உ.பி, ஹரியானாவைத் தொடர்ந்து, ராஜஸ்தானிலும் தொழிலாளர் போராட்டம் மாபெரும் வெற்றி!
வேறு வழி இல்லாமல் அரசுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு நெட்டித் தள்ளப்பட்டது நேப்பினோ நிர்வாகம். பேச்சுவார்த்தை முடிவில் தொழிற்சங்க உறுப்பினர் ஆறு பேர் இடை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்வதாகவும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைக் கூடிய விரைவில் முடித்துத் தருவதாகவும் ஒப்புக்கொண்டது. உடனடியாக தற்காலிகப் பொருளாதாரப் பலன்களாக சில கூடுதல் படிகளைத் தருவதாகவும் ஏற்றுக் கொண்டது.
சேலம் – வாழப்பாடி: மூடப்பட்டுள்ள கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையை மீண்டும் பயன்பாட்டுக்...
சின்ன கிருஷ்ணாபுரத்தில் மூடிக் கிடக்கும் கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையைச் சீரமைப்பதன் மூலம், விவசாயிகளுக்குப் பலனும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இது வாழப்பாடி பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
நீட் தேர்வு என்னும் தூக்குக் கயிறு
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த ஆண்டிலிருந்தே பல்வேறு காரணங்களால் மாணவர் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மே 20: ஆன்லைன் மருந்து விற்பனையை எதிர்த்து மருந்தகங்கள் முழு அடைப்பு போராட்டம்!
வெளிநாட்டு நிதியுதவி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆன்லைன் மருந்தகங்கள், அதிகப்படியான தள்ளுபடிகளை (Deep Discounting) வழங்குகின்றன. இதனால் இந்தியாவில் உள்ள சுமார் 12.4 லட்சம் சிறு மற்றும் உரிமம் பெற்ற சில்லறை மருந்து வணிகர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் என 40 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
நெய்வேலி: நிலம் கையகப்படுத்துவதை என்.எல்.சி. நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் | ம.அ.க
மக்களுக்கு அதீத பாதிப்புகள் ஏற்படுவதை அரசே ஒப்புக்கொள்ளும் நிலையில், மீண்டும் நிலங்களைக் கையகப்படுத்தி என்.எல்.சி.க்கு கொடுப்பது மக்களுக்கு எதிரான செயலாகும். “எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலத்தை வழங்க மாட்டோம். எங்களின் பூர்வீக நிலங்களில் எங்களை வாழ விடுங்கள்” என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கிருஷ்ணகிரி: டாடா நிறுவனத்தின் கழிவுநீரால் அழிவுக்குள்ளாகும் விவசாய நிலங்கள்
டாடா நிறுவனம் விவசாய நிலங்களை மாசுபடுத்துவது நீண்டகாலமாக நடந்து வருகிறது என்பதைச் செய்திகள் உணர்த்துகின்றன. அப்போதே நடவடிக்கை எடுக்காமல், அரசு நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. மக்கள் அதிகாரக் கழகம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.
8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி: உழைக்கும் மக்களின் மருத்துவ உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை
8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி:
உழைக்கும் மக்களின் மருத்துவ உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை
https://youtu.be/iYX_WcZpTXw
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
ஒழித்துக்கட்டப்பட்ட நூறு நாள் வேலைத் திட்டம்: நாடு முழுவதும் விவசாயிகள் – தொழிலாளர்கள் போராட்டம்!
பழைய சட்டத்தை ரத்து செய்ததைக் கண்டித்தும், புதிய சட்டத்திற்கு எதிராகவும், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் மே 15 அன்று வீதிகளில் இறங்கி வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
உலகளாவிய நீர் திவால்நிலையும் இந்தியாவை சூழ்ந்திருக்கும் அபாயமும்
நீர் நெருக்கடி என்பது எதிர்காலத்தில் சரிசெய்ய வேண்டிய நிர்வாகப் பிரச்சினையல்ல; இன்றே தீர்க்கப்பட வேண்டிய வர்க்கப் போராட்டமாகும். நீர் என்பது கார்ப்பரேட்டுகளின் இலாபப் பொருளல்ல; அது உழைக்கும் மக்களின் வாழ்வாதார உரிமை என்பது நிலைநாட்டப்பட வேண்டும்.
கோழிப் பண்ணை விவசாயிகள்: அரசியல் மற்றும் தீர்வுக்கான திசைவழி | பாகம் 3
கோழிப்பண்ணை விவசாயிகள் பிரச்சினை என்பது இந்தியாவின் வேளாண் உற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தி சார்ந்த அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடைய பிரச்சினையாகும். கறிக்கோழி உற்பத்தியில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசின் கொள்கை முடிவுகளை மாற்றியமைக்காமல், வெறுமனே கூலி உயர்வு போராட்டம் மட்டும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடப் போவதில்லை.
அமெரிக்காவிடம் சரணடைந்த அதானி – அடகு வைக்கப்பட்ட நாட்டு நலன்
அதானி குழுமம் அமெரிக்காவில் செய்ய ஒப்புக்கொண்டுள்ள 10 பில்லியன் டாலர் முதலீடு என்பது, பெயரளவில் அவர்களுடையதாக இருந்தாலும், உண்மையில் அது இந்தியப் பொதுமக்களின் சேமிப்பையும், நாட்டின் பொருளாதார இறையாண்மையையும் உறிஞ்சி அங்கே கொண்டு சேர்க்கப்படும் மக்கள் பணமே ஆகும்.
கென்-பெட்வா திட்டம்: மக்களின் தாகம் தீர்க்கவா? கார்ப்பரேட்டுகளின் தாகம் தீர்க்கவா?
இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சுமார் 10 கிராமங்கள் முழுமையாகவும், பல கிராமங்கள் பகுதியளவிலும் நீரில் மூழ்கும். இதனால் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் (கோண்ட் மற்றும் கோல் பிரிவினர்) தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வெளியேற்றப்படுவர்.
மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு திறமையின் அடையாளமா?
தேசிய தேர்வு முகமை போன்ற ஆணையங்களைக் கலைக்க வேண்டும்; நீட் தேர்வை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் பாசிச மோடி அரசு!
10.25 சதவிகிதம் சர்க்கரைச் சத்து கொண்ட ஒரு டன் கரும்புக்கான சாகுபடி செலவு ரூ.1,820 என்று ஒன்றிய அரசு கணக்கிட்டுள்ளது. ஆனால், ஒரு டன் கரும்பு சாகுபடி செய்ய உண்மையில் ஏறக்குறைய ரூ.3,500 வரை செலவாகிறது என்பதை கரும்பு விவசாயிகளும் உழவர் சங்கங்களும் அம்பலப்படுத்துகின்றன. இம்மோசடியின் மூலம் மோடி அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்குகிறது.
உ.பி: 111 உயிர்களைக் காவு வாங்கிய கனமழை, சூறைக்காற்று
இக்கோரப் பேரிடரால் 26 மாவட்டங்களில் மின்னல் தாக்கியும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உடல் நசுங்கியும் 111 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; 72 பேர் காயமடைந்துள்ளனர்; 227க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன; 179 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

























