Thursday, May 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 91

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடியவரையே குற்றவாளியாக்கும் திருவாரூர் போலீசு!

16.08.2023

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடியவரையே
குற்றவாளியாக்கும் திருவாரூர் போலீசு!

மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் பொருளாளர் தோழர் முரளியை அச்சுறுத்தும் திருவாரூர் மாவட்ட போலீசை கண்டிப்பதுடன் தொடர்புடைய போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

திருவாரூர் – விளமல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னர் தோழர் முரளி வைத்துள்ள பெட்டிக் கடையில் மதுவிலக்கு போலீசார் இரண்டு பேர் வந்து ” நீ சாராயம் விற்கிறாயா” என்று கேட்டுள்ளனர்.

படிக்க : மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை உடனே மூடு!

தோழர் முரளி மக்கள் அதிகாரத்தில் இருப்பதாகவும் “சாராயத்துக்கு எதிரானவன் எப்படி சாராயம் விற்பேன்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பின் அந்த மதுவிலக்கு போலீசார் இருவரும் சென்றுவிட்டனர். ஆனால், இது குறித்து டி. எஸ்.பி இடம் புகார் அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி இது பற்றி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் “தவறுதலாக வந்து விட்டனர், இனிமேல் வர மாட்டார்கள்” என்று உறுதி அளித்துள்ளார்.

ஆனால் நேற்றைய தினம்(15.08.2023) தோழர் முரளி தன் கடையை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தபோது, கொரடாச்சேரி போலீசு நிலையத்தில் இருந்து இரண்டு போலீசு (ஒருவர் சீருடையும் மற்றொருவர் சாதாரண உடையிலும் இருந்தனர்) வந்து கள்ளச்சாவி போட்டு கடையை திறந்து உள்ளே சென்றுள்ளனர்.

இதை பார்த்த தோழர் முரளி யார் என்று கேட்டபோது, “நீங்கள் சாராயம் விற்பதாக செய்தி வந்தது. அதை உறுதிப்படுத்த சோதனை செய்கிறோம்” என்று கூறியுள்ளனர். பிறகு போலீஸ் அந்த இடத்திலிருந்து சென்றுள்ளது. பூட்டி இருக்கும் கடையை திருட்டுத்தனமாக திறந்து பார்ப்பதற்கு போலீசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடுவோர் மீது திருட்டுத்தனமாக மது விற்ற வழக்கு போட முயல்கிறது. இதன் மூலம் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறது போலீசு.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாதிவெறி அமைப்புகளும், ஆர்.எஸ்.எஸ் – இந்து முன்னணி போன்ற சங் பரிவார அமைப்புகளும் தங்குதடையின்றி செயல்படுகின்றன. மக்களுக்காகப் போராடுவோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சேர்ப்பது, ரவுடிகள் பட்டியலில் சேர்ப்பது போன்ற அநீதியான நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட போலீஸ் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தோழர் முரளி கோப்பு படம்

அதன் தொடர்ச்சியாகவே தோழர் முரளி மீது சட்டவிரோத மது விற்பனை என்ற பொய்யான காரணம் சொல்லி அச்சுறுத்தல் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது திருவாரூர் மாவட்ட போலீஸ்.

தோழர் முரளி மீதான அராஜக நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டப் போலீசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும் மக்களுக்காக போராடுபவர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் குருசாமி,
மாநில இணைச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321

ஏன் தமிழ்நாட்டை பற்றி ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்குகிறார்கள்? | தோழர் மருது

ஏன் தமிழ்நாட்டை பற்றி ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்குகிறார்கள்? | தோழர் மருது

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இலாபவெறிபிடித்த முதலாளித்துவ சமூகத்தில்… | கவிதை

இலாபவெறிபிடித்த முதலாளித்துவ சமூகத்தில்…

வியாக்கியானம் புதிதல்ல…
முதலாளித்துவம் தனது சவக்குழியை
தானே தோண்டுகிறது என
முன்னறிந்து சொன்ன மார்க்சின் தீர்க்கமாக
பார்வை புதிது!

மரணம் புதிதல்ல…
தூக்குமேடை ஏறி கண்களை திறந்து
மரணத்தை எதிர்கொண்ட
பகத்சிங்கின் துணிச்சல் புதிது!

வாழ்வது புதிதல்ல…
இட்லரை வீழ்த்த மகனை பறி கொடுத்த
ஸ்டாலின் போல வாழ்வது தான் புதிது…

போராட்டம் புதிதல்ல…
மக்களுக்கு புரிய வைத்து
போராடுவதுதான் புதிது!

முரண்பாடு புதிதல்ல…
அதை விவாதித்து
தீர்க்கமுயல்வது தான் புதிது!

உண்பது புதிதல்ல…
பகிர்ந்து உண்பதுதான் புதிது!

வாழ்வது புதிதல்ல…
நேர்மையுடன் வாழ்வதுதான் புதிது!

அரசியல் பேசுவது புதிதல்ல…
எந்த வர்க்கத்திற்காக பேசுகிறோம் என்ற
புரிதலுடன் பேசுவதுதான் புதிது!

கல்வி பயில்வது புதிதல்ல…
உழைப்போர் நலன்கருதி
செயல்படுவதுதான் புதிது!

புதியவன்

ஆதிக்கச் சாதி வெறியர்களை சமூகப் புறக்கணிப்பு செய்வோம் | தோழர் ரவி

ஆதிக்கச் சாதி வெறியர்களை சமூகப் புறக்கணிப்பு செய்வோம் | தோழர் ரவி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்

மோடி ஏன் அதிர்ச்சி அடைந்தார்? | தோழர் மருது

மோடி ஏன் அதிர்ச்சி அடைந்தார்? | தோழர் மருது

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நீட் மருத்துவ மாணவர்களுக்கான பலிபீடம்!

நீட் எனும் பலிபீடத்தில்; தொடர்ந்து பலியாகும் மாணவர்கள்!

டந்த ஆகஸ்டு 14-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்த, ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் நீட் தேர்வில் இரண்டுமுறை தேர்ச்சி அடைந்தும் மருத்துவக்கனவை அடைய முடியாததால் துயரம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கம் தாளாமல் மறுநாள்(15/08/2023) காலை, அவரது தந்தை செல்வசேகரனும் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

ஜெகதீஸ்வரன் சென்னை சைத்தன்யா சிபிஎஸ்இ பள்ளியில் படித்துள்ளார். 12-ஆம் வகுப்பில் A-கிரேடு’ல் 85 சதவிகிதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் “ஆகாஷ்”(Aagash) எனும் தனியார் நீட் பயிற்சி நிறுவனத்தில் கடந்த 2 வருடம் நீட் தேர்வு பயிற்சிப் பெற்றுள்ளார். இறப்பதற்கு முன்புதான் மூன்றாவது முறையாக பயில்வதற்கு பதிவு செய்துள்ளார்.

ஜெகதீஸ்வரன் தந்தை செல்வசேகரன் 14/08/2023 அன்று ‘சிட்டலப்பாக்கம்’ காவல்நிலையத்தில் நீட் தேர்வினால் தனது மகன் தற்கொலை செய்து கொண்டார் என்று புகார் அளித்தார். அதன்பின் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் தான் போட்டோகிராபர் தொழில் செய்வதாகவும், ஒற்றை பெற்றோராக (single parent) இருந்து தன் மகனை வளர்த்து வந்துள்ளேன் எனவும் தெரிவித்தார். மேலும் “நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் போராட வேண்டும்” என தனது இறுதி வார்த்தைகளை உருக்கமாகத் தெரிவித்தார்.

படிக்க : தொடரும் மரணங்கள்: நீட் தேர்வை தடை செய்ய களமிறங்குவோம் | தோழர் யுவராஜ்

ஜெகதீசனுக்காக வாதாடும் அவரது நண்பர் ஃபயாஸ்தின் சிபிஎஸ்இ பள்ளியில் படித்தவர், நீட் தேர்வுக்காக தனியார் கோச்சிங் சென்டருக்கு போய் படித்தும், 160 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால், ரூபாய் 25 லட்சம் செலவுசெய்து ஒரு தனியார் கல்லூரியில் சீட் வாங்கியிருக்கிறார். “எனது அப்பா பொருளாதாரத்தில் கொஞ்சம் மேலே இருந்ததால், நான் எம்.பி.பி.எஸ்  சேர்த்துள்ளேன்.

ஆனால் அந்தப் பணம் இல்லாததால் அதிக மதிப்பெண் பெற்ற எனது நண்பன் ஜெகதீசனை நாங்கள் இழந்து விட்டோம்!” மேலும், “உனக்கு கிடைத்த  வாய்ப்பு முக்கியமானது அதை வைத்து மக்களுக்கு சேவை செய்” என்று ஜெகதீஸ்வரன் கூறியதாக உருக்கமாகவும், மனக் குமுறல்களுடனும்  ஃபயாஸ்தின் தெரிவித்தார்.

அதேபோல் “சிபிஎஸ்இ பள்ளியில் படித்த மாணவர்கள் எங்களுக்கே இந்த நிலைமை என்றால் அரசு பள்ளி மாணவர்கள் இதனை எவ்வாறு எதிர்கொள்ள இயலும்” என ஃபயாஸ்தின் கேள்வி எழுப்பினார்.

000

முன்னதாக, ஆளுநர் மாளிகையில் ஆகஸ்டு 11-ம் தேதி நடந்த, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு மாணவியின் தந்தை “எப்போது நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப் போகிறீர்கள்” என்று ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு திமிர் பிடித்த வகையில் பதிலளித்த ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆளுநர்  ஆர்.என்.ரவி “நான் உள்ளவரை கண்டிப்பாக நீட்டை ரத்து செய்ய மாட்டேன்” என்று தமிழ்நாட்டு மண்ணில் இருந்து கொண்டே கொக்கரித்தார்.

கேள்வியெழுப்பியவர் அத்துடன் நிறுத்தாமல் ஒன்றிய அரசு ஊழியராக நான் இருந்ததால் என் மகளை படிக்கவைக்க முடிந்தது; நீட் தேர்வால் பணம் இருப்பவர்கள் மட்டுமே படிக்க முடிகிறது என்றும், இதனால் “கோச்சிங் சென்டர்களுக்கு தான் லாபம்” என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கும் போதே அவரிடமிருந்து மைக் பிடுங்கப்பட்டது.

மேலும் அம்மேடையில் ஆளுநர் சிபிஎஸ்இ பாடத்திட்டம்தான் சிறந்த பாடத்திட்டம், அது தான் நீட் தேர்விற்கு தேர்ச்சிப் பெற உதவும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் சிபிஎஸ்இ பள்ளியில் படித்த ஜெகதீஸ்வரன் போன்ற மாணவர்கள் தனியார் கோச்சிங் சென்டர்களுக்கு போயும் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதும், தற்கொலை செய்து கொள்வதும் இந்த பொய்களை தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.

“நேற்று அனிதா இன்று ஜெகதீஸ்வரன் நாளை உங்களுடன் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம். அனிதாவின் வலி இப்போதுதான் எங்களுக்குப் புரிகிறது” என்று குமுறுகிறார் ஃபயாஸ்தின்.

நீட் தேர்வினால் கொலைசெய்யப்பட்ட அனிதா தொடங்கி அரசு பள்ளியில் படிக்கின்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் தான் நீட் தேர்விற்கு எதிராகப் போராடுகிறார்கள் என்ற வாதம் ஆளும் வர்க்கத்தினரால் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு வந்தன.

ஆனால் அதை சுட்டெரிக்கும் விதமாக ஜெகதீஸ்வரனின் மரணமும், அவரின் நண்பர் ஃபயாஸ்தினின் பேட்டியும், ஆளுநர் மாளிகையில் மாணவியின் தந்தை ஒருவர் நீட் தேர்வுக்கு எதிராக  எழுப்பிய கேள்வியும் நீட் தேர்வுவை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கை என்பதை மறுபடியும் உணர்த்தியுள்ளது.

“தேசிய தேர்வு முகமை” மூலம் மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு நீட் (NEET) என்ற நுழைவுத் தேர்வை நடத்தி ‘தகுதி’ என்ற பெயரில் மாணவர்களின் உயிரையும், அவர்களின்  மருத்துவ கனவையும் காவு வாங்கி வருகிறது ஒன்றிய பாஜக அரசு.

இன்று மருத்துவம் என்பது  கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாஸ்தின் கூறுவது போல்,  “பணம் உள்ளவன்தான் எம்.பி.பி.எஸ் படிக்க முடியும், அப்படி பணம் கொட்டி படிப்பவர்கள் மீண்டும் பணம் பார்க்கத்தானே பார்ப்பார்கள்” என்பதுதான் உண்மை.

மருத்துவம் என்னும் சேவைத் துறையை பணம் பறிக்கும் வணிகமாக மாற்றியுள்ளது நீட் தேர்வு. இந்த நீட் தேர்வினால் மட்டும் தமிழ்நாட்டில் கடந்த 4-5 ஆண்டுகளில் இருபது மாணவர்களுக்கு மேல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை தாக்கல் செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி 2 முறை ஆளுநரிடம் ஒப்புதல் கேட்டால் முதலில் தனது நாற்காலி அடியில் போட்டு அமர்ந்து கொண்டு பின்பு தமிழக மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

குடியரசு தலைவர் இது குறித்து விசாரணை செய்துள்ளாரா? என தெரிவதற்கு முன்னரே மேலும் ஒரு உயிர் பலியாக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், இன்னும் எத்தனை உயிர்களை பலிக் கொடுத்து கொண்டே இருப்போம் என்ற கேள்வி நம்மை நோக்கி எழுப்பப்படுகிறது தானே!

ஜெகதீஸ்வரன் தந்தை செல்வசேகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்துகொண்ட ஜெகதீஸ்வரனின் நண்பர்கள் “இன்னும் எத்தனை ஜெகதீசனை, எத்தனை அனிதாவை இழக்கப்போகிறோம்?” என்று பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்கள். இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டை நோக்கியும் எழுப்பப்பட்ட கேள்விகள்.

படிக்க : எங்களை மன்னித்துவிடு ஜெகதீஸ்வரன்! நாங்கள் சுரணையற்றவர்களாக இருக்கிறோம்!

உதயநிதி அளித்த பேட்டியில், “சட்டப் போராட்டம் தான் ஒரே தீர்வு, இல்லையென்றால் தெருவில் இறங்கி போராட வேண்டியதுதான். தமிழக மாணவர்கள் போராடினால் திமுக அதற்கு ஆதரவு தரும்” என்றார். இனி சட்டப்போராட்டத்தால் தீர்வில்லை, களப்போராட்டமே நீட்டை ரத்து செய்யும் என்று ஆளுங்கட்சி அமைச்சர் தரும் ஒப்புதல் வாக்குமூலம் இது.

இனியும் சட்டப்போராட்ட மாயைகளுக்குள் நாம் ஒளிந்து கொண்டு இருந்தால் நீட் தேர்வால்  மாணவர்கள் பலியாவதை நம்மால் ஒருபோதும் தடுக்க முடியாது.

அனிதா முதல் ஜெகதீசன் தற்கொலை வரை நமக்கு உணர்த்துவது அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதைதான்! அதை வார்த்தை மூலமாகவே ஜெகதீசன் தந்தை நமக்கு உணர்த்திவிட்டு சென்றுள்ளார் “நீட்டுக்கு எதிராக போராட்டம் பண்றதுக்கு ரெடி, தமிழ்நாடு மக்கள் ஒத்துழைத்தால், தமிழ்நாட்டிலிருந்து மட்டுமில்லை இந்தியாவில் இருந்து கூட நீட் தேர்வை எடுத்து விட முடியும்” என்றார்.

இதைப் பற்றிகொண்டு தமிழ்நாட்டு மக்களும் மாணவர்களும்தான் போராட்டக் களத்திற்கு வரவேண்டியுள்ளது. “நீட் தேர்வை ரத்து செய்” என்று முழங்க வேண்டியுள்ளது.

தென்றல்

தொடரும் மரணங்கள்: நீட் தேர்வை தடை செய்ய களமிறங்குவோம் | தோழர் யுவராஜ்

தொடரும் மரணங்கள்: நீட் தேர்வை தடை செய்ய களமிறங்குவோம்
– தோழர் யுவராஜ்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆரிய பார்ப்பன கூட்டம்தான் தமிழ்நாட்டின் எதிரி | தோழர் மருது

ஆரிய பார்ப்பன கூட்டம்தான் தமிழ்நாட்டின் எதிரி | தோழர் மருது

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நெல்லையில் தொடரும் சாதிய படுகொலைகள்!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி நெடுந்தெருவில் கடந்த ஒன்பதாம் தேதி சின்னத்துரை என்கிற பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவனை அவனுடன் ஒரே பள்ளியில் படிக்கும் தேவர் சாதி மாணவர்கள் மூவர் வீடு புகுந்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

கழுத்தை நோக்கி வீசிய அரிவாளை கையால் தடுத்ததால் வலது கையிலும், தோள்பட்டை, தொடை, கால் என உடலில் சுமார் 10 இடங்களில் வெட்டுப்பட்ட சின்னத்துரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறான்.

அண்ணனை வெட்டுவதை தடுக்க வந்த சின்னத்துரையின் தங்கையின் கைகளிலும் வெட்டி இருக்கிறார்கள். இதை பார்த்து  சின்னத்துரையின் தாத்தா அதிர்ச்சியில் இறந்து போனார்.

இந்தக் கொடூரத்தை கேள்விப்பட்டு தமிழகமே பதறியது. நெல்லை மாவட்டம் அதிர்ந்து போனது. தொடர்ந்து சில தினங்களாக அடுத்தடுத்து கொலைகள் மற்றும் கொலைவெறித் தாக்குதல்கள் நெல்லையை சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் பள்ளி மாணவர்கள் கைகளில் அரிவாள் ஏந்தி சக மாணவனை சாதியின் பெயரால் அரிவாளால் வெட்டியது, எல்லோர் மனதிலும் பேரதிர்ச்சியையும், அச்சத்தையும் உண்டு பன்னியது.

படிக்க : நாடாளுமன்றம் பஜனை மடம்: எதிர் கட்சிகளே மக்களிடம் செல்லுங்கள்! | தோழர் வெற்றிவேல்செழியன்

இந்த விசயத்தில் நாங்குநேரி பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் பயத்தில் உறைந்து கிடக்க தேவர் சாதி அமைப்புகள் தொலைக்காட்சிகளிலும், யூடியூப் சேனல்களிலும்  திமுக,  மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் ஆறு பேரை கைது செய்த போலீஸ் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தது.

மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வித குற்ற உணர்ச்சியோ பயமோ இன்றி இதில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டவர்கள் நடந்து கொண்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஏற்கனவே பெருந்தெருவை சுற்றியுள்ள மூன்று ஊர்களை சேர்ந்த  தாழ்த்தப்பட்ட  மக்கள்  சாதியின் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் வாழவும் வழி தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஊரை காலி செய்து போயிருக்கிறார்கள். தேவர் சாதி வெறியர்களால் உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்  என்றால் தேவர் சாதி மாணவர்களால் சின்னத்துரை  கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறான்.

பள்ளிக்கூடம் போகும்போது பேருந்தில் தங்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்க சொல்லி தேவர் சாதி மாணவர்கள் மிரட்டுவது,  தங்களுடைய புத்தகப் பையை சுமக்க வைப்பது, சிகரெட் வாங்கி வரச் சொல்வது என தொடர்ந்து சின்னத்துரையை சாதியக் கண்ணோட்டத்தில் வேலை வாங்கி இருக்கிறார்கள்.

சின்னத்துரையிடமே அவனது அம்மாவை பற்றியும் அவதூறாக பேசியிருக்கிறார்கள். இதனால் மனம் உடைந்த சின்னத்துரை  பள்ளிக்கூடம் போகக் கூடாது என முடிவு எடுத்திருக்கிறான்.  ஊரை விட்டு செல்லவும் தயாராயிருக்கிறான்.  உறவினர் அழுத்தி கேட்கவே நடந்த கொடுமைகளை அவர்களிடம் கூறியிருக்கிறான்.

விசயம் பள்ளிக்கு தெரிய, சம்பந்தப்பட்ட மாணவர்களை விசாரிக்க முடிவு எடுத்திருக்கிறது பள்ளி நிர்வாகம். ஆனால் இந்த விசயம் கேள்விப்பட்டு, எங்கள் மீது புகார் கொடுக்க உனக்கு எவ்வளவு தைரியம் என ஆத்திரமடைந்த மாணவர்கள் சின்னத்துரையை வீடு புகுந்து வெட்டி உள்ளனர்.

சக மாணவனை உடன் படிக்கும் மாணவர்களே எவ்வாறு சாதிய வன்மத்தோடு வெட்டிக் கொலை செய்யும் அளவிற்கு போக முடிகிறது? எங்கிருந்து இவர்களுக்கு இவ்வளவு தைரியம் வருகிறது?  தேவர் சாதி அமைப்பான நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பைச் சேர்ந்த மகாராஜன் மற்றும் சில தேவர் சாதி அமைப்புகள் தாக்குதலை கண்டிப்பதாக பேசிவிட்டு தேவர் சாதியினர் பாதிக்கப்படும்போது வராமல் இப்போது ஏன் வருகிறது என போராடுபவர்களையும், திமுகவையும் கேள்வி கேட்கிறார்கள்.

இதன் மூலம் ஒட்டுமொத்த தேவரின மக்களுக்கும் தாங்கள்தான் அத்தாரிட்டி என்பதாகவும் மேற்கொண்டு இம்மாதிரியான செயலை செய்யத் தூண்டும் விதமாக தார்மீக ரீதியான ஆதரவையும் கொடுக்கிறார்கள்.

“நாங்குநேரியில் பாண்டி பய கம்பெடுத்தா சங்கரன்கோவில் வரை சர்க்கார் வண்டி ஓடாதாம்..”, “போற்றிப் பாடடி பொண்ணே..” போன்ற பாடல்கள் தென் மாவட்டங்களில் ஒவ்வொரு தேவர் சாதி நிகழ்ச்சிகளிலும் போடப்படும்.  இது போன்ற பாடல்கள் தூபம் போட சாதிய அமைப்புகள் உடன் இருந்து வழிநடத்த மாணவர்கள் கையில் அரிவாள் ஏந்தும் நிலை இன்று வந்துள்ளது.

இதுவே போதுமானதாக இருக்கிறது. மேலும் புகார் அளித்த சின்னத்துரையை வெட்டிய மாணவர்களின் ஒருவரின் பாட்டி  கண்டித்ததாகவும், உரிய நேரத்தில் வராத போலீசை கண்டித்து மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் செய்த போது வெட்டிய மாணவர்களின் உறவினர்கள் வந்து விரட்டி விட்டதாகவும் நேரில் பார்த்தோர் கூறுகிறார்கள்.  புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இதற்கு காரணம் மாமன்னன் திரைப்படம் தான் என்று கூறுகிறார்.

நெல்லை பகுதி பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனோ, இது சாதிய தாக்குதல் அல்ல, சாதாரணமாக மாணவர்களுக்கு இடையில் நடக்கும் ஈகோ பிரச்சனை தான் என்கிறார். ஆனால் பாதிக்கப்பட்ட சின்னத்துரை, எது நடக்கக்கூடாது என்று நான் நினைத்து பயந்தேனோ அது  நடந்துவிட்டது என்று பிபிசிக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருக்கிறான். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு  சிறுவன் அறிந்திருந்த சாதிய வன்மத்தை இவர்கள் அறியாதது போல நடிப்பது கேவலமானது.

படிக்க : நாங்குநேரி கொடூரம்: மாணவர்களிடையே அதிகரித்துவரும் சாதிவெறி!

பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஆதரவாக ஜனநாயக முற்போக்கு சக்திகள் களத்தில் இறங்க தேவர் சாதி அமைப்புகளும், பா.ஜ.க.வும், அதன் கைக்கூலிக்  கட்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக களம் இறங்குகின்றன. இதை இணைத்துப் பார்க்கும்போது ஏதோ மிகப்பெரிய சதி திட்டம் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

தமிழகத்தை கைப்பற்ற துடிக்கும் காவி கும்பலுக்கு இம்மாதிரியான சாதிய அமைப்புகளை வைத்துக்கொண்டு கலவரத்தை ஏற்படுத்துவது கைவந்த கலை. இதை எழுதிக் கொண்டிருந்த வேளையில் நெல்லை பகுதி பாளையங்கோட்டை அருகில் உள்ள கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளர் சாதியைச் சேர்ந்த ஒருவரை கூலிப்படையினர் வெட்டி கொலை செய்ததாக மேலும் ஒரு தகவல் வந்திருக்கிறது.

பெரியார் மண், சமூக நீதி என்று பேசும் தமிழ்நாட்டில் தான் இத்தகைய சாதி படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்குள்ளாகவே திருநெல்வேலி பகுதியை சுற்றி பல்வேறு சாதிய கொலைகளும், தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில்  முத்தையா என்ற அருந்ததிய இளைஞர் காதல் பிரச்சினையால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் இதை மூடிமறைத்த போலீசு ஒரே சாதியை சேர்ந்தவர்களுக்கு இடையிலான பிரச்சனை எனக்கூறி இந்த குற்ற செயலில் ஈடுபடாத சிலரை கைது செய்து வழக்கை திசை மாற்றியது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் இதை கண்டித்து முத்தையாவின் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர். பத்து நாட்களாக நடந்த போராட்டத்தின் இறுதியில் முத்தையாவின் உடலை வாங்கவில்லை எனில் போலீசே அவரது உடலை எரித்து விடும் என  நீதிமன்றம் எச்சரித்தது.

முத்தையாவின் மரணத்திற்கு நீதி கேட்டு நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல அமைப்பின் தலைவர்கள் வந்திருந்த போதிலும் யாருக்கும் அமர்வதற்கு இருக்கை போடுவதற்கு கூட போலீசு அனுமதிக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சாதிய படுகொலைகளை மூடிமறைப்பது, திசை மாற்றிவிடுவது, நீர்த்துப்போகச் செய்வது ஆகியவற்றை  இந்த அரசு கட்டமைப்பு தொடர்ந்து செய்து வருகிறது. இதை முத்தையாவின் படுகொலையின் மீதான அரசின் நடவடிக்கையின் வாயிலாக நாம் புரிந்து கொள்ள முடியும்.

இதன் அடுத்த கட்டமாக சின்னதுரையின் மீதான இந்த கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மென்மேலும் நடக்காமல் இருக்க இந்த அரசு கட்டமைப்பிடமே நாம் தீர்வை  தேட முடியுமா?

தாழ்த்தப்பட்ட மாணவரான சின்னதுரையின் மீதான இந்த தாக்குதலை கண்டித்து 12- 8- 2023 அன்று நெல்லை ரயில் நிலையம் அருகில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. மக்கள் அதிகாரம் சார்பாக நெல்லை மண்டல இணைச் செயலாளர் தோழர் கின்ஷன் கலந்துகொண்டு தன்னுடைய கண்டன உரையை பதிவு செய்தார்.

அவரது பேச்சில், கல்வியில் சீர்திருத்தம் தேவை என்பதையும், ஆதிக்க சாதிப்பிரிவில்  இருக்கும் ஜனநாயக சக்திகளையும் பிற உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைத்து எடுத்துச் செல்லும்போதுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதையும் பதிவு செய்தார்.

ஜனநாயகப்படுத்தப்படாமல் பிற்போக்குத்தனமாக இருக்கும் இந்த சமூக அமைப்பே சாதிய சங்கங்கள் வளர்வதற்கு ஒரு விளைநிலமாக இருக்கிறது. சட்டத்தின் வழியாக மட்டுமே இதை மாற்ற இயலுமா? ஆதிக்க சாதிகள் பெரும்பாலும் சட்டத்தின் வழி நடப்போம், ஜனநாயகத்தை காப்போம் என கூறுவதில்லை. பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களும், இயக்கங்களுமே சட்டத்தின் வழி தீர்வு சட்டத்தை நடைமுறைப்படுத்து எஸ்.சி, எஸ்.டி ஆக்ட்டில் கைது செய்!  போன்ற முழக்கங்களை முன் வைக்கின்றன.

இதன் மூலம் இந்த சட்டத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்றாலும் வேறு மாற்று வழி தெரியாததால் இதையே கடைபிடிக்க வேண்டியதாக உள்ளது. ஆனால் இந்த சட்டத்தின் வழி இது சாத்தியமா? விதிவிலக்காக  ஒரு சில சம்பவங்களில் இந்த சட்டம் குற்றவாளிகளை தண்டித்து இருக்கிறது.

படிக்க : ஆதிக்கசாதி வெறியர்களின் கொட்டத்தை அடக்குவோம்!

ஆனால் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க இந்த சட்டம் உதவுமா? அப்படி இல்லையெனில் இந்த சட்டத்தின் வழியாக நிவாரணம் தேடுவது சரிதானா?  சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கு என்ன வழிமுறையை முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் கையில் எடுக்க வேண்டும் என்பதை ஆழமாக பரிசீலிக்க வேண்டிய தருணம் இது.

நேதாஜி சுபாஷ் சேனை போன்ற ஆதிக்க சாதி சங்கங்களையும், பா.ஜ.க மற்றும் அதன் கைக்கூலிக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என நாம் முழங்க வேண்டிய தேவை இருக்கிறது. இக்கட்டுரையை படித்து தேவர் சாதியை சேர்ந்த யாரேனும் அனைத்து தேவர்சாதி மக்களும் சாதி வெறியர்களல்ல என சீறினால்  நம்மீது அவர்கள் கோபம் கொள்ள வேண்டியதில்லை.

மாறாக  அவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் இந்த சாதி சங்கங்களை எதிர்த்து முறியடிப்பதும், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராடுவதுமே சரியான வழிமுறையாக இருக்கும்.

செங்குரல்

நாடாளுமன்றம் பஜனை மடம்: எதிர் கட்சிகளே மக்களிடம் செல்லுங்கள்! | தோழர் வெற்றிவேல்செழியன்

நாடாளுமன்றம் பஜனை மடம்:
எதிர் கட்சிகளே மக்களிடம் செல்லுங்கள்! | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆதிக்கசாதி வெறியர்களின் கொட்டத்தை அடக்குவோம்!

0

தீண்டாமை ஒரு பாவச்செயல்; பெருங்குற்றம்; மனிதத்தன்மையற்ற செயல்” என்று கற்றுக்கொள்ள வேண்டிய பள்ளி மாணவர்களின் நெஞ்சில் “சாதிவெறி” எனும் நஞ்சை விதைத்து தீண்டாமையை ‘புனித’ செயலாக கருதக்கூடிய நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், ஆதிக்கசாதி வெறியர்கள். அதன் வெளிப்பாடுதான், தாழ்த்தப்பட்ட மாணவர் சின்னத்துரை மீது ஆதிக்கசாதி வெறி பிடித்த மாணவர்கள் நடத்தியிருக்கும் கொலைவெறித் தாக்குதல்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி கிராமத்தில் தலித் பறையர் சமூகத்தைச் சேர்ந்த அம்பிகாபதி தனது மகன் சின்னத்துரை மற்றும் மகள் சந்திராசெல்வியுடன் வசித்துவருகிறார். வீட்டு வேலைகளுக்கு சென்றுதான் தன் பிள்ளைகளை படிக்க வைக்கிறார். அவரின் மகன் சின்னத்துரை வள்ளியூரில் உள்ள கண்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஒன்பதாம் தேதி இரவு பத்து மணியளவில் சின்னத்துரையுடன் படிக்கும் சக மாணவர்களான சுப்பையா, செல்வரமேஷ், மற்றொரு மாணவர் என மூன்று பேர் சின்னத்துரையின் வீட்டிற்குள் புகுந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கூர்முனையைக் கொண்டு குத்தியும் தாக்கியுள்ளனர். சின்னத்துரைக்கு தோள்பட்டை, கால் பாதம், கைகள் என 15 இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இரு கை எலும்புகளும் நொறுங்கியுள்ளன. தன் அண்ணன் மீதான தாக்குதலை தடுக்க முயன்ற சந்திராசெல்வியையும் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார்.

படிக்க : எங்களை மன்னித்துவிடு ஜெகதீஸ்வரன்! நாங்கள் சுரணையற்றவர்களாக இருக்கிறோம்!

அம்பிகாபதி மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும்  பாத்திமா ஆகிய இருவரும் கூச்சலிட்டதால், தாக்கிய மூவரும் தப்பித்து சென்றுவிட்டனர். தன் பேரன் தன் கண்முன்னாலேயே கொடூரமாக தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்த சின்னத்துரையின் தாத்தாவான கிருஷ்ணன் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சின்னத்துரையின் ரத்தம் அவரது வீட்டுக் கதவிலும், படிகளிலும், பாத்திரங்களிலும் மற்றும் தெருக்களிலும் படிந்து கிடப்பதை பார்க்கும் போதே நம் நெஞ்சம் பதறுகிறது. ஆதிக்கசாதி வெறி பிடித்த மாணவர்கள் சின்னத்துரையை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனே இக்கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். சின்னத்துரையின் கழுத்தையும் தலையும் குறிவைத்தே தாக்கியுள்ளனர். ஆனால் சின்னத்துரை அத்தாக்குதல்களை தன்னுடைய கைகளைக் கொண்டு தடுத்ததால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்பிழைத்துள்ளார்.

தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சின்னத்துரையும் அவனது தங்கையும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய கொலைவெறித் தாக்குதலில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டிருப்பதும் அதற்கான காரணமும் தமிழ்நாடு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடம் சின்னத்துரை, தன் மீது சாதிய வன்கொடுமை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சுப்பையா மற்றும் செல்வரமேஷ் ஆகிய இருவர் மீதும் புகார் அளித்ததே இத்தாக்குதலுக்கான காரணம் ஆகும்.

சுப்பையா மற்றும் செல்வரமேஷ் ஆகிய இருவரும் சின்னத்துரையை சாதிரீதியாக ஆபாசமாக பேசியும், இழிவாக நடத்தியும் உள்ளனர்; பணத்தை மிரட்டிப் பிடுங்கியுள்ளனர்; சிகரெட் வாங்கிவரச் சொல்லி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்து பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த சின்னத்துரையை, அவனது ஆசிரியர்கள் அழைத்து நடந்ததை விசாரித்து ஆறுதல் கூறி சின்னத்துரையிடம் புகார் கடிதத்தை எழுதி வாங்கியுள்ளனர்.

“பறையர் சாதியைச் சேர்ந்த நீ ஆதிக்கசாதியைச் சேர்ந்த எங்கள் மீதே புகார் கொடுக்க துணிந்து விட்டாயா?” என்ற சாதிவெறித் திமிரிலேயே தாக்குதல் நடத்தியுள்ளனர், சுப்பையாவும் செல்வரமேசும். “பறத் தேவடியா பயலே எங்களுக்கு எதிராக புகார் கொடுப்பியா” என்று கத்திக் கொண்டே தலையிலும் கழுத்திலும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். அந்த அளவிற்கு ஆதிக்கசாதி வெறியர்களால் அவர்களின் நெஞ்சில் “சாதி வெறி” எனும் நஞ்சு விதைக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களான இவர்கள், இத்தாக்குதலை ஒரு கூலிப்படையைப் போல திட்டமிட்டு நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்து செல்வதற்கான வழிகளை குறித்து வைத்துக் கொள்வதற்காக மாலை 6 மணி அளவில் செல்வரமேஷ், தன் பாட்டி மற்றும் சித்தப்பாவை அழைத்துக்கொண்டு சின்னத்துரை வீட்டிற்கு சென்றுள்ளார்.

கடந்த பத்தாம் தேதி போலீசு, சின்னத்துரையின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய மூன்றுபேர் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த செல்வதுரை, வான்முத்து, கல்யாணி ஆகிய மூவர் என ஆறு பேரை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் பதினேழு வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள். தற்போது மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மூவரும் காவல்நிலையத்தில் சிறிதளவும் குற்றவுணர்ச்சி இல்லாமல் சிரித்து விளையாடிக் கொண்டிருந்ததாய் தன்னுடைய ஆதங்கத்தை முகநூல் வீடியோவில் வெளிப்படுத்துகிறார், சமூக செயற்பாட்டாளரான எவிடென்ஸ் கதிர். இச்சிறுவர்கள் மட்டுமல்ல, மாமன்னன் படத்தில் வரும் ரத்தினவேலு கதாபாத்திரத்தை கொண்டாடும் ஆதிக்கசாதி வெறியர்கள் இக்கொடூர தாக்குதலுக்காகத் துளியும் வருத்தப்படப் போவதில்லை.

திருநெல்வேலி மாவட்டமே ஆதிக்கசாதி வெறியர்களின் கோட்டையாகத் தான் உள்ளது. சின்னத்துரை மீது நடந்த தாக்குதல், கடந்த மூன்று மாதத்தில் நாங்குநேரியில் நடந்த மூன்றாவது தாக்குதல் என்று கூறுகிறார், சின்னத்துரையின் பெரியப்பா தளவாய் மணி. இக்கொடுமைகளை சகித்துக்கொள்ள முடியாமல் 50 குடும்பங்கள் கிராமத்தை விட்டு வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டதாக வருத்தத்துடன் கூறுகிறார்.

மேலும், சின்னத்துரை படிக்கும் பள்ளியில் மட்டுமல்லாமல், திருநெல்வேலி மாவட்டத்தில் பத்து பள்ளிகளில் இதுபோன்ற சாதிரீதியிலான வன்கொடுமைகள் நடந்துவருவதைப் பற்றி கண்காணித்து வருவதாக கூறுகிறார், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்.

படிக்க : வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்க சதி செய்யும் சாதிய அரசு!

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்தது, மதுரை திருமோகூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது எனத் தமிழ்நாடு முழுவதும் கொட்டமடித்து வருகிறார்கள், ஆதிக்கசாதி வெறியர்கள். தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதிரீதியான மோதல்கள் அதிகரித்து வருவதாகவும், கடந்த மூன்று மாதங்களில் 500 மோதல்கள் அதிகரித்து இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார், எவிடென்ஸ் கதிர்.

இந்த மோதல்களில் பெரும்பாலானவை ஆதிக்கசாதி வெறி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊருடுவி உள்ளதன் விளைவே ஆகும். தமிழ்நாட்டில் மதக்கலவரத்தின் மூலம் தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்க முடியாத ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்கப் பரிவாரக் கும்பல், மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்துவதன் மூலம் தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ள விழைகிறது.

எனவே, மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பு மக்களிடமும் சாதி வெறியை விதைத்து, சாதிவெறி தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கும் ஆதிக்கசாதி வெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலும் தடைசெய்யப்படாத வரை தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தாக்குதல்கள் குறையப்போவதில்லை.

ஆதிக்கசாதி வெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் சமூகப் புறக்கணிப்பு செய்வோம்! ஆதிக்கசாதி வெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் தடை செய் என வீதிதோறும் முழங்குவோம்!

பிரவீன்

எங்களை மன்னித்துவிடு ஜெகதீஸ்வரன்! நாங்கள் சுரணையற்றவர்களாக இருக்கிறோம்!

எங்களை மன்னித்துவிடு ஜெகதீஸ்வரன்!
நாங்கள் சுரணையற்றவர்களாக இருக்கிறோம்!

னிதா தொடங்கி ஜெகதீசன்வரை இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொலைகார நீட் தேர்வுக்கு பலிகொடுத்துள்ளோம். ஆனால், தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகிறது. இரண்டுமுறை சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம். இனி நமது கையில் என்ன இருக்கிறது, ஜனாதிபதி இறுதி முடிவு அறிவிக்கும்வரை சாவுகளை எண்ணிக் கொண்டிருப்போம் என்று சுரணையற்று இருக்கிறது தமிழ்நாடு.

நீட் தேர்வை விரும்பாவிட்டாலும், “வேறுவழியில்லை, நீட் தேர்வில் தேர்ச்சிபெறுவதற்கேற்ப நம்மை தகவமைத்துக் கொள்வோம்” என்று ஒருபிரிவு நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் தயாராகிவிட்டார்கள். நீட்டை ஒழித்துக் கட்டவேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த நம்மில் பலர், “அரசு கொடுக்கும் நீட் தேர்வு பயிற்சியில் அதிக மாணவர்களைச் சேர்க்க வேண்டும்; 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு விரிவுபடுத்த வேண்டும்” என்று இடைக்கால கோரிக்கைகளை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் நிலைமைகளுக்கேற்ப சமயோசிதமாக செயல்படுவதாக நாம் கருதிக் கொள்ளலாம். ஆனால், இது நமது சுரணையற்ற நிலையையே காட்டுகிறது என்பதை நீட் தேர்வால் கொல்லப்படும் ஒவ்வொரு மாணவனின் மரணமும் காட்டுகிறது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவன் ஜெகதீசனின் தற்கொலையைத் தொடர்ந்து, துயரம் தாங்காத அவரது தந்தை செல்வசேகரனும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று மகன், அடுத்த நாள் தந்தையும் உயிரிழந்துள்ளார்கள்.

படிக்க : மீண்டுமொரு இனக் கலவரத்திற்கு தயாராகும் ஹரியானா!

“என்ன இருந்தாலும், தற்கொலை தீர்வாகாது, ஜெகதீசன் செய்தது தவறு” என்று நம்மில் பலர் கருதக்கூடும். மாணவி அனிதாவின் தற்கொலையை ஒட்டியும் இதேபோன்ற கருத்துகள் பேசப்பட்டதுதான். இத்தகைய கருத்துகள் எல்லாம் “சுரணையற்றவர்களின் புத்திசாலித்தனமான வாதங்கள்” என்றே சொல்லவேண்டும். வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால், ஜெகதீசன் போன்ற மாணவர்களின் தற்கொலைக்கு நீட் மட்டுமே காரணமல்ல, இதுபோன்று நியாயவாதங்களைப் பேசும் நாமும்தான் காரணம். “இந்த கொலைகார நீட்டை இன்னமும் அனுமதித்து வருகிறீர்களே, என் சாவுக்குப் பிறகாவது உங்களுக்கு சுரணைவரட்டும்” என்று தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அனைத்து மாணவர்களுமே கருதியிருக்கக் கூடும்.

ஒன்றியத்தின் ஆதிக்கம் எந்த வடிவத்தில் வந்தாலும், அதை தமிழ்நாடு எதிர்த்து நிற்கும் என்று பார்க்கப்படுகிறது. அது இந்தி எதிர்ப்பில் மட்டுமல்ல, நீட் எதிர்ப்பிலும் உறுதி குலையாது என்று எதிரிகளும் கருதுகிறார்கள். ஆனால், “அந்த நம்பிக்கையை ஏன் பொய்யாக்குகிறீர்கள், ஆதிக்க நீட்டை விரட்டியடிக்காமல் இன்னமும் ஏன் அமைதி காக்கிறீர்கள்?” – நீட் தேர்வால் ஒவ்வொரு மாணவர் தற்கொலைசெய்துகொள்ளும் போதும், அந்தத் தற்கொலை, தமிழ்நாட்டைப் பார்த்து எழுப்பும் கேள்வி இதுதான்!

“நேற்று அனிதா, இன்று என் நண்பன் ஜெகதீசன், நாளை உங்களுடன் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம். அனிதாவின் வலி இப்போதுதான் எங்களுக்குப் புரிகிறது” என்று கதறியழுகிறார் ஜெகதீசனை இழந்த அவரது நண்பர் ஃபயாஸ்.

ஜெகதீசனின் தந்தை செல்வசேகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்துகொண்ட ஜெகதீசனின் நண்பர்கள் பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர். “இன்னும் எத்தனை ஜெகதீசனை, எத்தனை அனிதாவை இழக்கப்போகிறோம்?” இவை நம்மை நோக்கி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் நோக்கியும் எழுப்பும் கேள்விகள்தானே!

ஜெகதீசனுக்காக வாதாடும் அவனது நண்பர், சி.பி.எஸ்.சி பள்ளியில் படித்தவர், நீட் தேர்வுக்காக கோச்சிங் செண்டருக்குப் போய் படித்தும், 160 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால், 25 லட்சம் செலவுசெய்து ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கியிருக்கிறார். “எனது அப்பா பொருளாதாரத்தில் கொஞ்சம் மேலே இருந்ததால், நான் எம்.பி.பி.எஸ். சேர்ந்துவிட்டேன். ஆனால் அந்த பணம் இல்லாததால் என் நண்பன் ஜெகதீசனை நாங்கள் இழந்துவிட்டோம்” என்று கதறியழுகிறார் ஃபயாஸ்.

ஜெகதீசனின் தற்கொலைக்கு ஒருநாள் முன்பு, ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பார்த்து ஜெகதீசனின் நண்பர் ஃபயாஸைப் போன்றே ஒரு கேள்வியை எழுப்பினார் ஒரு மாணவரின் தந்தை.

“நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் கொடுப்பீர்கள்” என்று அவர் எழுப்பிய கேள்விக்கு “நானாக இருந்தால், ஒருபோதும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்க மாட்டேன்” என்று திமிராகப் பதிலளித்துள்ளார் ஆர்.என்.ரவி. “நான் ஒன்றிய அரசு ஊழியராக இருந்ததால், என் மகளைப் படிக்கவைக்க முடிந்தது; நீட் தேர்வால் பணம் இருப்பவர்கள் மட்டுமே படிக்க முடிகிறது என்றும், கோச்சிங் செண்டர்களுக்குதான் லாபம்” என்றும் அவர் அடுத்தடுத்த கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும்போதே அவரிடமிருந்த மைக் பறிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேவந்து பேட்டியளித்த அம்மாசையப்பன் என்ற அந்த தந்தை அளித்த பேட்டியில், “அங்கிருந்த அதிகாரிகள் கூட ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அங்கு வந்திருந்த ஏதோ ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தினர்தான் என்னை சுற்றிவளைத்துக் கொண்டனர். அவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் உங்க பசங்கள டாக்டருக்கு படிக்க வைக்கிறீங்க? ஆளுநரிடம் கேள்வி கேட்கிற அளவுக்கு தைரியமா? என்றெல்லாம் என்னைக் கேட்டார்கள்” என்றார்.

படிக்க : நாங்குநேரி கொடூரம்: மாணவர்களிடையே அதிகரித்துவரும் சாதிவெறி!

லட்சங்களை கட்டி நீட் பயிற்சிவகுப்புச் செல்ல முடிந்த, ஓரளவு பொருளாதார வசதி படைத்தவர்கள்கூட, இந்த கொள்ளைக்கார தேர்வை ஏன் அனுமதிக்க வேண்டும் என்று கேள்வியெழுப்பும் வகையில், மாணவர்களின் தொடர் தற்கொலைகள் நமக்கு ஆத்திரமூட்டுகின்றன. அப்படியிருக்க, இனியும் இந்த அநீதியை எப்படி தமிழ்நாடு சகித்துக் கொண்டிருக்க முடியும்?

மாணவர் ஜெகதீசனின் தற்கொலை தொடர்பாக, “குழுந்தைகளைக் கல்வி, மதிப்பெண்களை வைத்து ஒருவரோடு ஒருவர் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், குழந்தைகளிடம் நேர்மறையான எண்ணங்களை விதைப்போம்” என்று உபதேசம் செய்து அறிக்கைவிட்டிருக்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

அப்பட்டமாக கொலைகார நீட் தேர்வை நியாயப்படுத்தியும், மாணவர்களின் தற்கொலையை கொச்சைப்படுத்தியும் வரும் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட காவிக் கும்பலை, தமிழ்நாட்டில் நிம்மதியாக இருக்க அனுமதிக்கிறோம் என்றால் அது ஜெகதீசனுக்குச் செய்கின்ற துரோகம் அல்லவா! எத்தனை பேர் செத்தாலும் நமக்கு சுரணை வரவில்லை என்று பொருளல்லவா!

அனிதா முதல் ஜெகதீசன் வரை நம்மிடம் இரங்கல் அஞ்சலியைக் கோரவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் அநீதிக்கு எதிராக, நம் மீது நீட்டை திணித்துவரும் பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக, கொஞ்சமாவது சுரணை கொள்ளுங்கள் என்பதைதான்!

வாசு

16-வது ஆண்டில் வினவு! பா.ஜ.க.வைத் தடை செய் என முழங்குவோம்!

0

16-வது ஆண்டில் வினவு!

பா.ஜ.க.வைத் தடை செய் என முழங்குவோம்!

அன்பார்ந்த வாசகர்களே, தோழர்களே,

வினவு 16-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அந்த வகையில் வாசகர்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2020 பிப்ரவரியில் வினவுக்கு ஏற்பட்ட ‘லாக்டவுனு’க்குப் பின்னர் வினவு மீண்டெழுந்து நடைபோடத் தொடங்கியதை எமது சென்ற ஆண்டுப் பதிவில் தெரிவித்திருந்தோம்.

இந்த ஓராண்டைத் தொகுத்துப் பார்க்கும் போது பல முன்னேற்றங்கள், பல புதிய அம்சங்களில் வினவின் பங்களிப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கு ஆயிரக்கணக்கான வாசகர்களின் ஆதரவும், தோழர்களின் பங்களிப்பும்தான் முதன்மையான காரணம். இன்னும் குறிப்பாக, வினவுக்கென நிரந்த ஊழியர்கள் இல்லையெனினும், தோழர்கள் இடையறாது கொடுத்துவரும் ஆதரவுதான் வினவை புதிய வளர்ச்சி நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. புதிய தோழர்கள் பலரும் வினவுக்கு எழுதத் தொடங்கியிருப்பதும், வீடியோ பதிவுகளை வழங்கி வருவதும் வினவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்.

000

எந்த இயக்கமாக இருந்தாலும் அதன் அரசியல் அமைப்பும் கட்டமைப்பும் எந்த அளவிற்கு விரிவடைகிறதோ அந்த அளவிற்கே அது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். புதியன புகுதலும் பழையன கழிதலும் புரட்சிகர அமைப்புக்கு இல்லையென்றால் அது என்ன ஆகும் என்பதற்கு சம காலத்தில் பல இணைய தளங்களை நாம் எடுத்துப் பார்க்கலாம். கொரோனா காலத்தில் ஓரளவிற்கு இயங்கிக் கொண்டிருந்த பல இணைய தளங்கள் இன்று தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவே போராடுகின்றன.

இவையில்லாமல் மையின் ஸ்டீரிம் (Mainstream) ஊடகங்கள் பெரும்பாலானவை மோடியின் ஊதுகுழலாக மாறிவிட்டன. சொல்லிக் கொள்ளப்படும் மாற்று ஊடகங்கள் பல பாசிச எதிர்ப்பில் உழைக்கும் மக்கள் பக்கம் நிற்காமல் திமுக-காங்கிரஸ் போன்ற ஓட்டுக் கட்சிகளிடம் சரணாகதியடைந்துவிட்டன. மக்களுக்காக குரல் கொடுக்கும் ஊடகங்கள் மீது பாசிச பாஜக அரசால் அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.


படிக்க : நூறு நாள் வேலை திட்டத்தை ஒழித்துக் கட்டத் துடிக்கும் பாசிச மோடி அரசு!


ஆனால் இந்த கடுமையான அரசியல் சூழலிலும் தோழர்கள், வாசகர்களின் ஆதரவுடன் பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கு தோள்கொடுக்கும் வகையில் உழைக்கும் மக்களின் குரலாக வினவு தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது.

பாசிச எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் வினவு:

பா.ஜ.க-வின் இந்தி திணிப்புக்கு எதிராக “மீண்டும் இந்தி: வெறும் மொழித் திணிப்பல்ல” என தொடர்ச்சியாக வீடியோக்கள் மற்றும் பதிவுகளை கொண்டுவந்தோம்.

ரஷ்ய புரட்சி நாள் மற்றும் பாட்டாளி வர்க்க ஆசான் ஸ்டாலின் பிறந்த நாள் ஆகிய நிகழ்வுகளையொட்டி வினவு வாசகர்களுக்கு சோசலிச உணர்வையும், பாசிச எதிர்ப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வீடியோக்கள் மற்றும் பதிவுகளை கொண்டுவந்துள்ளோம்.

கல்வியை காவிமயமாக்கும் பாசிச அரசின் பல்வேறு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வருகிறோம். திமுக அரசால் வெவ்வேறு பெயர்களில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக்கொள்கையின் அம்சங்களை ஆசிரியர் உமா மகேஸ்வரி போன்ற கல்வியாளர்களுடன் இணைந்து வீடியோக்களையும் அம்பலப்படுத்தும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளோம்.

பத்திரிகையாளர் சித்திக் கப்பன், பேராசிரியர் சாய்பாபா, பாடகர் நேஹா சிங் ரத்தோர் போன்ற பல்வேறு பாசிச எதிர்ப்பு சக்திகளின் மீதான மோடி அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உடனுக்குடன் குரல் கொடுத்துள்ளோம்.

இவையில்லாமல், தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி-யின் பாசிச நடவடிக்கைகள், மோடியை அம்பலப்படுத்தும் பிபிசி ஆவணப்படம், அதானியை அம்பலப்படுத்தும் ஹிண்டன் பர்க் அறிக்கை, மோடி அரசின் உழைக்கும் மக்கள் மீதான பொருளாதார தாக்குதல்கள் போன்றவற்றின் மீது வினையாற்றியுள்ளோம்.

தற்போது “மணிப்பூர் இனப்படுகொலை” குறித்த சரியான அரசியலை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் வினவு முக்கிய செயலாற்றியுள்ளது. பாசிஸ்டுகளின் பாதந்தாங்கி ஊடகங்களும் மதன்கௌரி போன்றவர்களும் திட்டமிட்டு மணிப்பூர் கலவரத்தை இரண்டு இனங்களுக்கு இடையிலான மோதலாக சித்தரித்த போது, மணிப்பூர் கலவரம் ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரம் என்பதை பல்வேறு கட்டுரைகள் வீடியோக்கள் மூலம் அம்பலப்படுத்தினோம்.

மேலும், மணிப்பூர் கலவரத்தில் குக்கி பெண்களை நிர்வாணமாக இழுத்துச்  செல்லப்பட்ட காணொளி வெளியாகி தமிழ்நாட்டு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கிய போது “ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை தடை செய்” என்ற முழக்கம் போராட்டக்களம் தோறும் ஒலித்தது. மாணவர் போராட்டங்களை தொகுத்து வீடியோவாக வெளியிட்டோம். ”பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி!” என்ற முழக்கத்தின் அடிப்படையிலான புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.

இதேபோல் தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 15 பேரின் உயிரை பறித்த கொலைகார அனில் அகர்வால் ஆகஸ்ட் 6-ஆம் தேதி சென்னைக்கு வருகைதரவிருந்த போது கார்ப்பரேட் ஊடகங்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக விளம்பரங்கள் வெளிட்டது. ஆனால் வினவு, ”கொலைகார அனில் அகர்வாலே தமிழ்நாட்டிற்குள் நுழையாதே!” என்ற களபோராட்டங்களை காட்சிபடுத்தியது.

அனில் அகர்வாலின் வருகையை ஒட்டி மக்கள் அதிகாரம், மே பதினேழு இயக்கம், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி போன்ற பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து சென்னையில் ”அனில் அகர்வாலே திரும்பி போ” என்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தை வினவு மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்தது. வேறு எந்த ஊடகங்களும் ஒளிபரப்பவில்லை.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க பல்வேறு சதித்தனங்களை செய்து வரும் வேதாந்த குழுமத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். இந்துராஷ்டிரத்தை நிறுவ துடிக்கும் பாசிச பா.ஜ.க-வின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வருகிறோம்.

களப்போராட்டங்களில் வினவு:

உழைக்கும் மக்களின் போராட்டத்தில் வினவு களத்தில் நின்றுள்ளது. கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணத்தையொட்டி நடந்த போராட்டம், திருச்சி பெல் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம், விஷ சாராய பலிகள்- திமுக அரசை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம், ஓசூர் உத்தனப்பள்ளி விவசாயிகள் போராட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம், ஸ்விக்கி தொழிலாளர்கள் போராட்டம், போர்ட் ஆலை தொழிலாளர்கள் போராட்டம், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கட்டண கொள்ளைக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் என தொடர்ச்சியாக போராட்டக்களத்தில் வினவு வினையாற்றி வருகிறது.

கடந்த ஓராண்டில் வினவின் வளர்ச்சி

வினவு ஊடக தளம் சமூக ஊடகங்களில் விரிவடைந்து லட்சக்கணக்கான மக்கள் பின்பற்றும் வகையில் இன்று சில முன்னேற்றங்கள் அடைந்துள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 19 வீடியோக்கள் வரை  பதிவிட்டுள்ளோம். மாதம் சராசரியாக 20 வீடியோ பதிவுகளை நோக்கி முன்னேறியுள்ளோம்.

அதேவேளையில், இணைய தளத்தில் நாளொன்றுக்கு சராசரியாக மூன்று பதிவுகள் என்பதை தாண்டி சில மாதங்களில் சராசரியாக நான்கு பதிவுகளுக்கு முயற்சி செய்துள்ளோம். பதிவுகளைப் பொருத்தவரை, அதிக அளவில் செய்திப் பதிவுகளாக இருந்த நிலைமையை இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் மாற்றியமைத்துள்ளோம். அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் கருத்து சொல்லும் பதிவுகளைக் கொண்டுவந்துள்ளோம்.

சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து நடந்த மக்கள் போராட்டங்கள், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி படுகொலை தொடர்பாக தோழர்களின் களப்போராட்டங்கள், மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய எமது தோழமை அமைப்புகளின் மாநாடு போன்றவை வீடியோ எண்ணிக்கை அதிகரிப்பதில் முதன்மையான பங்காற்றியது.

குறிப்பாக, நவம்பர் மாதத்தில் இருந்துதான் வினவு தனது வீடியோக்கள் பதிவிடுவதை அதிகரிக்கத் தொடங்கியது. நவம்பர் ரசிய புரட்சி நாளை ஒட்டி வெளியிட்ட டீசர், நவம்பர் 7 தொடர்பாக தோழமை அமைப்புகளின் அரசியல் நிகழ்வை ஒட்டி கொண்டுவரப்பட்ட ஆவணப்படம், தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி மறு உருவாக்கம் செய்து கொண்டுவரப்பட்ட வீடியோ ஆகியவை வினவின் புதிய பங்களிப்புகளாகும். இத்துடன், தொடர்ந்து இந்த வகையிலான எமது வீடியோக்களை அதிகரித்து வந்துள்ளோம்.

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக
நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | பத்திரிகையாளர் சந்திப்பு, சிவப்பு அலை கலைக்குழு தொடக்க நிகழ்ச்சி, 2022 செப்டம்பர் மாநாடு, 2023 மே 15 மாநாடு ஆகியவற்றை ஒட்டி வினவு நேரலைகளைக் கொண்டுவந்தது. இதில் மே 15 மாநாட்டின் வீடியோ தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு பல வகைகளில் பேசிவந்தாலும் அது தொடர்பாக புரட்சிகர கண்ணோட்டத்தில் ஒரு முறையான வரலாற்றுப் பதிவு இதுவரை இருந்ததில்லை. இந்த ஆண்டு இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் ஊடாக, இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்ட வரலாற்றை விளக்கிக் கொண்டுவந்த வீடியோக்கள் வரலாற்று ஆவணத்தின் வினவின் முக்கியமான பங்களிப்பாகும்.

இவையன்றி, மக்களை பாதிக்கின்ற பிரச்சினைகள், உடனடி அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டு வெளியிடும் வீடியோக்களும் அதிகரித்துள்ளன. ஆளுநர் ஆர்.என். ரவியின் திமிர் பேச்சு, ஜி.எஸ்.டி வரி சாதனை அல்ல வேதனை, திருமங்கலம் சுங்கச்சாவடியின் அடாவடித்தனம், திமுக அரசின் 90மிலி சாராய திட்டம், தக்காளி விலை உயர்வு, மணிப்பூர் கலவரம், அணில் அகர்வால் சென்னை வருகை என உழைக்கும் மக்களை நேரடியாக பாதிக்கும் பல விஷயங்களை ஒட்டி மக்களிடம் நேர்காணல்களை நடத்தியுள்ளோம். இது போன்ற மக்கள் நேர்காணல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சிவப்பு அலை கலைக்குழு தொடக்கமானது சமகால புரட்சிகர இயக்க வரலாற்றில் ஒரு முக்கியமான அம்சமாகும். இது வினவின் வளர்ச்சிக்கும் பெரிய பங்காற்றியுள்ளது. புதிய இளந்தோழர்கள், கல்லூரி மாணவர்களைக் கொண்டிருந்தாலும் அது தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் சொந்தமாக பாடல் தொகுப்பைக் கொண்டுவந்துள்ளது.

அக்குழுவின், வீழாது தமிழ்நாடு துவளாது போராடு – நமது வீர மரபை வரித்துக் கொள்ளும் பாடல்களை பல்வேறு ஜனநாயக சக்திகள் தங்களது பக்கங்களில் தீம் பாடல்களாக வைத்துள்ளனர் என்பது சிவப்பலைக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். தற்போது இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய நாளில், சிவப்பலையின் “Ban Rss Ban BJP” பாடல் பல்வேறு பிரிவுகளால் மிகவும் வரவேற்பைப் பெற்று வருவது சிறந்த முன்னேற்றமாகும். இதை இன்னும்  நாடு முழுவதும் கொண்டுச் செல்ல வேண்டிய தேவை உள்ளது.

2008 ஜூலை 17 வினவு தொடக்க நாள்!

நெருக்கடிகளை உடைத்து முன்னேற வேண்டியுள்ளது:

இந்த ஓராண்டில் வினவுக்கு ஏற்பட்ட வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த ஊடகத்துறையின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது மிகச்சிறிய வளர்ச்சியே ஆனால், வினவை பொருத்தவரை இது குறிப்பிட்டதக்க வளர்ச்சிதான். வினவு எந்த அளவிற்கு முன்னேற்றங்களை அடைந்துள்ளதோ அந்த அளவிற்கு நெருக்கடிகளையும் சந்தித்துள்ளது.

குறிப்பாக, சென்ற ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் வினவு தளம் தொடர்ந்து  சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டது. இதனால் சில நாட்கள் தளம் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த நெருக்கடியான சூழலிலிருந்து வினவு கடந்து வருவதற்குப் பெரிதும் போராட வேண்டியிருந்தது. வினவு தளத்தின் சர்வரைப் பராமரிக்கும் செலவுகளும் பலமடங்கு உயர்ந்துவிட்டன. விலையேற்றம் என்பது வினவையும் கடுமையாக தாக்கியுள்ளது.

இந்த சூழலில் வினவுக்கு நன்கொடை வழங்கிவந்த ஓரிரு நண்பர்கள் மீண்டும் அவர்களது நன்கொடையை வழங்கியுள்ளனர். இந்த நன்கொடை உதவி என்பது படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் வினவுக்கு இரத்தம் கொடுத்தது போன்ற பங்களிப்பாகும்.


படிக்க : ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகங்களை அகற்றச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் சங்கியும் போலீசும் | தோழர் புகழ்


இருப்பினும், கடுமையான நிதி நெருக்கடி, கடனில் வினவு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. வீடியோ பதிவுகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டாலும் அதற்கு ஏற்றார்போல கட்டமைப்பை இன்னும் விரிவுப்படுத்த வேண்டியுள்ளது.

ஆனால் இந்த நெருக்கடிகளை தீர்க்க நீண்ட காலம் அவகாசம் இல்லை. புறநிலையில் பாசிச அபாயம் நம்மை அச்சுறுத்தி வருகிறது. பாசிச எதிர்ப்பு சக்திகளை ஓரணியின் கீழ் திரளவைப்பதன் மூலம்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும். ஆனால் பாசிச எதிர்ப்பு சக்திகள் பலவீனமாக இருக்கும் இந்த தருணத்தில் அவர்களை சரியான அரசியல் பிரச்சாரத்தின் மூலம் மட்டுமே ஒன்றிணைக்க முடியும். அத்தகைய பிரச்சாரத்தை தான் வினவு முன்னெடுத்துச் செல்கிறது. அதற்கு உதாரணம் புரட்சிகர அமைப்புகள் முன்வைத்த “பா.ஜ.க-வை தடை செய்” என்ற முழக்கம் இன்று மக்களின் முழக்கமாக மாறிவருவதுதான்.

ஆனால் இந்த பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்ல  உடனடியாக வினவு தன்னுடைய நெருக்கடிகளை தீர்த்துக் கொண்டு முன்னேற வேண்டியுள்ளது. அதற்கு பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவரின் பங்களிப்பும் (அது எந்த வகையில் இருந்தாலும் நிதி, களச்செய்தி சேகரிப்பது, நேரலைக்கு உதவுவது, புகைப்படங்கள் மற்றும் கார்ட்டூன்கள் அனுப்புவது) தேவைப்படுகிறது.

இதனுடன் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் போராட்டங்களை, கூட்டங்களை நேரலையாக அல்லது வீடியோக்களாக ஒளிபரப்ப  வினவு தயாராக உள்ளது. அதற்கு தோழர்கள், வாசகர்கள் எங்களை அணுகலாம்.

பாசிச எதிர்ப்பில் அனைவரும் ஒன்றிணைந்து முழங்குவோம் பா.ஜ.க-வை தடை செய் !

வினவு


வினவு வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை வழங்குங்கள்!

வங்கி மூலம் நன்கொடை செலுத்த:

NAME : S.MAHALAKSHMI
ACCOUNT NO : 6938161028
IFSC CODE : IDIB000M246
Branch : MOGAPPAIR (2147)

Account Type: Savings

Mobile – (91) 93 8465 9191
Email – vinavu@gmail.com

நீட் ரத்திற்கு அனுமதி தரமாட்டேன் என்று தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் ஆளுநர் ரவியே வெளியேறு!

13.08.2023

நீட் ரத்திற்கு அனுமதி தரமாட்டேன் என்று
தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் ஆளுநர் ரவியே
தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!

விவசாயிகளின் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆக கூடாதா?

பத்திரிகை செய்தி

ம்மி ரவி, உளவாளி ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவி என தமிழ்நாட்டு மக்களால் அழைக்கப்படும் ஆளுநர். மீண்டும் தன்னுடைய ஆணவ பேச்சால் தமிழ்நாட்டின் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளார். சென்னையில் கிண்டியில்,  நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலை ஆளுநர் ரவி சனிக்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் நடத்தியுள்ளார்.  2023 ஆம் ஆண்டில் ’நீட்’ தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.  கலந்துரையாடலின் போது சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை  ” நீட் விலக்கு மசோதாவிற்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். உடனே ஆளுநர் ரவி  கோபமாக ”நான் இருக்கும் வரை நடக்கவே நடக்காது, நீட் விலக்கு மசோதாவிற்க்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன்” என ஆவேசமாக பேசியுள்ளார். அந்த தந்தையின் குரல் தான் தமிழ்நாட்டு மக்களின் குரல்.

மேலும் அந்த தந்தை ”என்னுடைய மகள் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுவிட்டாள். ஆனால் எத்தனை ஏழை மாணவர்கள் இப்படி மதிப்பெண் எடுக்க முடியும். நாட்டில் உள்ள ஏழை மாணவர்கள் படிக்க முடியுமா? நீட் தேர்வால் ஏற்கனவே 15 உயிரை இழந்து விட்டோம். இன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்.  என் மகளுக்கு  20 லட்சம் செலவிட்டுள்ளேன். மேலும் நான் மத்திய அரசின் வேலையில் இருப்பதால் என்னால் பணம் கட்ட முடியும். அனைவருக்கும் இது சாத்தியமா? என்றும் நீட் தேர்வு இல்லாமலேயே தமிழ்நாட்டு மாணவர்கள்  பலர் சாதனைகளைப் படைத்துள்ளனர். நீட் தேர்வு இல்லாமலேயே தமிழ்நாடு இந்திய அளவில் மருத்துவக் கல்வியில் சிறந்து விளங்குகிறது. நீட் தேர்வுக்கு முன்பே மருத்துவ கட்டமைப்பும் மருத்துவ கல்லூரியின் கட்டமைப்புகளும் தமிழ்நாட்டில் நன்றாகத்தான் இருந்தது” என்று சேலம் மாணவியின் தந்தை கூற ஆளுநர் மேலும் கடும் கோபம் அடைந்தார்.  நீங்கள் சொல்வது தவறு. உட்காருங்கள் என சப்தமிட்டார். மாணவியின் தந்தையிடமிருந்து மைக்கும் பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அரசுப் பள்ளி மாணவர்களோ பெற்றோர்களோ பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!


ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆணவ பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தது முதல்  சனாதனம், மதம், வரலாறு, மொழி, கலாச்சாரம், பண்பாடு, மாநில உரிமை, போன்ற விவகாரங்களின் மீது ஆர்.எஸ்.எஸ் நச்சு கருத்துகளை திமிர்த்தனமாக பேசி தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாகி வருகிறார். தமிழ்நாட்டு மக்களின்  கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். இவரை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் தமிழ்நாட்டில் வலுத்து வருகிறது.

ஜனநாயக சக்திகளே , தமிழ்நாட்டின் 21 மசோதாக்களை முடக்கி கிடப்பில் போட்டு வைத்திருக்கும் ஆளுநரை எதிர்த்து நம் போராட்டங்களை வலுவாக தொடர்வோம்!

மாணவர்களே, ஆளுநர் ரவி என்பவர் ஆர்.எஸ்.எஸ்யின் பிரச்சாரகர், நம் கல்வி உரிமையை பறிக்கும் நபர், கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கல்வியின் கனவை அழிக்கும் ஆளுநர் ரவியை எதிர்த்து களம் இறங்குவோம்! நீட் தேர்வை ரத்து செய்ய போராடுவோம்! ஆளுநர் ரவியே வெளியேறு, தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என முழங்குவோம்!


தோழமையுடன்
தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

ஆதிக்க சாதி சங்கங்களை அரசு தடை செய்ய வேண்டும் | மக்கள் அதிகாரம் மருது

ஆதிக்க சாதி சங்கங்களை அரசு தடை செய்ய வேண்டும் | மக்கள் அதிகாரம் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!