privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்திருவாரூர் - கடம்பன்குடி ஓ.என்.ஜி.சி. முற்றுகை !

திருவாரூர் – கடம்பன்குடி ஓ.என்.ஜி.சி. முற்றுகை !

-

மிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சுடுகாடாக்க தொடர்ந்து இந்த அரசு முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் கடம்பன்குடி கிராமத்தில் புதிய எண்ணெய் கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி. திட்டமிட்டுள்ளது. அப்பகுதியில் ஏற்கனவே ஓ.என்.ஜி.சி. சார்பில் எண்ணெய் கிணறுகள் செயல்பட்டு வருவதால் அப்பகுதியின் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே பழைய கிணறுகளை மூடவும், புதிதாக எண்ணெய் கிணறு திறப்பதை தடுக்கக் கோரியும் கடம்பன்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் சார்பில் பிப்ரவரி 11, 2018 அன்று ஓ.என்.ஜி.சி. முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

 

மேலும் இந்த போராட்டத்தை ஆதரித்து கலந்து கொள்ள வந்த பேராசிரியர் ஜெயராமன் அவர்களை கைது செய்தது போலீசு. அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தது போலீசு. போராட்டத்தில் மாணவர்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க