பேராசிரியர் சாய்பாபா மரணம்: பாசிச மோடி அரசால் நடத்தப்பட்ட படுகொலையே!
சாய்பாபா சிறையில் இருந்த போது இரண்டு முறை கோவிட் தொற்றாலும் ஒரு முறை பன்றிக் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டார். அவருக்குத் தேவையான மருத்துவ உதவி வழங்கப்படவில்லை. சிறையிலிருந்து வெளிவரும்போது அவருக்கு இதயம், சிறுநீரகம், கணையம், மூளை என்ற உடலின் முக்கிய உறுப்புகள் பாதிப்படைந்திருந்தது.
உ. பி: தொடரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிய வன்முறைத் தாக்குதல்கள்
ஒரு தலித் நபர் நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இரண்டு கான்ஸ்டபிள்களை கூப்பிட்டு ‘இவனை வெளியே தூக்கி எறியுங்கள்’ என்று தெரிவித்துள்ளனர். போலீசோ அவரைக் கால்களால் உதைத்து சாதிய சொற்களில் திட்டி கொடூரமான முறையில் தாக்கியுள்ளது.
புனிதா தற்கொலை: நீட் தேர்வால் தொடர்ந்து கொல்லப்படும் மாணவர்கள்!
பாசிச மோடி அரசானது 2017 ஆம் ஆண்டு முதல் வலுக்கட்டாயமாக நீட் தேர்வைத் திணித்து மாணவர்களின் மருத்துவ கனவினை சிதைத்து அனிதா தொடங்கி இன்று வரை பல படுகொலைகளைச் செய்துள்ளது.
கொல்கத்தா: மீண்டும் தொடங்கிய மருத்துவர்கள் போராட்டம்!
பயிற்சி மருத்துவ மாணவியின் படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாகவும் ஆர். ஜி. கர் மருத்துவமனையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
கல்வி சுதந்திர குறியீட்டில் அதலபாதாளத்தில் இந்தியா
"ஆர்.எஸ்.எஸ்-ஐ விமர்சித்ததற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் நடாஷா கவுல் (Natasha Kaul) இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது" - ஃப்ரீ டு திங்க் 2024 ஆண்டறிக்கை
மாவோயிஸ்ட் நரவேட்டையைத் தீவிரப்படுத்தும் சத்தீஸ்கர் அரசு
பழங்குடி மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்கும் செயல்பாட்டாளர்கள் நசுக்கப்படுகின்றனர். மாவோயிஸ்டுகளோ நரவேட்டையாடப்படுகின்றனர். கனிம வளக் கொள்ளையை எதிர்த்து உறுதியான போராட்டங்களை நடத்தும் பழங்குடி மக்கள் ஆயுதப் படைகளைக் கொண்டும் ட்ரோன் தாக்குதல் மூலமும் அச்சுறுத்தப்படுகின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசர் பயங்கரவாதம்!
புல்டோசர் பயங்கரவாத நடவடிக்கை மூலம், குஜராத் மாநில அரசானது முஸ்லீம் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களைச் சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளாக்கியுள்ளது.
JAAC கூட்டுக் குழு அறிவிப்பு || தென் இந்திய வழக்கறிஞர்கள் போராட்ட கருத்தரங்கு பொதுக் கூட்டம்
17-11-2024 ஆம் தேதியன்று தென் மாநில வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள காமராஜர் அரங்கில் தென் இந்திய வழக்கறிஞர்கள் போராட்ட கருத்தரங்கு பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கும் தி.மு.க அரசு!
சாம்சங் நிறுவனம் அருகில் உள்ள தனியார் இடத்தில் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் போலீசானது தொழிலாளர்களைப் போராட்டத்தைக் கைவிடும்படி மிரட்டியதோடு இரவோடு இரவாக போராட்ட பந்தலையும் அகற்றியுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத் தேர்தல்: ஏ.பி.வி.பி-க்கு எதிராகச் செயல்படும் மாணவர் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ள போலீசு!
டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி-க்கு எதிராகச் செயல்படும் மாணவர்கள் போலீசின் தாக்குதலுக்கும் நிர்வாகத்தின் அடக்குமுறைக்கும் ஆளாவது அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது.
கார்ப்பரேட் சாமியார் ஜக்கியை பாதுகாக்கும் உச்சநீதிமன்றம்!
உச்சநீதிமன்றமானது ஜக்கியை பாதுகாப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கும்பலின் நலனுக்காகவே செயல்படுகிறது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்துத் தீக்குளித்த அமெரிக்க ஊடகவியலாளர்
“ஹமாஸ் அமைப்பினர் என்று முத்திரை குத்தப்பட்டு எத்தனை பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டார்கள். எத்தனை பெண்கள் ஆண்கள் குழந்தைகள் அமெரிக்காவால் ஊடகங்களின் ஆதரவுடன் ஏவுகணைகளால் கொல்லப்பட்டுள்ளனர்" என்று சாமுவேல் மேனா தெரிவித்தார்.
🔴LIVE: ஹரியானா, ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2024
நாள்: அக்டோபர் 08 | நேரம்: மாலை 06:00 மணி
ஹரியானா, ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2024 | வினவு நேரலை
இன்று (அக்டோபர் 8) மாலை 6:00 மணிக்கு வினவு நேரலையில் சந்திப்போம்!
லெபனான்: மருத்துவமனைகளைக் குறிவைத்துத் தாக்கும் இஸ்ரேல்!
இஸ்ரேலின் தொடர் தாக்குதலினால் லெபனானில் உள்ள நான்கு மருத்துவமனைகள் வாரக்கணக்கில் மூடப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் லெபனான் அரசு நெருக்கடியில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.