செய்தி -100
கூடங்குளம் அணு உலை முற்றுகை நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு மிகப்பெரும் தாக்குதலை நடத்துவதற்கு தயார் நிலையில் கூடங்குளம் அணு உலையைச் சுற்றி நிற்கிறது போலீசு – ராஜேஷ்தாஸ், பிதாரி போன்றவர்கள் தலைமையில்.
இடிந்த கரையிலிருந்து புறப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடங்குளம் அணு உலையின் பின்புறம் கடற்கரை ஓரமாக திரண்டுள்ளனர். அணு உலையின் வாயிற்புறமான கூடங்குளத்தில், சுமார் 5000 மக்கள் வீதியில் திரண்டு நிற்கின்றனர். அவர்கள் இடிந்த கரை மக்களுடன் சென்று சேர்ந்து கொள்ள முடியாத வண்ணம் சாலையெங்கும் போலீசு தடைகளை அமைத்திருக்கிறது.
அருகாமை கிராமத்து மக்கள் சாத்தியமான அளவுக்கு கடல் வழியே இடிந்த கரை சென்றுள்ளனர். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களும் கடல் வழியே இடிந்த கரை சென்று போராடும் மக்களுடன் களத்தில் இருக்கின்றனர்.
அங்கிருந்து அவர்கள் அனுப்பிய செய்தி இது.
தற்போது மதியம் சுமார் 1 மணி அளவில் கவச உடையணிந்த சில ஆயிரம் அதிரடிப்படை போலீசாரும் சுமார் பத்தாயிரம் மக்களும் நேருக்கு நேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.
கையில் மெகா போனுடன் மக்களை நோக்கி வந்த போலீசு எஸ்.பி,
“உயர்நீதிமன்றம் நன்றாக ஆலோசித்து அணு உலையை திறக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வேண்டுமானால் நீங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு அப்பீல் செய்யலாம். உங்கள் அச்சத்தை போக்க முதல்வர் ஒரு குழுவும் அமைத்திருக்கிறார். அவர்கள் அணுஉலை பாதுகாப்பானது என்று கூறியிருக்கின்றனர். இங்கே 144 தடை உத்தரவு போட்டிருக்கிறோம். நீங்கள் இப்படி கூடுவது சட்டவிரோதம். கலைந்து செல்லுங்கள்” என்று அறிவித்தார்.
மைக்கை அவர் கையிலிருந்து வாங்கிய ஒர் பெண், “இந்தக் கடல் எங்களுக்கு சொந்தம், இந்த மண் எங்களுக்கு சொந்தம். நாங்கள் உயிர் வாழ விரும்புகிறோம். நீங்கள் சொல்கின்ற யார் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எந்தக்குழுவும் நீதிமன்றமும் எங்களுடன் பேசவில்லை. நாங்கள் போகமாட்டோம்” என்று அறிவித்தார்.
உடனே, உதயகுமாரைக் கூப்பிடு என்றார்கள் போலீசு அதிகாரிகள். எங்களிடம்பேசு. நாங்கள் பேசுகிறோம் என்றார்கள் மக்கள்.
இதற்கிடையில் கூட்டத்தின் பக்கவாட்டில் நுழைந்து உள்ளே வந்த ராஜேஷ்தாஸ், “அணு உலையைப் பற்றி நான் விளக்குகிறேன். உதயகுமார் சொல்வதெல்லாம் பொய்” என்றார். “அணு உலையைப் பற்றி எங்களுக்குத் தெரியும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார்கள் மக்கள்.
“உதயகுமாரைத் தூக்கிடுவேன்” என்று ராஜேஷ் தாஸ் சொல்லி முடிப்பதற்குள், “யாரைடா தூக்குவே..ங்கோத்தா” என்று கிளம்பியது ஒரு குரல்.
கல்லடி பட்ட போலீசு பின்வாங்கி, பாய்வதற்காக காத்திருக்கிறது.
முல்லைப்பெரியாறு போராட்டத்தின் மீது தொடுத்த தாக்குதலை ஒத்த ஒரு தாக்குதலைத் தொடுக்க தயார் நிலையில் இருக்கிறது போலீசு.
ஓட்டுக்கட்சிகளும், ஊடகங்களும் ஒரு தரப்பாக அரசையும் அணு உலையையும் ஆதரித்து நிற்கும் இந்த சூழலில், கூடங்குளம் மக்கள் போராட்டத்தை ஆதரித்துக் குரல் கொடுப்பதும், அடக்குமுறையைத் தடுத்து நிறுத்துவதும் நம் கடமை.
சொந்த நாட்டு மக்கள் மீது போர் தொடுக்காதே!
கூடங்குளத்தை முற்றுகையிட்டிருக்கும் கொலைகாரப் போலீசு படைகளைத் திரும்ப பெறு!
அணு உலையை எதிர்ப்பது மக்களின் உரிமை!
கூடங்குளம் அணு உலையை மூடு!
_____________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- கூடங்குளம்: தடையை மீறி இடிந்தகரை நோக்கி HRPC வழக்கறிஞர்கள்!
- கூடங்குளம்: இடிந்தகரையில் HRPC வழக்கறிஞர்கள் – நள்ளிரவுக் கூட்டம்!
- இது இடியாத கரை – இடிந்தகரையின் போராட்டக் காட்சிகள் !
- கூடங்குளம்: நாகர்கோவிலில் உதயகுமாரின் பள்ளிக்கூடம் இடிப்பு! படங்கள்!!
- கூடங்குளம்: கைதான மக்களுக்கு திருச்சி, கடலூர் சிறைகளில் நள்ளிரவு வரவேற்பு!
- கொலைக்களமாகுமா கூடங்குளம்? நேரடி ரிப்போர்ட்!
- கூடங்குளம்: அரசுக்கு எதிராகப் போர் தொடுத்த தீவிரவாதிகளில் 30 சிறுவர்கள், 42 பெண்கள்!
- கூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!
- கூடங்குளம்: அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்! அனைவரும் வருக!
- கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய-மாநில அரசுகளின் சதி!
- மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்
- கூடங்குளம்: இலண்டன் ஜி.டி.வியில் மருதையன், சபா.நாவலன் நேர்காணல்!
- அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
- அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!
- கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !
- அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்
- ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன்
- இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
- அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!
- அடிமை ! அடியாள் !! அணுசக்தி !!!
- கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!
- கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!
- கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!
- நெல்லை – கூடங்குளம்…பேரணி, ஆர்ப்பாட்டம் – படங்கள்!