Tuesday, July 8, 2025

பொது சிவில் சட்டம், அறிவிப்பு: இந்துத்துவத்தின் பிரம்மாஸ்திரமா? புஸ்வானமா?

பா.ஜ.க. கும்பல் தோல்விமுகம் அடைந்திருக்கும் இன்றைய அரசியல் சூழலில் பெரும்பான்மை மக்களிடம் ஆதரவு இல்லாத நிலையிலும் இஸ்லாமிய எதிர்ப்புப் பூச்சாண்டி ஒன்றுக்காகவே பொது சிவில் சட்டத்தை இப்போது விவாதப் பொருளுக்கு கொண்டுவந்திருக்கிறது பாசிசக் கும்பல்.

வனம், கனிமப் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள்: கார்ப்பரேட் கொள்ளையின் முகமூடி!

மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களை செயல்படுத்துவதற்கு காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி மக்கள் தடையாக இருப்பார்கள் என்று முன் அனுமானித்து, வன உரிமைச் சட்டம் 2006, பஞ்சாயத்து ராஜ் ஆகிய சட்டங்கள் பழங்குடி மக்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை இச்சட்டத் திருத்தம் மூலம் பறித்துள்ளது மோடி அரசு.

உணவுப் பொருட்களின் விலை உயர்வு: வெடிக்கக் காத்திருக்கும் பொருளாதார பயங்கரவாதத்தின் புகைச்சல்

2014-இல் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, மோடி-அமித்ஷா-நிர்மலா கும்பல் தீவிரமாகக் கடைப்பிடித்துவரும் மறுகாலனியாக்கக் கொள்கையின் அடிப்படையிலான ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்ற பொருளாதார பயங்கரவாதக் கொள்கைகள்தான் உணவுப் பொருள்களின் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாகும்.

கவிழ்ந்து வரும் தாமரைக்கு சவக்குழி வெட்டுவோம்!

பா.ஜ.க.வின் காவி-கார்ப்பரேட் நடவடிக்கைகளும் மோடியின் பிம்பமும் மக்கள் போராட்டங்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, பா.ஜ.க. தோல்வி முகத்திற்கு சென்றுள்ள இந்த பின்னணியில்தான், காங்கிரஸ் தன்னை ஒரு மாற்றுத் தலைமையாக மீள்கட்டமைப்பு செய்துவருகிறது.

அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!

"நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள், அங்கே விவாதிப்போம்" என்பதெல்லாம், பழைய காலம். நாடாளுமன்றத்தை பஜனை மடமாக மாற்றுவதுதான் மோடி காலம். அதற்கேற்ப அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அங்கே மோடி மீதான பா.ஜ.க.வினரின் பஜனை கோசத்தைத் தாண்டி, எதிர்க்கட்சிகளின் கதறல்கள் எதுவும் ஒலிக்கப்போவதில்லை.

தெலுங்கானா: பாசிச எதிர்ப்பு அறிவுத்துறையினர் – செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் வேட்டை!

2022-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பி.ஆர்.எஸ். கட்சியின்மீது அமலாக்கத்துறை நடவடிக்கைகள் தீவிமடைவதை நாம் கவனிக்கலாம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்ட் மூலம் சந்திரசேகர் ராவ் அமித்ஷாவை ரகசியமாகச் சந்தித்து டீல் பேச முயற்சித்த தகவல் வெளியே கசியவந்து நாறிப்போனது.

ஒடிசா ரயில் விபத்து: மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!

தண்டவாளப் பராமரிப்பு ஊழியர்கள் 4 லட்சத்திலிருந்து 2 இலட்சமாகக் குறைந்துள்ளார்கள். ரயில்வே துறையில் 3.12 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது; இவற்றுள் பெரும்பாலானவை பாதுகாப்பு தொடர்பான பணிகளாகும்.

கழன்றது முகமூடி | பகுதி 1

‘வளர்ச்சி’ முகமூடி கிழிந்து தொங்கும் நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று இந்துராஷ்டிரம் அமைப்பதை நோக்கி முன்னேற வேண்டுமானால் தேசவெறி, மதவெறி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதைத் தவிர ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு வேறுவழியில்லை.

அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!

கடந்த ஜனவரி மாதத்தில் அமுல் நிறுவனத்தில் கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து அனுபவம் பெற்ற, பல ஆண்டுகளாக மேலாண்மை இயக்குனராக பணியாற்றிய ஆர்.எஸ்.சோதி தன் பதவியை ராஜினாமா செய்து அமுல் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்துள்ளார்.

கர்நாடக தேர்தல் முடிவுகள்: தேர்தல் தோல்வி மட்டுமே பாசிசத்தை அளக்குமா?

கர்நாடகாவில் இந்துத்துவா இன்னும் முதல் கட்டத்திலேயே - அதாவது குழந்தைப் பருவத்திலேயே உள்ளது” என்கிறார் மைசூர் பல்கலைக்கழக கலைத்துறையின் தலைவரான முசாபர் அசாதி. கடலோர கர்நாடகத்தைத் தவிர, ஒட்டுமொத்த கர்நாடகத்தை எடுத்துக் கொண்டால், முசாபர் அசாதி குறிப்பிடுவதுதான் உண்மையாகும்.

டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!

டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அரசிடம் இருந்து மோடி அரசால் சட்டப்பூர்வமாகவே பறிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எதிரான மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை ஆகும்.

எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!

பிரேன் சிங் முன்னிறுத்தும் மேய்தி பெரும்பான்மைவாதமானது ஒருபக்கம், குக்கி-மேய்தி மக்களுக்கிடையிலான பிளவை ஏற்படுவத்தி காவிக்கும்பலுக்குச் சேவைசெய்வதாகவும்; மற்றொருபுறம் மணிப்பூரின் மலைவளங்களை கார்ப்பரேட்டுக்கு சூறையாடக் கொடுப்பதற்கான தரகுவேலையாகவுமே அமைந்திருக்கிறது.

பாசிசத்திற்கு எதிரான கலகக் குரல்கள்!

பாசிஸ்டுகள் ஏறித்தாக்கி வரும் இச்சூழலில் நாம் அவர்களைக் கண்டு அஞ்சக்கூடாது. பாசிசக் கொடுமைகளை சகித்துக்கொண்டு அமைதியாக இருக்கக்கூடாது. இதுதான் நேஹா சிங் ரத்தோர் போன்ற கலைஞர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.

ரத்தினகிரி மீது பாசிச அடக்கமுறையை ஏவும் பா.ஜ.க – பின்னணியில் அதானி!

இந்திய பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு சவூதி அராம்கோவுடன் இணைந்து இச்சுத்திகரிப்பு ஆலையை நிறுவ வேண்டுமென்றால், அதானி குழுமத்தை எந்த வகையிலாவது தங்களுடைய கூட்டுப் பங்குதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மோடி அரசு நிச்சயமாக டீல் பேசும்.

மலியானா படுகொலை குற்றவாளிகள் விடுதலை: தொடரும் இந்துராஷ்டிர (அ)நீதி!

தற்போது உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி, வெளிப்படையாக இந்துராஷ்டிர ஆட்சி என்று மட்டும்தான் அறிவிக்கப்படவில்லை. எனவே, இந்துராஷ்டிரத்தில் மலியானா படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

அண்மை பதிவுகள்