Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 93

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை | மக்கள் அதிகாரம் கண்டனம்!

02.02.2024

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை !
மக்கள் அதிகாரம் கண்டனம்!

தமிழ்நாட்டில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை செய்த சோதனையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து இச்சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருப்பதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவதும் இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பானது அல்ல சட்ட மீறலும் அல்ல என்பதை ஏற்கனவே நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

படிக்க : ஞானவாபி மசூதியும் இந்திய நீதித்துறையும்!

எனினும் தமிழ்நாட்டில் போராடுகின்ற இயக்கங்களை ஒழித்துக் கட்டும் திட்டத்திற்கு முதல் படியாகவே இந்த தேசிய புலனாய்வு முகமை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை செய்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்பு என்று தொடங்கும் இந்த சோதனையை நாம் எதிர்க்காவிட்டால் விரைவில் மோடிக்கு எதிராக பேசும், மக்கள் உரிமை இன விடுதலை என்று பேசும் அனைவரின் வீட்டுக்கும் தேசிய புலனாய்மை முகமை சோதனை செய்ய வருவதற்கு அனைத்து வகையான வாய்ப்புக்களும் உள்ளன. ஆகவே தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்ட இந்த சோதனையை மக்கள் அதிகாரம்  கண்டிக்கிறது.  தமிழ்நாடு அரசு தேசியப் புலனாய்வு முகமைக்கு கொடுத்த அனுமதியை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை
9962266321

ஞானவாபி மசூதியும் இந்திய நீதித்துறையும்!

0

த்தர பிரதேசத்தின் வாரணாசியில் அவுரங்கசீப் கட்டிய 17 ஆம் நூற்றாண்டு ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் ‘இந்துக்கள்’ வழிபாடு நடத்தத் தொடங்கியுள்ளனர். ஜனவரி 31 அன்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தது. உத்தரவு பிறப்பித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே அங்கு பூஜை நடத்தப்பட்டுவிட்டதாக காசி விஸ்வநாதா் கோயில் அறக்கட்டளை தலைவா் தெரிவித்தாா்.

தான் ஓய்வு பெறவிருக்கும் கடைசி பணி நாளில் இத்தீர்ப்பை வழங்கி வாரணாசி மாவட்ட நீதிபதி அஜய கிருஷ்ண விஸ்வேஷா (Ajaya Krishna Vishvesha) கரசேவை ஆற்றியுள்ளார்.

இந்துக்கள் வழிபாட்டு சடங்குகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை 7 நாட்களுக்குள் செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றைய நாள் இரவே வழிபாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதிகாலை 3:30 மணிக்கு பூஜையும் நடத்தப்பட்டுவிட்டது.

முஸ்லீம்கள் தினமும் ஐந்து முறை தொழுகை நடத்துவதோடு போட்டி போடும் விதத்தில் தினம்தோறும் ஐந்து முறை பூஜை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


படிக்க: பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா! | மீள்பதிவு


மசூதியின் அடித்தளத்தில் நான்கு பாதாள அறைகள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்று அங்கு வசித்து வந்த பூசாரியின் குடும்பத்தின் வசம் இருப்பதாகவும் ’இந்து’ தரப்பினரால் கூறப்படுகிறது. ’பரம்பரை பூசாரிகள்’ என்ற முறையில் அவர்கள் கட்டிடத்திற்குள் நுழைந்து பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று அக்குடும்பத்தினர் வாதிட்டனர். 1993-ஆம் ஆண்டு வரை அங்கு பூஜை செய்து வந்ததாக அவர்களால் கூறப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை.

ஞானவாபி மசூதி வழக்கின் மையப் பொருளாக இருப்பது இந்திய தொல்லியல் துறையின் தொல்பொருள் ஆய்வு தான். மசூதி அமைந்துள்ள பகுதியில் இந்து கோயில் இருந்ததற்கான சான்றுகளைத் தேடி இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரைத் தவிர மற்றவர் கைகளுக்கு கிடைக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் கலவர சூழலை உருவாக்க 839 பக்கங்களைக் கொண்ட அவ்வறிக்கையின் சில பகுதிகள் திட்டமிட்டே கசியவிடப்பட்டுள்ளது.

சங்கப் பரிவார கும்பல் பல பத்தாண்டுகளாகவே ஞானவாபி மசூதி பிரச்சினையை எழுப்பி வருகிறது. இராமர் கோவில் திறப்பு உத்வேகம் அளித்துள்ளதால் ஞானவாபி மசூதியை மற்றொரு பாபர் மசூதியாக மாற்ற வேண்டும் என்று துடிக்கிறது காவி பாசிச கும்பல். மேலும் இந்து முனைவாக்கத்தை கூர்மையாக்கி 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளவும் எத்தனிக்கிறது.


படிக்க: பாசிசத்தை அரசியலமைப்பிற்கு உட்படுத்துங்கள்! – சந்திரசூட்


இப்பிரச்சினையை தற்போது சங்கப் பரிவார கும்பலுக்கு ஏற்ற வகையில் இவ்வளவு பூதாகரமாக வளர்த்து விட்டதில் நீதிமன்றத்தின் பங்கு அளப்பரியது.

எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையையும் மாற்றுவதை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 தடைசெய்கிறது. பாபர் மசூதி தவிர மற்ற அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஆகஸ்ட் 15, 1947 அன்று எந்தத் தன்மையில் இருந்தனவோ அவை அவ்வாறே தொடர வேண்டும் என்று அச்சட்டம் கூறுகிறது. இது ஒன்றும் நீதிமன்றங்கள் அறியாததல்ல. அறிந்துதான் நீதிமன்றங்கள் தொடர்ந்து கரசேவை ஆற்றி வருகின்றன.

ஞானவாபி மசூதி பிரச்சினை உச்ச நீதிமன்றம் வந்தபோது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட் ”ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையைக் கண்டறிவதை சட்டம் (வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991) தடுக்கவில்லை; அதன் தன்மையை மாற்றுவதை மட்டுமே சட்டம் தடை செய்கிறது” என்று ஒரு வியாக்கியானத்தை முன்வைத்தார். தனது சட்ட வியாக்கியானத்தின் மூலம் சங்கப் பரிவார கும்பலின் செயல் திட்டத்திற்கு புத்துயிர்ப்பு அளித்தார்.

மசூதி குழு உச்சநீதிமன்றத்தின் அவசர தலையீட்டைக் கோரியது. ஆனால் உச்சநீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது. கீழ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறிவிட்டது.

அயோத்தியைப் போலவே வாரணாசியிலும் கரசேவையில் தங்களது பங்கை நீதிமன்றங்கள் சிறப்பாக ஆற்றிவிட்டன!


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பட்ஜெட்! மோடி சுட்ட வடை | தோழர் அமிர்தா

பட்ஜெட்! மோடி சுட்ட வடை… நிர்மலா கொடுத்த அல்வா | தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வதைக்கப்படும் ஷர்ஜீல் இமாம்!

வஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பிஎச்.டி மாணவரான ஷர்ஜீல் இமாம் (Sharjeel Imam) சிறையில் அடைக்கப்பட்டு,  இந்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது.

CAA/NRC சட்டமானது -அமல்படுத்தப்பட்டால் பெரும் எண்ணிக்கையிலான இந்த நாட்டின் முஸ்லீம் குடிமக்களை நாடற்றவர்களாக ஆக்கிவிடும் என்ற செய்தி தான் ஷர்ஜீல் இமாமை, CAA/NRC சட்டத்திற்கு எதிரான போரட்டக்களத்திற்கு உள்ளே அழைத்து வந்தது.

CAA/NRC சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது ஜனவரி 16, 2020 அன்று அவர் பேசிய பேச்சுக்கள் தொடர்பாக அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களின் போலீசு ஷர்ஜீல் இமாம் மீது ஜனவரி 26, 2020 அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு (ஜனவரி 28 அன்று), டெல்லியில் பதியப்பட்ட எஃப்ஐஆர் தொடர்பாக அவர் தனது வழக்கறிஞருடன் சரணடையச் சென்றபோது டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் (UAPA) வழக்குப் பதியப்பட்டது; டெல்லி கலவர வழக்கிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டது.

ஆனால் இமாம் எந்த வழக்கிலும் தண்டனை பெறாமல் நான்கு ஆண்டுகளாக சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வருகிறார். 2019 டிசம்பரில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திற்கு அருகே நடந்த வன்முறை தொடர்பான இரண்டு வழக்குகளிலும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதான எட்டு வழக்குகளில், அவர் ஐந்தில் ஜாமீன் பெற்றுள்ளார், அவர் மீதான UAPA வழக்கு மட்டுமே இன்னும் மீதமுள்ளது.

இந்த நான்கு ஆண்டுகளில் அவர் தொடுத்த ஜாமீன் மனுக்கள் டெல்லியின் பல்வேறு நீதிமன்றங்களில் திட்டமிட்டு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

அவர் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்லி உயர் நீதிமன்றம் இமாமின் ஜாமீன் மனுவை 46 முறை பட்டியலிட்டுள்ளது; ஆனால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை. தற்போது எஃப்ஐஆர் 59/2020 இன் கீழான டெல்லி கலவர வழக்கு பிப்ரவரி 22 அன்று விசாரணைக்கு வரவுள்ளது. இருந்தாலும் இமாமுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படாமல் இருக்கிறது.


படிக்க: CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு !


இமாம் மீது UAPA சட்டத்தின் பிரிவு 13-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பிரிவின்படி அதிகபட்ச தண்டனையே 7 ஆண்டுகள் தான்.

இது குறித்து அவரது வழக்கறிஞர் அஹ்மத் இப்ராஹிம் கூறுகையில் “அதிகபட்ச தண்டனையில் பாதியை முடித்துவிட்டாலும், இன்னும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எந்த ஜாமீன் மனுவும் நிலுவையில் இருக்கக்கூடாது. அந்த நபர் ஜாமீனுக்குத் தகுதியானவர் இல்லை என்றால், அந்த நபரின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டால், அந்த நபர் உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ சென்று நீதிக்கான போராட்டத்தை தொடர முடியும். ஆனால் இரண்டு ஆண்டுகளாக இமாமின் ஜாமீன் மனுவை நிலுவையில் வைத்திருப்பது குற்றவியல் நீதித்துறையின் செயல்முறைக்கு முரணானது,” என்றார்.

மேலும்” இந்த தாமதமானது அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் உள்ளது. அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் நீதித்துறை இயங்குகிறது. இந்தியாவில் இது முதல்முறையாக நடக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், பாஜக ஆட்சியில் இருந்தாலும் இதேதான் நடக்கிறது. டெல்லி கலவர வழக்குகளில் ஷர்ஜீல் இமாமின் ஜாமீன் விசாரணை இரண்டு ஆண்டுகளில் 46 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டே நடத்தப்படும் அரசியல் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.

CAA/NRC சட்டமானது மக்கள் போரட்டங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், CAA/NRC சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை நீதித்துறையின் துணைகொண்டு பாசிச கும்பல் வேட்டையாடிக்கொண்டு இருக்கிறது.

கைது செய்யப்பட்ட ஷர்ஜீல் இமாம் பாசிச கும்பலுக்கு வேண்டப்பட்ட அடிவருடியாக இருந்திருந்தால், அர்னாப் கோஸ்வாமிக்கு விடுமுறை தினத்தன்று கூடி விசாரித்து உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைப் போல், இவருக்கும் ஜாமீன் வழங்கியிருக்கும். ஆனால் இவரோ பாசிஸ்டுகளின் தாக்குதலை எதிர்த்தல்லவா போராடியிருக்கிறார்.


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இம்ரான்கானுக்கு சிறைத்தண்டனை: அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விமர்சித்ததுதான் குற்றமாம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை –
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விமர்சித்தது தான் குற்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏற்கனவே மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் இருந்தபோது அமெரிக்க தூதரகம் வாயிலாகப் பெறப்பட்ட ரகசியங்களை பகிரங்கப்படுத்தியதாக எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறிய நடவடிக்கை என அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது ஆட்சிக் காலத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த நாளே ஓர் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனக்கு எதிரான பல வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என இம்ரான்கான் கூறியுள்ளார். அதாவது இதன் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இருக்கிறது என்பதே அவர் கூற வருகின்ற விசயம்.

கடந்த மார்ச் 2022-இல் அமெரிக்காவில் அந்நாட்டு உயர்மட்ட அதிகாரிகளுடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு பேசப்பட்ட முக்கிய விவகாரங்கள் உள்ளடங்கிய ரகசிய ஆவணங்களை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பி வைத்தார். அதே மார்ச் 2022-இல் இம்ரான்கான் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சக்திகள் திட்டம் போடுவதாகக் கூறி ஒரு காகிதத்தை எடுத்துக் காட்டினார். ”இம்ரான்கான் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டால் (நீங்கள்) அனைவரும் மன்னிக்கப்படுவீர்கள்” என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறினார்.

எந்த நாடு இதற்குப் பின்னணியில் இருக்கிறது என்று இம்ரான்கான் சொல்லாவிட்டாலும் அமெரிக்காதான் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். அதே சமயம் அமெரிக்காவை விமர்சிக்கவும் அவர் தவறவில்லை. இந்த சம்பவம் இம்ரான்கான் பதவி விலகுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது.


படிக்க: மக்களை வாட்டும் பொருளாதார நெருக்கடி: நேற்று – இலங்கை, இன்று – பாகிஸ்தான்!


இம்ரான்கானின் பதவி பறிபோன பின், ஜூலை 2023-இல் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் 1923-இன் படி அரசு ரகசியங்களை பொதுவெளியில் கசிய விட்டதாகக் குற்றம்சாட்டி பாகிஸ்தான் அரசு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில்தான் தற்போது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பிப்ரவரி 8 ம் தேதி பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலிலும் இம்ரான்கான் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்சியில் இருந்த காலத்தில், அமெரிக்காவை வெளிப்படையாகவே விமர்சித்தார் இம்ரான்கான். இன்னொரு பக்கம் சீன – இரசிய அரசியல் பொருளாதார உறவை வலுப்படுத்திக் கொண்டார்.

ஒரு பக்கம் பாகிஸ்தான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதும், குறிப்பாக ஐ.எம்.எஃப் இன் கடன் வலையில் பாகிஸ்தான் சிக்கிக் கொண்டிருப்பதும், இந்த நிலைமை மேலும் மேலும் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் என்பதும், இது பாகிஸ்தானை மிக மோசமான சூழ்நிலைக்குத் தள்ளிவிடும் என்பதும்தான் இம்ரான்கான் அமெரிக்கா மீது வெளிப்படையாகக் கூறிய விமர்சனங்கள்.

தான் கொடுக்கும் கடனுக்கு நிகராக மக்களுக்கு வழங்கும் சலுகைகளை வெட்ட வேண்டும் என்பதே எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா தலைமையிலான ஐ.எம்.எஃப் முன்வைக்கும் நிர்ப்பந்தம்.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு அங்கமாக, பாகிஸ்தான் வழியாக சீனா – பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரம் (CPEC) என்ற பெரும் பொருளாதாரத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

இவையெல்லாம் தான் இம்ரான்கானின் மீதான தற்போதைய அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு காரணமாக உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் ஷபாஸ் ஷெரிப் தலைமையிலான கும்பலும் அமெரிக்க அடிவருடியாக இருக்கும் வரை தான் ஆட்சியில் நீடிக்க முடியும்.

உலகை தனது அரசியல் பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும், தன்னை மீறி இந்த உலகத்தில் எதுவும் நடந்து விடக்கூடாது என்ற ஆதிக்கவெறி, அப்படி மீறி யார் நடந்து கொண்டாலும் அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும்; மீறினால் அழித்து விட வேண்டும் என்று துடிக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். சதாம் உசேன் தொடங்கி இம்ரான்கான் வரை இதுதான் நிதர்சனமான உண்மை.

தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படிப்பட்ட நிலைமைகளை உருவாக்கியது என்பது உலகறிந்ததே.

தனது அடிவருடிகளை ஆட்சியில் அமர்த்தி அதன் மூலம் தனது சுரண்டலையும், ஆதிக்கத்தையும் பல்வேறு வழிகளில் நிறுவிக் கொள்ளத் துடிக்கிறது அமெரிக்கா.

இந்தியாவின் மோடி தலைமையிலான காவி – கார்ப்பரேட் கும்பல் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அடிமை கும்பலாகவே உள்ளது.

உலகையே அச்சுறுத்தி தனது காலடியில் வைத்திருக்க வேண்டும் என்று கொக்கரிக்கின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்தாமல் உலக மக்களுக்கு விடிவில்லை என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.


சிவக்குமார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



“வேண்டாம் பிஜேபி” பிரச்சாரத்தை தடுத்த காவிகளும் காக்கிகளும்

”2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் பிஜேபி; வேண்டும் ஜனநாயகம்” என்ற இயக்கத்தின் ஒரு அங்கமாக செய்யாறு பகுதியில் தெருமுனைக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதனையொட்டி ஜனவரி 28 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிற்சங்க உறுப்பினர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த பிஜேபி நகரச் செயலாளர் நமது தோழர்கள் பிரச்சாரம் செய்வதைத் தடுத்துள்ளார். மேலும் போலீசை அழைத்தும் அச்சுறுத்தியுள்ளார்.

அப்பகுதியைச் சேர்ந்த ஜமுமுக (JMMK), மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய அமைப்பினர் நமது தோழர்களுக்கு ஆதரவாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இன்றைய பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளுமாறு போலீசு நிர்ப்பந்தத்தை தொடர்ந்து பிரச்சாரம் முடித்துக்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் போலீசுத்துறை ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி; அம்பானி – அதானி பாசிஸ்டுகளின் அடியாளாகத்தான் வேலை செய்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.


தகவல்
புதிய தொழிலாளி முகநூல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நிதிஷ்குமார் – “INDIA” கூட்டணி – பாசிச எதிர்ப்பு | தோழர் சிவா

நிதிஷ்குமார் – “INDIA” கூட்டணி – பாசிச எதிர்ப்பு | தோழர் சிவா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



போலீசு அடக்குமுறை | சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் | தரமணி

போலீசு அடக்குமுறை | சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் | தரமணி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



NEP 2020 being implemented in Kerala with a different name | Prof. Francis Kalathungal | AISEC

NEP 2020 being implemented in Kerala with a different name | Prof. Francis Kalathungal | AISEC

Watch, share and comment!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



Education is a political activity | V.P. Nandha Kumar | AISEC

Education is a political activity | V.P. Nandha Kumar | AISEC

Watch, share and comment!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



First opposition against Ram temple in Tamil Nadu is from us! || Comrade Amirtha

First opposition against Ram temple in Tamil Nadu is from us! || Comrade Amirtha

Watch, share and comment!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புஷ்பக விமானம் வைத்திருந்த ராமன்? | பேராசிரியர் அ.கருணானந்தன்

புஷ்பக விமானம் வைத்திருந்த ராமன்? | பேராசிரியர் அ.கருணானந்தன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சந்தைக்கு ஏற்றபடி கல்வி வடிவமைக்கப்படுகிறது | பேராசிரியர் ப.சிவக்குமார்

சந்தைக்கு ஏற்றபடி கல்வி வடிவமைக்கப்படுகிறது | பேராசிரியர் ப.சிவக்குமார்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சென்னை வெள்ளம்: யார்தான் குற்றவாளி?

டந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கியது. இதனால் சென்னையின் பெருவாரியான இடங்களில் மழைவெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளையும் வீடுகளையும் இழந்து அகதிகளாக்கப்பட்டனர். இருபதுக்கும் மேற்பட்டோர் இந்த வெள்ளத்திற்கு பலியாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல், உணவு, குடிநீர் கூட இல்லாமல் இரண்டு நாட்களுக்கு மேலாக வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். தொலைத்தொடர்பு சேவை, மின்சாரம் இல்லாத காரணத்தால் யாரையும் தொடர்புகொள்ளவும் முடியாமல் செய்வதறியாது நிற்கதியாகினர் சென்னையின் உழைக்கும் மக்கள்.

ஆனால், புயல் கடந்த மறுநாளே தி.மு.க. அரசும் அதன் ஜால்ரா ஊடகங்களும் 95 சதவிகித மீட்புப்பணிகள் முடிந்துவிட்டன என்றும் அண்ணாசாலை, மவுன்ட்ரோடு, ஜி.எஸ்.டி. சாலை போன்ற இடங்களை மட்டும் ஒளிப்பரப்பி வெள்ளம் வடிந்துவிட்டது என்றும் பொய்யான பிம்பத்தை கட்டமைக்க ஆரம்பித்தன. இதனால், பெருவெள்ளத்தில் மூழ்கிய உழைக்கும் மக்களின் அவலநிலையும் பாதிப்புகளும் வெளிஉலகிற்கே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு அவர்களை கூடுதல் துயரத்தில் ஆழ்த்தியது.

துயரத்தில் தள்ளப்பட்ட உழைக்கும் மக்கள்:

மிக்ஜாம் புயல் வெள்ளத்தினால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்தது தென்சென்னை, வடசென்னை பகுதிகள்தான். புயல் கரையைக் கடந்து, மழை நின்று மூன்று நாட்களுக்கு மேலாகியும் சென்னையின் பல பகுதிகளில் மீட்புப்பணிகள் தொடங்கப்படவில்லை. குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி, பெருங்குடி, கொடுங்கையூர், சைதாப்பேட்டை, சூளைமேடு, பட்டாளம், புளியந்தோப்பு, பழைய வண்ணாரப்பேட்டை, திரு.வி.க.நகர், வியாசர்பாடி, திருவொற்றியூர் உள்ளிட்ட அடித்தட்டு உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள தி.மு.க. அரசு அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.

முதல்நாளிலிருந்து களத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்ட தோழர்கள் சொன்ன அனுபவமே, இப்பகுதிகளில் சீரூடை அணிந்த ஒரு மாநகராட்சி ஊழியரைக்கூட பார்க்கமுடியவில்லை என்பதுதான். புயல் கடந்த மறுநாளே  சென்னையை மீட்ட தி.மு.க.” என்ற பிம்பத்தை உருவாக்கியதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு தன்னார்வலர்களும் வரவில்லை, களத்திலிருந்த தோழர்களாலும் மீட்புப்பணிக்கான நிதியை திரட்ட முடியவில்லை. இதனால் மக்கள் உதவிகள் ஏதும் பெறமுடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டனர்.


படிக்க: சென்னையின் துயரம் – பெருவெள்ளம் : யார் காரணம் ?


வெள்ளநீர் சூழ்ந்ததால், மூன்று, நான்கு நாட்களுக்கு வெளியே வரமுடியாமல் உணவு, குடிநீர், மின்சாரம் ஏதுமின்றி குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் மார்பளவு நீரில் தவித்தனர். வீடுகளைவிட்டு வெளியேற முடியாத முதியவர்களும், ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்திருந்த மக்களும் வெள்ளநீரிலேயே மலம் கழிக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.

“கடந்த 3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கித் தவித்தோம். எங்களை மீட்க அரசுத்தரப்பில் யாரும் வரவில்லை எங்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர்களே மார்பளவு நீரில் இறங்கிச்சென்று எங்களுக்கு குடிநீர் கொண்டு வந்தனர். ஒரு கட்டத்தில், குடிநீர் இல்லாமல் வெள்ளநீரையே காய்ச்சி குழந்தைகளுக்குக் கொடுத்தோம்” என தங்களின் அவலநிலையை விவரிக்கிறார் வேளச்சேரியை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்.

சில கி.மீ. தூரம்வரை வெள்ளநீரில் நடந்தே சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கிவர வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதிலும், பால் தட்டுப்பாடு காரணமாக அரை லிட்டர் பால் ரூ.60-70-க்கும், ஒரு கேன் குடிநீர் ரூ.300-க்கும் விற்கப்பட்டது.

“மழை நின்னு மூன்று நாட்களுக்கு மேலாகிவிட்டது; குடிநீர் இல்லை, கரண்ட் இல்லை; பால்கூட வெள்ளநீரில் சென்றுதான் வாங்கிவர வேண்டும். கால்வாய் நீரெல்லாம் கலந்திருக்கிறது. இதுவரைக்கும் எந்த கவுன்சிலரோ, எம்.எல்.ஏ-வோ யாருமே வந்து எங்களை எட்டிப் பார்க்கல. நாங்கெல்லாம் ஓட்டுப் போடலயா, இல்ல நாங்களாம் மக்கள் இல்லையா” என்று கேள்வியெழுப்புகின்றனர் ‘சிங்காரச் சென்னைக்காக’ சென்னையிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட செம்மஞ்சேரி மக்கள்.

“எல்லா மழைக் காலத்திலும் வடசென்னை பகுதிகளில் தண்ணீர் தேங்குது. ஆனா, கடைசியாத்தான் இந்த பகுதிக்கு அதிகாரிகள் வராங்க” என்கிறார் வியாசர்பாடியைச் சேர்ந்த மீனா. அவர் சொன்னதுபோலவே இம்முறையும், வியாசர்பாடி சுரங்கப்பாதையில் தேங்கிய நீரையும், வடசென்னையில் குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்திருந்த நீரையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை கடைசியாகத்தான் மேற்கொண்டது அரசு.

புளியந்தோப்பு பகுதியில் உரிய நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காததால் கர்ப்பிணி பெண் ஒருவர் சிசுவை பறிக்கொடுத்த துயரச் சம்பவமும் அரங்கேறியது. உயிர்பிழைக்க வீடுகளிலிருந்து தாங்களாகவே ஆபத்தான முறையில் வெளியேற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அப்படி வெளியேறியவர்களில் சிலர் நீரில் மூழ்கி உயிரிழக்கவும் நேரிட்டது. பலர் ரூ.3,000 வரை கொடுத்து தனியார் படகுகள், பொக்லைன் எந்திரங்கள் மூலம் வெளியேறினர். பணம் இல்லாதவர்கள் கடைசிவரை வெளியேற முடியாமல் தவித்தனர்.

வேளச்சேரியில் தனியார் நிறுவனத்தின் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த 60 அடி பள்ளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதில் தி.மு.க. அரசு மிகவும் அலட்சியமாக நடந்துக்கொண்டது. மூன்று பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் ஐந்து நாட்களுக்குப் பிறகே இருவரை சடலமாக மீட்டது.  முதலில் எட்டு பேர் பள்ளத்தில் விழுந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன, ஆனால் ஐந்து பேர் என்கிறது அரசு. இன்றுவரை பள்ளத்தில் விழுந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை. அமீர்கான், விஷ்ணு விஷால், நமீதா ஆகியோர் மீட்கப்பட்டதை லூப்-இல் (LOOP) போட்டுக் காட்டிக்கொண்டிருந்த ஊடகங்கள் இத்தொழிலாளர்கள் மாட்டிக்கொண்டதைப் பற்றி வாயையே திறக்கவில்லை.

சில பகுதிகளில், வெள்ளநீரில் பிணங்கள் கேட்பாரற்று மிதந்த அவலமும் அரங்கேறியது. ஆனால், அந்த உடல்களை மீட்கக்கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் தவித்த மக்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாக போராட ஆரம்பித்தனர். சென்னை முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராடிய பெரும்பாலான மக்களின் கோரிக்கை தங்களை எந்த கவுன்சிலரோ, அமைச்சரோ வந்து பார்க்கவில்லை என்பதுதான். அமைச்சர் சேகர்பாபு வடசென்னை மக்களை பார்வையிட சென்றபோது “இப்போதான் நாங்க உங்க கண்ணுக்கு தெரிந்தோமா?” என கேள்வியெழுப்பி முற்றுகையிட்டனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா என தி.மு.க-வினர் ஒவ்வொருவரையும் மக்கள் முற்றுகையிட்டு கேள்வியெழுப்பினர்.

சென்னை மக்களின் இந்த கோபத்திற்கு முக்கிய காரணம் தி.மு.க. அரசு இந்த வெள்ளப்பாதிப்பை கையாண்ட விதம்தான். ஆரம்பத்திலிருந்தே இந்த பேரிடரை மூடிமறைக்கும் வேலையில்தான் தி.மு.க. அரசு முனைப்புக்காட்டி வந்தது. மீட்புப்பணிகளில் அலட்சியம் காட்டியதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் வெள்ளப்பாதிப்பு மேலும் மோசமடைந்தது.

“எப்பவுமே பெரிய மழை வருதுன்னா போலீஸ்காரங்க இந்த ஏரியாக்குள்ள ஒவ்வொரு சந்துக்குள்ளேயும் வந்து எச்சரிக்கை பண்ணிட்டுப் போவாங்க. இந்தத் தடவ அப்படி ஒண்ணுமே பண்ணல. மழை வந்து தண்ணி மேலே எழும்ப ஆரம்பிக்கும்போதுதான் நாங்களே சுதாரிச்சிக்கிட்டு கையில அள்ள முடிஞ்சத அள்ளிக்கிட்டு ஓடினோம்” என்பதே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருவாரியான மக்களின் கருத்தாக இருந்தது.

2015 வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்களும் பிற மாவட்ட மக்களும் உதவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது சமூக ஊடகங்களும், செய்தி ஊடகங்களும்தான். ஆனால், தி.மு.க. அரசும் அதன் இணைய குண்டர் படையும் இம்முறை அதற்கான வாய்ப்பை முற்றிலும் அடைத்துவிட்டது.

மூன்று நாட்களுக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே தன்னார்வலர்கள் உதவிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தப் பிறகுதான் இது கவனத்திற்குரிய விஷயமானது. அதுவரை “இது ஒரு பேரிடர், அதை தயவுசெய்து ஒப்புக்கொள்ளுங்கள்” என்று தி.மு.க-விடம் போராடும் நிலைமைதான் இருந்தது.

2015 vs 2023 ஒப்பீடும் தி.மு.க. இணையக் குண்டர் படையின் அட்டூழியமும்

புயல்கடந்த மறுநாளே “சென்னையை மீட்ட தி.மு.க.” என்ற பிம்பத்தை கட்டமைக்க தொடங்கியது தி.மு.க-வின் ஐ.டி.விங். ஒரு இணையக் குண்டர்படையைப் போல செயல்பட்டு தி.மு.க-விற்கு எதிராக பேசியவர்களையெல்லாம், அதாவது வெள்ளப்பாதிப்பை பற்றிப் பேசிய சாமானிய மக்கள், பத்திரிகையாளர்களையெல்லாம் கடித்துக் குதறிக் கொண்டிருந்தது. சமூக ஊடகங்களில் பால் இல்லை, உணவு இல்லை என்று பதிவு போட்டவர்களுக்கு, “உணவு இல்லாமல் இத்தனை நாள் வாழலாம். பால் எல்லாம் அத்தியாவசியம் இல்லை” என்றெல்லாம் அருவருக்கத்தக்க வகையில் கமெண்ட்களை பதிவிட்டு வந்தது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மைநிலையை அம்பலப்படுத்திய நியூஸ்மினிட் ஊடகவியலாளர் சபீர் அகமதுக்கு தி.மு.க. அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதி, டிவிட்டர் ஸ்பேஸில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

குறிப்பாக, சென்னை வெள்ளத்தில் மக்களின் பாதிப்பு அதிகம் பேசப்பட்டதைவிட “2015Vs2023” என்ற ஒப்பீடுதான் அதிகம் விவாதிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தி.மு.க-வை பாசிசத்திற்கு எதிரான அரணாக முன்னிறுத்தும் ‘தி.மு.க-வின் பாதுகாவலர்கள்’. ஆரம்பத்திலிருந்தே பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேசுவதை விட்டுவிட்டு தி.மு.க. அரசிற்கு ‘நற்சான்றிதழ்’ கொடுப்பதிலேயே முனைப்பாக இருந்த இவர்கள், “எல்லோரும் குறை சொன்னால் யார்தான் அரசின் நடவடிக்கைகளை பாராட்டுவது” என அதற்கு நியாயவாதம் கற்பித்தனர்.

வெள்ளத்தின்போது “4000 கோடி எங்கே போனது?”, “2015 மேல்” என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பல் தி.மு.க-விற்கு எதிராக விவாதத்தை கட்டமைக்கத் தொடங்கியது. அதுவரை மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல் வாய் மூடிக்கொண்டிருந்த ‘தி.மு.க-வின் பாதுகாவலர்கள்’ சங்கிகளின் நிகழ்ச்சிநிரலுக்கு சென்று 2015Vs2023 என்ற அடிப்படையில் யார் சிறந்தவர்கள் என்ற விவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர். “2015-இல் ஏற்பட்டது செயற்கை பேரிடர், தற்போது ஏற்பட்டிருப்பது இயற்கை பேரிடர்; அப்போது 200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். தற்போது உயிரிழப்புகள் அதைவிட குறைவு; அப்போது மழை அளவு குறைவு, தற்போது வரலாறு காணாத மழை” என கண்மூடித்தனமாக தி.மு.க-விற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தனர்.

என்ன கேள்வி கேட்டாலும், “அ.தி.மு.க-வை விட சிறப்பாக செய்துள்ளோம்” என்ற பதிலையே திரும்ப திரும்ப ஒப்பித்துக்கொண்டிருந்தனர். கடைசிவரை மக்களின் பாதிப்பை பற்றி வாய்திறக்கவில்லை. மற்ற பத்திரிகையாளர்கள், களத்திலிருந்தவர்கள் மக்களுக்காக தி.மு.க. அரசை விமர்சித்தாலும்  அவர்களையும் சங்கி, பா.ஜ.க. ஆதரவாளர்கள் என தாக்கினர். இது மோடியையோ பா.ஜ.க-வையோ விமர்சித்தால் “ஆண்டி இந்தியன்” என்று சங்கிகள் முத்திரை குத்துவதற்கு ஒத்ததாகவே இருந்தது.

மொத்தத்தில், தி.மு.க. அரசு சிப்காட் தொழிற்பேட்டை, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு உழைக்கும் மக்களிடமிருந்து நிலங்களை அபகரித்தபோதும் வேங்கைவயல் போன்ற சாதியத் தாக்குதல்களை மூடிமறைத்தபோதும் எவ்வாறு “தி.மு.க-வை விமர்சித்தால் பாசிசம் வந்துவிடும்” என தி.மு.க-வின் அயோக்கியத்தனங்களை மூடி மறைத்தனரோ அவ்வாறே இந்த புயல் வெள்ளத்தின்போதும், ‘அரணாக’ இருந்து தி.மு.க-வை காத்தனர். ஆனால், வழக்கம்போல இது பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குதான் சாதகமாகியது.

தி.மு.க. அரசு குற்றவாளியே

“வரலாறு காணாத மழை, புயல் காரணமாக கடல் ஆற்றுநீரை உள்வாங்கவில்லை, 20 செ.மீ. மழைக்குத்தான் மழைநீர் வடிகால் செயல்படும் 40 செ.மீ. மழைக்கு எதுவும் செய்யமுடியாது” என ஒட்டுமொத்தமாக இயற்கையின் மீது பழிபோட்டுவிட்டு தி.மு.க-வை இதிலிருந்து தப்பிக்கவைக்க பலரும் முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், “இது எல்-நினோ ஆண்டு என்பது உலகத்துக்கே தெரியும், சூப்பர் எல்-நினோவாக மாறலாம் எனப் பல்வேறு வானிலை அமைப்புகளும் சொல்லி வருகின்றன. ஆக, இந்த ஆண்டு பெருமழையும் புயலும் இதர பேரிடரும் வரும் என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். இப்போது வந்து, எதிர்பார்க்கவில்லை என்றால் என்ன அர்த்தம். பிறகெதற்குப் பேரிடர் மேலாண்மைக்கென்று ஒரு துறையை வைத்திருக்கிறார்கள்?’’ என “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.சுந்தர்ராஜன் கேட்கும் கேள்விக்கு தி.மு.க-அரசு பதிலளித்துதான் ஆக வேண்டும்.

அதேபோல, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் முதலமைச்சர் முதல் மேயர் வரை மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது என மாறி மாறி அள்ளிவிட்டுக் கொண்டிருந்தனர். “மழை பெய்தால் ஒரு நாள் கூட தண்ணீர் தேங்காது”, “புயலுக்கு அடுத்த நாள் பள்ளிக்கு விடுமுறை விட வேண்டிய தேவையே இருக்காது” என்றவாறெல்லாம்தான் தி.மு.க. அமைச்சர்கள் பேசி வந்தனர்.. ஆனால், உண்மைநிலை என்ன ஆனது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும், ஏற்கெனவே இருந்த 2,071 கி.மீ. தொலைவு மழைநீர் வடிகால் கட்டமைப்புடன் 1,033 கி.மீ. புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளைத் தொடங்கியது. ஆனால், பல வடிகால்களுக்குக் கால்வாய்களுடன் இணைப்பு ஏற்படுத்தவில்லை.

இதுகுறித்து பேசிய “அறப்போர் இயக்கத்தை” சேர்ந்த ஜெயராமன், “தொடக்கத்தில், 35 சதவிகிதப் பணிகள் முடிந்துவிட்டன என்றார்கள். திடீரென, 90 சதவிகிதப் பணிகள் முடிந்துவிட்டன என்கிறார்கள். எப்படி ஒரு குறுகிய காலத்தில் 45 சதவிகிதப் பணிகளை முடித்தார்கள் என்பதே தெரியவில்லை. பல சாலைகளிலுள்ள வடிகால் கால்வாய்களுக்கு இணைப்புகளே இன்னும் ஏற்படுத்தவில்லை. வடிகால் பணிகள் குறித்த விவரங்களை மாநகராட்சி இதுவரை வெளியிடவே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, புதிதாகப் போடப்பட்ட 40 சதவிகித வடிகால்களின் தரத்தை அதிகாரிகள் பரிசோதனை செய்யவில்லை” என்கிறார்.

2021-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதைப் போன்றதொரு வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, “சென்னை மழைவெள்ளத்திற்கு அ.தி.மு.க-வின் கடந்த பத்தாண்டுகால ஊழலே காரணம். இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்” என உறுதிமொழி அளித்தார் முதல்வர் ஸ்டாலின். அதற்காக, 2022-இல் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதுவரை அந்த அறிக்கையை தி.மு.க. வெளியிடவில்லை. ஊழலில் ஈடுப்பட்ட அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு ஊழல்செய்ய திட்டம்போட்டுக்கொடுத்த அதிகாரிகளை தப்பிக்கவைக்கவேண்டி, அந்த ஊழல்முறைகேடுகளை அப்படியே ஊற்றி மூடிவிட்டு, அவர்களை வைத்து கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க.


படிக்க: மிக்ஜாம் புயல் நிவாரணப்பணி: மனிதம் செத்துவிட்டதா? தி.மு.க. மறைத்துவிட்டதா?


அதேபோல், கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பரில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் “சென்னைப் பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவை” அமைத்தது தி.மு.க. அரசு. அக்குழு கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிக்கையை சமர்பித்தது.

அந்த அறிக்கை, சென்னையின் ஆறுகள், மழைநீர் வடிகால்களின் வெள்ளத்தை தாங்கும்திறன் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டியதோடு “வெள்ள அபாய வரைபடம்” ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது. இன்று பட்டா நிலங்களாக மாறிப்போன வடிகால் பகுதிகளை அடையாளம் கண்டு மீட்க வேண்டும் என்றும் அரசுத் திட்டங்களுக்கு நிலங்கள் கையகப்படுத்தும்போது நீர்நிலைகள், வெள்ளச் சமவெளிகள் மற்றும் வடிகால் பாதைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவ்வறிக்கை பரிந்துரைத்தது. இப்படியான பல பரிந்துரைகளைக் கொண்ட அந்த அறிக்கையை இதுவரை தி.மு.க. அரசு வெளியிடவில்லை.

ஆனால், திருப்புகழ் கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம் என்று கூறும் ஸ்டாலின், எப்படி அறிக்கையின் பரிந்துரையை மீறி 2,446 ஏக்கர் நீர்நிலைப் பகுதிகளை அழிக்கும் பரந்தூர் விமானநிலையத் திட்டத்திற்கு அனுமதியளித்தார் என்பதையும் சேர்த்து கூற வேண்டும். மேலும், ‘தொழில் வளர்ச்சிக்காக’ எந்தத் தடையுமின்றி கேள்விக்கிடமற்ற வகையில் நீர்நிலைகளை அழிக்கவும் நிலங்களை அபகரிக்கவும் அனுமதியளிக்கும் “தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023”-ஐ தி.மு.க. அரசு எதற்கு கொண்டுவந்தது என்பதையும் விளக்க வேண்டும்.

அதுபோல், சென்னையின் இயற்கை வடிகால்களான நீர்நிலைகளும் கழிமுகத்துவாரங்களும் சதுப்புநிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதுதான் எப்போதும் சென்னை வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆனால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்திவரும் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளால், இருக்கின்ற நீர்நிலைகளும் சதுப்புநிலங்களும் கார்ப்பரேட் நல நாசகர திட்டங்களுக்காக தொடர்ந்து பலிக்கொடுக்கப்பட்டுதான் வருகின்றன. கடந்த 2015-ஆம் ஆண்டிற்குப் பிறகான எட்டு ஆண்டுகளில், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் இத்தகைய ஆக்கிரமிப்பின் வளர்ச்சிவீதம் 300 சதவிகிதமாக இருக்கிறது என்கிறது நியூஸ் 18 செய்தி. இதற்கு தி.மு.க. அரசும் விதிவிலக்கல்ல.

மொத்தத்தில், அதிகாரவர்க்கத்தின் ஊழல்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றாதது, கார்ப்பரேட் நலத்திட்டங்களுக்காக நீர்நிலைகளைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பது, முறையான வடிகால் வசதிகள் செய்யாதது, கழிமுகப் பகுதிகளைத் தூர்வாராதது உள்ளிட்ட தி.மு.க. அரசின் கார்ப்பரேட் நல சேவைகளும் அலட்சியமும்தான் இப்பெருவெள்ளத்தின்போது மக்கள் துயரத்தில் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாகும். எனவே இப்பேரிடருக்கும் தி.மு.க-விற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று பேசுவது மக்கள் விரோதமானதாகும்.

மறுகாலனியாக்கத் திட்டங்களால் அழிக்கப்படும் சென்னை

எண்ணூர் மற்றும் பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள் சென்னையின் இயற்கை நீர் உறிஞ்சிகளாக உள்ளன. இதில் உப்பு சதுப்புநிலமான எண்ணூர் சிற்றோடையானது கனமழை மற்றும் புயல் அலைகளை உறிஞ்சும் தன்மை கொண்டதாகும். தொழிற்துறைக் கட்டுமானங்களும் எண்ணூர் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளும் இந்த சிற்றோடையை நாசமாக்கி வருவதால், இச்சதுப்புநிலத்தின் ஆற்றுநீரை சுமந்து செல்லும் திறனும் வடிகால் திறனும் குறைந்துள்ளது. எனவேதான் மழைக்காலங்களில் வடசென்னை பகுதிகளில் வெள்ளநீர் உடனே வடியாமல், தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது.

இச்சூழலில், எதிர்வரும் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பணிகளால் இந்த எண்ணூர் சதுப்புநிலம் மேலும் பாதிக்கப்படும் பேரபாயம் இருக்கிறது என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன். கடலில் பல கி.மீ. தொலைவுக்கு மணலைக் கொட்டி நடைபெறவிருக்கும் விரிவாக்கப் பணிகளால் சென்னையின் இயற்கை அரண்களில் ஒன்றான எண்ணூர் சிற்றோடை முற்றிலும் அழிக்கப்படும். அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்தபிறகு துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த முயற்சித்து எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாகப் பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

தென்சென்னையில் உள்ள மற்றொரு இயற்கை அரணான பள்ளிக்கரணை சதுப்புநிலம், பல்வேறு ஆக்கிரமிப்புகளால் 13,500 ஏக்கரிலிருந்து  1,500 ஏக்கராக சுருங்கியிருக்கிறது. 2015 பெருவெள்ளத்துக்குப் பிறகும் இந்தச் சதுப்புநிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இந்த மோசடியில் ஈடுபடும் அதிகாரிகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

மேலும், “கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளநீர் எங்கெல்லாம் தேங்கியதோ, அதே பகுதிகளில்தான் தற்போதும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்” என்கிறார், அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன்.

ஆனால், சென்னையில்‘ஆக்கிரமிப்பு’ என்று அப்பாவி உழைக்கும் மக்களின் குடிசைகளைப் பிய்த்து எடுக்கின்ற அரசின் புல்டோசர்கள், பெரிய பெரிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக துரும்பைக்கூட அசைப்பதில்லை. ஏனெனில், சென்னையின் கட்டமைப்பு மறுகாலனியாக்கத் திட்டங்களின் அடிப்படையில் மறுஒழுங்கமைப்பு செய்யப்பட்டு வருகிறது. சென்னையின் மையப்பகுதிகளில் கார்ப்பரேட் மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினரும், செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற புறநகர் பகுதிகளில் சென்னையின் பூர்வகுடி மக்களும் திட்டமிட்டே குடியமர்த்தப்படுகின்றனர். இது முந்தைய ஆட்சிகளில் நடந்ததைக் காட்டிலும் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறை வெள்ளப் பாதிப்பின்போது சென்னை இரண்டாக பிரிந்து காட்சியளித்ததற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.

எனவே, சென்னை இதுபோன்ற வெள்ளத்தால் இனியும் பாதிப்படையாமல் தடுக்க வேண்டுமானால், உடனடியாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, தனியார்-அரசு நிறுவனங்கள் என்ற பேதமின்றி ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டும்; நீர்நிலைகளை அழிக்கும் பரந்தூர், அதானி துறைமுக விரிவாக்கம் போன்ற கார்ப்பரேட் நல நாசகரத் திட்டங்களை நிறுத்த வேண்டும்; சென்னை விரிவாக்கத் திட்டம் இனிமேலும் தொடரக்கூடாது; கேள்விக்கிடமற்ற வகையில் நீர்நிலைகளை அழித்து நிலங்களை அபகரிக்க வழிவகுக்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஊதிய குறைப்பு, பாலியல் துன்புறுத்தல்: டெல்லி அரசு மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்!

டெல்லி புராரி மருத்துவமனையில் (Burari Hospital) அரவிந்த் கெஜ்ரிவால் அரசை எதிர்த்து துப்புரவுத் தொழிலாளர்கள் பத்து நாட்களாக போராட்டம் நடத்தினர். ஜனவரி 23 அன்று கெஜ்ரிவாலின் உருவப்படத்தை வைத்து சவ ஊர்வலம் நடத்தியும், தங்கள் தலை முடியை மொட்டை அடித்துக் கொண்டும் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

”டெல்லி அரசு மருத்துவமனையில் பணி புரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு துப்புரவுப் பணிகளைக் கையாளும் ஒப்பந்த நிறுவனமான குளோபல் வென்ச்சர்ஸ் ஊதியத்தை முறையாக வழங்குவதில்லை. உரிய தேதியில் சம்பளத்தை பெறுவதற்கே போராட வேண்டிய நிலைதான் உள்ளது. மேலும், அந்த நிறுவனத்தில் உள்ள மேற்பார்வையாளர்களின் தயவில் தான் தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்ற நிலை உள்ளது” என்று சஃபாய் கம்கர் யூனியன் (Safai Kamgar Union – SKU) தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான ஹரிஷ் கெளதம் கூறினார்.

மேலும் துப்புரவுத் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து ஹரிஷ் கெளதம் கூறியதாவது:
”மருத்துவமனையில் உள்ள அனைத்து துப்புரவுப் பணியாளர்களும் ஒப்பந்த நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் மாதம் ₹17,000 சம்பளமாக வழங்க வேண்டும். இந்தத் தொழிலாளர்களில் பலர் நன்றாகப் படிக்காதவர்கள் என்பதால், அவர்கள் வேலைக்கு அடிக்கடி வருவதில்லை, விடுப்பு எடுக்கிறார்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் மாதச் சம்பளத்தை ஒப்பந்த நிறுவனம் குறைத்து வழங்குகிறது. அதாவது சில சமயங்களில்  ₹8,000, சில சமயங்களில் ₹11,000 என்ற அளவில் தான் கொடுத்துள்ளது. சம்பளத்தை உரிய தேதியிலும் கொடுப்பதில்லை. ஊதியம் வழங்குதல் சட்டம், 1936 இன் படி, முந்தைய மாத சம்பளம் ஒவ்வொரு மாதமும் 7 அல்லது 10 ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்த நிறுவனம் துப்புரவுத் தொழிலாளர்களின் டிசம்பர் மாத சம்பளத்தை, ஜனவரி 19, 2024 அன்று தான் கொடுத்தது. அதுவும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு பிறகு தான்.

தொழிலாளர்களின் புகார்களுக்கு  ஒப்பந்த நிறுவனமான குளோபல் வென்ச்சர்ஸ் தீர்வு காணாமல், புகார் அளித்தவர்களை பணி நீக்கம் செய்துவிடுகிறது. ஒப்பந்த நிறுவனங்களின் சுரண்டல் நடைமுறைகளையும், பெண் துப்புரவுத் தொழிலாளர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளையும் மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. ஒப்பந்த நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

கடந்த ஆண்டு, ஒப்பந்த நிறுவனத்தின் துப்புரவு மேற்பார்வையாளர்கள் பெண் துப்புரவுத் தொழிலாளர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் இரண்டு எஃப்ஐஆர்கள் டெல்லி போலீசால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், டெல்லி போலீசு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தலித் சமூகத்தை (குறிப்பாக வால்மீகி சமூகத்தை) சேர்ந்தவர்கள். பெரும்பாலும் இந்தத் தொழிலாளர்கள் தங்களை பணிக்கமர்த்துபவர்களால் சாதிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

இந்த ஒப்பந்த நிறுவனங்களில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ₹30,000 முதல் ₹40,000 வரை லஞ்சம் வாங்குவதும் நடக்கிறது. நீங்கள் தொகையைச் செலுத்தவில்லை என்றால், உங்களுக்கு வேலை கிடைக்காது என்று வேலை தேடி வருபவர்களிடம் கூறி லஞ்சம் வாங்குகின்றனர்.”


படிக்க: 350 நாட்களுக்கும் மேலாக தொடரும் டெல்லி மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் போராட்டம்!


மருத்துவமனை வளாகத்திலும், முதலமைச்சரின் இல்லத்திலும் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் மீது போலீசு நடவடிக்கை ஏவப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் செய்த சில தொழிலாளர்கள் மீது போலீசு தடியடி நடத்தி கைது செய்து பின்னர் அவர்களை விடுவித்துள்ளது.

டெல்லி அரசின் தொழிலாளர் துறை அமைச்சர் கோபால் ராய் ஒப்பந்த நிறுவனங்கள் எதேச்சதிகாரமான முறையில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதையும் பணிநீக்கம் செய்வதையும் ஒப்புக்கொண்டார். அரசு நிறுவனங்கள் உட்பட எந்த நிறுவனமானாலும் புதிய ஒப்பந்த நிறுவனங்களை பணியமர்த்தும்போது, ஒப்பந்தத் தொழிலாளர்களில் 80 சதவீதத்தினரைக் கட்டாயம் தக்கவைக்க வேண்டும் என்று டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அந்த உத்தரவு எங்குமே பின்பற்றப்படுவதில்லை.

குளோபல் வென்ச்சர்ஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் தொடர்பாக உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட்டு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்ததைத் தொடர்ந்து ஜனவரி 25 அன்று தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.

ஆனால் இப்பிரச்சனை குறித்து சுகாதார அமைச்சர் உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.

இந்த அவலநிலை என்பது டெல்லியில் உள்ள புராரி மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் சந்திப்பது மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களின் நிலையும் இது தான்.


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube