திருச்சி பீமநகரில் கடந்த மாதம் 29.07.2017 அன்று 13 வருடங்களாக இயங்கி வந்த மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராடினர் அப்பகுதி பெண்கள். மக்கள் அதிகாரம் சார்பில் அப்பகுதி மக்களை ஒருங்கினைத்து கடையை திறக்க விடாமல் கடைக்கு முன் முட்கள், மற்றும் குப்பைகளை கொட்டி மக்கள் போராட்டம் நடத்தப்பட்டது. அதிகாரிகள் கால அவகாசம் கேட்டு அது வரை கடையை திறக்க மாட்டோம் என ஒப்புதல் கொடுத்தது போராட்ட வெற்றியின் துவக்கப் புள்ளியாக அமைந்தது.
இந்நிலையில் 13.07.2017 அன்று காலை டாஸ்மாக் அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து இனிமேல் டாஸ்மாக் கடை இப்பகுதியில் இயங்காது கடை இன்று முதல் மூடப்படுகிறது; இது உங்களின் விடாப்பிடியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மக்களிடம் கூறி, கடைக்குள் இருக்கும் மது பாட்டில்களை கணக்கு பார்த்து எடுத்து சென்ற பின் மூடி விடுவோம் அதுவரை காத்திருங்கள் என கூறினார்கள். கடைக்குள் சென்று கணக்குகள் பார்த்து விட்டு 5 மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்த அதிகாரிகள் மது பாட்டில்களை டாஸ்மாக் வண்டியில் ஏற்றிவிட்டு கடையை மூடினார்கள்.
இச்சம்பவம் இப்பகுதியில் போராடிய மக்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. வெடி வைத்தும் இனிப்புகள் கொடுத்தும் மக்கள் உற்சாகமாக திருவிழா போல் கொண்டாடினார்கள். அவர்கள் கூறும் போது நாங்கள் மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்களுக்கு மிகவும் கடமை பட்டிருக்கின்றோம்.
இனி அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டுமானல் மக்கள் அதிகாரத்துடன் இணைந்து போராட தயாராக உள்ளோம் என உற்சாகத்துடன் கூறினார்கள். இப்பகுதியில் தற்போது பயம் இல்லாமல் குழந்தை முதல் பெண்கள் அனைவரும் தைரியமாக வெளியே வர முடிகிறது என அம்மக்கள் நம்மிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தது நம் கடமை இன்னும் நிறைய இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தியது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.
_____________
டாஸ்மாக்கை மூடும் மக்களின் போராட்டச் செய்தி உங்களுக்கு பயனளித்ததா?
- போராடும் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி