.

          //By killing Mr Gandhi, Rss teach Muslim terrorist for the method of killing!!!!//

          காந்தி ஆர்.எஸ்.எஸ்.ஆல் கொல்லப்படவில்லை. கோட்சே என்னும் தனி மனிதன் செய்த கொலை. ஆர்.எஸ்.எஸ். தான் சொன்னது என்றால், காந்தி கொலை வழக்கு நடந்து முடிந்து ஏன் தடை விலக்கப்பட்டது?

          //By Killing 3000 Indians at Gujarat, Criminal Modi gang teach Muslim terrorist how to react!!!//

          முதலில் நடந்தது கோத்ரா இரயில் எரிப்பு. அதற்கு பின் தான் குஜராத் கலவரம் ஆரம்பமானது. முதல் முறையாக react என்று கற்றுக்கொண்டனர்ர் இந்துக்கள்.

          கோத்ராவில் இரயிலில் உயிரோடு எரிக்கப்பட்டவர்களை பற்றி உங்களுக்கு கவலையில்லை. குஜராத் கலவரத்தில் 350+ இந்துக்கள் இறந்ததை பற்றியும் யாரும் கவலைப்படமாட்டீர்கள். முஸ்லிம்கள் உயிர் என்றால் உங்களுக்கு உசத்தி என்றால், இதுக்கு பேர் போலி மதச்சார்பின்மை இல்லாமல் வேறென்ன?

          கவுசர் பானு என்னும் கர்ப்பினி வயிற்றை கிழித்து கொல்லப்பட்டதாக திரும்ப திரும்ப சொல்பவர்கள், அந்து தீஸ்தா செதல்வாட்டின் fabricated என்று கோர்ட் சொன்னதை எங்கும் சொல்லாமல் விடும் உங்களைப் போன்றவர்கள் எரியவிட்டு குளிர் காய்பவர்கள் தானே?

          The report which was brought to the notice of the bench consisting of Justices Arijit Pasayat, P Sathasivam and Aftab Alam, noted that the much publicised case of a pregnant Muslim woman Kausar Bano being gangraped by a mob and foetus being removed with sharp weapons, was also fabricated, and false.[52][54]

          http://en.wikipedia.org/wiki/Teesta_Setalvad#Allegations_of_witness_tampering

          • சீட்டு சீனு,

            ஏட்டுக்கு சீட்டு நல்லா மேச் ஆவுதுல.சீட்டு கட்டுலையே ஊடு கட்டுவ போல அய்யிரே நீ.

            கோட்சே இந்து மகா சபைல இருந்தான் எனபது அல்லார்க்கும் தெர்யும்.ஆர்.எஸ்.எஸ்.சோட இன்னொரு அவதாரம்தானே அது.நீ என்ன பேர் வச்சுக்கிட்டா என்ன.அல்லாமே கழுதை விட்டை தான்.வெறிநாய் கூட்டம்தான்.தடை ஏன் விலக்கப்பட்டது என்ற கேள்விக்கு விடை படேலுக்கு மோடி சிலை வக்கிறதுல இருக்கு.

            கோத்ரா பத்தி வக்கனையா பேசுறியே.அந்த தீயை பத்த வச்சதே உங்க ஆளுங்கதான் எனபது அம்பலமாகி நாறுவது.உனுக்கு தெரியாதா அய்யிரே.இத்த படிச்சு பாரு அய்யிரே.

            ரீஅக்சன் ரீஅக்சன் ன்னு கூவுறியே.அப்பிடியே பாய்ங்கதா எரிச்சாங்கன்னா எரிச்சவன பிடிச்சு கொல்லு.ரோட்ல போற வார முஸ்லிமை எல்லாம் கொல்லுவன்றியே அப்ப நீ மனுசனே இல்ல.வெறி புட்ச மிருகம்.

            இந்துக்களும் செத்தாங்கன்னு கள்ளக் கணக்கு சொல்றியே,அகதி முகாம்ல இருக்கற அத்தனை பேரும் முஸ்லிம.இதுலேயே தெர்லயா.யாரை யார் சாவட்சதுன்னு.

            இப்ப நா கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு.கோத்ரா ஸ்டேசன்ல முஸ்லிம் பொண்ணுங்க ரெண்டு பேர வாயை பொத்தி கடத்த பாத்துருக்காங்க உங்க அரை டவுசர் ரவுடிகள்.அரை டவுசர் ரவுடிகள் ஆக்சனுக்கு ரீஅக்சன் இது.அதுனால அவனுங்கள பாய்மாறு கல்லால அட்சு தொரத்திருக்காங்க.அரை டவுசர் ரவுடிகள் ஆக்சனுக்கு ரீஅக்சன் இது.ஆமா உன் வீட்டு பொண்ணுங்கள ரவுடி பசங்க தூக்க பாத்தா கையை கட்டிக்கினு வேடிக்கை பாப்பியா.

            • கோத்ரா தீய வெச்சது எங்காளுங்களாம். இதுலயே தெரியுது எவ்வளவு வக்கிரம் புடிச்ச ஆளுன்னு. அப்ப, செத்த முஸ்லீம்கள் கூட அவங்களா தற்கொலை செஞ்சுகிட்டவக தான்…

              • Hi Seeeeenu Who fired the train is a Terrorist …..

                Who killed 3000 Indians in Gujarat too Terrorist………..

                so that I tell u!

                Since our constitution is following secular and socialist approach , there is no place for Religious fundamentalism and Religious Terrorism !!!!!(Both Hindu Muslim)

                Mandieela arrrucha?(Did u understand at least little bit in your brain?)!!!

                  • //முதலில் நடந்தது கோத்ரா இரயில் எரிப்பு. அதற்கு பின் தான் குஜராத் கலவரம் ஆரம்பமானது. முதல் முறையாக react என்று கற்றுக்கொண்டனர்ர் இந்துக்கள்.//
                    THANKS FOR ACCEPTING YOUR CRIME

                    By the way u accept that Modi gang only killed 3000 Indians in Gujarath!!!

                    Good confession and acceptance !!!

                    Hello CBI put this anna SEEEEEEEEnu in to Thekar Jail!!!!

                    • // People die in riots and that is normal. //

                      ஹரி,

                      இந்துக்கள் அதிகமாக கொல்லப்பட்டிருந்தாலும் இதைத்தான் சொல்வீர்களா..

                      எல்லா இந்து-முஸ்லீம் மதவெறிக் கலவரத்திலும் அதிகமாக பாதிக்கப்படுவது இந்து/முஸ்லீம் அப்பாவிகளே..

                    • You are the people who killed 3000 Muslim-Indians in Gujarat during 2002 genocide based on Nazi-Hitler Ideology Pure Racism.

          • கோத்ரா பத்தி வக்கனையா பேசுறியே.அந்த தீயை பத்த வச்சதே உங்க ஆளுங்கதான் எனபது அம்பலமாகி நாறுவது.உனுக்கு தெரியாதா அய்யிரே.இத்த படிச்சு பாரு அய்யிரே.

            http://archive.tehelka.com/story_main40.asp?filename=Ne111008coverstory.asp

            • பேர வெச்சியெல்லாம் அய்யர்னு சொல்லப்படாது. நான் அய்யர் இல்ல. முதலியார். செங்குந்த முதலியார்…

                • முஸ்லீமா இருந்து மூளை தான் போச்சு. கண்ணு கூடவா?

                  ///////////////
                  சரி! சொல்றேன்.

                  //By killing Mr Gandhi, Rss teach Muslim terrorist for the method of killing!!!!//

                  காந்தி ஆர்.எஸ்.எஸ்.ஆல் கொல்லப்படவில்லை. கோட்சே என்னும் தனி மனிதன் செய்த கொலை. ஆர்.எஸ்.எஸ். தான் சொன்னது என்றால், காந்தி கொலை வழக்கு நடந்து முடிந்து ஏன் தடை விலக்கப்பட்டது?

                  //By Killing 3000 Indians at Gujarat, Criminal Modi gang teach Muslim terrorist how to react!!!//

                  முதலில் நடந்தது கோத்ரா இரயில் எரிப்பு. அதற்கு பின் தான் குஜராத் கலவரம் ஆரம்பமானது. முதல் முறையாக react என்று கற்றுக்கொண்டனர்ர் இந்துக்கள்.

                  கோத்ராவில் இரயிலில் உயிரோடு எரிக்கப்பட்டவர்களை பற்றி உங்களுக்கு கவலையில்லை. குஜராத் கலவரத்தில் 350+ இந்துக்கள் இறந்ததை பற்றியும் யாரும் கவலைப்படமாட்டீர்கள். முஸ்லிம்கள் உயிர் என்றால் உங்களுக்கு உசத்தி என்றால், இதுக்கு பேர் போலி மதச்சார்பின்மை இல்லாமல் வேறென்ன?

                  கவுசர் பானு என்னும் கர்ப்பினி வயிற்றை கிழித்து கொல்லப்பட்டதாக திரும்ப திரும்ப சொல்பவர்கள், அந்து தீஸ்தா செதல்வாட்டின் fabricated என்று கோர்ட் சொன்னதை எங்கும் சொல்லாமல் விடும் உங்களைப் போன்றவர்கள் எரியவிட்டு குளிர் காய்பவர்கள் தானே?

                  The report which was brought to the notice of the bench consisting of Justices Arijit Pasayat, P Sathasivam and Aftab Alam, noted that the much publicised case of a pregnant Muslim woman Kausar Bano being gangraped by a mob and foetus being removed with sharp weapons, was also fabricated, and false.[52][54]

                  http://en.wikipedia.org/wiki/Teesta_Setalvad#Allegations_of_witness_tampering
                  ////////////

                  • எங்களுக்கு முஸ்லிம் இந்து அல்லார்மே மூட நம்பிக்கையாளர்கள்தான்.அதுல ஒன்னு இன்னொன்னுக்கு மூளை இல்லன்னு விஷம் கக்குது.சரி போலி சாமியார்ட்ட போய் காசு கற்பு அத்தனையும் பரி கொடுக்கும் நீங்க இப்டிலாம் ஏமாற்றாத ஏமாறாத பாய்க்கு மூளை இல்லேன்றீங்க வேடிக்கைதான்.

                    • ஏமாற்றாதாவர்கள் , ஏமாறாதவர்கள் எல்லா மதம் / இனஙகளிலும் உண்டு ….மலை சாரே ? நாளிதழ்கள் படித்தால் தெரியும்.

                    • ஓவரா பொய் சொல்ல கூடாது
                      இந்துக்கள் நிம்மதியா வாழவே இந்தியாவுல இடம் இல்ல
                      இந்துக்களுக்கு
                      எதிரிகள் தான் நீங்க எல்லோரும்
                      மத சார்பின்மை,பகுத்தறிவு, ,மயிரு,மண்ணாங்கட்டின்னு
                      இந்துக்கள எவ்வளவு நாளைக்கு ஏமாத்துவீங்க

                • கொசு முட்டையிட்டு கோழி அடை காக்குமா.
                  இல்ல கோழி முட்டையிட்டு கொசுதா அட காக்குமா ன்னு கவுண்டமணி சம்பந்தா சம்பந்தமில்லாம பேசுற மேரி உளறி வைக்கத்தா இவாளுக்கு தெரியும்.இதுல பதில் சொல்றது எங்கே.

                • தம்பி,

                  இங்க இல்ல. எங்க ஏதாவது ஆர்க்யுமென்ட் பன்னினாலும் முதலில் வருவது பார்ப்பானா இல்லையா என்பது தான். அதனால், நான் brahmin இல்லைனு சொல்ல வேண்டியிருக்கு. இனிமேலாவது நான் brahmin-னா இல்லையான்னு தெரிஞ்சுகிட்டு ஆர்க்யூ பன்னட்டும்.

                  என் ஜாதிய சொல்ல எனக்கு வெட்கமில்ல…

              • அய்யிரா இர்ந்தா என்ன முதலையா இர்ந்தா என்ன.உன்னோட இந்து மதவெறி நாத்தம் குடல புரட்டுது.இந்து மதவெறியோட நோக்கமே மத்த சாதிக்கார பயலுவ எக்கேடு கெட்டாலும் அய்யர்வாள் அத்தன பேரும் சொகுசா வாழணும்கிறதுதான்.அதுக்கு புத்தி கெட்டு போய் சொம்படிக்கிற முட்டாள்கள் எந்த சாதியா இருந்தா என்ன.எல்லாம் ஒண்ணுதான்.

                • // உன்னோட இந்து மதவெறி நாத்தம் குடல புரட்டுது. //

                  எரிமலைக்கு இன்னும் மசக்கை தீரவில்லையா..?! தயிர் சாதமும் எலுமிச்சை ஊறுகாயும் குமட்டல், குடைச்சல், எரிச்சல் போன்றவைகளுக்கு அருமருந்தாகும்..

                  // இந்து மதவெறியோட நோக்கமே மத்த சாதிக்கார பயலுவ எக்கேடு கெட்டாலும் அய்யர்வாள் அத்தன பேரும் சொகுசா வாழணும்கிறதுதான். //

                  இந்து மதம் அய்யர்வாள்களின் சொத்தல்ல.. இதைப் புரிந்து கொள்ளாவிட்டால் இந்து மத வெறியின் காரணத்தை உணர்வது கடினம்..

                  • வாங்க அம்பி ,என்ன வெளிநாடு சுற்று பிரயாணம்லாம் நல்லபடியா முடிஞ்சுதா.
                    தயிர் சாதமும் எலுமிச்சை ஊறுகாயும் அய்யிருங்க எப்பயுமே விரும்பி சாப்டுற ஐட்டம்சா இருக்கே.அப்ப நீங்க எப்பயுமே மசக்கையிலதா கெடக்குரீங்கலா.எங்களுக்கு அதெல்லாம் கிடையாது.செத்த எலி மேரி உங்களவா மணம் பரப்புரதுதா குடல புரட்டுது.

                    இந்து மதம் அய்யர்வாள்களின் சொத்தல்ல அப்டிங்ரீங்கோ.அப்ப யார் சொத்து ன்னு சொல்றீங்களா.சாதி இல்லாமல் இந்து மதம் இல்லை.சாதி அமைப்பினால் ஆதாயம் அடைவதில் அய்யிருங்கதா முன்னாடி இருக்காங்க.அதுனால சொத்துல லயன் ஷேர் உங்களுக்குத்தான்.

                    ஆனாலும் நீங்க சாமர்த்தியமா வாதத்தை திசை திருப்புறீங்க என்பதையும் சொல்லி வக்கிறேன்.இந்து மத வெறியை சொன்னா இந்து மதம்னு ஏன் மாத்துறீங்க.RSS இந்து மத வெறியோட நோக்கமே பார்ப்பனியம்தான்.

                    இங்க RSS இந்து மத வெறி பிரச்சாரம் பண்ணுதே சீனு என்ற சொம்பு அதன் சாதி செங்குந்த முதலியார்கள் பெரும்பாலும் நெசவாளர்கள் தான்.மண்டல் கமிசன்,உயர் கல்வியில் பிற்பட்டோர் ஒதுக்கீடு இவற்றுக்கெல்லாம் வரிந்து கட்டி எதிர்க்கும் RSS பருத்தி ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளால் நூல் விலை ஏற்றத்தால் நெசவாளர்கள் பாதிக்கப்படும்போது என்ன கிழித்தது.

                    • இப்பஎன்னய்யா எல்லாருக்கும் உன்னமாதிரி பைத்தியம் பிடிக்குனுமா?

                    • Hi MOKI paya ….,

                      [1] If u do not have knowledge in u r brain then keep quit and read others discussion.

                      [2] We can not tolerate u r MOKI and useless words PAya

                      [3] The better place for u r MOKI and useless words is SANKARA MADAM AND TUKLAK BOOK PAYA.

                      [4] HI PAYA ,WHY DO NOT U THINK AT LEAST LITTLE BIT AND WRITE HERE?

                      [5] U CAN WRITE U R WORDS WITH OUT FEAR HERE.

                      with regards,
                      k.senthilkumaran

                    • கிறுக்குப் paiya

                      நீதா ஏற்கனவே பைத்தியம் புட்சு அலையுற. NASA வின் செயற்கைகோள்கள் பூமிய சுத்தி வரப்போ திருநள்ளாறு க்கு மேல மூணு வினாடி நின்னுட்டு பிறகு புறப்பட்டு போவுதுன்னு நம்புற கிறுக்குப்பயல் நீ.என்னைய லூசுன்ரியா.

                      எங்கே RSS பார்ப்பனிய நலனுக்காகத்தான் இருக்குன்னு நா சொல்றத மறுத்து அனைத்து சாதியனர் நலனுக்காக பாடுபடுதுன்னு ஆதாரம் காட்டேன் பாப்போம். பாப்பனோட ஆதிக்கத்துக்கு பங்கம்னா மட்டுமதா RSS குடுமி கொந்தளிக்கும்.கையால் மலம் அள்ளும் ”இந்து”வுக்காக, கிட்னிய வித்து கடன் அடைக்கும் நெசவாளர்கள் செங்குந்த முதலியார் ”இந்து”வுக்காக ஆலைகள் மூடப்பட்டு தெருவில் வீசப்படும் தொழிலாளர் ”இந்து”வுக்காக இயற்கையோடும் அண்டை மாநிலங்களோடும் அல்லாடும் விவசாய ”இந்து”வுக்காக RSS க்கு எந்த கவலையும் இருக்காது.

                    • // தயிர் சாதமும் எலுமிச்சை ஊறுகாயும் அய்யிருங்க எப்பயுமே விரும்பி சாப்டுற ஐட்டம்சா இருக்கே.அப்ப நீங்க எப்பயுமே மசக்கையிலதா கெடக்குரீங்கலா.//

                      அதை தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்பதால் சொன்னேன்.. பிறகு உங்கள் விருப்பம்..

                      // இந்து மதம் அய்யர்வாள்களின் சொத்தல்ல அப்டிங்ரீங்கோ.அப்ப யார் சொத்து ன்னு சொல்றீங்களா.சாதி இல்லாமல் இந்து மதம் இல்லை.சாதி அமைப்பினால் ஆதாயம் அடைவதில் அய்யிருங்கதா முன்னாடி இருக்காங்க.அதுனால சொத்துல லயன் ஷேர் உங்களுக்குத்தான். //

                      சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள் இந்து மதத்தில் இல்லையா, இந்து தெய்வங்களை அவர்கள் வணங்குவதில்லையா.. இந்து மதத்தைத் திட்டி வெறுப்பவர்களில் கணிசமானோர் சாதி பார்ப்பவர்களாகவும் இருப்பதில்லையா.. மதமும் சாதியும் தனித் தனியாகவும் இயங்க முடிகிறதே..

                    • இதை தொடர்ந்து சாப்புடுற அளவுக்கு எனக்கு வயத்துல பிரச்னை ஏதுமில்லை.நீங்க தொடர்ந்து சாப்புடுறதுக்கு இந்த பிரச்னைதா காரணமா என்பதுதான் கேள்வி.

                      எனக்கு நெய்சோறும் மாட்டுக்கறி வறுவலும் மீன் குழம்பும் அவிச்ச முட்டையும்தான் அடிக்கடி விரும்பி சாப்டுற பிடித்த உணவு.இன்னொன்னும் சொல்றேன்.இளம் பசு மாட்டுக் கறி ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

                      பகுத்தறிவு கொள்கை இன்றி காதல் போன்ற காரணங்களுக்காக சாதி கடந்து திருமணம் செய்பவர்கள் சாதியை துறந்தவர்கள் அல்ல.தந்தையின் சாதியே அவர்களின் குழந்தைகளுக்கு வந்து சேர்கிறது.ஆகவே சாதியினறி இந்து மதம் இல்லை.

                      இந்து மதத்தைத் மறுப்பவர்களில் கணிசமானோர் சாதி பார்ப்பவர்களாகவும் இருப்பதாக சொல்வது அவதூறு.மதத்தையே துறந்தவனுக்கு சாதி ஹேருக்கு சமானம்.

                    • //இதை தொடர்ந்து சாப்புடுற அளவுக்கு எனக்கு வயத்துல பிரச்னை ஏதுமில்லை.நீங்க தொடர்ந்து சாப்புடுறதுக்கு இந்த பிரச்னைதா காரணமா என்பதுதான் கேள்வி.//

                      பிரச்சினை தீர்ந்த பிறகும் கூட அதை சாப்பிடுவதை தொடரலாம், முன்னெச்சரிக்கையாக இருப்பதில் தவறில்லை..

                      // எனக்கு நெய்சோறும் மாட்டுக்கறி வறுவலும் மீன் குழம்பும் அவிச்ச முட்டையும்தான் அடிக்கடி விரும்பி சாப்டுற பிடித்த உணவு.//

                      அடிக்கடியா..?! வசதியான எரிமலை போல் இருக்கிறது.. இத்தனையும் உள்ளே போன பிறகும் வெளியே விடுவது எப்படி மணக்கும்..?! ஒரே மர்மமா இருக்கே.. எரிமலையா செண்டு பேக்டரியா..?

                      // இன்னொன்னும் சொல்றேன்.இளம் பசு மாட்டுக் கறி ரொம்ப ரொம்ப பிடிக்கும். //

                      துள்ளி வரும் கன்றதனைப் பார்த்தால் பாய்ந்து கடித்து விடு பாப்பா என்று பாட்டு ஏதும் எழுதி வைத்து தொலைக்காதீருமய்யா.. பாவம் கன்றுக் குட்டிகள்.. கொஞ்சமாவது வாழ்ந்து சாக விடுங்கய்யா..

                      //பகுத்தறிவு கொள்கை இன்றி காதல் போன்ற காரணங்களுக்காக சாதி கடந்து திருமணம் செய்பவர்கள் சாதியை துறந்தவர்கள் அல்ல.தந்தையின் சாதியே அவர்களின் குழந்தைகளுக்கு வந்து சேர்கிறது.ஆகவே சாதியினறி இந்து மதம் இல்லை.//

                      பகுத்தறிவில்லாமல் யாரும் கலப்புத் திருமணம் செய்யவேண்டாம் என்று கூறப்படாது..
                      கலப்புத் திருமணத்தால் இரண்டு சாதிகளிலும் உறவினர்கள் கிடைத்து, சொந்த பந்தங்களால் சாதி வேற்றுமையும் நீங்கும் என்று பகுத்தறிவு இல்லாமல் கலப்புத் திருமணம் செய்து கொண்ட பல பக்தகோடிகள் அனுபவ அறிவுடன் கூறுகிறார்களே..

                      // இந்து மதத்தைத் மறுப்பவர்களில் கணிசமானோர் சாதி பார்ப்பவர்களாகவும் இருப்பதாக சொல்வது அவதூறு.மதத்தையே துறந்தவனுக்கு சாதி ஹேருக்கு சமானம்.//

                      உங்களுக்கு பகுத்தறிவுதான் இருக்கு.. அனுபவ அறிவு பத்தாது..

                    • இதுக்கு பெரிய வசதிலாம் தேவையில்லை.பீப் பிரைடு ரய்ஸ் நீங்க உயர்தர சைவ உணவகத்துல சாப்பிடுற தோசைய விட விலை கம்மி.முட்டை விலை தயிர் வடையை விட கம்மி.இன்னொன்னு தெர்யுமா.மாட்டுக்கறி மலிவு விலை ஓட்டல்களில் அல்லது ஸ்டார் ஓட்டல்களில் மட்டுமே கிடைக்கும்.

                      மாடுகள் மனிதர்கள் உணவு தேவையை பூர்த்தி செய்வன.அதை சாப்டுறது இரக்கமற்ற செயல் அல்ல.அதுக்கு என்ன வயசு என்பதும் தேவையில்லை.அப்புறம் வழக்கம் போல உங்க டகால்ச்சி வேலையையும் காட்டுறீங்க.நான் சொன்னது இளம் பசு.அதாவது பருவம் அடைந்த அதே சமயம் கிழடு தட்டாத பெண் மாடு.அதை கன்னுக்குட்டி ன்னு திரிக்கிறீங்க.நாங்கள் பார்ப்பன பயங்கரவாதிகள் போல் மனிதர்களை கொல்வதில்லை.

                      உங்க அளவுக்கு அனுபவ கடல்ல மூழ்கி முத்தேடுக்கா விட்டாலும் நானும் ஓரளவுக்கு சமூகத்தை அறிந்து வைத்திருக்கிறேன்.உங்க அளவுக்கு உண்மையை திரித்து புரட்டி பேசவும் தெரியாது.அதுவும் கடவுளையே மறுப்பவன் சாதியை புட்சு கினு தொங்குவான் என கூசாமல் பொய் சொல்லவும் தெரியாது.

          • //முதலில் நடந்தது கோத்ரா இரயில் எரிப்பு. அதற்கு பின் தான் குஜராத் கலவரம் ஆரம்பமானது. முதல் முறையாக react என்று கற்றுக்கொண்டனர்ர் இந்துக்கள்.//

            By the way u accept that Modi gang only killed 3000 Indians in Gujarath!!!

            Good confession and acceptance !!!

            Hello CBI put this anna SEEEEEEEEnu in to Thekar Jail!!!!

      • Dear K.Senthil Kumaran,
        You could write “Hindus (very few)” but not “Muslims (very few)”. Why?
        Your ideas in this comment are very naïve. Muhamadans did not need Hindus to teach them what the terrorism is. It is Muhamadans who waged jihad /terrorized on this sub-continent (among others), not Hindus who attacked Arabia. I suggest you need to get a balanced view between a Hindu and a Muslim (Muhamadan). Don’t limit yourself to India, consider the whole world, in your view.

        • //Since Hindus (very few) are become a terrorist Muslims tooo learn from them!!!!//

          Yes I am right!!! There are very few Hindu Terrorist like RSS and BJP and Hindu munnany!!! Not all Hindus are terrorist!!!

          That few Hindu Terrorist make them all the Muslims to scare!!

  2. The real problem is Law and order implementation and the control held by politician over police.

    When people think they deserve justice and when they are denied justice, They loose faith in the system.They are ripe for caste/religious parties for being influenced with parties dirty agenda.

    So you can keep on blaming caste/religious parties or choose to fix the law and order implementation.

    If your problem statement is wrong, You will never fix the problem.

    • 100% truth if INDIA goovt wud have stood by its words and have conducted the publi memorendum there wud not have been the kashmir issue…

      If every culprit of Babur Masjid demolition have been punished in time the current situation wud NOT have happened..

      In the same way every culprit behind terror attacks (HINDU, MUSLIM , CHRISTIAN and whoever) have to be punished IN TIME…

      But we still keep on discussing how to improve inttellegence to nab the terrorists rather than fixing the core issues… I don’t think this country will change in the near future…

        • Then u have to sent a letter to her Majesty england becos at tat time the so called INDIA was administered by British… now we have democratically elected govt iam asking it to work unbiased and u r comming up with inccidents under British INDIA wat kind so attitude is this ?? Then can i ask to punish the cultprits(or their grand children) who barred my ancestors not to wear dress above hip in nagercoil to be punished now ?? … If u have any logical reasoning against my points please point out iam ready to correct myself if NOT please do NOT balber and divert the discussion… It is very evident tat terrorism in INDIA(other than Kashmir) spread only after Babur Masjid demolition and the followed victory march by HINDU organisations.. Evidence http://en.wikipedia.org/wiki/List_of_terrorist_incidents_in_India Iam asking to fix the core issue.. wat u r suggesting ???

  3. Politicians and Journalists wants some problem to do their living. In India at least in Tamil nadu, common Hindu and Muslim people are fine and don’t have any enmity between them but these Politicians(either Hindu Or Muslims) wants to do politics so they use this as a stage for them and create enmity between them or at least they will make it. Journalists needs some sort of sensational story so they too take this for their living. Until we get clean people in these 2, we will be fighting. Politicians and journalist should have the responsibility on this.

  4. ஜெனில் 1983 ,புருஸ் உங்கள் கருத்துக்கள் வரவேற்புக்குரியது. அரசியல்வாதிகளும் பத்திரிக்கையாளர்களுமே கலவரத்திற்கும் மக்களை உணர்ச்சி வயப்படுதலுக்கும் காரணம் .கோவில் திருவிழாக்கள் பக்தர்களால் கொண்டாடப் படுகிறது .அதனால் பக்தி மட்டுமே அங்கு விஞ்சி நிற்கிறது .கணபதி ஊர்வலம் ,அரசியல்வாதிகளால் நடத்தபப்டுகிறது .அதனாலே கலவரம் வருகிறது.முஸ்லிம் இளைஞர்களை தங்கள் பக்கம் திருப்பவே குஜராத் கலவர வீடியோக்களை ஒரு இயக்கம் பயன்படுத்தி வருகிறது

    • Ibrahim,
      // அரசியல்வாதிகளும் பத்திரிக்கையாளர்களுமே கலவரத்திற்கும் மக்களை உணர்ச்சி வயப்படுதலுக்கும் காரணம்//
      மக்களுக்கு எங்கய்யா போச்சி புத்தி?
      // கணபதி ஊர்வலம் ,அரசியல்வாதிகளால் நடத்தபப்டுகிறது .அதனாலே கலவரம் வருகிறது.//
      வெள்ளிக்கிழமை தொழுகைய விட்டுட்டீங்களே? இமாம்கள விட்டுட்டீங்களே? In Pakistan, Bangladesh, Malaysia, Indonesia, Nigeria, England, France, Denmark, Irak, Syria, Lebanan, Sudan…. list is a long one, At the end of many Friday Juma, what happens?

      • With out having responsibility, You do not create the war between Hindu and Muslim!!!

        I do not want the history should be repeated!!

        We should understand the huge war between the two religions during the time of hindu Sivaji and Muslim mugal.

        what is the consequence?

        We lose the power and give our nation to British subsequently!!!

        I do not want this will happens again!!

        • Hi K. Senthil,

          You tell me ‘don’t be irresponsible and create war between Hindu and Muslim’.

          War between Muhamadans and Non-Muhamadans was started well before Shivaji and Mughals. It dates back to Muhamad himself.

          It is not by denying &/ hiding &/ ignoring &/ whitewashing the history that we can avoid repeating the history. The people (every one) should actively seek to know the history. I am doing my part by pointing to the facts/angles which some people are denying &/ hiding &/ ignoring &/ whitewashing.

  5. வழக்கம்போல வினவின் ஒரு தலைபட்சமான பதிவு. மறுமொழிகள் அனைத்தும் நன்றாக உள்ள்ன.
    ஒன்றே சொன்னார் அதிலும் நன்றே சொன்னார் நண்பர் எஸ்.இப்ரகிம். அனைத்து ஊடக பதிவுகளை படித்து , பகுத்தறிந்து , எது உண்மை என நாமே முடிவு செய்வோம்.

  6. seeeeeeeeeeeeeNU SAID//முதலில் நடந்தது கோத்ரா இரயில் எரிப்பு. அதற்கு பின் தான் குஜராத் கலவரம் ஆரம்பமானது. முதல் முறையாக react என்று கற்றுக்கொண்டனர்ர் இந்துக்கள்.//

    HI SEEEENU!
    THANKS FOR ACCEPTING YOUR CRIME

    By the way u accept that Modi gang only killed 3000 Indians in Gujarath!!!

    Good confession and acceptance !!!

    Hello CBI put this anna SEEEEEEEEnu in to Thekar Jail!!!!

    SO PLS BEWARE OF THIS RSS BJP modi SEEEENU GANG!!!!

  7. திரு. அம்பி அவர்களே. இதை உங்களின் பின்னூட்டம் 1.2.1.1.1.1.1.3.2.4 – க்கான பதிலாக எடுத்துக் கொள்ளாமல் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    Egg beats chicken to first spot

    The question has baffled many: What came first, the chicken or the egg?

    Evening Standard
    Published: 00:00 May 27, 2006

    London: The question has baffled many: What came first, the chicken or the egg?

    Now a geneticist, a philosopher and a chicken farmer claim to have found an answer. It was the egg. Genetic data does not change during an animal’s life, so the first chicken to have evolved had all the DNA to do so when it was inside its egg, according to Prof John Brookfield, a geneticist.

    Prof David Papineau said the egg should be considered a chicken egg by a non-chicken predecessor, and farmer Charles Bourns added: “Eggs were around before chicken arrived.”

    • பரிணாம வளர்ச்சிக் கொள்கைப்படி கோழி என்ற உயிரினம் திடீரென்று வேறு ஒரு பறவையின் முட்டையிலிருந்து வெளிவர வாய்ப்பில்லை.. இன்றைய கோழிக்கும் அதன் மூதாததையான கோழி போன்ற பறவைக்கும் அதற்கும் முதுமூதாதையான பறக்கும் ஒரு வகை சிறு டைனசாருக்கும் இடையில் பல்லாயிரம்/பல கோடி ஆண்டுகளாக, படிப்படியாக, தலைமுறைகளாக உருவாகிவந்த மிகச்சிறிய மாற்றங்கள் இருக்கும்.. எனவே முட்டையிலிருந்துதான் கோழி வந்திருக்கும் என்பது சரிதான், ஆனால் கோழி முட்டையிலிருந்துதான் கோழி வந்தது என்றால் மீண்டும் அதே கேள்வி வந்து நிற்கும்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க