ஹாத்ரஸ் கோர நிகழ்வு: இரத்தக் கறை படிந்துள்ள டபுள் எஞ்சின் சர்க்கார்
பக்தர்கள் நெரிசலில் சிக்கியபோது, போலே பாபாவும் அவருடன் வந்தவர்களும் நிற்காமல் சென்றுள்ளனர். மேலும், அவரிடம் இருந்தோ இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்தோ எந்த விளக்கமும் வரவில்லை. எவ்வளவு கொடூரமானவர்கள் இவர்கள்!
பிரிட்டன் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களுக்கு இந்தியாவைத் திறந்துவிடும் மோடி அரசு!
பி.சி.ஐ தலைவர் மனன் குமார் மிஸ்ரா “இந்திய சட்ட சந்தையை பிரிட்டனுக்குத் திறக்க பி.சி.ஐ திறந்த மனதுடன் வந்துள்ளது” என்று லண்டனில் மோடி அரசின் சார்பாகப் பேசியுள்ளார்.
மதுரையில் வழக்கறிஞர்களிடம் மூக்குடைபட்டுப்போன பாஜக ‘மோடுமுட்டி’ கும்பல்!
பலரும் கண்டிக்க ஆரம்பித்தவுடன் பயந்து பின் வாங்கி ஓடியது பாசிச பா.ஜ.க வழக்கறிஞர்கள் கும்பல்.
புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி JAAC பொதுக்குழு தீர்மானம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (JAAC)-ன் அவசர பொதுக்குழு கூட்டம் 29.06.2024 தேதி, காலை 10.30 மணிக்கு தொடங்கி, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது அதில் தலைவர் திரு. P.நந்தகுமார் அவர்கள் தலைமையிலும்,...
பந்துவார்பட்டி பட்டாசு ஆலை விபத்து: அலட்சியம் காட்டும் அரசே முதல் குற்றவாளி!
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளாமல், கொடுக்கப்பட்ட விதிமுறைகளை மீறி செயல்படுவதால் இம்மாதிரியான கோர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஆண்டுதோறும் ஏறத்தாழ 70 முதல் 90 பேர் வெடி விபத்தினால் இறந்து போகின்றனர்.
அதிகரிக்கும் ஆணவ படுகொலைகள்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் அவர்களுடைய ஏஜெண்டுகளையும் தடை செய்வோம்
தமிழ்நாட்டில் மிகக் கொடூரமான ஆணவ படுகொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. குறிப்பாக இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து ஜூன் 26 ஆம் தேதி வரை, 7 ஆணவக் கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.
அருப்புக்கோட்டை ஆணவ படுகொலை: சாதி வெறி கட்சிகளை தடைசெய்ய வேண்டும்
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் வளர பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் மதரீதியான மோதல்களை ஏற்படுத்த முடியாததால், சாதிவெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளில் ஊடுருவி சாதிவெறியூட்டுவதன் மூலமாக தங்களின் இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றப் பார்க்கிறது.
அழகேந்திரன் ஆணவ படுகொலை | தொடர் முழக்கப் போராட்டம் | மதுரை
ஜூன் 27 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சி தலைமையில் நடந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகள், இயக்கங்கள் கலந்துகொண்டன.
அருப்புக்கோட்டை ஆணவ படுகொலை: சாதி வெறி ஊட்டுபவர்களைத் தனிமைப்படுத்துவோம்
பட்டியலின மக்களிடையே ஆழமான பிளவை ஏற்படுத்தி, ஒரு பிரிவு மக்களைத் தங்களின் காலாட்படையாக மாற்றிக் கொள்வதற்கான வேலையை பாசிச கும்பல் செய்து வருகிறது. அதன் வெளிப்பாட்டைத் தான் நாம் தற்போது பார்த்து வருகிறோம்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயப் படுகொலைகள் | கண்டன ஆர்ப்பாட்டம் | காஞ்சிபுரம் – ராணிப்பேட்டை | செய்தி – புகைப்படம்
மக்கள் அதிகாரம் அமைப்பின் காஞ்சிபுரம் - ராணிப்பேட்டை மாவட்ட கிளையின் சார்பாக 26.06.2024 அன்று மாலை 4:30 மணியளவில் ஓச்சேரி- பனப்பாக்கம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மோடி ஆட்சியில் தொடர் நிகழ்வாகி வரும் ரயில் விபத்துகள்
ரயில்வே தொழிலாளர்கள் விதிகளை மீறி செயல்பட்டதே ரயில் விபத்திற்கு காரணம் என்று அவர்களின் மீது பழியை போட்டுவிட்டு, விபத்திற்கு முக்கிய காரணமான தானியங்கி சிக்னலில் ஏற்பட்ட பழுதை ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு மூடி மறைத்துள்ளது.
🔴LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயப் படுகொலைகள் | கண்டன ஆர்ப்பாட்டம் | காஞ்சிபுரம் – ராணிப்பேட்டை
🔴LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயப் படுகொலைகள்;
தமிழ்நாடு அரசே முதன்மைக் குற்றவாளி!
கண்டன ஆர்ப்பாட்டம் | காஞ்சிபுரம் – ராணிப்பேட்டை
https://www.facebook.com/vinavungal/videos/920901109840647
https://www.facebook.com/vinavungal/videos/1431231070860587
காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட கென்ய மக்கள் – தப்பி ஓடிய எம்.பி.க்கள்!
ஆரம்பத்தில் தலைநகர் நைரோபியில் வெடித்த மக்கள் போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி கிட்டத்தட்ட அனைத்து பிரதான நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மக்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பக்ரீத் அன்று முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு கலவரங்களை நடத்தியுள்ள பாசிசக் கும்பல்
ஆட்சி அமைத்த உடனேயே நாட்டின் பல மாநிலங்களில் காவிக் குண்டர்கள், முஸ்லீம் மக்களின் திருநாளான பக்ரீத் அன்று அவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.
பீகாரில் இட ஒதுக்கீடு உயர்வு இரத்து: மனு ‘நீதி’ அடிப்படையிலான தீர்ப்பு
இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட 50 சதவிகித இட ஒதுக்கீடு என்ற வரம்பைத் தாண்டக் கூடாது என்றால், ‘உயர்சாதி’ ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு (EWS) மட்டும் எப்படி சாத்தியமானது?