privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்கவர்னர் மாளிகை முற்றுகை! வழக்கறிஞர்கள் போராட்டம்!

கவர்னர் மாளிகை முற்றுகை! வழக்கறிஞர்கள் போராட்டம்!

-

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மார்ச் 20ம் தேதி ஆளுனர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.

முழக்கங்கள்:

ழக்கறிஞர் ஒற்றுமை ஓங்குக!
ஈழமக்களுக்கு எதிரான
இனப்படுகொலையை கண்டித்து
வழக்கறிஞர் போராட்டம்!

இனப்படுகொலை குற்றவாளி
இராஜபக்‌ஷேவின் பங்காளி
இந்திய அரசின் பிரதிநிதி
தமிழக ஆளுநர் மாளிகையை
முற்றுகை போராட்டம்!

ஈழத்தமிழ் மக்கள் மீது
இலங்கை அரசின் போர்க்குற்றத்தை
இன அழிப்பு குற்றமாக
அறிவித்து நடவடிக்கை…
இன அழிப்பு குற்றத்திற்கு
பன்னாட்டு விசாரணை !
ஈழத்தமிழ் மக்களின்
பிரிந்து போகும் உரிமையை
சுயநிர்ணய உரிமையை
தீர்மானிக்கும் பொதுவாக்கெடுப்பு !

இதற்கு குறைவாய் தீர்வு எதையும்
ஏற்க மறுப்போம் ! ஏற்க மறுப்போம் !!

இலங்கை அரசின் இனஅழிப்பை
கேள்வி ஏதும் கேட்காமல்
இலங்கை அரசினை மறைமுகமாக
பாதுகாக்கும் தீர்மானத்தை
அமெரிக்காவின் தீர்மானத்தை
புறக்கணிப்போம்! கிழித்தெறிவோம்!!

வீடுவாசல் சுற்றமிழந்து
பெற்றபிள்ளை சொந்தமிழந்த
ஈழத்தமிழனின் கோரிக்கை
சோறல்ல துணியல்ல
சுதந்திர உரிமையடா..!

இலங்கையின் இனஅழிப்புக்கு
ஆயுதம்தந்து, ஆலோசனைதந்து
இன்றும் இலங்கையை பாதுகாக்கும்
இந்திய அரசின் அலுவல்களை
தமிழக மண்ணில் முடக்குவோம்
செயல்படாமல் முடக்குவோம்..
சிங்கள இனவெறி ராணுவத்திற்கு
இந்திய அரசு வழங்கிய
ஆயுதங்களில் சாவது
ஈழத்தமிழன் மட்டுமல்ல
தமிழக மீனவனும் தான்!

வங்க்கடலில் செத்துமடியும்
தமிழனைக் காக்க துப்பிலை
எதைப்புடுங்க இறையாண்மை
இந்திய அரசின் இறையாண்மை!

தமிழக மக்களின் வரிப்பணத்தில்
வயிறுவளர்க்கும் இந்திய அரசு
தமிழனைகொல்ல ஆதரவளிப்பதை
தடுத்து நிறுத்தவோம் ! தடுத்து நிறுத்தவோம் !!
சிங்கள் இனவெறி தூதரகத்தை
தமிழக மண்ணில் இழுத்து மூடுவோம்!

ஈழம் சிந்திய ரத்தத்திற்கு
ஈழத்தமிழனின் கண்ணீருக்கு
குமுறிக்கிடக்கும் தமிழகமே
கொதித்தெழுந்து போராடு!

ஈழத்தமிழனின் விடுதலைக்கு
மக்கள் கிளர்ந்து போராடாமல்
குறுக்குவழி எதுவுமில்லை!

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்
65 தமிழகத்தை
மீண்டும் இங்கே உருவாக்குவோம்!

ஈழத்தமிழரின் விடுதலைக்கு
தமிழக தெருக்களையே
களமாக்கி போராடுவோம்!
தமிழீழ போராட்டத்திற்கு
தமிழகத்தை பின்களமாக்குவோம்!

ஈழத்தமிழரின் ரத்தத்தை
ஈழத்தமிழனின் கண்ணீரை
சுயலாபத்திற்கு பயன்படுத்தும்
ஓட்டுக்கட்சி எதுவானாலும்
புறக்கணிப்போம் ! புறக்கணிப்போம் !!

ஈழத்தின் பெயராலே
நீலிக்கண்ணீர் நாடகங்களை
அம்பலப்படுத்துவோம்! அம்பலப்படுத்துவோம்!!
ஈழத்தமிழர் விடுதலையை
மக்கள் கிளர்ச்சியின் துணைகொண்டு
வென்றெடுக்க போராடுவோம்.

கிளிநொச்சி வீழ்ந்தாலும்
முல்லைத்தீவு வீழ்ந்தாலும்
இல்லை இல்லை வென்றது இல்லை
இனவெறி ஆதிக்கம் வென்றது இல்லை!
இல்லை இல்லை நின்றது இல்லை
விடுதலைப்போர்கள் நின்றது இல்லை!

புகைப்படங்கள்:

வீடியோ:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க