மக்கள் கலை இலக்கியக் கழகம்
16, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற் சாலை, அசோக் நகர், சென்னை – 600 083
தொலைபேசி 99411 75876
மின்னஞ்சல் – vinavu@gmail.com pukatn@gmail.com
_________________________________________________________________________________________________
சென்னை,
06/10/2014
பத்திரிகைச் செய்தி
கண்டன அறிக்கை
-
பாசிச ஜெயாவின் கூலிப்படையாகச் செயல்படும் தமிழக போலீசு !
-
சுவரொட்டி ஒட்டியதற்காகத் தோழர்கள் கைது !
-
தோழர்களை விடுதலை செய் ! வழக்கைத் திரும்பப் பெறு !
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அதிகார முறைகேடு, ஊழல், சொத்துக் குவிப்பு ஆகிய கிரிமினல் குற்றங்களை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் குற்றங்கள் ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜெயலலிதா, அவரது கூட்டாளிகள் சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகிய நால்வருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்துச் சிறையிலடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிழைப்புவாத அதிமுக பொறுக்கிக் கும்பல் பெரும் வன்முறையில் இறங்கியுள்ளது. மூன்று அரசுப் பேருந்துகள் எரிக்கப்பட்டு, பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அரசு அதிகாரத்தையும், போலீசையும் பயன்படுத்தி வணிகர்கள், தொழிலாளிகள், மீனவர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் மிரட்டி வேலை நிறுத்தம், கடையடைப்பு, உண்ணாவிரதம், மனித சங்கிலி என கட்டாயமாகப் போராட்டத்தில் ஈடுபட வைத்து இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கிறது.
ஜெயலலிதா குற்றவாளி என்பது மட்டுமல்ல, அவரால் தலைமை தாங்கப்படும் அதிமுக என்ற கட்சியே ஒரு சமூக விரோத கிரிமினல் கும்பல் என்பது தற்போது பளிச்சென்று நிரூபணமாகி வருகிறது.
அதிமுக கும்பலின் அராஜகச் செயல்பாடுகளைக் கண்டித்தும், அதனை எதிர்த்து நிற்குமாறு மக்களை அறைகூவியும், மக்கள் கலை இலக்கியக் கழகம், வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் சுவரொட்டி இயக்கம் மேற்கொண்டன. அதிமுக கும்பலின் அராஜகத்தைத் துணிவுடன் அம்பலப்படுத்திய எமது சுவரொட்டிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
ஆனால் தமிழகம் முழுவதும் கடந்த பத்து நாட்களாக அதிமுகவினர் நடத்தி வரும் சட்டவிரோத, ஜனநாயக விரோத கிரிமினல் நடவடிக்கைகளுக்கு உடனிருந்து ஒத்துழைப்பும் பாதுகாப்பும் கொடுத்து வரும் காவல்துறை,
இச்சுவரொட்டிகளை ஒட்டியதற்காக உசிலையிலும், மதுரையிலும் வழக்கு போட்டதோடல்லாமல் சிவகங்கையிலும், பரமக்குடியிலும் எமது தோழர்களைக் கைதும் செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
சிவகங்கையில் கைது செய்யப்பட்டுள்ள பு.ஜ.தொ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராஜன், குருசாமி மயில்வாகனன், கணேசன், சுரேஷ் கண்ணன், பரமக்குடியில் கைது செய்யப்பட்டுள்ள தோழர் ஆனந்தன் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும், எல்லா ஊர்களிலும் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
அச்சத்தைக் கைவிட்டு அதிமுக கும்பலின் அராஜகத்தை எதிர்த்து நிற்குமாறு மக்களை அறைகூவி அழைக்கிறோம்.
இவண்,
காளியப்பன்,
மாநில இணைப் பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு
மானங்கெட்ட அ தி மு க ரவுடிகள்நடத்தும் வன்முறைகளுக்கு நம் உழைக்கும் வர்க்கத்து உழைப்புகள் விலை பேசப்படுகிறது. ஜெயா அடிமைகள் செய்யும் அராஜகததை கண்டிப்போம். ஜெயாவின் பாப்பாத்தி புத்திக்கு செருப்படி கொடுப்போம். விழிக்கட்டும் உழைக்கும் வர்க்கம்.
தமிழக அரசே , காவல் துறையே தோழர்களை விடுதலை செய் ! வழக்கைத் திரும்பப் பெறு !
மானங்கெட்ட அ தி மு க ரவுடிகள்நடத்தும் வன்முறைகளுக்கு -Reason that,they dont want JJ should get bail.She should be behind the bar always,so that all ministers& MLAs of AIDMK and all Police and Administrative PORUKKIKAL can loot the Tamil nadu with out her permission and not to give any share of the loot to her company
இந்தத் துணிவு நமது தோழர்களுக்குதான் உண்டு இதனை ராஜீவ் காந்தி படுகொலையின் பொழுதே பார்த்தோம் . இதன் தொடர்ச்சியாக தான் மற்ற அரசியல் கட்சிகள் பேசத்தொடங்குகின்றன. நாம் நமது நண்பர்களிடம் அவர்கள் அ தி மு க வினராக இருந்தாலும் உண்மையை உணர்த்த முயற்சி செய்வோம்.