மூணார் நிலச்சரிவின் ஆறாம் ஆண்டு: 76 தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாடாவின் லாபவெறி!
எந்தத் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி டாடா நிறுவனம் கோடிகளில் லாபம் ஈட்டியதோ, அந்தத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடங்களைக் கூட ஏற்படுத்திக் கொடுக்காததே 76 உயிர்கள் பறிபோனதற்குக் காரணமாகும்.
ஜார்க்கண்ட் மாணவர்களின் எழுச்சிமிகு சட்டமன்ற முற்றுகைப் போராட்டம்!
தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான ஜார்க்கண்ட் மாணவர்கள் - இளைஞர்களின் போராட்டமானது கடந்த ஆகஸ்ட் 10 அன்று அம்மாநில சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டமாக எழுச்சிகரமாக வளர்ந்து முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. போலீசின் கொடிய அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு மாணவர்கள் சட்டமன்ற வாயில் வரை வெற்றிகரமாகப் பேரணிச் சென்றுள்ளனர்.
வெளிநாடுகளில் 37,000 இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு: வேடிக்கை பார்க்கும் மோடி அரசு!
2021 முதல் 2025 வரை 37,740 இந்திய தொழிலாளர்கள், வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர். இதில் 32,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் வளைகுடா நாடுகளில் மட்டும் நிகழ்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், வளைகுடா நாடுகளில், ஒரு நாளுக்கு 18 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அச்சமூட்டும் தகவலை அறிக்கை முன்வைக்கிறது.
மேட்டூர்-அடிப்பாலாறு: குடில்களைப் பிய்த்தெறிந்து மீனவர்களை விரட்டியடித்து வனத்துறை அட்டூழியம்
குடில்களை காலி செய்யாவிட்டால் குடில்களுக்கு தீ வைக்கப்படும் என்றும் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் ரவுடிகளை போல மிரட்டல் விடுத்து, பல குடில்களைப் பிய்த்து எறிந்து வனத்துறை அதிகாரிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி: துளசி மகளிர் சட்டக் கல்லூரி மாணவிகள் தொடர் போராட்டம்
கடந்த 2025-26 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் அனுமதித்திருந்த எண்ணிக்கையை விட கூடுதலாக 36 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் முறைகேடாக சேர்த்துள்ளது. இதனால், கடந்த மே மாதம் நடைபெற்ற பருவத்தேர்வில் (Semester) கூடுதலாக சேர்க்கப்பட்ட 36 மாணவிகளுக்கு பதிவெண் வழங்கப்படாததால் அம்மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்!
நடந்து முடிந்த ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் தேர்வுகளை இரத்து செய்ய வேண்டும்; ஓ.எம்.ஆர். தாள்களில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. முறையாக விசாரணை நடத்த வேண்டும்; ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராடி வருகின்றனர்.
த.வெ.க. அரசின் அலட்சியத்தால் பறிபோன 151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள்
“வழக்கு விசாரணையின் மிக முக்கியக் கட்டத்தில், தமிழ்நாடு அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை” என்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய விசயத்தை தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.
5 ஆண்டுகளில் 593 மலக்குழி மரணங்கள்: உண்மையை மறைக்கும் மோடி அரசு!
“ஜனவரி 2021 முதல் இன்று வரை கழிவுநீர் மற்றும் செப்டிக் தொட்டிகளில் 593 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் 332 மரணங்கள் மட்டுமே நடந்துள்ளதாக அறிக்கையாக அளித்துள்ளது. இந்த அநீதியைச் சகித்துக்கொள்ள முடியாது.” - சஃபாய் கர்மச்சாரி அந்தோலன்
யார் இந்த மாண்டேக் சிங் அலுவாலியா? | சாய்நாத் | மீள்பதிவு
‘வருவாய் பெருக்கக் குழு’ தலைவர் அலுவாலியா என்ன செய்யப் போகிறார் என ஊடகங்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இவர் கடந்த காலத்தில் என்ன செய்தார், இவரது ‘சேவைகள்’ (செயல்பாடுகள்) யாருக்கானவை என்பதை விளக்கும் வகையில் பத்திரிகையாளர் பி. சாய்நாத் எழுதிய கட்டுரை..
யார் இந்த மாண்டேக் சிங் அலுவாலியா? | வறுமைக்கோடு வரையறை | மீள்பதிவு
ஒரு மனிதன் நாளொன்றுக்கு நகரத்தில் ரூ.32/க்கும், கிராமப்புறத்தில் ரூ.26/க்கும் அதிகமாகச் சம்பாதித்தால், அவன் வறுமைக்கோட்டுக்கு மேலானவன் என்றது, திட்டக்குழு. இந்த வறுமைக்கோடு வரையறையை வழங்கிய திட்டக் குழுவின் அப்போதைய துணைத் தலைவர்தான் மாண்டேக் சிங் அலுவாலியா.
தேனி வருசநாடு: வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட கடமலைக் குண்டு மக்கள்
வருசநாடு முதல் கடமலைக்குண்டு வரை ஆயிரக்கணக்கான மக்கள் வாழும் பகுதியில் 4,011 குடும்பங்களை வெளியேற்றுவதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
டெல்லி மாணவர் போராட்டத்தின் வெற்றியை சிதைக்க நினைக்கும் பாசிச மோடி அரசு | தோழர்...
டெல்லி மாணவர் போராட்டத்தின் வெற்றியை
சிதைக்க நினைக்கும் பாசிச மோடி அரசு | தோழர் ரவி
https://youtu.be/3PLRgJ3Z0Ak
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
கென் பெத்வா: மோடி அரசைப் பணிய வைத்த இன்னொரு போராட்டம்!
மலைவாழ் மக்களின் உறுதியான போராட்டமே இந்த பாசிச கும்பலைப் பேச்சுவார்த்தை என்ற கட்டத்திற்குப் பணிய வைத்துள்ளது. மேலும், முறையான சர்வே மீண்டும் நடத்தப்படும் என்று அரசு தரப்பிலிருந்து உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதுவே மக்கள் போராட்டங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆனால், இத்திட்டத்தைக் கைவிடுவதைப் பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது ஒன்றிய அரசு.
அசாம் வெள்ளப் பேரழிவு: கனிமவளக் கொள்ளையும் பறிபோகும் உயிர்களும்!
மக்களைக் காப்பாற்ற வக்கற்ற பா.ஜ.க. அரசு நாகாலாந்து மாநிலத்தில் மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் 430 சதவீதம் அளவிலான கனமழையால் தான் வெள்ளம் ஏற்பட்டது என்று இயற்கை மீது பழிசுமத்தித் தப்பித்துக் கொள்கிறது. ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் மேகவெடிப்பு என்பதை ஒரு மணி நேரத்திற்குள் 100 மி.மீ-க்கு அதிகமான மழைப்பொழிவு என்று வரையறுத்துள்ளது.
நாமக்கல்: ‘காப்புக்காடு’ என்ற பெயரில் பறிக்கப்படும் நாரைக்கிணறு சுற்றுவட்டார மக்களின் நில உரிமை
கடும் வறட்சி காலத்தில் பயிர்களைக் காப்பாற்ற ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும் பட்டா இல்லாததால் நிலத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

























