
“சுந்தரபாண்டியன்”’ திரைப்படம் ஒன்றும் நாட்டை ‘திருத்த’ வந்த கருத்து சினிமா இல்லை. அப்படி அவர்களும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் இந்த திரைப்படம் மோசமான பிற்போக்குத்தனங்களையும், அசூசையான பிழைப்புவாதத்தையும் நேர்மறையில் உணர்த்துகிறது. அவற்றை அன்றாட வாழ்க்கையின் இயல்புகள் போல சித்தரிக்கிறது. காமடி, செண்டிமெண்ட் முதலான அதுவும் தேய்ந்து போன அரதப்பழசான காட்சிகளின் ஓட்டத்தில் பார்வையாளர்கள் அதை உணர்வாளர்களா என்பது சந்தேகம்தான்.
சுந்தர பாண்டியன்’ என்ற தலைப்பில் துருத்திக் கொண்டு தெரியும் “பாண்டியன்”’ என்ற சொல், இந்தப் படத்தின் ரசிக இலக்கு யார் என்பதை நமக்கு கோடிட்டுக் காட்ட… திரை விலகி ஆரம்பக் காட்சியிலேயே இது ஓர் அப்பட்டமான தேவர் சாதி படம்’ என்பதை வெளிப்படையாக சொல்கின்றனர்.
“இதுதான் உசிலம்பட்டி”’ என்ற வாய்ஸ் ஓவரில் முத்துராமலிங்க தேவர் பெயர் பலகையுடன் துவங்குகிறது படம். சுவரில் போஸ்டர் ஒட்டும் ஒருவரை “எங்க ஆளுகளை தவிர யாரும் ஒட்டக்கூடாது… போ, போ’” என்று விரட்டிவிடுகிறார் ஒரு வயதானவர். தமிழ்நாட்டில் எவ்வளவோ நடிகர்கள் இருந்தாலும் இவர்களுக்கு பிரபுவும், கார்த்திக்கும்தான் ஸ்டார்கள்’ என்கிறது குரல். இருவரும் தேவர் சாதி நடிகர்கள் என்பது நமக்கு உணர்த்தப்படுகிறது. “தமிழ்நாட்டில் ஆயிர கட்சிகள் இருந்தாலும் இவர்கள் வட இந்திய தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்துவார்கள். நேதாஜிதான் இவர்களுக்குத் தலைவர்”’ என்கிறார்கள். ஃபார்வர்டு பிளாக் பற்றியும் முத்துராமலிங்க தேவர் பற்றியும் நமக்கு நினைவூட்டப்படுகிறது.
“எவ்வளவு பாசக்காரய்ங்களோ, அதே அளவுக்கு கோபக்காரய்ங்க. குலசாமியா நினைச்சு வளர்க்கும் பொண்ணுங்க மனசை காதல், அது இதுன்னு எவனாவது கெடுத்துட்டா என்ன செய்வாங்க தெரியுமா?”’ என குரல் நிறுத்த.. இளைஞர் ஒருவரை கருவேலங்காட்டுக்குள் சுற்றி வளைத்து வெட்டிக் கொல்கிறது ஒரு கும்பல். “குல கவுரவத்த சீண்டுறவனை கருவருக்குற இடம் இதுதான்”’ என்கிறது குரல். எங்க கிட்ட மோதினா இதுதான் கதி’ என்று நமக்கு மிரட்டல் விடப்படுகிறது. சாதித் திமிரே பெருமிதமாக, ஒரு கொலையை நியாயப்படுத்தும் நீதியாக காட்டும் இந்தக் காட்சிகளை உசிலம்பட்டி பற்றிய டாக்குமென்டரி’ என்கிறார்கள் சிலர். ஆனால், இதுதான் உசிலம்பட்டியா? தேவர்கள் மட்டும்தான் உசிலம்பட்டியா?
ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களும் அதே உசிலம்பட்டியில்தான் வாழ்கின்றனர். பாப்பப்பட்டியும், கீரிப்பட்டியும் கூட உசிலம்பட்டிக்கு மிக அருகில்தான் இருக்கின்றன. இவர்கள் யாரும் அந்தக் காட்சியின் வரம்புக்குள் வரவில்லை. தலித்துக்களையும் இதர சாதி உழைக்கும் மக்களையும் கணக்கிலேயே எடுக்காமல் உசிலம்பட்டியின் ஒவ்வொரு அங்குலமும் தேவர் சாதிக்கு மட்டுமே பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டதை போல “இதுதான் உசிலம்பட்டி”’ என்கிறார்கள்.
இதை விட முக்கியமானது.. இந்த சுந்தரபாண்டியன் படமாகட்டும்… இதேபோல அண்மை ஆண்டுகளாக மதுரையை மையப்படுத்தி வந்த மற்ற தேவர் சாதி படங்களாகட்டும்… அனைத்தும் தேவர் சாதிவெறி நடவடிக்கைகளை ஒரு நகைச்சுவையான அழகியலுடன் சித்தரிக்கின்றன. இதை ஒரு ரசனையாகவே மாற்றி வைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். படங்களில் அவரை நல்லவர் என்று நிறுவ வேண்டியதில்லை. ஏனெனில் ரசிகர்களின் மனங்களில் ஆல்ரெடி எம்.ஜி.ஆர் நல்லவராக இருக்கிறார். மிச்சக்கதையை சொன்னால் போதும். அதுபோல கடந்த கால தேவர் சாதி பெருமித படங்கள், அந்த சாதி வெறியை ரசிக்க பழக்கப்படுத்தியிருக்கின்றன. அந்த அஸ்திவாரத்தில்தான் சுந்தரபாண்டியன் எழுந்து நிற்கிறது.
கதாநாயகன் சசிகுமார் அந்த ஊரின் பெரிய குடும்பத்தின் பையன். வேலை வெட்டி எதுவும் இல்லை. நண்பர்களுக்கு உதவுவதையே முழுநேர வேலையாக செய்கிறார். அந்த ஊர் வழியே செல்லும் பேருந்தில் கல்லூரி சென்று வரும் ஹீரோயினை சசிகுமாரின் நண்பர் காதலிக்கிறார். அவருக்கு உதவ இவர் போக… அங்கு ஏற்கெனவே அதே பெண்ணை இன்னொருவர் காதலிக்கிறார். அந்த இன்னொருவர் சசிகுமாரின் நண்பனின் நண்பன். உடனே “நீ ஒரு மாசம், அவன் ஒரு மாசம்”’ என அந்த பெண்ணை காதலிப்பதற்கான வாய்ப்பை நண்பர்களுக்கு ஓப்பன் டெண்டர் விடுகிறார். ஆனால் தன்னை டெண்டர் விட்ட சசிகுமாரையே காதலிக்கிறாள் அந்தப் பெண். பிறகு ஒரு கொலை, அதற்கான பழிவாங்கல்… என்று போகிறது கதை. இதில் நாம் பல விஷயங்கள் பேசலாம் என்றாலும், முக்கியமானது கதாநாயகின் பாத்திரம்.
தன்னை இரண்டு பேர் காதலிக்கிறார்கள். அந்த இரண்டு பேரிடமும் ஆளுக்கு ஒரு மாதம் என தன்னை ஒருவன் ஏலம் விடுகிறான் என்பதை அறிந்ததும் ஒரு பெண்ணுக்கு கோபம் வர வேண்டாமா? சாதி, வர்க்கம், ஆண்&பெண் பேதம் எல்லாம் பிறகு. முதலில் சுயமரியாதையுடன், ‘என்னை ஏலம் விட நீ யாருடா நாயே?’ என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்? ஆனால் கதையின் நாயகியோ, தன்னை ஏலம் விட்டது தெரிந்த பிறகும் சசிக்குமார் மீது கோபப்படவில்லை. மாறாக அவரையே காதலிக்கிறார். காரணம், மூவரில் சசிகுமார்தான் பணக்காரர் என்பதாலா? சுயமரியாதை இழிவுபடுத்தப்படுவதை ஏற்கும் இந்த பெண்தான் நாயகி. செய்பவன் நாயகன்.
“யார் மீது காதல் வரும் என்று எப்படி சொல்ல முடியும்?”’ என்று கேட்கலாம். எனில் மற்ற இருவரையும் நிராகரித்துவிட்டு, சசிகுமாரை ஓ.கே. செய்வதற்கு கதைப்படி எந்த தர்க்க நியாயமும் இல்லையே?! அதுபோலவே, தனக்கு யார் மீது காதல் இருக்கிறது என்பதை அந்த பெண்தான் முடிவு செய்ய வேண்டும். சசிகுமாரோ, தனது நண்பர்களில் ஒருவரை காதலிக்குமாறு கட்டாயப்படுத்துகிறார். “பயலுகளை பின்னாடி சுத்த விடுறதுல உங்களுக்கு ஒரு சந்தோஷம்”’ என்ற தொனியில் கதாநாயகியை பார்த்து சசிகுமார் பேசும் வசனத்தை வேறு பல படங்களிலும் கேட்டிருக்கிறோம். ஆனால் கதாநாயகன்தான் வேலை வெட்டி இல்லாமல் எல்லா படங்களிலும் பல பெண்களின் பின்னால்தான் சுற்றுகிறான்.
பொறுக்கித்தனத்தை ஹீரோயிசமாக முன்னிருத்தும் தமிழ் சினிமா ஃபாமுலாவில் இருந்து துளியும் மாறாமல் இருக்கிறது சசிகுமாரின் பாத்திரம். நாம் அனைவரும் வேலைபார்த்துதான் வாழ்கிறோம். சுந்தரபாண்டியன் படத்தை பார்க்கும் ரசிகர்களும் ஏதோ ஒரு வேலை பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் படத்தின் கதாநாயகனுக்கோ எந்த வேலைவெட்டியும் இல்லை. எந்த வேலையுமே இல்லாமல் ஒருவன் எப்படி இருக்க முடியும்? இருக்கிறான். நாமும் அதை ஏற்றுக்கொள்கிறோம். அவருக்கு மட்டுமில்லை… சசிகுமாரின் நண்பர்களுக்கும் வேலை இல்லை. அவர்கள் வேலை பார்ப்பது போல் ஒரு காட்சி கூட இல்லை. அவர்களின் வேலை எல்லாம் டீக்கடையில் அமர்ந்துகொண்டு பெண்களை கிண்டல் செய்வது, பேருந்தில் வரும் பெண்களை சைட் அடிப்பது, காதலில் கஷ்டப்படும் நண்பர்களுக்கு உதவுவது… இவைதான்.
இதில் அப்புக்குட்டியின் கதாபாத்திரம் தோற்றத்தை வைத்து மோசமாக கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது. குட்டையான, குண்டான, கருப்பான அப்புக்குட்டி மாதிரியான ஆண்கள், அழகிய’ பெண்களை கனவில் கூட நினைத்துப் பார்ப்பது தப்பு என்கிறார் இயக்குநர். இங்கும் இயக்குநருக்கு கை கொடுப்பது முந்தைய ‘எம்.ஜி.ஆர் உதாரணம்’தான். “அழகற்ற அசிங்கமான ஆண்கள் அழகான பெண்களை விரும்புவது கிண்டலுக்குரியது”’ என்பது ஏற்கெனவே ரசிக மனதில் பதிந்திருப்பதால் இயக்குநர் அதை பயன்படுத்தி அந்த கிண்டலை வில்லத்தனமாக மாற்றுகிறார். இதனால் அப்பு குட்டி போன்ற தோற்றத்தில் ‘அழகில்லாதவர்கள்’ குரூர குணம் கொண்டவர்களாக இப்படம் உணர்த்துகிறது. ஆனால் தான் காதலிக்கும் பெண்ணுக்காய் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடும் அப்புக்குட்டி வில்லன் என்றால் ஒரு காலத்தில் காதலித்த பெண்ணை மற்ற இருவரிடமும் ஏலம் விடும் சசிகுமார் யார்?
அக்காவையும், தங்கையையும் ஒருசேர திருமணம் செய்துகொண்டவர் சசிகுமாரின் அப்பா. வழக்கொழிந்து போய்விட்ட இருதார மணம் எந்த விமர்சனமுமின்றி அழகியல் அம்சமாக காட்டப்படுகின்றது. கதைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத இந்த காட்சி எதற்கென தெரியவில்லை. ஒருவேளை ஊரில் உள்ள பெண்களை எல்லாம் கிண்டல் செய்து திரியும் சசிகுமாரின் பாத்திரத்தை நியாயப்படுத்த அப்பாவையும் அதேபோல மைனர் குஞ்சுவாக அமைத்திருக்கிறார்களோ என்னவோ… ஆனால் இந்த மைனர் குஞ்சுகள் படத்தில் நெஞ்சு நிமிர்த்திய கனவான்களாக வரும்போதுதான் சகிக்க முடியவில்லை.
சசிகுமார் பாத்திரம் திருமணம் ஆன, ஆகாத முறைப் பெண்களை தொடர்ச்சியாக கிண்டல் செய்கிறது. இப்படிப்பட்ட காட்சிகளை இப்போதும் நாம் கிராமங்களில் காணலாம். ஆனால் அந்த முறைப்பையன்கள் யாரும் அந்த முறைப்பெண்களை திருமணம் செய்துகொள்வது இல்லை. கிண்டல் செய்வதற்கு மட்டும் அவர்கள்.. திருமணம் செய்துகொள்ள தங்கள் வசதிக்கு ஏற்ற வேறு பெண்கள்… என காரியவாதமாக பிரித்துக் கொள்கிறார்கள். சுந்தரபாண்டியனிலும் அப்படித்தான். ‘மாமா, மாமா’ என்று சசிகுமாரையே சுற்றி வரும் பக்கத்து வீட்டுப் பெண்ணை கிண்டல் செய்யும் எல்லையில் நிறுத்தி வைக்கும் சசிகுமார், தன் சொந்த சாதியில், தனக்கு இணையான வசதியில் உள்ள பெண்ணையே திருமணத்துக்கு தேர்ந்தெடுக்கிறார்.
எந்த விழுமியங்களுமற்ற நட்பு, காரியவாதமான காதல், பெண்களை அசிங்கப்படுத்தும் பாத்திரப் படைப்பு, தோற்றத்தை வைத்து கீழ்மைப்படுத்தும் வக்கிரம், சாதித் திமிர் என அனைத்து வகையான பிற்போக்குத்தனங்களையும் சிறு விமர்சனமும் இல்லாமல் நேர்மறையில் அணுகும் இந்தப் படத்தை சிலர் பயங்கர ஜாலியான படம் என்கிறார்கள். வலையுலகிலும், சமூக வலைதளங்களிலும் குடும்பத்துடன் இந்தப் படத்தை பார்க்கச் சொல்லி பரிந்துரைக்கின்றனர்.
அவர்களிடம்…. இதே கதையை இப்படி எடுக்க முடியுமா என்று பாருங்களேன்… ‘இதுதான் பரமக்குடி…’ என்று வாய்ஸ் ஓவர் துவங்குகிறது. இமானுவேல் சேகரன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. தேவர் படம் போட்ட போஸ்டர் ஒட்ட வரும் இளைஞர்களை ‘ஏம்பா.. யாருப்பா இங்கே போஸ்டர் ஒட்டுறது.. எங்க ஆளுக மட்டும்தான் ஒட்டனும்’ என்று ஒரு பெரியவர் விரட்டிவிடுகிறார். படம் நெடுக காட்டப்படும் தேவர் குறியீடுகளுக்கு மாற்றாக அம்பேத்கர், இமானுவேல் சேகரன் படங்கள் காட்டப்படுகின்றன. ஒரு பெண், திருமணம் ஆன/ஆகாத தன் முறை பையன்களை எல்லாம் கிண்டல் செய்கிறாள். சாத்தியமா இவை எல்லாம்? கிரியேட்டரின்’ மூளையே இந்த சிந்தனையை சுய தணிக்கை செய்துவிடும். அதை மீறி வெளியே வந்தால் தணிக்கைத்துறை தாளித்துவிடும்.
உசிலம்பட்டி பற்றி வரும் துவக்கக்காட்சியை அப்படியே கத்தரித்துவிட்டாலும் படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அந்தக் காட்சியை வலுக்கட்டாயமாக திணித்து, “இது அசல் தேவர் சினிமா”’ என்று உணர்த்தி, குறைந்தப்பட்ச சந்தையை பிடிக்கிறார்கள். ஆகவே சுந்தரபாண்டியன் மற்றுமொரு குடும்பப்படம் அல்ல. இது ஒரு திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஆபத்தான அழுக்கான சினிமா! மதுரை வழக்கில் மயங்கியவர்கள் அந்த அழுக்கின் வீச்சை உணரவேண்டும்.
___________________________________________________
– வளவன்
கார்டூன் – ரவி
______________________________________________

Arumai.. more parallel thinking..
படம் பக்கபொன அதுல இருக்ர நல்லத விட்டுடு ஏன்ப்ப இங்க வநுட்து ஜாதி பிரட்ஷனைய எடுக்ரிங, அந்த பாடதுல எங்க வாவது ஜாதிய பத்தி பெசுனஙல….
தேவர் ஜாதிய பிடிக்கதவன் எலுதுர வெல……இது உருல நடக்குர உன்மய சொன்ன ஜாதியா பத்தி பெசுரங…..
உன் ஜாதிய பத்தி சொல்லனும்னா உன் காச செலவுபன்னி படம் எடு….
அடுத்தவன் ஜாதிய குரைவா பெசுரத விட்ட்டு உன் ஜாதி அலுங்கல உயர்தத என்ன வழின்னு பாருப்பா தம்பி …….
தேவர் ஜாதி ஒன்னும் சாதர்ன ஜாதி கெடையது….. அப்பவெ நாட்டுக்காக போரடிய முதல் ஜாதி,,, அப்பவெ நாட்டுக்காகத்தான் பொரடினங,,, ஜாதிக்கக அல்ல தம்பி…..
ஏப்பவும் நென்சுல இரமுல்ல ஜாதி,,,,நட்ப்புக்காக உயிர கொடுக்ர ஜாதி தேவர் ஜாதி…
நீங்க சொன்னது எந்த படத்துல வரும் தலிவா…. உங்க இரக்கத்ததான் மேலவளவிலயும், கீரிப்பட்டியிலுமே பார்த்தோமே….
கருப்பன் – இரக்கம் இருந்தாலும் குத்தோம் ! இல்லனாலும் குத்தோம்! இதுக்குதான் ஒதிக்கி வச்ச்சானுங்க..
//இதுக்குதான் ஒதிக்கி வச்ச்சானுங்க..//
மருத நில வேந்தன், பாலை நில மறவனை ஊருக்குள்ளேயே நுழைய விடாமல் ஒதுக்கி வைத்திருந்தானே…அது போலவா?
நீயா ஒரு கதை எழுதி அப்பப்ப நீயே ஒப்பித்தால் என்ன அர்த்தமோ..!! கூடிய சீக்கரத்தில் கிழ்பாக்கத்தில் உள்ள உன் அண்ணண் தம்பிகளோடு சேர்ந்து விடுவாய் எனநினைக்கிறேன்.
கமெண்ட்டு 80க்கு நீங்க பதில் சொல்றதை பொறுத்து தான் யார் புளுகிகிட்டு திரியிறா என்பது தெரியும்.
அந்த ஊர் தொகுதிகளை “reserved for dalit ” என்று உங்கள் சாதிகாரர்கள் மட்டும் தான் நிற்க வேண்டும் என்று அரசு கூறுவது சரியா? மேலவலவிலும் கீரிபட்டியிலும் எல்லா சாதிக்காரனும் போட்டியிடுமாறு ஒரு பொதுவான தேர்தல் நடத்தி ஜெயித்துக்காட்டுங்கள் அப்போது உங்கள் வீரத்தை பார்க்கலாம்.
சுண்டு விரலை நீட்டி ஆட்சி அமைக்கிறதே நீங்க தான்னு தியாகு சொல்றாரு…..!!! ஆட்சியே நீங்க தானே….? செய்ய வேண்டியது தானே…? அப்புறம் ஏன் இங்க வந்து ஒப்பாரி…?
சுட்டு விரலை நீட்டியவன் மட்டுமே அதிகாரத்தில் இருக்கவைத்தோம்! இருக்கவைப்போம்! அந்த சரித்திர காரியங்கள் நடபெறவாத போதே மேலவளவு,கீரிப்பட்டி,நாட்டாமங்கலம தஞ்சை பகுதியில் சில தரித்திரிய காரியங்கள் எதிர்பாராத விதமாகவே நடக்கின்றன.
உங்கள் சலுகைகளை உதறிவிட்டு வாருங்கள் தோழர்களே…சலுகை கொடுத்தே அளுமைக்கும் அதிகாரத்திற்கும் வரயியலாத போது…உங்கள் சலுகைகளை உதறிவிட்டு வாருங்கள் தோழர்களே…
ஒரு படத்தில் விவேக்குக்கு இருக்கும் சூப்பர் பவர் மாதிரியா தியாகு…
சுண்டு விரல் காட்டபடும் நபரே அதிகாரத்திற்கு வரவைத்தோம்! வரவைப்போம்!இது சரித்திரம்
அப்படி இந்திய அரசியல் சட்டம் முரன்டு பிடித்து முறுக்கிக்கொண்டுநிற்கும் போதுதான்..மேலவள்வு,கீரிப்பட்டி,நாட்டார்மங்கலம் மற்றும் தஞ்சை பகுதியில் இப்படி தரித்திரம் நடக்கிறது!
சகமனிதனாய் உங்களை நேசிக்கிறோம்! மனிதாபிமான அடிப்படையில் உங்களை அரவனைக்கிறோம்.. ஆனால் சாதீயம் பேசினால்..நீங்கள் உங்கள் அளுமையை காட்டவேண்டும்???
சலுகைகள் கொடுத்தே வராத அளுமை எதற்கு?
உங்கள் சலுகைகளை உதறிவிட்டு வாருங்கள் தோழர்களே…
//சுண்டு விரல் காட்டபடும் நபரே அதிகாரத்திற்கு வரவைத்தோம்! வரவைப்போம்!இது சரித்திரம்//
வெறும் 96 லட்சம் பேரு (பார்க்க கள்ளர் விக்கிபீடியா) …அதுல ஒட்டு போட தகுதி உள்ளவங்க……கிட்டத்தட்ட 40 லட்சம் பேரு…அதுலயும் ஒட்டு போடுறவங்க…..28 லட்சம் பேரு…..!!! நீங்க தான் சுண்டு விரல் காட்டி ஆட்சியை அமைக்கிரீன்களா….?
நீங்க இன்னைக்கு இருக்கிற கன்னட ஆட்சியையும், தெலுங்கன் ஆட்சியையும் கணக்கில் கொண்டு பேசுவதே தாறு….!!! திருபவும் சொல்றேன்…உங்க மக்கட் தொகை எவ்வளவு என்று நான் சொல்லல….உங்க ஆளுங்க சொன்னது தான்….!!!
//சகமனிதனாய் உங்களை நேசிக்கிறோம்! மனிதாபிமான அடிப்படையில் உங்களை அரவனைக்கிறோம்.. ஆனால் சாதீயம் பேசினால்..நீங்கள் உங்கள் அளுமையை காட்டவேண்டும்???//
என்ன திடீர் ஞானம் தியாகு…?
//சலுகைகள் கொடுத்தே வராத அளுமை எதற்கு?//
நீங்க ஏன் சலுகை சலுகை என்று பேசுறீங்கன்னு புரியல…?
* நான் வீழ்த்தப்ப்ட்டேன். எனவே என்னுடைய உரிமையை மீட்டெடுக்க எனக்கு இருக்கும் ஒரு ஆயுதம் சலுகைகள் என்று என்னால் சொல்ல முடியும்.
* ‘நாங்கள் களவை குலத்த் தொழிலாக செய்து வந்துள்ளோம். அதனால் அதை மீட்டெடுக்க எனக்கும் சலுகை வேண்டும்’ என்று உங்களால் சொல்ல முடியுமா?
//‘இதுதான் பரமக்குடி…’ என்று வாய்ஸ் ஓவர் துவங்குகிறது. இமானுவேல் சேகரன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. தேவர் படம் போட்ட போஸ்டர் ஒட்ட வரும் இளைஞர்களை ‘ஏம்பா.. யாருப்பா இங்கே போஸ்டர் ஒட்டுறது.. எங்க ஆளுக மட்டும்தான் ஒட்டனும்’ என்று ஒரு பெரியவர் விரட்டிவிடுகிறார். படம் நெடுக காட்டப்படும் தேவர் குறியீடுகளுக்கு மாற்றாக அம்பேத்கர், இமானுவேல் சேகரன் படங்கள் காட்டப்படுகின்றன. ஒரு பெண், திருமணம் ஆன/ஆகாத தன் முறை பையன்களை எல்லாம் கிண்டல் செய்கிறாள். சாத்தியமா இவை எல்லாம்? கிரியேட்டரின்’ மூளையே இந்த சிந்தனையை சுய தணிக்கை செய்துவிடும். அதை மீறி வெளியே வந்தால் தணிக்கைத்துறை தாளித்துவிடும்.//
அருமையாக சொன்னீர்கள் தோழரே…. பல பேருக்கு அடி சுருஙுகிறது படத்தை பார்த்து…. 🙂
/// இளைஞர் ஒருவரை கருவேலங்காட்டுக்குள் சுற்றி வளைத்து வெட்டிக் கொல்கிறது ஒரு கும்பல். “குல கவுரவத்த சீண்டுறவனை கருவருக்குற இடம் இதுதான்”’ என்கிறது குரல். எங்க கிட்ட மோதினா இதுதான் கதி’ என்று நமக்கு மிரட்டல் விடப்படுகிறது. ///
அடப்பாவிகளா! இவ்வளவு அப்பட்டமாகவா கவுரவக் கொலையை நியாயப் படுத்துகிறார்கள்? இதைப் பிரபலப் பதிவர்கள், விகடன் விமர்சனக் குழு போன்றவர்கள் தமது விமர்சனங்களில் குறிப்பிடவே இல்லையே!
அது ஒரு கூலிப்படை அது தேவர் சாதியை சேர்ந்த சசிகுமாரையும் கடைசியில் தாக்கும்.
ஒரு படத்தில் rowdyism காண்பித்தால் உடனே rowdyism தை நியாயப்படுத்தவது என்றாகிவிடாது.
அட பீத்தரப் பயலுகளா! இந்த மதுரை தேனி எரியால இருந்து வர்ற டைரக்டருங்களுக்கு வேற ஒரு _______ தெரியாதா? உசிலம்பட்டி ஆண்டிப்பட்டி எல்லாம் பெரிய அமெரிக்க கனடா மாதிரி நெனச்சு படம் புடிச்சு காட்றது, ஹீரோவ அருவா தூக்கிட்டு சாதிய பத்தி பன்ச் டயலாக்கு பேச வெக்கறது அப்பறம் அவுனுங்க குல பெருமை மண்ணாங்கட்டி எல்லாம் தம்பட்டம் அடிக்கறது… எதுக்குடா இந்த வேல? நான் இன்னும் படம் பாக்கல, சுந்தர பாண்டியன்னு பேர பாத்ததும் நெனச்சேன் இது ஒரு கழிசடையா தான் இருக்கும்னு. அந்த ஊரு ஆளுங்க தான் வீரம், கவுரவம், பண்பாடு எல்லாம் கண்டு புடிச்சவுனுங்க மாதிரி எல்லா படத்திலும் பில்டப்பு, இவனுங்க என்ன வேல பாக்கரானுங்கனு மட்டும் காட்ட மாட்டனுங்க ஏன்னா புல் டைம் சாதி சண்ட போடறதுதான வேலையே. வினவு ஆரம்ப காட்சி போஸ்டர் ஓட்டுவது பத்தி சொல்றது சரிதான், ஆனா படத்த பரமக்குடில எடுக்கறத பத்தி வினவு சொல்றது சரியில்ல, இனி இத வச்சு எத்தன பேர் கமென்ட் போடுவானுங்கன்னு பாருங்க. உண்மையில் தில் இருந்தா இயக்குனருங்க அங்க நடந்த துப்பாக்கி சூடு பத்தி படம் எடுக்கட்டும், பாராட்டலாம்.
வினவு ஒரு ஜாதீ மட்டும் உயர்வாக எழுதிகிரது ….you are not good writer ..very shame to read your all news. Give respect to all..
எந்த சாதிய வினவு உயர்திட்டாங்கனு சொல்லுரீங்க?
”எந்த” சாதியை ”உயர்த்தி” பேசுனது
உங்களுக்கு பிடிக்கவில்லை?
என்னிக்காவது இதன் அர்த்தம் என்னனு யோசிச்சிரிக்கீங்களா ராஜ்குமார்…. இன்னும் தமிழக கிராமங்களில் உங்க ரெஸ்பெக்ட்டில் “பீ” நாத்தம் அடிக்கிறது.
There are many thevar films,even before this.Some examples apart from Thevar Magan/Virumandi:
1. Vishal song mannarkudi kalakalakka
2. Many Vishal movies set in rural background like sandakozhi rajkiran character,even
malaikottai
3. Veyil by vasantabalan,Kadhal by Balaji Sakthivel
And if that paramakudi movie is made,then Vikram will be the perfect hero,his father is christian devenderar & mother is thiagarajan;s wife’s sister and she is maravar.
Prashanth is maravar too.
எந்த ஒரு ஜாதியையும் வினவு உயர்வாக சொல்லவில்லை. it says, OPEN YOUR EYES AND SEE THE WORLD… it confirms the saying, MISTRUST THE OBVIOUS. good work VINAVU
வந்துடாரப்பா..! ஒரு சைடா தீர்ப்பு சொல்ற நாட்டாமை!
இல்லை கதிரவன், வினவு உங்கள் தலித் சாதிக்காரனுக்கு மட்டும் தான் எப்போதும் ஆதரவாக பேசும். மற்ற சாதிக்காரன் நல்லது செய்தாலும் அதை நொள்ளை சொல்ல்வது தான் வினவு அட்மின் ற்கு வேலை
நீங்க உங்க தரப்பு நியாயத்தை, ‘வினவு’ மாதிரி வெளிப்படையா விவாதிக்கும் தகுதியோடு, எழுதிவைத்து விட்டு அங்கே பேசலாமே…..!!!
இவ்வாறானவர்களை கலைஞர் என்பதும் அவர்களுக்கு தேசிய விருது வழங்குவதும் மிகவும் கேவலமானவன் செய்யும் விடயம். இதில் சசிகுமார் சிலோனைப் பற்றி வேறு அளக்கிறார். பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல். எமது பிரச்சினைகளை உன் வணிகத்திற்கு கதையாக்கி அதை விளம்பரப்படுத்தி எங்களை கேளிக் கூத்தாடாதே…
Nasty caste lovers
Very good article vinavu.
உயர்சாதி ஆதிக்கட்தை விட்டுக்கொடுக்காத சினிமாத்தனங்கள்க்கு சசிக்குமாரும் விதி விளக்கல்ல என்பதற்கு உதாரணமாகத்தான் இத்திரைப்படமா …இதுதான் உசிலம்பட்டி மக்களின் எதார்த்த வாழ்வியலா…உசிலம்பட்டியை மையமிட்டு மட்ற கதைக்களண்கள் இல்லையா…அவ் ஊரின் அடித்தட்டு மக்கள்ன் வாழ்வியலை எந்தத் திரைப்படமாவது பதிவு செய்ததுண்டா…இதை உணர்வாரா சசி…
இந்தத்திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது பக்கத்தில் இருந்த என்நண்பர் …இவர்கள் எல்லாம் சமுக மாற்றத்திற்கு உதவவெ மாட்டார்களா என்றான்…(அவன் மறவரினத்தைச் சார்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது)
ஒருத்தர் சமூக மாற்றத்தை விரும்பினால் அவன் என்ன சாதி என சிந்திக்கிறியே
சமுக மாற்றத்திற்குத் தயாராகும் சிலரையும் இவ்வாறன படஙகள் மடைமாற்ற முயற்சிக்கின்ற பொக்கை சுட்டிக்காட்டவெ………
இரண்டரை மணிநேர படம் தன்னை மாற்றிவிடும் அளவிற்குதான் தமிழக சிந்தனை வாதிகள் இருக்கிறார்களா..?
ஒருவன் இரண்டு மணிநேர படத்திற்கே மாறக்கூடிய சிந்தனை உள்ளவன் எனில் சமூகமாற்றதிறன் அவனுக்கில்லை..!!
இங்கு அவனாக ஆராய்ந்து உணர்ந்து மாறினால் ஒழியே சமூக மாற்றுத்திறன் வர க்வாய்ப்பேயில்லை.>!!!
வேண்டுமென்றால் நாம் இருவரும் இப்படி வலைதள்த்திலே விவாதித்துக்கொண்டே இ ரு க் க லா ம்….!
நம்ம பேச்சை நாமே கேதாத பொழுது வேறு யார் கேட்பார்..!!
சாதி வெறி திரைபடத்தை விமர்சித்தால் உனக்கு ஏம்ப்பா வேர்க்குது ….? ? ?
குண்டா சட்டியிலேயே குதிரை ஓட்டாம..! கொஞ்சம் வெளியில வந்து உலகத்த பாருங்கனு சொல்றேன்.. இன்னும் எந்தன காலத்துக்குதான் கிணத்து தவளையா இருப்பீங்களோ..!!
ஏன் வேர்க்குதுனு கேக்குரீங்க…!! மின்சாரம் இல்லாம வெயில குளுரவா செய்யும்…
மின்சார பிரச்சனை தீர்க்க இவ்வளவு பெரிய இந்தியாவினால் உதவ முடியல…
இவனுங்க என்னானா … சினிமால ஜாதிய சொல்லுறாங்கானு பேதி போய்கிட்டு இருக்காங்க…!
அடபோங்கப்பா…
நீங்கள் கூறியது போல் “பரமக்குடி ” கதையாக எடுத்திருந்தால் தங்களுடைய விமர்சனம் இப்படி இருந்திருக்குமா ? தங்களுடைய கருத்து எப்படி இருக்கிறது என்றால் சாதிய படமே எடுக்ககூடாது என்ற நோக்கில் இல்லாமல் அந்த சாதியை பற்றி எடுத்தால் இந்த சாதியை பற்றியும் எடுக்க வேண்டும் என்பது போலதான் உள்ளது ….
சாதிய படங்கள் வெண்டும் என்பது என் வாதமல்ல நண்பா…அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யக்கொருகிரென்…
பரமக்குடியை பற்றி படம் எடுத்தால் ‘வினவு’ சிக்னலில் நின்று ஆதிக்க சாதிகளிடம் தகர டப்பாவை குலுக்கி தயாரிப்பாளருக்கு பணம் வசூலிக்கவேண்டியட்குதான்
பண்ணைப்புரத்தில் விவசாயிகள் விடுதலை முண்ணனி என்ற அமைப்பின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களும், ஆதிக்க சாதியில்(கள்ளர்)முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும் இணைந்து நடத்திய தனிக்குவளைக்கெதிரான போராட்டம்.
https://www.vinavu.com/2008/11/19/cas4/
இந்த கட்டுரை தலைப்பே ஒரு ஜாதி தாழ்தி எழதி எருக்கு….
Suuuper appu
இந்த வினவு க்கு இது தான் வேலை. சட்டக்கல்லூரி யில் தலித் மாணவர்கள் தேவர் சாதி மாணவனை தாக்கியதை நியாயப்படுத்துவார் ஆனால் ஒரு பொழுதுபோக்கு படத்தை எதிர்பார் இந்த சாதி வெறி பிடித்த இணையதளம். இது விரைவில் அழிவது நிச்சயம்.
உங்கள மாதிரி ” நல்லவங்க” சாபம் சத்தியமா பலிக்காது…. நிறைய சாபம் குடுங்க……
திரைப்படத்தை வாழ்வின் யதார்த்தங்களுடன் இப்படி ஒப்பிட்டு விமர்சனம் எழுதுவதே சரியான முறையாகும். பொழுது போக்கிற்க்குதானே என்று விடாமல் நம் மீது திணிக்கப்படும் இத்தகைய சமூக மீறல்களை கண்டித்திருப்பது பாரட்டத்தக்கது.
வீரம் – ஒரு இழி உணர்ச்சி !
காமெடி பண்ணாடதிஙக..neenga solra maari eduthirunda padatha neenga mattum than pakka mudiyum. unga orutharukaga yaralayum padam eduka mudiyadhu.
Nice post.
many of them said that movie is good to see but they have not understand about the internal things.
சாதிப் பெருமை தூக்கிப்பிடிக்கப் பட்டிருப்பதும், கௌரவக் கொலைகள் மிகவும் ஆபத்தான வகையில் நியாயப்படுத்தப்பட்டிருப்பதும் உண்மை தான். அதைச் சுட்டிக் காட்டுவது சரி. ஆனால், அதற்காக ஒட்டுமொத்தக் கதையின் போக்கையும் தவறான பார்வையில் விமரிசிப்பது நடுநிலையன்று. திரைப்பட இரசனைக்கும் உதவாது.
//கதையின் நாயகியோ, தன்னை ஏலம் விட்டது தெரிந்த பிறகும் சசிக்குமார் மீது கோபப்படவில்லை. மாறாக அவரையே காதலிக்கிறார். காரணம், மூவரில் சசிகுமார்தான் பணக்காரர் என்பதாலா?//
கதைத் தலைவனின் நற்குணங்களாகக் காட்டப்படுபவை மூலம் கதைத் தலைவி ஈர்க்கப்படுகிறார் என்று படத்தில் தெளிவாகவே காட்டப்படுகிறது. தவிர, பள்ளி வயதில் கதைத் தலைவன் காதலைச் சொன்ன போதே அவர் மேல் சிறு ஈர்ப்பு இருந்ததும் பின்வரும் காட்சியில் விளக்கப்படுகிறது. இதற்காகக் கூட கோபப்படாமல் இருக்கலாம். கதைத் தலைவியின் காதலுக்குப் பணம் ஒரு காரணமாக எங்குமே சுட்டப்படவில்லை. கதைத் தலைவியில் அப்பா காதலை ஏற்றுக் கொள்வதற்கு வேண்டுமானால் இது ஒரு காரணமாகச் சுட்டப்படுகிறது (ஊரில் பெரிய குடும்பம்..), ஆனால், இது வழக்கமாக எல்லா அப்பாக்களும் செய்வது தான்.
//எந்த வேலையுமே இல்லாமல் ஒருவன் எப்படி இருக்க முடியும்? இருக்கிறான். நாமும் அதை ஏற்றுக்கொள்கிறோம். அவருக்கு மட்டுமில்லை… சசிகுமாரின் நண்பர்களுக்கும் வேலை இல்லை. அவர்கள் வேலை பார்ப்பது போல் ஒரு காட்சி கூட இல்லை. அவர்களின் வேலை எல்லாம் டீக்கடையில் அமர்ந்துகொண்டு பெண்களை கிண்டல் செய்வது, பேருந்தில் வரும் பெண்களை சைட் அடிப்பது, காதலில் கஷ்டப்படும் நண்பர்களுக்கு உதவுவது… இவைதான்.//
வேலை செய்யாமல் ஊர் சுற்றும் இளைஞர்களே ஊரில் இல்லை என்கிறீர்களா? சாதிச் சாயம் இல்லாத எத்தனையோ படங்களில் இது போன்ற பாத்திரப் படைப்புகள் இல்லவே இல்லையா?
//இந்த நண்பர்கள் குழாமில் மரப்பட்டறை வைத்திருக்கும் ஒருவரும், யூனிஃபார்ம் அணிந்திருப்பதன் மூலம் அப்புக்குட்டியும் வேலைசெய்வதாக காட்டப்படுகிறது. ஆனால் கதைப்படி அவர்கள் ‘கெட்டவர்கள்’!//
மரப்பட்டறை வைத்திருப்பவர் அப்பாவியாகத் தான் காட்டப்படுகிறார்.
//இதில் அப்புக்குட்டியின் கதாபாத்திரம் தோற்றத்தை வைத்து மோசமாக கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது. “அழகற்ற அசிங்கமான ஆண்கள் அழகான பெண்களை விரும்புவது கிண்டலுக்குரியது”’ என்பது ஏற்கெனவே ரசிக மனதில் பதிந்திருப்பதால் இயக்குநர் அதை பயன்படுத்தி அந்த கிண்டலை வில்லத்தனமாக மாற்றுகிறார்.//
காதலைச் சொல்லவே தயங்கி நிற்கும் துணிவில்லாத ஆண்களை எப்படி காதலிக்க முடியும் என்று தான் கதைத் தலைவி கேட்கிறாள்
//அக்காவையும், தங்கையையும் ஒருசேர திருமணம் செய்துகொண்டவர் சசிகுமாரின் அப்பா. வழக்கொழிந்து போய்விட்ட இருதார மணம் எந்த விமர்சனமுமின்றி அழகியல் அம்சமாக காட்டப்படுகின்றது. கதைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத இந்த காட்சி எதற்கென தெரியவில்லை. //
சசிக்குமார் தலைமுறையில் இரு மனைவி வழக்கு இருப்பதாக காட்டவில்லையே? அவரது அப்பா தலைமுறையில் தானே காட்டுகிறார்கள்? அந்த வழக்கு இருக்கத்தானே செய்கிறது? அக்கா, தங்கை இருவரும் சேர்ந்து ஒரு பிள்ளையைப் பெற்றுவிட்டு எனும்போதே அதற்கான காரணம் தெரிகிறதே? இது போன்ற மணங்களில் ஒன்று அக்கா பிள்ளை இல்லாமல் இருப்பதால் தங்கையைக் கட்டிக் கொள்வார்கள். அல்லது, அக்காவுக்கு உடல்நிலை மோசமாகி இறப்பது போன்ற தருவாயில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள தங்கையை கட்டி வருவார்கள். இதைப் போன்ற எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் எங்கள் ஊர்ப்புறங்களிலேயே உள்ளது. இதைச் சரி என்று நியாயப்படுத்தச் சுட்டவில்லை. ஆனால், கதையில் வழக்கில் உள்ளதைத் தான் காட்டி உள்ளார்கள். ஒரு வேளை, நாட்கள் கழித்து தங்கைக்குப் பிறந்த குழந்தையாக இருந்தால், அதுவே கூட அவர் செல்லப்பிள்ளையாக காட்டுப்படுவதற்கான காரணமே.
//ஊரில் உள்ள பெண்களை எல்லாம் கிண்டல் செய்து திரியும் சசிகுமாரின் பாத்திரத்தை நியாயப்படுத்த //
முறைப்பெண்களையே கேலி செய்வதாக காட்டி உள்ளார். பேருந்தில் உள்ள மற்ற பெண்களைக் கண்ணியமாக நடத்த மற்றவர்களை ஒழுங்குபடுத்துமாறே காட்டப்படுகிறார்.
//ஆனால் அந்த முறைப்பையன்கள் யாரும் அந்த முறைப்பெண்களை திருமணம் செய்துகொள்வது இல்லை. கிண்டல் செய்வதற்கு மட்டும் அவர்கள்.. திருமணம் செய்துகொள்ள தங்கள் வசதிக்கு ஏற்ற வேறு பெண்கள்… என காரியவாதமாக பிரித்துக் கொள்கிறார்கள்.//
பெண்களைப் பருவமெய்திய வெகு சில ஆண்டுகளில் பள்ளி / கல்லூரி படிப்பு முடிந்த உடனே மணம் செய்து விடுகிறார்கள். அதே வயதில் உள்ள ஆண் குடும்பப் பொறுப்புகளைக் கவனித்து முடித்து 30 வயது அண்மிக்கையில் தான் திருமணம் செய்ய முடிகிறது. 35 வயதைத் தாண்டி குடும்பத்துக்கு உழைக்கும் ஆண்களும் உண்டு. அது வரை பெண்ணைப் பெற்றோர் காத்திருப்பதில்லை. ஆணுக்குத் திருமண நேரம் கூடி வரும் போது திருமண வயதில் உள்ள முறைப்பெண்களுக்கு இன்றளவும் முன்னுரிமை தரப்படுகிறது. உறவுப் பெண் புகுந்த வீட்டில் மாமியார், மாமனாருடன் ஒப்புறவாக இருப்பார் என்பதே இதற்கு முக்கிய காரணம்.
// ‘மாமா, மாமா’ என்று சசிகுமாரையே சுற்றி வரும் பக்கத்து வீட்டுப் பெண்ணை கிண்டல் செய்யும் எல்லையில் நிறுத்தி வைக்கும் சசிகுமார், தன் சொந்த சாதியில், தனக்கு இணையான வசதியில் உள்ள பெண்ணையே திருமணத்துக்கு தேர்ந்தெடுக்கிறார்.//
கதைத் தலைவி பள்ளி வயதில் இருக்கும் போது யாரென்றே தெரியாமல் தான் காதலைச் சொல்கிறார். பிறகு காதல் வந்த பிறகும் எந்த வீட்டைச் சேர்ந்தவர் என்று தெரியாமல் தான் அவரது ஊருக்கே போகிறார்.
//எந்த விழுமியங்களுமற்ற நட்பு, காரியவாதமான காதல், பெண்களை அசிங்கப்படுத்தும் பாத்திரப் படைப்பு//
கல்லூரிக் காலத்தில் ஒன்றாகச் சேர்ந்து சுற்றினார்கள் என்பது தவிர நட்பு ஆழமாக காட்டப்படவில்லை என்பது உண்மை தான்.
காரியவாத காதல் என்று எதைச் சொல்கிறீர்கள்?
பார்வை வீச்சில் விழாமல் தனக்குப் பொருத்தமானவன் யார் என ஒரு பெண் தெளிவாக முடிவெடுப்பது தவறா? என்ன பிரச்சினை வந்தாலும் இறுதி வரை காதலித்தவனையே கட்டிக் கொள்வேன் என்னும் பெண் தவறா? இதில் எங்கு பெண்ணின் பாத்திரப் படைப்பு அசிங்கப்படுத்தப்பட்டிருக்கிறது?
தனது திருமணத்தால் நண்பன் வருந்துகிறான் என்று அறிந்து அப்படியொரு திருமணமே வேண்டாம் என்று கதைத் தலைவன் கருதுவது தவறா?
///அந்த வழக்கு இருக்கத்தானே செய்கிறது?///
///கதையில் வழக்கில் உள்ளதைத் தான் காட்டி உள்ளார்கள்.///
சாதியும், சாதிய ஒடுக்குமுறைகளும், சாதி மாறி திருமணம் செய்ததாலேயே கொலை செய்யப்படுவதும் கூட தான் வழக்கில் இருக்கிறது. வழக்கில் இருப்பதை தானே காட்டியிருக்கிறார்கள் என்பதால் அதை விமர்சிக்காமல் விட்டுவிடலாமா?
என்னமா வியாக்கியானம் சொல்றாய்ங்க? கத எழுதுனவனும், டைரக்டு செஞ்சவனும் யோசிக்காததயெல்லாம் இவங்க யோசிப்பாங்க போலிருக்கே.. யாத்தி.
அடுத்தவன் பொண்டாட்டியை காதலிப்பதை கூட சில படங்கள் காண்பிக்கின்றன அதை பொய் விமர்சிக்க வேண்டியது தானே? உனக்கெப்படி உன் சாதியோ அப்படி தான் அனைவருக்கும் தன் சொந்த சாதி.
ரவி,
1. சுந்தரபாண்டியன் பேருந்தில் வந்ததுமே நடத்துநர் பயந்து கொண்டு சி.டியை மாற்றுகிறார். பலரும் பதறுகிறார்கள். இதிலிருந்தே அவரது பெரியண்ணத்தனம் நாயகிக்கு தெரியாதா? ஆகவே நாயகன் வசதி உள்ள ஒரு ஹீரோ என்பது நாயகிக்கு மட்டுமல்ல அந்தப்பேருந்தில் உள்ள எல்லோருக்குமே தெரியும். மேலும் அவரது நற்குணங்கள் என்று நீங்கள் நம்புவது பேருந்தில் பெண்களை இடிக்காமல் ஆண்கள் வரவேண்டும் போன்றவைதானே? ஆனால் நாயகியை தனது நண்பர்கள் காதலிப்பதற்கு ஏலமிடுவது போல குத்தகைக்கு விடுகிறாரே, இது தெரிந்தும் நாயகி ஏன் அவனை காதலிக்கிறாள்? குறைந்த பட்ச கோபம் கூட இல்லையே?
2. ஓகே ஓகே படத்தில் நாயகன் கூட வேலை வெட்டி இல்லாமல் படம் முழுக்க வெட்டியாக சுற்றி வருகிறான். எனவே தேவர் சாதி படங்களில் மட்டும்தான் நாயகன் வேலை இல்லாமல் வருகிறான் என்று கட்டுரையாளர் குறிப்பிடவில்லை. வேலையில்லாத இளைஞர்கள் ஊரில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும் வேலையே இல்லாமல் ஒரு காதல், திருமணம், சொத்து போன்ற வசதிகளுடன் இருப்பதில்லை. அதனால்தான் இந்த விமரிசனத்தில் அதை அழுத்தமாக கூறுகிறார் கட்டுரையாளர்.
3. அப்புக்குட்டி நாயகியை காதலிப்பதாக கூறியதும் அதை பார்க்கும் இரசிகர்கள் என்ன நினைப்பார்கள் என்பது இயக்குநருக்கும் தெரியும். இது மலிவான முறையில் உடல் தோற்றத்தை வைத்து பின்னப்பட்ட அநாகரீகமான காமடிதான்.
4. அக்கா தங்கையை சேர்த்து திருமணம் செய்வது இன்னும் பல ஊர்ப்புறங்களில் இருப்பதுதான். ஆனால் இடித்துரைக்கப்படவேண்டிய இந்த யதார்த்தம் படத்தில் பெருமையாக வருகிறது. மேலும் சு.பாவின் தந்தை ஒரு மனைவியைத்தான் திருமணம் செய்தார் என்று காட்டுவதால் யார் குடியும் முழுகிவிடாது. ஆனால் இரண்டு மனைவி என்று காட்டும்போது இதெல்லாம் தப்பில்லை எனும் பொதுவான ஆணாதிக்க கருத்துடைய பார்வையாளர்களை பெருமைப்படுத்தும்.
5. முறைப்பெண் என்ற உறவு பணவசதி, வர்க்கம் என்ற வகையில் ஒன்றாக இருந்தால்தான் நடந்தேறும். பல கிராமங்களில் ஏழை முறைப்பெண் அல்லது முறை ஆண் திருமண முறை உள்ள எதிர்பாலினத்தாரின் வீட்டோடு நெருங்க முடியாது, அதாவது மணம் செய்ய முடியாது. இதுதான் 100 சதவீத யதார்த்தம்.
6. இறுதிக்காட்சியில் சசிகுமார் தன்னை கொல்ல முயன்ற நண்பனிடம் தன்னை வைத்துத்தான் நியாயம் பேசுகிறார். மாறாக சம்பந்தப்பட்ட பெண் நோக்கிலிருந்து, “அவள் யாரை மணம் செய்ய வேண்டும் என்று அவள்தான் முடிவெடுக்க வேண்டும். அதை மறுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது ” என்று பேசவில்லை. அதனால் சசிகுமாரது ‘தியாகத்தின்’ பின்னே தன்னை போற்றும் சுயநலம்தான் உள்ளது.
7. இறுதியாக படத்தில் உள்ள இத்தகைய விசயங்களையெல்லாம் நீங்கள் யதார்த்தம் என்ற முறையில் இருந்து விட்டு போகலாமே என்கிறீர்கள். எனில் நாம் அகற்ற விரும்பும் பல தீமைகள் இந்த உலகில் ரத்தமும், சதையுமாக வாழத்தான் செய்கின்றன. ஆனாலும் அவையெல்லாம் உலக வழக்கு என்று நாம் விட்டுவிடுவதில்லை, கடுமையாக எதிர்க்கிறோம். அது போல இந்தபடம் கதையோட்டத்தோடு முன்வைக்கும் காட்சிகள், நகைச்சுவைகள், குறியீடுகள், பாத்திரங்கள் எல்லாமே அட்சரசுத்தரமான பிற்போக்கைத்தான் முன்வைக்கின்றன.
8. இதை கண்டுபிடிக்குமளவு நமது விமரிசனப் பார்வை கூர்மையடைய வேண்டும் என்பதே வினவின் விருப்பம்.
கதையில் வரும் அப்புக்குட்டி பாலிடெக்னிக் மாணவர். )தங்கள் விமர்சனம் நடுனிலமையுடயதுதான்.ஆனால் படத்தில் சில இடஙலில் வரும் சாதியக் குறயிடுகள் இல்லை எனக்கருதிவிட முடியாது.. நண்பர்களைக் கெட்டவர்களாக்கிய கதைக்களம் முதலாளிகளுக்குக் கொடி பிடிப்பதாய் இல்லையா….
மேற்கண்ட மறுமொழியில்
//பிறகு காதல் வந்த பிறகும் எந்த வீட்டைச் சேர்ந்தவர் என்று தெரியாமல் தான் அவரது ஊருக்கே போகிறார்.//
என்று தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன். இறந்து போன நண்பனின் ஊருக்குத் தான் அவ்வாறு செல்கிறார். ஆனால், கதைத் தலைவியின் பின்புலத்தை அறிந்து கொண்டு தான் காதலிப்பதாக எங்கும் சுட்டப்படவில்லை.
தலித் பத்தி படம் எடுத்தா அவன் கஷ்டப்படறதை மட்டும்தான் எடுக்கமுடியும். தியேட்டர்ல ஒரு பய பார்க்கவரமாட்டான்னு மத்த ஜாதின்னா எல்லாத்தை பத்தியும் எடுக்கலாம்.இதுதான் நடப்பு உண்மை. இல்லே தலித்பையன் தேவர் பொண்ணை காதலிச்சான்னு படம் எடுக்கணும்…அம்புட்டுதேன்…இவிங்க சினிமா பட கதைகள்.
தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை வைத்து படமெடுத்தால் அழுதாவது பார்க்களாம். ஆனால் கோவில் அர்ச்சகர்கள், சாமியார்களை வைத்து படமெடுத்தால் எப்படி இருக்கும்?
நினைத்து பார்க்கவே நாராசமா இருக்கு தானே?
Anniyan,gentleman maadhiri padangal ellam nalla thaane irunthathu?
And pazhaya sivaji padangal,gemini padangal athil ellam enna prachanai?
Anniyan gentelman ellam ungalukku nalla irukkalam. athugalum vakkirangaley…
Poosariya pathi enna padam edukka mudiyum,avuru 300 roova sambalathukkum 3 kilo arisikkum thindaduratha pathiya?
athu mattuma… karuvarikullaye… sollavey naa koosuthu! devadasi murai vechu pala pengal vaazhkaiya seerazhicha pasangathana!
devadasi muraingrathu vera kadhai,aana adha senjathu poosari ellam kedayathu.Powerla iruntha brahmins thaan,fulla edhuvume theriyama vaaya thorakatheenga.
I was talking about that iyer who made videos in karuvarai. maranthiteengala?
I know,but why are u looking at exceptions,criminals exist in every community.
Mr.ஹரி, முதலில் மறுமொழி 19 -ஐ பாருங்கள், தலித் மக்களின் வாழ்க்கை எல்லாம் அழுது கொண்டு மட்டும் தான் இருக்கிறது, அவர்களை பற்றி படம் எடுக்க வேறு ஒன்றும் இல்லை என்று பார்ப்பன திமிருடன் ஒருவர் கமெண்ட் எழுதி உள்ளார். அதற்கும் நீங்கள் இப்படி சொல்லி இருந்தால் உங்களின் நேர்மையை பாராடிர்கலாம், ஆனால் பார்பனர்களை பற்றி குற்றம் சொல்லும் பொது மட்டும் லாஜிக் எல்லாம் பார்கிறீங்க?
I am replying here for the discussion below,
Dalit makkal pathina padam appadi irukkumnu solli irukkanga.Podhuva cityla nadakkura padangalil saathi adayalam irukkathu,santhoshamo thukkamo viruppo veruppo entha saadhikaaran venalum kaatalam.
Indha padatha naan paakala innum,aana solradha vachi paatha,oralavukku unmaya irukkumnu thonuthu.
Enakku personala,enga jaathi ponna mattum thaan kalyanam pannamumnu aasai.Enga kalachaaram azhinchu poi vida koodathunnu aasai,avalavu thaan.
adhu thappunnu yaar nenaichalum sari.
சினிமாவை சினிமாகவே பாருங்கப்பா. அதுல ஏன் கருத்த எதிர் பார்க்கறீங்க .
டாவின்சி கோட் படம் வந்தப்ப துள்ளி குதிச்சது யாரு…?
இப்போ நபிகள் அவர்களை தவறாக சித்தரித்தக்கு பொங்கி எழுவது யாரு..?
‘தெய்வ திருமகன்’ என்ற தலைப்பை மாற்ற சொல்லி போராட்டம் நடத்தியது யாரு….?
என்ன விளையாடுறீங்களா….? மத்தவங்க செஞ்சா அது போராட்டம்….இதையே ‘தாழ்த்தப்பட்டன்’ சொன்னா ‘இதெல்லாம் சப்பை மேட்டருன்னு.சினிமாவை சினிமாகவே பாருங்கப்பா. அதுல ஏன் கருத்த எதிர் பார்க்கறீங்க’ன்னு ரொம்ப சுலபமா கடந்து போறது….நள்ளா இருக்குபா உங்க நியாயம்….நல்லா வருவீங்க….!!!
cinema-va cinema-va paakarom. neengalum cinema-va cinema-va edunga… Atha vittutu jaathiya prachaaram pnadra karuviya payanpaduthaathinga!
நான் படத்தைப் பார்க்கவில்லை. இந்தக்கட்டுரையை படம் பார்த்த ஒரு இளைஞனிடமும் ஒரு இளம் பெண்ணிடமும் கொடுத்து படிக்கச் சொன்னேன்.
படம் பார்த்த போது பொழுது போக்காகத்தான் பார்த்தோம். கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளதைப் போன்றுதான் படம் இருக்கிறது என்பதை இப்போது உணர்கிறோம் என்றார்கள்.
இதுதான் திரைப்பட விமர்சனம் குறித்த வினவின் வெற்றி! தொடரட்டும்.
அம்பேத்கர் மற்றும் இம்மானுவேல் சேகரன் போன்ற தலைவர்கள் இந்த ஆதிக்க சாதி வெறியர்களுக்கு பெரிய சவாலகவே இருகிறார்கள் என்பதை இந்த படம் தெளிவாக உணர்த்தியுள்ளது . இவர்களை போல கருத்து தெளிவு மிக்க தலைவர்களை இந்த சாதி வெறியர்கள் ஏற்று கொண்டால் இது போன்ற படங்கள் வராது . முத்து ராமலிங்கம் போன்ற சாதி வெறியர்களின் சிஷ்யர்களை அம்பேத்கர் போன்று தெளிவு மிக்க சிந்தனையாளர்களாக எதிர் பார்க்க முடியாது. இதற்கு முன் வந்த போராளி படத்தில் முத்து ராமலிங்கம் கூட bachelor தான் என்று தேவை இல்லாத வசனத்தை வைத்து சாதி வெறியை அமபல படுத்தும் இவர்கள் என்ன … படம் எடுத்து கிழிக்க முடியும் .
exactly my point of view… muthu ramalinga was a caste supremacist .. usage of his image and symbols ,speech should be completely banned.
Good point Fredrick
விடுதலைக்காக ஒரு மணிநேரம் கூட போராடாத அம்பெத்கர் பற்றி எடுத்தால் அது என்ன சமூக படமா..?
அவர் என்ன மலைசாதி மக்களுக்காகவா போராடினார்..??
உழைப்பை உரிந்து குடித்த பணக்காரனுக்கு எதிராக போராடினாரா..?
முதாலாளிக்கு எதிராக போராடினாரா..?
சாதிக்காக வாழ்ந்து சாதிக்காகவே செத்த ஒருவர் சமூக சீர்திருத்தவாதியா..?
யார் சாதி வெறியன் என்று இதை படிப்பவர்களுக்கு தெரியும்….!!!
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html
கடுகோண் அண்ணாத்தே! உங்க கட்டுசோறுதான் ஊசிப்போச்சே திரும்ப திரும்ப ஏன் கூட்டத்துல அவுத்து அசிங்கபடுரிங்க..!!
இனையதளம் என எம் பாட்டன் மனுநிதித்தேவரின் நியாய மணியா உண்மை சொல்ல..?
ஒவ்வோரு எழுத்திற்கு பின்னால் ஏழு கோடி பொய்களை ஒழித்து வைப்பதே இனைய தளம்!
கடைசில இணைய தலமே பிராடு என்று சொல்ற அளவுக்கு முத்திருச்சா?
//ஒவ்வோரு எழுத்திற்கு பின்னால் ஏழு கோடி பொய்களை ஒழித்து வைப்பதே இனைய தளம்!//
இது என்னவோ இந்த மாதிரி இணைய தளங்களை படிக்கும் போது உண்மை தானோ என்று தோணுது….ஹா…ஹா…ஹா…
http://www.thevarthalam.com/
அய்யோ!! கடுகோனுக்கு அறிவோ அறிவு!!
உன்னை திருடன் என்று நிருபித்தால்.. நீ என்னானா ஒட்டு மொத்த மனிதகுலத்தையும் திருடனாக நிருபித்து விட்டதாக எடுத்துக்கொள்வாய் எனில் உன் புத்தி எப்படி சிந்திகிறது என நீயே சுய பரிசோதனை பண்ணிக்கொள்..
ஒரு எழுத்துக்கு பின்னால் ஏழுக்கோடி பொய் தகவல் வைத்திருப்பது கீற்று இனையதளம்…
அண்ணாத்தே!!நான் சொன்ன கமெண்டுக்கு மேல நீங்க
எந்த இனையதளத்தின் பெயர் போட்டுறீக்கீங்க..???? ..நீங்கள் ஆதாரமாக காட்டியது
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html??????
அல்லது
http://www.thevarthalam.com/??????
இங்கே நீ சொன்ன பொய்க்கு ஆதாராமாக உன் இன இனைய தளத்தையே தருகிறாயே..நீ திருடன் இல்லை என நீருபீபதற்கு சாட்சி திருடனே!
அண்ணாத்தே!! உன் திருட்டு புத்திய நீயே பாரு! உண்மையை எப்படி திரித்து சொல்ல வைக்குது… இப்படிதான் தேசியதலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வரலாற்றில் பின்னால்..சைடுல பொய் சம்பவங்கள் ஒட்டுப்போட்டு சொல்றீங்க…
உங்கள் களவு புத்தியினால் கையும் களவுமாக மாட்டீவிட்டீர்கள்…
குருடனுக்கு மருத்துவம் பார்க்கலம்… குருடன் மாதிரி நடிக்கும் உனக்கு மருத்துவமா…???
//இனையதளம் என எம் பாட்டன் மனுநிதித்தேவரின் நியாய மணியா உண்மை சொல்ல..?
ஒவ்வோரு எழுத்திற்கு பின்னால் ஏழு கோடி பொய்களை ஒழித்து வைப்பதே இனைய தளம்!//
இதுக்கு என்ன அர்த்தம் ராசா? ‘தேவர் தளம்’ மட்டும் தான் உண்மை, போர் பறை பொய்யின்னு இதுக்கு அர்த்தமா? ….சரி..சரி…விடு…நீயும் எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிப்ப? ஹா….ஹா….
உன் இனயதளங்கள் ஏதெனும் ஆதாரதுடன் எழுதி இருக்கிறதா..ம்ம்ம் நிறைய எழுதி இருக்கிறது.. ஒரு பள்ளன் இன்னொரு பள்ளன் எழுதிய தெளிவற்ற ஒரு புத்தகத்த ஆதாரமாக தருகிறான்..என்றாவட்கு உண்மையை உண்மையாகக தன் தரத்துடன் தர பள்ளன் களால் முடிந்ததா..!!!
ரொம்ப தமாஷு..!! வலிச்சா எல்லாரும் கத்துவாங்கா..ஆனா நீ ‘ஹா….ஹா….” சிரிச்சே மழுப்புர போ..!!
//ஒரு பள்ளன் இன்னொரு பள்ளன் எழுதிய தெளிவற்ற ஒரு புத்தகத்த ஆதாரமாக தருகிறான்//
இதை நீ அங்க சொல்லலாமே…..சொலித் தான் பாரேன்…..!!!
அட! கடைசியில உங்க ஏரியாவுக்கு கூப்டுறீங்க..வரேன் ..வரமாபோவனா..?
வரலாற்று உண்மையை உங்கள் ஆஸ்தான இனைய தளத்ட்கில் இத்தனை முறை பதிந்தோம்.. டைப் அடிச்சி அடிச்சி கீபோர்ட் போனதுதான் மிச்சம்…
உங்கள் இனையங்கள் நான் சொன்ன/ வெளியிட்ட வரலாற்று உண்மை கருத்துக்களை ஒரு போதும் இனையத்தில் போடவேயில்லை..!!!
ஏனோ என் கருத்துக்களை வெளியிட அதாவது உண்மையை வெளியிட.. தயக்கம்..பயம்..
சொல்லுங்க அண்ணாத்தே..! உங்கள் இனையதலத்துல வந்து புகுந்து விளையாட என் ரத்தம் துடிக்குது!
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html
ஒரு அரசு இணையதளத்திலோ ஒரு பொதுவான இணைய தளத்திலோ இருந்து மேற்கோள் காட்ட முடியுமா உன்னால்?
இதே போல எங்களாலும் எங்களுக்கு சொந்தமான இணையதளதில் இருந்து மேற்கோள் காட்ட முடியும். முதலில் உன் சாதிக்கார இணையத்தை காட்டியது நீ.
ஆக கட்டுரையை படிக்காமலே கமெண்ட்டு போடுறீங்க….என்னமோ அந்த கட்டுரையை இவங்களா உக்காந்து எழுதுனதா நினைச்சுகிட்டீங்க……ஐயோ பாவம்….!!! அங்க கட்டுரைக்கு கீழே ஆதாரங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டிருப்பாங்க……முதலில் அதை பாருங்க…..!!! உக்காந்து யோசிச்சு யோசிச்சு ஆதரமற்ற கதை சொல்ல அவங்க என்ன தேவர்தளம், கள்ளர் பேரவை தலங்களா?
தியாகுவின் “குண்டுசட்டியில குதிரை ஓட்டுவதை” எதிர்த்த நல்லெண்ணத்துடன்(!) கூடிய பதிலை படியுங்கள் பின்னர் இந்த பதிலை படியுங்கள், தியாகுவின் சாதி வெறி தெரியும். தேவர்மகன், விருமாண்டி இன்னபிற படங்கள் என்ன விரிந்த மனப்பான்மையை ஏற்படுத்தியது. அம்பேத்கர் நீங்கள் சொல்லும் “விடுதலைக்கு” போராடவில்லை என்பது சரிதான்… உண்மையில் உங்களின் 1947 விடுதலலை சேரி மக்களுக்கு செறுப்பு அணிந்து “ஊரில்” நடக்கவோ, பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கவோ, தனிச்சுடுகாடு முறைடயை ஒழிக்கவோ இல்லை. பிறகு ஏன் அவர் இத்தகைய விடுதலைக்கு போராட வேண்டும். தியாகு உங்ளின் ” விசாலமான” பார்வையை போய் வாண்டையாரிடமும்,கண்டதேவி பகுதி கள்ளர்களிடமும் போய் சொல்லுங்கள்……
சரியான விமர்சனம் தான். ஆனால் பெயரைத்தான் மாற்றி எழுதிவிட்டீர்கள். முத்துராமலிங்கத்துக்குப் பதிலாக அம்பேத்கர் பெயரை போட்டுவிட்டீர்கள்.
ஆர்.தியாகு,மடியில குண்டு கட்டி வச்சிருக்கேன்னு( அணுகுண்டு தான் ,வேற ஏதும் இல்ல ) தன் சாதி வெறி மக்களிடம் பீலா விட்ட மெண்டல் தான் இந்த முத்துராமலிங்கம். அத போய் சாமி ன்னு நம்புற கூடத்துக்கு அம்பேட்கர யாருன்னு தெரிஞ்சுக்குற அளவுக்கு கூட அறிவு கிடையாது.
Good review
Small correction..Appukutty characer is not working class..He is a polytechnic student
இது போன்ற விமர்சனம் தான் இந்த மாதிரியான அழுக்கை பொழுதுபோக்குக்கான திரையில் இருந்து நீக்கப்பயன்படும்.
நன்றி,வினவு.
vinanu…. ithan elutthalar oru kevalamana writer.. first padangalai padamaga parunga sariya.. entha visayathulaum jathi ya yen pakuringa neenga.. vinanu oru nalla new maker nu ninaichen.. inilirunthu athu poi nu therinju pochu… evean than jothi pathi pesalai intha tamil natula neenga enna olunga oru padathai ivalauu kevalama vimarsanam panni irukinga.. first neenga marunga aparam aduthavangalai pathi pesunga sariya..
டமுல் நொண்பா !!
படங்களை எப்புடி படங்களா பாக்குறது ?..
அத மொதல்ல உன் இந்திய அரசாங்கத்துக்கிட்ட போயி சொல்லு நைனா …
தேவையே இல்லாம சென்சார் போர்சு வச்சி காச விரயம் பண்ணுறானுங்க .. படத்த படமா பாக்கத்தெரியாத பசங்க …
சசிகுமார் ‘யாதவ’ குலத்தை சேர்ந்தவர் என்று கேள்வி.
இணையத்தில் ஒரு சில கள்ளன்/மறவன் கூட்டம் ‘வெள்ளை சாமி தேவர்(?)’ படுகொலைக்கு எழுதிய கண்டனம் இது:
“இந்த படுகொலைக்கு எவனும் கண்டனம் தெரிவிக்க மாட்டனுன்களே….எதுக்கெடுத்தாலும் நியாயம், நடுநிலைன்னு பேசுறவன் எல்லாம் இப்போ எங்கடா போயிட்டீங்க….இந்த அரசாங்கம் என்ன பண்ணுது…இது முதல் தடவை கிடையாது…இது மாதிரி எப்ப தேவர் ஆளுங்க செத்தாலும் ஏன்னு கேக்க ஒரு நாதி கிடையாது….”
நமது கேள்விகள்:
————————–
* ஒட்டு மொத்த சினிமாவில் நீங்கள் தானே அதிகம் யுர்க்குறீங்க…தேவர் மகன் தொடங்கி சுந்தர பாண்டியன் வரைக்கும் உங்க கை தான் ஓங்கி இருக்கு… வெள்ளை சாமி தேவர் உட்பட பலர் கொல்லப் பட்டுள்ளனர் என்பது உண்மை. ஏன் இதையே மைய கருவா வச்சி ஒரு படம் நீங்க எடுக்க கூடாது…? ‘இந்த மாதிரி எவன் எவனோ தேவர் ஆளுங்களை வேட்டுரானுங்க, கொல்றானுங்க, கேக்க நாதி இல்லை’ன்னு சூப்பரா ஒரு ஒப்பாரி பாட்டையும் படத்தில் வைக்கலாமே? …..ஏன் உங்களால முடியாதா? இல்லை இது நாள் வரைக்கும் நீங்கள் மிகைப் படுத்தி காட்டிய உங்கள் சாதி அடையாளம் சுக்கு நூற்றி உடைந்து உண்மை நிலவரம் என்ன என்று அனைவருக்கும் தெரிந்து விடும் என்ற பயமா?
well said. ivanuga veeram ellam kootama irukara varikkumthan. thaniya vantha ella jathikaaranum thodanadungi payathan!!!
வெள்ளைச்சாமித்தேவர் இறந்த கதையை படமாக எடுப்போம்.. ஆனா அதில் அந்த பள்ளன் வெறும் கையால் அடித்தே கொல்லப்பட்டானே அதையும் சொல்லனும் சரியா தோழரே!
இறந்த வெள்ளைச்சாமித்தேவர்க்கு வயது 68 அந்த பள்ளனுக்கு 38 அதையும் சொல்லனும் சரியா தோழரே..!
வயதனவரை கொன்ற வீர காவியம் அல்லவா அது.!!! வயிற்றுக்கு இரை தந்தவர்க்கு தூரோகம் செய்த பள்ளன் காவியம் ! கண்டிப்பாக இறந்த வெள்ளைச்சாமித்தேவர் இறந்த கதையை படமாக எடுப்போம்.. சரியா தோழரே..!
கண்டிப்பா சொல்லுங்க….
அதோட இதையும் சொல்லுங்க…
* தா.கிரிட்டிணனை போட்டு தள்ளுன அழகிரியுடன் கூலை கும்புடு போட்டுக்கிட்டு மருது சகோதர்களின் நினன்வேன்தலை கொண்டாடிய வீரத்தையும் சொல்லுங்க…
* எந்த ஒரு மீடியாவிலும் வெள்ளைசாமி தேவரின் கொலை பற்றிய படங்கள் வராமல் பார்த்துகொண்ட ஆண்மையை சொல்லுங்க…
* பழனிகுமார் என்ற பையனை பல எருமைமாடுகள் வெட்டிகொன்ர ஆண்மைத் தனத்தையும் சொல்லுங்க….
* இம்மானுவேல் குருபூஜையின் போது முக்கிய முக்குல தலைகள் ஓடி ஒளியும வீரத்தை சொல்லுங்க….
* இம்மான்வஐல் இறந்த பின்பு கூட்டம் கூட்டமாய் மதுரைக்கும், சென்னை போன்ற இடங்களுக்கும் அகதியாய் குடி பெயர்ந்து மறவனின் வீரத்தை சொல்லுங்க…
* நாரிக்கிணறு,மணியாச்சி உள்ளிட்ட இடங்களில் இன்று வரை பள்ளனுக்கு பயந்து ஊரு உள்ளே கால் வைக்க கூட பயப்படும் மறவனின் ஆண்மை பற்றி சொல்லுங்க…
* தேவர் குருபூஜையின் போது கலவரம் செய்த சண்முகையா பாண்டியனையும், அவனது 10000 க்கும் மேற்ப்பட்ட அடிபோடிகளையும், பின்னி பெடல் எடுக்க பள்ளனும், முஸ்லீமும் காத்திருக்கும் போது, தரை வழி வந்தால் சாவு நிச்சயம் என்று தெரிந்து கடல் வழியாக ஊருக்குள் முக்காடு போட்டு சென்ற மறவனின் வீரத்தை பற்றி சொல்லுங்க…
* இது மாதிரி ஏகப்பட்ட,கணக்கில் வராத ‘ஓடை,எரி’ என பல இடங்களில் புதைக்கப்பட்டுள்ள மறவர்களை தோண்டி எடுத்து ஒவ்வொருவரும் ஏன் இறந்தார்கள் என்ற உண்மையை தாராளமாய் இந்த உலகிற்கு சொல்லுங்க…
(இதெல்லாம் உண்மையிலேயே உங்களுக்கு தெரியவில்லை என்றால் கள ஆய்வுக்கு உங்களை கூட்டிகிட்டு பத்திரமா திரும்ப அனுப்ப வேண்டியது எங்களுடைய வேலை…படம் எடுப்பது உங்களுடைய வேலை…என்ன சம்மதமா?)
ஆமா!! இந்த வருசம் இமானுவல் இரங்கல் கூட்டம் நடந்துச்சி..?????
கன்பார்ம்டு…..நீ கீழ்பாக்கம் கேசு தான்……ஹா..ஹா…ஹா…
இமானுவல் இரங்கல் கூட்டம் நடந்தா..வினவுல கூட செய்தி இல்லைப்பா!!! இரங்கல் கூட்டத்த விளம்பரபடுத்த பள்ளன் களை பலியிடலயா..? அதான் எந்த பத்திக்கையிலையும் முத பக்கத்துல இரங்கல் கூட்டம் செய்தி வரவே வில்லை..!!!
கடுங்கோன்.. கீழ்பாக்கத்திலிருந்து பார்த்தா அப்படிதான் சாலையில் போரவங்க எல்லாம் நம்ம கேசுனு தோனுமா… விஜய் டிவி-ல மாத்துருபூதம் சொன்னாரு…
யப்பா தியாகு….
பூனை கண்ணை மூடிகிட்டா உலகமே இருண்டுருச்சுன்னு நினைச்சிக்குமாம்…அது மாதிரி நீங்க பேசுற பேச்சு….!!!
இம்மானுவேல் குருபூஜை இந்த வருடம் எப்படி நடந்தது ,எத்தனை லட்சம் பேர் வந்தனர், இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து யார் யார் வந்தா? எப்போ பஞ்சாபில் இம்மானுவேல் அவர்களின் சிலை எப்போ திறந்தாங்க என்பது போன்ற தகவல்களை இங்க காணலாம்….
http://www.marudham.tv/
இந்த டி.விய நான் கேள்பட்டதே யில்லையே..!!! ஆயிரம் நவீன பொஇ சொல்லிகளான உன் இனையதளத்தை நீயே பார்த்துக்கா…
ஏன் தேவை இல்லாம டென்சன் ஆகுற தியாகு?
இந்த வருஷம் குருபூஜை நடந்துச்சான்னு கேட்ட….!!! வெகு விமரிசையா நடந்துச்சுன்னு சொன்னேன்…நீ நம்ப மாட்ட…அதான் ஆதாரம் காட்டினேன்….பாக்காமலேயே நடக்கலன்னு சொல்ல நான் என்ன தியாகுவா? ஹா…ஹா..ஹா…
ஓகோ உங்க பத்திரிக்கை,இனைய தொலைக்காட்சிதான் வெகு ஜன ஊடகமா..?? இது கூட எனக்கு தெரியல..!!!!
தினமலரில் பெட்டி செய்தி!
தினமணியில் பாதுகாப்பு ஏற்ப்பாட்டு செய்தி!
தினத்தந்தில் அரைப்பக்க செய்தி!
சன் – டிவியில் ஒன்னுமே சொல்லல..!!
ஜெயா – டிவி சொல்லவே வேண்டாம்!
அப்புறம் நான் பி.பி.சி.மற்றும் என்.டி.டி.வி வரை பாத்தேன்.. ஒன்னும் ஒரு வரி செய்தியா கூட சொல்லல..!!!!
ஒரு மனிதன் உண்மையாகவே இந்த மக்களுக்கான போராளியாக இருந்தால் அவரை பற்றி..அந்த நாளில் ஒரு கட்டுரை அல்லது வாழ்க்கை பற்றிய செய்தி…எதாவது வெகு சன பத்திரிக்கையில் வரனும்….
இல்லைனா அவனும்
போலி சாமியார்
போலி பாதிரி
போலி டாக்டர்
மாதிரி போலி தியாகி ! போலி சமூகநலவாதி
முதலில் குருபூஜையினா அர்த்தம் சொல்லு…எங்க புனித மனிதருக்கு செய்கின்ற விடயங்களை அப்படியே காப்பி அடிக்கின்றன் உங்கள் புத்தி தூ…நீங்களா யோசிக்க மாட்டிங்களா…
சாதி வெறியனுக்கே குருபூஜை நடக்குது….அதான் உங்க போனிதரு…..!!!
சாதியை எதிர்த்தவருக்கு நடந்தா உனக்கு என்ன பிரச்சனை?
ஒருவேளை இம்மானுவேல் அவர்களுக்கு இல்லாமல், மாவீரன் சுந்தலிங்க குடும்பனுக்கு குருபூஜை எடுத்தாலும் நீங்க அதையும் குத்தம் சொல்லுவீங்க….ஏன்னா உங்களுக்கு பிரச்சனை யாருக்கு பள்ளன் குருபூஜை எடுக்குறான் என்பது அல்ல…அதற்க்கு கிடைக்கும் ஆதரவும், மக்களின் கூட்டமுமே….பள்ளன் ஒரு குடையின் கீழ் வந்து கூடுவது கள்ளனுக்கு பிடிக்கவில்லை…இது தான் உன் போன்றவர்களின் குமைச்சளுக்கு காரணம்…..!!! இல்லை என்றால் நீ ஏன் அடுத்தவன் வீட்டு ஜன்னலை எட்டி பாக்கபோற…?
குருபூஜை அர்த்தம் :-
யோகம் பயின்று பரம்பொருளை தியானித்து எழு சக்திகளை அடந்தவருக்கு செய்யப்படும் தூழுதல் குருபூஜை என்பது…
பஞ்சபூதங்களை அதாவது “நீர்,நெருப்பு,காற்று, நிலம், ஆகாயம்” சாட்சியாக நீர் தெளித்து, தீபம் காட்டி, சாமரம் வீசி,நிலம் சாட்சியாக மலர் அணிவித்து,ஆகாயத்தின் சாட்சியாக இரு கைகள் வேண்டி பூஜிப்பதே குருபூஜை !!!
தேவருக்கு மட்டுமே முதன் முதலில் இந்த சொல் பயன் படுத்தப்பட்டது, அநத தகுதி அவருக்கு இருப்பதால்
பள்ளனில் குருபூஜை என போட தகுதி உள்ளவனுக்கு போடு..!!!!
முதன்ம்தலில் “குருபூஜை” திருடப்பட்டது….
பின்பு பாண்டியன் திருடப்பட்டது…..
அதன் சோழனை திருட முயற்சி….
தேவர் பட்டம் திருட முயற்சி…
இது ஓக்கியன் செய்ற வேலையா இது!!!
ஓகோ உங்க பத்திரிக்கை,இனைய தொலைக்காட்சிதான் வெக்ய் ஜன ஊடகமா..?? இது கூட எனக்கு தெரியல..!!!!
தினமலரில் பெட்டி செய்தி!
தினமணியில் பாதுகாப்பு ஏற்ப்பாட்டு செய்தி!
தினத்தந்தில் அரைப்பக்க செய்தி!
சன் – டிவியில் ஒன்னுமே சொல்லல..!!
ஜெயா – டிவி சொல்லவே வேண்டாம்!
அப்புறம் நான் பி.பி.சி.மற்றும் என்.டி.டி.வி வரை பாத்தேன்.. ஒன்னும் ஒரு வரி செய்தியா கூட சொல்லல..!!!!
ஒரு மனிதன் உண்மையாகவே இந்த மக்களுக்கான போராளியாக இருந்தால் அவரை பற்றி..அந்த நாளில் ஒரு கட்டுரை அல்லது வாழ்க்கை பற்றிய செய்தி…எதாவது வெகு சன பத்திரிக்கையில் வரனும்….
இல்லைனா அவனும்
போலி சாமியார்
போலி பாதிரி
போலி டாக்டர்
மாதிரி போலி தியாகி ! போலி சமூகநலவாதி!!!
முத்துராமலிங்கமே ஒரு பெரிய பிராடு, சொந்த சாதி மக்களையே ஏமாற்றியவர். அவரு பெரிய மாகான்னு இப்ப தியாகு இவ்வளவு வரலாறு நடைமுறையில் நிரூபிக்கும் போதே புளுகுகிறார். அப்புறம் குருபூஜைக்கு வியாக்கியானம் வேற. தியாகு போன்ற சாதிவெறியர்களின் பரிணாமத்தை பாருங்கள், முதலில் பொதுவான மனிதரைப்போல அறிவுரை அம்பலப்பட்ட பின் ” பள்ளன்” என்று சாதிவெறியோடு விளித்தல்…. இவரெல்லாம் இவரது சொந்த ஊர் பகுதியில் எந்த அளவு சாதிவெறி கொழுப்போடு நடந்து கொள்வார். சரி தியாகு எனது கேள்விக்கு பதிலில்லையே… உங்க பன்னீர் செல்வ தேவர், தற்போதைய ” சக்கிலிய சபாநாயகரை” எப்படி அழைப்பார்…சக்கிலியென்றா ? அய்யாவென்றா? ஒருவளை நீங்கள் நேரில் சந்த்திதால்…. அதிகாரமுள்ளவர்களிடம் உங்க கொழுப்பு எடுபடாதில்லையா?…..
ஓகோ உங்க பத்திரிக்கை,இனைய தொலைக்காட்சிதான் வெக்ய் ஜன ஊடகமா..?? இது கூட எனக்கு தெரியல..!!!!
தினமலரில் பெட்டி செய்தி!
தினமணியில் பாதுகாப்பு ஏற்ப்பாட்டு செய்தி!
தினத்தந்தில் அரைப்பக்க செய்தி!
சன் – டிவியில் ஒன்னுமே சொல்லல..!!
ஜெயா – டிவி சொல்லவே வேண்டாம்!
அப்புறம் நான் பி.பி.சி.மற்றும் என்.டி.டி.வி வரை பாத்தேன்.. ஒன்னும் ஒரு வரி செய்தியா கூட சொல்லல..!!!!
ஒரு மனிதன் உண்மையாகவே இந்த மக்களுக்கான போராளியாக இருந்தால் அவரை பற்றி..அந்த நாளில் ஒரு கட்டுரை அல்லது வாழ்க்கை பற்றிய செய்தி…எதாவது வெகு சன பத்திரிக்கையில் வரனும்….
இல்லைனா அவனும்
போலி சாமியார்
போலி பாதிரி
போலி டாக்டர்
மாதிரி போலி தியாகி ! போலி சமூகநலவாதி!!!
முத்துராமலிங்கத்தின் யோக்கியதையை உங்க “சாதிக்காரன்” தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் என்ற புத்தகத்தை படித்தாலே நாறும்……..அப்போது தியாகு போன்ற சாதிவெறியர்களின் “தாழ்மையான(!)” கருத்து ” அவன் எவனுக்கு பொறந்தானோ” இதுதான் இவர்களின் “விரிந்த பார்வை…”
கடுக்கா பாண்டியன்
குரு பூஜைனா எப்படி இருக்கணும் அது எதனை ஊரை உலுக்கனும்னு முன்னபின்ன தேவர் ஜெயந்திக்கு போனா தானடா உங்களுக்கெல்லாம் தெரியப்போகுது. தேவர் ஜெயந்திய பாருடா அப்ப தெரியும் உனக்கு. சும்மா ஒரு 1000 பேரை கூட்டி நடத்துறது இல்ல குரு பூஜா. கோடி பேர் கூடனும் டா.
//இம்மானுவேல் குருபூஜையின் போது முக்கிய முக்குல தலைகள் ஓடி ஒளியும வீரத்தை சொல்லுங்க//
தேவர் ஜெயந்தி அப்போ எத்தன தலித் தலைவன் நெஞ்ச நிமித்திக்கிட்டு திரியுறான்னு பாப்போம்டி. தமிழ் நாட்ட விட்டே ஓடி ஒளியுர சாதி தலைவனெல்லாம் ஒரு தலைவனாம். தனக்கென சொந்தமாக ஒரு போட்டோ கூட இல்லாத இம்மானுவேல் சேகரன் எல்லாம் ஒரு தேசிய தலைவனாம்?
நாகரிகம் கருதி நான் திரு.முத்துராமலிங்கம் அவர்களை விமர்சிக்கவில்லை…அதே நாகரிகத்தை உங்களுடன் நான் எதிர்பார்க்க முடியாது என்று இங்கே படிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்….நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் சமுதாயத்தில் எப்படி பட்டவர்கள் என்பதை வினவு போன்ற தளத்தில் உங்களை அறியாமலேயே அம்பலப் படுத்தும்….!!!
என் சொந்தங்களுக்கு வணக்கம்… பிரகதீஸ்வரர் பெரிய கோயிலை கட்டி, தஞ்சை தரணியை ஆண்ட நம் கொள்ளுப்பாட்டன் மாமள்ளர் இராசராச சோழ தேவேந்திரர் அவர்களின் 1027 வது சதய (பிறந்தநாள்) விழா… 25.10.2012 வியாழக்கிழமை… அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள அன்புடன் அழைப்பது…, மற்றும் சோழமண்டல தேவேந்திரகுல வேளாளர் மக்கள்…திருத்துறைப்பூண்டி மள்ளர் வாய்காரர்
அரசு விழாவாக இல்லாவிட்டாலும் அரசையே அதிர வைக்கும் விழா” எங்கள் அய்யா இம்மானுவேல் தேவேந்திரர் குருபூஜை விழா.
சுமார் 1000 பேர் கூட்டம் போட்டு பேசினாலே அதை செய்தியாக்கும் ஊடங்கள், 10000 போலிசை காவலுக்கு போட்டு, சுமார் 2 முதல் 4 லட்சம் வரையிலான தேவேந்திர மக்கள் கூடிய இம்மானுவேல் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை இருட்டடிப்பு செய்து விட்டன. இது ஒன்றும் புதுசு இல்லை. கருணாநிதி போன்ற நேரடித் தெளுங்கனாக இருந்தாலும் சரி, இல்லை கன்னட ஜெயாவின் பக்கதுணையான கள்ளர் சசிகலாவாக இருந்தாலும் சரி, இப்படி தான் நடக்கும்….!!!
ராசராச சோழனின் இயற்பெயர் அருண்மொழிதேவர்னு தான் வரலாறு சொல்லுது.
போன வாரம் அருண் மொழி தேவேந்திரன்னு இவர் பெயரை numerology படி மாத்திடாங்களோ?
தேவர் இன ஆண்களை தேவர் என்றும் பெண்களை நாச்சியார் என்றும் கூறுவர்
இராஜ ராஜ சோழன் தேவரின் சகோதரி குந்தவை நாச்சியாரும் பள்ளர் இனமோ?
இன்னும் கொஞ்ச நாள்ல சிவலிங்கத்தை காட்டி இது ஏசுநாதர் என்றும் அவரின் 12 சீடர்களையும் பன்னிரு சித்தர்கள் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இப்படி ஆளாளுக்கு வரலாட்ற்றை மாத்துனா வருங்காலம் விளங்கினமாதிரி தான்.
இது மாதிரி (உண்மை) விசயங்களை வச்சி கூட படம் எடுக்கலாமே….?
* http://www.expressindia.com/news/ie/daily/19971007/28050673.html
* http://www.seenirajsiva.in/cjournal/6june2011.htm
சாதி பெருமை பேசி ஊரை ஏமாற்றி படம் எடுக்கும் கூட்டம், இந்த சம்பவத்தை பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்?
இன்றைய தமிழ் சினிமா யார் கையில் இருக்கிறது என்பதற்கு சில உதாரணம்:
*சிவாஜி,பிரபு குடும்பத்தினர்
*சிவாஜிக்கு முதுகு சொரியும் கமல்
*கருணாஸ்
*விவேக்
*எம்.எஸ்.பாஸ்கர்
*மனோரமா
*முதுகு சொரியும் அமீர்
* கலைப்புலி எஸ் தாணு
* சசிகுமார்
* நாடோடிகள் டைரக்டர் சமுத்திரகனி
* கஞ்சா கருப்பு
* பாலா
* வைர முத்து
* பாரதி ராஜா
* பெரிய கருப்பு தேவர்
* டைரக்டர் ஹரி
* ஹரியின் மாமனார் விஜயகுமார் மற்றும் குடும்பம்
* இன்னும் பலர். இவர்கள் அனைவரும் முக்குலத்தொரே. இவர்கள் எப்படி அடுத்த சாதிக்காரனை உள்ளே விடுவார்கள்? எப்படி தன சாதி பெர்மையை பேசாமல் இருப்பார்கள்? எனவே இவர்கள் ‘பெருமை பேசுவதை’ ஒதுக்கி வைத்து விடுவோம்.
இப்போது விசயத்துக்கு வருவோம்.
முக்குலம் சாராத
* சீமான் ஏன் பாஞ்சாலம்குறிச்சி எடுக்க வேண்டும்?
* அமீர் ஏன் பருத்தி வீரன் எடுக்க வேண்டும்?
* கமல் ஏன் தேவர் மகன், விருமாண்டி எடுக்க வேண்டும்?
* லிங்கு சாமி ஏன் சண்டை கோழி எடுக்க வேண்டும்?
* அது மட்டும் இல்லாமல் சுண்டு சுள்ளான் டைரக்டர் எல்லாம் ஏன் முக்குலம் பற்றிய படம் எடுக்க விரும்புகின்றனர்?
இந்த கேள்வியின் பதிலில் தான் அந்த சூட்சுமம் இருக்கு. என்ன?
முதலில் மேலே சொன்ன படங்களை உற்று கவனியுங்கள். அந்த அந்த இயக்குனர்கள் அதற்க்கு முன்பு என்ன படம் எடுத்தார்கள் என்றும் கவனியுங்கள். தெரியவில்லை என்றால் உதாரணம் சொல்கிறேன்.
* லிங்கு சாமி: ஜி,பீமா (ரெண்டுமே பிளாப்), சண்டை கோழி (வெற்றி)
* கமல்: பஞ்ச தந்திரம்,அன்பே சிவம் (ரெண்டுமே பிளாப்), விருமாண்டி (ஓரளவுக்கு வெற்றி)
* கமல்: குணா, சிங்கார வேலன்( ரெண்டும் பிளாப்), தேவர் மகன் (வெற்றி)
* அமீர்: ராம் (பிளாப்), பருத்தி வீரன் (வெற்றி)
* சீமான்: பாஞ்சாலங்குறிச்சி (முதல் படம்)
* சசிகுமார்: போராளி (பிளாப்)
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது: படம் பிளாப் ஆகி இனி சினிமா வாழ்க்கையே அவ்ளோ தான் என்று மிகவும் இக்கட்டான நேரத்திலோ, அல்லது தன்னை ஒரு வசூல் இயக்குனராக காட்ட விரும்புகிரவரோ முதலில் தேர்ந்தெடுக்கும் களம் ‘முக்குலம்’. “‘தேவர்’ பேரை சொன்னாலே படம் ஓடிடும், பெருமையை பேசுனாவே காசு கொட்டும்” என்ற காசு பார்க்கும் எண்ணம் தான். மேற்சொன்ன எவரும் நன்றாக,செழிப்பாக இருக்கும்போது ஏன் ‘முக்குலம்’ பற்றி எந்த படத்தையும் எடுக்க முன்வரவில்லை? உண்மையில் இவர்கள் ‘முக்குல பெருமை’ போதை காட்டி,’கள்ளனை’ ஏமாற்றி அதில் காசு பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை. இப்படி பட்ட அயோக்கியமான சினிமாவை விட்டு நாம் தள்ளி இருப்பதே நமக்கு நல்லது
panchathanthiram and singaravelan floppah????? ada raamaa
ippo ungala yaaru mukkuna kulatha kaapatha varachonnathu?
* கலைப்புலி எஸ் தாணு – நாயுடு
* சசிகுமார்-கோனார்
* நாடோடிகள் டைரக்டர் சமுத்திரகனி-நாடார்
* டைரக்டர் ஹரி-நாடார்
சுண்டு சுள்ளான் டைரக்டர் எல்லாம் ஏன் முக்குலம் பற்றிய படம் எடுக்க விரும்புகின்றனர்?
ஆப்பிரிக்காவில் சீனாக்காரன் கலச்சாரத்தை பற்றியா படம் எடுப்பார்கள்!!!
சீனா-வில் சிவப்பு இந்தியார் கலாச்சாரத்தையா பலம் எடுப்பார்கள்!!!
சிந்தியுங்கள் தோழர்களே..!!
தமிழ் கலாச்சாரம் என்பதே முக்குலத்தின் கலாச்சாரமே!!
தன் சொந்த மண் சார்ந்த மனிதர்களை எடுப்பது என்ன சாதியப் படமா..? சிந்தியுங்கள்
ஆயிரம் பொய் புத்தகங்கள் லட்சம் பொய் வரலாறுகள் நீங்கள் எழுதினாலும்..உண்மை என்றும் மறையாது
//தமிழ் கலாச்சாரம் என்பதே முக்குலத்தின் கலாச்சாரமே!!//
செம்ம காமெடி உங்க கூட…
கள்ளன் அனைவரும் வடுகனிடம் கூட்டு வைத்த சோழனின் வழி தோன்றல்கள் என்று சொல்லிக்கிட்டு வரலாறு பேசிகிட்டு இருக்காங்க…இப்போ போய் நீங்க ‘தமிழன்’ அது இதுன்னு காமெடி பண்ணிக்கிட்டு தண்ணிய குடிங்க….தண்ணிய குடிங்க…டவுட்டு இருந்தா ‘செங்குட்டுவன் வாண்டையாரை’ கேளுங்க… கதை கதையா சொல்லுவார்….!!!
ஒன்னு தெரியுமா உங்களுக்கு…. உங்க ஆளுங்க ஒட்டுமொத்த மூவேந்தரின் வரலாறை ‘சோழனில்’ இருந்து தான் ஆரம்பிக்கிறாங்க…..தெரியுமா உங்களுக்கு? பாவாணருக்கு இந்த விஷயம் தெரிஞ்சா தலையில் அடிச்சிக்குவாறு…ஹா…ஹா…ஹா…
“”பாவாணருக்கு இந்த விஷயம் தெரிஞ்சா தலையில் அடிச்சிக்குவாறு…ஹா…ஹா…ஹா…”
பாத்து அடிச்சிக்க சொல்லு இல்லையன தலயில இருக்கிற களிமண்ணு கிழே கொட்ட போகுது..!!
பொய்யும் பொய் சார்ந்த பகுதியே உன் வரலாறு… ஆந்திராவில் இருந்து வந்த பள்ளர்கள் இன்று தமிழர்களாம்..??? பார்டா..நம்ம வீட்டு செத்த மாட்ட திண்ணவன் இப்ப நம்ம ஊரயே அவன் வீடுங்குறான்.
களிமண்ணு எழுதுச்சு வண்டல் மண் எழுதுச்சு-னு ஒரு பொய்யை வைத்து பல பொய் சொல்லாம..! செப்பேடு தேடி படி..!! சரியான ஆதாரம் தேடு..!! முடிந்தால் தஞ்சை தமிழ் பல்கலைகழகம் போ…
எந்த செப்பேட்டை படிக்க சொல்ற?
20 க்கும் மேற்பட்ட செப்பேட்டில் பள்ளனை பத்தியும், அவன் தான் பாண்டியன்னு சொல்ற செப்பேட்டை படிக்க சொல்றியா? நான் படிச்சிட்டேனே….நீ இன்னும் படிக்கலியா…? ஐயோ பாவம்…. வேணும்னா சொல்லு…அந்த விவரங்களை நான் சொல்றேன்….!!
உலகம் போற்றும் பாவாணர் ஒரு களிமண்ணு…
ஒரு கூட்டத்துக்கு மட்டுமே தெரிஞ்ச வேங்கடசாமி சாக்கடை மண்ணா?
உளறலாம்…ஆனா தியாகு அளவுக்கு தெளிவா ஒளர கூடாது….!!!
இன்றும் தெலுங்கு பேசும் சக்கீலியரே கடசியாக ஆந்திராவிலிருந்து வந்தேறிகள்..எதற்கு தெரியுமா அதுவரை நீங்கள் செய்த வேலையை செய்ய….நீ பள்ளுப்பாட்டு படித்தால் உனக்கு தெரியும் திராவிட மண் உனக்கு சொந்தமல்ல…
தஞ்சை பல்கலைகழகம்நீ சென்று இருந்தால்.. செப்பேடு பார்க்கலாம் அங்கு பாண்டியர்கள் யார் என்பதைநீ அறியலம்..
அதனால் தான் பொய்யை மட்டுமே பிரதானமாக சொல்லும் உங்கள் இனையதளங்கள் பள்ளு பாட்டு பள்ளர்களை பற்றியதல்ல என பொய் சொல்லிக்கொண்டன…
பள்ளுபாட்டே தலித்களின் வாழ்விலை முற்றிலும் சொல்வது..உண்மை இப்படி இருக்கையில் .. நீங்கள் எங்களை போல் ஆசையிருந்தால் வேசம் போடலாம் !!! மன்னர் மாதிரி வேசம் போட எல்லோரும் உரிமை பெற்றவர்கள்…
ஆனால் நாந்தான் மன்னன் என்று நாடகம் முடிந்த பின்னாலும் சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி சிரிக்காமல் இருக்கமுடியும் “ஹா…ஹா…ஹா”” “ஹா…ஹா…ஹா””
சிரி ராசா…..வெறும் வாய் சவடால் மட்டுமே பேசும் உனது பொழப்பு இங்கே சிரிப்பா சிரிக்குது….!!! இது வரைக்கும் கேட்ட எல்லா கேள்விக்கும் அப்படியே ‘டான் டான்’ன்னு பதில் சொல்லிட்ட…..இப்போ பள்ளு பாட்டுக்கு தாவிட்டியாக்கும்….? …..எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம டபாய்க்கும் உன்கிட்ட அதை பத்தி நான் எப்படி பேச முடியும்?
‘தஞ்சாவூருக்கு போ, செப்பேட்டை படி’ன்னு சொல்றியே…. என்னைக்காவது அந்த செப்பெட்டையோ, வரலாற்றையோ நீ படிச்சிருக்கியா? அதை படிச்சிருந்தா தான் இந்நேரம் அதை எல்லாத்தையும் ஆதாரமா இங்க அடுக்கிரிப்பியே…? இப்படி ‘வாயிலேயே வட சுட்டுக்கிட்டுகிட்டு’ இருக்க மாட்டியே..?
எந்த கேள்வி கேட்டாலும் ஒரே பல்லவியை தான் நான் பாடுவேன்னு நீ சொன்னா, அதன் லூசு தனமான மொக்கை விவாதத்துக்கு நான் வரல… என்னையை விட்டுடு….!!!
‘வரலாற்றை படி,செப்பேட்டை படி’ன்னு துல்லியமா விவாதம் பண்ற உன்கிட்ட எல்லாம், நெத்தி அடியை ஆதாரங்களை அடுக்கும் நான் எல்லாம் எம்மாத்திரம்?
நீ பாடும் பல்லவிக்கு நான் சரணம் எழுதிக்கொண்டிருக்கீறேன்… நன்றாக உன் கண்ணில் விளக்கெண்னையை ஊற்றி… எனது பதிலை படி…
உனக்கு வரலாறும் தெரியாது…புராணமும் புரியாது..!! ஆதாராமுனு சொல்லிட்டு உன் பள்ளன் சொல்ற ஆதாரத்தையே மங்களம் பாடிகிடாதா..??
முதல் பதலிலேயே உன் ஆதாரம் பொதுவான் ஒன்றாக இருக்கவேண்டும், வரலாற்று பட்கிவா இருக்கவேண்டும் என எத்த்னை முறை சொன்னாலும்…அரைத்த மாவு புளிச்ச மாவு இனையமான கீற்று,போர்பறை போன்ற பொய் சொல்லிகளை ஆதாரமென்றால் எப்படி..?
இல்லை உன் பள்ளன் எழுதிய பொய் உரையைநீயும் உரத்தால் எப்படி?
கல்வெட்டை பற்றி சொல்.>!!!
செப்பெடு பற்றி சொல்.>!!!
பனையோலை ஆதாரம் காட்டு.>!!!
வரலற்று தடயம் காட்டு.>!!!
இன்னும் எவ்வளவோ இருக்கிறது..
இதில் ஏதெனும் ஒன்று உனக்கு இருக்கிறதா…?????
ஊசிப்போன பொய்களை கையில் வைத்துக்கொண்டு இதை நம்பு என என்னிடம் கெஞ்சுவது ஏன்????
முதலில் அதை பள்ளனே நம்புவானா என பாப்போம்!!!!!
//கல்வெட்டை பற்றி சொல்.>!!!
செப்பெடு பற்றி சொல்.>!!!
பனையோலை ஆதாரம் காட்டு.>!!!
வரலற்று தடயம் காட்டு.>!!!
இன்னும் எவ்வளவோ இருக்கிறது..
இதில் ஏதெனும் ஒன்று உனக்கு இருக்கிறதா…?????//
காட்டிட்டா மீசை எடுத்துகிரியா?
//ஊசிப்போன பொய்களை கையில் வைத்துக்கொண்டு இதை நம்பு என என்னிடம் கெஞ்சுவது ஏன்????//
ஓகோ….உன் மனசுல இப்படி ஒரு நெனப்பு இருக்கா…..முதலில் மரியாதை இருந்துச்சு…….இங்க நான் கமெண்ட்டு போடுறதோட அர்த்தம் இது தான்….அது ஏதோ உன்கிட்ட நான் வாதம் பண்றதா நெனைச்சி அசிங்கப்படவேண்டாம் ….!!!
“வினவு என்பது ஒரு நாளைக்கு சுமார் 20000 க்கும் அதிகமானோர் பார்வையிடும் ஒரு பொது தளம். மாறாக ‘தேவர் தளம், கள்ளர் பேரவை’ மாதிரி கண்டதையும் எழுதிவைத்துவிட்டு, விவாதம் செய்ய எந்த வாய்ப்புமே இல்லாமல் செய்யும் அநாகரிகமான இணையத்தளம் வினவு அல்ல. இங்கே நான் எழுதி இருக்கும் கருத்தக்கள் வெறும் கருத்துக்கள் அல்ல.
“பதிவு”.
காலம் தோறும் தொடர்ந்து வரும் பதிவு. பல வருடம் கழித்து பார்த்தாலோ, இல்லை தேடு பொறிகளில் தேடினாலோ இப்படி பட்ட கருத்துகளே கண் முன் வந்து நிற்க வேண்டும் என்பது தான் என் நோக்கம்.”
மற்றபடி ‘தியாகு’ போன்றவர்ளுக்கு மாஞ்சி மாஞ்சி பதில் சொல்ல நான் என்ன கிறுக்கனா? சுருக்கமா சொன்னா…நான் உம்மை காமெடியனா வச்சிக்கிட்டு என்னுடைய வரலாற்றை இங்கே ஆதரங்களோட அடுக்கி இருக்கேன்…மேலும் கள்ளன் எப்படி எல்லாம் கேள்விக்கு பதில் சொல்லாம நழுவுறார் என்றும் தெரியப் படுத்தி இருக்கேன்….என்னுடைய வாசகர்கள் நீங்க கிடையாது தியாகு….பல சந்தர்ப்பங்களில் இங்கே வந்து இதை படிப்பவர்களே….!!!
//ஆந்திராவில் இருந்து வந்த பள்ளர்கள் இன்று தமிழர்களாம்..???//
நிருபிக்கணும்….இல்லை, மீசையை எடுத்துக்க தியாகு…..!!!
யார் வந்தேறி என்று உண்மையில் தெரிசுக்க முதலில் இதைப்படி…
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21196:2012-09-17-17-47-56&catid=25:tamilnadu&Itemid=137
புரியவில்லை என்றால் உங்க ஆளுங்களே உங்களை வந்தேறிகள் என்று சொன்ன தகவலை ஆதாரத்தோட அப்புறம் சொல்றேன்….!!!
உன் சாதி இனையத்தையே ஆதாரமா தரியே..!! ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னா உண்மையா..!!!
நான் தேவர் இனைய முகவரியை தாரமா தர எத்தனை நேரமாகும்..? நான் பொதுவான ஆதாரத்தை தர தயாராக இருக்கிறேன்..
ஆனால் குருடனுக்கு மருத்துவம் பார்க்கலம் ஆனால் நீ குருடன் போல நடிப்பவன்..!!!
//நான் பொதுவான ஆதாரத்தை தர தயாராக இருக்கிறேன்..//
கொஞ்சம் சொல்லு….
உங்களுக்கு ரொமப நகைச்சுவை உண்ர்வு அதிகம் அண்ணாத்தே…உண்மை தெரியாத மாதிரியே நடிக்கீரிகளே..!!!
உங்க பட்டமே குடும்பன்!! குடும்பனின் தொழிலும் வாழ்வும் தாய்மொழியும் எது என்று கன்னிமாரா நூலகம் அல்லது அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்று தேடி படி… அறிவு தேடி சென்றாலே வளரும்…உண்மை அறிய உதவும்
நான் யார்க்கும் இலவசமாக சொல்வதற்கு இல்லை … தமிழ் சாதிக்காரர்களை தவிர..!!!! !!!
ரஜினி சொன்னத எடுத்துக்கிட்டீங்க போல ” தமிழ் பேசுரவங்க எல்லாம் தமிழ்ர்கள்” … மண்ணிக்கனும் அண்ணாத்தே… நாங்க அப்படி உங்கல ஏத்துக்க முடியாது…
இன்னமும் நாயுடு சனங்களும் உங்கள மாதிரி நாங்க தமிழுனு சொல்லும்…
நிக்க இடம் கொடுத்தா…உட் கார இடம் கேட்பதே வேளையா போச்சு…
//நான் யார்க்கும் இலவசமாக சொல்வதற்கு இல்லை … தமிழ் சாதிக்காரர்களை தவிர..!!!! !!!//
உனக்கும் ஒரு எழவும் தெரியாதுன்னு இங்க இருக்குற எல்லாத்துக்கும் தெரியும்….அதுக்கு இந்த ஜால்ஜாப்பா?
// ” தமிழ் பேசுரவங்க எல்லாம் தமிழ்ர்கள்” … மண்ணிக்கனும் அண்ணாத்தே… நாங்க அப்படி உங்கல ஏத்துக்க முடியாது…//
யாருக்கு வேணும் உன்னோட பீத்தல் எல்லாம்….? நீ யாருன்னு உன்னோட ஆள் தினகரன் சொல்றாரு..படி…!!!
முதுகுளத்தூர் கலவரம் பற்றி ‘தினகரன் (மறவன்)’ சொல்வது:
——————————————————————————————-
கொண்டையன் கோட்டை மறவர்கள் ஆந்திராவில் கிலுவ நாட்டில் இருந்து இராமநாத புரத்திற்கு வந்தனர். கிலுவன் என்பதையே கிழவன் என மாற்றிகொண்ட இவர்கள், கமுதி பகுதியில் முதன் முதலாக குடியேறியதால் அதை ‘முதல் நாடு’ என்று பெயரிட்டு அழைத்தனர். எனவே முதுகுளத்தூர் கலவரம் என்பது ‘வந்தவர்களுக்கும், இருந்தவர்களுக்கும்(பள்ளர்கள்) இடையேயான மோதல்’…. (இப்படி உண்மையை பூரா சொன்னதால தான் அவர் மரவனாலேயே போட்டு தள்ளப் பட்டார்).
மறவன் உட்பட முக்குல ஆட்கள் அனைவரும் வந்தேர்கள் என்று உங்கள் ஆட்களே சொன்ன தகவல்கள் (அட …தேவர் தலமே சொல்லுது தியாகு….ஐயோ பாவம்…) எத்தனை வேணும் உனக்கு…? அதை எடுத்து இங்க நான் போட்டா கடைசியில் நீ என்ன சொல்லுவா?
*ஒன்னு சாதியை பத்தி சாதி காரனே எழுதினதை எடுத்துக்க கூடாதுன்னு சொல்லுவ…
* இல்லைனா, தஞ்சாவூர் போ, கன்னிமாரா நூலகத்துக்கு போ….ன்னு டூர் கைடு வேலை பாப்ப……
* முடியாது நீய சொல்லுன்னு கேட்டா….”நான் உனக்கெல்லாம் சொல்ல மாட்டேன்னு” ஒரே பல்டியா அடிப்ப….. தக்காளி….விவாதம் பண்றதுன்னா என்னன்னு உன்கிட்ட தான் கத்துக்கணும்….!!!
என்னோட மிக சாதரணமான கேள்வி:
* பள்ளன் தெலுங்கன்… அப்படின்னா தமிழ் கடவுள் முருகன் ஏம்பா ‘தெய்வானை கல்யாணம்’ முடிஞ்ச உடன் பள்ள மடத்துக்கு மறுவீட்டுக்கு போறாரு? ஏன் (சும்மா ஒரு பேச்சுக்கு) கள்ள மடத்துக்கு போகல? தமிழ் கடவுள் கொண்டு கொடுத்து உறவு முறை வச்சுகிட்ட பள்ளன் தெலுங்கனாம்…!!! எல்லாம் கை கொட்டி சிரிங்கோ……
* தமிழ் கடவுள் முருகனின் பழனி மலையில் எதுக்கு முதல் மரியாதையும், பரிவட்டமும் பள்ளனுக்கு தராங்க? ஏன் பழனி செப்பேட்டில் கோவில் பள்ளனுக்கே உரியது என்று எழுதி வச்சிருக்கு? ஏன் மறவனுக்கு எழுதி வைக்கல…? (எனக்கு தெரியும்… நீ வழக்கம் போல இதுக்கு பதில் சொல்ல மாட்ட தியாகு….திரும்பவும் அதே பல்லவி தானே…’நீ செப்பேடு படிச்சிருக்கியா, தஞ்சாவூர் போய் இருக்கியா”..அதானே?)
எனக்கு ஒன்னும் தெரியலனு அண்ணாத்தே சொல்லிடாக.!!!
ஒன்னும் தெரியாதவனுக்கு எதுக்கு ஒன்பது முறை யோசிச்சி யோசிச்சி பதில் போடனும்!!
கடுங்கோன் அழ வேண்டாம்!! விவாதமென்றால் இது சகஜம்!
சகமனிதனாய் உன்னை பார்க்கும் போது, எனக்கு மனம் இரக்கம் கொள்கிறது
//ஒன்னும் தெரியாதவனுக்கு எதுக்கு ஒன்பது முறை யோசிச்சி யோசிச்சி பதில் போடனும்!!//
கமெண்ட்டு எண் 29.3.1.1.1.1.1.1.1.2 படிக்கவும்….
அவரு படிக்காம இல்ல. தெளிவா நழுவுறாராம்…
சூப்பர் தோழா…என் எண்ண ஓட்டமும் இதுவே…
ஆயிரம் தேவர் படங்கள் லட்சம் பொய் வரலாறுகள் நீங்கள் எழுதினாலும்..உண்மை என்றும் மறையாது…திருடன் திருடன் தான் கள்ளன் கள்ளன் தான். we are moovendars..i will prove who are devendirars… poi polappa paakura valiya paarungada..
அட அரமேண்டல்களா..
கமல், அமீர், லிங்குசாமி, சசிகுமார் எல்லாம் அழிவின் விளிம்பில் இருந்த மாதிரி பேசுறீங்களே? சசிகுமார் இதுவரை எடுத்த படம் எல்லாமே ஹிட்டு.
சேரன் பெட்டி படுக்கையோட கிளம்புனப்போ பாரதி கண்ணம்மா படம் எடுத்து ஈன பொழப்பு நடத்துன மாதிரி எல்லாரும் இருப்பாங்க நு நினைச்சிய?
நீ சொன்ன மாதிரியே வச்சாலும் என் தேவர் சாதியை நம்பினவர் அழிந்து போனதில்லை நீயே ஒதுக்கிட்ட. தேவர் சாத்திய நம்பினவங்கள வாழ வச்சு தான் பழக்கம்.
மத்தவங்க மாதிரி முதுகுலகுத்துறது, அடுத்தவங்க வரலாற்றை திருடுவது(இவர்கள் சோழ குலமாம்), அடுத்தவங்க பேருல உள்ள அடைமொழியை திருடி தன் தலைவனுக்கு வைப்பது(தெய்வீக திருமகன் இம்மானுவேல்) என்பது போன்ற பிழைப்பு பிழைக்க வேண்டிய அவசியம் தேவர் இனத்திற்கு இல்லை.
நீங்க யாரு….தியாகுவோட கசின் பிரதரா….? அவரு தான் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம டபாய்க்கிறாரு…..அங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டு அப்புறம் யாரு பட்டத்தை யாரு வச்சிருக்காங்கன்னு பேசலாமே…?
எங்க இவங்கலையெல்லாம் தேவர் சாதி மட்டும் எங்க படத்தை பார்ர்த்தா போதும்னு தைரியமா சொல்லி ரிலீஸ் பண்ண சொல்லுங்க…. படம் நூறு நாளில் செவ்வாய் கிரகம் வரை ” ஓடும்”….. வெளியில் நீங்க சொல்லிய நபர்களை ஆமா நாங்க முக் குலத்தோர்தானு சொல்லச்சொல்லுங்க… நத்தி பொழைக்க இது தேவை இல்லை…கருணாஸ் மாதிரி தேவக்கு பயன்படுத்ததான் உங்க சாதி…. அண்ணே உங்க சாதி செந்திலை அந்த கவுண்டமணி இந்த பொறட்டு பொறட்டுனாரே உங்க சாதி மேல அவ்ருக்கு என்னணே கோவம்…..
சிவாஜி தொடங்கி கருணாஸ் வரை தாங்கள் எந்த சமுதாயத்தி சேர்ந்தவர்கள் என்று திரைப்படங்களில் வெளிப்படுத்துவது இல்லை. எல்லாம் திரை மறைவில் நடக்கும் ‘சாதி’ கூத்துகள் தான். இவ்ளோ சாதி வியாக்கியானம் பேசுறவங்க, ஏன் அப்படி பம்மனும்….? “நான் இந்த சாதிக்காரன். இந்த படம் எனது சாதிக்கரனுக்காக. வேறு யாரும் இந்த படத்தை பார்க்கும்படி நான் வற்புறுத்தல”ன்னு டைட்டில் கார்டு போட்டு படம் எடுத்துட்டு அப்புறம் மீதி கதை பேசலாமே?
இவங்க குருப்ல சமுத்துரகனி நு ஒருத்தர் இருக்கார் பாருங்க இவரின் தயாரிப்பு படங்களையும் பார்த்தா தொடர்ந்து ஒரு விசயத்தை பதிவு செய்துவிட்டு வருகிறார் அதாவது தேவர்சாதிகாரங்க ரொம்ப நல்லவர்களாகவும் இந்த நல்லவங்களுக்கு தன் உயிரையும் கொடுத்து இவர்களை போற்றி பாட,சேவையும் செய்ய ஒரு தலித் குடும்பத்தையும் உருவாக்குகிறார்கள்,
சமுத்திரகனி போனவருட புத்தக கண்காட்சியில் என்ன என்ன புத்தகம் வாங்கினீங்க என்று விகடனில் வந்த போது முத்துராமலிங்கம் புத்தகத்தை தேடி தேடி வாங்கினதா பதிவு செய்தார்,இவரின் நண்பர் சசிகுமார் யாதவர் என்று நினைக்கிறேன் சென்னை மவுன்ரோட்டில் சசிகுமார் யாதர் என்று இவரை வரவேற்று ஒரு திருமணத்திற்க்கு போஸ்டர்கள் ஒட்டியிருந்ததை பார்த்தேன்.
Well reviewed. The hero not having a job is something that i have wondered about while i watch tamil films… now i know i am not alone 🙂
When you think of Sasikumar Hard core Violence comes to your mind. His first movie Subramaniapuram had a scene where he kills someone very violently using a knife and cuts the person like a vegetable and blood splats on his face. Madurai has been shown as a violent city. It is totally negative. I grew up and got educated in Madurai. I love Madurai for the fact that there are such wonderful high thinkers with a great deal of knowledge and it is not violent as Chennai.
சினிமா விமர்சனம் படிக்கலாம்ன்னு வந்தா இங்க ஜாதி விமர்சனம் தான் இருக்கு. நீங்கல்லாம் திருந்தவே மாட்டிங்களா? எந்த ஊர்ல தேவன் நாட ஆள்ரன் தலித் கூலி வேல பார்க்கறான்? 2012 ளையும் இந்த ஆராய்ச்சி பண்ணி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் ஏன்யா வீனடிக்ரிங்க
நீங்க முதலில் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு, அதுவும் தென் தமிழ் நாட்டுக்கு வாங்க பாஸ்…. அங்க இருந்து பாத்தா ஒன்னும் தெரியாது….
சினிமா மட்டுமல்ல. விளம்பரத்தில் கூட தலித்துகளுக்கு உயர்வு தருவது போல் இருந்தால் அதையும் கட் செய்து எடுத்துவிடுகிறார்கள். இப்போது சூர்யா நடிக்கும் அதே மலபார் விளம்பரத்தில் முன் இசை மேதை இளையராஜாவை வைத்து ஒரு விளம்பரம் ஒளிபரப்பினார்கள். அதில் கோயில் பிரகாரத்தில் அமர்ந்து ஒரு பெண் பாடுவது போலவும் அப்பாட்டின் ராகத்தை இளையராஜா அவர்கள் எடுத்துத் தருவது போலவும் விளம்பரம் வரும். பின் அந்தப் பெண் இளையராஜா அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது போலவும் வரும்.
விடுவார்களா நம் மேட்டுக்குடி மக்கள்!!! இளையராஜா என்ற தாழ்த்தப்பட்டவரின் காலில் கர்நாடக சங்கீதம் பாடும் பெண் விழுவது போல் காட்சியா?? என்று கட் செய்து எடுத்துவிட்டார்கள். என்ன ஒரு வெறி பார்த்தீர்களா.
I dont think anyone in the world will feel respecting Ilayaraja will be a wrong thing.
Dont over think things,it is normal for new ad campaigns to come up.
Most of my brahmin friends dont even know that Ilayaraja is Dalit.
1). அவரின் திறமைக்கு நிச்சய்ம் மரியாதை கொடுத்தே தீர வேண்டும்.
(காலில் விழும் கலாச்சாரத்தை நான் ஆதரிக்கவில்லை.
ஆனால் ஏன் முதலில் காலில் விழுவது போல் எடுக்க வேண்டும்? பின் ஏன் அதை கட் செய்து எடுக்க வேண்டும்.?
2). உங்களின் இரண்டாவது வரிக்கு என்னால் சரியான அர்த்தம் புரிந்து கொள்ளமுடியவில்லை.
3). உங்களின் பிராமின் நண்பர்களுக்கு, இளையராஜா அவர்கள் தலித் என்று தெரிந்திருந்தால், அவரின் காலில் விழுந்திருப்பார்களா? அல்லது அவரின் பாட்டை கேட்பதை நிறுத்தியிருப்பார்களா?
I also did not understand it completely,i thought it was about changing the ad,i did not see the cutting of the scene.
And my friends would not mind falling at his feet regardless of his caste.
இளையராஜா இசை துறையில் மட்டும் வல்லவர். ஆனால் அம்பேத்கர் பல துறையில் வல்லவர் ஆனால் அவரை ஒரு சாதியின் குறியீடாக மட்டும் பார்ப்பதேன்?
ஒரு வேளை இளையராஜா தன் இனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக குறல் கொடுத்திருந்தால் உங்களுக்கெல்லாம் பிடிக்காமல் போயிருக்கும்?
பின்பு உங்களுக்கெல்லாம் பிடிக்கும், பிடிக்காததைவைத்து ஒருவரின் ஆளுமையை தீர்மானிக்கும் அளவுக்கு இங்கு யாருமில்லை, புரியுதா?
Who disrespects Ambedkar here?
Ambedkar chose to represent Dalits and hence he is seen as a symbol of that caste or society,what is wrong in that?
He is still respected.
Ilayaraja will always be respected for his musical talent and personality,regardless of his political views.
whats the problem here?
தாங்க முடியலயே…
பேசாம ‘திராவிட’ இயக்கங்களில் சேருங்கள்…
காலில் விழும் கலாச்சாரத்தை நான் ஆதரிக்கவில்லை.
ஆனால் ஏன் முதலில் காலில் விழுவது போல் எடுக்க வேண்டும்? பின் ஏன் அதை கட் செய்து எடுக்க வேண்டும்.?
இதெல்லாம் எப்படி யோசிக்கீராங்க…..புறநகரல ரூம் போட்டு சிந்திப்பாய்ங்களோ..???????
தியாகு அண்ணன் கிளம்பிட்ட்ட்டார்ர்ர்ர்ர்ர், இனி அடுத்த பதிவில் சந்திப்பார்….
//இளையராஜா என்ற தாழ்த்தப்பட்டவரின் காலில் கர்நாடக சங்கீதம் பாடும் பெண் விழுவது போல் காட்சியா?? என்று கட் செய்து எடுத்துவிட்டார்கள். என்ன ஒரு வெறி பார்த்தீர்களா.//
YEPPADIYELLAM UNAKKU YOSIKKA THONUTHU??????????????
SEMA COMEDY…………
Here Ravi has given very good explanation for the Review!
Moreover, allthings are getting highlighted only by over voice and noise. Better, see this as a movie, just an entertainment…afterwards forget and concentrate on our work and life! why to discuss too much….
Cinema is just an entertainment. Nobody is going to theater for getting some msgs from the film for their religion/caste/personal/official life.
At the same time, some films giving good msgs, we agree.
But People wanted to get relaxed & enjoy the movie with their friends/family/children only. In that way – it is a nice movie..
And surprised to see this kind of review in 2012!!!??
பின்னூட்டம் எண்கள் 35 மற்றும் 36
பொழுதுபோக்கிற்குத் தான் சினிமா என்றால் டிஸ்கவரி சேனல் பார்த்துவிட்டுப் போய்விடலாமே!!!
டிஸ்கவரி சேனல் என்ன உங்க ஊர்ல சினிமா சேனாலா..??? 🙂 எவனும் உறுப்படியா பதில் சொல்ல மாட்டான் போல… புரட்டா பற்றி கேட்டா… நாயர் கடை வடை நல்ல யிருக்குமுனு சொல்றான்…
அதெல்லாம் இருக்கட்டும் அண்ணாத்தே மேலே கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல காணுமின்னு உங்கள தேடிகிட்டிருக்காங்க…. நீங்க என்னடான இங்க வந்து…… “அம்மா” கிட்ட பன்னிர்ர் தேவர் மாதிரி சத்தமில்லாம சவடால் விடுறீங்க…..
உங்களுக்கு மட்டும் இல்ல..இந்தியாவுல இருக்குற எல்லா பயலுகளுக்குமே இப்போ இந்த களவானி பயலுக மேல வயித்தெருச்சலும் பொறாமையும் பொத்துக்கிட்டு வருதாம்பா…முதல்ல இந்தியா அளவுல ஆரம்பிப்போம்…..பி.ஆர்.பி.யோட சொத்து விபரம் பத்தி ஆஸ்ஸோகாம் லாபில போன வாரம் பேச்சு வந்து இருக்கு…அப்போ அவரொட சொத்து ஒரு லட்சம் கோடிய தாண்டும் என்று நம்பிக்கையா சொல்றாங்க…அப்புறம் சுடார் கார்மெண்ட் ஒரு கெமிக்கல் கம்பனிய வாங்கியிருக்கு…சுடார் கார்மெண்ட் இப்பொ சுடார் இன்டஷ்ட்ரினு அவதாரம் எடுத்திருக்கு..அதோட முதலாளி முத்தையா தேவரோட சொத்தும் மதிப்பும் பல மடங்கு அதிகம் ஆயிடுச்சு…மெடிககல் கவுன்சிலில் எங்க தேவரின கல்வி கோவில் “வேலம்மாள்” ஆரம்பித்து இருக்கும் மெடிக்கல் காலேஜ் பற்றி தான் பேச்சு அவ்ளோ பிரம்மாண்டமாம்….இப்போ தமிழ்நாட்டுக்கு வருவோம்…சினிமாவுல 90 சதவீதம் நம்ம பயலுக தான்….
தமிழகமே ஏன் இந்தியாவே எதிர் பார்த்து இருக்கும் கும்கி பட நாயகன்,தயாரிப்பாளர்,கேமராமேன் எல்லாருமே நம்ம பயலுக…
தமிழகமெ ஏன் இந்தியாவே எதிர் பார்த்து இருக்கும் கடல் பட நாயகன் நம்ம தேவர் வீட்டு சிங்க குட்டி…
அரசியல்ல சொல்லவே வேணாம்..எல்லாமே நம்ம பயலுக தான்…
தி.மு.க. வுல இப்போ ஒரே சண்ட ..கேபினெட் மினிஷ்டரா டி.ஆர்.பாலுவா இல்ல டி.கே.எஷ்.இளங்கோவனா..இல்ல..பழனிமாணிக்கமானு…3 பேரும் நம்ம பயலுக
அ.தி.மு.க.பாராளுமன்ற தேர்தல் குழுவுழ மொத்தம் 4 பேராம்..அதுல 3 பேரு நம்ம பயலுகளாம்….பேரும் நம்ம பயலுக…
உங்க வயித்தேருச்சல் நியாயமானது தான்….தேவனோட வளர்ச்சிய எந்த பயலும் தடுக்க பண்ணமுடியாதுப்பு…சுந்தரபாண்டியன் பட விமரிசனம் என்பதை விட தேவரின மக்கள் மீதான வயித்தெருச்சல் என்பதை எல்லோராலும் புரிந்த்து கொள்ள முடிகிறது…
பிராத்தல் கேசுல மாட்டுன புவனேஸ்வரி,
அந்த கர்ப்புகரசியை மகளிர் அணி தலைவியாக அறிவித்த மூ.மூ.க சேதுராமன்,
‘பள்ளன்’ தான் பாண்டியன் என்று நீதிமன்ற தீர்ப்பு (ஜூலை 2 1930 கொல்லம் நீதிமன்றம்: வாதி பிரதிவாதி , மறவன்,பள்ளன்) வந்த பின்பும், வேறொருத்தனோட பேரை, தன்னோட பேருக்கு பின்னாடி போட்டுக்கிட்டு திரியிற நபர்கள்,
தமிழின துரோகியான சுப்ரமணிய சாமியோட கூடி குலாவும் முக்குல சினிமா ஆட்கள்,
காட்டிகொடுக்குரதையே குல தொழிலாக கொண்டுள்ள மலையக மக்களின் தலைவர் ஆறுமுக தொண்டைமான்…. —– (இந்த லிஸ்டு பெருசு…)
இப்படி எல்லாத்தையும் பாத்து மத்த சனங்க வாயடிச்சி போய் தான் நிக்கிறாங்க…..இப்படி கீழத்தரமான செயல்களில் இறங்கிய நபர்களைப் பார்த்து ‘அடடா நம்மால் இப்படி இருக்க முடியவில்லையே’ என்று நிறைய பேர் பொறாமை பட்டு தான் இருக்கிறார்கள்….!!!
எப்படி வேணும்னாலும் வாழலாம்னு நினைக்கிறவன் தான் உங்களை பாத்து பொறாமை படுவான்…
இப்படி தான் வாழணும்னு நெனக்கிறவன் உங்களை சீந்த கூட மாட்டான்….!!!
அந்த நீதிமன்றம் எங்க ராசா இருக்கு..? உங்க வீட்டு கொள்ளை புறத்திலயா..?
ஒரு சின்ன தூசி இருந்தாலே அது இமயமலை உயரமுனு அளந்து விடுவிங்க… இது வேறையா..? ஏற்கணவேநீங்க அரிச்சந்திரன் வீடுக்கு அடுத்த வீடு.. இதுல இப்படி வேரையா..?
//அந்த நீதிமன்றம் எங்க ராசா இருக்கு..? உங்க வீட்டு கொள்ளை புறத்திலயா..?//
தெரியவில்லை என்றால் கேட்டு தெரிஞ்சுக்கணும்…. என்ன எப்ப நடந்துச்சுன்னு நான் சொல்றேன்….அது உண்மைன்னு தெரிஞ்சிட்ட நீங்க உங்க மீசையை எடுத்துகிறீன்களா? இனிமே எந்த காலத்திலும் முக்குல ஆட்கள் ‘பாண்டியன்’ என்ற பேரை பயன்படுத்த மாட்டோம்னு சத்தியம் செய்றீங்களா?சொல்லுங்க திருவாளர். தியாகு….!!! இந்த புடிச்சிகாங்க அந்த கேஸ் details
“செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் இடையே தொடர் சாதிய மோதலையோட்டு 1920களில் பாண்டியர் என்னும் பட்டம் தங்களுக்கே உரியதென்றும், பள்ளர்கள் தங்களைப் பாண்டியர் என்று அழைத்துக் கொள்ளக் கூடாதென்றும் மறவர்கள் சார்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கொல்லம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட வரலாற்று ஆவணங்கள், நில ஆவணங்கள், அரசுப் பதிவுகள் ஆகிய ஆதாரங்களை ஏற்று ‘பள்ளர்கள் தான் பாண்டியர்கள்’ என்று கொல்லம் நீதி மன்றம் தீர்ப்பு தந்துள்ளது.”
—
Quilon District Court Judegement, Travancore State.
நாவலாசிரியர் பூமணி (நேர்காணல்)
* இந்த தீர்ப்பு வந்ததும், கேஸ் போட்ட மறவர்கள் கோர்ட்டு வாசிலேயே தீர்ப்பு நகலை கிழித்தெறிந்துள்ளனர். ‘கோர்ட்டு சொன்னாலும் சரி…’ இனி நம்ம எல்லாரையும் மத்தவங்க பாண்டியன்னு தான் கூப்பினடும்னு கங்கணம் கட்டுனாங்க….’ஏம்பா இந்த வேலை எல்லாம், அதெல்லாம் thappu, பள்ளன் தான் பாண்டியன்’ன்னு இன்னொரு மறவர் கூட்டம் எதிர் பரப்புரை செஞ்சதும் நடந்திருக்கு…செங்கோட்டை பக்கம் 80 , 90 வயசான மறவர்கள் யாரவது இருந்தா கேட்டுபாருங்க…. சொல்லுவாங்க…. யார் பாண்டியன்னு…!!!
* இதுவும் போதாதுன்னா இன்னும் சொல்றேன்…
1920 க்கு பின் ‘பாண்டியர் சங்கம்’ என்ற ஒன்றை அமைத்து நடத்திய ஒரே சாதியினர் ‘பள்ளர்கள்’ மட்டுமே…
* இன்னும் சொல்றேன்…
பள்ளன் தான் பாண்டியன் என்று கோர்ட்டு தீர்ப்பு, வரலாற்று ஆவன்களை ஏற்று அன்றைய ஆங்கிலேயே அரசு, புதிதாக வெளியட்ட சாதி பட்டியலில் ‘பள்ளன்’ என்பதற்கு பதியாக ‘பாண்டியன்’ என்றே மாற்றி வெளியிட்டுள்ளனர். இதுவும் வரலாறு.. ஒருவேளை இதை நீங்க நம்ப வில்லை என்றால் அது சம்பந்தப்பட்ட அனைத்து தாச்தாவேசுகளையும் இங்கே நான் ஸ்கேன் செய்து போட தயார்….!!! மீசை எடுக்க நீங்கள் தயாரா தியாகு?
மேலதிக தவல்கள் வேணும்னா உமா சங்கர் ஐ.எ.எஸ் சையும், ‘அங்காடி பூமணி’ அவர்களையும் கூட நீங்கள் கேட்டுத் தெளிவு பெறலாம்…!!!
“”மேலதிக தவல்கள் வேணும்னா உமா சங்கர் ஐ.எ.எஸ் சையும், ‘அங்காடி பூமணி’ அவர்களையும் கூட நீங்கள் கேட்டுத் தெளிவு பெறலாம்…!!!”””
பள்ளஙளுக்காக பல பல பொய் உருண்டைகளை உருட்டியதே..இந்த உமாசங்கர் எனும் மதமாற்றம் செய்யும் பாதிரிதான்..
மீண்டும் மீண்டு புளிச்ச விடயத்தை சொல்லாம..திருட்டுக்கு ஆதாரமா திருடனையே கொண்டு கொஞ்சம் கூட கூச்ச்மில்லையா..???
அரசாங்க ஊழியனாக இருந்துக்கொண்டே .. மதமாற்ற ஊழியம் செய்யும்..இந்த பாதிரி எல்லாம் ஒரு எடுத்துக்காட்டா..???
செல்லாது செல்லாது செல்லாது… இரத்தம் சொந்தம் உள்ள உன் ஆதாரம் செல்லாது!!!!
மறுபடியும் நீ ஒரு தற்குறின்னு நிருபிக்கிற பாத்தியா?
உமா சங்கர் பள்ளனா இருக்கலாம்? ஆனா தீர்ப்பு எழுதின நீதிபதி பள்ளனா? நான் என்ன சொன்னேன்…. மேலதிக தகவலுக்கு உமா சங்கரை கேளுன்னு சொன்னேன்…. உமா சங்கர் வேணாம்னா சொல்லு….!!! ஆனால் உள்ள தகவலுக்கு பதில் சொல்லு….!!!
இப்படி ஒரு தீர்ப்பு உண்மையில் இருந்தா.. பள்ளன் சும்மாயிருப்பானா..?
கேசு போடுறதுக்கு முன்னாடியும் பள்ளன் சும்மா தான் இருந்தான்…
கேசு போட்டது மறவன்….பள்ளன் அல்ல…
மூக்குடை பட்டதும் மறவன் தான்….!!!
தேவர்கள் உங்கள் வழக்கு போட்டார்களா.???
கடுக்கோன் நீங்க பதில் சொல்ல முடியாமா என்ன பொய் சொல்லறதுனு யோசிச்சி யோசிச்சி தூக்கமில்லாம மனநிலை பாதிக்கப்பட்டிருக்கீங்கனு நினைக்கீறேன். ! அதானால நல்ல டாக்டர பாருங்க!! அதுவரக்கும் காத்திருக்கேன்!!
நீங்க தலையும் புரியாம வாலும் புரியாம கமெண்ட்டு போடுவீங்கன்னு எல்லாருக்கும் தெரியும் தியாகு….ஏதோ பேசணும்னு வந்து பேசாதீங்க….இங்க நேரத்துல, செங்கோட்டை மேலூரில் இருக்கும் உங்க ஆளுங்க யாருக்காவது போன் போட்டு, என்ன நடந்தது என்பதை கொஞ்சம் கேட்டு சொல்லுங்க….!!! இல்லை என்றால், டெல்லிக்கு வாங்க..அந்த ஆவணத்தை பார்ப்போம்..அதுவும் இல்லை என்றால் உங்களில் நம்பிக்கையான ஒருத்தரை கள ஆய்வுக்கு கூட அனுப்பி வைங்க….அவரே போய் விசாரிச்சு, அவரே வந்து என்ன நடந்தது என்பதை சொல்லுவார்…..!!!
சீமான்,
காசி ஆனந்தன்,
அந்ஞாடி பூமணி,
ஜெயமோகன் என்ற பெரிய ஜாம்பவான்களிடம் கூட முடிஞ்சா போன் போட்டு இது சம்பந்தமா கேளுங்க….
இப்படி மொத்தமா ஒன்னு இல்ல, எத்தனை வழியா வேணும்னாலும் விசாரிச்சுக்கங்க என்று சொல்லும் நான் பொய் சொல்றேன்…எதையுமே செய்யாத நீங்க வாயிலையே வட சுட்டு….’வெற்றி வெற்றி’ன்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க…?
//அ.தி.மு.க.பாராளுமன்ற தேர்தல் குழுவுழ மொத்தம் 4 பேராம்..அதுல 3 பேரு நம்ம பயலுகளாம்….பேரும் நம்ம பயலுக…//
ஜெயலலிதா காலில் மண்ணோடு மண்ணாக விழுந்து வணங்குவது தான் வீரம்?
இதில் வைதேரிச்சல் பட என்ன இருக்கிறது, நமது சக தமிழன் இப்படி மானம் கேட்டு பொய் இருக்கிறானே என்று வருத்த பட மட்டும் தான் முடியும்…
பள்ளனை வருடாவருடம் பலியிடும் ஜான்பாண்டியன் 2001-ல் அம்மா காலில் விழுந்தாக..!
போன தேர்தலில் கிருஷ்ணசாமி அம்மா காலில்லேயே தலை வெச்சு கிடந்தாக..!
திருமாவளவன் அம்மா செருப்பை பாதுகாத்து திரிஞ்சாக..!!
செ.கு.தமிழரசு அம்மா செருப்பை தெய்வமா வழிபடுராக..!!
நீ சொன்னவன் எல்லாம் அ.தி.மு.க காரன்..நான் சொன்னது எல்லாம் உன் பள்ளன் கள் தலைவர்கள்..!!!
தேவர்களுக்கு எவனும் தலைவனில்லை!! அப்பாவி மாதிரியே பேசுரியே அடப்பாவி!
//தேவர்களுக்கு எவனும் தலைவனில்லை!! அப்பாவி மாதிரியே பேசுரியே அடப்பாவி!//
பார்வர்ட் பிளாக் தலைவர் கார்த்திக்,
மூ.மூ.க சேதுராமன், —- இவங்க எல்லாம் யாரு?
உங்க ஆளுங்க எல்லாம் அதிமுக காரன் என்றால், முக்குலத்தோருக்கு தலைவர் என்று யாரும் இல்லையா? அப்படி என்றால் நீங்கள் அரசியல் அனாதைகளா?
அரசியால நல்லா உற்று கவனியும்… யாரையும் நிப்பாட்டி கிருஷ்ணசாமி ஓட்டு போடு என சொன்னால் வெயில் மழை என்று பாராமல் பள்ளன் கள் ஒட்டுப்போடுவார்கள்.ஏன் கிருஷ்ணசாமிதான் உங்கள் தலைவர்
கார்த்திக், சேதுராமனுக்கு முக்குலத்தோர் அளித்த வாக்குகளை வைத்தே அவர்கள் முக்குலத்தோர் தலைவர்களா என்பதை புரிந்துக்கொள்ளலாம்…!!!
முக்குலத்தோருக்கு தலைவர் என்று யாரும் இல்லையா? அப்படி என்றால் நீங்கள் அரசியல் அனாதைகளா?
அரசியாலே நாங்கதான்…அது எந்த கட்சியா இருந்தாலும்….தெரிஞ்சும் தெரியாதா மாதிரியே நாடகம் பண்ணறது உங்ப வழக்கம்
யாருப்பா அந்த முக்குல அரசியல் ஆளுங்கன்னு கேட்டா, திமுக அதிமுக கம்யூனிஸ்ட்டு கட்சியை கை காட்டுவியா? நான் தெரியாம தான் கேக்குறேன்…. நீ எப்பவுமே இப்படியா…இல்ல இப்படி தான் எப்பவுமேவா…? நீ என்ன கேள்விக்கு என்ன பதில் எழுதுறேன்னு யோசிச்சு தான் எழுதுறியா?
* தா.கிரிட்டிணன் போன்ற ஆட்களை பத்தி கேட்டா அவனை திமுக,அதிமுக ன்னு சொல்ற…அவன் உன் தலைவன் இல்லையான்னு கேட்டா இல்லைன்னு சொல்ற….
* மூ.மூ.க,கார்த்திக் பத்தி கேட்டா ‘அவங்களுக்கு விழுந்த ஓட்டே’ அவங்க முக்குல தலைவர் இல்லைன்னு சொல்லுதுன்னு சொல்ற…
* அப்படின்னா நீங்க என்ன அரசியல் அனாதையான்னு கேட்டா, நாங்க தான் மொத்த அரசியலேன்னு சொல்ற….!!! முடியலடா சாமி…
உங்க ஆளுங்க மொத்தம் தமிழ் நாட்டில் எத்தனை பேரு இருக்காங்க என்கிற புள்ளி விவரமாவது தெரியுமா?
ஆமா…உன் ஜாதி தலைவனுங்க…பெரிய கோட்டை புடிச்சிடானுங்க..
எந்த கட்சி ஆதரவும் இல்லாமா சரியான ஆண்மகனாக இருந்தால் உன் கிருஷ்ணசாமி ஜான்பாண்டியன் மற்றும் கசடுகளை ஒரு சட்டமன்றத்தை வெல்ல சொல்லு….!
7 பேர் செத்துப்போன உடனே வந்த உள்ளாட்சி தேர்தலில் பரமக்குடியிலேயே மண்ணை கவ்வி கிடந்தது மறந்ததா…
இங்கு யார் அரசியல் அனாதை என்பதை நீயே சிந்தித்துக்கொள்!!
எங்களுக்கு அரசியல் கட்சி வேண்டான் இங்கு எங்க விரல் யாரை சுட்டிக்காட்டுகிறதோ..அதுவே ஆட்சிக்கு வரும்.
//எங்களுக்கு அரசியல் கட்சி வேண்டான் இங்கு எங்க விரல் யாரை சுட்டிக்காட்டுகிறதோ..அதுவே ஆட்சிக்கு வரும்.//
வெறும் 96 லட்சம் பேரு (பார்க்க கள்ளர் விக்கிபீடியா) …அதுல ஒட்டு போட தகுதி உள்ளவங்க……கிட்டத்தட்ட 40 லட்சம் பேரு…அதுலயும் ஒட்டு போடுறவங்க…..28 லட்சம் பேரு…..!!! நீங்க தான் சுண்டு விரல் காட்டி ஆட்சியை அமைக்கிரீன்களா….?
கடுங்கோன் உங்களுக்கு இடஒதிக்கிடு கொடுத்தே 43 சட்டமன்ற உறுபினர்கள்( இதில் பறையர்,சக்கிலியர்,மலைஜாதி பிரிவினர் அடக்கம்)…இடஒதிக்கீடு இல்லாமலே எங்களுக்கு 54 சட்மன்ற உறுப்பினர்கள்.. வெறும் 28 லட்சம் ஓட்டு மட்டும் இருந்தால் இது சாத்தியமா…????
பதவி, பணத்திற்காக அடுத்தவன் காலில் விழுவது மானகெட்ட செயல், அது யாராக இருந்தால் என்ன?
என்னுடைய கமென்ட் ரகு என்பவர், இந்த மானகெட்ட செயலை பெருமையோடு கூறினார், அதற்காக தான். ஆனால் நீங்கள் கொஞ்சம் கூட சிந்திக்காமல் ஏன் இப்படி உளறுகிறீர்கள்?
அ.தி.மு.க-வில் தி.மு.க-.வில் மற்றும் இதர பதர கட்சிகளில் இருப்பவனுக்கு சாதி என்பதில்லை அவன் அந்த கட்சிக்காரனாகவே இருப்பான். அவன் பாப்பனாக இருந்தாலும் சரி தேவனாக இருந்தாலும் சரி… எவனோ பணத்திற்காகவும் பதவிக்காகவும் ( கிருஷ்ணசாமி உட்ப்பட) யார் காலிலோ விழுந்தால் அதையேன் சாதியை சம்மந்தப்படுத்தி பார்க்கிரீர்கள்… உளரல் யார்க்கு என சிந்தியும்.
//அ.தி.மு.க-வில் தி.மு.க-.வில் மற்றும் இதர பதர கட்சிகளில் இருப்பவனுக்கு சாதி என்பதில்லை அவன் அந்த கட்சிக்காரனாகவே இருப்பான்//
இந்த நேர்மை படம் எடுக்கும்போது ஊர் மேய போய்டுமா?
தேவர்மகன் படம் எடுத்தது ஒரு பிராமினான்..இசைத்தது ஒரு பள்ளர்..இயக்கியது ஒரு மலையாளி..
சுந்தரபாண்டியன் படம் எடுத்தது ஒரு கோனார் இயக்கியது ஒரு நாயுடு
விருமாண்டி,சண்டை கோழி மற்றும் பல பல … உயர் தேவர் குலத்தில் பிறந்தவர்களால் எடுக்கப்பட்டதில்லை….
மண்ணிண் மைந்தர்களை பற்றி சக மண்ணிண் மைந்தர்களால் எடுக்கப்பட்டது… தமிழ் கலாச்சாரம் இருப்பதல்…
உனக்கு என்ன இருக்கு..??? இட ஒதிக்கிடும்…கலர்சீப்பும் தான் மிச்சம்…
கடுங்கோன் குடும்பரே..!!! மெய்ந்துக்கொண்டிருந்த உமது அறிவு திரும்பி வந்ததா..நான் மேலே சொன்ன விடயம் படித்த பின்பு….?????
//மண்ணிண் மைந்தர்களை பற்றி சக மண்ணிண் மைந்தர்களால் எடுக்கப்பட்டது//
உனக்கு நீயே பட்டம் சூட்டிக்கிற…இருடி..இன்னும் விவாதம் முடியல….
எங்க போயிட்டீங்க அண்ணாத்தே!!! மதமாற்ற பாதிரி உமாசங்கர் கிட்ட இதுக்கான பதில் கேட்கவா..????
இது எங்க மண்!! எம் பாட்டன், முப்பாட்டன் நீராக இருந்து உயிராய் பாறிமாற்றம் ஆன எங்க மண் இது!!!
நாங்கள் ஆதிகுடி.. ஆந்திரன் பள்ளன் உனக்கு, பொழைக்க இடம் கொடுத்தா.. சொந்தமாக்க சொப்பனம் கான்றிகளோ..!!!!
எங்களின் ரத்தம் இங்கு இருக்கும் ஒவ்வோரு மலையிலையும்..ஒவ்வோரு மண் துகளிலும்.. ஒவ்வோரு துளி நீரிலும், வீசும் காற்றிலையும், ஒவ்வோரு பயிரிலையும் கலந்திருக்கு..!!!
எங்களை சுவாசித்து என் தமிழ் உயிர் வாழ்கிறது..என் இனம் தமிழ் உண்று உயிர் வாழ்கிறது!!!
வந்தேரியே பள்ளனே!! நாங்கள் யாரையும் விட்டி பழக்கப்பட்டவர்கள் இல்லை !!நீயும் வாழ்ந்துவிட்டு போ!!
போ!!
Good one
பல படங்கள் சென்ட்ரல் ஸ்டேஷன் காண்பிப்பது போல், முத்தே சிலையை காட்டி தான் ஆரம்பிக்கிறார்கள். இது போன்ற முத்தே குறியீடுகள் (எந்த ஆதிக்க சாதி குறியீடும் ) கொண்ட படங்களை இணையம், வாய்சொல்பரப்பு வழியாக புறக்கணிக்க வேண்டும். வழி காட்டிய வினாவுக்கு நன்றி.
Nothing can stop maravar pride,but maravars should not be jealous if other communities progress as well.
what is maravar pride? aduthavan pantha vattikku vittu vaangarathu, adutha jaathikaran ponna ivanuga kattikirathu, athey ivanuga jaathi ponna evan kattunaalum vetrathu, wine shop thorakarathu, kanja vikkirathu ithellam pride? pongada…
மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய ‘கள்ளர் சரித்திரத்தில்’ இருந்து:
————————————————————-
“மறவர், எயிற்றினர் ஆகியோர் பாலை நில மக்கள். வழிப்பறி செய்தல், களவாடுதல் இவர்களின் தொழில்”
* தன்னை திருடன் என்று சொல்லிகொள்வதில் அப்படி என்ன மறவனுக்கு பெருமை?
//மு.வேங்கடசாமி நாட்டார் //
adutha jaathikarana solla vantha ivanum oru jaathi veriyan. ivanugala enna pannalam?
யாரை சொல்றீங்க பாஸ்? ‘கள்ளர் சரித்திரம்’ எழுதினவர் பேரு ‘வேங்கடசாமி நாட்டார்னு’ தான் போட்டிருக்கு….அதை தான் நானும் இங்க போட்டிருக்கேன்….!!!
ungala illa boss, ezhutinavana sonnen. jaathi adayaalaththai adiyoodu ozhikkanum!
அட கடுங்கோன்..! இது அந்த புத்தகத்தில் இருக்கு..? எந்த பக்கத்துல? ( கைக்கு வந்த பக்கத்தை பதிலா போடாத..)… கன்னிமாரா நுலகத்தில் இருக்கிறது… வேணா போய் புரட்டி படி…!!
புத்தி விராட்டிமாதிரி இருக்கு…
* பாலை நிலத்தார் எயினர், மறவர் முதலிய பெர்களால் வழங்கப் பெறுவர். —
http://kallarperavai.hpage.co.in/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_56084412.html
ஓகோ….பாலை நில மக்களின் தொழில் திருடுதல் என்று அவர் சொல்லாமல் விட்டுவிட்டாரே என்று பார்க்கிராறாயா தியாகு….? அவர் எப்படி சொல்வார்….? ஆனா ஊர் ஒலகமே சொல்லுதே…..படி…..
*தொழில்: போர் செய்தல், வழிப்பறி => http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
* http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88
* புதுசா தமிழ் படிக்கிற சின்ன பிள்ளைக்கு கூட தெரியும்….’பாலை’ நில மக்களின் தொழில் வழிப்பறி என்று….!!!
இப்பவெல்லாம் இலவசமாக பொய் எழுத விக்கிபீடியா, பளாக்ஸ்பாட் மற்றும் பல இருக்கிறது அதனால் நீயே எதாவது எழுதிவிட்டு இங்கு வந்து இந்தா முகவரி என் தராலாம்.. உண்மையான ஆதாரத்தை கொண்டுவா(அப்படி ஒன்று இருந்தால் தானே நீ தருவாய்)… தமிழ் அகராதியில் கள்ளர் என்பதற்கு உன் பூலைக் கண்ணை வைத்து நன்றாக படி..என்ன அர்த்தம் என் தெரியும்.
//இப்பவெல்லாம் இலவசமாக பொய் எழுத விக்கிபீடியா, பளாக்ஸ்பாட் மற்றும் பல இருக்கிறது //
விக்கேபீடியா பொய்….
செப்பேடு பொய்…
ப்ளாக்ஸ்பாட் பொய்….
அப்போ எது தாம்பா சரி?
‘கள்ளர்’ விக்கிபீயத்யா மட்டும் சரி…
‘கள்ளர்’ பற்றிய செப்பேடு(?) மட்டுமே சரி…
‘கள்ளன்’ எழுதின பிளாக்ஸ்பாட் மட்டுமே சரி…
குர்…கர….குர்ர்ர்…… (வேற ஒன்னும் இல்ல….அதால சிரிச்சேன்…)
(எனக்கு நல்லா தெரியும்… இந்த கருத்தை சொன்ன மூன்று பேருக்கும் பள்ளன் தான் டீ,காபி வாங்கி கொடுத்து இப்படி எழுத சொல்லி வற்புறுத்தினான் என்று இப்போ தியாகு சொல்வாரு பாருங்களேன்….)
கள்ளர்,மறவர்,அகமுடையார் என்றால் யார்?
அறிஞர் பெருமக்கள் சொல்வது:
**********************************************
* “கள்ளர் என்ற சொல் பொதுவாக திருட்டு தொழில் ஈடுபடும் எல்லா மரபினரையும் குறிக்கும். ஆனால் இப்பெயர் அரசுக்கு வரி செலுத்த உட்படாத ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் மக்களை குறிப்பதாக உள்ளது. கள்ளர்களுக்கு என்று ஒரு பொதுப்படையான குணம் உண்டு.அது தான் எல்லோரும் திருடுவது ஆகும். இதனால் கள்ளர் என்ற பொதுப்பெயர் இவர்களுக்கு தொழிற் பெயராக சூட்டப் பட்டது. (தகவல்: E.Thurston C&T of SI Vol. IV,Page 53)
* மறவர் என்ற சொல் போரில் ஈடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் பொதுவாக வழங்கியது. “சங்க இலக்கியத்தில் மறம்,மறவன் என்ற சொற்கள் பேசப்படுவது உண்மையே.அது முறையே வீரத்தையும், வீரனையும் சுட்டுமே அன்றி, மறவர் என்ற ஒரு இனம் அல்லது மரபை சுட்டவில்லை.(தகவல்:History of Maravar,Page 16. Dr. S. Kadirvel)
* அகம்படியார் என்ற ஒரு சாதி தமிழ்வேந்தர் காலத்திலேயே இல்லை என்று தான் கூறப்படுகிறது. “ஆளையங்களிலும், அரண்மனையிலும் குற்றேவல் செய்வோர் அகம்படியார் என வழங்கினர்”. (தகவல்: J.A.Abbe Dubois, Hindu Mannar & Custom – Page 17)
**அகம்படியார் என்ற வார்த்தை இந்த காலத்திலேயே இல்லை..!!இந்திய சாதிப்பட்டியலிலும் இல்லை !! அது அகம்படியாரில்லை அது அகமுடையார்.( இதுவே சரி) பேச்சு வழக்கில் அருப்புக்கோட்டை பகுதியில் மட்டும் படியார் போடும் பழக்கம் உள்ளது… சித்தர் காலத்திலேயே அகமுடையார் சாதி வழி வந்ததாக சித்தர் கருவூரார் மற்றும் சுந்தரானந்தர் சித்தர் புகழப்படுகிறார்கள்..(மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005 )தமிழ்வேந்தர் எந்த காலம்..????
அ
அருணாச்சலம் எந்த சாதி ஆளு?
அவரோட அப்பா பெருல முதலியாருனு இருக்கு!!
முத்துராமலிங்கம் ” எம்பெருமான் மயில் வாகனத்தில் என்னை ஆட்கொள்வார்னு” புளுகினா அது அக்மார்க் உண்மை…… உலகத்தை உருண்டையா சுருட்டிவேனு கப்சா விட்டா அது தெய்வ வாக்கு, மடியிலே அணுகுண்டு வச்சிறுக்கேனு சொன்னா தியாகு மொழியில் ” அசைக்க முடியாத ஆதாரம்…தியாகு அண்ணாத்தே க்ன்னிமாரா கன்னிமாரனு சொல்றீங்களே அது முதுகுளத்தூர்லயா இருக்கு……
திரு.பசுபொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் இப்படிதான் பேசினார் என்று அன்றைய சாதி வெறி காங்கிரஸ் போலீஸ் தாயாரித்தது.பொய் வழக்கு போடுவதற்காக.
இதுப்போன்று எந்த பத்திர்க்கையிலாது உண்டா..? விடுதலை உட்பட..(தேவரை தேவகுமாரன் என்று புகழ்ந்தது இந்த பத்திரிக்கையே)
“முருகனின் வேல் இன்றைக்கு இருக்கும் அனுகுண்டுவைவிட சக்தி வாய்ந்தது அதை முருகபெருமான் ஏவும் போது அரசுரர்கள் ஒரு நொடியில் மாய்ந்தார்கள்” என்று சொன்னதை …திரித்து சாதி வெறி பத்திக்கை இப்படி செய்தி போட்டது…..
“முருகன் அணுகுண்டு வீசினார் தேவர் பேச்சு”
—அண்ட புளுகுகள் ஆகாச புளுகுகள் யார்க்கு என்பது உங்களுக்கு புரியாதா என்ன..???
கள்ளர்,மறவர்,அகமுடையார் என்றால் யார்?
வன்னியர் சொல்வது (தேவைப்பட்டால் link தரேன்)
******************************
“உண்மையில் கள்ளர் சங்ககாலத்தில் இவர்கள் முதலில் தூசிப் படைகளாக, ஆநிரை கவரும் வெட்சிப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். கவர்ந்து வரப்பட்ட கால்நடைகள் அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டது. பிறகு அவர்களை குதிரை பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தினர். இவ்வாறானவர்கள் சேர்வைக்காரர்களாக அறியப்பட்டனர். பிறகு இவர்கள் அகப்பரிவாரங்களாக, அரண்மனைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவர்களே அகம்படியர் ஆவர். படைத் தளபதி ஆகும் அளவு இவர்களுக்கு உரிமை இருந்தது. இதைத்தான் ‘கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படி மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆயினரே’ என்கிற சொல்வழக்கு வெளிப்படுத்துகிறது.”
கள்ளரை பற்றி நாயக்கர் சொன்னது:
=================================
பெயர்: பரமக்குடி பாளையக்காரர் தும்பிச்சி நாயக்கர்.
இனம்: நாயக்கர்
உட்பிரிவு: ராஜகம்பாளம்
குலம்: சில்லவார்
புகழ்:
* கடைசி வரையில் விஜயநகர் பேரறுசுக்கோ, யாருக்கும் அடிபணியாமல் இருந்தது. பல்லாயிரக் கணக்கான ராஜகம்மாள மக்களை போர்த்துகீசியர்களுக்கு எதிரான இலங்கை நாயக்கர் போரில் பங்குபெற்று இழந்தது.
* இலங்கை நாயக்கர்களுக்கு பெண் கொடுத்த பெருமை
* பாளையம் பறிபோனாலும், படை பலத்தில் சிறந்து விளங்கியமை.
* (முக்கியமான பாயின்ட் ): களவு தொழில் செய்து வந்த தேவர் சமூகத்தை அடக்கியதோடு மட்டும் இல்லாமல், அவர்களை ஆளச் செய்த பெருமை.
ஒரு பழமொழியை இப்படி மாற்றி சொல்லப்படுகிறது..
***‘கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படி மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆயினரே’ ***
கள்ளர்,மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வந்து வேளாளர் ஆனார்**
சரியான பழமொழி இதுவே..!!
அதாகப்பட்டட்து தேசத்தையும் போர் மற்றும் ஆட்சியின் மூலமாக காத்துவந்த இவர்கள் வேளான்மை செய்தார்கள் என்பதே!!!
ஆதிக்குடி தேவமாருக்கு பழமொழி இருக்கு… உன் தாய்மொழியாம் தெலுகிலாவது உனக்கு என்று ஒரு பல மொழி இருக்கா..???
அடுத்த நாட்டு ஆனிரைகளை கவர்வது என்பது போர் உக்தி..இந்திய ரானுவம் பாக்கிஸ்தானின் ஆயுதங்களை கைப்பற்றினால் அதன் பெயர் என்ன? இந்திய ரானுவம் பாக்கிஸ்தான் ஆயுதங்களை திருட்டிவிட்டது என் உன் இனையதளத்தில் செய்தி போடுவாயா..???
எம் வீர கள்ளர் புரிந்தது உளவு, தன் தேசத்திற்காக உயிரையும் மதியாது செய்யத கடமை…அதுமட்டும் மன்று தமிழ தேசத்தை கள்ளர்களும்,மறவர்களும்,அகமுடையார்களும் ஆண்டார்கள்..
பெரியபுராணத்திலேயே கள்ளர் குல மன்னன் ராஜராஜசோழன் என்றும் கருவூரார் எனும் சித்தர் கரூர் தேவர் அகமுடையார் என்றும் போடப்பட்டிருக்கும்..!!
Thyagu,let me end this discussion in one go.
Those who display the qualities of Pandian are the real Pandians and from my experience in southern TN,Maravars alone deserve the tag.They are the ones who kept the martial tradition alive.
There is more wicked evidence.
Let me give you that.
ஆதாரம் பிளீஸ்….. அதே நேரம் ‘பள்ளன்’ தான் பாண்டியன் என்று சொல்லும் நீதி மன்ற தீர்ப்பை பற்றியும் உங்கள் கருத்தென்ன?
//பெரியபுராணத்திலேயே கள்ளர் குல மன்னன் ராஜராஜசோழன்//
எல்லா சோழனும் கள்ளனா?
குஞ்சிர மல்லன், தேவேந்திர சக்ரவர்த்தி என்று அதே சோழனின் மெய்கீர்த்தி பாடும் கல்வெட்டுகள் பற்றி என்ன நினைக்கிறீங்க?
பள்ளன் தேவேந்திரன் ஆன கதை எப்பவென்று உமக்கு தெரியும்!!
பள்ளன் மள்ளன் ஆன கதையும் எப்ப வென்று உமக்கு தெரியும்!! இது நடந்தது இந்த நவீன யுகத்திலேயே>>!!!
தேவேந்திர சக்ரவர்த்தி என்று சொல்லப்பட்டது..இந்திரலோகத்துக்கே அரசன் என்று எம் குல அரசனை மெய்கீர்த்தி படப்பட்டது..
இதற்கும் உமக்கும் என்ன சம்பந்தம்..!!
புகழப்பட்ட வார்த்தையெல்லாம் எடுத்து சாதி பெயராக மாற்றிக்கொண்டு நாங்கள் தான் என்பது ஆதாரமா..??? உலகம் அதை ஏற்குமா..???
அடுத்தநூற்றாண்டில் “புயல்” என்பது எங்கள் ஜாதியின் பெயர் ஆதலால் புரட்சி புயல், வைகைபுயல் எல்லாம் எங்க ஜாதிதான் என பள்ளன் சொல்லலலலலலலம்…!!!!
சோழ மன்னன் எல்லாம் கள்ளர்களே!!!
* சோழனான கள்ளன் CID வேலை பாத்துட்டு வந்து போர் ஆரம்பிச்சா எந்த படையை கூட்டிட்டு போய் போர் பண்ணுவான்?
* சேரனான அகமுடையான் கோட்டை கொத்தளைத்தை கழுவி ஊத்திகிட்டு இருந்தான் என்றால் கோட்டையை ஆண்டது யாரு?
* பாண்டியனாகிய மறவன் குருட்டம் போக்கில் போர் செய்ய போனால் அவனுக்கு துப்பு யாரு கொடுப்பா? கோட்டையை யார் பாதுகாப்பா?
* //கள்ளர்,மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வந்து வேளாளர் ஆனார்**
அதாகப்பட்டட்து தேசத்தையும் போர் மற்றும் ஆட்சியின் மூலமாக காத்துவந்த இவர்கள் வேளான்மை செய்தார்கள் என்பதே!!! //
எமது கேள்வி 1 :
================
இதுக்கு உண்மையான அர்த்தம் இதுவா? உங்க வரலாற்று ஆளுங்க என்ன சொல்றாங்க என்று தெரியுமா?
* மருத நிலத்தில் விவசாயம் தோன்றியது. ஆண்டவன் சோழன், மக்கள் கள்ளன்.
* நெய்தல் நிலத்தில் கடல் சார் வாழ்க்கை தோன்றியது. ஆண்டவன் பாண்டியன். மக்கள் மறவன்
* மலை,காடும் சார்ந்த வாழ்க்கையும் சேரனுடையது. மக்கள் அகமுடையான்.
அப்படி என்றால் நீங்கள் கொடுத்த விளக்கம் தவறு. மூன்று மன்னர்களும் மருதநில குடிகளாக இருந்தால் மட்டுமே இந்த பழமொழி சரி. உங்கள் விளக்கம் என்ன தியாகு?
எமது கேள்வி 2 :
================
“கள்ளர்,மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வந்து NASA Scientist ஆனார்” என்று ஏன் பழமொழி இல்லை? ஏன்னா அப்போ NASA கிடையாது….
“கள்ளர்,மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வந்து வேளாளர் ஆனார்**” — இது தான் சரியான பழமொழி. இந்த மூவரும் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளர் ஆகினார் என்றால், வெள்ளாரர் ஆகும் முன் இவர்கள் என்ன தொழில் செய்தனர்? போர் செய்தார்கள் என்றால் ‘சோத்துக்கு’ என்ன செய்தனர்? ஆக நீங்கள் மூவரும் அது வரை செய்த தொழிலை விடுத்து உழவுத்தொழில் பார்க்க வந்தீர்கள். அப்படியானால் அது நாள் வரை உழுவு தொழில் பார்த்த அந்த வேளாளர் யார்? போர் தொழில் செய்து நாட்டை ஆண்ட பரம்பரை உழவு தொழில் செய்ய முன்வந்தது ஏன்? ஏன் செட்டியார் போல வணிகமோ, பரதவர் போல மீனோ பிடிக்க செல்லவில்லை?
அடப்போப்பா..!! தலையும் இல்லாம வாலும் இல்லாம கருத்து எழுதுர..!!!எனக்கு கொட்டாவிதான் வருது!!
எந்த தொழில் முடியுமோ அந்த தொழில்தான் செய்வார்கள்..
கடுங்கோன் நீங்கள் ஏன் ஒரு டாக்டர் ஆகவில்லை! நாசா-வில் சேரவில்லை.. ஆதாலால் உங்களுக்கும் படிப்பிற்கும் சம்பந்தமேயில்லை என நான் சொன்னால்.. எவ்வளவு சிந்தனையும் அறிவு திறனும் சரிக்கியிருக்கும்… அதுப்போல் உள்ளட்கு உங்கள் கேள்வி!!
எம் முப்பாட்டன் கள் மண்ணிழந்து நிற்கயிலயே வேளாண்மை தொழிலானது.. இன்றும் ஆற்றுப்பாசனம் சார்ந்த பகுதிகளில் அகமுடையார்கள் கிராமமே உண்டு…நிலத்து நீர் பாசன்ம் மறவர் சார்ந்த கிராமங்கள் பார்க்கலாம்.. வானம் பார்த்த பூமியே எம் கள்ளர்கள் கிராமங்கள் பார்கலாம்..(தஞ்சை கள்ளர் கிராமங்கள் உட்பட, ஆற்றின் பாசத்தின் அருகிலேயே அகமுடையார்களும்.. ஆற்றுபாசனம் தாண்டிய பகுதியில் என் கள்ளர்கலும் இன்றும் இருப்பதை நீங்க காண்ணலாம்)
//எம் முப்பாட்டன் கள் மண்ணிழந்து நிற்கயிலயே வேளாண்மை தொழிலான//
இதை தான் நானும் கேக்குறேன்…..!!!
* உங்க முப்பாட்டன் யார்கிட்ட மண் இழந்து நின்னான்?
* மண் இழப்பதற்கு முன்னாடி அவன் விவசாயமே செய்யலியா? அப்போ சோத்துக்கு என்ன பண்ணுனான்?
* ‘மெல்ல மெல்ல வந்து’ன்னு வேற சொல்லி வச்சிருக்கீங்க….எங்கிருந்து ‘வந்து’? ஏன் அந்த ‘வந்து’?
அந்த “வந்து” இதுதான்!!
நீங்க தெலுங்கு பள்ளன் கிறதுனால தமிழ் அர்த்தம் “வந்து” என்ற வார்த்தைக்கு புரியல..
அரசன் ஒருவனே!! ஊரிலிருக்கும் எல்லோரும் மன்னர்களாக இருக்க வாய்ப்பில்லை..
அப்படி அரசாண்டவன் விவசாயம் செய்கிறான்..போர் தொழிலாக கொண்டவன்.. இன்று விவசாயம் மட்டுமே செய்கிறான்..அதாவது அரசாங்கம் போர் எல்லாம் போக இன்று விவசாயம் மட்டுமே செய்கிறான் என் பொருள்….
தேவர் இன மக்கள் மீது வெறுப்யை காட்டும் நோக்கில் சுந்தரபாண்டியன் படத்தை சாடியுள்ள கட்டுரை இது ஒருதலைபட்சமான ….
முக்குன குலம் மற்ற ஜாதிகளை படுத்தும் பாட்டைவிட இது தேவலை!
தன் பெயரையையே வெளிப்படையாக சொல்ல பயப்படும் நீ… வாயால் கக்கிதான் போவாய் போலும்,….
ஏம்பா சுந்தரராஜா !! ..
சாதி வெறிய தூண்டி விடுறவன், ஒரு இனத்தையே ஒடுக்கி வச்சிருக்கவன், இவனுங்க மேல வெறுப்பைக் காட்டுனா என்ன தப்புனு கேக்குறேன்.
americala obamavapathi kevalama padam edukkuranga, is he asks anything? why peopls here always thinking like this..cinema need freedom than only good movies will come..im not saying this film is gd.. watch the movie as a movie…
Vinavu please write about the movie “innocence of muslims”
நம்ம மறுமொழி நல்லா வேலை செய்யுது….நேத்து பூராம் நெறைய பேரு வயித்தெருச்சல்ல தூங்காம தவிச்சுருப்பாய்ங்க போல…..தென் தமிழ்கத்துல மட்டும் இல்ல சென்னைல ரெண்டு எம்.எல்.ஏ, ரெண்டு எம்.பி.நம்ம பயலுக..மும்பைல மூன்று பி.ஜே.பி. மாவட்ட செயலாளர்கள் நம்ம பயலுக தான்..எங்க போனாலும் நம்ம பயலுக முத ஆளா நிக்குறானுக..நல்லா பொழச்சுக்குறானுக…அப்புறம் வயித்தெருச்சல் நியாயம் தான..ம்..
//‘இதுதான் பரமக்குடி…’ என்று வாய்ஸ் ஓவர் துவங்குகிறது. இமானுவேல் சேகரன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. தேவர் படம் போட்ட போஸ்டர் ஒட்ட வரும் இளைஞர்களை ‘ஏம்பா.. யாருப்பா இங்கே போஸ்டர் ஒட்டுறது.. எங்க ஆளுக மட்டும்தான் ஒட்டனும்’ என்று ஒரு பெரியவர் விரட்டிவிடுகிறார். படம் நெடுக காட்டப்படும் தேவர் குறியீடுகளுக்கு மாற்றாக அம்பேத்கர், இமானுவேல் சேகரன் படங்கள் காட்டப்படுகின்றன.//
வினவு முன்ன பின்ன பரமக்குடி வந்துருக்கிய???
அங்கயும் ஆதிக்கம் தான் இருக்க்கா ?..
@Siva Prathap: நீ போய் இருக்கியா?
உங்க வயித்தேருச்சல் நியாயமானது தான்….தேவனோட வளர்ச்சிய எந்த பயலும் தடுக்க பண்ணமுடியாது…சுந்தரபாண்டியன் பட விமரிசனம் என்பதை விட தேவரின மக்கள் மீதான வயித்தெருச்சல் என்பதை எல்லோராலும் புரிந்த்து கொள்ள முடிகிறது…
‘தேவர்’ என்றால் என்ன என்று தெரியாமலேயே இங்க நிறைய பேரு ‘தேவர்’ …’தேவர்’னு சொல்லிக்கிட்டு திரியிறானுங்க…. ஏன்? கள்ளன்,மறவன்ன்னு சொல்ல வெக்கமா இருக்கா? அப்படி சொன்னா…’ஓகோ…நீங்க தான் அந்த கன்னகோல் வச்சி களவாடுற கூட்டமா’ன்னு நாலு பேரு கேட்டுருவான்னு அசிங்கமா இருக்கா?….ராமன் வந்தாராம்….இவங்களை பாத்து ‘மாணிக் நகி…மாணிக் பாட்சா’ங்குற மாதிரி, ‘தும் திருடன் நகி மாலும்….தேவர்’ன்னு சொல்லிட்டு போனாராம்…அதுல இருந்து இவங்க ‘தேவர்’ ஆய்ட்டாங்கலாம்…….சொத்து பத்தை தான் கலவாடுறீங்கன்னு பாத்தா ‘தேவர்,பாண்டியன்’ன்னு பட்டத்தை,பேரை கூடவா களவாடுவீங்க….? இதுல இவங்கள பாத்து பொறாமை படுராங்கலாம்…..சிப்பு சிப்பா வருது…..!!!
முக்குன குலம் என்ன வளந்திருக்குனு மத்தவங பொறாம படுராங்க? சும்மா முக்கிக்கிட்டே இருந்தா பொதாது தம்பி! முன்னேறனும்!
வெயில் படத்து இயக்குனர் வசந்த பாலன் தனது ‘படத்தை’ பல வெளிநாடுகளில் திரைப்பட விழாக்களில் திரையிட்டு உள்ளார். ஒவ்வொரு படத்துக்கும் பார்வையாளர்கள் புரிந்துகொள்ளும் படி படத்தின் கதையை முதலில் விளக்க வேண்டும். நிற்க. ஒருவேளை கள்ளர்களின் வாழ்வை பேசும் ‘காவல் கோட்டத்தை’ மைய்யமாக வைத்து எடுக்கப் பட்ட ‘அரவான்’ படத்தை அது போல வசந்த பாலன் திரை இடுகிறார் என்று வைத்துகொள்வோம். அவர் படத்தை பற்றி என்னவென்று சொல்வார்? “இது வரலாற்றில் இல்லாத தமிழர்களைப் பற்றிய வரலாறு. களவுத் தொழிலை குலத் தொழிலாக கொண்ட தமிழர்களின் வரலாறு” என்று சொன்னால், அங்கே இருக்கும் ஆட்கள் விழுந்து விழுந்து சிரிக்க மாட்டாங்களா? “நம்ம ஆளுங்க எல்லாம் ஒளிச்சி சாம்ராஜ்யம் அமைச்சிருக்காங்க… தமிழனை பாருடா திருடி திருடி சாம்ராஜ்யம் அமைச்சிருக்காங்கன்னு” ரொம்பவே பொறாமை படுவாங்க இல்லையா?
ஜாதி பெருமை பேசுவதையே முழு வேலையாக வைத்துக்கொண்டு, எப்போது பார்த்தாலும் ஆண்ட பரம்பரை அது, இது சொல்லிக்கொண்டு இருப்பவர்களுக்கு எதற்கு இட ஒதிக்கீடு? ஆண்ட பரம்பரை எதற்கு MBC என்ற கோட்டாவின் மூலம் அரசாங்கத்திடம் நிற்கவேண்டும்? இவர்களை சொல்லி குற்றமில்லை இந்த வேலையை இப்போதா செய்கிறார்கள் அந்த காலத்திலேயே கஷ்டப்பட்டு உழைத்தும் ஒரு வேளை சாப்பிடக்கூட இல்லாத மக்கள் இருக்கும் ஒரு பத்து ஊரை சேர்த்துக்கொண்டு, ஜமின் என்ற பெயரில் அவர்களை மிரட்டி வாழ்ந்தவர்கள் அல்லவா இவர்கள்? ஒன்றுமே இல்லாவிட்டாலும் வெட்டி பந்தாவிற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை ?
சினிமாவுக்கு வரும்போது அமைதி சொருபமாக இருந்து தங்களுக்கென்று சினிமாவில் ஒரு இடம் கிடைத்தவுடன் ஜாதி பெருமை பேசுவது (விவேக், கருணாஸ்) இதைத்தான் தேவர் இனத்தவர்கள் தங்கள் திறமையாக நினைத்துக்கொள்கிறார்கள் ? சிவாஜி, பிரபு, கார்த்திக் இவர்கள் எல்லோரும் ஒரு வித ஜாதி மனப்பான்மையுடன்தான் செயல் பட்டு வந்தார்கள், ஆனால் தென் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் உள்ள மக்கள் இவர்களின் உள் நோக்கம் தெரியாமல் ஒரு நடிகாராகவே பார்த்து ஆதரவு கொடுத்தார்கள்? ஜாதிய கண்ணோட்டத்தில் மற்ற இன மக்கள் இவர்களின் படத்தை பார்க்காமல் இருந்திருந்து, தேவர் இன மக்கள் மட்டும் மேற்கண்ட நடிகர்களின் படத்தை பார்த்திருந்தால் இவர்கள் காணமல் போயிருப்பார்கள்? இப்போது கூட இந்த நடிகர்கள் , இயக்குனர்களின் படங்களை மற்றவர்கள் ஒதுக்கி தள்ளினாலே போதும் இவர்கள் குல பெருமை பேசுவதை அடக்கிக் கொள்வார்கள்
இவர்கள் படங்களில் சாதி பெருமை பேசுவது இவர்கள் தங்களுக்கு தாமே வெட்டிக்கொள்ளும் குழி என்பதை மறந்துவிட்டார்கள். எனது ஆசை எல்லாம் இந்த முக்குல நபர்கள் இன்னும் தீவிரமாக தங்களது சாதி உணர்வை படங்களில் காட்ட வேண்டும். அப்போது தான் அவர்களின் படங்களை இயக்கம் முற்போக்கு வாதிகளின் போலி முகம் கிழிந்து மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போய் நிற்பார்கள். இவர்களின் படைப்புகளை ‘முக்குல’ ஆட்கள் தவிர மற்ற அனைவரும் புறக்கணிக்கும் நிலை இயல்பாகவே தோன்றும் (தமிழ் நாட்டில் கன்னடன் பெருமை பேசும் எந்த படங்களும் ஓடாததை போல). வேற்று சாதி பெருமை பேசும் முக்குல நபர்கள் மட்டுமே அந்த மாதிரியான படங்களை பார்க்க தள்ளப் பட்டு, ஒரு நாளில் அதுவும் தளர்ந்து போகும். முதல் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இனி எந்த காலத்திலும் அப்படி படம் எடுக்க முன்வரமாட்டார்கள்.
குல பெருமை என்பது பேசுவது அல்ல…வாழ்ந்து காட்டுவது…..பெங்களூரு,சென்னையினு தேவரின இளைங்கர்கள் எல்லா மென்பொருள் நிறுவனங்களிலும் தங்களது திறமை மூலமாக வெற்றி கொடி நாட்டி இருப்பது தான் குல பெருமை……நடிகர்கள் மட்டும் தான் தேவரினத்தின் அடையாளம் இல்லை என்பதை எல்லோருமே புரிந்து கொள்ள வேண்டும்…….வினவு போன்ற தளங்கள் தேவரின இளைங்கர்களிடம் நிச்சயம் ந்ல்ல மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது…..மதுரை தாண்டி திருச்சி, சென்னை வரை பத்து ஆண்டுகள் முன்பு பசும்பொன் அய்யாவை முன்பு பரிச்சயம் இல்லை..மறவர்கள் தவிர மற்றவர்களுக்கு அவர் ஒரு தலைவர் அவ்வளவே..ஆனால் இன்று அவர் கள்ளர்,அகமுடையர்,மறவர் என முக்குலத்துக்கும் தெய்வம்.தேவர் என்ற ஒற்றை சொல்லில் இணைந்து முக்குலம் வெற்றி மேல் வெற்றி குவிப்பது தான் யாராலும் தாங்க முடியாத வரலாற்று நிஜமாக உள்ளது.வினவு போன்றவர்கள் இல்லை எனில் இந்த ஒற்றுமை சாத்தியம் ஆகி இருக்காது.
//பெங்களூரு,சென்னையினு தேவரின இளைங்கர்கள் எல்லா மென்பொருள் நிறுவனங்களிலும் தங்களது திறமை மூலமாக வெற்றி கொடி நாட்டி இருப்பது தான் குல பெருமை//
எதுக்கெடுத்தாலும் ‘சாணா’ பயன்னு வாய்க்கு வாய்க்கு நாடாரை கேவலப் படுத்தும் கள்ளன் மறவன் எவனும், ‘சிவ் நாடார்’ருக்கு சொந்தமான HCL போன்ற சாப்டுவேர் கம்பெனிகளில் எதுக்கு வேலை செய்றான்? அப்போ மட்டும் ‘முக்குல பெருமை’ கவுந்து படுத்து தூங்குமா? ‘நாடாரின்’ கம்பெனியில் உக்கார்ந்து கொண்டு, சம்பளம் வாங்கிகொண்டு,அவரது அலுவக கணிப்பொறியிலேயே, முக்குலத்தின் பெருமை பேசும்போது உங்களுக்கு கூசவில்லையா?
என்னமோ சாப்டுவேர் கம்பெனில வாழ்றவன் எல்லாம் ‘முக்குலம்’ மாதிரி அளந்து விடுறீங்க? ஜாதி பாத்து தான் அவன் வேலைக்கு எடுத்தானா? அதே சாப்டுவேர் கம்பெனில தான் பறையர்,சக்கிலியர்,நரிக்குறவர் என பல பெரும் வேலை செய்றாங்க….அவங்க வளர்ச்சிக்கும் ‘முத்துராமலிங்கம்’ தான் காரணமா? ‘பூனை கண்ணை மூடிகிட்டா உலகமே இருண்டுருச்சுன்னு நெனச்சிக்குமாம்’….. பெங்களூரில் முக்குல ஆட்களை தவிர வேறு எந்த சமுதாய இளைங்கர்களும் குழுவா செயல்படவில்லை என்று உங்களால் கண்டிப்பாக சொல்ல முடியுமா?
நீங்க வேற விட்டா அவரு பில்கேட்சையே பில்கேட்ஸ் தேவராக்கிடுவாறு….. உங்களுக்கு தெரியாத கம்ப்யூட்டரை கண்டுபுச்சதே முத்துராமலிங்கம்தான்…..இப்பக்கூட அவருதான் எம்பெருமான் முருகனின் அருளால இன்டெர்நெட் லைனே தர்றார்…. தியாகுதான் இதை கன்னிமாரால கண்டுபுடிச்சு சொன்னார்….
onlineil enathu samuthayatha(Thevar) ilaikarhalin ottrumaikku valivahukkum vinavukku nandri
இக்கட்டான சூழலிலும் நல்லாவே காமெடி பண்றீங்க…? ஒரு தடவி இங்கே போடப் பட்டிருக்கும் கமெண்ட்டுகளை பாருங்கள்….அதில் எத்தனை கமெண்ட்டு முக்குல ஆட்கள் போட்டிருக்கிறார்கள் என்று பாருங்க…அதில் எத்தனை அறிவுப் பூர்வமான தகவல்/விவாதம் என்று பாருங்கள்….யார் ஒன்ருபட்டுகொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மை புரியும்….!!!
தேவர் இன மக்களின் ஆரம்ப கால வாழ்க்கையை வைத்துதான் வெள்ளைக்காரன் இவர்களை குற்ற பரம்பரை என்ற லிஸ்டில் வைத்தான். எனக்கு இரண்டு சந்தேகம் ஒன்று இவர்களின் தொழில் திருட்டு என்பதை தேவர் இன மக்களும் மறுக்கவில்லை , வரலாறும் மறைக்க முடியவில்லை (வரலாற்றால் மறைக்க முடியவில்லை என்பதற்கு வரலாறு உள்ளது). இன்றைய நிலையில் கூட திருட்டு என்பது கொஞ்சம் உருமாறி வட்டி தொழில் என்ற நிலையில் உள்ளது? இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை? அப்படியிருக்கும்போது இவர்களை இவர்களே தாங்களை உயர்ந்த ஜாதி என்று எப்படி சொல்கிறார்கள்? இரண்டாவது, முத்துராமலிங்கத்தேவர் முருக கடவுளை கண்ணால் பார்த்தாராம்? இதை விவரம் தெரிந்த தேவர் மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்? இந்தளவிற்கு பொய் சொல்லி தன் மக்களையே ஏமாற்றியவர் எப்படி உயர்ந்தவர்? இவர் தேசிய தலைவராம் ? சுதந்திரத்திற்காக இவர் என்ன செய்துவிட்டாராம்? முத்துராமலிங்கத்தேவரை தேவர் இன மக்கள் கடவுளுக்கு நிகராக பார்கிறார்கள் என்று சொன்னாலும் அது பொய் தோற்றமே? தேவர் இன மக்கள் தங்கள் ஜாதிய உணர்வுக்காக அவரை பெரிய விஷயமாக காட்டி தங்களை முன் நிறுத்துகிறார்கள் என்பதே உண்மை? மற்றபடி தேவரோ, அவர் சார்ந்த இன மக்களிடமோ சாதிய வெறியை தவிர ஒன்றுமில்லை.ெ
மடியில அணுகுண்டு ( வேற எதுவும் கற்பனை செஞ்சுகிட்ட கம்பெனி பொறுப்பல்ல ) வச்சிருக்கேன் . அத போட்டா உலகத்துல பாதி அழிஞ்சுடும் , என்கிட்ட ஒரு காந்தம் இருக்கு அத வச்சி விமானத்த எல்லாம் கடலில் விழ வைப்பேன் , செத்து போன சுபாஷ் சந்தர போசை , இதோ படை திரட்டிக்கிட்டு வரான்னு பீலா விட்ட மெண்டல் தான் முத்து ராமலிங்கம்.
குற்றபரம்பரை சட்டம் நம் பகுதியில் அமுலுக்கு வந்தது 1914-ல் தான்.
அதில் பள்ளனின் ஒரு பிரிவுன் உண்டு.நாயக்கரில் ஒரு பிரிவும் உண்டு!
தேவர்கள் மீது பாய்ந்த இந்த சட்டம்!! எந்த செக்ஷனில் தெரியுமா..??? ஜல்லிக்கட்டு மற்றும் ஆண்டபரம்பரை என்று அரங்கத்துடன் கலகம் செய்பவர்கள்….
உண்மை அறிந்து எழுதுங்கள்
முக்குலத்தோர் என்று இவர்கள் சொன்னாலும் இவர்களுக்குள் திருமண உறவு கிடையாது? அப்புறம் ஏன் இருக்கிரவர்களைஎல்லாம் சேர்த்துக்கொண்டு வீண் பெருமை? இவர்கள் ஒட்டவில்லை, ஆனால் ஜாதி பெயரை மட்டும் ஒட்டிக்கொண்டார்கள்?
பள்ளன்,பறையன்,சக்கீலியனுக்கு திருமண உறவு இருக்கிறதா..?
அய்யர் அய்யங்காருக்கு குருக்களுக்கு திருமண உறவு இருக்கிறதா..?
வன்னிய கவுண்டர்,வன்னிய நாயக்கர் , வன்னி படையச்சிகளுகுள் திருமண உறவு இருக்கிறதா..?
நாட்டுக்கோட்டை செட்டி, வானிப செட்டி, தெலுங்கு செட்டிக்குள் திருமண உறவு இருக்கிறதா..?
சாதீயம் பேச வந்தால் முதலில் சாதீயம் தெரிந்துக்கொண்டு வா..!!
கட்டிங் போட்ட மாதிரி கண்டதையும் உளரி அசிங்கப்படாதே..!!!
யப்பா தியாகு…..போதும்பா உன் ரீலு அந்து போச்சு….நீயும் எவ்ளோ தான் டிரை பண்ணுவ….பாவம்….!!!
என் பக்கத்து வீட்டுக்காரன் ஒரு மறவன் தான்…ஓரளவுக்கு படிச்சிருக்கான்…அவன்கிட்ட இதே கேள்வியை தான் கேட்டேன்….
“ஏம்பா முக்குலம்னு சொல்றீங்க…? அப்புறம் ஏன் கள்ளனுக்கு பொண்ணு கொடுக்கவோ, எடுக்கவோ மாட்டீங்களா?”
“மாட்டோம்…அவங்க வேற…நாங்க வேற…..அவங்க திருடனுங்க….”
“அப்புறம் எப்புடி நீங்க மூணு பெரும் தேவர்னு சொல்லிகிறீங்க…?”
(மவுனம்)
“குருபூஜைக்கு போனீங்களா?”
“போனோம்….”
“முத்துராமலிங்கம் உங்களுக்கு என்ன என்ன செஞ்சிருக்காரு…?”
“அதெல்லாம் தெரியாது….குற்றப் பரம்பரை சட்டத்தை நீக்க போராடுனாரு… அது இருந்தா எங்க கதி அதோ கதி தான்… அதை அவர் தான் நீக்குனாறு….அதனால தான் நாங்க தெய்வமா பாக்குறோம்…”
(யப்பா தியாகு….அந்த மறவன் போன் நம்பரு தரேன்…நீயே பேசுறியா…? ஹா…ஹா…ஹா…)
எந்த கொண்டு கொடுப்பினையும் இல்லாம நாங்க எல்லாம் முக்குண குலம்னு நாங்களா சொல்லிகிட்டோம்….நீங்க தானே சொல்லிகிறீங்க… அப்படின்னா ஏண்டா பொண்ணு தரமாட்டேங்குரீன்னு கேட்டா..’அந்த வாழைபழம் தான்னே இதுன்னு’ காமெடி பண்ணிக்கிட்டு இருக்க….சரி அதெல்லாம் போவட்டும்….
//பள்ளன்,பறையன்,சக்கீலியனுக்கு திருமண உறவு இருக்கிறதா..?//
இவங்க மூணு பேருக்குள்ள எதுக்கு திருமண உறவு இருக்கணும்? இவங்க எப்படி ஒன்னு ஆவாங்க? ஓகோ….SC பட்டியலில் வருவதால் இவங்க மூன்று பேரும் ஒண்ணா…? எப்பேர்பட்ட கண்டுபிடிப்பு…
நரிக்குறவன் MBC பட்டியலில் வராங்க…அப்படின்னா நீயும் நரிக்குரவனும் ஒன்னு தானே…?
பள்ளன் பறையன் சக்கீலியன் முனுபேரும் ஏன் திருமணம் வச்சிக்கல…என்ன சம்பந்தமா..? அடப்பாவி பள்ளர் எழுத்தாளர் உங்களின் பகவான்… தேவ ஆசிர்வாதம் எழுதிய முவேந்தர்கள் யார் என்ற புத்தகத்தில் முக்குலத்தோர் என்பதே பள்ளன் பறையன் சக்கீலியன் அதை தேவர்கள் திருடி விட்டார்கள் என்று அழுதுள்ளார்…!!
(எத்தன வாருசமா பொய் செய்தி பரப்புரானுங்க)
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
ஏன் இப்படி உண்மையை போட்டு உடைக்கிறீங்க ஹரிகுமார்? இதை படிச்சிட்டு தியாகு இன்னும் கொலம்பிற போறாரு…!!!
* இதுல வேற கள்ளன்,மறவன்,அகமுடையானும், ரெட்டியார், பறையர் போன்ற அனைவரும் மரபணு அடிப்படையில் சொந்தங்கள் என்று வருது….!!! haa…haa…haa…
Adhu appadi varala,neenga ozhunga padinga.
* மொத்தம் இரெண்டே இருண்டு பெரும் கிளைகளாகத் தான் அனைத்து சதியும் பிரிகிறது. இந்த கிளைகளில் வரும் ஒவ்வொரு சாதி மக்களும் தங்களிடையே மிக நெருக்கமான வம்சாவளி தொடர்புகளை பேணி வந்திருக்க வேண்டும். மேலும் தங்களது ஆதி மூலம் ஒன்றாக உடையவராக இருக்க வேண்டும். —- இது தான் நான் புரிஞ்சிகிட்டது….இல்லை என்றால் நீங்க படிச்சி சொல்லலாமே….? அங்க ஒரு மரபணு அடிப்படையில் ஒரு மரம் மாதிரி போட்டிருக்கே….அதுக்கு என்ன அர்த்தம் என்று படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க…!!!
நிற்க. இங்க ஒரு ஆரய்ச்சி முடிவை கொஞ்சம் பாருங்க….
இதுக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?
PAGE 4 : Second line under the map says A comparison of all loci reveals ALLELE *32 of locus FGA to be unique(it means no others got this) to pallar…….. http://www.readbag.com/wysinger-homestead-dravidian
விளக்கம்:
இங்கே ஃபீனோடைப், ஜீனோடைப், அல்லீல் என்ற ஆங்கில வார்த்தைகளை அறிமுகப்படுத்துகிறேன்.
ஒரு பட்டாணிச் செடியில் உள்ள ஒரு காயை உடைத்துப் பார்த்தால், குண்டு குண்டாக, மொழுக் மொழுக் என்று, சுருக்கமே இல்லாமல் இருக்கும் பட்டாணிகள் கிடைக்கின்றன. இப்போது கொழுக் மொழுக் என்று கண் பார்வைக்குத் தெரியும் இந்தக் குணாதிசயம்தான் ஃபீனோடைப். இந்தக் குணத்தை அந்தப் பட்டாணி விதைகளுக்குக் கொடுத்த அடிப்படை மரபணுக் கொத்துதான் ஜீனோடைப். ஒரு குறிப்பிட்ட பண்பைக் கட்டுப்படுத்தக்கூடிய மரபணுக் கொத்துகள் பல இருக்கும். அவை அனைத்தும் அல்லீல்(கள்) எனப்படும்.
பாலினப் பெருக்கம் செய்யும் அனைத்து உயிரினங்களுடைய டி.என்.ஏவிலும் ஒரு குணாதிசயத்துக்கு ஒரு ஜோடி அல்லீல்கள் இருக்கும். ஒன்று தாயிடமிருந்தும் மற்றொன்று தந்தையிடமிருந்தும் வந்திருக்கும்.
மள்ளர்களை பொறுத்தவரை இந்த அனைத்து அல்லீல்களும் (32 ஜோடி?) தனித் தன்மையுடன் (unique ) இருக்கிறது. அதாவது இவர்கள் யாருடைய கலப்பும் அல்ல. ஆதி வம்சாவளியினருக்கு மட்டுமே இது சாத்தியம்.
இந்த சாதிக்காரானெல்லாம் ஒரே மரபனுவை செந்தவனு போட்டுறுக்கா.குறிப்பிட்டு போட்டிருக்கா..???
திரித்து ஏன் பொய்யா எழுதுற..??? புருடா விடுவதில் நீ புலமை பெற்றுள்ளாய்…போலி பாதிரி உமாசாங்கர் மாதிரி வேணா …
***மள்ளர்களை பொறுத்தவரை இந்த அனைத்து அல்லீல்களும் (32 ஜோடி?) தனித் தன்மையுடன் (உனிஃஉஎ ) இருக்கிறது****
மள்ளனுக்கு 32 ஜோடி சாரி மார்க்கு…
அப்ப பள்ளனுக்கு…
தேவேந்திரனுக்கு………
குடும்பனுக்கு…….
எத்தன மார்க்..????
ஆந்திராவுல கர்நாடகாவுல குரும்பர் இனமாயிருந்திங்களே!!! அப்ப எத்தன ஜோடியாம் சாரி மார்காம்…
ஆதாரம் கேட்டா ஒரு பட்டாணி செடியின் பறினாமத்த சொல்லாரு
இவீங்க எப்போதுமே இப்படிதான் பாஸ் நாம ஒன்னு கேட்ட சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பதில் பேசுவானுங்க..
எங்கே எந்த பக்கம் ‘முக்குலம் என்றால் பள்ளன்,பறையன்,சக்கிலியன் என்று போட்டுள்ளது?
// தேவ ஆசிர்வாதம் எழுதிய முவேந்தர்கள் யார் என்ற புத்தகத்தில் முக்குலத்தோர் என்பதே பள்ளன் பறையன் சக்கீலியன் அதை தேவர்கள் திருடி விட்டார்கள் என்று அழுதுள்ளார்…!!//
தேவ ஆசீர்வாதம் தான் எழுதிய எந்த புத்தகத்திலும் முக்குலம் என்பவர் பள்ளர்,பறையர்,சக்கிலியர் என்று சொல்லவில்லை. மற்ற அறிஞர் பெருமக்கள் கூட பறையரை முல்லை நில குடிகள் என்று சொல்லும் நேரத்தில், “கிடையவே கிடையாது. பறையர்,சக்கிலியர்கள் தமிழர்களே கிடையாது” என்று தான் தேவர் ஆசீர்வாதம் சொல்லி இருக்கிறார்……
நீ சொன்ன அந்த மூவேந்தர் வரலாற்றை படிச்சி பாத்தேன்….என்ன சொல்லி இருக்காருன்னு நீயே உன் கண்ணை தொறந்து படி…நல்லாவே அண்ட புளுகு புளுகுரப்பா நீ….? ஹா….ஹா….ஹா…
—————————
* பறையர் தமிழர் அல்லாத கலைப்பினம் (பக் 6 )
* ‘பள்ளர் அல்ல, மள்ளர் ஆம் மன்னர்… சேரன் நீரே…சோழன் நீரே….பாண்டியனும் நீரே…. என்று எடுத்துரைக்கலானேன்….” (பக் 11 )
* ‘ஒரு சிலர் பள்ளர் உழுபறையரில் இருந்து விஜயநகர பேரரசின் போது பிரிந்தது உருவானார்கள் என்று எழுதி வருகின்றனர். பொய் ஒன்றையே சொல்லி மக்களை வஞ்சித்து ஏமாற்றி சமுதாயத்தில் தங்களுக்கென ஒரு உயர் இடத்தை பிடித்தவர்கள் தங்களது சமுதாய நிலைக்கு ஊரு விளைவிக்கும் செயல்களில் எவ்வாறு தங்களை ஈடுபடுதுதுவார்கள்?’ (பக் 22 )
* ‘தமிழன் என்பவர் பறையர் தவிர்த்த மற்றவர்’ என்று சென்னை பல்கலை கழக தமிழ் அகராதியில் உள்ளது’ (பக் 33 )
———————————-
யப்பா தியாகு…? உன்னோட வரலாறே உனக்கு சரியா தெரியுமான்னு தெரியாது….இதுல நீ அடுத்தவன் வரலாற்றை சொல்ற….அதுவும் தப்பா சொல்ற…..எதுக்கு இந்த பொழப்பு?
மேலே ஹரிக்குமார் சொன்னதை போல… நன்றாக கண்ணில் விளக்கெண்னை விட்டு படி..!
மேல் அட்டையும் கீழ் அட்டையும் புரட்டிவிட்டு, அய்யயோ அய்யயோ என் புத்தகத்தில் அது இல்லனு அழுகாத….
நீ ஒரு வேளை உண்மையை சொல்லாம்… ஏன் என்றால் “முவேந்தர்கள் யார்” என்ற புத்தகத்தின் புதிய பதிப்பில் கட்டிங் ஓட்டிங் செய்து இருக்கலாம்…
அந்த புத்தகதின் முதல் பதிப்பு என் வசமுள்ளது.
பழைய பதிப்பில் பள்ளராக இருந்தபோது பறையர் உதவி தேவைப்பட்டிருக்கலாம்..! தேவேந்திரன் அப்புறம் மள்ளன் இப்படி பரிமாற்றம் எடுத்த பின்பு சொந்த ரத்தத்தையே தமிழன் அல்ல என்று சொல்லும் அளவுக்கு காலர்சீப்பில் படித்த அறிவு மங்கி உள்ளது.
ஆதிசங்கரர் பாடலிலேயே பறையர் என்ற தமிழ் சொல் உண்டு..!!!!
அந்த மக்களுக்கு போக வேண்டிய உண்ணதமான அரசாங்க உதவியை பள்ளன் என்ற பெயரில் நீ திருடி திண்றுக்கொண்டிருக்கிறாய்…
//நன்றாக கண்ணில் விளக்கெண்னை விட்டு படி..!
மேல் அட்டையும் கீழ் அட்டையும் புரட்டிவிட்டு, அய்யயோ அய்யயோ என் புத்தகத்தில் அது இல்லனு அழுகாத….//
இதை நீ எந்த பக்கத்தில் இருக்கு என்று சொல்லிவிட்டு அப்புறம் பேசணும்….திரும்பவும் இங்க வந்து ஊளை உதார் விட கூடாது….!!!
முக்குல த்தவ சாதிக்க்ராண்ணே உங்க சாதியிலே கள்ளரு மறவரு பொண்ண கட்டுவாய்ங்களா? எனக்கு தெரியல….அப்படி கட்டுனா ஒரே குலமா ஆயிருவாங்கல்ல அப்புறம் ஏன் ஆகல……என்னமோ போங்க நீங்க என்ன வேணா புளுகலாம்னு முடுவு பண்ணிட்டீங்க……
பெருமை, வீரம் என்று எல்லாம் பேசுறீங்களே, ஸ்ரீ ரங்கம், திருப்பதி போன்ற கோவிலின் கருவறையில் நுழைந்து விடுங்கள் பார்க்கலாம் உங்களின் வீரத்தை….
நீங்கள் நுழைய முடியாது ஏன் தெர்யுமா? நீங்கள் கீழ் ஜாதி, அப்படி நுழைந்து விட்டால் (பார்பனர்கள் )தீட்டு களிப்பார்கள், பெயரில் மட்டும் தான் நீங்கள் தேவர், ஆனால் நீங்களும் அசுரர்கள் தான்….
அது சரி அந்தளவு சிந்திக்க தெரிந்தால் நீங்கள் ஏன் சாதியை பற்றி பெருமையாக பேச போறீங்க?
\\ இன்று அவர் கள்ளர்,அகமுடையர்,மறவர் என முக்குலத்துக்கும் தெய்வம்.//
உங்கள் தெய்வம் தந்த அருள் வாக்குகள் சிலவற்றை பார்ப்போமா.
ஒரு கூட்டத்தில் தேவர் “வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்” என்று பேசினார்.
மடியில் அணு குண்டு(??) வைத்திருப்பதாகவும்”, “மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்(!!!)” என்றும் மேடையில் முழங்கியவர்தான் தேவர்
மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்” என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொல்லி வந்தார்.
சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தில் N.R.தியாக ராஜன் எனும் எம் எல் ஏ பேசியது.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1331&Itemid=139
தேவர் வாழ்ந்த காலத்தில் அவரது உளறல்களை நம்பிய மக்கள் பெரும்பாலும் படிப்பறிவு இல்லாத அப்பாவிகளாகவும் வீண் சாதிப் பெருமையில் மூழ்கிய மூடர்களாகவும் இருந்தனர். அவர்கள் தேவரை கொண்டாடியது ஆச்சரியமில்லை.இன்று,ஐ.டி பீல்டுல சாதிப்பதாக பீற்றிக் கொள்ளும் படித்த இளைஞர்களும் அப்படித்தான் இருப்போம் என்று சொல்வதுதான் ஆச்சரியம்.
குண்டா இருந்தாலும் ,காந்தமா இருந்தாலும் எல்லாமே மடியில தான் போல ….
சரியாய் சொன்னீங்க போங்க..!!! கணணிபொறியாளாராய் தென் ஆப்பிரிக்காவில் – ஜோகனஸ்பர்க் சிட்டியில் இருப்பது எனக்கு பெருமையே..!!! இங்கும் நிறைய தேவர்கள் இருக்கிறார்கள் .. குறிப்பாக வாண்டையார்கள்… இங்கும் இன பெருமையாய் கலப்பு திருமணம் எதுவும் இல்லை 150 வருடமாய் தேவரினம் ஒரு தேவரினத்திதான் திருமணம் செய்கிறார்கள்
இங்கு பிள்ளை,கவுண்டர்,படையாச்சி,நாயுடு மற்றும் சர்மாக்கள் உண்டு
மிகப்பெறிய புளுகு…..அதுசரி நீங்க ஏண்ணே உங்க சாதிசந்த்த விட்டுட்டு தென் ஆப்பிரிக்கா போனிங்கே….உங்க புனிதர்ர்ர்ர்ட்ட்ட சொல்லி அவ்ர அவரு எம்பெருமான் முருகன்ட ரெகமண்ட் பண்ணி உங்க மண்ணுக்கே வந்துரவேண்டிதானே……பாத்து அங்கேயும் போய் மண்ணீன் மைந்தர்கள் சொல்லி வாங்கு படாதீங்க….. உசிலம்பட்டி வக்கில்லாத தேவரு முருக்கு விக்க ஆந்திரா போறாக…. வக்குள்ள தேவரு ஆப்பிரிக்கா போறாக…. அதுசரி உங்க முத்லாளியும் தேவமார்ர்ர்ருதானா…..
சரி சரி உங்க சுருதி கம்மிருச்சு….தேவரினத்தை பற்றிய சினிமா பெரும் வெற்றி பெறுவது போல வினவு வெளியிடும் தேவரினத்தை பற்றிய பதிவுகளும் பெறும் வெற்றி பெறுகின்றது. அதுனால எப்படியும் வெகு விரைவில் தேவரினம் பற்றி மற்றும் ஒரு பதிவு கட்டாயம் வரும்…அப்போ மிச்சம் பேசலாம்…..மிச்டர் பாண்டியன் சாரி கடுங்கோன் பாண்டியன், பாண்டியன்னு பேருக்கு பின்னாடி யார் வேணா போட்டுக்கலாம்…ஆனா நீ பாண்டியன்னு போட்டுக்கிறது கோவணத்தை தலையில கட்டின மாதிரி இருக்கு…..இன்னும் எல்லா சாதி பயலுகலும் உங்கள அக்ரினையில அதுகனு தான் சொல்லிக்கிரானுக…ஆனா நான் உங்கள மரியாதையா பேசுரேன் பாருங்க…போய் பொழப்ப பாருங்கப்பு…
ரகு அவர்களே உங்களுக்கு வாழ்த்துக்கள்? உங்களுக்கான பதில் உங்கள் வார்த்தைகளுக்கு மேல் கண்ணன் என்பவர் சொல்லியிருக்கிறார்? எல்லோரும் எங்களை அக்ரினையாக அழைப்பது பற்றி வருத்தமில்லை? ஆனால் நிச்சயம் ஒரு நாள் அக்ரினையில் உள்ள ஒரு மிருக்கத்தை கல்லால் அடித்து விரட்டுவார்களே அது மாதிரி விரட்டுவார்கள். கடவுள் யாரையும் உயந்தவன், தாழ்ந்தவன் என்று படைக்கவில்லை எல்லாமே காலத்தின் சூழ்ச்சி? அந்த காலம் எதிராக திரும்ப இன்னும் சில ஆண்டுகள் ஆகும் அதுவரை குலபெருமை பேசலாம்?
ஏம்பா பாண்டியன் என்கிற அடைமொழி உங்களுக்கு மட்டும் அழகாயிருந்தால் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்? ஆனால் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் அன்று மதுரை ஆண்ட பாண்டிய மன்னர்கள் எல்லோரும் களவுத் தொழில்தான் செய்தார்களா? களவுக்கு என்று ஒரு நாடா? பாண்டிய மன்னர்கள் மக்களிடமே களவாண்டார்களா? உங்களுக்கும் , பாண்டிய மன்னர்களுக்கும் சம்பந்தம் இருப்பது போல் தெரியவில்லையே? தம்பி ரகு சும்மா விளையாடக் கூடாது? பாண்டிய மன்னர்களின் ஆவி எங்காவது இருந்தால் உன் பேச்சை கேட்டு தலையில் அடித்துக்கொள்ளும்?
பாண்டியர்கள் தேவர் இல்லைனு கோர்ட்டே சொன்னாலும் நீ சொல்றது காமெடியா இருக்கு!
//மிச்டர் பாண்டியன் சாரி கடுங்கோன் பாண்டியன், பாண்டியன்னு பேருக்கு பின்னாடி யார் வேணா போட்டுக்கலாம்…ஆனா நீ பாண்டியன்னு போட்டுக்கிறது கோவணத்தை தலையில கட்டின மாதிரி இருக்கு//
கலாய்க்கிறாராம்…… !!! கேட்ட கேள்வி ஒன்னுத்துக்கு கூட பதில் சொல்ல முடியல….இதுல என்ன வெட்டி பேச்சு….ஒன்னு இல்ல…முத்துராமலிங்கம் பத்தி ஒம்போது கட்டுரை வந்தாலும் சரி….எல்லா இடத்திலையும் இங்க இருக்கிற அளவு பல மடங்கு எதிர்ப்பு கண்டிப்பா இருக்கும்….
//சரி சரி உங்க சுருதி கம்மிருச்சு//
உங்க ஆளுங்ககிட்ட புடிச்சதே இது தான்….
எவ்ளோ குத்து வாங்குனாலும் வலிக்காத மாதிரியே நடிச்சிட்டு, ஒண்ணுமே நடக்காத மாதிரி, ‘டக்குன்னு’ அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆய்டுறீங்க……
//குல பெருமை என்பது பேசுவது அல்ல…வாழ்ந்து காட்டுவது//
முக்குலத்து ஆளுங்க மட்டும் தான் வாழறாங்க…மத்தவங்க எல்லாம் மானம் கேட்டு திரியிராங்களா? ஏதோ பேசணும்’னு பேச கூடாது…
இப்படம் குறித்து தோழர் கு. உமாதேவி யின் பதிவு
————————- ———————–
சுந்தர பாண்டியன் என்கிற சாதிவெறி திரைப்படம்.
……………………………………..
நேற்று இயக்குநர் சசிகுமார் தயாரித்து நடித்து வெளிவந்துள்ள சுந்தரபாண்டியன் திரைப்படத்தைப் ’வேறு வழியில்லாமல்’ பார்க்க நேர்ந்தது.( அட்டக் கத்தி திரைப்படம் பார்க்க போனால் படத்தைத் தூக்கிவிட்டார்கள்)
சரி கதைக்கு வருவோம். அதாவது சுந்தரபாண்டியன் கதைக்கு.
கதை எங்கே இருக்கிறது. ஓப்பனிங்கிலேயே சாதி பெருமை பேசி விடுகிறார்கள்.
காதல், கலப்பு மணம் என்று அம்பேத்கர் / பெரியாருக்குப்பின் எங்கோ வந்துவிட்ட சாதி ஒழிப்பு அரசியலை கேலி செய்யும் விதமாக சமீபகாலங்களில் காடுவெட்டி குரு, கொங்கு பகுதி சாதி அமைப்பினர் , தேவர் சாதி அமைப்பினர் வெளிப்படையாகவே கலப்பு மணத்தை எதிர்க்கிறார்கள். இந்த படம் அந்த சாதிவெறி அரசியலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
படத்தின் முதல் காட்சியிலேயே தேவர் சாதி பெண்ணை கீழ்ச்சாதிக்காரன் காதலித்தால் என்ன நடக்கும் என ஒரு காட்டில் வைத்து ஒரு பையனை கொலை செய்கிறார்கள்.
உசிலம்பட்டியை மதுரையிலிருந்து பிரித்து தேனி மாவட்டத்தோடு இணைக்கப்பட்டபோது நடந்த போராட்டங்களை, ஏதோ மதுரை மாவட்ட பாசம் என்று பூ சுற்றுகிறார்கள். உசிலம்பட்டி தேவர் சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் ஊர் என்பதும், இயல்பாகவே மதுரையை தேவர் சாதி வெறியர்கள் தங்களது ஆதிக்கம் கொண்ட ஊராகக் கருதுவதால், எங்கே தங்கள் சாதிபலம் குறைந்துவிடுமோ என்றுதான் அந்த போராட்டம் நடத்தப்பட்டது என்பதுதான் உண்மையானக் காரணம்.
படம் நெடுக சாதி அடையாளங்கள்தான். ஃபார்வர்டு பிளாக், முத்துராமலிங்கம், பம்படம் அணிந்த பாட்டிகளும், மஞ்சள் /பச்சை டவுசர்களும், பெரிய தலைகட்டு என்று பீத்த பெருமைகளும், முத்துராமலிங்கம் படம் போட்ட காலண்டர்களும் என சகிக்க முடியவில்லை ( பாதியிலேயே கிளம்பி வந்திருக்கலாம்தான் கொடுத்த 80 ரூபாய்க்காக என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்று உட்கார வேண்டியதாகிவிட்டது.)
தங்கள் சாதி பெண்ணை வேறுசாதி பையன் காதலித்தால் பையனை கொல்லும் சாதிவெறி , சொந்த சாதிக்காரன் காதலித்தால் மட்டும் கவுரவம் பார்க்காமல் கட்டிக் கொடுக்கிறார்களாம் ! அதாவது வறட்டு கவுரவத்தையும் மீறி.
என்னே ஒரு நீதி….!
கதைப்படி கதாநாயகியை சுற்றும் வேறு சாதி பையன் ஒருவனும் கொல்லப்படுகிறான். எதிர்பாராத விதமாக என்று சொல்லப்பட்டாலும், அவனைக் கொன்றது அதே கதாநாயகனும், அவனது நண்பர்களும்தான். கதைப்படி வேறுகாரணம் இருந்தாலும் இறந்தவனுடைய குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் நிலத்தை கொடுத்து சரிகட்டி விடுகின்றனர்.( அதாவது அந்த பையன் தேனி பக்கம் ஆதிக்கமாக உள்ள ஒரு சாதி என்று சொல்லலாம்) இதே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பையன் என்றால், இந்த சரிகட்டு நடந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
அவன் மட்டுமல்ல அவன் குடும்பத்தையே கொளுத்தியிருக்கும் இந்த சாதிவெறி கும்பல்.
இப்படி முழுக்க சாதிவெறி சாயம் பூசிய படத்தை ஏதோ நண்பனுக்கு நண்பன் நண்பன், நண்பன் துரோகம் செய்தால் எதிரியே வந்தாலும் சொல்லக்கூடாது என்று நண்பன் செண்டிமெண்ட் பூசி காது குத்துகிறார்கள்.
உலக சினிமா, உள்ளூர் சினிமா, மாற்று சினிமா பேசும் அன்பர்களே இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இது போன்ற சினிமாக்களை தமிழ் திரையுலகில் அனுமதிக்க வேண்டுமோ?
நல்ல விமர்சனம்.கலப்பு மணத்திற்குப் பதில் சாதி மறுப்புத் திருமணம் எனப் பயன்படுதுங்கள்
முக்குலத்து சிங்கங்களின் வீர தீரம் எல்லாம் ஒன்றுமறியா ஏழை எளிய மக்களிடம் மட்டும்தான். ஆண்ட பரம்பரை, அடக்கியாண்ட வம்சம் என்று கூறிக்கொள்பவர்கள் மதுரையில் தா.கிருஷ்ணன் வெட்டி கொல்லப்பட்டபோது எங்கே சென்றார்கள் என தெரியவில்லை. அஞ்சாநெஞ்சனின் தலைமையில் மருதிருவர் சிலை திறந்தார்கள். தங்களுக்கு வருமானம் கிடைக்குமானால், அதிகாரத்துக்கு ஆபத்து வருமானால் எந்த சாதிக்காரனின் காலையும் கழுவி விடுவார்கள். மானம், மயிறு,மட்டை எல்லாம் பிறகுதான். இன்று ஜெயலலிதா 1kmக்கு அப்பால் வரும்பொழுதே நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடப்பவர்களில் முதலிடம் வகிப்பவர்களும் இலர்கள்தான்.
தா.கிருட்டினன் என்ன தேவர் சாதிக்காகவா உயிரை விட்டார்..??? அல்லட்கு தேவர் மக்களுக்காக வாழ்ந்து இறந்தாரா..!!!
கல்யாண விழாவில் இருந்து காது குத்து வரைக்கும் எந்த நிகழ்ச்சக்கு போனாலும் அங்கே எல்லாம் சாதி பெருமை பேசுறது தான் தா.கிரிட்டினனோட முதல் வேலை….!!! எப்பவாச்சும் ஊரு பக்கம் வந்தா தானே இங்க என்ன நடக்குத்துன்னு தெரியும்…..
சிவகங்கை மாவட்ட செயலாளராக சிவராமனை அழகிரி சிபாரிசு செய்தார். ஆனால் தா.கிருஷ்ணன் தனது அகமுடைய சாதியை சேர்ந்தவர்தான் மா.செவாக வர வேண்டும். அப்படி இல்லையென்றால் கள்ளர், மறவரை நியமிக்க வேண்டும் என தலைமையிடம் நெருக்கடி கொடுத்தார். அதனாலேயே கொலை செய்ய பட்டார். வழக்கில் முதல் குற்றவாளியாக அழகிரி பெயர் சேர்க்கபட்டது. இனி அழகிரி மதுரையில் குடியிருக்க முடியாது என்று முக்குலத்து சங்கங்கள் மதுரையில் நோட்டீஸ் ஒட்டின. ஆனால் நடந்தது என்ன? அனைவரும் அழகிரியின் அடிவருடிகளாக மாறினர். போதிய சாட்சிகள் இல்லையென்று வழக்கு தள்ளுபடி செய்ய பட்டது. மதுரையில் அழகிரியின் தலைமையில் மருதுபாண்டியர் சிலை திறப்புவிழா மிகக்கோலகலமாக நடந்தது. ஒருவேளை சுந்தரபாண்டியனை போல அழகிரியும் இரண்டு ஏக்கர் தா.கி குடும்பத்துக்கு எழுதி கொடுத்திருப்பாரோ?
உங்க சாதியில அல்லக்கைகள் அதிகமா தியாகு…எங்கப்பன் குதிருள்ள இல்லைனு நீங்களே சொல்றீங்க…..
கள்ளர் என்றால் திருடர் என்று சொல்லும் அறிவிலிகள் கவனத்திற்கு,ஒரு இனம் அரசாண்ட பரம்பரை என்றால் அதற்கு சாட்சியாக ஒரு சமஸ்தானமோ,ஒரு பாளையமோ,சில மன்னர்கள் பெயரோ இருக்கும்,அப்படி இருப்பது தான் ராமநாதபுர சமஸ்தானம்,சிவகங்கை சமஸ்தானம்,நெற்கட்டும் செவ்வல் பாளையம்,மன்னர் பூலித்தேவன் போன்றோர்,நாயக்கர்களின் ஆட்சியில் முன் அரசாண்ட மன்னர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன,அப்போது அவர்கள் வரலாறு மாற்றப்பட்டு அவர்கள் களவு தொழில் புரிபவர்களாக சித்தரிக்கப்பட்டனர்.இதுல ஒரு அறிவாளி பி.ஆர்.பி பத்தி பேசிருக்காரு,ஆமா ஊரெல்லாம் நாங்க தான் திருடுறோம் ஆ.ராசா,கனிமொழி,நீரா ராடியா கூட தேவர் தான்.
தேவர்,வன்னியர்,முத்தரையர்,கவுண்டர்,நாயக்கர் போன்ற இனங்களில் மன்னர்கள் உண்டு,வரலாறு உண்டு உங்களிடம் இந்த வயிதெரிச்சல் பொறாமை தவிர என்ன இருக்கு.இதுக்கு மேல பேசுனா சாதி பெயரை சொல்லி திட்டிடானு ஒரு கேஸு(ஹிஹிஹி செம வீரம் டா…)எனக்கு வேலை இருக்கு நான் போறேன்,போனதுக்கு அப்பறம் பேசுறவன் தரலாமா பேசு,இந்த இணையத்துல அடையலாம் இல்லாத பேரில் இருந்து பேசுவதால்,வினவு மாதிரி சுயசாதி அபிமானத்துடன் கட்டுரை எழுதுவதால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை.
போராளி படத்தில் அண்ணாச்சி’ன்னு ஒரு கேரக்டரை பத்தி வினவு ஒண்ணுமே எழுதலையே?ஒருவேளை அது சசிகுமாரின் நாடார் சாதி வெறியா?
தலைவா சசி!!!அருமையான படம்,இன்னும் எதிர்பார்க்குறேன்,இந்த மாதிரி பொறாமைக்காரர்களை பத்தி கவலைப்படாதிங்க 🙂
//ஒரு இனம் அரசாண்ட பரம்பரை என்றால் அதற்கு சாட்சியாக ஒரு சமஸ்தானமோ,ஒரு பாளையமோ,சில மன்னர்கள் பெயரோ இருக்கும்//
மருது சகோதர்கள் ஏதோ ஒரு பாளையத்தின் தலைவன். பறங்கியர் நாயக்கர் ஆட்சி முறையில் இருந்த பாளையங்களை எல்லாம் ஜமீனாக மாற்றி தமது கட்டுப் பாட்டில் வைத்துகொள்ள விரும்பினர். அதற்க்கு ஒத்துபோகாதவர்கள் கட்ட பொம்மன்(தெலுங்கன்),பூலித் தேவன்(மறவன்),மருது சகோதரர்(மறவன்) போன்றோர்.
* பாண்டியனின் ஆட்சியை வீழ்த்தி விட்டு, ஆட்சிக்கு வந்தவர்கள் நாயக்கர்கர்கலான வடுக தெலுங்கர்கள். அது வரை இருந்த ஊர் குடும்பு ஆட்சி முறையை நீக்கிவிட்டு, பாண்டிய அரசை 668 பாளையங்களாக பிரித்து அதில் 500 பாளையங்களில் தெலுங்கரையே அதிகாரிகளாக நியமித்தான். மீதம் உள்ள பாலையங்களுக்கு வேறு வழியில்லாமல் தெலுங்கர் அல்லாதவர்களை நியமித்தான். இது வரலாறு.
நமது கேள்வி இது தான்.
* பாண்டியன் என்பவன் ‘கள்ளன்/மறவன்’ என வைத்து கொண்டால், தெலுங்கன் இவனிடம் இருந்தே ஆட்சியை பறித்து இவனிடமே ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன? எந்த கேனையனாவது அதை செய்வானா?
இது ஒன்னு போதாதா….’கள்ளனோ’,’மறவனோ’ பாண்டியன் இல்லை என்று சொல்வதற்கும், இது நாள் வரை எப்படி தன்னை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்வதற்கும்…!!!
***பாண்டியன் என்பவன் ‘கள்ளன்/மறவன்’ என வைத்து கொண்டால், தெலுங்கன் இவனிடம் இருந்தே ஆட்சியை பறித்து இவனிடமே ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன?****
அதானே கடுகோன் !!! இந்தியாவிடமிருந்து ஆட்சியை பறிச்சிட்டு அப்புறம் இந்தியாவிடமே ஆட்சியை திரும்ப ஏன் குடுக்கனும்>>?????
தனக்கு கட்டுப்பட்டு வரி செலுத்தாத அரனுக்குநிலம் போனது எவன் அவனுக்கு கீழ ஆட்சி புரி சம்மதித்தானோ அவ்னுக்கு அவன்நிலமே.. தரப்பட்டது…
கிருஷ்ணதேவராயர் தமிழ் மண்ணில் புகுந்த வரலாற்றில் தமிழ் மண்ணரான முக்குலோத்தோர் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது…
பள்ளன், தேவேந்திரன் , மள்ளன் அப்படினு வார்த்தையே இல்லையே…!!!
ஆமா தெலுகுல பள்ளனுக்கு என்ன பேரு சொன்னா..நான் தேடி எதுவும் போட்டுயிருக்கானு பார்த்து சொல்றேன்!
//தனக்கு கட்டுப்பட்டு வரி செலுத்தாத அரனுக்குநிலம் போனது எவன் அவனுக்கு கீழ ஆட்சி புரி சம்மதித்தானோ அவ்னுக்கு அவன்நிலமே.. தரப்பட்டது…//
நீங்க எப்படியும் இங்க தான் வந்து நீப்பீங்கன்னு தெரியும் தியாகு…விவாதம் முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சீங்களா?.. இனி தான் இந்த டாபிகல விவாதமே ஆரம்பம்…..!!!
வடுகனிடம் நீங்க போட்டியிட்டு தான் ஆட்சியை இழந்ததா சொல்றீங்க….அப்படின்னா அதே வடுக மன்னன் ஒருவனின் வரலாற்றை இங்கே தருகிறேன்…அதுல உங்கள பத்தி என்ன சொல்லி இருக்காங்கன்னு பார்க்கலாமா?
—————————————
பெயர்: பரமக்குடி பாளையக்காரர் தும்பிச்சி நாயக்கர்.
இனம்: நாயக்கர்
உட்பிரிவு: ராஜகம்பாளம்
குலம்: சில்லவார்
புகழ்:
* கடைசி வரையில் விஜயநகர் பேரறுசுக்கோ, யாருக்கும் அடிபணியாமல் இருந்தது. பல்லாயிரக் கணக்கான ராஜகம்மாள மக்களை போர்த்துகீசியர்களுக்கு எதிரான இலங்கை நாயக்கர் போரில் பங்குபெற்று இழந்தது.
* இலங்கை நாயக்கர்களுக்கு பெண் கொடுத்த பெருமை
* பாளையம் பறிபோனாலும், படை பலத்தில் சிறந்து விளங்கியமை.
* (முக்கியமான பாயின்ட் ): களவு தொழில் செய்து வந்த தேவர் சமூகத்தை அடக்கியதோடு மட்டும் இல்லாமல், அவர்களை ஆளச் செய்த பெருமை.
Referrence :
(http://naickernaidu.blogspot.in/2012/04/blog-post.html)
—————————————-
(எமது கேள்வி): அப்படினா பாண்டியன் திருடனா?
அடுத்த சில விசயங்களை பாப்போமா….?
நூல்: சேதுபதி சரித்திரம்
ஆசிரியர்: ஹரப்பா தியாகராஜன்
பக்: 677 , 680 , 681 , 682 , 685 , 689
ஆய்வு பொருள்: செப்பேடுகள்
நமது விவாத தலைப்பு: சேதுபதியின் பட்டங்கள்
* மூவராயக் கண்டன் — மூவேந்தர்களுக்கு எதிரியானவன்
* வைகை வளநாடன் கொட்டம் அடக்கி – பாண்டியனின் கொட்டம் அடக்கியவன்
* ஆரியமானம் காத்தான் – ஆரியர்களின் மானத்தை காத்தவன்
(எமது கேள்விகள்:)
=> மறவர்கள் செதுபதியையே மன்னராக கொண்டவர்கள், அவர்களுக்கே அடி பணிந்தவர்கள். மறவர்களும், சேதுபதியும் பாண்டியன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் மேலே உள்ள பட்டங்கள் எதிராக அல்லவா சொல்கின்றன.?
=> விஜயநகர மன்னர்களுக்கு மேலே சொன்ன அதே பட்டங்கள் உள்ளதே. எப்படி? பாண்டியனை எதிர்த்தவன் இப்படி பட்டங்களை வைத்துகொள்வதில் அர்த்தம் இருக்கு. ஆனால் ‘நான் தான் பாண்டியன்’ என்று சொல்பவனுக்கும் அதே பட்டமா?
இப்போ தியாகுவிடம் நேரடியான கேள்வி.
* மறவன் தான் பாண்டியன் என்பதற்கு குறைந்த பட்ச ஆதாரம் என்ன? அதை எல்லாம் நீங்கள் இங்கே அடுக்குங்கள்(?).
தியாகு…இங்க கொஞ்சம் வந்து உங்க திறமையை காட்டலாமே….? ஏன்னா நீங்க இங்க வந்து என்ன பதில் சொல்ல போறீங்க என்று தெரிஞ்சுக்க ஊரு ஒலகமே ஆவலா காத்துகிட்டு இருக்கு….
பூபதி அவர்களே, உங்களுக்கான பதிலை 47.1 இல் தேவேந்திரன் கொடுத்துள்ளார்?
பத்த வச்சிட்டியே பரட்டை …
அடுத்த வேலை சோத்துக்கு வழியில்லைனாலும் இந்த மசிரு சாதிக்கு மட்டும் குறைச்சல் இல்ல …தேவர் சாதியை பலிகடா ஆக்கி படத்தை ஓட வச்சுட்டாங்க….
இன்னமும் ஜாதி மதம் னு நாம அடிச்சிகிட்டே நிப்போம்..
நம்மளை சுத்தி உள்ளவன் எல்லாம் நம்மளை வந்து அடிக்கட்டும்..
தமிழன்னு உணர்வு யாருக்காவது இருக்கா?
போய் திருந்துற வேலையை பாருங்கப்பா .
திருநாவுக்கரசு
இங்க அடிதடியே யார் தமிழன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்துல நடக்குற அடி தடி தான்….!!!
*தமிழ்நாட்டில் 3 1/2 கோடிபேர் தேவர்சமுதாயம்.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது: படம் பிளாப் ஆகி இனி சினிமா வாழ்க்கையே அவ்ளோ தான் என்று மிகவும் இக்கட்டான நேரத்திலோ, அல்லது தன்னை ஒரு வசூல் இயக்குனராக காட்ட விரும்புகிரவரோ முதலில் தேர்ந்தெடுக்கும் களம் ‘முக்குலம்’. “‘தேவர்’ பேரை சொன்னாலே படம் ஓடிடும், பெருமையை பேசுனாவே காசு கொட்டும்” என்ற காசு பார்க்கும் எண்ணம் தான். மேற்சொன்ன எவரும் நன்றாக,செழிப்பாக இருக்கும்போது ஏன் ‘முக்குலம்’ பற்றி எந்த படத்தையும் எடுக்க முன்வரவில்லை? உண்மையில் இவர்கள் ‘முக்குல பெருமை’ போதை காட்டி,’கள்ளனை’ ஏமாற்றி அதில் காசு பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை.
* “தமிழக மக்கள் தொகை 6 கோடி. இதில் முக்குலத்தோர் மட்டும் 3 கோடி.” — ஏதோ ஒரு முக்குல நபரின் முகநூளில் இருந்து.
* “….திருமாவளவன் தான் இந்த அரசாங்கத்துக்கு முக்கியம் என்றால் வரும் தேர்தலில் முக்குல மக்கள் சுமார் 2 1 /2 கோடி பேரின் வாக்குகளை இழக்க நேரிடும்….” — செங்குட்டுவன் வாண்டையார் (முக்குலத்தோர் பேரவை)
* “தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரிïர் கள்ளர், செம்பநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் 96 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர் வசிக்கின்றனர்” — கள்ளர் இணைகுழுமம் விக்கிபீடியா.
இந்த புள்ளிவிவரங்களில் எது உண்மை? உண்மையான புள்ளிவிவரம் தான் என்ன? அதற்க்கு ஆதாரம் என்ன? இங்கே சொல்லப் பட்டதிலேயே குறைந்த அளவான 96 லட்சம் என்பதும் மிகப் படுத்தப் பட்ட அளவு ஆச்சே…? அப்படியானால் இதில் கூட பித்தலாட்டமா? ….அய்யோடா……!!!
மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு
http://www.thevarthalam.com/thevar/?p=1907
மள்ளர்,மல்லர் இருவரும் ஒருவரே….மேலும் இவை இரண்டும் ‘பள்ளரையே’ குறிக்கும் என்று நிரூபித்துவிட்டால் இந்த ‘மல்லர் மள்ளர் ஆய்வு’ என்று கட்டுரை எழுதியவர் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அந்த கட்டுரையை நீக்கிவிடுவாரா? இது என்னுடைய வெளிப்படையான சவால்.
http://en.wikipedia.org/wiki/Telugu_castes
பள்ளன் மூவேந்தர் காலம் தொட்டே இங்கே வாழ்ந்து வந்துள்ளான் என்று கல்வெட்டு,இலக்கிய ஆதாரம் மூலம் நிறுவிவிட்டால் இந்த விக்கிபீடியா புளுகை நீக்கிவிட்டு, மீசை எடுத்துறீங்களா ஹரிகுமார்?
அரசாங்க பதிவேட்டில் அப்படி இல்லையே… ஏன்..? பள்ளன் தெலுங்கன் என்று இல்லையே….? மீண்டும் பித்தலாட்டமா?
http://censusindia.gov.in/Tables_Published/SCST/SC%20Lists.pdf
* Mala என்பதை திருத்தி Malla என்ற சாதியை எழுதி இருக்கு…
* Pallar ,Devendra Kula Vellalar இவங்க பேரெல்லாம் தேவை இல்லாம விக்கியில் Malla என்பதற்கு கீழே சேர்க்கப் பட்டு இருக்கு….!!!
இந்திய அரசு ஆவணத்தில் அப்படி எந்த குளறுபடியும் இல்ல…..!!! விக்கில் (தற்போது அது திருத்தப் பட்டு விட்டது), யார் அப்படி திருட்டு தனமா எழுதி வச்சாங்கன்னு தெரியல….ஏன் அவங்களுக்கு இந்த கேடுகெட்ட பொழப்பு?
முடிஞ்ச வரை அப்படி தப்பாக திருத்தியது யார் என்ற விவரங்கள் திரட்டப் பட்டு அவரும் இங்கே அம்பலப் படுத்தப் படுவார்….!!!
அரசாங்க பதிவேட்டில் உள்ள சாதிகளில் பள்ளன் என்பவன் எங்கு எங்கு இருக்கிறான் என்று தேடிப்பார்த்தேன்.
* கர்நாடகாவில் இருக்கிறான்
* கேரளாவில் இருக்கிறான்
* பாண்டிச்சேரியில் இருக்கிறான்
* தமிழ்நாட்டில் இருக்கிறான்…
* ஆந்திராவில் இல்லை…!!!
இவற்றின் மூலம் சில கேள்விகளையும் முன்வைக்கிறேன்.
=> இலக்கியங்கள் சொல்லும் மூவேந்தர்களின் எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதியிலும் அவன் இன்றுவரை பள்ளனாகவே இருக்கிறான். மறவனுக்கு,கள்ளனுக்கு,அகமுடியானுக்கு அப்படி ஏதும் உள்ளதா?
=> ஏன் பள்ளனோ, அவனின் கிளை சாதிகளோ தெலுங்கில் இல்லை?
இணையத்தில் இப்போது புத்தம் புதியதாய் உருவெடுத்து கொண்டிருப்பது, சாதீய மோதலை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் பதிவுகளே. அதிலும் குறிப்பாக, முகநூலில் (ஃபேஸ்புக்) தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்
http://www.thevarthalam.com/thevar/?p=1894
நீங்க முன்ன பின்ன ‘முக்குல ஆட்களின்’ முகநூல் பக்கம் போய் இருக்கீங்களா? முதலில் போய் பாத்துட்டு வந்து அப்புறம் பேசுங்க… அவங்க போடுற 10 போஸ்டில், 7 போஸ்ட்டு ‘பள்ளனை’ திட்டுவதற்கும், 3 போஸ்ட்டு சாதி பெருமை பேசுவதற்கும் இருக்கும்… அது மட்டும் இல்லாம எவ்வளவு கீழ்த்தரமா பேச முடியுமோ அவ்ளோ கீழ்தரமா அங்க அவங்க அவிழ்க்கிற முத்துகளை பாக்கலாம்…இதுல ‘தான் பெரிய்ய யோக்கிய சிகாமணி’ மாதிரி அடுத்தவங்களை பத்தி பேச ஒரு கட்டுரை…..வெட்கம்….!!!
//முக்குலத்து மக்களின் சொந்த நிலங்களில் விவசாய கூலியாகவும்,தேவரின மக்களின் வீட்டில் பண்ணை ஆட்களாகவும், மள்ளர்(பள்ளர்) இன மக்கள் பணி புரிந்து வந்தவர்களை, சில சுயநல அரசியல்வாதிகள் தனது அரசியல் லாபநோக்கிற்க்காக தவறான பாதையில் அழைத்து செல்கின்றனர். அதை அறியாமேலே அவர்களும் தங்களது இயல்பான சந்தோச தருணங்களை இழந்து, வேறெங்கோ பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இதை அவர்களாகவே சுய உணர்தல் ஏற்பட்டு அந்த மாயைகளிலிருந்து வெளிவந்தால் மட்டுமே மீண்டுமொரு மிகப்பெரிய சாதீய மோதல் ஏற்படமால் இருக்க ஒரே வழி! ….//
இவருக்கு மட்டும் மூளை 2 கிலோ 5௦௦ கிராம் . காலம் முழுக்க இவர்கள் அடிமையாகவே இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஓர் இணைய தளம் வேறு . இவர்கள் பாப்பானுக்கு அடிமையாக இருப்பதை போல இவர்களுக்கு மற்றவர்கள் அடிமையாக இருக்க வேண்டுமாம் அப்படி இருந்தால் சாதி மோதல் வராதாம் .
பிரெட்ரிக் நீங்கள் சொல்வது ரெம்ப சரி? பள்ளர்களாகிய நாங்கள் தேவர் வீட்டு பண்ணையில் வேலை செய்தோம்? அப்போதெல்லாம் தேவர் வீட்டு பெண்கள் எங்கள் மீது காட்டிய அன்பு இருக்கிறேதே .. சும்மா சொல்லக் கூடாது? என்ன செய்ய, எங்களுடைய பணி அப்போது அவர்களுக்கு தேவைபட்டது , அந்த இயல்பான சந்தோச தருணங்களை இழந்தது எங்களுக்கு பெரிய இழப்புதான்?அரசியல்வாதிகளின் பேச்சை கேட்காமல் இந்த முட்டாள் பயபுள்ளைக சாதி மோதலை கைவிட்டு மீண்டும் உங்கள் குடும்பகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும்?
பிரட்ரிக் அவர்களே மேலே சொன்ன பதிலில் உங்களுக்கு என்பதை தேவரின வலைதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்கு பதில் என்பதாக எடுத்துக் கொள்ளவும்
சுந்தரபாண்டியன் சூப்பர் படம் வாழ்க சசிகுமார்
“காக்கையும் குயிலும் ஒரே கூட்டில் வாழ்ந்தாலும் காக்கைதான் குயிலபோல கூவிட முடியுமா! அதுபோல தேவரினத்தை எத்தனைபேர் இழிவாக பேசினாலும் தேவரின புகழை மிஞ்ச முடியாது!”
இந்த மள்ளர்கள் (பள்ளர்கள்) யாரும், வால், வில்லோடு களத்தில் நின்று போர் செய்யவில்லை.மள்ளர்களான இவர்கள் நின்ற களம், நெல்சாகுபடி சார்ந்த விவசாயக்களம் மட்டுமே என்பது வரலாற்று உண்மை.அறுவடை காலங்களிலும், அதை தொடர்ந்த சிலமாத காலங்களிலும், அந்த விவசாயக்களங்களில் வைக்கோல் போரைத்தான் அவர்கள் நேரிடையாக அறிந்திருந்தனர். பல நெடுங்காலமாய் வயலோரங்களிலும், பண்ணை வீட்டின் மாட்டு தொழுவத்தின் பின்புறமும், பல வைக்கோல் போர்களை மிக நேர்த்தியாக உருவாக்கும் வல்லமை கொண்டவர்கள். அதை தவிர, மல்யுத்த போர் எதுவும் அவர்களுக்கு செய்ய தெரியாது; அந்த மள்ளர்களுக்கு தெரிந்த ஆயுதமும், பயன்படுத்திய ஆயுதமும், கதிர் அரிவாள் மட்டுமே. அந்த மக்கள் வேற ஒன்றுமே தெரியாத அப்பாவிகள்!
http://www.thevarthalam.com/thevar/?p=1907
இந்த தளத்தில் இதுவரைக்கும் 13 ஆதாரங்களை ‘மல்லர்,மள்ளர் ஒருவரே..அது பள்ளர் தான்’ என சங்க இலக்கியங்களில் இருந்து எதுத்து கமெண்ட்டா போட்டிருக்கேன்….இந்த கட்டுரையை எழுதியவர் எப்பேர் பட்ட வீரன் என்று நானும் பாத்துகிட்டு தான் இருக்கேன்….இது வரைக்கும் அதுல ஒரு கமெண்ட்டு கூட மாடரேட் பண்ணி பிரசுரிக்கவே இல்லை….’கடுங்கோன் பாண்டியன்’ என்ற இதே பேருல தான் போட்டிருக்கேன்….!!!
ரொம்ப சுலபமா இங்கே கமெண்ட்டு எண் 58 . 1 நான் வைத்த சவாலை ஏற்க துப்பில்லாமல் இங்கே ஒண்ணுமே தெரியாம வந்து திரும்பவும் அதே கதையை நீங்க அளக்கும்போதே தெரியுது….நீங்களும் எப்பேர்பட்ட வீரன் என்று…..!!! எதுக்கு இந்த பொழப்பு எல்லாம்….?
சரி திருபவும் கேக்குறேன்…
‘மள்ளர்,மல்லர்’ இருவரும் ஒருவரே…அது பள்ளரையே குறிக்கும் என்று நான் நிரூபித்துவிட்டால் நீங்க மீசை எடுத்துகிட்டு, மன்னிப்பு கேக்க தயாரா?
http://maraththamizhar.blogspot.in/2011/08/blog-post_2749.html
மறவன் பாண்டியன் இல்லை என்று ஆகிவிட்டது…
அது மட்டும் அல்ல, இனி முக்குல ஆட்கள் முருகன் தங்களது கடவுள் என்று சொல்லும் முன் கொஞ்சம் யோசிங்க….
“முருகன் யார் ?”
http://thavaaivunaduvam.blogspot.in/2012/09/blog-post_27.html
இவனுகளால இப்போ நானும் வக்கிர புத்திக்கு மாற வேண்டியதா போச்சு….என்னோட அலுவலக அட்டென்டர் ஒரு பள்ளர் (பலநாடுகளை ஆண்ட ராஜாதி மள்ளர்…)..மூணுநாளா வீம்புக்குனே 3 மணி போல தி.நகர் ல இருந்து தாம்பரம் அலுவலகத்துக்கு பட்டினியா அனுப்புறென்….ரத்தம் இன்றி யுத்தம் இன்றி வேலைய கரெக்ட்டா செய்யுறேன்….வாய்ப்பு கிடைக்கும் போதுலாம் உங்கள அணு அணுவா பண்றேன் …
திரு ரகு, வக்கிர எண்ணம்தான். என்னுடைய அலுவலத்தில் வேலை பார்க்கும் (அட்டென்டெர்) பெரும்பான்மையொர் கள்ளர்தான். ஆண்ட வம்சம் இப்படி வேலை பார்க்கலாமா?
//மூணுநாளா வீம்புக்குனே 3 மணி போல தி.நகர் ல இருந்து தாம்பரம் அலுவலகத்துக்கு பட்டினியா அனுப்புறென்//
அப்புடி வாங்கடி வழிக்கு….!!!
நீங்க என்ன அஆம்பிக்கிறது….மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனில் இனி எவனும் இட்லி வாங்க போறது இல்ல…..அதனால யாரு பட்னி கெடக்க போறான்னு நினைக்கிறியா? அட….நேர்ல தான் போய் பாரேன்…..ஹா…ஹா…ஹா….
இன்றைய காலகட்டத்தில் சாதி ரீதியாக மக்களை திரட்டுவது என்பதே திருடர்களுக்கும் கொள்ளையர்களுக்கும்தான் தேவைப்படுகிறது.அப்படி சாதி ரீதியாக அணி திரளும் மக்கள் தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்து கொள்கிறார்கள் என்பதே உண்மை.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பார்த்திபனூருக்கும் பசும்பொன்னுக்கும் இடையில் அருங்குளம் என்று ஒரு ஊர் இருக்கிறது.அவ்வூரை சேர்ந்த பலருக்கு சுற்று வட்டார பகுதிகளில் மாடு திருடுவதுதான் பிழைப்பே.50,60 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எங்கு மாடு காணாமல் போனாலும் பெரும்பாலும் அது அவர்களின் கைங்கர்யமாகத்தான் இருக்கும்.மாட்டை பல இடங்களில் தேடியும் கிடைக்காவிட்டால் மாட்டுக்கு சொந்தக்காரர் அருங்குளத்துக்கு போவார்.அந்த ஊரில் மாடு இருந்தால் ”முள்ளடி கூலி” கொடுத்து விட்டு மாட்டை மீட்டுக் கொண்டு வருவார்.காவல் துறையில் முறையீடு கொடுத்தாலும் ஒன்றும் நடக்காது.ஊரே திரண்டு நின்று திருடர்களை பாதுகாக்கும்.அதற்காக அந்த ஊரில் அனைவரும் திருட்டு தொழில் நடத்துபவர்கள் என நினைத்து விடாதீர்கள்.பெரும்பாலானவர்கள் உழைத்துப் பிழைக்கும் நேர்மையாளர்கள்தான்.சாதியை சொல்லியே அவர்கள் திருடர்களுக்கு ஆதரவாக அணி திரட்டப்படுகிறார்கள்.சாதிப்பற்று அவர்களை அநீதிக்கு துணை போக வைக்கிறது.
இந்த எடுத்துக்காட்டை அப்படியே இன்றைய சமூக,அரசியல் சூழலுக்கு பொருத்திப் பாருங்கள்.சாதி வெறியை தூண்டி விட்டு அதை பெருமைக்குரிய ஒன்றாக காட்டி காசு பார்க்கிறார்கள் திரைப்பட கழிசடைகள்,சாதியின் பெயரால் மக்களின் வாக்குகளை கொள்ளையிட்டு பதவிக்கு வரும் அரசியல்வாதிகள் சாதி வேறுபாடு இன்றி ஒட்டு மொத்தமாக அனைத்து மக்களையும் கொள்ளையிடும் ஆளும்வர்க்கங்களின் பொருளாதார கொள்கைகளை அமுல்படுத்துகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வந்ததும் இவர்கள் தவறாமல் செய்வது கட்டணங்களையும் பொருட்களின் விலையையும் உயர்த்துவது,கிடைத்த வாய்ப்பில் ஊழல் செய்வது,சில பல நூறு கோடிகளை சேர்த்து வைத்துக் கொண்டு அடுத்த தேர்தலை சந்திக்க அணியமாவது.இதுதானே.சாதியை சொல்லி வாக்குகளை வாங்கி வென்றவர்கள் சொந்த சாதி மக்களுக்காக துரும்பை கூட அசைப்பதில்லை.அவர்கள் விரும்பினாலும் ஆளும் வர்க்கங்கள் அசைக்க விடுவதில்லை.அவர்கள் கொள்ளை தடைபடுவதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.
இத்தனை அநியாயங்களையும் செய்து விட்டு எந்த தைரியத்தில் மக்களை சந்திக்க வருகிறார்கள்.சாதிக்காரன் என்ற அடையாளத்தை சொல்லித்தான் மக்களை தங்கள் பின்னால் திரட்டிக் கொள்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் சாதி ரீதியான திரளுதல் எனபது திருடர்களுக்குத்தான் தேவைப்படுகிறது.
கள்ளன் மறவனின் வரலாற்று புனைவுக்கும், அதிமேதவி மாதிரி பேசி மூக்குடை படும் தனத்துக்கும் ஒரு உதாரணமாக இந்த பக்கத்தையும், கமேன்ட்டுகளையும் book mark செய்து கொள்கிறேன். இனி எந்த பொது தளைத்திலும் கள்ளனோ, மறவனோ மீண்டும் சாதி பெருமை பேசி வந்தால் இந்த link அங்கே எல்லாம் பிரசுரிக்கப்படும் என்று மகிழ்ச்ச்யுடன் தெரிவித்துகொள்கிறேன்.
ரகு தம்பி அறிவது அங்கே மூணு சாதி சேந்துகிட்டு தேவேந்திரரை எதிர்கொள்ள தேவன்னு சொல்லிகிட்டு சீன போடறது ஏன் கண்ணு? சிங்க்லா போனா சீற விட்டு அடிப்பார்கள் என்றா? கள்ளன் மறவன் அகமுடையவன் என்று தனி தனியாக வாழ்கிறீர்கள் அப்புறம் முக்குளம் என்று செட்டு சேர்ந்துகிட்டு மூணுமே தேவர்தான்னு இல்லாத சாதி பெயரை வைத்துக்கொண்டு படம் எடுத்து டார்ச்சர் செய்வதை கொஞ்சம் நிறுத்துங்கப்பா.
எவனோ ஒருவன் சாலையை நமக்கு அமைத்து கொடுத்தான் ..
எவனோ ஒருவன் நமக்கு வீடு கட்டி கொடுத்தான் ..
எவனோ ஒருவன் நமக்கு வாகனங்களை கொடுத்தான் ..
எவனோ ஒருவன் நமக்கு மின்சாரத்தை கொடுத்தான் ..
எவனோ ஒருவன் நமக்கு ஆடையை கொடுத்தான் ..
எவனோ ஒருவன் நமக்கு எரிபொருளை கொடுத்தான் ..
எவனோ ஒருவன் நமக்கு உணவு பொருட்களை கொடுத்தான் ..
எவனோ ஒருவன் நமக்கு மின் விளக்குகளை கொடுத்தான் …
எவனோ ஒருவன் நமக்கு கணிப்பொறியை கொடுத்தான்..
எவனோ ஒருவன் நமக்கு காலணிகளை கொடுத்தான் ..
எவனோ ஒருவன் நமக்கு முற்போக்கு சிந்தனையை கொடுத்தான் ..
எவனோ ஒருவன் நமக்கு மொழியை கற்று கொடுத்தான் ..
எவனோ ஒருவன் நமக்கு கல்வியை கற்று கொடுத்தான் ..
எவனோ ஒருவன் நமக்கு மருத்துவத்தை கொடுத்தான் ..
இப்படி எவனோ ஒருவன் ஜாதி ,மதம் ,மொழி கலை கடந்து கோடான கோடி பொருட்களையும் ,அறிவியலையும் ,சிந்தனையையும் கொடுத்து கொண்டு இருக்கிறன் .
ஆனால் இன்றும் கூட சில குரங்குகள் எவனோ ஒருவன் கொடுத்த மூல பொருட்களை அனுபவித்துவிட்டு ,மதம் என்கிறது ,ஜாதி என்கிறது ,தரையில் குட்டிகரணம் போட்டால் வீரம் என்கிறது ,இன்னும் பல குரங்கு சேட்டைகளை நியாயபடுத்துகிறது .இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு மவ்னமாக இருக்கிறான் எவனோ ஒருவன் .
அந்த எவனோ ஒருவன் தான் உழைப்பவன் .உழைப்பவன் மவ்னமாக இருந்தால் குரங்குகளின் அட்டுழியம் அதிகமாக இருக்கும் .எனவே உழைப்பவனே உளைப்பவனுக்கான ஆட்சியை அமைக்கவேண்டும் .குரங்குகளின் ஆட்சியை அடித்து விரட்டவேண்டும் …..
இந்த நாகரிக உலகத்திலும் ஜாதி, ஜாதி என்று அடித்துக்கொண்டு இன்னும் மூளை வளர்ச்சி இல்லாமல் இருக்கும் இவனுகளை நினைத்தால் கவலையாகத்தான் உள்ளது? மனிதானாக பிறந்தால் கொஞ்சமாவது சுய பரிசோதனை செய்ய தெரிய வேண்டும்? தாங்கள் உயந்த ஜாதி என்கிறான்? எப்படி என்றால் அதற்கு பதில் இல்லை? செய்தது திருட்டு தொழிலும், மற்ற உயர் ஜாதியினருக்கு அடியாள் வேலையும்? ஒரு கம்பை எடுத்துக்கொண்டு அடியாளாக உயர் ஜாதி ஆட்களுக்கு பின்னால் வந்தவர்கள், பாண்டியன் என்றபெயரை வைத்துக்கொள்கிறார்கள்? களவு தொழில் செய்தவர்கள் எப்படி பாண்டிய மன்னர் பரம்பரையில் வருவார்கள்? இது பாண்டிய மன்னர்களை அசிங்கபடுத்தும் செயல்தானே? சரி போகட்டும்? அடுத்து முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படக்கூடாது? முத்துராமலிங்க தேவரை இவர்களும் தேசிய தலைவர், தேசிய தலைவர் என்று கூவி தான் பார்கிறார்கள் ஆனால் கண்டு கொள்வதற்கு ஆள் இல்லை? தேசிய தலைவர் என்று இவர்கள் சொல்லக் கூடாது? அதை இந்தியா என்ற பரந்த நாடு சொல்லவேண்டும்? தமிழ்நாட்டிலேயே திருச்சிக்கு அப்புறம் முத்துராமலிங்க தேவரை எல்லோருக்கும் தெரியும் என்று சொல்லிவிட முடியாது ? தென் மாநிலத்தில் கூட இவர்களை முதன் முதலில் எதிர்ப்பதில் பிள்ளையார் சுழி போட்ட தேவந்திரர்கள்தான், முத்துராமலிங்க தேவரா எவண்டா அவன் என்று கேள்வி கேட்ட பிறகுதான் அவர் யாரென்று சொல்ல இவர்களுக்கு ஒரு வாய்ப்பே கிடைத்தது? ஒரு நாலு தாலுகாவிற்கு தலைவராக இருந்தவரை தேசிய தலைவர் என்று சொன்னால் காந்தி, நேரு, அம்பேத்கார் இவர்கள் எல்லோரும் யார்? இன்று ஒரு தாழ்த்தபட்டவர்களுக்குஒரு பிரச்சனை என்றால் அதை தேசிய அளவில் சென்றடைந்து ஏன் தேவைப்பட்டால் ஐக்கிய நாட்டு சபை மூலமாக கூட நடவடிக்கை எடுக்க தேசிய அளவில் தலைவர்கள் உள்ளார்கள் ? ஆனால் இவனுக ஜாதி பெருமை மதுரையை தாண்டாது ? இந்த வலைத்தளத்தில் கூட ஒருவர் அவர்கள் ஜாதியை சார்ந்த பிஆர்பிக்கு உள்ள பணத்தை பற்றியும், எத்தனை நடிகர்கள் இவர்கள் சமுகத்தில் உள்ளார் என்றும் பெருமையாக சொல்லியுள்ளார்? ஆக இவர்கள் என்னதான் தலைமுறைகள் தாண்டி கம்ப்யூட்டர் யுகத்திற்கு வந்தாலும் திருட்டு தனத்தை விட மாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது? (பிஆர்பி யும் சரி இவர்கள் சமுகத்தை வேறு யாரேனும் சரி நேர்மையாக சம்பாதித்த ஒருவர் பெயரையாவது சொல்லமுடியுமா) நடிகர்கள் என்கிற கூத்தாடிகளும் மக்களை ஏமாற்றும் ஒருவித திருட்டைதான் செய்கிறார்கள்? இதையெல்லாம் இவர்கள் நினைத்து வெட்கம்தான் பட வேண்டும்? காலம் மாறி போச்சு இதை இந்த அறிவீலிகள் இன்னும் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? வீரம் இவர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை? இன்று சென்னையில் ஒரு குவார்டரும் , பிரியாணியும் வாங்கி கொடுத்தால் நடு ரோட்டில் ஒருவனை கொலை செய்வதற்கு அற்ப மனிதர்கள் இருக்கிறார்கள்? ஜாதி பெருமை பேசும் இவர்களிடம் MBC என்று இருக்கிற இட ஒதுக்கிட்டையும் பிடுங்கிவிட்டால் ஒட்டு மொத்த ஆட்டமும் குளோஸ்? (இவர்கள்தான் மன்னர் பரம்பரைகள் ஆயிற்றே அப்புறம் எதற்கு கௌரவ பிச்சை) உருப்படுவதற்கு உள்ள வழியை பாருங்கள்? அடுத்த சந்ததியினருக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுங்கள்? ஜாதி பற்றை வளர்ப்பதால் எதுவும் செய்துவிடமுடியாது ?
உட்டுட்டு போங்க சார் எங்களுக்கு பெருமைப்பட எதோ ஒரு விஷயம் இருக்கிறது. பள்ளரை விட கள்ளர் எந்த வகையில் பெரியவர்கள் என்று நான் என் அப்பாவிடம் கேட்டேன்,பொறந்ததே பெருமை என்றார் வேறு ஏதாவது இருந்தால் தானே சொல்லுவார்?இந்த சாதி அமைப்பை நான் வெறுக்கிறேன்,அறிவியல் அடிப்படை இல்லாததால்.
//பள்ளரை விட கள்ளர் எந்த வகையில் பெரியவர்கள் என்று நான் என் அப்பாவிடம் கேட்டேன்//
இந்த மாதிரி பேசி திரியிறது தான் ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணம்….
ஆமா… 100 வருடஙகளுக்கு முன்பு தீண்டத்தகாதவராய் இருந்த சாணர் களும் [நாடார்], திருட்டை தொழிலாய் கொண்டதால் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளர் களும் [தேவர்] , இன்று உயர் சாதியினராய் மாறி போனதன் மர்மத்தை யாராவது விளக்கவும்
சரியா சொன்னிங்க தேவன் சார், நான் கூட எங்க அம்மாவிடம் கேட்டேன் பள்ளர் ஜாதியிலே பொறந்தது தப்பா என்றேன்? என் அம்மா சொன்னார்கள் ஜாதி என்று ஒன்று கிடையாது தங்கம் , நீ என்ன ஜாதியில் பொறந்தா என்ன, பெயரில் என்ன இருக்கிறது? வாழும்போது கௌரவத்தோடு வாழவேண்டும்? திருடாமல், உழைத்து வாழவேண்டும்? அப்படியில்லாவிட்டால் நீ எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் செத்தவனுக்கு சமம், நீயும் உன்னை சார்ந்தவர்களும் உழைத்து வாழும் சாதியில் பிறந்ததற்காக பெருமை கொள் என்றார்கள்? எனக்கு இந்த ஜாதி என்பதில் நம்பிக்கை கிடையாது ஏன் என்றால் ஜாதியை கடவுள் படைக்கவில்லை, இல்லாத ஒன்றை இடையில் உருவாக்கிய முட்டாள்களின் வார்த்தை அது?
Then why do u want reservation in the name of caste?
dear narikumar the very thing which suppressed us for more than 2000yrs should take us out of the shambles and also reservation is our birthright its not an concession.ensuring respective percentage of people in the society made reflected in all fields irrespective of how harder they are oppressed in the name of caste is the duty of an government elected by the society.RESERVE WHAT WE WE DESERVE.
Nothing suppressed you for 2000 years and you lost your political battle and ended up nowhere but alive and thats why today,you filling up your lot in bad buildings,bad bridges and poor hospitals.
This is why caste also ll never die.
bad buildings,bad bridges and poor hospitals where in the world are you man? can you name a single contractor who hails from a dalit background or a dalit engineer in pwd or highways behind a bad building or bridge?even a dalit mason would do a perfect engineer.for all the years we are building every structure not even a single brahmin would have lifted a brick.only corruption ruins them.be informed
I live in this very world and i know how construction works,obviously individually a dalit is not responsible for the corruption but the whole idea of reservation in education only at college level just gives bad profs and a bad atmosphere in general.
I have seen many masons in life and not many dalits.
All these years you may be building structures but never the designs or the execution of those.I have seen so much corruption in educational institutes & Government offices purely because of dalit executives.
You can ask dalits themselevs whether they prefer brahmin executives or others.
பார்பன அதிகாரிகள் தான் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு துறைக்கு விற்றனர். ஊழலின் ஊற்றுக்கண்ணே பார்ப்பன கும்பல் தான்.
குற்றப்பரம்பரை என்று ஆங்கிலேயர்களால் அடையாளம் காணப்பட்டு, குலத்தொழிலாக திருடுவதையும் வழிப்பறி செய்வதையும் கொண்டிருந்த ஒரு இனம் எப்படி உழைத்து உணவு கொள்ளும் ஒரு இனத்தை விட மேல் சாதி ஆனது?..its highly ridiculous….இந்தியாவுல தாண்டா இப்படி எல்லாம் நடக்கும்.போங்கடா நீங்களும் ஒங்க சாதியையும்.
முக்குலத்தோருக்கு குற்றபரம்பரை போடப்பட்டது இரண்டு செக்ஷனில்தான் ( மொத்தம் 26 செக்சன் அதில் இருக்கிறது)
ஜல்லிக்கட்டு இடுப்பட்டு முரட்டுதனம் செய்தல்
ஆண்ட பரம்பரை என் சொல்லி அரசுடன் கலகம் செய்தல்
இதுவும் 1914-ல் தான்…
இதே மாதிரி தென்னாட்டில் பல ஜாதிகள் பாதிக்கப்பட்டன.. பள்ளன் களில் ஒரு பிரிவு..(இது திருட்டு குற்றத்திற்காக )
தன் திருட்டை மறைக்க இப்படி ஒரு பிரச்சாரம்.
சி.ஆர்.சட்டம் நகல் பார்க்க கிடைத்தால் பாருங்கள் இல்லை எனில் தகவல் ச்ரியும் உரிமை சட்டத்தின் முலமாகவும் இதை பெறலாம்…
அதை பார்வையிட்டால் முக்குலோத்தோர் மீதுப்போடப்பட்ட செக்சன் அறியலாம்.
காவல் கோட்டத்தில் ‘கள்ளன்,மறவனின்’ யோக்கிதை எல்லாம் நாறி போய் கெடக்குது… இங்க வந்து வியாக்கியானம் பேசிகிட்டு….ஐயோ…ஐயோ…..!!!
காவல் கோட்டத்தில் முக்குலோத்தோர் வாழ்வியலை மேம்படவே சொல்லியுள்ளார்கள்..
எங்கும் கள்ளர் மறவர் அகமுடையார் வாழ்வியலை வலமாகவே சொல்லப்பட்டுள்ளது
ஊருக்கும் ஊருக்கும் காவல் எடுப்பதில் இருக்கும் பிரச்சனை.. ஒருவனின் காவலை உடைத்தெரிய செய்யப்படும் களவு.. எல்லாம் சொல்லப்பட்டுள்ளது..!!
பள்ளனை பற்றி ஒரு துண்டு செய்திக்கூட இல்லை என் எண்ணாதே…
//பள்ளனை பற்றி ஒரு துண்டு செய்திக்கூட இல்லை என் எண்ணாதே…//
எப்படி சொல்லுவான்?
* காவல் கோட்டம் என்பதே ‘நாயக்கர்’ காலத்தில் இருந்து தானே வரலாற்றை ஆரம்பிக்குது? நாயக்கருக்கு முன்னாடி வரலாற்றுக்கு போனா தானே ‘கயத்தாறில்’ என்ன நடந்துச்சு…பாண்டியன் ஆட்சி எப்படி முடிவுக்கு வந்தது என்று உண்மை வெளிய தெரியும்….?
* அதுல எந்த இடத்தில் நீங்க நாடாண்ட பரம்பரைன்னு சொல்லி இருக்கு…?
நாயக்கருக்கு பின்னாடி போனாலும் சரி முன்னாடி போனாலும் சரி..உனக்கு என்று ஒரு தடயம் கூட கிடையாது..!!! நல்ல வேளை உனக்குனு உன் மன்னன் நாயக்கர் பள்ளு பாட்டாவது பாடிவச்சான்…
ஜாக்சன் தொரையே சொல்லிட்டாரு…. அப்புறம் வேற என்ன?
வேற ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?
மத்தவங்க எல்லாம் உங்க பேச்சை கேட்டு சிருக்கிறாங்க பாருங்க……
//இதே மாதிரி தென்னாட்டில் பல ஜாதிகள் பாதிக்கப்பட்டன.. பள்ளன் களில் ஒரு பிரிவு..(இது திருட்டு குற்றத்திற்காக )//
திரும்பவும் பொய்…..இதுவே உங்களுக்கு பொழப்பா போச்சு……!!!
http://en.wikipedia.org/wiki/Criminal_Tribes_Act
விக்கிபீடியாவில் 89 ஜாதிகள் குற்றபரம்பரை சட்டத்தில் பாதிக்கப்பட்டதாய் சொல்கிறது…இதில் நானும் பல ஜாதிகள் உள்ளது என குறிப்பிட்டேன்!!!
89 ஜாதிகளில் உன் பள்ளன் ஜாதி எது தெரியுமா.. காலாடி என்பதுதான்..89 ஜாதி பட்டியலும் விக்கிபீடியாவில் இல்லை வாய்ப்பிருந்தால் உன் பள்ளர்களிடமே கேள்… நீங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டவர் தகுதியில் இருக்க காலாடி பள்ளர்கள் மட்டும் எம்.பி.சியில் (இது தெரியுமா)
அவர்களே பள்ளர் குடியில் உயர்ந்த குடிமக்கள்>>>
தம்பி நல்ல படிச்சிட்டு வந்து புரூடா விடு… இந்த முகவரி பாரு தகவல் கிடக்கும்.
..
http://www.tamilpaper.net/?p=5160
தமிழக ஜாதிப்பட்டியல் ( TNPSC) கையிலிருந்தால் பாரு காலாடி பள்ளன் எதில் வருகிறான் என்று.
தெரியும் தியாகு…
உங்க ஆளுங்க எழுதின புத்தகத்தை ஏன்ஆதரமா காட்டுர்ரன்னு கேட்டு நான் உங்களை அசிங்க படுத்த மாட்டேன்….யார் சொல்றா என்பது முக்கியம் அல்ல…விஷயம் தான் முக்கியம்….!!! காலாடி என்பவர் பள்ளனின் ஒரு பிரிவு என்று ஒத்துகொண்டதற்கு மகிழ்ச்சி….மேலும் காலாடி என்பவர்கள் CT வழக்கில் வரும் பிரிவு என்பவரும் உண்மை….!!! இனி விவாதத்தை ஆரம்பிப்போம்….. 89 சாதில் மட்டும் அல்ல, இங்க கிட்டத்தட்ட வடை’யில் இருந்து ஆரம்பிச்சு கிரானைட் வரைக்கும் எல்லாருமே சந்தர்ப்பத்துல திருடுறவன் தான்….!!! அதனால் வடை திருடுனவன்,கிரானைட் கொள்ளை — இந்த இரண்டு பேருக்கும் தூக்கு தண்டனை கொடுத்திடலாமா? இடிக்குதுல்ல…?
*காலாடி என்ற பள்ளனின் பிரிவு CT யில் வந்ததும் இந்த அர்த்தத்தில் தான். கமுதி,சிவகாசி தொடங்கி நாடார் உள்ளிட்ட பலருடன் திருடி மாட்டிகொண்டவர்களே…!!! எந்த காலாடியாவது இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள்,போன்ற கொடுமையாக நடத்தப்பட்டு இருக்கிறார்கள் என்று ஆதாரம் உண்டா?
* முக்குலத்தோர் எப்படி குற்ற பரம்பரை சட்டத்தில் கைது செய்யப்பட்டீர்கள்? ஏன் பள்ளனில் உள்ள மற்ற பிரிவுகள் அது போல உள்ளடக்கப் படவில்லை?
* 89 சாதிகள் இருந்தும், தமிழகத்தில் உள்ள அந்த சாதியை சேர்ந்த அத்தனை பேருமா CT சட்டத்தால் பாதிக்கப் பட்டு இருந்தனர்? முக்குலத்தில் கூட அனைத்து பகுதியை சேர்ந்தவர்களும் CT சட்டத்தால் பாதிக்கப் படவில்லையே. விலக்கு அளிக்கப் பட்டது ஏன் ?
* எங்கே எல்லாம் முக்குல ஆட்கள் CT சட்டம் பாய்ந்தது அங்கே எல்லாம் அவர்கள் இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் தங்க வைக்கப் பட்டது ஏன் ?
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பிங்க தியாகு… உங்களுக்கே தெரியும்…அந்த விவாதம் எங்கே சென்று முடியும் என்று…..!!! அதுக்கு முன்னாடி, இதை கொஞ்சம் படிச்சிட்டு அப்புறம் பதில் சொல்ல ஆரம்பிங்க….!!!
* மறவர்கள் பிறர் வீடுகளில் திருடாமல் இருக்கவும், திருட்டுகளில் இருந்து மக்களை பாதுகாப்பதாக கூறி, மிரட்டியும் ‘குடிக்காவல் பணம்’ என்ற பெயரில் பணம் பறித்து வந்தனர். மறவர்கள் பிற மக்களை மிரட்டி ‘காவல் பணம்’ (Mamool ) பெறுவதை ஆங்கிலேய அரசு கடுமையாக கண்டித்தது. கி.பி. 1889 இல் ஆங்கிலேயே அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மறவர்களில் 10000 பேர் தொழில் முறை திருடர்களாக (Professional Thieves ) இருக்கின்றனர். இவர்களில் 4000 பேர் தண்டிக்கப் பட்டுள்ளனர். — (Tinnavelly , being an account of the District and mission field 1897, W . Francis )
* 1895 ஆம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் மறவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு இருந்தது. ஆனால் அங்கு நடைபெற்ற பகற்கொள்ளையில் 70 விழுக்காடு மறவர்களால் ஆனதாகும். சென்னை மாகாண காவல்துறையில் 1903 ஆம் ஆண்டு அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மக்கள் பிரஈவினருள் மறவர்கள், தொடக்கத்தில் இருந்தே திருடுவதை குலத் தொழிலாக நடத்தி வந்துள்ளனர் எனக் குறிக்கப் பட்டுள்ளது”. ( E . Thurston )
* ‘கொலை,கொள்ளை முதலிய குற்றங்களைப் புரிவது மரவறது அன்றாடத் தொழில் ஆகும். இவற்றை தவிர வேறு தொழில்களில் இவர்கள் தம்மை ஈடுபடுத்தி கொண்டது இல்லை.” (Fr . Martin , 1719 ஆம் வருடம் தனது தலைமை இடத்திற்கு தான் எழுதிய மடல்)
* “மறவர் தலிவனின் தலைநகரமாகிய பெரிய பட்டினம், சிறு சிறு குண்டுர்கலாக சூழப் பட்டுள்ளது. இங்கு நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளான கொடிய மறவர்கள் வாழ்கின்றனர். இவரது தொழில் கொள்ளை அடித்தலாகும்” — வரலாற்று அறிஞர் சத்தியநாத அய்யர்
————-
காலாடி உட்பட 89 சாதி நபர்கள் CT சட்டத்தால் தண்டிக்கப் பட்டார்கள் என்பதை ஒப்புகொள்கிறேன். வடை திருதியதை போல. இருந்தாலும் நியாயப் படுத்தவில்லை.
இருப்பினும், பரம்பரை பரம்பரையாக கொள்ளை அடிப்பதை ஒரு தொழிலாகவே செய்யும் முக்குலத்தோர் , அடுத்த சாதி காரனை கை நீட்டி ‘நீ திருடன்’ என்று சொல்ல என்ன யோக்கிதை இருக்கு?
முன்னாடி விக்கிபீடிய்யா பிராடுனு சொன்ன தியாகு அண்ணாச்சி அதையே ஆதாராமா காட்டுவதைப் பார்த்தால் எதால சிரிக்க… தியாகுவுக்கா இந்த நிலைமை….அவரபோய் முக்குல….
அவரு சொந்த ரத்தம் எழுதுன ஆதாரங்களை கூட நம்ப மாட்டேன்..செல்லாது என்று கூட தான் சொன்னார்… ஆனால் ‘பிரமலை கள்ளரின் வரலாறு’ புத்தகத்தை தான் இங்க ஆதரமா காட்டுகிறார்…? என்ன ஒரு அறம்?
மாணவர்களாக இருக்கும் போது யார் எந்த சாதி என்ற எண்ணம் வருவது இல்லை. ஆனால் பணியிடங்களில் இன்று வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சாதிய அணிதிரட்டல்கள் நடைபெறுகிறது. பெயரை வைத்து, ஊரை வைத்து இந்த சாதியாக இருக்குமோ என்று உத்தேச ஆய்வு நடக்கிறது. ஒருவர் ஆதரிக்கும் அரசியல் கட்சி மற்றும் பழக தேர்ந்தெடுக்கும் சக ஊழியரை வைத்துக் கூட இந்த சாதி எடை போடுதல் நடக்கிறது. எனது அனுபவத்தில் பார்ப்பனர்கள், வன்னியர்கள், நாயடுகள், தேவர்கள் போன்றோர் இந்த வகை சாதிய அணிதிரட்டலில் முன்னணியில் நிற்கிறார்கள். தலித் தோழர்களும், ஜனநாயக உணர்வாளர்களும் இந்த அணி திரட்டலில் தனித்து விடப்படுகின்றனர்.
I have never written anything like this. my first attempt. We live in plural society we should understand the importance of harmony. Hatred breeds hatred. in public media like cinema upholding/glorifying a particular caste is hurting others sensibilities. such cinemas should not be patronized. I will not go to such movies.
My personal experience is youth should shed hatred based on caste/religion/region based identities and value the person for his/her merit/character.
If we dont beleive equality and fraternity then we dont deserve to be called modern nation.
I still wonder why there is animosity between devars and devendira kula velalars? what is that particular reason?
B,ut I understand irrespective past glory; devers and devendirars are at bottom of the progression ladder. In 1 to 10 scAle if devendirars are at no.2 ,devars are at no.3 or 4. Both castes have to learn from nadars; who by entrepreneurship efforts have raised themselves socially/economically. I salute the community( arun icream,hcl,vgp,saravana group; u name the field, they are in top).
Mr.S P Samy, please first advise yourself, No can make movie to hurt others and loss the business, this dalit people are always hurting the movie of the native people. Even they are not a good creativator,writer and more ‘NOT’s. They are not having the knoweldge in education ( still survive in reservation) and good corruptors who spoling the state and country ( All the level the corruptors are Dalit’s)
The reservation should be cancelled,They should put hard work to get JOB, If reservation cancelled thier life will be down the sea.
Sp SAMY you talking about retailers ???? like Arun Ice,VGP etc., foll just know the Devar community List… show if anyone in like this in nadar…you should ask your parents about your catse nadar..really they are more Untouchable catse than Dalit.. from 1954 its start to turn because of KAMARAJ NADAR. you should ask grand father who tell detailly how the untouchablity is..!
Following are list of one for each department.
Velladurai :- Encounter specialist.
M.V.Muthuramalingam :-Chairperson, Velammal Engineering College
Arunachalam:-chairperson -Student Xerox(wellnown in all over tamilnadu)
Sivaji Ganesan:-Universally regarded as the best character actor
Director Bala : Natinal Award Winner
Prof Dr K Muthuchelian:- Vice Chancellor Periyar University (Merit)
Dr. M.Rajagopal M.S Ortho:- Dean kilpauk medical college
Dr.D. Raja, Former Vice-Chancellor of the TN Dr. MGR Medical University
Justice RathnaVel Pandian:- Supreme court Judge and Chairman of V pay commission
etc and etc.,.,
SP SAMY NADAR do not compare your retailor caste with us..
Every Year we achiving without any reservation or no funds from govt
அப்படின்னா இங்க ஊரு காசை ஆட்டையை போடுறது யாரு…?
http://www.tn.gov.in/tamiltngov/gosdb/departorders.php?depid=4
http://www.kkkalvi.com/2012/06/9.html
oh my god.
where i landed?. I’m not a Nadar but from Pallar caste; I was school second in x th year-83; engr & middle level management with fortune 500 corporate with 22l annual package. i strongly believe; by birth no one is above or below.
The above listed are all achievers. they should inspire u and every one.This yr my cousin got mbbs seat; the cut off mark is very close to BC/MBC. In fact I did my ME in anna univ in yr 93( the MBC cut off was same as SC).
Any way I m not interested in bigotry discussion. I regard nadars for they uplifted from socially disadvantaged position.
I also regard CPI Mr NALLAKANNU for being great human.
பண்ணைப்புரத்தில் விவசாயிகள் விடுதலை முண்ணனி என்ற அமைப்பின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களும், ஆதிக்க சாதியில்(கள்ளர்)முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும் இணைந்து நடத்திய தனிக்குவளைக்கெதிரான போராட்டம்.
https://www.vinavu.com/2008/11/19/cas4/
பாண்டிய மன்னர் குல வாரிசான நீங்கள் ஏன் இன்னும் MOST BACKWARD CLASS ஆக இருக்கீங்க? ஏழை பிராமணனே Forward Class listல வரும் போது உங்கள் சமுகம் இன்னும் MBC யாக இருக்கும் நோக்கம் அறியலாமா..நீங்க அவ்வளவு பெரிய அப்பாடக்கரா….
மேலும் MBC யில் வரும் நரிக்குறவருக்கும், இந்த ஆண்டா பரம்பரைக்கும் என்ன தொடர்பு என்று சொல்வார்களா?
கடுங்கோன் பாண்டிய மன்னா..அததான் நானும் சொல்லுறோன் மன்னர் குல சமூகமான நீங்க ஏன் நறி குறவர்களின் MBC யில் இருக்கிங்க… இது உங்களுக்கு அவமானம் இல்லையா?? ..Most Backward Classன்னு கவர்மென்டு செல்லுதே உங்களுக்கு அது அவமானமா தெரியலையா?? மீசை துடிக்குனுமே
//கடுங்கோன் பாண்டிய மன்னா..அததான் நானும் சொல்லுறோன் மன்னர் குல சமூகமான நீங்க ஏன் நறி குறவர்களின் MBC யில் இருக்கிங்க//
நான் MBC என்று உங்களுக்கு யார் சொன்னா? நான் SC
சாதி பட்டியல நல்லா பாருங்க பாஸ் …. Its in MBC OR BC
தனக்கு தோதான உப்பு சப்பிலாத கேள்வியை மட்டுமே பொருக்கி எடுத்து, அதற்க்கும் சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்லும் தியாகு அவர்களே… நீங்கள் பதில் அளிக்காமல் நழுவிய எம் கேள்விகளை உங்களுக்கு நியாபகப் படுத்துகிறேன்.
* பள்ளன் தான் பாண்டியன் என்று நீதிமன்ற தீர்ப்பு. — அதிமேதாவி போல கேள்வி கேட்டீங்க…..நானும் ஆதாரத்தோட பதில் சொன்னேன்….மீசை எடுக்க தயாரா? இனி முக்குல ஆட்கள் யாரும் ‘பாண்டியன்’ பேரை பயன்படுத்த மாட்டீங்க தானே? நீங்க பயன்படுத்தினாலும் ‘பள்ளனை’ தான் நீங்க சொல்றீங்க என்று அவன் எடுத்து கொள்வான்.
* செப்பேட்டை படிச்சா புத்தி வரும்னு சொன்னீங்க…. 20 க்கும் மேற்பட்ட செப்பேடுகளில் பள்ளன் தான் பாண்டியன் என்றும், அவனே மருத நிலத்தில் வாழ்ந்து, அரசை கட்டியாண்ட வேந்தன் என்றும் எழுதி வச்சிருக்குன்னு நான் சொல்றேன்…அதை படிச்சிட்டு ‘இல்லை’ என்று மறுக்க நீங்க ரெடியா?
* உங்களை மாதிரியே SGR என்ற ஒருத்தர் ‘மள்ளர்,மல்லர்’ பத்தி பேசுனாரு…அவர்கிட்டையும் சவால் விட்டேன்….அந்த சவாலை ஏத்துக்கவே அவர் இதுவரை முன் வரல….அதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க தியாகு?
* இந்த வரலாற்று திரிப்பை பற்றி நீங்க என்ன சொல்றீங்க தியாகு?
=> ‘வேந்தன் மேய தீம்புனல் உலகும்’ — மருத நில மன்னன் வேந்தன் என்று அழைக்கிறது தொல்காப்பியம். வேறெந்த நிலத்து தலைவனையும் அது வேந்தன் என்று சொல்ல வில்லை.
=> “எனினும் நாகரிகமானது மருத நிலத்தே தான் முற்பட வளர்சியடைந்திருத்தல் வேண்டும். ஐந்திணை மக்கள் அறிவும், நாகரிகமும் உடையரான காலத்தே அறிவரும், அரசரும், வணிகரும், பாணர், துடியர் முதலிய ஏனைக்குடி மக்களும் அவர்களுள்ளே தோன்றுவராயினர்”
(வேங்கடசாமி நாட்டார்: கள்ளர் சரித்திரத்தில் இருந்து)
(எனது கேள்வி:) எனவே ‘மூன்று + வேந்தர்கள் = மூவேந்தர்கள்’ அனைவருமே மருத நில குடிகளே….!!! பதில் சொல்லுங்க தியாகு?
=> “மலையும்,காட்டையும் ஆண்டவன் சேரன், மருத நிலத்தை ஆண்டவன் சோழன், நெய்தல் நிலத்தை ஆண்டவன் பாண்டியன்” — (மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு – பக்.25 , ஆசிரியர்: முத்து தேவர்).
(எனது கேள்வி:) வேங்கடசாமி நாட்டாரின் கொள்கை படி, மருத நிலத்தில் இருந்தவனே அரசன்,வேந்தன் எனப் படுவான். முத்து தேவரின் கொள்கைப் படி , மலையை ஆண்ட சேரனும், நெய்தலை ஆண்ட பாண்டியனும் எப்படி அரசன்,வேந்தன் ஆனான்? எப்படி நெய்தலிலும், குறிஞ்சி,முல்லையிலும் நாகரிகம் தோன்றி, அரசு உருவாக்கம் நடந்தது? பதில் சொல்லுங்க தியாகு…
=> மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே(அகத்.5) — தொல்காப்பியர்
(எனது கேள்வி:) முத்து தேவர் கூற்றுப்படி, சேரனை மாயோன் எனவும், பாண்டியனை வருணன் எனவும் சங்க இலக்கியங்கள் எங்கெல்லாம் குறிப்பிடுகின்றன என்று சொல்ல முடியுமா தியாகு? ஆனால் இந்த மூவரையும் ‘வேந்தன்’ என்று கூறும் சங்க இலக்கிய ஆதாரத்தை நான் காட்டுகிறேன். மறுக்க தயாரா?
(???) தொல்காப்பியர், வேங்கடசாமி நாட்டார், முத்து தேவர் — இதில் யார் பொய் சொல்கிறார்கள்? இனி உங்கள் தரப்பு தியாகு…. பதிலை எதிர் பார்க்கிறேன்…!!!
“”இதில் யார் பொய் சொல்கிறார்கள்? இனி உங்கள் தரப்பு தியாகு…. பதிலை எதிர் பார்க்கிறேன்…!!!”
”
இதில் நீங்கதான் பொஇ சொல்றீங்க…கடுங்கோன்..!!!
எப்படியெல்லாம் திரிக்க வேண்டுமோ அப்படி திரித்து எழுத வேண்டுமா..???
கள்ளர் சரித்திரம் என்பது முக்குலோத்தோரில் ஒரு மன்னர் மரபினர் பற்றியது..!!
இது கள்ளர் பற்றிய வரலாறு என்பதால் அது மருதனிலத்தை பற்றி மட்டுமே பேசுகிறது..மற்றநிலத்தை அது பேசவுமில்லை எழுதவுமில்லை..
முத்துதேவர் எழுதியட்கு முவேந்தர்கள் இனமாம் முக்குலத்தை பற்றியது…
கடுகோன் நீங்கள் சாதியை பற்றி சாதிக்காரர்கள் சொன்ன ஆதாரத்தை மட்டுமே எடுத்துக்காட்டாக எடுக்கீறீர்கள்…தேவர்சாதி அல்லதவர்கள் வரலாற்று ஆராய்ச்சி எழுத்தாளர்கள் மு.ராகவ அய்யங்கார், டி.கே.பிள்ளை எழுதிய வரலாற்று புத்தகம் படித்ததுண்டா.. இவர் எழுதிய புத்தகங்கள் எல்லாமே தமிழ்குடிகளை பற்றிய ஆராய்ச்சி நூல்களே…தேவர் இனம் யார், எவர்,தொழில் என்ன மிகுந்த நுன்னறிவுடன் எதையும் எற்றக்கொள்ளும் ஆராய்ச்சியுடன் ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார்கள்!
இந்த வரிகளை நீங்க திரும்ப திரும்ப நிரூபிக்கிறீங்க…!!!
//தனக்கு தோதான உப்பு சப்பிலாத கேள்வியை மட்டுமே பொருக்கி எடுத்து, அதற்க்கும் சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்லும் தியாகு அவர்களே//
* மேலே சொன்ன கருத்துகளை யார் சொன்னார், எந்த புத்தகத்தில் சொன்னார்கள் என்று எடுத்துக்காட்டியும் ‘திரித்து சொல்லப்பட்டது’ என்றால் என்ன அர்த்தம்? எங்கே திரித்தேன் என்று சொன்னால் தேவலை…!!! தவிர வேண்டசாமி நாட்டாரின் ‘கள்ளர்’ சரித்திரம் என்ற புத்தகத்தையும் மேற்கோள் காட்டி தான் ‘மூவேந்தர் குல தேவர் சம்மோக வரலாற்றை’ எழுதியதாக முத்து தேவர் சொல்லி இருக்காரு….
* நீதிமன்ற தீர்ப்பு பற்றி இன்னமும் நீங்க வாய் தொறக்கல….
* மள்ளர்,மல்லர் ஆய்வு பற்றியும் வாய் தொறக்கல….
//கடுகோன் நீங்கள் சாதியை பற்றி சாதிக்காரர்கள் சொன்ன ஆதாரத்தை மட்டுமே எடுத்துக்காட்டாக எடுக்கீறீர்கள்//
அப்படி என்றால் இவற்றை எல்லாம் புறந்தள்ளி விடலாம் என்கிறீர்களா? சாதியை பத்தி அந்த சாதிக்காரன் எழுதியதை இனி கணக்கில் கொள்ள கூடாது என்று ஒரு ஒப்பந்ததுக்கு வருவோமா? அப்படியே வைத்துகொண்டால், கீழ்கண்டவற்றிற்கு நீங்கள் என்ன பதில் சொல்றீங்க?
=> “அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்” – திவாகர நிகண்டு.
“செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப” — பிங்கள நிகண்டு
(நிகண்டை பள்ளன் எழுதவில்லை)
ஆனால் உங்க ஆளுங்க ‘மருத நில’ மக்களை களமர் என்று சொல்கிறார்கள். உண்மையில் களமர் என்பவர்கள் மள்ளரின் கீழ் வேலை செய்த பணியாளர்கள். மேலும் அவர்கள் வழக்கொழிந்து பல நூற்றாண்டு ஆகிவிட்டது.
=> முனைவர் வின்சுலோ (இவர் பள்ளன் இல்லை)
“இன்று தென்னகத்தில் வேளாண் தொழில் புரிந்து வரும் பள்ளர்கள், மள்ளர் என்பதன் உச்சரிப்பு வேறுபாடாகும். (Dr . Winslow Dictionary pp 745 )
=> டி.கே.வேலுப்பிள்ளை (இவர் பள்ளன் இல்லை)
பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் மள்ளர் பிற்காலத்தில் பள்ளர் என வழங்கலாயினர் (T K Veluppillai , Travancore State Manual 1940 )
=> முனைவர் ஹோபர்ட் (இவர் பள்ளன் இல்லை)
மள்ளர் பள்ளர் ஆனது உச்சரிப்பு வேறுபாடாகும் (Dr . G .Hobbart ,Dravidians The Original Inhibitants of India , pp 101 )
=> தேவநேய பாவாணர் (இவர் பள்ளன் இல்லை என்று தேவர்தளம் சொல்லுது)
பள்ளர் என்பவர் மள்ளர், மருத நிலத்தில் வாழும் உழவர் (செந்தமிழ் செல்வி 1975 ஏப்ரல் வெளியீடு)
=> ந.சி.கந்தையாபிள்ளை (இவர் பள்ளன் இல்லை)
பள்ள என்பது மள்ள என்பதன் உச்சரிப்பு வேறுபாடாகும். பண்டைய மல்லரே இன்றைய பள்ளர் (தமிழர் சரித்திரம் பக் 206 )
=> எம்.சீனிவாச அய்யங்கார், எ.வி.சுரமானிய அய்யர்,வீரமா முனிவர், கச்சியப்ப முனிவர், திருவாடுதுறை ஆதீனம், ஈக்காறு ரத்திணப்ப முதலியார் (இவர்கள் யாரும் பள்ளன் இல்லை) — அனைவருமே மள்ளன்,பள்ளன் இருவரும் ஒருவரே…இவர்களே மருத நில குடிகள் என்றும், மூவேதர்கள் இவர் மரபினர் என்றும், அரசும் நாகரிகமும் இங்கேயே தோன்றி விரிவடைந்தது என்றும் கூறுகின்றனர்.
இனி உன் தரப்பு தியாகு…. இதே போல ‘கள்ளன்’ தான் மருத நில குடிமகன் என்று சொல்லும் ஆதாரங்களை இங்கே அடுக்கலாம்… (பொன்னியின் செல்வன் மாதிரியான நாவலை எல்லாம் ஆதரமா சபையில் வச்சி அசிங்கப் பட கூடாது..)
=> பாண்டியனை,சேரனை வேந்தன் என இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. மாறாக வருணன், சேயோன் அவர்களை குறிப்பிட்டு உள்ளதா என்பதையும் ஆதாரத்துடன் விளக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தொல்காப்பியர் திரித்து சொல்லிவிட்டார் என்றோ, ‘வேந்தன்’ என்றால் வேறு பொருள் என்றோ காமெடி பண்ண கூடாது…!!!
கனவுல வந்து “எம்.சீனிவாச அய்யங்கார், எ.வி.சுரமானிய அய்யர்,வீரமா முனிவர், கச்சியப்ப முனிவர், திருவாடுதுறை ஆதீனம், ஈக்காறு ரத்திணப்ப முதலியார்” எல்லாம் மன்னர்களு சொன்னங்களா.????
இப்படி பொய் பொய்யா சொல்லி நீங்க யாருனு 20000 வினவு வாசகர்களுக்கு புரி வச்சிடிங்க.. நான் சொல்ல வேண்டாம் உன் பதிவை படிக்கீறவங்களே புரிஞ்சிக்குவாங்க…:-)
//கனவுல வந்து “எம்.சீனிவாச அய்யங்கார், எ.வி.சுரமானிய அய்யர்,வீரமா முனிவர், கச்சியப்ப முனிவர், திருவாடுதுறை ஆதீனம், ஈக்காறு ரத்திணப்ப முதலியார்” எல்லாம் மன்னர்களு சொன்னங்களா.????
இப்படி பொய் பொய்யா சொல்லி நீங்க யாருனு 20000 வினவு வாசகர்களுக்கு புரி வச்சிடிங்க.. நான் சொல்ல வேண்டாம் உன் பதிவை படிக்கீறவங்களே புரிஞ்சிக்குவாங்க//
எல்லா ஆதாரத்தையும் ஒன்னும் இல்லாம ரொம்பவும் தெளிவான மாற்று ஆதரங்களோட மறுத்து பேசுன உங்களோட அலுப்பு தெரியுது தியாகு….!!!
இப்போ இவங்க எழுதுன தகவல்களை மேற்கோள் காட்டினால் மட்டும் அதை ஏற்றுக் கொண்டு ஆராயவா போறீங்க….மறுபடியும் அதே ‘செல்லாது..செல்லாது..’ பல்லவி தானே…? ஹா…ஹா…ஹா…
//தேவர் இனம் யார், எவர்,தொழில் என்ன மிகுந்த நுன்னறிவுடன் எதையும் எற்றக்கொள்ளும் ஆராய்ச்சியுடன் ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார்கள்!//
நீங்க இதை சொல்றதால இனி எந்த காலத்துக்கும் யாரும் மறுக்க முடியாத, பள்ளனே மருத நிலத்தவன், அவனில் தொடங்கியே பாண்டியனும், அவனை தொடர்ந்து சோழனும்,சேரனும் வந்தனர் என்பதை ‘மானுடவியல்’ ஆராய்ச்சி வல்லுநர் ஒரிசா பாலு அவர்கள் (இன்றும் நடத்திக் கொண்டு இருக்கும்), “தமிழரின் கடல் மேலாண்மை” என்ற ஆய்வினை பற்றிய வீடியோ லின்க்குகள் இவை. ஒரிசா பாலு ‘பள்ளன்’ அல்ல. ஆனால் அவருடைய கடல் சார் ஆய்வுகள் அனைத்தும் (இயற்கை தியாகு…இதை யாரும் திரித்து சொல்ல முடியாது…) பள்ளனே நெல் நாகரிகம் கண்டவன், அவனே இவ்வுலகம் முழுதும் பரவி நெல் நாகரிகத்தையும், அதை தொடர்ந்து அரசையும் நிறுவினான் என்பதை வெறும் பேச்சாக அல்ல, தொல்லியல் ஆய்வுகளின் தரவுகளோடு நிறுவியுள்ளார். இந்த ஆய்வின் அறிக்கை வெகு விரைவில் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் சமர்ப்பிக்கப் படுகிறது.
Videos
=======
http://www.youtube.com/watch?v=kswd9cgMZlI&feature=plcp
http://www.youtube.com/watch?feature=endscreen&v=a9mQZm1ZyH8&NR=1
http://www.youtube.com/watch?feature=endscreen&NR=1&v=sx900kXGKig
Facebook account
================
http://www.facebook.com/orissa.balu?fref=ts
(குறிப்பு: இந்த ஆய்வை நடத்தும் போது, அந்த ஆய்வினை தங்களுக்கு சாதமாக மாற்றி, தாங்களே அந்த மக்கள் என்று மாற்றி சொல்லும்படி பள்ளன் அல்லாதோரால் ஒரிசா பாலுவிடம் பேரம் பேசப் பட்டு உள்ளது. நாகரிகம் கருதி அதை அவர் வெளியிடவில்லை. நீங்கள் கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் தியாகு).
மருத நிலத்தை பற்றியோ, பாண்டியன் பற்றியோ, தமிழகத்தின் பூர் குடிகள் பற்றியோ எது பேசுறதா இருந்தாலும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு, அதை ஆதாரத்துடன் மறுத்து பேசலாமே தியாகு….!!! முயற்சி பண்ணுங்க…
Mr.kadungon pandian
One should have positive self esteem, self confidence, self respect or pride about own identity. That’s.it. end of history’s purpose
Take my village case: My village had few sakkiliyar/vannar families in my childhood days.(now no vannar family in village; sakkiliyars are also not there practically; one person from the family became dy director in horticulture dept ) .Those days. Pallars have treated low those castes. These castes were service castes to Pallars.
Caste is such a thing; if some body above u, it hurts. Below u, it is acceptable. I love my village; go every year. That dy director doesn’t come to village practically.
Now I would suggest few points with all humility;
1) Respect as brothers , the castes which were considered below u. with full heart. Not out of mind set that I m doing great.
2) Some body trying to treat u low caste; IGNORE it and move on.(after all u r taught that u r above certain caste by mistake; the same mistake happened to him)
3) Education is great equalizer. Do something for education. If somebody is not good in studies; he should get in to business.(Arun icecream./Hatson MD was PUC failed-last week vijay tv unnal mudiyum).most of the businessmen are first generation. U make the road yr self.
4) Don’t wait for others acceptability in business. No body will wait for u to welcome to business. U should get in to and come up very hard way.
5) Never develop hatred/animosity towards any caste/creed. There could be a bad person ,never bad community.
6) Devar community has many progressive people. See comrade NALLAKANNU. A living mahatma..
7) Last but not least: changes should start from our own hearts. FIRST CHANGE WITHIN..
உழவர்களுக்கு துணையாக வேலை செய்ய என்றே 14 வகை குடிமக்கள் பணியாற்றியுள்ளனர். இன்றைக்கும் கூட வண்ணான் நெல், சவரக்காரர் நெல் என்று நெர்களத்திலேயே அளந்து வைத்துவிட்டு தான் தமது நெல்லை உழவர்கள் எடுத்துகொல்வர். எந்த உழவரும் அவரின் கீழ் வேலை செய்த எந்த பணியாளனையும் தீண்டத் தகாதவன் என்று ஒதுக்கி வைத்தது இல்லை. பிறப்பின் அடிப்படையில் சாதி பார்த்ததும் இல்லை. இதெல்லாம் இடையில் வந்த ஆரியம் செய்த வேலை. சாதி ரீதியிலான ஒடுக்குமுறையை பல்லன் சக்கிலியருக்கு செய்தாலும் சரி, மறவன் செய்ய நினைத்தாலும் சரி…இரண்டுமே கண்டிக்கப் பட வேண்டியதே……!!!
நீங்க என்னையை ஏன் குறிப்பிட்டீர்கள் என்று தெயர்யவில்லை. ஏதோ நான் சாதி வெறியில் ஊறித் திளைப்பது போலவும், பறையர் சக்கிளியரை தள்ளி வைத்தது போலவும் பேசுகிறீர்கள்.
* எனது உறவு முறையில் என் அத்தை மகளை பெண் கொடுத்தது ஒரு பறையருக்கே.
* எனது சித்தி ஒரு நாயுடு.
* எனது பெரியம்மாள் ஒரு பிராமணர்
* என் மனைவி கவுண்டர்
* என் தம்பி மனைவி ஒரு கிருத்துவர்
* என் அத்தையின் கணவர் ஒரு முஸ்லீம்….!!!
கருத்து எழுதும் போது மட்டும் அல்ல, சொந்த வாழ்க்கையிலும் சாதி மதம் வரதட்சணை இதெல்லாம் தூக்கி எறிந்த குடும்பம் எம் குடும்பம். (இது சுய தம்பட்டம் அடிக்க இங்கே எழுதவில்லை. யார் மாற வேண்டும் என்று சொல்லவே)
நாங்கள் நேரில் பார்க்காவிட்டாலும் வாழ்த்துக்கள், உங்களின் குடும்பத்தினுருக்கும் அதை சொல்லுங்கள், சிறந்தமுறையில் பதலளித்து வருகிறீர்கள் நன்றி…
mr kadungon pandian
congratulations. it is amazing. vow. i wish i was this courageous atleast in my marriage. i had a strong liking for a girl in engineering college. knowing she is some pillai caste; i never told her all four years. in 2005 i met her after 15 yr college reunion. i have travelled 1200 km to reunion to see her only. by gods grace she is doing well,hod in private college.(still she doesnt know my secret love). i had married my same caste pallar girl as per my fathers wish ,my married life is so. so..( this is one reason, i hate caste utmost)
my close friend a vanniyar guy went after his heartthrob a naidu girl; thier married life is a bliss. she is great daughter in law as well.
( i pray no body knows true characters – yaravathu cinemava yedungappa)
In my case its religion and caste the rest is the same story….But my married life is happy… I have already decided for my KID whomsoever HE/SHE likes i will give 100% support…
Valurathu knoja naal.. athula poi sathi mayiru mattanu
super sp samy suppose we show a dalit to obama the most powerful man in the world and say we are superior to him by caste,and if he asks what is caste what kind of explaination would we give.if we try to give some explaination what will he think of our country and so called heritage boasted by us?this should be our view about caste.correct me if iam wrong.
Define: race
kadunkonji race is entirely different from caste. are you searching for Caucasian, Mongoloid or Negroid races in india?
இங்க சாதியை வச்சி பிரச்சனை…அங்க race வச்சி பிரச்சனை…. இந்த லட்சணத்துல ஒபாமா ஏன் நம்பல கேள்வி கேக்க போறாரு…?
Race is culture.
one has to be very bold to throw caste to the trash.even people who were bold enough to defy the existence of god and boldest intellectuals too dont dare to question caste such is the influence of caste in their blood.humans naturally tend to incline towards something which makes them feel superior to others,regardless of the foolish beliefs behind them.ஆர்.தியாகு would definitely use his skills of arguement and his language for dalit people if he were born a dalit.so realising the fact that we cannot determine to whom we are going to be born ,we should fight for everybody who are in need.
தேவர் சமூகத்தில் சுட்டிக்காட்டக்கூடிய அளவு ஒரு மனிதராய் தோழர் நல்லக்கண்ணுவை மட்டுமே கூற முடியும் என்பது தான் அந்த சமூகத்தின் முழு பெருமையும்.அவருடைய பெற்றோர் என்ன சொல்லி வளர்த்திருந்தாலும் அவர் கற்ற கல்வியை அந்த சமூகத்தில் பலர் கற்றிருந்தாலும் அவர் சார்ந்த கட்சியும் அதன் கொள்கைகள் மற்றும் ஏனைய தலைவர்களின் பழக்கம் அவர் ரஷ்யா சென்று வந்தது போன்றவையே அவரை மனிதராய் மாற்றியிருக்க முடியும்.
mr devan
I agree with u. would like to add on;
Caste is anti national- it forbids two different caste personnel to share fraternity, so true nation hood.
Caste is anti social- in particular locality two different castes don’t form a same society. (Exception- apartment building culture-at least they share lot as members of building society)
Caste is anti human-it forbids a person to be his natural human .( imagine a A- caste person drives car in a isolated road- a snake crosses the road; it is natural, he will not run over the snake; same will be the case even B-caste person drives the car. It is natural human instinct. But the same people wish each other’s blood in caste rivalry?
Compassion/Empathize.— The height of human compassion is VALLALAR. A wilted plant saddened Ramalinga swamigal-(vadiya payirai kandapothellam vadinen)
THE NEED OF HOUR FOR NATION IS COMPASSION/EMPATHIZE-PUT YOURSELF IN OTHER PERSONS PLACE. ….
Caste is not anti national,caste is just occupational segregation.
Earlier society was based on people with similar contributions,now it is on a different level of segregation.
சிறப்பான தோலுரிப்பு பதிவு வினவு.கிட்டத்தட்ட இதேதான் ஆரம்பம் முதல் என் மனசுக்குள் தோன்றியது.இதற்க்கு விமரிசனம் எழுத நினைத்த நேரம் ஒத்த சிந்தனையோடு எனக்கு முன்னமே தோலுரித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
கடுங்கோன் பாண்டியன் கலக்குறீங்க..ஆரோக்கியமான கருத்துக்கள் அருமை தோழர்.
Honor கில்லிங் குற்றங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் விளாசியிருக்கிறது.இந்த இழிவை
போக்க பல போராட்டங்களை முன்னெடுக்கும் இந்த சமயத்தில் ஒரு வெகு சன சினிமாவில்
சசிகுமார் என்கிற அடி முட்டாளின் குரலில் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கொலை செய்வதை
நியாயப்படுத்திஇருக்கிறார்கள்.இதை எப்படி மானம்கெட்ட சென்சார் அனுமதித்தது? சசிக்குமார் போன்ற
முட்டாள்தான் பதில் சொல்ல வேண்டும்!!
ஒரு மள்ளராக எனக்கு கள்ளர்,மறவர் நண்பர்களிடமிருது மோசமான அனுபவங்களே கிடைத்துள்ளன.
ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் சூது,தான் மட்டும் வாழ வேண்டும் என்கிற புத்தி..நான் சந்தித்த
நிறைய பேரிடம் குறைந்த பட்ச நேர்மை கூட இல்லை.Most of them are in-sensible.நான் எல்லோரையும் சொல்ல
வில்லை.நல்லகண்ணு போன்றவர்களும் இருக்கிறார்கள்.ரெம்ப குறைவு.
பிரிட்டிஷ் காலத்தில் மிக மோசமான ஒடுக்குமுறைக்கு ஆளான ஒரு சமூகம் தன்னுடைய சாதிப்பெயரை
மறைத்துவிட்டு தேவர்,நாங்க தேவர் வீட்டு ஆளுக என்று சொல்லித்திரிகிறது.தேவர் என்பது திரு என்பதைப்போல இருக்கும்
ஒரு தமிழ் சொல்.அதை சாதிப்பெயர் ஆக்கி வேறு எவரும் சொல்ல முடியாதபடி ஆக்கி விட்டார்கள்.வரலாற்றையும் தனக்கு சாதகமாக
எழுதிக்கொண்டும் இருக்கிறது.அப்படி சொன்னாலும் பரவாயில்லை.அடுத்தவர்களை கீழானவர்களாக நினைப்பது.இவர்களும் செட்டியார்,பிராமணர் போன்றவர்களுக்கு கீழ்சாதி என்பதை மறந்துவிட்டு திரிகிறார்கள்.சாத்திய அடுக்கு ஒரு பிரமிடை போல்.நீ ஒருவனை இழிவு படுத்தினால் உன்னை ஒருவன் இழிவுபடுத்துவான்.It is Obvious!!
எனக்கு ஒரு மள்ளராக மள்ளர்களிடம் பிடித்தது மனிதாபிமானம்.
பிடிக்காதது நாகரீகத்தை உருவாக்குவதில் பங்கு கொண்ட, தமிழில் பெரும்பான்மையான கூட்டம் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்
இருக்கிறது…மள்ளர் மீண்டேளுவதுதான் தமிழர்கள் மீண்டதற்கு சமம்.எல்லா சமூகத்துடனும் நட்புறவை கொண்டு தமிழர்கள்
தெற்காசியாவில் வலுவான சமூகமாக உருவாவதற்கு மள்ளர்கள் மீட்சி அவசியம்.தெலுங்கு வந்தேரிகளாலும்,படையெடுப்புகளாலும் அழிக்கப்பட்ட மள்ளர்கள் வரலாறு இந்த உலகத்திற்கு இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது…ஏன் மள்ளர்கள் இதற்கு எதிர்வினை செய்கிறார்கள் என்றால் கள்ளர்களாலும்,மறவர்களாலும் அதிகம் பாதிக்கப்பட்டது அவர்கள்தான்..கொடியங்குளம்,பரமக்குடி,உஞ்சனை,
கண்டதேவி,தாமிரபரணி இன்னும் பல..இந்த பகை மாறினால் தான் தமிழர்கள் என்று எல்லோரும் சொல்ல முடியும்..அதுவரை
காவளித்தனமாக படம் எடுக்கும் எச்சபொருக்கிகளை மள்ளர்கள் ஓட ஓட விரட்டுவார்கள்…
From what i know,
Maravar and Pallar always fought for agricultural land.My grandad was a land lord and we have to give our land on lease on a 50-50 basis to both maravars and pallars.
Pallars are generally farmers,maravars are fighters.
And from what i see,it is possible that both of them could be pandian blood because anyone who wants political power has to make a relationship with the people in power.
//it is possible that both of them could be pandian blood//
இந்த கதை எல்லாம் இங்க வேணாம்….
திருநெல் வெளியை பொறுத்த மட்டில் மறவர்கள் என்போர் வந்தேறிகள் என்று மறவர்களே ஒத்துகொள்கிறார்கள்….!!! வந்தேறிகள் எப்படி பாண்டியன் ஆக முடியும்? நீங்க வருவதற்கு முன்னாடியே அங்க பாண்டியனும், பள்ளனும் இருந்திருக்கானே?
Tirunelveliyin poorva kudigal endru enakku therinthu Nadargal thaan.
Tirunelveli,Kanyakumari,Thootukudi,Travancore il ulla common makkal Nadar,Meenavar/Paravar/Pallar(I have not seen so many pallars anywhere else),Saiva Pillaimaar.
But Maravar/Nayakkar also exist in large numbers.
Forget about Brahmins,they are anyway new.
But even the brahmins who came have been here for 2000 years and do you know how long that is? Nayakkars are newer than brahmins and maravars are older than that.
From my point of view, castes should be protected and people should marry only within their caste.
Otherwise,we ll all be christians in 200 years.
* திருநெல்வேலிக்கு இலக்கிய பெயர் ‘மருத வேலி’. பாண்டியனின் பல முக்கிய நகரங்களில் அதுவும் ஒன்று. அதில் பூர்வீக குடிகள் பள்ளர்களே. இதை நான் ‘திருநெல் வேலி புராணம்’ தொடங்கி, மற்ற ஆதரங்களுடன் நிறுவி விட்டால் நீங்க மீசை எடுத்துகிரீங்களா ஹரிகுமார்?
* நாடார்கள் என்போர் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு உள்ளனர். பனைமர கல்லுக்கு ‘சாண்’ என்று பெயர். அந்த கள்ளை இறக்கி வியாபாரம் செய்ய வந்தவரே ‘சாணார்’ ஆவார்….அவர்கள் பூர்வ குடிய்களா என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும்…இருந்தாலும் திருநெல்வேலியை பொறுத்த வரை மறவர்கள் இராமநாத புரத்தில் இருந்து வந்தேறிய வந்தேறிகள் என்பதை மறவர்களே ஒப்புகொள்ளும் உண்மை.(ஆதாரம் வேணுமா?).
என்னுடைய வாதம் ரொம்ப சிம்பிள்.
திருநெல் வேலையை ஆண்ட பாண்டியன் பள்ளன் தான் எனவும் அங்கு வந்தேறிய மறவர் பாண்டியன் ஆக முடியாது என்பதும் தான் என் வாதம். இதை விட்டு விட்டு ஏதோ ஏதோ பேசுறீங்க…?
Nadars are descendents of pandiya rulars. In their kingdom fisherman community served in naval force, few maravar in army few others occupation was robbery, pallars worked as helpers in entire field.
ஆதாரம் பிளீஸ்…..
Evidence is today’s society. Nadar means rulers of land, earlier they were called as neilamikarars. Mallars and kallars can fight for who is no 2 in the caste hierarchy but not no 1. beacause it is reserved to nadars.
நீங்க தாராளமா நிறுவுங்க…அதுக்கு முன்னாடி 108 .1 க்கு பதில் சொல்லிட்டு நிறுவுங்க….!!!
தியாகுக்கான கேள்வி
———————————-
பள்ளர்கள் தெலுங்கர்கள் என்றும், எப்படி யாரால் தமிழகத்துக்கு வந்தனர் என்றும் தியாகு ஆதரங்களோடு விளக்கவும்.
இது என்னுடைய தரப்பு:
————————————–
‘பள்ளர்கள்’ தெலுங்கர்களோ, வந்தேரிகளோ அல்லர்….மூவேந்தர் காலம் தொட்டே இந்த மண்ணின் மூத்த குடியினர் என்றும், அவர்கள் காலத்திலேயே பள்ளர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர் என்று நான் சங்க இலக்கியங்கள், செப்பேடுகள் மூலம் நிறுவி விட்டால் மீசை எடுத்துக்க தயாரா தியாகு?
தோழரே.!!!
இப்படி ஒரு பொய்யை சொல்லிவிட்டு அதற்கு ஆதாரத்தை தா என என்னை கேட்டால்…???
பொய்யிக்கு ஆதாரமாக ஒரு போலியை மட்டுமே உங்களால் உருவாக்க முடியும்!!
நீங்கள் யாரோ சொல்லிக்குடுத்தை இங்கு எடுக்கிறீகள் அதற்கு ஆதாரமாக என்னையே தர சொல்கிறீகள்…!!!
நீங்கள் சொல்லவது பொய். திரித்து எழுதும் கதை என இங்கு வந்து போகும் வினவு வாசகர்கள் நன்றாகாவே அறிவார்கள்!!!
பள்ளு பாட்டு வேண்டாம் ஆனால் அதில் உள்ள விவசாய கூலிகள் என ஒரு வார்த்தை மட்டும் வேண்டும்????
அந்த விவசாயத்தை மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டு மருதம் எங்களுடையது வள்ளுவர் எங்களை பற்றிதான் எழுதினார்..நாங்கள்தான் நெல் வகையை கண்டுபிடித்தோம்…இதுவரை உங்களுக்கு சம்பந்தமில்லாத இந்திரன் தீடிரன இருபத்தி- ஓன்றாம் நூற்றாண்டில் தலைவன் ஆனான் கடவுள் ஆனான்..
நாயக்கர் காலத்தில் எழுதப்பட்ட பள்ளுப்பாட்டில் விவசாய கூலிகள்..நாயக்கர் காலத்திற்கு முன்பு..?? பாடல் உண்டா வரலாறு உண்டா..???
விவசாயி என்பது சொந்தநிலத்தில் விவசாயம் செய்பவனை குறிக்குமா..??
விவசாயகூலியை குறிக்குமா..??
விவசாயம் லாபம் தந்தாலும் தாராவிட்டாலும் தன்னை அண்டி இருக்கும் விவசாய கூலிகளுக்கு உணவுக்கு ஒரு பத்தாயநெல்லும் மரக்கால் அளவில் எள்ளிருந்து பருப்பிலிருந்து கடலையிலிருந்து விவசாயம் செய்பவன் தரவேண்டும் என சங்கபாடல்களில் மருதனிள நாகனார் பாடினாரா இல்லையா..!!!
விவசாயம் வீழ்ந்துப்போனால் அரசு மான்யம் தருகிறதே அது நிலம் கொண்டவனுக்கு தருகிறதா..விவசாய கூலிகளுக்கு தருகிறதா..??
அத்தனையும் பொய்..அந்த பொய்யுக்கு ஆதாரம் போலி ஆவணங்கள்..!!
நீங்கள் கூறிய எல்லா எடுத்துக்காட்டும் விவசாயிகளை பற்றி சொல்கிறதே தவிர பள்ளன் என்று எங்குமே சொல்லப்படவில்லை!!!
வீனான திணிப்பு…. உங்களுக்கு தாழ்வு மனபான்மைதான் பிரச்சனை என்றால் எந்த சலுகையையும் வேண்டாம் என நிராகரித்து..ஒரு பிராமினன் போல் வாழவேண்டியது தானே..????
இப்படி செஞ்சா இந்திய தொலைக் காட்சிகளில் நீங்கள் தான் தலைப்பு செய்தி…மத்த இடஓதிக்கிட்டுக்கும் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு!
எதுக்கு பொய் வரலாறும் போலி ஆவணமும் தயாரிக்கனும்….
பதில் இங்க இருக்கு…. (93.1.2.1.1)
Thambi Thiyagu Varalaru therinthu peasavum. (Raayar-Telugu) pattam konta Kallar Kootam thaan Telugu..(KUDUMBAN, KALADI, VAIKARAR, MOOPAN, PANDIYAN. KARAIYALAN-TAMIL) Pattam konda Mallar samugam TamilNadu Aanda Moovendar Samugam.
தியாகுக்கு செலக்டிவ் அம்னீசியா…அதனால் எமது கேள்விகளை மீண்டும் பொருக்கி எடுத்து இங்கே நியாபப் படுத்துகிறேன்…!!!
* பள்ளரே பாண்டியர் என்ற நீதிமன்ற தீர்ப்பு பற்றி இன்னும் ஒன்னும் சொல்லல…ஏன்?
* ‘தமிழர்களின் கடல் மேலாண்மை’ பற்றி ஒரிசா பாலு அவர்களின் ஆய்வு பற்றியும் உங்கள் கருத்தென்ன? அதில் அவர் பள்ளனே பாண்டியன், அவனே நெல் நாகரிகம் கண்டவன் என்று ‘தொல்லியல்’ ஆய்வு மூலம் நிறுவி உள்ளாரே. அதற்க்கு உங்கள் பதில் என்ன?
* மள்ளர் மல்லர் பற்றிய தேவர் தளம் புளுகுக்கு உங்கள் கருத்தென்ன?
* ஆண்ட பரம்பரை இன்னும் ஏன் கோட்டா மூலம் சலுகை அனுபவிக்கிறீங்க? கள்ளர் நல வாரியம் எதுக்கு இருக்கு? கலைக்க வேண்டியது தானே?
* ஆண்ட பரம்பரை ஏன் HCL போன்ற சாணார்களின் கம்பெனிகளில் வேலை செய்றீங்க? வேலையே தூக்கி எறிஞ்சிட்டு போகலாமே….நமக்கு சாதி தானே முக்கியம்…?
* மூவேந்தர்களும் மருத நில குடிகளே என்று நான் இங்கே கொடுத்த ஆதாரங்களுக்கு உங்கள் பதில் என்ன?
* பள்ளர்கள் இடையில் வந்தவர்கள் அல்ல அவர்கள் மூவேந்தர்கள் காலத்திலேயே அதே பெயரிலேயே வாழ்ந்துள்ளனர் என்று நான் நிறுவினால் மீசை எடுத்துக்க தயாரா?
* மறவர்கள் வந்தேறிகள் என்று ‘தேவர் தளம்’, ‘தினகரன்’ உட்பட பலரும் கூறியுள்ளனர். அவற்றை மேற்கோள் காட்டி நான் சொன்ன கருத்துக்கு உங்கள் பதில் என்ன?
* பிரமலைக் கள்ளர்களுக்கு உளவுத் தோளிலே தெரியாது…அவர்கள் திருட்டு தொழிலை விடுத்து, நாகரிக வாழ்வுக்கு நகர தொடங்கிய பின்பே அவர்கள் விவசாயம் சார்ந்த குடிகள் ஆகினர் என்று ஒரு ஆய்வுக் கட்டுரை ‘தேவர் தளைத்தில்’ இருக்கே…அதுக்கு உங்கள் பதில் என்ன?
* மறுத்த நில மக்களை மள்ளர்கள் என்று இலக்கியங்கள் சொல்லும் போது, அவர்களை ‘களமர்’ என்று திரித்து சொல்லும் அயோக்கிய தனத்தை பற்றி என்ன சொல்றீங்க…?
//பள்ளன் தேவேந்திரன் ஆன கதை எப்பவென்று உமக்கு தெரியும்!!
பள்ளன் மள்ளன் ஆன கதையும் எப்ப வென்று உமக்கு தெரியும்!! இது நடந்தது இந்த நவீன யுகத்திலேயே>>!!!
தேவேந்திர சக்ரவர்த்தி என்று சொல்லப்பட்டது..இந்திரலோகத்துக்கே அரசன் என்று எம் குல அரசனை மெய்கீர்த்தி படப்பட்டது..
இதற்கும் உமக்கும் என்ன சம்பந்தம்..!!
புகழப்பட்ட வார்த்தையெல்லாம் எடுத்து சாதி பெயராக மாற்றிக்கொண்டு நாங்கள் தான் என்பது ஆதாரமா..??? உலகம் அதை ஏற்குமா..???
அடுத்தநூற்றாண்டில் “புயல்” என்பது எங்கள் ஜாதியின் பெயர் ஆதலால் புரட்சி புயல், வைகைபுயல் எல்லாம் எங்க ஜாதிதான் என பள்ளன் சொல்லலலலலலலம்…!!!!//
அப்படி போடு அருவாள……
தேவர்,தேவேந்திரன் போய், இப்போ தேவேந்திரனும் நீங்க தானா…..?
சூப்பர் அப்பு….!!!! என்னால சிரிப்பை அடக்க முடியல…..ஹா…ஹா…ஹா….!!!
*தேவர் என்ற பட்டத்தை வண்ணான்,கோனார்,குர்நானக்,சமணர் உட்பட அனைவருக்கும் இருக்கும் போதே, ‘அது ஒரு சாதி’ என்று அண்ட புளுகை அவிழ்த்துவிடும் கள்ளன் உண்மை சொல்றானாம்…..!!!
*பல்லன்,மள்ளன்,வேளாண் தெய்வம் இந்திரன், அவன் பிள்ளைகள் தெய்வ இந்திரன்(தேவேந்திரன்)’ என்று இது நாள் வரைக்கும் இலக்கியங்களில் தொடங்கி, இன்றைய குடி கணக்கு வரை தொடர்பில் இருக்கும் ‘பள்ளன்’ போய் சொல்றானாம்….!!!
யப்பா….முடியலடா சாமி…..!!! ஹா…ஹா…ஹா….
எந்த ஊர் வண்ணாண் தேவர் பட்டம் போட்டான்??? எந்த ஊர் கோனான் தேவர் பட்டம் போட்டான்.??
**நீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரில் நீங்களே தாயாரித்து கொண்ட காகிதத்திற்கு பதில் வேண்டுமா…அப்படி ஒரு தீர்ப்பு இருக்குமெனில் மேல் வழக்கு தொடர்ந்து யாரும் பாண்டியன் என உரிமை கொண்டாட கூடாது சொல்லாமே!!
//எந்த ஊர் வண்ணாண் தேவர் பட்டம் போட்டான்??? எந்த ஊர் கோனான் தேவர் பட்டம் போட்டான்.??//
* செஞ்சிக் கோட்டையில் முதலாம் அரசன் ஆனந்தத் தேவர்.இவர் “இடையர் (கோனார்)” சாதியை சேர்ந்தவர்.
* சிவகங்கை பாளையக்காரர் முத்து வடுக உடையனாத தேவர்.இவர் தெலுங்கு பேசும் “வடுகர் (நாயக்கர்)” சாதியை சேர்ந்தவர்
* கி.பி.1260 – 1271 இல் தேவகிரியை ஆட்சி பிருந்த மகாதேவர். இவர் “யாதவ” குலத்தை சேர்ந்தவர்.
* கி.பி.1299 – 1301 இல் ராந்தப்பூர் பகுதியை ஆட்சி செய்த கமீர் தேவர். இவர் “சௌக” வம்சத்தை சேர்ந்தவர்.
* சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவர்.இவர் “சீக்கிய” மத தலைவர் ஆவார்.
* கி.பி. 883 – 902 இல் காஸ்மீர் பகுதியை ஆட்சி புரிந்த சங்கிரமத் தேவர். இவர் “உத்பால” வம்சத்தை சேர்ந்தவர்.
* வங்காளம்,பீகார் பகுதியை ஆட்சி புரிந்த பாலபுத்திர தேவர்.இவர் “சைலேந்திர” வம்சத்தை சேர்ந்தவர்.
* “கோகொல்லர்” வம்சத்தை சேர்ந்தவர் காங்கேயத் தேவர். (கி.பி. 1030 )
* சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத் தக்க தேவர். இவர் “சமண” மதத்தை சேர்ந்தவர்.
* பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் வேளாண் மரபை சேர்ந்தவர்.இவருக்கு அருண்மொழித் தேவர் என்ற பெயர் பல்லவ மன்னரால் வழங்கப் பட்டது.
* தெலுங்கு பேசும் கம்பளத்து வடுகர் (நாயக்கர்). தங்களை தேவர் வம்சம் என்று கூறி ‘தேவர் ஆட்டம்’ ஆடுகின்றனர்.மதுரை மாவட்டம், கோடங்கி பட்டியில் உள்ள கம்பளத்து வடுகர்களை (நாயக்கர்) இதற்கான சான்றுகளில் ஒன்றாக கூறலாம்.இதற்க்கு இவர்கள் கூறும் விளக்கம் யாதெனில் தேவர் என்றால் இறைவன். நாங்கள் இறைவனோடு நேரடித் தொடர்பு உடையவர்கள். எனவே தான் தேவர் ஆட்டம் ஆடுகின்றோம் என்கின்றனர்
கல்வெட்டு 1
——————-
(சோழர் கால) மதுராந்தகம் கல்வெட்டு வாசகம்:
“இவ்வூர் தேவரடியாள் மகன் கண்டியத் தேவன்”
அப்படியானால், கள்ளர் தேவரடியாள் மகனா?
கல்வெட்டு 2
——————–
திருச்சி மாவட்டம், 12 ம் நூற்றாண்டு கல்வெட்டு:
“வண்ணான் அழிவில்லாத தேவன்”
அப்படியானால் கள்ளன் வண்ணானா?
தியாகு அவர்களே….
கொஞ்சம் இங்க வந்து உங்க முத்திரைய குத்துங்க….!!! இல்லைனா நானே எடுத்து தரேன்…
a ) you tube என்பது பள்ளன் நடத்தும் தளம். எனவே இந்த வீடியோ சொல்லாது.
b ) facebook என்பது முக சாயம் பூசிய போலி
c ) ஒரிசா பாலு ஒரு குருடன்
d ) ஆய்வு சொல்லும் ‘பள்ளன்,மள்ளன்,பாண்டியன்,தேவேந்திரகுலத்தான்,காலாடி,வாதிறியான்’ எல்லாம் நாங்க தான்….!!!
போட்டு தாக்குங்க தியாகு….
தியாகு அவர்களே….
கொஞ்சம் இங்க வந்து உங்க முத்திரைய குத்துங்க….!!! இல்லைனா நானே எடுத்து தரேன்…
a ) கோனார் உட்பட எல்லாமே நாங்க தான்….
b ) அவங்க எல்லாம் அந்த அந்த மதத்துல இருக்கிற தேவரு…நாங்க எல்லாத்துக்கும் தேவரு…..
c ) வர்ற வழியில இவங்க எல்லாத்துக்குமே இராமன் தேவர்’னு பேரு வச்சி, கை செலவுக்கு 500 ரூவா மொய் வச்சிட்டு வந்தாரு…
d ) ஒரு மாசம் டைம் கொடுங்க….
போட்டு தாக்குங்க தியாகு….
அவரு முத்துராமலிங்கத்துக்கு லைன் போட்டுருக்குறாரு..லைன் பிசியாம்….இப்ப வந்துருவாரு….
பகவான் கிருஷ்ணனின் தந்தையின் பெயர் வாசுதேவ் அதை தமிழி சொல்லும்போது வாசுதேவர் என கூறுவார்கள், அதாலால் தேவர் என்பது வாசுதேவ்வுடைய பட்டம் என் திரித்து சொல்வதா..???
ஒருவரை மிகுந்த மரியாதையுடன் குறிப்பிடும் போது தேவர் என்ற சொல்லால் பயன் படுத்தபடுகிறார்கள்..அதாவது தேவர் என்கிற வார்த்தை, எந்த இடத்தில் எதற்கு சொல்லப்படுகிறது என்பதை பொறுத்தே..அது ஜாதியை குறிக்கிறதா இல்லை மரியாதைநிமித்தமாக சொல்லப்படுகிறாதா என அறியமுடியும்….
அப்பா என் கிற வார்த்தை
தந்தையை அழைக்கவும் பயன்படுத்தலாம்
சோர்ந்து அமரும்போதும் பயன்படுத்தலாம்
அடுத்தவரை அழைக்கும் போதும் பயன்ப்டுத்தலாம் (யப்பா கொஞ்சம் இந்த முகவ்ரியை சொல்லு)
கடவுளை வணங்கும் பொதும் பயன் படுத்தலாம் ( அப்பனே முருகா)
சந்தோஷ்த்திலும் பயன் படுத்தலாம் ( அப்பா..அப்பாடி எங்கு வேலை கிடைத்து விட்டது)
மேலை சொன்ன சுழ்நிலையில் ஒருவன் சொல்வான்னெனில் அவனுக்குதான் எத்தனை அப்பா என் ஆச்சீயப்பட்டால்… உங்கள் அறிவை என்னவென்று சொல்ல…!!!
//ஒருவரை மிகுந்த மரியாதையுடன் குறிப்பிடும் போது தேவர் என்ற சொல்லால் பயன் படுத்தபடுகிறார்கள்..அதாவது தேவர் என்கிற வார்த்தை, எந்த இடத்தில் எதற்கு சொல்லப்படுகிறது என்பதை பொறுத்தே//
இதை தாங்க நாங்களும் சொல்றோம்….
மரியாதை நிமித்தமா சொல்லப் படுற வார்த்தை தான் ‘தேவர்’ என்பது…. அது மூவரை மட்டுமே குறிக்கும் ‘ஜாதி’ அல்ல என்று….!!!!
//**நீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரில் நீங்களே தாயாரித்து கொண்ட காகிதத்திற்கு பதில் வேண்டுமா…அப்படி ஒரு தீர்ப்பு இருக்குமெனில் மேல் வழக்கு தொடர்ந்து யாரும் பாண்டியன் என உரிமை கொண்டாட கூடாது சொல்லாமே!!//
தியாகுவோட பார்வையில்….
திருவாங்கூர் சமஸ்தானம் பொய்….
கொல்லம் நீதி மன்றம் பொய்….
பள்ளன் யார் என்று நடந்த கேஸ் பொய்….
வாதியாய் வாதிட்ட மறவன் பொய்…
தீர்ப்பு பொய்….
வந்த தீர்ப்பு பொய்….
தீர்ப்பு நகல்கள் பொய்…
அது வெளி வந்த நாளிதழ் பொய்…
வெரி குட்…. இப்படி தான் விவாதம் பண்ணனும்…!!!
தோழரே.!!!
இப்படி ஒரு பொய்யை சொல்லிவிட்டு அதற்கு ஆதாரத்தை தா என என்னை கேட்டால்…???
பொய்யிக்கு ஆதாரமாக ஒரு போலியை மட்டுமே உங்களால் உருவாக்க முடியும்!!
நீங்கள் யாரோ சொல்லிக்குடுத்தை இங்கு எடுக்கிறீகள் அதற்கு ஆதாரமாக என்னையே தர சொல்கிறீகள்…!!!
நீங்கள் சொல்லவது பொய். திரித்து எழுதும் கதை என இங்கு வந்து போகும் வினவு வாசகர்கள் நன்றாகாவே அறிவார்கள்!!!
பள்ளு பாட்டு வேண்டாம் ஆனால் அதில் உள்ள விவசாய கூலிகள் என ஒரு வார்த்தை மட்டும் வேண்டும்????
அந்த விவசாயத்தை மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டு மருதம் எங்களுடையது வள்ளுவர் எங்களை பற்றிதான் எழுதினார்..நாங்கள்தான் நெல் வகையை கண்டுபிடித்தோம்…இதுவரை உங்களுக்கு சம்பந்தமில்லாத இந்திரன் தீடிரன இருபத்தி- ஓன்றாம் நூற்றாண்டில் தலைவன் ஆனான் கடவுள் ஆனான்..
நாயக்கர் காலத்தில் எழுதப்பட்ட பள்ளுப்பாட்டில் விவசாய கூலிகள்..நாயக்கர் காலத்திற்கு முன்பு..?? பாடல் உண்டா வரலாறு உண்டா..???
விவசாயி என்பது சொந்தநிலத்தில் விவசாயம் செய்பவனை குறிக்குமா..??
விவசாயகூலியை குறிக்குமா..??
விவசாயம் லாபம் தந்தாலும் தாராவிட்டாலும் தன்னை அண்டி இருக்கும் விவசாய கூலிகளுக்கு உணவுக்கு ஒரு பத்தாயநெல்லும் மரக்கால் அளவில் எள்ளிருந்து பருப்பிலிருந்து கடலையிலிருந்து விவசாயம் செய்பவன் தரவேண்டும் என சங்கபாடல்களில் மருதனிள நாகனார் பாடினாரா இல்லையா..!!!
விவசாயம் வீழ்ந்துப்போனால் அரசு மான்யம் தருகிறதே அது நிலம் கொண்டவனுக்கு தருகிறதா..விவசாய கூலிகளுக்கு தருகிறதா..??
அத்தனையும் பொய்..அந்த பொய்யுக்கு ஆதாரம் போலி ஆவணங்கள்..!!
நீங்கள் கூறிய எல்லா எடுத்துக்காட்டும் விவசாயிகளை பற்றி சொல்கிறதே தவிர பள்ளன் என்று எங்குமே சொல்லப்படவில்லை!!!
வீனான திணிப்பு…. உங்களுக்கு தாழ்வு மனபான்மைதான் பிரச்சனை என்றால் எந்த சலுகையையும் வேண்டாம் என நிராகரித்து..ஒரு பிராமினன் போல் வாழவேண்டியது தானே..????
இப்படி செஞ்சா இந்திய தொலைக் காட்சிகளில் நீங்கள் தான் தலைப்பு செய்தி…மத்த இடஓதிக்கிட்டுக்கும் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு!
எதுக்கு பொய் வரலாறும் போலி ஆவணமும் தயாரிக்கனும்..
//நாயக்கர் காலத்தில் எழுதப்பட்ட பள்ளுப்பாட்டில் விவசாய கூலிகள்..நாயக்கர் காலத்திற்கு முன்பு..?? பாடல் உண்டா வரலாறு உண்டா..???//
அதெப்படிங்க ஒரே கேள்வியைவே,அதுக்கு எத்தனை தடவை பதில் சொன்னாலும், கொஞ்சமே கூச்சம் இல்லாம திரும்ப திரும்ப வந்து கேக்குறீங்க…? உங்களுக்கு ‘பள்ளன்’ என்பவன் ‘தெலுங்கன்’ என்று கற்பிக்கப் பட்டு இருக்கலாம்….அதை நீங்கள் நம்புபவர்களாகவும் இருக்கலாம்…!!! அந்த நம்பிக்கையை உங்ககூட வச்சிக்கங்க….
“நான் நம்புறேன்..அதனால் நீ தெலுங்கன் தான்” என்று உங்க நம்பிக்கையை ஒரு ஆதரமா சபையில வச்சி அசிங்கப் பட வேண்டாமே….!!!
இந்த கமெண்ட்டை திரும்ப படிங்க….(99.2.1.2)
//அத்தனையும் பொய்..அந்த பொய்யுக்கு ஆதாரம் போலி ஆவணங்கள்..!!//
சொல்லுங்க சார்…சொல்லுங்க….ஆனா கேக்கத் தான் ஆள் இல்லை…!!!
நான் ஏற்க்கனவே சொன்னபடி என் வாசகர் நீங்க இல்ல தியாகு…
தினமும் இங்க வந்து வாசிக்கிற 20000 பேரு தான்…
எந்த ஆதாரத்தை சொன்னாலும் ‘வெறுமனே பொய்’ என்று சொல்பவன், விவாதம் செய்யவே லாயக்கு அற்றவன் என்று பாமரனுக்கு கூட தெரியும்…மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை….!!!
Mr.Kadungon
I understand you r very learned and argue with lot of supporting documents.
But few questions?
Why Pallars are still not having critical political clout like other communities?.
(Irrespective of dmk or admk rule ; always on receiving end.)
Kodiyankulam, paramakudi-admk rule /tamirabarani/kottaipatti dmk rule.. there are many)
What is the plan for avoiding such incidents &f loosing precious lives?
pl take positive
Sp Samy,
for your understanding,
He listing only the fake documents , really there is no such a thing.
he learned how to proceed the fake in society.
whatever Proofs he says thatsall present onlyn in Your caste websites.
என்னமோ எல்லாத்தையும் நிருபிச்சி கிழிச்சிட்ட மாதிரி இங்க வந்து அது போலி, இது நொல்லைன்னு பேச வந்திட்டேங்க தியாகு…?
ஒரு வரலாற்று ஆதாரம் காட்டினா, அதை அலசி ஆராய்ந்து உண்மையை நிறுவனம்.
நீங்க சொல்ற ‘போலி’ என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி, ரொம்ப சுலமப்பா எல்லாத்தையும் தட்டி கழிச்சிடலாம்…!!!
திரும்ப ஒரு வாய்ப்பு தரேன்….
நான் சொன்னதுல எது போலின்னு நிருபிக்கணும்…இல்லை என்றால் மீசையை எடுத்துங்க….!!!
வணக்கம் பாலைநில தியாகு.::: ம்
முதலில் தமிழ் இலக்கிய படைப்பில் யார் பள்ளர்? என்று பார்ப்போம்.
அனைவரும் தமிழ் பாடத்தை படித்து இருப்பீர்கள் +2 தமிழ் புத்தகத்தில் 88 பக்கம் முக்கூடற்பள்ளு என்ற சிற்றிலக்கியம் உள்ளது…இந்த பள்ளுநூல் யாரை பற்றி இயற்றப்பட்டது தெரியுமா பள்ளர்களை பற்றிதான் ….இந்தநூல் 17 ஆம்நூற்றாண்டில் இயற்றப்பட்டது இதை நான் சொல்லவில்லை. தமிழ் புத்தகத்தில் போடப்பட்டுள்ளது…மற்றும் தமிழ் வரலாற்று ஆசிரியர்களும் அப்படித்தான் சொல்லுகின்றனர்….பள்ளுநூல் அதிகம் உள்ளது .அது உழவர்களை பற்றி அவர்கள் வாழ்க்கை முறைகளை பற்றியும் அவர் பண்ணை அடிமைகள் போன்று காட்டப்படுகிறது…..இந்தநூல் தமிழர் அல்லாத வந்தேரிய வடுகநாயக்கர் காலத்தில் தான் இயற்றப்பட்டது..அவர்களுக்கு ஏன் இந்த உழவர்கள் மேல் வெறுப்பு??? வாருங்கள் எம் தமிழ் குடி உறவுகளே உங்களை சுமார் 2000 ஆண்டுகஊக்கு முன் அழைத்து செல்கிறேன் ….திருவள்ளுவர் தெரியாத தமிழ் மக்கள் இல்லை இவ்வுலகில் அவர் இயற்றிய குறள் 1330 இது அனைவருக்கும் தெரியும் ஆனால் அனைத்து குறளையும் நமக்கு தெரியாது..
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வர்.,
உழுவார் உலகத்தாருக்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொருத்து
சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உலவே தலை
பலகுடைநீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடைநீழ லவர்..
இந்த குறளீன் அர்த்தம் அனைவருக்கும் புரியும் ..உழவர்குடி மக்களை முதன்மையாகவும் தலை மக்களாக சுட்டியுள்ளார் திருவள்ளவர்.அப்படி இருக்கநாயக்கர் காலத்தில் ஏன் இவர்கள் பண்ணை அடிமைகள் ,கீழ் சாதி போன்று காட்டக்காரணம் அனைத்து தமிழ் சாதிகள் மத்தியில் இதை விளக்வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் இன்றைய பள்ளர் மக்கள்.மூவேந்தர்களான சரர் ,சோழர்,பாண்டியர் யார்? அவர்கள் எந்தநிலமக்கள்? அதே +2 தமிழ் புத்தகம் 146 ல் மருதநிலத்தில் தான்,ஊர் ,ஙகரம் ,அரசன் தோன்றினர் என்று சொல்லப்படுகிறது..மருதநில மக்கள் : மள்ளர் (உழவர் ,போர் வீரர் ,அரசன்),இவர்களீன் கீழ் கிளைக்குடி குடி மக்கள் தான் 18 தொழி செய்யும் மக்கள் ,கொல்லன்,தச்சன்,வண்ணான்,பாணன்,மருத்துவர்…இப்படி பல குடி மக்கள் தோன்றினர்
வாங்க பள்ள நிலத்தவரே!!
அந்த புத்தகத்தில் மள்ளன் என்று ஒரு வார்த்தை கூட இல்லை..!! ஒவ்வோரு எழுத்தாகவும் தேடி பார்த்துட்டேன்!!!
ஒன்னே ஒன்னு கேக்குறேன்!!
வெறும் 1957-ல் செத்த இமானுவல் வாழ்க்கைக்கே அரசியல் சமுக வாழ்க்கைகே ஆதாரம் இல்லம..(ஒரு புகைபடம்..ஓலி நாடா..ஓளிக்காட்சி..அல்லது பத்ட்கிரிக்கை செய்தி) இப்படி எதுவுமே இல்லாம இருக்கையில்…
அண்ணாத்த 2000 வருசத்திற்கு பின்னால் போறாராம் பிளாஸ்பேக்???? (அதப்பத்திதான் வாய்க்கு வந்தப்படி பேசலாம்)
நல்ல வேளை ..திருவள்ளுவர் என்பதை திருமள்ளுவர் என மாத்தாம போன..!!!
திருவள்ளுவர் விவசாய மனிதர்களை பற்றி பாடுனா.. வைக்கோல் எடுத்துக்கட்ற விவசாய கூலியை பற்றி எழுதினாருனு திரிக்காத..!!!
பள்ளுபாட்டு உன் வாழ்வியலைப்பற்றியது..
திரித்து..சொல்ல சொல்ல வரலாறு மாறாதுங்கண்ணா..!!!
//வெறும் 1957-ல் செத்த இமானுவல் வாழ்க்கைக்கே அரசியல் சமுக வாழ்க்கைகே ஆதாரம் இல்லம.//
எந்த ஒரு தனி மனித நபரின் வாழ்க்கையை பற்றி விமர்சிப்பது அநாகரீகம். முத்துராமலிங்கத்தை பற்றி ரொம்ப அதிகமாகவே (ஆடு திருடுன கேசுகள்) உட்பட அனைத்தையும் இங்க பேச முடியும். நாகரிகம் கருதி அதை தவிரிக்கிறேன். நீ தாராளமா இம்மானுவேலை விமர்சிக்கலாம்.
//நல்ல வேளை ..திருவள்ளுவர் என்பதை திருமள்ளுவர் என மாத்தாம போன..!!!//
வள்ளுவம் என்ற தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது….இந்த லட்சணத்தில் மள்ளரை பற்றி பேச ….
//திருவள்ளுவர் விவசாய மனிதர்களை பற்றி பாடுனா.. வைக்கோல் எடுத்துக்கட்ற விவசாய கூலியை பற்றி எழுதினாருனு திரிக்காத..!!!//
யார் அந்த விவசாய மக்கள் என்பது தான் இங்க விவாதம். ஏகப்பட்ட சான்றுகளை அடுக்கியும் ஒண்ணுத்துக்கும் பதில் சொல்லல….
//பள்ளுபாட்டு உன் வாழ்வியலைப்பற்றியது..//
உண்மை…..அதன் மூலம் என்ன சொல்ல வருகிராரி?
அப்ப சாதிய உருவாக்குனது பார்ப்பணன் இல்ல நீங்க தானு சொல்லவரிஙகளா…….?
செய்யும் தொழில் அடிப்படையில் இருந்த மக்கள் பிரிவை, பிறப்பின் அடிப்படையில் மாற்றியவன் பார்ப்பான்…..!!! ஆதாரம் வேணுமா?
//வரலாற்று உண்மையை உங்கள் ஆஸ்தான இனைய தளத்ட்கில் இத்தனை முறை பதிந்தோம்.. டைப் அடிச்சி அடிச்சி கீபோர்ட் போனதுதான் மிச்சம்…//
நீங்க என்ன பதிஞ்சு கிளிச்சீங்கன்னு இங்க படிக்கிறவங்களுக்கு தெரியும்…..தியாகு….!!! போர் பறை என்ற தளம் இன்னும் ஓபனா தான் இருக்கு….அங்க போய் வீரத்தை காட்டலாமே…..?
வணக்கம் பாலைநில தியாகு.::: ம்
முதலில் தமிழ் இலக்கிய படைப்பில் யார் பள்ளர்? என்று பார்ப்போம்.
அனைவரும் தமிழ் பாடத்தை படித்து இருப்பீர்கள் +2 தமிழ் புத்தகத்தில் 88 பக்கம் முக்கூடற்பள்ளு என்ற சிற்றிலக்கியம் உள்ளது…இந்த பள்ளுநூல் யாரை பற்றி இயற்றப்பட்டது தெரியுமா பள்ளர்களை பற்றிதான் ….இந்தநூல் 17 ஆம்நூற்றாண்டில் இயற்றப்பட்டது இதை நான் சொல்லவில்லை. தமிழ் புத்தகத்தில் போடப்பட்டுள்ளது…மற்றும் தமிழ் வரலாற்று ஆசிரியர்களும் அப்படித்தான் சொல்லுகின்றனர்….பள்ளுநூல் அதிகம் உள்ளது .அது உழவர்களை பற்றி அவர்கள் வாழ்க்கை முறைகளை பற்றியும் அவர் பண்ணை அடிமைகள் போன்று காட்டப்படுகிறது…..இந்தநூல் தமிழர் அல்லாத வந்தேரிய வடுகநாயக்கர் காலத்தில் தான் இயற்றப்பட்டது..அவர்களுக்கு ஏன் இந்த உழவர்கள் மேல் வெறுப்பு??? வாருங்கள் எம் தமிழ் குடி உறவுகளே உங்களை சுமார் 2000 ஆண்டுகஊக்கு முன் அழைத்து செல்கிறேன் ….திருவள்ளுவர் தெரியாத தமிழ் மக்கள் இல்லை இவ்வுலகில் அவர் இயற்றிய குறள் 1330 இது அனைவருக்கும் தெரியும் ஆனால் அனைத்து குறளையும் நமக்கு தெரியாது..
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வர்.,
உழுவார் உலகத்தாருக்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொருத்து
சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உலவே தலை
பலகுடைநீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடைநீழ லவர்..
இந்த குறளீன் அர்த்தம் அனைவருக்கும் புரியும் ..உழவர்குடி மக்களை முதன்மையாகவும் தலை மக்களாக சுட்டியுள்ளார் திருவள்ளவர்.அப்படி இருக்கநாயக்கர் காலத்தில் ஏன் இவர்கள் பண்ணை அடிமைகள் ,கீழ் சாதி போன்று காட்டக்காரணம் அனைத்து தமிழ் சாதிகள் மத்தியில் இதை விளக்வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் இன்றைய பள்ளர் மக்கள்.மூவேந்தர்களான சரர் ,சோழர்,பாண்டியர் யார்? அவர்கள் எந்தநிலமக்கள்? அதே +2 தமிழ் புத்தகம் 146 ல் மருதநிலத்தில் தான்,ஊர் ,ஙகரம் ,அரசன் தோன்றினர் என்று சொல்லப்படுகிறது..மருதநில மக்கள் : மள்ளர் (உழவர் ,போர் வீரர் ,அரசன்),இவர்களீன் கீழ் கிளைக்குடி குடி மக்கள் தான் 18 தொழி செய்யும் மக்கள் ,கொல்லன்,தச்சன்,வண்ணான்,பாணன்,மருத்துவர்…இப்படி பல குடி மக்கள் தோன்றினர்
இவர்கள் அனைவரும் அக்காலத்தில் உழவர்களுக்கு உதவிய் ஆக இருந்தவர்கள்.அன்று சாதி கிடையாது தொழில் செய்யும் மக்களாக வாழ்ந்தனர்.அத்தொழில் செய்தவர்களீல் உழவர்கள் தான் சிறந்தவர்கள் முதன்மையானவர்கள் என்று தான் சொல்லுகிறார்களே தவிர அவர்கள் தான் உயந்த சாதி என்று சொல்லவில்லை .சாதி என்ற வழக்கு பண்டைய காலத்தில் இல்லை ஆனால் இனம் குலம் என்று இருந்திருக்கிறது..சங்க இலக்கியநூல்கள் காட்டுகிறது நகமக்கு..உழவர்களாக மட்டும் மள்ளர்கள் வாழவில்லை போர் வீரர்களாகவும் வாழ்ந்தாஅர்கள் என்பதற்க்கு ஆதாரம் நிகண்டுகள்.வேஎந்தன் என்ற சொல்லின் பிறப்பிடம் மருதநில கடவுள்.இந்த பெயர் உரிமை கொண்டவர்கள் மருதநிலத்து தலைமக்களான மள்ளர்கள் தான் பயன்ப்டுத்த முடியும் அப்படி பார்க்கும் போது சேர வேந்தன் ,சோழவேந்தன்,பாண்டியவேந்தன் என்பவர்கள் யார் என்று சொல்லாமல் விளங்கும்.சரி மள்ளர் என்ற பெயர் தாங்கி யாரும் தமிழ் சாதி பட்டியளீல் இல்லை .ஆனால் பள்ளர் என்று உள்ளது .இவர்கள் உழவு தொழில் காலம்காலமாக செய்கின்றனர்.அப்போ இவர்கள் தான் அக்கால மள்ளர்களாக இருக்குமோ? இருக்காது கள்ளர் ம க தான் மாற்றம் என்றால் கள்ளர் என்பது அந்த சொல்லிலே தெரியவரும் அப்போ அவர்கள் இருக்காது.பள்ளுநூலில் காணமுடியும் மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர் பள்ளக் கணவன்.இங்கதான்நூல ஆசிரியர் மிகப்பழமையான மக்களை அழிக்க முடியாது என்பது தெரியும்.ஆம் அகனால் திருடன் ஒருநாள் மாட்டுவான் என்ற பழ மொழிக்கினங்க..மள்ளர் என்று வாழ்ந்த மக்களை அவர்களே பள்ளர் என்று அதை மறைக்க முடியாமல் எழுதிவிட்டனர்.ஏன் இவர்களை கிழ் சதி மக்கள் பண்ணை அடிமைகள் என்று பள்ளேசல்களில் குறிப்பிடவேண்டும் இங்கதான் அனைவரும் கவனிக்கவேண்டும்.திருவள்ளுவர் ஒரு தமிழர் அவர் உழவு திழில் தான் சிறந்த தொழில்
தியாகு அவர்களே நீங்கள் சொன்னீர்கள் தேவர்களுக்கெல்லாம் தலைவன் இந்திரன் (வேந்தன்,தேவேந்திரன்) அப்படி பார்க்கும் என்றால் தேவேந்திரன் குலத்தார்(17) என்று பட்டியல் இனப்பட்டியளில் உள்ளது .இதற்க்கு பதில் உண்டா ?…தேவேந்திரன் குலத்தார் பள்ளர்களீன் உட்பிவுகளில் ஒன்று…..தேவர் என்று எந்த சாதி பட்டியளில் உள்ளது…ஒரு வேலை ஆப்பிரிக்காவில் உள்ளதோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!வரலாற்றை அழிக்க முற்பட்டது கடந்த 400 ஆண்டுகள் மட்டுமே ஆனால் ஒரு இனத்தின் உண்மை வரலாற்றை இக்காலத்தில் என்னுடையது என்று மாற்ற நினைக்கும் பாலைநில தொல் குடி மக்களே இதை ஏன் செய்ய முற்படுகிறீர்………..இனி யாராலும் முடியாது ………….அழிந்துவிடவில்லைநாங்கள் வீழ்த்தப்பட்டு இருக்கிறோம்!!! ஒழிந்துவிடவில்லை சந்தர்பத்திற்க்காக காத்து இருக்கிரோம் மள்ளர்கள்
நான் எனது எந்த பதிவிலும் ..தேவர் சமுதாய இனையதளத்தையோ… தேவர் எழுத்தாளர் எழுதிய தேவர் புத்தகதையோ சொல்லவில்லை… ஏன் என்றால் எனது சரித்திரத்தை நானே சொல்லிக்கொள்வதில் நியாமில்லை…ஆனால்
இங்கு பள்ளன் – கள் அவகளாகவே எழுதிக்கொண்டதை வரலாறாகவும் திரைக்கதை எழுதிக்கொண்டு வசனம் வைத்துக் கொண்டு இந்த பள்ளன் சொல்லவது இன்னொரு பள்ளன் எழுதிய புத்தகத்தை அவன் எதை வைத்து எழுதியனான் என்றால் இன்னோரு பள்ளன் எழுதிய புத்தகத்தை…இவர்கள் இனயதளம் என்று தரும் முகவரியும் பள்ளன் – கள் உடையதே…
கடந்த இருபது ஆண்டுகளில் பள்ளன் தேவந்திரன் ஆனான் மள்ளனாக மாறினான்..
இவர்கள் வாழ்வு என்ன என்பதை “பள்ளூ” பாட்டு மிக துள்ளியமாக தந்துள்ளது விவசாய கூலிகளாக வாழ்ந்த இவர்கள் நாயக்கர் காலத்திற்கு பின்பே பாடல்கள் மூலம் அறியப்படுகிறார்கள்.
நாயக்கர் காலத்தில் இவர்களுக்கு என பாடல் முளைத்தது..ஆந்திர வம்சாவளிகள் இவர்கள் என்பதால்…!!!
இவர்கள் இந்தியாவின் ஜந்தாண்டு திட்டம் போல ஜாதியின் பெயரை அப்போதைக்கு அப்போ மாற்றி திட்டம் போடுகிறார்கள்….
திரவிட ஆட்சி வந்த பிற்பாடே எனைய ஜாதியெல்லாம் பொருளாதாரத்தை கண்ணில் கொண்டு பி.சி மற்றும் எம்.பி.சி என பிரித்து ஒட்டுக்கள் பெற்றுக்கொண்டனர்…ஆனால் வெள்ளையன் காலத்திலேயே இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்…
பொய்யும் பொய் சார்ந்த பகுதியில் வந்ததினால் திரித்து வரலாறை தயாரிப்பது இப்போது இவர்களின் தொழில்…
இந்த கதையை உங்களுக்கு வழங்குபவர்கள் “முத்துராமலிங்கம் பிரைவேட் லிமிடெட்”
//நாயக்கர் காலத்தில் இவர்களுக்கு என பாடல் முளைத்தது..ஆந்திர வம்சாவளிகள் இவர்கள் என்பதால்…!!!//
தியாகு….
நீங்க ஏன் இந்த சவாலை ஏத்துக்காம திரும்ப திரும்ப நழுவுரீன்கன்னு தெரியல….?
பள்ளன் வந்தேறி அல்ல….மூவேந்தர் காலம் தொட்டே இங்கே இருந்தவன், வாழ்ந்தவன், ஆண்டவன் என்பதை கல்வெட்டு மூலமே நிறுவி விட்டால் மீச எடுத்துகிரீன்களா? சவாலா?
பள்ளன் என்பது பற்றிய வார்த்தையே முக்கூற்றுபள்ளில்தான் வருகிறது..இதில் இருந்தே..அதுவும் ஒரு நாயக்கர் மன்னன் காலத்தில்…எழுதப்பட்டது..ஏன்னென்றால் நீங்கள் எல்லாம் ஒரே இனமான ஆந்திரன் என்பதால்….
எங்கள் மண்ணில் அவன் எல்லா அடயாளங்களிலும் நிறுவ அப்படி செய்தான்…
நாயக்கர் மன்னர்களுக்கு பல்லக்கு தூக்கிகளான இவர்களே பள்ளர்கள் ஆனார்கள்…
எப்படி இன்று ஈழம் இழக்கப்பட்டதோ தாழ்வுநிலயில் உள்ள சிங்களர்கள் எப்படி குடி அமர்த்தப்பட்டனரோ அப்படி தமிழ் மண்ணில் பல்லக்கு தூக்கி வந்த பள்ளர்கள் குடி ஏறினார்கள்!!
இங்கு இருக்கும் ஒவ்வோரு மணல் துகளையும் கீறிப்பார்…வீசும் தமிழ்காற்றை கிழித்து பார்…ஒவ்வோரு மலையையும் உடைத்துப்பார்… தேவர்களின் ரத்தம் அதில் ஒழுகும்!!!
அய்யய்யோ…..சாருபாலா தொண்டைமான் வரை துரோகம் புரியும்னு எழுதுங்க
//நாயக்கர் மன்னர்களுக்கு பல்லக்கு தூக்கிகளான இவர்களே பள்ளர்கள் ஆனார்கள்…//
இப்படி அரைச்ச மாவே எத்தனை தடவை அரைப்பீங்க…இதை சொன்னா உங்க ஆளுங்களே உங்களை பாத்து சிரிப்பாங்க… கொஞ்சம் புதுசா கேளுங்க….!!!
உங்க ஆளுங்க இந்த stage எல்லாத்தையும் தாண்டி, சங்க இலக்கியம் சொல்லும் மள்ளன், பள்ளன் தான் , ஆனா ‘மலலன்’ மட்டும் பள்ளன் கிடையாது என்கிற அளவுக்கு போய்ட்டாங்க… !!!
மேலும் மூவேந்தர்களே ‘பள்ளர்களின் மீது’ பள் வரி போட்டதா உங்க ஆளுங்களே கல்வெட்டு ஆதாரம் காட்டுறாங்க….!!! நீங்க இன்னும் சின்ன புள்ள தனமாவே இருக்கீங்களே….ஐயோ…ஐயோ….!!!
//இங்கு இருக்கும் ஒவ்வோரு மணல் துகளையும் கீறிப்பார்…வீசும் தமிழ்காற்றை கிழித்து பார்…ஒவ்வோரு மலையையும் உடைத்துப்பார்… தேவர்களின் ரத்தம் அதில் ஒழுகும்!!!//
ஏன் இதோட விட்டுடீங்க தியாகு….
நடுவுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்க வேண்டியது தானே….? 🙂
ஆபொஉட் முக்குலத்து மைந்தன்
செயலில் நான் கள்ளர்;வீரத்தில் நான் மறவர்;ஆளுமையில் நான் அகமுடையார்;மொத்தத்தில் நான் தேவர்…
நான் முதலில் கள்ளன் அப்புறம்தான் மறவன், மற்றதெல்லாம் என்று அந்த இனத்தை சார்ந்தவரே சொல்லுகிறார் இதற்க்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை
உண்மையை உரக்க சொல்ல தைரியம் வேண்டும்
க்ட்ட்ப்://ந்ந்ந்.fஅசெபோக்.சொம்/கலை2612/இன்fஒ
கொஞ்சம் தெளிவா சொல்லுங்க பாஸ்…..
//அந்த “வந்து” இதுதான்!!
நீங்க தெலுங்கு பள்ளன் கிறதுனால தமிழ் அர்த்தம் “வந்து” என்ற வார்த்தைக்கு புரியல..
அரசன் ஒருவனே!! ஊரிலிருக்கும் எல்லோரும் மன்னர்களாக இருக்க வாய்ப்பில்லை..
அப்படி அரசாண்டவன் விவசாயம் செய்கிறான்..போர் தொழிலாக கொண்டவன்.. இன்று விவசாயம் மட்டுமே செய்கிறான்..அதாவது அரசாங்கம் போர் எல்லாம் போக இன்று விவசாயம் மட்டுமே செய்கிறான் என் பொருள்….//
போங்க தியாகு…..
தெலுங்கு வந்தேறியான உங்க முகம் கிழிஞ்சு கமெண்ட்டு 54.1.1 இல் பதில் கமெண்ட்டுல தொங்குது…. ஐயோ பாவம்…. !!! பார்க்கலாம்…. நீங்க எத்தனை ஆதாரங்களை அடுக்குறீங்க….எப்படி நான் சொன்ன ஆதாரங்களுக்கு எல்லாம் மறுப்பு சொல்றீங்க….எப்படி மறவன் மானம் காப்பாத்துறீங்க என்று….!!!!
கள்ளன் மறவன் போன்றோர் வேண்டுமானால் தாங்கள் மருத நில குடிகள், நெய்தல் நில குடிகள் என்று சொல்லிகொள்ளலாம்….அப்படி பேசும் அவர்கள் ‘பாலை’ நிலத்தை பற்றி வாயையே திறக்க மாட்டார்கள்….!!! சரி…நாம திறப்போம்….பாலை நிலம், அதன் மக்கள் பற்றி (ஒரு வேலை வாயை திறந்தாலும்) ‘கள்ளன்,மறவன்’ என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்….அப்போ தான் யாரு பொய்யா சொல்ல்கிட்டு திரியிறா….உண்மையில் பாலை நிலகுடிகள் யாரு என்று தெரியும்…!!!
முதல் வாதம்: “பாலை நிலம் என்ற ஒன்றே கிடையாது”.
………………………………………………
“தொல்காப்பியரே நான்கு வகை நிலம் தான் உள்ளது என்று தான் சொல்லி உள்ளார். இல்லாத நிலத்தின் ஏது மனிதர்கள்? எனவே பாலை நிலம் என்பது ஒரு பித்தலாட்டம்.” (சொன்ன கள்ளன் யாரு என்று தேவைப் பட்டால் link தருகிறேன்)
இரண்டாவது வாதம்:
…………………………………
* “பல்வேறு அறிஞர்களால் மன்னர் இனம்(?) என்று அறியப்பட்ட கள்ளர்களை, பாலை நிலக் குடிகள் என்பது பெரும்பாலும் பள்ள பசங்க அடிக்கும் கூத்து ”
மூன்றாவது வாதம்:
………………………………
(நா.வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரத்தில் இருந்து)
“நிலம் ஐந்துஎனவும் படும், இவற்றை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை எனத் தமிழ் நூல்கள் கூறும். இவற்றிலுள்ள மக்கள் அங்கங்கே பிரிந்து வாழ்ந்து வந்த காலத்தில் அந்த நிலங்களின் இயற்கைப் பண்புகளுக் கேற்ப அவர்களுடைய குணம், தொழில், பெயர் முதலியனவும் வேறுபடுமாகலின் மக்கள் ஐந்துவகுப்பினராயினர். இவையே இயற்கையின் உளவாய வேற்றுமையாகலின் தமிழ் நூல்கள் இப்பாகு பாட்டினை அடிப்படையாகக் கொண்டு நிகழா நிற்கும். தமிழின் தென்மைக்கு இஃதோர் சான்றாதல் அறிக.
இவர்களுள், குறிஞ்சி நிலமக்கள் குன்றவர், வேட்டுவர் முதலிய பெயர் பெறுவர். முல்லை நிலமக்கட்கு ஆயர், இடையர் முதலிய பெயர்கள் வழங்கும். பாலை நிலத்தார் எயினர், மறவர் முதலிய பெர்களால் வழங்கப் பெறுவர். ”
“மருத நிலத்தினர்க்குக் களமர், உழவர் முதலியன பெயர்களாம்” (குறிப்பு: களமர் என்பதற்கு களம் காண்பவர், கள்ளர் என்று பெயர்)
“நாகரிகமானது மருத நிலத்தே தான் முற்பட வளர்சியடைந்திருத்தல் வேண்டும். ஐந்திணை மக்கள் அறிவும், நாகரிகமும் உடையரான காலத்தே அறிவரும், அரசரும், வணிகரும், பாணர், துடியர் முதலிய ஏனைக்குடி மக்களும் அவர்களுள்ளே தோன்றுவராயினர்.”
Ref: http://mmk-thevarcommunity.blogspot.in/2010/02/blog-post.html
============================================
இப்படியாக மூன்று விதமான வாதங்கள்……
மேல சொன்ன அனைத்திற்கும் பதில் சொல்லும் முன்பு நம் நமதில் ஓடுவது இது தான்.
“வரலாறை திருத்துவது என்று வந்தாச்சி. அதை ஒண்ணா உக்காந்து சேர்ந்து திருத்த கூடாதா? இப்படியா அசிங்க படுறது?. இதை படிக்கிறவனே விழ்ந்து விழுந்து சிரிப்பானே….ஐயோ…ஐயோ….” 🙂
இனி நமது பதில்கள்:
===================
முதல் வாதத்திற்கான நமது பதில்
…………………………………….
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்” — சிலப்பதிகாரம்.
‘பாலை’ நிலம் என்ற ஒன்று இல்லை என்றால், ‘இல்லாத’ பாலை நிலத்தை பற்றி இளங்கோவடிகள் பொய் சொல்வது ஏன்?
இரண்டாவது வாதத்திற்கு பதிலை
…………………………….
‘கள்ளர் சரித்திரம்’ எழுதிய வேங்கடசாமி நாட்டாரே எழுதி விட்டார். “பாலை நிலத்தில் வாழ்ந்த மக்கள் மறவர், எயிற்றினர்” என்று அவர் கூறுகின்றார். மேலும் “கள்ளர்”(களமர்) என்பவர் மருத நில குடிகள் என்றும் அவர் கூறுகினார். எனவே நேரடியாக மூன்றாவது வாதத்திற்கு பதில் சொல்வோம்.
மூன்றாவது வாதத்திற்கான நமது பதில்:
……………………………….
“வேங்கடசாமி நாட்டார் களமர், உழவர் இவர்களே மருத நில குடிகள்” என்று சொல்கிறார். அப்படியானால் இதற்க்கு கள்ளர்களின் பதில் என்ன?
*‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்…’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு.
* ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கள நிகண்டு.
இதற்கும் கூட ‘கள்ளர்’, ‘தாங்கள் தான் மள்ளர்’ என்று சொல்லக் கூடும். மள்ளர் என்போர் யார் என்று அறிஞர் பெருமக்கள் தெளிவாக தெரிவித்து உள்ளார்கள். எனவே ‘கள்ளனின்’ வரலாற்று செய்திகள் உண்மையா, இல்லை திரிப்பா என்பதை இதை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
//“நிலம் ஐந்துஎனவும் படும், இவற்றை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை எனத் தமிழ் நூல்கள் கூறும்.//
இவை தற்போதைய தமிழகத்தின் எப்பகுதி என்று தெரிந்து கொள்ளளாமா….?
இன்னைக்கு இருக்கிற தமிழக பகுதியை வைத்து தான் அன்னைக்கு நிலத்தை பிரைச்சாங்களா….?
பாண்டியன் கேட்டதற்கு பதில் கூறுங்கள்..!!அதில்தான் மாபெரும் உண்மையிருக்கிறது!!!
“குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை இவை தற்போதைய தமிழகத்தின் எப்பகுதி என்று தெரிந்து கொள்ளளாமா….?”
பாண்டியன் கேட்டது இது?
பதில் எது?
ஒரு நிமிஷம் மேலே கொஞ்சம் உத்து பாருங்க….நான் எடுத்து போட்ட ஆதாரம் எல்லாம் உங்க ஆளுங்க எழுதுனது தான்…
நிலம் ஐந்து வகைப்படும் என்று சொன்னது கள்ளர் சரித்திரம் எழுதிய வேங்கடசாமி நாட்டார்…..அதில் பாலை இல்லை என்று சொன்னது இன்னொரு கள்ளர்….!!! வேங்கடசாமி நாட்டாரின் புதல்வர்கள் இங்கே பலர் உள்ளனர். அவர்களிடம் ‘நீங்கள் சொல்லப் போகும் மிகப் பெரிய உண்மை’ என்ன என்பதை சொல்லாமல் , “ஏனப்பா நிலத்தை ஐந்தாக பிரிச்சீங்கன்னு கேளுங்க….அதில் பாலை நிலம், அதில் வாழ்ந்த மக்கள் மறவர்கள்,எயிற்றினர்”ன்னு வேற எழுதி இருக்கீங்களே…. அது பத்தி எனக்கு ஒரு உண்மை தெரியும்,,, இப்போ தமிழ் நாட்டில் அந்த பகுதி எல்லாம் எங்க இருக்குன்னு கேக்குறாங்கன்னு சொல்லுங்க…? அப்புறம் நீங்க சொல்ற உண்மையை போட்டு அவங்க முன்னாடியே உடைங்க….!!! அப்புறம் அதே உண்மையை இங்கயும் உடைங்க….!!!
இப்படி உங்க பஞ்சாயத்தை முழுசா முடிச்சிட்டு வாங்க…அப்புறம் நான் பதில் சொல்றேன்….எங்கயும் ஓடி போக மாட்டேன்…!!
//ஒரு நிமிஷம் மேலே கொஞ்சம் உத்து பாருங்க….நான் எடுத்து போட்ட ஆதாரம் எல்லாம் உங்க ஆளுங்க எழுதுனது தான்…//
கடுங்கோன் பாண்டியன் அவர்களே இது முறையற்ற பதில்
ஐந்து வகை நிலத்தை விடுங்கள்…….. மருதநிலக்குடிகள் என்று தங்களை கூறுகிறிர்கள்.
அப்படியானால் த்மிழகத்தின் மருதநிலப்பகுதி தற்ப்போது எந்த பெயரால் அழைக்கப்படுகிரறது…? அங்கு எந்த மக்கள் வசிக்கிறர்கள்……….?
வயலும் வயலும் சார்ந்த இடமும் மருதம்….!!!
இதை வச்சி ரொம்ப புத்திசாலித் தனமா நீங்க அடுத்த கேள்வி என்ன கேப்பீங்கன்னு தெரியும்…!!! அதுக்கு முன்னாடியே நான் பதில் சொல்லிடறேன்…அதனால் தான் முனாடியே கேட்டேன்… இன்னைக்கு இருக்கிற தமிழ்நாட்டை வச்சி ஐவகை நிலத்தையோ, மக்களையோ ஆராய்தல் தவறு என்று….!!!
* நாயக்கர் ஆட்சிக்கு முன்பு உழவு குடிகள் என்று அறியப் பட்டவர்கள் யார்?
நாயக்கர் ஆட்சிக்கு பின்பு எப்படி எல்லாரும் உழவு தொழில் செய்ய ஆரம்பித்தீர்கள்?
* களவுத் தொழிலை குலத் தொழிலாக கொண்ட பிரமலை கள்ளர்கள், எந்த கால கட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வேளாண்மை செய்யும் குடிகளாக மாறினார்? (இதற்க்கு ஆதாரம் அவங்க எழுதின பிரமலைக் கள்ளர்களின் வரலாறிலேயே இருக்கு)
இதுகெல்லாம் பதில் சொல்லிட்டு, அப்புறம் உங்க வாதத்தை வைங்க….!!!
இளங்கோவடிகள் ஏன் பொய் சொல்லவேண்டும்.அவர் தேவர் சமுகம் என சிலப்பதிகார பாடலே சொல்வதாலா..!! :- ஹா ஹா ஹா
முல்லையும் குறிஞ்சியும் அதன் இயல்பு இழந்தபின்பு எது உருவாகும்..?
பாலை என்பதென்ன..? முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலமே பாலை..இதையெல்லாம் பாடலில் படிக்கவில்லையா!
உங்க பார்வையில் நவநாகரீகமாக அமெரிக்காவைப்போல் இருக்குமா..? :- ஹா ஹா ஹா
பாலைக்கு என்று தனி நிலம் இல்லை. ஆனால் முல்லயும் குறிஞ்சியும் முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போயுள்ள இடங்களே பாலை என்பது ஆகும்.
எங்குமே பாலை என்ற இடம் நிரந்தரமாக இல்லை,திரிந்து போவதே அது…இப்படி தமிழ் மண்ணில் முல்லயும் குறிஞ்சியும் முறை திரிந்தே பாலை!!
இன்றாய காலகட்டத்தில் சொல்ல வேண்டுமெனில் கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டால்…தஞ்சை வயலும் வயல் சார்ந்த பகுதியாம்…தண்ணீர் காவிரியில் வரவில்லையென்றால் வருணபகவானும் கை விட்டால்…தஞ்சை பாலை யாகும்…! இல்லாத பாலை இருப்பது இப்படிதான்…
“இருக்கு ஆனா இல்ல” அதுவே பாலை…
//முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலமே பாலை..இதையெல்லாம் பாடலில் படிக்கவில்லையா!//
நல்லாவே சேம் சைடு கோல் போடுறீங்க…!!!
பாலை நிலம் என்பது ஒரு பித்தலாட்டம் என்று சொன்னது நான் அல்ல….நல்லா மேல படிங்க…. அரைகுறையா படிச்சிட்டு கமெண்ட்டு போடுறேதே பொழப்ப போச்சு உங்களுக்கு…!!!
“”*‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்…’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு”””
இது யாரு எங்க திவாகரன் எழுதினாரா..??? ஒட்டுக்காக எழுதினாலும் எழுதியிருப்பாரு..
**‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்…’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு**.
“திவாகர நிகண்டு” -இத யாரு எழுதுனது எங்க திவாகரன் அண்ணணா.? எழுதினாலும் எழுதியிருப்பார்… ஒட்டுவாங்கனுமுல..
**‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கள நிகண்டு**
“பிங்கள நிகண்டு” – இத யாரு எழுதனது..நம்ம மேற்வங்காளம் டிம்பிள் பாசூ-வா…?
நல்ல விடுரீங்கடா கதை..!!! மள்ளன் என்ற வார்த்தையை ஒவ்வோரு பாடலுக்கும் இடையிலும் முடிவிலும் சொறுகி…எப்படி ஒரு போலியா எழுதாறான் பார்..!!
நிகண்டு என்றால் என்ன என்றே தெரியாத உங்களின் நிலையை எண்ணி வருந்துகிறேன் தியாகு….!!!
உங்கள் கமெண்ட்டை படிக்கும் தமிழ் உலகம் கை கொட்டி சிரிக்கும் என்பது உறுதி….
நிகண்டு என்றால் என்ன?
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
தேவர் என்று சொல்லிக்கொள்ளும் இவர்களின் கிளை பெயர்களை பார்த்தாலே இவர்கள் தமிழர்கள் கிடையாது என்பது தெளிவாக புரியும்.
கரிகாலன்…!எனக்கு விளக்கம் சொல்லுங்கள்!
இமானுவல் சேகரன்
ஜான்பாண்டியன்
கிருஷ்ணசாமி
இதுவெல்லாம் தூய தமிழ் பெயர்களா..????
இங்கு பல நபர்கள்(நீங்கள் உட்பட) தமிழ் துனைப்பெயருடன் இருப்பவர்களின் உண்மைப்பெயர்தான் என்ன….????
இதுக்கெல்லாம் பதில் ‘ஏன் மத மாற்றம் நடந்தது’ என்பது தான்…!!! அதுக்கு பதில் தேடினா, இம்மானுவேல், ஜான், இவர்களுக்கு பதில் கிடைக்கும்…
அதெல்லாம் போகட்டும்…
‘தேவர்’ என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தை ஆச்சே….அதை சாதியா போட்டுகிற நீங்க எப்படி தமிழன் ஆக முடியும்?
// தேவேந்திரன் குலத்தார்(17) என்று பட்டியல் இனப்பட்டியளில் உள்ளது .இதற்க்கு பதில் உண்டா?… தேவேந்திரன் குலத்தார் பள்ளர்களீன் உட்பிவுகளில் ஒன்று…..//
98 ல ஒரு கேள்வி
இந்திரன் தமிழ்க்கடவுளா….?
தேவேந்திரன் என்பது தமிழ்ப்பெயரா…?
http://ta.wikipedia.org/s/fgm
எந்தப்பெயர் உயர்வு தருகிறதோ அதை எந்த மொழியாக இருந்தாலும் நீங்கள் பயன்படுத்தலாம்.. நீங்க தமிழன் ஆக முடியும்?
மற்றவங்க அயல் கிரகவாசிகள்!!!! நல்லா இருக்கு சார்………
கேட்ட கேல்விகளுக்கு பதிலளிக்காமல் வேறு கேள்விகள் கேட்பது, மழுப்புவது, நக்கலடிப்பதாய் நழுவுவது, நீலிக்கண்ணீர் வடிப்பது தவிர்த்து உங்களது சாதி திமிருக்கு நீங்களும் தியாகுவும் என்ன நியாயம் கற்பிக்கிறீர்கள்…..மற்றவர்களை காட்டிலும் நீங்கள்தான் யோக்கியர்கள் என்றால் நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும்…இன்றுவரை மறவர், கள்ளரையோ, அகமுடையாரையோ மணப்பதில்லை….மூன்றுக்கும் தனி தனி சங்கங்கள் என்ன காரணம் எபன்பதை நேர்மையாக விளக்க முடியுமா?… உங்கள் சாதியால் உங்கள் சாதியிலுள்ள ஏழை மக்களுக்கு என்ன் பயன் கலவரத்தில் பங்கு கொள்வதை தவிர……
//கேட்ட கேல்விகளுக்கு பதிலளிக்காமல் வேறு கேள்விகள் கேட்பது, மழுப்புவது, நக்கலடிப்பதாய் நழுவுவது, நீலிக்கண்ணீர் வடிப்பது தவிர்த்து உங்களது சாதி திமிருக்கு நீங்களும் தியாகுவும் என்ன நியாயம் கற்பிக்கிறீர்கள்//
ஒரு ஆதாரத்தை வைக்கும் போது அந்த ஆதாரத்தை உடன்டடியாக கிண்டல் அடிக்க எந்த வித கட்டாயமும் இல்லையே…..உங்களை(தியாகு கூட்டத்தினர்) நான் உடனே பதில் சொல்லுங்க என்றும் சொல்லலியே….தேவையான நேரத்தை எடுத்துகொண்டு பின்பு நேரம் கிடைக்கும் போது பதில் சொன்னாலே போதுமே….? அதை விடுத்து, கேலி கிண்டல் செய்து கடந்து போவது விவாதத்திற்கு அழகா?
இதுக்கு பதில் இங்க இருக்கு 123.2
தியாகு அப்படிங்கிறது தமிழ் பெயரா என்பதைத் தெரிந்து கொண்டு அதற்க்கு விளக்கம் கொடுத்த பின்புதான் அடுத்தவனை கேட்க வேண்டும். தியாகு தமிழ் பெயரே இல்லையே.
Kallar (கள்ளர்), Meaning “Brave People”
This statement clearly says that “Kutra paramparai community people don’t know tamil and they are NOT from tamil land.
Kutra paramparai people can fool only their people not us or educated people.
Only educated people will accept this.
ref: http://cholamandalamblogspotcom.blogspot.in/2012/01/blog-post.html
பிளாக்ஸ்பாட்,வெல்ர்ட்பிரஸ் போன்ற இனையங்கள் ஒவ்வோரு பதிவுக்கும் பணம் வாங்கும் என்றால்..இவர்கள் இத்தனை அவசரமாக ஒரே விசயத்தை பல பிளாக் பெயரில் பாராமறிக்க மாட்டார்கள்!!!
//இந்த சாதிக்காரானெல்லாம் ஒரே மரபனுவை செந்தவனு போட்டுறுக்கா.குறிப்பிட்டு போட்டிருக்கா..???//
என்ன போட்டிருக்குன்னு சொல்லிட்டு அப்புறம் பேசணும் தியாகு….சும்மா மீண்டும் மீண்டும் ஊளை உதாரு விட கூடாது….!!! மீண்டும் அந்த மரபணு ஆய்வை படிச்சிட்டு அந்த மரபணு tree மூலமா என்ன சொல்ல வராங்கன்னு நீங்களே படிச்சி, தெளிஞ்சி இங்க சொல்லலாமே…?
எங்கப்பா தியாகு….இந்த பக்கம் ஆளையே காணோம்…? ‘எந்த கேள்வி’ சுலபமா இருக்கும்னு தேடுறியா? இங்க கேட்ட கேள்வி கொஞ்சம் கஷ்டமானது தான்….அதனால் choice ல விட்டுட்டியா? ஹா….ஹா….ஹா….
1931 சூலை 7 தஞ்சை ஆதிதிராவிடர் மாநாட்டில் எம்.சி. ராஜா சொன்னது
1930 சூலை 16
ராமநாதபுரத்தை மாவட்டத்தை சேர்ந்த பதினேழு சாதி சங்கங்களை சேர்ந்த மேல் சாதினர், பறையர், மள்ளர் சதிகளுக்கு எதிராக
8 தடைகளை விதித்தனர். இது மீரபட்டதால்,
1931 கள்ளர்கள் தலைமையேல் அதே பதினேழு சாதி சங்கங்களை சேர்ந்த மேல் சாதினர், 11 தடைகளை விதித்தனர்.
**************************************************************************
டைப் செய்ய நேரம் இல்லாததாள் அதை போடல.
அதாவது ஒரு இனத்தின் மீது 17 சாதி சங்கங்கள், வழிப்பறி செய்து இருக்கீறார்கள், இதை வைத்து பார்க்கும்போதே தெரியுது யாரு வீரம் புரிந்தவர்கள் என்று, மன்னர் பரம்பறையாம், அவர்கள் குலத்தொழில் திருடுவது அதே தொழிலைத்தான் செய்துரிகீரர்கள்.
இங்கே ஒரு இனம் மட்டும் இருந்திருந்தால், ஓட ஓட விரடிருப்போம் ஆனால் 17 சாதி சங்கங்கள், போரடமுடியது அதையும் எதிர்த்து சண்டை நடந்து இருக்கு, இதே போன்று வருகிற வாரம் கோவைஇல், கலப்பு திருமணத்தை எதிர்த்து சில சாதி காரர்கள், கூட்டம் போடுகீரார்கலம் பாருங்கள் தோழர்களே கோழைகள் ஓன்று கூடுகிறார்கள். சொந்த அக்கா, தங்கை மேல நம்ம்பிக்கை இல்லாத பசங்க, கோழைகள்
கடுங்கோன் பாண்டியன் கலக்குறீங்க..ஆரோக்கியமான கருத்துக்கள் அருமை தோழர்.
கடுங்கோன் பாண்டிய மன்னா. http://saanron.webs.com/
முதலில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி விட்டு அப்புறம் மற்றதை பேசலாமே…?
மூவேந்தர்களில் மூத்தவன் யார்?
யாருக்கு பின்பு யார் வந்தா? எத்தனை காலம் கழித்து வந்தார்கள்?
சோழன் பற்றி பேசும் எவரும் ‘குலோத்துங்க சோழனுக்கு’ முன்பு, பின்பு என்று வரலாறை பேச தயாரா?
மேலும், பாண்டியனின் வரலாறை எந்த பாண்டியனில் வேண்டுமானலும் பேசலாம்? தயாரா…?
http://saanron.webs.com/
இது போன்ற கட்டுரைகள் சமுகத்திற்கு தற்போது அவசியமா..?
சாதி, தீண்டாமை தலைப்பில் நீங்கள் வெளியிடும் கட்டுரைகளின் நோக்கம் சமூகத்தை பிரிக்கவா? அல்லது சேர்க்கவா….?
சாதி வெறியை ஊட்டி வளர்ப்பதுக்குப் பெயர் புரட்சிகரப் பண்பாடா…?
மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற புரட்சிகரப் பண்பாட்டு அமைப்பின் நோக்கம் பார்ப்பணன் வகுத்த சாதிக்கு தண்ணிர் ஊற்றி வளர்ப்பதா…….?
அது சரி பார்ப்பணன் என்று ஏன் இழிவாக பேசுகிறிர்கள் அவர்களும் மனிதர் தானே.அடுத்த சமூகத்தை பற்றி இழிவாக பேசும் போது உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கிறதா….?
ஒரு தரப்புமக்களை சந்தோசப் படுத்துவதற்க்காக கடந்த காலங்களில் முன்னோர்கள் செய்த பிழையை மீண்டும் செய்யாதீர்கள்.இந்த தளத்திற்க்காக வேலை செய்பவர்கள் அனைவரும் சாதி வெறியர்களா…? இந்த தளத்தின் மூலம் கூறுவது பொய்பிரச்சாரமா…? என்ற எண்ணம் மூன்றாவது ஒரு நபருக்கு ஏற்படும் போது வினவு தன் நடு நிலமையை இழ்ந்து விடும்
ஒரு ஊரில் நடக்கும் பிரச்சனையை சாதி சண்டையாக்குவது அரசியல் வாதிகளின் வேலை அதே வேலையை வினவு செய்வது வன்மயையானது.
தேவர் சமுக மக்களிடம் சாதி வெறி இருக்கிறதோ இல்லையோ இந்த கட்டுரையை எழுதிய நண்பர் மனதில் சாதி வெறி தலைக்கு மேல் உள்ளது பொதுவாக தேவர் சமூக மக்களை ஆதிக்க சாதிவெறியர்கள் என்று சுலபமாக எழுதிவிடுகிறிர்கள் அரசாங்கத்தாள் தாழ்த்தபட்ட மக்கள் என்று அழைக்கப்படும் பறையர், பள்ளர் மற்றும் பிற சமூகத்தில் உள்ள சாதி வெறியர்களை எப்படி அழைப்பீர்கள் ஒடுக்கப்பட்ட சாதி வெறியர்கள், கீழ்மட்ட சாதி வெறியர்கள் என்றா..?அழைப்பீர்கள்.
தழ்த்தப்பட்டவன் தன் சமூகதிற்க்காக செய்வது புரட்சி என்றும் மற்ற சமூகத்தவன் தன் சமுகத்திற்கு செய்தால் அது சாதி வெறி அப்படித்தானே…….. சபாஷ் .
பாண்டியன் அவர்களே உங்கள் கருத்தில் எந்த அர்த்தமும் இல்லை? ஜாதி என்றால் என்ன? மனிதருக்குள் ஒரு ஏற்ற தாழ்வை உருவாக்கி அதை இன்று வரை அழியாமல் பாதுகாத்து கொண்டிருக்கும் ஆதிக்க ஜாதிக்கு என்ன விளக்கம் கொடுக்கிறீர்கள்? மனிதர்களாக வாழ நினைப்பவர்களுக்கும், மற்றவர்களை அடிமையாக நடத்த நினைக்கும் ஆதிக்க சாதிக்கும் வித்தியாசம் இல்லையா? விடுதலைக்கான எங்கள் போராட்டத்திற்கும், ஜாதி வெறி, பெருமை கொண்ட உங்களுக்கும் வித்தியாசம் இல்லையா? ஜாதியை அழிக்காமல், அதை வளர்ப்பதற்கு துணை போகும் இந்த திரைப்படத்தை விமரிசித்துதானே இந்த விவாதங்கள்? படத்திற்கு படம், ஊருக்கு ஊர், ஜாதி பெருமையை பேசி பகை வளர்ப்பவர்கள் தமிழ்நாட்டில் தேவர் ஜாதியை தவிர எந்த ஜாதியும் கிடையாது? நீங்களும் மனித பிறவிதானே, வானத்தில் இருந்து குதித்து வரவில்லையே? முதலில் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற இறுமாப்பை நிறுத்துங்கள் ? இல்லாவிடில் இருபத்தொராம் நூற்றாண்டின் முட்டாள்கள் பட்டியலில் நீங்கள்தான் முதல் இடத்தை பிடிப்பீர்கள்?
துரைராஜ் அவர்களே!!!
இது உங்கள் கூற்று:-
***மனிதருக்குள் ஒரு ஏற்ற தாழ்வை உருவாக்கி அதை இன்று வரை அழியாமல் பாதுகாத்து கொண்டிருக்கும் ஆதிக்க ஜாதிக்கு என்ன விளக்கம் கொடுக்கிறீர்கள்?***
இது எங்கள் கூற்று:-
***மனிதருக்குள் ஒரு ஏற்ற தாழ்வை உருவாக்கி அதை இன்று வரை அழியாமல் பாதுகாத்து கொண்டிருக்கும் பொருளாதாரத்திற்கு என்ன விளக்கம் கொடுக்கிறீர்கள்?***
எந்த ஜாதி பொருளாதாரம் அற்று இருக்கிறதோ..அதுவே ஆளுமுறைக்கு அடங்கி போகிறது..
40 ஆண்டுக்கு முன்னால் தலித்களின் அடக்கு முறையும் இன்று நடப்பு தலித்களின் அடக்குமுறையும் …நீங்கள் தாராசின் முள்ளை போன்று இருதயத்தை வைத்து ஆராய்ந்தால்..உஙகளுக்கு நிச்சயம் வித்யாசம் விளங்கும்..!!!
உன் மக்கள் வாழ்வு எவனையும் சார்ந்து இல்லையெனில் அவன் யாருக்கும் அடிமையாக இருக்க வாய்ப்பில்லை.. அதற்கான திறவு வாசல்தான் இடஒதிக்கீடு உதவி தொகை எல்லாம் கொண்டுவரப்பட்டன..!!!
நீங்கள் ஒட்டுமொத்த மக்களையும் மாற வேண்டும் என எண்ணினால் நீங்கள் சொன்ன முட்டாள்கள் பட்டியலில் முதலில் நீங்களே சேர்ந்துக்கொள்ளலாம்!!
இதுவரை வரலாற்றிலையும் சாரி…நடமுறையிலும் சரி ஒட்டுமொத்த மக்களும் மாறியதாக ச்ரித்திரமில்லை..!!!
ஜாதிய சலசலப்பு உலகமிருக்கும் வரை இருந்துக்கொண்டேதான் இருக்கும்.அதன் வேகம் குறையும்..தணியும்..செயல்படாமல் கூட இருக்கும் ஆனால் மூச்சு விட்டுக்கொண்டேயிருக்கும்.
தியாகு அவர்களே, சாதி பாகுபாடு பார்ப்பது குறைந்திருப்பது நகரங்களில் மட்டும்தான் (அதுவும் வாய்ப்பில்லாத ஒரு சூழ்நிலையால்தான்). கிராமங்களில் இன்றும் மறையாமல் அப்படியே இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாதா? அதனுடைய தாக்கம் தானே ஒரு குறிப்பிட்ட ஜாதியை திரும்ப திரும்ப தூக்கி பிடிக்கும் இந்த திரைப்படத்தின் கதை? இங்கே ஒரு ஜாதியினரை வீரமாக காட்டுவதற்காக மறைமுகமாக மற்றொரு ஜாதியை கோழையாக காட்டுகிறார்கள்? சிறிது காலத்திற்கு முன் வெளி வந்த பாரதி கண்ணமா என்ற திரைப்படத்தில் (இதுவும் தேவரின் புகழ் பாடிய திரைப்படம்தான்) தாழ்த்தப்பட்டவன் , தேவர் ஜாதியை சார்ந்த பெண்ணை விரும்புகிற மாதிரி இருந்த ஒரு காட்சிக்காக அந்த படத்திற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது? ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் யார் எப்படி திரைப்படம் எடுத்தாலும் சகித்துக்கொள்ளவேண்டும்? எவ்வளவு பெரிய நியாயம்? இட ஒதுக்கிட்டினால் தாழ்த்தப்பட்டோரின் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை? ஆனால் இந்த இட ஒதுக்கிடு எந்த எதிர்ப்பும் இன்றி வரவில்லை? சரி தாழ்த்தப்பட்டவர் களாவது அந்த பெயரை இப்போது வரையில் சுமந்து கொண்டு இட ஒதுக்கிட்டை பெறுகிறார்கள் ஆனால் உயர்ந்த ஜாதியினர் என்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கு எதற்கு இட ஒதுக்கிடு? அப்போ நீங்கள் தாழ்த்தப்பட்டவர்களா இல்லை நாங்கள் உயர்ந்த ஜாதியா? ஏதாவது ஒன்றிற்கு பதில் சொல்லுங்கள்?
பாண்டியன் !! உங்கள் கேள்வி ஒரு சாராசரி மனிதனுடயது..எல்லோர் மனிதிலும் இருப்பது.!!!
ஒரு தலித் ஒரு தலித்திற்காக போராடினால் அவன் சமூகசீர்திருத்தவாதி..நல்லவன் யோக்கியன் என்றலாம் புரட்சி இயக்கமென சொல்லிக்கொள்வார்கள்..
ஆனால்..
ஒரு நலிந்த ஏழை பிராமனனுக்காக ஒரு ஏழை பிராமினன் போராடினால்..அவன் ஜாதி வெறியன்
இதுவே இவர்கள் சொல்லும் தேவர்,பிள்ளை எல்லா சாதிக்கும்…
இந்த நவீன புரட்சியாளர்கள் எளிய ஏழைகள் மீது இரக்கம் கொள்வதேயில்லை…எப்போதுமே இரக்கம் ஜாதியின் அடிப்படையில் தான். ..
ஒரு வேளை ஜாதி வெறியர்களே இந்த நவீன புரட்சியாளர்களா..?? ஜயம் வலுத்துக்கொண்டுதான் போகிறது..
தியாகு அவர்களே கடைசியில் உங்களது இயலாமையை நினைத்து வருத்தப்படுகிறேன்? ஏழை பிராமணன் அது, இது என்று உங்கள் இயலாமையை வெளிபடுத்துகிறீர்கள்? பிரச்சனை ஏழையா, பணக்காரனா என்பது அல்ல? யார் யாரை அடிமைபடுத்தினார்கள் என்பதுதான்? எங்காவது ஒரு தாழ்த்தப்பட்டவன், பிராமினனையோ அல்லது தேவரையோ அடிமையாக நடத்தியிருக்கிறார்களா? ஆனால் விலங்குகளை விட கேவலமாக நீங்கள் குறிப்பிட்ட ஜாதியினர் தாழ்த்தப்பட்டவர்களை நடத்தியிருக்கிறார்கள்? இதை பேச முடியாமல் ஏழை பிராமிணன், பணக்கார பிராமிணன் என்று கதை விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
//ஒரு நலிந்த ஏழை பிராமனனுக்காக ஒரு ஏழை பிராமினன் போராடினால்..அவன் ஜாதி வெறியன்
இதுவே இவர்கள் சொல்லும் தேவர்,பிள்ளை எல்லா சாதிக்கும்…//
நீயா நானாவில் ஒரு விவாதம். அதில் காங்கிரஸ் தரப்பில் இருந்தும், நாம் தமிழர் தரப்பில் இருந்தும் பேசினார்.
காங்கிரஸ்: “மக்களுக்காக போராடனும்….பிரச்னையை தீக்கனும்….வாங்க எல்லாரும் போராடுவோம்…”
நாம் தமிழர்: “போராட்டமே உங்களை எதிர்த்து தாங்க….”
கடுங்கோன் பாண்டியன் கொடுத்த ஆதாரங்களுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் ஏழை பிராமணன், பிச்சைக்கார பிராமணன், …….. பிராமணன் என் வேண்டிய அவசியம் இல்லை.
உம் பதில்கள் எதுவும் ஆதாரத்துடன் இல்லை. திரித்து வாதம் புரிகிறீர். விவாத நேர்மை துளியும் இல்லை.
//இந்த நவீன புரட்சியாளர்கள் எளிய ஏழைகள் மீது இரக்கம் கொள்வதேயில்லை…எப்போதுமே இரக்கம் ஜாதியின் அடிப்படையில் தான்…//
கண்டுபிடிச்சிட்டாருயா…
hi தேவர் என்பது சாதியே இல்லை…திருட்டை குலத் தொழிலாகக் கொண்ட கள்ளன்கள் குலவுயர்வுக்காக தேவர் எனும் பட்டத்தை பயன் படுத்தி சாதி இழிவை மறைக்க முயலுகிறார்கள்…
Friend Thiagu
I will not change my basic conviction till my last breath:” no body is above or below by birth.”
If my son comes and tell ,some of his friend is lower by birth/caste- I will give him a tight slap and will tell him the above.
If he comes and tell me “appa are we lower by caste? I will tell him the same but explain- caste is man made evil/injustice tag. Your father/grand fathers are all farmers; we were not in to any slavery service as I know up to my father’s grand father. But again people who do services like sanitary work/ scavenging are to be empathized. It s shame on our governments /planning commissions that they have not been rehabilitated . Shameless people are in power. The time will change all this things. Because civil society is evolving to more fair and just. But any INDIVIDUAL wants to change discrimination to advantage; it is very much possible for ex. Dr.AMBEDKAR; had he was born in any other caste, he probably would have ended up as a teacher or professor perhaps. But he was born certain caste, faced discrimination and raised himself as a national icon and raised masses as well.
Another our time example is BARACK OBAMA , the finest example for raising through discrimination.(read his book-my fathers dream)
Your father Me, has studied in horrible SC hostel (the food served there, the well reared dog will not eat) ) has stood second in X th entire in school and came up to this and put u in international school.
(Of course examples are exceptions. Masses will emancipate when politically empowered,-NADARS MODEL IS UNIQUE)
Enough…. any child will get bored…
Now tell me dear THIAGU what will u say to yr son, in similar imaginary situation?
Note: VINAVU- THIS MONTH READERS DIGEST AN ARTICLE ABOUT MICHEL HALEY(the elder brother of famous ALEX HALEY of the ROOTS and fabulous piece of USA’s yesterday’s discrimination; if u put in tamil in this website it would be too good.
All that is fine Mr.SP Samy,will you let your son enjoy reservation,because whatever upper lower caste logic you might have given here,if he chooses to use reservation after 12th std,then it ll turn itself on its head.
தியாகுக்கு செலக்டிவ் அம்னீசியா…அதனால் எமது கேள்விகளை மீண்டும் பொருக்கி எடுத்து இங்கே நியாபப் படுத்துகிறேன்…!!!
* பள்ளரே பாண்டியர் என்ற நீதிமன்ற தீர்ப்பு பற்றி இன்னும் ஒன்னும் சொல்லல…ஏன்?
* ‘தமிழர்களின் கடல் மேலாண்மை’ பற்றி ஒரிசா பாலு அவர்களின் ஆய்வு பற்றியும் உங்கள் கருத்தென்ன? அதில் அவர் பள்ளனே பாண்டியன், அவனே நெல் நாகரிகம் கண்டவன் என்று ‘தொல்லியல்’ ஆய்வு மூலம் நிறுவி உள்ளாரே. அதற்க்கு உங்கள் பதில் என்ன?
* மள்ளர் மல்லர் பற்றிய தேவர் தளம் புளுகுக்கு உங்கள் கருத்தென்ன?
* ஆண்ட பரம்பரை இன்னும் ஏன் கோட்டா மூலம் சலுகை அனுபவிக்கிறீங்க? கள்ளர் நல வாரியம் எதுக்கு இருக்கு? கலைக்க வேண்டியது தானே?
* ஆண்ட பரம்பரை ஏன் HCL போன்ற சாணார்களின் கம்பெனிகளில் வேலை செய்றீங்க? வேலையே தூக்கி எறிஞ்சிட்டு போகலாமே….நமக்கு சாதி தானே முக்கியம்…?
* மூவேந்தர்களும் மருத நில குடிகளே என்று நான் இங்கே கொடுத்த ஆதாரங்களுக்கு உங்கள் பதில் என்ன?
* பள்ளர்கள் இடையில் வந்தவர்கள் அல்ல அவர்கள் மூவேந்தர்கள் காலத்திலேயே அதே பெயரிலேயே வாழ்ந்துள்ளனர் என்று நான் நிறுவினால் மீசை எடுத்துக்க தயாரா?
* மறவர்கள் வந்தேறிகள் என்று ‘தேவர் தளம்’, ‘தினகரன்’ உட்பட பலரும் கூறியுள்ளனர். அவற்றை மேற்கோள் காட்டி நான் சொன்ன கருத்துக்கு உங்கள் பதில் என்ன?
* பிரமலைக் கள்ளர்களுக்கு உளவுத் தோளிலே தெரியாது…அவர்கள் திருட்டு தொழிலை விடுத்து, நாகரிக வாழ்வுக்கு நகர தொடங்கிய பின்பே அவர்கள் விவசாயம் சார்ந்த குடிகள் ஆகினர் என்று ஒரு ஆய்வுக் கட்டுரை ‘தேவர் தளைத்தில்’ இருக்கே…அதுக்கு உங்கள் பதில் என்ன?
* மறுத்த நில மக்களை மள்ளர்கள் என்று இலக்கியங்கள் சொல்லும் போது, அவர்களை ‘களமர்’ என்று திரித்து சொல்லும் அயோக்கிய தனத்தை பற்றி என்ன சொல்றீங்க…?
* எதுக்குப்பா தமிழ் கடவுள் முருகன் , (உங்க கூற்றுப்படி தெலுங்கன்), பள்ளனின் மகள் தெய்வானையை கட்டினார்? ஏன் இன்றும் மருவீட்டுக்கு பள்ள மடத்துக்கு போறார்? ஏன் கள்ள மடத்துக்கோ, மறவ மடத்துக்கோ போகல? உக்கிரபாண்டியன் என்று அறியப் பட்ட ‘முர்கனுக்கு’ பெண்கொடுத்து, கொண்டு கொடுப்பினையை வைத்துள்ள பள்ளன் எப்படி தெலுங்கன் ஆவான்?
**அப்படி ஒரு நீதிமன்ற தீர்ப்பு இல்லவே இல்லை..(அப்படி ஒன்று இருக்கிறது என எதையாவது காண்பித்து போலி தீர்ப்பு தயாரித்த வழக்கில் உள்ளப்போகாதே)
**ஓரிசா பாலு..என்கிற பாட்டாசு பாலு..யரிடம் இந்த ஆய்வை சமர்ப்பித்தார் என விவரங்கள் இல்லை.ஒரு வேளை பள்ளர் கிராமத்தில் சமர்பித்தாரா..(இவன்கள் பேசுவதெல்லாம் ஆதாரம்..அதை நீருப்பிக்க எந்த திராவிட தொல்லியல் துறையை அனுகினார்கள் என் தெரியவில்லை)
**மள்ளர் என்பதே ஜந்தாண்டிற்கு முன்பிருந்து உச்சரிக்கப்பட்ட பெயர்..பள்ளர் என்பதே பாரம்பரிய பெயர்..நாளை “காந்தி” என ஜாதி பெயரை மாற்றிக்கொண்டு இந்த நாட்டுக்கு விடுதலை வாங்கியதும் நாட்டை ஆண்டதும் பள்ளன் தான் என பொய் வரலாறு சொல்லலாம்..(தீர்க்கதரிசனமாக சொல்கிறேன் ! ..இதுவும் கடந்துபோகும் என்பதைப்போல மள்ளன் என்ற பெயரும் மாறும்!!
**தேவர்களுக்கு கோட்டா என்பதே திராவிட கட்சி ஆட்சிக்கு வந்த பின்புதான்..வந்தேறியான பள்ளனே எங்கள் விரிப்பணத்தில் கோட்டா அனுபவிக்கும் போது..தமிழ் மண்ணின் மைந்தர்கள் அனுபவிக்க முழுத்தகுதியும் உள்ளது..ஆமா..தீடிர் கண்டுபிப்பா..நீங்கதான் மன்னர் அப்படினு சொல்றீங்களே..அப்பறம் ஏன் காலர்சீப்..உட்கார்ந்தா இடஓதிக்கீடுநின்னா இட ஓதிக்கீடு உங்களுக்கு..???
**ஒரு தொழில் என்பது அதனில் வேலை செய்பவனை வைத்து வரும் நிகர லாபத்தில் 20 சதவீதத்தீற்கு குறைவாகவே சம்பளமாக தருகிறது..மென்பொருள் நிறுவனம் ஒரு தொழிலாளியை வைத்து ஏற்ப்படுகின்ற லாபத்தில் 5- சதவீதத்திற்கும் குறைவாகவே அந்த தொழிளாலிக்கு தருகிறது…இதன் அடிப்படையில் பார்க்கையில் அந்தநிறுவனத்திற்கு நாங்கள் தான் வருமானத்திற்கான வழியே அன்றி வேரேதுமில்லை!!! ( மென்பொருளில் தேவர்கள் வளர்ச்சி உங்க வயிர காந்துதுப்போல!!!)
**மருத நிலத்து வேந்தனைப்ப்ற்றிதான் பாடல் புகழ்கிறேதே தவிர மூவேந்தனும் மருதநிலமேனு சொல்லப்படவில்லை…( பாரியின் மகளை கவர சேர சோழ பாண்டிய மனனர்கள் ஓன்றுக்கூடி போரிட்டனர் என்று வரலாறு சொல்கிறது ஆக..சேர சோழ பாண்டிய மனனர்கள் ஒரு நாட்டின் தளபதிகள் இல்லை என்றால் ஒன்று சேர முடியுமா என சொன்னால் எவ்வளவு அபத்தமோ அவ்வளவு ஆபத்து உங்களின் திரித்து வரலாறு சொல்லல்)
** சரி அதே பெயருடன், பள்ளன் என்ற பெயருடன் வாந்தார்கள் என நீருபி..அப்புறம் நான் அப்படி சொல்லல… மள்ளன் சொன்னேன் தேவந்திரனு சொன்னேன் உழவனும் சொன்னேன்..புழுகக்கூடாது
**உனது தலித் முரசு நடத்தும் கூட்டங்கள் கருந்தரங்கம் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறேன்..கலந்துக்கொண்டுதானிருக்கிறேன்..எனது பெயரை தியாகுதேவன் என்றே கூறிப்பிடுவேன்..(வருகையாளர் பதிவை பார்)..
நாங்கள் பள்ளன் அல்ல பல்லன்..இதுவே சரி..பல்லவ மன்னன் நாங்கள்தான் என்று புளுகியது ஒரு காலம்!!
நாங்கள் பள்ளன் அல்ல தேவேந்திரன் இதுவே சரி என புத்தகம் போட்டு கூடி கூடி பேசியது ஒரு காலம்!!!
நாங்கள் தேவேந்திரன் அல்ல மள்ளன் இதுவே சரி என கருத்தரங்கம் நடத்துவது இக்காலம்..
எங்கள் தமிழ்சாதி நிரந்தரமான ஓன்று..அடிக்கடி பெயர் மாற்ற தடுமாற்றம் தமிழிக்கில்லை..எங்கள் மன்னர்களை தன் பெயரைத்தவிர அடைமொழி வைத்து மக்கள் அழைப்பது வழக்கம்..வந்தேறிகள் வரலாறை பார்த்தால் இந்த பெயர் மாற்றம் வரலாற்றில் நிறைய இருக்கும்!
**காவல் கோட்டம் நாவலின் ஆதாரமே பொதுமானது… ஒரு கிராமம் செய்யும் காவலை முறியடிக்க இன்னொரு கிராமம் கையாளும் யுக்தியே களவு கலை…
வேற்றுநாட்டு ஆநிரைகளை கவர்தல் என்பதும் வேற்று நாட்டு மக்களை மனரீதியாக இம்சிப்பதும் ராஜதந்திர யுக்தியான களவு மட்டுமே. எங்களை பற்றி எழுத ஆயிமாயிரம் விடயங்கள் இருக்கிறது பள்ளனை பற்றி எழுத என்ன இருக்கிறது பத்துகோத்தையும் பழைய துணியையும் தவிர..???
** எப்படி உன்னை நீயே மள்ளன் என் அழைத்து கொண்டாயோ பின்பு நீயே களமர் என சொன்னாலும் ஆச்சரீய படுவதற்கு ஒன்றுமில்லை!! ( அதெப்படியா.. பொய்யை சொல்லிட்டு உண்மை மாதிரியே டென்சன் ஆகுறீங்க…)நீ மள்ளன் அல்ல அது இடையில் நீயே தாயரிதது உனக்கு நீயே வைத்துக்கொண்ட பெயர்..!
** கருத்து 63.1 -ல் கடுங்கோன் சொன்னது கீழே
“””இனி முக்குல ஆட்கள் முருகன் தங்களது கடவுள் என்று சொல்லும் முன் கொஞ்சம் யோசிங்க….
“முருகன் யார் ?” http://thavaaivunaduvam.blogspot.in/2012/09/blog-post_27.html“””
இவ்வாறு முருகனை தேவர் கடவுள் என இழிவாக பேசிவிட்டு..இப்போது பள்ள மடம் வந்தார் என கதை வேறு(இவர்களுக்கு எட்குப்ப்பா மடம்..?) “””
இவ்வாறு கருத்து பதிவு 63.1 -ல் தமிழ் கடவுள் முருகன் தேவர்களுக்கு உரியது என ஒத்துக்கொண்டு..பின்பு அதே தமிழ் கடவுள் தாழ்ந்தசாதியை சேர்ந்தவன் பள்ளன் எனவும் திரித்து சொல்வது! யார்க்கு திருட்டு புத்தி என நீங்களே சுய பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் தோழர்களே!
இவர்கள் தேவர்கள் கலாச்சாரத்தை அவர்களது என கதை கட்டிக்கொண்டு..மன்னர் மாதிரி வேசம் போட பெரும் முயற்சி நடக்கிறது.. என்னதான் வேசம் போட்டாலும்..நாடகக்காரன மன்னா என்ற அழைப்பார்கள்!!
தியாகு, தேவர் என்ற பெயரை கடவுளா உங்களுக்கு கொடுத்தார்? தேவர் என்றால் கடவுள் என்ற பொருள் படுகிறதே அதுதான் உங்க ஜாதி பெயருக்கு விளக்கமா? தேவர்கள் என்ற கடவுள் உங்களிடம் பெண் கொடுத்தாரா இல்லை பெண் எடுத்தாரா? திருடன் தேவர் என்று வரலாறும் மாறும்போது பள்ளர் தேவேந்திரன் ஆகக்கூடாதா? இன்னும் என்ன வேண்டுமானாலும் எங்களுக்காக மாற்றுவோம்? இதற்கு முன் இதைத்தானே நீங்கள் செய்தீர்கள்? வேண்டும் என்றால் ஒன்று செய்யுங்கள் ஜாதி தெரியாதே ஒரு நகரவாசியோ இல்லை குழந்தையிடம் சென்று ஒருவன் விவசாயம் செய்தான் அவன் உயர்ந்தாவனா, இல்லை இன்னொருவனுக்கு சொல்லிகொள்ளும்படியாக எதுவும் இல்லை ஆனால் குலத்தொழில் அடியாள் வேலை, மற்றும் திருட்டு இவன் உயர்ந்தவனா என்று கேள்?
//திருடன் தேவர் என்று வரலாறும் மாறும்போது பள்ளர் தேவேந்திரன் ஆகக்கூடாதா? இன்னும் என்ன வேண்டுமானாலும் எங்களுக்காக மாற்றுவோம்?//
யாரும் எதையும் மாற்ற வேண்டாம்..உள்ளதை உள்ளபடியே சான்றோர் சபையில் வைப்போம்…பொய் புனைவிற்கு ஆயுள் ரொம்ப கம்மி….!!! இத்தனை நாக தேவர் என்றால் தாம் தான் என்று பொய் சொல்லித் திரிந்தவர்களுக்கு , அப்படி அல்ல என்று வெவேறு சாதி நபர்களில் புழங்கும் ‘தேவர்’ என்ற பட்டத்தை பற்றி இங்கு பட்டியல் இடப்பட்டது. இதற்க்கு அப்புறமாவது ‘தேவர்’ என்பது ‘சாதி’ அல்ல, ‘பட்டம்’ என்று உணர்ந்தால் சரி….!!!
கள்ளன்கள் படுத்துற பாடு போதாதுன்னு இந்த விஷயம் தெரியாத பள்ளர்கள் படுத்துற பாடு இருக்கே…. இஸ்….. ஏம்ப்பா…. முதலில் உனக்கான வரலாறு மட்டுமில்லாது அடுத்தவனின் வரலாற்றையும் படிக்க பள்ளர்கள் முயற்ச்சிக்க வேண்டும்…. தேவேந்திரன் என்பவன் தொல்காப்பியம் கூறும் தமிழர் வேந்தன்… பின்னாளில் வேந்தன்(இந்திரன்) தெய்வத்தின் நிலைக்கு உயர்த்தப்படும்போது “தெய்வேந்திரன்”(தெய்வம்+இந்திரன்) என அழைக்கப்படுகிறான்.. அதுவே தேவேந்திரன் எனத்திரிகிறது. சரி… பள்ளர்கள் ஏன் தேவேந்திரன் என கல்வெட்டுகளில் அழைக்கப்படுகிறார்கள்..? மருத நிலப் பள்ளர்களின் தலைவனே பள்ளனான வேந்தன்; அவனே தேவேந்திரன்… எனவே தேவேந்திரன் பள்ளர்குலத்தவன் என்பதால் பள்ளர்களும் தங்களின் அடையாளங்களில் புகழ் மிக்க தேவேந்திரனையும் கூறி அவனின் வழி வந்ததால் நாங்க தேவேந்திர குலம் என்கிறனர்….
சரி…. கள்ளன் எப்பொழுது தேவர் ஆனான்….? அவனுக்கு ஏப்பொழுது யாரால் அந்தப் பட்டம் கொடுக்கப் பட்டது….? எதுவும் இல்லை… குலயர்வுக்காய் திருடிக் கொண்டான் தேவர் எனும் பட்டத்தை…
ஆக எதையும் மாட்ட்ராமல் கூறினாலே உண்மை விளங்கும்….
//**அப்படி ஒரு நீதிமன்ற தீர்ப்பு இல்லவே இல்லை..(அப்படி ஒன்று இருக்கிறது என எதையாவது காண்பித்து போலி தீர்ப்பு தயாரித்த வழக்கில் உள்ளப்போகாதே)//
செங்கோட்டை மேலூரில் உள்ள மறவர்களை சொல்ல சொல்லுட்டுமா? அந்த தீர்ப்பை அடிப்படியா வச்சு ஆங்கிலேயே அரசு ‘பல்லன்’ என்பதை திருத்தி ‘பாண்டியன்’ என்று சாதி பட்டியல் வெளியிட்டதை இங்கே scan பண்ணி போடட்டுமா? இவ்ளோ ஆதாரத்தோட சொல்ற நான் பொய்…..வெறும் வாயிலேயே வடை சுடுற நீங்க ரொம்ப உண்மை பேசுறீங்க….சூப்பர்….!!!
//**ஓரிசா பாலு..என்கிற பாட்டாசு பாலு..யரிடம் இந்த ஆய்வை சமர்ப்பித்தார் என விவரங்கள் இல்லை.ஒரு வேளை பள்ளர் கிராமத்தில் சமர்பித்தாரா..(இவன்கள் பேசுவதெல்லாம் ஆதாரம்..அதை நீருப்பிக்க எந்த திராவிட தொல்லியல் துறையை அனுகினார்கள் என் தெரியவில்லை)//
தம்பி…நீ முதலில் வீடியோவை பாரு….அவரோட facebook ஐடியும் கொடுத்திருக்கேன்…..அவர் என்னத்தை கிளிச்சார்னு நீயே கேட்டு இங்க சொல்லலாமே…?
//**மள்ளர் என்பதே ஜந்தாண்டிற்கு முன்பிருந்து உச்சரிக்கப்பட்ட பெயர்..பள்ளர் என்பதே பாரம்பரிய பெயர்..//
இதை போய் இங்க சொல்லுங்களேன் பார்ப்போம்….!!!
http://www.thevarthalam.com/thevar/?p=1907
உங்க ரெண்டு பேருல யாரோ ஒருத்தர் பொய் சொல்றீங்க….நீங்களே பேசி அது யாருன்னு சொல்லுங்க…அப்புறம் மீதியை நான் சொல்றேன்…
//*மருத நிலத்து வேந்தனைப்ப்ற்றிதான் பாடல் புகழ்கிறேதே தவிர மூவேந்தனும் மருதநிலமேனு சொல்லப்படவில்லை//
அப்படின்னா தொல்காப்பியர் பொய் சொல்றாரு…நீங்க உண்மை சொல்றீங்க அப்படி தானே…தியாகு…? ஹா….ஹா….ஹா….
//சரி அதே பெயருடன், பள்ளன் என்ற பெயருடன் வாந்தார்கள் என நீருபி..அப்புறம் நான் அப்படி சொல்லல… மள்ளன் சொன்னேன் தேவந்திரனு சொன்னேன் உழவனும் சொன்னேன்..புழுகக்கூடாது//
தியாகுக்கு மீசை போக போகுது……ஐயோ பாவம்…..!!!கீழே படிங்க தியாகு….
“பள்ளர் என்பது உலக வழக்கு; மள்ளர் என்பது செய்யுள் வழக்கு.இரு சொற்களும் பள்ளமான மருத நிலத்தில் வாழ்பவர் என்னும் பொருள் ஒன்றே…” — மொழிஞாயிறு தேவநேய பாவாணர் (புத்தகம்: ‘மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கட்டுடைமை” பக். 125 , Ed .01 .04 . 1978 )
‘மள்ளர்’ தான் பள்ளர் என்று உங்க ஆளுங்க ஒத்துகிட்டு ரொம்ப நாளாச்சு…இப்போ அவங்க முக்குறது ‘மல்லன்’ என்ற வார்த்தைக்கு தான்…!!! இது கூட தெரியாம தியாகு….ஐயோ….ஐயோ….!!! மேலே சொன்ன லிங்கில் அவங்களே ஆதாரம் போட்டிருப்பாங்க….இருந்தாலும் என் பங்குக்கு போடுறேன்…
திருநெல்வேலி வரலாறு:
திருநெல் வேலி தலபுராணம்:
செய்யுள் 48 :
“மள்ளர்கள முதவாரிவய லெலாம் பரப்பிச்சாலி
யொல்லியவளை களூரவுழுபக டொருங்கு மோதப்
பள்ளநீலி டங்கடோரும் பண்ணை சூழ் வரம்பு தோறுந்
துள்ளிய கயலை மாதர் வழியென நினைந்து சோர்வார்”
விளக்கம்: மல்லர்கலாகிய பள்ளர்களின் வயலில் துள்ளுகின்ற மீன்களை மல்லத்தியரின் கண்களாக உவமை பாராட்டுவதாக மேற்கண்ட செய்யுள் கூறுகின்றது.
—————————————————————–
கோவலரைத் துயிலரங்க சரிதம்:
பக்: 159
செய்யுள் 29 :
“வெள்ள மோங்கி விரிந்து பரந்தெங்
கொள்ள கொள்ளையிற் கால்களிற் கூட்டியே
பள்ளர் மள்ளர் பறைகள் கறங்க மீன்
துள்ளத் துள்ள நீர் சேர்த்துச் செய் தூர்த்துவார்”
—————————————————————-
//நாங்கள் பள்ளன் அல்ல பல்லன்..இதுவே சரி..பல்லவ மன்னன் நாங்கள்தான் என்று புளுகியது ஒரு காலம்!!
நாங்கள் பள்ளன் அல்ல தேவேந்திரன் இதுவே சரி என புத்தகம் போட்டு கூடி கூடி பேசியது ஒரு காலம்!!!
நாங்கள் தேவேந்திரன் அல்ல மள்ளன் இதுவே சரி என கருத்தரங்கம் நடத்துவது இக்காலம்..//
மள்ளன்,தேவேந்திரன் எல்லாம் ஒன்னு தான் என்று தான் பேசி வந்தார்கள்….பல்லவ மரபினர் என்று பள்ளன் சொன்னான் என்பதற்கு என்ன ஆதாரம் பாஸ்….!!!
//** எப்படி உன்னை நீயே மள்ளன் என் அழைத்து கொண்டாயோ பின்பு நீயே களமர் என சொன்னாலும் ஆச்சரீய படுவதற்கு ஒன்றுமில்லை!! ( அதெப்படியா.. பொய்யை சொல்லிட்டு உண்மை மாதிரியே டென்சன் ஆகுறீங்க…)நீ மள்ளன் அல்ல அது இடையில் நீயே தாயரிதது உனக்கு நீயே வைத்துக்கொண்ட பெயர்..!//
கடையர் என்று அறியப்பட்டவர்களே ‘களமர்’ ஆவர்….அவர்களும் மருத நிலா குடிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…நான் எங்கும் மறுத்து பேசவும் இல்லை…!!! முக்குலத்தோர் தான் ‘கள’ என்ற வார்த்தை தங்களுக்கு தோதாக இருப்பதால் இலக்கியம் சொல்லும் மருத நில மக்களான மள்ளர்களை தந்திரமாக விட்டுவிட்டு ‘களமர்’ என்ற வார்த்தையை முன் வைத்தனர். பொய் பேசுறது, தந்திரம் பண்றது யார் என்று இனிமேலும் நான் சொல்லனுமா?
//இவ்வாறு கருத்து பதிவு 63.1 -ல் தமிழ் கடவுள் முருகன் தேவர்களுக்கு உரியது என ஒத்துக்கொண்டு..//
உனக்கு தமிழ் வரலைனா விட்டுடு…அதுக்கு ஏன் இப்படி தப்பு தப்பா புரிஞ்சிகிட்டு உளறுகிறாய்? ”
‘இனி முக்குல ஆட்கள் முருகன் தங்களது கடவுள் என்று சொல்லும்’ —
இதுக்கு அர்த்தம் என்ன என்பது உன்னை தவிர படிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும்…நீ வழக்கம்போல அங்கே என்ன எழுதிருக்குன்னு தெரியாமல் உளறுபவர் என்று எல்லாருக்கும் தெரியும்… இருந்தாலும் சொல்றேன்…!!!
” இத்தனை நாளா தமிழ் கடவுளான முருகன் உங்களது கடவுள் என்று சொல்லிக்கொண்டு வந்தீரக்லே…இனி முக்குல ஆட்கள் முருகன் தங்களது கடவுள் என்று சொல்லும் முன்பு யோசிங்க” — இது தான் அதோட அர்த்தம்…!!!
//**அப்படி ஒரு நீதிமன்ற தீர்ப்பு இல்லவே இல்லை..(அப்படி ஒன்று இருக்கிறது என எதையாவது காண்பித்து போலி தீர்ப்பு தயாரித்த வழக்கில் உள்ளப்போகாதே)//
* இப்படி ஒரு தீர்ப்பு இருப்பதை உங்களால் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை என்று தெரிகிறது தியாகு. புது தில்லியில் அரசு ஆவன காப்பகத்தில் அந்த நீதி மன்ற தீர்ப்பு இன்றும் இருக்கு. நீங்க புது டெல்லிக்கு டிக்கெட் எடுங்க தியாகு. நேரிலேயே போய் பாத்துட்டு வருவோம். இல்ல காசு செலவாகும்னு தெரிஞ்சா அந்த விஷயத்தை படிச்சி தெரிஞ்சுகிட்ட ஆளு இன்னும் இங்க உயிரோட தான் இருக்காரு. அவங்ககிட்ட பேசுறீங்களா?
* செங்கோட்டை மேலூர் மறவர்களிடம் இது பற்றி பேசுனீங்களா? எங்க பேசுனா உண்மை தெரிஞ்சுருமொன்னு பயமா? ஹா…ஹா…ஹா….
//செங்கோட்டை மேலூர் மறவர்களிடம் இது பற்றி பேசுனீங்களா? எங்க பேசுனா உண்மை தெரிஞ்சுருமொன்னு பயமா? ஹா…ஹா…ஹா….//
கடுங்கோன் பாண்டியன் அவர்களே…!
அறிவியலே ஆதாரத்தைத்தான் நம்புகிறது நீங்கள் கூறும் ஆதாரங்களை தாரளமாக வெளியிடுஙகள்…. அதன் மூலம் யார் பாண்டியன் என எந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கினர் என்பது தெரியவரும். மேலும் நாடார் சமுதாய மக்களையும் ” பாண்டிய குல ஷத்ரிய நாடார்” என அழைக்கிறார்கள்.நாடார் மக்கள் இலங்கையிலிருந்து வந்தவர் எனக் கூறினீர்கள் அதையும் சிறிது தெளிவு படுத்துங்கள்.
யார் ஆதாரத்தோட பேசுறா என்பது இங்கே படிக்கிற எல்லாருக்கும் தெரியும்…!!!
மேலும் அந்த தீர்ப்பை உறுதிப் படுத்தியது யார்…என்ற தகவலும் இங்கே கொடுக்கப் பட்டு இருக்கு…
அந்த தீர்ப்பு நகல் எங்கே இருக்கு என்ற விவரமும் இங்கே சொல்லப் பட்டு இருக்கு…
அந்த தீர்ப்பை அடிப்படையா வைத்து ‘பள்ளனே’ பாண்டியன் என்று ஆங்கிலேயே அரசு சாதி பட்டியல் வெளியிட்டுள்ளதை photo scaning மூலம் ஆவணப் படுத்தப் பட்டும் ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு’ என்று புத்தகமாக ஆகப் பட்டும் உள்ளது என்பதையும் இங்கே தெளிவாக சொல்லப் பட்டும் விட்டது…!!!
அந்த புத்தகத்தை எப்படி பெறுவது, அந்த ஆதாரங்களை மறுத்து எப்படி பரிசில் பெறுவது முதற்கொண்டு தெள்ளத் தெளிவாக கூறப் பட்டு விட்டது.
என் பங்கிற்கு இவ்ளோ செய்திர்க்கும் போது, உங்கள் பங்குக்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டாமா?
ஒன்னு அந்த புத்தகத்தை வாங்கி படிச்சி, ஆதாரத்தை உடைச்சி பரிசு வாங்குங்க… அப்படி இல்லைனா நான் சொன்ன gmail id (அது நான் இல்ல) , தொர்பு கொண்டு நீங்களே விஷயத்தை கேட்டு (ரொம்ப துல்லியமா) இங்கே தெரிவிக்கலாமே…?
எழுச்சி கவிஞர் காசி ஆனந்தன்
செந்தமிழன் சீமான்
டாக்டர். அவத்தி ராமையா – Tata Institute of Social Sciences
இன்னும் பலர்….
இப்படி எத்தனையோ பேர் ‘பள்ளர்’ தான் ‘பாண்டியர்’ என்ற தீர்ப்பை ஒப்புக்கொண்டு உள்ளனர்.
இன்னும் யாரெல்லாம் சொன்னா நம்புவீங்க தியாகு…?
ஜெயமோகன் சொன்னா நம்புவீங்களா?
நீர் சொல்வதற்கு ஆதாரத்தை கூறும். ஆதாரத்தோடு பேசுற கடுங்கோன் பாண்டியன் முட்டாள், ஆதாரம் இல்லாமல் வாயாலேயே வானூர்தி ஓட்டும் தியாகு புத்திசாலி.
ஆதாரத்தை அளித்தால் ஒன்று அதற்கு பதில் சொல்ல வேண்டும், இல்லை என்றால் அந்த ஆதாரம் பொய் என்று நிரூபிக்க வேண்டும். ரெண்டுமே இல்லாமல் வெறும் வாய்ச்சவடால் மட்டும் உமது பதிலில் தெரிகிற்து.
கடுங்கோன் பாண்டியன் தீர்ப்பின் நகலை ஸ்கேன் செய்து போடவா? என்று கேட்கிறார். தைரியம் இருந்தால் சவாலுக்கு ஒத்துக் கொள்ள வேண்டிதுதானே? ஏன் உண்மையாய் இருந்தால் மானம் போய்விடும் என்ற பயமா?
தியாகு,
நீர் சொல்வதற்கு ஆதாரத்தை கூறும். ஆதாரத்தோடு பேசுற கடுங்கோன் பாண்டியன் முட்டாள், ஆதாரம் இல்லாமல் வாயாலேயே வானூர்தி ஓட்டும் தியாகு புத்திசாலி.
ஆதாரத்தை அளித்தால் ஒன்று அதற்கு பதில் சொல்ல வேண்டும், இல்லை என்றால் அந்த ஆதாரம் பொய் என்று நிரூபிக்க வேண்டும். ரெண்டுமே இல்லாமல் வெறும் வாய்ச்சவடால் மட்டும் உமது பதிலில் தெரிகிற்து.
கடுங்கோன் பாண்டியன் தீர்ப்பின் நகலை ஸ்கேன் செய்து போடவா? என்று கேட்கிறார். தைரியம் இருந்தால் சவாலுக்கு ஒத்துக் கொள்ள வேண்டிதுதானே? ஏன் உண்மையாய் இருந்தால் மானம் போய்விடும் என்ற பயமா?
Dear SP Samy,
The below sharing is my response for you
Pasumpon Thevar’s Assembly speech in 1952 on the topic “ THE DEVELOPMENT OF HARIJAN” Rajaji was CM.
Thevar says :-
1. “The Caste named to people by their Profession, not by birth..this is history”..
2. “We all know that If the Harijan has rich life, then the upper caste people ready to engage with them for their son/daughter”
3. “This society keeps hesitation to have the relationship with poverty, If they became rich then ready to have a unite , which is applicable to all ”
4. “Whatever Properties in my name which belongs to my ancestors, not me. I am ready give my properties to poor in all level, I am promising you in the assembly” ( He did this in 1960)
5. “Urgent need is education for harijans, Only the wealthy harijans having the education, I can share my contribution with government for development of harijan who is under poverty”
(More things he spoken that day (1952) I am shred here whatever I have remember the words..and the meaning is exactly right)
I never ask my friends caste and I have 4 friends like you from school days, Still we having very close relationship, even I am in out of INDIA, several times, I have had food in their home.
In my Team, One guy like you and he was a gold medalist in his profession.. Every time, I have introduced him as a Gold medalist in meeting with white people who new for that session. He heard some incidents about non-touchable from his father he shared with me and he performed well really I have impressed to recommended for his promotion..I am not a aggressive in a caste system.. But some shows their caste mentality then I am in the position to give back. If someone makes falsehood then I need prove them. If I born like you then I will argue for you people, this is human mentality is it.??? Again I remember the Pasumpon Thevar’s Speech “”The Caste named to people by their Profession, not by birth..this is history”..
If my son ask about caste I follow you my friend, I respect the humanity and the sentiment
//“We all know that If the Harijan has rich life, then the upper caste people ready to engage with them for their son/daughter”
“This society keeps hesitation to have the relationship with poverty, If they became rich then ready to have a unite\\
If these are really the words uttered by Pasumpon Muthuramalingam, then I would say this person doesn’t deserve any quality to be called as a leader. He didn’t have any basic knowledge about our caste-driven society. His casteist tendency had glossed over his eyes and mind to accept the reality.
Dalits in our society are not depressed on their own but are suppressed by political and ideological machinations. Even if a dalit goes up in the economic ladder, he/she faces the insult. We all heard of an incident where water was sprinkled on the chair seated by a dalit judge on the eve of his retirement in Supreme Court. Can we also forget the incident in which the present Chief Minister refused to travel along with the late Congress Minister Arunachalam just because he happened to be a dalit. This is the stark reality of our society.
On the one hand he seemed to be welcoming dalits coming up in life. On the other hand he was spewing venom against the educated dalits as if they are blocking the way of poor dalits.
And to your humble attention– see your English. How horrible it is! How can you take a condescend stance that only dalits are uneducated. If a brahmin were to argue here, he would have made his points crystal clear. But you are not. Why? You are also in a way staying back in the caste ladder but only just above dalits. So stop taking a condescending position and accept the reality and love the people who are behind you.
No,it is not true.If someone becomes rich,they ll automatically be received better by the society.
அழகி படத்தில் கட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர். சிறந்த தெருக்கூத்து நடிகர். அவர் போகாத நாடில்லை, நடிக்காத பாத்திரம் இல்லை. ஆனால் இன்றும் கூட அவரது சொந்த ஊரில் செருப்பு போட்டுகொண்டு போக முடியாது. இதை அவரே பதிவு செய்திருக்கிறார். youtube link கிடைத்தால் தேடி இங்கு பதிவிடுகிறேன்.
ஆக, பொருளாதரத்தில் முன்னேறி விட்டால், சமுதாயம் உங்களை ஏற்றுகொள்ளும் என்பதெல்லாம் உண்மை தானா?
Avaru yen orrla poi pesuraaru, madrasla poi t nagarla flat vaangi irukka vendiyathu thaana?
pullaingala english medium schoolula padikka vaikka vendiyathu thaana?
I have been reading thro this thread. I don’t belong to any of the communities mentioned in this. However I want to ask one question…
What is the point in talking about other’s success? Just because few successful people belong to your community, it doesn’t mean anything to you as an individual. Why are you wasting time in fighting.. Noone will give you money/their wealth just because you are belonging to that caste. Also many of you are talking about History which is of no use. Today is important. And “what YOOOU are” is important for your life.. Nothing else…
“Better focus on your life and its improvement than wasting your time and energy”
No one will give you money/their wealth just because you are belonging to that caste – This version depicts true of life..
ஏன் நான் இந்த தெருவுல போக கூடாதா…?
ஆமாண்டா நீ கீழ் சாதி பய….
நீங்க மேல் சாதின்னு எப்படி சொல்றீங்க..?
நாங்க ஆண்ட பரம்பரைடா….மூவேந்தர் பரம்பரை….!!!
ஆனா ஊர் உலகம்,வரலாறு உங்களை அப்படி சொல்லலியே…?
என்னடா சொல்ற..?
(இங்க நடந்துகிட்டு இருக்கிற மாதிரியான விவாதம்)..!!!
ஆக சாதி பெருமையை வச்சி தான் எல்லா அட்டூழியமும் நடக்குது….அதுக்கு மூல காரணமான வரலாற்றை கேள்வி கேட்காமல் வேற எதை கேள்வி கேக்க சொல்றீங்க..?
பள்ளன்,மள்ளன்,தேவேந்திர குலத்தான்,பள்ளனே பாண்டியன் என அனைத்தையும் ஒருங்கே கூறும் ஆதாரங்களின் தற்போதைய எண்ணிக்கையை மட்டும் இங்கே பதிவிடுகிறேன். அவற்றில் ஒரு சிலவற்றை தான் இங்கே விவாதத்தில் பேசிக்கொண்டு இருக்கிறேன். மொத்தத்தையும் பேச நான் தயார். ஆனால் தியாகு போல ‘செல்லாது செல்லாது’ என்று ஒருவரியில் தட்டிகளிப்பது போல அல்லாமல், கற்றறிந்த சான்றோர் முன்னிலையில் இந்த அனைத்து ஆதாரங்களையும் மறுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு தொகை ‘மள்ளர் மீட்பு களம், தமிழ்நாடு’ வழங்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.
ஆதாரம்(எண்ணிக்கை):
கல்வெட்டுகள்(70 )
செப்பேடுகள்(20 )
நீதிமன்ற தீர்ப்பு(2 )
நில பத்திரங்கள்(24 )
அரசு ஆவணங்கள்(20 )
கள ஆய்வு புகைப்படங்கள்(169 ).
மறுக்கும் அடிப்படை ஆதரங்களுடன் நீங்கள் இவரை அணுகி பரிசில் பெறலாம்.
mannurimai@gmail.com
மேற்சொன்ன அனைத்து ஆதாரங்களும் ஆவணப் படுத்தப் பட்டு ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு’ என புத்தகம் ஆக்கப் பட்டுள்ளது. அதை பெற விரும்புவோர் மேற்ச்சொன்ன அதே gmail id க்கும் உங்கள் விவரத்தை தெரிவித்து பெற்றுகொள்ளலாம்.
Dear Kadungon Pandian,
With due respect, I would request you something.. Whether Pandian belong whichever caste, why are we giving so much of importance? How this will change our life? The knowledge/skill what you have can be better utilized for the betterment of you and the people around you.. rathar then proving some historical facts which might not help..
In my opinion, all the people are equal and good irrespective of their caste and origin. Let us think progressively rathen then proving who is better?
This is only my request not intended for hurting egos.
நீங்க எங்க இருந்து வந்தீங்கன்னு தெரிஞ்சா தான், இப்போ நீங்க எங்க நிக்கிறீங்க, அடுத்து நீங்க எதை நோக்கி போகணும் என்கிற தெளிவு கிடைக்கும்….!!! வரலாறு பேசுவது வெட்டி வேலை அல்ல….நாம் வாழ்ந்த வாழ்க்கையை சீர்தூக்கி பார்த்து காலத்தை பொறுத்து பின்பற்றுவதே….!!!
கடுங்கோன் பாண்டியன் அண்ணா விடாதீங்க….நீங்கள் சொல்லும் இந்த கருத்து எங்களுக்கு ஊட்ட சத்து, நாங்கள் எல்லா இடத்திலையும் பதிவு செய்வோம்.
வாழ்த்துக்கள்
பறையன், பாணன், துடியன், கடம்பன்
இந்நான்கல்லது வேறு சிறந்த குடியுமில்லை
– புறநானுறு 335 : 17 .18
நீங்க வேற புறநானூறே கப்சா, நான் கன்னிமாராவில் பாத்தப்ப இல்லவே இல்லனு தியாகு தென் ஆப்பிரிக்காவுல கத்துறாரு பாருங்க கேக்க்லையா உங்களுக்கு.
விடுங்க கருப்பன்… ஏன் இந்த வாறு வாருறீங்க…?
இத்தனை வருடங்கள் கழித்து ‘பள்ளனே பாண்டியன்’ அதை எந்த கொம்பனாலும் மறுக்க முடியாது என்று கொல்லம் நீதி மன்ற தீர்ப்பை மீண்டும் தமிழ் கூறும் நல உலகத்தில் பதிவு செய்தவர் மள்ளர் அந்ஞாடி பூமணி அவர்கள்… அவரிடம் ஜெயமோகன் நடத்திய நேர்காணலும், பூமணி அவர்கள் மள்ளர் பற்றி குறிப்பிடுவதையும் பேசுவதும் இங்கே காணலாம்.
http://www.jeyamohan.in/?p=22943
இது போன்ற சந்திப்புகளை தொடர்ந்து ஜெயமோகன் ‘சங்கரன் கோவில் கல்வெட்டு’ உட்பட ஆதாரங்களை வைத்து மள்ளர்,பள்ளர்,பாண்டியர் தொடர்பு பற்றியும், அவர்கள் எப்படி எல்லாம் வீழ்த்தப்பட்டும் நிலம் பறிக்கப்பட்டு விவசாய கூலிகள் ஆகினர் என்பதையும் புத்தகமாக எழுதி உள்ளார்.
The same article also says the Maravar padai of the pandiyar went to tenkasi.
நல்லது. இங்கே ‘மறவர்’ என்ற வார்த்தை குறித்து சில சந்தேகங்கள் உண்டு. சந்தேகம் மட்டுமே. அதனால் கோபித்துக்கொள்ள வேண்டாம்.
* ‘மறவர்’ என்ற வார்த்தை உண்மையில் இன்றுள்ள ‘மறவர்’ சாதி ஆட்களை மட்டுமே குறிக்குமா? இன்றுள்ள மறவர் தான் அன்றுள்ள ‘போர்’ மறவர் என்பதற்கு என்ன அடிப்படை ஆதாரம்? மருத நிலத்தில் ‘காலாடி’ என்று பள்ளனின் ஒரு பிரிவு உண்டு. அவர்களின் தொழில் தான் என்ன என்று தெரியுமா?
* பாலை நிலக் குடிகளும், களவுத் தொழில் செய்துவந்த ‘மறவரும்’, போர் ‘மறவரும்’ ஒன்றா? ஒன்று என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம். அப்படியானால் மன்னன் மருத நிலத்தை ஆண்டாலும், அவனிடம் போர் படைகள் ஏதும் இல்லையா? சரி இல்லை என்று வைத்து கொள்வோம். திடீர் என்று போர் வந்தால், பால நிலத்தில் உள்ள (போர்) மறவர்களுக்கு தகவல் சொல்லி அனுப்புவதற்குள் எல்லாம் முடிந்து விடுமே?
* எதற்கு பாண்டிய வேந்தன், களவுத் தொழில் செய்பவனை படை ஆட்களாக நியமிக்க வேண்டும்?
ஆக, எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும், பாண்டியனும், மறவனும் ஒன்று தான் என்று நிறுவினால் மட்டுமே நீங்கள் சொல்லும் ‘தென்காசி’ பற்றிய செய்தி உண்மை ஆகும். சொல்லுங்க…. இன்றைய மறவர் தான் அன்றைய பாண்டியனின் வாரிசு என்பதற்கான அடிப்படை ஆதாரம் என்ன?
Maravar belong to palai nilam,thats a statement.
Maravar means marakkadhavar,people who dont forgive or forget.
They did banditry/robbing and all,they did that because they lost their kingdom and patrons.
The whole of tirunelveli is the leeward side of the western ghats and the windward side of kollam/alleppy get ample rainfall whereas tirunelveli is rain shadow region.
That makes tirunelveli a palai region in parts and where the tamirabarani flows,it has irrigation capabilities.
Then why cant maravar live in this land.
I belong to tirunelveli,the only people who speak the tirunelveli slang differently are the brahmins and the nayakkar and we all know they are new migrants to this district.
Regarding who is the pandyan,pandyan dynasty got vanquished quite recently in the 14th century,i dont understand how it is so difficult to establish who is the real pandyan.
But honestly,why cant kallars and agamudayars who belong to the marutha nilam fight for the chola kings there?
why should the maravars come from tirunelveli?
Thats why i said Saiva Pillaimaar,Konar,Maravar,Nadar & Pallar all belong to souther tamizhnadu equally.
You mentioned so many things including the travancore court ruling about maravars,what authority does a travancore court has to rule about maravars/pallars?
secondly,whats the basis of the report?
I dont know who gets to be the pandian ancestry but since the ancestry existed till recently,why would the maravars get more political power than the pallar?
why do maravars enroll more in the army compared to pallars including the Subash Chandra Bose’s INA?
why do maravars,along with other velallar castes like vanniyar,kounder etc are called kshatriyas whereas pallars are not?
why do pallars convert to christianity more than maravars?
//They did banditry/robbing and all,they did that because they lost their kingdom and patrons.//
இதுக்கெல்லாம் எத்தனை தடைவாங்க பதில் சொல்றது….?
நீங்க ஆண்ட பரமபரை என்று சொல்வதெல்லாம் நாயக்கருக்கு அப்புறம் தான்னு நாயக்கரே சொல்லிருக்காரு…அதையும் இங்க பதயுவ் பண்ணி யுர்க்கேன்…
உங்கள் குலத் தொழில் களவு என்பதை நிறுவதற்கும் எத்தனையோ ஆதாரங்களை இங்கே அடுக்கி இருக்கேன்….!!!
அப்படின்னா அவங்க எல்லாரும் (நாயக்கர் உட்பட) பொய் சொல்றாங்களா?
இங்கு மள்ளரியம் பற்றி எமக்கு தெரிந்த விசயங்களை பற்றியும், அதை விமர்சித்தோ, அல்லது தாம் தான் மூவேந்தர் வாரிசுகள் என்று கூறி சாதி பேதம் பார்க்கும் புல்லுருவிகளின் வரலாற்றை விமர்சிப்பதர்க்குமே சில பல செய்திகளை இங்கே பர்கிந்து கொண்டேன். இதன் நோக்கம் ‘நாங்கள் தான் மூவேந்தர்’ என்று பீற்றிக் கொள்ளவோ, சாதி பேதம் பார்த்து யாரையும் ஒதுக்கவோ, தாழ்த்தி நடக்கவோ அல்ல. யாம் இங்கே எடுத்து வைத்த கருத்துகளே இறுதியான கருத்துகளும் அல்ல. அனைத்தும் விவாதத்திற்கு உரியவை. விமர்சனத்துக்கு உரியவை. அதை இங்கே கொண்டு வந்து சேர்த்த ஒரு வரலாற்று மாணவன் மட்டுமே நான். எனவே யார் மனதாவது புண் பட்டிருந்தாலோ, காயப் பட்டிருந்தாலோ அடியேனை மன்னிக்கவும்.
கடுங்கோன் பாண்டியன் அவர்களே…!
அறிவியலே ஆதாரத்தைத்தான் நம்புகிறது நீங்கள் கூறும் ஆதாரங்களை தாரளமாக வெளியிடுஙகள்…. அதன் மூலம் யார் பாண்டியன் என எந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கினர் என்பது தெரியவரும். மேலும் நாடார் சமுதாய மக்களையும் ” பாண்டிய குல ஷத்ரிய நாடார்” என அழைக்கிறார்கள்.நாடார் மக்கள் இலங்கையிலிருந்து வந்தவர் எனக் கூறினீர்கள் அதையும் சிறிது தெளிவு படுத்துங்கள்.
* கமெண்ட்டு எண் 116 ஐ பார்க்கவும். இதுவரை யாம் இங்கே தொத்தளித்த ஆதாரங்கள் அனைத்தும் இன்னும் விவாதத்திற்கு அபப்டியே இருப்பதால், சிரமம் பார்க்காமல் மேலே சொன்ன gmail id க்கு தொடர்பு கொண்டு, அது தொடர்பான ஆதாரத்தை நீங்களே பெற்று இங்கு வெளியிடலாமே…?
* முடிஞ்சா அந்த புத்தகத்தை வாங்கி அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சி, 10 லட்ச ரூபாயை பரிசா வாங்குக பாஸ்….!!!
* நான் வெறும் நொள்ளை நொட்டை தான் சொல்லுவேன் என்று நீங்கள் ஒப்புகொள்ளும் பட்சத்தில் அந்த ஆதாரங்களின் link இங்கே தரப்படும்.
// தேவேந்திரன் குலத்தார்(17) என்று பட்டியல் இனப்பட்டியளில் உள்ளது .இதற்க்கு பதில் உண்டா?… தேவேந்திரன் குலத்தார் பள்ளர்களீன் உட்பிவுகளில் ஒன்று…..//
98 ல ஒரு கேள்வி
இந்திரன் தமிழ்க்கடவுளா….?
தேவேந்திரன் என்பது தமிழ்ப்பெயரா…?
க்ட்ட்ப்://ட.நிகிபெடிஅ.ஒர்க்/ச்/fக்ம்
எந்தப்பெயர் உயர்வு தருகிறதோ அதை எந்த மொழியாக இருந்தாலும் நீங்கள் பயன்படுத்தலாம்.. நீங்க தமிழன் ஆக முடியும்?
மற்றவங்க அயல் கிரகவாசிகள்!!!! நல்லா இருக்கு சார்………
அய்யா, நீங்கதான் ஆண்ட பரம்பரை போதுமா….. எனக்கு தெரிந்து கலெக்டர் ஆபிஸ் ஒத்த கையெழுத்துக்கு மணடைய சொரியாம மீசைய முறுக்கி கேளுங்க…. மிகத்தெளிவா விவாதத்தை திசை திருப்புகிறீர்கள்……உங்க சாதி திமிறு ஜெயலலிதாவிடம் செல்லுபடி ஆகுமா?
//இந்திரன் தமிழ்க்கடவுளா….?//
முருகன் மாமனார், தேவானையின் அப்பா ‘இந்திரன்’ ஆரியரா? அப்படி என்றால் முருகன் ஆரியரா?
//தேவேந்திரன் என்பது தமிழ்ப்பெயரா…?//
அது ‘தெய்வ இந்திரன்’….காலப்போக்கில் ‘தேவேந்திரன்’….இவ்விரு பெயர்களும் ஒரு பொருளைத் தரும்படி ,ஒருவரை குறிக்கும்படி மாறி மாறி பயன்படுத்தப் பட்டும் வந்துள்ளது….அவ்வளவே…..!!! கீழே இருக்கிற ‘சங்கரன் கோவில்’ கல்வெட்டை கொஞ்சம் படிங்க…
————-
திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்ப்பக்கம் உள்ள கல்வெட்டு
”
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . ”
—- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் 2, எண் 863ஃ பக்கம் ௮௦௩
——————–
இந்திரன் தமிழ்க்கடவுளா….?
SEE THIS………
http://thavaaivunaduvam.blogspot.in/2012/09/blog-post_27.html
மருத நிலத்தின் தெய்வமாகத் தொல்காப்பியத்தால் குறிப்பிடப்படும் ‘வேந்தன்’ இந்திரனே என்பதற்கு இது குறித்த கருத்துத் தொடர்ச்சியே ஆதாரமாக அமைகிறது. தமிழிலக்கண நூல்களும் நிகண்டுகளும் பள்ளு போன்ற சிற்றிலக்கிய நூல்களும் தொடர்ந்து ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகிற கருத்தே இதற்கு உறுதியான சான்றாகத் திகழ்கிறது. போரில் வீர மரணமடைவோர் இந்திர உலகத்திற்குச் சென்று அமிழ்தம் உண்பர்; போகம் நுகர்வர் என்பன போன்ற நம்பிக்கைகள் மக்களிடையே நிலவின என்பதற்கு ‘இந்திரர் அமிழ்தம்’ (புறம். 182) வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலில், அமரனான ஆய் மன்னனை வரவேற்கும் வகையில் ஆர்ப்பு எழுந்தது (புறம். 241) போன்ற சங்க இலக்கியக் குறிப்புகள் ஆதாரமாக உள்ளன. சொர்க்கபோகம் பற்றிய இந்நம்பிக்கை திருக்குறள் காலத்திலும் தொடர்ந்து நிலவிற்று. திருக்குறள் காமத்துப்பால் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் (பா. 3) இடம் பெற்றுள்ள, ‘தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிது கொல் தாமரைக் கண்ணானுலகு’ என்ற குறளில் குறிப்பிடப்படும் தாமரைக் கண்ணான் உலகு என்ற தொடருக்கு ‘இந்திரர் உலகு’ என்றே மணக்குடவர் உரை எழுதியுள்ளார். இதுவே பொருத்தமான உரையாகும்.1
http://www.sishri.org/indran.html
ஏழை பிராமணனும், ஏழை தேவரும் மற்ற பல ஆதிக்க சாதிகளில் ஏழைகளும் வாழும் வாழ்வு, ஒரு தலித்தை விட பெட்டெர் தான். சண்டை போடுவதை விட்டு விட்டு கேவலப்பட்டு வாழ்பவர்களை உயர்த்தினாலே போதும். சாதி ஒழிப்பு சாத்தியமில்லை, அதனால் இதையாவது செய்வோம். நம் நாட்டில் தனி மனித ஒழுக்கமும் அரசாங்க ஆட்சி திறமையும் இல்லை, அதுவே மூல காரணம். தமிழ் சினிமா போன்ற காப்பி அடிக்கும் மொக்கைகளுக்கு நம் நேரத்தை வீணடிக்கவேண்டாம்.
You know how poor people live lives today?
Regardless of caste,poor people suffer more than a rich dalit.
dont bullshit here.
ராஜராஜ சோழ தேவர், சுந்தரபாண்டியத்தேவர் என்று பல கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கூறுகின்றன.தேவர்தான் சோழரும், பாண்டியரும் என்பதற்கு ஆதாரம் இதுதான். தேவர் என்பது பட்டம். அதுக்கும் கள்ளர்-மறவர்-அகமுடையார் எனும் மூன்று வேறுபட்ட திருட்டை குல தொழிலாகக் கொண்ட சாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.இலக்கியங்களிலோ வரலாற்றிலே எங்குமே கள்ளர்களுக்கு தேவர் பட்டம் எவராலும் வழங்கப்பட்டது இல்லை. ஆனால் தேவர் பட்டம் கொண்ட வேந்தர்கள் குடும்பர், மள்ளர் என குலப் பெயர்கொண்டு பல கல்வெட்டுகளும் இலக்கியங்களும் உண்டு.
கடுங்கோன் பாண்டியன் ….அருமை மிகவும் அருமை.. தியாகு மூக்கு எங்க கிடக்குனுனு தெரியலையே….. ஹா ஹா ஹா ஹா……………..
கடுங்கோன் பாண்டியன் ….அருமை மிகவும் அருமை.. வாழ்த்துக்கள்…..கடைசி வரைக்கும் கள்ளன், மறைவன் ,சேர்வை, சமூகத்தை சேர்ந்தவர்களும் தியாகுவும் தேவர் தான் மூவேந்தர் என்பதற்கு ஒரு ஆதாரம் கூடதரவில்லையே……
ராஜராஜ சோழ தேவர், சுந்தரபாண்டியத்தேவர் என்று பல கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கூறுகின்றன.தேவர்தான் சோழரும், பாண்டியரும் என்பதற்கு ஆதாரம் இதுதான். தேவர் என்பது பட்டம். அதுக்கும் கள்ளர்-மறவர்-அகமுடையார் எனும் மூன்று வேறுபட்ட திருட்டை குல தொழிலாகக் கொண்ட சாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.இலக்கியங்களிலோ வரலாற்றிலே எங்குமே கள்ளர்களுக்கு தேவர் பட்டம் எவராலும் வழங்கப்பட்டது இல்லை. ஆனால் தேவர் பட்டம் கொண்ட வேந்தர்கள் குடும்பர், மள்ளர் என குலப் பெயர்கொண்டு பல கல்வெட்டுகளும் இலக்கியங்களும் உண்டு.
பெருமாள் குடும்பன்.. பெயர் மட்டும் பெருமாள் குடும்பன் என்று வைத்துக் கொண்டால் போதாது. அதற்க்கு நாம் தகுதி வாய்ந்தவரா என்பதைப் பார்க்க வேண்டும். நம் தகுதியை அதற்குத் தகுந்தாற்போல உயர்த்திக்கொள்ள
முயற்சிக்க வேண்டும். தேவர் என்று மூவேந்தர்கள் அழைக்கப் பட்டனர் என்பது தெரிந்தும் கள்ளனை தேவர் என்று அழைத்தால் உங்களுக்கு இருக்கும் அறிவை நினைத்து புல்லரிக்கிறது. சிறிதாவது சமூக அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள இனியேனும் முயற்ச்சியுங்கள்…. அப்படி இல்லையேல் இவ்வாறான பொது இடங்களில் நீங்கள் அசிங்கப்படுவதோடு அல்லாமல் இனத்தையும் அசிங்கப்படுத்தாதீர்கள்.
கடைசி வரைக்கும் கள்ளன், மறைவன் ,சேர்வை, சமூகத்தை சேர்ந்தவர்களும் தியாகுவும் தேவர் தான் மூவேந்தர் என்பதற்கு ஒரு ஆதாரம் கூடதரவில்லையே……
கள்ளன் மறவன் சேர்வை இவங்களுக்கு எப்பவுமே இந்த வாயால வடை சுடுறதே வேலையாப்போச்சு….. அதற்கு தியாகுவே சரியான உதாரணம்…..
அய்யா அந்த படம் வெரும் 5 கோடிகு எடுத்து அதை 35 கோடீக்கு வித்தாச்சு …
அப்பா பரமகுடி நா இம்மனுவேல் சேகரன் படம் காட்டலாம் ஆனா உசிலம்பட்டிநா காட்டா கூடாது ..
படம் பிடிகாலையா போகதா … 50 வருஷ தமீழ் சினிமாவலா படம் பார்து பலா காந்திகா இருகுரான்க
கார்த்திக் அவர்களே !
உங்களை மாதிரிதான் அரசாங்கமும் நினைக்குது .சாதியை எல்லாம் ஒழிக்கமுடியாது.தண்டிக்க சட்டம் இருந்தாலும் தண்டிக்க முடியாது.எனவே தீண்டாமை இல்லாத ஊருக்கு பரிசு அளிக்கப்படும்.
ஏன் சாத்தியம் இல்லை ? என்று மறுபடியும் நீங்கலே கேட்டு பாருங்கள். ஆதிக்க சாதிக்கு அது சாத்தியம் இல்லை என்றுதான் பதில் வரும். அடிமை சாதிகளுக்கு அது சாத்தியம் என்று வரும்.ஏன் எனில் ஆதிக்க சாதிக்கு தனது பொருளாதரத்தை ,வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள மட்டுமே போரடவேண்டி இருக்கும்,ஆனால் அடிமை சாதிகளுக்கோ ஆதிக்க சாதிகளையும் சேர்த்து எதிர்த்து போராடவேண்டி இருக்கிறது.
எனவே சாத்தியம் இல்லை என்று நழுவிக்கொள்வது சாதிகளை வளர்பதற்கு துணை போவதாகும்.
நந்தனை எறித்துகொன்ற தில்லையிலே தமிழில் தேவாரம்,திருவாசகம் பாடமுடியாத காலங்காலமாக இருந்து வந்த தீண்டாமை நிலையை ஒழிக்கப்பட்டுள்ளது.சாத்தியமாகி உள்ளது.
ஆர். தியாகு நண்பருக்கு
பெருமை மிகவும் பெருமை!!!
ஹா ஹா ஹா……………ஹா ஹா ஹா…………ஹா ஹா ஹா…………….
உண்மை சரித்திரத்திர்கு ஆதாரம் தேவை இல்லை!
பெருமாள் குடும்பன்?
கடுங்கோன் பாண்டியன் சாதி கொள்கை பரப்புச்செயலாளரா பணிக்கு போனா நல்ல சம்பளம் கிடைக்கும்! ஏம்ப்பா தமிழ 247 எழுத்தையும் மாத்தி மாத்தி எழுதுனா வரலாறு மறையாது!!!..
ஏன் இந்த வெட்டி வேல?………….
ஆர். தியாகு நண்பருக்கு நன்றி!
தியாகு என்ன கிளிச்சாறு,உங்க ஆளுங்க என்ன கிழிச்சாங்க என்று இங்க மொத்தம் பதிவான கமெண்ட்டுகளை படிச்சிட்டு படிக்கிறவங்க முடிவு பண்ணிக்குவாங்க….!!! நீங்க உங்க தரப்புல என்ன சொல்ல வரீங்க..அதை சொல்லுங்க…
//உண்மை சரித்திரத்திர்கு ஆதாரம் தேவை இல்லை!
பெருமாள் குடும்பன்?//
நீங்க ஒபாமாவுக்கு ஒன்னு விட்ட சித்தப்பான்னு கூட சொல்லி, ‘அதான் சொல்லிட்டேனே…அது தான் உண்மை…ஆதாரம் தேவை இல்லைன்னு’ கூட சொல்லலாம்…!!!
அதை அதை கேக்குற யாரும் கேனயன் இல்லையே?
தோழர் தியாகு மிக அருமை.
வாழ்த்துக்கள் தியாகு உங்கள் பயணம் வெற்றிபெறட்டும் தேவர் இனம் உங்களுக்கு துணை இருக்கும்.
//“முருகனின் வேல் இன்றைக்கு இருக்கும் அனுகுண்டுவைவிட சக்தி வாய்ந்தது அதை முருகபெருமான் ஏவும் போது அரசுரர்கள் ஒரு நொடியில் மாய்ந்தார்கள்” என்று சொன்னதை …திரித்து சாதி வெறி பத்திக்கை இப்படி செய்தி போட்டது…..//
இதை விட,
//“முருகன் அணுகுண்டு வீசினார் தேவர் பேச்சு”//
இது எவ்வளவோ தேவலை என்று type பன்னும்போதாவது உங்களுக்கு தெரியவில்லையா தியாகு…?
முருகப் பெருமான் சூரர்களை தானே பாஸ் கொல்வாறு….? நீங்க எங்கையாவது ‘அசுர சம்காரம்’ கேள்வி பட்டு இருக்கீங்களா? அசுரன் என்றால் தமிழன் என்று கூடவா முத்துராமலிங்கத்துக்கு தெரியாது…?
“வரலாறு என்பது ஊர் மெய்க்கும்படி பேசுவது, தமக்குத்தாமே பேசி புகழ்வது வரலாறு கிடையாது! இப்படித்தான் இருக்கிறது கடுங்கோன் பாண்டியன் கூற்று!”.
//“வரலாறு என்பது ஊர் மெய்க்கும்படி பேசுவது, தமக்குத்தாமே பேசி புகழ்வது வரலாறு கிடையாது! //
வெறும் வாயிலையே வடை சுட இன்னும் எத்தனை பேரு தான் வருவீங்கன்னு நானும் பாக்குறேன்…!!!
உனக்கு என்னடா வரலாறு இருக்குன்னு கேக்குறது….
பதில் சொன்னா, எதுக்கு உன்னோட வரலாறை நீ பேசுறான்னு சொல்றது…!!!
என்ன தாம்பா உங்க பிரச்சனை…?
மல்லன் என்ற தமிழ் சொல்லுக்கு மன்னர் என்பது பொருள்,நீங்க வெறும் பள்ளன்…
சாதி பெயரை மாற்றுவதால் சரித்திரம் மாறி விடாது,
தந்தை பெயரை மாற்றுவதால் தரித்திரம் நீங்கி விடாது.
இந்த மாதிரி கத்துக்குட்டி தனமா பேசுறதுக்கு முன்னாடி இங்கே இதுக்கு முன்னாடி என்ன என்ன விவாதிக்கப்பட்டு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு பேசுங்க….!!!
திரு.தியாகு அவர்களே!அருமையான வாதம்…ஆனால் ஒரு சிறு விஷயம்,
உலகுக்கு தெரியும்,ஊருக்கு தெரியும்,உங்களுக்கும் தெரியும்,அவர்களுக்கும் தெரியும்…இங்க ஆண்டபரம்பரைன்னு பீலா விடுறவன்,ஒரு சமஸ்தானத்தை காட்ட சொல்லுங்க…இங்கு பேசுவது அவர்களுக்கு ஒரு ஆறுதல்,பேசிட்டு போகட்டும்,
நம்மை எதிர்ப்பதால் அவர்களுக்கு பெருமை,
அவர்களை எதிர்ப்பது நமக்கு சிறுமை.
சரித்திரம் மாற்றப்பட்டாலும்,
சலுகைகள் மறுக்கப்பட்டாலும்,
சட்டத்தில் எதிர்க்கப்பட்டாலும்
சிங்கம் சிங்கம் தான்,
//உலகுக்கு தெரியும்,ஊருக்கு தெரியும்,உங்களுக்கும் தெரியும்,அவர்களுக்கும் தெரியும்…இங்க ஆண்டபரம்பரைன்னு பீலா விடுறவன்,ஒரு சமஸ்தானத்தை காட்ட சொல்லுங்க…//
நீங்க ரொம்ப லேட் பாஸ்…..இங்க விவாதம் வேற மாதிரி போயிட்டு இருக்கு…..!!!
பரமக்குடியில் கூட இப்படி தான் பண்ணங்க,துப்பாக்கி சூடு நடக்கும் வரை சோழர் பரம்பரைன்னு(!) சொன்னங்க,சுட்டவுடன் தலித் மீது துப்பாக்கி சூடுன்னு நீலி கண்ணீர் வடிச்சாங்க…
பரமக்குடி சட்டமன்ற தொகுதில முக்குலத்தோர் பெரும்பான்மையா இருக்கோம்,துப்பாக்கி சூட்டிற்கு பிறகும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க வென்றது இது ஒரு நல்ல ஆதாரம்..ஆனால் இன்னும் தலித் மட்டும் போட்டியிடும் தனி தொகுதியாக உள்ளது,அதை பொது தொகுதியாக மாற்ற வேண்டும்.
125 எம்.எல்.ஏ….13 எம்.பி…..7 மத்திய மாநில அமைச்சர்கள்…10 உயர்நீதிமன்ற நீதிபதிகள்….201+38 போலீஸ் உயர் அதிகாரிகளில் 73 அதிகாரிகள்…7 மாவட்ட ஆட்சியர்கள்….5பல்கலைக்கழக துணைவேந்தர்கள்….5 அரசு செயலாளர்கள்..தமிழகத்தை அன்று அரசர்களாய் ஆண்டோம்..இன்று அரசியலாய் ஆள்கின்றோம்..
இனிய சொந்தம் தியாகு..இனிமேல் தோழர் என்றொ உறவு முறை சொல்லியோ கருத்துக்களை வெளியிட வேண்டாம்.
(ஈழம் அமையாத பட்ச்சத்தில்), இன்னும் 100 வருஷம் கழிச்சு சிங்களவன் கூட உங்களை போலத்தான் சொல்லுவான்…ஆனால் உண்மை வரலாறு என்பது என்ன என்று தான் அனைவருக்கும் தெரியுமே…!!!
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியலைனாலும் இந்த வறட்டு சாதித்திமிருக்கு மட்டும் கொறச்சல் இல்லை. உங்க வாய்ச்சவடாலில் விசயம் இல்லை என்பது வினவு வாசகர்களுக்கு நன்றாக புரிந்து விட்டது. ஒடுக்கப்பட்டவர்கள் மீண்டு வருவதை தடுக்க முடியாது. ஆனால் எந்த வழிமுறையில் என்பது முக்கியம். ஒடுக்கப்பட்டவர்களின் மீட்சி ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் எழுச்சியின் மூலம் தான் சாத்தியம்.
முப்பது,நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் பார்ப்பனர்கள் நாங்கள் பெரிய ……..கள் என்று கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று அவர்களின் கொட்டம் (பார்ப்பனியம் முழுமையாக ஒழிக்கப்பட்வில்லையெனினும்)அடக்கப்பட்டுவிட்டது.
அது போல ஆண்ட பரம்பரை, ஆதிக்கசாதித் திமிரெல்லாம் உழைக்கும் மக்களின் எழுச்சித் தீயில் எரிந்து சாம்பலாவது நிச்சயம்..
கடுக்கா..நாரிக்கிணறு பத்தி சொல்லுச்சு..அது நாரிக்கிணறு இல்ல நாரைக்கிணறு…அங்கு 400 பள்ளன் குடும்பம் இருக்கு..
அந்த நாரைக்கிணறுல 30 தேவர் குடும்பம் இருந்தார்கள்..நாரைக்கிணறு பள்ளி தலைமை ஆசிரியர் 1998ல் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 19 பேரால வெட்டிக்கொல்லப்பட்டார்…அதற்கு பிறகு போலிஸ் அறிவுரைப்படி 30 குடும்பங்களும் மணியாச்சிக்கு குடியேறினார்கள்…நாரைக்கிணறு தேவர் வகையறா என்று அவர்கள் வாழும் வாழ்க்கை மிக வழமானது…ஆனால் கொலை செய்த 19 ல 2 அதற்கு பிறகு கொல்லப்பட்டுச்சு…வழக்கு நடத்தமுடியாமல் ஒண்ணு தற்கொலை பண்ணுச்சு…போய் பாத்தா தெரியும்…..அவருகளுடைய வாழ்வு நார்நாராக கிழிக்கப்பட்டது..
We Mallars never cry in the name of Dalith. Mallar youth are trying hard to remove
the tag in every possible way.Now a days each and every mallars are realizing who we are and what our legacy.In every aspect Kallar,Maravars showing their inability to bring any constructive points.They are going violent and they are trying to manipulate the History.
In any Civilization a dominating community looses their Lands,Pride in War.Now Mallars are coming back.Since Genetically Vanniyars and Mallars Are Same,If we Work together in Policitical & Social Space,We can regain our Place.
I have many complaints with Kallan,Malaravan Caste.There is no constructive things happening in your community.No big Role models,Genuine People,No any Model Companies built,No unity amoung your community people too.Mostly No Intellectuals to lead your people.Most of them has false pride,If we ask that pride,You people turn Violent. Paramakkudi issue completely tailored by your people.This is really a shame for
any Civilized society.The world is changing very fast.Realize that.Madurai or Andippatti
is not the world! If each and every one of your society change your mindset,Everyone will
appreciate.Otherwise,The other society surely avoid to mingle!!
As a Mallar,We are realizing our pride not to insult others,Our history and legacy helps
us to become a better civilized Society!!!
நண்பர்களே,
இந்த விவாதம் அர்த்தமே இல்லாத ஆண்டபரம்பரை எனும் வெற்று பெருமை பேசும் உதாராக நீர்த்துப் போய்விட்ட படியால் பின்னூட்ட பெட்டியை மூடுகிறோம்.
சாதி ஆதிக்கமும், ஆதிக்க வெறியும் இணையம் வரையிலும் செல்வாக்கோடு இருக்கிறது என்பது உண்மையானாலும், அதற்கெதிரான நமது போராட்டமும் தொடரும்.
பிறிதொரு சந்தர்ப்பத்தில் இந்த ஆண்ட பரம்பரை குறித்து எழுதுகிறோம்.
நன்றி.