PP Letter headக்கள் அதிகாரத்தின் சீர்காழி பகுதி தோழரும் நக்சல்பாரி புரட்சியாளருமான தோழர் அம்பிகாபதி மறைவுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக்குழு சிவப்பஞ்சலி செலுத்துகிறது!

மக்கள் அதிகாரம் சீர்காழி பகுதி தோழர் அம்பிகாபதி இன்று (27/06/2021) மறைவெய்துள்ளார். 37 ஆண்டுகளுக்கு மேலாக நக்சல்பாரி புரட்சியாளராக இருந்து இறுதிவரை ஆளும் வர்க்கத்துக்கும் எதிரிகளுக்கும் எதிராக மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடித்தவர் அவர்.

பு.ஜ வாசகர் வட்டத்தை 37 ஆண்டுகளுக்கு முன் துவக்கிவைத்து சீர்காழி பகுதி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளராக இருந்து பின்னர் விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளராக பல ஆண்டுகள் இருந்து வந்தார்.

சீர்குலைவுவாதிகள், பிழைப்புவாதிகளுக்கு எதிராக உறுதியாக நின்று மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கையையும் கோட்பாட்டையும் உயர்த்திப் பிடித்தவர் அவர். விவசாயிகள் விடுதலை முன்னணி நடத்திய பல்வேறு போராட்டங்களில் தலைமையேற்று நடத்தி வாழ்ந்தவர் அவர். இறால் பண்ணைக்கு எதிரான போராட்டத்தினை நடத்தி ஆளும் வர்க்கத்தின் நெருக்கடிகளையும் போலீசின் அடக்குமுறையையும் எதிர்த்த போராட்டத்தில் தோழரின் பங்கு அளப்பரியது.

மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனைக்கெதிராக சீர்குலைவுவாதிகள் சதி செய்தபோது உறுதியாய் எதிர் கொண்ட தோழர் அம்பிகாபதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக்குழு சிவப்பஞ்சலி செலுத்துகிறது .

தலைமைக்குழு,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு புதுவை

1 மறுமொழி

  1. தோழர்,அம்பிகாபதிக்கு வீரவணக்கம்.அவர் நிணைவு நீடூழி வாழ்க! அமைப்பு நலனுக்காக தம் இளம் வயதிலேயே ஏராளமான இழப்புகளை எதிர்கொண்டவர்.80களில் புரட்சியாளர்களை அரசு நரவேட்டையாடிபோது பொதுவெளியில் அதைத்தொடர்ந்து அம்பலப்படுத்திய தீரர்.தோழரின் வீரத்தை நெஞ்சில் ஏந்துவோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க