Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 92

ரஃபா நகரின் மீதான தாக்குதல்: இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்

பாசிச யூத இனவெறி இஸ்ரேல் அரசு காசா பகுதியில் தனது இனப்படுகொலை நடவடிக்கையைத் தொடங்கிய போது பாலஸ்தீன மக்களை தெற்கு காசாவில் அமைந்துள்ள ரஃபா நகரிற்குச் செல்லுமாறு அச்சுறுத்தியது. தற்போது ராபா நகரில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு மக்கள் நெருக்கமாக அடைக்கப்பட்டுள்ள ரஃபா நகரில் இஸ்ரேலிய இராணுவம் நேற்று (பிப்ரவரி 9) குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையாக இஸ்ரேலை விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இஸ்ரேல் ராணுவம் தனது தரைப்படை தாக்குதலை ரஃபா நகருக்குள் விரிவுபடுத்த உள்ளதாக செய்திகளும் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் தனது இனப்படுகொலையைத் தொடங்கி ஐந்து மாதங்களைக் கடந்துள்ள நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 28,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது ரஃபாவிற்கு வடக்கே உள்ள கான் யூனிஸ் நகரில் குவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய தரைப்படைகள் ரஃபா நகருக்குள் நுழையுமானால் இலட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவர்.

ரஃபா நகரில் இஸ்ரேலிய இராணுவம் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துரைக்கும் வகையிலான புகைப்படங்களின் தொகுப்பு:

நன்றி: முகம்மது அபெத் [Mohammed Abed/AFP]

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாலஸ்தீனம்: ஹமாஸின் போர்நிறுத்தத் திட்டத்தை நிராகரித்துள்ள யூத இனவெறி இஸ்ரேல் அரசு!

டந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதியிலிருந்து தொடங்கிய பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போர் நூறு நாட்களைக் கடந்தும் மிகக் கொடூரமான முறையில் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி உலகின் பல நாடுகளில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன; பல நாட்டு அரசுகள் ஐ.நா சபையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன; சர்வதேச நீதிமன்றம் போரை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த பிப்ரவரி ஏழாம் தேதியன்று ஹமாஸ் அமைப்பு போரை நிறுத்துவதற்கான நான்கரை மாதங்களுக்கான மூன்று கட்டத் திட்டத்தை முன்மொழிந்துள்ள போதும், யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு அதை உடனே நிராகரித்துள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக கத்தார் மற்றும் எகிப்திய அரசுகளால் தங்களுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவுக்கு பதிலளிக்கும் வகையில் போர் நிறுத்தத்திற்கான திட்டத்தை முன்மொழிந்துள்ளது, ஹமாஸ் அமைப்பு.

45 நாட்களை உள்ளடக்கிய முதல் கட்டத்தின் போது இஸ்ரேலிய அரசு இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 1,500 பாலஸ்தீனியப் பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிப்பதற்கு ஈடாக, தாங்கள் தங்களிடம் உள்ள அனைத்து பெண் பிணைக் கைதிகள், 19 வயதிற்குட்பட்ட ஆண் கைதிகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை விடுவிக்கிறோம் என்று ஹமாஸ் அமைப்பு முன்மொழிந்துள்ளது.

இந்த முதல் கட்டத்தில் இஸ்ரேலிய அரசு, காசாவின் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தனது இராணுவப் படைகளை திரும்ப பெற வேண்டும; தினமும் அத்தியாவசியத் தேவைகளான உணவு, குடிநீர், மருந்துகள், எரிபொருள் போன்ற நிவாரணப் பொருட்கள் காசா மக்களுக்கு வழங்கப்படுவதை தேவைகளுக்கு ஏற்ப அதிகப்படுத்த வேண்டும்; காசா முழுவதும் முழுமையாகவும், பகுதியளவும், செயல்பாட்டில் இல்லாத மருத்துவமனைகளை புணரமைக்க வேண்டும்; மக்கள் தங்குவதற்கு தேவையான அளவில் முகாம்களை அமைக்க வேண்டும் என்றும் ஹமாஸ் கோரியுள்ளது.

பரஸ்பர இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவந்து முழுமையான அமைதிக்குத் திரும்புவதற்குத் தேவையான பேச்சுகள் இஸ்ரேல் அரசுக்கும் தங்களுக்கும் முடிவடையும் வரை இரண்டாம் கட்டத்தின் அமலாக்கம் தொடங்காது என்றும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டத்தில் தங்களிடம் மீதமுள்ள பணயக் கைதிகளான ஆண்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், மூன்றாம் கட்டத்தில் மீதமுள்ள உடல்கள் மற்றும் எஞ்சியுள்ளவை பரிமாறிக் கொள்ளப்படும் எனவும் முன்மொழிந்துள்ளது ஹமாஸ்.


படிக்க: பாலஸ்தீனம் என்ற வார்தையையே அழிக்கத் துடிக்கும் யூத மதவெறி இஸ்ரேல்! | காணொளித் தொகுப்பு


இவ்வாறு மூன்று கட்ட போர்நிறுத்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரை தற்காலிகமாக தடுத்து நிறுத்த முடியும் என்று எதிர்பார்க்கிறது, ஹமாஸ் அமைப்பு.

ஆனால், இஸ்ரேலிய அரசு காசா பகுதியை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்; ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும்; பாலஸ்தீன மக்களை கொத்து கொத்தாக இன அழிப்பு செய்து தங்களின் யூத இனவெறியை தீர்த்துக்கொள்ள வேண்டும் போன்ற நோக்கங்களிலிருந்து ஹமாஸ் அமைப்பின் போர்நிறுத்தத் திட்டத்தை நிராகரித்துள்ளது.

ஹமாஸ் போர்நிறுத்தத் திட்டத்தை முன்மொழிந்த அன்றே, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதை நிராகரித்தார். முழுமையான வெற்றியை அடையும் வரை காசா மீதான போரை இஸ்ரேல் அரசு தொடரும் என்று உறுதியளித்தார். இதற்கு முன்னரும் ஹமாஸ் அமைப்பினரின் போர் நிறுத்தம், காசா பகுதியிலிருந்து இஸ்ரேலிய இராணுவத்தினரை வெளியேற்றுதல் போன்ற பல கோரிக்கைகளை நிராகரித்தே வந்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் போர்நிறுத்தத் திட்டத்தை நிராகரித்துள்ளதன் மூலம், யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்கள் மீது திட்டமிட்டு இன அழிப்புப் போரை நடத்தி வருவதும்; போர்க்குற்றவாளி இஸ்ரேல் அரசு தான் என்பதும் மீண்டும் உறுதியாகியுள்ளது.

இஸ்ரேலிய அரசின் இத்தகைய நடவடிக்கை மூலம், ஹமாஸிடம் பணயக் கைதிகளாக உள்ளவர்களை மீட்க வேண்டும் என்ற எண்ணம் இஸ்ரேல் அரசுக்கு துளியும் கிடையாது என்பதும் மீண்டும் தெளிவாகிறது. இதற்கு முன்னர் நவம்பர் மாத இறுதியில் பணயக் கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் அரசு ஒரு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்ததும் கூட, தங்கள் குடும்பத்தினரை மீட்டுத் தரக் கோரி இஸ்ரேலுக்குள் நடைபெற்ற யூத இன மக்களின் போராட்டம் மற்றும் உலகின் பல நாடுகளில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்களின் விளைவே ஆகும்.


படிக்க: காசா: குழந்தைகளை நரவேட்டையாடும் இரத்தவெறி பிடித்த இஸ்ரேல் | காணொளிகள்


ஹமாஸ் அமைப்பினரை அழித்தொழித்து, காசாவை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது. நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட, காசாவின் எகிப்தின் ரஃபா எல்லையை ஒட்டியுள்ள தெற்குப் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி மிகுந்த நெருக்கடியான சூழலில் வசித்துவரும் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீதும் குண்டுமழையை பொழிந்து இனப்படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது, பாசிச இஸ்ரேல் அரசு.

இஸ்ரேலிய தாக்குதலால் பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்கள் காண்போரின் நெஞ்சைப் பிழிகின்றன. இஸ்ரேலிய தாக்குதலால் இறந்துபோன பாலஸ்தீனியரின் உடலை பூனைகள் கடித்துக் குதறும் வீடியோ, தண்ணீர் தாகத்தால் சாலையில் தேங்கியுள்ள சுத்தமற்ற தண்ணீரை ஐந்து வயதிற்குப்பட்ட சிறுவன் குடிக்கும் வீடியோ போன்ற பாலஸ்தீன மக்களின் அவலநிலையை தெரியப்படுத்தும் வீடியோக்கள் அல்ஜசீரா போன்ற செய்தி ஊடகங்களால் அன்றாடம் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சமீபத்திய காசா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலின் தாக்குதலால் குறைந்தது 27,585 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கக்கூடும். 67,100 மேற்பட்ட மக்கள் கை, கால் போன்ற உடல் உறுப்புகளை இழந்து படுகாயமடைந்துள்ளனர். தங்களுடைய குடியிருப்புகளில் இருந்து 85 சதவிகித மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர்.

எனவே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை நிர்பந்திக்கும் வகையில் மாபெரும் தேசங்கடந்த மக்கள்திரள் போராட்டங்களை கட்டியமைப்பதன் மூலமே, பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரை தடுத்த நிறுத்த முடியும். பாசிஸ்டுகளை பணிய வைக்க கடந்த கால வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடமும் அதுதான்.


உதயன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நடிகர் விஜய்: ஒரு சினிமா கழிசடை, ஆளும் வர்க்க அரசியல் கழிசடையாக பரிணாமம்

மிழ்நாட்டின் தற்போதைய முக்கிய செய்திகளில் ஒன்று, நடிகர் விஜய்-இன் அரசியல் வருகை. இந்த வருகையை விஜய் ஒரு லெட்டர்பேட் மூலம் ’எளிமையாக’ அறிவித்தார். மானங்கெட்ட ஆளும்வர்க்க ஊதுகுழலான ஊடகங்களோ பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தின.

விஜய்-இன் அரசியல் வருகையைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதுகிற அளவுக்கெல்லாம் ஒரு இழவும் இல்லை. என்னடா இப்படி ’அபசகுனமாக’ எழுதறாங்களே என்று யோசிக்காதீர்கள். ஏனென்றால், விஜய் இன் அரசியல் வருகையே தமிழ்நாட்டைப் பீடித்திருக்கும் ’அபசகுனம்’ தான்.

காவி கார்ப்பரேட் பாசிச சூழலில் நாடே சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டை சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், உழைக்கும் மக்களின் வாழ்க்கையே அதற்காக காவு கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஜய் இன் அரசியல் வருகையை இந்நிகழ்வுகளோடு இணைத்துத் தானே பார்க்க முடியும்.

நாட்டில் திட்டமிட்டு தூண்டிவிடப்படும் சாதி, மத கலவரங்களும், விவசாயிகள், தொழிலாளிகள் மீதான அரசியல், பொருளாதார, அதிகார அடக்குமுறைகளும் அதிகரித்து வரும் நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நடைமுறையில் இதைக் கண்டித்து அறிக்கை விடுவதற்கு கூட துப்பற்ற கோழையாகத்தான் நடிகர் விஜய் இருக்கிறார். அரசியல்வாதியாக அல்ல, குறைந்தபட்ச சமூக பொறுப்புணர்வுடன் கூட மேற்கண்ட பிரச்சினைகளைப் பற்றி விஜய் ஒருபோதும் நேரடியாகக் கண்டித்துப் பேசியதில்லை.

கட்சி தொடங்குவதாக அறிக்கை வாயிலாக அறிவிப்பு கொடுத்தார் விஜய். அவரது அறிக்கையில் மாநில உரிமைகள் பற்றிப் பேசுகிறார். ஆனால் உண்மையில் நீட் திணிப்பு, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பின்மை, தமிழ்மொழி புறக்கணிக்கப்படுதல், கீழடி இருட்டடிப்பு என தமிழ்நாட்டின் உரிமைகள் ஒன்றிய பாசிச பாஜக அரசால் பறிக்கப்படும்போதெல்லாம் வாயே திறந்ததில்லை. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு சினிமாவில் மிகவும் பிசியாக இருந்தார். இப்போது வந்து மாநில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக கட்சி தொடங்குவதாக கூறுகிறார்.

ஆனால், யார் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கிறார்கள் என ஆர்.எஸ்.எஸ் –பிஜேபி கும்பலை நேரடியாக குறிப்பிட்டுக் கூட விமர்சிப்பதற்கு தைரியமில்லாத நபர்தான் நடிகர் விஜய்.


படிக்க: சினிமா அரசியல் போதை மிருகம் = விஜய்


ஆளுநர் ரவி தமிழகம் என்று கூற வேண்டும் என பார்ப்பன குயுக்தியோடு சொன்ன பின்பு தமிழ்நாடு என்றுதான் சொல்ல வேண்டும் என முடிவு செய்து கொண்டோம். இது பார்ப்பன எதிர்ப்பு மரபின் அடிப்படையில் தமிழ்நாடு எடுத்த முடிவு. ஆனால் விஜயோ தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டி, தனது பார்ப்பன அடிமை உணர்வை வெளிப்படுத்துகிறார். இதை அவர் புரிந்து செய்தாரா, புரியாமல் செய்தாரா என்பதல்ல பிரச்சினை, அவரின் நடவடிக்கைகள் பார்ப்பன பாசிசத்திற்கு சேவை செய்கிறது என்பதைத்தான் கூறுகிறோம்.

அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரின் சிந்தனைகளின் அடிப்படையில் செயல்படப்போவதாக விஜய் கூறுகிறார். ஆனால் நடைமுறையில் அதற்கான சுவடே கிடையாது. கொள்கை கோட்பாடெல்லாம் சும்மா அறிக்கைகளில் பெயரளவுக்கு இருந்தாலே போதும்; ரசிகர்கள் மத்தியில் ப்ளைன் கிஸ் கொடுத்தாலே போதும் என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது. அந்தளவுக்கு தமிழ்நாட்டின் இளைஞர்களை முட்டாளாகக் கருதுகிறார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் சாதி வன்கொடுமைத் தாக்குதல்கள் குறித்தெல்லாம் ஒரு வார்த்தை கூட கண்டித்துப் பேசியதில்லை.

ஊழலை எதிர்க்கப் போவதாக தம்பட்டம் அடிக்கிறார். உண்மையில் அரசின் தனியார்மயக் கொள்கைகளே ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கின்றன. அதில் சினிமா எனும் கருப்புப் பணம் புரளும் கார்ப்பரேட் வணிகத்தில் அவரும் பிரதானமாக பங்கு வகிக்கிறார். அதாவது ஊழலில் பங்கு வகிக்கிறார் என்று சொல்கிறோம். பொத்தாம் பொதுவாக அடித்துவிட்டால் மக்கள் நம்புவார்கள் என்று கருதுகிறார்.

இதையெல்லாம் தாண்டி அவரது சினிமா துறை சம்பந்தப்பட்ட விசயங்களில் கூட நேரடியாக தலையிட்டு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பவர் அல்ல விஜய். அரசியலில் ஈடுபடாத மற்ற நடிகர்கள் குரல் கொடுக்கும் அளவுக்கு கூட விஜய் பேசியதில்லை.

இப்படிப்பட்ட ஒரு பேர்வழிதான் இன்று அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு சேவை செய்வதாக சொல்கிறார். இவரைத்தான் ஊடகங்களும் வாராது வந்த மாமணியைப் போல விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன.


படிக்க: லியோ + மறுகாலனியாக்க சீரழிவு + அரசு


இன்றைய சூழலை நாம் புரிந்து கொண்டால்தான் நடிகர் விஜய் யின் அரசியல் வருகை எவ்வளவு ஆபத்தானது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைகள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் வேலையில்லாத் திண்டாட்டம் நாடு முழுவதும் மோசமாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் வண்ணப்புகைக் குண்டு வீச்சே, வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்த்த போர்க்குணமிக்க இளைஞர்களின் மனநிலைதான்.

காவி – கார்ப்பரேட் பாசிச பயங்கரவாதமோ மேலும் மேலும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. மூச்சு கூட விடமுடியாத நிலையை நோக்கி மக்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனை எதிர்த்து குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச அடக்குமுறைக்கு எதிரான மனநிலை நாடு முழுக்க வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கெதிராக அரசியல் ரீதியாக மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு விடக் கூடாது என்பதில் ஆளும் வர்க்கமும், பாசிச கும்பலும் தெளிவாக இருக்கின்றன.

ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பே பாசிசமயமாகியிருக்கும் நிலையில் பொதுவாக ஊழல், தேர்தல் அரசியலில் மாற்று என்பதாக மீண்டும் மீண்டும் மக்களை புதைகுழிக்குள் தள்ளுவதே ஆளும் வர்க்கத்தின் நோக்கம்.

இந்த நோக்கத்தை சிறப்பாக ஈடேற்றுவதற்குத்தான் விஜய்-இன் அரசியல் வருகை பயன்படும். தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை பாசிச எதிர்ப்பு அரசியலை, புரட்சிகர அரசியலை நோக்கி நகராமல் வைப்பதற்குத்தான் விஜய்-இன் அரசியல் வருகை பயன்படும்.

மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் உதிரித்தனமான சிந்தனையை அவரது திரைப்படங்கள் எந்தளவுக்கு உருவாக்கியதோ, அதைவிட மோசமான சிந்தனையைத்தான் அவரது அரசியல் வருகையும் ஏற்படுத்தும். நடைமுறையில் தன்னை நம்பி வரும் இளைஞர்களை பார்ப்பன பாசிசத்திற்கு அடியாட்படையாக மாற்றுவதற்குத்தான் விஜய்-இன் அரசியல் நுழைவு பயன்படப் போகிறது. இது எவ்வளவு பெரிய ஆபத்து!

தனது சொத்துகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், புகழ்போதைக்காகவும் நடிகர் விஜய் காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலின் அடியாட்படையாகப் பயன்படப்போகிறார் என்றும் எம்.ஜி.ஆர், விஜயகாந்த் வரிசையில் விஜய்யும் ஒரு ஆளும் வர்க்க அரசியல் கழிசடை என்றும் இந்த நோக்கில் இருந்துதான் சொல்கிறோம்.

தமிழ்நாட்டு மாணவர்களே, இளைஞர்களே, இத்தகைய ஆளும் வர்க்க அரசியல் கழிசடைகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்! புறக்கணியுங்கள்!


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச யோகி அரசை அடிபணிய வைத்த உத்தரப்பிரதேச விவசாயிகளின் போராட்டம்!

டந்த பிப்ரவரி எட்டாம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர். இந்துமதவெறி சாமியார் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை ஆராய குழு அமைத்து எட்டு நாட்களில் முடிவெடுக்கும் என்று வாக்குறுதி அளித்ததால் பேரணியானது நாடாளுமன்றம் வரை செல்வதற்குள் விவசாய சங்கத்தினரால் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

நொய்டாவில் உள்ள மகாமாயா மேம்பாலத்தில் இருந்து மதியம் 12 மணி அளவில் தொடங்கிய பேரணியில் 140க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர். ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பாக ‘வளர்ச்சி’த் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்ட தேசிய அனல் மின் கழகத்தின் (NTPC) கீழ் இயங்கும் என்.டி.பி.சி. தாத்ரி அனல் மின் நிலையத்திற்காக கைப்பற்றப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதும், கைப்பற்றப்பட்ட நிலங்களுக்கு இணையாக புதிய விவசாய நிலங்களை உருவாக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளாகும்.

இக்கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள், விவசாயிகள். கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி, என்.டி.பி.சி. அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசு தடுத்து நிறுத்தியதால் அங்கு விவசாயிகள் இரவு பகலாக போராட்டத்தை தொடர்ந்து நடத்தியதாக நியூஸ் கிளிக் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

இரண்டு மாதங்களாக போராடிய போதும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததாலே, விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியை அறிவித்தனர். பிப்ரவரி ஏழாம் தேதி, கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற மகா பஞ்சாயத்தில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த வேண்டும் என்று முடிவு செய்தனர்.


படிக்க: நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டுப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஹரியானா விவசாயிகள்!


விவசாயிகளின் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பாரதிய கிசான் பரிஷத் என்ற விவசாய சங்கத்தின் தலைவர் சுக்பீர் கலீபா, “விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது எனக் கருதி நிர்வாகத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இதுவரை அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அதனால்தான் இந்த முறை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த வந்துள்ளோம்” என்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைநகருக்குள் விவசாயிகளின் பேரணி செல்வதை தடுப்பதற்காக உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி போலீசு கூட்டு சேர்ந்து கொண்டு, மாவட்ட எல்லையில் உள்ள டெல்லி-நொய்டா சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தின. ஆயுதப்படை, விரைவு அதிரடிப்படை போன்ற பல பிரிவு போலீசு, தண்ணீர் பீரங்கிகள், கிரேன்கள், புல்டோசர்கள், கண்ணீர் புகை குண்டு வண்டிகளுடன் நிறுத்தப்பட்டன. ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விவசாயிகளை கைது செய்ய பேருந்துகளும் தயார் நிலையில் இருந்தன.

இதனால் விவசாயிகளுக்கும் போலீசுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகள் சாலையிலே அமர்ந்து முழக்கங்களையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, நொய்டா விரைவுச் சாலையில் அமர்ந்திருந்த விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்பதாக கௌதம் புத் நகர் போலீசு ஆணையர் லஷ்மி சிங் உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகளுடான பேச்சுவார்த்தையில் மாநில அமைச்சர்களும் பங்கேற்றனர்.

தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிற்துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் உயர் அதிகாரம் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும் என்றும்; விவசாயிகளின் கோரிக்கைகளை ஆராய்ந்து எட்டு நாட்களில் குழு முடிவெடுக்கும் என்றும் போலீசு ஆணையர் உறுதியளித்ததைத் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகள் முடிவு செய்தனர்.

உயர் அதிகாரம் கொண்ட குழு அமைக்கப்பட்டு தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், விவசாயிகள் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என தெரிவித்துள்ளனர். “அரசு எட்டு நாட்களைக் கோரியுள்ளது. அதுவரை காத்திருப்போம். ஒன்றும் நடக்கவில்லை என்றால் மீண்டும் பெரிய அளவில் அணிதிரள்வோம்” என்று தி பிரிண்ட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார் விவசாயி சந்தீப் குமார்.


படிக்க: ‘குடியரசு’ தினத்தன்று மோடி அரசுக்கு எதிராக நடைபெற்ற டிராக்டர் பேரணி!


விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று தற்போது கூறுவதும், தங்கள் போராட்ட அனுபவங்களில் இருந்து யோகி அரசை புரிந்து வைத்திருப்பதால் தான். யோகி அரசும் குழு அமைப்பதாக வாக்குறுதி அளித்து இருப்பதும் விவசாயிகளின் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கத்தான். எனவே வருங்காலங்களில் உத்தரப்பிரதேச விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

விவசாயிகளின் பேரணி நாடாளுமன்றம் வரை செல்வதற்குள் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும், பேரணி தொடங்கிய நாளின் இறுதிக்குள் விவசாயிகளிடம் பாசிச யோகி அரசு அடிபணிந்து சென்றது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலைகளில் காவிகளால் முன்னிறுத்தப்படும் உத்தரப்பிரதேசத்தில், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பை வைத்து மிகத் தீவிரமாக மாநிலம் முழுவதும் இந்துமதவெறி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்ட சூழலிலும், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தொடர்போராட்டங்களில் ஈடுபட்டு வந்திருப்பது பாசிச எதிர்ப்பு ஜனநாயகச் சக்திகளுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய விசயமாகும்.

உத்தரப்பிரதேச விவசாயிகளின் போராட்டங்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான வீரஞ்செறிந்த போராட்டமும்; அண்மையில் நாட்டின் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 484 மாவட்டங்களில் நடைபெற்ற டிராக்டர் பேரணியும் இந்துமதவெறி பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பிற வர்க்கங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றன; உத்வேகம் அளித்து வருகின்றன என்றால் மிகையாது.


சந்திரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

பிப்ரவரி 2024 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – எது கேலிக்கூத்து? நிதிஷ் குமாரின் ’பல்டி’யா, இந்திய ஜனநாயகமா?
  • ராமர் கோவில் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகம்
  • அம்பலமாகும் மோடியின் திரைமறைவு வேலைகள்
  • நிதி ஆயோக்-இன் மோசடி அறிக்கை: மோடியின் பாசிச ஆட்சியில் வறுமை ஒழிந்த வேடிக்கை
  • பாசிச மோடி அரசைப் பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் போராட்டம்
  • பு.ஜ.உடன் ஓர் உரையாடல்..
  • வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: தெற்காசியாவில் சரியும் அமெரிக்க மேலாதிக்கம்!
  • அட்டைப்படக் கட்டுரை விவசாயிகளின் வீரஞ்செறிந்த டிராக்டர் பேரணி
  • இராமர் கோயிலுக்கு முதல் எதிர்ப்பு! தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தோம் நாங்கள்!
    இந்துராஷ்டிரத்தின் முடிவுரையை இனி தமிழ்நாடு எழுதட்டும்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



எண்ணூர்: முருகப்பா – கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட போராடிவரும் மக்களுடன் கரம்கோர்ப்போம்!

டந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று இரவில், எண்ணூரின் பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள முருகப்பா கோரமண்டல் இண்டர்நேஷனல் உரத்தொழிற்சாலைக்கு நச்சுத்தன்மை கொண்ட அம்மோனியா வாயுவை கொண்டுசெல்வதற்காக கடலுக்கு அடியில் 2.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து அம்மோனியா வாயு கசிந்தது.

இதனால் பெரியகுப்பம், சின்னக்குப்பம், பர்மா நகர், எர்ணாவூர் குப்பம் போன்ற கிராமங்களில் வாழும் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகினர். கண்ணெரிச்சல், மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் போன்றவை காரணமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கடலில் வாயுக்கசிவை பார்த்தவர்கள் உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

அம்மோனியா வாயுக் கசிவினால் அச்சத்திற்கு உள்ளான மக்கள், உரத் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று போராடியதன் விளைவாக ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 40 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இந்தச் சூழலில் தான், அம்மோனியா வாயு கசிவு குறித்து ஆராய தமிழ்நாடு அரசினால் அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட தொழில்நுட்பக் குழு தனது அறிக்கையை பிப்ரவரி 6 அன்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் சமர்பித்தது.

அந்த அறிக்கையில், 15 நிமிடத்தில் 67.63 டன் அம்மோனியா வாயு கசிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ. 5.92 கோடி சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உடனடியாக செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிபந்தனைகளை தொழிற்சாலை செயல்படுத்தாததால் தொழிற்சாலையின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


படிக்க: அச்சத்தில் எண்ணூர் மக்கள் – அமோனியா கசிவால் மூச்சு திணறல் | தோழர் மருது


மேலும், ”சேதமடைந்த குழாய்க்கு பதில் புதிய குழாய்களை அதிநவீன கண்காணிப்பு, தானியங்கி கட்டுப்பாடு மற்றும் விபத்து தடுப்பு சாதனங்களுடன் அமைக்கப்பட வேண்டும். கடலில் இருந்து சாலை வழியாக தொழிற்சாலைக்கு அமோனியா வாயு கொண்டு செல்லும் இடத்தில் குழாய்களை பொது மக்கள் யாரும் அணுகா வண்ணம் உரிய பாதுகாப்பு அமைப்புகளுடன் இருப்பதை தொழிற்சாலை உறுதி செய்ய வேண்டும்” என்பன உள்ளிட்ட 18 பரிந்துரைகளை இக்குழு தொழிற்சாலைக்கு வழங்கியுள்ளது.

நாற்பது நாட்களுக்கும் மேலாக நடந்துவந்த மக்களின் போராட்டத்தை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை; வாயுக்கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுநாள்வரை இழப்பீடும் வழங்கவில்லை. ”ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்ற எண்ணூர் மக்களின் கோரிக்கை நிபுணர் குழுவின் அறிக்கையில் இடம்பெறவில்லை. திமுக அரசும் ஆலையை மூடுவது குறித்து வாயைத்திறக்கவில்லை. இதனால் கோபமடைந்த எண்ணூர் பகுதியில் உள்ள 33 கிராம மக்கள் பிப்ரவரி 6-ஆம் தேதி, சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“எண்ணூர் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கோரமண்டலே வெளியேறு” போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட பேனர்களுடனும் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி முழக்கங்களையிட்டும் 33 கிராமங்களிலும் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். காலை ஏழு மணிக்கே தொடங்கிய சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் மதியம் இரண்டு மணி வரை நீடித்தது.

குழாய்களை மாற்றுவதும் சென்சார்களை நிறுவுவதும் தங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஆலை வெளியேற்றப்பட வேண்டும் அல்லது நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்றும் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்தப் பேரழிவிலும் மக்கள் பக்கம் நிற்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொழிற்சாலைக்கு ஆதரவாக இருப்பது வேதனையளிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

மக்கள் தொடர்ந்து போராடி வந்தாலும் தி.மு.க. அரசு முருகப்பா-கோரமண்டல் ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறது. நிபுணர் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டதும் ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற அடிப்படையில் இருந்துதான்.


படிக்க: எண்ணெய் கழிவு: நிர்கதியாக்கப்பட்ட எண்ணூர் மக்கள்


இதற்கு முன்னர், ஜனவரி மாதத்தில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட வெள்ளத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பக்கிங்ஹாம் கால்வாயில் அபாயகரமான எண்ணெய் கழிவுகளை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) என்ற மத்திய அரசு ஆலை திருட்டுத்தனமாக திறந்துவிட்ட விவகாரத்திலும் திமுக அரசு, சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு சாதகமாகவே செயல்பட்டது.

தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் பல நாசகர ஆலைகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. இதனால் எண்ணூர் பகுதியே மக்கள் வாழத்தகுதியற்ற பகுதியாக மாறிவருகிறது. தங்கள் உயிர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலில் அச்ச உணர்வோடு எண்ணூர் பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, முருகப்பா-கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நாற்பது நாட்களுக்கும் மேலாக போராடி வரும் எண்ணூர் பகுதி மக்களோடு களத்தில் தோளோடு தோள் நின்று போராட வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் கடமையாகும். மேலும் அப்போராட்டத்தை எண்ணூர் பகுதியில் உள்ள அனைத்து நாசகர தொழிற்சாலைகளை வெளியேற்றும் வகையில் மக்கள்திரள் போராட்டங்களாக வளர்த்தெடுக்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயகச் சக்திகளின் கடமையாகும்.


கார்த்திக்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஆளும்வர்க்க அரசியல் கழிசடை விஜய்! | தோழர் சிவா

ஆளும்வர்க்க அரசியல் கழிசடை விஜய்! | தோழர் சிவா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



லடாக் பிராந்தியத்தை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்

டாக்” யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி லடாக் பகுதியின் லே (Leh) மற்றும் கார்கில் (Kargil) மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பிப்ரவரி 3 அன்று அணிதிரண்டு உறைபனியில் போராட்டம் நடத்தினர். லே அபெக்ஸ் பாடி (LBA) மற்றும் கார்கில் ஜனநாயக கூட்டணி (KDA) ஆகிய இரு அமைப்புகள் இப்போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருகின்றன.

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, பழங்குடி அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் லடாக்கை சேர்ப்பது, உள்ளூர் மக்களுக்கு வேலையில் இடஒதுக்கீடு, லே மற்றும் கார்கிலுக்கு தலா ஒரு நாடாளுமன்ற தொகுதி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, பா.ஜ.க. அரசு அதற்கே உரிய பாசிச முறையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 370-ஐ ரத்து செய்ததோடு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக துண்டாடியது.

லடாக் தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட வேண்டும் என்று அப்போது கோரிவந்த லடாக் பகுதி மக்கள் மோடி அரசின் உண்மை நோக்கத்தை தற்போது உணர்ந்து கொண்டதால் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர்.


படிக்க: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து வழக்கு: பாசிஸ்டுகளுக்கு பக்கபலமாக நிற்கும் உச்சநீதிமன்றம்!


அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்படுவதன் மூலம் லடாக் பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு தங்களது மொழி, கலாச்சாரம், இயற்கைவளங்கள் ஆகியவற்றை பாதுகாத்துக்கொள்ளும் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

டிசம்பர் 4 அன்று, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழு, போராடும் இயக்கங்களான இரண்டு அமைப்புகளின் தலைவர்களுடன் முதல்சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இம்மாதம் (பிப்ரவரி) நடத்தப்பட உள்ளது.

மத்திய அரசின் குழு எவ்வளவு தான் பொய் வாக்குறுதிகளை கொடுத்த போதிலும், இந்த நான்கு அம்ச கோரிக்கைகளில்  போராடும் இயக்கங்கள் விடாப்பிடியாக இருக்கின்றன.

மோடி அரசை பணியவைத்து, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வைத்த விவசாயிகளின் “டெல்லி சலோ” போராட்டத்தைப் போன்று, லடாக் மக்கள் “லே சலோ” என்று “லே” நகரத்தை நோக்கி பேரணியாகச் சென்று பா.ஜ.க-விற்கு எதிரான தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் “லே” நகரத்தில் உள்ள போலோ மைதானத்தில் மக்கள் கூடினர்.

அங்கு கூடிய லடாக் பிராந்தியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்களும் தலைவர்களும் மேடையில் நின்று “ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்” என்று முழங்கினர். மக்களும் இந்த முழக்கத்தை எதிரொலித்தனர். காஷ்மீரில் வழக்கத்தைவிட இவ்வாண்டு பலமடங்கு அதிகமாக இருந்த பனிப்பொழிவையும், கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பு  மக்களும்  இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


படிக்க: காஷ்மீர் தீர்ப்பு: பாசிஸ்டுகளுக்கு சட்ட அங்கீகாரம்


சையத் ஜாபர் மெஹ்தி என்ற வியாபாரி, லடாக்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள கடைசி கிராமமான துர்டுக்கில் இருந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அவர் பேசுகையில், “ஆறாவது அட்டவணை மற்றும் மாநில உரிமை போன்ற பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்கிறேன். போராடும் இயக்கங்களின் இந்த கோரிக்கைகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்” என்றார்.

மகசேசே விருது வென்ற சோனம் வாங்சுக் (Sonam Wangchuk) மேடையில் பேசுகையில், “பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு, 370-வது பிரிவைப் ரத்து செய்த  பிறகு, லடாக்கை ஆறாவது அட்டவணையில் சேர்ப்பதாக உறுதியளித்தது. அதற்குப் பிறகு மத்திய அரசிடம் இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. ஆறாவது அட்டவணையில் லடாக்கை சேர்ப்பது பற்றி பேசுபவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இப்போது லடாக்கை அழிக்க விரும்பும் சுரங்கத் தொழில் கும்பல் திரைமறைவு பேரங்களை நடத்தி வருகிறது. நாங்கள் எங்கள் அரசியலமைப்பு உரிமைகளை மட்டுமே கோருகிறோம், அது நடக்கும் வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம்” என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் அமைச்சரும் 2020-இல் லடாக் பா.ஜ.க. தலைவர் பதவியை ராஜினாமா செய்தவருவமான லே அபெக்ஸ் பாடி அமைப்பை சேர்ந்த  செரிங் டோர்ஜே, “இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கான மக்களின் ஆதரவு என்பது லடாக் மக்களின் இந்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவேண்டும் என்ற மிக வெளிப்படையான செய்தியை சொல்வதாக இருக்கிறது. அரசியலமைப்புக்கு புறம்பான எதையும் நாங்கள் கோரவில்லை. பழங்குடியினர் அந்தஸ்து என்பது லடாக் மக்களின் உரிமை. எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று கூறினார்.

லடாக் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தால் அப்பிராந்தியமே ஸ்தம்பித்து போயுள்ளது. இந்நிலையில் செயற்பாட்டாளரான சோனம் வாங்சுக், இக்கோரிகைகளை முன்வைத்து வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருப்பது போராட்டத்தின் வீரியத்தை அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

இந்த போலி ஜனநாயக கூட்டமைப்பிற்குள் தங்களுக்கான உரிமைகள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை லடாக் மக்கள் தங்களது சொந்த அனுபவத்தின் வாயிலாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, தங்களது உரிமையை நிலைநாட்ட போராட்டங்களே தீர்வு என்று தற்போது முடிவெடுத்திருக்கிறார்கள்.


‌சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கலிபோர்னியா கனமழை வெள்ளம் | புகைப்படக் கட்டுரை

லிபோர்னியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். அரிசோனா மாகாணம் முழுவதும் கிட்டத்தட்ட 3.8 கோடி மக்கள் வெள்ள எச்சரிக்கையின் கீழ் உள்ளனர்.

பிப்ரவரி 1 அன்று லாங் பீச்சில் உள்ள ரயில் பாலத்தின் கீழ் மூழ்கிய கார்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) அன்று சாண்டா பார்பராவை சக்திவாய்ந்த வளிமண்டல புயல் தாக்கியதால் கரை ஒதுங்கிய படகின் அருகே ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார்
ஸ்டுடியோ சிட்டியில் உள்ள சாலையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 5) அன்று வெள்ளம் ஓடும் காட்சி
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) அன்று சாண்டா பார்பராவில் கரை ஒதுங்கிய படகின் மீது மோதிய அலை
பிப்ரவரி 5 அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் பெவர்லி க்ரெஸ்ட் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவுக்குப் பிறகு மக்களில் ஒருவரை வெளியேற்றும் தீயணைப்பு வீரர்
சான் பிரான்சிஸ்கோ பகுதியில் புயலால் விழுந்த மரத்தை அகற்றும் தொழிலாளர்
சாண்டா பார்பராவில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) அன்று வெள்ள நீரில் நடந்து சென்ற மக்கள்
திங்களன்று (பிப்ரவரி 5) லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள யூனியன் ஸ்டேஷனில் வெள்ளத்தில் மூழ்கிய தண்ணீரை வெளியேற்றும் தொழிலாளர்கள்
சான் டியாகோ பகுதியில் பிப்ரவரி 1 அன்று தங்கள் பெற்றோருடன் நடந்து செல்லும் குழந்தைகள்
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் மழையில் சென்றுகொண்டிருந்த மக்கள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சிலியில் பேரழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத் தீ | புகைப்படக் கட்டுரை

தென் அமெரிக்க நாடான சிலியில் பிப்ரவரி 2 அன்று தொடங்கிய காட்டுத் தீயினால் 123 போ் உயிரிழந்துள்ளனர் (பிப்ரவரி 5 நிலவரப்படி). நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பல ஆயிரம் வீடுகள் அழிந்து போயுள்ளன.

ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் சிலியின் வால்பரைசோ பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் காட்டுகிறது.
வால்பரைசோ பகுதியில் பிப்ரவரி 2 அன்று தீப்பிடித்து எரிந்த வீடுகள்
காட்டுத் தீயினால் எரிந்து போன தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ள மக்கள்
காட்டுத் தீயினால் பற்றி எரியும் வீடுகளும் வாகனங்களும்
காட்டுத் தீயினால் ஏற்பட்ட புகை மூட்டம்
மலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ
குயில்பூவி நகரின் வாகனங்கள் மற்றும் வீடுகள் காட்டுத் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன
குயில்பூவில நகரில் காட்டுத் தீயினால் எரிந்த வாகனங்களுக்கு இடையில் ஒரு பெண் குழந்தையுடன் செல்கிறார்
வினா டெல் மார் பகுதியில் காட்டுத் தீயால், அழிந்த தங்கள் வீடுகளின் இடிபாடுகளுக்கு மத்தியில் அமர்ந்துள்ள உள்ளூர் மக்கள்
வினா டெல் மாரில் உள்ள தாவரவியல் பூங்காவில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சீமானை குறிவைக்கும் பாஜக ரகசியம் என்ன? | தோழர் மருது

சீமானை குறிவைக்கும் பாஜக ரகசியம் என்ன? | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் பிப்ரவரி 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – எது கேலிக்கூத்து? நிதிஷ் குமாரின் ’பல்டி’யா, இந்திய ஜனநாயகமா?
  • ராமர் கோவில் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகம்
  • அம்பலமாகும் மோடியின் திரைமறைவு வேலைகள்
  • நிதி ஆயோக்-இன் மோசடி அறிக்கை: மோடியின் பாசிச ஆட்சியில் வறுமை ஒழிந்த வேடிக்கை
  • பாசிச மோடி அரசைப் பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் போராட்டம்
  • பு.ஜ.உடன் ஓர் உரையாடல்..
  • வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: தெற்காசியாவில் சரியும் அமெரிக்க மேலாதிக்கம்!
  • அட்டைப்படக் கட்டுரை விவசாயிகளின் வீரஞ்செறிந்த டிராக்டர் பேரணி
  • இராமர் கோயிலுக்கு முதல் எதிர்ப்பு! தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தோம் நாங்கள்!
    இந்துராஷ்டிரத்தின் முடிவுரையை இனி தமிழ்நாடு எழுதட்டும்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நேற்று அயோத்தி ! இன்று ஞான வாபி ! தொடரும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் !

02.02.2024

நேற்று அயோத்தி !
இன்று ஞான வாபி !
தொடரும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள்!

பத்திரிகை செய்தி

ஞானவாபி மசூதியின் சுவற்றில் தங்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று இந்து பெண்கள்’ என்று கூறிக் கொண்ட பாசிஸ்டுகள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றமோ, ஞானவாபி மசூதியை தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்யச் சொல்லி, அந்த மசூதியே இந்து கோயிலின் அடித்தளத்தின் மீது கட்டப்பட்டதாக கூறி, ஞானவாபி மசூதியின் ஒரு பகுதியில் இந்துக் கடவுளை பூசை செய்யவும் பூசை செய்வதற்கான பூசாரியை நியமிக்க உத்தரவு செய்தும் 31.01.2024 -இல் தீர்ப்பு வழங்கி உள்ளது. இஸ்லாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலாகும் இது. அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டு அதன் மீது இராமர் கோயில் திறப்பு விழா என்ற வடு மறைவதற்கு முன்பே, இன்னொரு கொடூர தாக்குதல்.

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991 – ஆனது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்பு இருந்த வழிபாட்டுத் தலங்களின் நிலைமையே தொடர்ந்து நீடிக்கும் என்று வலியுறுத்துகிறது (பாபர் மசூதி நீங்கலாக). அச்சட்டத்தை மீறித்தான் இன்னொரு அயோத்தி போல ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிச கும்பல் கரசேவை தொடங்குவதற்கான வழியை நீதிமன்றம் உருவாக்கி கொடுத்திருக்கிறது.

நீதிமன்றத்தின் வழியாகவும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பல் கனவான இந்துராஷ்டிரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதற்கு இதுவே ஒரு மோசமான எடுத்துக்காட்டு.

படிக்க : ஹேமந்த்  சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு !

அயோத்தி கோயில் திறப்பு என்பது, இனி சர்ச்சைக்குள்ளான விஷயமாக பார்க்கப்படப் போவதில்லை. அதன் மூலமாக இனி தங்களுடைய ஓட்டு அறுவடையை மிகப்பெரிய அளவில் ஆர் எஸ் எஸ் – பிஜேபி யால் சாதிக்க முடியாது . அதனால் தான் மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி அதன்மூலம் கலவரம் நடத்தி, இஸ்லாமியர்களின் ரத்தம் குடித்து இந்தியாவில் ஓட்டுக்களை அறுவடை செய்வதற்காகவே திட்டமிட்டு ஞானவாபி மசூதியில் இந்துக்களை வழிபட செய்திருக்கிறது வாரணாசி நீதிமன்றம்.

இதன் மூலமாக இஸ்லாமிய மக்கள் மீதான இன்னொரு மிகப்பெரிய கலவரத்துக்கு வித்திட்டு இருக்கிறது நீதிமன்றம்.

ஆர்எஸ்எஸ் – பாஜக ; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்காகவே இந்த நாட்டின் அரசுத்துறைகள் அனைத்தும் திட்டமிட்டு மறுகட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் நீதிமன்றமும் விதிவிலக்கல்ல.

நீதிமன்றத்திடம் சென்று இனிமேல் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்று நம்புவோருக்கெல்லாம் இடியாக விழுந்து இருக்கிறது வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பு.

படிக்க : நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை | மக்கள் அதிகாரம் கண்டனம்!

இனியும் இந்த அரசு கட்டமைப்பின் மூலம் நாட்டை மீட்டெடுத்து விட முடியாது என்ற நிலைமையை உருவாக்கி விட்டது மோடி – அமித்ஷா பாசிசக் கும்பல்.

மோடியின் பாசிச நடவடிக்கையை இனி ஒருபோதும் நீதிமன்றங்கள் மூலம் தடுத்து நிறுத்த முடியாது. மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு முடிவு கட்டுவோம் என்று மக்கள் அதிகாரம் அறைகூவி அழைக்கிறது.

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

ஹேமந்த்  சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு !

02.02.2024

ஹேமந்த்  சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு !

பத்திரிகைச் செய்தி

ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்தார்.அன்றைய தினமே அவர் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பாசிச பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த பழிவாங்கும் நடவடிக்கையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தின் இந்து இராஷ்டித்திற்கு யார் யாரெல்லாம் தடையாக இருப்பார்களோ அத்தனை பேரையும் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு. ஜார்க்கண்ட் மாநில அரசை சீர்குலைக்கவும் கலைக்கவும்  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பாசிச மோடி அரசு,  அதன் இன்னொரு பகுதியாக அமலாக்கத்துறையை ஏவி ஹேமந்த் சோரனை கைது செய்திருக்கிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடமாநிலங்களில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு மோசடி வேலைகளை தொடங்கியுள்ளது. நிதீஷ் குமார் போன்றவர்களின் விலைக்கு வாங்கி இந்தியா கூட்டணியை பிளவுபடுத்துவதும் தன்னுடைய வழிக்கு வராத ஹேமந்த் சோரன் போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தான் தற்போது நடந்தேறி வருகிறது.

படிக்க : “வேண்டாம் பிஜேபி” பிரச்சாரத்தை தடுத்த காவிகளும் காக்கிகளும்

ஹேமந்த் சோரன் கைது என்பது திட்டமிட்ட பழி வாங்கும் நடவடிக்கை. தோல்வி முகத்தில் இருக்கும் பாசிச ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பல் வெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக வெறும் அறிக்கைகளை மட்டும் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் வெளியிட்டுக் கொண்டிருப்பது என்பது சரியான நடவடிக்கை அல்ல; மாறாக ஜார்க்கண்ட் மாநில உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இந்த கைதுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டங்களை நடத்தி இருக்க வேண்டும்.

மக்கள் போராட்டங்களுக்கு மட்டுமே பாசிச கும்பல் பின் வாங்கும் என்பது மட்டுமல்ல; அந்த மக்கள் போராட்டங்களால் மட்டுமே ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிச கும்பல் வீழ்த்தப்படும்.

ஆகவே,  ஹேமந்த் சோரன் மீதான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை | மக்கள் அதிகாரம் கண்டனம்!

02.02.2024

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை !
மக்கள் அதிகாரம் கண்டனம்!

தமிழ்நாட்டில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை செய்த சோதனையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து இச்சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருப்பதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவதும் இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பானது அல்ல சட்ட மீறலும் அல்ல என்பதை ஏற்கனவே நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

படிக்க : ஞானவாபி மசூதியும் இந்திய நீதித்துறையும்!

எனினும் தமிழ்நாட்டில் போராடுகின்ற இயக்கங்களை ஒழித்துக் கட்டும் திட்டத்திற்கு முதல் படியாகவே இந்த தேசிய புலனாய்வு முகமை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை செய்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்பு என்று தொடங்கும் இந்த சோதனையை நாம் எதிர்க்காவிட்டால் விரைவில் மோடிக்கு எதிராக பேசும், மக்கள் உரிமை இன விடுதலை என்று பேசும் அனைவரின் வீட்டுக்கும் தேசிய புலனாய்மை முகமை சோதனை செய்ய வருவதற்கு அனைத்து வகையான வாய்ப்புக்களும் உள்ளன. ஆகவே தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்ட இந்த சோதனையை மக்கள் அதிகாரம்  கண்டிக்கிறது.  தமிழ்நாடு அரசு தேசியப் புலனாய்வு முகமைக்கு கொடுத்த அனுமதியை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை
9962266321