Wednesday, May 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 95

கழன்றது முகமூடி | பகுதி 1

கழன்றது முகமூடி:
பாசிசக் கும்பலின் தோல்வி முகமும்
பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமிக்க போராட்டமும்!

(பகுதி 1)

பா.ஜ.க.வை தோற்கடிப்பதே எங்கள் ஒரே இலக்கு” என்று ஒருமித்த குரலில், கூட்டாக அறிவித்துள்ளார்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள். காங்கிரஸோடு இணைந்து ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பங்கேற்ற இக்கூட்டம் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பில் மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் “இதுவெறும் போட்டோ ஷூட் கூட்டம்தான், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை எல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை” என்று கிண்டலடித்துள்ளார் அமித்ஷா. “மோடியை காங்கிரஸ் தனித்து நின்று வீழ்த்த முடியாது என்பதற்கான நிரூபணம்தான் எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக் கூட்டம்”, “பா.ஜ.க.வின் வெற்றியைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள்” என்று பா.ஜ.க. தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது.

பாட்னாவின் கூட்டம் வெற்றிகரமாக முடிந்தது என்று எதிர்க்கட்சிகள் கூறினாலும், அதில் பங்கேற்ற 16 எதிர்க்கட்சிகளிடையேயும் ஒரு முடிவான கூட்டணி ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்று நாம் சொல்லிவிட முடியாது. பா.ஜ.க.வை தோற்கடிப்பதுதான் தங்கள் ஒரே இலக்கு என்று கூறிக் கொண்டாலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு “நிபந்தனை” உள்ளது. இந்த நிபந்தனையை ஒருவருக்கொருவர் பூர்த்திசெய்துகொள்ளும் வகையில் பாட்னா கூட்டம் அமையவில்லை. ஆகவே ஜுலை 12, 13 வாக்கில் சிம்லாவில் மல்லிகார்ஜூன் கார்க்கே தலைமையில் மற்றொரு கூட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் ஒன்றிய அரசின் சட்டத்தை, மாநிலங்களவையில் தோற்கடிப்பதற்கு ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவும் தேவை. இக்கூட்டத்துக்கு முன்பே அவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோரியிருந்தர். குறிப்பாக, ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’வைப் படைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க.வுடன் ஒத்துப்போகும் கெஜ்ரிவாலே, இதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, ராகுல் ஆகியோரையும் சந்தித்து ஆதரவு கோரப் போவதாக தெரிவித்திருந்தார்.

பாட்னா கூட்டத்தில் டெல்லி விவகாரத்தை நிகழ்ச்சிநிரலாக வைக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்த கெஜ்ரிவால், கூட்டத்திற்குள்ளும் இதை விவாதத்திற்கு கொண்டுவந்தார். அப்போது ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, கெஜ்ரிவாலின் கோரிக்கையை பகிரங்கமாக நிராகரித்துள்ளார். “காஷ்மீரின் சிறப்புச் சட்டம் 370” ரத்துசெய்யப்பட்டபோது, கெஜ்ரிவால் அதற்கு ஆதரவான நிலை எடுத்ததை அவர் சுட்டிக்காட்டினார். டெல்லி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி உத்தவ் தாக்கரே காங்கிரசிடம் பரிந்துபேசியும், காங்கிரஸ் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் இதுகுறித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை என்றால், சிம்லாவில் நடைபெறும் அடுத்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்காது என்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார் கெஜ்ரிவால்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா, கூட்டத்தில் பேசும்போது மேற்கு வங்கக் காங்கிரஸின் போக்கு பற்றி குற்றஞ்சாட்டினார். “எல்லோரும் ‘பெரிய மனது’டன் நடந்துகொள்ள வேண்டும். நமக்குள்ளேயே நாம் சண்டையிட்டுக் கொண்டால், அது பா.ஜ.க.விற்குத்தான் சாதகம்” என்று பேசினார். கேலிக்கூத்தாக, இந்த கூட்டத்தில் மம்தா ‘பெரிய மனது’ பற்றி பேசிக் கொண்டிருக்கும்போதுதான், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, திரிணமுல் அரசை “திருடர்கள்” என்று அழைத்துள்ளார்.


படிக்க: தேர்தல் பரப்புரைகளில் மட்டுமே ஈடுபடும் பாசிஸ்டு மோடி!


ஏற்கெனவே பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸை ஆதரிக்க வேண்டுமென்றால், காங்கிரஸும் மேற்கு வங்கம் உள்ளிட்டு மாநிலக் கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களை ‘பெரிய மனது’டன் விட்டுத்தர வேண்டும் என்று மம்தா கேட்டிருந்தார். மம்தா தெரிவித்த நிபந்தனை மீதும் காங்கிரஸ் இதுவரை தனது நிலைப்பாட்டை தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது. இதுபோக, கேரளாவில் காங்கிரஸ், சி.பி.எம் மோதல் போக்கு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டியிருக்கிறது.

எனினும், இந்த முரண்பாடுகள் எல்லாம் இருப்பினும்கூட எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் ஒரு தற்காலிகமான கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வதும், தேர்தலில் பா.ஜ.க.விற்கு நெருக்கடி கொடுக்க முயற்சிப்பதும் சாத்தியமே.

ஏனெனில், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை தீர்மானிக்கும் முதன்மைக் காரணியாக இருப்பது, இக்கட்சிகளின் முன்முயற்சி அல்ல பா.ஜ.க.வின் பாசிச ஒடுக்குமுறைகள்!

000

சி.பி.ஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை ஏவி எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை இன்று பா.ஜ.க. கும்பலால் தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. அமலாக்கத்துறை விசாரணை நடத்தாத கட்சி என்று எதிர்க்கட்சிகளில் எவையும் இல்லை. செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைதுசெய்திருக்கும் நிகழ்வு என்பது பாசிசக் கும்பலால் தி.மு.க.விற்கு விடப்பட்டிருக்கும் மிரட்டலே!

மகாராஷ்டிராவில் தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே பிரிவை அங்கீகரித்தது, ராகுல் காந்தி மீதான தகுதிநீக்க நடவடிக்கை போன்றவை எதிர்க்கட்சிகள் அனைவருக்குமே ஒருவித அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. “ஒருவேளை 2024 தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப் படாவிட்டால், இனி தேர்தலே நடக்காது” என்பதை பேசாதவர்கள் யாரும் இல்லை. “பா.ஜ.க மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் தமிழ்நாடு என்ற மாநிலமே இருக்காது” என்று மு.க.ஸ்டாலின் அண்மையில் கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆகவே தங்களுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவாவது எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்தாக வேண்டிய தேவை இருக்கிறது!

வெளியே வீராப்பு, உள்ளே பயபீதி!

என்னதான் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை ‘ஒன்றுக்கும் உதவாதது’ என்று பா.ஜ.க. பகடி செய்துகொண்டிருந்தாலும், தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதானது பா.ஜ.க.விற்கு கிலியை ஏற்படுத்தாமல் இல்லை. எப்படியாவது, அதைச் சிதைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

பிகாரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஆளும் மகாபந்தன் கூட்டணிக்கு அளித்த ஆதரவை தாம் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தார் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி. நிதிஷ்குமார் தன்னுடைய கட்சியை அவருடைய கட்சியோடு இணைப்பதற்கு கொடுத்த நிர்பந்தத்தால் கூட்டணியை முறித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார். தற்போது அவர் பா.ஜ.க. கூட்டணியில் சேரப்போவதாக அறிவித்துள்ளார்.

“கூட்டணியில் இருந்துகொண்டே பா.ஜ.கவின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சிகளை ஜிதன்ராம் மாஞ்சி உளவு பார்க்கிறார். வரும் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை ஜித்தன் ராம் கசியவிடுவார் என்பதாலேயே அவருடைய கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைக்கச் சொன்னேன்” என்று நிதிஷ்குமார் பேட்டியளித்துள்ளார்.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படுவதாக வதந்தி பரப்பிய சங்கிக் கூட்டம், மு.க.ஸ்டாலின் பாட்னா கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றபோது தி.மு.க. தலைவர்கள் பேசிய இந்தி எதிர்ப்புப் பேச்சுக்களை, இந்தி துணைத் தலைப்புகளுடன் காணொளியாகத் தாயரித்து வெளியிட்டிருந்தது.


படிக்க: பாசிஸ்டுகளின் துருப்புச் சீட்டாகும் இடஒதுக்கீடு: சங்கப்பரிவாரங்களும் தம்பிமார்களும்!


அதில் “இந்தி படித்தால் வேலை கிடைக்குமா”, “இங்கே பானிப்பூரி விற்பவர்கள் யார்”, “பீகாரிலிருந்து இங்கே வந்துள்ளார்கள்” போன்ற பேச்சுக்களை வெட்டியெடுத்துப் பரப்பியது. மேலும், பீகாரிலிருந்து “ஸ்டாலின் கோ பேக்” (ஸ்டாலினே திரும்பிப் போ) என்ற முழக்கத்தை டிவிட்டரில் தனது இணைய வானரப்படைகளை வைத்து டிரெண்டாக்கியது. இவற்றின் மூலம் “நிதிஷ்குமார் தலைமை வகிக்கின்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம், பீகார் மக்களுக்கு எதிரானது” என்ற கருத்தை திட்டமிட்டு உருவாக்கியது.

பாட்னா கூட்டம் வெறும் போட்டோ ஷூட் கூட்டம்தான் என்றால், அதை சீர்குலைப்பதற்கு பா.ஜ.க. ஏன் இந்த புழுக்கை வேலைகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டும்! வெளியே வீராப்பு, உள்ளே பயபீதியா?

2014-இல் இருந்து 2024 நோக்கி: பல்லிளிக்கும் பலவீனங்கள்!

2014ஆம் ஆண்டு மோடி கும்பலுக்கு இருந்த மவுசு, எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இருக்கப்போவதில்லை. 2014இல் மோடி அணிந்துவந்த ‘வளர்ச்சி’ என்ற முகமூடி இன்று கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. கர்நாடகத் தேர்தல் தோல்வி என்பது பாசிசக் கும்பலின் பலவீனங்களை நன்கு வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, “வெல்லப்பட முடியாத தலைவர் மோடி” என்று பா.ஜ.க. கும்பல் கட்டிவைத்திருந்த பிம்பத்தை உடைத்துப் போட்டிருக்கிறது.

அண்மையில் தோனி அரசியலுக்கு வரவேண்டும் என்று கார்ப்பரேட் முதலாளி ஆனந்த மகேந்திரா தெரிவித்த கருத்தானது, பா.ஜ.க.வின் கரங்களை வலுப்படுத்துவதற்கு அல்லது மோடிக்கு மாற்றாக இன்னொரு முகமூடியை தயாரிப்பதற்கு பா.ஜ.க.வை ஆதரிக்கும் கார்ப்பரேட் கும்பலின் ஒரு பிரிவினரே விரும்புகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

தமது ஒன்பது ஆண்டுகால ஆட்சி நிறைவை பா.ஜ.க.வினர் நாடு முழுவதும் கொண்டாடிவரும் நிலையில், இந்த ஒன்பது ஆண்டுகளில் பாசிசக் கும்பல் எந்தெந்த வகையில் தனது பலவீனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பட்டியலிட வேண்டியிருக்கிறது.

  1. பா.ஜ.க.வின் கதாநயகனான மோடியே கர்நாடகத் தேர்தலில் பிரச்சாரம் செய்தும், பா.ஜ.க. படுதோல்வியடைந்திருப்பது மோடி பிராண்டின் வரம்பை தெள்ளத்தெளிவாகக் காட்டிவிட்டது. மாநில கட்சித் தலைவர்களை துச்சமாகக் கருதுவிட்டு, எல்லா மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் மோடி பிராண்டை முன்னிறுத்தியே வெற்றிபெற்று விடமுடியும் என்ற பா.ஜ.க.வின் கருத்து நகைக்கத்தக்கது என்று முதலாளித்துவ பத்திரிக்கையாளர்களே காரிஉமிழ்கிறார்கள். “இரட்டை என்ஜின் ஆட்சி” என்ற முழக்கம் எடுபடக்கூடிய முழக்கமல்ல என்பதற்கான நிரூபணமே கர்நாடகத் தேர்தல் தோல்வி.
  2. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், அதிகரித்துவரும் வேலையின்மை, சிறுதொழில் நசிவு, கிராமப்புற வறுமை அதிகரிப்பு என மக்களுடைய எந்த வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் தீர்க்க வக்கற்றுப் போன நிலையில், ‘தேச வளர்ச்சி’ பற்றி வாய்ச்சவடாலடிப்பது சிரமமாகியுள்ளது. மேலும் ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் அதானியின் உலக மகா பங்குச் சந்தை மோசடி அம்பலமான பிறகு, மோடி கும்பல் முன்வைக்கும் ‘வளர்ச்சி’ யாருக்கானது என்பது பரந்துபட்ட மக்களிடையே அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
  3. எதிர்க்கட்சிகளை விமர்சிக்குமளவுக்கு பா.ஜ.க. யோக்கியமான கட்சியல்ல, அது பல விசயங்களில் இரட்டை நிலைப்பாடுகள் கொண்ட கட்சி என்பது மக்கள் முன்பு அம்பலப்பட்டுவருகிறது. “ஊழல் ஒழிப்பு”, “இலவச ஒழிப்பு” போன்ற விசயங்களில் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதும், ஆனால் தனது கட்சியே ஊழல் கட்சியாகவும், தேர்தல் நேரங்களில் இலவச அறிவிப்புகளை வாரிவழங்கும் கட்சியாகவும் உள்ளதை மக்கள் பார்த்துவருகிறார்கள்.
  4. “வளர்ச்சி” என்ற முகமூடி கிழிந்துதொங்கும் நிலையில், இந்துமதவெறி – தேசவெறியை தீவிரமாக கொண்டுசெல்வதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டிருக்கிறது. இது 2014க்கும் 2024க்கும் இடையிலான தலைகீழ் மாற்றமாகும். இந்துமதவெறியை நேரடியாகப் பேசாமல் தன்னை வளர்ச்சியின் நாயகனாக மட்டுமே காட்டிவந்த மோடி, “கர்நாடாவில் ஜெய் பஜ்ரங்பலி” என்று முழங்கியது தோல்வி முகத்தின் சாட்சியமாகும்.தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எல்லா மாநிலங்களிலும் இந்துத்துவ முகம் மட்டுமே உதவாது என்றபோதும், அதைவிட்டால் “வேறு வழியில்லை” என்ற நிலைக்கு பாசிசக் கும்பல் தள்ளப்பட்டிருக்கிறது.
  1. பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் குதிரைபேர ஆட்சிக்கவிழ்ப்புச் சதிகள் மூலம் பா.ஜ.க. தனது ஆட்சியை நிறுவியுள்ளது. ஆனால், இந்த குதிரைபேரம் பா.ஜ.க.விற்கு சாதகமான விளைவுகளை மட்டுமே கொண்டுவந்துவிடவில்லை. ஏற்கெனவே கட்சியமைப்பில் இருக்கும் பெருந்தலைகளுக்கு அதிகாரப்போட்டியில் உரிய ‘பங்கு’ வழங்கப்படாததால் கட்சிக்குள்ளேயே கோஷ்டி சண்டைகளை உக்கிரமாக்கியுள்ளது. இது தேர்தலிலும் தாக்கம் புரிகிறது.
  2. பல்வேறு மாநிலங்களிலும் தான் கூட்டணி வைக்கும் கட்சிகளையே மெல்லமெல்ல கரைத்துக்குடித்துவிடும் பா.ஜக.வின் தந்திரம், அக்கட்சிகளை அதிருப்தியடைய வைத்துள்ளது. தன்னுடைய கட்சியை காப்பற்றிக் கொள்வதற்காகவே அவர்கள் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஐ.ஜ.த. கட்சியின் நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதற்கு இது முக்கியக் காரணமாகும். சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவும் இந்த அபாயத்தை நன்கு உணர்ந்திருந்தார்.அ.தி.மு.க. போன்ற அடிமைக்கட்சிகள் இந்த அபாயத்தை உணர்ந்தாலும் ரெய்டு பயம் காரணமாக வேறுவழியில்லாமல் அடங்கிக் கிடக்கின்றன. வன்னிய இளைஞர்கள் பா.ஜ.க.விற்கு போகாமல் தடுக்க வேண்டுமென்று பா.ம.க.வின் ராமதாஸ் தனது கட்சி பொதுக்கூட்டத்திலேயே பேசினார்; இப்போதுவரை பா.ம.க. பா.ஜ.க.வுடன் ஒரு கறாரான இடைவெளியையே பாரமரிக்கிறது.

மேற்கண்ட ஆறு அம்சங்களுமே இந்துத்துவ பாசிசக் கும்பல் இந்த தேர்தல் வரம்புக்குள் எதிர்க்கொண்டிருக்கும் நெருக்கடிகளும் பலவீனங்களுமாகும்!

வலுக்கும் நாய்ச்சண்டை!

அடுத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கின்ற மாநிலங்களில் மத்தியப் பிரதேசமும் ஒன்று. இம்மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால், பா.ஜ.க. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் நடத்திய குதிரை பேரத்தில், 2020ஆம் ஆண்டு 22 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.விற்கு தாவின; அதனைத்தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சியமைத்தது. இன்று அதுவே வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்கு வினையாக வந்திருக்கிறது.

கடந்த மாதம் ஆறாம் தேதி இந்துத்துவ அமைப்புகளுள் ஒன்றான “பஜ்ரங் சேனா” அமைப்பின் தேசியத் தலைவர் ரன்வீர் படேரியா, ஒருங்கிணைப்பாளர் ரகுந்தன் சர்மா உள்ளிடோர் தங்களது பரிவாரங்களுடன் கூடிவந்து ம.பி காங்கிரஸ் தலைவர் கமல்நாத் முன்னிலையில் தங்களை காங்கிரஸில் இணைத்துக் கொண்டனர். மேலும் பஜ்ரங் சேனா அமைப்பையே காங்கிரஸுடன் இணைத்துவிட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

உடனே பதறியடித்துக் கொண்டு, “ஒரு நான்குபேர்தான் தவறான வழிகாட்டுதலாலும் தூண்டுதலாலும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்கள் என்றும், ஒட்டுமொத்த பஜ்ரங் சேனாவும் இணைந்துள்ளதாகக் கூறுவது பொய் என்றும் சில நிர்வாகிகளை வைத்து பேட்டிகொடுக்க வைத்தது ஆர்.எஸ்.எஸ்.

இச்சம்பவத்திற்கு ஒருமாதத்திற்கு முன்னர்தான் ம.பி. முன்னாள் பா.ஜ.க. முதல்வர் கைலாஷ் ஜோஷியின் மகன் தீபக் ஜோஷி, பா.ஜ.க.வில் தனக்கு ‘முக்கியத்துவம் தரவில்லை’ என்றுகூறி காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த தீபக் ஜோஷி தனக்கிருக்கும் செல்வாக்கின் மூலமாகத்தான் பஜ்ரங் சேனாவின் தலைவர்களைக் கொண்டுவந்து காங்கிரஸில் இணைத்துள்ளார்.

பஜ்ரங் சேனா அமைப்பானது மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பொந்தெல்கண்ட் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்துகின்ற அமைப்பாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் யோகி ஆத்யநாத்துக்காகவும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாகவும் இவ்வமைப்பு பிரச்சாரம் செய்தது.


படிக்க: டெல்லி: பாசிஸ்டுகளின் அதிகார வெறிக்கு நீதிமன்றம் தடைபோட முடியாது!


தீபக் ஜோஷியும், பஜ்ரங் சேனாவின் முக்கியத் தலைவர்களும் அவ்வமைப்பின் ஒரு கோஷ்டியும் காங்கிரஸுக்கு தாவியுள்ளது, பா.ஜ.க.வுக்கு பீதியை உருவாக்கியுள்ளது. கர்நாடகாவில் ஜெகதீஷ் ஷெட்டர், லஷ்மண் சவடி ஆகியோர் காங்கிரஸில் இணைந்ததன் மூலம் பா.ஜ.க. தேர்தலில் பலவீனப்படுத்தப்பட்டது போன்ற நிலை ம.பி.யிலும் உருவாகியிருக்கிறது.

கர்நாடக தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தெலுங்கானாவில் ராஜேந்தர் மற்றும் ராஜகோபால் ரெட்டி உள்ளிட்ட மூத்த பா.ஜ.க. தலைவர்கள் கட்சிக்குள் கலகம் செய்து வருகிறார்கள். அவர்கள் காங்கிரஸில் இணைந்தால், “மிஷன் சவுத்” கனவில் உள்ள பா.ஜ.க.விற்கு இது மேலும் பேரிடியாக அமையும் என்பதால், உயர்மட்ட கட்சித்தலைவர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.

ஓடிசா ரயில் விபத்து: இன்னொரு புல்வாமா எப்படி இருக்கும்?

நாட்டு மக்களை பதைபதைக்கவைத்த கோரச் சம்பவம் ஒடிசா ரயில் விபத்து. ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதற்காக திட்டமிட்டே பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்புச் செலவினங்களை குறைத்துவந்த மோடி அரசே, இதற்கு பொறுப்பேற்க வேண்டிய குற்றவாளி. ஆனால், “துயரத்தில் அரசியல் செய்யாதீர்கள்” என தங்கள் மீதான விசாரணையை திசைதிருப்பியது பா.ஜ.க. அதேநேரத்தில், பிணங்களின் மீது தமது பாசிச சதிப் பிரச்சாரத்தை கட்டமைத்ததும் பா.ஜ.க.தான்.

“ஒடிசா ரயில் விபத்து சதிச்செயலாகக் கூட இருக்கலாம்; எனவே அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படும்” என்று அறிவித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு ஒதுக்கியுள்ளார். அதைத்தொடர்ந்து சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்த இணைய வானரப்படைகளும், ஒடிசா ரயில் விபத்து ‘இஸ்லாமிய பயங்கரவாதச் சதி’ என்பதாக பொய்ப் பிரச்சாரங்களை சமூக ஊடகங்களில் கட்டவிழ்த்துவிட்டார்கள்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த வெள்ளைக் கட்டிடத்தை (ஜெயின் கோயில்) மசூதி என்றும்; விபத்து நடந்த பாலாசோர் பகுதி சட்டவிரோதமாகக் குடியேறிய ரோங்கியா முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி என்றும் கூறி, நடைபெற்றுள்ள விபத்து “ரயில் ஜிகாத்” என்று ஒரு நயவஞ்சக பிரச்சாரத்தை கிளப்பிவிட்டது சங்கிக் கும்பல். இது வடிகட்டிய பொய் – இழிவான வெறுப்புப் பிரச்சாரம் என்பதை “ஆல்ட் நியூஸ்” போன்ற உண்மை கண்டறியும் செய்தி நிறுவனங்களும் ஜனநாயக சக்திகளும் அம்பலப்படுத்தியுள்ளார்கள்.

2016-ஆம் ஆண்டு கான்பூர் ரயில் விபத்தில் 150 பேர் பலியாகினர். அவ்விபத்திற்கு காரணம் ஐ.எஸ்.ஐ.எஸ் சதி என்று பிரச்சாரம் செய்தார்கள் சங்கிகள். 2017ஆம் உத்தரப்பிரதேசத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி கான்பூர் ரயில் விபத்தை “எல்லை தாண்டிய பயங்கரவாத சதி” என்று வருணித்தார்; “தேசத்தைக் காப்பதற்கு யோகிக்கு வாக்களியுங்கள்” என்றார். இது தொடர்பான வழக்கை பா.ஜ.க.வின் ஏவல் அமைப்பான என்.ஐ.ஏ. விசாரித்தபோதும், ‘சதி’ என்று போலியாக ஜோடிப்பதற்குக்கூட எந்த துப்பும் கிடைக்கவில்லை.


படிக்க: ஒடிசா ரயில் விபத்து: அரசே முதல் குற்றவாளி!


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே உள்ளிட்டு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும், ஜனநாயக சக்திகளும் இதுதொடர்பான விவரங்களை நினைவூட்டி பா.ஜ.க. கும்பலின் கேவலத்தை அம்பலப்படுத்தினர்.

000

பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு பிண அரசியல் புதிதல்ல. இதுபோலத்தான் 2019 தேர்தல் பிரச்சாரத்திலும் புல்வாமாவில் படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரர்களின் பிணத்தை வைத்து ஓட்டுப் பொறுக்கியது. அன்று காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்திய பால் மாலிக், உளவுத்துறை ராணுவ வீரர்களுக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுத்தும், ஒன்றிய உள்துறை அமைச்சகம் கண்டுகொள்ளாமல் இருந்ததுதான் 44 வீரர்கள் பலியானதற்கு காரணம் என்பதையும், இதை மோடியிடம் கூறியபோது அவர் இதை வெளியே தெரியாமல் மறைக்கச் சொன்னார் என்ற விவரத்தையும் பொதுவெளியில் போட்டுடைத்துள்ளார்.

இப்படி அடுத்தடுத்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் சதித்தனங்கள் அம்பலப்பட்டுபோனதால், ஒடிசா ரயில் விபத்தில் அக்கும்பலால் அரசியல் ஆதாயம் தேடமுடியவில்லை. மாறாக இவை அனைத்துக்கும் மோடி கும்பல்தான் முதன்மையான குற்றவாளி என்பது அம்பலப்பட்டு நாறுகிறது.

2024 தேர்தலை முன்னிட்டு இனி ஒரு புல்வாமா கதையை மோடி கும்பல் தயாரித்தால், அதை நம்புவதற்கு நாடு தயாராக இல்லை!

மணிப்பூர்: தான் பற்றவைத்த தீ, தன்னையே சூழ்ந்தது!

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக கட்டுக்கடங்காத வன்முறையால் மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மணிப்பூரை மாற்றும் நோக்கில், மேய்தி இனவெறி அமைப்புகளுடன் கூட்டுசேர்ந்துகொண்டு குக்கி பழங்குடிகளுக்கு எதிராக இனக் கலவரத்தை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல். அக்கும்பல் பற்ற வைத்த நெருப்பு இன்று அவர்களையே சூழ்ந்துகொண்டுள்ளது. பாசிஸ்டுகளின் கலவர அரசியல் எல்லா நேரத்திலும் அவர்களது நோக்கப்படி அமைந்துவிடுவதில்லை, அவர்களுக்கு எதிராகவும் திரும்பும் என்பதற்கு மணிப்பூர் சான்றாக இருக்கிறது.

எந்த மேய்தி இந்து மக்களை தனது அடித்தளமாக மாற்றிக் கொள்வதற்கு பாசிசக் கும்பல் வேலைசெய்ததோ, அந்த மேய்தி மக்களே இன்று மோடி அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை மேற்கொண்டுவருகிறார்கள்.

40 நாட்களுக்கு மேல் ஒரு மாநிலமே பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது, நாட்டின் பிரதமரான மோடி வாய்திறந்து பேசவில்லை. அகில இந்திய வானொலியில் மோடி உரையாற்றிய மனதின் குரல் நிகழ்ச்சியிலும் (18-06-2023) மணிப்பூர் இனக்கலவரம் குறித்து பேசுவதற்கு தவிர்த்தார் மோடி. இதைக் கண்டித்து மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் விதமாக ரேடியோ பெட்டிகளைப் போட்டு உடைத்து போராட்டம் நடத்தினர் மணிப்பூர் மக்கள். பாசிசக் கும்பலுக்கு உரைக்கும்படிச் சொல்ல வேண்டுமென்றால் “மேய்தி இந்துக்கள்”. மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருப்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் விதமாக, மணிப்பூர் பெண்களால் தீ பந்தங்கள் ஏந்தி மனிதச் சங்கிலி போராட்டமும் நடத்தப்பட்டது.


படிக்க: மணிப்பூர்: பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம்! மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்!


போராட்டங்கள் தங்களுக்கு எதிராக திருப்பியதை உணர்ந்த சில நாட்களிலேயே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “வேதனையளிக்கும் இந்த வன்முறையை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் நிர்வாகம், காவல்துறை, ராணுவம், மத்திய அமைப்புகள் உட்பட அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாக” தெரிவித்திருந்தது.

மணிப்பூரின் அமைதி குறித்து ஆர்.எஸ்.எஸ்.க்கு ஏற்பட்ட ‘திடீர் கவலை’யோடு ஒப்பிடத்தக்க சம்பவம், இதற்கு முன்பும் நடந்திருக்கிறது!

000

மோடியின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான “டெல்லிச் சலோ விவசாயிகள் போராட்டம்” அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின் ஆதரவையும் பெற்று முன்னேறியபோது, கார்ப்பரேட் கைக்கூலியான மோடி அரசு அதை அடக்குமுறைகளைகளின் மூலம் ஒடுக்கிவிட முனைந்தது. மற்றொருபக்கம் “காங்கிரஸால் தூண்டிவிடப்பட்ட போராட்டம்” என்றும், “காலிஸ்தான்கள் பின்னணி” என்றும் அவதூறு கிளப்பியது. டிவிட்டரின் முன்னாள் சி.இ.ஓ ஜாக் டோர்சி அம்பலப்படுத்தியது போல கருத்தியல் ஆதரவை முடக்குவதற்காக, போராட்ட ஆதரவு டுவீட்களையும் நீக்கியது. ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி போராட்டம் மென்மேலும் வலுத்தது.

போராடும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளையும் தாண்டி, மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டத்திற்கு எதிராக போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் காவிக் கும்பலால் ஒடுக்கப்படும் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாகவும் மற்றும் பல பொதுக் கோரிக்கைகளுக்காகவும் குரல்கொடுக்கத் தொடங்கினார்கள். இந்தச் சூழலில்தான், “அரசுக்கு எதிரான நீண்டகாலப் போராட்டம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களிடையே பிளவை அதிகரித்துவிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்றது ஆர்.எஸ்.எஸ். (இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளக்கட்டுரை 20.11.2021)

தாங்கள் பற்றவைத்த கொல்லி தங்களது தலைக்கே வந்துள்ளதை உணர்ந்து பாசிசக் கும்பல் சுதாரித்துக் கொள்வதன் அறிகுறிதான் இதுபோன்ற ‘கவலை’ தெரிவிக்கும் அறிக்கைகள். இந்த அறிக்கையைத் தொடர்ந்துதான் மணிப்பூரில் அமைதியை கொண்டுவருவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தது ஒன்றிய அரசு. “மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது அனைத்துக்கட்சிக் கூட்டம் நடக்கிறது. ஆனால் அக்கூட்டத்தில் நாட்டின் பிரதமர் இல்லை!” என்று இதையும் எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்தின.

தீவிரப்படுத்தப்படும் தேசப்பெருமிதப் பிரச்சாரங்கள், இந்துமதவெறி!

‘வளர்ச்சி’ முகமூடி கிழிந்து தொங்கும் நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று இந்துராஷ்டிரம் அமைப்பதை நோக்கி முன்னேற வேண்டுமானால் தேசவெறி, மதவெறி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதைத் தவிர ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு வேறுவழியில்லை. தோல்வியின் அறிகுறிகள் கண்களில் புலப்படும் இத்தருணமானது பாசிசக் கும்பலுக்கு வெறியைக் கிளப்பியுள்ளது. எப்பேர்ப்பட்ட சதித்தனங்களை மேற்கொண்டும், பாசிச ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்றே தீர வேண்டும் என நினைக்கிறது!

ஜி20ல் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் அதன் தலைமைப் பொறுப்பு சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. அப்படியிருக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், அது மோடியின் அரசின் பராக்கிரமத்துக்கு வழங்கப்பட்ட பரிசு என்பதாகப் பிரச்சாரம் செய்தது. ஜி20 மாநாடு மட்டுமல்ல, மோடியின் அண்மைய அமெரிக்கப் பயணம் மோடியால் இந்தியாவிற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரமாக ஊடகங்களால் பிரச்சாரம் செய்ப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் மோடி நடத்திவரும் பாசிசக் கொடுங்கோல் ஆட்சியைக் கண்டித்து அமெரிக்காவின் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் நடத்திய போராட்டமானது, மோடி கும்பல் உருவாக்க முனைந்த தேசப்பெருமித பலூனில் குண்டூசியை இறக்கியுள்ளது.


படிக்க: கட்சித் தாவல்களும் மத்திய புலனாய்வு முகமைகளும்!


அடுத்த ஜனவரி 14 அன்று அயோத்தி ராமர் கோயில் திறப்பை வெகுவிமரிசையாக நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறது பா.ஜ.க. 2024 தேர்தலில் ராமனை ஒரு பிராண்டாக முன்னிறுத்த முயற்சித்துவருகிறது பாசிசக் கும்பல். இதையொட்டி, ஓம் ராவத் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஆதிபுருஷ் என்ற ராமயணப் படம் வெளிவந்தது. ஆதிபுருஷ் ஓடும் அனைத்துத் திரையரங்குகளிலும் அனுமனுக்கு ஒரு சீட்டை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஓம் ராவத். பா.ஜ.க. தலைவர்கள் இத்திரைப்படத்திற்கு சமூக ஊடகங்களில் விளம்பரம் கொடுத்தார்கள்.

ஆனால், திரைப்படத்தில் அனுமனும் ராவணனும் தாடிவைத்திருக்கும் தோற்றம் முஸ்லிம்களை ஒத்திருக்கிறது; சீதாவாக வருபவர் முழு கையும் தெரியும்படி (Sleeveless) உடுப்பு உடுத்தியிருக்கிறார் மற்றும் படத்தின் சில வசனங்கள்-காட்சிகள் ஆகியவற்றை முன்வைத்து ஆதிபுருஷ் “இந்துக்களுக்கு எதிரான வெளிநாட்டுச் சதி” என்று இந்து அமைப்புகளே போர்கொடி தூக்கியுள்ளன. தன் வினைத் தன்னைச் சுடும் என்பதுபோல, சங்கிக் கும்பல் விதைத்துள்ள இஸ்லாமிய வெறுப்புக் கலாச்சாரம் அவர்களையே தாக்கியுள்ளது.

000

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்கள் நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகப் பார்க்கப்படும் நிலையில், அவற்றில் வெற்றிபெறுவதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துமதவெறியை கிளறிவருகிறது பாசிசக் கும்பல்.

“லவ் ஜிகாத்”, “நில ஜிகாத்”, “ரயில் கவிழ்ப்பு ஜிகாத்”, “வியாபார ஜிகாத்” என பலப்பல வடிவங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன. இதை பரப்புரையாக மேற்கொள்வதன் ஒரு அங்கம்தான் “தி கேரளா ஸ்டோரி” என்ற திரைப்படம். தென்னிந்தியாவில் அது மண்ணைக் கவ்வினாலும், வடமாநிலங்களில் இது காவிக்கும்பலுக்கு நல்ல பிரச்சாரமாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் ஷ்ரதா என்ற இளம்பெண் தன்னுடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்த அப்தாப் என்பவனால் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட் நிகழ்வு பாசிசக் கும்பலுக்கு மிகப்பெரிய பிரச்சார ஆயுதமாக மாறியது.

கொலைசெய்த மிருகம் மதத்தால் ஒரு முஸ்லிம். இதைவைத்துக் கொண்டு நாடுமுழுக்க லவ் ஜிகாத் பிரச்சாரத்தை தீவிரப்படுதியது காவிக் கும்பல். கொலையுண்ட ஷ்ரதா மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதால், அம்மாநிலத்தில் இன்றுவரை அதைவைத்து இஸ்லாமிய எதிர்ப்பை தூண்டிவருகின்றன இந்துவெறி அமைப்புகள். 2022 நவம்பர் தொடங்கி இந்த ஆண்டு மே மாதம்வரை, மகாராஷ்டிரத்தில் “சகல் ஹிந்து சமாஜ்” என்ற அமைப்பு மொத்தம் 56 ‘லவ்ஜிகாத் எதிர்ப்பு’ப் பேரணிகளை நடத்தியுள்ளது.

மே மாதம் 26ஆம் தேதி உத்தரகாண்டில் சிறுமி ஒருவரை கடத்த முயன்றதாக இருவர் கைதுசெய்யப்பட்டனர். அதில் ஒருவர் முஸ்லிம். இதை சாக்காக்கிக் கொண்ட உத்தரகாண்டின் இந்துமதவெறி அமைப்புகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதோடு, மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் தாங்கள் குறித்த நாளுக்குள் மாநிலத்தைவிட்டே வெளியேற வேண்டும் என்று கெடுவிதித்துள்ளர்கள். முஸ்லிம்களின் வீடுகளிலும், கடைகளிலும் இந்துமதவெறியர்கள் குறிச்சின்னங்களை இட்டுவைத்திருப்பதால் மிகப்பெரிய கலவரங்களை நடத்தக்கூடும் என்ற அச்சமும் சூழ்ந்துள்ளது.

இதேபோன்று இஸ்லாமியர்கள் மாநிலத்தைவிட்டே வெளியேற வேண்டுமென இமாச்சலப்பிரதேசத்திலும் இந்துமதவெறி அமைப்புகள் வெறிப் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை மேலும் பல மாநிலங்களுக்கும் பரப்புவதே காவிக் கும்பலின் இலக்காக உள்ளது.


படிக்க: மகாராஷ்டிரா: முஸ்லீம் மக்களை படுகொலை செய்யும் பசு குண்டர் படை!


இந்துமதவெறியை தேர்தலில் அறுவடை செய்துகொள்வதற்கேற்ப பிரச்சாரங்களையும் வாக்குறுதிகளையும் தயாரித்துவருகிறது பா.ஜ.க. இஸ்லாமியர்கள், கிறித்தவர்களின் இடஒதுக்கீட்டை இந்துக்களின் இடஒதுக்கீட்டுக்கு எதிரானதாக காட்டிப் பிரச்சாரம் செய்வது, இந்துப் பண்டிகைகளை ஒட்டி ஒன்றிய அரசின் சலுகைகள் அறிவிப்பது, தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பது போன்ற திட்டங்களை வைத்துள்ளது பாசிசக் கும்பல்.

பசுவளைய மாநிலங்களைத் தவிர்த்து, மக்கள் பிரச்சினைகளை புறக்கணித்து எடுக்கப்படும் இதுபோன்ற இந்துத்துவப் பிரச்சாரங்கள் பிற மாநிலங்களில் எடுபடுவதில்லை என்பதை கர்நாடக தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது என்றாலும், இதற்கு எதிர்வினையாற்றாமல் போனால் பாசிசக் கும்பல் தனது நோக்கத்தை சாதித்துக் கொள்வதற்கான வாய்ப்பும் பிரகாசமாகவே உள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி முகம் மென்மேலும் உறுதிப்படுத்தப்பட்டால், ஒரே நாடு ஒரே தேர்தலை வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே நடைமுறைப்படுத்துவது குறித்தோ, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பைக் கொண்டுவந்து பசுவளைய மாநிலங்களின் தொகுதிகளை அதிகப்படுத்திக் கொள்ளும் சதித்திட்டத்திலோ பாசிசக் கும்பல் இறங்கலாம்.

நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டியுள்ளது!

பாசிசமும் ஆளும்வர்க்கக் கட்சிகளின் தேர்தல் சந்தர்ப்பவாதமும்!

கர்நாடகத்தில் பா.ஜ.க.வின் தோல்வியும் காங்கிரஸின் மிகப்பெரிய வெற்றியும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. இது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்று கருதுகிறார்கள்.

தேர்தல் வென்றவுடன் தாங்கள் அளித்த முதன்மை வாக்குறுதிகாளான 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 உதவித் தொகை, வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு பத்து கிலோ இலவச அரிசி, படித்து வேலையில்லாத பட்டதாரி – பட்டயதாரிகளுக்கு உவித் தொகை, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் ஆகியவற்றுக்கு காங்கிரஸ் அமைச்சரவை ஒப்புதளித்துள்ளது மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் மதமாற்றத்தடைச் சட்டம், பசுவதைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெறப்போவதாகவும் பள்ளிப் பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவர், சாவர்க்கர் தொடர்பான பாடப்பகுதிகளை நீக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது காங்கிரஸ். விவசாயிகளுக்கு எதிரான ஏ.பி.எம்.சி சட்டம், நிலச் சீர்த்திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கான திருத்துக்களுக்கான கோரிக்கையையும் மதிப்பாய்வு செய்யப்போவதாக அறிவித்துள்ளர் முதல்வர் சித்தராமையா. சமூக வலைதளங்களில் பரப்பபடும் வெறுப்புப் பேச்சுக்களை காண்காணித்து ஒடுக்குவதற்காக சைபர் கிரைம் குழுக்களை அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலுக்கு எதிரான இச்சட்டரீதியான நடவடிக்கைகள் பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்துள்ளது. இது ஒரு முன்மாதியாக பார்க்கப்படுகிறது. இவை நாம் வரவேறக்கக்கூடிய விசயமே என்றாலும், இதே போன்றதொரு நிலையை அடுத்து தேர்தலை எதிர்க்கொள்ளவிருக்கிற மத்தியப் பிரதேச காங்கிரஸாரிடம் பார்க்க முடியவில்லை.

000

மத்தியப் பிரதேச தேர்தல் களம் கர்நாடகத் தேர்தல் போல அல்லாமல், 2021 உத்தரப்பிரதேச தேர்தல் களம் போல உள்ளது. மென்மையான இந்துத்துவத்தை மூர்க்கமாக முன்னிறுத்துகிறார்கள் ம.பி காங்கிரஸார். இதற்கு தலைமை வகிப்பவர் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா வதேரா. நர்மதா நதிக்கரையில் ஆரத்தி காட்டி பூசை செய்வது, கோயில்கோயிலாகச் சுற்றுவது, அனுமன் சாலிசா மந்திரம் ஓதுவது என தேர்தல் பிரச்சாரம் களைகட்டுகிறது.

காங்கிரஸ்காரரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான சுனில் குமார் மத்தியப் பிரதேச பிரதேசத்துக்கு வகுத்துக்கொடுத்துள்ள திட்டம் “இந்து வாக்குவங்கியைக் கவருவது”! ஏனெனில் மத்தியப் பிரதேசம் இந்துத்துவத்தின் கோட்டையான பசுவளைய மாநிலங்களுள் ஒன்று, அங்கே இந்துத்துவப் பிரச்சாரம்தான் தேர்தல் வெற்றிக்கு உதவும் என்று கருதுகிறது காங்கிரஸ் கட்சி.

ஒருபக்கம் ராகுல், “நடைபெற்றுக் கொண்டிருப்பது இருவேறு சித்தாந்தங்களுக்கான போர்” என முழங்குகிறார். களநிலவரமோ மத்தியப் பிரதேசம் போலத்தான் இருக்கிறது. ஏனெனில் சித்தாந்தப் போராட்டத்திற்காக தேர்தல் வெற்றியை பலிகொடுப்பதற்கு காங்கிரஸ் தயாரில்லை!

தேர்தல் களமும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் வலுவும்!

கர்நாடகத்திற்கும் மத்தியப்பிரதேசத்திற்குமான இந்த பாரிய வேறுபாட்டை எப்படிப் புரிந்துகொள்வது?

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை காங்கிரஸ் மட்டும் தனியாக எதிர்கொள்ளவில்லை என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்து இதைத் தொடங்க வேண்டும்.

“பஜ்ரங்தளை தடைசெய்வோம்” என்று காங்கிரஸ் தைரியமாக முழங்கமுடிந்தது என்றால், நமக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களை களத்தில் எதிர்கொள்வதற்கு பாசிச எதிர்ப்பு சக்திகள் இருக்கிறார்கள் என்ற தைரியம் இருந்தது. அந்த தைரியத்தை ஏற்படுத்தியது கர்நாடக பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் தங்களது சொந்த முன்முயற்சியில் நடத்திய “எழு கர்நாடகமே” என்ற இயக்கம்!

இப்பிரச்சார இயக்கம் பா.ஜ.க.வின் தோல்விக்கு மிகப்பெரிய உந்துவிசையாக இருந்தது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டு 112 சமூக அமைப்புகள் இணைந்து பணியாற்றிய இந்த இயக்கத்தில், 5 ஆயிரம் தன்னார்வலர்கள் களப்பணியாற்றியுள்ளனர். கருத்தரங்கங்கள், இணையவெளிப் பிரச்சாரங்கள் ஆகியவற்றோடு சுருங்காமல், இந்துத்துவ வெறுப்புப் பிரச்சாரங்களை நிராகரிக்க வேண்டியும், ஏழை-உழைக்கும் மக்களுக்கு எதிரான பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் வீடுவீடாகச் சென்று இத்தன்னார்வலர்கள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் இந்த களப்பணி மக்களிடையே உருவாக்கியுள்ள கருத்துக்கு ஒத்திசைவாக நடந்துகொள்ள வேண்டிய நிலையில், காங்கிரஸ் உள்ளது. இதை 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வென்று ஆட்சியமைத்த சூழலோடு ஒப்பிடலாம்!

“எழு கர்நாடகமே இயக்கம்” கிட்டத்தட்ட காங்கிரஸிடம் ஒரு “தார்மீக ரீதியான நிபந்தனை”யை முன்வைத்துள்ளது என்றே சொல்லலாம். தனது வெற்றிக்கு பங்காற்றிய பாசிச எதிர்ப்பு சக்திகளின் உணர்விற்கு எதிராகச் செயல்பட்டால் தானும் பா.ஜ.க.வைப் போல மக்களால் புறக்கணிப்படுவோம் என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது.

இப்படியொரு சூழல் மத்தியப்பிரதேசத்தில் இல்லை!

காங்கிரஸின் மென்மையான இந்துத்துவப் போக்கு, தற்போது பஜ்ரங் சேனாவின் ஒரு பிரிவினர் காங்கிரஸில் இணைந்துள்ளது ஆகியவற்றைப் பார்க்கும்போது மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றால்கூட, பா.ஜ.க.வின் பாசிசத் திட்டங்களுக்கு எதிரான கர்நாடக காங்கிரஸ் அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ம.பி. காங்கிரஸிடம் எதிர்ப்பார்க்க முடியாது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்துவதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் நம்மிடம் கர்நாடகம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் இந்த அனுபவங்கள் சில கேள்விகளை எழுப்புகின்றன…

பாசிச எதிர்ப்புக்கு தேர்தலையும் ஒரு களமாகப் பயன்படுத்த முடியுமா?

இதன் பொருள் என்ன?

ஆளும் வர்க்கக் கட்சிகளை நிபந்தனையின்றி ஆதரிக்கும்போக்கு மட்டும்தான் பாசிசத்திற்கு எதிரான மூச்சுவிடும் அவகாசத்தைக் கொடுக்குமா?

(தொடரும்…)


பால்ராஜ்,
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்

ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்ட அண்ணாமலையின் யாத்திரை!

1

ரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்திலிருந்து தனது பாத யாத்திரையை நேற்று (ஜூலை 28) துவங்கினார். “என் மண் என் மக்கள்” என்று பெயரிடப்பட்ட இந்த யாத்திரையை அமித்ஷா தொடங்கிவைத்தார். நேற்று (ஜூலை 28) தொடக்க விழா நடைபெற்றது. இன்று (ஜூலை 29) முதல் யாத்திரை துவங்கப்பட்டது. இதன் முதல் கட்டம் ஆகஸ்ட் 22 வரை நடக்கவுள்ளது. முதல் கட்ட யாத்திரைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார்.

இந்த யாத்திரை மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் நடைபெறும் என்றும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் கால்நடையாகவும் மக்கள் வசிக்காத பகுதிகளில் வாகன யாத்திரையாகவும் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் அண்ணாமலை செல்லப்போகிறாராம். ஜனவரி 11-ஆம் தேதிக்குள் யாத்திரை முடிக்கப்படும் என்றும் யாத்திரையின் நிறைவு நாள் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

’என் மண், என் மக்கள்’ நடைப்பயண தொடக்க விழாவில் பேசிய அமித்ஷா “தமிழில் பேச முடியவில்லை என்பதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இந்த நடைப்பயணம் தமிழ்மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பயணம். இந்த யாத்திரை வெறும் அரசியல் காரணத்திற்கானது அல்ல; தமிழகத்தை ஊழலில் இருந்து விடுவிக்கவே அண்ணாமலை யாத்திரை மேற்கொள்கிறார்” என்று கூறினார்.

ராமேஸ்வரம் கிளம்பும்முன் அமித்ஷா தமிழ்நாடு செல்ல உள்ளதாக தமிழில் டுவீட் வேறு பதிவிட்டுள்ளார். மோடி – அமித்ஷா காவிக் கும்பல் கொஞ்ச காலமாகவே தமிழ் மொழியைத் தூக்கிப்பிடிப்பதைப் போல் பாவனை செய்து வருகிறது. இது நமக்கான எச்சரிக்கை. மதவெறிப் பிரச்சாரம் எடுபடவில்லையெனில் காவிக் கும்பல் தமிழ் மொழியைக்கூட தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கான கருவியாகப் பயன்படுத்தும். ஏற்கனவே, திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசி அபகரிக்க முயன்று வருகிறது.


படிக்க: முருக பக்தர்களே ! வேல் யாத்திரை அழைக்கிறது! வீதியிலிறங்கி கேள்வி எழுப்புவோம் !!


அண்ணாமலையின் இந்த யாத்திரை ஊடகங்களால் பூதாகரமாக்கிக் காட்டப்படுகிறது. ஆனால், உண்மையென்னவெனில் யாத்திரை செல்லும் இந்த பா.ஜ.க-வின் திட்டம் ஆரம்பத்திலேயே அந்தர் பல்டி அடித்து மண்ணைக் கவ்வியது.

முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்றில் தமிழகத்தில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் கூறியிருந்தார். ஜெயலலிதா குறித்துப் பேசியது அ.தி.மு.க-வினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனங்களைப் பதிவுசெய்தார். எடப்பாடி தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில்தான் அமித்ஷா கலந்துகொண்டு துவக்கி வைக்கும் நிகழ்விற்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் கூட வரவில்லை. ஆனால், அமித்ஷாவோ ”எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வரவே அண்ணாமலை நடைப்பயணம் செல்கிறார்” என்று பேசியிருக்கிறார். ஜெயலலிதாவின் ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி என்று முந்தைய தேர்தல்களின்போது பிரச்சாரத்தில் அமித்ஷாவே பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க தன்னைக் கழற்றிவிட்டு விடுமோ என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் அரசியல் வியூகங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதைத்தான் இது காட்டுகிறது.


படிக்க: விசுவ இந்து பரிஷத்தின் யாத்திரைக்கு எதிராக கிளம்பியது தமிழகம் !


தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பா.ஜ.க தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலிச் சேர்களே யாத்திரை தொடக்க விழாவை அலங்கரித்தன.

ஒருபுறம் பா.ஜ.க ”என் மண் என் மக்கள்” (#EnManEnMakkal) என்று சமூக வலைத்தளங்களில் டிரண்ட் செய்தால், மறுபுறம் அதற்கு எதிராக ”என் வீடியோ என் ஆடியோ” (#EnVideoEnAudio) என்று டிரண்ட் செய்யப்படுகிறது.

”நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு தி.மு.க அரசுதான்” என்று அமித்ஷா பேசினால், அதற்கு எதிர்வினையாக ஆருத்ரா மோசடி குறித்தும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. அந்தப் பணத்தைக் கொண்டுதான் அண்ணாமலை யாத்திரை செல்கிறாரா என்று கேட்கப்படுகிறது.

இதுமட்டுமல்ல ராமநாதபுரம் முழுவதும் ”என் மண் என் மக்கள்” யாத்திரையைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில், ”பற்றி எரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா?” என்று அண்ணாமலையைப் பார்த்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் எல்.முருகன் மேற்கொண்ட வேல் யாத்திரை தமிழ்நாட்டு மக்களால் மண்ணைக் கவ்வவைக்கப்பட்டது. ஆனால், இந்த ”என் மண் என் மக்கள்” என்னும் அண்ணாமலையின் யாத்திரை தொடங்கப்படும் போதே மண்ணைக் கவ்விவிட்டது. தமிழ்நாடு தொடர்ந்து காவிக் கும்பலுக்கு சம்மட்டியடி கொடுத்து வருகிறது.

ஆயினும், இந்த காவிக் கும்பலை நாம் குறைத்தும் எடைபோட்டு விடக்கூடாது. நாடு முழுவதும் ஊர்வலங்கள், யாத்திரைகள் மூலம் இக்கும்பல் பல கலவரங்களை நிகழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டையும் மணிப்பூரைப் போல பற்றி எரிய வைக்க இவர்களை நாம் ஒருபோதும் அனுமதித்துவிடக் கூடாது.


பொம்மி

துருக்கி தேர்தல் முடிவு: தேவை, பாசிசத்திற்கு எதிரான மாற்று ஜனநாயகத் திட்டம்!

லகம் முழுவதும் பல நாடுகளில் பாசிசக் கட்சிகளும் பாசிஸ்டுகளும் ஆட்சி செய்து வரும் நிலையில், துருக்கியில் இசுலாமிய அடிப்படைவாத பாசிஸ்ட் ரெசெப் தையிப் எர்டோகன் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது, பாசிசத்திற்கு எதிராக போராடும் ஜனநாயக சக்திகளுக்கு சொந்த மாற்று ஜனநாயகத் திட்டத்தின் தேவையை உணர்த்துகிறது.

சென்ற மே 12, 18 தேதிகளில் இரண்டு சுற்றுகளில் நடைபெற்ற துருக்கி அதிபருக்கான தேர்தலில், இசுலாமியமதப் பிற்போக்குவாதி பாசிஸ்ட் ரெசெப் தையிப் எர்டோகன் தொடர்ந்து மூன்றாவது முறை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 52.18 சதவிகித வாக்குகளைப் பெற்றார். சென்ற அதிபர் தேர்தலில் அவர் பெற்ற வாக்கு விகிதத்திலிருந்து எந்த பெரிய வேறுபாடும் இல்லையெனினும், சென்ற முறை முதல் சுற்றிலேயே அறுதிப் பெரும்பான்மை பெற்று அதிபர் பதவியைக் கைப்பற்றிய எர்டோகன் இந்த முறை இரண்டாவது சுற்றில்தான் அறுதிப் பெரும்பான்மை பெறமுடிந்தது.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுவாத மக்கள் கட்சி சென்ற தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட 17.2 சதவிகிதம் கூடுதலாகப் பெற்றபோதும், இதன் வேட்பாளர் கெமால் கிலிடாரோக்லு 47.82 சதவிகித வாக்குகளைப் பெற்று தோல்வியுள்ளார்.

முதல் சுற்றில் எர்டோகன், கிலிடாரோக்லு, சினான் ஒகன், மொகர்ரம் இன்ஸ் ஆகிய நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவித்தனர். இவர்கள் முறையே, 49.52, 44.88, 5.17, 0.43 சதவிகித வாக்குகளைப் பெற்றனர்.

இரண்டாவது சுற்றில் வாக்காளர்கள் 3 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை. வெளிநாட்டில் வாழும் துருக்கியர்கள் அதிக அளவில் வாக்களித்ததால் எர்டோகன் அருதிப் பெரும்பான்மை பெற்றார்.

துருக்கியின் தேர்தல் களம்

2020-இல் ஏற்பட்ட கொரானா பெருந்தொற்றை சரியாக கையாளாததால் 3 லட்சம் மக்கள் இறந்தனர். 2022-இல் இருந்து மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி, விலையேற்றத்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் முக்கியமாக, இந்த ஆண்டு 2023 பிப்ரவரியில் நடந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தால் சுமார் 50 ஆயிரம் பேர் இறந்தனர். இது உண்மையில் ஒருலட்சத்து 50 ஆயிரம் பேராக இருக்கும் என்று அஞ்சப்பட்டது. குறிப்பாக, கார்ப்பரேட் வர்க்கங்களுக்கேற்ப கட்டுமனங்களில் செய்த முறைகேட்டினால்தான் இவ்வளவு மக்கள் இறப்பதற்கு காரணமானது என்பதால் ஆளும் எர்டோகன் மீது மக்கள் கடும் அதிருப்தில் இருந்தனர்.

தற்போதைய தேர்தலில் எர்டோகன் வெற்றி பெறவே முடியாது என்ற அளவிற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி மேலோங்கியிருந்த போதும், எர்டோகன் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அரசியல் சாசனத்தை மீறுதல், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தல், போலீசு ஆட்சியை நிறுவி அடக்குமுறைகளை அதிகரித்தல், அரசு வளங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொண்டுதான் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார் எனினும், இது, எதிர்க்கட்சிகளின் ஓட்டாண்டித்தனத்தை பளிச்சென காட்டிவிட்டன.

பாசிசத்தின் இருபிரிவுகளுக்குடையிலான போட்டி

1999-இல் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்த பொருளாதார நெருக்கடி, 2000-01 ஆகிய ஆண்டுகளின் பொருளாதார வீழ்ச்சி, தொடர்ந்து ஆட்சியில் இருந்துவந்த குடியரசுவாத நீதிக் கட்சிகளின் ஊழல், முறைகேடுகள், அக்கட்சியில் ஏற்பட்ட பிளவு ஆகியவை காரணமாக குடியரசுவாத நீதிக் கட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி மேலோங்கி இருந்தது.

2001-இல்தான் எர்டோகனின் இசுலாமிய அடிப்படைவாத பிற்போக்கு தன்மை கொண்ட, “நீதி மற்றும் வளர்ச்சிக்கான கட்சி” தொடங்கப்பட்டது. கம்யூனிச எதிர்ப்பு, ஜனநாயக எதிர்ப்பை தனது இயல்பாகக் கொண்ட எர்டோகன் அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவர்.

2002-இல் நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலின்போது, எர்டோகன் மதவாதத்தை தூண்டியதற்காக அரசுப் பதவிகளை வகிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தார். இவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 3 இலட்சம் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். இருப்பினும், 2002 தேர்தலில் எர்டோகனின் நீதி மற்றும் வளர்ச்சிக்கான கட்சி 550-க்கு 363 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது. கிரிமினல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்று சட்டத் திருத்தம் செய்யப்பட்டு 2003-இல் எர்டோகன் பிரதமராக்கப்பட்டார்.

அக்கட்சி தொடங்கப்பட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கான ஆறு பொதுத்தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று ஆட்சி அமைத்து வந்துள்ளது.


படிக்க: பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!


2003-ஆம் ஆண்டு பிரதம மந்திரியாக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து தொடர்ந்து எர்டோகன் மக்கள் அறிந்த தலைவராக உள்ளார். 2014-இல் முதல் முறையான அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது மூன்றாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 21 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தின் முக்கியமான பதவியில் இருக்கிறார். அந்தவகையில், எர்டோகன் துருக்கியின் மிகவும் ஆதிக்கம்பெற்ற ஒரே அரசியல் தலைவர்.

இவருக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் குடியரசுவாத மக்கள் கட்சியானது, துருக்கியின் மாபெரும் ஜனநாயகவாதத் தலைவரான முஸ்தபா கெமால் அடாடர்க்-ஆல் தொடங்கப்பட்ட கட்சியாகும். அவரது இறப்புக்குப் பின்னர், அக்கட்சி தனது மதசார்ப்பற்ற, ஜனநாயகத் தன்மையைக் கைவிட்டது. இரண்டாம் உலகப் போரில் அச்சுநாடுகளுடன் சேர்ந்து கொண்டது. அதன் பின்னர், ‘பலகட்சி ஜனநாயகம்’ என்ற பெயரில் கேடுகெட்ட ஆட்சி முறை 1946-இல் இருந்து கொண்டுவரப்பட்டது. அப்போதிருந்து அமெரிக்கா மற்றும் இசுலாமிய மதவாத பிற்போக்குவாதிகளுக்கு அடிபணிந்து ‘சீர்த்திருத்தங்கள்’ என்ற பெயரில் அரசியல் சாசனத்தை பல்வேறு வகைகளில் திருத்தியது.

அன்றுமுதல் உட்கட்சிப் பூசல், ஆட்சிக் கவிழ்ப்பு, தொடர்ச்சியாக கட்சியில் பிளவுகள், தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அதிகரித்தல், கார்ப்பரேட் வர்க்கங்களுக்கு சாதகமான முறையில் அரசியல் சட்டங்களைத் திருத்துதல் போன்றவை காரணமாக இசுலாமிய அடிப்படைவாதிகள் கை மேலோங்கியது மட்டுமின்றி, 1980-இல் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து அனைத்து கட்சிகளும் தடை செய்யப்பட்டன.

1987-இல் கட்சிகளுக்கான தடை நீக்கப்பட்ட பின்னர், பல கட்சிகள் உருவாகின. குடியரசுவாத நீதிக் கட்சி பெரிய கட்சியாக இருந்தாலும் அறுதிப் பெரும்பான்மை பெரும் நிலையை இழந்தது. இருப்பினும் மதசார்பின்மையை குடியரசுவாத நீதிக்கட்சி தொடர்ந்து பின்பற்றுவதாக அறிவித்தது.

உட்கட்சியில் ஏற்பட்ட குழப்பமும், பொருளாதார ரீதியாக கார்ப்பரேட் வர்க்கங்களுக்கு ஆற்றிய சேவையை கட்சியின் மதசார்பின்மையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மறைத்ததும் இசுலாமிய அடிப்படைவாதிகள், இந்த குடியரசுவாத நீதிக் கட்சிக்கு எதிராக தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கு வழிவகை ஏற்படுத்தியது. இக்காலகட்டத்தில் இசுலாமிய அடிப்படைவாதக் கும்பல்கள், கம்யூனிச எதிர்ப்பு குழுக்கள் பலவும் பலமடைந்தன.


படிக்க: துருக்கி நிலநடுக்க மரணங்கள்: அரசு நிகழ்த்திய படுகொலையே!


மேலே குறிப்பிட்டது போல 1999-இல் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், 2000-01 ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, கிராமப்புற மக்களிடம் நிலவும் மதவாத பிற்போக்குத்தனம் ஆகியவற்றைக் கைப்பற்றி, எர்டோகன் தலைமையிலான நீதி மற்றும் வளர்ச்சிக்கான கட்சி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. துருக்கியை பிராந்திய வல்லரசாக்குவது, ஒட்டமான் பேரரசின் சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் நிறுவுவது என்ற தேசியவெறி, இசுலாமிய வெறியூட்டி ஆட்சியைத் தக்கவைத்து வருகிறார் எர்டோகன்.

அன்றிலிருந்து, பாசிசத்திற்கு எதிரான தனது அரசியல் கையாளாகாத் தனத்தை காட்டி வந்த குடியரசுவாத மக்கள் கட்சி, எர்டோகனின் பாசிசத்திற்கு மாறாக, வேறொரு பாசிசக் கொள்கையை ஆதரித்து வருகிறது. தனக்கு இருக்கும் மிதவாத ஜனநாயகப் போர்வையை அதற்கு சாதகமாக்கிக் கொள்கிறது. அந்தவகையில், அமெரிக்காவுக்கு பட்டவர்த்தனமான ஆதரவு, நெட்டோவுடன் கூட்டணி, ஆளும் கார்ப்பரேட் வர்க்கங்களின் சுரண்டலுக்கு அடிபணிதல், தீவிர பாசிஸ்டுகளுக்கு ஆதரவு ஆகிய கொள்கைகளைப் பின்பற்றுகிறது. எர்டோகனுக்கு எதிராக இந்தக் கட்சியை போலி கம்யூனிஸ்டுகள், குர்திஸ் தேசிய இன இயக்கங்கள் எல்லாம் ஆதரிப்பதால் அவையும் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்திருக்கின்றன.

இதுமட்டுமின்றி, குடியரசுவாத மக்கள் கட்சியில் சென்ற முறை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட மொர்ரம் இன்ஸ், 2021-இல் இக்கட்சியில் இருந்து வெளியேறி, தனிக்கட்சி தொடங்கினார். இந்த 2023 தேர்தலில் பல வண்ண போலி கம்யூனிஸ்டு கட்சிகள், பல துருக்கிய தேசியவாத கட்சிகள், பல சிறுபான்மை குர்து இனவாதக் கட்சிகள், பசுமைவாதக் கட்சிகள், பாரம்பரியவாதக் கட்சிகள், தொழிலாளர் கட்சிகள் என அனைவரின் ஆதரவோடு போட்டியிட்டும் குடியரசுவாத நீதிக் கட்சி தோல்வியடைந்துள்ளது.

துருக்கி மக்களின் தேவை எது?

துருக்கியின் மக்கள் அனைத்து வகையிலும் இசுலாமிய அடிப்படைவாதத்தை எதிர்க்கின்றனர். எர்டோகனின் அகண்ட துருக்கிக் கொள்கையை எதிர்க்கின்றனர். சிரியா மீது போரும் வேண்டாம், சிரிய அகதிகளுக்கு ஆதரவு தரவும் வேண்டாம் என்பதுதான் மக்களின் நிலை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேட்டோ கூட்டமைப்பில் துருக்கி அங்கம்வகிப்பதை துருக்கி மக்கள் எதிர்க்கின்றனர். உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ நடத்தும் போரை துருக்கி மக்கள் எதிர்க்கின்றனர். ஆனால், கிலிடாரோக்லு நேட்டோ ஆதரவு நிலைடுத்தார். நோட்டோவுடன் மேலும் தனது ஒருங்கிணைப்பை அதிகரிப்பதாக தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.

எர்டோகனின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எதிராக குடியரசுவாத நீதிக் கட்சி தொழிலாளர்களுக்கு எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை. இவ்வாறு ஆளும் கார்ப்பரேட் வர்க்கங்களுக்கு தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார் கிலிடாரோக்லு. எர்டோகன் இசுலாமிய அடிப்படைவாத பாசிஸ்ட் எனில், இவரை இசுலாமிய அடிப்படைவாத பாசிசக் கட்சிகள் “துரோகி” என்று தூற்றி வருகின்றனர்.

துருக்கியின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று அகதிகள் பிரச்சினையாகும். சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் நாட்டின் மக்கள் துருக்கியில் குடிபெயர்ந்து வந்துள்ளனர். எர்டோகன் இவர்களுக்கு குடியுரிமை அளிப்பதாக தேர்தலில் வாக்குறுதியளித்தார்.


படிக்க: துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !


கிலிடாரோக்லு-வோ 10 லட்சக்கணக்கான சிரிய அகதிகளை நாடு கடத்துவதாக வாக்குறுதியளித்தார். மேலும், எல்லை மீறிய பயங்கரவாதிகளை ஒடுக்கப்போவதாகவும் உறுதியளித்தார். இதன் மூலம், எர்டோகனுக்கு எதிராக அதிருப்தியைக் கிளப்பும் தீவிர இசுலாமிய அடிப்படைவாத பாசிசக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொண்டார்.

மொத்தத்தில், எர்டோகன் பிற்போக்கு பாசிஸ்ட் எனில், கிலிடாரோக்லு மிதவாத போர்வையில் இருக்கும் அமெரிக்க ஆதரவு பாசிச ஆதரவாளர். எர்டோகனின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிசவாதிகள் கிலிடாரோக்லுவை ஆதரிக்கின்றனர்.

மக்களோ சமூக மாற்றத்தை விரும்புகின்றனர். ஆனால், கிலிடாரோக்லுவும் போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிசவாதிகள் எர்டோகன் எதிர்ப்பு என்ற போர்வையில் அவரைவிட கொடிய இசுலாமிய பாசிஸ்டுகளை வளர்த்துவிடும் கேடுகெட்ட வேலையைச் செய்து வருகிறார்.

மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது, அகதிகளுக்குரிய உரிமைகளை அங்கீகரிப்பது, சிறுபான்மை குர்து தேசிய இனங்களின் உரிமைகளை அங்கீகரிப்பது, அமெரிக்க-நேட்டோ ஆதரவை நிராகரிப்பது, சொந்தநாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, கார்ப்பரேட் வர்க்கங்கள் அதிகாரம் செலுத்தும் வகையிலான, பாசிசம் அரங்கேறுவதற்கு காரணமான அரசியல் சாசனத்தை, உழைக்கும் மக்கள் அதிகாரம் செலுத்தும் வகையில் திருத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய மாற்று பாசிச எதிர்ப்பு ஜனநாயகத் திட்டத்தை முன்வைத்துப் போராட வேண்டியது புரட்சிகர சமூக மாற்றத்தை நேசிக்கின்ற, பாசிசத்தை எதிர்க்கின்ற கட்சிகள், அமைப்புகளின் இன்றைய அவசர அவசியமான கடமையாகும்.

தங்கம்
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

கொலைகாரன் அனில் அகர்வாலே! தமிழ்நாட்டுக்குள் நுழையாதே!

ஸ்டெர்லைட் வேண்டாம் என்று பேசுவதற்கும் போராடுவதற்கும் எமது மக்களுக்கு தூத்துக்குடியில் உரிமை இல்லை! கொலைகாரன் அனில் அகர்வாலுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பா?

***

தமிழ் மண்ணில் இருந்து கொண்டு தமிழரை சுரண்டி வாழும் மார்வாடி-பனியா கும்பலே!
தமிழரைக் கொன்ற கொலைகாரன் அனில் அகர்வாலை நிகழ்ச்சிக்கு அழைப்பாயா?
உன் திமிரை தமிழ்நாடு அடக்கும்!

***

தூய நிலம், காற்றுக்காகப் போராடிய தமிழர்கள் 15 பேரை கொன்ற கொலைகாரன் அனில் அகர்வாலே! தமிழ்நாட்டுக்குள் நுழையாதே!

***

தூத்துக்குடியில் தமிழரைக் கொன்ற கொலைகாரன் ஸ்டெர்லைட் அனில் அகர்வால் ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை வருகிறார்! தூத்துக்குடி தியாகிகளை கொச்சைப்படுத்திய போராளிகளை இழிவுபடுத்திய கனிமவளக் கொள்ளையன் வருகிறார்!  மானமுள்ள தமிழரே, அணிதிரண்டு வாரீர்!

***

மார்வாடி – பனியா கும்பலே! தூத்துக்குடியில் தமிழரைக் கொன்ற கொலைகாரனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா? ஸ்டெர்லைட் அனில் அகர்வாலை பள்ளி நிகழ்வுக்கு அழைக்காதே! தமிழ்நாட்டை சீண்டாதே!

***


மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

மணிப்பூர் கொடூரத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர்கள்!

மணிப்பூர் கொடூரத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ரோஹிங்கியா அகதிகளை சித்திரவதை செய்யும் பாசிச மோடி அரசு!

0

ம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிரா நகர் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளான நுமினா பேகம் மற்றும் அவரது கணவர் முகமது சலீம் ஆகியோர் ஜூலை 19 அன்று தங்களது குழந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள கைவிலங்குடன் அழைத்துவரப்பட்டனர்.

ஜூலை 18 அன்று தடுப்பு மைய அதிகாரிகள், தங்களது அவல நிலையை எதிர்த்துப் போராடிய ரோஹிங்கியா அகதிகளின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். அந்தப் புகையின் காரணமாக பிறந்து 40 நாட்களே ஆன நுமினாவின் குழந்தை இறந்துவிட்டதாக அங்கிருந்த ரோஹிங்கியா மக்கள் தெரிவித்தனர்.

ஆனால், தடுப்பு மைய அதிகாரிகள் அக்குழந்தை பிறந்ததுமுதலே உடல்நலம் குன்றி இருந்ததாகத் தெரிவித்தனர். இது ஹிரா நகர் தடுப்பு மையத்தில் நடைபெறும் இரண்டாவது மரணமாகும்.

இறுதிச் சடங்கில் பங்கேற்க நுமினா பேகம் மற்றும் அவரது 17 வயது மகன் ஆகியோர் கைவிலங்குடன் அழைத்துவரப்பட்ட காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. மற்றொரு காணொலி ஒன்றில் நுமினா பேகம் கைவிலங்குடன் பெண் போலீசு ஒருவரால் அழைத்துவரப்படுவதும் சில ரோஹிங்கியா பெண்கள் அவருக்கு ஆறுதல் கூறுவதும் பதிவாகியுள்ளது.


படிக்க: காஷ்மீர் தடுப்பு மையம்: தீவிரமாகப் போராடும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்!


“அவர்களை கைவிலங்குடன் பார்த்ததும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். சலீம் மற்றும் அவரது மூத்த மகன் ஆகியோரின் கைவிலங்குகள் இறந்த குழந்தையின் இறுதிச்சடங்கு பிரார்த்தனையின் போதுகூட அகற்றப்படவில்லை. அவர்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கைவிலங்குடன் வைக்கப்பட்டிருந்தனர். பின்பு, தடுப்பு மையத்திற்குத் திருப்பி அழைத்துச் செல்லப்பட்டனர்” என்று ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த மூத்த நபர் ஒருவர் கூறினார்.

“கடுமையான குற்றவாளிகளைக் கூட இவ்வாறு நடத்த மாட்டார்கள். ரோகிங்கியாக்களான நாங்கள் மனிதர்கள் இல்லையா? இந்தியாவில் இப்படி நாங்கள் மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்படுவோம் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. இப்படி இழிவாக நடத்தப்படுவதை எதிர்த்து எங்களால் போராடக்கூட முடியவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

“ரோஹிங்கியா அகதிகள் அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களின் நடமாட்டத்திற்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், அவர்களைக் கைதிகளைப் போல நடத்தக்கூடாது. கைதிகளாக இருந்தாலும் கூட, அவர்கள் தப்பிவிடுவார்கள் என்ற அச்சம் இருந்தாலோ அல்லது அபாயகரமானவர்களாக இருந்தாலோ மட்டுமே அவர்களுக்குக் கைவிலங்கிடப்படும்” என்று முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி-யான எம்.எஸ். லோன் கூறினார். போலீசு அதிகாரி ஒருவரே ரோஹிங்கியாக்களை இவ்வாறு நடத்துவது தவறு என்று கூறுகிறார்.

ஜம்மு-காஷ்மீரின் சிறார் நீதி சட்டவிதிகள், 2021 பதினெட்டு வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு கைவிலங்கிடுவதைத் தடை செய்கிறது. ரோஹிங்கியா தம்பதியின் மூத்த மகனுக்கு 17 வயது மட்டுமே ஆகியுள்ளதால் இந்திய சட்டப்படி அவர் மைனராகக் கருதப்படுவார்.

2012-ஆம் ஆண்டு மியான்மரில் ரோஹிங்கியாக்களுக்கு எதிராக பெரிய அளவில் வன்முறைகள் நடந்ததால் அங்கிருந்து உயிர் தப்பி சலீம் மற்றும் அவரது சகோதரர் பரீத் ஆலம் ஆகியோர் இந்தியாவுக்கு வந்ததாக சலீம் தம்பதியின் உறவினர்கள் தெரிவித்தனர்.


படிக்க: இரக்கமின்றி ரோஹிங்கியாக்களை திரும்ப அனுப்பியது இந்தியா!


“மியான்மரில் உள்ள படைகள் எங்களை கொன்று சித்ரவதை செய்து வருகின்றன. எங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் எங்கள் வீடுகளை விட்டு ஓடிவந்தோம்” என்று சலீமின் அண்ணி பாத்திமா பேகம் கூறினார்.

“சலீம் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ஜம்முவில் சிறு வேலைகளை செய்து வந்தார். நாங்கள் இங்கே பாதுகாப்பாக உணர்ந்தோம். ஆனால் அதே ஆண்டில் சலீம் போலீசால் கைது செய்யப்பட்டார். எங்கள் துயரங்களுக்கு முடிவே இல்லை. அப்போது அவரிடம் அகதி அட்டை (refugee card) இல்லை. எனவே, நாங்கள் உடனடியாக டெல்லி சென்று அகதி அட்டைகளைப் பெற்றோம்” என்று அவர் மேலும் கூறினார்.

அகதி அட்டைகள் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையரால் (U.N. High Commissioner for Refugee) வழங்கப்படும்.

“2021-ஆம் ஆண்டில், சலீமின் மனைவி மற்றும் மூத்த மகன் உட்பட ஜம்முவில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட அகதிகள் சரிபார்ப்புக்கு (verification) அழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் போலீசால் கைது (detained) செய்யப்பட்டனர்” என்று பாத்திமா கூறினார்.

அச்சமயம் கைது செய்யப்பட்ட ரோஹிங்கியா அகதிகள் அனைவரும் ஹிரா நகர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அந்த சிறை மார்ச் 5, 2021 அன்று தடுப்பு மையமாக அறிவிக்கப்பட்டது.

பின்பு, ஜம்மு காஷ்மீர் அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் “சட்ட அமலாக்க நிறுவனங்களால் கண்டறியப்பட்ட அனைத்து சட்டவிரோத குடியேறிகளும் அந்த தடுப்பு மையத்தில் தங்கவைக்கப்படுவார்கள். மேலும், இந்த நபர்களின் குடியுரிமை சரிபார்க்கப்பட்டு பயண ஆவணங்கள் வழங்கப்பட்டவுடன் விரைவாக நாடு கடத்தப்படுவார்கள். அதற்கு அவர்கள் எல்லா நேரங்களிலும் உடல் ரீதியாக தகுதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

“சலீம் ஜம்மு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். நுமினா கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியிருந்த போது சலீமும் ஹிரா நகர் தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டார்” என்று பாத்திமா கூறினார்.

அவர்கள் இருவரும் ஹிரா நகர் தடுப்பு மையத்தில் 2021-ஆம் ஆண்டில் ஒன்றிணைந்தனர். இந்த தம்பதியினருக்கு ஜூலை 19 அன்று இறந்த குழந்தை உட்பட மேலும் இரண்டு குழந்தைகள் தடுப்பு மையத்தில் பிறந்தது.

இந்தியாவில் ரோஹிங்கியா அகதிகளின் அவல நிலைக்கு சலீம் – நுமினா தம்பதியினரின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.

ரோஹிங்கியா அகதிகளால் ஜம்மு பகுதி முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்டதாக மாறிவிடும் என்று கூறி, பா.ஜ.க-வும் சங்க பரிவார கும்பல்களும் ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்று வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

மியான்மரில் ஒடுக்குமுறைக்கு அஞ்சி உயிர் தப்பி வந்த ரோஹிங்கியா அகதிகளை முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக காவி பயங்கரவாத அரசு மனிதாபிமானமின்றி – தீவிரவாதிகள் போல் சித்தரிக்கிறது – அடிமைகளாக சித்திரவதை செய்கிறது. பாசிஸ்டுகளிடம் எப்படி மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்!


பொம்மி

விளை நிலங்களில் புல்டோசர்: NLC அடாவடித்தனம்! | தோழர் துணைவேந்தன்

விளைச்சலுக்கு காத்திருக்கும் நெற்பயிற்களை புல்டோசர் வைத்து நாசம் செய்யும் என்.எல்.சி – கடலூர் மாவட்ட ஆட்சியரின் 30 புல்டோசர்கள்!

நிலமாஃபியாக்கள் செய்யும் வேலையல்லவா இது!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!

ர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலும் கிளைகளைப் பரப்பி அம்மாநில அரசுகளின் பால் கூட்டுறவு உற்பத்தி நிறுவனங்களை ஒழித்துக்கட்ட முயற்சிக்கும், குஜராத் மாநில அரசின் பால் கூட்டுறவு உற்பத்தி நிறுவனமான அமுல், தமிழ்நாட்டின் பக்கமும் தலையைக் காட்டியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் போச்சம்பள்ளி சிப்காட் அருகேயுள்ள ஓலப்பட்டி பகுதியில் தன்னுடைய முதல் பால் குளிரூட்டும் நிலையத்தை தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஏழாயிரம் லிட்டர் பால் கொள்முதலில் ஈடுபடுவதோடு, அதில் கிட்டதட்ட மூவாயிரம் லிட்டரை ஆந்திராவில் உள்ள தனது நிறுவனத்திற்கும் அனுப்பி வருகிறது.

தமிழ்நாட்டின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான ஆவினை ஒழித்துக்கட்ட வேலை செய்யும் அமுல் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. கடந்த மே மாதத்தில், அமுல் நிறுவனத்தை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாகக் கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல்செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும்” என சுட்டிக்காட்டி இருந்தார். அக்கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் வந்ததாகத் தெரியவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதும்போது, பால் கொள்முதல் செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்த அமுல், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில கிராமங்களில் பால் கொள்முதலில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய வட மாவட்டங்களிலும் தனது கொள்முதலை விரிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. ஆவின் கூட்டுறவு நிறுவனத்தின் கீழ் உள்ள பால் உற்பத்தியாளர்களை தன் பக்கம் கவர்ந்து இழுப்பதற்காக, நயவஞ்சகமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.


படிக்க: அமுல் மூலம் ஆவினை அழிக்கத்துடிக்கும் மோடி அரசு – பின்னணியில் அம்பானி!


பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு ஆவின் வழங்கும் கொள்முதல் விலையை விட அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்கிறது அமுல். அதை அமுல் நிறுவனம் மறுத்தாலும், தரத்தைப் பொறுத்து ஆவின் லிட்டருக்கு ரூ.28 முதல் ரூ.32 வரை கொடுத்து கொள்முதல் செய்யும் பாலை, அமுல் நிறுவனம் ரூ.34 முதல் ரூ.38 வரை கொடுத்து கொள்முதல் செய்வதாக அப்பகுதி விவசாயிகளே தெரிவிக்கின்றனர். மேலும் அமுல் தனது கொள்முதல் பாலுக்கான தொகையை வாரந்தோறும் வழங்கிவிடுவதால், பால் உற்பத்தியாளர்கள் இயல்பாக அமுலை நாடிச் செல்ல விரும்புகின்றனர்.

அமுல் நிறுவனத்தின் நுழைவும் இதுபோன்ற அதன் நடவடிக்கைகளும் ஆவின் நிறுவனத்தை ஒழித்துக்கட்டும் உள்நோக்கம் கொண்டது என்பதைத் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.

ஆவினின் நிர்வாகச் சீர்கேடுகளுக்காக அமுலை வரவேற்க முடியுமா?

தமிழ்நாட்டில் அமுல் பால் கொள்முதல் செய்வதை ஒரு சிலர் ஆதரிக்கின்றனர். இது ஆக்கப்பூர்வமான தொழில்போட்டியை ஏற்படுத்தும் என்றும், விவசாயிகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஊடகங்களில் கருத்துசொல்லும் சிலர் தேன்சொட்டப் பேசுகின்றனர்.

“ஏற்கெனவே பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள இத்துறையில், கூடுதலாக அமுல் நிறுவனமும் வருகிறது என்பதைத் தவிர அதனால் பெரும்பாதிப்பு நிகழ்ந்துவிடும் எனச் சொல்ல முடியாது. அதைவிடவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நடைமுறைப் பிரச்சினைகளை அரசு முதலில் கவனிக்கட்டும்” என்று கூறியுள்ளார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம்.

ஆவினில் ஊழலும் நிர்வாகச் சீர்கேடுகளும் நிலவுவது உண்மைதான். பால் உற்பத்தியாளர்களுக்கு பாலின் தரத்தை காரணம்காட்டி அரசு நிர்ணயித்த விலையைக் கூட அதிகாரிகள் கொடுப்பதில்லை; கொள்முதல் செய்த பாலுக்கான பணத்தையும் இழுத்தடித்து இரு மாதங்களுக்கு பிறகே கொடுக்கின்றனர். மேலும் பால் உற்பத்தியாளர் சங்கங்களும் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்காரணங்களால் கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கையும், தினசரி பால் கொள்முதலும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. 12 ஆயிரமாக இருந்த கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கையானது 9 ஆயிரத்து 673 ஆகக் குறைந்துள்ளது.

பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டரில் இருந்து 30 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளது. ஆனால் ஆவினுக்கு நாள் ஒன்றுக்கான பால் தேவை 38 லட்சம் லிட்டர். எனவே பற்றாக்குறையைப் போக்க, மகாராஷ்டிராவில் இருந்து பால் பவுடரை இறக்குமதி செய்து, அதைப் பாலாக மாற்றுகின்றனர். தமிழ்நாட்டிற்குள் ஆவினின் நிர்வாகச் சீர்கேடுகளையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுதான் அமுல் நுழைகிறது.

ஆனால், ஏற்கெனவே தமிழ்நாட்டில் பால் கொள்முதலில் ஈடுபடும் ஆரோக்கியா, ஹட்சன் போன்ற நிறுவனங்களைப் போல நாம் அமுல் நிறுவனத்தையும் கருத முடியாது. ஆவினில் நிலவும் பிரச்சினைகளால் அமுலை ஆதரிக்கவும் முடியாது. ஏனெனில் அமுலின் வரவு ஆவின், நந்தினி போன்ற மாநில பால் உற்பத்திக் கூட்டுறவு நிறுவனங்களை ஒழித்துக்கட்ட விழையும் ஒன்றிய அரசின் சதியாகும்!

பிற மாநில பால் உற்பத்தி நிறுவனங்களை கழுத்தறுக்கும் ஒன்றிய அரசு!

இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் ஐஸ்கிரீம் போன்ற பால் சார்ந்த பொருட்களை மட்டும்தான் அமுல் விற்பனை செய்தது. தற்போதுதான் கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களைக் கட்டியமைத்து அதன் மூலம் பால் கொள்முதல் செய்யும் வேலையில் இறங்கியுள்ளது. அதாவது ஒன்றிய அரசு அமுல் மூலம் ஆவினை அழிக்கும் வேலையை துவங்கியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பல மாநில கூட்டுறவுச் சங்கங்கள் (Multi State Co-operative Society Act) சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது மோடி அரசு. இதன் மூலம் மாநில அரசுகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மீதிருக்கும் உரிமைகளைப் பறித்துள்ளது.

இதற்கு முன்னர், அமுல் போன்ற பல மாநில கூட்டுறவுச் சங்கத்துடன் வேறு ஏதேனும் கூட்டுறவு சங்கத்தை இணைப்பதாக இருந்தால் மாநில கூட்டுறவுச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். தற்போது கூட்டுறவு சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பெரும்பான்மை அடிப்படையில் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் எந்த ஒரு கூட்டுறவு சங்கத்தையும் பல மாநில கூட்டுறவு சங்கத்துடன் இணைக்க முடியும் என்று திருத்தங்களை மேற்கொண்டுள்ளது மோடி அரசு.

மேலும் “கூட்டுறவு தேர்தல் ஆணையம்” என்ற புது அமைப்பை உருவாக்கியிருக்கிறது மோடி அரசு. இதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்களுக்கான நிர்வாகிகளை ஒன்றிய அரசே நியமிக்கிறது. இச்சட்டத் திருத்தங்களுக்கு பிறகுதான் கர்நாடக மாநிலத்தின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான நந்தினியை பல மாநில கூட்டுறவு அமைப்பான அமுலுடன் இணைக்க முயற்சி எடுத்தது மோடி அரசு. ஆனால் கர்நாடக மக்களின் எதிர்ப்பால் அது தற்காலிகமாகப் பின்வாங்கப்பட்டுள்ளது.

எனவே, ஆவினை அழிக்கும் வேலையை செய்து வரும் அமுலை மற்ற தனியார் நிறுவனங்களோடு ஒப்பிட முடியாது. ஆவினின் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொள்ளும் அதேநேரம், ஆவினை ஒழித்துக்கட்ட முயற்சிக்கும் அமுல் நிறுவனத்தின் சதிகளையும் முறியடிக்க வேண்டும்.

அமுல் வரும் முன்னே, அம்பானி வருவார் பின்னே!

மாநில அரசுகளின் பால் கூட்டுறவு உற்பத்திச் சங்கங்களை அழித்து, ஒன்றிய மோடி அரசு எந்த அமுலை ஏகபோகமாக வளர்ப்பதற்குத் துடிக்கிறதோ அந்த அமுல் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்தியாவில் மற்ற பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தேசிய பணமாக்கல் திட்டம், உட்கட்டமைப்புத் திட்டம், தனியார்-அரசு கூட்டுறவு போன்ற பல பெயர்களில் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் மோடி அரசு, அமுலை மட்டும் வளர்த்தெடுப்பதும் – விரிவுபடுத்துவதும் ஏன்? இந்திய பால் சந்தையை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றி, மிகப்பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனத்தை கட்டியமைக்க முயல்கிறதா மோடி அரசு?

அப்படியொரு ‘அதிர்ச்சி’ நமக்கு வேண்டாம். அமுலை ஏகபோகமாக வளர்ப்பதற்குப் பின்னே, இந்திய பால் உற்பத்தித் துறையையும் சந்தையை கைப்பற்றுவதற்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கும் அம்பானியின் லாபவெறி ஒளிந்திருக்கிறது!

000

இந்தியாவின் முதல் பால் உற்பத்தி கூட்டுறவு நிறுவனமான அமுல் குஜராத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டதைத் தொடர்ந்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் கூட்டுறவு சங்கங்களை கட்டியமைப்பதற்காக, “தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம்” உருவாக்கப்பட்டது. பால் உற்பத்தி, மாடு வளர்ப்பு போன்ற பணிகள் இதன் வழிகாட்டுதல்களின்படிதான் நடக்கிறது. பால் உற்பத்தியை அதிகப்படுத்தும் வெண்மைப் புரட்சி இவ்வமைப்பின் மூலம்தான் இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தில் கார்ப்பரேட்டுகளை நுழைக்கும் வகையில் மோடி அரசு சட்டத்திருத்தம் மேற்கொண்டுள்ளது.

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக தனியார் நிறுவனங்களைச் சார்ந்தவர் இடம்பெறலாம் என்றும், கூட்டுறவுச் சங்க அமைப்பு முறையோடு கூடுதலாக வேறு நிறுவன அமைப்பு முறைகளைக் கூட கொண்டுவரலாம் என்றும், தே.பா.மே.வாரியத்தின் துணை நிறுவனங்களான மாட்டுத் தீவன உற்பத்தி மற்றும் பால் குறித்து ஆய்வு செய்யக்கூடிய நிறுவனங்களின் பங்குகளை ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் விற்கலாம் என்றும் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இச்சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, அம்பானி பால் மற்றும் தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் சந்தையில் நுழைய உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் அமுல் நிறுவனத்தில் கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து அனுபவம் பெற்ற, பல ஆண்டுகளாக மேலாண்மை இயக்குனராக பணியாற்றிய ஆர்.எஸ்.சோதி தன் பதவியை ராஜினாமா செய்து அமுல் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்துள்ளார்.

மேலும் ரிலையன்ஸ் குழுமம், பால் மற்றும் பதப்படுத்தபட்ட உணவுப் பிரிவின் வணிகத் தலைவராக சந்தீப் கோஷ் என்பவரை நியமித்துள்ளது. இவர் மில்க் மந்திரா (milk mantra) மற்றும் லாக்டலிஸ் இந்தியா (lactalis india) ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவராவார்.


படிக்க: தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை அழிக்கத் துடிக்கும் குஜராத்தின் அமுல்! | மக்கள் அதிகாரம்


ஒருபுறம் பால் மற்றும் பால் பொருட்கள் வர்த்தகத்தில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களை தன் நிறுவனத்தில் இணைப்பதும், மறுபுறம் பால் சார்ந்த பொருட்களின் விற்பனையைத் தொடங்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் ரிலையன்ஸ் குழுமம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் சந்தையைக் குறிவைத்து வேலை செய்வதை உறுதியாக்குகிறது.

இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கும்போது, மோடி அரசின் சட்டத்திருத்தங்களின் நோக்கம் தனியார் – அரசு கூட்டுறவுக் கொள்கையின் (Public-Private Partnership) மூலம் அமுலின் கட்டமைப்புக்குள் அம்பானியை நுழைப்பதன் ஒருபகுதியாக இருக்கலாம் என்று கருதத்தோன்றுகிறது.

2007-ஆம் ஆண்டு தொடங்கி சுமார் பத்து ஆண்டுகள், “டெய்ரி லைஃப் மற்றும் டெய்ரி ப்யூர்” என்ற பிராண்டின் கீழ் ஏற்கெனவே பால் பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்ட வந்த அம்பானி, பின்பு தன் கட்டமைப்புகளை 2016ஆம் ஆண்டு மொத்தமாக “ஹெரிடேஜ் ஃபுட்” நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். தற்போது சில்லறை வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துவது பற்றி திட்டமிட்டுவரும் அம்பானி, மீண்டும் பால் துறைக்குள் அடியெடுப்பதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார்.

இந்தியாவின் பால் பொருட்கள் துறையின் சந்தை, ஒவ்வொரு ஆண்டும் ஆறு சதவிகிதம் அதிகரித்துவருகிறது ஆகவே ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி தொலைத்தொடர்புத் துறையில் ஏகபோக நிறுவனமாக வளர்ந்தது போல, பால் பொருட்கள் சந்தையையும் ஆக்கிரமிக்கத் துடிக்கிறார் அம்பானி.

பால் உற்பத்தித் துறையில் எவ்வகையான கட்டமைப்புகளையும் கொண்டிராத அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை, 28 மாநிலங்களின் 222 மாவட்டங்களில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 903 கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய பால் உற்பத்திக் கட்டமைப்பைக் கொண்டுள்ள அமுல் நிறுவனத்தில் நுழைப்பதன் மூலம் அம்பானியை பால் துறையில் ஏகபோகமாக உயர்த்துவதற்கு திட்டமிடுகிறது மோடி அரசு.

அம்பானியின் இந்த ஏகபோக நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் அமுல் நிறுவனம் விரிவாக்கப்படுகிறது. எனவே, ஆவின் நிறுவனம் ஊழலும் முறைகேடுகளும் கொண்ட நிறுவனம்தானே அமுல் போட்டிக்கு வந்தால் பால் உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைக்குமே என்று நாம் கருத முடியாது. விசயத்தை அரசியல் ரீதியாக அணுகாமல் பொருளாதாரவாதக் கண்ணோட்டத்தில் இருந்து பரிசீலித்தால், அது ஒன்றிய மோடி அரசின் சதித்திட்டங்களுக்கு பலியாவதாகவே முடியும். அது அதானியின் ஏகபோக வெறிக்கு வழிவிடுவதிலேயே போய்முடியும்.

சிவராமன்
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

மீறிவந்தால் நிம்மதியாக செல்லமுடியாது | கொலைகாரன் அகர்வால் | தோழர் மருது | தோழர் புவன்

மீறிவந்தால் நிம்மதியாக செல்லமுடியாது | கொலைகாரன் அகர்வால் | மருது

ஸ்டெர்லைட் அகர்வாலை அனுமதித்தால் மக்கள் திருப்பி அனுப்புவார்கள்! | தோழர் புவன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அனில் அகர்வாலின் வருகை தூத்துக்குடி தியாகிகளை இழிவுபடுத்தும் | தோழர் திருமுருகன் காந்தி | வெற்றிச்செல்வன்

தூத்துக்குடி மக்களை படுகொலை குற்றவாளி ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் சென்னை வருகையைக் கண்டித்து மே 17 இயக்கம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, மக்கள் அதிகாரம், எஸ்.டி.பி.ஐ கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தமிழர் விடுதலை கழகம், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா, உள்ளிட்ட ஜனநாயக அமைப்பினர் இணைந்து கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

அனில் அகர்வாலின் வருகை தூத்துக்குடி தியாகிகளை இழிவுபடுத்தும் | தோழர் திருமுருகன் காந்தி

அனில் அகர்வாலை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது! | வெற்றிச்செல்வன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

 

நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!

ண்மையில் 2023-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்தன. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720/720-க்கு பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றிருந்தார். அம்மாணவனின் வெற்றியை “ஆளப்போறான் தமிழன்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுக் கொண்டாடியது தமிழ் முரசு நாளிதழ். “நீட் தேர்வில் முதலிடம் பிடித்து பிரபஞ்சத்தை திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டு மாணவன் பிரபஞ்சன்” என்பது போன்ற இடுகைகளையும் பெருமிதத்துடன் சமூக ஊடகங்களில் பலர் பகிர்வதைப் பார்க்க முடிந்தது.

பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, அம்மாணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதோடு, பரிசுப் பொருட்களையும் வழங்கியுள்ளார். மேலும், “மருத்துவப் படிப்பில் அனைவருக்கும் சமவாய்ப்பை உருவாக்கிய நீட் தேர்வை அரசியலாக்கிய தி.மு.க.விற்கு நீட் முடிவுகள் தகுந்த பாடத்தைக் கற்பிக்கும் என்று நம்புவோம்” என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

நீட் தேர்வை எதிர்க்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்கூட தங்களது அறிக்கைகளில் பிரபஞ்சனை பாராட்டிவிட்டுத்தான் நீட் தேர்வு ரத்துசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் பற்றி பேசியுள்ளனர். இது நம்மையும் அறியாமல் பாசிசக் கும்பல் தோற்றுவிக்கும் மாயையில் நீட் எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்வதாகவே அமைந்துள்ளது.

பிரஞ்சனை வாழ்த்துவதும் அனிதாவை தூற்றுவதும் ஒன்று!

நீட் தேர்விற்காக கடுமையாக உழைத்து வெற்றி பெற்றிருக்கிறார் என்று பலரும் பிரபஞ்சனைப் பாராட்டுகிறார்கள். அம்மாணவனைப் பாராட்டுவது அவர்களது தனியுரிமை. ஆனால், பிரபஞ்சனைப் பாராட்டுவதன் மூலம் “நீட் தேர்வையும் தாண்டி தமிழனால் சாதிக்க முடியும்” அல்லது “மருத்துவம் படிப்பதற்கு நீட் ஒரு தடையில்லை” என்ற பொதுக்கருத்து உருவாக்கப்படுவதை நம்மால் அனுமதிக்க முடியாது. இத்தகைய பொதுக்கருத்தை திட்டமிட்டு உருவாக்குவதன் மூலம் தமிழ்நாட்டின் நீட் எதிர்ப்புணர்வை நீர்த்துப் போகச் செய்கிறது பா.ஜ.க. கும்பல். இவற்றுக்கு நாம் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.

அனிதா உள்ளிட்டு நீட் தேர்வில் தேர்ச்சிபெற முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 20க்கும் மேல். இவ்வாறு தங்களது மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களைப் பார்த்து நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசம் கொள்வதைவிட, இரங்கல் தெரிவிப்பதும் நம்மை நாமே தேற்றிக்கொள்வதும் மட்டுமே நடந்துவருவது அவலமானது.


படிக்க: ‘நீட் விலக்கு மசோதா’ எனும் ஓட்டுக் கட்சிகளின் நாடகம் ! – தீர்வு என்ன?


இந்த பிரபஞ்சன் யார்? விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த மேல ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன். தாய், தந்தை இருவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். 10ஆம் வகுப்பு வரை தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்துவிட்டு, 11 மற்றும் 12ஆம் வகுப்பை சென்னை மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர். மேலும், அதே நிறுவனத்தின் துணை நிறுவனமான “வேலம்மாள் நெக்சஸ்” என்ற  நீட் மற்றும் ஐ.ஐ.டி. பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்.

நீட் தேர்வில் தான் வெற்றி பெற்றது குறித்து ஊடகங்களுக்கு பிரபஞ்சன் கொடுத்த பேட்டியில், “நீட் தேர்வைப் போன்ற கிராண்ட் டெஸ்ட் என்ற தேர்வை 50-க்கும் மேற்பட்ட முறை எழுதியிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். 2 ஆண்டுகளாக நீட் தேர்வில் எவ்வாறு கேள்வி கேட்பார்கள், அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றதோடு, நீட் தேர்வுக்கான பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலும் படித்திருக்கிறார். இதுவே பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் பெற முடிந்ததற்கு காரணம்.

பிரபஞ்சன் மட்டுமல்ல, நீட் தேர்ச்சியில் முதல் 10 இடங்களில் நான்கு இடங்களைப் பெற்றதாகக் கூறப்படும் தமிழ்நாட்டு மாணவர்களான கவுஸ்டவ் பவுரி, சூர்யா சித்தார்த், வருண் ஆகியோரும் பிரபஞ்சனைப் போல தனியார் பயிற்சி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணம் கொட்டிப் பயிற்சிப் பெற்றவர்கள்தான். ஆகவே நீட் என்பது  லட்சக்கணக்கில் பணம் கொட்டிப் படிக்க வாய்ப்பிருக்கிற மாணவர்களுக்கு மட்டுமே ‘வரப்பிரசாதம்’ என்பதே உண்மை. அதனால்தான் பிரபஞ்சன் “நீட் மிகவும் நல்ல தேர்வு, தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய நீட் அவசியம்” என்று பேட்டி கொடுக்கிறார்.

12ஆம் வகுப்பில் 1176\1200 எடுத்தபோதும், பிரபஞ்சன் போன்ற மாணவர்களுக்கு இருக்கும் “தகுதி” – அதாவது அரசு வேலைசெய்யும் பெற்றோர், சி.பி.எஸ்.சி.யில் படிக்கவும் பல லட்சங்களைக் கொட்டிக் கொடுத்து நீட் பயிற்சி பெற குடும்பப் பொருளாதாரம் ஆகியவை இல்லாத காரணத்தால்தான் அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

இத்தகைய ‘தகுதி’யை முன்வைக்கும் நீட் தேர்வை நாம் நியாயப்படுத்துகிறோமா. பிரபஞ்சனுக்கு வாழ்த்துச் சொல்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அதைத்தான் செய்கிறார்கள்!


படிக்க: நீட் என்னும் அயோக்கியத்தனம்


இன்னும் சொல்லப்போனால், லட்சக்கணக்கான அனிதாக்களின் மருத்துக்கல்வி கனவை பறித்தெடுப்பதன் மூலம்தான் பிரபஞ்சன்கள் முதலிடம் பெறுகிறார்கள். இது தனிப்பட்ட ஒரு மாணவன் மீது காழ்ப்புகொண்டு முன்வைக்கும் வாதமல்ல; ஒரு சமூகப் பிரச்சினை! நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை யாருக்கானது என்பது பற்றிய பிரச்சினை.

பொத்தாம் பொதுவாக இது தமிழ் மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு எதிரானது என்பதல்ல பிரச்சினை. சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமையை நீட் தேர்வு பறித்துள்ளது என்பதுதான் பிரச்சினை. ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் நீட் தேர்வின் முடிவுகளும் இதை நமக்கு துலக்கமாகக் காட்டுகின்றன.

நீட் முன்வைக்கும் ‘தகுதி’: மீண்டும் அம்பலமானது!

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படிக்கின்ற அரசுப் பள்ளி மாணவர்களது நீட் தேர்வு பங்கேற்பும், தேர்ச்சி விகிதமும் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. இந்தாண்டு நீட் தேர்வு எழுதிய 12,997 தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களில் 3,982 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதுகூட தமிழ்நாடு அரசு வழங்கிவரும் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு கிடைத்த பலனாகும். இந்த தேர்ச்சியும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டில், 12,840 அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 4,447 மாணவர்கள் வெற்றிபெற்றிருந்தனர். இதிலும்கூட வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிடுவதில்லை. அரசுக் கல்லூரிகள் கிடைக்கப்பெறாத பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு தங்களது கனவுகளை தலைமுழுகுகின்றனர்.

பின், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் முன்னேறிவருவது யார்? இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று இந்திய அளவில் முதல் 50 இடங்களைப் பிடித்த 39 மாணவர்களிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்திய ஆய்வானது இந்த கேள்விக்கு பதில் வழங்குகிறது.

இந்த ஆய்வானாது நீட் தேர்வு பிரபஞ்சன் போன்ற மேட்டுக்குடி வகையறாக்களுக்கானதுதான் என்பதை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியிருக்கிறது. அந்த ஆய்வின்படி, பிரபஞ்சனையும் சேர்த்து மொத்தம் 29 மாணவர்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள். மேலும், 39 மாணவர்களில் 38 மாணவர்கள் நீட் தேர்விற்காக தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள்; ஒருவர் தனியாகப் பயிற்சி பெறவில்லையென்றாலும் டெல்லியின் புகழ்பெற்ற தனியார் பள்ளியொன்றில் படித்தவர்.

இந்த 39 மாணவர்களும், டெல்லி, புனே, சென்னை, கொல்கத்தா, நாக்பூர், கோட்டா, விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற பெரும் நகரப் பகுதிகளைச் சார்ந்தவர்கள். பணக்காரக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள். சாதிரீதியாகவும் இவர்களில் 29 மாணவர்கள் பொதுப் பிரிவைச் சார்ந்தவர்கள், 8 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், 2 மாணவர்கள் மட்டுமே பட்டியலின வகுப்பையும் சார்ந்தவர்கள்.

நீட் பறிப்பது மருத்துவக் கல்வியை மட்டுமல்ல!

எல்லாவற்றையும் தாண்டி நீட் தேர்வு என்பது அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல, அரசு மருத்துவக் கட்டமைப்பை பாதுகாப்பது தொடர்பானது, மக்கள் நலன் மீது அக்கறைகொண்ட மருத்துவர்களை உருவாக்குவது தொடர்பானது.

இன்று நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டதாக தமிழ்நாடு விளங்குவதற்கும், சமூக ரீதியாக பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு கல்வியை கொண்டுபோய் சேர்ந்த தமிழ்நாட்டின் மக்கள் நல அரசுக் கொள்கைக்கும் தொடர்பிருக்கிறது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மருத்துவக் கல்வியை தேர்வுசெய்த கடந்த தலைமுறைகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் உழைப்பினால்தான் இன்று தமிழ்நாட்டில் பெரும்பான்மை கிராமப்புறங்களிலும் ஆரம்ப சுகாதார சேவை கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், பல லட்சம் ரூபாய் முதலீடுசெய்து நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்களால், மருத்துவத்தை சேவையாக கருத முடியுமா? அவர்கள் மலைக்கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவார்களா? தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ஒரு செங்கலை நகர்த்தும் வகையிலாவது இவர்களின் செயல்பாடு இருக்குமா? நிச்சயமாக இருக்கப்போவதில்லை.

நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி நிறுவனங்களின் கொள்ளைக்கானது மட்டுமல்ல, மக்கள் நல அரசு என்ற கொள்கையை கைவிட்டுவிட்டு 90களுக்கு பின்பு தனியார்மய – தாராளமயக் கொள்கையை பின்பற்றத் தொடங்கியுள்ள இந்திய அரசு, அரசு மருத்துவக் கட்டமைப்பை ஒழித்துக்கட்ட மேற்கொண்டுவரும் முயற்சிகளின் ஒருபகுதிதான் நீட் தேர்வு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

நீட் தேர்வு என்பதை தவிர்க்க முடியாது, அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்வதுதான் ஒரே தீர்வு என்பது இன்று ஏறத்தாழ அனைத்து நடுத்தர வர்க்கப் பெற்றோர்களது கருத்தாகவும் உள்ளது. நீட் தேர்வை எதிர்ப்பவர்கள்கூட, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும், அரசு நீட் பயிற்சி மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைக்கத் தொடங்கிவிட்டார்கள். ‘வேறு வழியில்லை’ என்பதுதான் அவர்களது கருத்தாக உள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டமும் முடிவில்லாத தொடர்கதையாகச் சென்றுகொண்டிருக்கிறது. 2017இல் அனிதா மரணத்தை ஒட்டி நடைபெற்ற மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்களைப் போல, மீண்டும் ஒரு மாணவர் எழுச்சி திட்டமிட்டு கட்டமைக்கப்பட வேண்டியிருக்கிறது. அதுதான் இந்த கையறுநிலையை முடிவுக்கு கொண்டுவரும்.


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

கலவரத்திற்கு பாஜக அரசுதான் காரணம்: மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ

1

ணிப்பூரில் மே 3-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்தக் கலவரம் தவிர்த்திருக்கப்படக்கூடியது. அரசு உடந்தையாக இருப்பதால்தான் இத்தனை நாட்களாகத் தொடர்கிறது” என்று மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ பாவோலியன்லால் ஹாக்கிப் (Paolienlal Haokip) கூறியுள்ளார். மணிப்பூர் பிரச்சினை குறித்து இந்தியா டுடே பத்திரிகையில் எழுதியுள்ள அவர் இதை வெளிப்படுத்தியுள்ளார்.

“முற்றிலும் இன-வகுப்புவாத கலவரமாகத் தொடங்கிய மணிப்பூர் வன்முறையை ’நார்கோ பயங்கரவாதிகளுக்கு’ (போதைப்பொருள் கும்பல்களுக்கு) எதிரான அரசின் போராக’ சித்தரிக்க முதல்வர் முயற்சி செய்தார். இதன்மூலம் இந்தக் கலவரத்துக்கு அரசும் உடந்தையாக இருப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது” என்று ஹாவோகிப் தனது இந்தியா டுடே கட்டுரையில் எழுதியுள்ளார்.

”இம்பால் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலையடிவாரத்தில் உள்ள குக்கி – ஜோ குடியிருப்புகளைத் தாக்கி எரிப்பதில் தீவிரமாகச் செயல்படும் மைதேயி வன்முறை குழுக்களுக்கு உதவுவதற்காக அரசுப் படைகளைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தவே ’நார்கோ பயங்கரவாதிகள்’ கதையாடல் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை” என்று பாவோலியன்லால் ஹாக்கிப் எழுதியுள்ளார்.

”இந்த இன வன்முறை, பழங்குடி குக்கி – சோ மக்களால் இத்தகைய கடுமையான அநீதிகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராகக் கருதப்படுகிறது; அதே நேரத்தில் மைதேயி பிரிவினர் இதைப் பழங்குடி நிலத்தை உரிமை கோருவதற்கான போராகப் பார்க்கிறார்கள்” என்று ஹவோகிப் மேலும் கூறியுள்ளார்.


படிக்க: மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தான் குற்றவாளிகள்!


“மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மைதேயி லீபுன் மற்றும் ஆரம்பாய் தெங்கோல் போன்ற பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ளார். இந்தக் குழுக்கள் குக்கி இன மக்களைத் துடைத்தெறிவதற்காகச் செயல்படும் குழுக்கள். ஒரு பக்கச்சார்பான அரசாங்கம் அமைதிக்கு தீங்கு விளைவிக்கும். மணிப்பூரில் இதுபோன்ற பாரபட்சம் எப்போதும் ஓரளவு இருந்தபோதிலும், தற்போதைய முதல்வரின் கீழ் அது அதிகரித்தது” என்றும் ஹாக்கிப் எழுதியுள்ளார்.

முன்னதாக, கடந்த மே மாதம் ஹாக்கிப் உள்ளிட்ட மணிப்பூரின் 10 பழங்குடி எம்.எல்.ஏ-கள் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்கிற்குக் கடிதம் ஒன்றை எழுதினர். கடிதம் எழுதிய 10 பேரில் 7 பேர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள். அதில் அவர்கள், பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக இருக்கும் மைதேயி சமூகத்தால் இந்த வன்முறை நிகழ்த்தப்படுவதாகவும், ஆளும் மாநில பா.ஜ.க அரசாங்கத்தால் மறைமுகமாக ஆதரிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.

அந்தக் கடிதத்தில் அவர்கள் குக்கி மக்கள் பெரும்பான்மை வகிக்கும் மாவட்டங்களுக்குத் தனி நிர்வாகத்திற்கான உரிமை வழங்கப்படவேண்டும் என்று கோரியிருந்தனர். அக்கோரிக்கையை நிராகரித்த முதல்வர் பிரேன் சிங், ”மணிப்பூரின் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும்” என்று கூறியிருந்தார்.


படிக்க: மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!


நார்கோ பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளதாகக் கூறும் முதல்வர் பிரேன் சிங்கின் யோக்கியதையை முன்னாள் மணிப்பூர் போலீசு அதிகாரியான தௌனோஜம் பிருந்தாவின் (Thounaojam Brinda) நீதிமன்ற ஆவணம் அம்பலப்படுத்துகிறது. 2020-ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டிருந்த போதைப்பொருள் கும்பலின் தலைவரைக் (drug lord) காவலில் இருந்து விடுவிக்க பிரேன் சிங்கிடமிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அவர் அந்த ஆவணத்தில் கூறியிருந்தார். மேலும், பிரேன் சிங் அரசு தனக்கு வழங்கிய வீரதீர செயலுக்கான மாநில போலீஸ் பதக்கத்தை அவர் திருப்பி அளித்துவிட்டார்.

ஆளும் பாஜக அரசு குக்கி மக்களைத் திட்டமிட்டுத் தாக்கி வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பு என்பதை மூடுதிரையாகப் பயன்படுத்தி காடுகளிலும் மலைகளிலும் இருந்து குக்கி மக்களை அகற்றும் பணியைச் செய்து வருகிறது. இதற்கான கருவியாக குக்கி மற்றும் மைதேயி மக்களுக்கு இடையிலான முரண்பாட்டை பயன்படுத்திக் கொண்டது. மேலும், குக்கி மக்களைக் கொன்று குவிக்கும் மைதேயி லீபுன் மற்றும் ஆரம்பாய் தெங்கோல் ஆகிய பயங்கரவாதக் குழுக்கள் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொண்டவை. இதன்மூலம், மணிப்பூர் கலவரம் என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலால்தான் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பது பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது.

மணிப்பூரில் ஆட்சி புரியும் பாசிச பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரே கலவரத்திற்கு பா.ஜ.க தான் காரணம் என்று கூறியிருக்கிறார். இனிமேலும் இந்த காவி கும்பலால் தனது கைகளில் இரத்தம் படிந்திருப்பதை மறைக்க முடியாது.


பொம்மி

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | திருவாரூர் – கோவை – விருதாச்சலம்

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

பற்றி ஏரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! என்ற தலைப்பில் மெய்தி இன வெறியர்களால் குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், மெய்தி – குக்கி ஆகிய இரு இன மக்களுக்கிடையே மத கலவரத்தை துண்டிவிட்ட ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடைசெய்ய வேண்டும் என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 25) நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திருவாரூர் மக்கள் அதிகாரத்தின் மாவட்ட பொருளாளர் தோழர் முரளி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்ட மக்கள் அதிகாரம், இந்திய பொதுவுடைமைக் கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்,  SDPI,  மே 17 இயக்கம்,  M.C.ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளை சார்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு கண்ட உரையாற்றினார். 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இறுதியாக, திருவாரூர் மாவட்ட  மக்கள் அதிகாரத்தன் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆசாத் அவர்கள் கண்டனம் உரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை வீழ்த்தாமல் வாழ்வில்லை என்பதை மீண்டும் மணிப்பூர் நிரூபிக்கிறது என்றார்.

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை உருவாக்க போராடுவோம்!

தகவல்:
மக்கள் அதிகாரம், திருவாரூர் மாவட்டம்

000

பற்றி எரியும் மணிப்பூர்; பற்றவைத்தது காவி;
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி தடை செய்! |கோவையில் ஆர்ப்பாட்டம்

பாதிக்கபட்ட மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக கோவை மக்களிடம் பிரச்சாரம் செய்து,  மக்களுடன் இணைந்து கண்டனம் தெரிவிக்கபட்டது.

தகவல்
மக்கள் அதிகாரம்
கோவை- 94889 02202

000

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | விருதாச்சலத்தில் ஆர்ப்பாட்டம்

விருதாச்சலம் பாலக்கரையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக (21.07.2023) மாலை 5:30  மணி அளவில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் மோடி அரசை பதவி விலகக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் தோழர் அசோக் குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் மோகன்ராஜ், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ராஜேந்திரன், சி.பி.ஐ.எம்.எல் மற்றும் தோழர் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடை என்று ஆர்ப்பாட்டம் முழங்கியது.

தகவல்:
மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம்.

பற்றி எரிகிறது மணிப்பூர் – கவர்மண்ட் வேடிக்கை பாக்குது! கொந்தளிக்கும் மக்கள்

பற்றி எரிகிறது மணிப்பூர் – கவர்மண்ட் வேடிக்கை பாக்குது! – கொந்தளிக்கும் மக்கள்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மணிப்பூர் கொடூரத்திற்கு எதிராக மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ந்தியாவையே உலுக்கிய கொடூரச் செயல்தான் மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த மனித தன்மையற்ற கொடூர சம்பவம். இந்த சம்பவமானது கடந்த மே நான்காம் தேதி மணிப்பூர் கலவரம் தொடங்கிய நாளன்று நிகழ்ந்தேறியது. தற்போது இந்த கொடூர சம்பவமானது 77 நாட்கள் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொடூரச் செயலை நிகழ்த்திய மெய்தி இனவெறியர்கள் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் கைக்கூலிகள்.

இக்கொடூர சம்பவத்திற்கு மணிப்பூர் மாநில போலீசு உடந்தையாக இருந்தது அம்பலமாகியுள்ளது. மூன்று மாதங்களாக பற்றி எரியும் மணிப்பூர் கலவரம் குறித்து பாசிஸ்ட் மோடி வாயைத் திறக்கவில்லை. 77 நாட்கள் பிறகு வெளிவந்த வீடியோவை கண்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.

மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பல ஜனநாயக சக்திகளும் பல கல்லூரி மாணவர்களும் போராட்ட தொடங்கியுள்ளனர்.

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மணிப்பூர் வன்முறைக்குக் காரணமான பாசிச மோடி அரசை எதிர்த்து இன்று (25.07.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பாசிச மோடி அரசைப் பதவி விலகுமாறு முழக்கமிட்டனர்.

தகவல்:
வினவு களச்செய்தியாளர்