கல்லூரி ஆண்டு மலரில், நரேந்திரமோடியை எதிர்மறை ஆளுமைகளில் ஒருவராக சித்தரித்து, புகைப்படம் வெளியிட்டமைக்காக அக்கல்லூரி முதல்வர், மாணவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திரிசூர் அருகேயுள்ள குன்னங்குளம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு மலரில், “மனிதமுகங்களின் வழியே உலக வரலாற்றை கூறுவது” என்ற வகையில் ஆன்மீகம், இலக்கியம், உலக தலைவர்கள், எதிர்மறை ஆளுமைகள், விளையாட்டு என்று ஐந்து தலைப்புகளில் பலரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ‘எதிர்மறை முகங்கள்’ என்ற தலைப்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஒசாமா பின்லேடன், ஹிட்லர் ஆகியோர் படங்களுடன் மோடியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. சந்தன கடத்தல் வீரப்பன், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படங்களும் இதில் அடக்கம்.
இதில் மோடியை சேர்த்தமைக்காக, கடந்த மாதம் ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் குட்டி, ஆண்டுமலரின் மாணவ ஆசிரியர் பிரவீண், கல்லூரி தரப்பின் நிர்வாக ஆசிரியர் கோபி, ஆசிரியர் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் நிகில், சியாம், ஜேம்ஸ் அச்சக உரிமையாளர் ராஜீவ் உள்ளிட்ட ஏழு பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 120-B (கிரிமினல் சதி), 153 (கலவரத்தை தூண்டுதல்), 504 (பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்) 34 (ஒரே நோக்கத்திற்காக பலர் இணைந்து கிரிமினல் குற்றம் செய்தல்), 500 (அவதூறு), 501 (அவதூறை பிரசுரித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ளனர்.
கல்லூரியின் தற்போதைய முதல்வர் புத்தகத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். ஆயினும் கல்லூரியில் ‘அதிரடி’ சோதனை நடத்திய போலீஸ் ‘கிரிமினல் சதி’ மற்றும் ‘கலவரத்திற்கு’ பயன்பட்ட ‘அதிபயங்கர ஆயுதங்களான’ ஆண்டுமலர் பிரதிகள், DTP செய்த கணினி, வன்தகடு (ஹார்ட் டிஸ்க்) ஆகியவற்றை கைப்பற்றி சென்றுள்ளது.
இது தங்களின் கருத்துரிமையை பாதிப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பத்திரிகையின் மாணவ ஆசிரியர் பிரவீன் ஆண்டுமலரை திரும்ப பெறும் கல்லூரியின் முடிவையும், அரசின் கைதையும் எதிர்த்துள்ளார். ”நாங்கள் செய்ததில் எந்த தவறும் இல்லை. ஒரு இந்திய குடிமகனாக மோடியை விமர்சிக்க எங்களுக்கு உரிமையுள்ளது. நாட்டின் பிரதமரை அவமதிக்கும் நோக்கில் இதை செய்யவில்லை. மலரின் உள்ளடக்கம் கடந்த அக்டோபர் மாதமே ஆசிரியர்களுடன் விவாதித்து முடிவு செய்யப்பட்டு விட்டது. நாங்கள் கருத்து சுதந்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து இதை வெளியிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
குன்னங்குளம் கல்லூரி மாணவர்கள் மற்றும் முதல்வர் மீதான நடவடிக்கையின் தொடர்ச்சியாக குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி இதழில் மோடியை பற்றி ஆட்சேபகரமான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அந்த கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறுக்கெழுத்து புதிர் பகுதியில் நாயையும் மோடியையும் இணைத்து வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது அரசு. (நமோ என்பதை கண்டுபிடிக்க “நாயின்ட மோன்” என்று குறிப்பு கொடுத்திருந்தார்கள் என்று போலீஸ் கூறுகிறது).
குஜராத் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட முசுலீம் மக்களை காரில் அடிபட்ட நாய்க்குட்டியுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவிக்க மோடிக்கு இருக்கும் சுதந்திரம் அவரை நாயின்ட மோன் என்று கூப்பிட மாணவர்களுக்கு கிடையாதா? அடுத்து குஜராத்தில் மோடி மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டை ஒட்டித்தான் இம் மாணவர்கள் விமர்சிக்கிறார்கள் என்றால் அதில் என்ன தவறு?
அடுத்து மோடியை எதிர்மறை ஆளுமைகளில் ஒன்றாக போட்ட விவகாரத்தை பார்ப்போம். ஹிட்லர், பின்லேடன், புஷ், வீரப்பன், பிரபாகரன் போன்றோருடன் மோடி படம் போடப்பட்டதில் இந்துமதவெறியர்களுக்கு என்ன சிக்கல்? இதில் ஹிட்லர், புஷ்ஷோடு போட்டதில் ஆர்.எஸ்.எஸ்-க்கு பிரச்சினை ஒன்றும் இல்லை.
ஏனெனில் ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் கோல்வால்கர், ஹிட்லரை ஆகா ஓகோ என்று புகழ்ந்து பேசியதை “ஞானகங்கை” நூலில் பார்க்கலாம். கோல்வால்கர் காலம் தொட்டு இன்று மோகன் பகவத் காலம் வரை அமெரிக்க அதிபர்கள் காலை தொட்டு நக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு புஷ் மீதும் பிரச்சினை இல்லை. அதாவது ஹிட்லர், புஷ் கூட மோடி படம் இருந்தால் அது இந்துமதவெறியர்களுக்கு கௌரவம். மகிழ்ச்சியடைவார்கள்.
மற்றவர்களை பார்ப்போம். பின்லேடன், வீரப்பன், பிரபாகரன் போன்றோரை ஹிட்லர், புஷ் போன்ற உலக மேலாதிக்க பாசிஸ்டுகளின் கணக்கோடு ஒப்பிட்டு பார்க்க முடியாது. மேலும் இவர்களின் தவறுகள், பிரச்சினைகளின் தன்மை வேறு. குறிப்பான ஒடுக்குமுறை, சுரண்டல் அமைப்புக்கு எதிராக தோன்றி வளர்ந்தும், அது ஒடுக்கும் சக்திகளால் திசைதிருப்பப் பட்டும் போனதால் வந்த பிரச்சினைகள்தான் இவர்களது தவறுகள். இவர்களில் பிரபாகரனும், வீரப்பனும் ‘இந்துக்கள்’. பின்லேடன் மட்டும் முசுலீம் என்பதால் இவர் கூட மோடியா என்று இந்துமதவெறியர்கள் கோபம் கொண்டிருக்க கூடும். அதாவது தாம் ஒழிக்க விரும்பும் இசுலாமியர்களின் ‘தலைவனோடு’ நமது தலைவன் இடம் பெறுவதை சகிக்க முடியாது என்பதே அவர்களது எரிச்சல். மற்றபடி இதில் பாசிஸ்டுகளோடு ஜனநாயகத்தை கலக்கலாமா என்று அவர்கள் எழுப்பினால் அது யாராலும் சகிக்க முடியாத கருத்தாக மட்டுமே இருக்கும்.
ஆனால் அமெரிக்காவின் புஷ்ஷும், ஜெர்மனியின் ஹிட்லரும் முழு உலகை தமது ஆளுகைக்குள் கொண்டு வர முயன்றவர்கள். அதற்காக எண்ணிறந்த மக்களை கணக்கு வழக்கில்லாமல் கொன்றவர்கள். இத்தகைய வில்லன்களோடு மட்டும் மோடியின் படத்தை போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்பதே நமது கருத்து.
இரண்டு கல்லூரி மாணவர்களும் சி.பி.எம் கட்சியின் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஆயினும் இது வரை மாணவர்கள் கைதுக்கு எதிராக சி.பி.எம் போலிகள் போராடியதாக எந்த செய்தியும் இல்லை.
இந்துத்துவ பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குள் இது போன்ற பல கைதுகள் நடந்து விட்டன. ஜனநாயகத்தின் வாசனை கூட மக்களுக்கு கிடையாது என்பதை இவர்களது நடவடிக்கைள் காட்டுகின்றன.
கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் மோடியை விமர்சித்து முகநூலில் எழுதியதற்காக கோவாவை சேர்ந்த ஜோடங்கர் என்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுத்தது கோவா பா.ஜ.க அரசு. இத்தனைக்கும் ஜோடங்கர் ஒரு பா.ஜ.க அனுதாபி. ஆனால் மோடியை கட்சி முன்னிறுத்துவதை பிடிக்காமல் மோடி போன்ற கொலைகாரன் ஆட்சிக்கு வந்தால் கோவாவிலும் குஜராத்தை போன்ற இன அழிப்பு தொடரும் என்ற அபாயத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் மீது பிணையில் வெளிவர முடியாத வழக்குகள் பதியப்பட்டன. தங்கள் பங்கிற்கு மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் அவருக்கு முன்பிணை மறுத்தன.
அடுத்த சில நாட்களில் மோடியை கிண்டல் செய்து வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியதற்காக கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்ட பல்கலைகழக எம்.பி.ஏ மாணவர் சையது வாக்கஸ் கைது செய்யப்பட்டார். இவை பத்திரிகைகளில் வெளிவந்த சில உதாரணங்கள் மட்டுமே.
பழைய அச்சு ஊடகம் முதல் நவீன வாட்ஸ்அப் வரை சொல்லிக் கொள்ளப்படும் கருத்து சுதந்திரம் எப்படி ‘கொடிகட்டி பறக்கிறது’ என்பதை மேற்கண்ட செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன. அதிலும் ஜனநாயக மறுப்பையே தனது சித்தாந்தமாக கொண்ட பார்ப்பன பாசிச பா.ஜ.க ஆட்சியை பிடித்த பிறகு மக்களின் குரல் வளையை நெறிக்கும் செயல்கள் முன்னைவிட அதிகரித்து வருகிறது.
முகநூலில் யாரோ ஒருவர், கொலைகாரன் பால்தாக்ரேவை விமர்சித்ததற்காக பூனே நகரில் கலவரம் செய்தது இந்துத்துவ கும்பல். தலையில் குல்லா அணிந்துவந்த ஒரே குற்றத்திற்காக இஸ்லாமியர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார். அதை ‘முதல் விக்கெட் விழுந்துவிட்டது என்றும் தமிழகத்திலும் அப்படி செய்ய வேண்டும்’ என்று முகநூலில் இந்துத்துவ சில்லறைகள் கொண்டாடுகிறார்கள். ‘எங்கள் ஆட்சி வந்துவிட்டது’ என்ற அதிகார போதை உந்தித்தள்ள ‘யாரும் கேள்விகேட்க முடியாது’ என்று வெறியில் ஊளையிடுகிறார்கள்.
பா.ஜ.க இதில் முன்னணியில் நின்றாலும், அனைத்து ஓட்டுக் கட்சிகளும் இந்துத்துவ பெரும்பான்மை அரசியலை பல்வேறு அளவுகளில் கடைப்பிடிக்கின்றன. மோடியை விமர்சித்தவர்களை கைது செய்த கர்நாடகா மற்றும் கேரளாவின் ஆட்சி பொறுப்பில் இருப்பது, காங்கிரஸ் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்கட்சியை சேர்ந்த மோடி விமர்சிக்கப்பட்டிருந்தாலும் ஆளும் வர்க்கம் என்ற வகையில், தங்கள் வர்க்கத்தின் அதிகாரம் சாதாரண மாணவர்களால் கேலிப்பொருளாக்கப்படுவது அவர்களையும் அச்சுறுத்துகிறது. மேலும் பாபர் மசூதி இடிப்பிலிருந்து குஜராத் கலவரம் வரை காங்கிரஸ், பா.ஜ.க.வின் கூட்டாளியாக தான் எப்பொழுதும் செயல்பட்டிருக்கிறது என்பதால் காங்கிரஸ் அரசின் கைது நடவடிக்கைகள் எதிர்பாராத ஒன்றல்ல.
தங்களை தாராளவாதிகள் (லிபரல்கள்) என்று அழைத்துக்கொண்டு மோடியை ஆதரித்த முதலாளித்துவ ‘கருத்துரிமை காவலர்கள்’ எவரும் இதுவரை இந்த கைதுகள் குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகைகளும் மோடியை அவமதித்து விட்டார்கள் என்ற கோணத்தில் தான் செய்தியை கொண்டு செல்கின்றன. தாங்கள் சொல்லிக்கொள்ளும் கருத்துரிமை, ஜனநாயகம் பறிபோகிறது என்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை.
காவி இருள் கவ்வி வரும் சூழலில் இந்த கைதுகளை கண்டித்து உண்மையான ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வது இன்றைய தேவையாக உள்ளது. இல்லையேல் 2002 குஜராத்தில் கலவரமோ இனப்படுகொலையோ ஒன்றும் நடக்கவில்லை என்று கூட வரலாற்றை மாற்றுவார்கள். அதை மறுத்தால் மோடியை இழிவுபடுத்திவிட்டதாக நம் மீது வழக்கு போடுவார்கள்!
– ரவி
மேலும் படிக்க
இவர்களை சட்டை பண்ணாமல் இருந்தாலே போதுமானது. அதை விடுத்து இவர்களுக்கு தேவையில்லாமல் விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் மடையர்கள்.
விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் நடவடிக்கை எடுக்கும் மடையர்கள்.
மோடிதான் கலவரத்தை நடத்தினார் என்று உச்ச நீதி மன்றத்தில் நிரூபித்து இருந்தால் போடலாம் . நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட பின்னர் அரசியல் காரணுங்களுக்காக போடுவது தவறு.
ஒரு வேலை மோடி பிரதமராக இருந்த போது வழக்கு நடந்து இருந்து அந்த வழக்கு சரியானபடி நடந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று சந்தேகிக்கலாம் .
வெறும் பத்திரிக்கை செய்திகளை வைத்து ஒருவன் நல்லவன் கெட்டவன் என்று சமுதாயம் முடிவு செய்வது அதிலும் கல்லூரி நடத்துபவர்கள் செய்வது மகா தவறு .இவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்
ராமன் – சரியா சொன்னீனங்க…
ராமன் ,
உச்ச நீதிமன்றம் நிரபராதின்னு ஒருத்தர சொல்லிட்டா அவ்ளோ தானா.
அவரப் பத்தி எதுவும் பேசக் கூடாது. அதுவும் அவரு இந்திய பிரதமரா இருந்தா அவரப்பத்தி மூசுக் கூட விட கூடாது சரி தானே. குஜராத் கலவரம் நடந்ததுக்கு அவர் காரணம் இலையெனில் யார் காரணம்?. எவ்வளவோ போராட்டங்களுக்கு பிறகே அவரோட அல்லைகைகள் இருவருக்கு சிறைத் தண்டனைக் கிடைத்திருக்கு.
தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தப்பட்டு பொய் வழக்குகள் போடப்பட்டு பல ஆண்டுகள் சிறைவாசத்துக்குப பிறகு வெளியில் வரும் இசுலாமியர்களும் உண்டு மற்றும் மக்களின் மனசட்சிக்காக தூக்கு தண்டனை பெற்ற நிரப்பராதிகளும் உண்டு எனில் நீதிமன்றங்களின் நீதியின் இலட்சணம் தான் என்ன? சீக்கியர்களை படுகொலை செய்த காங்கிரசு மற்றும் ஆர் எஸ் எஸ் கயவாளிகளுக்கு என்ன தண்டனை இந்த நீதிமன்றங்கள் பெற்றுத் தந்து விட்டன.
போபால் படுகொலைக்கு காரணமான ஆண்டர்சனை என்ன செய்து விட்டது இந்த நீதி மன்றங்கள். இழப்பீட்டுத் தொகையைக் கூட வாங்கி கொடுக்க வக்கில்லாத இந்த நீதிமன்றம், மோடியை நிரபராதி என்று சொல்லிவிட்டதாம், அதனால் அவரை தப்பாக பேசக் கூடாதாம் என்ன ஒரு நெஞ்சிருக்கம் இருந்தால் நீங்கள் இப்படி கூறுவீர்கள்.
தாலிக் கட்டிய கணவன் படுக்கைக்கு அழைக்கும் பொது அதை மறுப்பது குற்றமாகும் என்று கூறிய நீதிமன்றங்கள் எப்படி மோடியைத் தண்டிக்கும்?
சிதம்பரம் தீட்சிதர்களின் நம்பிக்கையை, இந்தியர்களின் நம்பிக்கையாக்கி கோவிலை அபகரித்து கொடுத்த நீதிமன்றம் எப்படி மோடியை தண்டிக்கும் மாறாக விடுவிக்கவே செய்யும்.
கயர்லாஞ்சியிலும், கீல்வென்மனியிலும் இன்னும் பிற பகிதிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்கோளுக்கு எதிராக நடந்த படுகொலைகளை நிகழ்த்திய ஆதிக்க சாதி கயவர்களுக்கு இந்த நீதி மன்றங்கள் என்ன தண்டனை பெற்று தந்து விட்டன மாறாக , அந்த கயவர்களை விடுதலை செய்யவே செய்தன எனில், அவை நீதிமன்றங்களா? அநீதிமன்றன்களா? .
இங்கக் கூட கருணா – ஆட்சியில் ஜெவும் , ஜெ- ஆட்சியில் கருணாநிதியும் மாத்தி மாத்தி குற்றசாட்டை வைக்கிறார்கள் அதுவும் அரசியல் ரீதியானது தான் . அதுக்காக யாரக் கைது பண்ணுனாங்க. சொத்து குவிப்பு வழக்கிலும் , வருமான வரி வழக்கிலும் ஜெயலலிதாவை என்ன செய்ய முடிந்தது உச்சநீதி மன்றத்தால் வழக்கை 6 மாதம் ஒத்தி தான் வைத்தது தவிர.
நன்றி.
மோடி நிரபராதி என்று சொன்ன நீதியை நீங்க நம்பாதீங்க , அதே மாதிரி இன்னொரு கூட்டம் அக்சார்தம் குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரபராதி என்று சொன்னதை நிராகரிக்கும் .
இல்லை நீங உச்ச நீதி மன்றம் தவறு செய்துள்ளது என் மன்வோட்டபடி அப்படிதான் பேசுவேன் என்றால் , ஒவ்வொருவருடைய மனவோட்டத்தையும் அவருடைய போக்கில் புத்தகங்கள் அச்சிட்டு பள்ளி மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கலாம்.
அரிசியல்வாதிகள் மோடியை ஹிட்லரோடு ஒப்பிட்டு பேசுவது வேறு , ஒரு பள்ளி நிறுவனம் செய்வது வேறு .
//உச்ச நீதிமன்றம் நிரபராதின்னு ஒருத்தர சொல்லிட்டா அவ்ளோ தானா.//
இது என்ன கேள்வி , அப்போ நாளைக்கு உங்களை தப்பா திருடன் என்று பிடித்தபின்னர் வழக்காடி நிரபராதி என்று நிரூபித்து வெளியே வருகிறீர்கள் , அதுக்கு அப்புறமும் உங்களை ஊரில் திருடன் திருடன் என்று சொன்னால் ஒத்துகொள்வீர்களா …
//போபால் படுகொலைக்கு காரணமான ஆண்டர்சனை என்ன செய்து விட்டது இந்த நீதி மன்றங்கள்//
போபால் விபத்துக்கு காரணமான… புகுசிமா விபத்துக்கு ஜப்பான் பிரதமரை உள்ளே போட்டு விட்டார்களா ?
வியாபாரி உனது ஊரில் இப்படிப்பட்ட தொழில் தொடங்கவேண்டும் என்று கேட்கிறான் , அனுமதித்தது தான் தவறு .
//தாலிக் கட்டிய கணவன் படுக்கைக்கு அழைக்கும் பொது அதை மறுப்பது குற்றமாகும் என்று கூறிய நீதிமன்றங்கள் எப்படி மோடியைத் தண்டிக்கும்//
நீதிமன்றங்கள் சட்டத்தை இயற்றுவது இல்லை . சட்டத்தில் இருப்பதை சொல்கிறார்கள் . ஜனநாயகத்தில் சட்டம் இயற்றுபவர்களை தேர்ந்து எடுகிரீர்கள் . நீதி மன்றத்தை என் திட்டுகிறீர்கள்
//சிதம்பரம் தீட்சிதர்களின் நம்பிக்கையை, இந்தியர்களின் நம்பிக்கையாக்கி கோவிலை அபகரித்து கொடுத்த நீதிமன்றம் .//
நம்பிக்கை படி எல்லாம் நீதிமன்றங்கள் இயங்க முடியாது . சட்டப்படி தான் செய்ய முடியும் .
இந்த வரலாற்று பிழையை பாராளுமன்றம்தான் சரி செய்ய முடியும்
//கயர்லாஞ்சியிலும், கீல்வென்மனியிலும் இன்னும் பிற பகிதிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்கோளுக்கு எதிராக நடந்த படுகொலைகளை நிகழ்த்திய ஆதிக்க சாதி கயவர்களுக்கு இந்த நீதி மன்றங்கள் என்ன தண்டனை பெற்று தந்து விட்டன//
நீதி மன்றத்தில் நீதிபதி ஒரு பாத்திரம் , மற்ற வாதி பிரதிவாதிகளில் , அரசாங்கம் ஒரு பாத்திரத்தை கொள்கிறது . ஆதிக்க சாதிகள் கொண்ட காவல்துறை , அரசு அதிகாரிகள் சொத்தை வாதம் செய்தால் , நீதிபதி என்ன செய்வார் ?
//இங்கக் கூட கருணா – ஆட்சியில் ஜெவும் , ஜெ- ஆட்சியில் கருணாநிதியும் மாத்தி மாத்தி குற்றசாட்டை வைக்கிறார்கள் அதுவும் அரசியல் ரீதியானது தான்//
குற்றசாட்டு எனபது வேறு , பள்ளியில் பாடம் எனபது வேறு . தமிழக பிரபல கொள்ளைகாரர்கள் என்று பாடம் வைத்து கருணாநதி , கனிமொழி என்று வைப்பது தவறு
//அதுக்காக யாரக் கைது பண்ணுனாங்க. சொத்து குவிப்பு வழக்கிலும் , வருமான வரி வழக்கிலும் ஜெயலலிதாவை என்ன செய்ய முடிந்தது உச்சநீதி மன்றத்தால் வழக்கை 6 மாதம் ஒத்தி தான் வைத்தது தவிர.//
நீதித்துறையின் வேகம் போதாது , சீரமிக்கபட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை
//ஒரு பள்ளி நிறுவனம் செய்வது வேறு
1)ஒரு அரசியல்வாதி மோடியை ஹிட்லரோடு ஒப்பிட்டால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள், ஆனால் ஒரு கல்லூரி மாணவர்கள் அப்படி செய்தால் ஏற்றுக் கொள்ளமாட்டிர்கள் மாறாக சிறையில் தள்ளுவீர்கள் . என்னே உங்கள் நீதியின் அருமை இந்திய அரசியல் சட்டத்தின் படி மக்கள் அனைவரும் சமம் என்றிருக்கும் போது ஏனிந்த பாகுபாடு?
//திருடன் என்று சொன்னால் ஒத்துகொள்வீர்களா
2)மோடிக்கு காவடித தூக்க முடிவு செய்து விட்டப் பின் லாஜிக் எல்லாம் பக்க முடியுமா!.. …நாட்டுல உண்மையான திருடர்கள்/கொலைக்காரர்கள் எல்லாம் அரசியல்வாதிகளாகவும் ,அதிகாரிகளாகவும், அம்பானிகளாகவும் ஜாலியா ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் போது , என்ன சொல்ல வருகிறேன் என்றால் என்னை குற்றமற்றவனாக செய்ய முடியாதா என்ன ?
//பான் பிரதமரை உள்ளே போட்டு விட்டார்களா
3)போபால் படுகொலைக்கு ஆண்டர்சனை காரணம் இல்லைஎன்கிறீர்களா?
//அனுமதித்தது தான் தவறு .
4) இப்படிப்பட்ட அமைப்பில் இன்றும் அது தொடரத்தான் செய்கிறது. அதற்க்கு தான் இந்த அமைப்பை மாற்ற வேண்டும் என்று சொல்கிறோம்.
//நீதி மன்றத்தை என் திட்டுகிறீர்கள்
5) இல்லை. திட்டவில்லை. சட்டங்கள், அரசியல்வாதிகளால் எழுதபடுகின்றன என்று சொன்னீர்கள். அதை அப்படியே நீதிமான்கள் செயல்படுத்துகிறார்கள் என்றும் கூறினீர்கள். சுயமாக சிந்திக்க தெரியாத நீதிமான்கள் மோடியை விடுவித்தார்கள். என்று நான் கூறுகிறேன்.
// நம்பிக்கை படி எல்லாம் நீதிமன்றங்கள் இயங்க முடியாது
6) உங்களை நினைத்தால் சிரிப்பை இருக்கிறது. நம்பிக்கை படி இயங்க முடியாது என்கிறீர்கள். ஆனால் வரலாற்றுப் பிழை என்கிறீர்கள். என்னே ஒரு முரண் நகை. வரலாற்றுப் பிழையல்ல, வரலாறே பிழையாகத்தான் இருக்கிறது. ஆமாம், இந்த வரலாற்றுப் பிழையெல்லாம் மோடிக்கு பொருந்தாதோ?
//குற்றசாட்டு எனபது வேறு , பள்ளியில் பாடம் எனபது வேறு
7) ஏனய்யா உளறுகிறீர்.. பாடத் திட்டம் வேறு ஆண்டு மலர் வேறு. ஹிட்லரைக் கொலைகாரன் என்று பாடத்தில் படிப்பது தான் சரியாக இருக்குமே தவிர, அவர் ஒரு நாட்டின் தலைவர்.அவர் உலகப் போரில் கலந்து கொண்டார் என்றாப்படிக்க முடியும்.
//நீதித்துறையின் வேகம் போதாது , சீரமிக்கபட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை
8) ஏன் இதை மட்டும் தனியாக பிரித்து கூறுகிறீர்கள். அது அப்படி இயங்க காரணமே, இந்த பாராளுமன்ற முறை. அதை தான் நீங்களும் ஒப்பு கொள்கிறீர்கள். அதை மாற்றாமல் ஒன்னும் செய்ய முடியாது.
நன்றி.
முட்டாள் தனமான கட்டுரை .கழுதைக்கும் பன்றிக்கும் பிறந்த ஒருவனால் தான் இது போன்ற கட்டுரை எழுத முடியும் . இக்கட்டுரை எழுதியவனின் தாய் தேசத்திற்காக சிறை சென்றால் ,சிறையில் அவன் தாய் படமும் ,கைது செய்யப்பட்ட வேசிகளின் படமும் இருந்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
R.satheesh
kochi
என்ன உளறுகிறாய்.
தப்பா நீனைக்க வேண்டாம் சிவப்பு,
அவரு அவரின் பிறப்பின் ரகசியத்தை கூறுகின்றார்.
நரேந்திர மோடி ஒரு இனப் படுகொலையாளன்.நம்பிக்கை துரோகி.கயவன்.நீசன்.பசுத்தோல் போர்த்திய ஆட்கொல்லி புலி,கூட இருப்பவர்களுக்கே குழி பறிப்பவர் இப்படி அவருடைய நற்குணங்களை வரிசைப் படுத்திக் கொண்டே போகலாம்.அவரை மற்ற எவரோடும் ஒப்பிடவே முடியாது.இந்த உண்மை அவருடைய நெருங்கிய சகாக்களுக்கே நன்கு தெரியும்.ராமன்,சதீஷ் போன்ற அப்ப்ராணிகளுக்கு தெரிய முடியாது.கழுதைக்கும் பன்றிக்கும் பிறக்கும் அறிவியல்[இந்து புராணத்தில் இப்படி உண்டு]தெரிந்த பேரறிஞர்கள்தான் நாயின்ட மோனை.. நமோ பூஜிக்கிறவர்கள்.
//இந்தியாவிலும் பாகிஸ்தானிய பயங்கரவாதம், ‘இசுலாமிய’ பயங்கரவாதம் என்று வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் இந்துத்துவ சக்திகளின் தாக்கத்தில் நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது//
இதற்கு காரணம் குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக உம்மை போன்ற நீலிக்கண்ணீர் வடிக்கும் போலி மனிதஉரிமைப்போராளிகள் தான். குண்டு வெடிப்பில் செத்தவனுக்கெல்லாம் மனிதஉரிமை இல்லையா. என்னக்காவது ஒரு நாள்ளாவது குண்டுவைச்ச இஸ்லாமிய தீவிரவாதியை கடுமையா தண்டிக்கனும்னு எழுதியிருக்கீரா? உம்முடைய மனசாட்சியை தொட்டுசொல்லும்.