privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா - நூல் அறிமுகம்

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா – நூல் அறிமுகம்

-

னது இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு அயோத்தி பிரச்சினைக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட பிரச்சினையாக “பொது சிவில் சட்டம்” குறித்த பிரச்சினையை பாரதீய ஜனதா எழுப்புகிறது. முசுலீம்களின் நான்கு தார மணமுறை மற்றும் மணவிலக்கு முறையை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் ‘இந்து தனிநபர் சட்டம் ‘ ரொம்பவும் முற்போக்கானது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை. எனவே “இது முசுலீம்களுக்கு ஆதரவான போலி மதச்சார்பின்மை” என்ற பாரதீய ஜனதாவின் வாதம் பெரும்பான்மை ‘இந்து’க்களிடம் எடுபடுகிறது.

இது போலி மதச்சார்பின்மை என்ற கருத்தை இந்நூல் வேறொரு கோணத்திலிருந்து கூறுகிறது. “அரசு மற்றும் சிவில் சமூகத்தின் மீது எவ்வித அதிகாரமும் செலுத்தவியலாமல் மதத்தைத் துண்டிப்பது” என்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்குப் பதிலாக, அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல் என்ற மோசடியான விளக்கம் இந்திய மதச்சார்பின்மைக்குத் தரப்பட்டிருப்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தில் மதம், மதச்சார்பின்மை ஆகியவை தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதுடன், மதம் – மத நம்பிக்கை குறித்து உச்சநீதி மன்றம் அளித்துள்ள விளக்கங்கள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கே எதிரானவை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறது இந்நூல்.

இந்து – முசுலீம் தனிநபர் சட்டங்கள் பற்றிய ஒப்பீட்டைப் படிக்கும் வாசகர்கள் இந்து சட்டத்தின் ‘முற்போக்கான’ தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். எதார்த்தத்தில் இல்லாத இந்து மதத்தைச் சட்டத்தின் மூலம் செயற்கையாக உருவாக்கும் முயற்சிதான் ‘இந்து தனிநபர் சட்டம்’ என்பது வரலாற்று விவரங்களுடன் தரப்பட்டுள்ளது. அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்கக் கூடாது என்று வாதாடும் பாரதீய ஜனதா, குடும்பத்திலிருந்து மட்டும் மதத்தைப் பிரிக்க வேண்டும் என்று கூறும் இரட்டை வேடத்தின் நோக்கம் ஆராயப்பட்டுள்ளது. இறுதியாக, பாரதீய ஜனதாவிதற்கு எதிராகப் போலி கம்யூனிஸ்டுகள் முதல் பின் நவீனத்துவ அறிஞர்கள் வரை பல தரப்பினரும் வைக்கும் தீர்வுகளுக்கான மறுப்புரை தரப்பட்டுள்ளது. உண்மையான மதச்சார்பின்மைக்கும் மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்குமான போராட்டம் மட்டுமே இந்துத்துவத்தை முறியடிக்கும் என்பதை நூல் வலியுறுத்துகிறது.

1995 –இல் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு உருவாக்கிய விவாதத்தையொட்டி புதிய கலாச்சாரத்தில் தோழர் சூரியன் எழுதிய தொடர் கட்டுரையை தற்போது நூல் வடிவில் தருகிறோம் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டத்திற்கு இது பெரிதும் பயன்படும் என நம்புகிறோம்.

(நூலின் முன்னுரையிலிருந்து)

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா

பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள்
புதிய கலாச்சாரம் கட்டுரைகள்

வெளியீடு : கீழைக்காற்று

விலை : ரூ 40
பக்கங்கள் : 64

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

எண்: 80-81 (முதல் நுழைவாயில்)

38-வது சென்னை புத்தகக்காட்சி
சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி,
நந்தனம், சென்னை – 35

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை

civil-code-1 civil-code-2