அரியானா, மகாராஷ்டிரா: ஒப்பந்த தொழிலாளர்களின் எதிர்காலத்தை அழிக்கும் வாகன தொழிற்சாலைகள்
தானியங்கி வாகன உதிரிப்பாக உற்பத்தித் தொழிற்சாலைகளில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் விரல்களை, கைகளை, சமயங்களில் உயிரையே இழக்கின்றனர் என்கிற செய்தியை வெளிக் கொணர்ந்ததுடன், தொழிற்சாலை நிர்வாகங்களின் மனிதத் தன்மையற்ற லாப வெறியையும் அரசு அதிகார வர்க்கத்தின் தொழிலாளர் விரோதப் போக்கையும் எஸ்.ஐ.ஐ. அறிக்கை புள்ளி விவரங்களுடன் ஆணித்தரமாக நிறுவியுள்ளது.
யா.ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்து! | ஆர்ப்பாட்டம்
நாள்: 22.06.2026, திங்கள் | நேரம்: மாலை 5 மணி | இடம்: யா.ஒத்தக்கடை, நரசிங்கம் சாலை.
கடலூரில் ஹைட்ரோ கார்பன் எடுக்க விண்ணப்பம்! தமிழ்நாட்டை நாசமாக்காதே!
தமிழ்நாடு முழுவதும் கனிம வளங்கள், இயற்கை வளங்களைச் சூறையாடும், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் எவ்வித கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்காதே!
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி எறிந்து கொண்டும், கடற்கரை ஓரத்தில் மீன்பிடி தொழிலில் உள்ள மீனவர்களின் வாழ்க்கையை அழித்தும் அவர்களின் பிணங்களுக்கு மேலே உருவாக்கப்படும் எந்த ஒரு திட்டமும் மக்கள் விரோதத் தன்மை கொண்டதுதான். அந்த அடிப்படையில் இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைகட்ட நிலத்தை இழந்த விவசாயிகள் – 75 ஆண்டுகளாக பட்டா கிடைக்காத...
தற்போது 92 நபர்களுக்கு மட்டும் பட்டா வழங்குவதற்கான அனைத்துப் பணிகளும் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும், மீதமுள்ள 10 நபர்களுக்கான பட்டா வழங்கும் விசயத்தில், தொடர்புடைய வனப்பகுதியின் வன அலுவலர் அனுமதி தராமல் காலதாமதம் செய்து வருவதால், ஒட்டுமொத்தமாக 102 பேருக்கும் வழங்கப்பட வேண்டிய பட்டா விநியோகமும் தற்போதைய சூழலில் முடங்கியுள்ளது.
அரசு மகளிர் கல்லூரிகளில் இடப்பற்றாக்குறை: தனியார்மயத்தால் நசுக்கப்படும் பெண்களின் கல்வி உரிமை!
அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத இந்த நிலைமை, கல்விபுலத்தில் இருந்து பெண்களை வெளியேற்றவே செய்யும். பெயரளவிலான முன்னேற்றம் கூட இல்லாமல் மீண்டும் பெண்களை பழைய ஆணாதிக்க குடும்ப நிலைக்கு இந்த நிலைமை தள்ளும்.
கிரேட் நிகோபார் திட்டம்: அமெரிக்க மேலாதிக்கத்திற்கான அடிமை சேவை!
கிரேட் நிகோபர் என்பது ஒரு நிலம் அல்ல, அது பூமிப்பந்திற்கான உயிர் இருப்பின் அங்கம், அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை – பண்பாட்டின் பிண்ணிப்பிணைந்த ஒரு பகுதி. இதனை ஏகபோக போட்டிக்காகவும், அம்பானி – அதானிகளின் வேட்டைக்காகவும் அழிக்கத் துடிக்கும் பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு எதிராக அனைத்து தரப்பிலும் இருந்து குரலெழுப்ப வேண்டும்.
பருத்தி இறக்குமதி வரி ரத்து: விவசாயிகளைப் பலிகொடுக்கும் அமெரிக்க அடிமை மோடி அரசு!
2,000 ஏக்கர் பரப்பளவில் அதிக மானியம் பெற்று விவசாயம் செய்யும் அமெரிக்க கார்ப்பரேட் விவசாயிகளுடன் கடன் வாங்கி விவசாயம் செய்கின்ற இந்திய விவசாயிகளால் போட்டியிட முடியாது. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைத் தனது விவசாயப் பணப்பயிர் பொருளாதாரத்தின் கணிசமான பங்கை இழக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது பாசிச மோடி அரசு.
ஆந்திரா: எஸ்.இ.ஐ.எல். அனல் மின் உற்பத்தி நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!
மே 22 தொடங்கிய வேலைநிறுத்த போராட்டம் பத்து நாட்களைக் கடந்த நிலையில் இதுவரை நிர்வாகம் இப்போராட்டம் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. பேச்சுவார்த்தை முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளோ அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அம்பானி செல்வம் கொழிக்க பெட்ரோல், டீசல் ஏற்றுமதி வரி குறைப்பு!
ரிலையன்ஸ் நிறுவனம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து, அதனைத் தன்னுடைய ஜாம்நகர் ஆலையில் சுத்திகரித்து, எரிபொருட்களாக அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அம்பானி செல்வம் கொழிப்பதற்காகவே எரிபொருட்களுக்கான ஏற்றுமதி வரியானது தற்போது மோடி அரசால் குறைக்கப்பட்டுள்ளது.
பி.எஃப்.ஏ.எஸ் நச்சு ரசாயன ஆலை: ஏகாதிபத்தியங்களின் குப்பைத் தொட்டியாகி வரும் இந்தியா!
“எந்தவொரு சமூகமும் தங்களின் வேலைவாய்ப்புக்காகத் தங்கள் ஆரோக்கியத்தையோ, உயிரையோ பலி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு ஆபத்து என்று நிராகரித்த ஒரு நச்சுப் பொருளை, நம் நாட்டிற்குள் கொண்டு வந்து ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மீண்டும் விற்க அனுமதிக்க முடியாது.”
தூய்மைப் பணியாளர் மாரியம்மாள் மீதான தாக்குதல்: காண்ட்ராக்ட்மயத்தை ஒழிக்காமல் தீர்வில்லை
தொழிலாளர்களை மிகக் கடுமையான முறையில் சுரண்டும் காண்ட்ராக்ட்மயத்தை - தனியார்மயத்தை ஒழிப்பதே இதற்கான தீர்வாகும். மாணவர்கள், இளைஞர்கள், மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் இதற்கான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
உ.பி, ஹரியானாவைத் தொடர்ந்து, ராஜஸ்தானிலும் தொழிலாளர் போராட்டம் மாபெரும் வெற்றி!
வேறு வழி இல்லாமல் அரசுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு நெட்டித் தள்ளப்பட்டது நேப்பினோ நிர்வாகம். பேச்சுவார்த்தை முடிவில் தொழிற்சங்க உறுப்பினர் ஆறு பேர் இடை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்வதாகவும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைக் கூடிய விரைவில் முடித்துத் தருவதாகவும் ஒப்புக்கொண்டது. உடனடியாக தற்காலிகப் பொருளாதாரப் பலன்களாக சில கூடுதல் படிகளைத் தருவதாகவும் ஏற்றுக் கொண்டது.
சேலம் – வாழப்பாடி: மூடப்பட்டுள்ள கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையை மீண்டும் பயன்பாட்டுக்...
சின்ன கிருஷ்ணாபுரத்தில் மூடிக் கிடக்கும் கூட்டுறவு சங்க தென்னை நார் தொழிற்சாலையைச் சீரமைப்பதன் மூலம், விவசாயிகளுக்குப் பலனும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இது வாழப்பாடி பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
நீட் தேர்வு என்னும் தூக்குக் கயிறு
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த ஆண்டிலிருந்தே பல்வேறு காரணங்களால் மாணவர் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

























