privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்சொத்த வித்து திங்கறான் தறுதல - வெண்பாக்கம் கூட்டம்

சொத்த வித்து திங்கறான் தறுதல – வெண்பாக்கம் கூட்டம்

-

குஜராத் படுகொலை முதலமைச்சர் மோடி
குஜராத் படுகொலை முதலமைச்சர் மோடி

மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங்கின் நினைவு நாளை முன்னிட்டு “மோடியின் ஆட்சி : ‘தேசிய’ப் பேரழிவு !” என்கின்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் பகுதியில் 15-03-2015 மாலை 5.30 மணியளவில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவர் தோழர் சரவணன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் சிறப்புரையாற்றினார். வெண்பாக்கம் பகுதி தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடினர். கூட்டத்தில் ஆக்ஸில்ஸ் இந்தியா கிளை மற்றும் அருகாமை பகுதி தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்திற்கு முன் தெரு முனைபிரச்சாரம் செய்யும் போது இரண்டு போலீசு வேன் பின் தொடர்ந்தது. வெண்பாக்கத்தில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளிலும் பத்து, பத்து போலீசு காவல் என தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

“தோழர் பகத்சிங் பாதையில் இளைஞர்கள் போராட முன் வர வேண்டும்” என்று அழைக்கும் “அந்த வீரன் இன்னும் சாகவில்லை” என்னும் புரட்சிகர பாடலை பகுதி பெண் தோழர்கள் பாட கூட்டம் துவங்கியது.

மோடி இரட்டை முகம்
பாசிசமும், கார்ப்பரேட் பாசமும் இணைந்த மோடி

தலைமையுரை ஆற்றிய தோழர் S. சரவணன் “வெள்ளை ஆதிக்கத்தின் கீழ் கொடுமையாக சுரண்டப்பட்ட இந்திய உழைக்கும் மக்களின் விடுதலைப்பாதை, புரட்சிகர அரசியலின் கீழ் அணிதிரள்வதே என்பதை உழைக்கும் மக்களின் எழுச்சிகரமான போராட்டங்களின் மூலம் உணர்ந்த தோழர் பகத்சிங் மக்களின் போராட்டத்தை கட்டியமைத்தார். இதற்கு மாறாக, காந்தியின் துரோகம் உணர்சிகரமான மக்களின் போராட்டங்களை வெள்ளை அரசாங்கத்திற்கு வால் பிடித்து செல்லும்படி திசை திருப்பியது.

இந்நிலையில் பெருந்திரளான மக்களை போரட்ட திசையில் அணி திரட்ட, 23 வயதில் துக்கிலேறிய தோழர் பகத்சிங்கின் லட்சிய பாதையே இந்நாளில் நமக்குத் தேவை. எனவே நாம் பகத்சிங்ன் வாரிசுகளாக செயல்பட வேண்டும்.

இன்றய மோடி அரசின் அவசரசட்டத்திருத்தம் என்பது கார்ப்பரேட் நலன்களுக்காக, கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, தொழிலாளர் நலச் சட்டத்திருத்தம் ஒபாமா இந்தியா வருகைக்கு பின் இராணுவ தளவாட தயரிப்பு, அணுசக்தி தயாரிப்பு, அணுசக்தி இழப்பீடு மசோதா நிறைவேற்றம், பொருளாதார வர்த்தக நலன் சார்ந்த ஒப்பந்தம் அனைத்தும் நடைமுறைப் படுத்தப்பட்டால் நாடு மீள முடியாத பேரழிவில் சிக்கி விடும். இதை எதிர்த்து போராட பகத்சிங் நினைவு நாளில் உறுதியேற்போம்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

அதன் பின்னர் பிரதமர் என்பவர் நாட்டுச் சொத்தை விற்கும் தறுதலை என “சொத்த வித்து திங்கறான் தறுதல” என்கின்ற பாராளுமன்ற ஆட்சியையும் அம்பலப்படுத்தும் பாடல் பாடப்பட்டது.

அமெரிக்காவுக்கு நாட்டை விற்கும் மோடி
அமெரிக்காவுக்கு நாட்டை விற்கும் மோடி

அதன்பின்னர் தோழர் முகுந்தன் உரையாற்றினார்.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத் சிங்கின் நினைவு நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் அம்பத்தூர் பகுதியில் கண்டன கூட்டமும், திருச்சியில் ஆர்ப்பாட்டமும் நடத்தவிருக்கிறோம். அதனை விளக்கும் விதத்தில் இந்த தெருமுனைக் கூட்டத்தை தோழர்கள் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.

‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்கின்ற தொழிற்சங்கம் எப்படி மோடியின் ஆட்சி : ‘தேசிய’ப் பேரழிவு ! என்கின்ற தலைப்பில் கூட்டம் நடத்தலாம். இது ஒரு தொழிற்சங்கம். போனஸ், சம்பளம், ஊதிய ஊயர்வு போன்ற சலுகைகளுக்காகத் தானே குரல் கொடுக்க வேண்டும்’ என்று சிலருக்கு சந்தேகம் வரலாம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மார்க்சிய லெனினிய அரசியலை ஏற்றுக் கொண்டு இருக்கின்ற நக்சல்பரி அமைப்பை சேர்ந்த தொழிற்சங்கம். அதாவது பாராளுமன்ற ஜனநாயகம் என்கின்ற இந்த அமைப்பின் மூலம் மக்கள் பிரச்சனைகளுக்கு விடிவோ தீர்வோ காண முடியாது. அதற்கு புரட்சிதான் வேண்டும்.

தற்போது அரசியல் கட்சிகள் எல்லாம் முதலாளிகளுக்காக ஆட்சி செய்கின்ற கட்சிகளாகத்தான் இருகின்றன. இந்த அமைப்பை தூக்கி எறிந்து உழைக்கும் மக்களுக்கான ஒரு அரசமைப்பை தொழிலாளர் தலைமையில் நிறுவ வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதோடு தொழிலாளர் உரிமைகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறது. ஆகவே தான், “மோடியின் ஆட்சி : ‘தேசிய’ப் பேரழிவு !” என்கின்ற தலைப்பில் கூட்டம் நடத்தி கொண்டிருக்கின்றோம்.

ஊதிப் பெருக்கப்பட்ட மோடி பிம்பம்
ஊதிப் பெருக்கப்பட்ட மோடி பிம்பம்

மோடி ஆட்சிக்கு வந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது. “இதற்கு முன்பு இருந்த மன்மோகன் சிங்கின் ஆட்சி ஊழல் நிறைந்துள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை” என்றும், “மன்மோகன் சிங் ஆட்சி செய்ய லாயக்கு அற்றவர்” என்றும், “மோடி குஜராத்தில் தொடர்ந்து நான்கு முறை ஆட்சி செய்கிறார்” என்றும், “அவர் ஆட்சிக்கு வந்தல் மக்களுக்கு நல்லதை செய்வார்” என்றும் இந்த ஊடகங்கள் அனைத்தும் ஒளி வட்டம் போட்டன.

அந்த வேலையை புதிய தலைமுறை தொலைக்காட்சி நன்றாகவே செய்தது. ஒரு வாரத்துக்கு முன்னாடி புதிய தலைமுறை தொலைகாட்சி நிறுவனத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்தது. அதை பயங்கரவாதிகள் வைத்ததாகச் சொன்னார்கள். ஆனால் இந்து இளைஞர் சேனாவை சேர்ந்தவர்கள், “நாங்கள் தான் இதைச் செய்தோம். இந்த ஊடகம் தொடர்ந்து இந்து மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செய்திகளை பரப்பி வருகிறது. ஆகவே தான் நாங்கள் குண்டு போட்டோம். நான் திருச்சியில் கைதாகிறேன். மற்றவர்கள் ஏழு பேர் சென்னையில் இரண்டு மணி நேரத்தில் ஆஜராவார்கள்” என்று சொன்னார்.

அப்பவும் ஊடகங்கள் சமூகவிரோதிகள் தான் இதைச் செய்தார்கள் என்று செய்தி பரப்பின. இந்த ஊடகங்கள் தான் மோடிக்கு ஒளி வட்டம் போட்டன.

மேலும், காங்கிரசு தனியார் மயத்திற்கு வால் பிடிக்கிறது என்று கூறிய பா.ஜ.க இன்று கார்ப்பரேட் நலன் சார்ந்த சட்ட திருத்தங்களை முன்வைத்து அவசர சட்டமாக நிறைவேற்றி வருகிறது மாணவர்கள் விவசாயிகள் கடன் பெறுவதில் கெடுபிடிகள் காட்டும் வங்கிகள் கார்ப்பரேட்டுகளுக்கு மக்கள் சேமிப்பான வங்கி பணத்தை வாரி இறைக்கின்றன.

கடந்த ஒன்பது மாதகால சட்டதிருத்தங்கள் அனைத்தும் இந்திய நாட்டை பேரழிவில் சிக்கவைக்கும். முதலாளிகளின் வாராக்கடனுடன் கடன் கொடுக்க முடியாமல் நடக்கும் விவசாயிகளின் தற்கொலைகளை ஒப்பிட்டு பார்த்தால் உழைக்கும் மக்கள் நேர்மையானவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். பதியவைத்தார். மேக் இன் இந்தியா திட்டம் என்பது எப்படி மோசடியானது என்பதை நகைச்சுவையாக விளாக்கினார். அதாவது இந்தியாவில் எந்த பொருளும் உற்பத்தி செய்யவில்லையா? என்கின்ற விதத்தில் நிறைவாக மோடி என்பவன் எட்டப்பன் மீர்ஜபார் தொண்டைமான் மொத்தமும் சேர்ந்த முழுவடிவம் என்பதை அம்பலப்படுத்தி பகத்சிங் பாதையில் போராட அறைகூவி உறையை நிறைவு செய்தார்.

ஓட்டு சீட்டு அரசியல் வாதிகளோ, அமைச்சர்களோ வந்தால் கூட, இவ்வளவு போலீசு இருந்து இருக்காது. ஐம்பது போலீசு, பத்து உளவுத்துறை போலீசு, நாலு சப் இன்ஸ்பெக்டர்ஸ், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு டி.எஸ்.பி, தெரிந்து இரண்டு வீடியோ கேமரா, தெரியாது என நினைத்து நாலு போட்டோ கேமரா, இரண்டு வீடியோ கேமரா என பந்தாவுடன் மிரட்டினார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பகுதியை சேர்ந்த பெண் தோழர்கள் “போராட்டம் வேணாமா, போலீசு வேணாமா, போனசும் சம்பளமும் தானா கைக்கு வந்திடுமா” என்கின்ற பாடலை பாடினார்கள்.

கூட்டம் முடிந்து நன்றியுரை கூறியபிறகும் மக்கள் கூட்டம் கலையாமல் இருந்தது. அந்த அளவுக்கு கூட்டத்தில் கட்டுண்ட மக்கள் நாட்டை கவ்வியுள்ள மோடி அபாயத்தை விரட்டுவார்கள் என்பது உறுதி.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க