privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்அல்ட்ரா சவுண்டு அர்னாப்பின் அரிய கண்டுபிடிப்பு

அல்ட்ரா சவுண்டு அர்னாப்பின் அரிய கண்டுபிடிப்பு

-

டகங்களை காவிமயப்படுத்தும் முயற்சியில் இரண்டு விசயங்களை கவனியுங்கள். ஒன்று என்டிடிவியின் மீதான சிபிஐ ரெய்டு. இரண்டு அல்ட்ரா சவுண்டு ஆர்னாப்பின் ரிபப்ளிக் டீவி வாங்கிய காசுக்கு மேலேயே மோடி அரசுக்கு கூவுவது. எங்களை எதிர்ப்போருக்கு என்டிடிவியும், ஆதரிப்போருக்கு ஆர்னாப்பும் நினைவுக்கு வரவேண்டும் என்று பாஜக முடிவு செய்திருக்கிறது.

மத்தியப்பிரதேச விவசாயிகளை பாஜக அரசு சுட்டுக் கொன்றது நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அலைகள் உருவாக்கிய கோபத்தை திசைதிருப்பும் வண்ணம் அல்ட்ரா சவுண்டு ஜென்மம் ரிபப்ளிக் டிவியில் கூவியிருக்கும் உளறலைக் கேளுங்கள்!

செய்தி: மத்தியப் பிரதேசத்தில் 6 விவசாயிகள் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதை என்.டி.டி.வியும், இந்தியா டுடேயில் ராஜிப் சர்தேசாயும் அப்படியே சொல்கின்றனர்.

ஆனால ரிபப்ளிக் டிவியில் அர்னாப் கூவுவது என்ன?

மத்தியப்பிரதேசத்திற்கு ராகுல் காந்தி சென்றார் அல்லவா? அது பாஜகவிற்கு பிரச்சினை என்பதால் அர்னாப் கோஸ்வாமி விவசாயிகள் கொலையை ராகுல் காந்தி ஹெல்மெட் போடாமல் சென்ற பிரச்சினையாக மாற்றுகிறார். உடலெங்கும் வியாபித்திருக்கும் இந்த மேதகு பார்ப்பனியக் கொழுப்பை கொத்தி எடுக்காமல் இந்தியாவில் செய்திகள் என்பது ஜெயஜெய மோடி சேதியாக மாறுவது உறுதி.

ஆகவே 1948-ல் அல்ட்ரா சவுண்டு அர்னாப் இருந்திருந்தால் காந்தி கொலையை எப்படி அறிவித்திருப்பார்? குறிப்பு  – காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையது – கோட்சே கொன்றார் என்பதை நினைவில் வையுங்கள்.

ரிபப்ளிக் டிவியின் சூப்பர் எக்ஸ்கூளுசிவ்

போராட்டக்காரர் கோட்சே கடுமையாக நடத்தப்பட்டார். பிரபல காங்கிரசு தலைவர் காந்தி ஒரு பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்லும் போது இறந்து போனார். காரில் வந்த காந்தி சீட் பெல்ட் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின் குறிப்பு: இந்த ரிபப்ளிக் டிவியில்தான் தந்தி டிவி பாண்டேயிடம் பயிற்சி பெற்ற ஹரிகரன் சேர்ந்து அல்ட்ரா சவுண்டின் மினியேச்சராக கூவுகிறார்!

செய்தி: மத்தியப் பிரதேசத்தில் 6 விவசாயிகள் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதை என்.டி.டி.வியும், இந்தியா டுடேயில் ராஜிப் சர்தேசாயும் அப்படியே சொல்கின்றனர். ரிபப்ளிக் டிவியில் அர்னாப் கோஸ்வாமி: ஹெல்மெட் போடாமல் ராகுல் காந்தி பைக்கில் பயணித்தது ஏன்?  தேஷஷஷஷம் அறிந்து கொள்ள துடி…..க்க்க்கிறது….!

ரிபப்ளிக் டிவியின் சூப்பர் எக்ஸ்கூளுசிவ்
பிரபல காங்கிரசு தலைவர் காந்தி ஒரு பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்லும் போது இறந்து போனார். காரில் வந்த காந்தி சீட் பெல்ட் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.போராட்டக்காரர் கோட்சே கடுமையாக நடத்தப்பட்டார்.

நன்றி: Irony of India

  1. Times Now TV, Republic TV பக்கம் போனாலே மனித இரத்த வாடை அடிக்கிறது.போர் வெறி, பிராடு, வெறிக்காட்டு கத்தல்கள்

    • அப்படியா ??? முதலில் உங்கள் (வினவு கூட்டங்கள்) கைகளில் அப்பாவி மக்களின் ரத்தம் படிந்து இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்மா ? ரத்தம் படிந்த உங்கள் கைகளால் மற்றவர்களை குற்றம்சாட்டும் அடிப்படை தகுதி கூட உங்களுக்கு கிடையாது என்பது உங்களுக்கு தெரியும்மா ?

      • மணி மாமா,

        ரத்தம் கொதிக்குதோ? அம்பி அர்னாப் கோச்சுவாமியப் பத்தி பேசுனா தென்னாட்டு கோச்சுவாமிக்கு ரெத்தம் கொதிக்கத்தான் செய்யும்.

        ஆனா பாருங்க மாமா, நீங்க அச்சசல் பாஜககாராள்னு அப்பப்போ நிரூபிக்கிறீங்க.

      • லூசு கொல வெறி மணிகண்டன் ஐந்து விவசாயிகளை சுட்டுகொன்ற உன் பிஜேபி அரசின் கைகளை முதலில் பார்…. ரத்தம் வழிந்து ஓடுகிறது…. மாட்டை அம்மாவுடன் ஒப்புமை செய்த மாண்டூகம் நீ தானே? உள்நாட்டில் உன் தாயை தடை செய்து விட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து கூட்டிக்கொடுத்த நல்லவன் நீ தானே மணிகண்டன்? தூ…………

      • எந்த வாதபிரதிவாதத்திற்க்கும் வழியற்று சும்மா வந்து உளறிவிட்டு ஒளிவதையே தந்திரமாக கைகொள்ளும் மணிகண்டா உன் கருத்து பதிவை பார்க்கும் உன்னவர்களே வெட் க்கப்பட்டு போவார்கள்.எப்படி உங்களால் வாழமுடிகிறது?எதிலாவது உன்னால் உண்மையை கொண்டு வாதாட முடிகிறதா?

          • மானங்கெட்ட பொழ்ப்பு என்றால் கொஞ்சநஞச மானக்கெட்ட பொழப்பு அல்ல.இப்படி ஒரு மானம் கெட்டதுகளை உலகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது.உதாரணத்திற்க்கு ஒன்று. இந்த மாட்டுக்கறி விவகாரத்தில் பல முற்போக்குவாதிகளும் திராவிட கட்ச்சியினரும் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்துகிறார்கள்.இதற்க்கு பதிலாய் இந்த மணிகண்டன் வகையறாக்கள் “பன்றிகறி உண்ணும் போராட்டம் நடத்தப்போகிறோம்” என்று அறிவிக்கிறதுகள்.(இதற்க்கு ஒரு பயலும் வரமாட்டான் என்பதும் இதை பல முறை சொல்லி கிறுக்கு விளையாடிவிட்டார்கள் என்பதும் தனிக்கதை)நான் கேட் கிறேன் “அட கிறுக்கு பயலுகளா நீ மாட்டுக்கறி உண்ண தடை போடுகிறாய் ஆகவே அதை எதிர்த்து அதை உண்ணும் போராட்டம் அறிவிக்கிறார்கள்.நீ அதற்க்கு எதிராய் பன்றிகறி உண்டு போராடுகிறோம் என் கிறாயே பன்றிகறி திண்ண யார் தடை போட்டார்கள்?”இவன் களுடைய மூளை எந்த லச்சணத்தில் இயங்குகிறது.இதற்க்கு என்ன காரணமாம்….முஸ்லிகள் பன்றிகறி திண்ணமாட்டானாம் அதனால் இப்படி போட்டி போடுகிறான் களாம்…அட.. பே..மூதேவிகளா..முஸ்லிகள் என்றைக்கடா அடுத்தவனை பன்றிகறி திண்ணாதே என்றான் திண்பவனை அடித்து விரட்டினான்?உனக்கு விருப்பம் என்றால் தாராளமாக தின்றுகொள்.அதற்க்கு எதற்க்கடா போராடனும்.உரிமை மறுக்கப்பட்டவன் செய்வதுதானடா போராட்டம்..அட கூறு கெட்ட குப்பைகளா ஒருவன் தண்ணீர் குடிக்கும் போராட்டம் என்று நடத்தினால் அவனை எப்படியடா பார்ப்பீர்கள்.பைத்தியக்காரன் என்று சொல்லமாட்டீர்களாடா!?உனக்கு அனுமதியும் உரிமையும் உள்ள ஒன்றை உண்ண உடுத்த ஏனடா போராட வேண்டும்?நான் உண்ணும் தட்டில் வந்து மண்ணள்ளி போட்டுப்போகிறாய் நாங்கள் போராடுகிறோம்.நீ ஏன் போராடுகிறாய்?நீ பன்றிகறி தின்றால் என்ன அல்லது பன்றி தின்பதையும் சேர்த்து தின்றால்தான் எங்களுக்கென்ன? இப்படி ஒரு மானம் கெட்ட பயல்களை பார்க்க முடியுமா?

            • மானம் உள்ளவன் ஒரு சொல்லுக்கு கூட அஞ்சுவான்…. மணிகண்டன் போன்ற மானம் அற்ற மனிதர்களுக்கு எத்துனை வார்த்தைகளில் எவ்வளவு அறிவரை கூறினாலும் உரைக்காது… ஏன் என்றால் அவர்களின் ஹிந்துத்துவா டிசைன் அப்படி…..

  2. நன்றி நடராசன் அய்யா அவர்களே! வினவில் உங்கள் கருத்துகளை பதிந்தமைக்கு மிக்க நன்றி….. விவசாயிகளின் தலையையே வெட்டி சீவி எடுத்துவிட்டு ஹெல்மெட் எங்கே என்று கூவும் இவர்களின் கொடுரமனம் தான் காவிகளின் மனசாட்சி என்று மீண்டும் நிருபித்துகொண்டு உளார்கள்…. அதற்கு இந்த அர்னாப் ஜால்ரா அடித்துக்கொண்டு உள்ளான்…. இப்ப பாருங்கள் இங்கே இரு காவி ஜால்ரா மணிகண்டன் ஓடி வரும்!

  3. “பெய்டு நியூஸ் “பேர் வழிகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் … அதுவும் இந்த ” அல்டாப் அர்னாப்பிடம் ” அர்த்தமற்ற காட்டு கத்தலை தவிர ….. உண்மையை கூற வெட்கப்படுகிறார் பாேல ….?

  4. மணி சார் உமக்கு உங்க கோசோலைல கோச்சிங் சரியில்லை ஓய். எல்லா பதிவிலையும் ஆடிப்படை விவாத போக்கு கூட இல்லாம ஒம்மவால் மாறியே வாய்ல வந்தத உலரிட்டிருக்கேல். உம்ம பதிவுக்கு பதில் போட கூட வெட்கமாயிருக்கு ஓய். மாட்டு மூத்திரம் டெய்லி 2glasses குடிக்கிரீரா இல்லையா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க