privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்திருச்சி, விருத்தாசலத்தில் உழைக்கும் பெண்கள் தினம்

திருச்சி, விருத்தாசலத்தில் உழைக்கும் பெண்கள் தினம்

-

குருதியில் மலர்ந்த உழைக்கும் பெண்கள் தினம் -விருத்தாசலம் ஆர்ப்பாட்டம்

பெண் விடுதலையை முன்னெடுப்போம், சமூக விடுதலையை சாதிப்போம் என்ற தலைப்பில் பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் விருத்தாசலத்தில் உழைக்கும் பெண்கள் தின ஆர்ப்பாட்டம் மார்ச் 8-ம் தேதி நடத்தப்பட்டது.

wwd-virudhai-02தலைமை தாங்கிய தோழர் ரேவதி “இன்று நம் நாட்டில் பெண்களை ஆராதிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் நடப்பது 47 நிமிடத்திற்கு ஒரு பாலியல் பலாத்காரம், 7 நிமிடத்தில் ஒரு பெண் மீது வன்முறை கட்ட விழ்த்து விடப்படுகிறது. இந்த நிலைமையில் பெண்கள் தினத்தின் முக்கியத்துவம் என்ன? அன்று நியூயார்க்கில் பல்லாயிரம் பெண்கள் உரிமைக்காக சம ஊதியத்துக்காக போராடி உயிர் நீத்தனர், சிறை சென்றனர். அதன் நினைவாக தான் மார்ச் 8 உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இன்று அது பல்வேறு முதலாளித்துவ கட்சிகளால், அமைப்புகளால் கோலப்போட்டி, அழகிப்போட்டி என பெண்களின் போராட்டக்குணத்தை மழுங்கடிக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள். இதை முறியடிக்கும் விதமாக தான் விருத்தாசலம் பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக குருதியில் மலர்ந்த உழைக்கும் பெண்கள் தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது” என விளக்கி பேசினார்.

wwd-virudhai-07மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க செயலாளர் அன்பழகன், “பெண் என்பவள் சமுதாயத்தில் சமபங்கு உடையவள். சமுதாயத்தில் மட்டுமல்ல வீட்டிலும் தான். பெண்கள் உரிமைகள் உள்ளது. அதை யாரும் தரமாட்டார்கள் நீங்கள் கேட்டு போராட வேண்டும். குறிப்பாக சொத்தில் உரிமை. திருமணம் நடந்து செல்லும் போதே பிரித்து கொடுத்தாக வேண்டும். அது கலப்பு திருமணமாக இருந்தாலும் சரி. உள்ளாட்சி துறையில் 50% ஒதுக்கீடு என்கிறார்கள். வேலையில் ஒதுக்கீடு என்கிறார்கள். எதுவும் நடைபெற்றதாக சரித்திரமில்லை. இப்படி இந்த அரசு எதையும் கொடுக்காது. விடுதலைக்கு பெண்கள் போராடித்தான் தீர வேண்டும்” என விளக்கி பேசினார்.

wwd-virudhai-04சென்னை பெண்கள் விடுதலை முன்னணி தோழர் விசாலாட்சி, “மார்ச் 8 கொண்டாடக் கூடிய நாள் அல்ல, போராட்ட நாள். போராடி உரிமைகளை பெற்ற நாள். இதை மழுக்கடிப்பதை ஏற்க முடியாது. இன்று காதலர் தினம், எயிட்ஸ் தினம் என பல்வேறு தினங்கள் கொண்டாடுகின்றனர். அவற்றை போல அர்த்தமற்றது அல்ல.

1910-ல் சமூக ஜனநாயக கட்சி பல்லாயிரம் பெண்களை உறுப்பினராக சேர்த்தது அவர்களை அரசியலற்றவர்களாக மாற்ற முயற்சித்தது. புரட்சியை நோக்கி அணிதிரள விடாமல் மழுங்கடித்தது. அதை கிளார ஜெட்கின் அம்பலப்படுத்தினார், எதிர்த்து பேராடினார் பெண்கள் புரட்சிக்கு அணிதிரள வேண்டுமென அறைகூவினார்.

wwd-virudhai-06அதே நிலை தான் இன்று இந்தியாவில் பொருளாதார ரீதியில் விடுதலை ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை பெறாத நிலையில் உள்ளனர். முதலாளித்துவ அமைப்புகள் இந்த அரசு கட்டமைப்புக்குள்ளயே தீர்வு கிடைத்து விடும் என கூறுகிறார்கள். சாராயம் விற்று ஆட்சி நடத்தும் இந்த அமைப்புக்குள் எப்படி தீர்வு கிடைக்கும்? வாக்குரிமை சொத்துரிமை விவகாரத்து உரிமை கிடைத்து விட்டால் போதும் என்கின்றனர். அவை உழைக்கும் வர்க்க பெண்களுக்கானதல்ல, சில மேட்டுக்குடி பெண்களுக்கு மட்டுமே உதவுவது.

உண்மையான விடுதலை என்பது ஆணாதிக்க சிந்தனை, மறுகாலனியாக்க சீரழிவுகள் ஆகியவற்றை தகர்த்து எறிவதே. அது புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் தான் சாத்தியம். பெண்களின் விடுதலை உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கு உட்பட்டதே ஆகையால் உழைக்கும் வர்க்கமாக அணிதிரள வேண்டும்” என அறை கூவினார்.

wwd-virudhai-03மேலும் தோழர் விருத்தாம்பிகை, வழக்கறிஞர் தாழை கருணாநிதி, கச்சிராயநத்தம் மந்திரிகுமாரி உள்ளிட்டோர்கள் உரையாற்றினார்கள். விருத்தாசலம் பெண்கள் விடுதலை முன்னணி தோழர் பார்வதி நன்றியுரையாற்றினார்.

கூட்டத்திற்கு இடையில் வந்த போலீசு, “பெண்கள் தினம் என்று அனுமதி கேட்டு விட்டு அரசியல் பேசுகிறீர்கள் என்றும் நாங்கள் மைக் செட் வைப்பதற்கு அனுமதியே கொடுக்கவில்லை” என பலவாறாக பேசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதை எதிர்கொண்ட பெ.வி.மு தோழர்கள் வாக்குவாதம் செய்து ஆர்ப்பாட்டத்தை சிறப்பான முறையில் முழுமையாக முடித்தனர்.

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி- தமிழ்நாடு
விருத்தாசலம்

திருச்சி

சமூக விடுதலையே! பெண் விடுதலை! மார்ச் 8 – குருதியில் மலர்ந்த அனைத்துலக பெண்கள் தினம்.

periyar statueஅரங்குக்கூட்டம்களிர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் மார்ச் 8ம் தேதி காலை 11 மணியளவில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கு கூடி இருந்த மக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் அவர்களிடம் பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக பெண் தோழர்கள் சைக்கிள் பிரச்சாரமாக நகர் முழுவதும் சென்று மக்கள் கூடும் இடங்களில் நின்று பிரசுரம் கொடுத்து மகளிர் தினத்தை நினைவூட்டினர். பெண்கள் சீருடையுடன் தொப்பி, பேட்ஜ் அணிந்து சென்றது மக்களிடம் வரவேற்பை பெற்றது.

மாலை 6.30 மணியளவில் சிங்காரத்தோப்பு தமிழ்ச் சங்க கட்டிடத்தில் அரங்குக்கூட்டம் புகைப்படக் கண்காட்சியுடன் துவங்கியது.

கூட்டத்தை தலைமை ஏற்று நடத்திய பெண்கள் விடுதலை முன்னணியின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் நாகேஸ்வரி பேசும் போது, “உலகம் முழுதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் ரத்தம் சிந்தி போராடிய நாள் என்பதை மறைத்து கோலப் போட்டி, அழகி போட்டி என மிக கேவலமாக கொச்சைப் படுத்தப்படுகிறது” என ஆத்திரத்துடன் சாடினார்.

தோழர்-நாகேஸ்வரி“பெண்ணை சமூகம் மிக கீழ்த்தரமாக சித்தரிப்பதையும், நிலப்பிரபுத்துவ சமூகம் பெண்ணை அடக்கி வைத்ததை போலவே இன்று முதலாளித்துவம் முன்னேறிய நாடாக ஆன பிறகும் உழைப்பு சுரண்டல், பாலியல் சுரண்டல் எனும் பேரில் கையையும் வாயையும் கட்டிப்போட்டு பெண்ணை நசுக்குகிறது. இந்த கொடுமைகளை எதிர்த்து போராடும் ஆற்றல் பெண்ணுக்கு வேண்டும், தனியே சாதிக்க முடியாது, அமைப்பாக திரண்டால் மட்டுமே விடிவு” என கூறினார்.

முனைவர், இரா.சக்குபாய், மேனாள் தலைவர் பெரியார் உயராய்வு மையம் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி

முனைவர் சக்குபாய்“பெண் பிள்ளையாய் பிறந்தாலே இந்த சமூகம் விதிக்கும் கட்டுபாடுகள் ஏராளம், அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு! என்பதே சமூகத்தின் கேள்வி, பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், அதை இன்றும் நிரூபித்துக் கொண்டுள்ளனர்.”

பேராசிரியர் தன் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களை பகிர்ந்து கொண்டார், தனது வீட்டில் சிறுவயதில் பெண் பிள்ளை வளர்ப்பு எவ்வளவு கண்டிப்புடன் இருந்தது, வெளியே சென்றால் குனிந்த தலை நிமிரக்கூடாது, ஆண்களுடன் பேசக்கூடாது, இது உயர்சாதி பெண்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையாகவே இருந்தது, தந்தை பெரியாரின் கருத்துகள் முட்டி மோதும் போது, பெண்கள் தலை நிமிரவைக்கும் தேவை எழுந்தது, துணிச்சலுடன் பெண்கள் போராட வேண்டும், என பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி சென்றார்.

சிறப்புரை : தோழர் துரை.சண்முகம், கவிஞர், மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.

“பெண்கள் விடுதலை முன்னணி, தோழர்களின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பொலிவுடன் உள்ளது, பெண் தோழர்கள் வேலைகளை எடுத்து செய்வது, உழைக்கும் வர்க்கமாக ஆற்றலுடன் உழைப்பது என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

தேர்தல் விதிமுறைகள் எனும் பேரில் மக்களை இழிவு படுத்துவது, பிரச்சாரம் செய்யும் உரிமை பறிப்பது என மோசமான அணுகுமுறையுடன் அரசு நடந்துள்ளது.

தோழர் துரைமுருகன்பெண்கள் சமுதாயத்தை முன்னேற்ற பாடுபட்ட தந்தை பெரியாருக்கு, பெரியார் எனும் பட்டத்தை பெண்கள் தான் கொடுத்தனர்.

முதலாளித்துவம் பற்றி கூறும் செய்தி, மகளிர் உழைப்பை சுரண்டுவதை மட்டும் அல்லாமல் பெண்கள் இனத்தையே சுரண்டும் கொடூரம் அரங்கேறுகிறது.

நுகர்பொருளை விற்பதற்கு கூட பெண்களை விளம்பரபடுத்தும் முதலாளித்துவம், பெண்களை சதைப் பிண்டமாக பார்ப்பதை எச்சரித்தார்.

மகளிர் தினத்தை பற்றி பிரசுரம் கொடுக்கும் போது பெண்களே வாங்க தயங்குவது என்பதை, நாம் இன்னும் வேகமாக வேலை செய்ய வேண்டும், தொடர்ந்து தயங்காமல் செல்ல வேண்டும்,

வரலாற்று வழியிலே 18ம் நூற்றாண்டில் போராடி பெற்றதன் விளைவாக, சில உரிமைகளை பெறவைத்தது அனுபவம், பெண்களின் போராட்ட குணம் பற்றி மதிப்புக்குரிய சக்குபாய் அவர்கள் பேசினார்கள், அதை உணர்வதற்கு நீங்கள் தாய் நாவலின் உள்ளே போய் பாருங்கள்,

கோவன் கலைநிகழ்ச்சிஅப்பாவி தாயின் புரட்சி கோபம் வெடிப்பதை கண்டு உணரலாம் என்றார்

மொத்தத்தில் பெண்ணை, ஆணை உழைக்கும் வர்க்கத்தை சிதைக்கும் சமூகத்தை தூள் தூளாக்காமல் ஓய்வில்லை, என எழுச்சியுடன் பேசினார்.

பேச்சுக்கிடையில் பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் இரண்டு பாடல்களை பாடினர்.

இறுதியில் மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக்குழுவினரின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைப்பெற்றது.

அரங்கு நிறைந்த கூட்டமாக 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

தகவல்
பெண்கள் விடுதல் விடுதலை முன்னணி,
திருச்சி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க