Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 96

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்! ஊடகங்களின் ராம பஜனை! | அமிர்தா | வெற்றிவேல் செழியன்

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்! ஊடகங்களின் ராம பஜனை! | தோழர் அமிர்தா |தோழர் வெற்றிவேல் செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஜனவரி 22: ராமர் கோயில் திறப்பு விழா! இந்துராஷ்டிரத்திற்கான திறவு கோல்!

20.01.2024

ஜனவரி 22: ராமர் கோயில் திறப்பு விழா!
இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!
இந்துராஷ்டிரத்திற்கான திறவு கோல்!

பத்திரிகை செய்தி

1949 ஆம் ஆண்டு பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக குழந்தை ராமர் சிலையை வைத்து, ராமர் தானாகவே எழுந்தருளினார் என்று ஒரு கட்டுக் கதையை உருவாக்கி கலவரத்தைத் தொடங்கி வைத்த ஆர்எஸ்எஸ் கும்பல், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடித்தது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோரை திரட்டி கொண்டு போய் கலவரத்தை உருவாக்கி பாபர் மசூதியை இடித்தது ஆர்எஸ்எஸ் கும்பல். அன்றைக்கு அந்த கலவரத்துக்கு தலைமை தாங்கிய அத்வானி இந்த நாட்டின் துணைப் பிரதமராக கூட இருந்தார்.

அதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் இஸ்லாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்கள், கலவரங்கள் எண்ணில் அடங்காதவை. குஜராத்தில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் குஜராத் இந்துத்துவத்தின் சோதனைச் சாலை என்பதை அறிவித்தது. அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி இப்பொழுது இந்த நாட்டின் பிரதமராக இருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் புல்டோசர் ஆட்சி இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடித்து நொறுக்கி, தலித் மக்களுக்கும் பார்ப்பனர் அல்லாத இதர மக்களுக்கும் பெரும் அநீதியை இழைத்தது. உன்னாவ்வில் தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முதுகெலும்பு அடித்து நொறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை, பெற்றோருக்கு தெரியாமலேயே இறந்துபோன அச்சிறுமியின் உடல் எரிக்கப்பட்டது. குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்களை, அந்தப் பெண்ணின் முன்பே கொடூரமாகக் கொலை செய்து, அப்பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் பார்ப்பனர்கள் என்பதாலேயே முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் கூட, அந்த குற்றவாளிகள் சிறையில் இருந்து வெளியே வரும்போது அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது யாராலும் மறக்க முடியாது. இந்து மத வெறி நடவடிக்கைகள் ஒருபுறம் இவ்வாறு இருக்கும் போது அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்காக ஒட்டுமொத்த நாடே சூறையாடப்பட்டு விட்டது.

அதற்கு எதிராக போராடுவோர் எல்லாம் கொடூரமாக நசுக்கப்பட்டனர். இவையெல்லாம் கடந்த 9 ஆண்டுகளில் பாசிச மோடி அமித்ஷா கும்பல் நடத்திய பாசிச நடவடிக்கைகளில் சில துளிகளே.

ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என்று காங்கிரசு உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்த போதும், ராமர் கோயில் திறப்பு என்பது இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி என்பதை சுட்டிக்காட்டவில்லை. இந்தியா கூட்டணிக்குள்ளேயே சில கட்சிகள் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியா முழுவதும் ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாட்டமாக நடத்துவதற்கு அனைத்து வேலைகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அட்சதை அரிசி கொடுப்பதும், கோயில் திறப்பு விழாவை நேரடியாக ஒளிபரப்புவதும் அதற்கான ஏற்பாடுகளும், கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியும் ஆர்எஸ்எஸ் – பாஜக பாசிச கும்பலால் நடந்தேறி வருகின்றன. பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டியது இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ற உணர்வே இல்லாதபடி பக்தி என்ற பெயரில் இந்து மக்களின் ஜனநாயக உணர்வை ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கின்றது பாசிச கும்பல்.

1992 இல் பாபர் மசூதி இடிப்பின் போது இருந்த இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவான சூழல் இப்போது இல்லை. அப்படிப்பட்ட சூழலை உருவாக்க எதிர்க்கட்சிகள் செயல்படவும் இல்லை. எதிர்க்கட்சிகளின் கருத்துப்படி இது ஒரு தேர்தல் அரசியல் பிரச்சாரம் என்பதாக மட்டுமே இருக்கிறது.

ஆனால் உண்மை அதுவல்ல; ராமர் கோயில் திறப்பு என்பது, இதுவரை இந்த நாட்டில் கூறப்பட்ட ஜனநாயகம், மதநல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்திற்கும் சமாதி கட்டுவது தான். இந்த நாடு ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிஸ்டுகளுக்கானது என்பதை தான் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழா அறிவிக்கிறது. இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டியது இந்த நாட்டில் உள்ள இஸ்லாமியர் அல்லாத அனைத்து மக்களின் கடமை. இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக முழங்க வேண்டும்.

ஜனவரி 22 பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில் திறப்பு விழா என்றால் அதே நாளை ஆர்எஸ்எஸ் – பாஜக அம்பானி அதானி பாசிஸ்டுகளுக்கு எதிரான நாளாக மாற்றிக் காட்டுவோம். இந்து மதவெறி பாசிஸ்டுகள் அளித்த அட்சதை அரிசியையும் அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதையும் புறக்கணிப்போம். இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு எதிராக, இந்த நாட்டை மோடி – அமித்ஷா பாசிச கும்பல் இந்துராஷ்டிரத்தின் நுழைவாயிலுக்கு இழுத்துச் செல்வதற்கு எதிராக ஜனவரி 22 ஆம் தேதி அனைவரும் குரல் எழுப்புவோம் என்றும் தமிழ்நாட்டில் பாசிசத்துக்கு எதிரான அரணை கட்டியமைப்போம் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா! | மீள்பதிவு

“உலக வரலாற்றில் போர்க்களங்களுக்கு அடுத்து நீதிமன்ற வளாகங்களில்தான் சில மாபெரும் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன.”

– மௌலானா அபுல் கலாம் ஆசாத்

ந்து உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி நில உரிமை மேல்முறையீட்டு வழக்கில் அளித்திருக்கும் தீர்ப்பை மேற்கண்ட கூற்றோடு பொருத்திப் பார்க்காமல் இருக்கமுடியாது. இந்து மதவெறிக் கும்பலால் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது இந்திய முஸ்லிம்களின் மீது தொடுக்கப்பட்ட போர் எனக் கொண்டால், அந்த அநீதிக்கு எள்ளளவிலும் குறைந்ததல்ல உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இத்தீர்ப்பு.

முடிவாக, பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பும், அம்மசூதி கட்டப்பட்ட பிறகும், அம்மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் பகவான் ராமன் பிறந்தான் என்பதுதான் இந்துக்களின் நம்பிக்கையாக இருந்து வருவதோடு, அந்த நம்பிக்கை ஆவணங்கள் மற்றும் வாய்மொழி சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் காணப்படும் இணைப்பின் இறுதிப் பத்தியில் ஆணித்தரமாகக் கூறப்பட்டிருக்கிறது. இம்முடிவிற்கும் ராம ஜென்மபூமி குறித்த ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களுக்கும் இடையே யாரும் வேறுபாடு காண முடியுமா?

பாபர் மசூதி நில வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்: (இடமிருந்து வலமாக) அப்துல் நஸீர், எஸ்.ஏ.பாப்டே, ரஞ்சன் கோகோய், டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன்.

தீர்ப்பின் இணைப்பு மட்டுமல்ல, ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த ஒருமனதான தீர்ப்பும்கூட ராமனின் பிறப்பு குறித்த இந்துக்களின் நம்பிக்கை என ஆர்.எஸ்.எஸ். கூறிவரும் கருத்தை அடிநாதமாகக் கொண்டுதான் அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், ஒரு ‘மதச்சார்பற்ற குடியரசின் உச்ச நீதிமன்றம் பார்ப்பன மத நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே இத்தீர்ப்பை அளித்திருப்பதாகப் பளிச்செனத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, சட்டப்படியும் சாட்சியங்களின்படியும் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது போல ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கிரிமினல் வழக்குகளில் சந்தேகத்தின் பலனைக் குற்றவாளிக்கு அளித்து விடுதலை செய்யும் சட்ட நடைமுறை இருப்பதைப் போல, சிவில் வழக்குகளில் மனுதாரரும் எதிர் மனுதாரரும் முன்வைக்கும் ஆதாரங்களுள் ஒரு தரப்பு ஆதாரத்திற்கு அனுகூலத்தையும் (balance of probabilities) கூடுதல் முக்கியத்துவத்தையும் (preponderence of probabilites) அளித்துத் தீர்ப்பு வழங்கப்படும் நடைமுறை உள்ளது. சட்டப்படியான இந்தக் கொல்லைப்புற வழியையும் இந்து மத நம்பிக்கை, புராணங்கள், வரலாறு, தொல்லியல் ஆய்வுகள் ஆகியவற்றையும் தேவைக்கேற்ப நைச்சியமாகப் பயன்படுத்திக் கொண்டு பாபர் மசூதி வளாக நிலத்தின் மீதான பாத்தியதையைக் குழந்தை ராமர் தரப்பிடம் ஒப்படைத்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

ஓரவஞ்சனை நிறைந்த விசாரணை

உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்த மேல்முறையீட்டு வழக்கில் நிர்மோகி அகாரா, சன்னி வாரியம் மற்றும் குழந்தை ராமர் (ராம் லல்லா விராஜ்மான்) ஆகிய மூன்று தரப்புகள்தான் முக்கிய வழக்காடிகள். இவர்களுள் நிர்மோகி அகாராவை, அத்தரப்பு ஃபைசாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூல வழக்கில் இணைந்து கொள்ள கால வரம்பைத் தாண்டி மனு செய்திருக்கிறது; குழந்தை ராமரின் பூசாரியாக இருந்து வருவதாக நிர்மோகி அகாரா உரிமை கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டு அத்தரப்பை வழக்கிலிருந்து தள்ளுபடி செய்துவிட்டனர் நீதிபதிகள்.

1900- பாபர் மசூதியின் தோற்றம் (இடது) மற்றும் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு.

சன்னி வாரியத்தின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பினும், 1528 கட்டப்பட்ட பாபர் மசூதியில், அம்மசூதி கட்டப்பட்ட ஆண்டு தொடங்கி 1857 ஆண்டு வரையிலும் அயோத்தி முஸ்லிம்கள் அம்மசூதியில் தொழுகை நடத்தியதற்கான ஆதாரங்களைத் தரவில்லை, அம்மூன்று நூற்றாண்டுகளும் அம்மசூதி முஸ்லிம்களின் முழுமையான அனுபோக உரிமையின் கீழ் இருந்து வந்ததை நிரூபிக்கவில்லை” என்ற காரணங்களைக் கூறி, பாபர் மசூதி வளாகத்தை சன்னி வாரியத்திடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது, உச்ச நீதிமன்றம்.

எஞ்சி நின்ற இந்துத் தரப்பான குழந்தை ராமரிடம் பாபர் மசூதி வளாக நிலத்தை ஒப்படைப்பதற்கு, பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்ற இந்துக்களின் நம்பிக்கைக்கு” அப்பால், உச்ச நீதிமன்றத்திற்கு வேறு எந்தவொரு சான்றும் தேவையாக இருக்கவில்லை.

இவ்வழக்கின் ஒரு மனுதாரரான இந்து மகாசபை, முகம்மது நபி கூறிச் சென்ற மரபுகளின் (ஹதித்)படி பாபர் மசூதி அமையவில்லை. எனவே, அதுவொரு மசூதியில்லை” என வாதாடியதை ஏற்றுக்கொள்ள மறுத்து, அது மசூதிதான் என ஏற்றுக்கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். மசூதி என ஏற்றுக்கொண்ட பிறகு, அங்கே 1857 முன்பாகத் தொழுகை நடந்ததா எனக் கேள்வி எழுப்புவது அபத்தமானது.

மேலும், பாபர் மசூதி அமைந்திருந்த அயோத்தி, 1857 முன்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்த அவத் மாகாணத்தின் அங்கமாக இருந்துவந்தது. ஆங்கிலேய காலனி அரசு அவத் மாகாணத்தை இணைத்துக் கொள்ளும் முன்பு வரை அம்மாகாணம் முஸ்லிம் மன்னர்களால்தான் ஆளப்பட்டு வந்தது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் 1857 முன்பாக அம்மசூதியில் தொழுகை நடந்ததா எனக் குதர்க்கவாதிகளால் மட்டுமே கேள்வி எழுப்ப முடியும்.

1857 நடந்த முதல் வட இந்திய சுதந்திரப் போரில் அவத் மாகாணத்தில் ஏராளமான ஆவணங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறியாத ஒன்றல்ல. எனினும், இப்பாதகமான நிலைமையையும் மீறி, பாபர் மசூதிக்கு மன்னர் பாபர் அறுபது ரூபாய் நிதியுதவி அளித்ததற்கான சான்றையும், அது போலவே பிரிட்டிஷ் அரசும் சன்னி வாரியத்திடம் நிதியுதவி அளித்து வந்ததற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது, சன்னி வாரியம். நிதியுதவி மசூதியின் பராமரிப்புக்கு அளிக்கப்பட்ட ஒன்றே தவிர, அது நில உரிமைக்கான சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது” எனக் கூறி இந்த ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது, உச்ச நீதிமன்றம்.

பாபர் மசூதியை இடிப்பதற்காக அதன் மீது ஏறி நின்று வெறிக் கூச்சலிடும் சங்கப் பரிவாரக் கும்பல்.

1528 தொழுகை நடக்கவில்லை எனக் கூறப்படும் மசூதிக்கு எந்த ஆட்சியாளராவது பராமரிப்பு நிதி அளிப்பார்களா?”  இச்சாதாரண கேள்வி இந்து மத நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்த நீதிபதிகளின் மனச்சான்றிடம் எழும்பாதது ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல!

அயோத்தி முஸ்லிம்கள், பாபர் மசூதியில் 329 ஆண்டுகள் தொழுகை நடத்தி வந்ததற்கான ஆவணங்களை முஸ்லிம் தரப்பிடம் கறாராகக் கேட்ட உச்ச நீதிமன்றம், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, திரேதா யுகத்தில் ராமன் பிறந்தான் என்பதற்கு நிரூபணமாகக் கூறியிருக்கும் சான்று, இந்துக்களின் நம்பிக்கை.

“பாபர் மசூதியின் மைய கோபுரத்தை நோக்கி இந்துக்கள் வணங்கி வந்திருக்கிறார்கள்.”

“பாபர் மசூதியைச் சுற்றி வலம் வந்து வணங்கி வந்திருக்கின்றனர்.”

“பாபர் மசூதியையும் ராம் சபுத்ராவையும் பிரிக்க ஆங்கிலேயே ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் அருகே நின்று, பாபர் மசூதியை நோக்கி வணங்கியிருக்கிறார்கள்.”

“ஸ்கந்த புராணம், ராமசரித மானஸ் ஆகிய இந்து மத நூல்களில் ராமன் அயோத்தியில்தான் பிறந்தான் எனக் குறிப்புகள் உள்ளன.”

“டிஃபேன்தாலர், மார்டின் ஆகிய வெளிநாட்டுப் பயணிகள், தமது பயணக் குறிப்புகளில் அயோத்தியில் ராமன் பிறந்த இடத்தில் வழிபாடு நடந்ததாகக் குறிப்பிடுள்ளனர்.”

என  இந்நம்பிக்கைக்கு ஆதாரமாகப் புராணங்களையும், வாய்வழிச் செய்திகளையும், வெளிநாட்டுப் பயணிகள் போகிற போக்கில் கூறியவற்றையும் ஏற்றுக்கொண்டு, பகுத்தறிவுக்குப் புறம்பான, அறிவு நாணயமற்ற, ஒருதலைப்பட்சமான தீர்ப்பை அளித்திருக்கிறார்கள்.

வரலாற்றைத் திரித்த தீர்ப்பு

ஆங்கிலேயக் காலனி அரசு 1856 அவத் மாகாணத்தை இணைத்துக்கொண்ட பிறகு, பாபர் மசூதி வளாகத்தில், மசூதியையும், ராம் சபுத்ராவையும் பிரிக்குமொரு தடுப்புச் சுவரை அமைத்தது. இத்தடுப்புச் சுவரை அமைப்பதற்கு அயோத்தியில் 1855 இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் காரணமாகப் பயன்படுத்திக் கொண்டது ஆங்கிலேய அரசு. முதல் வட இந்திய சுதந்திரப் போருக்கு இரண்டு ஆண்டுகள் முன் இக்கலவரம் நடைபெற்றிருக்கிறது. இந்து, முஸ்லிம் மோதலைத் தோற்றுவிப்பது கும்பினி ஆதிக்கத்துக்கே பயன்பட்டிருக்க முடியும் என்ற கோணத்திலும் இந்தப் பிரச்சினையின் அவதார நோக்கத்தை நாம் பரிசீலிக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அவ்வளாகத்தினுள் அமைக்கப்பட்ட தற்காலிக இராமர் கோயில்.

1855 கலவரம், அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் ஆகிய நிகழ்வுகளின் பிறகுதான், பாபர் மசூதியின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த ராம் சபுத்ராவில் இந்துக்கள் வழிபாடுகளையும் திருவிழாக்களையும் தொடர்ந்து நடத்தத் தொடங்கினர். ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ 1855 நடந்த இந்து மோதலையும், அதன் விளைவாக அமைக்கப்பட்ட அத்தடுப்புச் சுவரையும் இந்துக்கள் பாபர் மசூதியினுள் வழிபாடு நடத்தும் தமது உரிமையை நிலைநாட்டும் முயற்சியாகத் தீர்ப்பில் சித்தரித்து வரலாற்றையே வளைத்துள்ளனர்.

முதலாவதாக, 1855 இந்து இடையே நடந்த கலவரம் ராம ஜென்ம பூமிக்காக நடைபெறவில்லை. இக்கலவரம் மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழித்து நிர்மோகி அகாரா ராம் சபுத்ராவில் கோவில் கட்டிக்கொள்ள தம்மை அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ந்த வழக்கிலும் ராம் சபுத்ராவைத்தான் ராமர் பிறந்த இடமாகக் கூறியதேயொழிய, பாபர் மசூதியை அல்ல.

ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, இந்துக்கள் அத்தடுப்புச் சுவரின் அருகே நின்றுகொண்டு, பாபர் மசூதியின் மையக் கோபுரத்தை நோக்கி, ( மசூதியின் மையக் கோபுரத்தைத் தீர்ப்பில் கர்ப்பக் கிரகம் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.) வணங்கி வந்தனர்” என வாய்வழிச் செய்திகள் கூறுவதைக் காட்டி, இந்துக்களின் இந்நடவடிக்கை, அம்மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமன் பிறந்தான்” என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு என்றும், மசூதியில் தமது உரிமையை நிலைநாட்டும் இந்துக்களின் முயற்சியென்றும் புது விளக்கம் அளித்திருக்கின்றனர். மேலும், 1857 முன்பாக பாபர் மசூதி அயோத்தி முஸ்லிம்களின் முழு அனுபவப் பாத்தியதையின் கீழ் இல்லை, இந்துக்கள் மசூதியினுள் சென்று வழிபாடு நடத்தியிருக்கின்றனர் என்பதையும் இவை காட்டுவதாகப் பொழிப்புரை எழுதியுள்ளனர்.

பாபர் மசூதி வளாகம் தடுப்புச் சுவர் மூலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, ராம் சபுத்ரா அமைந்திருந்த வெளிப்புறப் பகுதி இந்துக்களின் முழுக் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. அதில் முஸ்லிம்கள் தலையீடு செய்யவில்லை. அதேசமயம், வளாகத்தின் உட்புறப் பகுதியில் அமைந்திருந்த பாபர் மசூதியிலும் தமது உரிமையை நிலைநாட்டத் தொடர்ந்து முயன்று வந்தனர்” எனக் கூறுகிறது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

தேவகி நந்தன் அகர்வால்.

இந்துக்கள் வெளிப்புறப் பகுதியில் இருந்தபடியே மசூதியின் மையக் குவிமாடத்தை நோக்கி வணங்கி வந்தார்கள், பாபர் மசூதியைச் சுற்றி வலம் வந்து வணங்கினார்கள், தடுப்புச் சுவர் அருகே நின்றுகொண்டு பாபர் மசூதியை நோக்கி வணங்கினார்கள்” எனப் பட்டியல் இடும் நீதிபதிகள், இவற்றையெல்லாம் பாபர் மசூதியின் மீது தமக்குள்ள உரிமையை நிலைநாட்டும் இந்துக்களின் முயற்சிகளாகச் சித்தரித்துள்ளனர்.

இந்துக்கள் கடைப்பிடித்து வந்ததாகக் கூறப்படும் இந்த வழிபாடுகளுக்கு அப்பால், 1930 மசூதியின் குவிமாடத்தை இந்துக்கள் சேதப்படுத்தியது, 1949 மசூதியினுள் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டது உள்ளிட்ட கிரிமினல் நடவடிக்கைகளையும் இந்துக்களின் முயற்சியாகச் சித்தரிக்கிறது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இந்த அடாவடித்தனங்களை ஒருபுறம் சட்டவிரோதச் செயல் எனத் தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் நீதிபதிகள், இன்னொருபுறத்தில் இச்சட்டவிரோதச் செயல்களை இந்துக்களின் முயற்சியாகச் சித்தரிப்பது மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் மோசடியாகும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த வாதப்படிப் பார்த்தால், ஆர்.எஸ்.எஸ். காலிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட கிரிமினல் குற்றத்தையும்கூட இந்துக்களின் முயற்சியாகக் கூறமுடியும். தீர்ப்பின் இம்மோசடியின் காரணமாகத்தான், பாபர் மசூதியை இடித்த முதன்மைக் குற்றவாளியான அத்வானி, தீர்ப்பு வெளிவந்தவுடனேயே, மசூதி குறித்த தனது நிலைப்பாடு சரியானது” என நிரூபிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

1855 அயோத்தியில் இந்து  முஸ்லிம் கலவரத்தையடுத்து, அப்பொழுது அவத் மாகாணத்தின் மன்னனாக இருந்த நவாப் வாஜித் அலி ஷா, அக்கலவரம் தொடர்பாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சமரசத்தின் காரணமாகவே நிர்மோகி அகாரா பிரிவினர் ராம் சபுத்ராவை வழிபாட்டுத் தலமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். மேலும், இந்துக்களின் வழிபாட்டில் முஸ்லிம்கள் தலையீடு செய்யவில்லை எனக் கூறுவதோ அப்பட்டமான பொய், வரலாற்றுத் திரிபு.

1949 பாபர் மசூதி வளாகத்திற்குள் கள்ளத்தனமாக வைக்கப்பட்ட
குழந்தை இராமன் சிலை.

நிர்மோகி அகாராக்கள் மசூதியின் தென்கிழக்குப் பகுதியில் ஒரு நிரந்தரமான மேடையை அமைத்து வழிபாடு நடத்தத் தொடங்கியது குறித்து பாபர் மசூதியில் தொழுகை நடத்திவைத்து வந்த மௌல்வி முகமது அஸ்கர் 30.11.1858 அன்று காலனிய நீதிமன்றத்திடம் புகாராகத் தெரிவித்திருக்கிறார். மேலும், 1860, 1877, 1883, 1884 ஆண்டுகளிலும் இந்துக்களின் வழிபாடு குறித்துப் புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. (அயோத்தி: இருண்ட இரவு, பக்.90) இவையெல்லாம் ராம் சபுத்ரா பகுதியில் தமது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முஸ்லிம்கள் எடுத்த முயற்சிகளாக நீதிபதிகளின் காவி காமாலைக் கண்களுக்குத் தெரியவில்லை.

அப்படியே அவர்கள் தலையீடு செய்யவில்லை எனக் கொண்டால், அது அயோத்தி முஸ்லிம்களின் பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும்தான் எடுத்துக்காட்டுகிறது. ஒருபுறம் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் முஸ்லிம்களின் இப்பெருந்தன்மையை நன்றியறிதலோடு அங்கீகரிக்கவில்லை என்பதோடு, முஸ்லிம்கள் தலையீடு செய்யவில்லை என்ற பொய்யைச் சொல்லி முஸ்லிம்களின் சொத்தான பாபர் மசூதி வளாக நிலத்தைக் கயமைத்தனமாக அபகரித்துக் கொண்டிருக்கிறது.

மேலும், 1857 பின் மசூதியின் வெளிப்புறப் பகுதியில் இந்துக்களுக்கு வழிபாட்டு உரிமைதான் வழங்கப்பட்டது. அந்த வழிபாட்டு உரிமையை சொத்தின் மீதான உரிமையாக கிரிமினல்தனமான முறையில் மடைமாற்றிவிட்டது, உச்ச நீதிமன்றம்.

அரசியல் சாசனத்தின் இந்து ஆன்மா

வெறும் உரிமையியல் வழக்கின் மூலம் முஸ்லிம்களிடமிருந்து மசூதியைச் சட்டரீதியில் கைப்பற்ற முடியாது; இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையின் கீழ் இந்த வழக்கைக் கொண்டு வருவதன் மூலம்தான் சட்டப்படியே இதனைக் கைப்பற்ற முடியும் என்ற சூட்சுமம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த தேவகி நந்தன் அகர்வாலுக்கு மட்டுமே புரிந்திருந்தது.

உரிமையியல் சட்ட விதி 32 இந்துக் கோயிலின் கடவுள் சிலை சட்டரீதியான ஒரு நபராகவும், நிரந்தரமான மைனராகவும் கருதப்படுகிறது. ஒரு சிலை என்ற முறையிலும் மைனர் என்ற முறையிலும் அது தானே தனக்காகப் பேசும் ஆற்றலற்றது என்பதால், ஒரு காப்பாளர், அறங்காவலர் அல்லது பக்தர் மூலமாக மற்றவர்கள் மீது வழக்கு தொடுக்கும் உரிமையைக் கடவுள் சிலை பெற்றிருக்கிறது. இந்திய அரசியல் சட்டம் இந்துக் கடவுளுக்கு வழங்கியிருக்கும் இந்த உரிமை இசுலாமிய, கிறித்தவ கடவுளர்களுக்கோ பிற மதக் கடவுளர்களுக்கோ கிடையாது. சட்டரீதியான இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டுதான் இந்த நில உரிமை வழக்கில் முதலில் தேவகி நந்தன் அகர்வாலும், அவர் இறந்த பிறகு விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த திரிலோகி நாத் பாண்டேயும் குழந்தை ராமரின் காப்பாளர் என்ற பெயரில் இணைந்து கொண்டனர்.

கடவுள் சிலை நிரந்தரமான மைனர் என்ற சட்டத் தகுதியைப் பெற்றிருப்பதால், உரிமையியல் வழக்கில் விதிக்கப்படும் கால வரம்பு என்பது கடவுளுக்குக் கிடையாது. இந்த அடிப்படையில்தான், 1949 எழுந்த பிரச்சினைக்கு 1989 இல் இராமபிரானின் சார்பில் தேவகி நந்தன் அகர்வால் தாக்கல் செய்த மனுவை அனுமதிக்கத்தக்கதாக உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இந்துக் கடவுள் பெற்றிருக்கும் இந்தச் சிறப்புரிமையை அரசியல் சட்டத்தின் 25, 26 பிரிவுகள் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை ராமனின் சிலை கள்ளத்தனமாக மசூதியினுள் வைக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு, அப்படிக் கள்ளத்தனமாக வைக்கப்பட்ட சிலைக்கு இறைத்தன்மையை வழங்க முடியாது; சுயம்புவாகத் தோன்றிய கடவுளர்க்குத்தான் சட்டபூர்வத் தகுதியை வழங்க முடியுமேயொழிய குழந்தை ராமருக்கு வழங்க முடியாது” என சன்னி வாரியத்தின் சார்பாக வழக்காடிய மூத்த வழக்குரைஞர் ராஜிவ் தவான் மறுப்புத் தெரிவித்ததை, பக்தனின் நம்பிக்கையில் குறுக்கிட முடியாது என்ற காரணத்தைக் கூறி உச்ச நீதிமன்றம் புறக்கணித்துவிட்டது.

மசூதி சட்டவிரோதமானது, கோவிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டியிருக்கிறார்கள், ராம ஜென்மபூமி என்ற நிலப்பகுதியே சட்டபூர்வ நபர்” எனக் குழந்தை ராமரின் தரப்பில் வாதிடப்பட்டு, நிலத்தின் மீதான உரிமை கோரப்பட்டது. இம்மூன்று வாதங்களையுமே நிராகரித்திருக்கும் உச்ச நீதிமன்றம், நிலத்தின் மீது குழந்தை ராமர் தரப்பு உரிமை கோருவதையும் நிராகரித்திருக்க வேண்டும். ஆனால், இத்தர்க்க நியாயத்திற்கு முரணாக, பாபர் மசூதியின் மைய மாடத்தின் நேர் கீழேதான் ராமன் பிறந்தான் என்ற இந்துக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு நிலத்தை குழந்தை ராமர் தரப்பிடம் ஒப்படைத்திருக்கிறது.

இந்த நம்பிக்கைக்குச் சட்டப்படியான அங்கீகாரம் அளிக்கும் பொருட்டு, சட்டத்தின் சந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பாபர் மசூதி கட்டப்பட்ட 1528-ம் ஆண்டு தொடங்கி 1857 முடியவுள்ள காலக்கட்டத்தில் அதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியதற்கான சாட்சியங்கள் எதுவுமில்லை. அதேசமயம், 1857 முன்பே பாபர் மசூதியில் ராமரை இந்துக்கள் வழிபட்டு வந்ததற்கு டிஃபேன்தாலர், மார்டின் ஆகியோரின் பயணக் குறிப்புகள் உள்ளிட்டுப் பல சான்றுகள் உள்ளன என எடுத்துக்காட்டி, அவற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்தும் (preponderence of probabilites);

இராமர் கோயில் கட்டுவதற்காக விசுவ இந்து பரிசத் அடுக்கி வைத்திருக்கும் தூண்கள்.

1857-க்கு பின், ராம் சபுத்ரா, சீதாவின் சமையலறை ஆகியவை அமைந்திருந்த பாபர் மசூதி வளாகத்தின் வெளிப்புறப் பகுதி இந்துக்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. அதில் முஸ்லிம்கள் தலையீடு செய்யவில்லை. அதேபொழுதில் 1857-க்கு பின் பாபர் மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்திவந்தபோதும், ராமனின் பிறப்பிடம் என்ற நம்பிக்கையில் பாபர் மசூதியில் தமது உரிமையை நிலைநாட்ட இந்துக்கள் தொடர்ந்து முயன்று வந்துள்ளனர் என்ற அடிப்படையில் அதற்குக் கூடுதல் அனுகூலம் (balance of probabilites) அளித்தும் பாபர் மசூதி வளாகத்தைக் குழந்தை ராமர் தரப்பிடம் ஒப்படைத்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

சட்டப்படியான இந்த அனுகூலத்தையும், முக்கியத்துவத்தையும் இந்து தரப்புக்கு அளிப்பதற்கு மத நம்பிக்கை, புராணங்கள், வெளிநாட்டுப் பயணக் குறிப்புகள், தொல்லியல் ஆய்வுகள் ஆகியவற்றைத் தமது நோக்கத்திற்கு ஏற்ப நைச்சியமாகப் பயன்படுத்திக்கொண்ட நீதிபதிகள், முஸ்லிம்கள் தரப்பில் நின்று சன்னி வாரியம் அளித்த பல சான்றுகளை மட்டையடியாக மறுத்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். அடியாட்படை

இந்தத் தீர்ப்பு வேறுவிதமாக, அதாவது முஸ்லிம்களுக்குச் சாதகமாக வருவதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது என்பதை பாபர் மசூதி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் கடந்த கால  அணுகுமுறையில் இருந்தே யாரும் புரிந்துகொள்ள முடியும்.

கோவிலை அங்கேயே கட்டுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து நாடெங்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகள் இந்து மதவெறியைத் தூண்டிவருவதை அறிந்திருந்தும், 1992, டிசம்பரில் பாபர் மசூதி வளாகம் அருகே பூமி பூஜை செய்வதற்கு சங்கப் பரிவாரக் கும்பலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அக்கும்பலோ இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திட்டமிட்டபடி பாபர் மசூதியை இடித்துத் தள்ளியதோடு, அந்த இடிபாடுகளின் மீதே குழந்தை ராமருக்கு ஒரு தற்காலிகக் கோவிலையும் அமைத்தது.

பாபர் மசூதிக்குள் குழந்தை ராமர் சிலைக் கள்ளத்தனமாக வைக்கப்பட்டதை ஃபைசாபாத் மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது என்றால், மசூதியை இடித்துவிட்டு அமைக்கப்பட்ட அத்தற்காலிகக் கோவிலுக்கு அங்கீகாரம் அளித்தது, உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய பாபர் மசூதி இறுதித் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு கட்சிகள் சார்பில் கோவையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அப்பொழுது இருந்த காங்கிரசு அரசு வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டமொன்றை இயற்றியது. இந்தியா சுதந்திரமடைந்த 1947 எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் எந் தெந்த மதத்தினருக்குச் சொந்தமாக இருந்ததோ, அதனை மாற்றும் உரிமை யாருக்கும் கிடையாது என அச்சட்டம் கூறினாலும், இந்து மதவெறிக் கும்பலின் ராம ஜென்மபூமி அரசியலுக்குச் சாதகமாக, அதில் பாபர் மசூதிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்தச் சட்டத்திற்கும் அதில் அளிக்கப்பட்ட விதி விலக்கிற்கும் உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது.

பாபர் மசூதி வளாக நிலத்தை மைய அரசு கையகப்படுத்தியதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அந்நடவடிக்கைச் சரியா, தவறா எனத் தீர்ப்புக் கூறுவதற்கு அப்பாலும் சென்று, இசுலாம் மதத்தைப் பின்பற்றுவதற்கும் தொழுகை நடத்துவதற்கும் மசூதி என்பது அவசியமான ஒன்றல்ல. முஸ்லிம்கள் திறந்தவெளியில்கூடத் தொழுகை நடத்தலாம்” என அத்தீர்ப்பில் குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம்.

பாபர் மசூதி நில உரிமை மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, மசூதி குறித்து உச்ச நீதிமன்றம் கூறியிருந்த இந்தக் கருத்தை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென முஸ்லிம் தரப்பினர் வாதிட்டதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

இதற்கு நேர்எதிராக, இந்து மதம் குறித்து சங்கப் பரிவார அமைப்புக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இந்துத்துவா அல்லது இந்துயிசம் என்பது மதம் என்ற குறுகிய பொருள் கொண்டதல்ல, அது இந்திய வாழ்க்கை முறை” என இந்து மத உணர்வைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவது குறித்த வழக்கொன்றில் குறிப்பிட்டது, உச்ச நீதிமன்றம்.

1992 ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அப்பொழுதிருந்த நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த மைய அரசு, அவ்விடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தவும், அவ்வாராய்ச்சியின் முடிவுப்படி அந்த இடத்தின் உரிமை யாருக்கு எனத் தீர்மானிக்கவும் முடிவு செய்து, இது பற்றிக் கருத்துக் கூறுமாறு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றம் இவ்விடயத்தில் கருத்துக்கூற மறுத்துவிட்டது. எனினும், 2003 அலகாபாத் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தை அணுகாமலேயே, தன் விருப்பப்படி பாபர் மசூதி வளாகத்தில் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிட்டது. தானே சம்மதம் தெரிவிக்காத அந்த அகழாய்வு முடிவுகளைத்தான் ஆதாரமாக உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

பாபர் மசூதி மேல்முறையீட்டு வழக்கை எடுத்துக் கொண்டால், அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது மட்டும்தான் உச்ச நீதிமன்றத்தின் முன்னிருந்த கேள்வி. ஆனால், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளோ அந்த வரம்பையும் தாண்டி, மைய அரசு மூன்று மாதங்களுக்குள் ஓர் அறக்கட்டளையை அமைத்து, அதனிடம் நிலத்தை ஒப்படைத்து, கோவில் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.


படிக்க: சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் !


ராமர் பிறந்த இடத்தில் மசூதியா?” என்ற பொய்யைச் சொல்லித்தான் மசூதியை இடித்தது ஆர்.எஸ்.எஸ். அங்குதான் ராமன் பிறந்தான்” என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளித்து, அந்த நிலத்தில் கோவிலை கட்டச் சொல்லித் தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். பொய்ப் பிரச்சாரத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கிவிட்டது உச்ச நீதிமன்றம்.

அயோத்தியில் ராமர் கோவில், 370 ரத்து செய்வது, ஒரே சிவில் சட்டம்  இந்த மூன்றும்தான் ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க.வின் உயிராதாரமான திட்டங்கள்.

இவற்றுள் ராமர் கோவில் திட்டத்தை உச்ச நீதிமன்றமே நிறைவேற்றிக் கொடுத்துவிட்டது.

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு ஒரே சிவில் சட்டம் என்பதல்ல ஆர்.எஸ்.எஸ்.  இன் நோக்கம். முஸ்லிம்களுக்குத் தனிச்சலுகை வழங்கும் சிவில் சட்டங்களை ஒழிப்பதுதான் அதனின் எண்ணம். முத்தலாக் மணமுறிவு முறையைச் சட்டவிரோதமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த சிவில் விவகாரத்தைக் கிரிமினல் குற்றமாக்கிவிட்டது, மோடி அரசு.

அரசியல் சாசனச் சட்டப்பிரிவு 370 செயலற்றதாக்கியிருக்கும் மோடி அரசின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற விசாரணையில் இருந்துவருகிறது. இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்களிடமிருந்து பாபர் மசூதி நிலத்தை அபகரித்துவிட்ட உச்ச நீதிமன்றம், காஷ்மீர் மக்களிடமிருந்து 370 பிரிவு அபகரிக்கப்பட்ட நடவடிக்கையைத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் நியாயப்படுத்திவிடாதா என்ன?

இவை மட்டுமின்றி, தேசியக் குடியுரிமைப் பதிவேடு வழக்கு, ரஃபேல் ஊழல் வழக்கு, நீதிபதி லோயாவின் சந்தேகத்திற்குரிய மரணம் குறித்த வழக்கு, மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு குறித்த வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த மீளாய்வு எனப் பல்வேறு வழக்குகளிலும் பா.ஜ.க.விற்குச் சாதகமாகவே உச்ச நீதிமன்றம் நடந்துகொண்டிருக்கிறது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இத்தீர்ப்பு ஒருமனதாக அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருப்பினும், தீர்ப்பை எழுதிய நீதிபதி யார் என்ற விவரம் மறைக்கப்பட்டு, நீதிமன்ற மரபு மீறப்பட்டிருக்கிறது. மேலும், இந்து மத நம்பிக்கைகளைக் கொண்டாடும் தீர்ப்பின் இணைப்பை எழுதிய நீதிபதியின் பெயரும் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டிருக்கிறது. இவை, தீர்ப்பு மண்டபத்தில் எழுதப்பட்டு நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டிருக்கிறதா என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.

இந்திராவின் அவசர நிலைக்கால ஆட்சிக்குத் துணை நின்ற குற்றத்தை இழைத்த உச்ச நீதிமன்றம், இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க.வின் இந்து ராஷ்டிர கனவை நிறைவேற்றிக் கொடுக்கும் அடியாட்படையாகச் செயல்படுகிறது. ராமன் பிறப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியிருக்கும் பொய்மையின் அடிப்படையில் அளிக்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பு அதனை உறுதிப்படுத்துகிறது.


செல்வம்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2019 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வள்ளுவரை ஆட்டைய போட துடிக்கும் பாஜக | தோழர் அமிர்தா

வள்ளுவரை ஆட்டைய போட துடிக்கும் பாஜக |
ஆளுநர் ரவியா ? RSS ரவியா ? |தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 100-ஆம் ஆண்டு நினைவு தினம்!

1924 ஜனவரி 21 அன்று, அந்த செய்தியைக் கேட்ட பிறகு உலகப் பாட்டாளி வர்க்கம் உறைந்துதான் போனது. வார்த்தைகள் இல்லை; கண்களில் நீர் தாரைதாரையாய் வழிந்தது. உலகப் பாட்டாளி வர்க்கம் தன் தலைவனின், ஆசானின் ஈடு செய்ய முடியாத இழப்பை எண்ணி வருந்தியது.

இந்த ஆண்டு, நாடு கடந்து உலகப் பாட்டாளி வர்க்கத்தால் நேசிக்கப்பட்ட, 1917-இல் ரசிய சோசலிசப் புரட்சியை நிகழ்த்தி, அழுக்கு சட்டைகளின் அதிகாரத்தை நிலைநிறுத்திய தோழர் லெனினின் 100-ஆம் ஆண்டு நினைவுதினம்.

தோழர் லெனின் நோயுற்றிருந்த தருணத்தில் தோழர் ஸ்டாலின் அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “தோழர் லெனினைப் பார்த்தவுடன் நமது மனதில் பட்டுத் தெறிக்கும் விசயம், செய்திகளை அறிவதற்கான அவரது தணியாத தாகம்; கடமையாற்றுவதற்கான அடங்காத – அடக்கவே முடியாத அவரது துடிப்பு; இவற்றில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அவர் ஏதோ பட்டினி போடப்பட்டவர் போல காணப்பட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது”.

“எல்லா உழைப்பாளர்களின்பாலும் அவரது நெஞ்சம் ஆர்வமிக்க அன்பு கொண்டு துடித்தது” என்று “லெனின் சமகாலத்தவர்களின் நினைவுகள்” என்ற நூலில் குறிப்பிடுகிறார் கர்பீன்ஸ்கி.

“லெனின் மனிதக்குலம் அனைத்துக்கும் மேலே நிற்கிறார், நமக்குப் புலப்படாத உண்மைகளைத் தமது அசாதாரண சிந்தனைத்திறன் காரணமாகவே அவரால் காண முடிகிறது என்று எனக்குத் தென்பட்டது” எனக் கூறுகிறார் போல்ஷ்விக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அலெக்சாந்தரா கொலந்தாய். ரத்தக்களறியும் குழப்பமும் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் லெனினது அச்சமற்ற உறுதியைக் கண்டு வியக்கிறார் கொலந்தாய். ஆம், அவரது அசாதாரண சிந்தனைத்திறன் என்பது மார்க்சியத்தைத் தொடர்ச்சியாக இடைவிடாமல் நடைமுறையில் இருந்து கற்றுக்கொண்டிருந்ததோடு தொடர்புடையது.


படிக்க: சாமானிய உழைப்பாளி மக்களை லெனின் நேசித்தார் – கர்பீன்ஸ்கி


லெனின் ஒரு புரட்சியாளர் என்பதற்காக மட்டும் நாம் அவரை நினைவுகூரவில்லை, பாட்டாளி வர்க்கத்திற்காக மண்ணில் ஒரு சொர்க்கமான சோசலிச ரஷ்யாவிற்கு அடித்தளமிட்டவர்; பாட்டாளி வர்க்க அரசு வந்தவுடன் பெண்களின் கைகளிலிருந்து கரண்டிகளையும், துணிகளையும், பாத்திரங்களையும் பிடுங்கி எறிந்துவிட்டு அவர்களது கைகளில் புத்தகங்களையும், டிராக்டர்களையும் கொடுத்து, உழைப்பு சுரண்டலிலிருந்து விடுவித்த பெண்ணியவாதி; ரஷ்ய நாட்டை மின்மயமாக்கியவர்; பொது சுகாதாரக் கட்டமைப்பு, பொது ரேசன், மகளிருக்கு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசக் கல்வி, தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டுமணி நேர உறக்கம் என உலகப் பாட்டாளி மக்கள் குறைந்தபட்சமாவது பெற்றிருக்கிறோம் என்றால் அதன் அடிநாதம்தான் தோழர் லெனின்.

லெனினது நினைவுகள் இன்றும் நமக்குத் தேவைப்படுகின்றன, நூற்றாண்டு கடந்தும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான விடை தோழர் லெனின்.

அம்பானி-அதானி கும்பலுக்கான மோடி-அமித்ஷாவின் பாசிச பேயாட்சியில், தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்படுகிறது; உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வாதாரங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைக்கப்படுகிறது; காவிகளின் சாதி-மதக் கலவரங்களால் உழைக்கும் மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்; போலி ஜனநாயக உரிமைகள் கூட பறிக்கப்படுகின்றன; பெண் என்பவள் அடிமை என்கிற பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிராகவும் கார்ப்பரேட் சுரண்டலுக்கு தடையாகவும் இருப்பதால் பெண்களுக்கான மாதவிடாய்கால விடுப்பு மறுக்கப்படுகிறது. இத்தகைய கொடூர சூழலில் உழலும் இந்திய உழைக்கும் மக்களாகிய நமக்கு அமெரிக்க ஏகாதிபத்திய அடிமைத்தளையிலிருந்து விடுபடவும், பாசிச அபாயத்தை முறியடிக்கவும் தோழர் லெனின் தேவைப்படுகிறார்.

1914, முதல் உலகப்போர் காலகட்டத்தில் காவுத்ஸ்கி தலைமையிலான இரண்டாம் அகிலத் தலைவர்கள் மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டி புரட்சியை நீர்த்துப் போகச் செய்யும் பணியை செய்து கொண்டிருந்தனர்; புரட்சியெல்லாம் தேவையில்லை, முதலாளித்துவத்தின் கீழேயே மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று முதலாளித்துவ அடிமைத்தனத்தைப் பரப்பிக் கொண்டிருந்தனர், சந்தர்ப்பவாதப் புதைசேற்றில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தனர்; இன்னொரு பக்கம் ரசியாவில் மார்க்சியத்தை அறிமுகப்படுத்திய பிளக்கானவ் உள்ளிட்டோர் ஏகாதிபத்திய போர்களைப் பயன்படுத்தி உள்நாட்டில் புரட்சியை நடத்துவது பற்றிய பார்வையின்றி தேசவெறியில் மூழ்கினர்.

அந்தப் பிற்போக்கான சூழலில்தான், முதலாளித்துவத்தை ஆய்வு செய்து, “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சககட்டம்” என்ற நூலின் மூலம் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்திருக்கிறது என்று உலகிற்கு அறிவித்தார் லெனின். ஏகாதிபத்தியமாய் வளர்ந்த முதலாளித்துவத்தை வீழ்த்த பாட்டாளி வர்க்கப் புரட்சிதான் தீர்வு என்று அதற்கான புரட்சிகர நடைமுறையையும், புதிய பாணியிலான போல்ஷ்விக்மயமான கம்யூனிஸ்ட் கட்சியையும் கட்டியமைத்தார். ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி என்பது காலனிய நாடுகளின் விடுதலை எழுச்சியுடன் தொடர்புடையது என்று ஆசான் மார்க்சின் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற முழக்கத்துடன் “ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுங்கள்” என்ற முழக்கத்தை இணைத்து மார்க்சியத்தை லெனினியமாக வளர்த்தெடுத்தார்.

ரஷ்ய சோசலிசப் புரட்சி மூலம் உள்நாட்டு-வெளிநாட்டு ஏகாதிபத்தியங்களை ஒருசேர வீழ்த்தி, காலனிய நாடுகளின் விடுதலைக்கு ஒளியூட்டினார். அந்த ஒளியில்தான், சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் புரட்சிகள் வெடித்தன. உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள் உண்மையான விடுதலையை அடைந்தனர்.

மேலும், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஊடாகத்தான் உண்மையான தேசிய இன விடுதலையைப் பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து கோட்பாட்டு ரீதியாகவும், பல்வேறு தேசிய இனங்கள் விருப்பப்பூர்வமாக ஒருங்கிணைந்திருந்த சோவியத் யூனியனை உருவாக்கி நடைமுறை ரீதியாகவும் வழிகாட்டினார், லெனின். ஒரு தேசிய இனம் மற்றொரு தேசிய இனத்தோடு சேர்ந்து வாழவே முடியாது என்ற முதலாளித்துவ தேசியவாதத்தை, கோட்பாடு, நடைமுறை ஆகிய இரண்டு அம்சங்களிலும் அடித்து நொறுக்கினார்.


படிக்க: பொதுவுடைமைவாதப் பத்திரிகை எப்படி இருக்க வேண்டும்? – தோழர் லெனின்


லெனினின் நினைவுநாளில், உழைப்பாளி வர்க்கத்தின் மீதான நேசமும், புரட்சியின் மீதான உறுதியும், மார்க்சியத்தை இடைவிடாது கற்றுக்கொண்டு செயல்படுத்திய அவரது அரசியல் மேதைமையும் நாம் அவரிடமிருந்து இறுகப் பற்றிக்கொள்ள வேண்டிய பண்புகள்.

எனினும், இவற்றையெல்லாம் தாண்டி, தோழர் லெனினது மகத்தான பங்களிப்புகளில் இன்று நாம் முதன்மையாக நினைவுகூர வேண்டியது, பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு வழிகாட்டுகின்ற, உறுதிமிக்க ஒரு போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைத்ததைத்தான். ஏனெனில், இன்றைய உலகப் பாட்டாளி வர்க்கத்தின் முதன்மைத் தேவை அதுதான். ஏகாதிபத்திய-முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதம் அமைப்பு, “அமைப்பு மட்டுமே!”

கம்யூனிஸ்ட்டுகளின் பணி தொழிற்சங்கப் போராட்டங்கள் என்று புரட்சியிலிருந்து தொழிலாளி வர்க்கத்தைப் பிரித்து, முதலாளித்துவத்திற்கு சேவைசெய்த லெனின் காலத்து திரிபுவாதிகளைப் போல இன்றும் சித்தாந்தத்தை, கொள்கைகளை முதலாளித்துவத்திடம் அடகுவைத்துவிட்டு சொல்லில் சோசலிசம் பேசுகின்ற பலவண்ண திரிபுவாதிகள் உலகெங்கும் இருக்கின்றனர்.

உலகெங்கும் நடைபெறுகிற உழைக்கும் வர்க்கப் போராட்டங்கள், எழுச்சிகளைப் புரட்சியை நோக்கி வளர்த்துச் செல்லாத இத்திரிபுவாதிகள்தான் புரட்சியின் தடையரண்கள். மனிதவளம், இயற்கைவளம் என ஒட்டுமொத்த புவிக்கோளத்தையும் தனது கட்டற்ற லாபவெறிக்காக சுரண்டும் முதலாளித்துவத்தால் பட்டினி, பசி, போர், அகதிகளாகப் புலம்பெயர்வு, தேசிய இன அடக்குமுறைகள், சூழலியல் நெருக்கடிகள் என உலகமே பேரிடர்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்த வலிகளுக்கு விடுதலையும், இளைப்பாறுதலும் கொடுப்பது பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே! அத்தகைய புரட்சியை நடத்துவதற்குரிய, லெனினியக் கட்சியை உடனடியாகக் கட்டியமைப்பதன் மூலமே இந்தியப் பாட்டாளி வர்க்கமாகிய நாம் தோழர் லெனினை நினைவுகூர்வதற்கு உரிமையுள்ளவர்களாவோம்!


இனியன்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா? | மீள்பதிவு

பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயிலின் மிச்சங்கள் இருப்பதாக இந்துத்துவ கும்பல் தொடர்ந்து சொல்லி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். தொல்லியலாளர்கள் சிலரைப் பயன்படுத்தி, பொய்யான தொல்பொருட்களை காட்டி, அதை ராமர் கோயிலின் மிச்சங்கள் எனவும் சாதித்தது இந்த கும்பல்.  2003-ஆம் ஆண்டு பாபர் மசூதியை ஒட்டிய பகுதிகளில் இந்திய தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வு முடிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து வழக்கு தொடுத்த சன்னி வஃக்பு வாரியம் இந்த அகழாய்வு முடிவு, ‘தெளிவற்ற மற்றும் உள்முரண்பாடுகளுடன் உள்ளது’ எனக் கூறியது.

பாபர் மசூதியில் ஒரு பகுதியில் நடந்த அகழாய்வில் வஃக்பு வாரியத்தின் சார்பில் பங்கேற்ற சுப்ரியா வர்மா, ஜெயா மேனன் ஆகியோர் 2010-ஆம் ஆண்டில் ‘எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’ இதழில் இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு முடிவு குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தனர். அந்தக் கட்டுரையில், முன்முடிவுகளை வைத்துக்கொண்டு இந்திய தொல்லியல் ஆய்வகத்தைச் சேர்ந்த தொல்லியலாளர்கள் ஆய்வில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர்.

அகழாய்வு.

“எந்தவொரு இந்திய தொல்லியலாளரோ, அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவரோ அகழாய்வு நடத்த வேண்டுமெனில் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் முன் அனுமதி பெற்றாக வேண்டும். இதனால் பலம் பொருந்திய அந்த அமைப்பை எதிர்த்தும் அதன் காலாவதியான அகழாய்வு முறைகள் குறித்தும் பேச எவரும் துணிவதில்லை” என அவர்கள் எழுதியிருந்தனர்.

2019-ஆம் ஆண்டு வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தனது தோற்றுப்போன ஆட்சி நிர்வாகத்தினை மறைக்க மீண்டும் அயோத்தி பிரச்சினையை கையெலெடுத்துள்ளது இந்துத்துவ கும்பல்.  அண்மையில் ஒன்றுகூடிய பரிவாரங்கள், நீதிமன்றத்தைப் பொருட்படுத்தாது ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என முழங்கின.

இந்தச் சூழலில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 26-வது கருப்பு தினம் வியாழன் அன்று நினைவு கூறப்பட்டது. இதையொட்டி ஹஃபிங்டன் போஸ்ட் இணையதளம், அகழாய்வில் பங்கேற்ற ஜே.என்.யு. பல்கலைக்கழக பேராசிரியர் சுப்ரியா வர்மாவின் நேர்காணலை வெளியிட்டிருந்தது.  அந்த நேர்காணலில் சுப்ரியா, இந்திய தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வில் பல செயல்முறை குறைபாடுகள் இருந்ததை சுட்டிக்காட்டுகிறார்.


படிக்க: இந்துத்துவ சதி சூழ்ச்சி நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு !


“இப்போது பாபர் மசூதிக்கு அடியில் கோயில் இருந்ததற்கான தொல்லியல் தடயங்கள் எதுவும் இல்லை. உண்மையில் பாபர் மசூதிக்கு அடியில் மற்றொரு மசூதியின் மிச்சங்கள்தான் உள்ளன” என்கிறார் சுப்ரியா.

இந்திய தொல்லியல் ஆய்வகம் அகழாய்வில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களாக  மூன்று விசயங்களை கூறியிருந்தது. அந்த மூன்றும் கேள்விக்குறியவை என விளக்குகிறார் சுப்ரியா.

1. மேற்பகுதியில் இருந்த சுவர்: “மேற்கு பகுதியில் சுவர் இருப்பது மசூதி கட்டுமானத்தில் உள்ள முக்கிய அம்சம். அந்த சுவரின் முன்புதான் தொழுகை நடத்துவார்கள். கோயிலில் இப்படியான அம்சம் இல்லை. கோயில் கட்டுமானம் முற்றிலும் வேறானது.”

2. ஐம்பது தூண்களைக் கொண்ட அடிகட்டுமானம்: “இது முற்றிலும் ஜோடிக்கப்பட்டது. பலமுறை இந்த புரட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் புகார் செய்திருக்கிறோம். தூண்கள் என அவர்கள் சொல்லிக்கொள்ளும் அமைப்பு உடைந்த ஓடுகளால் ஆனது. அவற்றின் இடையே மண் நிரம்பி இருந்தது. வலிமையான கட்டடத்தைத் தாங்கும் தூண் எப்படி அவ்வாறு இருக்க முடியும்? என நீதிமன்றத்தில் வாதிட்டோம்”.

3. கட்டுமானத்தின் மிச்சங்கள்: “முக்கியமான கட்டுமான மிச்சங்கள் என 12 துண்டுகள் சமர்பிக்கப்பட்டன. இவை எதுவும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டவை அல்ல. மாறாக, இவை பாபர் மசூதியின் சுண்ணாம்பு தரை தளத்தின் மேலே இருந்த கட்டிடக் கழிவுகள். அவர்கள் சொல்லிக் கொள்வதைப் போல, இது ஒரு கோயில், கற்களால் ஆன ஒரு கோயிலாக இருந்திருந்தால் இதைவிட பல ஆதாரங்கள், ஏன் கற்சிலைகள் கூட கிடைத்திருக்கலாம். ஆனால் அப்படியெதுவும் கண்டெடுக்கப்படவில்லை.

சுப்ரியா வர்மா.

சுப்ரியா வர்மா, இந்திய தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வு, முன்பு நடந்த தொல்லியல் ஆய்வுகள் குறித்தும் பல விசயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். 1861-ஆம் ஆண்டும் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் இயக்குனராக இருந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம், பாபர் மசூதி இருந்த பகுதிகளில் ஆய்வுகள் செய்ததாக தெரிவிக்கிறார்.  அயோத்தியில் மூன்று பழமையான இடங்கள் இருந்ததாகவும் அவற்றில் இரண்டு புத்த ஸ்தூபிகளாகவும், ஒன்று விகாரையாகவும் இருந்ததாக கன்னிங்ஹாம் பதிவு செய்துள்ளார். அந்தக் காலக்கட்டத்தில் இந்தப் பகுதி மக்கள் இங்கிருந்த சில கோயில்கள் இடிக்கப்பட்டதாக வாய்வழி கதைகளை சொன்னதாகவும் ஆனால், பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது என்பது குறித்து எவ்வித குறிப்பையும் கன்னிங்ஹாம் எழுதவில்லை என்றும் சுப்ரியா குறிப்பிடுகிறார்.

அதன் பின்பு 1969-ஆம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை இரண்டாவது அகழாய்வை இந்தப் பகுதிகளில் (அயோத்தியில்) நடத்தியது. அந்த அகழாய்வு முடிவுகள் குறித்து தெளிவான அறிக்கைகள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை. கிடைத்த தகவலின்படி, அகழாய்வு நடந்த பகுதிகள் வரலாற்றின் தொடக்க மற்றும் மத்திய காலத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளாக இருந்திருக்கலாம்.

1975-1980 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் இயக்குனராக இருந்த பி.பி. லால் இந்த அகழாய்வு திட்டத்துக்கு புத்துயிர் கொடுத்தார். இந்துத்துவ அமைப்புகளின் புரட்டுக்கு ‘அறிவியல்’ சாயம் அடித்தவரும் இவரே.

சுப்ரியா சொல்கிறார், “அயோத்தி, மதுரா, வாரணாசி ஆகிய மூன்று இடங்களில் இருந்த கோயில்கள் இடிக்கப்பட்டதாக 1988-ஆம் ஆண்டு விசுவ இந்து பரிசத் பிரச்சினையை கிளப்பியது. அந்த ஆண்டு, பி.பி. லால், 1975-1978ஆம் ஆண்டுகளில் அயோத்தியில் அகழாய்வு செய்த இடத்தில் கண்டெடுத்ததாக ‘கோயில் தூண்கள்’ எனக்கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏடான ‘மன்தன்’-இல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதோடு, குரோஷியாவில் நடந்த உலக தொல்லியல் மாநாட்டில், இந்த புகைப்படத்தை சமர்பித்து அகழாய்வு தொடர்ந்து நடத்தப்பட்டால் கோயில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கலாம் என பேசினார்.

இந்த லால், ராமாயணம், மகாபாரத புராணங்களில் சொல்லப்பட்ட இடங்களை அகழாய்வதில் ஆர்வம் கொண்டு செயல்பட்டவர்.  இவர் கொடுத்த ‘புராண புரட்டு ஆதாரங்கள்’ பாபர் மசூதியை வைத்து பா.ஜ.க., மிகப்பெரும் அளவில் அரசியலை கட்டியெழுப்ப உதவியது. 1992-ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு முதன்முறையாக வந்த பா.ஜ.க. (தேசிய ஜனநாயகக் கூட்டணி) ஆட்சியின் போது மீண்டும் அகழாய்வு செய்வது குறித்த பேச்சு எழுந்தது. பின்பு, அலகாபாத் நீதிமன்றம் 2002-ஆம் ஆண்டு அகழாய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வகத்துக்கு ஆணையிட்டது”

சுப்ரியா தன்னுடைய நேர்காணலில், அப்போது செய்யப்பட்ட அகழாய்வு குறித்த அறிக்கையின் உள்ளடக்கத்தில் பல உண்மைகள் உள்ளன. உள்ளடக்கத்தில் பல தலைப்புகளில் வந்த கட்டுரையை எழுதியவர் யார் என்கிற விவரமும்கூட இடம் பெற்றுள்ளன. ஆனால், ஆய்வின் முடிவு பெயர் குறிப்பிடாமல் எழுதப்பட்டுள்ளது. முடிவுக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பே இல்லை என்கிறார் சுப்ரியா.

“முழு அறிக்கையையும் படித்தால், ஒரு இடத்தில் கூட கோயில் குறித்த பதிவு இடம்பெற்றிருக்காது. இது தரமான அறிக்கைதான். ஆனால், ஆகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட எலும்பு துண்டுகள் மற்றும் மனித எலும்பு கூடுகள் குறித்த பதிவு அறிக்கையில் இல்லை. அதுகுறித்து அவர்கள் பதிவு செய்யவே இல்லை.  அவற்றை ஆய்வுக்கு அனுப்பினால் உண்மைகள் தெரிய வந்திருக்கலாம்.


படிக்க: பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !


இறுதியாக மூன்றே மூன்று ஆதாரங்களின் அடிப்படையில் பெயர் போடாமல் ஆய்வின் முடிவு ‘பாபர் மசூதிக்கு அடியில் கோயில் இருக்கிறது” என எழுதப்பட்டுள்ளது. மூன்றே வரிகளில் எழுதப்பட்ட முடிவுக்கு உள்ளடக்கத்தில் எங்கேயும் ஆதாரங்கள் இல்லை. ஆனால், இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பாபர் மசூதிக்கு அடியில் இரண்டு அல்லது மூன்று அடுக்கில் சிறு மசூதிகள் இருக்கலாம் எனகிற முடிவுக்கு நாங்கள் வந்தோம்” என்கிற சுப்ரியா முசுலீம் மக்களின் குடியேற்றத்துக்கு முன், இந்தப் பகுதியில் பவுத்த மக்களின் வசிப்பிடமாக இருந்திருக்கலாம் என்கிறார்.

“அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை இந்தப் பகுதி பவுத்த மக்களின் வசிப்பிடமாக இருந்திருக்கலாம் (அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் பதிவு செய்திருக்கிறார்) என்றும் 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டில் முசுலீம் மக்கள் குடியேறியிருக்கிறார்கள். அப்போது பழைய இடிந்துபோன பவுத்த கட்டுமானத்தின் மீது மசூதிகள் எழுப்பப்பட்டிருக்கலாம். அதன்பின் 1528-ஆம் ஆண்டும் பாபர் மசூதி, பழைய மசூதிகளின் மீது கட்டப்பட்டிருக்கிறது” என தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார் சுப்ரியா.

பவுத்த, சமண மதக் கருத்துக்களை திருடிக்கொண்டது மட்டுமல்லாது, அவர்களுடைய கோயில்களையும் புதிய புதிய கடவுளர்களின் நாமகரணம் சூட்டி தனதாக்கிக் கொண்டது திருட்டுப் பார்ப்பனிய இந்துமதம். வரலாற்று காலம் தொட்டு இந்த திருட்டுத்தனத்தை செய்துவரும் இவர்கள், பாபர் மசூதிக்கு அடியில் கோயில் இருக்கிறது என சொன்ன புரட்டும் புஸ்வானமாகியுள்ளது.

செய்தி ஆதாரம்: Huffington Post


கலைமதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மல்யுத்த வீரர்களின் எதிர் நடவடிக்கைகள் தங்களையே வருத்திக் கொள்வதாக இருப்பதை எப்படி பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷன் சிங்-இன் தொழில் கூட்டாளி மல்யுத்த கூட்டமைப்புக்கு தலைவராக்கப்பட்ட பின் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து வெளியேறியுள்ளார். மற்ற மல்யுத்த வீரர்கள் பதக்கங்களையும், விருதுகளையும் திருப்பியளித்து வருகின்றனர். இதற்கு முன்பு விவசாயிகள் சங்கம் கூட மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒன்றிய அரசுக்கு காலக்கெடு விதித்தது. ஆனால் ஒன்றிய அரசு திமிர்த்தனமாக அதனையெல்லாம் பொருட்படுத்தவில்லை. இத்தகைய ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர் நடவடிக்கைகள், தங்களை வருத்திக் கொள்வதாகவே (அவர்கள் சுயமரியாதையாகவும், நேர்மையாகவும் முடிவெடுத்திருந்தாலும் கூட) உள்ளது? இவற்றை எப்படி பார்ப்பது?

து முக்கியமான விஷயம். நாட்டின் மல்யுத்த வீராங்கனைகளை அவமானப்படுத்திய பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷன், மோடியின் இந்துராஷ்டிர தர்பாராக மாறியுள்ள இந்திய நாடாளுமன்றத்தில் அலங்கரிக்கப்படுகிறார். நாடாளுமன்றம் எப்படி மாறியுள்ளது என்பதற்கு இச்சம்பவம் சிறந்த சான்று.

இச்சம்பவம், “இதற்குமேல் இந்தக் கட்டமைப்பில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வியை யதார்த்தமாக எல்லோர் முன்பும் எழுப்புகிறது. அதனுடைய வெளிப்பாடாகத்தான் மல்யுத்த வீரர்களின் பதக்கங்களைத் திருப்பியளித்த நடவடிக்கைகளை பார்க்க வேண்டியுள்ளது. தங்களுடைய ஒலிம்பிக் பதக்கங்களையே திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கை என்பது மிக முக்கியமானது. இதுபோன்ற நடவடிக்கைகளை கடந்தாண்டில் நடந்த இந்தியாவின் அறிவுத்துறையினருடைய நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக பார்க்க வேண்டும்.

குறிப்பாக, சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டபோதும், இந்துமதவெறியை எதிர்த்த கௌரி லங்கேஷ் உள்ளிட்டவர்கள் பாசிசக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டபோதும், இலக்கிய ஆர்வலர்கள், சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள் பலரும் தங்களது விருதுகளைத் திருப்பி அளித்தார்கள்.  ஜனநாயகத்தை விரும்புபவர்களுக்கு இந்தக் கட்டமைப்பில் இடமே கிடையாது, நீங்கள் வெளியேறிவிட வேண்டியதுதான் என்கிற அளவிற்கு நிலைமை முற்றிப்போய்விட்டது. இதற்கு மாற்றாக வேறொரு ஜனநாயகக் கட்டமைப்பு தேவை என்பதைத்தான் நிலைமைகள் வலியுறுத்துகின்றன.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பெர்லின் நகரை ஸ்தம்பிக்க வைத்த ஜெர்மன் விவசாயிகள்!

 

ஜெர்மனியில் விவசாய மானிய வெட்டுகளைக் கண்டித்து ஒரு வார காலமாக (ஜனவரி 8 – 15) தலைநகர் பெர்லினை தங்களது போராட்டங்களின் மூலம் ஸ்தம்பிக்க வைத்தனர் ஜெர்மன் விவசாயிகள். டிராக்டர்களைக் கொண்டு நாடு முழுவதிலும் நெடுஞ்சாலைகள் அடைக்கப்பட்டன.

டிசம்பரில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, விவசாய வாகனங்களுக்கான வரிச்சலுகையை நீக்குவது குறித்த முடிவை அரசு மாற்றியது. டீசல் மானியம் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு பதிலாக மூன்று ஆண்டுகளில் படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சலுகைகள் போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ராமர் கோவில் திறப்பு: ’இந்து விரோதி’யாக மாறிய மோடி!

0

யோத்தியில் ஜனவரி 22 அன்று முஸ்லீம்களுக்கு சொந்தமான பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. குழந்தை ராமா் சிலை ’பிராண பிரதிஷ்டை’ செய்யப்பட உள்ளது. சிலை ’பிரதிஷ்டை’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா். சங்கி ரஜினி உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ’பிரபலங்களுக்கு’ இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்கும் முக்கிய பிரபலங்களுக்கு கோவில் அஸ்திவாரம் அமைக்கும்போது தோண்டப்பட்ட மண்ணில் சிறிதளவு பரிசாக வழங்கப்பட உள்ளதாக உத்தர பிரதேச யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், ராமர் கோவில் கட்டுவதற்காக படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் மக்களின் இரத்தம் மண்ணில் சிறிதளவு பரிசாக வழங்கப்படவுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில்கொண்டு கோவில் முழுமையாகக் கட்டிமுடிக்கப்படாத நிலையில் அது திறக்கப்படவுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால், ஏப்ரல் மாதம் வரவிருக்கும் ’ராம நவமி’ வரை சங்கப் பரிவார கும்பலால் காத்திருக்க முடியவில்லை.

ராமர் கோவில் குடமுழுக்கு அறிவிப்பு வெளியான மறுகணமே அதில் கலந்துகொள்பவர்கள் யார் புறக்கணிப்பவர்கள் யார் என்பது விவாதப் பொருளாக மாற்றப்பட்டது. அதில் கலந்து கொள்ளாதவர்களை, குறிப்பாக எதிர்க் கட்சியினரை, “இந்து விரோதிகள், தேச விரோதிகள்” என்று முத்திரை குத்த காவிக் கும்பல் தயாராகிக்கொண்டு இருந்தது. சி.பி.ஐ (எம்), திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்நிகழ்வைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியையும் “இந்தியா” கூட்டணியையும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி தனிமைப்படுத்த எத்தனித்திருந்தது காவிக் கும்பல்.


படிக்க: இராமர் கோயில் திறப்பை பாசிஸ்டுகள் எந்தளவிற்கு கொண்டுப்போவார்கள்?


ஆனால், ஆர்த்தடாக்ஸ் சங்கி ஜோம்பிகளோ மோடிக்கு எதிராகத் திரும்பி மோடியைக் கடித்துக் குதறத் தொடங்கிவிட்டனர். இதை மோடி – அமித் ஷா கும்பலே எதிர்பார்க்கவில்லை.

பார்ப்பனர் அல்லாதவரான மோடி பூஜை செய்வதைச் சகித்துக்கொள்ள முடியாததால் ராமர் கோவிலுக்குச் செல்லப்போவதில்லை என்று ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கூறிவிட்டார். மற்ற மூன்று சங்கராச்சாரிகளும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

முழுமையாகக் கட்டி முடிக்காமல் கோவிலைத் திறப்பதென்பதும், பார்ப்பனர் அல்லாத மோடி அதைத் திறந்து வைப்பதும் சனாதனத்தையும் வேத மரபையும் மீறுவதாகும் என்று சங்கராச்சாரிகள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பூரி கோவர்தன் மடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் நிச்சலானந்த சுவாமி, “சிலையை யார் தொட வேண்டும், யார் தொடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மோடி சிலையைத் தொட்டு அதைத் திறந்து வைப்பார். நான் கைதட்டி ஆரவாரம் செய்ய வேண்டுமா?” என்று கூறியுள்ளார்.

மோடி ராமர் சிலையைத் தொட்டால் தீட்டுக் கழிக்க வேண்டும் என்றுகூட இவர்கள் சொல்லக்கூடும்.

நன்றி: சதிஸ் ஆச்சாரியா

இதற்கிடையே, ”ராமர் கோவில் அனைத்து இந்துக்களுக்கும் சொந்தமில்லை. ராமானந்தர் பிரிவினருக்கு மட்டுமே சொந்தம்” என்று ஒரு குழுவினர் உரிமை கோர, ”ராமானந்தர் பிரிவினருக்கு மட்டுமே சொந்தம் என்றால் மற்றவர்களிடம் ஏன் பணம் வாங்கப்பட்டது?” என்று மற்றொரு பிரிவினர் அதற்கு எதிர்வினையாற்றி வருவது போன்ற கேலிக்கூத்துகளும் அரங்கேறி வருகின்றன.

இவற்றையெல்லாம் எதிர்பார்க்காத ஆர்.எஸ்.எஸ் அமைதி காத்து வருகிறது. இந்து ராஷ்டிரத்தின் சத்ரபதி சிவாஜியாக முடிசூட்டிக்கொள்ளத் திட்டமிட்டிருந்த பாசிஸ்ட் மோடிக்கு இதுவொரு நெருக்கடியை ஏற்படுதியுள்ளது.

இருப்பினும் திட்டமிடப்பட்டவாறு மோடி தலைமையில் ராமா் சிலை ’பிரதிஷ்டை’நடைபெறவுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு பிரதான இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. ”ராமர் கோவில் திறப்பு விழாவின்போது கோத்ரா ரயில் எரிப்புபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளது” என்று உத்தவ் தாக்கரே கூறியிருந்தது நினைவு கொள்ளத்தக்கது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இந்தியாவில் வேகமாக வேளாண் நிலப்பரப்பு குறைந்திருப்பதற்கான காரணம் என்ன?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: கடந்த 10 ஆண்டுகளில் 16 சதவிகித வேளாண்பரப்பு குறைந்திருக்கிறது என்ற செய்தி தினகரனில் வெளிவந்துள்ளது. இந்தியா விவசாய நாடு என்று சொல்லப்படுகின்றபோது இவ்வளவு வேகமாக வேளாண் நிலப்பரப்பு குறைந்திருப்பதற்கான காரணம் என்ன? இது எப்பேர்ப்பட்ட அபாயம்?

குறிப்பாக, தனியார்மய–தாராளமயம்-உலகமயம் எனும் மறுகாலனியாக்க கொள்கைகளை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பிறகு, திட்டமிட்டு விவசாயத்தை அழிக்கும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. விவசாயத்தை அழிப்பது என்று சொல்வதைவிட விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்காக, சிறுவிவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

அந்நடவடிக்கைகளின் விளைவாக மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் பத்து ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அது முதல் கட்டம் என்றால், தற்போது மோடி ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை இரண்டாம் கட்டம் என்று சொல்லலாம். இந்த இரண்டாவது கட்டத்தில் நிலம், கனிமவள சுரண்டலுக்காக உழைக்கும் மக்கள், விவசாயிகள், பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் மீது பயங்கரமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. மோடியின் இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்வதற்கான எல்லா அடிப்படைகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதை மோடி கும்பல் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் பா.ஜ.க. எதிர்ப்பு பேசுகின்ற எதிர்க்கட்சிகள் ஆளும் எல்லா மாநிலங்களிலும் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளை நிலங்களிலிருந்து வெளியேற்றுகின்ற அயோக்கியத்தனம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆளுகின்ற மாநிலங்களிலும் இந்த நிலப்பறிப்புகள் நடக்கின்றன. இதனை மோடி கும்பலும் மாநிலத்தை ஆளும் எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செய்துவருகிறார்கள் என்பதுதான் முக்கியமான விசயம். இவர்களும் உள்ளடங்கிய மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் விளைவாகத்தான் 16 சதவிகித வேளான்பரப்பு குறைந்துள்ளது. எனவே இதில் மோடி அரசை மட்டும் தனித்து பேச முடியாது. மோடி இவர்கள் எல்லோருக்கும் உகந்த சட்டங்களை கொண்டுவந்துள்ளார்; பிற மாநில கட்சிகளுக்கு முன்மாதிரியாக உள்ளார் என்றுதான் பேச முடியும்.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



146 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்க்கட்சிகள் எப்படிக் கையாண்டன?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: 146 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது என்பது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய அடக்குமுறை நடவடிக்கை. எதிர்க்கட்சிகள் மீதுமட்டுமல்ல கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதிகளுக்கு நேர்ந்த அடக்குமுறை. ஆனால் எதிர்க்கட்சிகள் அந்த கோணத்தில் இந்த விவகாரத்தை கையாளவில்லை, அதற்கான காரணம் என்ன?

து சரியான கேள்வி. 146 எம்.பி-க்கள் என்பவர்கள் 30 கோடி மக்களுக்கான பிரதிநிதிகள். அவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது 30 கோடி மக்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல, 140 கோடி மக்களுக்கான பிரச்சினை. இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சினையை ஏன் எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லவில்லை என்பதுதான் முக்கியமான கேள்வி.

“எதிர்க்கட்சிகளே, ஏன் நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? ஏன் பந்த் அறிவிக்கவில்லை?” என்ற கேள்விகளை மணிப்பூர் விசயத்திலேயே நாம் முன்வைத்தோம். இப்போதும், “ஏன் நாடாளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? சாலையை மறியுங்கள், எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் பந்த் அறிவியுங்கள். இதுவரை இல்லாத வகையிலான அடக்குமுறை நடவடிக்கை நடந்திருக்கிறது. ஏன் நீங்கள் போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கவில்லை?” என்பதே எதிர்க்கட்சிகளை நோக்கிய நமது கேள்வி.

ஆனால் அதனை செய்யாமல், பா.ஜ.க. எதிர்ப்பு பேசுகின்ற எல்லோரும் பா.ஜ.க-வின் பாசிச அடக்குமுறையை ஏற்றுக்கொண்டு காலில் விழுந்து கெஞ்சி தங்களது உரிமையை நிலைநாட்டிக்கொள்கின்ற ஒரு வழிமுறைக்கு நாட்டு மக்களை இந்த எதிர்க்கட்சிகள் பழக்கப்படுத்துகின்றன. பட்டவர்த்தனமாக ஒட்டுமொத்த நாட்டையும் இந்துராஷ்டிரக் கட்டமைப்பிற்கு அடிபணிய வைக்கின்ற அயோக்கியத்தனத்தை எதிர்க்கட்சியினர் செய்கிறார்கள்.

அப்படியானால், பாசிச அடக்குமுறைகளைப் பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சப்படுகிறார்கள் என்பதில்லை. இதனை ஒரே நோக்கம் கொண்ட, ஒரே நலன் கொண்ட இரண்டு நடவடிக்கைகள் என்றே புரிந்துகொள்ள வேண்டும். அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதில்தான் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் வேறுபாடு உள்ளது. ஆகையால் அந்த எல்லையைத்தாண்டி எதிர்க்கட்சியினர் வெளியே வரமாட்டார்கள். அவ்வாறு வந்தால் அது மக்கள் கோரிக்கையாக மாறிவிடும். எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது என்பதே உண்மை.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அழிவின் விளிம்பில் வடசென்னை! | தோழர் மருது

காற்றில் அமோனியா கசிவு – மழை வெள்ளத்தில் எண்ணெய் கழிவு
| அழிவின் விளிம்பில் வடசென்னை! | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தென்மாவட்டங்களின் வெள்ளப் பாதிப்பு: தோழர்களின் கள அனுபவம்

மிக்ஜாம் புயல் சென்னையை தாக்கிய ஒரு வாரத்திற்குள்ளாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழைபெய்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெருவெள்ளத்தால் புரட்டிபோடப்பட்டன.

அதிகபட்சம் 95 செ.மீ. வரை மழை கொட்டி தீர்த்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறு, குளம், வாய்க்கால்கள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக, தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின. தூத்துக்குடியில் ஏரல், சம்படி, இடையற்காடு, தலையாபுரம், கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளும் திருநெல்வேலியில் வண்ணாரப்பேட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம், சமாதானபுரம், பாளையங்கோட்டை மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டன.

தி.மு.க. அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தால், மூன்று நாட்களுக்கும் மேலாக உணவு, குடிநீரின்றி மக்கள் தவிக்கவிடப்பட்டனர். பல வீடுகளில் சீலிங் ஃபேன் அடித்துக்கொண்டு செல்லும் அளவிற்கு வீடு முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியது. பல இடங்களில் பயணிகளுடன் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. வெள்ளத்திற்கு நடுவே நிறுத்தப்பட்ட ரயில்களுக்குள்ளிருந்த மக்கள் உயிரை கையில் பிடித்துகொண்டு ஒவ்வொரு நொடியையும் கடந்தனர். இந்த மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 55 பேர் பலியாகியுள்ளனர்.

இவ்வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மொத்தமாக இழந்து நிற்கின்றனர். ஆற்றங்கரையிலிருந்து அரை கி.மீ. தூரம்வரை தண்ணீர்வந்து ஒட்டுமொத்தமாக வீடுகளில் இருக்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும் அடித்து சென்றுள்ளது. வெள்ளத்திலிருந்து தப்பிச்சென்ற மக்கள் திரும்பவந்து கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே ஒரு பொருள் கூட கிடையாது. “வீட்டுக்கு வந்து பாத்தப்ப வீட்டுல ஒன்னுமே இல்ல. கொஞ்ச தூரம் தள்ளிப்போயி பாத்தேன். என்னோட ஒரே ஒரு தவள கிடச்சது. அத வெச்சுதான் வீட்ட கழுவிவிட்டுட்டு இருக்கன்” என்றார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

தங்கள் வாழ்நாளில் இவ்வளவு அதிக கனமழையை பார்த்திடாத தென்மாவட்ட மக்கள், “நாங்கள் எல்லாம் பிழைப்போமா, திருப்பி இருப்போமா என்று கடைசி நேரத்தில் நினைச்சுக்கிட்டோம், உயிர் பயத்தை பார்த்து இருக்கோம்” என்றனர்.


படிக்க: மழைவெள்ள பாதிப்பில் தூத்துக்குடி! | களத்தில் தோழர்கள்


இம்மக்கள் வாழ்க்கை நடத்துவதற்கு ஆதாரமாக இருந்த ஏராளமான ஆடு, மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கடற்கரையிலும் ஆற்றங்கரையிலும் மரங்களின் மீதும் இறந்துக் கிடந்தன. தங்களது பிள்ளைகளைப் போல வளர்த்த ஆடு மாடுகள், தங்கள் கண்முன்னே அடித்துசெல்லப்படும்போதும் அதனைக் காப்பாற்ற முடியாமல் மக்கள் கதறி அழுதனர். “ஆத்துல அடிச்சுட்டுப்போன ஆடுகள் கத்துவது எங்கள காப்பாதுங்கனு சொல்றது போலவே இருந்துச்சு” என்று புலம்புகின்றனர் மக்கள். களத்தில் சென்று பார்த்ததன் அடிப்படையில் ஏறக்குறைய 1000 மாடுகளாவது இறந்திருக்கும்.

தென்மாவட்டங்களில் பெய்த இந்த பெருமழை மக்களின் துயரங்களுக்கு காரணம் என்றாலும் முறையாக கால்வாய்கள், குளங்கள், ஆறுகள் ஆகியவை தூர்வாரப்பட்டு சீரமைக்காமல் இருந்தது; ஆற்றங்கரையோரம் இருந்த மக்களை முன்கூட்டியே வெளியேற்றாமல் இருந்தது; நீர் மேலாண்மை வசதி நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாதது; போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தது உள்ளிட்ட அரசின் அலட்சிய நடவடிக்கைகளே மக்களை நிற்கதியாக்கியது.

தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை பொறுத்தவரை, தி.மு.க. அரசால் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வெள்ளம் வருவதற்கு முன்பு ஊருக்குள் வந்து மக்களுக்கு முறையாக எச்சரிக்கை விடுக்கப்படவுமில்லை. இதனால் பலரும் ஆறு, குளங்கள் உடையும்வரை ஆபத்தை அறியாமல் மழையைக் கண்டு ரசித்துகொண்டிருந்த பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சொல்லப்போனால், அரசுக்கே எவ்வளவு வெள்ளம் வரும், எந்தெந்த இடங்கள் பாதிக்கப்படும் என்பது குறித்த புரிதல் இல்லை. முறையான ஒரு குழு அமைத்து கணக்கெடுப்பு நடத்தி மக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தி.மு.க. ஈடுபடவேயில்லை.  பல இடங்களில் அரசு முகாம் அமைத்திருந்த மண்டபங்களிலேயே வெள்ளம் வந்தது. இதனால், மக்கள் முகாம்களின் மாடிகளில் தஞ்சம்புகும் அவலநிலை ஏற்பட்டது. முகாம்களில் அரசின் சார்பாக முறையாக உணவும் ஏற்பாடு செய்யவில்லை.

சில இடங்களில் அரிசி, பருப்பு, மளிகைப்பொருட்கள் போன்றவற்றை கொடுத்ததே ஒழிய அதனை சமைத்து சாப்பிடக்கூட மக்களிடம் அடுப்பு, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் இல்லை என்பதைப் பற்றி கவலைப்படவில்லை. மக்கள் பொது சமையல்முறையில் சமைத்து சாப்பிட்டனர். ஆனால், அதனை அரசு செய்திருக்க வேண்டும்.


படிக்க: நெல்லை மழை வெள்ள பாதிப்பு | பாதிப்பில் மக்கள்


மீட்புப்பணியை பொறுத்தவரை, மீட்புப்படை, போலீசு, கிராம நிர்வாகம், கலெக்டர், தாசில்தார் என அரசு நிறுவனங்களுக்குள்ளேயே ஒருங்கிணைப்பு இல்லை. ஆனால், இதே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது மக்களை ஒடுக்குவதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்தன. மக்களை மீட்கும் விடயத்தில் எந்தவித அக்கறையும் இன்றி நடந்துகொண்டன.

தூத்துக்குடி மாவட்டம் சம்படியில் தோழர்கள் மீட்புப்பணிக்கு சென்றபோது, கர்ப்பிணியாக இருந்த ஒரு பெண்ணை மீட்பதற்கு தகவல் சொல்ல போலீசு நிலையத்திற்கு சென்றிருந்தோம். அப்போது அங்கிருந்த போலீசு அதிகாரி, கிராம நிர்வாக அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, “அந்த ஊரையே நாங்கள் மறந்துவிட்டோம்” என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோம்.

மேலும், மக்களை மீட்பதற்காக அமைக்கப்பட்ட மீட்புப்படையும் பயிற்சி எடுத்துக்கொண்ட வீரர்களால் அமைக்கப்பட்டதல்ல. இதனால் தண்ணீரில் தத்தளித்த மக்களை மீட்கமுடியாமல் போனது. மழை நின்று இரண்டு நாட்களுக்கு மேலாகியும் போலீசும் அரசு அதிகாரிகளும் எம்.பி., எம்.எல்.ஏ-க்களும் பகுதிகளுக்குள் செல்லவில்லை. படகுகள், வாகனங்கள் என ஊருக்குள் செல்வதற்கான எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தும் மக்களைச் சென்று சந்திக்காமல் வஞ்சித்தனர். பல இடங்களில் மக்கள் போராட்டம் செய்த பின்னரே அரசு அவர்களை எட்டிப்பார்த்தது.

மக்களால் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. அப்படி சென்ற ஒரு சில இடங்களிலும், அந்தந்த ஊர்களின் பாதிப்புகளை பற்றி அறிந்த ஊராட்சி தலைவர்கள், இளைஞர்கள் போன்றவர்களை பயன்படுத்தி மக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்காமல் பார்வையாளர்களாக ஊரை வலம் வந்துகொண்டிருந்தனர்.

தன்னார்வலர்களும் இளைஞர்களும் சிறு சிறு அமைப்பை சேர்ந்தவர்களும்தான் ஊருக்குள் இறங்கி மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளம் வடியும் வரையில் எந்தக் கட்சியை சேர்ந்தவர்களும் ஊருக்குள் வந்து மக்களைப் பார்க்கவில்லை. பல ஊர்களுக்கு மக்கள் அதிகாரம் தோழர்கள்தான் முதலில் சென்றனர் என்பதனை மக்களே கூறினர்.

மேலும், தற்போதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சொற்பப் பணத்தை நிவாரணமாக வழங்கி அவர்களின் வாயை அடைப்பதில் மட்டும் தான் அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்ததில் மட்டும் 600 முதல் 700 வீடுகள் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. 150 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகி இருக்கின்றன. வீடுகள், கோழிகள், ஆடு மாடுகள், விவசாய நிலங்கள் என மக்களின் வாழ்வாதாரமாக இருந்த அனைத்தும் பறிபோயுள்ளது. எனவே, வீடு கட்டி தர வேண்டும், நெல் பயிர்களுக்குரிய இழப்பீடு தர வேண்டும் போன்ற மக்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.


களச்செய்தியாளர்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் : நாம் எப்படி பார்ப்பது? | தோழர் மருது

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் : நாம் எப்படி பார்ப்பது?
| தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



காவிகளின் கூடாரங்களாகும் பல்கலைக்கழகங்கள்

மோடியின் ஒன்பதரை ஆண்டுகால ஆட்சியில் போலீசு, இராணுவம், நீதிமன்றம், கல்வி, மருத்துவம் போன்ற எல்லாத் துறைகளிலும் நிறுவனங்களிலும் காவி பாசிஸ்டுகள் ஊடுருவி வருகிறார்கள். அதில் முக்கியமாக நாட்டிற்கான தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும், அதிகாரிகளையும், பேராசிரியர்களையும் உருவாக்கும் பல்கலைக்கழகங்களை பாசிஸ்டுகள் கைப்பற்றும் அபாயகரமான போக்கு உருவாகியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர்களை துணைவேந்தர்களாக, பேராசிரியர்களாக, சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்களாக நியமிப்பதன் மூலமும் ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. குண்டர் படையை வளர்த்துவிடுவதன் மூலமும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை பாசிஸ்டுகள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துக்கொண்டிருக்கிறார்கள்.

அண்மைக்காலமாக, புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் (ஜே.என்.யு), தமிழ்நாட்டில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்திலும் நடந்துவரும் நிகழ்வுகள் பல்கலைக்கழகங்கள் எப்படி காவிகளின் கூடாரங்களாகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

ஜே.என்.யு. மீதான பாசிஸ்டுகளின் தாக்குதல்!

கடந்த டிசம்பர் மாதத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் “மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் முறையான நடத்தை விதிகள்” (Rules of discipline and proper conduct of students) என்ற தலைப்பில் புதிய கையேடு ஒன்றை வெளியிட்டது. அதில் பல்கலைக்கழகத்தின் வளாகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் தர்ணா, உண்ணாவிரதம் மற்றும் குழுவாக சேர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவது, வளாகங்களின் நுழைவாயில்களை முற்றுகையிடுவது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் அவர்களுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் விடுதி அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து ஓராண்டுக்கு வெளியேற்றப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. ‘தேசத்திற்கு எதிரான கருத்துகள்’ மற்றும் சாதி, மத வன்முறைகளைத் தூண்டும் கருத்துகளைக் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தாலும் சுவரொட்டிகளை ஒட்டினாலும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகம் செயல்படுவதற்கு இடையூறு அளிக்கும் விதமான எந்த செயலும் தண்டனைக்குறியதாகவும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முறை தண்டனைகள் பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரே தண்டனை குறித்த இறுதி முடிவுகளை எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


படிக்க: அசோகா பல்கலைக்கழகம்: கருத்து சுதந்திரத்தின் மீதான காவி பயங்கரவாத தாக்குதல்


போராடுகின்ற மாணவர்களை அச்சுறுத்துவதற்காக, அபராதம் செலுத்தாத வரை மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தண்டனைகளின் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் வலைதளப்பக்கத்தில் பதிவேற்றப்படுவதோடு, பெற்றோருக்கும் தெரிவிக்கப்படும் எனவும் புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. மேலும், புதிதாக சேரும் மாணவர்கள் அரசியல் பேசும் மாணவர்களிடம் அறிமுகமாகிவிடக்கூடாது என்பதற்காகவே அனுமதி இல்லாமல் வரவேற்பு நிகழ்ச்சி (Fresher’s party) நடத்த தடை விதித்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.

பல்கலைக்கழக நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய விதிகள் ஏதோ மாணவர்களை நன்னெறிப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டதல்ல. அப்படியிருந்தால் ராமநவமி போன்ற இந்து பண்டிகைகளில் விடுதிகளில் புகுந்து மாணவர்களை தாக்குவது; பெரியார், காரல் மார்க்ஸ் படங்களை உடைத்து நாசம் செய்வது, அதனை தடுக்கச்சென்ற மாணவர்களின் மண்டையைப் பிளப்பது; கூட்டங்கள் விவாதங்களை நடத்தவிடாமல் தடுப்பது; போராடும் மாணவர்கள் மீது கல்லெறிந்து தாக்குவது; கல்வி வளாகங்களில் சாதி-மத மோதல்களை ஏற்படுத்துவது போன்ற அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடும் ஏ.பி.வி.பி. குண்டர்களைதான் முதலில் வெளியேற்ற வேண்டும். மாறாக, ஏ.பி.வி.பி-யுடன் கூட்டுசேர்ந்துள்ள ஜே.என்.யு. பல்கலைக்கழக நிர்வாகம் இவ்விதிகளை கொண்டுவந்திருப்பது, அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் மாணவர்களையும் மாணவர் அமைப்புகளையும் ஒடுக்குவதற்காகவே.

பல்கலைக்கழகத்தின் இந்நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம்(JNUSU), “கையேட்டில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகள், பல ஆண்டுகளாக ஜே.என்.யு-வில் நிலவிவரும் துடிப்பான கலாச்சாரத்தை முடக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. எங்கள் பல்கலைக்கழகத்தின் ஆன்மாவிற்கு அடிப்படையாக உள்ள வெளிப்படையான விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் அறிவுசார் ஆய்வுகளை ஊக்கமிழக்க வைக்கும் வகையில் உள்ளன” என்று விமர்சித்துள்ளது.

உண்மையில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஜே.என்.யு-விற்கென்று தனி அடையாளம் உள்ளது. அங்கு நடக்கும் ஊக்கமான விவாதங்களிலும் போராட்டங்களிலும் கலந்துகொள்வதற்காகவே இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அப்பல்கலைக்கழகத்தில் சென்று சேருவார்கள். உலகில் எந்த மூலையில் மக்கள் மீது ஒடுக்குமுறை செலுத்தப்பட்டாலும் அதனை கண்டித்து போராட்டம் நடத்தும் ஜனநாயக சிந்தனையை தன்னகத்தே கொண்டதுதான் ஜே.என்.யு. பல்கலைக்கழகம். ஆனால், கடந்த ஒன்பதரை ஆண்டுகால மோடி ஆட்சியில் இந்த கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருகிறது.

பெயரில் மட்டும் பெரியார், பல்கலைக்கழகமோ காவிகளின் பிடியில்

“பெரியார் மண்” என திராவிட அமைப்புகள் பெருமையாகப் பேசும் தமிழ்நாட்டிலும் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் காவிகளின் பிடியில்தான் உள்ளன. பெரியாரின் பெயரில் உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகமே சங்கப் பரிவாரங்களின் கூடாரமாகவே உள்ளது என்பது வேதனைக்குரியதாகும்.

கடந்த நவம்பர் மாதம் 17-ஆம் தேதி, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் பெரியார் குறித்து நூல் எழுதி வெளியிட்டதாகக்கூறி இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் பணிபுரியும் இரா.சுப்ரமணி என்ற இணைப்பேராசிரியருக்கு “தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது” என விளக்கம் கேட்டு குறிப்பாணை (மெமோ) வழங்கியுள்ளது, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம்.

பேரா.சுப்ரமணி கடந்த 2022-ஆம் ஆண்டு பெரியாரின் போராட்டங்களைத் தொகுத்து “பெரியாரின் போர்க்களங்கள்” என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார். மேலும் 2007-ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட “மெக்காலே” என்ற நூலின் மறுபதிப்பு “மெக்காலே: பழைமைவாதக் கல்வியின் பகைவன்” என்ற பெயரில் இவ்வாண்டு வெளியானது. எப்போதோ எழுதி வெளியிட்ட இந்நூல்களுக்குதான் இப்போது காரணம் கேட்டு குறிப்பாணை வழங்கியிருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

இந்த குறிப்பாணை அனுப்பியதற்கான உண்மையான காரணம், பேரா.சுப்ரமணி கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு அரசால் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பதுதான். பெரியார் பல்கலைக்கழகத்தை காவிமயமாக்குவதில் காவி பாசிஸ்டுகள் தீவிரமாக ஈடுப்பட்டுவரும் சூழலில், முற்போக்காளராகவும் பெரியாரிய சிந்தனையாளராகவும் இருக்கும் இப்பேராசிரியர் பல்கலைக்கழகத்தின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பான சிண்டிகேட் குழுவில் வந்து அமர்ந்திருப்பதை சங்கப் பரிவாரக் கும்பலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, பிற வழிகளில் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது காவி கும்பல்.


படிக்க: காவிகளின் பிடியில் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம்! தமிழக அரசே வேடிக்கை பார்க்காதே!


இப்போது மட்டுமல்ல, பெரியார் பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கும் நடவடிக்கையை பல ஆண்டுகளாகவே காவி பாசிஸ்டுகள் மேற்கொண்டு வருகின்றனர். உடற்கல்வி இயக்குனர், நூலகர் ஆகிய பணிகளுக்கான தேர்வில் பட்டியலின அருந்ததியர் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்களை பொதுப்போட்டி பிரிவுக்கு ஒதுக்கியது; பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்புகள் பெயரில் அரசியல் சார்ந்த பரப்புரைகளை, விவாதங்களை நடத்த தடை உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியது; ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக வரவிருந்த பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற உடை அணிந்துவரக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியது; முதுநிலை கல்விக்கான வினாத்தாளில் “எது தாழ்ந்த சாதி?” என்று கேள்வி கேட்டது ஆகியவை அதற்கான சான்றுகளாகும்.

தமிழ்நாட்டிற்குள் ஒருஇந்து பனாரஸ் பல்கலைக்கழகம்‘!

தமிழ்நாட்டில் உள்ள ஒரேயொரு மத்தியப் பல்கலைக்கழகமான தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூர் அருகே நீலக்குடி பகுதியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி “தீபோத்சவ்-2023” என்ற பெயரில் தீபாவளிப் பண்டிகையையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியின் மேடையில் ஆக்கிரோசமாக வில்லேந்திய காவி நிற இராமன் உருவப்படமும்  ஆங்காங்கே  “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற வாசகம் எழுதப்பட்ட பேனர்களும் இடம்பெற்றிருந்தது. காவி நிறத்தில் போடப்பட்ட கோலங்களில் அயோத்தி இராமர் கோவிலும் “ஜெய் ஸ்ரீ ராம்” வாசகங்களும் வரையப்பட்டிருந்தன. பார்ப்பனிய முறைப்படி யாகம் வளர்த்து பூஜை நடத்தியுள்ளனர். இந்நிகழ்வில், பல்கலைக்கழக துணைவேந்தரும் கலந்துக்கொண்டுள்ளார். இந்நிகழ்வானது மாணவர்கள் மத்தியில் மதத்தை புகுத்துகிறது என்று பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்நடவடிக்கையை கண்டித்து நவம்பர் 23 அன்று பல்கலைக்கழக வாயிலில் திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவரும் இந்திய மாணவர் சங்கமும் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு எதிர்வினையாக பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தந்தைப் பெரியாரை, “காலனிய முதலாளிகளின் காலணிகளை நக்கிய பெரியார் ராமசாமி நாயக்கர்” எனவும் “இந்த மண்ணின் இருண்ட இருள்” எனவும் மிகவும் இழிவாகக் குறிப்பிட்டிருந்தது.

தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி அறிக்கை வெளியிடுவதற்கு ஏ.பி.வி.பி.-க்கு துணிச்சல் கொடுத்தது அப்பல்கலைக்கழக நிர்வாகம்தான். பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆசியுடன் ஏ.பி.வி.பி. குண்டர்படை ‘குடியரசுத் தினம்’, ‘சுதந்திரத் தினம்’ ஆகிய நாட்களில் காவிக் கொடியை ஏந்திக்கொண்டு “பாரத் மாதா கி ஜெய்” என்று ஊர்வலத்தில் முழக்கமிட்டு தைரியமாக உலாவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய மாணவர் சங்கத்தை சார்ந்த மாணவர்கள் அன்றாடம் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் போலீசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

மாணவர் அமைப்புகளை கட்டியமைக்க வேண்டும்

மேற்கூறிய மூன்று பல்கலைக்கழங்களைத் தவிர, இந்தியாவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் காவிகளின் பிடியிலேயே உள்ளன. டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களே மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் நேரடியாக இந்துமதவெறி கருத்துகளை பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதத்தில் அப்பல்கலைக்கழகத்தில் இந்து ஆய்வு மையத்தின் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆர்.எஸ்.எஸ்.-யின் செயலாளர் பாரத் பூஷன் அழைக்கப்பட்டிருந்தததை பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் உறுப்பினர்கள் அம்பலப்படுத்தி விமர்சித்திருந்தனர்.

கேரள பல்கலைக்கழகத்தில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை மீறி நான்கு ஏ.பி.வி.பி. மாணவர்களை செனட் சபைக்கு பரிந்துரைத்தது தற்போது அம்பலப்பட்டு போயுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் வழக்கு தொடர்ந்ததையடுத்து, ஆளுநரின் பரிந்துரைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது, கேரள உயர்நீதிமன்றம்.

சென்னை பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதி செய்துதரக்கோரி போராடிய மாணவர்களை, மிரட்டி இனி போராட்டங்களில் ஈடுபட மாட்டோம் என கையெழுத்து வாங்க முயற்சித்தது பல்கலைக்கழக நிர்வாகம். இது பொதுவெளியில் அம்பலமாகி எதிர்ப்புகள் கிளம்பவே அம்முயற்சியை கைவிட்டது.

இவ்வாறு நிர்வாகத்திலும் மாணவர்கள் மத்தியிலும் ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகளை ஊடுருவவிடுவதன் மூலம் புராணக் குப்பைகளை கல்வியில் புகுத்துவது, பாடப்புத்தகங்களில் உண்மையான வரலாற்றை திரிப்பது, புதிய கல்வி கொள்கை போன்ற கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் கொள்கைகளை அமல்படுத்துவது, முற்போக்கு சிந்தனை கொண்ட மாணவர் அமைப்புகளை ஒழித்துக்கட்டுவது, பாசிச மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒழித்துக்கட்டுவது போன்ற வேலைகளை நரித்தனமாக செய்துவருகிறார்கள், காவி பாசிஸ்டுகள்.

இந்த அபாயகரமான போக்கை உடனடியாக அம்பலப்படுத்தி பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அமைப்பாக திரட்டி ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகள் நியமிக்கப்படுவதற்கு எதிராகவும் ஏ.பி.வி.பி. குண்டர் படையை கல்வி நிறுவனங்களில் தடை செய்யக்கோரியும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். முற்போக்கான பேராசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து காவிக் கும்பலின் பிடியிலிருந்து பல்கலைக்கழகங்களை மீட்க போராட வேண்டும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube