சென்னை புத்தகக் காட்சியில் விற்பனை குறைவு என்று கடந்த சில ஆண்டுகளாக பல பதிப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி, சினிமா காரணமாக பொதுவில் புத்தக வாசிப்பு குறைந்திருப்பதாகவும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
இணையத்தில் புழங்கும் மக்கள் புத்தக வாசிப்பு குறித்து என்ன கருதுகின்றனர்? 2017 ஆண்டில் நீங்கள் வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கை குறித்து ஒரு சர்வே – வாக்களியுங்கள். நாளிதழ், வார இதழ்கள், இணைய கட்டுரைகள் குறித்து இந்த சர்வே இல்லை. தனிப் புத்தகமாக எத்தனை நூல்களை படித்துள்ளீர்கள்? அதை அச்சுப் புத்தகமாகவோ இல்லை இணைய புத்தகமாகவோ (இ-புக்) படித்திருக்கலாம். அது குறித்து தெரிவியுங்கள்! நன்றி.
கேள்வி : கடந்த 2017 ஆண்டில் எத்தனை புத்தகங்கள் வாசித்தீர்கள்?
- ஒன்று கூட இல்லை
- ஒரு புத்தகம்
- இரண்டு புத்தகம் முதல் ஐந்து வரை
- ஆறு புத்தகம் முதல் பத்து வரை
- பத்திற்கும் மேல்
பத்திற்கும் மேல்
Naan koraintha patcham oru 30 books padichiruppan.I like Periyar books.ippothu marxin books padika arampichirukkan.purnthukolla konjam kastamaga ullthu.but I will try to understand.
This is the good cartoon book , if you want to start
https://www.amazon.in/Introducing-Marx-Graphic-Guide-Rius/dp/1848314078
கார்டூன் வழியாக மட்டுமே மார்க்ஸ் பற்றி அறியவேண்டுமானால், இதோ ஒரு புத்தகம்…
Marx for Beginners (in English)- by Rius(Eduardo Humberto del Río García)
https://archive.org/details/MarxForBeginners-English
மார்க்ஸ் எழுதியவை அனைத்தும் சுலபமாகப் புரிந்து கொள்வதற்கான ஒரே வழி, கதை படிப்பதாக எண்ணிக்கொண்டு படிக்க ஆரம்பித்தல் மட்டுமே. ஏதோ பெரிய தத்துவ புத்தகதத்தைப் படிப்பது போலன்று. ஆயினும் உலக வரலாறு நன்கு அறிமுகமாயிருத்தல் மிகமிக அவசியம், கதையாக உள்வாங்காமல் கருத்துக்களை உள்வாங்குவதற்கு.
உதாரணத்திற்கு – நான்கு நூற்றாண்டு அரசியல் பொருளாதார வளர்ச்சியின்போக்கை ஒரே சிறு பத்தியில் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து)
“நவீனத் தொழில்துறை உலகச் சந்தையை நிறுவியுள்ளது. அமெரிக்காவைக் கண்டுபிடித்த செயல் இதற்குப் பாதையமைத்துக் கொடுத்தது. உலகச் சந்தையானது, வர்த்தகத்துக்கும், கப்பல் போக்குவரத்துக்கும், தரைவழித் தகவல் தொடர்புக்கும் அளப்பரும் வளர்ச்சியைத் அளித்தது. இந்த வளர்ச்சி தன் பங்குக்குத் தொழில்துறையின் விரிவாக்கத்துக்கு வித்திட்டது. தொழில்துறை, வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை எந்த அளவுக்கு விரிவடைந்தனவோ அதே அளவுக்கு முதலாளித்துவ வர்க்கமும் வளர்ச்சியடைந்தது. அது தனது மூலதனத்தைப் பெருக்கியது. மத்திய காலம் விட்டுச் சென்றிருந்த ஒவ்வொரு வர்க்கத்தையும் பின்னிலைக்குத் தள்ளியது.”
காசு கொடுத்து வாங்கிபடித்த புத்தகங்கள் :
நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன்
அயோத்திதாசர் ஆய்வுகள் – பேராசிரியர் ராஜ் கொதமன்
இந்து தேசியம் -தொ.பரமசிவம்
நாகம்மாள்- ஆர் சண்முகசுந்தரம்
எரியும் பனிக்காடு (ரெட் டீ )-பி.ஹச் டேனியல்
நான் ஒர் ஹிந்துவாக சாகமாட்டேன் -டாகடர் அம்பேத்கர்