Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 95

என்னை போன்ற முஸ்லிம்களுக்கு ராமன் கோவில் சொல்லும் செய்தி! | ஸியாவுஸ் சலாம்

“தி இந்து” பத்திரிகையில் இணை ஆசிரியராக உள்ள ஸியாவுஸ் சலாம் (ZIYA US SALAM), “இந்து இந்தியாவில் முஸ்லிமாக இருப்பது” (Being Muslim in Hindu India) என்ற நூலை எழுதியுள்ளார். பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியாவில் முஸ்லிம் மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக்கப்பட்டுவருவது குறித்தும், ராமன் கோவில் திறப்பு விழாவிற்கு முன்பு இந்துத்துவ வெறியர்களால் முஸ்லிம் மக்கள் எந்தளவிற்கு அச்சுறுத்தல்களுக்குள்ளாகிறார்கள் என்பது குறித்தும் ஸியாவுஸ் சலாம் பகிர்ந்த அனுபவத்தின் மொழியாக்கம்.

ந்துமதவெறியர்களை கொண்ட இந்தியாவில் ஒரு முஸ்லிமாக இருப்பது அந்நியமாகவும் மனசோர்வாகவும் இருக்கிறது. முஸ்லிம்கள் 20 கோடி பேர் இருக்கலாம். ஆனால், இன்றைய இந்தியாவில் முஸ்லிம்கள் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். வட இந்தியாவின் சில பகுதிகளில் ஒரு முஸ்லிமாக இருப்பது பாதுகாப்பானது அல்ல.

1527 முதல் 1992 வரை இருந்த பாபர் மசூதி, இந்துத்துவ கரசேவகர்களால் சுக்குநூறாக்கப்பட்ட இடத்தில், இன்று (ஜன. 22) அயோத்தியில், ராமன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீப நாட்களில் கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுதான் பேசுபொருளாக இருக்கிறது.

பாபர் மசூதி இடித்து நொறுக்கும் வரை போலீசும் அரசும் ஒதுங்கியே நின்று வேடிக்கைப் பார்த்தது. இதற்கு அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு இடங்களில் இந்துமதவெறியர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இக்கலவரத்தில் 2,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 2019-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது “சட்டத்தின் ஆட்சியின் அதிர்ச்சிக்குரிய மீறல்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், நிலத்தை இந்து தரப்பினரிடம் ஒப்படைத்தது.

இன்று இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் மீது ராமனுக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டியெழுப்பப்படுகிறது. பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தார் என்றும் 16 முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் பெரும்பகுதியை முகலாயர்கள் ஆண்டபோது, இந்து கோவில்களை இடித்துவிட்டனர் என்றும் இந்துத்துவவாதிகள் நியாயவாதம் கற்பிக்கின்றனர்.

முஸ்லிம்களுக்காக பேச இந்திய அரசில் யாரும் இல்லை. 1947-ஆம் ஆண்டு ‘சுதந்திரத்திற்கு’ பின்னர், முதல்முறையாக முஸ்லிம் அமைச்சரவை அமைச்சரோ அல்லது ஒரு பாராளுமன்ற உறுப்பினரோ கூட ஆளும் கட்சியில் இல்லை. இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒரு முஸ்லிம் முதல்வர்கூட இல்லை. அயோத்தி அமைந்துள்ள உ.பி-யில் காவி உடை அணிந்து இந்து சாமியார் ஆட்சி செய்கிறார். தனது சமூக ஊடகத்தில் முஸ்லிம் பண்டிகைகளுக்கு வாழ்த்துகள்கூட தெரிவிக்காதவர் அவர்.


படிக்க: ராமன் கோவில் திறப்பு: பாபர் மசூதி இடிப்பை நினைவுகூரும் முஸ்லீம்கள்!


சமீப காலமாக, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய வட மற்றும் மத்திய இந்திய மாநிலங்களில் முஸ்லிம்களிடையே புதிய பயம் தொற்றியுள்ளது. எங்கும் காவியில் அலையும் ராம பத்கர்களின் முகங்களில் ஆவேசமும் காணக்கிடக்கிறது.

டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க ஜமா மசூதியில் இருந்து சில அடி தூரத்தில், கட்டா மசூதியின் வழியாக காவி உடை அணிந்து, ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டவாறு, மோட்டார் பைக், டிரக்குகள், ஜீப்களில் பேரணி செல்கின்றனர். வெற்றிக் களிப்புடன் கூடிய இக்கூச்சலில் மதிய தொழுகை சீர்குலைகிறது.

கான் சந்தையில் நான் சென்றுகொண்டிருந்தபோது, காவி பந்தலில் ராம பக்தி பாடல் ஒலித்து கொண்டிருந்தது. இதனால், இதற்கு அருகாமையிலுள்ள பண்டாரா சாலையில் இருக்கும் மசூதிக்கு முஸ்லிம்கள் வருவது குறைந்துவிட்டது, வீடுகளில் இருந்தே தொழுகை நடத்தி வருகிறார்கள்.

இது போன்றுதான் மற்ற இடங்களிலும், குறிப்பாக இந்துத்துவவாதிகள் அதிகமுள்ள வட இந்தியாவிலுள்ள நகரங்கள், கிராமங்களில் முஸ்லிம்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். உத்தரகாண்டின் டேராடூனில், பழைய கடிகார கோபுரத்தின் மேலிருந்து கீழாக ராமன் படம் தொங்கவிடப்பட்டுள்ளது. அதே உத்தரகாண்டில், புரோலா எனும் பகுதியில் முஸ்லிம் கடைகளுக்கு வெளியே முஸ்லிம் கடைகள் என அடையாளங்காணும் விதமாக “X” என்ற குறியீடு இந்துத்துவவாதிகளால் வரையப்பட்டிருக்கிறது. இதனால் அச்சமடைந்த முஸ்லிம் மக்கள் பலர் அவ்விடங்களை விட்டு வெளியேறினர்.


படிக்க: பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா? | மீள்பதிவு


மேற்கு உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில், ஜனவரி மாத தொடக்கத்தில் சிறு வணிகர்கள் உள்ளிட்ட பலர் தங்களது ரயில் முன்பதிவுகளை ரத்து செய்து, பயணத்தை நிறுத்திவிட்டனர். திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒத்திவைத்தனர்.

குருகிராம், நொய்டா உள்ளிட்ட உயர்தர நகரங்களில் இந்து பண்டிக்கை கொண்டாட்டம் உள்ளிட்ட இந்துத்துவவாதிகளின் நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி போயுள்ளனர். இந்நகரங்களில் அதிகாலையில் காலை வணக்கம் என்ற சொல்லாடலுக்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம் என்பது வழக்கமாகிவிட்டது.

இதற்கிடையில், முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்ணுகிறார்கள் என்றும் முஸ்லிம் பாகிஸ்தானியரின் அடையாளத்தில் இருப்பதாகவும் முஸ்லிம் மாணவர்கள் கேலிக்குள்ளாக்கப்படுகின்றனர். “ஒரு இந்திய முஸ்லிம் இந்தியனே அல்ல” என்பதுதான் மோடியின் இந்தியாவில் உள்ள இளம்பிஞ்சுகளின் மனதில் விதைக்கப்பட்டிருக்கிறது.

கோவில் கும்பாபிஷேகத்தைப் பற்றிய செய்தியை சேகரிக்க அயோத்திக்கு சென்ற முஸ்லிம் பெண் பத்திர்கையாளர் ஒருவர், இந்துக்கள் போல பொட்டு வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகவும், கோவில் திறப்பு விழாவிற்கு முன்பு அங்கிருந்து தான் திரும்பிவிட நினைப்பதாகவும் கூறினார். அந்நிய உணர்வு, பயம் என்பது ஒரு முஸ்லிமுடன் நிரந்தரமாக பின்னிபிணைந்திருக்கிறது. முஸ்லிம் தனிமையில் இருப்பதை உணர்கிறான்.

2014 இல் மோடியும் இந்துத்துவவாதிகளும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்திய முஸ்லிம்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர். இன்று ராமன் கோவில் திறப்பு விழாவிற்கு பிறகு இந்த நிலை மேலும் மோசமாகிவிடுமோ என்ற அச்சம் அதிகமாக உள்ளது.


மொழிபெயர்ப்பு: ஆதினி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ராமர் கோவில் திறப்பு இந்துராஷ்டிரத்தின் திறவுகோல் | செய்தியாளர் சந்திப்பு | தோழர் வெற்றிவேல் செழியன்

ராமர் கோவில் திறப்பு இந்துராஷ்டிரத்தின் திறவுகோல்
| செய்தியாளர் சந்திப்பு | தோழர் வெற்றிவேல் செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அயோத்தி ராமனும் அதானியின் ராமனும் | வெற்றிவேல் செழியன் | அமிர்தா

அயோத்தி ராமனும் அதானியின் ராமனும் | வெற்றிவேல் செழியன் | அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிஸ்டுகளின் ராமனைப் புறக்கணிப்போம்! | சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாசிஸ்டுகளின் ராமனைப் புறக்கணிப்போம்!
சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ராமன் இந்துமதவெறியின் அடையாளம்! | தோழர் ஜனார்த்தனன்

ராமன் இந்துமதவெறியின் அடையாளம்! | தோழர் ஜனார்த்தனன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அதானியின் ராமன் யார் தெரியுமா? | தோழர் மருது

அதானியின் ராமன் யார் தெரியுமா? | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மதவெறியின் உச்சம்: ராமன் கோவில் திறப்புக்காக மூடப்படும் மருத்துவமனைகள்

ராமன் கோவில் திறப்பு என்ற பெயரில் பாசிசக் கும்பல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தும் சகித்துக்கொள்ள முடியாதவையாக உள்ளன. அரசு இயந்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு நாடு முழுவதும் மதவெறியைக் கிளப்பி வருகிறது இக்கும்பல். பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அனைத்தும் காவி பாசிஸ்டுகளுக்கு சேவகம் புரிவதற்கான ஏற்பாடுகளை முனைப்பாக செய்து வருகின்றன. ஆனால், எப்போதும் போல இவர்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுபவர்களாக உழைக்கும் மக்கள்தான் உள்ளனர்.

மருத்துவமனைகளுக்கு அரை நாள் விடுமுறை

அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளும் ராமன் கோவில் திறப்பு காரணமாக 22-ஆம் தேதி 2:30 மணி வரை மூடப்படும் என்று ஜனவரி 20-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. எதிர்ப்புகள் எழுந்ததன் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் இந்த முடிவை திரும்ப பெற்றுள்ளது.

மருத்துவமனைகள் மூடப்படுவதால் டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளில் மட்டும் புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெறும் 32,000 நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என “தி வயர்” இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. மக்களின் உயிரை காவிக்கும்பல் எப்படி பார்க்கிறது எனபதற்கு இது சிறந்து சான்று.

அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 22-ஆம் தேதி அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் மதியம் 2.30 மணிக்கு முன் உள்நுழைய தேவையில்லை என அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

சில மாநிலங்களில் முழு நாள் விடுமுறை

பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசம், கோவா, ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தராகண்ட், திரிபுரா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், அசாம் ஆகிய மாநிலங்களில் முழு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகங்களும் இதே போன்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. இதற்கிடையில், நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசும் விடுமுறை அளித்துள்ளது.

இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக மக்களை மதவெறிக்குள் மூழ்கடிப்பதற்கான ஏற்பாடுகள்தான்.


படிக்க: உழைக்கும் மக்களை அழித்து ராமன் கோயில் திட்டம்!


பணம் மற்றும் பங்குச் சந்தைகள் மூடப்படும்

இந்திய ரிசர்வ் வங்கியும் ஜனவரி 22-ஆம் தேதி பண சந்தைகள் மூடபடும் என்று அறிவித்துள்ளது. அரசாங்கப் பத்திரங்கள் (முதன்மை மற்றும் இரண்டாம் நிலை), அந்நியச் செலாவணி, பணச் சந்தைகள் மற்றும் ரூபாய் ஆகியவற்றில் எந்தவிதமான பரிவர்த்தனைகள் மற்றும் செட்டில்மென்ட்கள் இருக்காது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. கூடுதலாக, தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையும் ஜனவரி 22 அன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தம் செய்யப்படும் கோவில்கள்

ஜனவரி 22-ஆம் தேதி ராமன் கோவில் திறப்பை முன்னிட்டு ’தூய்மை இயக்கம்’ ஒன்றை மோடி தொடங்கி வைத்துள்ளார். இது நாடு முழுவதும் உள்ள கோவில்களை சுத்தம் செய்வதற்கான இயக்கம். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கலாராம் கோவிலில் சுத்தம் செய்வது போல வீடியோ எடுத்து தன் அதிகார்பூர்வ பக்கத்தில் வெளியிட்டிருந்தார் மோடி.

அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. முதல்வர்கள், ஆளுநர்கள்  என ஒட்டுமொத்த காவிக்கும்பலும் இதேபோன்ற ”துடைத்த தரையை துடைப்பது” போன்ற படங்களைப் பதிவேற்றத் தொடங்கியது.

மும்பை நகரத்தின் உலகின் பணக்கார குடிமை அமைப்புகளில் ஒன்றான பிரஹான் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன், கோவில் வளாகங்களைசுத்தம் செய்யும் இதேபோன்ற இயக்கத்தில் பங்கேற்க மக்களையும் அழைத்துள்ளது. ஆனால் உண்மையில் மும்பை நகரம் 10 மில்லியன் மெட்ரிக் டன் கழிவுகளுடன் உலகின் 10 அசுத்தமான பெரிய நகரங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குப்பையெல்லாம் அவர்கள் கண்களுக்கு தெரியாது போலும்.

இறைச்சிக் கடைகள் அடைப்பு

ராஜஸ்தான் பா.ஜ.க அரசு, ஜனவரி 22-ஆம் தேதி மாநிலம் முழுவதும் இறைச்சிக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்து பண்டிகைகளையொட்டி இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என அடிக்கடி வன்முறைகள் நடைபெறுவதே இந்த அறிவிப்புக்கான காரணம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறது பா.ஜ.க அரசு. வன்முறைகளில் ஈடுபடுவதும் இதே பா.ஜ.க-வின் குண்டர்படை தான் என சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

மின்சார சேவை

மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஏ.கே சர்மா, ராமன் கோவிலில் நடைபெறும் விழா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளின் போதும் “தடையின்றி உயர்தர மின்சாரம் வழங்கப்படுவதை” உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் ஒத்திகை நடத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் அதேசமயம், நாடு முழுவதும், குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் தென் மாநிலங்களில் மின்வெட்டு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தெலுங்கானா முழுவதும் குறிப்பாக ஹைதராபாத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், ராமன் கோவில் திறக்கப்படும் அதே உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா செக்டார் 53-இல் மின்வெட்டு காரணமாக கடுமையான குளிரில் சிக்கித் தவிக்கும் மக்கள்  ஹீட்டர்களை இயக்க முடியாமல் தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 முதல் 6 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலவச ரயில் சேவை

சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு அயோத்தி யாத்திரைக்கு ஆர்வமுள்ள மக்களுக்கு இலவச ரயில் பயணத்திற்கான அனுமதியை அளிப்பதாக அறிவித்துள்ளது. சத்தீஸ்கரின் புதிய முதல்வர் விஷ்ணு தியோ சாய் ஜனவரி 10-ஆம் தேதி இந்த முடிவை  அறிவித்தார்.

ஆனால் இதே இந்த இந்திய ரயில்வே துறைதான் இதற்கு முன்னர் குளிர்சாதனப் பெட்டிகளை அதிகரிப்பதற்காக, பொதுப்பெட்டிகளை குறைத்தது. இதனால், முக்கியமாகப் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கழிவறைகளில் அமர்ந்து வர வேண்டிய அவலநிலைக்குக் கூட மக்கள் தள்ளப்பட்டனர். இப்போது ராமன் கோவில் செல்ல மட்டும் இலவச ரயில் சேவை வழங்கப்போகிறார்களாம்.


ரித்திக்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



🔴LIVE: ராமன் கோவில் ராமனுக்கல்ல | கண்டன ஆர்ப்பாட்டம் | சென்னை

இஸ்லாமியரின் ரத்தம் குடித்து
மசூதியை இடித்துவிட்டு ராமனுக்கு கோயிலா?

க்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் சார்பாக ராமன் கோவில் திறப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் ஆர்ப்பாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு 1

இணைப்பு 2

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தோழர் லெனின் நினைவுரை…. | தோழர் ராமலிங்கம்

தோழர் லெனின் நினைவுரை…. | தோழர் ராமலிங்கம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அயோத்தியின் இராமனும் அதானியின் இராமனும் | கவிதை

அயோத்தியின் இராமனும்
அதானியின் இராமனும்

இதோ
இப்போது வந்திருப்பது
அயோத்தியின் இராமன் அல்ல  இது
இராமன் 2.0

இரண்டு இராமன்களும் மனைவியோடு வாழவில்லை
அன்று ஒரு வானரம் இலங்கையை எரித்தது
இன்று பல்லாயிரம் வானரங்கள் நாட்டை எரித்துக் கொண்டிருக்கின்றன

அந்த இராமனுக்காக சூர்ப்பனகையின் முலையறுத்து
பெருமிதம் கொண்டான் இலக்குவன்

இந்த இராமனுக்காக கர்ப்பிணியின்
வயிற்றைக் கிழித்து
சிசுவை அறுத்து
வன்புணர்வு செய்தார்கள் நவீன இலக்குவன்கள்

விவசாயத்தின் வயிற்றைக்கிழித்து
கனிம வளங்களை அதானிகளுக்கு படையல் போடுகிறார்
2.0 இராமன்

அசுவமேத யாகத்தில் பிறந்தது அந்த இராமன்
அதானிகளின் யாகத்தில் பிறந்தது இந்த இராமன்

***

சூத்திரன் வழிபடுவதா
சம்பூகனின் தலையைக் கொய்து மனுநீதியை
நிலை நாட்டினான்
அயோத்தியின் ராமன்

சூத்திரரும் பஞ்சமரும் போராடுவதா?
பீமா கோரேகான் வழக்கில்
ஸ்டேட் சாமியை கழுவேற்றி
மனுநீதியை நிலை நாட்டினார்  அதானியின் இராமன்

இராஜராஜ சோழன்
பெருவுடையார் கோயிலை கட்டினான்
இராஜேந்திர சோழன்
கங்கைகொண்ட
சோழபுரத்தை கட்டினான்

இதோ பாருங்கள்
அதானியின் இராமன்
அயோத்தியில்  இராமனுக்கு கோயில் கட்டினார்

முன்னவர்கள் எந்த மசூதியையும் இடித்து விட்டு கோயில் கட்டவில்லை
அந்த வகையில்
பின்னவர் செய்தது
சாதனை தான்
பெருஞ்சாதனை தான்

***

அந்தணர் குலம் காக்க வாளேந்தியது அயோத்தியின் ராமன் எனில்
கார்ப்பரேட்டுகளின் –  பார்ப்பனர்  குலம் காக்க
திரிசூலம் ஏந்துவது
அதானியின் இராமன்

வேளாண் சட்டத் திருத்தம்
தொழிலாளர் நல சட்டத் திருத்தம்
குடியுரிமை சட்டத் திருத்தம்
இன்னும் பல ….

திருத்தங்களின் பெயரால் திருத்தப்படுகிறது நாடு
இனி, ஜனநாயகம்
உரிமை
போராட்டம்
எதற்கும்
இங்கே வேலை இல்லை

இஸ்லாமியருக்கு இழைக்கப்பட்ட அநீதி மறக்கப்படுகிறது
மறைக்கப்படுகிறது

ராமனுக்கு அட்சதை  போடுவதற்கு முன்பு
ஒரு கணம் நில்லுங்கள்

இராமனுக்கா அர்ச்சனை போடுகிறீர்கள் ?

இந்துக்களின் பெயரால் உங்களின் பெயரால்
மோடி மேற்கொண்ட அனைத்து பாசிச நடவடிக்கைகளுக்கும் அல்லவா
அட்சதை போடுகிறீர்கள்

அது
உங்களுக்கு நீங்களே
போட்டுக் கொள்ளும் வாய்க்கரிசி

அழைப்பிதழை வாங்கும் நீங்கள்
அழைப்பிதழை மட்டும் வரவேற்கவில்லை

இஸ்லாமியர்
தலித் மக்கள் உள்ளிட்டோரின் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும்
அல்லவா வரவேற்கிறீர்கள் ?

பார்ப்பனரும் பனியாவும்

இராமனும் இலக்குவணனும்
ஆர்எஸ்எஸ்-ம் பாஜகவும்
மோடியும் அதானியும்
ஒட்டிப் பிறக்காத இரட்டையர்கள்

தனித்தனியே பிரிக்கவும் முடியாது
தனிப்பட்ட முறையில் ஒழிக்கவும் முடியாது

அங்கே கட்டப்பட்டிருப்பது அயோத்தி இராமனுக்கான கோயில் அல்ல
தனக்குத்தானே
மோடி கட்டிக் கொண்ட கோயில்

அங்கே நீங்கள் சென்று இராமனை ஒருபோதும்
வழிபட போவதில்லை
மோடியைத் தான் வழிபட போகிறீர்கள்

கோயில் திறப்பு விழா அல்ல
இந்த ராஷ்டிரத்துக்கான திறவுகோல்

இப்போதும் நாம்
வழிபட்டுக் கொண்டிருந்தால்
நாளை நம் உரிமைகளை ,  நம்மை  பேசுவதற்கு கூட  யாரும் இருக்க மாட்டார்கள்

நினைவில் கொள்ளுங்கள்
இப்போது இருப்பது
அயோத்தி இராமன் அல்ல
அதானி இராமன்.


மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மோடியின் 10 ஆண்டுகால பேய் ஆட்சிதான் ராமராஜ்யம்! | தோழர் வெற்றிவேல் செழியன்

மோடியின் 10 ஆண்டுகால பேய் ஆட்சிதான் ராமராஜ்யம்! | தோழர் வெற்றிவேல் செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதில் நீதித்துறையின் கரசேவை – ஓர் வரலாற்று பார்வை

ருகின்ற ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. இது ‘இந்து’ மத மக்களின் உணர்வாக அன்றி பாசிசக் கும்பலின் கொண்டாட்ட நாளாகவே அமைந்துள்ளது. இந்நாளுக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலும் அதன் சங்கப்பரிவார அமைப்புகளும் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அதற்கான நாசகர வேலைகளை பார்த்துவந்துள்ளன. அதேசமயம் இன்று ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதற்கு பின்னால் வரலாறு நெடுக இந்திய நீதிமன்றங்களின் செய்துவந்த கரசேவை ஒளிந்துள்ளது.

1950-களில் பாபர் மசூதியில் வழிபட ’இந்து’க்கள் அனுமதிக்கப்பட்டது; 1986-இல் மசூதிக்குள் சென்று வழிபட கட்டிடத்தின் பூட்டுகள் திறக்கப்பட்டது; 2019-இல் பாபர் மசூதி நிலத்தை ராமர் கோவில் கட்ட தாரைவார்த்தது என இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்டுவந்த தொடர் அநீதியில் இந்திய நீதிமன்றங்களின் துரோகங்களின் பங்கு முக்கியமானது. 1949-இல் மசூதிக்குள் ராமர் சிலை திருட்டுத்தனமாக வைக்கப்பட்டது முதல் பாபர் மசூதி இருந்த இடம் ராமர் கோவில் கட்ட தாரைவார்க்கப்பட்டது வரை பாபர் மசூதி மீதான இந்துமதவெறியர்களின் ஆதிக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நீதித்துறையால் அது அங்கீகரிக்கப்பட்டது என்பதே உண்மை.

பைசாபாத் சிவில் நீதிமன்றத்தின் கரசேவை:

1949 டிசம்பர் 22 அன்று, பைசாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் நகர மாஜிஸ்திரேட் ஆகியோரின் ஒத்துழைப்போடு பாபர் மசூதிக்குள் இந்து மதவெறி கும்பலால் ராமர் சிலை திருட்டுத்தனமாக வைக்கப்பட்டது. இந்நிகழ்வுதான் பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டதற்கும் கலவரத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமர் சிலையை அப்புறப்படுத்திவிட்டு காவி குண்டர்களை தூக்கி சிறையில் வைப்பதற்கு பதிலாக, அயோத்தியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக்கூறி நிர்வாக மாஜிஸ்திரேட்டின் உத்தரவின்பேரில் மசூதி வளாகம் முனிசிபல் வாரியத்தின் பாதுகாப்புப் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, ஜனவரி 1950-இல் மசூதியின் நுழைவாயில் நகராட்சி வாரியத்தால் பூட்டப்பட்டது. இந்நாளில்தான், பாபர் மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்கு முடிவுரை எழுதப்பட்டது. அதன்பிறகு மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த வாய்ப்புகள் வழங்கப்படவே இல்லை.

1950-களில் மசூதி வளாகத்தில் ராமரை வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் உள்ளே இருக்கும் சிலைகளை அகற்றுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1951-ஆம் ஆண்டில் காவி குண்டர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய பைசாபாத் சிவில் நீதிமன்றம், சிலைகளை அகற்றக்கூடாது என்றும் மசூதியின் வெளிப்புற முற்றத்தில் இந்துக்கள் பிரார்த்தனை செய்யலாம் என்றும் அயோக்கியத்தனமாக உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை 1955-ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இத்தீர்ப்பு பாபர் மசூதியை இஸ்லாமிய மக்களிடமிருந்து பிடுங்கி காவி பாசிஸ்டுகளின் கரங்களில் கொடுப்பதில் முக்கிய பங்காற்றியது.

1959-ஆம் ஆண்டில், நிர்மோஹி அகாரா என்ற இந்து மதவெறி பிரிவினரும் சாமியார் ரகுநாத் தாஸும் பாபர் மசூதி நிலத்தின் உரிமையைக் கோரியும் அதனை கோயிலாக நிர்வகிக்கக் கோரியும் வழக்குத் தொடர்ந்தனர். 1961-ஆம் ஆண்டில், நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் கட்டடத்தை மசூதியாக அறிவிக்க வேண்டும் என்றும் சன்னி மத்திய வக்ஃப் வாரியம் கோரியது. அடுத்த இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாக பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நிலுவையில் இருந்தன.

1986-ஆம் ஆண்டில், மேற்கண்ட வழக்குகள் தொடர்பாக உத்தரவு பிறப்பித்த பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் மசூதியின் கதவுகளைத் திறக்க உத்தரவு பிறப்பித்து வளாகத்தில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ய மசூதியை திறந்துவிட்டு இஸ்லாமிய மக்களுக்கு துரோகமிழைத்தது. இதற்காக, கடந்த 35 ஆண்டுகளாக மசூதி வாயிலில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ததையும் அந்தக் காலகட்டத்தில் (மசூதி பூட்டப்பட்டு வெளிப்புற முற்றத்தில் இந்துக்கள் வழிபட அனுமதிக்கப்பட்ட காலம்) முஸ்லிம்கள் தொழுகை நடத்தவில்லை என்பதையும் கூறி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபட அனுமதித்த தனது தீர்ப்பை நியாயப்படுத்த முயன்றது நீதிமன்றம். மேலும், மசூதியின் பூட்டைத் திறப்பது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்காது என்றும் மசூதி பூட்டப்பட்டிருப்பது கடவுள் சிலையிடருந்து பக்தர்களைப் பிரிக்கிறது என்றும் கரசேவை புரிந்தது.

பாபர் மசூதி இடிப்பும் உச்சநீதிமன்றத்தின் 1994 தீர்ப்பும்

இதற்கிடையே, டிசம்பர் 1990-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளால் பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்டு அவ்விடத்தில் தற்காலிக கோவில் அமைக்கப்பட்டது.

இதனையடுத்து 1993-ஆம் ஆண்டில் பாபர் மசூதி நிலத்தை கையகப்படுத்த நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு அவசரச் சட்டம் இயற்றியது. அதே ஆண்டில் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்ட இந்த அவசர சட்டம், பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துக்கள் பிரார்த்தனை செய்யும் தற்போதைய நிலை பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் சொத்து தொடர்பான அனைத்து வழக்குகளும் குறைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு 1993-இல் 3:2 பெரும்பான்மையுடன் வழங்கிய தீர்ப்பில், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை உறுதிப்படுத்தியது. ஆனால், நிலுவையில் உள்ள வழக்குகளைத் தடுக்கும் விதியை ரத்து செய்தது. இதன் விளைவாக, நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டன.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

இதற்கிடையே பாபர் மசூதி நிலம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 1989-இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. அவ்வழக்குகளையொட்டி 2010-இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் மோசடியான ஒரு தீர்ப்பை வழங்கியது. நிலத்தை மூன்றாகப் பிரித்து, சன்னி வக்ஃப் வாரியம், நிர்மோஹி அகாரா (இந்துமதவெறி அமைப்பு) மற்றும் ராமர் சிலையை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையாளரான ராம் லல்லா விராஜ்மான் ஆகியோருக்கு தலா ஒரு பங்கைக் கொடுத்தது. இடிக்கப்பட்ட மசூதியின் பிரதான குவிமாடத்தின் கீழ் உள்ள நிலம் இந்துக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. நிலத்தின் வெளிப்புற முற்றமே வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த முடிவை பலரும் விமர்சித்து எதிர்த்தனர். இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பலராலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதனையடுத்து, 2011-இல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அடுத்த பல ஆண்டுகளுக்கு இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தால் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு

ஜனவரி 2019-ஆம் ஆண்டு இவ்வழக்கை தூசிதட்டி எடுத்த அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த மோடி அரசின் சேவகனான ரஞ்சன் கோகோய் இவ்வழக்கை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்தார்.

2019 மார்ச் மாதத்தில், இவ்விவகாரத்தில் தீர்வை எட்டுவதற்கு மத்தியஸ்தம் செய்ய முயற்சிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா, மூத்த வழக்கறிஞரான ஸ்ரீராம் பஞ்சு மற்றும் ஆன்மீகத் தலைவர் என்ற பெயரில் திரியும் மோசடிக்காரனும் சங்கியுமான ரவிசங்கர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட மத்தியஸ்த குழுவை நீதிமன்றம் அமைத்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த ஏமாற்று முயற்சி பலராலும் விமர்சிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நீதிமன்றம் தினசரி விசாரணையைத் தொடங்கியது. இறுதியாக நவம்பர் மாதத்தில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 1949-இல் மசூதிக்குள் ராமன் சிலையை வைத்தது மற்றும் 1992-இல் பாபர் மசூதியை இடித்தது ஆகிய இரண்டும் சட்டவிரோதமானது என்று கூறிவிட்டு, நிலத்தின் உரிமையை ராம் லல்லா விராஜ்மானுக்கு நீதிமன்றம் வழங்கி காவி பாசிஸ்டுகளுக்கு தங்களது உச்சக்கட்ட கரசேவையை புரிந்தது. அதேசமயம் இஸ்லாமியர்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்த அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு சன்னி வக்பு வாரியத்துக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு நாடகமாடியது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பல்வேறு தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பாபர் மசூதியை இடித்தது குற்றம் என்று கூறிவிட்டு குற்றம் நடந்த இடத்தில் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது அயோக்கியத்தனமானது என்றும் பாபர் மசூதியை இந்துமதவெறியர்கள் அபகரித்ததை உச்சநீதிமன்றம் சட்டப்பூர்வமாக்கிவிட்டது என்றும் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்கள் உச்சநீதிமன்றத்தின் மீதிருந்த தங்களது கடைசி துளி நம்பிக்கையையும் இழந்தனர்.

மேலும், சட்ட ரீதியாகவும் இந்த தீர்ப்பில் பல்வேறு ஓட்டைகளும் குளறுபடிகளும் இருந்தன. இந்திய வரலாற்றில் தீர்ப்பு எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாத ஒரே தீர்ப்பு இந்த தீர்ப்பேயாகும். மேலும், நீதிபதிகள் அமர்வில் பெயர் குறிப்பிடாத நீதிபதி ஒருவரின் கூடுதல் சேர்க்கையும் இத்தீர்ப்பில் இருந்தது. இதனை இந்தியாவிலுள்ள கணிசமான சட்ட வல்லுநர்கள் அம்பலப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த தீர்ப்பையடுத்துதான் தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்துராஷ்டிரத்தின் திறவுகோலாக கட்டப்பட்டுள்ள இந்த ராமர் கோவில் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சம் ஏற்படுத்தப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பலின் இந்துமதவெறியாட்டங்களோடு பாசிச கும்பலுக்கு கரசேவையாற்றிய நீதிமன்றங்களின் துரோகமும் அயோக்கியத்தனங்களும் இணைந்துள்ளன.


தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ராமன் கோவில் திறப்பு: பாபர் மசூதி இடிப்பை நினைவுகூரும் முஸ்லீம்கள்!

ந்து மதவெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு ஆண்டுகள் பல ஓடிவிட்டன. இருந்தும் அன்று முஸ்லிம் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்ட பயபீதி இன்று முன்பைக் காட்டிலும் மேலோங்கியுள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி, ராமன் கோவில் திறப்பு விழாவின் போது, “பயணத்தை தவிர்த்து வீட்டிற்குள்ளேயே இருப்பது” என்ற மனநிலைக்கு அயோத்தியைச் சுற்றியுள்ள பகுதியில் வாழும் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் வந்திருக்கின்றனர். ஆனால், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு என்பது அந்த ஒருநாளில் கரைந்து போகக்கூடிய விஷயம் அல்ல. ராமன் கோவில் திறப்பு விழாவிற்கு பிறகு, இன்னும் மூர்க்கமாகவும் கொடூரமாகவும் முஸ்லிம் மக்கள்மீது மதவெறி தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்படும். இதுகுறித்து அயோத்தியில் தற்போது வசித்துவரும் முஸ்லிம் மக்களின் மனநிலை என்ன என்பதை அவர்களின் அனுபவங்கள் வாயிலாகக் காண்போம்.

தற்போது ராமன் கோவில் திறப்பு விழா குறித்தும் 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்தும் நினைவு கூர்கிறார் இரண்டு குழந்தைகளின் தாயான சபா காலித்.

“டிசம்பர் 6, 1992 அன்று லக்னோவில் உள்ள எங்களது வீட்டிற்கு 100 கி.மீ. தொலைவில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தியை மரண பீதியுடன் கேட்டோம். அன்று எனக்கு வயது 10.

இந்து குடும்பங்கள் சூழ்ந்திருக்க நாங்கள் மட்டும்தான் முஸ்லிம். ஆனால், இதற்கு முன்பு இதுபோல் ஒருபோதும் யோசித்து பார்த்ததில்லை. ’யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்’ என தாத்தா கூறினார். நாங்கள் எலிகளை போல அமைதியாக பல நாட்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தோம்.

கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது, ரயில்கள் தீவைத்து எரிக்கப்படுவது என அடுத்தடுத்து வந்த செய்திகளால் நாங்கள் பீதியுற்றோம். இதை இப்போது நினைவு கூரும்போதே என் உடல் நடுங்குகிறது. இதற்கு முன்பு நாங்கள் எங்கள் உயிருக்கு ஒருபோதும் பயந்ததில்லை. அந்த உணர்வை விவரிக்க முடியாது. நல்வாய்ப்பாக, நாங்கள் வசித்து வந்த பகுதியில் இந்துமத வெறி ஊட்டப்பட்டவர்கள் யாரும் இல்லை. இருந்தும் நாங்கள் அந்நியப்படுத்தப்பட்டோம்” என்கிறார் சபா காலித்.

30 வருடங்களுக்கு பிறகு தற்போதும் முஸ்லிம் இந்துக்கள் சேர்ந்து வாழும் பகுதியில்தான் சபா காலித் வசித்து வருகிறார். சபா காலித்தின் வீட்டின் கதவில் குரான் வசனம் எழுதப்பட்டிருப்பதை பார்த்தும், ராமன் பாடலை பாடியபடியே, அயோத்தியில் ராமன் கோவில் கட்ட காவிக்கொடியுடன் கதவை தட்டி நன்கொடை கேட்டுள்ளனர்.

“எனது இரண்டு குழந்தைகளும் சிறுவர்களாக இருப்பதால், பயபீதியை ஏற்படுத்தக்கூடாது என பாபர் மசூதி இடிப்பு பற்றி அவர்களுக்கு சொல்லவில்லை. ஆனாலும் வெளி உலகம் அவர்களுக்கு கற்பித்துவிடுகிறது. அவர்கள் பள்ளிக்கூடத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இந்துமதம் சார்ந்ததாகவே இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது 12 வயது மகனின் வகுப்பு மாணவன் ஒருவன், தன் பெற்றோர் இந்துக்களுடன் மட்டுமே நட்பு கொள்ள சொன்னதாக கூறினான். அதேபோல, என் 8 வயது மகன் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவர், ’நான் இந்து நீ முஸ்லீம். இரண்டு பேரும் எதிரிகள்’ என்று அவனிடம் கூறியிருக்கிறாள்.

“எனது குழந்தைகள் இந்த நாட்டில் வெறுப்பை எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை. அவர்கள் எங்களைப் போலவே குழந்தை பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒருவர் வலியில் துடித்துக்கொண்டிருக்கும்போது மற்றொருவர் கொண்டாடுவது என்ன மனநிலை. நாங்கள் இந்த நாட்டில் நம்பிக்கையற்றவர்களாகவும் ஏமாற்றப்பட்டவர்களாகவும் உணர்கிறோம். இரண்டாம் தர குடிமக்களை போலக்கூட நாங்கள் நடத்தப்படவில்லை” என்கிறார் சபா காலித்.

***

வெளிநாட்டில் கல்வியாளராக இருக்கும் ஒருவர், இந்தியாவில் இருக்கும் தனது பெற்றோரை சந்திக்க ஜனவரி வரவிருந்தார். ஆனால், “கோவில் திறப்பு விழாவில் என்ன நிகழுமோ” என்ற அச்சத்தில் பயணத்தை பிப்ரவரிக்கு தள்ளிவைத்துவிட்டார்.

பெயர் சொல்ல விரும்பாத இவருக்கு பாபர் மசூதி இடித்தபோது வயது 9. பாபர் மசூதி இடிப்பு குறித்து பெரிதும் கவலைப்படாத இவர், பள்ளிக்கூடத்தில் முஸ்லிம்கள் ஏன் மசூதியை விட்டுக்கொடுக்கவில்லை அவர்கள் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என பல தொந்தரவுக்குள்ளாகியிருக்கிறார்.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மதவெறி கலவரம் குறித்து செய்தி கேட்டுகொண்டிருந்த போது, “முஸ்லிம்களை கொல்ல வேண்டும்” என்று ஆவேசத்தில் கத்தியிருக்கிறான். “நான் அங்கு இருந்ததை அந்த மாணவன் கவனிக்கவில்லை” என்கிறார் அவர்.

”போலிசாலும் நீதிமன்றத்தால் முஸ்லிம்கள் குறிப்பாக ஏழை முஸ்லிம்கள் மோசமான முறையில் நடத்தப்படுகிறார்கள். என் மகள் வளரும் போது இந்திய முஸ்லிம் குறித்து நான் என்ன சொல்வது” என கவலையடைகிறார்.

***

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது வழக்கறிஞர் அஷ்மா இஸ்ஸாத் என்பவருக்கு ஒன்பது வயது. “அன்று நடந்த நிகழ்வு இன்றும் நினைவில் இருக்கிறது. அன்று மக்கள் கடுமையான தலைவரை பற்றி பேசிவந்தனர். அவர்தான் அத்வானி” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் ஆஷ்மா.

டிசம்பர் 6, 1992 அன்று நடந்தது குறித்து மட்டுமல்ல, ராமன் கோவில் கட்டப்படுவதும் திறப்பு விழா கொண்டாடப்படுவதைக் கண்டும் அச்ச உணர்வை வெளிப்படுத்துகிறார், ஆஷ்மா. உ.பி. உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை வழக்கறிஞராக இருந்தாலும் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. இதர முஸ்லிம் குடும்பத்தை போலத்தான் பயத்தில் உறைந்துள்ளார்.

“வெளிநாட்டில் வேலை கிடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் என தினமும் எண்ணுகிறேன். இப்படி சொல்ல வேதனையாகத்தான் இருக்கிறது. ஆனால் இதுதான் உண்மை” என்கிறார் கணத்த இதயத்துடன்.


ஆதினி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உழைக்கும் மக்களை அழித்து ராமன் கோயில் திட்டம்!

யோத்தியில் ராமன் கோயில் திறப்பையொட்டி, அப்பகுதியில் ஆங்காங்கே புல்டோசர்கள், துளையிடும் இயந்திரங்கள் காணக்கிடக்கின்றன. இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடைபாதை போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று முக்கிய சாலைகளுக்கு, ராமர் பாதை, பக்தி பாதை, ராம ஜென்மபூமி பாதை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழித்தடங்கள் காவி நிறமிடப்பட்டதாகவும், வில் மற்றும் அம்பு கொண்ட ராமாயண உருவங்களாலும், சூலாயுதம், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

புதிய விமான நிலையம், இராமாயண தீம் பார்க், இணைய வசதி மண்டலங்கள் (wifi zones) கொண்ட பகுதியாக அயோத்தி மாற்றப்பட்டுவருகிறது. ஆனால், கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள், தாங்கள் எதிர்ப்பார்த்த வளர்ச்சி இதுவல்ல என்று குமுறுகிறார்கள். ராமன் கோயிலுக்காக யோகி ஆதித்யநாத் அரசு மேற்கொண்டு வரும் ‘மேம்பாட்டு திட்டம்’ என்பது காலங்காலமாக அங்கு வசித்து வந்த மக்களின் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் சிதைத்து எழுப்பப்பட்டு வருகிறது.

“அயோத்தியில் ராமன் கோயில் கட்டப்படுகிறது. இனி மத கலவரங்கள், ஊரடங்கு உத்தரவுகள், போலீஸ் கண்காணிப்பு ஆகியவற்றில் இருந்து விடுபடலாம்” என்று எண்ணியிருந்த மஞ்சு மோதன்வால், அயோத்தி ராமன் கோயில் திட்டத்தின் ஒரு பகுதியாக – சாலை விரிவாக்கத்திற்காக – இடிக்கப்பட்ட தனது வீட்டில் எஞ்சியிருக்கும் பொருட்களை எடுத்துகொண்டே “இனி என்ன இருக்கிறது” என பெருமூச்சு விடுகிறார்.

கடந்தாண்டு ஏப்ரலில், அயோத்தி சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக மஞ்சு மோதன்வால் குடும்பத்தின் வாழ்வாதாரமான சிறு கடையை கொண்ட அவர்களது வீட்டின் முன்பகுதி இடிக்கப்பட்டது. இதுவன்றி, பழங்கால கோவில்கள் மற்றும் மசூதிகள் உட்பட, 13 கி.மீ.க்கு சாலையை விரிவுபடுத்த 4,000க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் கடைகள் இடிக்கப்பட்டன. மஞ்சு மோதன்வால் போல்தான் அப்பகுதியில் வசித்து வந்த பெரும்பாலான மக்கள் ராமன் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டபோது தங்களது வீடுகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்படும் என்று துளியும் எண்ணியிருக்கவில்லை.


படிக்க: ராமர் கோவிலும் உ.பி. உழைக்கும் மக்களும்


சிறு வியாபாரியான பாபு சந்த் குப்தா, “அயோத்தியின் முக்கிய நகரத்தில் சாதாரண மக்களுக்கு நிலம் எதுவும் இல்லை. அனைத்து நிலங்களையும் அரசு கையகப்படுத்தி வருகிறது. நாங்கள் எங்கு செல்ல” என கேள்வி எழுப்புகிறார்.

நடுத்தர வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தையே முழுவதுமாக இழந்து நிர்கதியாக்கப்பட்டிருக்கின்றனர். “பூர்வீக மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திட்டம் நடைமுறைபடுத்தியிருக்க வேண்டும். ஆனால், நாங்கள் துன்புறுத்தப்படுகிறோம், அச்சுறுத்தப்படுகிறோம்” என்கிறார் அயோத்தி உத்யோக் வணிகர் தொழிற்சங்கத் தலைவரும் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினருமான நந்து குமார் குப்தா. சாலை விரிவாக்கத்திற்கு வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்தியதால், தனது வீட்டிற்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் அவரது கடையில் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். “சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், யாரும் குரல் எழுப்பத் துணிவதில்லை. குரல் எழுப்பினால், போலீஸ் வழக்கு போடுமோ, அல்லது புல்டோசர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது” என்கிறார்.

ராமன் கோயிலுக்கு நூறு மீட்டர் தொலைவில் உள்ள நிலத்தை நம்பியிருந்த மக்களையும் கையறுநிலைக்கு தள்ளியுள்ளது யோகி அரசு. அவர்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்த பூ தோட்டத்தை அழித்துள்ளது.

கடந்த ஆகஸ்டு 23 அன்று, சாலை விரிவாக்கத்திற்காக கிஷோர் என்பரது தோட்டத்தில் இருந்து பூக்களை அகற்றுமாறு அதிகாரிகள் மிரட்டல் விடுத்து சென்ற அடுத்த நாளே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீஸ், ஜேசிபி இயந்திரத்துடன் வந்து பூச்செடிகளை தரைமட்டமாக்கினர். கையகப்படுத்தப்பட்ட இடத்தின் ஒரு பகுதி சாலையாகவும், மீதமுள்ள பகுதி அகமதாபாத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கும் சென்றது. அவ்விடத்தில் விரைவிலேயே கான்கிரீட் கூடாரங்கள் போடப்பட்டது.

“இந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு நாங்கள் என்ன அகதிகளா? எங்கள் பேச்சை கேட்க யாரும் இல்லை. நாங்கள் இந்தியர்கள் இல்லையா? நாங்கள் எங்கே போவது?” என கேள்வி எழுப்புகின்றனர் அப்பகுதி மக்கள்.

“கோயில் கட்டுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் உள்ளுக்குள் நாங்கள் வருத்தப்படுகிறோம். இது எங்கள் வாழ்நாள் சேமிப்பு. நாங்கள் ஏழைகளாக இருப்பதால் துன்புறுத்தப்படுகிறோம். ஏழைகள் வெளியேற்றப்பட வேண்டும் என ராமர் கூறினாரா?” என்கிறார்கள் தலித் சமுக மக்கள்.


படிக்க: இராமர் கோவில் திறப்பிற்கு எதற்கு அரசு விடுமுறை?


ரகுநந்தன் யாதவ் என்பவர் “என்னிடம் மூன்று எருமைகள் இருந்தன. அவைதான் எனது குடும்பத்திற்கு வாழ்வாதாரம். ஆனால் வீடுகள் இடிக்கப்பட்டதும் அவைகளை வைத்து பராமரிக்க முடியவில்லை. கொஞ்ச நாளிலேயே அவையும் இறந்துவிட்டன” என்கிற அவர், “நான் விளையாடி வளர்ந்த இடத்தில் இன்று என்னால் செல்ல முடியாது. நாங்கள் எங்கள் மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டால், வேறு எங்கு செல்வோம்” என்கிறார் விரக்தியாக.

42 வயதான கீதா யாதவ் என்பவர் தனது வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு ராமன் கோயில் வளாகத்தின் மேற்கு எல்லையில் வசித்து வருகிறார். அவர், “நான்கு அறைகள் கொண்ட வீடு இருந்தது. ஆனால் இப்போது எருமைகள் வைத்திருந்த கொட்டகையில் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். என் வாழ்வாதாரம் போய்விட்டது. எனக்கு உணவு இல்லையென்றால், ராமனை பார்த்தால் உணவு வந்துவிடுமா?” என்கிறார்.

கோவிலில் மத சடங்குகளை செய்து வரும் விஷால் பாண்டே என்பவர் “எனது நஷ்டம் ரூ.25 லட்சத்தை தாண்டியுள்ளது. ஆனால் அதை விட குறைவாகதான் நஷ்ட தொகை பெற்றுள்ளேன். ராமர் கோயிலால் அயோத்தி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதால், புகார் செய்ய வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

முஸ்லீம் மக்களின் நிலை என்ன?

பாபர் மசூதி இருந்த பகுதியில் இந்து மக்களுடன் அண்டை வீடுகளில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களுக்கு பாபர் மசூதி இடிப்பு தொடங்கி நீண்ட காலமாகவே மதவெறியர்களால் பயங்கரமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பாபர் மசூதியை இடித்தபோது அப்பகுதியில் இந்துமத வெறியர்கள் ஈடுபட்ட கலவரத்தில் பல முஸ்லிம் குடும்பங்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் வீடுகளை சூறையாடப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன.

கோட்வாலி எனும் பகுதியில் வசிக்கும் முகமது உமர், “இனி அயோத்தியில் ஏராளமான இந்து யாத்ரீகர்கள் வரத் தொடங்குவார்கள். அப்போது நடந்தது மீண்டும் இப்போது நடக்கலாம்” என்று டிசம்பர் 1992 நிகழ்வுகளை நினைவு கூர்கிறார். 1992 பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில், தனது வீடு இந்துத்துவ மத வெறியர்களால் எரிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் கட்டிய வீடும், கடையும் கடந்த டிசம்பரில் சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது.

இப்படியாக முஸ்லிம்கள், இந்துக்கள் என பாரப்பட்சமில்லாமல் அனைத்து உழைக்கும் மக்களது வீடுகளும் வாழ்வாதாரமும் ராமன் கோயில் திட்டம் பெயரில் பறிக்கப்பட்டிருக்கிறது. வாழ்வாதாரத்தை எப்படி மீட்பது என்பது தெரியாமல் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்.


ஜனனி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ராமர் கோவிலும் உ.பி. உழைக்கும் மக்களும்

ன்னும் இரண்டு நாட்களில், உ.பி. அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறவிருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ராமர் கோவில் திறப்புதான் பேசுபொருள். இந்திய ஊடகங்களும் மோடி இப்போது விரதம் இருக்கிறார், மோடி இப்போது நடக்கிறார், உட்காருகிறார் என மோடி காட்டும் வித்தைகளை ஒன்று விடாமல் ஒளிப்பரப்பி வருகின்றன.

காவிக்கும்பல் கோவில் கருவறையின் பிரதான வாயிலில் பொருத்தப்பட்ட கதவு தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளது. மேலும், 13 தங்கக்கதவுகள் பொருத்தப்பட இருக்கின்றன. 8 உலோகங்களை கொண்டு 25 லட்ச செலவில் 2,400 கிலோ எடையில் ராட்சத மணி தயாரிக்கப்பட்டுள்ளது என்று பெருமை பேசி வருகிறது. கார்ப்பரேட் முதலாளிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என இந்தியா முழுவதும் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது மோடி அரசின் சாதனை, இந்துக்களுக்கான வெற்றி என்றவாறெல்லாம் ராமர் கோவில் திறப்பை ஊதிப்பெருக்குகிறது மோடி அரசு

ஆனால், ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க. ஆளும் இதே உத்தரபிரதேச மாநிலத்தின் உழைக்கும் மக்கள், பெண்களின் நிலை என்ன என்பதற்கு சில சான்றுகள் இவை.

  1. கடந்த தீபாவளி பண்டிகையின்போது உத்தரப் பிரதேசத்தில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றி, முந்தைய ஆண்டின் கின்னஸ் சாதனையை முறியடித்தோம் என பீற்றி கொண்டது யோகி ஆதித்யநாத் அரசு. ஆனால், அவ்விளக்குகள் அணைந்த மறுகணமே அங்கு ஓட்டோடி வந்த சிறுவர்கள், மிச்ச மீதியிருந்த எண்ணெய்யை தங்களது வீடுகளில் சமையலுக்காக சேகரித்த கொடுமை அரங்கேறியது. உ.பி.யின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நிலை இதுதான்.
  2. விளக்குகளில் எண்ணெய் சேகரிக்கும் கொடுமை ஒருபுறம் நடக்க, யோகி ஆதித்யநாத்தோ ‘இலங்கையில் இருந்து ராமன் திரும்பும் காட்சியை’ மீண்டுருவாக்கம் செய்ய, சில நடிகர்களுக்கு ராமன், லட்சுமணன், சீதா வேடமிட பணத்தை வாரியிரைத்ததோடு, அவர்களுக்கு வானத்தில் இருந்து வந்திறங்க அரசு ஹெலிகாப்டரையும் வழங்கியிருந்தார்.
  3. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கூட்டு பாலியல் வன்கொடுமைகளில் முதலிடத்தில் இருப்பது உத்தரப் பிரதேசம்தான். 2022 ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 65,743 வழக்குகள் பதிவாகியுள்ளன.
  4. உ.பி. ராம்நகரில், நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி சாலை விரிவாக்கத்திற்காகவும் விமான நிலைய திட்டத்திற்காகவும் மக்கள் குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் கையகப்படுத்தி வருகிறது யோகி அரசு.
  5. வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அருகே இருக்கும் தெருவோர வியாரிகளின் தள்ளுவண்டிகளை யோகி அரசின் போலிசு பறிமுதல் செய்து வியாபாரிகளை நிர்கதியாக்கியது.
  6. நிலம் கையகப்படுத்தப்பட்டு விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது ஒருபுறம் நடக்க, ஹர்தோய் உன்னாவ், சீதாபூர் உள்ளிட்ட உ.பி. கிராமங்களில் அனாமத்தாக சுற்றுதிரியும் கால்நடைகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க இரவு முழுவதும் காவல் காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் விவசாயிகள். தங்களை ‘பசு காவலர்கள்’ என்று காட்டிக்கொள்ளும் இந்துத்துவ அரசுக்கு, பயிர்கள் கால்நடைகளால் நாசமாக்கப்படுவதை தடுத்து நிறுத்த, பசு கொட்டகைகள் அமைக்க எந்த திட்டமும் இல்லை. விவசாயிகளே தங்களது பயிர்களை பாதுகாக்க கூர் கம்பிகளால் வேலி அமைப்பதையும் சட்டவிரோதமாக்கியுள்ளது யோகி அரசு.
  7. கடந்த 2021 ஆம் ஆண்டு உ.பி. லக்கிம்பூர்கேரியில் அமைதியாக பேரணி சென்று கொண்டிருந்த விவசாயிகள் மீது அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா காரை ஏற்றி 4 விவசாயிகளை படுகொலை செய்தான்.
  8. 2021 ஆம் ஆண்டு, உ.பி. பாரபங்க் என்னும் கிராமத்தில் உள்ள மதுகடைகளை அகற்ற கோரி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மக்கள்மீது சராமாரியாக தாக்குதலை நடத்தியது யோகி அரசு. ஆனால், ஜனவரி 22 ஆம் தேதி இராமர் கோவில் திறப்பை முன்னிட்டு மதுகடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.
  9. உ.பி.யில் உதவி ஆசிரியர்கள் போன்ற ஒப்பந்த ஊழியர்கள் தங்களது பணியை உத்தரவாதப்படுத்த கோரி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஆசிரியராக விரும்பிய ஷிகா பால் என்பவர், கல்வி இயக்குநரத்தில் உள்ள தண்ணீர் தொட்டியின் மேல் சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனாலும் அவரது கோரிக்கைமீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
  10. 10 ரூபாய் போஸ்டல் ஆர்டர் கொடுத்தால், தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் கீழ் தகவல்கள் பெறமுடியும். ஆனால் ஆர்.டி.ஐ-க்கு விண்ணப்பம் அனுப்பும் போஸ்டல்கள், உ.பி. லக்னோ, கான்பூர், பாரபங்கி, மொராதாபாத் மற்றும் வாரணாசி அஞ்சலகங்களில் இருந்து காணாமலாக்கப்பட்டிருக்கின்றன. அதாவது அரசாங்கம் குறித்து எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்ற யோகி அரசின் பாசிச நடவடிக்கை இது.


ஆதினி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube