Wednesday, May 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 96

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | மக்கள் நேர்காணல்

பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | மக்கள் நேர்காணல்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சுங்கச்சாவடி நிர்வாகிகளை பணிய வைத்த திருமங்கலம் நகர மக்கள்

துரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் பெங்களூரு –  கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில், கடந்த 13 ஆண்டுகளாக சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. திருமங்கலம் நகர் எல்லையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிற்குள் விதிமுறைகளை மீறி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்து, இந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்தது.

இந்த சுங்கச்சாவடி வந்ததிலிருந்து வாகன ஓட்டிகளுக்கும்  சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது மாதாந்திர அனுமதி சீட்டு (பாஸ்) எடுக்க வேண்டும் என தொடர்ந்து நிர்ப்பந்திக்கப்படுவதால் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. பொதுமக்கள் கட்டணம் செலுத்த மறுத்தால் திமிர்த்தனமாகவும், அடாவடியாகவும் நடந்து கொள்கின்றனர்.

மேலும் வேலையாட்கள் என்ற பெயரில் குண்டர்களை வைத்து ரவுடித்தனமாக நடந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு சுங்கச்சாவடியை வேறு நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் எடுத்தது. இந்த நிறுவனம் வந்ததிலிருந்து இந்த சுங்கச்சாவடி பிரச்சனை மீண்டும் அதிகமாகி உள்ளது. இதனைக் கண்டித்து 22/11/2022 அன்று திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் முழு கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அதன் விளைவாக உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை என நிறுவனம் ஒப்புக்கொண்டது.


படிக்க: பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! | ஆர்ப்பாட்டம் | மதுரை


சுங்கச்சாவடியில் இதற்கு பிறகு கடந்த சில மாதங்களாக மீண்டும் இப்பிரச்சனை தலைதூக்கியது. மீண்டும் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதனைக் கண்டித்து சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் வருகின்ற மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்போம் என கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் அறிவித்தனர்.

அது தொடர்பாக இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சு வார்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் மு. சாந்தி தலைமை வகித்தார். சுமார் 2:30 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், கோட்டாட்சியர் ஆதார் அட்டையை காட்டி சுங்க கட்டணம் இல்லாமல் உள்ளூர் வாகனங்கள் செல்லலாம் என தெரிவித்தார். இது தவறும் பட்சத்தில் வருகிற மக்களவை தேர்தலை புறக்கணிப்போம், ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றுவோம் என்றனர் பொதுமக்கள்.

இந்த கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சனையில் நிரந்தரத் தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு, உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதே காரணம் எனக் கூறி வாகன ஓட்டிகள் ஆவேசம் அடைந்தனர். மேலும் பேச்சுவார்த்தை இழுபறியாக சென்று கொண்டு சுங்கச்சாவடி நிர்வாகம் இந்த பேச்சுவார்த்தைக்கு ஒத்து வராமல் இருந்ததால், பேச்சுவார்த்தை நிறைவடைந்து வெளியே வந்து வாய்மொழியாக அறிவித்து விட்டு வெளியேற முயற்சித்தனர்.

வாய்வழியாக வந்த எந்த உத்தரவையும் இந்த சுங்கச்சாவடி நிர்வாகம் மதித்ததேயில்லை. எனவே வெளியே  வந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் நாகராஜனின் காரை போராட்டக் குழுவினர் சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது இதை எடுத்து திட்ட இயக்குனர் மீண்டும் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குள் சென்றனர் இதனைத் தொடர்ந்து காரை சிறைப் பிடித்தவர்களிடம் திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கார் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து திட்ட இயக்குனர் மற்றும் சுங்கச்சாவடி மேலாளர் புறப்பட்டு சென்றனர்.


படிக்க: பற்றி எரிகிறது மணிப்பூர் | மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் – நேரலை!


மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது பொதுமக்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் வெளியில் இருந்து தொடர் முழக்கம் போடப்பட்டது. இது கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகத்தையும், அதிகாரிகளை கோரிக்கைக்கு பணிய வைக்கும் வகையில் அமைந்தது. இதில் எஸ் கே எம், சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் நாகராஜ் மற்றும் தோழர் பரமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாலைகளை தனியார்மயப்படுத்தி நாடெங்கும் உள்ள சாலைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதால் அன்றாடம் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். அடிக்கடி வரும் இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு மக்கள் போராட்டங்களால்  அவ்வப்போது தீர்வுகள் கிடைத்தாலும், சாலைகளை தனியாரிடமிருந்து அரசு கட்டுப்பாட்டிற்கு வந்தாலொழிய இம்மாதிரியான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது.

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் வீடு உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

24.07.2023

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் வீடு உள்ளிட்ட
24 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

மக்கள் அதிகாரம் கண்டனம்

2019-ல் கும்பகோணம் மாவட்டம் திருபுவனம்  ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்று கூறி நேற்றைய தினம் தமிழ்நாட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக்  – இன் வீடு உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை செய்துள்ளது .தேசிய புலனாய்வு முகமை நடத்திய இந்தச் சோதனையின் போது பாசிச பாஜக ஆர் எஸ் எஸ் – க்கு எதிராக செயல்படுபவரை அச்சுறுத்துவதற்காக மட்டுமே.

அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட துறைகள் பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிரானவர்களை ஒழித்துக் கட்டுவதற்காகவே இயங்குகின்றன. 2019 இல் நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பாக தற்பொழுது 24 இடங்களில் சோதனை செய்வது என்பது தேசிய புலனாய்வு முகமையின் அடுத்த கட்ட சதித்திட்டமாகும். இதனை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

மேலும் தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய தேசிய புலனாய்வு முகமை அலுவலகங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை.
9962366321

ஜூலை 23: மாஞ்சோலை படுகொலை நாள் | தோழர் ராமலிங்கம்

ஜூலை 23: மாஞ்சோலை படுகொலை நாள் | தோழர் ராமலிங்கம்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அம்பேத்கர் படத்தை அகற்றும் சுற்றறிக்கையைத் திரும்பப்பெறு

23.07.2023

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை அகற்றும் சுற்றறிக்கையை
சென்னை உயர்நீதிமன்றம் உடனே திரும்ப பெற வேண்டும்!

பத்திரிகை செய்தி

லந்தூர் நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் படத்தை வைக்கக்கூடாது என்பதற்காகவும் சென்னை உயர்நீதிமன்றத்தால் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

நீதிமன்ற உத்தரவை மீறுபவர்களின் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் புகார் அளிக்கவும், அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பார் கவுன்சிலுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது அநீதியானதாகும். ஏற்கனவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள  பல நீதிமன்றங்களிலும் சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின்  படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் இப்படிப்பட்ட ஒரு சுற்றறிக்கையை  சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பியது என்பது உள்நோக்கம் உடையதாகும். ஆகவே இந்த சுற்றறிக்கையை உடனே திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை.
9962366321

மணிப்பூர் மக்கள் போராட்டம் அன்றும் இன்றும் | புதிய ஜனநாயகம் சுவரொட்டி

மணிப்பூர் அன்று ஜூலை 15, 2004 இராணுவத்திற்கு எதிரான நிர்வாண போராட்டம்

இன்று ஆர்.எஸ்.எஸ் – மெய்தி இன வெறியர்களுக்கு எதிரான மக்களின் போராட்டம்!

புதிய ஜனநாயகம்
23.07.2023

குஷ்பு, வானதி எங்க போனீங்க | தோழர் அமிர்தா

குஷ்பு, வானதி எங்க போனீங்க | தோழர் அமிர்தா

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!

ணிப்பூர் குக்கி இன மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வந்தனர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்தப் பிரச்சினை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி நாடாளுமன்றத்தை முடக்குவார்கள் என்று பிரதமருக்கும் நன்கு தெரியும்.

கூட்டத்தொடர் தொடங்கும் முதல் நாளிலேயே மணிப்பூரில் குக்கி இனப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வன்முறைக் காணொளி வெளியானதை அடுத்து, 78 நாட்களாக மவுன விரதமிருந்த நமது பிரதமர் வாய் திறந்து பேசிவிட்டார். அவரது கருத்துகளும் உடல்மொழியும் இந்தப் பிரச்சினையை எந்த அளவிற்கு அலட்சியப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அலட்சியப்படுத்திவிட்டது. அவரது உரை குறித்து அனைத்து தரப்பினரும் தத்தமது கண்டனங்களைப் பதிவு செய்திருப்பதால் அதற்குள் சென்று மீண்டும் நாம் பேச வேண்டியதில்லை.

படிக்க : ஆமாம், அவர் பிரதமராக இருக்கிறார்

எதிர்க்கட்சிகளை எப்படிக் கையாள வேண்டும் என்று அவருக்குத் தெரியும். எப்படியும் மணிப்பூர் விசயம் தொடர்பாக வாய் திறக்க வேண்டியதாகிவிட்டது. நாடாளுமன்றத்திற்குள்ளே பேசினால், விவாதம் நடத்த வேண்டிவரும் என்றுணர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர் பேட்டியளித்துவிட்டு சபைக்கு வந்தார்.

பிரதமர் மோடியின் இச்செயல், “நாடாளுமன்ற மரபு மீறிய செயல், நாடாளுமன்றத்திற்குள் பேச வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்புகின்றனர்.

குக்கி இன மக்களுக்கு எதிராக அரசு, அதிகாரவர்க்கத்தின் துணையுடன் திட்டமிட்டு இந்த வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்படுகிறது. அவரது கட்சி ஆளும் மாநில அரசுதான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் விவாதத்திற்குள்ளாகும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

ஆகையால், நாடாளுமன்றத்தை ஜூலை 24-ஆம் தேதிவரை ஒத்திவைத்துவிட்டார். மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினால், கல்லூரிக்கு ஒருவாரம் விடுமுறை விடுவது போல, எதிர்க்கட்சிகளைக் கலைப்பதற்கு நாடாளுமன்றத்திற்கு லீவுவிட்டுவிட்டார். இதெல்லாம், மிகவும் பழைய டெகினிக்.

எதிர்க்கட்சிகளோ, “மோடி, உள்ளே வாருங்கள்” என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அவரோ சபை கலைத்துவிட்டு சென்றுவிட்டார்.

“நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள், அங்கே விவாதிப்போம்” என்பதெல்லாம், பழைய காலம். நாடாளுமன்றத்தை பஜனை மடமாக மாற்றுவதுதான் மோடி காலம். தற்போதைய நாடாளுமன்ற மரபையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். அதற்கேற்ப அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

படிக்க : மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!

அவர் விலைவாசி உயர்வுக்கு எதிராக வாய் திறந்தாரா? இல்லை.

பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூசன் விசயத்தில் வாய் திறந்தாரா? இல்லை.

எந்த ஒரு விசயத்தையும் நேருக்கு நேர் விவாதிக்கும் தைரியம் இருக்கிறதா? இல்லை.

பத்திரிகையாளர்களுக்காவது பேட்டி அளிக்கிறரா? இல்லை.

பிறகு, அவரை எதற்கு உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறீர்கள்.

அவர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து முடக்கிவிட்டார். நாம் நாட்டை முடக்குவோம்!

புதிய ஜனநாயகம்
22.07.2023

மாணவர்கள் அரசியலில் தலையிடக்கூடாது: எழுதி வாங்கும் சென்னை பல்கலை! | தோழர் துணைவேந்தன்

மாணவர்கள் அரசியலில் தலையிடக்கூடாது: எழுதி வாங்கும் சென்னை பல்கலை! | தோழர் துணைவேந்தன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆமாம், அவர் பிரதமராக இருக்கிறார்

மாம், அவர் பிரதமராக இருக்கிறார். ஆகையால், நாம் கண்ணியமாக பேசவேண்டும். பிரதமரை கண்ணியமாக விமர்சித்தாலும் உங்கள் மீது “ஊபா” போன்ற கருப்புச் சட்டங்கள் பாயும். ஆண்டுக்கணக்கில் எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் வைக்கப்படுவீர்கள். இருப்பினும், கண்ணியமாக விமர்சிக்க நீங்கள் கற்றுக்கொண்டாக வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என்று ஆளுங்கட்சியை விமர்சிப்பதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கெல்லாம் தடைவிதிக்கப்பட்டிருப்பதால், நீங்கள் கண்ணியமாக விமர்சிக்க வேண்டும்.

பிரதமரை அவதூறு செய்துவிட்டார் என்று எதிர்க்கட்சி தலைவர் மீது பொய்வழக்குப் பதிவு செய்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டிருப்பதை நினைத்துப் பாருங்கள், ஆனாலும் நீங்கள் கண்ணியமாக விமர்சிக்க வேண்டும்.

மணிப்பூர் பற்றி எரிகிறது என்று ஊடகங்கள் எல்லாம் சொல்லி வந்தன. 77 நாட்களாக அந்த நபர் வாயைத் திறக்கவில்லை. குக்கி இனப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட வன்முறைக் காட்சி வீடியோ வெளியானதை அடுத்து அவர் வாயைத் திறந்துவிட்டார். 78-வது நாளில் அவர் வாயைத் திறந்து பேசியதை, தி டெலகிராப் இதழ் தனது முதல்பக்கத்தில் 77 சிறிய முதலைகளைப் போட்டு 78-வது முதலை கண்ணீர் வடிப்பது போல படத்தை வெளியிட்டிருக்கிறது. மிகவும் கண்ணியமான விமர்சனம்.


படிக்க: மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தான் குற்றவாளிகள்!


“அவமானத்தால் உடலே நடுங்கிறது…” என்று “மணிப்பூர் கலவரம் குறித்து வாய் திறக்க, ‘உலகத்தின் சக்திவாய்ந்த தலைவர்’ எனச் சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடிக்கு சுமார் 78 நாள்கள் ஆகியிருக்கின்றன. நம் சகோதரிகள் சிலர் நிர்வாணமாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட செய்தி வெளியான பிறகே, வேறு வழியில்லாமல் மௌனம் களைந்திருக்கிறார் மோடி… இதைவிடக் கொடுமை வேறென்ன இருக்கப் போகிறது?” மிகவும் கண்ணியமாகவே விமர்சனம் செய்திருக்கிறது ஜூனியர் விகடன்.

தினகரனை எடுத்துக் கொள்வோம்.

“இந்நிலையில் தான் பழங்குடியின பெண்கள் இருவரை மெய்தி சமூகத்தினர் நிர்வாணப்படுத்தி சாலையில் ஊர்வலமாக அழைத்து செல்வது போன்று சமூகவலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கொடூரத்தின் உச்சமாக கருதப்படும் இச்சம்பவம் கடந்த மே மாதம் நடந்த பேரணியின் போது அரங்கேறியுள்ளது. இதில் இரு பெண்களையும் வயல்வெளியில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளனர். இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்துக்கு உச்சநீதிமன்றம் உள்பட காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

மணிப்பூர் கலவரம் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடி முதன்முறையாக கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மணிப்பூரில் நடக்கும் கலவரங்கள் குறித்து வெளியே பரவாமல் தடுக்க ஒன்றிய பாஜ அரசு அம்மாநிலத்தில் இணைய சேவையை துண்டித்தது. இருந்தாலும் விளையாட்டு வீராங்கனை, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆகியோர் இணையதளத்தில் வீடியோவை வெளியிட்டு மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என்று கதறி கெஞ்சினர்.

உண்மை நிலவரத்தை எப்போதும் மறைக்கமுடியாது என்பது போன்று தற்போது பழங்குடியின பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த கொடுமைக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்றே தீர வேண்டும்.” என்று விரிவாக தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதனைவிட கண்ணியமாக பிரதமரை விமர்சிக்க முடியாதுதான்.

இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் “மணிப்பூர் சம்பவம் வேறு மாதிரியானது. அதுகுறித்துப் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சத்தீஸ்கரையும் ராஜஸ்தானையும் இதோடு இணைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? சத்தீஸ்கர் மாநிலத்தை அவதூறு செய்ய மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி துரதிர்ஷ்டவசமானது. முதலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பிறகு மணிப்பூர் என்று அவர் குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் முதன்முறையாக ஊடகங்கள் முன்பு வந்த பிரதமர் மோடி பொய் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். பிரதமரே இந்தப் பேச்சுகளை நிறுத்துங்கள். உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள்” என்று மோடி உரையின் திசைதிருப்பும் வேலையை அம்பலப்படுத்தியுள்ளார்.


படிக்க: மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!


“உங்களது குரல் (Articulation) உங்களது மவுனத்தைவிட வெட்ககரமானது” என்றார் காங்கிரசின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா சிரினட்.

“இரண்டு பெண்கள் மீதான தாக்குதலுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் தெரிவிப்பதற்குப் பதிலாக, பிரதமர் அற்ப அரசியலில் ஈடுபடுவதை குறிப்பிட்டு காங்கிரசின் ஊடகத்துறைத் தலைவர் பவன் கேரா, “இந்தியாவுக்கு இதயம் கொண்ட பிரதமர் தேவை” என்று கூறினார்” என டெலிகிராஃப் ஆங்கில ஏடு தெரிவிக்கிறது.

“மணிப்பூரில் மனிதத்தன்மை மடிந்துவிட்டது. மோடி அரசாங்கமும் பா.ஜ.க.வும் ஜனநாயகத்தை மாற்றிவிட்டனர். சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக கும்பலாதிகத்தைக் கொண்டுவந்து மாநிலத்தின் மிகவும் நேர்த்தியான சமூகக் கட்டமைப்பை அழித்துள்ளனர். மோடிஜி, உங்களது மவுனத்தை இந்தியா மன்னிக்காது. உங்கள் அரசாங்கத்திற்கு மனசாட்சி ஒரு சிறு துளி மீதம் இருந்தால், நீங்கள் மணிப்பூரைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசி, மத்தியிலும் மாநிலத்திலும் உங்கள் இரட்டை இயலாமைக்கு மற்றவர்களைக் குற்றம் சொல்லாமல், என்ன நடந்தது என்பதை தேசத்திற்குச் சொல்லுங்கள். நீங்கள் உங்களது அரசியலமைப்பு பொறுப்பை கைவிட்டுவீட்டீர்கள்.” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் காங்கிரசு கட்சியின் தேசியத் தலைவரான கார்க்கே.

காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “1,800 மணி நேரத்திற்கும் மேலாக புரிந்து கொள்ள முடியாத மற்றும் மன்னிக்க முடியாத அமைதிக்குப் பிறகு, இறுதியாக மொத்தம் 30 வினாடிகள் மணிப்பூரைப் பற்றி பிரதமர் பேசினார். அதன்பிறகு, குறிப்பாக எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுடன் சமப்படுத்தி, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தவிர்த்ததன் மூலம் மணிப்பூரில் நடந்த மாபெரும் நிர்வாகத் தோல்விகள் மற்றும் மனிதாபிமான துயரங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப பிரதமர் முயன்றார்.” என்றார்.

மேலும் அவர் பேசும் போது, “முதலாவதாக, நடந்து கொண்டிருக்கும் இனக்கலவரத்தின் பிரச்சினையை அவர் முற்றாக ஒதுக்கிவிட்டார். அவர் அமைதிக்காக எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை. மணிப்பூர் முதல்வரை பதவி விலகுமாறு கேட்கவில்லை. தற்போது வெளிவந்துள்ள இந்த காணொளி ஒன்று குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் நூற்றுக்கணக்கான காட்டுமிராண்டித்தனமான வன்முறை சம்பவங்களுக்கு இது ஒரு சான்று மட்டுமே. இரண்டாவதாக, மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளுடன் மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளை சமப்படுத்த முயற்சிக்கிறார். அங்கெல்லாம் இந்தக் குற்றங்களைச் செய்துள்ளவர்கள் 24 மணி நேரங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.


படிக்க: எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!


தீக்கதிர் நாளிதழில், “பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலும் பிரிவினை அரசியலும் தான் குக்கி பழங்குடியின மக்கள் மீது, மெய்தி மக்கள் குழுவினர் இத்தகைய தாக்குதல் நடத்துவதற்கு காரணம் என்பதும் அதனால் பா.ஜ.க. மாநில அரசு கடும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதும் ஒன்றிய அரசும் கண்டு கொள்ளாமல் இருந்தது என்பதும் தெளிவானது. மொத்தத்தில், நாட்டின் கவுரவம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஆட்சியில் இருப்பது துரியோதனாதியர்களின் கவுரவர்கள் கூட்டம். இது கவுரவமான ஆட்சியல்ல!” என்று குறிப்பிட்டுள்ளது.

மொத்தத்தில், மணிப்பூர் விசயத்தில் பிரதமர் மோடியும் அவரது கட்சியான பா.ஜ.க.வும் செய்தது என்ன?

மோடிக்கு குஜராத் என்றால், பைரன் சிங்கிற்கு மணிப்பூர்!

2002-ஆம் ஆண்டில் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது என்ன செய்தாரோ அதை அப்படியே அச்சுப்பிசகாமல் பைரன் சிங் மணிப்பூரில் செய்துள்ளார். அங்கே நடந்த இனப்படுகொலைக்கு பலியானவர்கள் முசுலீம்கள். இங்கே இனப்படுகொலைக்கு பலியானவர்கள் குக்கி பழங்குடியின மக்கள்.

அங்கேயும் இங்கேயும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியது பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.சும்தான். பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு பலத்தை பயன்படுத்தி, குக்கி இன மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

குஜராத் படுகொலையின் குற்றவாளிகள் இன்று வெளியில் சுதந்திரமாகத் திரிகின்றனர். அந்த படுகொலையில் தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்தான் இன்று நாட்டின் பிரதமராகவும் உள்துறை அமைச்சர்களாகவும் உள்ளனர். இவர்கள் மீது குற்றஞ்சுமத்தியவர்கள், தீஸ்தா சேதல்வாத் உள்ளிட்ட சமூக செயல்பாட்டாளர்கள் வழக்கை எதிர்கொண்டிருக்கின்றனர்.

இதுதான், இந்துராஷ்டிரம்.

“அப்போது படுகொலைக்கான குற்றவாளி, மரண வியாபாரி இன்று பிரதமர்” (சோனியா காந்தி சொன்னது). குற்றவாளியிடம் வாயைத்திற, கலவரத்தைக் கட்டுப்படுத்து என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறோம். 78 நாட்கள் கழித்து அவர் 30 விநாடிகளில் பேசிய பேச்சுக்கள், குற்றவாளிக்குரிய தண்டனையைவிட கொடிய தண்டனையை வழங்கக் கோருகிறது.

இருப்பினும், அவர் பிரதமராக இருக்கிறார்.

அதிகாரமும் அரசியல் பலமும் அவரது பரிவாரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

நீதி கேட்டுப் போராடுபவர்கள், வெளியே வீதிகளில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறோம்.

“பிரதமரே, வாயைத் திறந்து பேசுங்கள், கலவரத்தைக் கட்டுப்படுத்துங்கள்” என்று இனியும் கவுரவமாக முழக்கமிடுவதற்கான வாய்ப்பையும் அவர் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார்.

அவர் நடந்து கொள்வதையெல்லாம் பார்த்தால், யோக்கியர்கள் யாரும் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரிகிறது.

என்ன செய்யப் போகிறோம்?


தங்கம்

மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தான் குற்றவாளிகள்!

பிரதமர் மோடி பிரான்சுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரங்களைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மணிப்பூரில் கலவரங்களை அடக்கத் தவறியதற்காகப் பிரதமர், உள்துறை அமைச்சரை அதுவரை கண்டித்து வந்த ‘நடுநிலை’ ஊடகங்கள் சில (ஆனந்த விகடன்) ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட வார்த்தைகளில் தமது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. இது மேற்கத்திய நாடுகளின் காலனியாதிக்க மனநிலை என்றும் விமர்சனங்களைச் செய்திருந்தனர்.

இத்துடன், “ஆனந்த விகடன்” இதழ், “மணிப்பூரின் உண்மை நிலவரத்தை உணராமல் கற்பனையாக ஒரு கோணத்தில் சித்தரிக்க முயன்றதாக விமர்சனம் செய்துள்ளது. குறிப்பாக, மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினரான குக்கி சமூகத்தினருக்கும் மோதல் நிலவிவருகிறது. நில உரிமை தொடர்பான முரண்பாடு நீண்டகாலமாக இரண்டு சமூகங்களுக்கு இடையில் இருந்து வருகிறது. இந்நிலையில், மெய்தி இன மக்களைப் பழங்குடியினராக அங்கீகரிப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பே, இந்த முரண்பாட்டைக் கூர்மையாக்கி மோதலுக்கு வித்திட்டது. ஆனால், மணிப்பூர் கலவரத்துக்கு மதச்சாயம் பூசுகிறது ஐரோப்பிய நாடாளுமன்றம்” என்று குறிப்பிடுகிறது.

இக்கருத்து, மணிப்பூர் கலவரங்கள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றம், இந்தியாவைக் கண்டிக்கும் போக்கில் இப்பிரச்சினை குறித்து ஆனந்த விகடன் தெரிவித்திருந்தது என்றாலும், மணிப்பூர் கலவரத்திற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; மணிப்பூர் கலவரத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற கருத்தின் வேறுவடிவமாகும்.


படிக்க: மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!


விகடன் குழுமம் மட்டுமல்ல, மணிப்பூர் கலவர விவகாரத்தில் பிரதமரையும் அமித்ஷாவையும் கண்டிக்கும், மிகவும் நடுநிலையாளர்கள் போல நடிக்கும் பல பார்ப்பன, கார்ப்பரேட் ஊடகங்களில் கருத்துகள் இத்தகையவையே. இதன் மூலம், இனவெறி, மதவெறி படுகொலை குற்றவாளிகளான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வைக் காப்பாற்றுகின்றன.

கிருத்தவர்களும் பழங்குடி இனத்தினருமான குக்கி மக்களுக்கு எதிராக மதரீதியாக வெறுப்புப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டு திட்டமிட்டு அவர்களுக்கு எதிரான கலவரங்களை அரங்கேற்றியது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்தான்.

மணிப்பூர் முதல்வரும் பா.ஜ.க. கும்பலும் இந்தக் கலவரங்களை நியாயப்படுத்தியும் இவற்றை தடுப்பதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் இருந்தனர். மோடிக்கு குஜராத் என்றால், பைரன் சிங்கிற்கு மணிப்பூர். தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் இந்து மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஏற்றார் போல பல்வேறு பிரித்தாளும் அணுகுமுறைகளை மேற்கொண்டுவருகிறது என்பதற்கு மணிப்பூர் துலக்கமான சாட்சியாகும்.

இதனால்தான் இதுநாள் வரை பிரதமர் இந்தப் பிரச்சினையில் வாயைத் திறக்கவில்லை. குக்கி இன மக்களுக்கு எதிராக வன்முறைகள் அரங்கேற்றப்பட்ட போது கூட உள்துறை அமைச்சகம் இதனைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கண் துடைப்புக்காக அமித்ஷா கும்பல் ஒரு விசாரணை நாடகத்தை அரங்கேற்றியது. பிரதமரை விமர்சிக்கும் சாதாரண பத்திரிகையாளர்களை மோப்பம்பிடிக்கும் இந்திய புலனாய்வு முகமை குக்கி இன மக்கள் மீதான மெய்தி வன்முறையாளர்களை அடையாளம் காட்டவில்லை. இதுமட்டுமல்ல, கலவரத்திற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரலெழுப்பிய போது, முதல்வர் பைரன் சிங், பதவி விலகுவதாக அப்பட்டமான ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். தனது கட்சியினர் வலியுறுத்துவதால் பதவியில் தொடர்வதாகக் கூறி, எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்தினார்.


படிக்க: போலீசின் துணையுடன் நடந்த குக்கி பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டம்!


தற்போது இரண்டு நாட்களாக உலகையே உலுக்கி வருகிறது, குக்கி இனப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் கொடுமையான வீடியோ. இந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களில் ஒருவர், “எங்கள் கிராமத்தை அந்தக் கும்பல் தாக்கியபோது போலீஸாரும் அங்கிருந்தனர். கிராமத்திலிருந்து எங்களை அழைத்துச் சென்ற போலீஸார், அந்தக் கும்பலிடம் எங்களை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்” என்று பேட்டியளித்துள்ளார்.

இந்த ஒரு வன்முறையில் மட்டுமல்ல, இதுவரையிலான அனைத்து வன்முறைகளிலும் குக்கி இன மக்களுக்கு எதிராக மெய்தி இனவெறி கும்பலுடன் போலீசும் அரசு அதிகாரமும் சேர்ந்து கொண்டுதான் தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளன. பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவதைப் பற்றிப் பேசிய மணிப்பூர் முதல்வர் பைரன்சிங், இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடப்பதாக மிகவும் அலட்சியமாகக் கூறியிருப்பது என்பது, பா.ஜ.க. அரசின் ஆசியுடன் தான் இந்த வன்முறைகள் அரங்கேற்றப்படுகின்றன என்பதை உணர்த்துகின்றன.

ஆனால், ‘நடுநிலை’ போர்வையில் இருக்கும் பல ஊடகங்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் பல ஊடகங்கள்கூட ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., அரசு கூட்டாக நடத்தும் வன்முறை வெறியாட்டம் என்பதை திட்டமிட்டே மறைத்து வருகின்றன.

ஆகையால், மணிப்பூர் குக்கி இன மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிரான குரல்கள் அனைத்தும் பா.ஜ.க.விற்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் எதிராக திருப்பப்பட வேண்டும்.

“ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வைத் தடை செய்” என்பதுதான் மணிப்பூர் பிரச்சினையில் மக்களின் முழக்கமாகும்!


தங்கம்

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை ! | தோழர் அமிர்தா

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை ! | தோழர் அமிர்தா

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!

0

மே 3 முதல் (80 நாட்களுக்கும் மேலாக) மணிப்பூர் மாநிலத்தில் இன முரண்பாடு காரணமாக வன்முறை நடந்து வருகிறது. 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பிரதமர் மோடிக்கு நேரம் கிடைக்கவில்லை. அவர் தனது அமெரிக்கா, எகிப்து, பிரான்ஸ் பயணங்களில் கவனத்தைக் குவித்திருந்தார். பாவம் அவர்தான் ஒரு நாளைக்கு 22 மணிநேரம் உழைப்பவர் ஆயிற்றே, முன்னாள் மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கூறியதைப் போல. அவருக்கு நாடாளுமன்றம் செல்வதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை.

நேரில் செல்லாதது மட்டுமல்ல, ’சிறந்த பேச்சாளரான’ மோடி மணிப்பூர் பிரச்சினை குறித்து வாயைக் கூடத் திறக்கவில்லை. ஜூலை 20-அன்று காலையில்தான் மணிப்பூர் பிரச்சினை குறித்து அவர் தனது வாயை முதன்முறையாகத் திறந்துள்ளார். வாயைத் திறக்க அவருக்கு 79 நாட்கள் தேவைப்பட்டுள்ளது. மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மணிப்பூரில் நடந்த இந்த சம்பவம் நாகரிகமான எந்த சமுதாயத்துக்கும் அவமானகரமானது” என்று கூறினார்.

மோடி இங்குக் குறிப்பிடும் சம்பவம், மணிப்பூரில் குக்கி – மைதேயி இடையே வன்முறை தொடங்கிய அடுத்தநாள் (மே 4 அன்று) நடைபெற்றது. பாதுகாப்புக்காகக் காட்டுக்குள் தப்பி ஓடிய குக்கி மக்களின் ஒரு குழுவைப் போலீசு மீட்டது. மைதேயி கும்பல் ஒன்று இடைமறித்தபோது. போலீசு குக்கி மக்களை அக்கும்பலிடமே ஒப்படைத்துவிட்டது. குக்கி ஆண்கள் இருவரைக் கொலை செய்த அக்கும்பல், பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்று சித்திரவதை செய்தது.


படிக்க: மணிப்பூர் கொடூரம்: பா.ஜ.க அரசே முதல் குற்றவாளி


இந்த சம்பவம் குறித்து போலீசு இரண்டு மாதங்களுக்கு முன்னரே, அதாவது மே 18 அன்றே, வழக்குப்பதிவு செய்துள்ளது. ஜூன் 12-ஆம் தேதியே தேசிய மகளிர் ஆணையத்தில் இச்சம்பவம் உட்பட 6 பாலியல் சம்பவங்கள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஊடக அறிக்கைகளிலும் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மணிப்பூர் அரசாங்கம் தனக்குத் தெரியாது என்று கூறுவதென்பது பித்தலாட்டமாகும். பிரதமர் மோடியின் கட்சியைச் சேர்ந்தவரான மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் ஒரு அரசியலமைப்புத் தலைவராக இல்லாமல் மைதேயி இனத்தவராகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் ஒன்றும் மோடிக்குத் தெரியாதது அல்ல. இக்குற்றச்சாட்டை மட்டுமல்ல, மணிப்பூர் வன்முறையையே மோடி கண்டுகொள்ளவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

குக்கி பெண்கள் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்ட காணொலி வைரலான பின்புதான் பிரதமரும் மணிப்பூர் முதல்வரும் தங்களது வாயைத் திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்.

இப்பிரச்சினை குறித்து வாயைத் திறந்த முதல்வர் பிரேன் சிங் பொய்யைத் தான் உமிழ்ந்தார். போலீசு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததாகக் கூறியதன்மூலம் இரண்டு மாதகால போலீசுத் துறையின் செயலின்மையை மூடிமறைக்க முயன்றார்.

பிரதமர் மோடியோ பிரேன் சிங்கை கேள்விக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக ”பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்களை மேலும் வலுப்படுத்துமாறு அனைத்து முதல்வர்களையும் கேட்டுக் கொள்கிறேன். ராஜஸ்தானோ சத்தீஸ்கரோ மணிப்பூரோ – எந்த மாநிலமாக இருந்தாலும் சட்ட ஒழுங்கை வலுப்படுத்திப் பெண்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களாகும். நாட்டின் மற்ற மாநிலங்களைப் போல அங்கும் பெண்கள் மீதான கொடூரமான பாலியல் வன்முறைகள் நடந்தேறுகின்றன. இக்கொடூரங்கள் இந்தியாவின் பார்ப்பனிய – ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகும். மேலும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் மணிப்பூரைப் போல பற்றி எரிந்து கொண்டிருக்கவில்லை.


படிக்க: மணிப்பூர்: உண்மை கண்டறியும் குழுவினர் மீது பாசிச ஒடுக்குமுறை!


முன்னதாக ஜூலை 15 அன்று மனநலம் பாதிக்கப்பட்ட நாகா பெண் ஒருவர் தனது பழங்குடி அடையாளத்திற்காகச் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து வன்முறை மற்றொரு சமூகத்திற்கும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டது.

மணிப்பூரின் பயங்கரத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதென்பது ஒரு திசைதிருப்பலாகும். இதைத்தான் பிரதமர் மோடி செய்கிறார். மணிப்பூர் வன்முறையை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை மறைக்க முயல்கிறார்.

மே 3-ஆம் தேதி முதல் மணிப்பூரில் தொடர்ந்து வன்முறைகள் நடந்து வருகின்றன. ஆயுதங்களைக் கொள்ளையடித்தல், இறப்புகள் மற்றும் காயங்கள் குறித்தான செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பிரதமர் மோடியோ மணிப்பூரில் எதுவுமே நடக்காததைப் போலவும், தற்செயலாக ஏதோவொரு தனித்த சம்பவம் மட்டும் நடந்துவிட்டதைப் போலவும் பேசியுள்ளார்.

அதேபோல், மோடி தனது உரையில் மணிப்பூரில் அமைதியை வலியுறுத்தியோ, வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

மணிப்பூரில் நடந்த பாலியல் வன்முறைகள் குறித்து மட்டுமே பேச மோடி விரும்பினார் என்று வைத்துக்கொண்டாலும் கூட, மணிப்பூரில் நடைபெற்ற மற்ற பாலியல் வன்முறைகள் குறித்து அவர் வாய் திறக்கவில்லை. ”இதுபோல 100 சம்பவங்கள் நடக்கின்றன” என்று மணிப்பூர் முதல்வரே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சில வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குக்கி பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே மோடி தனது வாயைத் திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். மணிப்பூர் வன்முறை என்பது மத்திய மாநில பா.ஜ.க அரசுகளின் துணைகொண்டு நடந்தது என்பதை மறைப்பதுதான் அவரது நோக்கம். எனவே, முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்.


பொம்மி

மணிப்பூர் கொடூரம்: பா.ஜ.க அரசே முதல் குற்றவாளி

ணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ஆம் தேதி முதல் குக்கி மற்றும் மைதேயி சமூகத்தினரிடையே வகுப்புவாத அடிப்படையிலான கலவரம் நடைபெற்று வருகிறது. பரவலான வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்களால் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், பல நூற்றுக்கணக்கான வழிப்பாட்டுத் தளங்கள் இடிக்கப்பட்டன. சுமார் 60,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். உயிர் பிழைப்பதே சிரமமான சூழலில் பலரும் அம்மாநிலங்களை விட்டு வெளியேறிய சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

இவற்றையெல்லாம் திட்டமிட்டுத்  தொடங்கி வைத்த பா.ஜ.க அரசாங்கம் கலவரங்களை அடக்க முயற்சிக்காமல் அவற்றை வளர விட்டு வேடிக்கை பார்த்து ’ரசித்தது’. அது மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து கலவரங்களை தீவிரப்படுத்தியது. அதனுடைய இறுதி விளைவு மாநில அரசோ, மத்திய அரசோ இக்கலவரங்களை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மணிப்பூர் மக்களிடையே இன ரீதியிலான பிரச்சினை வேகமெடுத்தது.

அதன் வெளிப்பாடாக மைதேயி இனவெறியர்கள் தங்கள் கண்களில் பட்ட குக்கி மக்கள் பலரையும்  துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதோடு நூற்றுக்கும் மேற்பட்டோரை அடித்தே கொலை செய்தனர். இதுபோன்ற கொடுஞ்செய்களில் ஈடுபட்ட கலவரக்காரர்களின் உச்சக்கட்ட மனித தன்மையற்ற செயல்தான் தற்போது காணொளியாக வெளியாகி  நம் அனைவரையும் நிலைக்குலைய வைத்திருக்கிறது. சரியாக கூற வேண்டுமெனில் அதுதான் தற்போது  மணிப்பூர் பிரச்சினை பற்றி நம் அனைவரையும் வாய் திறக்க வைத்திருக்கிறது.

அந்த காட்டுமிராண்டித்தனமான செயல் என்னவென்றால் மெய்தி இனவெறியர்கள் திரண்டு  குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து ரத்தம் சொட்ட சொட்ட அவர்களை ஊர்வலமாக கூட்டிச் சென்று பட்டப்பகலில் பொதுவெளியில் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். பல முறை அப்பெண்கள் கெஞ்சியும் விடாது தொடர்ந்து அனைவராலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த கொடுமையான செயலை எதிர்த்த அப்பழங்குடியின பெண்களின் தந்தையும், சகோதரனும் சம்பவ  இடத்திலேயே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

“இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் எங்களை மீட்டு செல்வதாக கூறினார்கள்.  நம்பி அவர்களுடன் சென்றோம். கிராமத்தின் எல்லையில் வழிமறித்த கலவரக்காரர்கள் எங்களை இறங்கச் சொல்லி மிரட்டியதும் போலீஸ்காரர்கள் எங்களை இறங்கும்படி கூறி அவர்களிடம் ஒப்படைத்துச் சென்றுவிட்டார்கள்” என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர். இதுதான் அங்கு போலிஸ்துறை செயல்பட்ட லட்சணம்.


படிக்க: இனியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை விட்டு வைக்கலாமா?


இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தொடர்ந்து உடனடியாக தேசிய மகளிர் ஆணையத்தில் இரண்டு முறை புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. உச்சநீதிமன்றமோ மணிப்பூர் பிரச்சினையில் தலையிட வலியுறுத்தி பழங்குடி அமைப்பினர் வழக்கு தொடுத்தபோதும் அதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்தது. இப்படி அனைத்து அரசு நிறுவனங்களும் கண்களை இறுக்க மூடிக்கொண்டன.

இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேல் செயல்பட்டது மணிப்பூர் மாநில பா.ஜ.க அரசாங்கம். நடக்கும் பிரச்சினைகளை பாதுகாப்பு படை கொண்டு நிறுத்துவதற்கு பதில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து வெளியிடும் இணையதள சேவைகள் அனைத்தையும் துண்டித்து மணிப்பூரை தனி தீவாக மாற்றி கலவரத்தின் பாதிப்பை வெளி உலகிற்கு தெரியவிடாமல் மூடி மறைத்தார்.

இதுபற்றி தற்போது வாய்திறந்த முதல்வர் பிரேன் சிங் இது போன்ற சம்பவங்கள் 100-க்கும் மேற்பட்டவை நடந்துள்ளன. அதில் ஒரு காணொளி தற்போது பொதுமக்களிடம்  பகிரப்பட்டு வருகிறது. இதுபோன்று காணொளி வெளியே வரக்கூடாது என்பதற்காகத்தான் மாநிலம் முழுவதும் இணைய சேவைகளை முடக்கினோம் என வெளிப்படையாக பேசுகிறார்.

ஒருபுறம் கலவரத்தை தூண்டிவிட்டு கைகட்டி வேடிக்கை பார்க்கும் மணிப்பூர் மாநில அரசாங்கம். மற்றொரு பக்கம் நாட்டில் ஒரு மாநிலம் பற்றி எரிகிறதே என்ற கவலையற்ற பிரதமர். பிரச்சினை தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டங்களில் வெளிநாட்டு பயணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரே அன்றி மணிப்பூர் பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை. மன் கீ பாத் நிகழ்ச்சியில் “மனம் திறக்கும்” மோடி மணிப்பூர் பற்றி வாய் திறக்கவில்லை. முடிந்த அளவு தனக்கு வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டு வலம் வந்தார்.


படிக்க: மணிப்பூர்: பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம்! மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்!


தற்போது 77 நாட்கள் கழித்து  இந்த காணொளி புகைப்படங்கள் வெளியானதும் “இது இந்திய நாட்டிற்கே அவமானம்,குற்றவாளிகளை உடனே கைது செய்யுங்கள் மணிப்பூர் சகோதரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என முதலைக்கண்ணீர் வடிக்கிறார்”. திட்டமிட்டு மெய்தி குக்கி இனப் பிரச்சனையை உருவாக்கி அவர்களின் உயிரை பறித்த முதல் குற்றவாளியே மோடிதான். தற்போது  ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பெண்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அது மணிப்பூர் ஆனாலும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆனாலும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளத் தயங்கமாட்டோம் என்றார்.

அவர் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களை மேற்கோள் காட்டுவதற்குக் காரணம் அது காங்கிரஸ் கட்சி  ஆட்சி செய்யும் மாநிலம் என்பதே. அங்கேயும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது, ஏதோ இங்கு மட்டும் நடக்கவில்லை என மணிப்பூர் பிரச்சினையை மடை மாற்றும் நரித்தனத்தில் இறங்கிவிட்டார்.

இப்படி ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பையும் தனக்கு இசைவாகப் பயன்படுத்திக் கொண்டு இணக்கமாக இருந்த மெய்தி குக்கி மக்களிடையே பிளவை உண்டாக்கி அதை மத, இனக்கலவரமாக மாற்றி அம்மாநில மக்களின் நீண்டகால ஒற்றுமையையே சீர்குலைத்து விட்டது காவி பாசிச மோடி அரசு. அவர்களுடைய இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றுவதற்கு எந்த எல்லைக்கும் செல்வார்கள் காவி பயங்கரவாதிகள் என்பதற்கு மணிப்பூர் சம்பவமே துலக்கமான சான்று.


சித்திக்

பெண்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் இணையம்!

19 வயதான கல்லூரி மாணவி அனுஷ்கா தற்கொலை செய்துகொண்டார். அனுஷ்காவின் படம் ஆபாசமாக மார்பிங்க் செய்யப்பட்டு அவரது ஆண் நண்பன் ஒருவனால் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டது. அப்படம் கல்லூரி வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டதால் அவமானம் தாங்காமல் அனுஷ்கா தற்கொலை செய்துகொண்டார். இணையவழியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட, எண்ணற்ற இளம்பெண்களில் ஒருவர்தான் அனுஷ்கா.

இணையவழியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அரங்கேறுவது குறித்து நிபுணரும் சைபர் துறையில் நிகழும் துன்புறுத்துதல்கள் குறித்து ஆராயும் ஆய்வாளருமான அஞ்சலி ரங்கசுவாமி, 111 இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் 400 மாணவர்களிடம் ஆய்வினை நடத்தியிருக்கிறார்.

அந்த ஆய்வில் இணையவழியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என தெரியவந்திருக்கிறது. 60 சதவிகித பெண்களும் 8 சதவிகித ஆண்களும் இத்தகைய இணையவழி அச்சுறுத்தல்களால் தினசரி பாதிப்புக்கு ஆளாகுகிறார்கள்.

படிக்க : தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அமேசான் நிறுவனம்!

பெண்களது படங்களை ஆபாசமாக, நிர்வாணமாக மார்ஃபிங் செய்வது, பாலியல் ரீதியாக மிரட்டுவது, வெளிப்படையாக பாலியல் ரீதியாக குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்வது என இணையவழி தாக்குதல்கள் பல வடிவங்களில் அரங்கேறுகிறது. குறிப்பாக, நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்ட வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைத்தள பக்கங்கள்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்களில் முதன்மை பங்கு வகிக்கின்றன.

இணையவழியில் அதிகமாக பாதிக்கப்படும் பெண்களில் சமூக செயற்பாட்டாளர்களாக உள்ள பெண்களே அதிகம். பெண்களை ‘அடக்கி ஆள’ ஒரு மோசமான ஆயுதமாக அவர்களது படங்களை மார்ஃபிங் செய்வதையும், கொச்சை, ஆபாச வார்த்தைகள் கொண்டு திட்டுவதையுமே ‘கெத்தாக’ பார்க்கிறது பார்ப்பன – ஆணாதிக்க மனோபாவம்.

இத்தகைய நபர்களால் இணையத்தில் பதிவிடப்படும் ஆபாச படங்கள் பலருக்கும் பரப்பப்பட்டு உலகின் மூலைமுடுக்கில் இருப்பவர் வரை சென்று சேருகிறது. இதனால் பாதிப்படையும் பெண்கள் மனரீதியான பிரச்சினைகளுக்குள்ளாகுகிறார்கள். மனப் பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை முடிவுக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பெண்கள் பலரும் தாங்கள் மேற்கொண்டிருந்த கல்வியையும், பணியையும் விட்டு விலகும் நிலையும் ஏற்படுகிறது.

படிக்க : இனியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை விட்டு வைக்கலாமா?

இந்திய உயர்கல்வி நிறுவனங்கள்தான் இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் நிகழும் இடமாக இருக்கிறது என ஆய்வாளர் அஞ்சலி நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

ஆயிரமாயிரங் காலமாக அடிமைகளாக சுரண்டப்பட்டு வந்த பெண்கள், தொழில்நுட்பங்கள் வளர வளர நவீன முறையில் பாலியல் சுரண்டல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகின்றனர். நிலவுகின்ற பார்ப்பன – ஆணாதிக்க சமூகத்தை தூக்கியெறியும் போராட்டத்தில் பெண்கள் களத்தில் நிற்க வேண்டும். புதிய சமுதாய பிறப்பில்தான் பெண்கள் விடுதலையும் பிறக்கும்!


ஆதிலா