பணப் பொருளாதாரம் வேண்டாம். வங்கிக்குவா, என்று மக்களை வரவழைப்பது எப்படி? ஆயிரம், ஐநூறு செல்லாது என்று அறிவித்தால் வங்கியின் வாசலில் வந்து நின்று தானே ஆக வேண்டும்? அதைத் தான் செய்திருக்கிறார் மோடி. இதோ, சொந்தப் பணத்தை மாற்றுவதற்கு பிச்சைக்காரர்களைப் போல வங்கிகளின் வாசலில் காத்து நிற்கிறார்கள் மக்கள். தொழில்கள் அழிகின்றன. சிறுவணிகம்அழிகிறது. நோயாளிகள் சாகிறார்கள். நாடே நிலைகுலைந்திருக்கிறது. இது நிர்வாகத்திறமையின்மை என்று சிலர் மோடி அரசை விமரிசிக்கிறார்கள்.
இது நிர்வாகத்திறமையின்மையா, திட்டமிட்ட சதியா? முட்டாள்தனமா, முட்டாள்தனம் போலத் தெரிகின்ற அயோக்கியத்தனமா? புழக்கத்தில் இருக்கின்ற பணத்தில் 85% ஐ செல்லாது என்று அறிவித்தால் நாட்டில் என்ன நடக்கும் என்பதை நிர்வாகம் தெரியாத அடிமுட்டாள் கூடப்புரிந்து கொள்ள முடியும். முகேஷ் அம்பானியின் முன்னாள் ஊழியரான ரிசர்வு வங்கி கவர்னருக்கும், அதானியின் இந்நாள் ஊழியரான மோடிக்கும் இது புரியாமலா இருக்கும்? எதற்காக வரிசையில் நிற்கிறீர்கள்? டெபிட்- கிரெடிட் கார்டுகளுக்கு மாறுங்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறது ரிசர்வ்வங்கி. ஏ.டி.எம் இல்லையா, பேடிஎம் (paytm)-முக்கு மாறுங்கள் என்கிறது பேடிஎம் கம்பெனி விளம்பரம்.
மக்களை வங்கிக்கணக்கு என்றவலையில் சிக்கவைத்து அவர்களுடைய சேமிப்புபணத்தை அபகரித்து தரகுமுதலாளிகளுக்கு வாரி வழங்குவது,பெருமுதலாளிகளுக்கு வரிவிலக்கு, சிறுவணிகர்கள் முதல் சுயதொழில் செய்வோர் வரை அனைவருக்கும் வரிவிதிப்பு, இதிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்கவைக்க வங்கிக் கணக்கு. ஆதார் அட்டையையும் வங்கிக்கணக்கையும் இணைத்து மானியவெட்டு.
4ஜி ஆண்டிராய்டு போன், ஆதார்அட்டை, கடன்அட்டை அனைத்தையும் இணைப்பதன் மூலம் குடிமக்களின் எல்லா நடவடிக்கைகளையும் அம்பானியின் கண்காணிப்புக்கும் அரசின்கண்காணிப்புக்கும் உட்படுத்துவது இதுதான் மோடியின் டிஜிடல் இந்தியா அல்லது டிஜிட்டல் பாசிசம்.
தரகு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள், அவர்களுக்கு தொண்டூழியம் செய்யும் இந்திய அரசு இவர்களின் கருப்பு உலகத்தை விரிவாகவும், ஆழமாகவும் அறிமுகம் செய்கிறது இந்தத் தொகுப்பு!
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- காவிக் கறை மோடிக்குத் துடிக்கும் கருப்புப் பணநாயகம் !
- இந்திய முதலாளிகளின் சுவிஸ் வங்கி இரகசியங்கள்
- கடவுளுக்கும் ‘கட்டிங்’ கொடுத்த சாராய மல்லையா!
- பல்லிளிக்கும் இந்தியத் தரகு முதலாளிகளின் ‘‘சாமர்த்தியம்’’
- மோடி அரசு: அதானி குழுமத்தின் ஏஜென்சி!
- தனியார் வங்கிகள் வளர பொதுத்துறை வங்கிகளை ஒழிக்கும் மோடி
- வருங்கால வைப்புநிதி மோசடி : அரசு − முதலாளிகளின் கூட்டுக் களவாணித்தனம் !
- ஆர்.எஸ்.எஸ். இன் தேசபக்தியைத் தோலுரித்த இரகுராம் ராஜன் !
- பனாமா லீக்ஸ் : கசிந்தது கையளவு ! கசியாதது மலையளவு !!
- கருப்புப் பணம் : மோடியின் கறைபடிந்த நாடகம் !
- காவியிருளில் மறைந்திருக்கும் மூலதனத்தின் சர்வாதிகாரம் !
- மோடியை எதிர்த்து மக்கள் அதிகாரம் பா.ஜ.க. தலைமையகம் முற்றுகை !
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த | ||
---|---|---|
Paypal மூலம்(வெளிநாடு) | $27 | |
Payumoney மூலம்(உள்நாடு) | ரூ.400 |
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !
_____________