privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திலேடி பில்லா SI ரேட் வேலம்மாளுக்கு ஆப்பு வைத்த கதை!

லேடி பில்லா SI ரேட் வேலம்மாளுக்கு ஆப்பு வைத்த கதை!

-

செய்தி-62

காக்கிச்சட்டைத் திமிரை மக்களின் ஆதரவோடு முறியடிக்க  பு.ஜ.தொ.மு செய்த முயற்சிக்கு வெற்றி !!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானைத் தாலுகாவைச் சேர்ந்த தொண்டியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது எஸ்.பி. பட்டணம் என்றழைக்கப் படுகின்ற சுந்தரபாண்டியன் பட்டணம் எனும் ஊர். இங்குள்ள போலீசு நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்ய வந்தவர்தான் வேலம்மாள். இயல்பாகவே தெனவெடுத்துத் திரியும் தமிழகப் போலீசு ஜெயாவின் ஆட்சி வந்ததிற்குப் பிறகு திமிரெடுத்துப் போய்த் திரிகிறது என்பதை மறுப்பவர்கள் எஸ்.பி.பட்டணம் போலீசு நிலையம் போய் வந்தால் தாங்கள் மறுத்தது தவறு என்பதை உணர்வார்கள்.

இத்தகைய துணை ஆய்வாளர் வேலம்மாளுக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மூலம் வந்தது ஆப்பு.

வேலம்மாளைப் பற்றி முதல்நாள் ஒரு சுவரொட்டியை ஒட்டியது பு.ஜ.தொ.மு. மறுநாள் ஒரு சிறுபிரசுரத்தையும் வினியோகம் செய்தது. அந்தப் பிரசுரம் வினியோகம் செய்யப்படும்போதே வேலம்மாளை பாம்பனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது. அந்தப்பகுதி மக்களுக்கு ஒரே மகிழ்ச்சி. “ஒரே நோட்டீசில் ஆளைத்தூக்கிவிட்டீர்களே!” என மக்கள் ஆச்சர்யத்தைத் தோழர்களிடம் தெரிவித்தனர். “மக்களின் ஆதரவும் நேர்மையும் இருந்தால் எவன் திமிரையும் அடக்கமுடியும் என பு.ஜ.தொ.மு தோழர்கள் அதற்குப் பதில் சொல்லியிருக்கிறார்கள். மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட அந்தப் பிரசுரம் இதோ:

எஸ்.பி.பட்டணம் எஸ்..வேலம்மாளின் சட்டவிரோதச் சங்கதிகள்!

காக்கிச்சட்டைத்திமிரை முறியடிக்க உழைக்கும் மக்களே அணி திரள்வோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

எஸ்.பி. பட்டணம் போலீஸ் ஸ்டேசனில் சப்-இன்ஸ்பெக்டராக வேலம்மாள் வேலை பார்க்க வந்ததிலிருந்து காக்கிச்சட்டைக்கே உரிய சட்ட விரோதமான மற்றும் மக்களை மதிக்காத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவற்றிலிருந்து சில………………………..

1) ஓட்டுக்கட்சிகளின் பினாமிகள், அரசு அதிகாரிகள், போலீஸ். இவர்களின் கள்ளக்கூட்டணி, கடந்த பல ஆண்டுகளாக தமிழகமெங்கும் ஆற்றுமணலையும் கிரானைட் கற்களையும் கொள்ளையடித்துக் கொண்டுவருவது நமக்குத் தெரியும். பாம்பாற்று மணலை மட்டும் விடுவார்களா? இங்கே மணல் கொள்ளையடிப்பதற்கு எஸ். ஐ. வேலம்மாள் நிர்ணயித்துள்ள ரேட்டே தனி! மாட்டுவண்டியென்றால் மாதம் ஒன்றிற்கு 600 ரூபாய்; டிராக்டர் என்றால் 6000 ரூபாய்; இதையும் 5 ஆம் தேதிக்குள் கட்டவில்லையென்றால் அபராதம் கட்டவேண்டும். லஞ்சத்திற்கே அபராதம் வசூலிக்கும் வேலம்மாளின் தில் யாருக்கு வரும்?

2) போலீஸ் ஸ்டேசனில் கொடுக்கப்படும் புகாரை வாங்குவதற்கு ஒரு ரேட்; அதை விசாரிக்க ஒரு ரேட்; எதிரியை மிரட்டுவதற்கு ஒரு ரேட்; கெட்ட வார்த்தைகளினால் திட்டுவதற்கு ஒரு ரேட்; எஃப்.ஐ.ஆர் போடுவதற்கு ஒரு ரேட்; இது தவிர புகாருக்குள்ளானவரிடமும் எஃப்.ஐ.ஆர் போடாமலிருக்க ஒரு ரேட், என வகைக்கு ஒரு ரேட் வைத்து வசூலித்துக் கொண்டிருக்கிறார், ரேட் வேலம்மாள்.

3) பூந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த நைனாரின் மனைவி கல்யாணி. இவரது பக்கத்து வீட்டுக்காரர் மாரிமுத்துவின் மனைவி ஆறுமுகம். இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஆறுமுகம் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்கிறார். உடனே கல்யாணியை அழைத்து வந்து இரவு 8.30 மணிவரை ஸ்டேசனிலேயே சட்டவிரோதமாக வைத்ததோடு, தீர்த்தாண்டதானத்தைச் சேர்ந்த ஒருவர் மூலமாக 10,000 ரூபாய் பேரம் பேசுகிறார் எஸ்.ஐ. வேலம்மாள். இதை அறிந்த பு.ஜ.தொ.மு தோழர் ஜான் மேலதிகாரிகளிடம் புகார் செய்வேன் என போலீசாரிடம் சொன்னதும் உடனே கல்யாணியை விடுவித்துவிடுகிறார். பெண் என்றால் பேயும் கூட இரங்கும். ஆனால், பெண் போலீஸ் மட்டும் இரங்காது.

4) பாசிப்பட்டணத்தில் உள்ள பாசியம்மன் கோவில் யாருடையது என்கிற வழக்கு வட்டாட்சியரிடம் நிலுவையில் இருக்கும்போது, பாசிப்பட்டிணம் பிரசிடெண்ட் மாதவனிடம் பல லட்சங்களை வாங்கிக்கொண்டு  “கோவில் உனக்குத்தான் சொந்தம், திருவிழாவை நீ நடத்து! வருவதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என இரண்டு கிராமங்களுக்குள் பகையை உருவாக்கி மாஃபியா கேங் லீடர் போல தடாலடி வேலை செய்கிறார் லேடி பில்லா எஸ். ஐ. வேலம்மாள்.

5) புதுக்காட்டுக் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சண்முகத்தை 30.07.2012 அன்று பின்னிரவில் கொலை மிரட்டல் விட்ட சரவணன் மீது ஸ்டேசனில் புகார் செய்கிறார் சண்முகம். ஆனால், சரவணன் தனக்கு மாமூல் தரும் மணல்கொள்ளையன் என்பதால் நடவடிக்கை எடுக்காததோடு, நடவடிக்கை எடுக்க வற்புறுத்திய பு.ஜ.தொ.மு தோழர் ஜானையும் அநாகரிகமாக ஒருமையில் பேசி மிரட்டி இழிவாக நடந்துள்ளார் எஸ்.ஐ.வேலம்மாள்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு எஸ்.ஐ.வேலை பார்க்கிற வேலம்மாள், இது போல பலவிதமான சட்டவிரோத, மக்கள்விரோதச் செயல்களைச் செய்வதையே கடமையாக எண்ணிச் செயல்படுவதைக் கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர்முன்னணி நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு உழைக்கும் மக்கள் அனைவரும் ஆதரவு தந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

-இவண்

________________________________________________________________________

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – தமிழ்நாடு.
சிவகங்கை- இராமநாதபுரம் மாவட்டங்கள்
தொடர்புக்கு : 9443175256 – 9965389680
படியுங்கள் : புதிய ஜனநாயகம் – புதிய கலாச்சாரம் – www.vinavu.com

============================================================================

சட்டம் ஒழுங்குப் பிரிவிலிருந்து போக்குவரத்துத்துறைக்கு பணிமாற்றமும், எஸ்.பி.பட்டணத்திலிருந்து பாம்பனுக்கு இடமாற்றமும் செய்யப்பட்டாலும் அது வேலம்மாளின் குற்றங்களுக்குரிய நடவடிக்கை இல்லை. எனவே வேலம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாம்பனிலும் சுவரொட்டி அடித்து ஒட்டி வேலம்மாளை வரவேற்றிருக்கிறது பு.ஜ.தொ.மு.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: