privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ஆந்திர படுகொலைகள் - அரசுக்கும், கட்சிகளுக்கும் PRPC கேள்விகள்

ஆந்திர படுகொலைகள் – அரசுக்கும், கட்சிகளுக்கும் PRPC கேள்விகள்

-

20 தமிழகத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசை கண்டித்து 15.04.2015 அன்று திருவண்ணாமலை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

20 தமிழகத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசை கண்டித்து 15.04.2015 அன்று திருவண்ணாமலை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்
20 தமிழகத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசை கண்டித்து 15.04.2015 அன்று திருவண்ணாமலை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய மக்கள் உரிமை பாதுகாப்பு மைய திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் சரவணன் “ஆந்திர துப்பாக்கி சூட்டை கண்டித்து மாநிலம் முழுக்க எங்களது அமைப்பும் புரட்சிகர அமைப்புகளும் போராடிவரும் நிலைமையில் மாபெரும் எதிர்க்கட்சிகள் என்று சொல்லக்கூடிய தி.மு.க,தே.மு.தி.க, பா.ம.க, வி.சி, காங்கிரஸ், பா.ஜ.க, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அனைவரும் வெறும் அறிக்கை விடுவதோடும், நிவாரணம் வழங்குவதோடும் நிறுத்திக்கொண்டனர். ஓ.பி யோ சந்திர பாபுவுக்கு கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார். கடிதம் எழுதுவதில் கலைஞரையே மிஞ்சிவிட்டார். ஆக, இதுதான் கட்சிகளின் நிலைப்பாடு.

20 தமிழகத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசை கண்டித்து 15.04.2015 அன்று திருவண்ணாமலை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்
அனைவரும் வெறும் அறிக்கை விடுவதும் நிவாரணம் வழங்குவதோடும் நிறுத்திக்கொண்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்தபோது அ.தி.மு.க தொண்டர்கள் பேருந்தை எரித்தும், கடைகளை உடைத்தும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவர்கள் இப்போது எங்கே போய்விட்டார்கள்? ஊழல் அம்மாவுக்காக ஊரையே கொளுத்திய நீங்கள் அப்பாவி தமிழர்களை கொல்லும்போது ஏன் அமைதியா இருக்கீங்க?

பா.ம.க.வைச் சேர்ந்த ராமதாஸ் பிணத்தில் கூட சாதி பார்த்து,  சாதிக்காக மட்டும் பேசுறார். ராமதாசை கைது செய்த போது பஸ்சை கொளுத்திய நீங்கள் உங்களது வீரத்தை இப்போது காட்ட வேண்டியது தானே?

சாதாரண தரைக்கடை வியாபாரி தள்ளு வண்டி வியாபாரியிடம் உழைக்கும் மக்களிடமும் உங்களது சட்டத்தையும், வீரத்தையும் காட்டும் அரசாங்கம், போலீசு, ‘பல லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்த முடியாது’ என்று பகிரங்கமாக அறிவிக்கும் கிங் பிஷர் முதலாளி விஜய் மல்லய்யாவை கைது செய்ய திராணி இருக்கிறதா? காடுகள், மலைகள், ஆறுகள் என இயற்கை வளங்கள் தனியார்மய கொள்கையால்தான் சுரண்டப்படுகின்றன அதற்கு இந்த போலீசு, இராணுவம், நீதிமன்றம் உள்ளிட்ட அணைத்து அரச கட்டமைப்பும் துணை நிற்கிறது. இதை முறியடிக்க தனித் தனியாக போராடாமல் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மற்றும் புரட்சிகர அமைப்புகளோடு இணைந்து போராடுவதன் மூலம்தான் தீர்வுகாண முடியும்” என்று உரையாற்றினார்.

செம்மரம் - திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்
காடுகள், மலைகள், ஆறுகள் என இயற்கை வளங்கள் தனியார்மய கொள்கையால்தான் சுரண்டப்படுகின்றன அதற்கு இந்த போலீசு, இராணுவம், நீதிமன்றம் உள்ளிட்ட அணைத்து அரச கட்டமைப்பும் துணை நிற்கிறது.

விழுப்புரம் மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் இணைச் செயலாளர் தோழர். இரஞ்சித் “இது அரசின் பச்சைப் படுகொலை என்பது மட்டும் அல்ல. இது அரச பயங்கரவாதம். மக்களுக்கு அடிப்படை வசதிகள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தராத இந்த அரசு, தொழிலாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் சுட்டுக் கொன்று விட்டு லட்சம் லட்சம் என்று நிவாரண தொகையும், கணவனை இழந்த மனைவிக்கு வேலைவாய்ப்பு என்றும் கூறி இந்த அநியாயங்களை மூடி மறைக்கிறது.

மக்களின் அடிப்படை வசதிகளை கூட பூர்த்தி செய்திடாத அரசை பயங்கரவாத அரசு என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? மேலும், நாடு முழுவதும் இயற்கை வளங்களை தனியார் முதலாளிகளின் லாபவெறிக்காக தூக்கி கொடுத்துவிட்டு அதைத் தவறு என தட்டிகேட்கும் மக்களை போலிசை ஏவி விட்டு அடிக்கிறது இந்த அரசு.

இப்படுகொலையை கண்டித்து எமது அமைப்புகள் தமிழகம் முழுக்க போராடிவருவதை தடுத்து நிறுத்த எங்களை சிறைவைத்தது போலீசு. இந்த அட்டூழியங்களை எல்லாம் தட்டி கேட்க வேண்டும் என்றால் மக்கள் அதிகாரத்திற்கான கமிட்டிகளை அமைத்து போராடுவதன் மூலம்தான் தீர்வுகாண முடியும்” என்று உரையாற்றினார்.

வழக்கறிஞர் அஸ்ரப் பாஷா “இது திட்டமிட்ட படுகொலை தான் என்பது உறுதியாகிவிட்டது. இரு மாநிலங்களுக்குள் இவ்வளவு பிரச்சனைகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் மத்திய அமைச்சர்களோ, மோடியோ இதுவரை இந்த பிரச்சனையைப் பற்றி பேசவில்லை. மோடியோ வெளிநாடு பயணம் என்று சொல்லி ஊர் சுற்றுவதில் மன்மோகன் சிங்கையே மிஞ்சிவிட்டார். உழைக்கும் ஏழை எளிய மக்கள் உண்ணும் மாட்டுக்கறியை தடை செய்ய மாடு வெட்ட தடை சட்டம் போடும் அரசு 20 தொழிலாளர்களை சுட்டு கூறு போட்டிருக்கான், இதற்கு ஏன் தடை சட்டம் போடவில்லை? தி.க.வின் தாலி அறுக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா, ஆர்.எஸ்.எஸ் காலிகளே இங்கு 20 இந்து பெண்களின் தாலி அறுந்து போச்சே, இப்ப எங்கடா போனீங்க?” என்று பேசினார்.

செம்மரம் - திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்
தி.க. வின் தாலி அறுக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா, ஆர்.எஸ்.எஸ் காலிகளே இங்கு 20 இந்து பெண்களின் தாலி அறுந்து போச்சே இப்ப எங்கடா போனீங்க?

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் தோழர் கண்ணன் “சந்திர பாபு நாயுடுவின் நேரடி தலைமையில் இந்தப் படுகொலை நடந்துள்ளது. இது திட்டமிட்ட படுகொலைதான். இதற்குக் காரணமான ஆந்திர மாநில டி.ஐ.ஜி காந்தாராவ் உள்ளிட்ட போலிசு கும்பலை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், எங்களது அமைப்பின் சார்பாக துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்கையில் அங்கு மரம் வெட்டியதற்கான தடயங்கள் ஏதுமில்லை. அதுபோல மரம் வெட்டும்போது போலிசு துப்பாக்கியோடு வரும்போது தப்பியோடத்தான் நினைப்பார்களே ஒழிய எதிர்த்து தாக்கமாட்டார்கள். அப்படி ஓடும்போது முதுகில் தான் சுட்டிருக்க முடியும். மாறாக மார்பிலும், வயிற்றிலும், நெஞ்சிலும் சுடப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே இது திட்டமிட்ட படுகொலைதான் என்று தெரிகிறது.

சென்ற வருடம் சென்னையில் பதினோரு மாடி கட்டிடம் விழுந்து ஆந்திர தொழிலாளி இறந்து போனபோது சந்திர பாபு நாயுடு எல்லை தாண்டி தனி விமானம் மூலம் வந்து பார்த்துவிட்டு போனார்; பின்பு நிவாரணம் கொடுத்தார். ஆனால் இப்படி ஒரு படுகொலை நடந்துள்ளபோதும் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் நமது மக்களை வந்து பார்க்க நேரமில்லாமல் இருக்கிறார். மக்களை பாதுகாக்க வேண்டிய இந்த அரசு, போலீசு, ராணுவம், நீதி மன்றம் என அனைத்தும் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றன. இனிமேலும் இந்த அரசை நம்பி ஏமாறாமல் வீதிக்கு வீதி மக்கள் அதிகாரத்துக்கான மையங்களை கட்டியமைத்து போராடுவதன் மூலம் தான் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று பேசினார்.

செம்மரம் - திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்
இந்த அரசை நம்பி ஏமாறாமல் வீதிக்கு வீதி மக்கள் அதிகாரத்துக்கான மையங்களை கட்டியமைத்து போராடுவதன் மூலம் தான் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இறுதியாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சுந்தர் நன்றி கூறினார்.

பேருந்து பிரச்சாரத்தில் மக்கள் நம்மை பார்த்து நீங்கள் மட்டும்தான் உண்மையான குற்றவாளி யார் என்றும் அவர்களை எப்படி தண்டிப்பது என்றும் சொல்றீங்க என்று பாராட்டினர். அனைவருமே மனமுவந்து நிதி கொடுத்து ஆதரவு தெரிவித்தனர்.

[துண்டறிக்கையை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

ஆர்ப்பாட்ட முழக்கம்

கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம் !
தமிழக தொழிலாளர்கள் 20 பேரை
நாயைப்போல சுட்டுக்கொன்ற….
ஆந்திர அரசின் பயங்கர வாதத்தை
வன்மையாக கண்டிக்கின்றோம்

படுகொலை! படுகொலை !
சமூக நீதி வேஷம் போட்ட
சந்திர பாபு நாயுடுவின்
பச்சையான படுகொலை…

டிஸ்மிஸ் செய் ! டிஸ்மிஸ் செய் !
சொந்த அரசியல் காரணங்களுக்காக
ராமச்சந்திர ரெட்டிக்கு நெருக்கடி தர…
20 கூலி தொழிலாளர்களை
கொன்று வீசிய நாயுடு அரசை
டிஸ்மிஸ் செய் ! டிஸ்மிஸ் செய் !

கைது செய்! சிறையிலடை !
ஆந்திர மாநில டி.ஐ.ஜி
காந்தாராவ் உள்ளிட்ட
போலீசு அதிகாரிகளை
கைது செய்! சிறையிலடை !

தில் இருக்கா! தில் இருக்கா !
கூலித் தொழிலாளிகளை
சுட்டுக்கொன்ற ஆந்திர அரசே
செம்மரக் கடத்தல் கொல்லையன்கள்
ராமசந்திர ரெட்டி
கிஷோர் குமார் ரெட்டி உள்ளிட்ட
ஆந்திர தமிழக மாபியாக்களை
சுட்டுக்கொல்ல தில் இருக்கா !

தாலி பற்றி பேசியதற்கு
குண்டு வீசி வெறியாட்டம் போட்ட
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி காலிகளே
20 இந்து தாலியை அறுத்துட்டான்
எங்கடா ஓடி ஒளிஞ்சிங்க
எவன் மசுர புடுங்குறீங்க…

நிராகரிப்போம் ! நிராகரிப்போம் !
ஆந்திர அரசின் படுகொலையை
தெலுங்கு இனவெறி என்று சுருக்கி
மக்களை கொன்று வரும் …
நெருங்கி வரும் அரச பயங்கரவாதத்தை
மூடி மறைக்கின்ற…
தமிழ் தேசிய கள்ளர்களை
நிராகரிப்போம் ! நிராகரிப்போம் !

இயற்கை வளத்தை சூறையாட
நாட்டையே கொள்ளையடிக்க
சாதி மத இனம் கடந்து
ஓட்டுப் பொறுக்கிகள் ஓரணி !
உழைக்கும் மக்களே நமக்கெதற்கு
ஒன்றுக்கும் பயன்படாத
சாதி மத லாவணி……
ஒன்று படுவோம்! ஒன்று படுவோம் !
உழைக்கும் வர்க்கமாய் ஒன்று படுவோம்….

முறியடிப்போம்! முறியடிப்போம் !
நாளுக்கு நாள் பெருகிவரும்
அரசின் பயங்கர வாதத்தை
முறியடிப்போம் ! முறியடிப்போம் !

கட்டியமைப்போம்! கட்டியமைப்போம் !
இயற்கை வளங்களை பாதுகாக்க
வீதிக்கு வீதி ஊருக்கு ஊர்…
மக்கள் அதிகார மன்றங்களை
வீரஞ்செறிந்த போராட்டங்களை
கட்டியமைப்போம் ! கட்டியமைப்போம் !

வெல்லட்டும் ! வெல்லட்டும் !
ஆந்திர அரசின்
பச்சை படுகொலைக்கு எதிரான
தமிழக மக்களின் போராட்டம்
வெல்லட்டும் ! வெல்லட்டும் !

தகவல் :
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
திருவண்ணாமலை மாவட்ட கிளை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க