Monday, July 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 69

பிக்பாஸ் நிகழ்ச்சி பெறும் கவன ஈர்ப்பை எப்படிப் பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது குறித்து சமூக ஊடகங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டது. செய்தி ஊடகங்கள் கூட இதை கவனித்து செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டிருந்தன. இதை எப்படிப் பார்ப்பது?

டுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்பதை ஒரு போதையாக வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டியது. மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த வகை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மனிதர்களுக்கான விழுமியங்களை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கிறது. அதிலும் குறிப்பாக அனைத்தையும் கேலிக்குரியதாக பார்க்கும் இன்றைய 2K தலைமுறையினரிடம் இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் பல விஷயங்களை தங்களுடைய நிஜ வாழ்க்கையிலும் மக்கள் இயல்பாக பொருத்துகின்றனர்.

அதிலும் தற்போது நடந்துவரும் “பிக்பாஸ் 7” நிகழ்ச்சி மிகவும் வக்கிரமான மனநிலையை உருவாக்குவது குறித்து பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். பாலியல் சீண்டல், பாலியல் வல்லுறவு குறித்தான கீழ்த்தரமான கருத்துக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களால் பேசப்பட்டு வருகிறது. பெண்கள் பாதுகாப்பு, பாலியல் சீண்டல் போன்றவற்றை தன் டி.ஆர்.பி-க்காக விஜய் டிவி கேளிக்கை பொருளாக்கியுள்ளது. பிரதீப் ஆண்டனி போன்ற கீழ்த்தரமான நபர்கள் இன்று சமூக ஊடகங்களில் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறார்கள். இவையெல்லாம், தற்போது மனிதர்களின் நுகர்வுவெறி கலாச்சாரம் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளதையே காட்டுகின்றன.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் தலித்திய அரசியல் தலைவர்களும்

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தலித் மக்கள் தலைவர்களே பெரிதாக கண்டுக்கொண்டதாக தெரியவில்லை. தி.மு.க. ஆட்சியில் இந்த தாக்குதல்கள் அதிகரிப்பதை ஏற்கக் கூட மறுக்கின்றனர். சாதாரணமாக கடந்து செல்கின்றனர். இதனை எப்படி புரிந்துகொள்வது?

ப்படி ஒரு சந்தர்ப்பவாதமான போக்கு தலித் மக்கள் தலைவர்களிடம் உள்ளதுதான். தி.மு.க. ஆட்சியில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது. ஆனால், தற்போது தி.மு.க. ஆட்சியில் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதை பற்றி பேசாமல் காலங்காலமாக தாக்குதல்கள் நிகழ்ந்துவருகிறது, கஞ்சா போதையில் நடக்கிறது என்று தட்டிக்கழிப்பது என்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதம், பிழைப்புவாத அணுகுமுறை. மேலும், தலித் மக்களில் ஒருபிரிவினர் (அருந்ததியர், பறையர், தேவேந்திர குல வேளாளர்) மீது தாக்குதல் தொடுக்கும்போது அதற்கு மற்ற பிரிவைச் சார்ந்த தலித் தலைவரோ சங்கமோ கண்டனங்களைத் தெரிவிப்பதுடன் நிறுத்திக்கொள்கின்றன. அதற்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதை விட, தங்களுடைய பிழைப்புவாத நோக்கத்திற்காகவே பாடுபடுகின்றனர் என்பதே உண்மைநிலை.

அதேபோல நடந்துவரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களுக்கு வேறொரு பரிமாணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் சாதியத் தாக்குதல்கள் அதிகரிப்பதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்திட்டம் உள்ளது. தனது இந்துமதவெறியின் மூலம் தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியாத சங்கப் பரிவாரக் கும்பல், சாதிவெறியின் மூலம் தனக்கான அடித்தளத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த அபாயகரமான போக்கை நாம் உடனடியாக தடுத்தாக வேண்டியுள்ளது.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மோடி செல்ஃபி பாயிண்ட்: மக்களின் வரிப்பணத்தில் படாடோப விளம்பரம்!

ந்திய மக்களுக்கு ஒரு ‘இனிய’ செய்தி! மோடியின் கடந்த ஒன்பதரை ஆண்டுக்கால ஆட்சியில் மக்கள் பல்வேறு ‘இன்பங்களை’ அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக, வேலையின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி மூலம் சிறு, குறு தொழில்கள் நசிவு, ஏழை மாணவர்களின் கல்வி பறிப்பு, பசி – பட்டினி சாவுகள், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகள் என மோடியின் சாதனையை சொல்லிக் கொண்டே போகலாம். இதுபோன்ற எண்ணற்ற சாதனைகள் புரிந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முப்பரிமாண புகைப்படத்துடன் மக்கள் இனி செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம். ஆம், அதற்கு இந்திய ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய, வடக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து ரயில்வேக்களும் மோடியின் முப்பரிமாண செல்ஃபி பாயிண்டை ரயில்வே நிலையங்களில் நிறுவிவருகின்றனர். ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி அஜய் போஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு மத்திய ரயில்வே துறை அளித்துள்ள பதிலில் இது தெரியவந்துள்ளது.

இதன்படி, மத்திய ரயில்வே மும்பை, புசவால், நாக்பூர், பூனே மற்றும் சோலப்பூர் ஆகிய 5 மண்டலங்களில் உள்ள 50 நிலையங்களில் ₹1.65 கோடி செலவு செய்து மோடி செல்ஃபி பாயிண்டை நிறுவியுள்ளது.

சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், கல்யாண், நாக்பூர், பெதுல் ஆகிய 30 A வகை நிலையங்களில் ₹1.25 லட்சம் செலவு செய்து தற்காலிக பாயிண்டையும் கர்ஜத், கசாரா, லத்தூர், கோபர்கான் ஆகிய 20 C வகை நிலையங்களில் ₹6.25 லட்சம் செலவு செய்து நிரந்தர பாயிண்டையும் நிறுவியுள்ளது மத்திய ரயில்வே.

மேலும், மேற்கு ரயில்வேவின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான பாவ்நகர் மட்டுமே ஆர்.டி.ஐ கேள்விக்கு பதிலளித்தது. டிசம்பர் 4-ஆம் தேதி நிலவரப்படி, மேற்கு ரயில்வே பாவ்நகர் கோட்டத்தின் வெராவல், பாவ்நகர் டெர்மினஸ், பொடாட், தண்டூகா மற்றும் காந்திகிராம் ஆகிய ஐந்து நிலையங்களில் செல்ஃபி பாயிண்ட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.


படிக்க: ஆன்லைன் தணிக்கையில் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழும் பாசிச மோடி அரசு


வடக்கு ரயில்வேயும் 100 வெவ்வேறு இடங்களில் பிரதமரின் செல்ஃபி பாயிண்ட் நிறுவப்படும் என்று பதிலளித்துள்ளது. குறிப்பாக, டேராடூன், அம்பாலா, புது தில்லி, அமிர்தசரஸ், அயோத்தி, சண்டிகர் ஆகிய இடங்களில் ஒரே நிலையத்தில் மூன்று பாயிண்டை நிறுவ உள்ளது.

தெற்கு ரயில்வேவின் திருச்சிராப்பள்ளி பிரிவில், திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர், திருவாரூர் சந்திப்புகள் மற்றும் வேலூர் கன்டோன்மென்ட் உள்ளிட்ட 11 நிலையங்களில் பிரதமரின் 3டி செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்படும் என்று திருச்சிராப்பள்ளி கோட்டம் தெரிவித்துள்ளது.

செல்ஃபி பாயிண்ட் நிறுவ எவ்வளவு செலவானது என்பதை வடக்கு, தெற்கு, மேற்கு ரயில்வேக்கள் தெரிவிக்கவில்லை.

மேற்குறிப்பிட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸின் சசி தரூர் மற்றும் சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் பிரதமரின் செல்பி பாயிண்டை விமர்சித்துள்ளனர்.

“வரி செலுத்துவோரின் பணத்தை முற்றிலும் வெறுக்கத்தக்க வகையில் வீணடிக்கிறது மோடி அரசு. மாநிலங்களுக்கு வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் வழங்கவில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கான 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியும் நிலுவையில் உள்ளது” என்று கார்கே சாடியுள்ளார்.

வெள்ள நிவாரண நிதி கேட்டால் பல்வேறு உருட்டுகளை உருட்டிக் கொண்டிருக்கும் நிர்மலா – மோடி கும்பல் சுய விளம்பரத்திற்காக மக்களின் வரிப் பணத்தை அள்ளி இறைத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் எந்தவிதமான கூச்ச நாச்சமும் அற்றவர்கள்.


படிக்க: கருத்துச் சுதந்திரத்திற்கு கல்லறை கட்டிவரும் பாசிச மோடி அரசு!


பல ஆண்டுகளாக இந்திய ரயில்வே தேவைக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டே இயங்கி வருகிறது. குறிப்பாக தண்டவாளங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணிகளில் கூட போதுமான தொழிலாளர்கள் நிரப்பப்படவில்லை. தண்டவாளப் பராமரிப்புப் பணிகளும் முறையாகச் செய்யப்படவில்லை. இதை ஜூன் 2, 2023 அன்று ஒடிசா மாநிலம் பாலசோரில் நடைபெற்ற கோர ரயில் விபத்து வெளிச்சம் போட்டுக் காட்டியது. சி.ஏ.ஜி அறிக்கையும் இதை உறுதிப்படுத்தியது.

மோடியின் செல்ஃபி பாயிண்டை அமைப்பது என்பது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக, கடந்த அக்டோபர் மாதத்தில் இந்திய ஆயுதப் படையில் 822 செல்ஃபி நிலையங்களை அமைக்க உத்தரவிட்டிருந்தது மோடி அரசு. டிசம்பரில் யு.ஜி.சியும் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழங்களில் மோடி செல்ஃபி பாயிண்டை அமைக்க உத்தரவிட்டிருந்தது. பின்னர், பல்வேறு எதிர்ப்பு வந்ததன் பேரில் அந்த உத்தரவு கைவிடப்பட்டது.

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மக்கள் மத்தியில் மோடியின் பிம்பத்தை உயர்த்திக்காட்டுவதற்கு பல்வேறு முயற்சிகளை ஆர்.எஸ்.எஸ்-பாஜக மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சிகளில் ஒன்றாக இதனை நாம் பார்க்க வேண்டியுள்ளது.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாறிவரும் விஜயின் அணுகுமுறையை எப்படி பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: லியோ திரைப்பட வெற்றி விழாவிற்கு நெத்தியில் குங்குமமிட்டு வந்தது; 12 மணிநேரம் பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடத்தியது; நூலகம் திறப்பது என விஜயின் அணுகுமுறையே மாறிவருகிறது. இதை எப்படி பார்ப்பது?

ஸ்டார் ஹீரோ, சினிமா கவர்ச்சி போன்றவற்றால் விஜய் பின்னே இளைஞர்கள், மாணவர்கள் திரளுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், சீரியஸாக அரசியல் பேசாமல், குறைந்தபட்ச அரசியல் நிலைப்பாடுகளைக் கூட வைத்திருக்காமல் அரசியலுக்கேற்ற எந்தவொரு ஒழுக்கமும் இல்லாமல்தான் விஜய் உள்ளார். சினிமாவில் ஹீரோவாக இருப்பதால், அரசியல் பற்றிய அடிப்படை அறிவில்லாத, சினிமா போதைக்கு பலியாகியிருக்கின்ற பிரிவினர்தான் விஜயை ஆதரிப்பார்களேயொழிய சீரியஸாக சமுகத்தைப் பற்றி புரிந்துக்கொண்ட எவரும் விஜயை ஆதரிக்க மாட்டார்கள்.

மேலும், விஜய் தன்னை சங்கி என்று பொதுவெளியில் அறிவித்துக் கொள்ளவில்லை என்றாலும், பாசிச சக்திகள் தன்னை எளிதாக பயன்படுத்திக் கொள்ளுமளவுக்குதான் தன்னை லாவகமாக வைத்துக்கொண்டிருக்கிறார்.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பிண அரசியல் செய்த அண்ணாமலை | தோழர் மருது

பிண அரசியல் செய்த அண்ணாமலை | தோழர் மருது

https://youtu.be/XN92zf6rCbs

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இந்தியா கூட்டணி தோல்விமுகத்திற்கு வந்துள்ளது என்று சொல்ல முடியுமா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் கடந்த நவம்பர் மாதத்தில் நடந்துமுடிந்துள்ளன. இத்தேர்தலின்போது, “இந்தியா கூட்டணி” கட்சிகள் தங்களுக்குள்ளேயே ஒற்றுமையின்றி தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை அணுகியுள்ளன. இத்தேர்தலில் அக்கட்சிகள் மக்களின் கோரிக்கைகளைப் பற்றி பேசாமல் இந்துத்துவ, கவர்ச்சிவாத வாக்குறுதிகளை அளித்து சந்தர்ப்பவாதமாக இருந்ததையும் பார்க்கிறோம். மேலும், தற்சமயம் பா.ஜ.க-வைத் தோற்கடிக்கக்கூடிய வகையிலும் அக்கூட்டணி இல்லை எனத் தோன்றுகிறது. அதேசமயத்தில், பா.ஜ.க. ஆட்சியில் பாசிசத்தின் கூறுகளும் அதிகரித்து வருகின்றன. ஆக, இந்தியா கூட்டணி தோல்விமுகத்திற்கு வந்துள்ளது என்று சொல்ல முடியுமா?

முதலில் இந்தியா கூட்டணி தோல்விமுகத்தில் இருப்பதாக கூறுவது தவறு. இந்தியா கூட்டணி சந்தர்ப்பவாதமாக நிலை எடுத்திருப்பது என்பது வேறு. ஆனால், இந்தியா கூட்டணி தோல்விமுகத்தில் உள்ளது என்று ஐந்து மாநில தேர்தல் விஷயத்தில் சொல்ல முடியாது. இந்தியா கூட்டணிக்குள் குழப்பங்கள் இருக்கிறது, கூட்டணி உறுதியடையாததாக உள்ளது. மேலும், சந்தர்ப்பவாதமாக நடந்துகொள்கிறது; முக்கியமாக, இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி பா.ஜ.க-விற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல், மத்தியப்பிரதேசத்தில் பாசிச கட்சிக்கு நிகராக பஜ்ரங் சேனாவையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றிபெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு சென்றுவிட்டது. இப்படிதான் சொல்ல முடியுமே தவிர இந்தியா கூட்டணி தோல்விமுகத்தில் இருப்பதாக கூற முடியாது.

மேலும், பா.ஜ.க. தோல்விமுகத்தில் இருக்கும்பொழுது இந்தியா கூட்டணி தோல்விமுகத்தில் இருக்க முடியாது. சமுதாயத்தில் ஒருநேரத்தில் மோதுகின்ற இரண்டு அடிப்படையான சக்திகளில் ஒரு சக்திதான் தோல்விமுகத்தில் இருக்க முடியும். இரண்டு சக்திகளுமே தோல்விமுகத்தில் இருக்க முடியாது. அது தோல்விமுகமே கிடையாது. தோல்விமுகம் என்பதை ஒரு ஒப்பீட்டில்தான் சொல்லமுடியும். இரண்டு சக்திகளுக்கிடையிலான இரண்டு பிரதான கூறுகளுக்கிடையிலான பிரதான போக்கை வைத்துதான் சொல்லமுடியும்.

ஆகவே, பா.ஜ.க. – பாசிச சக்திகள் எதிர் பாசிச எதிர்ப்பு சக்திகள், இதில் பாசிசத்திற்கெதிரான சக்திகள் என்றால் இந்தியா கூட்டணி மட்டுமல்ல, பெரிய அளவிலான உழைக்கும் மக்களின் போராட்டங்களும் அடங்கும். பா.ஜ.க-வின் நடவடிக்கைகள் தொடர்ந்து தவறுதலாக போவதும், பா.ஜ.க-வின் சித்தாந்தத்தில் உள்ள ஓட்டாண்டித்தனமும் அக்கட்சியை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஆக, இந்தியா கூட்டணி எவ்வளவு தவறுகள் செய்தாலும், அது தோல்விமுகத்திற்கு வந்துவிட்டதாக சொல்லமுடியாது. அதற்கான அடிப்படையும் கிடையாது.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



திமுகவின் ஜால்ராக்களால் திமுகவுக்கு தான் ஆபத்து | தோழர் மருது

திமுகவின் ஜால்ராக்களால் திமுகவுக்கு தான் ஆபத்து | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உத்தராகண்டில் சுரங்கம் இடிந்ததில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டது மோடியின் வெற்றியா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: உத்தராகண்ட் மாநிலத்தில் ல்க்யாரா சுரங்கம் இடிந்ததில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர். வழக்கம்போல சங்கிகள் இதனை மோடியின் வெற்றியாக முன்னிறுத்துகின்றனரே?

முதலில், மோடிக்கோ, பாசிச கும்பலுக்கோ இதை ஒரு வெற்றியாக சித்தரிக்க துளியும் அருகதையில்லை. உண்மையில் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள அப்பகுதியில் தங்களது கார்ப்பரேட் ஆதாயத்திற்காக சுரங்கம் கட்டிவரும் மோடி கும்பல்தான் இவ்விபத்து ஏற்பட்டதற்கு முதன்மை குற்றவாளி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது பரிவாரங்கள் புடைசூழ செல்லமுடிந்த மோடிக்கு, விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரிக்க நேரமில்லை.

மோடியின் எலும்புத்துண்டு ஊடகங்களோ இரண்டு வாரங்களாக இதனை பேசுபொருளாக்காமல் இருந்துவிட்டு, தொழிலாளர்களை மீட்பது உறுதியான பிறகு நேரலை போட்டு மோடி அரசுக்கு ‘பெருமை’ சேர்க்கும் வேலையில் இறங்கின.

இரண்டாவது, இதில் கொண்டாடுவதற்கு எதுவுமே இல்லை. நிலவின் தென்துருவத்தில் முதல் செயற்கைகோளை ஏவிய நாட்டில், ‘தெற்குலக நாடுகளின் தலைவனை’ கொண்டிருக்கும் நாட்டில், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாட்டில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தொழில்நுட்பம் ஏதுமில்லை.

இறுதியில், எலிகளை போல மலைகளில் வலைத்தோண்டி நிலத்துக்கு அடியில் உள்ள நிலக்கரியை எடுக்கும், எலிவலை சுரங்க தொழிலாளர்கள்தான் தங்கள் உயிரை பணயம் வைத்து 41 தொழிலாளர்களை மீட்டுள்ளார்கள்.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிசத்திற்கு எதிரான மாற்றாக காங்கிரசை நிறுத்த முடியுமா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: பா.ஜ.க. பாசிச கட்சியாக இருக்கிறது. காங்கிரஸ் சந்தர்ப்பவாத அணுகுமுறையை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் பாசிசத்திற்கு எதிரான மாற்றாக காங்கிரசை நிறுத்த முடியுமா? அல்லது பாட்டாளி வர்க்கம்தான் எதிர்ப்பு சக்தியாக இருக்கமுடியுமா?

காங்கிரசை பா.ஜ.க-விற்கு எதிரான மாற்று கட்சியாக முன்னிறுத்துகிறார்கள், அதுதான் யதார்த்தமாகவும் உள்ளது. ஆனால் காங்கிரஸ், பா.ஜ.க-வை வெறும் தேர்தலில் வீழ்த்துவதை மட்டுமே தனது ஆதாயமாக பார்க்கிறது. இது ஆளும் கட்சிக்கே உரித்தான சந்தர்ப்பவாத நிலைப்பாடு. எனவே காங்கிரசை பா.ஜ.க-விற்கு மாற்றாக பார்க்க முடியாது.

அதேசமயம் பாட்டாளி வர்க்கம் இன்று அமைப்பாக இல்லை; நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான அமைப்புகளாகச் சிதறிக்கிடக்கிறது. பா.ஜ.க-விற்கு எதிராக உழைக்கும் வர்க்கம் பல போராட்டங்களை நடத்திவந்தாலும் அதுவும் சிதறிக்கிடக்கிறது என்பது மற்றொரு யதார்த்தமாக உள்ளது. ஆனால் சந்தர்ப்பவாதத்தில் இருக்கும் காங்கிரசை ஆதரிப்பதைவிட பாசிசத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒன்றிணைத்து கட்டியெழுப்பவதே சரியான தேர்வாக இருக்கும். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பும் அதுதான்.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



முருகப்பா – கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக இழுத்து மூடு!

29.12.2023

அம்மோனியா வாயு கசிவு – பொதுமக்கள் பாதிப்பு!

முருகப்பா – கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை
நிரந்தரமாக இழுத்து மூடு!

பத்திரிகைச் செய்தி

டந்த சில தினங்களுக்கு முன்பு எண்ணூர் பகுதியில் உள்ள முருகப்பா கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து குழாய் வழியாக அம்மோனியா வாயு அனுப்பும்போது கசிவு ஏற்பட்டது. இதனால் எண்ணூர் தாளங்குப்பம், பெரியகுப்பம், பர்மா நகர், எர்ணாவூர் குப்பம் ஆகிய கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இரவு 11:45 மணி அளவில் வேலை முடிந்து சென்று கொண்டிருந்த தொழிலாளிகள், வாயு கசிவை கண்டறிந்து உடனடியாக ஊர் மக்களிடம் தெரிவித்ததன் காரணமாக உயிர் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. எனினும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இப்பிரச்சனைக்கு காரணமான முருகப்பா கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் போராடியதன் விளைவாக, ஆலை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி சுற்று வட்டார கிராம மக்கள் அந்த ஆலையின் வாசலிலேயே தொடர்ந்து சில நாட்களாக போராடி வருகிறார்கள். இப்போது வரை அரசு நிர்வாக அதிகாரிகள் யாரும் தங்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதையும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்பொழுது வரை அந்த நிர்வாகத்தின் சார்பாக எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை. அம்மோனியா வாயு கசிவின் காரணமாக ஆயிரக்கணக்கான மீன்கள் இருந்து கரை ஒதுங்குகின்றன.

சென்னை பெருமழையின் போது சிபிசிஎல் நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்ட எண்ணைக் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டதும் இப்பகுதி மக்கள் தான். வடசென்னை முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகள் பல லட்சக்கணக்கான கோடிகளை லாபமாக சுரண்டுகின்றன. முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமையும் தொழிலாளிகளின் ஜனநாயக உரிமைகளை பறித்ததும் சுற்றுச்சூழல் சீரழித்ததுமே இந்த லாபத்திற்கு காரணம்.

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன் கடலும் பாழாக்கப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக மக்களின் உயிரும் இயற்கையும் திட்டமிட்டு பாழாக்கப்படுகின்றன. தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை நாம் கட்டியமைக்கும்போதே இப்படிப்பட்ட நாசகர கார்ப்பரேட் நிறுவனங்களை மூட முடியும்.

எண்ணூர் மக்களுடைய போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும். மேலும் அம்மோனியா கசிவுக்கு காரணமான முருகப்பா இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக தமிழ்நாடு அரசு மூட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த ஆலையிலிருந்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

அ.தி.மு.க., நாம் தமிழர் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புள்ளதா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: அ.தி.மு.க. தற்போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டது. சீமான் பக்கம் இளைஞர்கள் திரள்வது கணிசமாக இருக்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க., நாம் தமிழர் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புள்ளதா? அல்லது அ.தி.மு.க. நிலைமை மோசமாகி பா.ஜ.க. வளர்வதற்கான வாய்ப்புள்ளதா?

.தி.மு.க-வை பொறுத்தவரை பா.ஜ.க-வுடன் இருந்தால், தனது வாழ்வு மொத்தமாக அழிந்துவிடும் என்ற காரணத்தால்தான் வெளியே வந்தது. ஆனால், அப்படி வெளியேறவில்லை என்றாலும் அ.தி.மு.க-வின் கப்பல் ஏற்கனவே கவிழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அ.தி.மு.க. தனது இரண்டாவது நிலையை தக்கவைத்துக் கொள்ளவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை.

அந்த இரண்டாம் இடத்தை பா.ஜ.க. பிடித்துவிடும் என்று சொல்லுமளவிற்கு தமிழ்நாட்டில் பா.ஜ.க. பெரிய சக்தியாக இல்லை. தான் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடுவோம் என்று பா.ஜ.க. கருதிக்கொண்டிருக்கலாம். ஆனால், பார்ப்பனக் கட்சியான பா.ஜ.க. தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பது என்பது மிகவும் சிரமமான விஷயம்.

அ.தி.மு.க-விற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் கூட்டணி அமையுமா என்றால், அதில் நாம் சொல்வதற்கு எதுவும் இல்லை. சந்தர்ப்பவாத அரசியலில் எல்லாவிதமான கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும் அரங்கேறும். இதில் கவனிக்க வேண்டியவை, முதலில் நாம் தமிழர் கட்சி ஒரு கட்சியே கிடையாது; தனிநபரின் கீழ் சில விசுவாசிகள் இருக்கிறார்கள் அவ்வளவுதான். சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது நாய்குடைகள் போலதான். மக்களுக்கு மாற்று இல்லாததனால் இப்படியாக நாய்குடைகள் வளர்கிறதேயொழிய, இக்கட்சி சுயேட்சையாக இயங்கக்கூடியதல்ல. நீண்ட காலமான மரப்பட்டையில் அதிகமாக உற்பத்தியான புரோட்டீன்கள், திடீரென பெய்யும் மழையால் வெளிவருவதுதான் நாய்குடை. இதனை உயிரியல் வளர்ச்சியின் ஒரு பகுதியாக எடுத்து கொள்ள முடியாது. ஆக, சீமான் பக்கம் இளைஞர்கள் திரளுகிறார்கள் என்றால் சரியான மாற்று அரசியல் வைத்துள்ளவர்கள், இன்னும் வேகமாக வேலை செய்யவில்லை என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும்.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இராமர் கோயில் திறப்பை பாசிஸ்டுகள் எந்தளவிற்கு கொண்டுப்போவார்கள்?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: உலக கோப்பை போட்டியில் பா.ஜ.க-விற்கு சரியான அடி விழுந்துள்ளது. பா.ஜ.க. எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் அடுத்தது இராமர் கோயில் திறப்பு விவகாரம் உள்ளது. அதனை பாசிஸ்டுகள் எந்தளவிற்கு கொண்டுப்போவார்கள்?

இராமர் கோயில் விவகாரத்தில் அடுத்து என்ன நிகழும் என்று இப்போது நம்மால் சொல்ல முடியாது. தோல்விமுகத்தில் இருப்பதால் பா.ஜ.க. எதிர்பார்க்கக் கூடிய விளைவு இருக்காது என்று மட்டும் உறுதியாக சொல்லமுடியும். ஆனால், அதற்காக பா.ஜ.க. முயற்சியை கைவிடாது. எப்படி மோடி பெயரில் மைதானத்தை குஜராத்தில் உருவாக்கி அங்கு உலக கோப்பை இறுதி போட்டியை நடத்தி, மோடி பிம்பத்தை தூக்கி நிறுத்தலாம் என கனவு கண்டு அதற்கான நடவடிக்கைகளில் காவிக்கும்பல் ஈடுபட்டதோ, அதுபோன்ற நடவடிக்கைகளை கூடுதலாகவோ குறைவாகவோ இராமர் கோயில் திறப்பிலும் மேற்கொள்ளும். ஆனால் இராமர் கோவில் திறப்பு, பாசிச கும்பலின் தோல்விமுகத்தை சரிசெய்வதற்கான எந்த வாய்ப்பையும் தரப்போவது கிடையாது. எனவே, பா.ஜ.க-வை உறுதியாக ஏறி அடிக்க வேண்டும், ஒவ்வொரு செயலையும் நடவடிக்கையும் சரியாக அம்பலப்படுத்த வேண்டும்.

செய்திகளை தொடர்ந்து கவனித்து வந்தால் இதை புரிந்துக்கொள்ள முடியும். உத்தரப்பிரேதச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில், கிரிக்கெட் வீரர் ஷமி ஊரில் மைதானம் கட்டப்போவதாக செய்தி வெளிவந்துள்ளது. பா.ஜ.க. ஏன் முஸ்லிம் வீரர் ஒருவருக்கு மைதானம் கட்டவேண்டும்? ஒரு விஷயம் சமூகமயமாவதை பா.ஜ.க-வால் தவிர்க்க முடியாது. அதுதான் எதார்த்தம். அதன் தொடர்ச்சியாகத்தான் இதையும் பார்க்கவேண்டும். அதே போல, இராமனுக்கு கோயில் கட்டினால் ‘இந்துக்களில்’ சிலர் மகிழ்வார்களே ஒழிய, பெரும்பான்மை ’இந்துக்களுக்கு’ இராமன் கோயில் பற்றிய கருத்து கிடையாது. இராமன் கோயில் கட்டினால் தங்கள் வாழ்வில் விடிவு வந்துவிடும் என்று மக்கள் யாரும் நினைப்பது கிடையாது.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி!

ச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் “தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்” (ELECTORAL BOND SCHEME 2018) அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகுமா? என்ற வழக்கின் மீது விசாரணை நடத்தியது.

விசாரணையின் போது, “தேர்தல் நிதிப்பத்திரங்கள் பற்றிய விவரங்கள் கொடுத்தவர் – பெற்றவர், வங்கி என எல்லாருக்கும் தெரியும்; ஆனால், வாக்காளர்களுக்கு மட்டும் அது ரகசியமாகவே உள்ளது; நீதிமன்றம் பல்வேறு முடிவுகளை எடுத்த பிறகும் இந்த ரகசியத்தன்மையை ஏற்பதற்குச் சற்றுக் கடினமானதாக இருக்கிறது” என்று நீதிபதி சஞ்சீவ் கன்னா கருத்துத் தெரிவித்திருந்தார்.

இக்கருத்துக்கு பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 2018 சட்டத்தின்படி தேர்தல் நிதிபத்திரங்களைக் கட்சிகளுக்குக் கொடுத்தவர் யாரென்று அறிந்து கொள்ள முடியும் என்றும், கொடுத்தவர் – பெறுபவர் ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ள முடியாத அமைப்புமுறை என்று ஒன்றில்லை என்றும் கூறினார். மேலும், அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற நீதிபதியின் கருத்து பற்றி கூறுகையில், “நன்கொடையாளர் யாரென்று தெரிவதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாப்பது என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இரகசியத்தன்மையை இது முறியடித்துவிடும்” என்றார். அதாவது கொடுப்பவனுக்கும், வாங்குபவனுக்கும் தெரிந்தால் போதாதா? எதற்கு எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்பதைத்தான் வேறு வார்த்தைகளில் மேத்தா சொல்லியிருக்கிறார். நீதிமன்றத்துக்கு மோடி அரசு கொடுக்கும் மரியாதை இவ்வளவு தான் என மறைமுறமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய கபில் சிபல், “தேர்தல் நிதிப்பத்திரங்கள் இந்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய ஊழல்” என்றும், இது “தேர்தல் முறையையும் ஜனநாயகத்தையும் ஒழித்துக்கட்டும் திட்டம்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.


படிக்க: தேர்தல் நிதிப்பத்திரம் – கருப்புப் பணத்தை சுருட்ட பா.ஜ.க-வின் புதிய அஸ்திரம் !


விசாரணைக்குப் பிறகு, இவ்வாண்டு செப்டம்பர் 30 வரையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடையின் விவரங்களை, 15 நாட்களுக்குள் “சீலிட்ட உறையில்” வைத்து ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்த வழக்குகள் ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது பெரியளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வழக்கு விசாரணைக்குப் பிறகு, இந்தத் “தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்” இந்தியத் தேர்தல் முறையின் வெளிப்படைத்தன்மையை ஒழித்துக்கட்டுகிறது; இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பதற்கு இந்த தேர்தல் நிதிப்பத்திரத் திட்டத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர்.

ஊழலை சட்டப்பூர்வமாக்கிய பா.ஜ.க:

துஷார் மேத்தாவின் திமிர்த்தனமான வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது, அச்சு அசலாக பா.ஜ.க.வின் அயோக்கியத்தனமே. சட்டப்பூர்வமான வழிகளில் தனது பாசிச நடவடிக்கைகளை அரங்கேற்றி வரும் பா.ஜ.க அரசு, தான் செய்யும் கார்ப்பரேட் சேவைகளுக்கான லஞ்சத்தை சட்டப்பூர்வமாகவே பெற்றுக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்.

இத்திட்டத்தின் மூலம் எந்தவொரு இந்தியக் குடிமகனும் அல்லது நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளையிலிருந்து, தாங்கள் நன்கொடையாக அளிக்க விரும்பும் தொகைக்கு (1000 ரூபாய் தொடங்கி 1 கோடி ரூபாய் வரை) ஏற்ப நிதிப்பத்திரத்தை வாங்கி, அரசியல் கட்சிக்கு நன்கொடையாக வழங்கலாம்.

இந்தத் திட்டத்தை கொண்டு வருவதற்காக பல்வேறு சட்டத்திருத்தங்களை பாஜக அரசு மேற்கொண்டது. நிறுவனங்கள் சட்டப்படி (Companies Act, 2013),  ஒரு நிறுவனம் தன்னுடைய லாபத்தில் இருந்து அளிக்கக்ககூடிய தேர்தல் நிதியின் உச்ச வரம்பு 7.5 சதவிகிதமாக இருந்ததை நீக்கி, யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் தேர்தல் நிதியாக அளிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியது. அதேபோல், வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தில் (Foreign Contribution Regulation Act, 2010 (FCRA)) திருத்தம் செய்து வெளிநாட்டு நிறுவனங்களும் தேர்தல் நிதி அளிக்கலாம் என்று கதவை திறந்து விட்டது.

மேலும், வருமானவரிச் சட்டத்தின்படி (Income Tax Act, 1961) அரசியல் கட்சிக்கு வரும் நன்கொடைகள் குறித்து வருமானவரித் துறையிடமும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி (Representation of the People Act, 1951 (RoPA)) 20,000 ரூபாய்க்கு மேல் அரசியல் கட்சிகள் பெறும் நிதி குறித்த தரவுகளை தேர்தல் ஆணையத்திடமும் தெரிவிக்க வேண்டும் என்ற முறையைத் திருத்தியது. இதன் மூலம், தேர்தல் நிதிப்பத்திரத்தால் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களையும் தரவுகளையும் யாரிடமும் ஒப்படைக்கத் தேவையில்லை என தேர்தல் நிதிக்கு பெரிய மூடுதிரையைப் போட்டது மோடி அரசு.


படிக்க: தெலங்கானா தேர்தல் புதிய பார்முலா: களமிறங்கிய இன்ஃப்ளூயன்சர்கள்!


அரசியல் கட்சிகளுக்கு யார், எவ்வளவு நன்கொடை அளிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை தேர்தல் ஆணையத்திற்கும் கிடையாது; வருமானவரித் துறைக்கும் கிடையாது; இந்த நாட்டின் குடிமக்களுக்கும் கிடையாது என்ற நிலையை உருவாக்கி, பெயரளவில் இருந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு ஒட்டுமொத்தமாக சவக்குழி வெட்டும் வேலையைத் தொடங்கியது பா.ஜ.க அரசு.

இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது தேர்தல் ஆணையமும், ரிசர்வ் வங்கியும் இதை எதிர்த்துக் கடுமையாகக் கேள்வி எழுப்பியிருந்தன. அப்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல், இந்த தேர்தல் நிதிப்பத்திரம் குறித்து ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு செப்டம்பர் 14, 2017 அன்று கடிதம் எழுதியிருந்தார். அதில் “தற்போது கொண்டுவரப்படும் தேர்தல் நிதிப்பத்திரம் ஷெல் கம்பனிகளால் (வரி ஏய்ப்பு, பணமோசடி செய்வதற்காக உருவாக்கப்படும் பினாமி நிறுவனங்கள்) தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்பதைக் குறிப்பிட்டு, இதை டிஜிட்டல் முறையில் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார்.

செப்டம்பர் 27, 2017 அன்று ஜெட்லிக்கு எழுதிய கடிதத்தில், “ரிசர்வ் வங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது பணமதிப்பு விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலானது என்றார். குறைந்தபட்சம், தேர்தல் நிதிப்பத்திரங்களை வழங்க வேறு எந்த நிறுவனத்தையும் அரசு அங்கீகரிக்கக்கூடாது” என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் மோடி அரசு அவரது கோரிக்கையைக் கழிவறைக் காகிதமாகக் கூட மதிக்கவில்லை. 2018-இல் தேர்தல் நிதிப்பத்திரத் திட்டத்தை அமல்படுத்தும்போது ரிசர்வ் வங்கியை ஒரங்கட்டிவிட்டு, எஸ்பிஐ வங்கியை தேர்தல் பத்திரங்களை வழங்க அங்கீகரித்தது ஒன்றிய அரசு. இதற்கடுத்த சில நாட்களில் ரிசவ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் பதவி விலகியதும் குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி போலவே, தேர்தல் ஆணையமும் இந்தத் தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம் தேர்தல்முறையின் வெளிப்படைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கூறி முதலில் எதிர்த்தது. ஆனால், அதன்பிறகு இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு பா.ஜ.க அரசின் ஏஜெண்டாக செயல்படத் தொடங்கிவிட்டது.

இந்தத் திட்டத்தைக் கொண்டு வரும்போது பா.ஜ.க வழக்கம்போல் லஞ்சம், கருப்புப்பணத்தை ஒழிக்கப் போகிறோம், வெளிப்படைத்தன்மையை கொண்டு வரப்போகிறோம் என வாய்ச்சவடால் அடித்தது. ஆனால் உண்மையில், இதுவரை கருப்புப்பணத்தைத் திருட்டுத்தனமாக வாங்கிக்கொண்டு இருந்த அரசியல் கட்சிகள், இனிமேல் சட்டப்பூர்வமாகவே கேள்விக்கிடமற்ற வகையில் கருப்புப்பணத்தையும் லஞ்சத்தையும் பெறுவதற்கான வழியைத்தான் இது ஏற்படுத்தியிருக்கிறது.

பா.ஜ.க-வின் மெகா ஊழல்:

இத்திட்டத்தை கொண்டுவந்த பிறகு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பா.ஜ.க-வின் கஜனாவில் பணம் வந்து குவியத் தொடங்கியது. 2016-17 மற்றும் 2021-22 -க்கும் இடைப்பட்ட ஐந்து நிதியாண்டுகளில், ஏழு தேசியக் கட்சிகளும் 24 பிராந்தியக் கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாகப் பெற்ற தொகை மொத்தம் ரூ.9,188 கோடிகள். இதில் பா.ஜ.க-வின் பங்கு மட்டும் தோராயமாக ரூ.5,272 கோடி. அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 57 சதவீதத்தை பா.ஜ.க மட்டுமே பெற்றுள்ளது.

2019-2020 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் பெற்ற ரூ.3,429 கோடியில், பா.ஜ.க மட்டும் ரூ.2,606 கோடியை (76 சதவிகிதம்) பெற்றுள்ளது. இதில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மட்டும் பா.ஜ.க ரூ.2,410 கோடியை திரட்டியுள்ளது, இது ஒட்டுமொத்தமாக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டியதில் கிட்டத்தட்ட 95 சதவிகிதமாகும்.

அதேபோல், 2018 முதல் 2021 வரை விற்கப்பட்ட நிதிப்பத்திரங்களில் 92 சதவிகிதத்திற்கும் அதிகமானவை ரூ.1 கோடி மதிப்புடையவை. இவை பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்களால் அளிக்கப்பட்டவை. ஜனநாயகத்திற்கான சீர்திருத்த சங்கத்தின் (ADR) பகுப்பாய்வின்படி, 2021-22 நிதியாண்டில், காப்பரேட் நிறுவனங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட மொத்த நன்கொடைகளில் ரூ.351.50 கோடி (72.17 சதவிகிதம்) பா.ஜ.க மட்டும் பெற்றுள்ளது. அகர்வாலின் வேதாந்தா நிறுவனம், கொரோனா தடுப்பூசி தயாரித்த சீரம் நிறுவனம் முதலியவை பா.ஜ.க-விற்கு நிதி அளித்ததும், அதற்குக் கைமாறாக பா.ஜ.க செய்த சேவையும் அம்பலமானது இதற்கு சிறந்த சான்று. இதனால் தான், நன்கொடை கொடுப்பவர் குறித்த விவரங்கள் ரகசியமாக இருக்க வேண்டும் என்கிறது மோடி அரசு.

இப்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொட்டிக் கொடுத்ததன் விளைவாக, 2016-17 மற்றும் 2021-22 நிதியாண்டுகளின் இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் நன்கொடையாக ரூ.10,122 கோடிகளைப் பெற்றுள்ளது பா.ஜ.க. இதன் மூலம், 6,046 கோடி நிகர சொத்துக்களுடன் இந்தியாவின் முதல் பணக்காரக் கட்சியாக பா.ஜ.க வளர்ந்துள்ளது. இவை அனைத்தும் வெளியே தெரிந்தவை மட்டுமே என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜகவிற்கு மட்டும் இப்படி கொட்டிக் கொடுக்கிறார்கள்? அதற்கான விடை அனைவரும் அறிந்ததே. தனக்கு கொட்டிக்கொடுத்த எஜமானனுக்கு விசுவாசத்தைக் காட்டும் வகையில் சுமார் 25 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி; வரிச்சலுகை; பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்குத் தூக்கிக் கொடுத்தல்; காடு, மலை, கனிம வளங்களைக் கொள்ளையிடத் திறந்து விடுதல் என இந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைத்தது பாசிச பாஜக அரசு.

பாஜக-வின் இந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக சாதாரண உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவரும் மீதும் பொருளாதார பயங்கரவாதத் தாக்குதல்களை அனுதினமும் தொடுத்து வருகிறது மோடி அரசு.

சாரமாகச் சொன்னால், இந்தியாவை சட்டப்பூர்வமாகவே கொள்ளையடிக்கலாம்; அப்படிக் கொள்ளையடித்த பணத்தை கார்ப்பரேட் கட்சிகளுடன் சட்டப்பூர்வமாகவே பங்கிட்டுக் கொள்ளலாம் என்பதுதான் மோடி அரசின் தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்.

000

இந்த தேர்தல் நிதிப்பத்திர திட்டத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு விடயமும் உள்ளது. தற்போது பலரும் கூறுவதுபோல, தேர்தல் நிதிப்பத்திரத்தை ரத்து செய்வதால் மட்டும் இந்த ஊழலையும் கார்ப்பரேட்டுகளுக்கும் கட்சிகளுக்குமான ரகசிய உறவையும் ஒழித்துவிட்டு, இந்தியத் தேர்தல்முறையின் மூலம் ‘ஜனநாயகத்தின் மாண்பை’ கொண்டுவந்து விட முடியுமா?

இந்த ஊழலை ஒழிக்க, கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் நிதி வாங்குவதை தடைசெய்ய வேண்டும். மக்களைச் சார்ந்து அரசியல் கட்சிகள் இயங்க வேண்டும். தேர்தல் செலவிற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் தற்போது இருக்கும் அரசுக் கட்டமைப்பிற்குள் செய்ய முடியுமா?

ஏற்கனவே மறைமுகமாக நடந்து வந்த ஊழலை சட்டப்பூர்வமாக, பகிரங்கமாக செய்வதற்காக கொண்டு வரப்பட்டதுதான் மோடி அரசு கொண்டுவந்த தேர்தல் நிதிப்பத்திரம். மற்றபடி, கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது நன்கொடையை பணமாகக் கொடுப்பதற்கும், தேர்தல் நிதிப்பத்திரமாகக் கொடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் தயவு இல்லாமல் எந்த ஓட்டுக்கட்சியாலும் தேர்தலைச் சந்திக்க முடியாது என்பதுதான் இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் உண்மையான நிலை. 2019 ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மட்டும் சுமார் 55 முதல் 60 ஆயிரம் கோடிகள் வரை செலவிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆன செலவைவிட அதிகம். இங்கு உண்மையில் நடந்து கொண்டிருப்பது ஜனநாயகம் அல்ல பணநாயகம்தான் என்பதற்கு இதுவே துலக்கமான சான்று; கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி பணம்தான் தேர்தலில் தீர்மானகரமான காரணியாக உள்ளது என்பதும், கார்ப்பரேட்டுகளின் ஆதரவு பெற்ற கட்சியே ஆளுங்கட்சியாக இருக்க முடியும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இப்படி மென்மேலும் அழுகி நாறிக்கொண்டே செல்வதே இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பின் இயல்பு. இதைத் விட்டெறிந்து விட்டு, இதைவிட மோசமான பாசிசத்தை நிலைநாட்டும் இலக்கில் இருந்தே பா.ஜ.க தனது திட்டங்களைக் கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் தேர்தல்நிதிப்பத்திர திட்டம். எனவே இதை ஒழித்தால் மட்டும் ‘தேர்தல் ஜனநாயகத்தின்’ மாண்பை மீட்டுவிட முடியும் என்று எண்ணுவதை என்ன சொல்வது. பாசிசத்தை எதிர்ப்பது என்ற பெயரில் அழுகிக் கொண்டிருக்கும் ஒன்றைத் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று சொல்வது அறிவார்ந்த வழிமுறையாக இருக்க முடியுமா? பாசிசத்தை முறியடிக்கக் கூடியதான, மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கக் கூடியதாக ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக மக்களை தயார் செய்வதே இன்றைய தேவை.


மதி

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பேரிடர்: தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசு! | தோழர் வெற்றிவேல்செழியன்

பேரிடர்: தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசு! | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கிரானைட் கொள்ளை: பேரழிவின் சாட்சியங்களும், வலுக்கும் எதிர்ப்புகளும் | ஆவணப்படம்

கிரானைட் கொள்ளை:
பேரழிவின் சாட்சியங்களும், வலுக்கும் எதிர்ப்புகளும் | ஆவணப்படம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube