துண்டுச் சீட்டுக் கூட கொடுக்காமல் பல லட்சங்களை டொனேசன், கேபிடல் பீஸ், கட்டணம் என்ற பெயரில் மாணவர்களிடம் கொள்ளையடிக்கும் பிரபலமான பொறியியல் கல்லூரிகளின் வரிசையில் இருப்பதுதான் ஆவடியில் உள்ள வேல்டெக் பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரியின் தாளாளர் ரங்கராஜனை கல்வி வள்ளல்களில் ஒருவராக சித்தரிக்கிறது அரசு. இந்த கல்வி வள்ளலின் யோக்கியதை அவ்வப்போது வெளிவந்தாலும் அது ரங்கராஜனின் பணபலம், அதிகார பலத்தால் மூடி மறைக்கப்படும்.
ஆனால் இப்போது பெண் பேராசிரியைகளை அடுத்தடுத்து இழிவுபடுத்தி – மிரட்டி சட்டவிரோத வேலைநீக்கம் செய்ததன் மூலம் வேல்டெக் ரங்கராஜனின் அட்டூழியங்களும், அராஜகங்களும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கல்லூரிக்காக உழைத்த பேராசிரியர்களை சட்டவிரோத வேலை நீக்கம் செய்துவிட்டு, சம்பளத்தையும், சான்றிதழ்களையும் தர மறுக்கும் வேல்டெக் ரங்கராஜனின் அயோக்கியத்தனங்களை சென்னை நகரம் முழுக்க சுவரொட்டி மூலம் நாறடித்து அக்கல்லூரி பாடம் புகட்டும் போராட்டத்தை தொடங்கியிருக்கிறது பு.மா.இ.மு. போராட்டம் தொடரும்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
Please note it is not a popular college.
Yes. It must be a notorious college.