Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 617

புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று நூல்கள் சில

1

இந்திய இழிவுஇந்திய இழிவு

– அருந்ததி ராய்
தமிழில் நலங்கிள்ளி

வெளியீடு : கீழைக்காற்று

விலை : ரூ 25
பக்கங்கள் : 32

சாதி அமைப்பை
அழிக்க முடியுமா?

நாம் நமது மண்டலத்தில்
விண்மீன் நிலைகளை
மாற்றியமைக்கத் துணிவு
காட்டாத வரை,

புரட்சியாளர்கள் எனச்
சொல்லிக் கொள்வோர்
தங்களைப்
பார்ப்பனியத்தின் தீவிர
விமர்சகர்களாக மாற்றிக்
கொள்ளாதவரை,

பார்ப்பனியத்தைப் புரிந்து
கொண்டோர் தங்களின்
முதலாளித்துவ
விமர்சனத்தைக்
கூர்மைப்படுத்திக்
கொள்ளாத வரை

சாதியை அழிக்க முடியாது.

 

bharathi-avalamபாரதி அவலம்

– மருதையன்

வெளியீடு : கீழைக்காற்று

விலை : ரூ 30
பக்கங்கள் : 48

கொண்ட கொள்கைக்காக…

நஞ்சருந்திச் செத்தான்
சாக்ரடீஸ்.

தூக்கில் தொங்கினான்
பகத்சிங்.

போர் வீரர்களுடன் வீரனாக
செத்துக் கிடந்தான்
திப்பு சுல்தான்.

கண்ட துண்டமாக
வெட்டிக் கொல்லபட்டான்நக்சல்பாரிக் கவிஞன்
சராஜ் தத்தா.

இவர்களது மரணம் எதுவும்
அவலமாகக் கருதப்படவில்லை
சித்தரிக்கப்படுவதுமில்லை…

உலகின் அழகு உழைக்கும் வர்க்கம்

துரை. சண்முகம்

working-class-beautyவிலை : ரூ 20
பக்கங்கள் : 46

சுரண்டும் வர்க்கத்திற்கு
எதிரானப் போராட்டத்தில்
தொழிலாளிக்கு கவிதையும் ஒரு ஆயுதமே!

முரண்படும் விதிகளின்
முடிச்சுகள் அவிழ்த்து
உலகை இயங்க வைக்கும்
தொழிலாளியே…

உலகையே கவிதையாக்கும்
உன்னதப் படைப்பாளி
உனக்கின்றி கவிதை யாருக்கு!

 

 

 

 

 

 

 

paaliyal-vanmurai

பாலியல் வன்முறை – யார் குற்றவாளி

வெளியீடு – கீழைக்காற்று
விலை : ரூ 80/-
பக்கங்கள் : 144

படுக்கவும், சுகிக்கவும்
நீ சிதைக்கவுமோ பெண்?

மனித இனத்தையே
படைத்தவள், காத்தவள் பெண்ணடா!

அவள் மட்டும்
ஆண்வர்க்கம் வெறுத்திருந்தால்
நீ அடிவயிற்றிலேயே மண்ணடா!

ஞானிகள்…
விஞ்ஞானிகள்…ஏன்
உன் கடவுளுக்கே
“ஃபிரம் அட்ரஸ்” பெண்ணடா!

புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் கிடைக்குமிடம்

எண்: 80-81 (முதல் நுழைவாயில்)

38-வது சென்னை புத்தகக்காட்சி
சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி,
நந்தனம், சென்னை – 35

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை

 

கருப்பு பணம் : அரசியல் உண்மைகள் – நூல் அறிமுகம்

2

ருப்புப் பணம் என்பது சட்ட விரோதமான முறையில் சம்பாதித்த பணம், அரசியல்வாதிகள் ஊழல்களின் மூலம் கொள்ளையடித்த பணம் என்பதும் பணக்காரர்களின் நிலவரை பெட்டிகளிலும், வெளிநாட்டு வங்கிகளிலும் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்பதுவுமே பாமரர்கள் மட்டுமின்றி படித்தவர்களிடமும் நிலவும் கருத்தாகும்.

கீழைக்காற்று வெளியீட்டகம் நூலாகக் கொண்டு வந்துள்ள கருப்பு பணம்: அரசியல் உண்மைகள் என்ற தலைப்பிலான கட்டுரைகள் கருப்புப் பணம் புழங்கும் மாய உலகத்திற்குள் வாசகரை அழைத்து சென்று அதன் உருவாகத்தையும் கையாளப்படும் விதங்களையும் அது குடி கொண்டிருக்கும் இடங்களையும் திரை விலக்கிக் காட்டுகிறது.

கருப்புப் பணம் என்பது என்ன, அது எங்குள்ளது, யார் கட்டுப்பாட்டில் உள்ளது, எப்படி கையாளப்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கின்றன இந்நூலில் உள்ள கட்டுரைகள். மேலும், கணக்கு காட்டாமல் கொள்ளையடித்த பணம் கருப்பை வெள்ளையாக்குவதற்கு சட்ட பூர்வமாகவே இருக்கும் வழிமுறைகள் மூலம் வெள்ளையாக்கி சுழற்சியில் விடப்படுகிறது என்பதையும் விளக்குகிறார் ஆசிரியர்.

பொருளாதாரம் கடினமானது, மக்களுக்கு புரியாது என்ற பெயரில் கருப்பு பணம் பற்றி தெளிவில்லாத மேம்போக்கான கருத்துக்களை வெளியிட்டு ஊடகங்களும் கூட மக்களை அறியாமையில் நீடிக்க செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில் கருப்புப் பணம் பற்றி எளிமையாக புரிந்து கொள்ளும் வகையிலான கட்டுரைகளை தொகுத்து தருகிறது இந்நூல்.

தேர்தல்களில் வாக்குகளை விலைக்கு வாங்குவதற்கு மட்டும் இந்திய ‘ஜனநாயகத்தில்’ பங்காற்றி வந்த கருப்பு பணம் 2011-ம் ஆண்டில் முக்கிய நிகழ்ச்சி நிரலுக்குள் வந்த பின்னணியை விளக்குகிறது இந்நூல்.

2G, ஆதர்ஷ், காமன்வெல்த் என பல்வேறு ஊழல் விவகாரங்கள் அம்பலமானதாலும், விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார நெருக்கடிகளாலும் உருவான மக்கள் கொந்தளிப்பை ஆற்றுப்படுத்த கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவை வளப்படுத்த வேண்டும் என்று காந்தியவாதி அன்னா ஹசாரே முதல் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம் தேவ் வரை கருப்புப் பணம் பற்றி பேசாதோரே இல்லை.

மக்கள் கொந்தளிப்பை அறுவடை செய்துகொள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவை வளப்படுத்துவோம் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது, பா.ஜ.க.

2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு வந்து நாட்டு மக்களின் வங்கிக்கணக்குகளில் தல பல லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்று சவடால் அடித்தார், மோடி. ஆனால் இன்று வரை வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய முதலாளிகளின் பட்டியலை வெளியிடக்கூட மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு முன்வரவில்லை.

இந்தியப் பொருளாதாரம் ஏறு முகத்தில் இருப்பதாகவும், கூடிய விரைவிலேயே இந்தியா வல்லரசாகிவிடும் என்றும் மேட்டுக்குடி வர்க்கம் சவடால் அடித்து வரும் நிலையில் செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பிய இந்திய அரசால் இணைப் பொருளாதாரத்தில் புழங்கும் பல பத்து லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலா கருப்புப் பணத்தில் ஒரு பைசாவைக் கூட மீட்க முடியவில்லை.

இப்போது மட்டுமல்ல எப்போதும் இவர்களால் கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர முடியாது என்று 2011-ல் வெளியான கட்டுரையில் விளக்கப்பட்டிருப்பதை நிரூபிக்கும் விதமாக, முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் கருப்புப் பண பட்டியலை வெளியிட மறுத்ததற்காக நாடாளுமன்றத்தில் சண்டமாருதம் செய்த பா.ஜ.க, ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் பாடிய அதே பல்லவியை பாடுகிறது. ஊடகங்களின் தாளம் மட்டும் வேறாக உள்ளது.

அன்று, ‘ஊழல் பெருச்சாளிகளான காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியின் அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டு வங்கிகளில் பணம் இருப்பதால் தான் அவர்கள் பட்டியலை வெளியிடவில்லை’ என்பது போல பிம்பத்தை ஏற்படுத்தின, அன்று துக்ளக் உள்ளிட்ட பத்திரிக்கைகள். அதே பத்திரிகைகள் இன்று கருப்பு பண விவகாரத்தில் காங்கிரசின் விளக்கங்களை தாங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என பொழிப்புரை வழங்குகின்றன. இவர்கள் இப்படி குரங்கினும் கேவலமாக பல்டி அடிப்பது ஏன் என்பதையும் இந்த நூலிலிருந்து புரிந்து கொள்ளலாம்..

நிலப்பதிவின் போது முத்திரைத்தாள் வரியை குறைக்க கொஞ்சம் வெள்ளையாகவும், மீதி கருப்பாகவும் கைமாற்றப்படும் என்று ‘அந்நியன்’ படப் பாணியிலும், கருப்புப் பணம் அத்தனையும் வெளிநாட்டு வங்கிகளில் கட்டுகட்டாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று ‘கந்தசாமி’ பட பாணியிலும் புரிந்து வைத்திருப்போர் கட்டாயம் படித்து புரிந்து கொள்ள வேண்டிய நூல் இது.

karuppu-panam karuppu-panam-back

கருப்புப் பணம் – அரசியல் உண்மைகள்

வெளியீடு : கீழைக்காற்று வெளியீட்டகம்

விலை : ரூ 40
பக்கங்கள் : 56

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

எண்: 80-81 (முதல் நுழைவாயில்)

38-வது சென்னை புத்தகக்காட்சி
சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி,
நந்தனம், சென்னை – 35

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை

TCS ஆட்குறைப்பு : HR உரையாடல் பதிவின் உரை வடிவம்

2

டி.சி.எஸ் நிறுவனம் பல ஆயிரம் ஊழியர்களை திட்டமிட்டு வேலை நீக்கம் செய்து வருவது, அது தொடர்பாக ஐ.டி ஊழியர்கள் மத்தியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செய்து வரும் பிரச்சாரம், பு.ஜ.தொ.முவின் ஐ.டி ஊழியர் பிரிவின் சார்பாக சென்னையில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் கூட்டம் இவை தொடர்பான செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் வினவில் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன.

“இது வழக்கமான நடைமுறைதான். இப்படி ஒரு ஆட்குறைப்பு நடவடிக்கையே நடைபெறவில்லை” என்று டி.சி.எஸ் நிறுவனம் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் மனித வளத்துறை அதிகாரிகளுடனான தனது உரையாடலை பதிவு செய்துள்ளதாக ஆடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி பரவலாக விவாதிக்கப்பட்டது.

வினவு வாசகர்களுக்காக, இந்த உரையாடலின் தமிழ் வடிவத்தை கீழே தருகிறோம். அதன் ஆங்கில உரை வடிவமும் தரப்பட்டுள்ளது.

இந்தப் பதிவு “1 மாதத்துக்குப் பிறகு வேலை இழப்பீர்கள்” என்று ஒரு ஊழியரிடம் மனித வளத்துறை அதிகாரிகள் அறிவிக்கும் சந்திப்பில் செய்யப்பட்டுள்ளது என்று ஊகிக்க முடிகிறது. ஒரு ஆண் மனித வளத்துறை அதிகாரி ஆரம்பித்து வைக்கும் இந்த உரையாடலில், குறிப்பிட்ட கட்டத்தில் இன்னொரு பெண் அதிகாரியும் இணைந்து கொள்கிறார்.

https://www.youtube.com/watch?v=KQSn2mSk-VE

இந்த நிலைமையை எதிர்கொண்டிருக்கும் பெண் ஊழியர் முதலில் தான் வேலையிலிருந்து நீக்கப்படுவதற்கான நடைமுறைகளை, மனித வளத்துறை அதிகாரி ஒரு எந்திரம் போல விளக்குவதை பொறுமையாக கேட்டுக் கொள்கிறார். தன் எதிரில் அமர்ந்திருப்பவரின் வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற அக்கறையோ, ஆதங்கமோ அந்த அதிகாரியின் குரலில் துளிக்கூட இல்லை.

செயல்பாட்டுத் திறன் அடிப்படையில் இந்த வேலை நீக்கம் செய்யப்படுவதாக கூறப்படுவதை பெண் ஊழியர் மறுதலித்து தான் திறமையாகவே செயல்பட்டுள்ளதாக நிரூபிக்க முயற்சிக்கிறார். “உங்களை திறமை குன்றியவர் என்று முத்திரை குத்தவில்லை” என்று மறுதலிக்கும் பெண் அதிகாரி, “நேற்று வரை C மதிப்பீடு என்பது போதுமானதாக இருந்தாலும், இன்றைய சூழலில் சிலரை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் A, B மதிப்பீடு பெற்றவர்களை வைத்துக் கொண்டு C பெற்றவர்களை விடுவிக்கத்தான் வேண்டும்” என்று குறிப்பிட்டு, “இதற்கு மேல் விவாதிக்க எதுவும் இல்லை” என்கிறார். “இதை விளக்கிச் சொல்ல மட்டும்தான் எங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. உங்களைப் பற்றிய குறிப்பான விபரங்களை வெளிப்படுத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை, இந்த முடிவு உயர்மட்டங்களில் எடுக்கப்பட்டுள்ளது” என்கிறார்.

டி.சி.எஸ் ஆட்குறைப்புஇந்த உரையாடலை பதிவு செய்த ஊழியரும் சரி, பிற டி.சி.எஸ் ஊழியர்களும் சரி, ஐ.டி துறையில் பணியாற்றும் பெரும்பான்மையானவர்களும் சரி இந்த ஆட்குறைப்பை எதிர்ப்பதற்கான வாதங்களை கார்ப்பரேட்டுகள் வகுத்த விதிகளுக்குள்ளிருந்தே பேசுகிறார்கள்.

“நான் திறமையாகத்தானே வேலை செய்தேன்” என்பது, “திறமையாக வேலை செய்யாதவர்களை நீக்கிக் கொள்” என்பதையும் உள்ளடக்கியிருக்கிறது. அதாவது, ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் அல்லது பலர் C, D மதிப்பீடு பெற்றே தீர வேண்டும் என்ற அப்ரைசல் முறையின் கீழ், தான் வேலை நீக்கம் செய்யப்படுவது குறித்து முறையிடும் அதே நேரத்தில் தன் சக ஊழியர் வேலை நீக்கம் செய்யப்படுவதை நியாயப்படுத்துவதில் வந்து முடிகிறது.

இந்தக் கலாச்சாரத்தை ஐ.டி நிறுவனங்கள் மட்டுமின்றி, பிற கார்ப்பரேட்டுகளும் ஊழியர்கள் மத்தியில் வளர்த்திருகின்றன. வேலையை கூட்டாக, குழுவாக செய்யும் தேவைக்கு மாறாக, குழு உறுப்பினர்களிடையே போட்டியையும் பேதத்தையும் உருவாக்கி ஒருவருக்கொருவர் எதிரி என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றன. மற்றவர்களை விட தனக்கு அதிக சம்பளம், கூடுதல் சம்பள உயர்வு, வெளிநாடு போகும் வாய்ப்புகள் பிற ஊழியர்களிடமிருந்து தம்மை பிரித்துக் காட்டுவதை பெருமையாக ஏற்றுக் கொள்ளச் சொல்லும் இந்த கலாச்சாரம்தான் இந்த ஆட்குறைப்பையும் நியாயப்படுத்த வைக்கிறது.

அப்ரைசல் முறையை ஒழித்துக் கட்டுவதன் மூலம், சேர்ந்து வேலை செய்பவர்களை பிரித்து ஆளுவதை எதிர்ப்பதன் மூலம்தான் இந்த பிரச்சனைக்கான தீர்வு நோக்கி நாம் நகர முடியும்.

மனித வளத்துறை அதிகாரி : மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இன்றிலிருந்து முப்பது நாட்களுக்குப் பிறகு நீங்கள் இங்கே பணியில் தொடர முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இது தொடர்பான நடைமுறையையும் இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதையும் உங்களுக்கு விளக்கவிருக்கிறோம். அதை கேட்டுக் கொள்ளுங்கள், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்.

இந்த நடைமுறை இன்று (ஜனவரி 8) தொடங்கி 30-வது நாள் பிப்ரவரி 7-ம் தேதி வருகிறது. அதாவது நிறுவனத்தில் உங்களுக்கு கடைசி நாள் அது. 7-ம் தேதி சனிக்கிழமையில் வருவதால் நீங்கள் லாயிட்ஸ ரோட் அலுவலகத்திற்கு 9-ம் தேதி போகலாம்.

வேறு இடங்களில் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வதற்காகவும், வெளியில் ஒரு நல்ல வேலையை தேடிக் கொள்வதற்கு இந்த 30 நாட்கள் காலம் உங்களுக்கு தரப்படுகிறது. நீங்கள் நிறுவனத்திற்கு தினமும் வந்து அடையாள அட்டையை தேய்த்து 9 மணி நேர வேலைக் கணக்கு காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. இது தொடர்பாக விடுப்பு கேட்டு விண்ணப்பிக்கவும் தேவையில்லை. சம்பளத்துடன் கூடிய இந்த 30 நாட்கள் உங்களுக்கு நேரடியாக தரப்படுகிறது.

ஊழியர் : ஓக்கே

மனித வளத்துறை அதிகாரி : இதுபோக இரண்டு மாத மொத்த சம்பளமும் தரப்படும். ஆக முப்பது நாள் சம்பளத்துடன் கூடுதல் இரண்டு மாத சம்பளம் உங்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். இந்த நிதிஆண்டுக்கான மருத்துவக் காப்பீட்டுக்கு ஏற்கனவே பணம் செலுத்தியிருப்பீர்கள். மார்ச் 31 வரையில் நீங்கள் அந்த திட்டத்தின் பலனை அனுபவித்துக் கொள்ள முடியும். இதுவரை ஆன செலவுகளை நீங்கள் கணினியில் சேர்த்து விடலாம். உங்கள் கணக்கு பிப்ரவரி 7 வரை செயல்பாட்டில் இருக்கும் அதற்கு பிறகு ஏதாவது செலவு வந்தால், அவற்றுக்கான பில்களை கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். “பிரிவு” துறையினரை நீங்கள் பிப்ரவரி 9-ம் தேதி சந்திக்கும் போது உங்களுக்கு வர வேண்டிய பாக்கித் தொகைகளை எப்படி பெற்றுக் கொள்வது என்று அவர்கள் சொல்வார்கள்.

டிசிஎஸ நிறுவனத்துக்கு சொந்தமான லேப்டாப், போட்டான், அல்லது நூலக புத்தகங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றனவா?

ஊழியர் : இல்லை.

டி.சி.எஸ் ஆட்குறைப்புமனித வளத்துறை அதிகாரி : இந்த மாத சம்பளத்தை வழக்கம் போல பெற்றுக் கொள்வீர்கள். அதுபோக ஏழு நாட்கள் பாக்கி உள்ளது. அதுவும், விடுப்பினை பணமாக்கும் வகையில் வரும் பணமும், இரண்டு மாத சம்பளமும் உடனடியாக தரப்படும். இது உங்கள் இறுதி நாளில் இருந்து 15 முதல் 20 நாட்களுக்குள் உங்களது கணக்கில் சேர்க்கப்படும், உங்களுக்கு 7-ம் தேதி கடைசி நாள். நீங்கள் 9-ம் தேதி அங்கே போக வேண்டும்.

ஊழியர் : ஒன்பதாம் தேதி? ஞாயிற்றுக்கிழமை இல்லையா?

மனித வளத்துறை அதிகாரி : 9-ம் தேதி திங்கள்கிழமை. 7 பிப்ரவரி சனிக்கிழமை. எனவே 9-ம் தேதி திங்கள். அதிலிருந்து 15 நாட்கள், அதிகபட்சம் 20 நாட்களில் இறுதி கணக்கு தீர்க்கப்பட்டு பணம் உங்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்து விடும். அவ்வளவுதான். இதுதான் உங்கள் கடிதம். இதை நீங்கள் வைத்துக் கொண்டு நகலில் கையொப்பம் இடுங்கள்.

ஊழியர் : (நான் சந்திக்க வேண்டிய) “பிரிவு” துறை அலுவலர் யார்?

மனித வளத்துறை அதிகாரி : கஸ்தூரி அல்லது கோபிநாத்தை தொடர்பு கொள்ளவும்

ஊழியர் : அவர்கள் எங்கே இருப்பார்கள்?

மனித வளத்துறை அதிகாரி : லாயிட்ஸ் சாலை. உங்களுக்கு லாயிட்ஸ் சாலை அலுவலகம் தெரியும்தானே?

ஊழியர் – நான் அங்கே போனதில்லை.

மனித வளத்துறை அதிகாரி : உங்களுக்கு மவுண்ட் ரோடு தெரியும்தானே. அமெரிக்க துணைத் தூதரகத்தை அடுத்து அதை ஒட்டிச் செல்லும் அவ்வை சண்முகம் சாலைதான் முன்னால் லாயிட்ஸ் சாலை என்று அழைக்கப்பட்டது. அதற்கு உள்ளே சென்றால் இடது புறமாக வருவது டிசிஎஸ் அலுவலகம்.

ஊழியர் : சரி. அப்படியானால் 9-ம் தேதி நான் கஸதூரி அல்லது கோபிநாத்தை சந்திக்க வேண்டும்.

மனித வளத்துறை அதிகாரி : ஆம். நீங்கள் அவர்களை பார்த்து விபரங்களை சொல்லுங்கள். அடையாள அட்டையை அங்கே ஒப்படைத்து விடுங்கள். நீங்கள் பிரிந்து செல்வதற்கான நடைமுறைகளை அவர்கள் செய்வார்கள். நீங்கள் நிரப்ப வேண்டிய படிவங்களை நிரப்ப உதவி செய்வார்கள்.

ஊழியர் : சரி. கையெழுத்திடுவதற்கு முன் இதற்கு என்ன காரணம் என நான் தெரிந்து கொள்ளலாமா?

மனித வளத்துறை அதிகாரி : பல காரணங்கள் இருக்கின்றன. நீங்கள் பொருத்திப் பார்க்கக் கூடிய ஒரு காரணம், செயல்பாட்டு மதிப்பீடு. இது தொடர்பாக கணக்கில் எடுக்கப்பட்ட முக்கியமான காரணிகளில் அதுவும் ஒன்று.

டி.சி.எஸ் ஆட்குறைப்பு
“அடுத்த பிரமிடை உருவாக்கத்தானே வேண்டியிருக்கிறது”

அதைத் தவிர, அடுத்த மட்டத்துக்கு உயர்த்துவதற்கான உங்கள் திறமைகளின் பொருத்தத்தையும் இணைத்துப் பார்க்கலாம். குறிப்பிட்ட குழுவில் நிறைய A, B மதிப்பீடு வாங்கியவர்கள் இருந்திருக்கலாம். அந்தச் சூழலில் (உங்களை) அடுத்த மட்டத்துக்கு உயர்த்துவது சவாலாக இருந்திருக்கும். மொத்தத்தில், உங்களுக்கு தேவையான வாய்ப்புகளை வழங்க முடியாமல் போயிருக்கும். இவை ஒரு சில காரணிகள்தான். இவற்றுக்கு மேலே, உயர் மட்ட அதிகாரிகளின் இந்த முடிவில் இன்னும் பல காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. உங்கள் பிரிவின் மனித வளத்துறை அதிகாரியும், உங்கள் பிரிவின் பொறுப்பாளரும் இதில் பங்களித்திருக்கிறார்.

ஊழியர் : அப்படியானால், இது ஒரு கூட்டு முடிவு. யார் யாரை தூக்க வேண்டும் என்பதில் இவர்கள் எல்லோரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மனித வளத்துறை அதிகாரி : ஒரு பெரிய குழுவே இந்த பொறுப்பில் உள்ளது. உச்சமட்டத்திலிருந்து, உங்கள் உடனடி மேலாளர், மண்டல மேலாளர், துறை வாரியான மேலாளர் முதல் உங்கள் குழுத் தலைவர் மட்டம் வரை ஒவ்வொருவரும் இப்படி ஆட்களை பொறுக்கி எடுக்க வேண்டியிருந்தது. அடுத்த பிரமிடை உருவாக்கத்தானே வேண்டியிருக்கிறது. அதுதான், இப்போது நடந்து கொண்டிருப்பது.

ஊழியர் : அது சரி!. ஒரு குறிப்பிட்ட வேலையில் ஈடுபட்டிருக்கும் ஊழியரை எடுத்துக் கொண்டால் அவருக்கு மேலே இருக்கும் கண்காணிப்பாளர்தான் அவரது பணித்திறனைப் பற்றி நன்றாக அறிந்திருப்பார் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். கடந்த ஒன்பது ஆண்டுகளாக எனது பணித்திறன் சார்ந்த மதிப்பீட்டை எடுத்துப் பார்த்தால் நான் ஒரு பணித்திறன் குறைந்த ஊழியராக இருக்கவில்லை என்றே நினைக்கிறேன். ஏ மதிப்பீடு பெற்றிருக்கிறேன், பி மதிப்பீடு பெற்றிருக்கிறேன், சி மதிப்பீடும் பெற்றிருக்கிறேன். ஒட்டுமொத்தத்தில் நான் எதிர்பார்க்கப்பட்ட அளவில் பணியாற்றியிருக்கிறேன். நான் ஒரு போதும் டி மதிப்பீடு பெற்றதில்லை. வெளிநாட்டில் இருந்த என் கணவருடன் இணைவதற்காகவும், பேறுகால விடுப்புக்காகவும் நான் ஊதியமில்லா விடுப்பில் சென்றது உண்மைதான்.

இப்போது நடப்பது என்னவென்றால், இதே போன்ற கடிதங்களை பெற்றுக் கொண்ட பிற ஊழியர்களையும் வைத்துப் பார்க்கும் போது இது நிச்சயமாக பணித்திறன் அடிப்படையில் செய்யப்படவில்லை. ஏனென்றால், மிகத் திறமையாக பணியாற்றி சாதித்தவர்களுக்கும் இந்த கடிதம் வழங்கப்பட்டிருப்பதை நான் பார்க்கிறேன், அது சரியில்லை. அவர்களிடம் நீங்கள் திறமையற்றவர் என்று சொல்லாமலாவது இருக்கலாம். அது அவர்களது மன உறுதியை முழுமையாக குலைத்து விடும். நான் வெளிநாட்டில் (ஆன்-சைட்) வாடிக்கையாளர் நிறுவனத்தில் 4 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். நான் எவ்வளவு சிறப்பாக பணி புரிந்தேன் என்று அந்நிறுவன மேலாளர்கள் எனக்குக் கொடுத்த சான்றிதழ்கள் என்னிடம் உள்ளன.

மனித வளத்துறை அதிகாரி : நீங்கள இவ்வளவு தீவிரமா பார்ப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா, சரியாக பணியாற்றாதவர்களின் பட்டியலில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதையே நான் குறிப்பிட்டிருக்க மாட்டேன்.

ஊழியர் : அது சரி!, இது தொடர்பான காரணங்களில் முதலில் நீங்கள் பட்டியலிட்டது, செயல்பாட்டுத் திறன் பற்றிதான்.

மனித வளத்துறை அதிகாரி : செயல்பாட்டு மதிப்பீடும் ஒரு காரணி.

ஊழியர் : என்னைப் பொறுத்தவரை நிச்சயமா அது ஒரு காரணி இல்லை. நான் ஒரு தடவை கூட D மதிப்பீடு வாங்கியதில்லை. இது முதல் விஷயம். எனக்கு இதை விட நல்ல மதிப்பீடு கிடைக்காததற்கு காரணம், நான் ஊதியமில்லா விடுப்பில் இருந்ததுதான். அப்படி போனதற்கு ஒரே காரணம் அதுதான். நான் ஒரு குழுவின் உறுப்பினராக முறையாக பணியில் ஈடுபட்டிருந்த மற்ற எல்லா காலகட்டங்களிலும நான்தான் மிகச் சிறந்த ஊழியராக இருந்திருக்கிறேன். அதனால், நீங்கள் இப்படி சொல்லும் போது அது உண்மையிலேயே புண்படுத்துகிறது.

மனித வளத்துறை அதிகாரி : தொடர்ந்து C வாங்கியிருக்கிறீர்கள். சரிதானா?

ஊழியர் : கடைசியாக B, C, C. அதாவது 3 B-க்கள், இரட்டை C-க்கள் என்று சொல்லலாம்.

மனித வளத்துறை அதிகாரி : உங்களைப் பற்றிய விபரங்களை நன்கு பரிசீலித்து விவாதித்து முடிவெடுத்திருக்கிறோம்.

ஊழியர் : முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது என்று எனக்குத் தெரிகிறது. நீங்கள் அதை மாற்றப் போவதில்லை என்றும் எனக்குத் தெரியும். ஒருவரிடம் அவரது செயல்பாடு குறிப்பிட்ட அளவுக்கு இல்லை என்று சொல்வதற்கு முன்பு நீங்கள்…..

பெண் மனித வளத்துறை அதிகாரி : உரையாடலில் நீங்கள் செயல்பாடு குன்றியவர் என்று எங்குமே குறிப்பிடவில்லை.

ஊழியர் : ஆனால், அதுதான் காரணி.

மனித வளத்துறை அதிகாரி : அது செயல்பாடு, அவர் செயல்பாட்டுக் குறைவு என்று சொல்லவில்லை. உங்களை செயல்பாடு குன்றியவர் என்று நாங்கள் முத்திரை குத்துவதாக நினைக்காதீர்கள். உங்கள் விபரங்களை நாங்கள் பார்த்தோம்.

ஆரம்ப நாட்களில் நன்கு பணியாற்றியிருக்கிறீர்கள், அதில் சந்தேகம் இல்லை. இப்போதும் ஒருவேளை நீங்கள் நன்றாகத்தான் வேலை செய்கிறீர்கள். ஆனால், சென்ற 3 ஆண்டுகளைப் பார்த்தால், C மதிப்பீடு மோசமானது என்று சொல்லவில்லைதான், அது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது என்ற வகையில் அது நல்ல விஷயம். ஆனால், குறிப்பிட்ட மட்டத்தில் ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது அதை ஒரு காரணியாக எடுத்துக் கொள்கிறோம். A-க்களையும், B-க்களையும் தக்க வைத்துக் கொள்ள விரும்புவது இயல்புதானே. ஏதோ ஒரு விஷயத்தில் ஏதோ ஒரு மட்டத்தில் அவர்கள் C மதிப்பீடு பெற்றவர்களை விட அதிகமாக வேலை செய்திருக்கிறார்கள். அந்த மதிப்பீடு மட்டத்தில் குறிப்பிட்ட அளவு திறமை இருக்கிறது என்றுதான் பொருள்.

ஊழியர் : போன தடவை எனக்கு ஏன் C கிடைத்தது என்று நான் சொல்ல முடியும். ஏனென்றால், நான் ஆன்-சைட்டிலிருந்து ஆஃப்-ஷோருக்கு வந்திருந்தேன். பொதுவான போக்கு என்னவென்பது உங்களுக்கே தெரியும்.

பெண் மனித வளத்துறை அதிகாரி : உங்களுக்கு பதவி உயர்வின் போது இது குறித்து உங்கள் மேலாளருடன் நீங்கள் ஏன் பேரம் பேசவில்லை.

ஊழியர் : அப்படி எந்த வாய்ப்பும் எங்களுக்கு கிடையாது.

பெண் மனித வளத்துறை அதிகாரி : நாம் இது பற்றி விவாதிக்கப் போவதில்லை.

ஊழியர் : நான் இதை விவாதிக்கவில்லை. முடிவு செய்யப்பட்டு விட்டது என்று எனக்குத் தெரிகிறது.

பெண் மனித வளத்துறை அதிகாரி : ஆன்-சைட்டிலிருந்து வந்தவர்களுக்கும் A, B கிடைப்பதும் உண்டு. நமக்குக் கிடைத்ததை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். எதிர்காலத்திலாவது, நீங்கள் உறுதியாக, நான் ஆன்-சைட்டில் இருந்திருக்கிறேன். போதுமான அளவுக்கு வேலை செய்திருக்கிறேன். எனக்கு A அல்லது B கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லலாம்.

ஊழியர் : நான் எனக்கு தரப்பட்ட மதிப்பீட்டை நிராகரித்திருக்கிறேன். ஆனால். மனித வளத்துறை அதிகாரியோ, என் குழுவில் இருந்த வேறு யாருமோ எதுவுமே செய்ய முடிந்ததில்லை. எல்லோருமே, நீங்கள் ஆன்-சைட்டிலிருந்து ஆஃப்-ஷோர் வருவதால் இதுதான் உங்களுக்கு கிடைக்கும் என்பார்கள்.

பெண் மனித வளத்துறை அதிகாரி : அப்படி எந்த மனித வளத்துறை அதிகாரியும் சொல்ல மாட்டார்.

ஊழியர் : நான இதை முயற்சித்து பார்த்திருக்கிறேன் மேடம். என்னுடைய முதல் மதிப்பீட்டின் போதே என்னுடைய மேலாளர் எனக்கு 4 கொடுத்திருந்தார். ஆனால், அதை மாற்றுவதற்கு பல சிக்கல்கள் இருந்தன. முதல் ஆண்டிலும் சரி, கடைசி ஆண்டிலும் சரி இதை நான் செய்திருக்கிறேன். எனக்கு தெரியும் அது எப்படி நடக்கிறது என்று.

பெண் மனித வளத்துறை அதிகாரி : நானும் பல நேரங்களில் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். ஆனால், அது பற்றி நாம் இங்கு பேசவில்லை. நாங்கள் யாரையும் மோசமான செயல்பாட்டாளர் என்று முத்திரை குத்தவில்லை. இப்போதைக்கு நிலைமையைப் பார்க்கும் போது, மட்டத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல காரணிகளை வைத்துப் பார்க்கும் போது, கூடவே செயல்பாட்டுத் திறனும் ஒரு காரணி….

ஊழியர் : மட்டத்தை உயர்த்துவது என்றால் என்ன பொருள், எனக்கு புரியவில்லை.

பெண் மனித வளத்துறை அதிகாரி : உங்களைப் பற்றிய குறிப்பான விபரம் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஒவ்வொருவருக்கும் குறிப்பான தகவல் என்னிடம் இல்லை. அது ரகசியமான விபரம். எல்லா மட்டங்களுக்கும் குறிப்பான தரவுகள் வந்து சேரவில்லை. நான் எதையும் குறிப்பிட முடியாது.

ஊழியர் : என்னைப் பற்றிய விபரங்களைக் கூட என்னிடம் குறிப்பிட முடியாதா?

மனித வளத்துறை அதிகாரி : சந்தேகமில்லாமல். அது மிக மிக ரகசியமானது. அத்தகைய ரகசிய விபரங்களை எல்லோருக்கும் வெளிப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. இது போன்று விளக்கமளித்து அடுத்து எப்படி நகர்வது என்று சொல்லத்தான் எங்களுக்கு உத்தவிட்டிருக்கிறார்கள். உங்கள் தொடர்பான குறிப்பான தகவல்களை நாங்கள் தர முடியாது.

ஊழியர் : இந்த கடிதத்தை வாங்குவதற்கு இங்கு வருபவர்களைப் பற்றிய தகவல்கள்- அவர்கள் என்னென்ன செய்தார்கள், இதற்கான காரணம் என்ன, எது இந்நிலைக்கு கொண்டு வந்தது போன்ற விபரங்கள்…

பெண் மனித வளத்துறை அதிகாரி : நாங்கள் யாரும் அவற்றை தெரிந்து கொள்ள முடியாது. மிக மிக உயர்மட்டத்தில் அது முடிவு செய்யப்படுகிறது. மனிதவளத்துறை தலைமை மட்டத்திலும், உங்கள் மட்டத்திலும் அது முடிவாகிறது.

ஊழியர் : சரி, நான் எங்கு கையொப்பமிட வேண்டும்?

(கடிதத்தை கையொப்பமிட்டுக் கொடுப்பது தொடர்பான பேச்சுக்கள்…)

ஆங்கில உரை வடிவம்

HR – As part of the optimization program we are supposed to inform you that you will not be able continue after 30 days from today. We are to explain to you the process and the way forward. You can hear it out and ask questions if any. Today is 8-th, So 7-th of February would be the 30-th day for you, the last date in the organization. 7th coming on Saturday, you can go to Lloyds road office on the 9-th of February. This 30 days is given to you to ensure that you attend interviews elsewhere and find a good opportunity outside. You are not expected to come, swipe-in and swipe-out for the nine hours or apply for leave. This is given to you upfront and it is a paid thirty days period that is given to you.

Employee – Okay

HR – Apart from this you will also be given two more months of gross salary. That is 30 days plus two more months of salary will hit your account. And your HIS, you would have already paid for this financial year. You can still continue to avail HIS benefits till march 31-st this year. If at all you have any expenses incurred right now you can punch in the bill in the system because it will be active till 7-th of February. And Beyond that if there is any eventuality that is happening, you can take it offline. You can meet the separation team on the last day which is 9-th of February. You can find out just how to go about if there is any HIS coming up, post that. And do you have any assets like laptop or photon or any kind of TCS assets library books…

Employee – No

HR – This month salary you are getting as usual. And the remaining balance 7 days plus your earned leave will be encashed, plus 2 more months of your salary also will be given to you up front. And this will come to your account 15 days to 20 days after the last date. 7-th is the last date. You will be reporting on the 9-th.

Employee – 9-th? Is it Sunday?

HR – 9-th is Monday. 7th February is Saturday. So 9th is Monday. So 15 days from that maximum 20 days. By the time full and final settlement will be processed and it will hit your bank account. So this what it is. And this is the letter…you can keep the original one. Photocopy you can sign.

Employee – Who would be the separation officer?

HR – Contact the person by name Kasturi or Gopinath.

Employee – Where do they sit?

HR – Lloyds road. You know Lloyds road office?

Employee – I have’nt been there.

HR – You are familiar with Mount road, US embassy. Just Adjacent to US embassy there is a road, Avvai Shanmugam salai, that is earlier called as Lloyds road. Go inside and left hand side is TCS office.

Emp – OK. So on the 9th I have go to meet Kasturi or Gopinath.

HR – Yes. You can meet them and you can tell them. You can handover the ID card there. They will process your separation formalities. And what ever forms you are supposed fill on. They will help you.

Emp – OK. Can I know before signing what is the reason for this?

HR – There are plenty of reasons. One reason that you could correlate could be the performance rating. That is one of the key parameters that has been taken into consideration. Apart from that you can correlate scalability to the next role, availability of requirements matching your skill sets and availability of the required position. There might a lot of As, Bs in that particular team which going up the ladder would be a challenge. May be we would not be able to give you as many as opportunities as a whole. These are certain parameters, beyond that there are so many other parameters also been taken into consideration and deliberations done by senior management. Your ISU HR is involved and your cluster in-charges are involved, GL everyone is involved in identifying coming up with this particular activity.

Emp : It is a conglomerate (sic). So everybody else is involved in lifting out who should be taken off.

HR : It is a huge team that is in charge, right from the top most level, immediate higher up, geography head, ISU heads involved, till the GL level every one is supposed to identify. The next Pyramid has to be made that is what it is.

Emp : That is right. Take out a person from project, the immediate supervisor knows better about the performance of the employee. You agree with what I am saying. If you take my performance appraisal last 9 years, I don’t think I am an under performer, I got B rating, A rating, C rating. obviously I met expectations, I never got D. I did go on LWP but I had to join my spouse, who was on-site and I had to take maternity leave to take care of my kid.

So the trend I am seeing right now, is the other colleagues, other friends who have got similar letter it is definitely not based on performance, because I have seen really top achievers getting this letter and being termed as under performers, that is not right. It is better that you don’t tell that they are not performer, because it is going bring down their morale completely. I have client certification, I have been on-site for 4 years, I have certificates signed by my client managers mentioning the great work I did for them.

HR : If you’d keeny (not clear) I would have never mentioned that you are part of the under performers list.

Emp : That is right, but the first point you told me was performance

HR : Performance rating was also a parameter.

Emp : In my case, that is definitely not the parameter. I have never got a D rating. This is the first point. I have not got good rating, because I was on LWP. That was the only reason why that went that way. For all the other times when I was on active allocation I have been the best in the team. So, that point really hurts, when you tell that.

HR : It has been a consistent C, right.

Emp : Last was B and C, C. Last would be 3 Bs and double Cs.

HR : Because we have gone through your data, deliberation has been done.

Emp : I know the decision is already made, I know that you are not going to change it. I just wanted to let you know before telling somebody they are not performing upto their mark, you should…. try to…

Woman HR: We never mentioned in the conversation that you are an under-performers.

Emp : The criteria was that.

Woman HR : It was performance. He did not say under-performance. Don’t come to a conclusion that we are branding you as a low performer or anything. We have looked at your data. You have performed well in the initial days, no doubts about it. Even now you are doing a good job, may be. But we look at last 3 years rating, I am not saying C is the bad rating at all. That is definitely meeting expectations, which is a good thing.. But, there are people narrow down at certain level, for us this is one of the criteria we look at. Obviously we wanted to retain our As and Bs, that shows that there is some level of some thing they have done more than the guys that got C. There is some level of cream that is there, in those bands.

Emp : I can tell you why I got C last time. because I came from on-site off shore. You know the general trend.

Woman HR : Why didn’t you negotiate when supervisor say that you got a promotion

Emp : We don’t have a choice.

Woman HR : We are not going to debate about it.

Emp : I am not debating about it. I know what the decision is.

Woman HR : People who come from on-site also get A band, B band. Sometimes we accept what ever is given, you need to put your foot down, may be in the future put your foot down and say I have been on-site, I have worked enough. I deserve a A or B then definitely.

Emp : I have rejected my rating, but nothing the HR or anybody else in the project could do. Because they say, you all coming from on-site to off-shore, and this what you deserve.

Woman HR : That the HR will never say.

Emp : I have personally gone through this madam, in the initial, first anniversary rating itself I had gone through this. My PL had given me 4, but there is a lot of processes. I have gone through in the first year and I have gone through in the last year also. I know what it is.

Woman HR : I also got lot of cases changed. But, not the point of discussion. We are not branding anybody as poor performer at all. Looking at the situation at this point in time, the scalability and a lot of other factors into picture, also looking at performance which is one of the factors.

Emp : By scalability what do you mean. I don’t understand.

Woman HR : I do not have individual specific data, if that is what you are looking at. It is confidential data. Specific data has not trickled down to all levels. I will not be able mention.

Emp : You will not be able to mention specifics about me as well to me.

Woman HR : Absolutely. It is very confidential and we don’t want to confidential data to be exposed to everybody. We have been instructed to give you this kind of communication and tell you that this is the way forward. Individual specific data, we will not be able to give.

Emp : Generally, criteria for people who come here to this letter. There is no specific detail about associate. What they did, and what caused this, what triggered this.

Woman HR : That is nothing, we don’t have privy to look at. That is decided at your leadership level and HR leadership level.

Emp : Okay, then I don’t know. where should I sign.

– அப்துல்

மதுவை தடை செய்ய மக்களிடம் மனு !

2

வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்கும் அரசின் திட்டம் நிறைவேறும் நாள் நெருங்குது!
விதியை நொந்து புலம்பும் மக்கள் வீறுகொண்டு எடுத்து வைக்கும் அடுத்த அடிக்காக தமிழகம் ஏங்குது!

“தாயி உங்களுக்கு கோடி புண்ணியம்மா நானும் குடிகாரன்தான் ஆனா ரொம்ப மோசமா போகுதம்மா நாட்டு நிலம, எப்படியாவது இதை நிறுத்தணும்மா”

70 வயது முதியவரின் வார்த்தைகளில் கிடைத்த உற்சாகத்தோடும் தமிழகத்தை பீடித்துள்ள இந்த சீரழிவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற உத்வேகத்தோடும்  டாஸ்மாக்கிற்கு எதிரான எமது பிரச்சார இயக்கம் தொடர்ந்தது.

“மனு கொடுத்தாச்சு போஸ்டர் ஒட்டியாச்சு, தெருமுனைப் பிரச்சாரம் உள்ளிட்ட வகையிலும் செய்தாயிற்று, அரசு அசைவதாக தெரியவில்லை. இரையை விழுங்கிய மலைப்பாம்பை போல அசைவின்றி கிடக்குது, சொரணையுள்ள நாம் சும்மா இருக்கக் கூடாது”

என்ற உறுதியோடு பிரச்சார இயக்கத்தை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து துவங்கினோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆட்சியரிடம் ஆயிரக்கணக்கில் மனுகொடுத்தும் பலன் இல்லாத நிலையில் மீண்டும் நூற்றுக் கணக்கான மனுக்கள் தயார் செய்து கொண்டு ஆட்சியர் அலுவலகம் சென்றோம், அதிகாரிகளிடம் கொடுக்க அல்ல,

“இந்த இழி நிலைக்கு காரணமே இந்த அரசும் அதிகாரிகளும் தான் இவர்களை நம்பிப் பயனில்லை; உழைக்கும் மக்களாகிய நீங்கள் ஒன்றிணைந்தால்தான் நாட்டு நடப்பை உணர்ந்து களத்தில் இறங்கிப் போராட முன் வந்தால்தான் நம்மைப்பிடித்த இந்த டாஸ்மாக் பீடையை ஒழிக்க முடியும். ஆகவே, போராட வாருங்கள்”

என மக்களிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டன.

pevimu-tasmac-campaign-collector-office-2மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த மக்கள் மனுக்களை பெற்று ஆர்வமாக படித்து பரிசீலிக்க துவங்கினர்.

இந்த செய்தி தினகரன் பத்திரிகையில் மட்டும் வெளியானது. மற்றவர்கள் படம் எடுத்தனர், ஆனால் என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை, செய்தி போடவில்லை (அம்மாவின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்ற எண்ணமாக இருக்கலாம்).

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், நீதிமன்றம், கல்லூரிகள், விடுதிகள், பேராசிரியர்கள் சிக்னலில் காத்திருக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டப்பட்டது.

மக்களின் பல்வேறு அனுபவங்களை இதன் மூலம் பெற முடிந்தது. தார்மீக ஆதரவு, வாழ்த்து, நிதிஉதவி என மக்கள் பலவகைகளில் ஆர்வமுடன் வரவேற்று உதவினர்; டாஸ்மாக்கின் ஆதரவாளர்கள் உட்பட அம்மா விசுவாசிகளையும் சந்திக்க முடிந்தது. அம்மா, அம்மா என்றும் மக்கள் முதல்வர் என்றும் பேசுகின்றார்களே, அந்த அம்மா, தமது தமிழக பிள்ளைகளுக்கு என்ன ஊட்டுகிறார் என்பதை தெளிவுபடுத்தும் விதமாக தோழர் முகிலன் வரைந்த ஓவியம் (தமிழனை மடியில் கிடத்தி சாராயம் ஊட்டும் ஓவியத்தை) பெரிய சுவரொட்டியாக தயாரித்து நகர் முழுவதும் ஒட்டப் பட்டது.

ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா அரசின் வேலை நாட்டையும் வீட்டையும் கெடுக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடு! என்ற வாசகத்துடனான் பதாகைகள், சுவரொட்டிகள் மக்களிடம் வரவேற்பையும், அதிமுகவினருக்கு கடுப்பையும் ஏற்படுத்தியது. ஒரு அதிமுக இளைஞர் போன் மூலம் சுமார் 10 நிமிடத்துக்கு மேலாக தனது ஆதங்கத்தைக் கொட்டினார்.

“அம்மா செய்த சாதனைகள் இலவச திட்டங்களைப் பற்றி பேசாமல் டாஸ்மாக்கை மட்டும் பேசுகிறீர்களே, இது நியாயமா?” என்றார்.

“சாராயத்தின் மூலம் தமிழ்ச் சமுதாயமே சீரழிவது தெரியலையா? மக்களை விட இந்த மாமிச மலை மீதுதான் உங்களுக்கு அக்கறையா?” என கேட்டதும் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு தொடார்பு எல்லைக்குள் அவர் வரவே இல்லை!

கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி பெற பெண் தோழர்கள் காவல்நிலையம் சென்றபோது குரலை தாழ்த்திய ஏட்டையா, “குடிகாரர்களின் பஞ்சாயத்தை சமாளிக்கவே முடியல; ஏதாவது செய்யுங்க” எனக் குமுறினார்.

“நீங்க கேட்ட தேதியில் வேறுயார் கேட்டாலும் அனுமதி இல்லைன்னு சொல்லிட்டேன். நீங்க நடத்துங்க” என தன்னால் முடிந்த ஆதரவை தெரிவித்தார்.

22.12.2014 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்!
ஊரு தாலிய அறுத்த காசில் ரேசன் அரிசி இலவசம்!

என்ற மகஇக மையகலைக் குழுவின் பாடலுடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது. உழைக்கும் மக்கள் பார்வையாளர்களாக நின்று கவனித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை தோழா. நிர்மலா தலைமை யேற்று நடத்தினார். மக்களிடம் பிரச்சாரத்துக்கு சென்றபோது கிடைத்த ஆதரவும் கருத்துக்களும் தொடர்ந்து போராட ஊக்கமளித்ததாக விளக்கினார்.

pevimu-tasmac-campaign-demo-07

அடுத்து பேசிய தோழர்.ஜெயமணி

“குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் நாட்டையும் வீட்டையும் கெடுக்கும் என பாட்டிலில் சின்னதாக எழுதிவைத்தால் போதுமா? மனிதன் குடித்தபிறகு மிருகமாக மாறுகிறானே தனது தாரத்துக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறி சீரழிக்கிறானே, கெட்டது அவன் மகளல்ல, இந்த சமூகத்தின் மானமும், மரியாதையும் அல்லவா? இந்த இழிநிலையை ஏற்படுத்திதான் அரசு சம்பாதிக்க வேண்டுமா? இந்த மானக்கேட்டை எதிர்த்து முறியடிக்க வேண்டாமா?ஆபாசச் சீரழிவைத் தூண்டும் செல்போன் இன்டர்நெட், உள்ளிட்டவையில் பரவும் இந்த வைரசை அழிக்க வேண்டாமா?” என்று எளிய கேள்விகளை பேசியதுடன் “டாஸ்மாக்கை மூடும் வரை போராடுவோம்”

என முழங்கினார்.

“உயிர் காக்கிற கருவி இல்லாம குழந்தைகள் சேலம் தர்மபுரியில் சாகுது! பத்துமாதம் கருவை சுமந்த தாய்மார்கள் பிரசவத்தில் தனது குழந்தையைப் பார்க்காமலே உயிரிழந்த சம்பவம் சட்டிஸ்கரில் நடக்குது! பார்வை குறைபாட்டை சரிசெய்ய மருத்துவமனை சென்ற பஞ்சாபிகளை முழு குருடாக்கிய கொடுமைகள் சொல்லி மாளாது; இதையெல்லாம் கவனிக்காத மத்திய மாநில அரசுகள் தன் மக்கள் வேட்டியிழந்து, மானமிழந்து குடிகெடுத்து குடும்பத்தை தெருவில் நிறுத்தச் செய்யும் டாஸ்மாக் விற்பனையை பெருக்க முயற்சிக்கிறது. இந்த ஆட்சியாளார்கள், அதிகாரிகளை எதைக்கொண்டு அடிப்பது?”

என ஆவேசமாக சாடினார் தோழர் அம்சவள்ளி.

“கவர்மெண்டு தண்ணிய ஊத்திவிட்டு காசுபாக்குது, போலீசு வாய ஊதச்சொல்லி காசு புடுங்குது. இந்த புடுங்கி அரசுகளிடமிருந்து மக்களை மீட்பது அவசர, அவசிய பணியாக உள்ளது. மனித இனத்துக்கே பெரும் கேடு விளைவிக்கும் இந்த போதை பழக்கம் சோமபானம், சுராபானம் என்ற பெயரில் இராமன் காலத்து இதிகாச குப்பை களிலேயே காணப்படுகிறது. குடிகெடுப்பதை பார்ப்பனன் அப்பவே செய்யத் துவங்கி விட்டான். ஆனா எல்லா பானத்தையும் விட இந்த அம்மா பானம் ஏற்படுத்தும் விளைவு மோசமானது. நம்மை குடிகாரர்களாக்கி சீரழித்து சிந்திக்க வக்கற்றனவாக மாற்றுகிறது. இதன்மூலம் நாட்டை சுரண்டவும் கொள்ளையிடவும் வழிசெய்கிறது. இதனை வீழ்த்தி முறியடிக்க வேண்டும்”

என மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தை சேர்ந்த தோழர் ராஜா சிறப்புரையாற்றினர். இறுதியாக தோழர்.பவானி நன்றியுரையாற்றினார்.

ம.க.இ.க மையக்கலைக்குழு தோழர்களின் புரட்சிகர பாடல்கள் மக்களின் உணர்வை தூண்டும் படியும், சிந்திக்க வைக்கும் வகையிலும் அமைந்தது.

தகவல்:
பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி கிளை.

புரட்சிக்கு ஏங்கும் காலம் – நூல் அறிமுகம்

1

புரட்சிக்கு ஏங்கும் காலம் – தோழர். துரை.சண்முகத்தின் கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

விதைக்கு பொய்யழகு என்ற தமிழ் கவிதை மரபினை உடைத்து அதன் மெய்யான அழகை பாட்டாளி வர்க்கத்தின் பார்வையில் பதிவு செய்திருக்கிறார் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் துரை.சண்முகம். ஆனால் 2011 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தும் இவர் எடுத்தாண்ட சமூக பிரச்சினைகளை ஒரு பிரச்சினையாக கருதாத வாசகர்களிடம் ஒருவித குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதில் இக்கவிதைகள் முன்னிற்கின்றன. கீழைக்காற்று வெளியீடாக வந்துள்ள 72 பக்கத்தில் விரியும் இக்கவிதைத் தொகுப்பின் விலை ரூ.40.

புரட்சிக்கு ஏங்கும் காலம்மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை வரையிலான பேருந்து பயணத்தினைக் கூட பொதுவான நபர்கள் கவனிக்கத் தவறும் ஓட்டுநர்களின் உழைப்பினை, பொறுப்பினை எடுத்துச் சொல்லும் கவிதையாக உள்ளீடு செய்கிறார் கவிஞர். அந்த உழைப்பை உதாசீனம் செய்யும் பயணிகளின் சொற்களோடு கவிதை முடிகிறது. இக்கவிதையை புதிய கலாச்சாரம் இதழின் அட்டையில் படித்தவர்களுக்கு இது புதிதாக இல்லாவிட்டாலும் பல கவிதைகளில் இந்த வடிவம் இருப்பதை தொகுப்பில் தான் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த முரண்பாட்டை கவிதை சுட்டிக்காட்டுவதால் ஏற்படும் குற்ற உணர்ச்சி கவிதையை மீண்டும் முதலில் இருந்து படிக்க சொல்கிறது. அதன்பிறகு வாசகர்களிடம் ஒரு சுய விமர்சனத்தை அது கோரி நிற்கிறது.

அழிபடல் சரியோ அண்ணாச்சி கடைகள் என்ற கவிதை சிறுவணிகர்களது வாழ்க்கையை கெடுக்க வரும் வால்மார்ட் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு எதிராக அவர்களை பாதுகாக்க எல்லோருக்கும் அறைகூவல் விடுக்கிறது. உணர்ச்சி அம்சம் பொதுவான சமூக, அரசியல் கவிதைகளில் இருக்காது என்று சொல்பவர்களை தட்டி எழுப்பியபடியே செவுளில் அறைந்து அக்கருத்தை மாற்றச் சொல்கிறது கவிதையின் வடிவம். வாசகன் இதயத்தை விற்க சம்மாதிக்காதவனா என்று அவர்களிடம் ஒரு சுயபரிசோதனையை கோரி நிற்கிறது கவிதை.

ஆதலினால் காதல் செய் என்ற கவிதை தருமபுரி இளவரசன்-திவ்யா காதல் திருமணத்தை தொடர்ந்து ஆதிக்க சாதி வெறியர்கள் நான்கு தாழ்த்தப்பட்டோருக்கான கிராமங்களை சூறையாடிய போது எழுதப்பட்டது. “சைவப்பிள்ளையும், புதிரை வண்ணாரும் இணைந்தால் கீரிப்பிள்ளையா பிறந்து விடும்” என்ற எளிய படிமங்களை காடசிப்படுத்தி செல்லும் கவிதை எளிய மொழியில் இருப்பதும் வாசகர்களை சென்றடையவும், படித்த திருப்தியை அளிக்கவும் முக்கிய காரணமாக இருக்கிறது.

ஆணாதிக்கத்தை, பாலியல் வக்கிரத்தை தோலுரிக்கும் கவிதைகள், தனியார் கல்வியின் வியாபார புத்தியை சுட்டிக் காட்டும் மெட்ரிக் பள்ளிப் பக்கம் மேயப் போவதில்லை என்ற நாமக்கல் கோழிப் பள்ளிக்கெதிரான கவிதை, நரகாசுரன் பற்றிய தீபாவளிக் கவிதை, சச்சின் பற்றிய விமர்சன தொடுப்போடு வந்த கவிதை என எல்லா கவிதைகளுமே ஒரு புதிய பாட்டாளி வர்க்க பார்வையில் தனியாக மிளிர்ந்து நிற்கின்றன.

நடந்து முடிந்த நாடாளுமற்ற தேர்தலுக்கு காவிக் கும்பலும், சாதிக்கணக்குகளும் இணைவதை எள்ளி நகையாடும் தேர்தல் குறவஞ்சி, அரி பரந்தாமனின் வேட்டிக்காக தமிழகமே சட்டசபையின் 110 விதியின் கீழ் புரட்சித் தலைவியின் கீழ் ஒன்றுபட்டதை ஆதிக்க சாதிகள் எப்படி பார்க்கின்றன என்பதை விளக்கும் கவிதை என தோழரின் கவிதைகள் புதிய பரிமாணத்தில் மிளிர்கின்றன. கவிதை நீளமாக இருந்தாலும் வாசகனை அலுப்பு தட்டாத விதமாக அழைத்துச் செல்கின்றன அவர் எடுத்தாளும் பிரச்சினைகள்.

இந்தித் திணிப்பிற்கெதிராகவும், கோயம்பேட்டில் கருவாடு விற்க கூடாது என்ற மவுண்ட் ரோடு மகா விஷணுவின் நடவடிக்கைக்கு எதிராகவும் உள்ள கவிதைகள் பார்ப்பன பாசிசத்திற்கெதிரான நல்ல படைப்பு என எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள்.

புரட்சித்தலைவிக்கு தண்டனை என்றவுடன் எல்லோரையும் தங்களது துக்கத்தில் பங்குபெற சொன்ன ரத்த்தின் ரத்தங்களது கோரிக்கையை எள்ளி நகையாடுதல், தேர்தல் புறக்கணிப்பு என சமகால வெளியில் செல்லும் பயணிக்கும் கவிதைகளை அரசியல் முன்னணியாளராக தம்மை வடிவமைத்துக் கொள்ள நினைக்கும் இலக்கிய வாசகர்கள் அவசியம் படித்தாக வேண்டியிருக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிவந்த சமுக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை கவிஞர் பாட்டாளி வர்க்க பார்வையில் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில் கட்டாயம் கவிதைக்கு மெய்யழகுதான் இருக்கிறது. அதனை தரிசிக்க வாசகர்களை அழைக்கிறது புத்தகம் – அதாவது “புரட்சிக்கு ஏங்கும் காலம்“.

புரட்சிக்கு ஏங்கும் காலம்

துரை சண்முகம்

வெளியீடு : கீழைக்காற்று

விலை : ரூ 40
பக்கங்கள் : 72

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

எண்: 80-81 (முதல் நுழைவாயில்)

38-வது சென்னை புத்தகக்காட்சி
சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி,
நந்தனம், சென்னை – 35

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை

கொரிய நிறுவனத்தின் அடிமைகளாக தொழிலாளிகள் – நேரடி ரிப்போர்ட்

5

“அண்ணா என்ன போட்டோ எடுக்காதண்ணா. குடும்பம், கொழந்த இருக்குது. இப்பவே ‘கம்பெனி கேன் தண்ணியா குடிச்சி கம்பெனிய லாஸ் பண்ணிட்டோம், ஒண்ணுக்கு வருதுன்னு பாத்ரூம் அடிக்கடி போயி, உற்பத்திய குறைச்சிட்டோம்’னு கொரியாக்காரன் எங்கள இழுத்துப் போட்டு உதைக்கிறான். நியாயம் கேட்டா, போலீசு எங்கள கைது பண்ணி சிறையில தள்ளுது. வேலையும் இல்லாம இப்ப கேசு, வாய்தானு நிம்மதியில்லாம கோர்ட்டுக்கு அலையிறோம்”

என்று ஸ்ரீபெரும்புதூர் கோர்ட் மர நிழலில் சக தொழிலாளர்களுடன் ஒன்று கலந்தார் என்.வி.எச் பெண் தொழிலாளர் அஸ்வினி. அங்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து வேலைசெய்யும் தொழிலாளர்கள் பலர் காத்திருந்தனர்.

என்.வி.எச் தொழிலாளர்கள்
மறுகாலனியாக்க அடிமைகளாக நடத்தப்படும் தொழிலாளர்கள்

சென்னை – ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டை சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 1400 ஏக்கரில் விரிந்திருக்கும் தெற்கு ஆசியாவின் மிகப் பெரும் ‘ஆட்டோ மொபைல்’ உற்பத்தி மையம்.

ஹூண்டாய், ஃபோர்டு, நிஸ்ஸான் என்று நூற்றுக்கணக்கான ஏக்கரில் எழுந்துள்ள இந்த தொழிற்பேட்டையில் உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் பல நூறு கம்பெனிகள் அமைந்துள்ளன. அவற்றில் பல வெளிநாட்டு கம்பெனிகளே. அதில் ஒன்றுதான் என்.வி.எச் இந்தியா என்ற கொரிய நிறுவனம். ஹூண்டாய் பன்னாட்டு நிறுவனத்துக்கான சப்ளையர் நிறுவனம். நோக்கியா, ஃபாக்ஸ்கான் வரிசையில் தற்போது 120-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களை, போலீசு துணையுடன் தொழிற்சாலைக்குள்ளேயே அடித்து சிறையில் தள்ளியுள்ளது.

அப்படி,தொழிலாளிகள் செய்த குற்றம்தான் என்ன?

காஞ்சிபுரத்தை அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்த பெண் தொழிலாளி அருள்மொழி

“என் அப்பா கைத்தறி நெசவுத் தொழிலாளி. இதய நோயாளி. கஷ்டப்பட்டு என்னை +2 வரை படிக்க வைத்தார். 2007-ம் ஆண்டு ரூ 2700 சம்பளத்திற்கு இங்கு வேலையில் சேர்ந்தேன். என் சம்பளத்தில் வைத்தியம் கூட பார்த்துக் கொள்ளாமல் 4 ஆண்டுகள் என் சம்பாத்யத்தை சேமித்துதான் எனக்குத் திருமணம் செய்து வைத்தார்.

இக்கம்பெனியில் நாள் முழுக்க நான் பிளேடு பிடிச்சுதான் வேலை செய்யணும். கொஞ்சம் பிசகினாலும் கை பாதி போய்டும். பாதுகாப்புக்கு கொடுக்கும் துணி கையுறையைக் கூட கம்பெனில புதுசா தரதில்லை. மத்தவங்க போட்டதைத்தான் கொடுப்பாங்க. கேட்டா துவைச்சுதான் தர்றோம்னு கத்துவாங்க. பல பேரு வேர்வை பட்டதால கையில புண்ணு வரும். அதச் சொன்னா எதிரி மாதிரி பாப்பாங்க.

ஆலை முழுக்க 50-க்கும் மேற்பட்ட சிசிடி காமிரா மூலம் கண்காணிப்பாங்க, அவசரமா பாத்ரூம் போனா, அடிக்கடி பாத்ரூம் போயி என்ன பண்றனு அசிங்கமா கேட்டு கதவைத் தட்டுவாங்க. எம்.டி.யே இப்படி பலமுறை தட்டியிருக்காரு. எங்களுக்கு அழுகையா வரும். தண்ணி குடிக்க போனா, அசிங்கமா பேசுவாங்க இவ்வளவு நேரம் என்ன பண்னிணன்னு மத்தவங்க சிரிக்கிறா மாதிரி டபுள் மீனிங்கில் அடியாளுங்க கேட்பாங்க. காண்டிராக்ட் தொழிலாளிங்க நெலம இன்னும் மோசம். பெண்ணுனுக்கூட பாக்காம பாத்ரூம்ல இருந்து இழுத்துக்குனு போய் கேட்டாண்ட நிக்க வச்சிருவாங்க. அதப் பாத்து நாங்க பயப்படணும்னு சொல்வாங்க..

இவ்வளவு கஷ்டத்த பொறுத்துக்கினு இருக்கிறதுக்கு காரணம் எங்க குடும்ப நெலமதான். கடந்த ஆறு மாதமா கம்பெனில வேலை செய்றது சித்திரவதையா இருக்குது. 8 மணி நேர வேலைய 9 மணி நேரமாக்கிட்டாங்க, ஒரு மணி நேரத்துக்கு 40 பீசுக்கு பதிலா 80 பீசு புரடக்சன் தரணும்னு மிரட்டுறாங்க. காண்டிராக்டு தொழிலாளிங்க பயந்து போய் செய்றாங்க. இதப் பொறுக்க முடியாமத்தான் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம். இப்ப நிர்வாகத்து இடத்துல போலீசு. கைது, கேசு, கோர்ட்னு வதைக்குது. எஙக கஷ்டத்த யார்கிட்ட நாங்க சொல்றதுனே தெரியல”

என்றார் துயரத்துடன்.

nvh-company

1984-ம் ஆண்டு கொரியாவில் ஆரம்பிக்கப்பட்ட என்.வி.எச் நிறுவனம், சீனாவில் இரண்டு கிளைகள், ரசியாவில் ஒரு கிளையுடன் செயல்பட்டு வருகிறது 2007-ல் இந்தியாவில் கால் வைத்த இந்நிறுவனம் கார் உதிரி பாகங்கள் தயாரிப்பில் பிரதான பங்கு வகிக்கிறது. கார் எஞ்சினில் உருவாகும் வெப்பம், அதிக ஒலி, அதிர்வுகளை குறைக்கும் காரின் உட்புறத்தை சொகுசாக்கும் ஃபோம் மற்றும் பிளாஸ்டிக் மோல்டிங்கிலான பாகங்களை தயாரிக்கிறது.

ஆரம்பிக்கப்பட்ட முதல் 4 ஆண்டுகளிலேயே அதன் ஆண்டு வணிகம் 3 கோடி டாலரிலிருந்து 30 கோடி டாலராக உயர்ந்தது. இப்போது சென்னை-ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் 66 உதிரி பாகங்களை தயாரிக்கும் இந்நிறுவனம் “‘ஃபோம்’ உற்பத்தியில் கிடைக்கும் இலாபத்தை மட்டும்தான் நிர்வாகத்தை இயக்க ஒதுக்குகிறது. மற்ற 65 உதிரி பாகங்களின் இலாபத்தையும் இங்கிருந்து அள்ளிச் செல்கிறது என்று எங்களை மிரட்டும்போது திமிராக சொல்கிறது, நிர்வாகம்” என்கின்றனர், தொழிலாளிகள்.

என்.வி.எச் நிறுவன தலைமை அடியாளாக வேலை செய்யும் லியோ தவமணி பாண்டியன், இவரது கைத்தடிகளாக இருக்கும் பாரி, செல்வம் ஆகியோர், இவர்களுக்கு கீழ் ஒரு அல்லக்கை ஐந்தாம் படை மாஃபியா கும்பல் நிர்வாகம் என்ற பெயரில் தொழிலாளர்களை கடித்துக் குதறுகிறது.

“நீங்கள் வீடியோவில் காணும் கொலைவெறி, கொடுமைகளில் ஒரு துளிதான்” என்கிறார், தொழிலாளி யோகா நந்தன்.

https://www.youtube.com/watch?v=Lhog6dSIT-E

https://www.youtube.com/watch?v=Ro-R0FbxLcY

https://www.youtube.com/watch?v=_1EhFLPrWFc

“கடந்த கோடைக் காலத்தில் ஜூன் மாதம் நடத்த அட்டூழியம் குரூரத்தின் உச்சம். சராசரியாக ஒரு ஷிப்டுக்கு 100 கேன் தண்ணீர் செலவாகும். ஜூன் மாதம் வெயில் காலம் என்பதால் தொழிலாளிகள் குடித்த நீரால் 150 கேன் செலவானது. அல்லக்கை ஐந்தாம் படையினர், தண்ணீர் குடிக்கும் தொழிலாளர்களை ‘ஈன சாதிக் காரன்க தண்ணிய கூட மாடு மாதிரி குடிக்கிறான்க’ என்று திமிராக பேசினர். கொதித்த தொழிலாளிகள் ஒன்றுபட்டு உள்ளிருப்பு போராட்டம் செய்தோம்.

தாழ்த்தப்பட்ட தொழிலாளிகளை கேவலமாக பேசும் லியோ தவமணியை கைது செய்யும்படி போலீசில் புகார் கொடுத்தோம். உடனே நிர்வாகம் போராடிய தொழிலாளிகளை வேலையில் இருந்து நீக்கியது. தொழிற்சாலையில் உற்பத்தியை தடுத்ததாக பொய்க் காரணங்களைக் கூறி ஒழுங்கு நடவடிக்கை, தற்காலிக வேலைநீக்கம் செய்த 8 தொழிலாளர்களுக்கு இதுநாள் வரையில் வேலை கொடுக்கவில்லை.

nvh-workers-2மேலும் வரும் மார்ச் மாதம் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையும் இருப்பதால் அதற்கு முன்பே நிரந்தரத் தொழிலாளர்களை மொத்தமாக வேலையிலிருந்து தூக்க நிர்வாகம் முயற்சிப்பதை எதிர்த்து,

வேலைநீக்கம் செய்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும்
தொழிலாளர்களை மரியாதையாக நடத்த வேண்டும்
பணியிடத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்

என்று கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 2.1.15 அன்று காலை 9 மணிக்கு உள்ளிருப்பு வேலைநிறுத்தம் நடத்தினோம்.

நாங்கள் போராட்டத்தை அறிவிக்கும்போதே அடியாட்கள் வைத்து அங்கிருந்த உதிரிபாகங்களை லாரியில் ஏற்றியது நிர்வாகம்.

nvh-workers-4“எங்கள் கோரிக்கைக்கு பதில் சொல்லி விட்டு நாங்கள் தயாரித்த பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்” என்று தடுத்தோம்.

‘ஈனத் தொழிலாளிகளுக்கு இவ்வளவு திமிரா’ என்று வெறியோடு பாய்ந்து அடியாள் கும்பல். தொழிலாளர்கள் சிறிதும் அஞ்சாமல் தொடர்ந்து மறிக்கவே கடைசியில் நிறுவனத்தின் எம்.டி யே அடியாள் படைக்கு தலைமை தாங்கினார். கையில் கிடைத்த தொழிலாளியைக் கீழே தள்ளி, இழுத்து, காலிடுக்கில் மிதித்து மற்றவர்களுக்கும் இதே கதிதான் என்று வெறியோடு கத்தினார். இந்தக் கொலைவெறிக்கு மிரளாமல் நடு இரவு வரை தொழிற்சாலைக்குள் 3 பெண் தொழிலாளர்கள் உட்பட 129 நிரந்தர தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தோம். இத்தொழிற்சாலையிலிருந்து உதிரிபாகங்கள் போவது தடைப்பட்டதால் ஹூண்டாயின் மொத்த உற்பத்தியும் முடங்கும் நிலைக்கு சென்றது”

என்றார்.

நாம், அவரது பேச்சை இடைமறித்து, “எப்படி, உங்களைப் போன்ற சிறிய நிறுவனத்தின் உதிரிபாகம் இல்லாததால் ஹூண்டாய் முடங்கிப்போகும்? விளக்கமாக சொல்லுங்கள்” என்று கேட்டோம்.

இதை sequence parts production என்று அழைப்போம். தாய் நிறுவனமான ஹூண்டாயில் அடுத்த ஒவ்வொரு மணி நேரம் எந்தெந்த மாடலில் எந்தெந்த பாகங்கள் இணைக்கப்படும் என்று வேலை அறிக்கை, எங்கள் கம்பெனியின் production departmentக்கு வந்து சேரும். அதனடிப்படையில் நாங்கள் தயாரிக்கும் 66 பாகங்களையும் முறைப்படி அனுப்பிக் கொண்டே இருப்போம். இம்மாதிரி சுமார் 120 சப்ளை நிறுவனங்களும் இயங்கும். பெரிய பிசாசு வாயில் விழப் போகும் பொருட்கள் கன்வேயர் பெல்ட்டில், பாதி வழியில் நின்று விட்டால் என்ன ஆகும். அப்பொருளுக்கு மேல் உட்காரும் அடுத்தடுத்த பாகங்கள் பல்வேறு இடத்திலிருந்து வந்தாலும் வீணாகத்தான் கிடக்கும், உற்பத்தி முடங்கும்”

என்றார்.

nvh-workers-3இந்த இயக்கம் துல்லியமாக நடைபெறும் ஒவ்வொரு கணமும் முதலாளிக்கு கொள்ளை இலாபம். இயங்கும் பல்வேறு பற்களில் ஒன்று நின்றாலும் முதலாளிக்கு பட்டை நாமம். இதைத்தான் வேறு வார்த்தையில் ‘ஜிட்’ (JIT – just in time) என்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு முன் தேவையான பொருட்களைக் கூட இருப்பு வைத்துக் கொள்வதை வீண் வேலையாகவும், இலாப இழப்பாகவும் கருதுகின்றன, ஏகாதிபத்திய நிறுவனங்கள். காரணம், தேவையற்ற லோடிங், அன்லோடிங், குடோன் கட்டுமானம் பராமரிப்புச் செலவுகளை குறைக்கும் cost cutting என்ற விதியின் கீழ் இலாபத்தைத்தவிர முதலாளித்துவத்திற்கு மற்ற இயக்கம் எல்லாம் வீண்!

அதன்படி, “நள்ளிரவு 12 மணியிலிருந்து, போலீசு உயரதிகாரிகள் எங்களை ஆலையிலிருந்து வெளியேற்ற முயற்சித்தார்கள். பெண்கள் உட்பட நாங்கள் அனைவரும் போலீசின் மிரட்டலுக்கு பணிய மறுத்தோம். எங்களைத் தாக்கிய எம்.டி பகிரங்க மன்னிப்பு கேட்காதவரை நாங்கள் நகர மாட்டோம் என்றோம். பின்னிரவு 2 மணிக்கு போலீசு எங்களை வலுக்கட்டாயமாக இழுத்து 3 கம்பெனி வண்டிகளில் ஏற்றி தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர். திடீரென 1 வண்டியில் வந்த எங்கள் தொழிலாளர்களைக் காணவில்லை. மறுநாள்தான் எங்களுக்கு உண்மை தெரிந்தது. நிறுவனத்தின் உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும், ஹூண்டாய் நிறுவனத்திற்கு சென்ற உதிரிபாகங்களை தடுத்து உற்பத்தியை குலைத்ததாகவும் பொய்வழக்கு போட்டு வேலூர் சிறையில் அடைத்தனர். அத்தொழிலாளர்களை பிணையில் எடுப்பதற்கு இன்று ஒட்டுமொத்தத் தொழிலாளர்களும் இங்கு கோர்ட்டுக்கு வந்துள்ளோம். ஆனால் இதுவரை ஆலையில் வைத்து காட்டுமிராண்டி போலத் தாக்கிய கொரிய எம்.டி மேல் ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை. விசாரிக்கவும் இல்லை.” என்றார் கோபமாக.

என்.வி.எச். தொழிலாளர்களுக்கு, நிசான் உதிரி பாகங்கள் தயாரிக்கும் யூனிப்பிரஸ் மற்றும் கேட்டர் பில்லர் தொழிலாளர்களும் ஆதரவு கரம் நீட்டுகின்றனர். “இந்த நிலைமை எங்களுக்கும் வரக்கூடாது என்பதால் இங்கு வந்துள்ளோம். தொழிலாளிகளின் குறைகளைத் தீர்ப்பதற்கு, பேசுவதற்கு தொழிலாளர் உதவி ஆணையர் இருக்காருனு சொல்றாங்க, ஆனால் அவங்க எல்லாம் கம்பெனி கஸ்டத்த முதலாளி மாதிரியே எங்ககிட்டப் பேசறாங்க. எங்க கஸ்ட்டத்த பேசறத்துதான் யாரும் இல்ல” என்றார், வெறுப்புடன், யூனிபிரெஸ் தொழிலாளி.

இந்த வழியில், முன்னோக்கி போராடும் என்.வி.எச் தொழிலாளர்களை ‘சட்டபூர்வ’ கயிறு மாட்டி, கட்டிப்போடுகிறது, யு.எல்.எஃப் என்னும் ‘அரசியல்’சாரா தொழிற்சங்க அமைப்பு. அதன் இரண்டாம் மட்ட தலைவர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர் கா. மாரியப்பன் மற்றும் வி. லஷ்மணன்.

“தொழிலாளர்களுக்கு தலைமை தாங்கும் தங்கள் சங்கம் வன்முறை நாடாமல், அரசியல் சாராமல், வேகமாக வளர்கிறது. மிகப்பெரும் நிறுவனங்கள் அச்சப்படும் அளவு எங்கள் தலைவரும் சீனியர் லாயருமான பிரகாஷ் சட்டரீதியாகவே அனைத்து பிரச்சினைகளிலும் வெற்றி காண்கிறார். அதே நேரத்தில் தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பனையும் கறாராகக் கூறுகிறார். நிர்வாகம், சட்ட விரோதமாக நடந்தாலும் தொழிலாளர்கள் அமைதி காக்க வேண்டும். சங்கத்தை அணுகி, சட்டவல்லுநர்களின் ஆலோசனைப்பெற்று அதன்படிதான் செயல்படவேண்டும், அப்போதுதான் தொழிலாளி வெல்ல முடியும். இப்படித்தான் வெற்றிமேல் வெற்றி பெற்று, ஓசூர், பெங்களூர், பாண்டிச்சேரி என பல இடங்களில் வளர்ந்து வருகிறோம்” என்று தாங்கள் வளர்ந்த ரகசியத்தை சொன்னார்கள்.

முதலாளியினுடைய அடக்குமுறைக்கு எதிராக பதிலடி கொடுக்கும் யூனியனை நிர்வாகம் விரும்புவதில்லை. முதலாளி சட்ட விரோதமாக நடந்தாலும் தொழிலாளர்கள் சட்ட பூர்வமாகத்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் முதலாளியின் விருப்பமும். அதையே யூனியனும் பேசினால், அதில் தொழிலாளர்களின் குரல் எங்கு உள்ளது? முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர் கொள்ள சட்டம், நீதிமன்றம், போலீசு என்ற திசையில் திரும்புவது எந்த பலனும் அளிக்காது என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிர்வாக அமைப்புக்கள் அனைத்தும் தொழிலாளிகளின் அரசியல் ரீதியான ஒற்றுமைக்கு மட்டுமே பயப்படும். உலகமயமாக்கம் எனும் சுரண்டலை அரசியல் ரீதியாக புரிந்து கொண்டு, பல்வேறு துறை தொழிலாளர்கள் மட்டுமின்றி இதர பிரிவு மக்களோடும் சேர்ந்தும்தான் எதிர் கொள்ள முடியும். அதற்கா அரசியலையும் வழிமுறையையும் கொண்டிருப்பது புரட்சிக தொழிற்சங்கம் மட்டுமே.

– வினவு செய்தியாளர்கள்

To join NDLF – IT Employees Wing – பு.ஜ.தொ.மு – ஐ.டி யூனியன் விண்ணப்பம்

2
Combat IT Layoff!! Log Off Silence!! Log into NDLF!!

NDLF IT Wing - meeting

ndlf-it-wing-application-formDear IT employees,Hall meeting organized by our NDLF-IT Wing on 10th January to discuss formation of employees union in IT sector evoked massive response. Apart from the 200 odd people who attended the meeting, we continue to receive 100s of emails and phone calls from IT employees expressing willingness to join the union. For the convenience of IT employees, we provide herewith the PDF format of NDLF Admission Form

  1. Please download ndlf-it-wing-application-form, take a printout and fill in the details (except signature)
  2. Bring the following items to our office.
    1. Admission form (to be signed at the office)
    2. One passport size photograph (for Identity card)
    3. Copy of Identity card issued by the current employer (proof of employment)
  3. Submit the above documents and pay admission fee of Rs 40 (one time fee) and annual subscription for the first year Rs 60

That’s all. You will become a member of NDLF – IT Wing.

Our office address:
110/63, NSK Salai, Kodambakkam,
Chennai – 24

Office hours: 10 AM to 5 PM

For further details:
Contact 9003198576
Karpaga Vinayagam,
Organizer, NDLF IT Employees Wing
https://www.facebook.com/NDLFITEmployeesWing

ஐ.டி துறை நண்பர்களே,

NDLF IT Wing - meeting

ஐ.டி துறையில் ஊழியர் சங்கம் அமைப்பது தொடர்பாக கடந்த ஜனவரி 10-ம் தேதி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கூட்டம் ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்டவர்களோடு, நூற்றுக்கணக்கான பேர் மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு ஊழியர் சங்கத்தில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர்.ஐ.டி ஊழியர்களின் வசதிக்காக பு.ஜ.தொ.முவின் சேர்க்கை படிவத்தை இங்கு கொடுத்துள்ளோம்.

  1. படிவத்தை டவுன்லோட் (ndlf-it-wing-application-form) செய்து விபரங்களை நிரப்பவும் (கையொப்பத்தைத் தவிர)
  2. பின்வரும் ஆவணங்களுடன் பு.ஜ.தொ.மு அலுவலகத்துக்கு வரவும்
    1. சேர்க்கை படிவம்  (அலுவலகத்தில் கையொப்பம் இட வேண்டும்)
    2. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 1  (சங்க அடையாள அட்டைக்காக)
    3. வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டையின் நகல்  (பணியிட ஆதாரம்)
  3. மேற்சொன்ன ஆவணங்களை சமர்ப்பித்து, சேர்க்கை கட்டணம் 40 மற்றும் ஆண்டு உறுப்பினர் கட்டணம் ரூ 60 (மாதம் ரூ 5) செலுத்தவும்

நீங்கள் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவின் உறுப்பினராகி விடலாம்.

அலுவலக முகவரி
110/63, என்.எஸ்.கே சாலை, கோடம்பாக்கம்,
சென்னை  – 24

வேலை நேரம் : 10 AM to 5 PM

மேலும் விபரங்கள் அறிய :

கற்பகவிநாயகம், அமைப்பாளர்
தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

NDLF IT Wing - meeting

இவண்

கற்பக விநாயகம்
அமைப்பாளர், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு.

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா – நூல் அறிமுகம்

3

னது இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு அயோத்தி பிரச்சினைக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட பிரச்சினையாக “பொது சிவில் சட்டம்” குறித்த பிரச்சினையை பாரதீய ஜனதா எழுப்புகிறது. முசுலீம்களின் நான்கு தார மணமுறை மற்றும் மணவிலக்கு முறையை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் ‘இந்து தனிநபர் சட்டம் ‘ ரொம்பவும் முற்போக்கானது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை. எனவே “இது முசுலீம்களுக்கு ஆதரவான போலி மதச்சார்பின்மை” என்ற பாரதீய ஜனதாவின் வாதம் பெரும்பான்மை ‘இந்து’க்களிடம் எடுபடுகிறது.

இது போலி மதச்சார்பின்மை என்ற கருத்தை இந்நூல் வேறொரு கோணத்திலிருந்து கூறுகிறது. “அரசு மற்றும் சிவில் சமூகத்தின் மீது எவ்வித அதிகாரமும் செலுத்தவியலாமல் மதத்தைத் துண்டிப்பது” என்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்குப் பதிலாக, அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல் என்ற மோசடியான விளக்கம் இந்திய மதச்சார்பின்மைக்குத் தரப்பட்டிருப்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தில் மதம், மதச்சார்பின்மை ஆகியவை தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதுடன், மதம் – மத நம்பிக்கை குறித்து உச்சநீதி மன்றம் அளித்துள்ள விளக்கங்கள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கே எதிரானவை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறது இந்நூல்.

இந்து – முசுலீம் தனிநபர் சட்டங்கள் பற்றிய ஒப்பீட்டைப் படிக்கும் வாசகர்கள் இந்து சட்டத்தின் ‘முற்போக்கான’ தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். எதார்த்தத்தில் இல்லாத இந்து மதத்தைச் சட்டத்தின் மூலம் செயற்கையாக உருவாக்கும் முயற்சிதான் ‘இந்து தனிநபர் சட்டம்’ என்பது வரலாற்று விவரங்களுடன் தரப்பட்டுள்ளது. அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்கக் கூடாது என்று வாதாடும் பாரதீய ஜனதா, குடும்பத்திலிருந்து மட்டும் மதத்தைப் பிரிக்க வேண்டும் என்று கூறும் இரட்டை வேடத்தின் நோக்கம் ஆராயப்பட்டுள்ளது. இறுதியாக, பாரதீய ஜனதாவிதற்கு எதிராகப் போலி கம்யூனிஸ்டுகள் முதல் பின் நவீனத்துவ அறிஞர்கள் வரை பல தரப்பினரும் வைக்கும் தீர்வுகளுக்கான மறுப்புரை தரப்பட்டுள்ளது. உண்மையான மதச்சார்பின்மைக்கும் மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்குமான போராட்டம் மட்டுமே இந்துத்துவத்தை முறியடிக்கும் என்பதை நூல் வலியுறுத்துகிறது.

1995 –இல் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு உருவாக்கிய விவாதத்தையொட்டி புதிய கலாச்சாரத்தில் தோழர் சூரியன் எழுதிய தொடர் கட்டுரையை தற்போது நூல் வடிவில் தருகிறோம் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டத்திற்கு இது பெரிதும் பயன்படும் என நம்புகிறோம்.

(நூலின் முன்னுரையிலிருந்து)

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா

பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள்
புதிய கலாச்சாரம் கட்டுரைகள்

வெளியீடு : கீழைக்காற்று

விலை : ரூ 40
பக்கங்கள் : 64

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

எண்: 80-81 (முதல் நுழைவாயில்)

38-வது சென்னை புத்தகக்காட்சி
சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி,
நந்தனம், சென்னை – 35

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை

civil-code-1 civil-code-2

 

தடுமாற்றமும் போராட்டமும் – நூல் அறிமுகம்

0

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொருளாளராக இருந்த தோழர் சீனிவாசனின் நினைவேந்தல் நிகழ்வில் தோழர் மருதையன் ஆற்றிய உரை கீழைக்காற்று பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

ninaivu-koorthalநினைவேந்தல் கூட்டங்களில் நினைவுகூரப்படும் நபர்களைப்பற்றி புகழ்ந்து பேசுவார்கள்; அந்த நபரின் வாழ்க்கை பற்றி சில விசயங்களை தெரிந்துகொள்ளலாம்; அதைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்? என்ற கேள்வி உங்களுக்கு இருப்பின் அதை இந்தப் புத்தகம் நிச்சயமாக உடைத்தெறியும்.

தோழர் சீனிவாசனின் நினைவலைகளில் ஆரம்பிக்கும் எழுத்து அதனூடாக பயணித்து வாசகனின் சமூக வாழ்க்கை குறித்த பரிசீலனையாக, விளக்கமாக, தீர்வாக பல தளங்களில் விரிந்து செல்கிறது.

சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. புதிய சமூகத்தை படைப்பதற்கான போராட்டமும், யதார்த்த வாழ்வும் மோதிக்கொள்ளும் போது ஏற்படும் தடுமாற்றத்தை இந்நுல் விவரிக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்ல ‘தேவகுமாரனுக்கு’ இந்த தடுமாற்றம் ஏற்பட்டதை சுட்டிக் காட்டுகிறார் தோழர் மருதையன். இத்தகைய தடுமாற்றத்தை எப்படி எதிர்கொண்டு வெளிவருவது என்பதையும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

ஆசான்களின், தோழர்களின் தியாகங்கள் அவ்வளவு எளிமையானதா இருந்ததா? அதற்கு பின்னால் இருந்த துயரமென்ன? இதை அனுபவிக்காமல் அவர்களின் மகத்துவத்தை அறிந்ததாக சொல்லமுடியுமா? என்ற கேள்வியை எழுப்புகிறது இந்நூல். மார்க்சின் தியாக வாழ்வயும் அதன் வலியையும் மார்க்சின் வார்த்தைகளிலிருந்தே அறியத் தருகிறார் தோழர் மருதையன்.

“தோழர் போராடினார், உறுதியாக இருந்தார், மகிழ்ச்சியாக இருந்தார்” என்பதெல்லாம் நமக்கு தெரிகின்ற சொற்கள். அதற்கு பின்னால் ஒரு மனிதன் தன்னுடைய பலவீனங்களுக்கு எதிராக, தன்னுடைய குறைகளுக்கு எதிராக நடத்திய ஒரு போராட்டம் இருக்கிறது. அது அளித்த துயரம் இருக்கிறது. தோழர்களின் மேன்மைகள் எனப்படுபவையெல்லாம் தமது பலவீனங்களுக்கு எதிராக, தவறுகளுக்கு எதிராக அவர்கள் நடத்தும் தொடர்ந்த போராட்டத்தின் ஊடாகத்தான் சாதிக்கப்படுகின்றன.” சமூக மாற்றத்திற்கு உழைக்கும் அனைவருக்கும் கொண்டிருக்க வேண்டிய கண்ணோட்டம் இது.

அங்கீகாரத்திற்காக அலையும் அற்பற்களுக்கு மத்தியில் கம்யூனிஸ்டுகளோ, இல்லை சிறந்த அறிவியலாளர்களோ எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை சுந்தரராமசாமி எனும் இலக்கியவாதியின் கவிதையையும், ஐன்ஸ்டீன் மற்றும் மார்க்சின் கவிதைகளையும் முன்வைத்து புரியவைக்கிறது இந்நூல்.

இந்நூல் முழுக்க பல புதிய தகவல்கள் காணக்கிடைகின்றன. தோழர்களுடனான பகத்சிங்கின் விவாதம்; மெய்காப்பாளருடனான லெனினின் விவாதம்; மார்க்ஸ், லெனின், பகத்சிங், ஐன்ஸ்டீன் என பல ஆளுமைகளின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் நூலின் கண்ணோட்டத்திற்கு பலம் சேர்ப்பதோடு சுவாரஸ்யமானதாகவும், வாசகர்களுக்கு புதியதாகவும் இருக்கின்றன.

சமூக மாற்றத்தை விரும்புவர்களும், சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களும் தங்கள வாழ்வில் எதிர் கொள்ளும் தடுமாற்றங்களுக்கு எதிராக போராட கற்றுத்தரும் ஆயுதம் இந்தப் புத்தகம்.

நினைவுகூர்தல்

தடுமாற்றமும் போராட்டமும்

– மருதையன்

வெளியீடு : கீழைக்காற்று வெளியீட்டகம்
விலை : ரூ 15
பக்கங்கள் : 24

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

எண்: 80-81 (முதல் நுழைவாயில்)

38-வது சென்னை புத்தகக்காட்சி
சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி,
நந்தனம், சென்னை – 35

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை

ninavu-koorthal-front ninaivu-koorthal-back

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

கடலூர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரின் ஆதிக்க சாதி வெறி

5

புழு பூச்சிகள் மனிதனாக பரிணமித்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனிதன் நாகரீக நிலையை இன்னும் அடையவில்லை. தமிழகத்தில் ஆதிக்க சாதி வெறியின் கொடுங்கரங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை. கடலூர் மாவட்டம் புலியூர் கிராமத்தில் 700 குடும்பங்களைக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வன்னிய சாதியைச் சேர்ந்த ஆதிக்க சாதிவெறியர்களுக்கு எதிராக குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் முதல் முதலாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வன்னிய சாதி அரசியல்
வன்னியர் சாதி அரசியல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட புலியூர் காலனியை சார்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கடந்த 2/01/2015 அன்று காலை 8 மணியளவில் அரசு பேருந்தில் கல்லூரிக்கு பயணித்து கொண்டிருந்த போது தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல்முருகனின் சொந்த வகையறாக்களால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

‘தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்-மாணவர்கள் நாகரீகமான உடையணியக் கூடாது, சட்டையை அயன் பண்ணி போடக்கூடாது. காலில் ஷூ போடக் கூடாது. பேருந்துகளில் சத்தமாக பேசக்கூடாது. ஆதிக்க சாதி பெண்கள் நிற்கும் பகுதிகளில் கண்டிப்பாக நிற்கக் கூடாது’ என்பன போன்ற எழுதப்படாத சட்டங்கள் இந்த முந்திரி காட்டு கிராமங்களில் ஆதிக்க சாதியினரால் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ‘சட்டங்களை’ மீறியதற்காக பேருந்தில் இருந்த புலியூர் த.வா.கட்சி சாதி வெறியர்கள், “என்னடா பரத் தே…… பயனுகளா உங்களுக்கெல்லாம் திமிர் ஏறிப் போச்சி” என்று திட்டிக் கொண்டே யாருக்கோ போன் போட்டு, “சேரிப்பயனுங்க எங்ககிட்ட திமிறா பேசுறானுங்க உடனே கிளம்பி வாங்க” என்று அழைத்தனர். தொடர்ந்து அம்பலவாணன் பேட்டையில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் பேருந்தை வழி மறித்தனர். அவர்களுடன், ஏற்கனவே பேருந்திற்குள் இருந்த த.வா.கட்சியினர் 20 பேர் சேர்ந்து 5 தாழ்த்தப்பட்ட இளைஞர்களை உருட்டுக் கட்டையாலும், கற்களாலும் தாக்கினார்கள். தாழ்த்தப்பட்ட மாணவர்களின் ஷூவை பிடுங்கி அடித்தார்கள்.

தாக்கப்பட்ட மாணவர்கள் குள்ளஞ்சாவடி காவல்நிலையத்திற்கு சென்று எழுதிக் கொடுத்த புகார் மனுவை வாங்காமல்,

“நீங்கள் எல்லோரும் 108-ல கடலூர் அரசு மருத்துவமனைக்கு போங்க, நாங்கள் அங்கு வந்து விசாரித்து வழக்கு பதிவு செய்கிறோம்” என அனுப்பியது போலீசு. தலையில் அடிபட்டு ரத்தக் காயத்துடன் மயக்க நிலையில் இருந்த ஒரு மாணவரிடம் அசிங்கமாகப் பேசுதல், கொலை செய்வதாக மிரட்டுதல், கட்டையால் அடித்தல் என்ற முறையில் புகார் மனு எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டனர்.

அடிபட்ட மாணவர்கள் தலை, உடம்பு பகுதிகளில் ரத்தம் ஒழுகியவாறு 108-ல் ஏற்றப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் வந்து இறங்கினர். அதே பகுதியைச் சார்ந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் கடலூர் பகுதி தோழர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்தனர். புலியூர் தோழர்களும் கடலூர் பகுதி பு.மா.இ.மு செயலாளர் கருணாமூர்த்தியும், தோழர்களும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட இணைச் செயலர் செந்தில் குமார் உடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர்களுடன் வந்திருந்த உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவர்களிடம் ,

“ஆதிக்க சாதியினரோடு போலீசு சேர்ந்துகொண்டு தலித் இளைஞர்கள் மீது சுமார் 30-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. அவற்றைத் திரும்ப பெற வேண்டும். தாக்குதல் நடத்திய த.வா கட்சியை சார்ந்த குண்டர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து புகார் கொடுக்கலாம்” என்று கோரப்பட்டது.

சிறிது நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் தாமரைசெல்வன் காரில் வந்து இறங்கி பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு, அங்கு கூடி இருந்தவர்களையும் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு, “இன்று வெள்ளிக்கிழமை. திங்கள்கிழமை நாம்  எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அனைவரும் இப்போதைக்கு கலைந்து செல்லலாம்” என்று கூறினார். நடந்த சம்பவத்தையும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் புகைப் படத்தையும் பேஸ்புக்கில் போட்டு விட்டுக் கிளம்பிவிட்டார்.

பு.மா.இ.மு தோழர்கள் உறவினர்கள் மற்றும் வி.சி கட்சியை சார்ந்தவர்கள், புலியூர்காரர்களை மருத்துவமனையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அறிவிக்கப்படாத பேரணியாக, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும்படி அழைத்துச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரும், தோழர்களும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து  புகார் மனுவை கொடுத்தனர். அவர் “கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கிறோம்” என்று கூறினார். ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் சடங்கு அளவிற்குக்கூட நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த இளைஞர்கள், “ஆண்டாண்டு காலமாக நாங்கள் நல்ல சட்டை போடமுடியாது தோழர். எங்கள் கருத்தை நாங்கள் சத்தமாக பேச முடியாது. வன்னியர்கள் எங்களை அடிச்சிட்டு எங்கள் மேலேயே வழக்கு போட்டுவாங்க. எங்க மேல ஆடு திருடினான், கரும்பை கொளுத்திட்டான் என்று படிச்ச பசங்க மேல போட்ட வழக்கு மட்டும் சுமார் 30 வழக்குகள் இருக்கும். ஆனால் அவங்க எவ்வளவு அடிச்சாலும் நாங்கள் நீட்டாத்தான் சட்டையைப் போடுவோம். எந்த காரணத்துக்காக அடித்தார்களோ அதற்கு எதிராக இன்று நாங்கள் எல்லோரும் அயன் பண்ண பேன்ட், சட்டையை, ஷூவையும் போட்டுக்கிட்டு வந்துள்ளோம்” என்று ஆத்திரம் பொங்க பேசினார்கள்.

4/01/15 அன்று கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டிருந்த மாணவர்களுக்கு எந்த விதமான மருத்துவமும் பார்க்காமல் 108 ஆம்புலன்சில் போட்ட இரத்தக் கட்டை பிரித்து கூட பார்க்காமல், அது எப்படி இருக்கிறது என்று தொட்டுக் கூட பார்க்காமல், “உங்க உடலுக்கு எந்த பிரச்னையும் இல்லை எல்லோரும் இப்போதே டிச்சார்ஜ் ஆகிடுங்க” என்று கூறியிருக்கிறார்கள்.

இதற்கு மாணவர்கள் “எங்களுக்கு மருத்துவம் பார்க்காமல் இப்படி வெளியேற்றுவது சரியா டாக்டர்” என கேள்வி எழுப்பியதற்கு “நான் டாக்டரா நீங்க டாக்டரா” என்று கூறி வெளியேற்ற முயற்சி செய்தனர். பு.மா.இ.மு தோழர்கள் மருத்துவமனைக்கு சென்று நிர்வாக அதிகாரியை சந்தித்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்காமல் வெளியேற்றுவது சரியில்லை என்று வாதிட்ட பிறகு மீண்டும் மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.

5/1/15 அன்று மீண்டும் போலீசின் உதவியுடன் மாணவர்களை மிரட்டி வெளியேற்ற முயற்சி செய்தார்கள். அப்போது மாணவர்கள், “எங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை, ரத்தக் கட்டுகளை பிரித்துக்கூட பார்க்கவில்லை. குள்ளன்சாவடி காவல்துறையும் இதுவரை விசாரிக்க வரவில்லை” என்று பேசியதும், “உங்க மீது வழக்கு போடுவேன்” என மிரட்டியது போலீசு.

வி.சி.கட்சியினர் பெருங்கூட்டமாக திரண்டுவந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களிடம், “எங்களை எதற்குடா கூப்பிடல. அந்த மாணவர் அமைப்புகாரனுங்க கடைசி வரைக்கும் உங்க கூட இருப்பாங்களா? நாங்க வேணுமா வேணாமா? எங்களை மீறி நீங்க என்ன செய்து விட முடியும்” என்று மிரட்டினர். “உங்களை எவன் டிஸ்சார்ஜ் பண்ணச் சொன்னான்” என்று மருத்துவமனையின் பெருக்கும் பெண்களையும், மாத்திரை மருந்து தரும் நர்சுகளையும் மிரட்டிக் கொண்டிருந்தனர்.

தோழர்கள் மருத்துவமனை நிர்வாகி சாயிலீலாவை சந்தித்து பேசுவதற்காக சென்றிருந்தபோது, “புலியூர் மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை அவங்க வேண்டுமென படுத்துக்கொண்டு இருக்கானுங்க. சாதாரண காயத்தைக் காட்டிக் கொண்டு திமிராக பேசுறானுங்க” என ஒரு நர்சு அந்த அதிகாரியிடம் தவறான புகார் கூறியிருந்தார்கள்.

மருத்துவமனை நிர்வாகியிடம் தோழர்கள் “மாணவர்கள் மருத்துவமனையில் சேர்த்து நான்கு நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் 108 ஆம்புலன்சில் போட்ட கட்டை இன்றுவரை பிரித்து பார்க்கவில்லை. எக்ஸ்ரே ஸ்கேன் என எதுவும் எடுக்கவில்லை. ஒரு மாணவருக்கு இரண்டு நாட்களாக வயிற்றுப்போக்கு. மாத்திரை கேட்டுப் பார்த்து விட்டு வெளிக்கடைகளில் வாங்கி சாப்பிடுகிறார்கள். நோயாளிகளை வெளியேற்ற போலீசுக்கு மருத்துவமனையில் என்ன வேலை?” என்று கேட்டனர்.

“இவ்வளவு பிரச்சனை இருக்குன்னு தெரியாது. போலீசு உள்ளே வந்தது தப்பு. மாணவர்களை பார்க்க டாக்டரை அனுப்புறேன்” என்று கூறினார்கள்.

தோழர்கள் பேசிய விவரம் தெரியாத வி.சி. கட்சியினர் மீண்டும் கூச்சலிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது ஒரு மருத்துவர் வந்து “போலீசு உள்ளே வந்தது தவறுதான். உங்களுக்கு சிகிச்சையில் சந்தேகம் இருந்தால் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுங்க. அதுல பிரச்சனை இருந்தா மீண்டும் மருத்துவமனையிலே இருங்க. இல்லைனா வெளியே போய்டுங்க” எனக் கேட்டதும் அதற்கு மேல் பேசத்தெரியாமல் வி.சி கட்சியினர் கையை பிசைந்து கொண்டு நின்றனர்.

உடனே தோழர்கள் குறுக்கிட்டு “சிகிச்சை பார்க்கவே இல்லை. நோயாளியின் பதிவேட்டில் அவர்களுடைய எடை, உயரம் இவையெல்லாம் தவறாக பதிவு செய்யபட்டுள்ளது. மேலும் ஆம்புலன்சில் முதல்உதவிக்காக போட்ட கட்டு இன்னும் பிரிக்காமல் இருக்கிறது” என்று விளக்கிபேசியதும் மருத்துவர் அமைதியாக மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்று விட்டார்.

போலீசு, மருத்துவமனை என்று எங்கு சென்றாலும் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களை விரட்டுவதற்கு எதிராக அவர்களை கண்டித்து ஆதிக்க சாதிவெறிக்கு பல்லக்கு தூக்கும் போலீசு என்ற தலைப்பில் போஸ்டர் போட்டு சம்பவம் நடந்த அருகாமையில் உள்ள கிராமங்களில் அம்பலப்படுத்தி ஒட்டப்பட்டது.

puliyur-caste-posterசம்பவம் நடந்த இரண்டு நாட்களில் போலீசு கைது நடவடிக்கைக்காக சென்றபோது வேல்முருகன் அண்ணன் திருமால்வளவன் கைதிகளுக்கு அடைக்கலம் கொடுததது மட்டும் இல்லாமல் “எங்க வீட்டுக்கு வந்து கைது செய்திருவீங்களா” என்று திமிராக பேசி பக்கத்தில் இருந்த கழியை எடுத்து போலீசை விரட்டி அடித்து இருக்கிறார். பின்னர்தான் கொலை மிரட்டல், தகராறு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இப்படி இந்த சம்பவத்துக்கு பக்கபலமாக த.வா.க வேல்முருகன் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

மேலும் 4/01/15 அன்று வேல்முருகன் அப்பா இறந்ததற்கு படத் திறப்பு விழாவிற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், ம.தி.மு.க வைகோ, சீமான் வந்தார்கள். இறந்த அன்று வந்திருந்த வி.சி.க திருமாவளவனும் படத்திறப்புக்கு வருவதாக இருந்தார். மக்கள் அவர் வந்தால் வழிமறித்து கேக்கலாம் என்று இருந்த செய்தி தெரிந்த பிறகு நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்த்து விட்டார். ஆனால் அந்தப் பகுதி வி.சி.கவை சேர்ந்தவர்கள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

இப்படிப்பட்ட  வேல்முருகன்தான் தமிழர்களின் பாதுகாவலன் என்றும் திருமாவளவன் தலித்துகளின் அண்ணன் என்றும் வலம் வருகின்றனர். தலித் அமைப்புகள், 150 தமிழின அமைப்புகள், பல்வேறு தொழில் சங்கங்கள் இணைத்து கொண்டு தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருகிறார்கள். பா.ம.கவிற்கும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. இருவரும் தமிழினம், ஈழம் என்று ஒன்றையும் விட்டு வைக்க மாட்டார்கள். மேலோட்டமாக தலித்துக்களை ஆதரிப்பதாக கூறிக் கொண்டு அடிப்படையில் ஆதிக்க சாதிவெறியை பாதுகாப்பார்கள்.

உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடையும் இவர்களை அம்பலப்படுத்தி,

  • தலித் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்,
  • அவர்கள் மேல் போட்டுள்ள வழ்க்குகளை வன்கொடுமை சட்டத்துக்கு மாற்ற வேண்டும்

என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட இருக்கிறோம்.

இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்.

திருவண்ணாமலை பாலியல் வன்முறை – HRPC ஆர்ப்பாட்டம்

0

திருவண்ணாமலை நகரத்தில் கடந்த 29-12-2014 அன்று மாலை மணி 6.30 அளவில் டியுசன் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை அஸ்வின், வினோத் என்ற இரண்டு பொறுக்கிகள் கத்திமுனையில் ஆட்டோவில் கடத்திசென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அம்மாணவியின் வீட்டின் அருகேயே விட்டுவிட்டு இதை வெளியில் சொன்னால் கொலைசெய்து விடுவோம் என மிரட்டிவிட்டு சென்றிருக்கின்றனர். இதைக் கண்டித்தும் இந்த கிரிமினல்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில்  13.01.2015 அன்று மாலை 6.00 மணிக்கு திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

thiruvannamalai-student-rape-5இக்கண்டன ஆர்பாட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் தோழர்.சரவணன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்

“2012 -ம் ஆண்டு இறுதியில் டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்டு அதற்கு எதிராக நாடுமுழுக்க மக்கள் போராடிகொண்டிருந்தபோது டெல்லி பாட்டியாலா நீதி மன்றத்தில் ‘ஹோலிமேன்’ என்ற விழாவில் நீதிமன்ற வளாகத்திலேயே பெண் வழக்கறிஞர்கள் முன்னிலையிலேயே அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனத்தை நடத்தி கொண்டிருந்தவர்கள் தான் நீதிபதிகள். திண்டுக்கல் ரீட்டா, சிவகாசி ஜெயலட்சுமி ஆகியோர் உட்பட பல பெண்கள் போலிசாரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டுள்ளதை எடுத்துக்கூறி பெண்களை பாதுகாக்க வேண்டிய போலிசும், நீதிமன்றமும் பாலியல் குற்றவாளிகளாக இருக்கும் போது குற்றவாளிகளிடமே சென்று நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்காமல் வீதிக்கு வீதி மக்கள் பாதுகாப்பு கமிட்டியை கட்டியமைப்பதன் மூலமாகத்தான் நமது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியும்” என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார் .

அவரை தொடர்ந்து  AITUC கவுரவத்தலைவர் வே.முத்தையன்,  வழக்கறிஞர் மு.ஜெயபாலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தித்தொடர்பாளர் சாரோன்.சௌந்தர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆ.சக்திவேல், மனித உரிமை பாதுகாப்பு மைய திருவண்ணாமலை மாவட்ட கிளையினுடைய வழக்கறிஞர் சு.கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். புதுச்சேரி மாநில புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலாளர் தோழர்.லோகநாதனும், மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.ராஜூவும் சிறப்புரையாற்றினர்.

 

thiruvannamalai-student-rape-4

வழக்கறிஞர் முத்தையன் கண்டன உரையாற்றுகையில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டித்து,பாலியல் வன்முறைக்கு அரசுதான் முதல் குற்றவாளி. நாட்டை ஆளும் கட்சிகள் தான் காரணம். இவர்களை தூக்கி எறிந்துவிட்டு கம்யூனிச அரசமைப்பை நிறுவ வேண்டும்’ என்று வலியுறுத்தியும் பேசினார்.

வழக்கறிஞர் சாரோன் சௌந்தர் பேசுகையில் “ஓட்டுக்கட்சிகள் ரவுடிகளை அடியாட்களாக பயன்படுத்திக் கொண்டும், அவர்கள் குற்றத்தில் ஈடுபட்டால் காப்பாற்றிக்கொண்டும் அவர்களை கிரிமினல்களாகவே வளர்க்கின்றனர். அப்படிப்பட்ட ரவுடிகளை சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும், தேவைப்பட்டால் அவர்கள் வழியிலேயும் சென்று எதிர்கொள்ளத் தயாராகவேண்டும். அதற்கு வீதிக்கு வீதி இளைஞர் கமிட்டிகளை கட்டவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

வழக்கறிஞர் ஆ.சக்திவேல் பேசுகையில் “பழங்குடி பெண்களையும், இரவில் புகார் தெரிவிக்க வரும் பெண்களையும் போலிசே பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குகிறது” என்பதை சுட்டிக் காட்டினார். இதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசோ , “181 என்ற எண்ணுக்கு அழையுங்கள் பெண்களை காப்பாற்ற” என்று கூறுவதை கண்டித்தார். ஆபத்து நேரத்தில் தன்னை காப்பற்றிக்கொள்ள பார்ப்பாளா? அல்லது போன் செய்து கொண்டிருப்பாளா ? இது அரசின், ஆளும் வர்க்கத்தின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது, ஆளும் வர்க்கம் சீரழிந்து விட்டது என்பதை காட்டுகிறது” என்று அம்பலப்படுத்தினார்.

thiruvannamalai-student-rape-1

வழக்கறிஞர் கண்ணன் பேசுகையில் “பாலியல் வன்முறையை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக செயல் பட்ட வழக்கறிஞர் D.குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது புகார் கொடுக்க தற்போதுள்ள மாவட்ட காவல் துறை எஸ்.பியை சந்திக்க முயற்சித்த போது அவரை நேரில் பார்க்க முடியவில்லை, போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் வழக்கறிஞர்கள் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்த பிறகுதான் கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்துள்ளனர். ”என்றார்.

சிறப்புரையாற்றிய புதுச்சேரி மாநில புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைச்செயலாளர் தோழர்.லோகநாதன் பாலியல் வன்முறைக்கு காரணமான தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கையை அம்பலப்படுத்தியும், அந்நிய முதலீட்டால் பெண் தொழிலாளிகளின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்றும், பெண்கள் ஆபாசமாக உடை அணிவதால்தான் பாலியல் வன்முறைகள் நடக்கிறது என்று கூறுவோருக்கு உரைக்கும் விதமாக 2 வயது குழந்தையும், 60 வயது பாட்டியும் எந்த ஆபாச உடைகளை அணிகிறார்கள். அவர்கள் ஏன் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர் ? இதற்கெல்லாம் காரணம் தனியார்மய உலகமய கொள்கைதான் என்றும், தனியார்மய கொள்கைக்கு எதிராக போராடாமல் பெண்களுக்கு விடிவு இல்லை என்றார் .

thiruvannamalai-student-rape-2

அடுத்து சிறப்புரை ஆற்றிய மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழகக்கறிஞர் ராஜூ பேசுகையில் “பாலியல் குற்றம் செய்தவர்களை தூக்கில் போடணும் என்கிறார்கள் தொக்கில் போட்டால் மீண்டும் குற்றங்கள் நடக்காதா ? அல்லது நடக்கவில்லையா ? இதற்கு ஆணிவேர் எது? உலகமயமாக்க கொள்கைதானே? அதை முறியடிக்க வேண்டும். திருவண்ணாமலை நகரில் பட்டப்பகலில் ஒரு பெண்ணை கத்திமுனையில் கடத்திசென்று பலாத்காரம் செய்து பின்னர் அப்பெண்ணின் வீட்டின் அருகிலேயே விட்டுவிட்டு போகமுடியம் என்றால் இங்கு இருக்கும் கலெக்டர், மாவட்ட காவல் துறை உட்பட ஆளும் வர்க்கங்கள் தோற்றுப்போய்விட்டது என்றுதானே அர்த்தம்.  பெண்களை இழிவு படுத்தும், ஆணாதிக்கத்தை பரப்பும் இந்து மதத்தை திணிக்கவே ஆளும் வர்க்கங்களும்,அரசும் துடிக்கின்றன. எனவே இவர்களை நம்பாமல், வீதிக்கு வீதி மக்கள் பாதுகாப்பு குழுவை கட்டியமைக்காமல் தீர்வு காண முடியாது. மனித உரிமை பாதுகாப்பு மையத்தில் இணைந்து இதற்கு எதிராக போராடுவோம் வாருங்கள் ” என்று அறைகூவல் விடுத்தார்.

இறுதியாக, மனித உரிமை பாதுகாப்பு மைய திருவண்ணாமலை மாவட்ட கிளையின் உறுப்பினர் தோழர்.சுந்தர் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

thiruvannamalai-student-rape-3பிரச்சார அனுபவங்கள்

தோழர்கள் பேருந்தில் பிரச்சாரம் செய்தபோது ஒரு மக்காச்சோள வியாபாரி குறுக்கிட்டார் அப்போது ஒரு பெண்மணி ‘எங்கள் பிரச்சினைக்காக எந்த கட்சிக்காரனும், அமைப்பும் பேசவில்லை. இவர்கள் பேசுகிறார்கள் குறுக்கிடாதே. உன் வியாபாரத்தை பிறகு செய்’ என்று சொல்லிவிட்டு நிதி கொடுத்தும் ஆதரித்தார் பெரும்பாலானவர்கள் அதரவு தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மக்களின் கருத்து:

பிரகாஷ் என்பவர் “எனக்கு இந்த கூட்டம் நடப்பது பற்றி முன்னதாக தெரியாது. இந்த வழியாக போகும்போது நின்று கவனித்தேன். ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக கவனித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் சிறப்பாக பேசுகிறீர்கள், நீங்கள் சொல்வதுதான் சரி இந்த அரசு மக்களுக்கு எதிரானது என்றும், உங்களை போல்தான் போராடவேண்டும் என்றும் புரிந்துகொண்டேன்” என்றார்.

ஒரு பெண் வியாபாரி, “நீங்கள் சொல்வதுதான் சரி இனிமேல் இனிமேல் இந்த பிரச்சனைகளை தீர்க்க போலிசை நம்பாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள தயாராக வேண்டும். இந்த அரசை நம்பக்கூடாது” என்றார்.

ஆர்ப்பாட்ட முழக்கம்:

கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம் !
பெண்களுக்கு எதிரான
பாலியல் வன்முறையை
கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம் !

தூக்கில் போடு! தூக்கில் போடு!!
பத்தாம் வகுப்பு பெண்ணைக்கடத்தி
பாலியல் வன்முறையை செய்திட்ட
பொம்பள பொறுக்கிகள்
அஸ்வின், வினோத்தை
தூக்கில் போடு! தூக்கில் போடு!!

ஜாமீனில் விடாதே! ஜாமீனில் விடாதே !!
பாலியல் குற்றத்தில் ஈடுப்பட்ட
குற்றவாளிகள் மீது
குண்டர் தடுப்பு சட்டத்தில்
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!!

தமிழக அரசே! தமிழக அரசே !!
பெண்களை இழிவுபடுத்தும்
ஆபாச பத்திரிகைகளையும்
சினிமா விளம்பரங்களையும்
தடை செய்! தடை செய்!!

இளைஞர்களை சீரழிக்கின்ற
ஆபாச பத்திரிக்கைகள்
ஆபாச இணையங்கள்
நடத்திக்கொள்ள அனுமதித்து
கோடி கோடியாய் கொள்ளையடிக்க
முதலாளிக்கு காவல் நிக்குது
அரசாங்கம்! அரசாங்கம்!!

தமிழக அரசே! தமிழக அரசே!!
இழுத்து மூடு! இழுத்து மூடு !!
பாலியல் குற்றத்துக்கு
மூல காரணமான
டாஸ்மாக் கடைகளை
இழுத்து மூடு! இழுத்து மூடு!!

சிதம்பரத்தில் பத்மினி
செஞ்சியில் ரீட்டா மேரி
திருகோவிலூரில் பழங்குடிப் பெண்கள்
வேலியாய் சொல்லப்படும்
போலிசே ஊரை மேய்ந்ததை
நாடே காறி துப்புது!
நாடே காறி துப்புது!!

விடிவு இல்லை! விடிவு இல்லை!!
உழைக்கும் பெண்கள் வீதியில் இறங்காமல்
கிரிமினல் ஆணாதிக்கத் திமிருக்கு
விடிவு இல்லை! விடிவு இல்லை!!

முறியடிப்போம்! முறியடிப்போம்!!
பெண்கள் மீதான வன்முறையைத் தூண்டும்
தனியார் மாயம், தாராளமயம்,
உலகமய கொள்கைகளை முறியடிப்போம்!

முடிவு கட்டுவோம்! முடிவு கட்டுவோம்!!
பெண்கள் மீதான
பாலியல் வன்முறைக்கும்
கிரிமினல் ஆணாதிக்கத்துக்கும்
முடிவு கட்டுவோம்! முடிவு கட்டுவோம்!!

notice-2
notice-1

தகவல்:

திருவண்ணாமலை மாவட்ட கிளை
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

தாய் மரம் !

2
தாய் மரம்
தாய் மரம்

மையலறையில் திடீரென நுழைந்ததும் குட்டி, குட்டி பூச்சிகள் அங்குமிங்கும் சிதறி ஓடின. நாங்கள் சமைத்து பல மாதங்களானதற்கு அந்த பூச்சிகள் சாட்சிகள். ஒரு காலத்தில், சமையலில் எத்தனை விதமான பரிசோதனை முயற்சிகள்! சிலவற்றில் பெரிய வெற்றி; பலவற்றில் தோல்வி என்றாலும், சாப்பிடமுடியாத முடியாத அளவிற்கு, எதுவும் தோற்று போனதில்லை.

அறையில் உள்ள அனைவரும் அலுவலக, சொந்த வேலை பளுவில், பிஸியாகிவிட சமைப்பதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. குறைந்தபட்சம் சுடுதண்ணீர் கூட வைப்பதில்லை!

மூன்று நேரங்களிலும் ஹோட்டலிலேயே சாப்பிட்டதால், இரண்டுவிதமான சிக்கலில் சிக்கினோம். உடல் நலம் கெட்டது; பணம் நிறைய செலவானது. வேறுவழியில்லை. பெருநகரத்தின் பல்சக்கரத்தில் சிக்கி, ஓடிக்கொண்டே இருந்தோம்.

ஒருநாள் திடீரென, சமைக்க ஆள் கிடைக்குமா என தேடிப்பார்க்கலாமே என மண்டையில் பல்பு எரிந்தது. எங்கள் அறையில் டைபாய்டு-ல் உடல் நலமில்லாமல், பஞ்சத்தில் அடிபட்டவனை போல இருந்தவனை (அப்பத்தான் பரிதாபப்பட்டு உடனே உதவுவார்கள்) அனுப்பி, பக்கத்து வீடுகளில், கடைகளில் “சமைக்க ஆள் இருந்தால் சொல்லுங்கள்” என கல்லெறிந்து வைத்தோம். மூன்று மாதங்களாகியும் எந்த நல்ல செய்தியும் காதுக்கு வரவில்லை.

திடீரென ஒருநாள் விடிகாலையில், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா வந்தார்.

“பக்கத்து கடைக்காரர் சொல்லி அனுப்பினார்” என்றார்

“காலை, மாலை இருவேளையும் வரமுடியுமா” என கேட்டோம்.

“குடும்பச் சூழ்நிலையால், ஒரு நேரம் மட்டும் வருகிறேன்” என்று கூறினார். வேறுவழியேயில்லை. ஏற்றுக்கொண்டோம்.

மீண்டும் சமையலறைக்கு உயிர் வந்தது. ஒரு கொழம்பு. ஒரு பொரியல்; ஒரு கூட்டு என வைத்துவிடுவார். அதையே, இரவுவரை வைத்துக்கொண்டு சமாளித்தோம்.

சமீதாம்மா என்ன செய்தாலும் சுவையாக செய்தார். சைவம் அசத்தினார். அசைவம் அதைவிட அசத்தினார். ரசம் மட்டும் விதிவிலக்கு. வாரம் இருமுறை கறி, மீன் என எடுத்து தந்தோம். ஞாயிறு விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என சொன்னால் கூட, எனக்கு தேவையான பொழுது எடுத்துக்கொள்கிறேன் என ஏழுநாளும் வந்து சமைத்தார்.

இப்படியாக, பலவீனமாக இருந்தவர்கள் எல்லாம், நன்றாக தேறினார்கள். இருவருக்கு ஹிப் சைஸ் கூடி பேண்ட் டைட்டாக மாறியது. மூன்று மாதங்களில் சமீதாம்மாவிடம் இயல்பாக பேசும் வழக்கம் வந்திருந்தது.

“என்னம்மா உங்க பேரு ஸ்டைலா இருக்கே?!” என்றால்

“சமீதான்றது என்னுடைய பொண்ணு பேரு தம்பி. அம்மா என்பதால் சமீதாம்மா என கூப்பிடுகிறார்கள்” என்றார்.

“எங்களுக்கே இவ்வளவு அருமையா சமைக்கிறீர்களே! உங்க பிள்ளைகளுக்கு இன்னும் நல்லா சமைப்பீங்களே!” என்றேன் சிரித்துக் கொண்டே!

“அதெல்லாம் இல்லை தம்பி!” என்றார் பொதுவாய்!

“உங்களுக்கு இரண்டு பசங்க! தள்ளு வண்டில பாத்திரம் விக்கிறதா சொல்றீங்க! ஒரு பொண்ணையும் பாதுகாப்பா தம்பிக்கே கட்டிக்கொடுத்திட்டிங்க! அப்புறம் என்ன பிரச்சனை? நீங்க ஏன் வேலைக்கு வருகிறீர்கள்? ” என்றேன்.

அந்த கேள்வி அவரை அசைத்தது.

“என் புருசன் பொறுப்பில்லாதவர் தம்பி. அவர் சம்பாதிப்பதை அவரே குடின்னு தொலைச்சுடுறார். சம்பாதிச்சதுல பேரப்பிள்ளைக்கு ஒரு ரூபாய்க்கு மிட்டாய் கொடுத்தா பெரிய விசயம் தம்பி. ஒரு சொந்த வீடு வேணும்ற கனவுல, வட்டிக்கு பணத்தை வாங்கி, ஒரு இடத்தை வாங்கினோம். வட்டியோட, அந்தக் கடனை இந்த மூணு வருசத்துல, வாயைக்கட்டி, வயித்தக்கட்டி முக்கால்வாசியை அடைச்சிருக்கோம்.

இப்ப அந்த இடத்துல ஒரு வீட்டைக் கட்டி, குடி போகலாம்ற எண்ணத்திலே பிள்ளைக கஷ்டப்படுதுக தம்பி. மூணு வருசமா ரேசன் கடை அரிசியை வாங்கித்தான் சமைக்கிறோம். தினம் புளிக் (காரக்) குழம்பு தான். வேற குழம்பு வைச்சா, வாய்க்கு விளங்காது! நல்ல சோறு சாப்பிட்டு, மூணு வருசம் ஆச்சு! வைராக்கியத்துல வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும், நானும் சித்தாள் வேலைக்கு போயிட்டிருந்தேன். இப்ப உடம்பு தாங்கல! இப்படி சமைக்கிற வேலைக்கு போக வேண்டாம்னு என் பசங்க சொல்றாங்க! நாள் முழுவதும், வெயில், மழையில பிள்ளைக சுற்றி திரியும் பொழுது, வீட்டுல சும்மா உட்கார மனசு கேக்கல!” என்றார் கண்ணீருடன்!

அவ்வப்பொழுது, “இன்னைக்கு உங்க வீட்டுல என்ன கொழம்பு” என கேட்கிற பொழுது, எப்பொழுதுமே மாறாமல் ‘காரக்குழம்பு’ என சொன்னது நினைவுக்கு வந்தது.

இங்கு கறி, மீனு சமைச்சிட்டு, பிள்ளைகளுக்கு காரக்குழம்பு தினமும் வைக்கிற பொழுது, மனம் எவ்வளவு வருந்தியிருப்பார் என எண்ணமும் வந்தது.

அதற்கு பிறகு, இரண்டு மாதம் ஓடிவிட்டது. நேற்று சமைத்து முடித்துவிட்டு,

“திரும்பவும் கடனை வாங்கி, இப்ப வீட்டை கட்டலாம்னு முடிவு செய்ஞ்சு, கடனுக்கு இவ்வளவு நாள் அலைஞ்சோம். இப்ப கடன் கிடைச்சிருச்சு. ஆளோட ஆளா நானும் ஒரு சித்தாளா வீட்டில் வேலை செய்யலாம்னு இருக்கேன். யார் யாருக்கோ இளவயசுலே கல், மண் சுமந்தேன்.. இப்ப நம்ம வீட்டுக்கு சந்தோசமா சுமக்கப்போறேன் தம்பி! நீங்க தான் என்ன செய்யப்போறீங்கன்னு ஒரே கவலையா இருக்கு!” என்றார்.

“பரவாயில்லைங்கம்மா! நாங்க சிரமப்படுவோம் தான். சமாளிச்சுக்குவோம். நீங்க வீட்டை நல்லாபடியா கட்டுங்க! எங்க அம்மா போல உங்களை நினைக்கிறோம். வீட்டைக் கட்டினதும் எங்களுக்கு சொல்லுங்க! பொதுவா, புதுவீடு விசேசத்துக்கு நாங்க போறதில்ல! ஆனால், உங்க வீட்டு விசேஷத்துக்கு கண்டிப்பா வர்றோம்!” என்றேன்.

கண்களில் எங்களைப் பற்றிய கவலையிலேயே, விடைபெற்று போனார்.

இனி, எப்பொழுது காரக்குழம்பு சாப்பிட்டாலும், சமீதாம்மா நினைவுக்கு வருவார்.

நேற்று மீண்டும் சமையலறையில் நுழைந்தேன். சின்ன சின்ன பூச்சிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. எங்களுக்கு சமைத்து, நோயிலிருந்து காத்த‌ சமீதாம்மா போல இன்னொரு தேவதைக்காக காத்திருக்கிறோம்.

குருத்து

ஜனவரி 25 : இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா

12

rsyf

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ன்பார்ந்த மாணவர்களே, உழைக்கும் மக்களே,

1937-ம் ஆண்டிலேயே, அன்று சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை கொல்லைப்புற வழியாக கைப்பற்றிய பார்ப்பன ராஜகோபாலாச்சாரி, 1937 ஏப்ரல் முதல் இந்தியை கட்டாய பாடமாக்கினார். இந்தியா முழுமைக்கும் சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக்கும் நோக்கத்துடன் தான் இந்தியை கட்டாய பாடமாக்குவதாக பகிரங்கமாகவே அறிவித்தார்.

பார்ப்பனராஜாஜிக்குபாடம் புகட்டிய முதல் மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தளமுத்து;

இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் போராட்டம்கொதித்தெழுந்த தமிழக மக்கள் தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார், கி.ஆ.பெ விசுவநாதம் போன்றவர்களின் தலைமையில் இந்தித் திணிப்பை எதிர்த்து வீறுகொண்ட போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சிறை சென்ற நடராசனும் (1939 சனவரி 15- ம் தேதி ), தாளமுத்துவும் (1939 மார்ச்-12 ம் தேதி) தியாகி ஆனார்கள். தமிழகமெங்கும் பற்றிப் படர்ந்த போராட்டத் தீயின் வலிமையால் ராஜகோபாலாச்சாரி பணிந்து இந்தித் திணிப்பு உத்தரவை திரும்பப் பெற்றார்.

இந்தியை கட்டாயமாக்குவதில் இருந்து அன்றைய காங்கிரசு அரசு தற்காலிகமாக பின்வாங்கியதேயொழிய, திட்டத்தைக் கைவிடவில்லை. 1965 சனவரி – 26, குடியரசு தினத்தன்று இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்க முடிவுசெய்தது.

1965 சனவரி-25; அரசைநிலைகுலையச்செய்த வீரம் செறிந்த மாணவர் போராட்டம்!

சென்னையில் கூடிய அனைத்துக் கல்லூரி மாணவர் போரட்டக் குழு அன்றைய நாளை துக்க நாளாக அறிவித்தது. இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்து சனவரி 25-ம் தேதி மதுரையில் தொடங்கிய மாணவர்களின் போராட்டத் தீ சென்னை, நெல்லை, கோவை, திருச்சி என தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டெறிந்தது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து சுமார் 55 நாட்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினர்.

மாணவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது, ஆனால், போரட்டம் ஓயவில்லை. திமிறி எழுந்த மாணவர்களை ஒடுக்க இந்திய ராணுவம் வந்து கொலை வெறியாட்டம் போட்டது. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க இந்திய ராணுவமே இறங்கியது இதுவே முதல் தடவையாகும். திருச்சி மாவட்டம் கீழப்பழவூர் சின்னசாமி, சென்னை கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக மாணவர் ராஜேந்திரன் என வீரமிக்க மாணவர்கள், இளைஞர்களின் உயிர்த் தியாகத்தால் தமிழகமே சிவந்தது. 55 நாட்கள் நீடித்த மாணவர் போராட்டம் இறுதியில் வெற்றி கண்டது.

இது வெறும் இந்தித் திணிப்பு அல்ல -நாட்டை வருண, சாதி – பார்ப்பன சமஸ்கிருதமயமாக்கும் சதி!

அவ்வப்போது பின்வாங்கிய ஆரிய – பார்ப்பன கூட்டம் என்றைக்குமே இந்தியை மட்டும் தனியாக திணிக்க முயன்றதில்லை. நாட்டை ஆரிய பார்ப்பன – சமஸ்கிருதமயமாக்குவதற்கான ஒரு முகாந்திரமாகத்தான் இந்தியை முன்னிறுத்துகிறது. 1937-ல் ராஜாஜி தொடங்கி, பக்தவச்சலம், இன்று மோடி என அனைவரின் நோக்கமும் இதுதான்.

இந்துமதவெறி பாசிஸ்டு மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன் அரசு சமூக வலைதளங்களில் இந்தியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில் தொடங்கி அடுத்தடுத்து இந்துத்துவா வருணாசிரம – சாதி – தீண்மையைக் கொள்கைகளை புகுத்த முயன்றது. இவை வெறும் இந்தியை திணிக்கும் நடவடிக்கைகள் மட்டுமல்ல. பல் தேசிய இனம், மொழி, பண்பாடு கொண்ட நாட்டில் இவற்றையெல்லாம் அழித்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு எனும் ஆரிய – பார்ப்பன கும்பலின் நீண்டநாள் கனவான அகண்ட பாரதத்தை உருவாக்குவது, சமஸ்கிருதமயமாக்குவது, பார்ப்பனியமயக்குவது என்ற திட்டத்தின் பகுதிகள் தாம் இவை.

இன்று நேற்றல்ல, ஆரிய – பார்ப்பன கூட்டம் கி.பி 6-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் மீது ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத ஆதிக்க பண்பாட்டு படையெடுப்பை நிகழ்த்தியது, இன்று மீண்டும் ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி தலைமையில் இரண்டாவது முறையாக படையெடுத்து வருகிறது.

சமஸ்கிருதத்தை ஒரு மொழி என்பதைவிட பார்ப்பன (இந்து) மதத்தின் கொலைக்கருவி என்றுதான் சொல்ல வேண்டும். அது எப்பொழுதுமே ஆளும் வர்க்கங்களான டாடா, அம்பானி போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் நிலபிரபுக்களின் ஆதிக்க கருவியாகத்தான் இருந்து வருகிறது. பிற்போக்குத்தனத்தை – மூடத்தனத்தை, வேத, வைதீக, புராண கட்டுக் கதைகளை போதிக்கும், சனாதன வருணாசிரம தர்மத்தை நியாயப்படுத்தும், தீண்டாமையை அரங்கேற்றும், இவற்றிற்காக கொலை, களவு, பொய், கற்பழிப்பு போன்ற கிரிமினல் குற்றங்கள் செய்யத் தூண்டும், நியாயப்படுத்தும் பகவத் கீதையையும், மனுதர்மத்தையும் வேதநூல்களாக கொண்டதுதான் சமஸ்கிருத மொழியின் பண்பாடு.

வேத, வைதீக – பார்ப்பன – சமஸ்கிருத -இந்தி எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை கட்டியமைப்போம்!

ஆனால், அன்றும், இன்றும் ஆரிய – பார்ப்பன கூட்டத்திற்கு சவாலாக இருப்பது தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி வருணாசிரம – சாதி – தீண்டாமை எதிர்ப்பு பாரம்பரியம்தான். ஆரியத்தை எதிர்த்துப் போராடி இன்றளவும் அழியாமல் புகழோடு நிற்பது நமது தமிழ் மொழியும், பண்பாடும்தான்.

சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தொன்மைவாய்ந்த, வேறு ஒரு பண்பாட்டுத் தளத்தில் தோன்றிய, இலக்கண, இலக்கிய வளம் பொருந்திய, செம்மொழிக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட ஒரே மொழி நமது தமிழ் மொழிதான். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பொதுவுடைமை பேசிய, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவத்தைக் உயர்த்திப் பிடித்த, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய் சொல்லாமை, பிறன்மனை நோக்காமை போன்ற உயரிய அறங்களை கற்பிக்கின்ற பண்பாடுதான் நமது தமிழ் பண்பாடு.

இத்தகைய தமிழ் மொழியை, பண்பாட்டை போர்வாளாக ஏந்தித்தான் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி தலைமையில் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாட்டை வெட்டி வீழ்த்த முடியும். இதை சாதிக்க மாணவர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் அமைப்பாக அணிதிரள்வோம். 1937 லும், 1965 களிலும் தமிழ்மொழி, இனம் காக்க போராட்டக் களம் கண்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டெழுவோம்! வேத, வைதீக – பார்ப்பன – சமஸ்கிருத – இந்தி, வருணாசிரம – சாதி – தீண்டாமை எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை கட்டியமைப்போம்!

2015 சனவரி-25

தமிழ்நாட்டு மாணவர்களின்

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டு.

  • மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டெழுவோம்!
  • தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்துவோம்!
  • மீண்டும் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாட்டை போரிட்டு வீழ்த்துவோம்!
  • ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ் நாட்டை கட்டியமைப்போம்!

சென்னை நிகழ்ச்சி நிரல்:

சனவரி – 15 முதல் மொழிப்போர் தியாகி நடராசன் நினைவுநாள்
அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து – நினைவேந்தல் கூட்டம்:
இடம்; மூலக்கொத்தரம், தியாகி நடராசன் நினைவிடம்.
சனவரி – 15, மாலை 5.00 மணி.

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் கூட்டம்
சனவரி – 25, மாலை- 6 மணி
இடம்: கோடம்பாக்கம்,சென்னை.

 

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
தமிழ்நாடு.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் போராட்டம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் போராட்டம்