Wednesday, May 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 94

கொலைகார அகர்வாலை அடிச்சி விரட்டு! – ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு புதிய பாடல் – டீசர்

கொலைகார அகர்வாலை அடிச்சி விரட்டு!
– ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு புதிய பாடல் – டீசர்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

முழுபாடல் ஆகஸ்ட் 5 சென்னையில் நடக்கவிருக்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டத்தில் பாடப்படும்..

ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் துப்பாக்கிச்சூடு படுகொலை! – திட்டமிட்ட இந்து மதவெறி பயங்கரவாதத் தாக்குதல் !

இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மராட்டிய எல்லைக்குள் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 31) அதிகாலை வந்து கொண்டிருந்தபோது  இரயில்வே பாதுகாப்புப் படையைச் சார்ந்த சேத்தன் சிங் என்பவனால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவனது மேலதிகாரி திக்காராவ் மீனா மற்றும் மூன்று இஸ்லாமியப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

இது இந்துமதவெறியனால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாதத் தாக்குதல்தான் என்பதை அவனுடன் பணியாற்றும் காவலர் கன்ஷிராம் ஆச்சார்யாவின் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வாக்குமூலத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

சேத்தன் சிங் அவனது உயரதிகாரியான திக்காராவ் மீனாவிடம் உடல்நலக் குறைவின் காரணமாக பணி நேரம் முடியும் முன்பே அடுத்த இரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்வதாக கூறியுள்ளான். திக்காராவ் அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் சேத்தன் சிங் அதைப் பொருட்படுத்தவில்லை. அதன் பிறகு திக்காராவ் அவரது மேலதிகாரிகளிடம் பேசியுள்ளார். அதன் பிறகு பணிநேரம் முடிந்த பின்புதான் இறங்க முடியும், அதன் பிறகு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அவனுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. சேத்தன் சிங் அதையும் பொருட்படுத்தவில்லை.

அதன் பிறகு திக்காராவ் “அவரிடமிருந்த துப்பாக்கியை வாங்கிக் கொள்ளுங்கள் இரயிலிலேயே ஓய்வெடுக்கட்டும், நீங்கள் அழைத்துச் செல்லுங்கள்” என்று கன்ஷிராம் ஆச்சார்யா விடம் கூறியுள்ளார்.


படிக்க: நம்பிக்கையில்லாத் தீர்மானம்: குட்டிச்சுவரைக் கட்டி அழாதீர்!


சேத்தன் சிங்கிடம் இருந்து துப்பாக்கியைப் பெற்றுக் கொண்டுள்ளார் ஆச்சார்யா. ரயிலில் காலியாக இருந்த இருக்கையில் சேத்தன் சிங்கை படுக்கச் சொல்லிவிட்டு அருகிலேயே அமர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் தனது துப்பாக்கியைக் கொடுக்குமாறு சேத்தன் சிங் ஆச்சார்யாவிடம் கேட்டுள்ளான். ஆச்சார்யா கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேத்தன் சிங் ஆச்சார்யாவின் கழுத்தை நெரித்து துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளான்.

துப்பாக்கியை மாற்றி எடுத்துக் கொண்டு சென்றதால் மீண்டும் அவனிடம் சென்று தனது துப்பாக்கியை வாங்கிக் கொண்டு அவனது துப்பாக்கியைக் கொடுத்துள்ளார் ஆச்சார்யா. சேத்தன் சிங் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு தயாரான நிலையில் அவனது துப்பாக்கியைக் கையாண்டதை உணர்ந்துள்ளார் ஆச்சார்யா.

சிறிது நேரத்தில் சேத்தன் சிங் B5 பெட்டியில் திக்காராவ் மற்றும் மற்றொரு பயணியை தனது தானியங்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்த சேத்தன் சிங் தயாராக இருப்பதை ஆச்சார்யா உணர்ந்துள்ளார். பயணிகளை ஆச்சார்யா எச்சரித்துள்ளார். சிறிது நேரத்தில் மறுபடியும் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

அடுத்ததாக B 6 பெட்டியில் இருந்த மற்றொரு பயணியையும், B5 மற்றும் B6 பெட்டிகளுக்கு இடையில் அமைந்துள்ள பேன்ட்ரி காரில் மேலும் ஒருவரையும் அவன் சுட்டுக் கொன்றான்.

அதன் பிறகு சாவகாசமாக இரயிலில் இருந்து இறங்கி சேத்தன் சிங் சென்றுள்ளான். ஆச்சார்யா B5,  B6 உடனடியாக சென்று பார்த்தபோது, அங்கே மத அடையாளத்தோடு இருந்த மூன்று இஸ்லாமியர்கள் இரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர்.

இக்கொடூரமான படுகொலைகளை நிகழ்த்திய பிறகு “அவர்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படுபவர்கள் என்று ஊடகங்கள் கூறியுள்ளன. இந்துஸ்தானில் வாழ வேண்டுமானால்… மோடி, யோகி… இருவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும்” என்று சேத்தன் சிங் அங்கு பேசிய காணொலி வெளியாகியுள்ளது.


படிக்க: பத்ரி சேஷாத்ரி கைது – பாசிசக் கருத்துகளுக்கு ஜனநாயகம் வழங்க முடியுமா?


படுகொலையான அதிகாரி திக்காராவ் மீனா பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர். மற்ற மூவரும் இஸ்லாமியர்கள். இது திட்டமிட்ட இந்து மதவெறி, சாதிவெறி பயங்கரவாத தாக்குதல் அன்றி வேறென்ன?

அரசுக் கட்டமைப்பின் எல்லா அங்கங்களிலும் காவி பாசிஸ்டுகள் ஊடுருவி விட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அது அன்றாட செய்தியாக மாறி இயல்புநிலையாக்கப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுகளை, கொடூர பாதிப்புகளை நாம் அனுபவித்து வருகிறோம். குறிப்பாக இராணுவம், போலீசு ஆகியவற்றில் பாசிஸ்டுகள் பரவலாக ஊடுருவியிருப்பது எவ்வளவு பெரிய பேரபாயம் கொண்டது என்பதை இச்சம்பவம் இன்னும் கூடுதலாக நமக்கு உணர்த்துகிறது.

நாங்கள் எல்லா முனைகளிலும் தாக்குதல் தொடுப்போம், இஸ்லாமியர்களைக் கொல்வோம், கிறித்தவர்களைக் கொல்வோம், தலித்களையும் பழங்குடி மக்களையும் கொல்வோம், எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று எங்களுக்கு அடிமையாக இரு… இல்லையேல் கொல்லப்படுவாய் என்பதுதான் காவி பாசிஸ்டுகள் உழைக்கும் மக்களுக்கும், ஜனநாயகத்தை நேசிப்போருக்கும் விடுக்கும் செய்தி…

பார்ப்பன இந்துமதவெறி பாசிச கும்பலால் சேத்தன் சிங் கதாநாயகனாக்கப்படுவான். பிரக்யா சிங் தாக்கூரைப் போல் 2024 பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபி வேட்பாளராக நிறுத்தக்கூடப் படுவான். மணிப்பூர், அரியானா வன்முறை, ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் துப்பாக்கிச் சூடு பயங்கரவாதத் தாக்குதல் போன்ற சம்பவங்கள் மூலம் பாசிஸ்டுகள் இந்துராஷ்ரத்தை நோக்கி செல்வதற்கான பாதை எது என்பதை தெளிவாக அறிவித்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசுக்கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு, தேர்தலில் மட்டும் வெற்றி பெற்று பாசிஸ்டுகளை வீழ்த்தி விட முடியும் என்று நினைப்பது இந்நாட்டை முற்றாக அழிவுப் பாதைக்குள் கொண்டு சென்று விடும்.

இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே, பாராளுமன்றத்திற்கு வெளியே காவி பாசிஸ்டுகளை நேரடியாக களத்தில் வீழ்த்துவது ஒன்றே நமக்கிருக்கும் வழி! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை விரைவாக கட்டியமைப்பதன் வரலாற்று முக்கியத்துவத்தை பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் அனைவரும் உணர வேண்டிய தருணமிது.


இனியன

பத்ரி சேஷாத்ரி கைது – பாசிசக் கருத்துகளுக்கு ஜனநாயகம் வழங்க முடியுமா?

கிழக்கு பதிப்பக உரிமையாளரும், பா.ஜ.க ஆதரவாளருமான பத்ரி சேஷாத்ரி கடந்த சனிக்கிழமையன்று அவரது வீட்டில் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டார். ஆதன்தமிழ் என்ற யூடியூப் சேனலுக்கு மணிப்பூர் பிரச்சினை பற்றி அளித்த பேட்டியில் மோதலைத் தூண்டும் வகையிலும், தலைமை நீதிபதி பற்றி அவதூறாகவும் பேசியதாக கவியரசன் என்கிற வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். மிக விரைவாக  நீதிமன்றமும் பிணை வழங்கி விட்டது. என்ன பேசினாலும் பத்ரி சேஷாத்ரிகளுக்கு இது எளிதுதானே…

பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதை வரவேற்றும், கண்டித்தும் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். அதில் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் மற்றும் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், அம்பை, ராஜன்குறை, காலச்சுவடு கண்ணன், வரலாற்று எழுத்தாளர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட சிலர் இந்த கைது தேவையில்லாதது, கருத்துரிமை, ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

வேறு சிலர் அவரது இழிவான, அபத்தமான பேச்சுக்காக வழக்கு போட்டிருக்கலாம், கைது செய்தது தவறு என்கின்றனர். பத்ரியின் பேச்சு இழிவுபடுத்தும் வகையிலான மற்றும் கோமாளித்தனமான கருத்துகளே தவிர வெறுப்பூட்டும் கருத்துகள் இல்லை, எனவே கைது போன்ற நடவடிக்கை தேவையில்லை என்கின்றனர். கருத்துரிமைக்காகவும், மோடி அரசின் அடக்குமுறைகளுக்கெதிராகவும் குரலெழுப்பியவர்களை கைது செய்தது போன்றதுதான் இதுவும் என்கின்றனர். இரண்டையும் சமப்படுத்தி பேசுகின்றனர். அதாவது இவர்களின் ஜனநாயக உணர்வு என்பது பாசிசத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும், விசத்தைக் கக்கும் பாசிஸ்டுகளுக்கும் ஒரே மாதிரியான அளவுகோலை வைக்கிறது.


படிக்க: மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ட்விட்டரில் தாக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கிகள்!


பத்ரி சேஷாத்ரியின் அந்த குறிப்பிட்ட பேட்டி முழுக்கவே பார்ப்பன சாதித்திமிரும், இந்துமதவெறியும்தான் வழிந்தோடுகிறது. தமிழர்கள் பொறுக்கிகள் என்பதாகட்டும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வக்கிர நகைச்சுவையோடு பேசுவதாகட்டும், பாதிக்கப்பட்ட குக்கி மக்களை இழிவுபடுத்தி அவர்களை போதை மருந்து கடத்தல்காரர்கள், அவர்கள் மைத்திக்களைக் கொன்றார்கள் அதனால் கொல்லப்பட்டார்கள் என்று ஆதாரமே இல்லாமல் பேசுவது, இராணுவம் பெண்களை வல்லுறவு செய்ததை ஒன்றும் பெரிய விசயமில்லை என்கிற தொனியில் பேசுவது, எதிர்க்கட்சிகளை, தலித் இயக்கங்களை, முற்போக்கு இயக்கங்களை, முற்போக்கு நபர்களை இழிவாக சித்தரித்து பேசுவதாகட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பற்றி பேசுவதாகட்டும் பத்ரியின் தடித்த வார்த்தைகளும், உடல்மொழியும் ஒரு பாசிஸ்டுக்குரியதே.  இந்த பத்ரிதான் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, நான் இப்போது அமெரிக்காவில் இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று அன்றே பேசியவர்…

ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க கும்பல் எப்படி சிறுபான்மையினரைப் பற்றி குறிப்பாக இஸ்லாமியர்களைப் பற்றி வெறுப்பை விதைக்கிறதோ, அவர்கள் மீதான தாக்குதலையும், ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்துகிறதோ அதே போல வெறுப்பூட்டும் வகையில்தான் பத்ரியின் பேச்சும், கருத்துகளும் உள்ளது. இங்கு எழும் கேள்வி ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க கும்பலுக்கு வழங்கப்படும் கருத்து சுதந்திரம் எங்கு போய் முடிந்துள்ளது என்பதைத்தான். நாம் இதை வடமாநிலங்கள் முழுவதிலும், தற்போது ஹரியானாவில் நடைபெறும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள கலவரத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பாசிஸ்டுகளின் கலவரங்களும், சிறுபான்மையினர் மீதான படுகொலைகளும் எப்படி இயல்பு நிலையாக்கப்படுகின்றதோ, அதுபோல் பத்ரி போன்றவர்களுக்கு கருத்துரிமை என்ற பெயரில் ஆதரவு கொடுப்பதானது பாசிசக் கருத்துகளை பேசுவதும் இயல்புதான் என்ற நிலைக்கே கொண்டு செல்லும். இப்படித்தான் வடமாநிலங்களில் சங்பரிவாரங்கள் தங்களது அடித்தளத்தை நிறுவிக் கொண்டன. ஜனநாயகம் என்ற பெயரில் பாசிசக் கருத்துகளையும், நடவடிக்கைகளையும் அனுமதிப்பது ஜனநாயகத்திற்கே முற்றுப்புள்ளி வைக்கும் திசையில்தான் கொண்டு செல்லும். பாசிசத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்குமே வழிவகுக்கும். ஜனநாயகத்தின் பெயரால் பாசிசக் கருத்துகளையும் அனுமதிக்கலாம் எனும் சில அறிவாளிகளது கருத்து பாசிசத்திற்கு மறைமுகமாக ஆதரவளிப்பதை நோக்கியே இட்டுச் செல்லும். பாசிசம் வெற்றியடைந்துவிட்டால் அழுது புலம்புவதையும், ஓடி ஒளிந்து கொள்வதையும் தவிர இவர்களுக்கு வேறுவழியிருக்காது. எனவே பாசிசக் கருத்துகளுக்கு சுதந்திரமளிப்பது ஜனநாயகத்திற்கே எதிரானது என்பதில் தெளிவுடனும், உறுதியுடனும் நிற்போம்! பாசிசத்தை எதிர்த்து முறியடிப்போம்!

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: குட்டிச்சுவரைக் கட்டி அழாதீர்!

ற்போது நாடாளுமன்றத்தில் நடக்கும் விவகாரங்கள் தொடர்பான விசயத்தில், அப்படி ஒரு முரண் வெளிப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் நமது நாட்டின் பிரதமரை நாடாளுமன்றத்தில் பேசவைக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளின் ‘பகீரத முயற்சி’களின் விளைவாக உருவாகியிருக்கும் முரணாகும்.

‘பகீரத முயற்சி’ என்று சொல்லும் போது நமது இளந்தலைமுறையினருக்கு அது குறித்து தெரியாமல் இருக்கலாம். இராமாயணத்தில் வரும் ஒரு கிளைக்கதையின் நாயகன் பகீரதன். அவன் இராமனின் முன்னோர்களில் ஒருவன். தனது அறுபதாயிரம் முன்னார்களுக்கு கபில முனிவரால் நிகழ்ந்த சாபத்தை நீக்கி புனிதப்படுத்தி சொர்க்கத்திற்கு அனுப்ப விரும்பிகிறான். இதன் பொருட்டு கங்கை நதியை பூமிக்கு அழைத்துவர பிரம்மன், கங்கை, சிவன் ஆகியோரை நோக்கி பலமுறை, பல ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்ததாகச் சொல்கிறது அந்தப் புராணக் கதை. விடாமுயற்சியும் கடும் உழைப்பும் இருந்தால் வெற்றியடையலாம் என்பதற்குச் சான்றாக பார்ப்பனர்கள் இந்தக் கதையைக் கூறுவார்கள். அற்பக் காரணங்களுக்காக பார்ப்பனர்கள் மற்றவர்களை அலைக்கழித்தாலும் தன்மான உணர்வு குறித்து சிந்தனை கொள்ளாமல் அதனை ஏற்று அவர்கள் சொல்வதை செய்ய வேண்டும் என்ற அடிமைப் புத்தியை இக்கதை தந்திரமாக விதைக்கிறது.

தன் முன்னோர்களை நரகத்தில் இருந்து மீட்க வேண்டும் என்பதற்காக தவம் புரியும் பகீரதன் – ராமாயணக் கதை

சரியாக சொன்னால், நமது நாட்டின் பிரதமர் மணிப்பூர் விசயத்தில் பேச வேண்டும் என்பதில் எந்த அளவிற்கு நியாயம் இருந்தாலும், அவரது நடவடிக்கைகள் நாட்டையும் மக்களையும் அவமானப்படுத்துபவையாக இருக்கின்றன. ஒரு பிரதமர் என்ற முறையில் அவர் முன்வந்து இந்த கலவரங்களைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவரது கட்சியும் பார்ப்பனிய சிந்தாந்தத் தலைமையும்தான் இந்தக் கலவரங்களின் சூத்திரதாரிகள். இந்தக் கலவரங்களை வளர்க்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அவர் இந்தப் பிரச்சினையில் வாயைத் திறக்காமல் இருக்கும் நடவடிக்கையானது, கலவரங்களைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், அதில் இருந்து திசைத்திருப்பும் ஒரு தந்திரமும் ஆகும்.

மேலும், இப்பிரச்சினை குறித்து பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வெளியே கருத்துகளைத் தெரிவித்துவிட்டார். அவர் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தைரியம் இல்லாதவர் என்பது ஒரு உண்மையாக இருந்தாலும் அவர் கருத்து சொல்லி ஆக வேண்டும் என்று கட்டாயமில்லை.

எதிர்க்கட்சிகள் கோருவதெல்லாம், பிரதமர் மணிப்பூர் விசயத்தில் விவாதிக்க முன்வரவேண்டும் என்பது அப்பதவிக்குரிய தார்மீகப் பொறுப்பு, நாடாளுமன்ற மரபு என்ற வகையில் மட்டுமே.

சரி, நமது பிரதமர் என்ன கருத்துகளைச் சொல்வார் என்பதும் நமக்கெல்லாம் தெரிந்த விசயம்தான். அவரது கருத்துகள் என்னவாக இருக்கும் என்பதற்கு நாடாளுமன்றத்திற்கு வெளியே 21-07-2023 அன்று அவர் தெரிவித்த கருத்துகள், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைச்சர் ஸ்மிருதி இராணி போன்றவர்கள் தெரிவித்த கருத்துகளைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். இதனைத் தவிர அவரது வாயில் எந்தக் கருத்துகளும் வந்துவிடப் போவதில்லை, கலவரங்களைத் தடுப்பதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளப் போவதில்லை, இந்தக் கலவரங்களுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளப்போவதுமில்லை.

அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டத்தைப் பற்றி கருத்து தெரிவித்த அமித்ஷா, அவர்களை இந்திய முஜாகிதீன்கள் என்று கூறுகிறார். அதாவது, ஆளுங்கட்சியை மொன்னையான வகையில் விமர்சனம் செய்வதைக் கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லை என்பதுதான் பா.ஜ.க.வின் நிலை.

இருப்பினும், நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றைக் கோரிக்கையாக இருக்கிறது.

இந்த நாடாளுமன்றம் எப்பேர்ப்பட்டதாக இருக்கிறது, நாட்டின் 99 சதவிகித மக்கள் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரிந்துகொள்ள விரும்பாத ஒரு இடம். ஏனெனில் அவர்களது அன்றாடப் பிரச்சினைகளையும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளையும் பற்றி அங்கு விவாதிக்கப்படுவதாக அவர்கள் கருதுவதில்லை. அப்படிப்பட்ட நாடாளுமன்றத்தில்தான், மோடியை அம்பலப்படுத்த வேண்டுமென்பதற்காக, நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர், எதிர்க்கட்சிகள்.

இதுஒருபுறமிருக்க, நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியின் மீது நம்பிக்கையில்லை என்பதை விவாதித்து, அதன் மீது வாக்கெடுப்பு நடத்துவதாகும். அவ்வாறு வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி தோற்றால், ஆட்சி கலைந்துவிடும். ஆனால், ஆகப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியை இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதையும் செய்துவிடாது என்பதும் எதிர்க்கட்சிகளுக்கு நன்கு தெரியும்.

நமது பிரதமரோ ஒரு ஃபாசிச சித்தாந்தவாதி, கொடுங்கோலன். ஆனால், அவர் எப்படிப்பட்ட கொடுங்கோலன் என்பதுதான் முக்கியமானது.

மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை செய்தியாளர்கள் பலரும் விளக்குகின்றனர். சான்றாக, ஊடகங்களில் வெளிவந்த ஒரு வீடியோவில் பின்வருமாறு ஒரு காட்சி இருக்கிறது. ஒரு குக்கி இன இளம் பெண் நாற்பது ஐம்பது மெய்தி இன ஆண்கள், பெண்கள் மத்தியில் மாட்டிக்கொண்டு அச்சத்தில் நிலைகுலைந்து நிற்கிறாள். அங்கிருக்கும் மெய்தி இனப் பெண்கள் அந்த குக்கி இனப் பெண்ணை நிர்வாணமாக்கி அவளை வன்புணர்வு செய்யுமாறு மெய்தி ஆண்களைப் பார்த்துக் குரல் எழுப்புகின்றனர். ஆகையால், மணிப்பூரில் நடப்பது ஆர்.எஸ்.எஸ்.யின் தூண்டுதலாலும் அரசின் ஆதரவுடனும் மெய்தி இனத்தினர் குக்கி இனத்தினர் மீது நடத்தும் வன்முறை மட்டுமல்ல, ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக நடத்தும் வன்முறையாகும்.

இது குஜராத்தில் இசுலாமியர்களுக்கு எதிராக நிகழ்ந்த இனப்படுகொலையைப் போன்றதல்ல. அது மதவெறியூட்டப்பட்ட கும்பல் அரசின் ஆதரவுடன் திட்டமிட்டு இசுலாமியர்களுக்கு எதிராக நடத்திய வன்முறை வெறியாட்டமாகும். ஆகையால், மணிப்பூரில் நடப்பது நமது நாட்டில் இதற்கு முன்னர் நிகழ்ந்திராத ஒரு வன்முறை வெறியாட்டமாகத்தான் இருக்கும்.

இப்படி ஒரு கொடூரம் அரங்கேறிக்கொண்டிருக்கும் நேரத்தில் கூட அதனைத் தடுக்கமனமில்லாமல், வெளிநாடுகளுக்குச் சுற்றிவருவது, இசைநிகழ்ச்சிகளைக் கேட்பது, கேலிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் நமது பிரதமர் செய்துவருகிறார்.

எதிர்க்கட்சிகளின் இந்த பகீரதப் போராட்டங்கள் நடக்கும் இந்த ஒருவார காலத்தில் பிரதமரின் செய்கைகளைப் பார்த்தாலே, அவர் எந்த அளவுக்கு கொடூரமான ஃபாசிஸ்டு என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மணிப்பூர், ஹரியானா பற்றி எரிகிறது, நாடாளுமன்றமோ முடங்கிக் கிடக்கிறது. ஆனால், மோடியோ ஃபிரான்சில் ஊர்சுற்றிக் கொண்டிருக்கிறார். அங்கு யோகா பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். விருந்துகளில் பங்கேற்கிறார். அம்ருதா களசம் என்று ஒரு யாத்திரையைப்பற்றி பேசுகிறார். திலகர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

இன்னொருபக்கம், ஹரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் என்ற குண்டர்படை கலவரங்களை அரங்கேற்றி வருகிறது. மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன; இப்பாசிச குண்டர் படையினர் துப்பாக்கிகளைக் கொண்டு போலீசையும் சுட்டுக்கொன்றுள்ளனர்; நுஹ் இமாம் கொல்லப்பட்டுள்ளார். அந்த மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சிதான். இந்த வன்முறைகளை உடனடியாக தடுப்பதற்கான எந்த முயற்சியையும் ஹரியானா முதல்வர் எடுப்பதாகத் தெரியவில்லை.

ஹரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் குண்டர்படை அரங்கேற்றிய கலவரங்கள்

ஜெய்ப்பூர் எக்பிரஸ் இரயிலில் ரயில்வே காவலராக இந்து பயங்கரவாதி சேத்தன் சிங், ஒரு இரயில்வே உயரதிகாரியையும் மூன்று இசுலாமியர்களையும் சுட்டுக்கொன்ற பயங்கரவாதமும் நடந்துள்ளது. இந்த பயங்கரவாதத்தை அரங்கேற்றும்போது “இவர்கள் எல்லோரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்; பாகிஸ்தானின் உளவாளிகள்; இந்தியாவில் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் மோடிக்கும் யோகிக்கும்தான் வாக்களிக்க வேண்டும்” என்று கத்தியுள்ளான். ஒன்றிய அரசோ, கொல்லப்பட்ட இரயில்வே அதிகாரியின் குடும்பத்தினருக்கு மட்டும் இழப்பீட்டை வழங்கியுள்ளது. ஆனால், கொல்லப்பட்ட இசுலாமியர்களின் குடும்பத்தினருக்கு இதுவரை நிவாரணமே அறிவிக்கவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜெய்ப்பூர் எக்பிரஸ் இரயிலில் இசுலாமியர்களை தேடிச் சுட்ட இந்து பயங்கரவாதி சேத்தன் சிங்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இப்படி நாள்தோறும் பயங்கரவாதங்கள் அரங்கேற்றப்படும். இதற்கெல்லாம் எதிராக பிரதமர் வாய் திறக்கமாட்டார். வாய் திறக்கச் சொல்லிப் போராடுவதால் மட்டும் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

இறுதியாக, ஆகஸ்டு 8-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும் என்று நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் அறிவித்துள்ளார். அதற்குள் நமது நாட்டில் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரியது. ஆனால், மோடி-அமித்ஷா கும்பல், அதற்குள் பல்வேறு அடக்குமுறைகள், சம்பவங்களை நிகழ்த்தி மணிப்பூர் விசயத்தைப் பழைய நிகழ்வாக்கிவிடும் என்பது உறுதி.

இத்துடன் செண்ட்ரல் விஸ்தா என்ற புதிய நாடாளுமன்றக் கட்டிடமும் இருக்கிறது. அதற்குள் இந்த விவாதத்தை வைக்க இருப்பதாகக் கூட மோடி-அமித்ஷா கும்பல் அறிவிக்கக் கூடும். இந்துத்துவத்தின் மன்றாமாக்கப்பட்டுள்ள அந்த கட்டிடத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டியிருக்கும்.

எதிர்க்கட்சிகளுக்கு தற்போது அமித்ஷாதான் பதிலளித்து வருகிறார். அதனால், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசாமல் இருக்கலாம், அவர் பதிலளிக்காமலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்த முடியும் என்று இந்திய ஜனநாயகத்தின் அவலநிலையை ஊடகங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ஒருவேளை பிரதமர் நாடாளுமன்றத்தில் வாய்திறப்பாரானால், அதற்காக எதிர்க்கட்சிகள் எடுத்துக் கொண்ட பகீரத முயற்சிகள் எல்லாம் பலவகைகளில் கோமாளித்தமானவையாக ஆக்கப்பட்டுவிடும்.

ஏனென்றால், இந்த நாடாளுமன்றக் கரையான் புற்றில் இருந்துதான் பா.ஜ.க. என்ற நாகப் பாம்பு குட்டிபோட்டு வளர்ந்து வந்துள்ளது. இந்த புற்றின் சந்துபொந்துகள் மீது அதற்கு எந்த பயபக்தியும் கிடையாது. அதுமட்டுமல்ல, இன்று பா.ஜ.க.வும் மோடியும் 1999-இல் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் போன்று குட்டி அல்ல. அனகோண்டவாக வளர்ந்துவிட்ட நாகப் பாம்பு. இந்த பாசிச அனகோண்டாவின் வலிமை மற்றும் அசைவுகள் காரணமாக நாடாளுமன்றம் என்ற கரையான் புற்றே இடிந்து வருகிறது. தனது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உற்ற துணையாக இருந்து இன்று பயனற்று குட்டிச்சுவராகிக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத்தைத் தூக்கிவீசிவிட்டு ஓட இருக்கிறது அனகோண்டா.

ஆனால், எதிர்க்கட்சிகளோ இந்த அனகோண்டாவை குட்டிச்சுவர்களை வைத்து தடுக்கப் போவதாக நம்பிக்கைக் கொண்டிருக்கின்றன. இந்த நம்பிக்கைக்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிதான் நம்பிக்கையில்லா தீர்மானமாம். சொற்களில் இருக்கும் இந்த முரண், பொருளிலும் அமைந்துவிட்டதுதான் காலப் பொருத்தமாகும்!

ஆகையால், எதிர்க்கட்சிகள் அந்தக் ‘குட்டிச்சுவர்’ மீது நம்பிக்கை வைப்பதையும் அந்த ஆளைப் பேசச்சொல்லும் மொக்கையான விசயத்தையும் கைவிட்டு, வீதியில் இறங்க வேண்டும். மக்களைத் திரட்டிப் போராட வேண்டும். நாடாளுமன்றத்தைவிட நாட்டை முடக்கும் வகையில் பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுப்பதுதான் சரியான பதிலடியாகும். மற்றொருபுறம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. தடை செய்யப்பட வேண்டும். சங்கப் பரிவார அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும். மதவெறியைத் தூண்டுகின்ற, ஜனநாயகத்தை இழிவுப்படுத்தி செய்யப்படும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிரச்சாரங்கள் எல்லாம் தடைசெய்யப்பட வேண்டும். மக்கள் உரிமை, ஜனநாயகத்திற்கு எதிராக பாசிசக் கருத்துகளை ஆதரித்துப் பேசும் ஊடகவியலாளர்கள், அறிவுஜீவிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இதுதான், மோடியை மணிப்பூர் விசயத்தைப் பேச வைப்பது மட்டுமல்ல, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டுவரும்!

மணிப்பூருக்காக தமிழ்நாட்டு மாணவர்கள், ஜனநாயாக சக்திகளின் போராட்டமும் பத்ரி கைதும் சரியான பாதையிலான ஒரு முன்னேற்றமாகும். இந்த திசையில் பாசிசத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரட்டும்.


தங்கம்

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஆகஸ்ட் – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

♦ தலையங்கம்: நேற்று குஜராத், இன்று மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வை தடை செய்!
♦ அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!
♦ பொது சிவில் சட்டம், அறிவிப்பு: இந்துத்துவத்தின் பிரம்மாஸ்திரமா? புஸ்வானமா?
♦ உணவுப் பொருட்களின் விலை உயர்வு: வெடிக்கக் காத்திருக்கும் பொருளாதார பயங்கரவாதத்தின் புகைச்சல்
♦ கவிழ்ந்து வரும் தாமரைக்கு சவக்குழி வெட்டுவோம்!
♦ தலித்துகள் – சிறுபான்மையினர் மீது பெருகிவரும் தாக்குதல்கள்: தீர்வு என்ன?
♦ வனம், கனிமப் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள்: கார்ப்பரேட் கொள்ளையின் முகமூடி!
♦ கழன்றது முகமூடி : பாசிசக் கும்பலின் தோல்வி முகமும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமிக்கப் போராட்டமும்! – பகுதி 2
♦ புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.ழு.வின் 25 ஆண்டுகள்! – இறுதி பகுதி

பூஞ்சுத்தி : தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதிவெறியர்களின் தாக்குதல்! | தோழர் ராமலிங்கம்

பூஞ்சுத்தி : தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதிவெறியர்களின் தாக்குதல்! | தோழர் ராமலிங்கம்

தெலுங்கானா: பாசிச எதிர்ப்பு அறிவுத்துறையினர் – செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் வேட்டை!

டந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள் என 152 பேர் மீது ஊஃபா வழக்கு பாய்ச்சப்பட்டுள்ள விவரம் அண்மையில் வெளிவந்துள்ளது. தங்கள் மீது ஊஃபா வழக்கு பதியப்பட்டுள்ளது என்ற விவரமே இந்த 152 பேருக்கும் கடந்த மாதம் வரை தெரியாது என்பதுதான் அதிர்ச்சிக்குரிய செய்தி. போலீசு இத்தகவலை யாரிடமும் தெரிவிக்கவில்லை.

தெலுங்கானாவின் மக்கள் ஜனநாயக இயக்கத்தின் (People Democracy Movement – PDM) தலைவர் சந்திரமௌலி ஒரு வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றத்தை அணுகியபோது, இதுதொடர்பான விவரம் வெளிவந்துள்ளது. ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதற்காக அவர் மீது பதியப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கோரியது. அதை ஆராயும்போதுதான், “மாவோயிஸ்டுகளுடன் இணைந்து அரசைக் கவிழ்க்க முயன்றதாக” குற்றஞ்சாட்டப்பட்டு 152 பேர் மீது போடப்பட்ட ஊஃபா வழக்கில் சந்திரமௌலியும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

முலுகு மாவட்டத்தின் தட்வாய் போலீஸ் நிலைய வட்டார ஆய்வாளர் சங்கரால் பதிவுசெய்யப்பட்ட, 52 பக்கங்கள் கொண்ட இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், பலராலும் அறியப்பட்ட மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் ஹரகோபால், உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பத்மஜா ஷா, தெலுங்கானா சிவில் உரிமைக் குழுத் தலைவர் பேராசிரியர் கதாம் லக்ஷ்மன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

கொடுமை என்னவெனில், களத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களின் பெயர்களுடன் சேர்த்து பீமா கொரேகான் வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள சுதா பரத்வாஜ், சிறையில் உள்ள அருண் ஃபெரைரா மற்றும் வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் ஆகியோரின் பெயர்களும், இவ்வழக்கு பதிவுசெய்யப்படுவதற்கு முன்பே இறந்துவிட்ட முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஹோஸ்பெட் சுரேஷ் மற்றும் அமருலா பாண்டுமித்ரா சங்கத்தின் (ABMS) உறுப்பினர் கடமஞ்சி நரசமா உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

கட்டுக்கதையை நிராகரித்த ஜனநாயக சக்திகள்!

ஆகஸ்ட் 19, 2022 அன்று மாவோயிஸ்டுகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட புத்தகம் ஒன்றில், இந்த 152 செயல்பாட்டாளர்களின் பெயர்பட்டியல் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வழக்கு பதிவுசெய்யப்பட்டவர்கள் அனைவரும், “அரசு சொத்துக்களை அழிக்கவும், பழங்குடியின இளைஞர்களை மாவோயிஸ்டு அமைப்புக்கு வென்றெடுக்கவும், அவ்வமைப்புக்கு சட்டவிரோதமாக நிதி திரட்டவும் திட்டமிட்டனர்” என்று தங்களது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது தெலுங்கானா போலீசு.

ஆனால், தெலுங்கானாவில் உள்ள ஜனநாயக சக்திகள் யாரும் இந்த கதைகளை நம்பத் தயாராக இல்லை. இது செயல்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கான திட்டமிடப்பட்ட சதி என்பதை உணர்ந்து அதற்கெதிராக கடும் கண்டங்களை எழுப்பியுள்ளனர். பல்வேறு ஜனநாயக இயக்கங்களும் இச்சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டன. குறிப்பாக இறந்துபோன முன்னாள் நீதிபதி ஹோஸ்பெட் சுரேஷ் மற்றும் கடமஞ்சி நரசமா உள்ளிட்டோரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டி, போலீசின் சதி நோக்கத்தை அம்பலப்படுத்தினர்.


படிக்க: ஊபா உச்சநீதிமன்ற தீர்ப்பு: பாசிச அரசுடன் கைகோர்க்கும் நீதிமன்றம்!


இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பேரா.ஹரகோபால், “இந்தப் பெயர்களை யார் எழுதுகிறார்கள் என்பது முழு சமூகத்திற்கும் தெரியும். மாவோயிஸ்டுகளுக்கு எழுத வேண்டிய அவசியம் இல்லை. போலீசுதான் அவர்கள் விரும்பும் பெயர்களை எல்லாம் இணைத்துள்ளது” என்றார்.

பல்வேறு சிவில் அமைப்புகள், தனிநபர்களின் குடை அமைப்பாகச் செயல்படும் மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு (NAPM) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது தெளிவாக உள்ளது; குற்றமாக்கப்படுவது வெறும் நடவடிக்கைகள் அல்ல, அரசாங்கத்தை எதிர்க்கும் எந்தவொரு நம்பிக்கையும் ஆகும்” என்று தெரிவித்துள்ளது.

மீசையில் மண்ணில்லை: தெலுங்கானா போலீசு!

இந்தாண்டு இறுதியில் தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஜனநாயக சக்திகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் தமது பக்கம் திரும்புவதை சந்திரசேகர் ராவ் அரசு விரும்பவில்லை; எனவே பேரா.ஹரகோபால் உள்ளிட்ட 151 பேர் மீதான வழக்கை திரும்பப்பெறுமாறு முதல்வர் சந்திரசேகர் ராவ் போலீசுத்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, “பேரா.ஹரகோபால், பேரா.பத்மஜா ஷா, வி.ரகுநாத், கதாம் லக்ஷ்மன், குந்தி ரவீந்தர் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோரை இந்த வழக்கில் தொடர்புப்படுத்த போதிய ஆதாரங்கள் இல்லை என இதுவரை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆகவே ஆறு பேரின் பெயர்களையும் நீக்கக்கோரி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒரு குறிப்பாணை தாக்கல் செய்யப்படும்” என முலுகு போலீஸ்துறை கண்காணிப்பாளர் கவுஷ் ஆலம் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட இறந்த இரண்டு நபர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்தது குறித்து, தங்களுக்கு இப்போதுதான் தெரியும் என்றும், அந்த பெயர்களும் வழக்கிலிருந்து நீக்கப்படும் என்றும் கூறியுள்ளார். பீமா கொரேகான் வழக்கில் சிறையிலுள்ள சுரேந்திர காட்லிங் மற்றும் அருண் ஃபெரைரா உட்பட மீதமுள்ள 146 ஆர்வலர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றால், அவர்களின் பெயர்களும் வழக்கிலிருந்து திரும்பப் பெறப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டு ஒரு பொய்வழக்கைத் தொடுத்து மாட்டிக்கொண்டபின், மீசையில் மண் ஒட்டாமல் பின்வாங்க நினைக்கிறது தெலுங்கானா போலீசு. “அனைவரும் ஒரே வழக்கில் உள்ளனர். ஒருவருக்கு எதிரான வழக்கு நீக்கப்படுகிறதென்றால், அந்த வழக்கில் தவறு அல்லது ஏதேனும் குறைபாடு நடந்துள்ளது என்பதை அரசு உணர்ந்துள்ளது. இது அனைவருக்கும் பொருந்தும். எனவே, இந்த வழக்கை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார் பேரா.ஹரகோபால்.

ஊஃபா பாய்ச்சப்பட்ட இவர்கள் யார்?

ஊஃபா பாய்ச்சப்பட்ட இந்த 152 செயல்பாட்டாளர்களில் பெரும்பாலானோர் மாநில அளவிலோ, நாடு தழுவிய அளவிலோ காவி பாசிஸ்டுகளுக்கு எதிராக இயக்கங்கள் வைத்து நடத்துபவர்கள் அல்லது அந்த இயக்கங்களில் செயல்படுபவர்கள்; இயக்கமாகச் செயல்படவில்லையெனினும் தனிப்பட்ட ரீதியில் பாசிஸ்டுகளுக்கு எதிராக குரலெழுப்பி வருபவர்கள்.

முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியான ஹோஸ்பெட் சுரேஷ், மோடி பிரதமராவதற்கு முன்பிருந்தே, 2002 குஜராத் கலவரத்தின் முக்கிய குற்றவாளி மோடி என்று பேசிவந்தவர். கல்வி காவிமயமாக்கப்படுவதற்கு எதிராகவும், பீமா கொரேகான் பொய்வழக்கிற்கு எதிராகவும் தொடர்ந்து குரலெழுப்பி வந்தவர். பீமா கொரேகான் பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ், அருண் ஃபெரைரா மற்றும் சுரேந்திர காட்லிங் உள்ளிட்டோர் இயங்கிவந்த இந்திய மக்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக செயல்பட்டவர்.

பேரா.ஹரகோபாலும் பீமா கொரேகான் வழக்குக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். அது தொடர்பாக பிற ஆசிரியர்களுடன் இணைந்து கூட்டம் நடத்தியதற்காக 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். உஸ்மானியா பல்கலைக்கழகப் பேராசிரியர் பத்மஜா ஷா, தி வயர், நியூஸ் மினிட், மின்ட், தி ஹூட் போன்ற வலைத்தளங்களில் மோடி அரசை அம்பலப்படுத்தி தொடர்ந்து எழுதிவருபவர்.

இவையன்றி கிட்டத்தட்ட 22 மாநிலங்களில் செயல்பட்டுவரும் “கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றம்” (AIFRTE) என்ற அமைப்பின் பொருளாளர் எம்.கங்காதர், உறுப்பினர் கே.ரவி சந்தர் ஆகியோரின் பெயர்களும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது. “தெலுங்கானா ஜனநாயக ஆசிரியர் முன்னணியை”ச் (DTF) சேர்ந்த ஆறு தலைவர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே கல்வி காவிமயமாக்கப்படுவதற்கு எதிராகவும் மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை 2020-க்கு எதிராகவும் களமாடியவர்கள்.

பீமா கொரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்ட செயல்பாட்டாளர்கள் இயங்கிய அமைப்புகளில் செயல்பட்டுவந்த பலர் தெலுங்கானா அரசு பதிந்துள்ள இந்த ஊஃபா வழக்கில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பாசிசக் கும்பலின் கையாளாக சந்திரசேகர் ராவ்!

இத்தகைய செயல்பாட்டாளர்களை ஒடுக்கவேண்டியத் தேவை யாருக்கு உள்ளது என்பதை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். மக்கள் உரிமைக்காக போராடும் இச்செயல்பாட்டாளர்கள் மீது தாங்கள் விரும்பும் தருணத்தில், அடக்குமுறையை ஏவுவதற்காக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலால் முன்பே தயாரித்து வைக்கப்பட்ட முகாந்திரம்தான் இந்த ஊஃபா வழக்கு.

2018-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா போலீசாரால் பதிவுசெய்யப்பட்ட பீமா கொரேகான் வழக்கு முதலில் என்.ஐ.ஏ-வால் விசாரிக்கப்பட்டதல்ல; அது மகாராஷ்டிரா போலீசால் போடப்பட்ட வழக்கு. மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்துகொண்டு மோடி அரசைக் கவிழ்க்கச் சதி செய்ததாக இவ்வழக்கு ஜோடிக்கப்பட்டது.


படிக்க: சமூக ஊடகங்களில் பதிவிட்ட 102 பேர் மீது ஊபா : திரிபுரா பாசிச பாஜக அரசு வெறியாட்டம் !


தமது பாசிச நடவடிக்கைகளுக்கு ‘இடைஞ்சலான பேர்வழிகள்’ என்று ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் கருதும் செயல்பாட்டாளர்களை ஒழித்துக் கட்டுவதற்காக மேற்கொண்ட இந்நடவடிக்கையை, 2019 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு செய்ததன் மூலம் ‘பயங்கரவாதிகளுக்கு அச்சுறுத்தலான நபர் மோடி’ என்ற நாயக பிம்பத்தை உருவாக்குவதே அன்றைய நோக்கமாக இருந்தது. இப்போது அதே பாணியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு செயல்பாட்டாளர் மீது அடக்குமுறையை ஏவும் நோக்கோடு பாசிசக் கும்பலால் இந்த ஊஃபா வழக்கு பதியப்பட்டிருக்கலாம். பீமாகொரேகான் வழக்கைப் போன்ற இவ்வழக்கும் பாசிச எதிர்ப்பு சக்திகளை வேட்டையாடும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் சதித்திட்டத்தின் தொடர்ச்சியாகும்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் இப்பாசிச நோக்கத்திற்கு குடுமியைப் பிடித்துக் கொடுக்கும் வேலையைத்தான் தெலுங்கானாவின் சந்திரசேகர் ராவ் அரசு மேற்கொண்டுள்ளது.

2022-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பி.ஆர்.எஸ். கட்சியின்மீது அமலாக்கத்துறை நடவடிக்கைகள் தீவிமடைவதை நாம் கவனிக்கலாம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்ட் மூலம் சந்திரசேகர் ராவ் அமித்ஷாவை ரகசியமாகச் சந்தித்து டீல் பேச முயற்சித்த தகவல் வெளியே கசியவந்து நாறிப்போனது.

“நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதே தனது இலக்கு” என்று அறிவித்துக் கொண்ட சந்திரசேகர் ராவ், எதிர்க்கட்சிகளின் பாட்னா கூட்டத்தை புறக்கணித்தும், பா.ஜ.க.விற்கு எதிரான பேச்சுக்களை குறைத்துக்கொண்டு அடக்கிவாசிப்பதும், அவர் பாசிசக் கும்பலின் பீ டீமாகச் செயல்படத் தொடங்கிவிட்டார் என்பதை அறிவிக்கின்றன.


துலிபா
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

“BAN BJP – BAN RSS” | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவின் புதிய பாடல்

“BAN BJP – BAN RSS” | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவின் புதிய பாடல்

Everybody lets join together.. gether.. gether..
Everybody lets raise your hands.. hands.. hands..
Everybody lets raise voice.. voice.. voice..

Ban Ban Ban BJP {2}
Ban Ban Ban RSS {2}

வடகிழக்கு மணிப்பூரின் நிலவரம்
அங்கு 80 நாளா கலவரம்

துணை ராணுவத்தோட அதிகாரம் –
துப்பாக்கி காவிகளின் கைமாறும்.

இந்த கூட்டு கும்பலின் தூண்டுதலில்
இன – மதவெறி மோதல்கள் தினம்தோறும்

தேவாலயங்களில் தீமூட்டம்
தெருவெங்கிளுமே பிண வாடம்

குக்கி பெண்களின் தன்மானம் – அங்கு
தாயும் மகளுமே நிர்வாணம்

அந்த கூட்டு பாலியல் அவமானம்
இந்துராஷ்டிர பாதையின் சன்மானம்

நரவேட்டை நாளும் அங்கு தீயாகும் –
அதில் பாசிசப் படைகள் குளிர் காயும் – இது
காவி வானரங்களின் அதிகாரம் நாளை
நாடு முழுவதும் அரங்கேறும்.

Ban Ban Ban BJP! {2}
Ban Ban  Ban RSS! {2}

இனி மோடியை பேச சொல்லி கெஞ்சாதே
மணிப்பூருக்கு வரச் சொல்லி தொங்காதே

கலவர தலைவனே ஜீ தானே –
அங்கு அரசும் அதுக்கு துணை தானே

Parliament-ல பேசச் சொன்னா
முடிச்சு போட்டு ஜீ திரிச்சாரே

முதலைக்கண்ணீர் வடிச்சாரே – இது
முழுதும் காவிகளின் சதிதானே

இது நிரந்தரமில்லை நிலை மாறும்}2

தமிழ்நாட்டு மாணவர்கள் போராட்டம்
தலைநகரம் வரையிலும் பரவட்டும் – அங்கு
கோட்டை வாசல்கள் அதிரட்டும்
அவன் குதிகால் நரம்புகள் அறுபடும்

இப் பாசிசப் படைகளின் எதிர்காலம்
இந்துராஷ்டிர கனவுகளின் அழிவாகும்
இந்தப் போராட்ட தீ எங்கும் பரவட்டும்
இதைப் போராட்ட தீ எங்கும் முழங்கட்டும்

இனி இதுவே நமது கனவாகும்
இனி இதுவே நமது களமாகும்
இனி இதுவே நமது உரமாகும்
இனி இதுவே நமது உணர்வாகும்

Ban Ban Ban BJP {2}
Ban Ban Ban RSS {2}

English Lyrics:

Everybody lets join together.. gether.. gether..
Everybody lets raise your hands.. hands.. hands..
Everybody lets raise voice.. voice.. voice..

Ban Ban Ban BJP {2}
Ban Ban Ban RSS {2}

Riots in Northeastern state of Manipur
For over 80 days

Power in the hands of paramilitary forces
Rifles will get transferred to the hands of saffron fascists

Because of the incitement of the saffron mob
Ethno-communal violence occurring everyday

Churches are being burnt
Streets are full of dead bodies

Kuki women – mother and daughter – were paraded naked

‘Humiliation’ by gang rape
Will become normal in Hindurashtra

The hunt for human flesh is going on
And their appetite is not lost
These atrocities of the saffron thugs
will propagate throughout the country

Ban Ban Ban BJP! {2}
Ban Ban  Ban RSS! {2}

Don’t beg Modi to speak
Don’t plead him to come to Manipur

“Ji” is the leader of the riot
And it is State sponsored

When asked to speak in Parliament
“Ji” tried to divert

He shed crocodile tears
It is the conspiracy of the saffrons

This situation is not permanent and will change}2

Protests of Tamilnadu students
will spread to the capital
It will shake the country
It will paralyze him

Hindurashtra dream will be shattered
This is the future
The propagating protests
will destroy them

Now, this is our dream
This is our field
This is our strength
This is our emotion

Ban Ban Ban BJP {2}
Ban Ban Ban RSS {2}

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

ரஷ்யா: ஒரு நாளைக்குள் முடிந்த பிரிகோஜினின் ‘ஆட்சிக்கவிழ்ப்பு சதி’!

ஜூன் 24, மேற்கத்திய ஊடகங்கள் பெரும் ஆரவாரத்தில் இருந்தன. “வாக்னர் என்ற தனியார் ராணுவம், 25,000 படைவீரர்களைக் கொண்டது, அது ரஷ்யாவிற்கு எதிரான போரை அறிவித்துள்ளது!”, “ரஷ்யாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கப் போகிறது”, “மாஸ்கோவை நோக்கி கிளர்ச்சிப் படைகள் முன்னேறுகின்றன”, “வாக்னர் படையினர் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்”, “உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வந்துவிடுமா”, “ரஷ்யா மீளுமா” என்றெல்லாம் ஊகங்கள், கருத்துகள், செய்திகள் பலவாறாகப் பரவின.

ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய ஊடகங்களின் ஊதிப்பெருக்கப்பட்ட இதுபோன்ற பிரச்சாரங்களை இந்தியாவில் இருக்கும் அமெரிக்க அடிமை ஊடகங்களும் தங்கள் தரப்பிற்கு பரப்புவது முதல்முறை அல்ல. எனினும், எதிர்ப்பாராதவிதமாக, திடீரென, பரபரப்பாக, வெள்ளம் போல இவ்வாறான செய்திகள், அறிவிப்புகள் வந்தபோது, இவை ஊதிப்பெருக்கப்பட்ட வதந்திகள் என்று பலரால் புரிந்துகொள்ள இயலவில்லை.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் மக்களிடம் நேரடியாக உரையாற்றினார். வாக்னர் குழுவினரின் பெயரைக் குறிப்பிடாமல், “நாட்டிற்கு துரோகம் செய்பவர்களைத் துடைத்தொழிப்போம்” என்று அறிவித்தார். ஆனால், அடுத்து சில மணிநேரங்களில் வாக்னர் குழுவினர் பெலாரசிடம் சரணடைய இருப்பதாகவும், அதற்காக அந்நாட்டிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், வாக்னர் குழுவினர் பின்வாங்கப் போவதாகவும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுமென்றும் செய்திகள் வெளிவந்தன.

முக்கியமாக, ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனின் கருத்துகள் அமெரிக்காவின் போர் வெறியை அப்பட்டமாகக் காட்டியது. அவர், ரஷ்யாவில் ‘ஆட்சிக் கவிழ்ப்பு’ முயற்சியின் நிலைமை “இன்னும் வளர்ந்து வருகிறது… நான் ஊகிக்க விரும்பவில்லை, அவ்வளவு விரைவாக இறுதி அத்தியாயத்தைப் பார்ப்போம் என்று நான் நினைக்கவில்லை” என்று மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார். ஆனால், சில மணிநேரங்களில் அமெரிக்காவின் பிரச்சாரங்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை என்று தெரியவந்தன. இதனை அமெரிக்க ஊடகங்களே ஒப்புக்கொண்டன.

சாகசமும் பரப்பரப்பும் ஓய்ந்தாலும் பிரச்சினையை பலரும் புரிந்து கொள்ளவில்லை என்பதே எதார்த்தமாக உள்ளது.


படிக்க: இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !


ரஷ்ய மேல்நிலை வல்லரசு, இந்தப் போரில் தனக்கு ஆதரவாகப் போரிடுவதற்காக, தனியார் ராணுவம் என்று கௌரவமாக ஏகாதிபத்தியவாதிகளால் அழைக்கப்படும் கூலிப்படைகளைப் பயன்படுத்தி வருகிறது. இதுபோன்று போரில் கூலிப்படைகளைப் பயன்படுத்துவது ரஷ்யா மட்டும் மேற்கொள்ளும் நடவடிக்கை அல்ல. உலகத்தில் உள்ள எல்லா ஏகாதிபத்திய நாடுகளும் பல்வேறு வகைகளில் இந்தக் கூலிப்படைகளை உருவாக்கி வளர்த்து வருகின்றன. அமெரிக்க மேல்நிலை வல்லரசு பல நாடுகளில் தனக்கு ஆதரவான கூலிப்படைகளை வளர்த்ததும், அவை அமெரிக்காவிற்கு எதிராகவே திரும்பிய வரலாற்று உதாரணங்களும் பல உள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ., தாலிபான், அல்-கொய்தா போன்ற பல பயங்கரவாத அமைப்புகளும் இதற்கு சான்றுகள்.

தற்போது உக்ரைன் சார்பாக 60 நாடுகளில் இருக்கும் கூலிப்படைகள், பாசிச கூலிப்பட்டைகள் போரில் ஈடுபடுத்தப்படுகின்றன. ஆகையால், ரஷ்யா பயன்படுத்தியிருப்பதும் அதுபோன்ற ஒரு கூலிப்படைதான்.

அந்தவகையில், ரஷ்யா ராணுவ அதிகாரிகளுக்கும் பிரிகோஜினுக்கும் இடையிலான முரண்பாட்டின் காரணமாக, தனது எதிர்ப்பை ஒரு ராணுவக் கலகமாக வெளிப்படுத்தினான் பிரிகோஜின். இதை ஆட்சிக் கவிழ்ப்பு அளவிற்கு அகமகிழ்ந்து வரவேற்றன மேற்கத்திய-அமெரிக்க ஊடகங்கள்.

அந்த அடிப்படையில், வாக்னர் கூலிப்படையின் தலைவன் பிரிகோஜின் ரஷ்யாவிற்கு எதிராகப் போர் தொடுக்கப்போவதாகவும் மாஸ்கோ நோக்கி தனது படைகள் நகரும் என்றும் சனிக்கிழமை அறிவித்தான். ஆனால், இந்நிகழ்வில் அமெரிக்காவும் அதன் ஆதரவு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் எதிர்ப்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை. மாறாக, ஒட்டுமொத்த ரஷ்யாவின் ஊடகங்கள், உயரடுக்கு அதிகார வர்க்கத்தினர், ரஷ்ய நிதியாதிக்கக் கும்பல்கள், ரஷ்யக் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள், ரஷ்ய ராணுவம் என அனைத்தும் புடினுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்பதை இந்த சம்பவம் காட்டிவிட்டது.

ரஷ்யாவில் அரசியல் ஸ்திரத்தன்மையை இது வெளிப்படுத்துவதாகவும் புடின் மீதான நம்பிக்கை அதிகரிப்பதற்கு ஒரு வாய்ப்பாகவும் இந்த சம்பவம் அமைந்துவிட்டது. தனது நாட்டிற்கு எதிராக ஒரு கூலிப்படை தாக்குதல் நடத்தும், ‘ஆட்சிக் கவிழ்ப்பு’ செய்யும் என்பதை ரஷ்ய மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அமெரிக்க பொய்ச் செய்திகளை நம்பியவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.


படிக்க: இரஷ்ய-உக்ரைன் போர்: இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2


இதுமட்டுமல்ல, ரஷ்யா போன்ற வலிமைமிக்க ஏகாதிபத்திய நாடுகள், முக்கியமான போரில் கூலிப்படைகளைப் பயன்படுத்துகின்றன எனில், அந்தக் கூலிப்படைக்குள்ளேயே அந்நாட்டின் உளவாளிகள் இருக்கமாட்டார்கள் என்று அமெரிக்கா கருதியிருப்பதுதான் வெட்கக்கேடான நிலையாகும். அமெரிக்க சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்திற்கு நிகராகவே ரஷ்ய உளவு நிறுவனம் இருப்பதையும் இந்த சம்பவம் உணர்த்திவிட்டது. மாறாக, வாக்னர் கூலிப்படையினரை மிகைமதிப்பீடு செய்து, ரஷ்யாவிற்கு நெருக்கடி ஏற்படும் என்ற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நப்பாசையும் பொய்த்துப் போனது.

அதுமட்டுமல்ல, நாட்டிற்கு எதிராக போர் அறிவித்திருப்பதை ரஷ்ய அரசு எதிர்கொள்ளும் என்று அறிவித்த நிலையில், ரஷ்யாவில் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் எவையும் பாதிக்கப்படாமல் இருந்தன. வாக்னர் குழுவை பின்வாங்கவைத்து அவர்களது முகாம்களுக்குத் திரும்பச் செய்யப்பட்டது. கலகத்தில் பங்கேற்காதவர்களுக்கு ராணுவத்தில் இடமளிக்கப்படும் என்ற அறிவிப்பு வாக்னர் குழுவைப் பிளவுபடுத்திவிட்டது.

மொத்தத்தில், பிரிகோஜின் சதி ஒரு நாளைக்கூட தாங்கவில்லை. அமெரிக்கா எதிர்ப்பார்த்தது போல உக்ரைனை ஏவி ரஷ்யாவிற்கு கொடுத்த நெருக்கடிகள் எல்லாம் அது எதிர்ப்பார்த்த விளைவுகளை உருவாக்கவில்லை. ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் முரண்பாடுகள் மீது அதீத நம்பிக்கை வைக்கும் அளவிற்கு அமெரிக்காவின் நிலைமை பின்னடைந்துள்ளது. உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள அமெரிக்கா மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன. இனியும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் வேகமாக சரிவதற்கான வாய்ப்புகளே உள்ளன.

உலகத்தைப் பங்குப்போட்டுக் கொள்வதற்காக ஏகாதிபத்தியங்கள் நடத்தும் போரில் நாம் எந்தப் பக்கத்தையும் ஆதரிக்க முடியாது. அமெரிக்காவின் மேலாதிக்கத்தில் இருந்து தப்பிக்க, சீன-ரஷ்ய மேலாதிக்கத்தை ஏற்க முடியாது. ஏகாதிபத்தியங்களில் ஆதிக்கப் போர்களுக்கு எதிரான மக்களின் போராட்டங்களைத் திசைதிருப்பவதற்கு ஏகாதிபத்தியங்களின் ஊதுகுழல் ஊடகங்கள் மேற்கொள்ளும் பொய் செய்திகளையும் பரபரப்புகளையும் உடனுக்குடன் முறியடிக்க வேண்டியது நமது கடமையாகும்.


ராஜா
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

“BAN BJP – BAN RSS” | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவின் புதிய பாடல் | Teaser – டீசர்

“BAN BJP – BAN RSS” | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவின் புதிய பாடல் | Teaser – டீசர்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மாணவர் போராட்டத்தை கொச்சைபடுத்தும் தினமலர்! | தோழர் ரவி

மாணவர் போராட்டத்தை கொச்சைபடுத்தும் தினமலர்! | தோழர் ரவி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆதிக்கசாதி ஹீரோவாக மாறிய ரத்னவேல் மாமன்னன்| தோழர் மருது

ஆதிக்கசாதி ஹீரோவாக மாறிய ரத்னவேல் மாமன்னன்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஒடிசா ரயில் விபத்து: மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!

பெரும்பான்மையான உடல்கள் மிகக் கடுமையாக சிதைந்து, நசுங்கி அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தன. பலியானவர்களின் குடும்பத்தினர்கள், சிதறிய உடல்களிலிருந்து தங்கள் குடும்பத்தினரின் உடல் அல்லது உடல் உறுப்புகள் எது என்பதை மரபணு பரிசோதனை மூலம்தான் அடையாளம் காண முடியும் என்ற அவலநிலை. ஒரு உடலுக்கு பலர் உரிமை கோரும் வலிமிகுந்த துயரச் சம்பவம். ஆம், 40 ஆண்டுகளில் நடைபெற்றிராத மிகக் கோரமான ரயில் விபத்து, ஜூன் 2ஆம் தேதி ஒடிசாவின் பாலாசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து.

மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பஹா நகர் பஜார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் அதன் பெட்டிகள் சரக்கு ரயில் மீதும், அருகிலிருந்த தண்டவாளங்கள் மீதும் சிதறி விழுந்தன. சிறிது நேரத்திலேயே அவ்வழியாக வந்த ஹவுரா விரைவு ரயிலும் சிதறிய கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஒன்றன்பின் ஒன்றாக ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோரவிபத்து, இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும். நாட்டு மக்களால் மறக்கப்பட முடியாத துயரச் சம்பவமாகும். இந்த விபத்தில் 290-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 900-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பான்மையினர், முன்பதிவுசெய்யாத பெட்டியில் நெருக்கடியாக முண்டிமோதிக் கொண்டு சென்ற அன்றாடங்காய்ச்சி உழைக்கும் மக்கள்.

தார்மீக ரீதியாக இந்த விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டிய ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “விபத்தின் பின்னணியில் சதி வேலை இருக்கக் கூடும்; ரயில்வேயில் சம்மந்தப்பட்டவர்கள் அல்லது வெளிநபர்களுக்கு தொடர்பிருக்கலாம். எதையும் நாங்கள் நிராகரிக்கவில்லை” என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார். பாசிஸ்டுகளின் இந்த பிணந்திண்ணி அரசியல் நமக்கு அறுவெறுப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்துகிறது. விபத்து நடந்த இடத்திற்கு புகைப்படமெடுப்பதற்காகச் சென்ற சுயவிளம்பர வெறிப்பிடித்த மோடி, “விபத்திற்கு காரணமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிப்போம்” என்று வசனம் பேசுகிறார்.


படிக்க: ஒடிசா ரயில் விபத்து: அரசே முதல் குற்றவாளி!


குற்றவாளியே, குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவேன் என்று பேசுவது கேலிக்கூத்தாகும். 90களில் அறிமுகப்படுத்தப்பட்ட தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் பல்வேறு அரசுத் துறைகளையும் சீரழித்து, ஒழித்துக்கட்டிவருவதை நாம் அறிவோம். இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளை இதுகாறும் இல்லாத அளவிற்கு மிகத்தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவருவது மோடி ஆட்சிக் காலத்தில்தான். ரயில்வே துறையை தனியார்-கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதற்காக மோடி அரசு மேற்கொண்டுவரும் சதிச் செயல்கள்தான் ஒடிசா ரயில் கோரவிபத்துக்கு காரணமே ஒழிய, பயங்கரவாதிகள் நிகழ்த்திய சதிச் செயல்கள் அல்ல.

திட்டமிட்டு சீரழிக்கப்படும் ரயில்வேதுறை!

மோடி ஆட்சியில் ரயில்வேதுறை முறையாக பராமரிக்கப்படாமல் திட்டமிட்டே சீரழிக்கப்பட்டு வருவதற்கு அண்மையில் வெளியாகியுள்ள அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளே சான்றுகளாக உள்ளன.

ரயில் சிக்னல் மற்றும் தடம் மாற்றுவதற்கான மின்னணு அமைப்புமுறையில் (எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங் சிஸ்டம்) ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் ஒடிசா ரயில் விபத்து நடந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சொல்லிவைத்தாற்போல, ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் தரப்பிலிருந்து ஒன்றிய அமைச்சகத்துக்கு எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி கர்நாடகாவில் ஹோசர்துங்கா ரோடு ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்கள் மோதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நல்வாய்ப்பாக லோகோ பைலட்டின் (ஓட்டுநர்) சமயோசித செயற்பாட்டால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டிதான் ஒன்றிய அமைச்சகத்துக்கு தென்மேற்கு ரயில்வே தலைமை செயற்பாட்டு மேலாளர் ஹரி சங்கர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது என்று கவனத்திற்கு வந்தும் மோடி அரசு அதனை கண்டுகொள்ளவில்லை.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் தென்கிழக்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட விபத்து தடுப்புக்கான நிதி ரூபாய் 943 கோடியில் ஒரு பைசா கூட செலவிடப்படவில்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தியும் வெளியாகி உள்ளது. தென்கிழக்கு ரயில்வேயின் செலவினக் கணக்கு புத்தகங்களில் உள்ள தரவுகளின் மூலம்தான் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒடிசாவில் விபத்து நடந்த ரயில் நிலையமும் தென்கிழக்கு ரயில்வேயின் கீழ்தான் இயங்கி வருகிறது.

2017-ஆம் ஆண்டு அன்றைய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ்பாபு, வெள்ளையறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் ஆண்டுதோறும் 4,500 கி.மீ தூரம் தண்டவாளம் பழுதடைவதாகவும், அதில் ஏறக்குறைய 2,500 கி.மீ தண்டவாளம் மட்டுமே புதுப்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரயில்வே துறையால் அமைக்கப்பட்ட “டாக்ஸ் போர்ஸ்” என்ற அதிகாரிகள் குழு, ஆண்டுதோறும் 200 ரயில் நிலையங்களில் சிக்னல் கட்டமைப்பு பழுதடைவதாகவும், அவற்றுள் 100 மட்டுமே புதுப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. இவையனைத்துக்கும் நிதிப்பற்றாக்குறையே காரணமாகச் சொல்லப்பட்டது.


படிக்க: ஒடிசா ரயில் விபத்து நிகழ்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தது –  அம்பலப்படுத்துகிறது சி.ஏ.ஜி அறிக்கை


கடந்த ஆண்டு ஒன்றிய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை (சி.ஏ.ஜி) வெளியிட்டுள்ள அறிக்கை, ரயில்வே துறையில் பாதுகாப்பு தொடர்பாக செலவழிக்கப்பட வேண்டியவற்றுக்கு உரியவகையில் செலவழிக்கப்படவில்லை என்றும், பெரும் எண்ணிக்கையில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதையும் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் தண்டவாளப் பராமரிப்பு ஊழியர்கள் 4 லட்சத்திலிருந்து 2 இலட்சமாகக் குறைந்துள்ளார்கள். ரயில்வே துறையில் 3.12 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது; இவற்றுள் பெரும்பாலானவை பாதுகாப்பு தொடர்பான பணிகளாகும்.

மொத்தம் 68,043 கி.மீ நீளம் கொண்ட உலகின் மிகப்பெரியதான நம் நாட்டின் ரயில்வே துறையை, தனிக்கவனம் செலுத்தி பராமரிப்பதற்காக கடைபிடிக்கப்பட்டுவந்த ரயில்வே தனி பட்ஜெட்டை 2017-ஆம் ஆண்டே சதித்தனமாக முடிவுக்கு கொண்டுவந்தது மோடி அரசு.

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் பொருட்டு, ரயில் வழித்தடங்களை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீட்டில் 2022-23 ஆண்டு 14 சதவிகிதத்தை குறைத்துவிட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது குற்றம்சாட்டுகிறார் முன்னாள் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையாளர் ஸ்ரீதர் வி. மேலும் இதுபோல மோடி ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமாக குறைத்துவருவதையும் இதனோடு இணைத்துப் பார்க்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார். பாலாசோர் ரயில் விபத்தில் பலியானவர்களின் ரத்தம் நிதியமைச்சரின் கைகளில் வழிவதாகவும் அவர் மிகக் கடுமையாக சாடுகிறார்.

இவ்வாறு நிதிஒதுக்கீட்டை குறைத்து ரயில்வே துறையை சீரழிப்பதற்காகத்தான் 2017-ஆம் ஆண்டு ரயில்வே துறைக்கான தனிபட்ஜெட்டை முடிவுக்கு கொண்டுவந்தது மோடி அரசு.

ரயில் மோதலை உணர்திறன் (சென்சார்) அடிப்படையில் கண்டறிந்து தடுக்கக் கூடிய கவச் என்ற கருவி பொருத்தப்படாததும் ஒடிசா ரயில்விபத்துக்கு ஒரு முக்கியக் காரணமாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கருவி மொத்த ரயில்வழித்தடங்களில் வெறும் 2 சதவிகித வழித்தடங்களிலேயே பொருத்தப்பட்டுள்ளது. கவச் என்ற இக்கருவி, “நேருக்கு நேராக மோதக்கூடிய ரயிலை மட்டும்தான் தடுக்கும், பாலாசோர் ரயில்விபத்து தடம்மாறும்போது ஏற்பட்டது” என்று நியாயவாதம் பேசுகிறது மோடி அரசு. இத்தகைய சொத்தை வாதங்களின் மூலம் தனியார்மயமாக்க நடவடிக்கைகள்தான் ஒடிசா ரயில்விபத்துக்கு காரணம் என்பதை மூடிமறைக்கிறது.

கார்ப்பரேட்மயமாகும் ரயில்வே துறை!

ரயில் நிலையங்கள், ரயில்வே வழித்தடங்கள், ரயில் என்ஜின் – ரயில் பெட்டி தயாரிப்பு உள்ளிட்டு ரயில்வே துறையின் பல்வேறு அங்கங்களும் இன்று படிப்படியாக கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்படுகின்றன.

அதிக வருவாய் ஈட்டித் தரும் வழித்தடங்களில் ரயில்களை இயக்க தனியார்களுக்கு “பாரத் கவுரவ்” திட்டத்தின் கீழ் அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இத்திட்டத்தின் கீழ் எஸ்.ஆர்.எம் குழுமத்திற்கு நான்கு வழித்தடங்களில் ரயிலை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், 150 சுற்றுலா ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணையா.

மோடி அரசு மிகவும் படோடோபமாக அறிவித்து செயல்படுத்திவரும் திட்டம் வந்தே பாரத். அடுத்த சில ஆண்டுகளில் மொத்தம் 400 வந்தே பாரத் ரயில்களை இயக்கத் திட்டமிட்டிருக்கிறது மோடி அரசு. இது மிகப்பெரிய கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டமாகும்.

வந்தே பாரத் ரயிலுக்கான பெட்டிகள், என்ஜின்கள், சீட்டுகள் முதலியவற்றை தயாரிப்பதற்கு பல பன்னாட்டு-உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளது மோடி அரசு; இந்த தனியார்-கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசு நிறுவனமான ஐ.சி.எஃப்-வின் கட்டமைப்புகளையும் நமது ரயில்வே தொழிலாளர்களையும் பயன்படுத்திக் கொண்டுதான் அதை உற்பத்தி செய்கிறார்கள். “நீ அரசி கொண்டு வா, நான் உமி கொண்டுவருகிறேன், இருவரும் ஊதிஊதிச் சாப்பிடலாம்” என்ற கதையாக “தனியார்-அரசு கூட்டுத்திட்டம்” என்ற பெயரில் மிக அயோக்கியத்தனமான கார்ப்பரேட் கொள்ளை திட்டத்தை அமல்படுத்திவருகிறது மோடி அரசு.


படிக்க: ஒடிசா இரயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மோடி அரசின் கோமாளித்தனம்


தற்போது மோடியின் நண்பரான அதானி குழுமமும் ரயில்வே துறையில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்துவரும் ஐ.ஆர்.சி.டி.சி.க்கு போட்டியாக களமிறங்கியுள்ளது. ரயில் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட “டிரெயின்மேன்” (Trainman) என்ற இணையதளத்திலும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும். இந்த இணையதளத்தை “ஸ்டார்க் எண்டர்பிரைசஸ்” எனும் நிறுவனம் நடத்தி வந்தது. தற்போது இந்நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் அதானி குழுமம் வாங்கியுள்ளது.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு விடையளித்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், “ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். மோடி அரசு வந்த பிறகுதான் ரயில்வே துறையை மேம்படுத்திவருவதாக பல்வேறு கவர்ச்சிகரமான தரவுகளை அடுக்கியிருந்தார். 2014ஆம் ஆண்டுவரை ரயில்வே துறையின் முதலீடு என்பது 45 ஆயிரம் கோடிகளாகத்தான் இருந்தது என்றும், தற்போது அது 2.45 இலட்சமாக உயர்ந்துள்ளதாகவும் பெருமை பொங்கியிருந்தார்.

அது உண்மைதான். ஆனால், இந்த நிதி ரயில்வே துறையின் கட்டமைப்புகளை பராமரிக்கவும் மேம்படுத்தவும் செலவு செய்வதற்கான நிதி அல்ல. வந்தே பாரத், கவுரவ் பாரத் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு மக்கள் பணத்தை அள்ளிக் கொடுப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளாகும். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பாலும், நாட்டு மக்களின் வரிப்பணத்தாலும் கட்டி வளர்க்கப்பட்ட மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்பை விலைகொடுத்து வாங்குவதற்கு எந்த கார்ப்பரேட்டுகளிடமும் நிதி இல்லை. மேலும், அடிக்கட்டுமானச் செலவினங்களை அரசிடம் தள்ளிவிட்டு, லாபத்தை மட்டும் கொள்ளையிடுவதற்கு முயற்சிக்கிறார்கள். அரசே பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு மாமா வேலைபார்க்கும் இந்த கொள்கைக்குப் பெயர்தான் மறுகாலனியாக்கம். இக்கொள்கை ஏற்படுத்தியிருக்கும், ஏற்படுத்தப்போகும் பேரழிவின் ஒரு சாட்சியம்தான் ஒடிசா ரயில்விபத்து!


அமீர்
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்

பற்றி எரியும் மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | சென்னையில் தெருமுனைப் பிரச்சாரம்

“பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி!” என்ற தலைப்பில்
மக்கள் அதிகாரம் மற்றும் பு.மா.இ.மு தோழர்கள்
சென்னை சைதாப்பேட்டையில் தெருமுனைப் பிரச்சாரம்.

புள்ளிவிவரங்களைத் திரிக்க மறுத்தால் இடைநீக்கம்!

0

மும்பையில் அமைந்துள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தின் (International Institute for Population Sciences – IIPS) இயக்குநரான பேராசிரியர் கே.எஸ்.ஜேம்ஸ் அவர்களை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஜேம்ஸ், 2018-ஆம் ஆண்டில் ஐ.ஐ.பி.எஸ் (IIPS) நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஐ.பி.எஸ் இந்திய அரசாங்கத்தின் சார்பாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (National Family Health Survey – NFHS) மற்றும் இதுபோன்ற பிற முக்கியமான கணக்கெடுப்புகளை மேற்கொள்ளும் நிறுவனமாகும். ஐ.ஐ.பி.எஸ் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

முன்னதாக, ஐ.ஐ.பி.எஸ் நடத்திய சில கணக்கெடுப்புகளின் தரவுத் தொகுப்புகள் மத்திய அரசாங்கத்திற்கு திருப்தியளிக்காததால் ஜேம்ஸை ராஜினாமா செய்யுமாறு அரசாங்கத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அரசாங்கம் கூறும் காரணத்தை ஏற்றுப் பதவி விலக அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

‘அரசாங்கத்திற்குத் திருப்தியளிக்கவில்லை’ என்பதன் பொருள் என்ன? பாசிச மோடி அரசாங்கத்திற்கு ஏற்றவாறு புள்ளிவிவரங்களைத் திரித்து வெளியிட ஜேம்ஸ் ஒத்துழைக்கவில்லை என்பதுதான் அதன் பொருள்.

இதனையடுத்து, ஜூலை 28-ஆம் தேதியன்று ஜேம்ஸுக்கு இடைநீக்கக் கடிதம் அரசாங்கத்தால் அனுப்பப்பட்டது.


படிக்க: டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!


பேராசிரியர் கே.எஸ்.ஜேம்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டு ஒரு நாள் கழித்து, அதாவது ஜூலை 29 அன்று, மத்திய சுகாதார அமைச்சகம் இடைநீக்கம் குறித்து ஒரு சிறு குறிப்பை (Brief Note on Suspension of Prof James, Director and Senior Professor, IIPS) வெளியிட்டது. அதில் தேதி கையொப்பம் அதிகாரப்பூர்வ லெட்டர்ஹெட் (letterhead) என எதுவுமே இல்லை. அதில் ”(ஜேம்ஸுக்கு எதிராக) உண்மை கண்டறியும் குழு சில முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளது. எனவே, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, ஜேம்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மே 8 அன்று உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டதாக அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 35 புகார்களில் 11 புகார்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசின் உண்மை கண்டறியும் குழு கூறுவதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், புகார்கள் எப்போது பெறப்பட்டன என்பது குறித்தோ புகார்களில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் எப்போது நிகழ்ந்தன என்பது குறித்தோ அது தெளிவுபடுத்தவில்லை.

மோடிக்கு ’வளர்ச்சி நாயகன்’ என்ற பிம்பத்தைக் கட்டமைத்து, அதனைத் தனது தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வியூகம் வகுத்திருந்தது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல். ஆனால், ஐ.ஐ.பி.எஸ் வெளியிட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5 (என்.எஃப்.எச்.எஸ் -5) அதற்கு ஏதுவாக இல்லை.

அதற்கு சில எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். ”திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் இல்லாத நாடாக இந்தியா இருக்கிறது” என்பது பிரதமர் மோடி உட்பட பா.ஜ.க-வினர் பலரால் அடிக்கடி முன்வைக்கப்படும் கூற்று. ஆனால், 19 சதவிகித வீடுகளில் எவ்வித கழிப்பறை வசதியும் இல்லை; அதாவது அவர்கள் திறந்தவெளியில் தான் மலம் கழிக்கிறார்கள் என்று என்.எஃப்.எச்.எஸ் -5 கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியது. லட்சத்தீவுகளைத் தவிர வேறு எந்த ஒரு மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ கழிப்பறையைப் பயன்படுத்தும் மக்கள் 100 சதவிகிதம் இல்லை என்பதை அது வெளிப்படுத்தியது.


படிக்க: மணிப்பூர்: உண்மை கண்டறியும் குழுவினர் மீது பாசிச ஒடுக்குமுறை!


அதேபோல், 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்கவில்லை என்பதை என்.எஃப்.எச்.எஸ் -5  சுட்டிக்காட்டியது. இது ”உஜ்வாலா யோஜனா பெரும் வெற்றி” என்ற மோடி – அமித்ஷா கும்பலின் கூற்றுக்களை கேள்விக்குள்ளாக்கியது. கிராமப்புறங்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள், அதாவது 57 சதவிகிதம் பேருக்கு, எல்.பி.ஜி (LPG) / இயற்கை எரிவாயு கிடைப்பதில்லை என்பதை இது வெளிப்படுத்தியது.

மேலும், இந்தியாவில் இரத்த சோகை அதிகரித்து வருவதாக என்.எஃப்.எச்.எஸ் -5 தெரிவித்தது. சத்தான உணவு உண்ணும் நிலையில் மக்கள் இல்லை என்பது இதன் பொருள். தனது பெயருக்குக் கலக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, மோடி அரசாங்கம் என்.எஃப்.எச்.எஸ் -6 இல் இரத்த சோகையை அளவிடுவதையே கைவிடுவது குறித்துப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ஷமிகா ரவி (Shamika Ravi), இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ”என்.எஃப்.எச்.எஸ் மற்றும் பிற கணக்கெடுப்புகளுக்கான தரவுகளைச் சேகரிப்பதில் குறைபாடுகள் உள்ளது” என்று ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அமிதாப் குண்டு (Amitabh Kundu) மற்றும் பி.சி.மோகனன் (P.C. Mohanan) ஆகியோர் இந்தியன் எக்ஸ்பிரஸின் மற்றொரு கட்டுரையில் ஷமிகாவின் கட்டுரையை விமர்சித்திருந்தனர்.

தரவுகள் என்றாலே மோடி கும்பலுக்கு எப்போதும் ஒவ்வாமை தான்.

மோடி அரசாங்கம் தனது முதல் பதவிக்காலத்தில் நடத்திய நுகர்வோர் செலவின கணக்கெடுப்பை (Consumer Expenditure Survey – CES) குப்பையில் போட்டுவிட்டது. சி.இ.எஸ் (CES) என்பது அரசாங்கத்தின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தால் (என்.எஸ்.எஸ்.ஓ) ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழக்கமாக நடத்தப்படும் கணக்கெடுப்பு ஆகும். அதில் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் நுகர்வு செலவு முறைகள் (consumption spending patterns) குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். ஆனால், மோடி அரசாங்கமோ தரவுகள் தரமானவையாக இல்லை என்று கூறி அதை வெளியிட மறுத்துவிட்டது.

அதேபோல், 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் வேலையின்மை குறித்த தரவுகளை வெளியிட மறுத்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் அதை வெளியிட்டது. இதனால் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் (National Statistical Commission) செயல் தலைவர் (acting chairman) பி.சி.மோகனன் உள்ளிட்ட தேசிய புள்ளியியல் ஆணைய உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர்.


படிக்க: பி. சி. மோகனன் : மோடி அரசைக் கலங்கடித்த புள்ளியியல் நிபுணர் இவர்தான் !


”(தேசிய புள்ளியியல்) ஆணையத்தை அரசாங்கம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. ஆணையத்தின் சில முடிவுகளும் பரிசீலிக்கப்படவில்லை. நாங்கள் ஓரங்கட்டப்படுகிறோம் என்று நினைக்கிறோம். எனவே, எங்கள் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு திங்கள்கிழமை (ஜனவரி 28, 2019) அனுப்பியுள்ளோம்” என்று பி.சி.மோகனன் அப்போது கூறியிருந்தார்.

2021-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பையும் இந்த அரசாங்கம் இன்னும் மேற்கொள்ளவில்லை. வழக்கமாக பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். கடந்த 150 ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் வழக்கமாக மக்களிடையே நிலவும் அவலங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் குறைமதிப்பீடு செய்துதான் காட்டும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், பாசிச மோடியால் அதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது ’வளர்ச்சி நாயகன்’ பிம்பம் உடைபடுவதற்குப் புள்ளிவிவரங்கள் காரணமாக இருப்பதை அவர் விரும்பவில்லை.

இதன் வெளிப்பாடாகத்தான் பேராசிரியர் கே.எஸ்.ஜேம்ஸ் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை நாம் பார்க்க வேண்டும்.


பொம்மி