விடிந்ததும் ஒவ்வொருவரும் எதைப் பார்க்கிறோமோ இல்லையோ, கண்ணாடியை பார்க்கத் தவறுவதில்லை. முகம் பார்க்க மட்டுமல்லாமல், வீடு, ஆபரணப் பொருட்கள், கட்டிடங்கள், மருத்துவம், உடல்நலம், ஆட்டோமொபைல் என கண்ணாடி நமது வாழ்க்கையோடு கலந்து விட்ட ஒன்று. இந்தியாவில் கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கண்ணாடி ஆபரணங்கள் புழக்கத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
முகம் பார்க்கும் கண்ணாடி, மூக்கு கண்ணாடி, அறிவியல் சோதனைகளில் பயன்படும் கண்ணாடிப் பாத்திரங்கள் – குடுவைகள், மின்விளக்குகள் போன்ற பயன்பாட்டிற்கு அப்பால், இன்றைய முதலாளித்துவ கட்டத்தில் மிகப்பெரிய ஆடம்பரப் பொருளாகவும் கண்ணாடி மாறியிருக்கிறது.
முதலாளிகள், வணிகர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மீது மோகத்தை உண்டாக்கி சந்தைப்படுத்த கண்ணாடிச் சுவர்களினாலான காட்சி அறைகளை (showroom) உருவாக்கி வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கிறார்கள். தங்களது சொகுசு மாளிகைகளின் முகப்பை கண்ணாடிப் பொருட்களால் அலங்கரித்து தற்பெருமை கொள்கிறார்கள்.
1 of 3
சென்னை போன்ற நகரங்களில் முளைத்திருக்கும் மால்களில் உள்ள ஒவ்வொரு ஷோரூமும், நுகர்வு போதையில் மயங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தினரை ஈர்த்துக் கொள்ள முழுவதும் கண்ணாடிகளாலேயே இழைக்கப்படுகின்றன.
இத்தகைய கவர்ச்சி பிரம்மாண்டங்களில் பின்னிப் பிணைந்திருக்கும் கண்ணாடியின் பின்னே உள்ள மனித உழைப்பை என்ன? கண்ணாடிகளை ஏற்றுவது இறக்குவது, அவற்றைத் தேவையான இடங்களில் பொருத்தி நிறுத்துவது போன்ற செயல்கள் சாதாரணமாக நம்மை கடந்து போகலாம். 5 அடிக்கு 12 அடி உள்ள ஒரு கண்ணாடியைத் தூக்கும் 4 தொழிலாளர்களும் ஒத்த இசைவோடு வேலை செய்ய வேண்டும். ஒருவர் கொஞ்சம் கவனம் தவறினால்கூட மொத்தமும் சிதறிவிடும். முதலாளிகளின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தும் இந்தத் தொழிலாளர்களின் வாழ்வும் நொறுங்கிப் போன கண்ணாடித் துண்டுகளாய் இறைந்து கிடக்கிறது!
சென்னை, பாரிமுனை கந்தசாமி கோயில் தெருவில், கண்ணாடி ஏற்றி இறக்கும் தொழிலாளி ராமகிருஷ்ணனை சந்தித்தோம்.
கண்ணாடி ஏற்றி இறக்கும் தொழிலாளி ராமகிருஷ்ணன்.
”பத்து பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி, கண்ணாடி ஏத்தி எறக்குற வேலைக்கெல்லாம் யாரும் வரமாட்டாங்க. ஏன்னா நிதானமா வேலை செய்யணும். இல்லேன்னா கை கால கிழிச்சிடும், சில நேரம் உயிருக்கே ஆபத்தாயிடும்.
ஒருமுறை மாடிக்கு கண்ணாடியை ஏத்தும்போது, கயிறு அறுந்து விழுந்ததுல கால்ல அடிபட்டுருச்சு. ஓரம் பாலிஷ் போடலன்னா ரொம்பவே நிதானமா தூக்கணும். இல்லேன்னா இந்த மாதிரிதான் (தனது உடம்பில் உள்ள காயங்களைக் காண்பிக்கிறார்) அங்கங்கே கிழிச்சிடும். அதனால இந்த வேலைக்கு வர்றத யாரும் விரும்ப மாட்டாங்க.
1 of 2
ராமகிருஷ்ணன் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள்.
மாடியில் இருந்து கண்ணாடி காலில் விழுந்ததால் ஏற்பட்ட காயத்தை காண்பிக்கும் ராமகிருஷ்ணன்
முன்னெல்லாம் ஜன்னல், கதவுக்கு கண்ணாடி தேவைன்னா வடபழனி, விருகம்பாக்கம்… ஏன், எந்தெந்த ஊருலேருந்தோ பாரிசுக்குதான் வருவாங்க. இந்த செயின்ட் கோபைன் கம்பெனி வந்த பிறகு ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெரு கடையைத் தொறந்துட்டான். எங்க தொழிலே அழிஞ்சி போச்சு.
அப்பல்லாம் ஒரு நாளைக்கு 700, 800, 1000 ரூபாயின்னு சம்பாதிச்சோம். இன்னிக்கு 300 ரூபா கெடைக்கிறதே பெரும்பாடாயிருக்கு.
கண்ணாடியை சுமந்து செல்லும் உழைப்பாளிகள்.
பையன் படிச்சிட்டு மருந்து கம்பெனியில வேலை செய்யிறான். ஏதோ அவன் குடும்பத்த பாத்துகிட்டிருக்கான், அதுவே போதும்’ – என வேதனை தொண்டையை அடைக்க, மேலும் தொடர்ந்தார்.
‘‘நாம மத்தவங்க கைய எதிர்பார்க்க முடியுமா? பெத்த புள்ளன்னாலும் வயிறும் வாயும் வேறதானே. வேல இல்லாத நாள்ல பெட்டி (பேக்கிங்) அடிக்கப் போவேன். இப்ப எலக்ட்ரிகல் வேலை கூட கத்துகிட்டேன். இது இல்லேன்னா அது, இப்படியே எங்க பொழப்பு ஓடிகிட்டிருக்கு.”
கண்ணாடியை ஏற்றி இறக்க தொழிலாளர்கள் பயண்படுத்தும் அதிகபட்ச பாதுகாப்பு கருவி இந்த சிறு இரப்பர் துண்டு மட்டும்தான்.
மும்பை, தாராவியை சேர்ந்த ஒரு குடும்பம் தமது 50 சதுர அடி வீட்டை ரேகா பாக்லே என்பவருக்கு மாதம் ரூ. 750-க்கு வாடகைக்கு விட்டுள்ளது. அக்குடும்பம் அனைத்து வார நாட்களிலும் காலை 10.30 முதல் மதியம் 3 வரை அவ்வீட்டை ரேகா பாக்லேவிடம் ஒப்படைக்கும். அந்த அடைசலான வீட்டில் தான் சிவசக்தி சாவ்ல் மழலையர் பள்ளியை ரேகா பாக்லே நடத்தி வருகிறார். மேலும் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கான மைய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் (Integrated Child Development Scheme) கீழ் ஒதுக்கப்பட்ட பல்வேறு பணிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
அருகிலிருக்கும் குழந்தைகள், கருவுற்ற பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்களை அவர் கொடுக்கிறார். அவர்களது உடல்நலத்தை பற்றி பதிவு செய்கிறார். இளம் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பற்றியும் குழந்தை பராமரிப்பு பற்றியும் அறிவுரை கூறுகிறார். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமைத்த சூடான உணவை அளிப்பதுடன் 25 முதல் 30 குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் பணிபுரிகிறார்.
குழந்தைகள் சென்ற பிறகு பாக்லேயும் அவரது உதவியாளர் ஹேமா கடமும் சேர்ந்து இரண்டு மணி நேரம் செலவிட்டு அவர்களது அன்றைய வேலைகள் பதிவேடுகளில் பதிவு செய்கிறார்கள்.
இக்கடுமையான 6 நாள் வேலைகளுக்கு மைய அரசு கொடுக்கும் 3,000 ரூபாய் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசு கொடுக்கும் ஊக்கத் தொகையையும் சேர்த்து 7,000 ரூபாய் ஊதியமாக பாக்லே பெறுகிறார். அதேபோல அங்கன்வாடி உதவியாளர் கடம் 3,500 ரூபாய் மாத ஊதியமாக பெறுகிறார்.
அரசு திட்டதிற்காக அவர்கள் பணிபுரிந்தாலும் அவர்களுக்கு கொடுப்பதை சம்பளம் என்று குறிப்பிடாமல், வெகுமானம் என்றுதான் அதிகாரபூர்வமாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகத்தான் அங்கன்வாடி பணியாளர்கள், துணை மருத்துவ தாதியர் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர்களின் (ASHA) வெகுமானத்தை அதிகரிக்கப் போவதாக கடந்த செப்டெம்பர் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது பாக்லே-வுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.
நடக்கவிருக்கும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை முன்னுறுத்தி மோடியின் இந்த அறிவிப்பின் படி அங்கன்வாடி பணியாளர்களுக்கான வெகுமானத்தை ரூ.3,000 -லிருந்து ரூ.4,500-ஆக உயர்த்தப்படுகிறது. அதே போல கிராமங்களில் சிறிய அங்கன்வாடிகளை தனியாக நடத்தி வரும் பணியாளர்களின் வெகுமானத்தை ரூ.2,200- லிருந்து ரூ.3,500-ஆகவும் உதவியாளர்களின் வெகுமானம் ரூ.1,500-லிருந்து ரூ. 2,250-ஆகவும் தற்போது உயர்த்தப்படும்.
துணை மருத்துவ தாதியர் மற்றும் கிராம அளவில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட சமூக நல ஆர்வலர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் குறிப்பிட்ட வேலையை முடிக்கும் பட்சத்தில் அவர்களது வழக்கமான ஊக்கத் தொகையை மைய அரசு இரண்டு மடங்காக்கியிருக்கிறது.
தற்போது மருத்துவமனையில் குழந்தை பிறப்பதை உறுதிப்படுத்தினால் 200 ரூபாயும், குழந்தைக்கு தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்தினால் 100 ரூபாயும் கிடைக்கிறது. அவர்கள் இனி இரண்டு மடங்காக பணத்தை பெறுவார்கள்.
இதனை ஊதிய உயர்வில் ஒரு மைல்கல் என்று மோடி அரசு அழைத்தது. ஆனால் நாடு முழுவதும் உள்ள 28 இலட்சம் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 11 இலட்சம் ஆஷா மற்றும் மருத்துவ துணை தாதியர்களுக்கு இந்த வெகுமானத் தொகை மாற்றங்கள் சிறு ஆறுதலையே கொடுத்திருக்கிறது.
இந்த பணியாளர்களில் கிட்டத்தட்ட அனைவருமே பெண்கள். முன்னணி சுகாதார பணியாளர்களாக இன்றியமையாத பணியாற்றுவதால் அரசு ஊழியர்களாக தங்களை அங்கீகாரம் செய்ய வேண்டுமென்று பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
செம்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் நடத்தப்பட்ட கிசான் மஸ்தூர் சங்கர்ஸ், பேரணியில் இலட்சக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டுமென்றும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
மைய அரசு, அவர்களது முதன்மையான கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல், அவர்களது வெகுமானத்தை மட்டும் அதிகரித்துள்ளது. அதன்மூலம் இந்தியாவின் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து குறிக்கோள்களை வேர்மட்ட அளவில் கொண்டு செல்லும் அவர்களை ஊழியர்களாக அங்கீகாரிக்காமல் வெறும் சேவை செய்பவர்களாகவே பார்க்கிறது.
“நாங்கள் செய்யும் வேலைக்கு போதுமான அளவிற்கு எங்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. மேலும் இந்த வெகுமான உயர்வு எங்களது வருமானத்தை பெரிய அளவில் அதிகரிக்காது” என்கிறார் 12 ஆண்டுகளாக அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வரும் பாக்லே.
“ஏன் எங்களை முறையான ஊழியர்களாக அங்கீகரிக்க இந்த அரசு மறுக்கிறது? ஏன் அவர்களால் எங்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் கூட கொடுக்க முடியவில்லை?” என்று கேட்கிறார்.
அங்கன்வாடி பணியாளர்களின் அவலநிலை :
பயிற்சி மிக்க ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000 அளிக்க வேண்டும் என்று இந்தியாவின் 7-வது ஊதிய ஆணைக்குழு நிர்ணயித்த போதிலும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் அற்பமான ரூ.3000-ஐ விட சிறிது கூடுதலாகப் பெறவே பல ஆண்டுகள் தொடர்ந்து போராடி கொண்டிருக்கின்றனர்.
இந்த ரூ.3,000-ல் மைய அரசின் பங்கு 60 விழுக்காடு. மீதியை மாநில அரசுகள் தருகின்றன. அங்கன்வாடி சங்கங்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் போராடி வந்ததன் பயனாக சில மாநிலங்கள் அவர்களது வெகுமானத்தை அதிகரித்து ஊக்கத்தொகையை அளித்தன.
கடந்த 2017-ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் தன் மனக்குமுறலை வெளியிடும் ஊழியர் (கோப்புப் படம்).
சான்றாக, மகாராஷ்டிரா அரசு தற்போது 7,000 ரூபாய் மாத ஊதியமாக அங்கன்வாடி பணியாளர்களுக்கு கொடுக்கிறது. கேரளா 10,000 ரூபாயும், தெலங்கானா 10,500 ரூபாயும், அரியானா மாநிலம் சமீபத்தில்தான் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வெகுமானத்தை ரூ.11,400ஆக உயர்த்தி உள்ளது. இதுதான் நாட்டிலேயே அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் வெகுமானமாகும்.
அதிகமான பணியாளர்களுக்கு ரூ.3000 கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற போதிலும் உத்திரப்பிரதேச மாநிலம், அங்கன்வாடி பணியாளர்களுக்கு நாட்டிலேயே மிகக்குறைவாக ரூ.1000 மட்டுமே மாத ஊதியமாக கொடுத்து வருகிறது.
வாரத்தின் ஆறு நாட்களிலும் முழு நேரம் பணிப்புரிந்தாலும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கிடைக்கும் [சொற்பமான] ஊதியத்தில் பாதியே அவர்களது உதவியாளர்களுக்கு கிடைக்கிறது.
தற்போது அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு 50-60 விழுக்காடு ஊதிய உயர்வை அரசு அளித்திருந்தாலும் இது வெறுமனே 750-1500 ரூபாய் மட்டுமே அவர்களது மாத ஊதியத்தை அதிகரிக்கும்.
“இந்த சொற்ப ஊதிய உயர்வுக்கு பதிலாக அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரியானா மாநிலம் கொடுக்கும் ஊதியத்தைக் கொடுக்கச் சொல்லியாவது மாநிலங்களுக்கு மைய அரசு வழிகாட்டியிருக்கலாம்” என்று சிபிஎம் கட்சி-யின் அனைத்திந்திய அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ.ஆர்.சிந்து கூறினார்.
நிபந்தனையாக ஊக்கத்தொகை பெரும் ஆஷா பணியாளர்கள் :
வாரத்தின் ஏழு நாட்களும், இரவுபகல் பாராமல் பணிபுரியும் ஆஷா பணியாளர்களின் நிலைமை மோசமாக இருக்கிறது. எந்த நேரமாக இருந்தாலும், நீண்ட தூரம் பயணம் செய்து குடும்பங்களுடனான கலந்தாய்வு மற்றும் பெண்களையும் குழந்தைகளையும் முதன்மை சுகாதார நிலையங்களுடன் இணைப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றனர் இந்தப் பணியாளர்கள்.
ஆயினும், உலகளாவிய தடுப்பூசி திட்டம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் உடல்நலம், துப்புரவுப்பணி மற்றும் வேறு பல திட்டங்களுக்கான குறிப்பிட்ட இலக்குகளை அடைவதைப் பொறுத்தே அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
பொதுவாக, பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 8 வெவ்வேறு திட்டங்களை முடிப்பதற்காக ஒரு ஆஷா பணியாளருக்கு 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாய் வரை மைய அரசு வழங்குகிறது. மாநில அரசுகள் வேறு வேலைகளுக்காக கூடுதலாக ஊக்கத்தொகையை அளித்தாலும் மாநிலத்திற்கு மாநிலம் அது வேறுபடுகிறது.
“தெலங்கானாவில் பிற அரசு திட்டங்களுக்காக வேலை செய்தால் மட்டுமே ஆஷா பணியாளர்கள் அதிகபட்சம் ரூ.6,000 பெற முடியும். ஆந்திரப்பிரதேசத்தில் அரசு திட்டங்களுக்காக எவ்வளவு வேலைகள் செய்யச் சொன்னாலும் அதிகபட்சம் ரூ.7,500 மட்டுமே ஆஷா பணியாளர்களுக்கு கிடைக்கும்” என்று அனைத்திந்திய ஆஷா பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் நிருளா கூறுகிறார்.
“ஆஷா பணியாளர்கள் முறையாக பயிற்சி பெற்றவர்கள். பயிற்சி பெறாத பணியாளர்கள் கூட கேரளாவில் நாளொன்றிற்கு 600 ரூபாய் கூலியாக பெறுவதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்” என்று மேலும் அவர் கூறினார்.
”மைய அரசு அறிவித்துள்ள வெகுமான உயர்வு என்பது ஆஷா பணியாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் எட்டு அல்லது ஒன்பது முதன்மையான வேலைகளுக்கு மட்டும்தான். ஆனால் எதார்த்தத்தில் ஆஷா பணியாளர்கள் குறைந்தது 35 விதமான வேலைகள் கொடுக்கப்படுகின்றன. அவற்றில் சிலவற்றிற்கு ஊக்கத்தொகை கிடைக்கும் ஏனைய வேலைகளுக்கு எதுவும் கிடைக்காது.” என்கிறார் நிருளா.
சொற்பமான வெகுமானம் வழங்கப்படுவது மட்டுமே அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களின் பிரச்சினை இல்லை. எல்லா மாநிலங்களிலும் காலந்தாழ்ந்து ஊதியம் கொடுப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலைமை இரண்டு முதல் ஆறு மாதங்களுக்கு முன்னணி பணியாளர்களை தவிக்க விடுகிறது. சான்றாக, பல ஆண்டுகளாக தாராவியில் பணிபுரியும் பாக்லே இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் வெகுமானத் தொகையை பெற்று வருகிறார்.
நிலைமையை மோசமாக்கும் வகையில் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களை வாங்குவதற்கான நிதியை கூட பல மாநிலங்கள் காலம் தாழ்த்துகின்றன. “உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் ஆறு மாதம்வரை கூட உணவுப்பொருட்கள் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை” என்கிறார் சிந்து. “சில அங்கன்வாடி பணியாளர்கள் அவர்களது சொந்தப்பணத்தை செலவு செய்கிறார்கள். பணம் திரும்ப கிடைக்கும் என்று அதிகாரிகள் அவர்களிடம் கூறுவதால் அவ்வாறு செலவழிக்கின்றனர்” என்று அவர் மேலும் கூறினார்.
பீகார், ஜார்கண்டு, சட்டிஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் 70% அங்கன்வாடிகள் இதே மோசமான நிலைமைகளில்தான் இயங்குகின்றன என்று சிந்து கூறினார்.
மகாராஸ்டிராவில் இதே போன்றதொரு பிரச்சினையை சுபா ஷமிம் சந்தித்துள்ளார். “மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சத்துணவிற்கான நிதி ஓராண்டாக வழங்கப்படவில்லை. அதனால் எங்களது சொந்த பணத்தை இதற்காக செலவு செய்து வந்தோம்.” என்று சி.ஐ.டி.யூ-வின் மாநில பொது செயலாளர் ஷமிம் கூறினார். “பின்னர் கடைசியாக, எங்களுக்கு ஐந்து மாத நிதி செப்டம்பர் மாதத்தில் ஒருசேர கிடைத்தது. ஆனால் அதுவும் கூட மார்ச் மாதம் வரைதான் கிடைத்தது” என்றார்.
அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களின் உடல் நலத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு குறைந்த அளவு நடவடிக்கைகள் கூட அரசாங்கம் எடுக்காத நிலையில் அவர்கள் மோசமான நிலைமைகளிலேயே பெரும்பாலும் வேலை செய்கின்றனர். கருவுற்ற பெண்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல ஆஷா பணியாளர்கள் உதவுவதால் இக்கட்டான நேரங்களில் கூட மகப்பேறு பார்க்கிறார்கள் மேலும் இந்த வழிமுறைகளை செயல்படுத்துகையில் துன்புறுத்தல்களையும் சந்திக்கிறார்கள்” என்கிறார் நிருளா.
பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக நகர சேரிப்பகுதிகளில், அங்கன்வாடி பணியாளர்கள் தூய்மையற்ற நெருக்கடியான நிலைமைகளில் பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். “நாங்கள் அங்கன்வாடியை நடத்தும் வீட்டின் நுழைவுக்கதவு பக்கத்தில் ஒரு சாக்கடை ஓடிக்கொண்டிருக்கிறது. சில நேரங்களில் குழந்தைகள் அதில் விழுந்து நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். இந்த அரசு எங்களது அங்கன்வாடிக்கு ஒரு நல்ல இடத்தை கொடுப்பதில்லை” என்று பாக்லே கூறுகிறார்.
பாலினப் பாகுபாடு முதன்மையான காரணிகளில் ஒன்று :
ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை, அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க மறுப்பதற்கு பாலின பிரச்சினையும் ஒரு காரணம். “பாலினம் இங்கே முதன்மையான பிரச்சினைகளில் ஒன்று” என்கிறார் நிருளா.
“இங்கே பெண்கள் செய்வதெல்லாம் அக்கறைக் கொள்ளுதல், ஊட்டச்சத்து மற்றும் உடல்நலம் பேணல் தொடர்பான வேலைகள்தான். எனவே இது வீட்டு வேலைகளின் தொடர்ச்சி என்றே பெண்களிடம் கூறப்படுகிறது.” என்று அவர் மேலும் கூறினார்.
ஆஷா பணியாளர்கள் மற்றும் துணைச்செவிலியர் மருத்துவ பயிற்சியாளர்கள் அனைவரும் முதன்மையான சுகாதாரப் பிரச்சினைகளை சமாளிக்க பயிற்சி பெற்றிருந்தாலும், இதுதான் நிலைமை. இவர்கள் திறன்மிகு தொழிலாளர்கள் என அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ஷமிம் அதை இன்னும் அப்பட்டமாக கூறுகிறார். “பெண்களாக இருப்பதால் குறைந்த ஊதியத்திற்கும் கூடுதலாக வேலையை எங்களிடம் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்கிறார். அங்கன்வாடி தொழிலாளர்கள் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு கூடுதலாக ஸ்வாச்சத்தா அபியான் (Swachhata Abhiyan) போன்ற திட்டங்களிலும் வேலை செய்ய தள்ளப்படுகிறார்கள். எங்களில் சிலருக்கு கிராமத்தில் உள்ள நாய்களையும் பன்றிகளையும் கணக்கெடுக்க சொல்லி கூட வேலை கொடுக்கிறார்கள். ஆனால் இதற்கு கூடுதல் ஊதியம் இல்லை. சில நேரங்களில் பணியாளர்கள் மறுக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் எப்படியும் அவர்களை நிர்பந்தித்து வேலை வாங்கி விடுகிறது” என்கிறர் ஷமிம்.
இதுக்குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடமும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடமும் ஸ்க்ரோல் இணையதளம் கேட்ட போது அவர்கள் பதிலேதும் அளிக்கவில்லை.
இயற்கையாய்
நடந்ததற்கு
யாரை குறை சொல்வது
என்கிறார்கள்?
பேரிடரும், பேரழிவும்
இயற்கை எனில்
பெருகி வரும் கண்ணீரும்
இயற்கைதான்.
அந்தக் கண்ணீரில்
சூடாகி
எழும்பி வரும் கேள்விகளும்
இயற்கைதான்.
கிளர்ந்து வரும்
கேள்விகளை மட்டும்
செயற்கை என்றும்
சிலர் தூண்டல் என்றும்
சித்தரிப்பது ஏன்?
கஜா புயலை
அரசியலாக்க கூடாதாம்!
சரி, உங்கள் அரசியலே
கஜா புயலாக இருப்பதை
இந்த நேரத்தில்
சிந்திக்காமல்
இருக்க முடியுமா?
தண்ணியில்லாமல்
டெல்டாவை அழித்து
மாற்று பயிருக்கு
தள்ளியது யார்?
கார்ப்பரேட் வலைகளை
நீந்த விட்டு,
ஆலைக் கழிவுகளை கடலில் விட்டு
கடல் ஒழுங்காற்று என சட்டமிட்டு
கடலை விட்டு எங்களை துரத்திவிட்டு,
கரையினில் படகுகள்
துடி துடிக்க,
மீனவர் கண்கள்
துரு பிடிக்க
வாழ்வாதாரத்தையே
ஆழித்தது யார்?
கஜா புயலா?
இல்லை
கார்ப்பரேட் அரசியலா?
மற்றதை எல்லாம்
அரசியலாக்க
அனுமதித்தது போல்
புயலை மட்டும்
அரசியலாக்காமல்
பொறுத்துக் கொள்ளுங்கள்
என்பது
இரக்கம் அல்ல
மக்களுக்கு
தாங்கள் வாழும்
நிலை தெரிந்துவிடும்
எனும் நடுக்கம்.
சாப்பிடுவதையும் சாமி கும்பிடுவதையும் கூட அரசியலாக்கும் மதவெறியர்களுக்கு, வாழ்வாதாரத்திற்கு கேள்வி எழுப்பினால் மட்டும் வலிக்கிறது.
சாப்பிடுவதையும்
சாமி கும்பிடுவதையும் கூட
அரசியலாக்கும்
மதவெறியர்களுக்கு,
வாழ்வாதாரத்திற்கு
கேள்வி எழுப்பினால் மட்டும்
வலிக்கிறது.
புயல்
பொதுவாகத்தான் அடிக்கிறது
ஆனால்
அது எப்போதும்
ஏழைகளை மட்டுமே
மீள முடியாமல்
ஏன் வதைக்கிறது?
இது
இயற்கையின் ஏற்பாடா
இல்லை
ஏற்றத்தாழ்வான
அரசியல் சமூக அமைப்பின்
நிலைப்பாடா?
புயல்
வயல்களையும்
மரங்களையும்
தென்னைகளையும்
கோழிப் பண்ணைகளையும்
குடிசைகளையும் மட்டும்
பெயர்க்கவில்லை,
அரசியலையும்
பெயர்த்துப் போட்டிருக்கிறது.
அரசு
எத்தகையது என
அடையாளம் காட்டியிருக்கிறது.
முன்பு
பயிருக்கு
தண்ணீர் கேட்டோம்
இன்று
உயிருக்கு
தண்ணீர் கேட்கிறோம்
இரண்டுக்குமே
லாயக்கற்றதாய்
இருக்கும் அரசை
ஏன் சுமக்க வேண்டும்
மக்கள்?
இருபத்தி நான்கு மணி நேரமும்
செயற்கை நீரூற்றும்
எந்நேரமும்
மின் இழைகளால்
மினுக்கும் மால்களும்,
எந்தப் புயலுக்கும்
வாழ்வாதாரத்தை இழந்துவிடாத
அம்பானி
எண்ணெய் வயல்களும்
அதானி
கார்ப்பரேட் தோப்புகளும்
நிரம்பி வழியும் நாட்டில்
விவசாயிகள் வாழும்
தெருவுக்கு
நாலு அடி பம்பு
வார்டுக்கு பத்து கிணறு
‘மேக்இன்’ இந்தியாவால்
முடியாதா?
அனுப்பிய
எல்லா ‘இன்சாட்டுகளும்’
பூமிக்கு அடியில் உள்ள
பொக்கிசங்களை காட்டும்
திறன் படைத்தும்,
பூமிக்கு மேலே உள்ள
எங்கள் வாழ்க்கையை பாதுகாக்கும்
தேவைகளுக்கு
திறன் அற்றது போலும்!
தடுத்தது யார்?
கஜாவா? வர்தாவா?
இல்லை கண்டுகொள்ளாத
அரசியல் பர்தாவா?
சந்தைப் பொருளாதாரத்தால்
முற்றிலுமாக கைவிடப்பட்ட
விவசாயிகள், மீனவர்கள்
சிறு தொழிலாளர்கள்
சொந்த முயற்சியால்
தேடிய வாழ்வை
இழந்து இப்போது
நேருக்கு நேர்
உங்களை சந்திக்கும் படி
ஆனது தான்,
எல்லா திரைகளையும்
புயல் விலக்கி
சுரண்டுபவர்கள்
அச்சு அசலாக
கண்ணுக்கு தெரிவதுதான்
இப்போது
ஆளும் வர்க்கத்திற்கு
புயலாக
இடிக்கிறது.
காப்புக்காடுகள் அழிவு
புயல் வேகம் நுழைவு,
மலைக்காடுகள் அழிவு
நிலச்சரிவு,
ஆற்றுமணல் கொள்ளை
நிலத்தடிநீர் கொலை,
மெல்ல மெல்ல
நீங்கள் பறிக்கும்
வாழ்வாதாரத்தை
கஜா
உடனே காட்டிவிட்டது.
இயற்கையின் மீது
மொத்த பழியையும்
போட்டுவிட்டு
எப்படி தப்பிக்க முடிகிறது
உங்களால்?
எங்களால் முடியாது!
தடித்த மரம் விழுந்து
கழுத்து நெறிந்த மாட்டின்
கன்றுக்கு
பொறுப்பு நாங்கள்தான்.
இனி அது
அம்மா என அலறினால்
அரவணைப்புக்கு
நாங்கள் தான்.
ஆட்டையும் மாட்டையும்
அப்படியே விட்டுவிட்டு
போக மணமில்லாமல்
வீட்டு சுவர் இடிந்து
செத்தவர்கள் நாங்கள்.
இயற்கையின் மேல்
பழிபோட்டு
எங்களால் தப்பிக்கத்
தெரியாது!
படுப்பதற்கு முன்பே
கோழிக்கு
தண்ணீர் இருக்கிறதா என
பார்த்துவிட்டு
தூங்குவது எங்கள் பழக்கம்,
ஆறு மணியானால்
வீடு வராத ஆட்டை
பிள்ளையைப் போல்
பெயர் சொல்லி
“ஏ! ராணி” என
குரல் எழுப்பி
தேடுவது எங்கள் வழக்கம்
ஏன்?
தெருநாய்
காணவில்லை என்றால் கூட
தேடிக் கூப்பிட்டு
சோறு வைத்து
அது தின்று பசியாறும் வரை
நீள்வது எங்கள் பாசம்.
கூரையில் குருவியும்
மண்சுவரில் எறும்பும்
தென்னையில் அணிலும்
வாசலில் தும்பியுமாய்
கூடி வாழ்ந்த எங்களால்
இயற்கையை
காரணம் காட்டி
இவைகளைத்
தவிக்க விட்டுப் போக
முடியாது?
இப்போது
எதைப்பற்றியும் பேசாதீர்கள்
இது நிவாரணக் காலம்
என்பவர்களே,
நன்றி!
நீங்கள் எவ்வளவு தந்தாலும்
புயல்
அரசியலாய் அடிக்கிறது.
அரசியல்
புயலாய் நீடிக்கிறது.
இயற்கைக்கு மாறாய்
எப்போதும் நம்மை
வர்க்க அழுத்த தாழ்நிலையில்
வைத்திருக்கும்
அரசியலுக்கு
முக்கியமாக
ஒரு நிவாரணம்
தேவை என்பதை
இந்த சந்தர்ப்பத்திலாவது
நீங்கள் அறிவீர்களா!
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமம் சந்தகாளிபாளையம் சாமியார் தோட்டம். கடந்த 2005-ஆம் ஆண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 150-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. தற்போது, இப்பகுதியில் 152 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும், அன்றாடம் தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள். பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்கள் கணிசமாக உள்ளனர். தங்களது அன்றாடப் பயன்பாட்டிற்கான நீர்த்தேவைக்காக, முக்கியமாக குடிநீர்த் தேவைக்காக அன்றாடம் இரண்டு கி.மீ. தொலைவு அலைந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். இன்று நேற்றல்ல, கடந்த 13 ஆண்டுகளாகவே இதுதான் நிலைமை.
பயன்படுத்த இலாயக்கற்ற பாழ்பட்ட கிணறு.
நெரூர் மெயின்ரோட்டில் உள்ள திறந்தவெளிக் கிணற்றிலிருந்து (உப்புநீர் ) நீரை எடுத்து விநியோகித்து வருகிறது, ஊராட்சி நிர்வாகம். திறந்தவெளிக் கிணற்று நீர் பாழ்பட்டு பல காலமாகிவிட்டது. சாக்கடையாகிப் போன இந்த நீரைத்தான் இப்போதுவரை விநியோகித்து வருகிறது. அதுவும், பத்துநாளுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படும், இந்த சாக்கடை நீரைப் பிடிப்பதற்குக் கூட போதிய குழாய்களும் ஊரில் இல்லை. ஊரின் முகப்பிலுள்ள ஒரே ஒரு தெருவிளக்கு மட்டுமே எரியும். ஊரிலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட மற்ற மின்கம்பங்களின் தெருவிளக்குகள் எரிவதில்லை.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக, அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்தப் பலனுமில்லை. இந்நிலையில்தான் கடந்த, ஏப்ரல் 30-ஆம் தேதியன்று மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களின் உதவியோடு இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வழக்கம்போல, மனுவைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக நல்லபடியாக பேசி அனுப்பினார், ஆட்சியர். இதனைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட துறை அதிகாரியான வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.செல்வி அவர்களை நேரில் சந்தித்தும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது பற்றி அவ்வப்போது நினைவூட்டியும் வந்தனர், இப்பகுதி மக்கள்.
இந்நிலையில், கடந்த ஆறு மாத காலமாக நீண்ட உறக்கத்திலிருந்த அதிகாரிகள் திடீரென்று கிராமத்துக்கு படையெடுத்து வந்தனர். திறந்தவெளிக் கிணற்றையும், ஊரையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ‘’கூட்டு குடிநீர்த் திட்டத்தை நீட்டிப்பு செய்தால்தான் இப்பகுதிக்கு தண்ணீரைத் தரமுடியும். தெருவிளக்கு பொருத்த ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டிருக்கிறது’’ என்ற சடங்குத்தனமான வார்த்தைகளைப் போட்டு எல்லாம் சரியாகத்தானிருக்கிறது என்ற ரீதியில் மனுவை நிராகரித்திருக்கிறார் பி.டி.ஓ. செல்வி.
1 of 2
மனுவை நிராகரித்த பி.டி.ஓ.
நீர் பரிசோதனை 'அறிக்கை'
மனுவை நிராகரிக்கப்பட்டதற்கெதிராக மீண்டும் பி.டி.ஓ. செல்வியிடம் முறையிட்டனர், இப்பகுதி மக்கள். திறந்தவெளிக் கிணற்றின் நீரை மாதிரிக்கு எடுத்து, நவ-17ஆம் தேதியன்று ஆய்வுக்காக கரூர் நகராட்சி குடிநீர் பரிசோதனை நிலைய அலுலவக அதிகாரியிடம் வழங்கினர். அவரும் அந்த நீரை ஆய்வு செய்துவிட்டு, நீரில் அமிலத்தன்மை இருக்கிறது, குடிப்பதற்கு உகந்ததல்ல என்று வெற்றுத்தாளில் எழுதிக் கொடுத்துள்ளார். அலுவலக முத்திரைக் கூட அதில் இல்லை. ஆணையரும், பி.டி.ஓ.வும் அந்தத் தண்ணிக்கு என்னக் குறைச்சல், சாக்கடையும் கலக்கல, ஒன்னும் கலக்கல, எல்லாம் குடிக்கலாம், என்று திமிராகப் பேசுகின்றனர்.
இந்த நிலையில், அதிகார வர்க்கத்தின் அலட்சியம் மற்றும் வக்கிரத்தை அம்பலப்படுத்தி, மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன சுவரொட்டிகள் கரூர் நகரெங்கும் ஒட்டப்பட்டன. ஆத்திரமுற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.செல்வி சம்மந்தப்பட்ட சாமியார் தோட்டம் பகுதிக்கே நவ-23 அன்று நேரில் வந்து, ‘’போஸ்டரில் எனது பெயரை எதற்காக போட்டீங்க? மக்கள் அதிகாரம் அமைப்பின் பின்னாடி ஏன் போறீங்க? தேவையில்லாம பிரச்சினையில மாட்டிக்குவீங்க’’ என்று பகுதி மக்களை மிரட்டியிருக்கிறார்.
‘’எங்க பிரச்சினையை சரி செஞ்சிருந்தா, நாங்க ஏன் போஸ்டர் ஒட்டப்போறோம்? போஸ்டர் ஒட்டுனதுல என்ன தப்பு?’’னு அவரிடமே கேள்வியெழுப்பினர். பின்னர், ‘’உங்க பிரச்சினையை சரிசெஞ்சு தாரோம். ஆனா, கொஞ்ச அவகாசம் வேணும்’’ என்று கூறிவிட்டு அவசரம் அவசரமாக கிளம்பிப் போனார் அந்த அதிகாரி.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் பின்வாங்கப் போவதில்லை என்றும்; மக்கள் அதிகாரம் அமைப்புடன் இணைந்து அடுத்தக்கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கின்றனர், இப்பகுதி மக்கள்.
இணையத்தில் வினவு ஆரம்பித்த போது இன்றைக்கிருக்கும் எண்ணிறந்த தமிழ் ஊடகங்கள் அன்று இல்லை. நூற்றுக்கணக்கான செய்தித் தளங்கள், வீடியோ சானல்கள், சமூக வலைத்தளங்களின் பிரம்மாண்டமான வளர்ச்சி என இன்று இணைய உலகம் பரபரப்பாகி விட்டது. இதில் வினவு தளத்தின் இடம் என்ன?
மாற்று ஊடகமாய் அதன் திசைவழி சரியாக அமைந்திருக்கிறதா? ஓரளவு அரசியல் பார்வையும், முற்போக்கு எண்ணமும் கொண்ட வாசகர்களுக்கு வினவு தேவைப்படுகிறதா? தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்ன மாற்றம் தேவை? இங்கு மக்கள் எதை விரும்பி படிக்கிறார்கள்? எவற்றை அவர்களுக்கு விரும்பும் வகையில் சொல்ல வேண்டியிருக்கிறது?
மக்கள் நன்கொடை – சந்தா இல்லாமல் வினவு இல்லை. ஆனால் அப்படி மக்கள் பங்கேற்கிறார்களா? வினவு நிதிச்சுமை எப்படி இருக்கிறது? அதில் மக்கள், வாசகர்கள், தோழர்கள் பங்கு என்ன? சந்தா கட்டுபவர்கள் அதிகரித்து வருகிறார்களா? விளம்பரங்கள் இன்றி கார்ப்பரேட் ஊடகங்கள் இல்லை. வினவு எப்படி நடத்தப்படுகிறது?
இவையன்றி ஊடக உலகம், மாற்று ஊடகம், வினவு செயல்பாடு குறித்து நீங்கள் சொல்ல விரும்பும் எதுவும் எங்களுக்கு முக்கியமானது. இந்த சர்வேயில் பங்கெடுங்கள்! வினவு படிக்கும் உங்கள் நண்பர்களையும் பங்கேற்கச் சொல்லுங்கள்! எங்களை சீரமைக்கவும், எங்களது சுமைகளை உங்களிடம் பகிரவும், உங்களது குரலை எங்கள் பார்வையில் பதியவும் இந்த சர்வே உதவி செய்யும். இணைந்து பயணிப்போம்.
நன்றி!
நட்புடன்
வினவு
சர்வேயில் பங்கேற்க :
சர்வே படிவத்தில் மொத்தம் 20 கேள்விகள் உள்ளன. அவை மூன்று பக்கங்களில் உள்ளன. முதல் பக்கத்தை முடித்த பிறகு தொடர்க பட்டனை அழுத்தினால் அடுத்த பக்கம் வரும். மூன்றாம் பக்கத்தில் இறுதியாக நீங்கள் சொல்லும் ஆலோசனைகளுக்கான கேள்விகள் உள்ளன. சில நண்பர்கள் முதல் பக்கத்தில் உள்ள நான்கு கேள்விகளோடு முடிக்கிறார்கள். அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பதன் மூலமே சர்வே நோக்கம் நிறைவேறும். நன்றி
கஜா புயல் பாதிப்பால் வீடிழந்து, வாழ்விழந்து, அடுத்த வேளைச் சோற்றுக்கு சாலையை எதிர்நோக்கி காத்திருக்கும் அவலத்தை சந்தித்திருக்கிறார்கள் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள். பணமாகவோ, பொருளாகவோ இம்மக்களின் இழப்பினை நிச்சயம் ஈடு செய்ய முடியாது. ஒரு தலைமுறை சேமிப்பை, உழைப்பை பறிகொடுத்து பரிதவித்து நிற்கிறார்கள். புயல் ஏற்படுத்திய பாதிப்புகளைக் காட்டிலும் அரசின் அலட்சியமும், வக்கிரமும் இம்மக்களை மேலும் காயப்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தன்னார்வலர்கள் பலரும் தம்மால் முடிந்த அளவு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்திருக்கின்றனர். இவர்கள் செய்த அளவில் கால் பங்கைக்கூட அரசு தரப்பிலிருந்து எதுவும் செய்துவிடவில்லை என்பதுதான் யதார்த்தம்.
தமிழகம் முழுவதுமுள்ள தமது அமைப்புத் தோழர்கள் வாயிலாக சாத்தியமான அளவிற்கு நிவாரணப் பொருட்களைச் சேகரித்து மக்களின் தேவைக்கேற்ப விநியோகித்தது மக்கள் அதிகாரம்.
நிவாரணப் பொருட்களை கொடுப்பதோடு கடமை முடிந்ததென்று ஒதுங்கிவிடாமல், கல்லூரி மாணவர்களையும், சமூக உணர்வு கொண்ட இளைஞர்களையும், அமைப்புத் தோழர்களையும் ஒருங்கிணைத்து புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது தொடங்கி, சரிந்து விழுந்த குடிசை வீடுகளை சரிசெய்யும் பணி வரையில் களத்தில் செய்து வருகின்றனர்.
வீடுகள் மீது விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள்.
அண்டர் காடு
1 of 4
அண்டர்காடு
அண்டர்காடு
அண்டர்காடு
அண்டர் கார்டு – கிழக்கு
1 of 5
அண்டர்காடு கிழக்கு
அண்டர்காடு கிழக்கு
அண்டர்காடு கிழக்கு
அண்டர்காடு கிழக்கு
அண்டர்காடு கிழக்கு
வேதாரண்யம்
1 of 3
வேதாரண்யம்
வேதாரண்யம்
வேதாரண்யம்
கூரைகளை இழந்த மக்களின் வீடுகளில் தார்ப்பாய் அணிவித்து கூரை வீடுகளை சரி செய்யும் மக்கள் அதிகாரம் தோழர்கள்.
ஆதனூர் கிழக்கு
1 of 7
ஆதனூர் கிழக்கு
ஆதனூர் கிழக்கு
ஆதனூர் கிழக்கு
ஆதனூர் கிழக்கு
ஆதனூர் கிழக்கு
ஆதனூர் கிழக்கு
ஆதனூர் கிழக்கு
ஆயக்காரன்புலம் 2
1 of 4
ஆயக்காரன்புலம் II
ஆயக்காரன்புலம் II
ஆயக்காரன்புலம் II
அண்டர் காடு திரௌபதி அம்மன் கோயில்
1 of 4
அண்டர் காடு திரௌபதி அம்மன் கோயில்
அண்டர் காடு திரௌபதி அம்மன் கோயில்
அண்டர் காடு திரௌபதி அம்மன் கோயில்
அண்டர் காடு திரௌபதி அம்மன் கோயில்
நிவாரணப் பொருட்கள் விநியோகம்.
ஆயக்காரன்புலம் IV
1 of 4
ஆயக்காரன்புலம் IV
ஆயக்காரன்புலம் IV
ஆயக்காரன்புலம் IV
ஆயக்காரன்புலம் IV
சுற்றுவட்டாரப் பகுதிகளில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் மின் துறைத் தொழிலாளர்களுக்கு உணவு, பிஸ்கட், தண்ணீர் விநியோகித்தனர்.
1 of 3
மின் துறை தொழிலாளர்கள்
மின் துறை தொழிலாளர்கள்
மின் துறை தொழிலாளர்கள்
தென்னாடர் கிராமம்
1 of 2
தென்னாடர் கிராமம்
தென்னாடர் கிராமம்
புதுக்கோட்டை மாவட்டப் பகுதி கிராமங்களில்…
கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் தங்கள் பகுதியிலிருந்து சேகரித்து கொண்டு வந்திருந்த நிவாரணப் பொருட்களை புதுக்கோட்டை சுற்று வட்டாரக் கிராம பகுதிகளில் விநியோகம் செய்தனர்.
1 of 4
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள், புதிய உடைகள், பால்பவுடர், குடிதண்ணீர், போர்வைகள், பிஸ்கட், பேம்பேர்ஸ், செருப்பு, நேப்கின், சோப்பு, ப்ளீச்சிங் பவுடர், பினாயில் உள்ளிட்ட பொருட்களோடு மரம் அறுக்கும் இயந்திரம் ஒன்றையும் வழங்கினர்.
எழுத்தாளர் அ. முத்துலிங்கம்‘வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்கிறதா?’ என்றார் நண்பர். இருக்கிறதே என்று பதில் கூறினேன். சொல்லுங்கள் என்றார். ‘உங்களிடம் இரண்டு மணிநேரம் அவகாசம் இருக்கிறதா?’ என்றேன்.
‘இரண்டு மணிநேரம் எதற்கு?’ ’என்னுடைய நிறைவேறாத ஆசைகளை நான் பட்டியலிடுவதானால் அதற்கு இரண்டுமணிநேரம் எடுக்கும்’ என்றேன். நண்பர் திகைத்துவிட்டார். ‘அத்தனை ஆசைகளா, சரி ஒன்றைச் சொல்லுங்கள்’ என்றார்.
‘பாரசூட்டிலிருந்து குதிப்பது என்னுடைய ஆசை’ என்றேன். அவர் என்னை ஆச்சரியமாகப் பார்க்கவில்லை. ‘அது இலகுவானது. தெரியுமா, நான் குதித்திருக்கிறேன். ஒரு பயிற்சிக்காரர் உங்களுடன் குதிப்பார். உங்களையும் அவரையும் ஒரு கயிறு இணைத்திருக்கும். அவர் இழு என்றதும் நீங்கள் பாரசூட்டை விரிக்கும் பிரத்தியேகமான கயிற்றை இழுத்தால் அது விரியும். அப்படியே சேமமாக நிலத்தை வந்து அடையலாம்’ என்றார்.
நண்பருடைய அறை ஒரு பழைய கட்டிடத்தின் 16வது மாடியில் இருந்தது. ஒரு ரயில்பெட்டி எப்படி காட்சியளிக்குமோ அப்படி ஒடுக்கமாக நீண்டிருந்தது. நடுவிலே ஒரு தூண் தொலைக்காட்சி பெட்டிக்கு முன் நின்றது. கழுத்தை இப்படியும் அப்படியும் நீட்டித்தான் டிவியை பார்க்கமுடியும். அவர் முனைவர் பட்டத்துக்கு படித்துக்கொண்டிருந்தார். நாலுபேர் அமர்ந்து சாப்பிடும் மேசை. நடுவிலே ஒரு பலகையை செருகினால் அது ஆறுபேர் அமர்ந்து சாப்பிடும் மேசையாக மாறிவிடும். அதன் முன்னால்தான் அவர் அமர்ந்திருந்தார்.
நீளவாக்கில் அடுக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான நூல்களிலிருந்து ஒருவிதமான புத்தக நெடி வீசியது. நான் ‘அது என்ன, சாள்ஸ் நதியா?’என்று கீழே சுட்டிக்காட்டி கேட்டேன். ஓமோம் என்று சொன்னபடி எழுந்து வந்து யன்னலைத் திறக்க முயன்றார். முடியவில்லை. கடந்த 30 வருங்களாக அதை யாரும் திறந்ததாகத் தெரியவில்லை.
என்னுடைய நிறைவேறாத ஆசை பிரகடனம் நண்பரை என்ன செய்ததோ அடுத்தநாள் அவர் எனக்கு டெஸ்மண்டை அறிமுகம் செய்துவைத்தார். டெஸ்மண்ட் அமெரிக்க ராணுவத்தில் ஐந்தரை வருடங்கள் சேவைசெய்துவிட்டு சமீபத்தில்தான் விலகியிருந்தார்; பாரசூட் பிரிவின் காப்டனாக இருந்தவர். நண்பர் எனக்கு இரண்டு நிபந்தனைகள் விதித்தார். ‘நீங்கள் டெஸ்மண்டிடம் என்னவும் கேட்கலாம், ஆனால் போர்பற்றி ஒன்றும் பேசக்கூடாது. அவர் என்னுடைய நண்பர், எங்கள் நட்புக்கு உங்களால் ஏதும் சேதம் ஏற்படக்கூடாது. எப்படியும் டெஸ்மண்ட் பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என்பது எனக்குத் தெரியும், அதை நான் நிறுத்த முடியாது, அவருடைய உண்மையான பெயரைமட்டும் நீங்கள் வெளியிடக்கூடாது’ என்றார். நானும் ஐந்தாம் வகுப்பு மாணவன்போல தலையை குனிந்துகொண்டு சரி என்றேன்.
டெஸ்மண்ட் ஆறடி உயரமாக இருந்தார். புஜங்கள் அகன்று இருந்தன. ஒரு சிங்கம் எழும்பி நின்றால் அதன் வயிறு எப்படி இருக்குமோ அப்படி அவருடைய இடுப்பு சிறுத்து இறுகிப்போய் இருந்தது. மெல்லிய கறுத்த பெல்ட் அணிந்திருந்தார். சிரித்துக்கொண்டே கைகளைப் பிடித்து குலுக்கினார். ஆரம்பத்திலேயே அவரிடம் இரண்டு பிரச்சினைகள் இருப்பதை நான் கண்டுகொண்டேன். மிக அடக்கமானவராக இருந்தார். வாய் திறந்து பேசமாட்டார். நான் அது செய்தேன் இது செய்தேன் என்று சொல்லும் பேர்வழியுமல்ல. ஆகவே அவரிடமிருந்து விசயத்தை பிடுங்குவது மகா கடினமாக இருக்கும். இரண்டாவது, ராணுவச் சொற்களை தாராளமாக உபயோகித்தார். அதிலே பாதி எனக்கு என்னவென்றே புரியவில்லை.
உயர்நிலை பள்ளித்தேர்வில் டெஸ்மண்டுக்கு ஆகக்கூடிய மதிப்பெண்கள் கிடைத்திருந்ததால் அவரால் அமெரிக்காவின் புகழ்பெற்ற West Point ராணுவ பயிற்சி நிலையத்துக்குள் இலவசமாக நுழைய முடிந்தது. நாலுவருட படிப்புக்கு அவருக்கு கிடைத்த புலமைப் பரிசு 250,000 டொலர்கள். இந்த நாலு வருடங்களில் பல்கலைக்கழக படிப்புடன் ராணுவ பயிற்சியும் அவருக்கு அளிக்கப்பட்டது. பயிற்சித் திட்டத்தின் நிபந்தனை என்னவென்றால் படிப்பு முடிந்த பிறகு ராணுவத்தில் குறைந்தது ஐந்து வருடங்கள் அவர் வேலை பார்க்கவேண்டும். அதற்கு பின்னர் வேண்டுமானால் ராணுவ சேவையில் தொடரலாம் அல்லது விலகலாம். டெஸ்மண்ட் ஐந்தரை வருட சேவைக்கு பின்னர் ராணுவத்திலிருந்து தானாக வெளியேறினார்.
வெஸ்ட் பொயின்ற் ராணுவ பயிற்சி கடுமையானதா என்று கேட்டேன்.
’உலகத்திலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பயிற்சிக்கூடம் இது. நான் சேர்ந்த அன்று எனக்கு வயது 18. அங்கே சேர்ப்பதற்கு அம்மா என்னை காரிலே அழைத்து வந்திருந்தார். பிரியும்போது அவர் அழுஅழுவென்று அழுதார். நான் அதுவரைக்கும் அம்மாவை விட்டு பிரிந்ததே இல்லை. எனவே என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன். ராணுவத்தின் கட்டளைப்படி நான் எடுத்து வந்தது ஒரு கறுப்பு சப்பாத்து, கறுப்பு காலுறை, ஒரேயொரு புகைப்படம். மீதியெல்லாம் ராணுவம் தந்தது. என்னுடன் சேர்ந்தவர்கள் பலர் பாதியிலேயே பயிற்சியின் கடுமை தாங்காமல் விட்டுவிட்டு போய்விட்டார்கள். எப்படியும் நாலுபேரில் ஒருவர் பயிற்சியை விட்டுவிடுவார்.’
அப்படி என்ன கடுமையான பயிற்சி? ஏதாவது உதாரணம்?
மாதிரிப் படம்
’60 றாத்தல் பொதியை முதுகில் கட்டிக்கொண்டு 12 மைல்தூரம் நடக்கவேண்டும். கனமான துப்பாக்கியை கையில் ஏந்திக்கொண்டு பல தடவை மைதானத்தை சுற்றி ஓடவேண்டும். செங்குத்தான பாறைகளில் வேகமாக ஏறவேண்டும். இப்படிப் பல தேகப்பயிற்சிகள் உண்டு. முணுமுணுக்க முடியாது, முணுமுணுத்தால் இன்னும் பெரிய தண்டனை உங்களுக்கு காத்திருக்கும். உங்களுக்காக அதிகாரிகளிடம் வாதாட ஓர் ஆன்மா இல்லை. நீங்கள்தான் உங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.’
எதற்காக பாரசூட் பயிற்சியை தேர்வு செய்தீர்கள்?
’எங்களுக்கு எல்லாவகையான ஆயுதங்களிலும் பயிற்சி கிடைத்தது. சகல தற்காப்பு கலைகளும் படிப்பித்தார்கள் எனக்கு ஏனோ ஆகாயத்தில் இருந்து குதிக்கும் அந்த சாகசமும், சுதந்திரமும் பிடித்திருந்தது.’
நீங்கள் காப்டன் ஆன பின்னர் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லுங்கள்?
’எங்கே குதிக்கவேண்டும் என்பதை தீர்மானித்த பிறகு விமானம் உங்களைக் காவிச் செல்லும். குதிக்கும் இடம் அணுகியதும் இரண்டு கதவுகள் வழியாலும் 30, 30 பேர், மொத்தமாக 60 பேர், குதிக்கவேண்டும். ஒருவருக்கும் அடுத்தவருக்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஒரு செக்கண்ட் மட்டுமே. கொடுக்கப்பட்ட 30 செக்கண்டில் அறுபது பேரும் குதித்துவிடவேண்டும். தாமதித்தால் குதிக்கவேண்டிய இடம் தாண்டிவிடும். ஒருவர் தாமதம் செய்தாலும் அது முழுக் குழுவுக்கும் ஆபத்தாக முடிந்துவிடும்.’
அப்படி உங்கள் அனுபவத்தில் ஏதேனும் நடந்ததா?
’என்னுடைய வீரர் ஒருவர் குதிக்கும் முறை வந்ததும் தயங்கி நின்று மறுத்துவிட்டார். குதிக்கும்போது ஒருவர் பின்பக்கமாக சாய்ந்து அப்படியே விழவேண்டும். அவரை நான் முழுப்பலத்தையும் பிரயோகித்து தள்ளவேண்டி நேர்ந்தது. அவர் சரியாக விழுந்து கீழே சேமமாக நிலத்தை அடைந்தார். அவரைத் தள்ளியதில் நான் நிலைதடுமாறி முன்பக்கமாக விழுந்தேன். என்னை சரிசெய்துகொள்ள முடியாமல் விழுந்து நிலத்திலே அடிபட்டு மயங்கிய நிலையில் பலநாட்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று தப்பினேன்.’
வேறு ஏதாவது அனுபவங்கள்?
’பாரசூட் குதிப்பதில் stealing the air காற்றைத் திருடுவது என்பது மிகப் பாரதூரமான குற்றம். ஒருவருக்கு மேல் இன்னொருவர் பாரசூட் இறங்கும்போது ஒருவர் காற்றை இன்னொருவர் திருடிவிடுவார். அப்படி காற்று இல்லாமல் ஒரு வீரர் நிலத்திலே விழுந்து இரண்டு காலும் உடைந்து நீண்டகாலம் மருத்துவ மனையில் இருந்தார்.’
நீங்கள் ராணுவத்தை விட்டு விலகியதையிட்டு எப்பொழுதாவது வருந்தியிருக்கிறீர்களா?
ராணுவம் என்பது ஒரு தனி நபரின் வீரதீரச் செயல் அல்ல.
’ராணுவம் என்பது ஒரு தனி நபரின் வீரதீரச் செயல் அல்ல. நீங்கள் திரைப்படத்தில் பார்ப்பது உண்மையில் நடப்பதில்லை. அது ஒரு கூட்டு முயற்சி. ஒரு குழுவின் பாதுகாப்பு ஒவ்வொருவர் கையிலும் தங்கியிருக்கிறது. ஒருவர் செய்யும் தவறு முழுக்குழுவுக்கும் பாதகமாக முடியலாம். ஆகவே நாங்கள் மிக நெருக்கமாக இருந்தோம். ஒருவருக்கு ஆபத்து என்றால் இன்னொருவர் உயிரைக் கொடுக்க தயங்க மாட்டார். என்னுடன் பயிற்சி பெற்ற சில நண்பர்கள் இறந்துபோனார்கள். சின்ன வயதில் இருந்து என்னோடு படித்து என்னோடு பயிற்சியில் சேர்ந்த என் ஆருயிர் நண்பன் போரில் இறந்துபோனான்.’
அவருடைய பெயர் என்ன?
‘பெயர் Jared C.Monti. அமெரிக்க ராணுவத்தில் வீரத்துக்கு கிடைக்கும் அதி உயர் விருதான Medal of Honor விருது அவருக்கு கிடைத்தது. வீரசாகச விருதுகள் அநேகமாக அதைச் செய்தவரின் கையில் கிடைப்பதில்லை. அவர் இறந்துவிடுவார். என்னுடைய நண்பரின் விருதை அவரின் பெற்றோர்கள் 2009ம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்கள். என் நண்பரை நான் விட்டு பிரிந்தது இன்றும் பெரிய குற்ற உணர்வாக எனக்குள் இருக்கிறது.’
நீங்கள் ராணுவத்தில் கற்றது உங்கள் வாழ்க்கைக்கு உதவுகிறதா?
’அங்கே கற்றது வாழ்நாள் முழுக்க உங்கள்கூட வரும். வெற்றியின் அடிப்படை பலம் குழு முயற்சி. ஒரு தலைவன் தன் கீழ் வேலைசெய்யும் வீரர்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் சம்பாதிக்கவேண்டும். கடைசியாக விடாமுயற்சி. எடுத்த காரியத்தை பாதியில் விடக்கூடாது.’
அமெரிக்க ராணுவத்தில் வீரத்துக்கு கிடைக்கும் அதி உயர் விருதான Medal of Honor விருது. (மாதிரிப் படம்)
பொறுமையாக என்னுடைய கேள்விகள் எல்லாவற்றுக்கும் டெஸ்மண்ட் பதில் அளித்தார். நான் இதற்குமுன்னர் ஒரு அமெரிக்க ராணுவவீரரை சந்தித்தது கிடையாது. அவரிடம் கேட்பதற்கு என்னிடம் நிறையக் கேள்விகள் இருந்தன. ஆனால் அறிமுகப் படுத்திய நண்பர் எனக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனால் தயக்கம் ஏற்பட்டது.
’அதெல்லாம் இருக்கட்டும், உங்களுக்கு பாரசூட்டில் குதிக்க விருப்பம் என்று உங்கள் நண்பர் சொன்னாரே’ டெஸ்மண்ட் என்னிடம் கேட்டார்.
’என் வாழ்நாள் ஆசை அது’ என்றேன்.
’இதைவிட சுலபமான ஒரு சாகசம் கிடையாது. குதிப்பதற்கு முன் பயிற்சி இருபது நிமிடம் மட்டுமே தருவார்கள். அதன் பின்னர் 14 நிமிடம் விமானப் பயணம், விமானத்திலிருந்து குதித்து நிலத்தை அடைய 6 நிமிடம். 12,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும்போது நீங்கள் குதிக்கவேண்டும். முதல் ஒரு நிமிடம் பூமியை நோக்கி சுதந்திரமாக விழுந்துகொண்டிருப்பீர்கள். உங்கள் வேகம் அப்போது மணிக்கு 120 மைல். அதன் பிறகு கயிற்றை இழுத்து 5 நிமிடம் காற்றில் மிதந்துகொண்டு கீழே இறங்குவீர்கள். பயிற்சி 20 நிமிடம், பரீட்சையும் 20 நிமிடம்.’
கால்கள் முறிந்துபோகும் என்று சொன்னீர்களே?
’நீங்கள் யோசிக்கத் தேவையில்லை. tandem jumping அபாயமில்லாதது. நான் ராணுவத்தில் ஆயிரம் பேருக்கு மேல் பாரசூட் குதிப்பதில் பயிற்சியளித்திருக்கிறேன். உங்கள் பாதுக்காப்புக்கு நான் உத்திரவாதம். இறகு மிதப்பதுபோல பத்திரமாகக் கொண்டுவந்து நிலத்திலே இறக்கிவிடுவது என் பொறுப்பு. எப்பொழுது வசதிப்படும்?’ என்றார்.
உடனேயே பதில் சொல்ல வேண்டுமா?
‘இல்லை, இரண்டு நிமிடத்தில் சொன்னாலும் சரி’ என்றார்.
நான் யன்னல் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தேன். தூரத்தே சாள்ஸ் நதி புகழ்பெற்ற நாலு அமெரிக்க பல்கலைக்கழகங்களை தொட்டுக்கொண்டு ஒரு கல்விமான்போல அசைந்து போனது. பாலும் முட்டையும் வாங்கப் போன நண்பர் புள்ளிபோல தெரிந்தார். ஒரு கையில் பையை பிடித்துக்கொண்டு, நாயை இழுப்பதுபோல மறுகையை முன்னால் நீட்டிக்கொண்டு வேகவேகமாக நடந்தார். இன்னும் சில நிமிடங்களில் மேலே வந்துவிடுவார்.
சரி, இனி இங்கே நிற்க ஏலாது என்பது எனக்கு தெரிந்தது. என்னுடைய கடைசிக் கேள்வியை வெளியே எடுத்தேன்.
‘நீங்கள் எத்தனை பேரைக் கொன்றீர்கள்?’ ஆனால் அந்தக் கேள்வி பலதடவை வாயின் நுனியில் வந்தாலும் நான் அதைக் கேட்கவில்லை.
ஆப்பிரிக்காவில் ஓர் ஆணைப்பார்த்து உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்று கேட்கக்கூடாது. ஐரோப்பாவில் வேலைக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் நீங்கள் பிள்ளைத்தாய்ச்சியா அல்லது அப்படி ஆகும் முயற்சியில் இருக்கிறீர்களா என்று கேட்கக்கூடாது. கனடாவில் ஒரு மேலதிகாரி தனக்கு கீழ் வேலைபார்க்கும் ஒருவரிடம் நீங்கள் என்ன மிருகமாக பிறக்க விரும்பவில்லை என்று கேட்கக்கூடாது. அவர் ‘உங்களாக’ என்று சொல்லும் வாய்ப்பு உண்டு.
அமெரிக்காவில் ஒருத்தரின் சம்பளத்தையும் வயதையும் கேட்கக்கூடாது. அவர் எத்தனை பேரைக் கொன்றார் போன்ற சின்ன தகவலைக்கூட கேட்பது தவறு என்று சொல்கிறார்கள்.
எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு: இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.
அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.
(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)
மாக்சிம் கார்க்கியாரோ அவளது மார்பில் ஓங்கி அறைந்தார்கள்; தனது கண்ணில் படிந்திருந்த நீர்த்திரையின் வழியாக அவள் அந்தச் சிவந்து கனன்ற குட்டி அதிகாரியின் முகத்தைத் தன் எதிரே கண்டாள்.
“ஏ! பெண் பிள்ளை தூரப்போ” என்று அவன் கத்தினான்.
அவள் அவனை ஒரு பார்வை பார்த்தாள். அவனது காலடியில் கொடியின் கம்பு இரண்டாக முறிந்து கிடப்பதையும் அதன் ஒரு முனையில் சிவப்புத் துணித்துண்டு கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருப்பதையும் கண்டாள். அவள் குனிந்து அதை எடுத்தாள். அந்த அதிகாரி அவளது கையிலிருந்து அதைப் பிடுங்கி, தூரப் பிடித்துத் தள்ளி, பூமியில் ஓங்கி மிதித்தவாறு சத்தமிட்டான்.
“நான் சொல்கிறேன். போய்விடு!”
அந்தப் சிப்பாய்களின் மத்தியிலிருந்து அந்தப் பாட்டு ஒலித்தது:
துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!
எல்லாமே சுற்றிச் சுழன்று நடுங்கி மிதந்தன. காற்றில் தந்திக் கம்பிகளின் இரைச்சலைப் போல, ஒரு முணுமுணுப்புச் சத்தம் நிரம் நின்றது. அதிகாரி விடுவிடென்று ஓடினான்.
”உங்கள் பாட்டை நிறுத்துங்கள்” என்று அவன் வெறிபிடித்துக் கூவினான், “ஸார்ஜெண்ட் மேஜர் கிராய்னவ்…”
கீழே போட்ட உடைந்து போன கொடிக்கம்பை நோக்கி, தாய் தட்டுத் தடுமாறிச் சென்றாள். மீண்டும் அதைக் கையில் எடுத்தாள்.
”அவர்களது வாயை மூடித் தொலை!”
அந்தப் பாட்டுக் குரல் திமிறியது, நடுங்கியது, உடைந்தது. பின் நின்றுவிட்டது. யாரோ ஒருவன் தாயின் தோளைப் பற்றிப் பிடித்துத் திரும்பிவிட்டு முதுகில் கைகொடுத்து முன்னே நெட்டித் தள்ளிக் கத்தினான்,
”போ, போய் விடு!”
“தெருவைக் காலி செய்யுங்கள்!” என்று அந்த அதிகாரி கத்தினான்.
சுமார் பத்தடிக்கு முன்னால் அவள் வேறொரு கூட்டத்தைப் பார்த்தாள். அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டும், திட்டிக்கொண்டும், சீட்டியடித்துக்கொண்டும் தெருவை விட்டு விலகிச் சென்று, வீட்டு முற்றங்களில் மறைந்து கொண்டிருந்தார்கள்.
“விலகிப்போ – ஏ , பொட்டைப் பிசாசே!” என்று அந்த மீசைக்காரக் குட்டிச் சிப்பாய் தாயின் காதிலேயே சத்தமிட்டு அவளைத் தெருவோரமாகப் பிடித்துத் தள்ளினான்.
தாய் கொடிக்கம்பின் பலத்தின் மீது சாய்ந்தவாறே நடந்து சென்றாள். ஏனெனில் அவளது பலமெல்லாம் காலை விட்டு ஓடிப்போய்விட்டது. மற்றொரு கையால் அவள் சுவர்களையும், வேலிகளையும் பிடித்துக்கொண்டு கீழே விழுந்து விடாதபடி நடந்தாள். அவளுக்கு முன்னால் நின்ற ஜனங்கள் அவள் மீது சாடிச் சாய்ந்தார்கள். அவளுக்குப் பின்னாலும், பக்கத்திலும் சிப்பாய்கள் நடந்து வந்தார்கள்.
“போங்க, சீக்கிரம் போங்கள்!”
அவள் அந்தச் சிப்பாய்கள் தன்னைக் கடந்து போக விட்டுவிட்டு நின்றாள், சுற்றுமுற்றும் பார்த்தாள். தெருக்கோடியில் மைதானத்துக்குச் செல்லும் வழியை மறித்துச் சிப்பாய்கள் நின்றுகொண்டிருந்தார்கள். மைதானமோ காலியாய் இருந்தது. சாம்பல் நிற உருவங்கள் அந்த ஜனங்களை நோக்கி மெது மெதுவாக முன்னேறி வரத்தொடங்கின.
அவள் திரும்பிப் போய்விட எண்ணினாள். ஆனால் தன்னையுமறியாமல் அவள் முன்னாலேயே போக நேர்ந்தது. கடைசியில் அவள் அப்படியே நடந்து நடந்து ஒரு வெறிச்சோடிப்போன குறுகிய சந்துப் பக்கமாக வந்து சேர்ந்தாள்.
அதனுள் நுழைந்தாள்.
மீண்டும் அவள் நின்றாள். ஆழ்ந்த பெருமூச்செறிந்தவாறே காது கொடுத்துக் கேட்டாள். எங்கிருந்தோ கூட்டத்தின் இரைச்சல் கேட்டது.
அந்தக் கம்பின் மீது சாய்ந்தவாறே. அவள் மீண்டும் நடந்தாள். அவளது உடம்பெல்லாம் வியர்த்துப் பொழிந்தது. அவளது புருவங்கள் நடுங்கின; உதடுகள் அசைந்தன; கை அசைந்தது. தீப்பொறிகளைப் போல் பளிச்சிடும் சில தொடர்பற்ற வார்த்தைகள் மனதில் வரவர வளர்ந்து பெருகி, ஒரு பிரம்மாண்டமான ஜோதிப் பிழம்பாக விரிந்து விம்மி, அந்த வார்த்தைகளை வெளியிட்டுச் சொல்லிக் கூக்குரலிடத் தூண்டுவது மாதிரி இருந்தது.
அந்தச் சந்து திடீரென இடதுபுறமாகத் திரும்பியது; அங்கு ஒரு கோடியில் ஜனங்கள் பெருந்திரளாக கூடி நிற்பதை அவள் கண்டாள்.
“என்னடா தம்பிகளா! துப்பாக்கிச் சனியன்களை எதிர்நோக்கிச் செல்வது என்ன, வேடிக்கையா, விளையாட்டா?” என்று பலத்த குரலில் ஒருவன் சொன்னான்.
“நீ அவர்களைப் பார்த்தாயா? அந்தச் சனியன்கள் அவர்களை நேருக்கு நேராக விரட்டியது. எனினும் அவர்கள் அசையாது நின்றார்கள். மலையைப்போல் நின்றார்கள். தம்பிகள்! கொஞ்சம் கூட அசையாமல் அஞ்சாமல் நின்றார்கள்!”
‘பாவெல் விலாசவை எண்ணிப்பார்!”
”அந்த ஹஹோலையும் தான்!’
”அவன் தன் கைகளைப் பின்னால் கோத்துக் கட்டியவாறு அப்போதும் புன்னகை செய்தான். அஞ்சாத பேய்ப் பிறவி அவன்”
”நண்பர்களே!” என்று அவர்கள் மத்தியிலே முண்டியடித்துச் சென்று கொண்டே, தாய் கத்தினாள். ஜனங்கள் அவளுக்கு மரியாதையுடன் வழிவிட்டு ஒதுங்கினார்கள். யாரோ சிரித்தார்கள்.
“பாரடா , அவள் கொடி வைத்திருக்கிறாள்: கொடி அவள் கையில் இருக்கிறது.”
”வாயை மூடு” என்றது ஒரு கரகரத்த குரல். தாய் தனது கரங்களை அகல விரித்தாள்.
“கேளுங்கள் – ஆண்டவனின் பெயரால், கேளுங்கள் ! நல்லவர்களான நீங்கள் எல்லாம், அன்பான நீங்கள் எல்லாம் என்ன நடந்தது என்பதைப் பயமின்றிப் பாருங்கள் நம்முடைய சொந்தப் பிள்ளைகள், நமது ரத்தத்தின் ரத்தமான குழந்தைகள், நியாயத்தின் பேரால் இந்த உலகில் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். நம் அனைவருக்கும் உரிய நியாயத்துக்காக உங்கள் அனைவரது நலத்துக்காக, உங்களது பிறவாத குழந்தைகளின் நலத்துக்காக, அவர்கள் இந்தச் சிலுவையைத் தாங்கி, ஒளி பொருந்திய எதிர்காலத்தைத் தேடிச் செல்லுகிறார்கள். அவர்கள் வேண்டுவது வேறொரு வாழ்க்கை – சத்தியமும் தர்மமும் நியாயமும் உள்ள வாழ்க்கை ! சகல மக்களுக்காகவும் அவர்கள் நன்மையை நாடுகிறார்கள்!”
அவளது இருதயம் நெஞ்சுக்குள் புடைத்து நின்றது; தொண்டை சூடேறி வறண்டது. அவளது நெஞ்சாழத்துக்குள்ளே பெரிய பெரிய, புதிய புதிய வார்த்தைகள் பிறந்தன. அந்த வார்த்தைகள், பரிபூரண அன்பு நிறைந்த அந்த வார்த்தைகள் அவளது நாக்குக்கு வந்து அவளை மேலும் அதிகமான உணர்ச்சியோடு, மேலும் அதிகமான சுதந்திரத்தோடு பேசுமாறு நிர்ப்பந்தித்தன.
எல்லோரும் தான் கூறுவதை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பதை அவளால் காண முடிந்தது. அவளைச் சுற்றிலும் சகல மக்களும் நெருக்கமாகச் சூழ்ந்து, ஆவலும் சிந்தனையும் நிறைந்தவர்களாகக் குழுமி நின்றார்கள். அவளிடம் காணப்பட்ட ஆவலுணர்ச்சியானது அவளது மகனுக்குப் பின்னால், அந்திரேய்க்குப் பின்னால், சிப்பாய்களின் கையில் சிக்கிவிட்ட அத்தனைப் பேர்களுக்குப் பின்னால், நிராதரவாக விடப்பட்ட அந்த வாலிபர்களுக்குப் பின்னால் சகல மக்களும் ஓடிச் செல்ல வேண்டும் என்று தூண்டும் உணர்ச்சிதான் என்பதைத் தாய் கண்டு கொண்டாள்.
முகத்தைக் கழித்துக் கவன சிந்தையராக நிற்கும் அவர்களது முகங்களை ஒரு முறை பார்த்துவிட்டு, அவள் அமைதி நிறைந்த பலத்தோடு மேலும் பேசத் தொடங்கினாள்:
”நமது பிள்ளைகள் இன்பத்தைத் தேடி இந்த உலகுக்குள் புகுந்து விட்டார்கள். நம் அனைவரது நலத்துக்காக, கிறிஸ்து பெருமானின் சத்தியத்துக்காக, நம்முடைய முதுகில் அறைந்து, நமது கைகளைக் கட்டிப்போட்டு, நம்மை இறுக்கித் திணற வைத்த கொடுமையும், பொய்மையும் பேராசையும் கொண்ட பேர்களின் சகல சட்டதிட்டங்களுக்கும் எதிராக, அவர்கள் சென்றுவிட்டார்கள். அன்பான மக்களே! நம் அனைவருக்காகவும் சர்வ தேசங்களுக்காகவும், உலகின் எந்தெந்த மூலையிலோ இருக்கின்ற சகல தொழிலாளர் மக்களுக்காகவும்தான் நமது இளம்பிள்ளைகள், நமது வாலிபர்கள் எழுச்சி பெற்றுச் செல்கிறார்கள். அவர்களைப் புறக்கணிக்காதீர்கள். அவர்களை வெறுக்காதீர்கள். உங்கள் குழந்தைகளைத் தன்னந்தனியாகச் செல்லுமாறு செய்யாதீர்கள்! நீங்கள் உங்கள் மீதே அனுதாபம் கொள்ளுங்கள். உண்மைக்குப் பிறப்பளித்து, அந்த உண்மைக்காகத் தங்கள் உயிர்களையும் இழக்கத் தயாராயிருக்கும் உங்கள் குழந்தைகளின் இதயங்களின் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்களை நம்புங்கள்!”
அவளது குரல் உடைபட்டுத் தடைப்பட்டது. அவள் ஆடியசைந்தாள். மயங்கி விழும் நிலையில் தடுமாறினாள். யாரோ அவளைத் தாங்கிப்பிடித்துக் கொண்டார்கள்.
“அவள் பேசுவது ஆண்டவனின் உண்மை; கடவுளின் சத்தியம்!” என்று யாரோ ஒருவன் உணர்ச்சி வேகத்தில் கத்தினான். ”கடவுளின் சத்தியம், ஜனங்களே! அதைக் கேளுங்கள்!”
”அவள் எப்படித் தன்னைத்தானே சித்ரவதை செய்து கொள்கிறாள் என்பதைப் பாருங்கள்” என்று இன்னொருவன் பரிவோடு பேசினான்.
“அவள் தன்னைத்தானே சித்ரவதை செய்யவில்லை” என்று மற்றொருவன் பேச ஆரம்பித்தான். ஆனால் – முட்டாள்களே! அவள் நம்மைத்தான் சித்ரவதைக்கு ஆளாக்குகிறாள். அதை நீங்கள் இன்னுமா அறியவில்லை?”
”உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள்!’ என்று ஒரு பெண் நடுநடுங்கும் உரத்த குரலில் கத்தினாள், “என் மீத்யா – அவன் ஒரு களங்கமற்ற புனித ஆத்மா அவன் என்ன தவறைச் செய்தான்? தான் நேசிக்கும் தோழர்களைத்தானே அவன் பின்பற்றினான். அவள் சொல்வது ரொம்ப சரி, நாம் ஏன் நமது பிள்ளைகளை நிராதரவாய் நிர்க்கதியாய் விட வேண்டும்? அவர்கள் ஏதாவது தவறு செய்தார்களா?”
இந்த வார்த்தைகளைக் கேட்ட தாய் நடுநடுங்கினாள். அமைதியாக அழுதாள்.
”வீட்டுக்குப்போ, பெலகேயா நீலவ்னா!” என்றான் சிஸோவ்; ”வீட்டுக்குப் போ, அம்மா. இன்று நீ மிகவும் களைத்துவிட்டாய்!”
அவனது முகம் வெளுத்து தாடி கலைந்து போயிருந்தது. திடீரென அவன் நிமிர்ந்து நின்று சுற்றுமுற்றும் ஒரு கடுமையான பார்வை பார்த்துவிட்டு அழுத்தமாகப் பேச ஆரம்பித்தான்.
“என் மகன் மத்வேய் எப்படித் தொழிற்சாலையிலே கொல்லப்பட்டான் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அவன் மட்டும் உயிரோடிருந்தால். நானே அவனை அவர்களுக்குப் பின்னால் அனுப்பி வைப்பேன். நீயும் போ, மத்வேய்! அது ஒன்றுதான் சரியான சத்திய மார்க்கம், நேர்மையான மார்க்கம்!’ என்று நானே அவனிடம் சொல்வேன்.
அவனும் திடீரெனப் பேச்சை நிறுத்தி அமைதியில் ஆழ்ந்தான்; எல்லோருமே ஏதோ ஒரு புதிய, பெரிய உணர்ச்சியால், அந்த உணர்ச்சியைப் பற்றிய பயத்திலிருந்து விடுபட்ட உணர்ச்சியின் பிடியில் அகப்பட்டு, மோன சமாதியில் ஆழ்ந்து போனார்கள். சிஸோவ் தன் முஷ்டியை ஆட்டிக்கொண்டு மேலும் பேசத் தொடங்கினான்.
“கிழவனான நான் பேசுகிறேன். உங்கள் அனைவருக்கும் என்னைத் தெரியும். ஐம்பத்தி மூன்று வருஷ காலமாக நான் இந்தப் பூமியில் வாழ்கிறேன். முப்பத்தொன்பது வருஷமாக இந்தத் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறேன். இன்றோ அவர்கள் என் மருமகனை மீண்டும் கைது செய்தார்கள். அவன் ஒரு நல்ல பையன்; புத்திசாலி. அவனும் பாவெலுக்குப் பக்கமாக, கொடிக்குப் பக்கமாக முன்னேறிச் சென்றான்…”
அவன் கையை உதறினான். பின் குறுகிப் போய் தாயின் கரத்தைப் பற்றிப் பிடித்தவாறு பேசினான்:
“இந்தப் பெண் பிள்ளை சொன்னதுதான் உண்மை. நமது குழந்தைகள் மானத்துடன் வாழ விரும்புகிறார்கள், அறிவோடு வாழ விரும்புகிறார்கள். ஆனால் நாம் தான் அவர்களை நிராதரவாய் நிர்க்கதியாய் விட்டுவிட்டோம்! சரி வீட்டுக்குப் போ, பெலகேயா நீலவ்னா.”
”நல்லவர்களே!” என்று அழுது சிவந்த கண்களால் சுற்றிப் பார்த்துவிட்டு அவள் சொன்னாள்: ”நமது குழந்தைகளுக்கு வாழ்வு உண்டு; இந்த உலகம் அவர்களுக்கே!”
”புறப்படு, பெலகேயா நீலவ்னா, இதோ, உன் கம்பு” என்று கூறிக்கொண்டே, முறிந்து போன அந்தக் கொடிக்கம்மை எடுத்து அவள் கையில் கொடுத்தான் சிஸோவ்.
அவர்கள் அவளை மரியாதையுடனும் துக்கத்துடனும் கவனித்தார்கள்; அனுதாபக் குரல்களில் கசமுசப்பின் மத்தியிலே அவள் அங்கிருந்து அகன்று சென்றாள். சிஸோவ் அவளுக்காக, கூட்டத்தினரை விலகச் செய்து வழியுண்டாக்கினான், ஜனங்கள் ஒன்றுமே பேசாது வழிவிட்டு ஒதுங்கினர். ஏதோ ஒரு இனந்தெரியாத சக்தியினால் அவர்கள் இழுக்கப்பட்டு, அவள் பின்னாலேயே சென்றார்கள்; செல்லும்போது தணிந்த குரலில் ஏதேதோ வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.
அவளது வீட்டு வாசலை அடைந்ததும் அவள் அவர்கள் பக்கமாகத் திரும்பினாள்; தன் கைத்தடியின் மீது சாய்ந்தவாறே தலை வணங்கினாள். நன்றியுணர்வு தொனிக்கும் மெதுவான குரலில் சொன்னாள்:
”உங்கள் அனைவருக்கும் நன்றி!”
அந்தப் புதிய எண்ணம், அவள் இதயம் பெற்றெடுத்ததாகத் தோன்றிய அந்தப் புதிய எண்ணம் மீண்டும் நினைவு வந்தது. எனவே அவள் சொன்னாள்:
”கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாக்குவதற்காக, ஜனங்கள் தங்கள் உயிர்களை இழக்காதிருந்தால், கிறிஸ்துவே இருந்திருக்கமாட்டார்!”
ஜனக்கூட்டம் வாய் பேசாது அவளையே பார்த்தது.
அவள் மீண்டும் ஜனக்கூட்டத்துக்குத் தலை வணங்கிவிட்டு, வீட்டுக்குள் சென்றாள். சிஸோவ் தானும் தலை வணங்கியவாறு அவளைப் பின் தொடர்ந்தான்.
சிறிது நேரம் அந்த ஜனங்கள் அங்கேயே நின்றவாறு ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.
பிறகு அவர்களும் மெதுவாகச் செல்ல ஆரம்பித்தார்கள்.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகள் அனைத்தையும் தனியாருக்குக் கொடுக்க முடிவெடுத்துள்ளது மாநகராட்சி நிர்வாகம். இதனைக் கண்டித்து இன்று முதல் (27.11.2018) வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர் துப்புரவுத் தொழிலாளர்கள்.
சென்னை மாநகராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மைத்துறையில் துப்புரவுப் பணியை மண்டலம் 3,6,8,9,10,13 ஆகியவற்றை ராம்கி என்விரோ இந்துஸ்தான் லிமிடெட் என்ற தனியார் கொள்ளை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மீதமிருக்கும் எட்டு மண்டலங்களையும் தனியாருக்கு விடுவதற்கான டெண்டரை கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி வெளியிட்டது. இந்த எட்டு மண்டலங்களுக்கும் சுமார் 8 வருடம் இரண்டு நாட்கள், அதாவது 2922 நாட்களுக்கு ரூ.1546 கோடி வரை ஒதுக்கீடு செய்துள்ளது. சுருக்கமாக சொன்னால் தனியாருக்கு கொடுக்க வழிவகை செய்திருக்கிறது.
சென்னை மாகராட்சியில் மட்டுமல்ல நாடெங்கிலும் பல மாநகராட்சிகளை ‘குத்தகைக்கு’ எடுத்திருக்கிறது, ராம்கி என்விரோ.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 தொழிற்சங்கங்கள் இணைந்து ஆகஸ்ட் 26-ம் தேதி ரிப்பன் மாளிகை முற்றுகைப் போராட்டமும், செப்டம்பமர் 11-ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டமும் நடத்தினர். அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித்துறை செயலருடன் நடந்த பேச்சு வார்த்தையில் தனியாருக்கு கொடுப்பதை கைவிடுவதாக அறிவித்ததால் தொழிலாளர்களும் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர்.
இருந்தாலும் ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? தனியாருக்கு டெண்டர் விடுவதை கொல்லைப்புறமாக அமல்படுத்தும் முயற்சியை எடுத்து வந்துள்ளது மாநகராட்சி.
அதாவது, இந்த எட்டு மண்டலங்களிலும் துப்புரவு பணியை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் ஒரு அமைப்பைத் தேர்ந்தெடுக்க தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம் மூலம் கடந்த மாதம் 26-ம் தேதி டெண்டர் கோரியுள்ளது. இந்த அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் சீனுவாசலு, “மாநகராட்சியின் இந்த செயல் தொடர்ந்து தொழிலாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. ஒவ்வொரு முறையும் போராட்டத்தின் போது வாக்குறுதியை கொடுத்து விட்டு அதனை மீறுகிறது. இந்த அலட்சியப் போக்கை கண்டித்தும், தொழிலாளர்கள் விரோத நடவடிக்கையை கைவிடக் கோரியும் கடந்த 12-ம் தேதி மாநகராட்சி துணை ஆணையரிடம் மனு அளித்தோம். அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. தொடர்ந்து துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினோம். அவரோ “பார்க்கலாம்” என்ற ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டார். பிறகு ஆணையரையும், முதல்வரையும் சந்திக்க முயற்சித்தோம். தேதி கிடைக்கவில்லை.
வேறுவழியில்லாமல் 16-ம் தேதி நிர்வாகிகள் மட்டும் முதல்வர் வீட்டுக்கு சென்றோம். அப்பொழுது முதல்வர் இல்லை. அவருடைய உதவியாளர் மட்டுமே இருந்தார். அவரிடம் கேட்டதற்கு, “முதல்வரை சந்திக்க முடியாது. அவர் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார்” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.
உண்மையில் எனக்கு இந்த அதிகாரிகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இவர்கள் அனைவரும் தனியார்மயத்திற்கு ஆதரவானவர்கள் என்பது தெரியும். இருப்பினும் கூட்டமைப்பைச் சார்ந்த தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டதால் அவர்களை சந்திக்க ஒத்துக்கொண்டு சென்றோம். ஆனால் அதிகாரிகளின் நடவடிக்கை தொழிலாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையின்மையை தோற்றுவித்திருக்கிறது இதனை தொழிலாளர்கள் நடைமுறையில் உணர்ந்திருக்கிறார்கள். உணர்த்தியிருக்கிறார்கள்.
எவ்வளவுதான் அலைய முடியும்..? எல்லா முயற்சிகளையும் எடுத்துப் பார்த்து விட்டோம். வேறு வழி இல்லாமல் கடந்த 20-ம் தேதி மண்டல ஆர்ப்பாட்டமும், 22-ம் தேதி ரிப்பன் மாளிகையில் உண்ணாவிரதமும் இருந்தோம். ஆனால் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட பாதிப்பேரை போலீசு கைது செய்து விட்டது. கைது செய்தவர்களை விடுவிக்கக்கோரி வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
அப்பொழுது சுகாதாரத்துறை துணை ஆணையர் பேச்சு வார்த்தைக்கு அழைத்து பேசினார். அப்பொழுதும் எங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சரி நீங்கள் ஆணையரையாவது பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றோம். அதனடிப்படையில் இரண்டு நாள் அவகாசம் கேட்டு 24-ம் தேதி சனிக்கிழமை ஆணையரை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.
ஆணையரோ, “அரசாங்கம் ஒரு முடிவு எடுத்து விட்டது. அதில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. தயவு செய்து தொழிற்சங்கம் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்றார். சரி நீங்கள் சொல்வது இருக்கட்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்க மாட்டோம் என்பதற்காவது உத்தரவாதம் தாருங்கள் என்றோம். அதற்கு அவர் ஒன்றும் பேசவில்லை.
ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டத்தில் தொழிலாளர்கள். (கோப்புப் படம்)
சம்பள உயர்வு, பதவி உயர்வு எதுவும் வேண்டாம். இருக்கும் வேலைக்கு உத்திரவாதம், பணிப்பாதுகாப்பு கோரும் அளவிற்கு நாங்கள் வந்துவிட்டோம். ஆனால் இதற்கும் நிர்வாகம் சம்மதிக்கவில்லை. தனியாரிடம் போனால் ஒப்பந்த தொழிலாளர்கள் ,9000-க்கும் மேற்பட்டோர் வேலையில் நீடிப்பார்கள் என்று சொல்ல முடியாது. வேறு என்ன செய்ய முடியும்? இதுவரை இந்த அரசு எந்த விதத்திலும் எங்களுக்கு ஆதரவான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதால் நாளை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்த உள்ளோம்.
அரசியல் கட்சிகளின் ஆதரவு எந்த அளவில் இருக்கிறது.. இது குறித்து எந்த கட்சியும் உங்களுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட விடவில்லையே?
உண்மைதான். அதனால்தான் எங்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கடந்த மாதம் 28- ம் தேதி கலந்து ஆலோசித்து அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்பது என்று முடிவெடுத்து அனைவரையும் பார்த்தோம். அவர்களும் ஆதரவு தருவதாகச் சொன்னார்கள். ஆனால் தி.மு.க.வை மட்டும் சந்திக்கவில்லை. அவர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பில் இருந்து விலகி விட்டார்கள்.
காரணம் என்னவென்று கேட்டோம். “அடுத்த ஆட்சி தி.மு.க. தான். அதனால் கொஞ்சம் நெளிவு சுளிவோடு நடந்து கொள்ளுங்கள்” என்று அதிகாரி சொல்வதாக சொல்கிறார்கள். ஆனால் அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வேறு ஏதோ காரணம் இருப்பதாக நினைக்கிறோம். அது என்னவென்று தெரியவில்லை.
அடுத்த ஆட்சி தி.மு.க.தான். நாங்கள் வந்தால் பார்த்துகொள்வோம் என்றீர்களே, ஆனால் 3 மண்டலம் தனியாருக்கு விட்டு விட்டார்களே அதற்கு என்ன சொல்ல போகிறீர்கள் என்று கேட்டால்., எந்தப் பதிலும் இல்லை.
இவர்கள் கூட்டமைப்பிற்கு வரும்போதே ஆர்வமில்லாமல்தான் வந்தார்கள். இருப்பினும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தோம். இருந்தும் அவர்கள் விலகியது ஏன் என்று தெரியவிலை. அ.தி.மு.க. செய்ய வேண்டியதை தி.மு.க. செய்கிறது. கூட்டமைப்பில் இருந்து அ.தி.மு.க. தொழிற்சங்கம் விலகாமல் போராட்டத்தில் இருந்து வருவது ஆச்சர்யமளிக்கிறது.
தொழிலாளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது?
தொழிலாளர்கள் மனம் தளர்ந்து விடக்கூடாது என்று அனைத்து முயற்சியையும் எடுத்து வருகிறோம். அவர்களும் 80% வரை உறுதியாக இருக்கிறார்கள். நிர்வாகமும் அதனை ஒடுக்க பல வேலைகளை செய்து வருகிறது. விடுப்பு எடுக்கக் கூடாது என்று எச்சரிக்கிறது. பார்க்கலாம்! எப்படி இருந்தாலும் வேலை நிறுத்தம் நடக்கும்.
ஒருவேளை இந்த முறையும் உங்கள் போராட்டம் தோல்வி அடைந்தால் என்ன செய்வீர்கள்?
தோல்வி அடைந்தால் எங்கள் போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதைத் தவிர வேறுவழி இல்லை. நிச்சயம் அதனை நோக்கி எங்கள் போராட்டம் நகரும். அதற்கான சூழலும் கனிந்து வருகிறது.
ஆம்..! துப்புரவு பணியாளர்கள் மீதான அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணிப் பாதுகாப்பின்மை, ஒப்பந்த முறை, அற்பகூலிக்கு அவர்களின் உழைப்பை சுரண்டுவது. டெங்கு மற்றும் பேரிடர் காலங்களில் விடுப்பு இல்லாமல் 24 மணி நேரமும் வேலை செய்யச்சொல்லி அவர்களை துன்புறுத்துவது என்று அரசின் அடக்குமுறை ஒருபுறமென்றால், சிவில் சமூகத்தின் புறக்கணிப்பும் அவர்களை உளவியல் ரீதியாக தாக்குகிறது. இவர்களது போராட்டத்திற்கு ஆதரவளிப்பது நமது கடமை!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் பட்டாபிராம் பகுதியிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் கடந்த நவம்பர் – 18 அன்று நவம்பர் புரட்சிதின விழா நடைபெற்றது. பு.ஜ.தொ.மு., கிளை – இணைப்புச் சங்க தொழிலாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட குடும்ப விழாவாக நடைபெற்றது.
விழாவிற்கு தலைமையேற்ற மாவட்ட பொருளாளர் தோழர் மு. சரவணன், ரசியப் புரட்சியின் சாதனைகளை, இன்றைய நிலைமையோடு ஒப்பிட்டு விளக்கினார். நிமிர் கலையகம் தோழர் பாரதி தலைமையிலான பறையிசை குழுவின் அரங்கம் அதிர்ந்த பறையிசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
1 of 3
விழாக்குழுவின் சார்பில் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாறுவேடத்தில் வீரமங்கை ஜான்சிராணி, பாரதியார், பகத்சிங், பாரதிதாசன், நவீன ஒளவையார் போன்ற வேடங்களில் சிறுவர் – சிறுமியர் வந்து சமூக பிரச்சனைகளுக்கு எதிராக போராட அறைகூவினர். சுடிதார் அணிந்து வந்த நவீன ஔவையார் பெரியார் அறிவுச்சுவடியில் வெளிவந்த மூடநம்பிக்கைக்கு எதிரான விந்தனின் ஆத்திச்சூடியை மழலை மொழியில் எடுத்துரைத்தார். இரண்டாம் வகுப்பு பயிலும் செயலினி ம.க.இ.க -வின் ஜி.எஸ்.டி. பாடலை பாடினார். சிலம்பாட்டம், இயற்கையை அழிக்கும் எட்டுவழிச் சாலை என சமூக அவலங்களை மழலைகளுக்கே உரிய முறையில் அம்பலப்படுத்தினர்.
அசத்திய சிறுவர்கள்
1 of 16
பு.ஜ.தொ.மு., இணைப்பு சங்கமான டி.ஐ. மெட்டல் பார்மிங் ஆலை தோழர்கள் நடத்திய நேருக்கு நேர் விவாத மேடையில் எச்.ராஜாவை நிருபர் கலங்கடித்தது சிறப்பாக இருந்தது. பு.ஜ.தொ.மு. தோழர்கள் இணைந்து “காவி – கார்ப்பரேட் கும்பலை விரட்டியடிப்போம்” என்ற நாடகம் நிகழ்த்தினர். இதில் காவி கும்பல் தொழிலாளர் பிரச்சனையில் பஞ்சாயத்து செய்வதும், ஊர் பிரச்சனையில் தலையிடுவதை எதிர்த்து தொழிலாளர்களும், ஊர் மக்களும் இணைந்து காவிக் கும்பலை விரட்டியடிப்பதாக எளிமையாக விளக்கும் விதமாக இருந்தது.
கலை நிகழ்ச்சிகள்
1 of 6
மேலும் தூசன் கிளை பொதுச் செயலாளர் தங்களது போராட்ட அனுபவங்களை நேருரையாக விளக்கினார். டி.ஐ மெட்டல் தோழர் செந்தில் – மோடியின் நான்கரை ஆண்டு மோசடிகளை அம்பலப்படுத்தி பேசினார். எம்கீ கிளை தோழர் ராஜா தேர்தல் வாக்குறுதிகள் ஒரு ஏமாற்று என தானே பாடல் எழுதி பாடினார். தோழர் ரத்னா – சபரிமலைக்கு வந்தா தீட்டா? தீட்டா? என்ற பாடலை பாடியும், தோழர் நிலாஃபர் சோசலிச நாயகன் தோழர் லெனின் பெருமைகளை கவிதையாக வாசித்தார்.
1 of 4
திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் அவர்கள் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் நாம் ஏன் வீழ்த்த வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.
இறுதியாக விழாவில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர் தோழர். அ.முகுந்தன் பரிசளித்தார். தோழர் ஆ.கா. சிவா நன்றியுரையுரையோடு நவம்பர் தின விழா நிறைவுற்றது.
இந்த நூலில் வலங்கை, இடங்கை சாதிகள் பற்றிய பார்வைகள் விளக்கப்பட்டுள்ளது. சோழர்கள் ஆட்சியில் பெரும் நில உடைமை தோன்றிய 11ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டுகள் வரை தமிழகத்தில் வலங்கை இடங்கை சாதிகளின் மோதல் தொடர்ந்தும், பரவலாகவும் நடைபெற்றது. வரலாற்றாசிரியர் கே.கே. பிள்ளை அவர்கள் இம்மோதல்கள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். ஆனால் இந்த இடங்கை, வலங்கை சாதிகளின் மோதல்கள் எப்படி உருப்பெற்றன, எப்படி மறைந்தன என்ற வியப்போடுதான் தனது எழுத்தை முடித்துள்ளார். ஆனால், பேரா. நா.வா. அவர்கள் இப்புத்தகத்தில் இம்மோதல்களின் காரணத்தையும், உருவாக்கத்தையும், உற்பத்தி முறைகளின் வளர்ச்சியோடு இணைந்து வெளிப்படுவதை விவரித்துள்ளார்.
சோழர்காலத்திய நில உடமைகளும், அதனைச் சார்ந்த கைவினைஞர்கள் உருவாக்கமும் தோன்றியது. மறுபுறத்தில் பெரு வணிகம் தோன்றியது. இந்த இரு பிரிவினர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. ஆளும் நிலப்பிரபுத்துவ அரசு இம்மோதல்களைப் பயன்படுத்தியது. வளர்த்தெடுத்தது. சோழர்கள் நிலத்தில் சாதி அடிப்படையிலேயே சலுகைகள் கொடுப்பதும், வரிகள் விதிப்பதும் நடைபெற்றது. பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் பெரும்பாலும் சாதி அடிப்படையிலேயே நடைபெற்றது. மன்னர்கள், நிலப்பிரபுக்கள் தங்களது நலனைப் பாதுகாக்க, இந்தப் பிரிவினையை கெட்டிப்படுத்தினர். “உடன் கூட்டம் ரத்து” என்ற சட்டத்தின் மூலம் இவர்கள் ஒன்று சேர்வதை தடுத்தனர்.
எனவே, வலங்கை, இடங்கை சாதிய மோதல்கள் வெறுமனே சாதிக்கலவரங்கள் அல்ல. வர்க்க முரண்பாடுகளின் வெளிப்பாடுகள். நிலவுடைமை வர்க்கமும் வணிக வர்க்கமும் தங்களுக்கு ஆதரவான மக்களை இணைத்துக்கொண்ட நிகழ்வுகளாகும். இப்புத்தகம் தமிழகம் சாதிய கட்டமைப்பை ஊடுருவிப் பார்க்கவல்ல பேராயுதம். வரலாற்றியல் பொருள் முதல்வாத கண்ணோட்டங்களை உள்ளடக்கியது.
நூலின் பதிப்புரையிலிருந்து…
தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்
தமிழ் நாட்டின் சமூக வளர்ச்சியில் தொழிற் பிரிவினையால் தொழிலடிப்படைச் சாதிகள் தோன்றின! அவை பரம்பரைத் தொழில் முறையால் சாதிகளாயின. இவற்றைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் முன்னரே வடநாட்டில் தோன்றிய வருணாச்சிரமப் பிரிவுகளுக்குள் அடக்க உயர்ந்த வர்க்கங்கள் முயன்றன. ஆனால் இதுவோர் மேற்பூச்சாக (super imposition) இருந்ததேயன்றிச் சாதிகள் தொழிலடிப்படையிலேயே இருந்தன. ஆனால் தொழில் புரியும் வர்க்கங்களிடையே சமத்துவமில்லை.
பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்
தொழில் செய்யாத சுரண்டல் வர்க்கத்தினர் இவர்களிடையே சாதி உயர்வு தாழ்வுகளைக் கற்பித்துத் தங்களை உயர்ந்தோரென்றும் உழைப்பாளிகளைத் தாழ்ந்தவரென்றும் கருதினர். தொழில் செய்வோர் ஒன்றுபடாமல் தடுத்து வைத்திருந்தனர். உயர்ந்த சாதியர்களின் நீதி நூல்களும் இதையே நிலை நாட்டின.
கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.
சாதிக் கொடுமைகளும் அநீதிகளும் சாதிக் கருவமும் மிகுந்திருந்த காலத்தில் அடக்கப்பட்டிருந்த சாதியினர் அவற்றை எதிர்த்துப் பல்வேறுவிதங்களில் போராடியுள்ளனர். இப்போராட்டங்களில் சாதி உயர்வு தாழ்வுகளை நிலை நாட்டப் பயன்படும் கருத்துக்களையும் தத்துவங்களையும் எதிர்த்துப் பல கருத்துக்களையும் தத்துவங்களையும் உருவாக்கினர்.
இக்கருத்துக்களில் சில பழமையான வேத நூல்களிலிருந்து எடுத்து மாற்றியமைக்கப்பட்டன. சில கருத்துக்கள் வரலாற்றின் மாறுதலுக்கேற்பப் புதுமையாகப் படைக்கப்பட்டன.
இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் சாதி சமத்துவத்தை விளக்கும் பல நூல்கள் தோன்றின. சாதி அமைப்பு முறையில் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்டவர்களைப் பற்றி இவை எழுதப்பட்டன.
பிராமணர்கள் சாதி அமைப்பின் உச்சியிலிருந்ததாலும் அவர்கள் எல்லோரினும் மேம்பட்டவர்கள் என்ற கருத்துக் கொண்ட கதைகளும் புராணங்களும் மிகுந்திருந்ததாலும் ‘கீழ்ச் சாதியார்’ பிராமணர்களது சிறப்பைத் தாக்குவதன் மூலமும் அவர்களைவிடத் தாங்கள் உயர்வானவர்கள் என்பதை நிலை நாட்டிக்கொள்ள முயன்றனர்.’ (பக்-5)
தமிழ் மன்னரும் சாதிப் பிரிவினைகளும்
சோழ மன்னர்கள் காலத்தில் இரண்டு வகையான சாதிப் பிரிவினைகளைப் பற்றிக் கல்வெட்டுக்கள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். முதல் ராசராசன் காலத்தில் வலங்கை மேம்படைகளிலார், பெருந்தனத்து வலங்கைப் பெரும்படைகள், அழகிய சோழத் தெரிந்த வலங்கை வேளைக்காரர் படைகள், ராஜராஜன் தெரிந்த வலங்கை வேளைக்காரர் என்ற படைப் பிரிவுகளின் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
ராசராசன் காலத்திற்குப் பிற்பட்ட கல்வெட்டுகளில் இடங்கை தொண்ணுாற்றாறு, இடங்கைத் தொண்ணுாற்று சமயத் தொடகை என்ற பெயர்கள் காணப்படுகின்றன. பிற்காலச் சோழர்கள் சிலரது கல்வெட்டுக்களில் மூன்று கை மகாசேனை, மூன்று கை திருவேளைக்காரர் என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இம்மூன்று பிரிவினரும் சாதி அடிப்படையில் அமைந்த பிரிவினரா, அன்றி வர்க்க அமைப்பில் எழுந்த பிரிவினரா என்ற வினா எழுகிறது. இவ்வினாவிற்கு விடை கூற இம்மூன்று பிரிவுகளிலும் எந்தெந்தச் சாதியினர் அடங்கியிருந்தனர், அவர்கள் எத்தொழில்களைச் செய்து வந்தனர் என்பதையும் அவர்களிடையே நிலவிய உறவையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
வலங்கைப் பிரிவில் நிலம் உடையாரும் உழவர்களும் வண்ணான், நாவிதன் போன்ற தொழிலாளிகளும் பனை மரமேறும் தொழிலாளிகளும் வன்னியர் போன்ற தொழிலாளிகளும் இடையர் போன்ற கால்நடை பராமரிப்பவரும் அடங்கியிருந்தனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தெலுங்கும் கன்னடமும் வழங்கும் நாடுகளிலும் இப்பிரிவினர் உள்ளனர். இப்பிரிவிலுள்ள சாதிகளில் சிலவற்றை ஜார்ஜ் கோல்மன் என்னும் நீதிபதி 1809 ஆம் ஆண்டில் தாமளித்த தீர்ப்பொன்றில் குறிப்பிடுகிறார். அவையாவன: குசவன், மேளக்காரன், சாணான், அம்பட்டன், கன்னான், இடையன், வெள்ளாளன், பறையன், குறவன், ஒட்டன், இருளன், வேடன், வேட்டுவன் முதலியன.
கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.
கல்வெட்டுக்களிலும் செப்புப் பட்டயங்களிலும் காணப்பட்ட சான்றுகளின் அடிப்படையிலேயே, சற்றேறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவர் தமது தீர்ப்பால் இம்முடிவுக்கு வந்திருக்கிறார். இந்தச் சான்றுகளனைத்தும் நிலமுடையவர்களையும் நிலத்தில் பயிர் செய்யும் வகுப்பினரையும் அவர்களுக்கு ஊழியம் செய்யும் வகுப்பினரையும் குறிப்பிடுவதைக் காணலாம்.
இடங்கைப் பிரிவில் அடங்கியுள்ள சாதியில் தொண்ணுாற்றாறு என்றும் தொண்ணுாற்றெட்டு என்றும் நிகழ்ச்சிகள் குறிப்பிடுகின்றன. வீரராசேந்திர சோழனது திருவெண்காட்டுக் கல்வெட்டு ஒன்று இடங்கைச் சாதியினரிடமிருந்து, மன்னன் கொண்ட வரியைக் கோயிலுக்கு அளித்ததாகக் கூறுகிறது. அக்கல்வெட்டில் இடங்கைப் பிரிவில் அடங்கியுள்ள சாதிகள் சில வற்றின் பெயர் குறிப்பிடப்படுகின்றன. அவற்றைக் கவனிக்கும் பொழுது, அவை வணிகம் செய்வோரையும் தச்சன், கருமான் போன்ற தொழிலாளரையும் குறிப்பிடுகின்றன. தர்ஸ்டன் என்னும் ஆராய்ச்சியாளர் கீழ்வரும் சாதிகளை இடங்கை சாதிகளென்று குறிப்பிடுகிறார். அவைகளாவன: செட்டி, வாணியன், தேவாங்கன், கொத்தன், தட்டான் , கன்னனான் , கொல்லன் , சக்கிலியன் முதலானவையாகும்.
(பக்.43-44)
நூல்: தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள் ஆசிரியர்: பேரா.நா.வானமாமலை
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018. பேச: 044 – 24332424, 24332924 மின்னஞ்சல்:thamizhbooks@gmail.com
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி:99623 90277
சே.வாஞ்சிநாதன் ஜோசப் ஷைன் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் முறை பிறழ்ந்த உறவு (Adultery) குறித்து உச்சநீதிமன்றம் செப்-28,2018-ல் வழங்கிய தீர்ப்பு சமூகத்தில் மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் இத்தீர்ப்பை மிகத் தவறான முறையில் விவாதப்படுத்தின. கள்ள உறவு குற்றமல்ல என உச்சநீதிமன்றம் சொல்லி விட்டது, இனி யாரும், யாருடனும் இருக்கலாம்; இதனால் குடும்ப அமைப்பே சிதைவுறும் என்ற வகையில் ஊடகங்கள் பரப்புரை செய்தன. இதில் வருந்தத்தக்க உண்மை என்னவெனில் விமர்சித்த பலரும் தீர்ப்பைப் படிக்கவில்லை; அதன் சாரத்தைப் புரிந்து கொள்ளவில்லை. உண்மையில் சட்டமும், தீர்ப்பும் சொல்வதென்ன?
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 497:
திருமணமான ஒரு பெண்ணுடன் அப்பெண்ணின் கணவர் அனுமதியின்றி அப்பெண் திருமணம் ஆனவர் எனத் தெரிந்தும் வேறொரு ஆண் உடலுறவு வைத்துக் கொண்டால் அது குற்றம். குற்றத்தைத் தூண்டியதாக அப்பெண்ணைத் தண்டிக்க முடியாது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 198 :
முறை பிறழ்ந்த உறவுக் குற்றம் குறித்து குற்றச் செயலில் ஈடுபட்ட பெண்ணின் கணவன் மற்றும் குற்றம் நடந்த சமயத்தில் அப்பெண் யார் பாதுகாப்பில் இருந்தாரோ அவர் புகார் தரமுடியும்.
இந்திய தண்டனை சட்டப் பிரிவு 497 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 198 ஆகிய இரண்டும் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, பெண்களுக்கு எதிரான பாகுபாடு கொண்டது, பெண்களின் சமத்துவத்தை, கண்ணியத்தை மீறுவதாக உள்ளது என ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு..
இ.த.ச. பிரிவு 497 – குறித்த சமூகத்தின் புரிதல் என்ன?
திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்ள கணவன் – மனைவி ஆகிய இருவருக்கும் தடை உள்ளது, ஒருவனுக்கு – ஒருத்தி என்பதை யார் மீறினாலும் குற்றம் என்று இ.த.ச. பிரிவு 497 சொல்கிறது என்பதே பொதுப் புரிதல். ஆனால் சட்டம் அவ்வாறு சொல்லவில்லை.
திருமணமான ஆணின் திருமணத்திற்கு வெளியிலான உறவை பிரிவு 497 தடுக்கிறதா?
இல்லை! திருமணமான ஒரு ஆண் வயது வந்த – திருமணமாகாத ஒரு பெண்ணுடனோ, ஒரு விதவையுடனோ, மணவிலக்குப் பெற்ற ஒரு பெண்ணுடனோ, ஒரு விலைமாதுடனோ, உடலுறவு வைத்துக் கொள்வது இ.த.ச. 497-ன்படி குற்றமல்ல. இன்னொருவர் மனைவியுடன் உறவு வைப்பது மட்டுமே குற்றம். சம்மந்தப்பட்ட பெண்ணின் கணவர் சம்மதித்தால் அதுவும் குற்றமல்ல. எனவே திருமணமான ஆணின் திருமணத்திற்கு வெளியிலான எல்லா முறை பிறழ்ந்த உறவையும் இ.த.ச. 497 தடுக்கவில்லை.
அதேசமயம் மேற்படி பிரிவு 497 – திருமணமான ஒரு பெண் தனது கணவனின் அனுமதியின்றி ஒரு திருமணம் ஆகாத – வயது வந்த இளைஞனுடனோ, மனைவியை இழந்த ஒரு ஆணுடனோ, மணவிலக்கு பெற்ற ஒரு ஆணுடனோ உடலுறவு வைத்துக் கொள்வது குற்றம் என்கிறது. இக்குற்றத்திற்கு முறைகேடான உறவில் ஈடுபட்ட ஆணைத் தண்டிக்க முடியும். எனவே இ.த.ச. 497 ஆணுக்குச் சார்பாக, பாகுபாட்டுடன் உள்ளது என்கிறது உச்சநீதிமன்றம்.
முறை பிறழ்ந்த உறவு (Adultery) குறித்து யார் புகார் அளிக்க முடியும்?
குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 198-ன் படி முறைபிறழ்ந்த உறவு வைத்துக் கொண்ட பெண்ணின் கணவன் புகார் கொடுக்கலாம் அல்லது அப்பெண் வேறு ஒருவரின் பாதுகாப்பில் இருக்கும் போது உறவு வைத்துக் கொண்டால் அப்பெண் அச்சமயத்தில் யார் பாதுகாப்பில் இருந்தாரோ அவர் புகார் கொடுக்கலாம். இதில் மிக முக்கியமாக ஒரு திருமணமான ஆண் முறைபிறழ்ந்த உறவுக் குற்றத்தில் ஈடுபட்டால் அவரின் மனைவி புகார் எதுவும் கொடுக்க முடியாது.
ஒரு எளிய உதாரணத்துடன் இதை விளக்கலாம். ராஜா என்கிற ஆணும் நர்மதா என்கிற பெண்ணும் கணவன் மனைவி. ரஞ்சித் என்கிற ஆணும் சர்மிளா என்கிற பெண்ணும் கணவன் மனைவி என்று வைத்துக் கொள்வோம். இதில் ராஜா என்கிற ஆண், சர்மிளா என்பவர் இன்னொருவர் மனைவி என்று தெரிந்தே உறவு கொண்டால் அது குற்றம். இக்குற்றச் செயலால் தான் பாதிக்கப்பட்டதாக ரஞ்சித் என்கிற ஆண்தான் புகார் தர முடியும். ஆனால், ராஜா என்கிற ஆண் உறவுக்கு ஒப்புதல் தெரிவித்தால் அது குற்றமல்ல. மிக முக்கியமாக, இப்பிரச்சனையில் நேரடியாக பாதிக்கப்படும் நர்மதா என்கிற மனைவி தவறு செய்யும் தன் கணவன் ராஜா மீது புகார் தர முடியாது. எனவே பிரிவு 198-ம் ஆணாதிக்கச் சார்பாக உள்ளது என்கிறது உச்சநீதிமன்றம்.
சட்டத்தின் ஒரு சார்பான பார்வைக்குக் காரணமாக உச்சநீதிமன்றம் சொல்வதென்ன?
திருமணமான ஒரு பெண் கணவனின் சொத்து. அச்சொத்தை அக்கணவன் அனுமதியின்றி யார் கவர்ந்தாலும் அது குற்றம். அந்தப் பெண் வேறு ஒருவர் பாதுகாப்பில் இருக்கும் போது அப்பெண் அவர்கள் பாதுகாப்பில் உள்ள ஒரு சொத்து. அப்பொழுது அப்பெண்ணை யாரேனும் கவர்ந்தால் அச்சொத்தை அந்நேரத்தில் பாதுகாத்தவர் புகார் அளிக்கலாம். குறிப்பாகச் சொத்தின் உரிமையாளரும், அல்லது உரிமையாளர் யார் பொறுப்பில் விட்டிருந்தாரோ அவரும் புகார் தர முடியும். இது பெண்களைச் சொத்தாகக் கருதும் ஆணாதிக்க சமூகத்தின் தொடர்ச்சி என்கிறது உச்சநீதிமன்றம்.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 378 அசையும் சொத்தை ஒருவர் திருடுவது குறித்துப் பேசுகிறது. பிரிவு 497- னை இதனோடு பொருத்திப் பார்த்தால், திருட்டு என்பது ஒருவரின் அசையும் பொருளை அவரின் அனுமதியின்றி, உள்நோக்கத்துடன் கவர்வது. அனுமதி இருந்தால் குற்றமல்ல. பிரிவு 497-ன்படி கணவன் அனுமதி கொடுத்தால், அவரின் மனைவியுடன் யாரும் உறவு வைத்துக் கொள்ளலாம். அனுமதி இல்லாவிட்டால் குற்றம். இங்கே மனைவி கணவனின் சொத்தாக மட்டுமே பார்க்கப்படுகிறாள். ஒரு பொருளுக்கு இருக்கும் மதிப்புதான் ஒரு பெண்ணுக்கு தரப்படுகிறது. எனவே கணவனின் சொத்தாக மனைவியைப் பாதுகாப்பதே சட்டப் பிரிவு 497.
பிரிவு 497 இந்திய தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டதன் மூலம் என்ன?
மனிதன் தாய்வழிச் சமூகத்தில் உருவானவன். தாய்வழிச் சமூகத்தில் ஒருவருக்கு தனது தாயைத்தான் தெரியும் தந்தையைத் தெரியாது. தாய் சொன்னால்தான் தந்தை யார் என்று தெரியும். இன்றும்கூட விலங்குகளுக்கு தந்தை யார் என்று தெரியாது. தாயைத்தான் தெரியும். தாய்வழிச் சமூகத்தைத் தொடர்ந்து வந்த சமுதாயத்தில் குழுத்தலைவன் சொத்துடையவனாகிறான். அவன் சொத்துக்களுக்கு வாரிசு தேவைப்படுகிறது. அந்த வாரிசைத் தெரிவு செய்ய வேண்டுமானால் அவன் ஒரு பெண்ணை தனக்கானவளாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அவனின் வாரிசாக ஆகமுடியும். ஆக, சொத்தை தனது வாரிசுகளுக்கு மட்டும் அளிக்கவே திருமண முறை தோன்றியது. இந்தக் கருத்தாக்கத்தின் தொடர்ச்சியே பிரிவு 497 மற்றும் 198.
முறை பிறழ்ந்த உறவு (Adultery) குறித்த வரலாறு
பண்டைய கால மதங்களும் நாகரீகங்களும் முறை பிறழ்ந்த உறவை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதின. ஹமுராபி சட்டத் தொகுப்பு முறைபிறழ்ந்த உறவு மரண தண்டனைக்குரிய குற்றம் என்கிறது. இக்குற்றத்திற்காக சம்மந்தப்பட்டவர்களை நேரடியாகக் கொலை செய்யும் உரிமையை வழங்கின பண்டைய அய்ரோப்பிய சட்டங்கள். இங்கிலாந்தில் 1970 வரை குற்றத்தில் ஈடுபட்ட ஆண்களிடமிருந்து நட்ட ஈடு பெறுவது சட்ட உரிமையாக இருந்தது.
இந்தியாவைப் பொருத்தவரை இந்திய தண்டனைச் சட்டம் வரைவுச் சட்டமாக உருவான போது பிரிவு – 497 ஐ நீதிபதி மெக்காலே சேர்க்கவில்லை. ஆனால் இச்சட்டப் பிரிவு இந்தியாவுக்குத் தேவை என சட்ட ஆணையம் வலியுறுத்தியதால் பிரிவு 497 சேர்க்கப்பட்டது.
யூசுப் அப்துல் அஜிஸ் எதிர் பம்பாய் மாகாணம் (1954) என்ற வழக்கில் முறைபிறழ்ந்த உறவில் ஈடுபடும் பெண்ணுக்கு ஏன் தண்டனை இல்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 15(3) பெண்களுக்கு சிறப்புரிமை வழங்குவதை அங்கீகரிக்கிறது. எனவே இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497 சரியானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பெண்களின் அந்தரங்க உரிமையும் (right to privacy) கண்ணியமும் (dignity of women) இந்த வழக்கில் விவாதிக்கப்படவில்லை.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497 ஒரு சார்பாக உள்ளது. இதை இரு தரப்பாருக்கும் பொருந்தும் வகையில் கணவன் மற்றும் மனைவி இருவரையும் தண்டிக்கும் வகையில் பொதுப்பாலாக (Gender neutral – SPOUSE) மாற்றக் கோரி 1985-ல் தொடுக்கப்பட்ட விஷ்ணு எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் இது நீதிமன்றத்தின் வேலையல்ல; சட்டம் இயற்றும் மன்றங்களின் வேலை என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது. வி.ரேவதி – எதிர் – இந்திய அரசு வழக்கிலும் பிரிவு 497 உறுதிப்படுத்தப்பட்டது.
அமெரிக்கா, ரசியா, இங்கிலாந்து, சீனா, அய்ரோப்பிய நாடுகளில் முறை பிறழ்ந்த உறவு (Adultery) குற்றமல்ல. பாகிஸ்தான், சவுதி, இந்தோனேசியா நாடுகளில் குற்றம். தென் கொரியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முறை பிறழ்ந்த உறவு (Adultery) குறித்த பிரிவுகள் நீதிமன்றங்களால் நீக்கப்பட்டுள்ளன.
அரசியல் சட்ட அடிப்படை உரிமையான சமத்துவ உரிமை (Art.14), பாலினப் பாகுபாட்டிற்கு எதிரான உரிமை (Art.15(1)) மற்றும் தனிநபர் அந்தரங்கம் (Right to Privacy) – கண்ணிய உரிமையை (Right to Dignity) (Art.21) மீறுகிறதா? – இ.த.ச. பிரிவு 497 மற்றும் கு.வி.ந. சட்டப் பிரிவு 198?
முன்னொரு காலத்தில் குற்றம் என ஏற்றுக் கொள்ளப்பட்ட விசயங்கள், அடுத்து வரும் காலங்களில் முற்றிலும் பொருத்தமற்றவைகளாக உள்ளன. எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது என எந்த விசயமும் இல்லை. எல்லாமே மாறக்கூடியது. திருமண வாழ்க்கையும் இதற்குள் உள்ளடங்கியதே. மணவாழ்வில், ஆணும், பெண்ணும் சம பங்காளர்கள். மண வாழ்க்கை நீடிப்பதன் அடிப்படை சமத்துவமாக இருக்க வேண்டும். ஆண், பெண்ணை அடிமைப்படுத்தியல்ல.
ஆனால் பிரிவு 497, திருமணமான பெண்ணை, பொம்மையாக, சொத்தாக, ஆணுக்குக் கீழானவளாக – கட்டுப்பட்டவளாக, ஆணின் விருப்பத்திற்கேற்ப செயல்பட வேண்டியவளாகக் கருதுகிறது. பிரிவு 497 – மனைவியின் கற்புரிமையை அல்ல – கணவனின் சொத்துரிமையைப் பாதுகாக்கவே உள்ளது. இது பெண்களின் கண்ணியத்தை மீறும் செயல்.
இந்தியாவைப் பொருத்த வரை தனிநபர் அந்தரங்கம் (Right to Privacy) அடிப்படை உரிமையா என்கிற கேள்வி ஆதார் வழக்கிற்கு முன்பு எழுப்பப்படவில்லை. அதன் பின் புட்டசாமி வழக்கில் இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21 ன்படி தனிநபர் அந்தரங்க உரிமை அடிப்படை உரிமை என்பதை 9 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு உறுதி செய்துள்ளது.
திருமணம், பாலுறவு விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது. ஒரு பெண்ணுக்கு தன் உடல் மீது முழு உரிமை உண்டு. நீங்கள், மிகுந்த அழகானவர், எல்லா வகையிலும் உயர்ந்தவர் எனச் சமூகம் கருதும் ஒருவரை ஒரு பெண் நிராகரிக்கலாம். தனி நபர் சுதந்திர உரிமை, திருமணத்தைப் புனிதமாகக் கருதும் குடும்பம் என்ற நிறுவன அமைப்பின் உரிமையை விட மேலானது. ஒரு பெண், ஆண் யாருடன் உடலுறவு வைத்துக் கொள்வது என்பது அவர்களது அந்தரங்க உரிமை. திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொண்டால் அது சமூகத் தவறு மட்டுமே (Civil wrong). இதற்கு விவாகரத்து பெறலாம். ஆனால் இதை ஒரு கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது. எல்லாத் தனிநபர்களையும் சமூகத்தின் பாலுறவு குறித்த கோட்பாட்டிற்கு இணக்கமாக இருக்கக் கோர முடியாது.
தனக்கான பாலியல் இணை யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்தத் தனிநபருக்குத்தான் உண்டு. முறைகேடான உறவு பிரச்சனையில் ஒரு கணவன் தனது மனைவியை தனக்கான சொத்தாகக் கருதி அவளுடன் வேறு ஒரு நபர் உடலுறவு வைத்துக் கொள்வது தொடர்பாகப் புகார் கொடுக்கும்போது அதைத் தொடர்ந்து வழக்கு – விசாரணை வரும். இந்நடவடிக்கைகள் ஒரு தனிநபரின் அந்தரங்கத்தில் அரசு, நீதிமன்றம் தலையிடுவதே. இதைத் தனிநபர் வழக்காகத்தான் தொடுக்க முடியும் என்றாலும், வேறு சில பிரிவுகள் சேர்க்கப்பட்டால் காவல்துறை தலையிடலாம். இவ்வாறான காவல்துறை – நீதிமன்றத்தின் தலையிடல் இந்திய அரசியல் சட்டத்துக்கு முரணானது. இது இந்திய அரசியல் சட்ட சரத்து 21-ன் கீழான கண்ணியமாக வாழும் ஒரு குடிமகன்/குடிமகளின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது.
அரசியல் சட்டம் சமூக மாற்றத்திற்கான சட்ட வழியைச் சொல்கிறது. சமூகத்தின் ஜனநாயக நெறிமுறைகளை உயர்த்துகிறது. சமத்துவ சமூகத்தை உருவாக்குவதே அரசியல் சட்டத்தின் நோக்கம். அச்சமூகமும், தனிமனித கண்ணியத்தை உறுதி செய்ய வேண்டும். எனவே இனியும் ஆணாதிக்க முறைகள் பெண்கள் உரிமையைத் தடை செய்ய முடியாது. பெண்கள் பலவீனமானவர்கள் அவர்களுக்கு சலுகை வழங்குகிறோம் எனச் சொல்லி உரிமையை மறுக்கக் கூடாது. ஆணும், பெண்ணும் சமம் எனக் கருதி நடந்தால்தான் அரசியல் சட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.
எனவே, அனைவருக்கும் சம உரிமை வழங்கும் பிரிவு 14, பாலினம் – மதம் – இனம் என்கிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் பிரிவு 15 (1) மற்றும் ஒவ்வொரு தனி நபரும் கண்ணியமாக வாழ்வதற்கான உரிமையை நிலைநாட்டும் பிரிவு 21 ஆகிய இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497 மற்றும் கு.வி.ந.ச. பிரிவு 498 – இருப்பதால் இரு பிரிவுகளையும் ரத்து செய்கிறோம் என்கிறது உச்சநீதிமன்றம்.
கேள்விகள்
பிரிவு 497 ஐ நீக்குவதால் சமூக ஒழுக்கமும் திருமண ஒழுக்கமும் சீர் குலையாதா? இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதுதானே சரி? அதற்கேற்ப சட்ட திருத்தம் செய்வதுதானே முறையானதாக இருக்க முடியும்? என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது.
இருவரையும் தண்டிக்கலாம் என்றால் அதைப் பாராளுமன்றம்தான் செய்ய வேண்டும். நீதிமன்றத்தின் வேலை ஒரு சட்டப் பிரிவு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? எனப் பார்ப்பது மட்டுமே.
முறைபிறழ்வு உறவைக் குற்றமாக்குவதால் திருமண வாழ்வைக் காப்பாற்ற முடியாது. முறைபிறழ்வுப் பிரச்சனை வந்து புகார் கொடுத்தாலே நிச்சயம் குடும்பம் சிதைவுறும். முறைபிறழ்வு உறவு குற்றமாக கருதப்படாத அமெரிக்கா, ரசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சமூக ஒழுக்கம் சீர்குலைந்து விட்டது என்பதற்குப் புள்ளி விவரங்கள் இல்லை. ஒழுக்கத்திற்கு மாறாக இருப்பதால் மட்டுமே ஒரு விசயத்தில் அரசு தலையிட முடியாது. குற்றவியல் சட்டத்தைப் பொருத்தவரையில் அறநெறிக்கு / ஒழுக்கத்திற்கு (morality) இடமேதுமில்லை.
சமூகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் குற்றமாகக் கருத முடியாது. ஒரு விபத்து நடக்கும் போது விபத்துக்குள்ளானவரைக் காப்பாற்றாமல் வேடிக்கை பார்ப்பது ஒரு தவறாகத்தான் கருதப்படுமேயொழிய அதை ஒரு குற்றமாகக் கருத முடியாது. ஒரு அடிதடி, கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட நிகழ்வுகளிலும் பார்ப்பவர்கள் தடுக்கவில்லை என்றால் இதுதான் சட்டத்தின் நிலை. குற்றங்களைத் தடுக்கவில்லை என்பது ஒரு சமூகத் தவறு தானேயொழிய அதைக் கிரிமினல் குற்றம் என வரையறுக்க முடியாது.
எனவே முறைபிறழ்ந்த உறவு என்கிற பிரச்சனை வரும் வரும் போது அத்தவறு மணவிலக்கு கோருவதற்கான காரணமாக இருக்கலாம். ஆனால் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது சரியல்ல என்கிறது உச்சநீதிமன்றம்.
பெண்களை அடிமைகளாக, வேட்டையாடி நுகரப்பட வேண்டிய கவர்ச்சிப் பொருளாகக் கருதும் இன்றைய சமூகச் சூழலில் வெளிவந்திருக்கும் இத்தீர்ப்பு பெண் சமூகத்திற்கு முழுமையான விடிவைத் தராது என்ற போதிலும், மனைவி கணவனின் சொத்து அல்ல என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இத்தீர்ப்பு அவசியம் வரவேற்கப்பட வேண்டிய, எல்லோரும் படித்து விவாதிக்க வேண்டிய ஒன்று.
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவின் சட்ட ஆலோசகர். தூத்துக்குடி வைகுண்டராஜன் தாதுமணல் கொள்ளை, மதுரை பி.ஆர்.பி. கிரானைட் கொள்ளை ஆகியவற்றை அம்பலப்படுத்துவதில் பங்கு வகித்தவர்.
மாக்சிம் கார்க்கிதெருக்கோடிக்கு அப்பாலுள்ள மைதானத்துக்குச் செல்ல முடியாதபடி, உணர்ச்சி பேதமே இல்லாத முகங்களே இல்லையென்று சொல்லத் தகுந்த ஒரு சாம்பல் நிற மனிதச் சுவர் வழியை அடைத்து மறித்துக் கொண்டு நின்றது. அந்த மனிதர்கள் ஒவ்வொருவரது தோளிலும் பளபளவென்று மின்னும் துப்பாக்கிச் சனியன்கள் தெரிந்தன. அசைவற்ற மோன சமாதியில் ஆழ்ந்து நின்ற அந்த மனிதச் சுவரிலிருந்து ஒரு குளிர்ச்சி கனகனத்தது. தாயின் இதயமும் குளிர்ந்து விறைத்தது.
அவள் அந்தக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு. கொடியின் பக்கமாக, அதன் அருகே நிற்கும் தனக்குத் தெரிந்த ஆட்களின் பக்கமாகச் சேர்ந்து நிற்பதற்காக, விறுவிறுவென்று முன்னேறினாள். அங்கு நிற்கும் தனக்கு தெரிந்த நபர்கள் தமக்குத் தெரியாத பிற நபர்களோடு கலந்து அவர்களிடம் ஏதோ உதவியை நாடித் தவிப்பது போல் நின்றார்கள். திடீரென்று அவள் ஒரு நெட்டையான மழுங்கச் சவரம் செய்த ஒற்றைக் கண் மனிதன் மீது பலமாக மோதிக் கொண்டாள். அவளைப் பார்ப்பதற்காக விருட்டென்று தலையைத் திருப்பி அவளைக் கேட்டான்:
”யார் நீ?”
”நான் பாவெல் விலாசவின் தாய் என்று சொன்னாள். இப்படிச் சொல்கையில் தனது கால்கள் குழவாடி நடுநடுங்குவதையும் வாயின் கீழுதடு நடுங்குவதையும் அவள் உணர்ந்தாள்.
“ஆஹா!” என்றான். அந்த ஒற்றைக் கண்ணன்.
“தோழர்களே! நமது வாழ்க்கை முழுவதிலுமே நாம் முன்னேறிக் கொண்டேதான் இருக்க வேண்டும் முன்னேறிச் செல்வதைத் தவிர நமக்கு வேறு வழியே கிடையாது” என்றான் பாவெல்.
அங்கு நிலவிய சூழ்நிலை அமைதியும் ஆர்வமும் நிறைந்ததாக இருந்தது. கொடி மேலே உயர்ந்து ஒரு கணம் அசைந்தது. பிறகு மக்கள் கூட்டத்தின் தலைகளுக்கு மேலாக, எதிராகத் தோன்றிய மனிதச் சுவரை நோக்கி நிதானமாக முன்னேறிச் செல்லச் செல்ல, காற்றில் மிதந்து வீசிப் பறந்தது. தாய் நடுநடுங்கிப் போய் மூச்சு முட்டித் திணறிக் கண்களை மூடிக்கொண்டாள். நாலு பேர், கூட்டத்தை விட்டுப் பிரிந்து தனியே முன்னே சென்றார்கள். அவர்கள் பாவெல், அந்திரேய், சமோய்லவ், மாசின் ஆகியோர் முன்னே சென்றார்கள்.
பியோதர் மாசினின் கணீரென்ற குரல் காற்றில் ஒலித்தது:
இணையும் ஈடும் இல்லாத
இந்தப் போரில் நீங்களெல்லாம்….
ஆழ்ந்த பெரு மூச்சைப்போல் தணிந்த குரல்களில் அடுத்த அடி ஒலித்தது.
அவர்கள் நால்வரும் பாட்டுக்குத் தகுந்தவாறு நடை போட்டு முன்னேறினர்.
பியோதர் மாசினுடைய குரல் பளபளப்பான பட்டு நாடாவைப் போல் சுருண்டு நெளிந்து ஒலித்தது. அந்தப் பாட்டில் தீர்மானமும் வைராக்கியமும் தொனித்தது:
வெற்றி பெறுமோர் லட்சியமாம்
விடுதலைக்காக நீங்களெல்லாம்…..
அவனது தோழர்கள் அவனோடு சேர்ந்து அடுத்த அடிகளைப் பாடினார்கள்:
உற்ற செல்வம் அனைத்தோடும்!
உயிரும் கொடுத்தீர்! கொடுத்தீரே!
“ஆஹா — ஹா!” என்று யாரோ ஒருவன் கரகரத்தான். “ஒப்பாரி பாடுகிறார்களடா!” நாய்க்குப் பிறந்த பயல்கள்!”
“கொடு ஒரு அறை!’ என்று ஒரு கோபக் குரல் கத்தியது.
தாய் தன் கைகளால் நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டு, சுற்றுமுற்றும் பார்த்தாள். சிறிது நேரத்துக்கு முன்பு அந்தத் தெரு முழுதும் நிரம்பித் ததும்பிய ஜனங்கள், இப்போது அந்த நால்வர் மட்டுமே கொடியைத் தூக்கிக் கொண்டு முன்னே செல்வதைக் கண்டதும் உள்ளம் கலங்கித் தடுமாறிப்போய் நின்றாள். சிலர் அந்த நால்வரையும் பின்பற்றிச் செல்லத் தொடங்கினார்கள். எனினும், அவர்கள் ஒவ்வொரு அடி முன்னேறும் போதும், ஒவ்வொருவனும் அந்தத் தெரு தனது உள்ளங்காலைக் சுட்டுப் பொசுக்குவது போல் உணர்ந்து பயந்து துள்ளி. பின்வாங்கி நின்றுவிட்டான்
முடிவில் ஒரு நாள் கொடுங்கோன்மை மூட்டோடற்றுப் போகுமடா!
பியோதர் மாசின் உபதேசம் செய்வது போல் பாடினான். அவனது குரலுக்குப் பல உரத்த குரல்கள் தீர்மானமாகவும், கடுமையாகவும் பதிலளித்தன.
அடிமை மக்கள் விழித்தெழுவர் அந்நாள், அந்நாள். அந்நாளே!
என்றாலும் அந்தப் பாட்டுக்கு மத்தியில் கசமுசப்புக் குரல்களும் கேட்டன:
”அவர்கள் இதோ உத்தரவு கொடுக்கப் போகிறார்கள்”
அதே சமயம் முன் புறத்திலிருந்து ஒரு கூரிய குரல் திடீரென்று ஒலித்தது.
“துப்பாக்கிகளை நீட்டுங்கள்!”
உடனே துப்பாக்கிச் சனியன்கள் முன்னோக்கித் தாழ்ந்து நின்றன; நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் அந்தக் கொடியை ஒரு வஞ்சகப் புன்னகையோடு வரவேற்றன.
”முன்னேறு!”
”இதோ வந்துவிட்டார்கள்!” என்று அந்த ஒற்றைக் கண் மனிதன் கூறிக்கொண்டே, தனது கைகளைப் பைக்குள் விட்டுக்கொண்டு ஒரு பக்கமாக நழுவிப் போக ஆரம்பித்தான்.
தாய் கண்ணிமையே தட்டாமல் வெறித்துப் பார்த்தாள். அந்தத் தெருவின் அகலம் முழுவதையும் அடைத்துக் குறுக்காகத் தோன்றிய அந்தச் சிப்பாய்களின் சாம்பல் நிற முன்னணி ஒன்று போல் நிதானமாக, நிற்காமல் முன்னேறி வந்தது. அந்த அணிக்கு முன்னால் துப்பாக்கிச் சனியன்கள் வெள்ளிச் சீப்பின் பற்களைப்போல் மின்னிக் கொண்டு வந்தன. விடுவிடு என்று நடந்து, அவள் தன் மகனுக்கு அருகிலே போய்ச் சேர்ந்தாள். அந்திரேய் பாவெலுக்கு முன்னால் போய் நின்று தனது நெடிய உருவத்தால் பாவெலைப் பாதுகாத்து மறைத்து நிற்பதைக் கண்டாள்.
“உன் இடத்துக்குப் போ, தோழா!” என்று பாவெல் உரக்கக் கத்தினான். அந்திரேய் தனது கைகளைப் பின்னால் நீட்டியவாறு தலையைப் பின்னால் சாய்த்துக் கொண்டிருந்தான். பாவெல் அவனது தோளைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே மீண்டும் கத்தினான்.
“பின்னாலே போ! இப்படி செய்வதற்கு உனக்கு உரிமை கிடையாது கொடிதான் முதலில் போகவேண்டும்!”
“கலைந்து விடுங்கள்” என்று தனது வாளைச் சுழற்றியவாறே அந்தக் குட்டி அதிகாரி மெல்லிய குரலில் உத்தரவிட்டான். அவன் தனது கால்களை உயர்த்தி, முழங்கால்களைச் சிறிதும் வளைக்காமல், பூட்ஸ் காலால் தரையை ஓங்கி மிதித்து நடந்து வந்தான். தாய் அந்தப் பூட்ஸ்களின் பளபளப்பைக் கண்டாள்.
அந்தப் பாட்டு நின்றுவிட்டது. ஜனங்கள் நின்று விட்டார்கள், பாவெலைச் சுற்றி ஒரு மதில் போல நின்றார்கள். ஆனால் அவனோ இன்னும் முன்னேறினான். ஏதோ ஒரு மேகம் வானத்திலிருந்து தொப்பென்று விழுந்து அவர்களைக் கவிந்து சூழந்தது போல் திடீரென ஒரு சவ அமைதி நிலவியது.
கட்டையாக வெட்டிவிடப்பட்ட கிராப்புத் தலையும் அடர்த்தியான நரைத்த நிற மீசையும் கொண்ட ஒரு நெட்டை மனிதன் அவனுக்கு புறத்தே பின்னால் நெருங்கி நடந்து வந்தான். அவன் ஒரு நீண்ட சாம்பல் நிறக்கோட்டு அணிந்திருந்தான்; கோட்டின் விளிம்புகளில் சிவப்பு வரிக்கோடுகள் காணப்பட்டன. அவனது கால் சராயின் மஞ்சள் கோடுகள் கீழ்நோக்கி ஓடின. ஹஹோலைப் போலவே அவனும் தன் கைகளைப் பின்னால் கோத்தவாறே நடந்து வந்தான். அடர்ந்த புருவங்கள் உயர்ந்து நிற்க, அவனது கண்கள் பாவெலின் மீது பதிந்து நிலைகுத்தி நின்றன.
தாயால் தான் பார்த்தவற்றை உணர்ந்தறிய முடியவில்லை. அவளது இதயத்துக்குள் ஒரு பயங்கர ஓலம் நிறைந்து விம்மி எந்த நிமிஷத்திலும் வெடித்து வெளிப் பாய்வது போல் முட்டி மோதும் அந்த ஓல உணர்ச்சியால் அவள் திக்குமுக்காடினாள். தன் மார்பை அழுத்திப் பிடித்து அதை உள்ளடக்கினாள். ஜனங்கள் அவளைத் தள்ளினார்கள். எனவே, அவள் தள்ளாடியபடி முன்னே நடந்தாள். ஞாபகமின்றி, அநேகமாக நினைவிழந்து நடந்தாள் அவள். தனக்குப் பின்னால் நின்ற கூட்டம் தம்மை எதிர்நோக்கி வரும் பேரலையால் கொஞ்சம் கொஞ்சமாக அடித்துச் செல்வது போல் அவள் உணர்ந்தாள்.
கொடியைத் தாங்கி நின்றவர்களும் இன்னும் நெருங்கிப் போனார்கள். அந்தச் சாம்பல் நிறச் சிப்பாய்கள் இறுக்கமான சங்கிலிக் கோர்வையாய் இன்னும் நெருங்கி வந்தனர். பற்பலவித வண்ணங்கள் பெற்ற கண்களோடு ஒழுங்கற்றுத் தெரியும் மஞ்சள் நிற வரிக்கோடுகளோடு, விகாரமாக குலைந்து போன அந்தச் சிப்பாய் முகம் தெரு முழுதும் அடைத்தவாறு முன்னேறி வருவதைப் பார்த்தாள். அதற்கு முன்னால், ஊர்வலம் வருபவர்களின் மார்புகளுக்கு நேராக ஏந்திப் பிடித்த துப்பாக்கிச் சனியன்களின் கொடிய முனைகள் பளபளத்தன; அந்தக் கூட்டத்தினரின் மார்புகளைத் தொடாமலேயே அந்தக் கூட்டத்தை ஒவ்வொருவராகப் பிரித்துக் கலைத்துவிட்டன.
தனக்குப் பின்னால் ஜனங்கள் ஓடுவதையும், கூக்குரலிடுவதையும் அவள் கேட்டாள்:
“கலையுங்களடா!”
“விலாசவ், ஓடிப்போ!”
“பின்னாலே வா, பாவெல்!”
“கொடியை இறக்கு. பாவெல்!” என்று நிகலாய் வெஸோவ்ஷிகோவ் மெதுவாகச் சொன்னான். “என்னிடம் கொடு. நான் அதை மறைத்து வைக்கிறேன்.”
அவன் கொடியின் காம்பைப் பற்றிப் பிடித்து இழுத்தான். கொடி பின்புறமாகச் சாய்ந்து ஆடியது.
“விடு அதை!” என்று கத்தினான் பாவெல்.
நிகலாய் சூடு பட்டது போலத் தன் கையை வெடுக்கென்று பிடுங்கினான். அந்தப் பாட்டு நின்றுவிட்டது. ஜனங்கள் நின்று விட்டார்கள், பாவெலைச் சுற்றி ஒரு மதில் போல நின்றார்கள். ஆனால் அவனோ இன்னும் முன்னேறினான். ஏதோ ஒரு மேகம் வானத்திலிருந்து தொப்பென்று விழுந்து அவர்களைக் கவிந்து சூழந்தது போல் திடீரென ஒரு சவ அமைதி நிலவியது.
கொடியைச் சுற்றி நின்றவர்கள் சுமார் இருபது பேருக்கு அதிகமில்லை. எனினும் அவர்கள் அனைவரும் அசையாது உறுதியோடு நின்றார்கள். தாய் பயத்தோடும் அவர்களிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்று இனந்தெரியாத விருப்போடும் அவர்கள் பக்கமாக நெருங்கிச் சென்றாள்.
”லெப்டினெண்ட் அந்தப் பயலிடமிருந்து அதைப் பிடுங்கு என்று கொடியைச் சுட்டிக்காட்டியவாறு சொன்னான் அந்தக் கிழட்டு நெட்டை மனிதன்.
அந்தக் குட்டி அதிகாரி உடனே பாவெலிடம் ஓடிப்போய், கொடியைப் பற்றிப் பிடுங்கினான்.
”கொடு இதை!” என்று அவன் கீச்சிட்டுக் கத்தினான்.”
”எடு கையை!” என்று உரத்த குரலில் சொன்னான் பாவெல்.
கொடி வானில் பிரகாசத்தோடு நடுங்கியது. முன்னும் பின்னும் ஆடியது, பிறகு மீண்டும் நேராக நின்றது. அந்தக் குட்டி அதிகாரி தள்ளிப்போய் பின்னால் வந்து விழுந்தான். நிகலாய் தன் முஷ்டியை ஆட்டியவாறு தாயைக் கடந்து விரைந்து சென்றான்.
”இவர்களைக் கைது செய்” என்று தனது காலைப் பூமியில் ஓங்கியறைந்து கொண்டு சத்தமிட்டான், அந்தக் கிழட்டு நெட்டை மனிதன்.
தாய் தன் நெஞ்சுக்குள் புழுங்கித் தவித்த பயங்கர ஓலத்தை அடிபட்ட மிருகம் போல் அலறிக்கொண்டு வெளியிட்டாள். அந்தச் சிப்பாய்களுக்கு மத்தியிலிருந்து பாவெலின் தெளிவான குரல் ஒலித்தது: ”வருகிறேன், அம்மா! போய் வருகிறேன். அன்பே..”
பல சிப்பாய்கள் முன்னே ஓடினார்கள். அவர்களில் ஒருவன் துப்பாக்கியை மாற்றிப் பிடித்துச் சுழற்றி வீசினான் – கொடி நடுங்கியது. முன்னால் சாய்ந்து விழுந்தது. சிப்பாய்களின் கூட்டத்தில் மறைந்து போய்விட்டது.
“ஹா!” என்று யாரோ ஒருவன் அசந்து போய்க் கத்தினான்.
தாய் தன் நெஞ்சுக்குள் புழுங்கித் தவித்த பயங்கர ஓலத்தை அடிபட்ட மிருகம் போல் அலறிக்கொண்டு வெளியிட்டாள். அந்தச் சிப்பாய்களுக்கு மத்தியிலிருந்து பாவெலின் தெளிவான குரல் ஒலித்தது:
”வருகிறேன், அம்மா! போய் வருகிறேன். அன்பே..”
தாயின் மனத்தில் இரண்டு எண்ணங்கள் பளிச்சிட்டன், அவன் உயிரோடிருக்கிறான் அவன் என்னை நினைவு கூர்ந்தான்.
”போய் வருகிறேன். அம்மா’!”
அவர்களைப் பார்ப்பதற்காகத் தாய் குதியங்காலை உயர்த்தி எட்டிப் பார்க்க முயன்றாள். சிப்பாய்களின் தலைக் கூட்டத்துக்கு அப்பால், அந்திரேயின் முகத்தை அவள் பார்த்தாள். அவன் புன்னகை செய்து கொண்டே அவளுக்குத் தலை வணங்கினான்.
“ஆ!” என் கண்மணிகளே… அந்திரியூஷா! பாஷா!” என்று அவள் கத்தினாள்.
“போய் வருகிறோம். தோழர்களே!” என்று அவர்கள் சிப்பாய்களின் மத்தியிலிருந்து சொன்னார்கள்.
பல குரல்கள் அவர்களுக்கு எதிரொலியளித்தன. அந்த எதிரொலி ஜன்னல்களிலிருந்தும், எங்கோ மேலேயிருந்தும், கூரைகளிலிருந்தும் வந்து ஒலித்தன.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
கஜா புயல் பாதிப்பால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன. சமீப ஆண்டுகளில் நடந்திராத இந்த பாதிப்பால் இலட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்தன. அரசின் கணக்குப்படியே 63 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள், குடிசைகள் அழிந்து போயின.
தமிழக அரசு அறிவித்த ரூ.1000 கோடி தொகை டெல்டா மாவட்டங்களை அடைந்ததா, அடையவில்லையா என்பதை அங்கு நடக்கும் அன்றாட சாலை மறியல் போராட்டங்களில் இருந்தே அறியலாம். ஒரு வாரம் கடந்தும் குடிநீரோ,உணவோ, அடிப்படை வசதிகளோ அம்மக்களை எட்டவில்லை.
தேசியப் பேரிடர் மோடியிடம் நிவாரணம் கேட்கும் தமிழகப் பேரிடர் எடப்பாடி
புயல் வீசி மூன்று நாட்களுக்குப் பிறகே முதலமைச்சர் எடப்பாடி குழுவினர் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்டு அதையும் பாதியில் முடித்துக் கொண்டு திரும்பினர். பிறகு தில்லி சென்ற முதல்வர் சேத அறிக்கையை பிரதமர் மோடியிடம் கொடுத்துவிட்டு, ரூ.15,000 கோடி கேட்டுள்ளார். முதற்கட்டமாக ரூ. 1500 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென கோரினார்.
சேதங்களை பார்வையிட பாஜக அரசு ’மனமிரங்கி’ அனுப்பிய மத்தியக் குழுவினர் கடந்த வெள்ளியன்று (23.11.2018) சென்னை வந்து முதலில் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தினர். மத்தியக் குழுவில் இடம்பெற்றவர்கள் யார்?
மத்திய உள்துறை இணை செயலாளர் (நீதித்துறை) டேனியல் ரிச்சர்டு, மத்திய நிதித்துறை ஆலோசகர் (செலவினங்கள்) கவுல், மத்திய வேளாண்மைத் துறையின் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் இயக்குனர் ஸ்ரீவஸ்தவா, மத்திய ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித் துறையின் முதன்மை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர்வள ஆதாரத் துறை இயக்குனர் ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் இளவரசன் ஆகியோர் மோடி அரசு அனுப்பிய குழுவில் இடம்பெற்றார்கள். பெயர்களை வைத்துப் பார்க்கும் போது ஒருவர் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். மற்றவர்களுக்கு தமிழகத்தைப் பற்றியோ, டெல்டா மாவட்டங்களைப் பற்றியோ என்ன தெரியும்?
முதல் நாளில் புதுக்கோட்டை மாவட்டம், இரண்டாம் நாள் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களை சென்று பார்த்தனர். கஜா புயல் எப்படி அதிவேகத்தில் கரையைக் கடந்ததோ அதே வேகத்தில் மத்தியக் குழுவினரும் ஒரு மாவட்டத்தில் ஓரிரண்டு இடங்களை மட்டுமே பார்த்தனர்.
புயலை விட வேகமாகப் பார்வையிடும் மத்தியக் குழு
மத்திய குழுவினர் தஞ்சை மாவட்டம் புலவன்காடு பகுதியில் பார்வையிட்ட போது சரோஜா என்ற பெண் மத்திய குழுவினரின் காலில் விழுந்து, தங்களுக்கு சொந்தமான அனைத்து தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்து வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் மீண்டு வர வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி கதறி அழுததாக தந்தி முதலான ஊடகங்கள் செய்தி போடுகின்றன.
ஆனால் பல இடங்களில் மக்கள் மத்தியக் குழுவினரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. சாலை ஓரங்களில் சென்ற குழுவினர், கிராமங்களுக்குள் ஏன் வரவில்லை என மக்கள் ஆங்காங்கே தமது எதிர்ப்புகளை தெரிவித்திருக்கின்றனர். காரில் சென்றபடியே பார்ப்பதால் சேதம் குறித்து என்ன தெரியும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
கற்பகநாதர் குளம் கிராமத்தின் நிவாரண முகாமில் இருந்த மக்கள் மத்தியக் குழுவினர் தங்களைச் சந்திக்காமல் சென்றதை எதிர்த்து சாலை மறியல் செய்தனர். இன்று திங்கட்கிழமை (26.11.2018) இக்குழுவினர் நாகை மாவட்டம் செல்கின்றனர்.
மத்தியக் குழுவைச் சேர்ந்த டேனியல் ரிச்சர்ட் கூறும்போது, புயல் காரணமாக தஞ்சாவூரில் தென்னை மரங்கள் அதிக சேதமடைந்துள்ளன, மத்திய அரசிடம் அறிக்கை அளித்த பிறகு அரசு நிதி வழங்கும் என தெரிவித்திருக்கிறார்.
குழுவினரோடு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இத்தனை பேர் இருந்தும் இவர்கள் எப்படி சேத விவரங்களை கணக்கீடு செய்கிறார்கள்? திருவாரூர் மாவட்டம் கூப்பாச்சிக்கோட்டையில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் சாய்ந்திருப்பதாக புதிய தலைமுறை செய்தி ஒன்று கூறுகிறது. ஒரு ஊரிலேயே இவ்வளவு பெரிய எண்ணிக்கை என்றால் எத்தனை ஊர்கள், கிராமங்கள், எத்தனை இலட்சம் தென்னை மரங்கள்? தென்னை மரங்களோடு தொடர்புடைய பல்வேறு தொழில்கள், முகவர்கள், வணிகர்கள், முன்பணம், கடன்கள், கூலித் தொழிலாளிகள் என்று இதன் பாதிப்பு பன்முக பரிமாணங்களோடு இருக்கிறது. ஒரு மரத்தை அகற்ற அரசு அறிவித்திருக்கும் ரூ.500 எந்த பயனுமளிக்காது என விவாயிகள் கூறுகின்றனர். 2019 துவக்கத்தில் வரும் இதுவரை இல்லாத முன்மாதிரியாக டெல்டா மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாது என்பதே விவசாயிகளின் சோகத்தை புரிந்து கொள்வதற்கு உதவும்.
காவிரி பிரச்சினை, அரசின் அலட்சியம் காரணமாக விவசாயிகள் பலர் தென்னை சாகுபடிக்கு மாறியிருந்தனர். அதன் மூலம் ஓரளவு நல்ல பணம் கிடைத்தது என்றாலும் இன்று அவர்கள் அத்தனை பேரும் ஒரே இரவில் ஏழைகளாக மாறிவிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான திருச்செல்வம். கஜா புயலால் இவருக்குச் சொந்தமான தேக்கு, தென்னை, சவுக்கு, வாழை உள்ளிட்ட மரங்கள் முற்றிலும் அழிந்து போனது. இதை நம்பி பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி விவசாயத்தை செய்து வந்தார். இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மரங்கள்தான் இவை.
இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமலும், வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்த இனி வழியில்லை என்று மனமுடைந்த திருச்செல்வம் பூச்சி மருந்து அருந்தினார். இதையறிந்த அவரது குடும்பத்தார் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி 26-11-2018 அன்று உயிர் இழந்தார். இது இன்று வெளிவந்துள்ள செய்தி. இது போன்ற எண்ணற்ற உயிரிழப்புகள் டெல்டா முழுவது நடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
“90 சதவீதம் பாதிப்பை சந்தித்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் புயலின் வேகமான தாக்குதலால் பல மரங்களின் தண்டு பகுதிகள் முறிந்துள்ளன. மேலும் இப்பகுதிகளில் மண் வளமும் குறைந்திருக்க வாய்ப்புள்ளது. சமூகவலைத்தளங்களில் பரவும் செய்தி போல உடைந்த மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது” என்கிறார் தமிழக அரசின் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரான கார்த்திகேயன்.
இறுதியில் டெல்டாவை மீத்தேன் திட்டங்களுக்காக தாரை வார்க்கும் சதியில் அரசுகள் உள்ளதோ என்று விவசாயிகள் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் சனி மாலையில் வந்த ஏழு பேர் கொண்ட மத்திய நிபுணர் குழுவினர் சடசடவென ஓரிரு பகுதிகளைப் பார்த்துவிட்டு இருட்டியதால் அன்றைய ‘ஆய்வை’ முடித்துக் கொண்டனர். ஒரு பகுதியில் அவர்கள் செலவிட்டது கால் மணிநேரம் கூட இல்லை.
இந்நிலையில் இந்த கனவான்கள் உள்பகுதிகளுக்கு வரமாட்டார்கள் என்று ஆங்காங்கே சாலையில் புகைப்படங்கள் வைத்து பாதிப்பை காட்டியிருக்கின்றனர். தில்லியிலிருந்து வந்தவர்கள் புகைப்படங்களை மட்டும் பார்க்கிறார்கள் என்றால் அதை தில்லியிலேயே பார்த்திருக்கலாமே?
நிவாரணம் பெற வேண்டுமென்றால் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை கேட்கிறது அரசு. வீடுகளையே இழந்த மக்களிடம் இழப்பீட்டுக்கு அடையாள அட்டை கேட்கிறது இந்த ‘பொறுப்பான’ அரசு!
சேதத்தை தாமதமாக பார்வையிட வந்த நிபுணர் குழு அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாது என்பது ஒரு யதார்த்தமென்றே வைப்போம். ஆனால் அனைத்து இடங்களின் பாதிப்பை அறிய இவர்களிடம் என்ன வழிமுறை உள்ளது? ஒரு கண்துடைப்பான இரக்கத்தை காட்டுவதற்கு நேரில் வந்தவர்கள், கண்துடைப்பான நிவாரணத் தொகையை அளிப்பதற்கு ஏற்பாடு செய்வதைத் தாண்டி இந்த மத்தியக் குழுவால் என்ன பயன்?
கஜா புயலின் பேரழிவால் பல இலட்சக்கணக்கான விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் வீடு இழந்து, வேலை இழந்து, தண்ணீர் – உணவின்றி வீதிகளில் தன்னார்வலர்களை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் அவலம் ஊருக்கே சோறுபோட்ட டெல்டா மண்ணில் அரங்கேறி வருகிறது. அதன் உச்சகட்டமாக தங்களுடைய அவலத்தை உலகுக்கு தெரியபடுத்தும் விதமாக சுடுகாட்டில் சமைத்து சாப்பிட்டு அங்கேயே படுத்துறங்கும் கொடுமையும் நடந்து வருவது பார்ப்பவர்களின் மனதை உலுக்கி எடுக்கிறது. ஆனால் சொரணைகெட்ட இந்த அரசுக்கு மட்டும் உறைக்கவில்லை.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் பின்னத்தூர், கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களுடைய வாழ்வாதரம் முழுவதும் இழந்து விட்ட நிலையில் ஊருக்கு அருகில் இருக்கும் சுடுகாட்டில் ஒரு டெண்ட் அமைத்து மதிய உணவு தயார் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் பெண்கள். ஊர் பெரியவர்கள் அருகே இருந்த கடற்கரை சாலையில் நிவாரண வண்டியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை நெருங்கியதும் அனைவரின் பார்வையும் எங்களை நோக்கியே மையம் கொண்டது.
(இடமிருந்து) ராஜேந்திரன் மற்றும் சந்திரன்.
கூட்டத்திலிருந்து ராஜேந்திரனும், சந்திரனும் தங்களுடைய துயரத்தை கொட்டித் தீர்த்தனர். “கஜா புயல் பாதிப்பு, படுக்க இடம் இல்லாம உடுத்த துணி இல்லாம, வீட்டுக்கும் போக முடியாம இங்க வந்துட்டோம். ரோட்டுல வரும் தண்ணிய கொண்டும், போற – வரவங்க தரும் தண்ணி, சாமானை வச்சிதான் இத்தன நாளா சமச்சி சாப்பிட்டு இருக்கோம்.
எங்க ஊர்ல இருக்கவங்க எல்லாம் விவசாய கூலிங்க. நடவு இருக்க மூனு மாசத்துக்குத்தான் வேலை இருக்கும். அதுக்கப்புறம் 100 நாள் வேலைக்கு போவோம். அதுவும் முடிஞ்சா கேரளாவுக்கு கட்டிட வேலைக்கு போவோம்.
ஜீவா காலனியில மொத்தம் 46 குடும்பம் இருக்கு. யாருக்கும் சொந்த நிலமில்ல. இரண்டு பேருக்கு மட்டும் ஒரு ஏக்கர்ல நிலம் இருக்கு. அவ்ளோதான். 36 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 120 பேர் இருக்கும்.
புயல் வரும்னு சொன்னதுக்கு பிறகு எல்லோரையும் பள்ளிக்கூடத்துல தங்கிக்கச் சொன்னாங்க. ஆனா அங்க ஏற்கனவே வேற தெரு மக்க தங்கி இருக்காங்க. அதுல 40 குடும்பம் இருக்கு. அதனால நாங்க இங்கேயே சமைத்து சாப்பிட்டு 6 நாளா இங்கயே இருக்கோம். படுக்க பாய், போர்வை, மாத்து துணி எதுவும் இல்லை. முகாம்ல இருக்கவங்களுக்கும் இதேதான் நெலம. நாங்க வாய்க்கு ருசியா சாப்பாடு கேக்கல. பொங்கித்தின்ன கொஞ்சம் அரிசி, மண்ணெண்ணெய், முக்கியமா கொசுவத்தி வேணும். ஒன்னும் முடியல, புடுங்கி எடுக்குது.
புயல்னு சொன்னப்ப பகல்ல இப்ப இருக்க மாதிரிதான் வெய்ய காஞ்சது. அதனால கொஞ்சம் நம்பிக்கை இழந்து இருந்துட்டோம். நைட்டு எல்லோரும் படுத்த பின்னாடிதான் காத்து பலமா வீச ஆரம்பிச்சிடுச்சி. தொறந்த கதவ மூட முடியல. ஓடு போட்ட வீட்ல ஒரு ஓடு பேத்துகிட்டதும் எல்லா ஓடும் தூக்கிட்டு போக ஆரம்பிச்சிடுச்சி.
எங்க எல்லாரோட வீடும் கூரைவீடு. கீத்து போட்டிருக்கும். கீத்து காத்து போவாத மாதிரி அடர்த்தியா இருந்ததால அதால உள்ள போக முடியல. மேல சிலிப்பிக்கிச்சி. ஆனா, அந்த காத்தால கீத்து கட்டியிருக்க பாலையை அறுக்க முடியல. கூண்டோட வீட்ட தூக்குற மாதிரி இருந்துச்சி. வீட்டுல இருந்த எல்லோரும் வீட்டுக்கு உள்ள இருக்க கழிய புடிச்சி தொங்கிட்டே இருந்தோம். அந்த நேரம் நாங்க எல்லோரும் செத்துட்டோம்னுதான் நெனச்சோம். காத்து நின்ன பிறகுதான் உசுரு வந்துச்சி. இந்த நெலமையெல்லாம் பாக்கும்போதுதான் நெனக்கிறோம். அப்பவே செத்திருக்கலாம்னு” என்றார் ராஜேந்திரன்.
அந்த நேரம் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் காய்கறி போன்றவற்றை எடுத்துக் கொண்டு வந்ததும் டெண்ட் கொட்டாயில் இருந்த பெண்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு பொருட்களை தனித்தனியாக பிரிக்க ஆரம்பித்தனர்.
சில நிமிட அமைதிக்குப் பிறகு அருகில் அமர்ந்திருந்த சந்திரன் பேச ஆரம்பித்தார். “அமைச்சர் காமராஜ் இந்த வழிதான் வந்தாரு. எங்களப் பார்த்து பேசி 10 கிலோ அரிசி, ஒரு புடவை ஒரு வேஷ்டி, ஆளுக்கு 1000 ரூபா பணம் கொடுக்க செல்றேன்னு சொன்னாரு. இன்னும் யாரும் எதுவும் கொண்டு வந்து தரல. இப்பக்கூட நாங்க சொசையிட்டில போயிட்டு கேட்டோம். அதுக்கு அவரு இன்னும் அரசாங்கத்துல இருந்து எதுவும் வர்லன்னு சொல்லி அனுப்பிட்டாரு. அதேமாதிரி டி.டி.வி. தினகரன் வந்து பார்த்துட்டு, “வீட்டுக்கு போங்க, உங்களுக்கு வேண்டியத செய்ய சொல்றேன்னு” சொல்லிட்டு கெளம்பிட்டாரு. நாங்க எங்க போறது? வீடு இருந்தா எதுக்கு இங்க வந்து சமைக்க போறோம், சொல்லுங்க?
இதுவரைக்கும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, மெட்ராசுன்னு எங்க எங்கயோ தொலைவுல இருந்து வரும் மக்கள்தான் எங்க நிலமைய பார்த்துட்டு பிஸ்கட், பால், ரொட்டின்னு இருக்கிறத கொடுத்துட்டு போறாங்க. வேற யாரும் எதுவும் செய்யிறது இல்ல.
நாங்க எங்ககிட்ட இருக்க அரிசிய போட்டு தினமும் இந்த உசிர புடிச்சிக்க எதோ புளி சாதம், பொங்க சாதம்னு செஞ்சி சாப்பிடுறோம். இந்த மாதிரி இன்னும் எத்தன நாளைக்கு இருக்க போறோமோன்னு தெரியல.
எங்களுக்கு வேலை கொடுக்கிற முதலாளி சரியானாத்தான் அவரால வேலை கொடுக்க முடியும். இந்த பக்கம் எல்லாம் நெல்லுதான். தண்டு உருண்டு வர நேரத்துல அடிச்ச காத்துல எல்லாம் ஒடஞ்சி இருக்கும். இனிமே கதிர் வராது. வந்தாலும் பதரா தான் போவும். பொன்னி, கல்சர், சி.ஆர்.1009 போன்ற ரகம்தான் அதிகம் போட்டிருக்காங்க. இப்ப அவங்களுக்கும் பெரிய பாதிப்பு இருக்கும்போது எப்படி இந்த நெலமைய எங்களால் சரி செய்ய முடியும்?
ஊருல இருந்த ஆடு, மாடு எல்லாம் இறந்துடுச்சி. மிச்சமிருக்க ஆட்டு, மாட்டுக்கும் தீவனம் இல்ல. அதுவும் இன்னும் எத்தன நாளைக்கு இப்படியே இருக்கும்னு தெரியல. கட்டு இடம்கூட சரிஞ்சிடுச்சி.
எடப்பாடிய விடுங்க. இந்த தொகுதி எம்.எல்.ஏ ஒருத்தன் ஆடலரசுன்னு இருக்கான். 6 நாளா சுடுகாட்டுல கெடக்கோம். இன்னும் என்னாச்சின்னு வந்து எட்டிப் பாக்கல. இவனுங்க எல்லாம் மனுஷனுங்களா? அமைச்சர மறிக்கிறோம்னு சொல்லுறாங்க. நாங்க எதுக்கு சும்மா இருக்கவன மறிக்கனும். எங்களுக்கு இந்த ஆபத்துல எதாவது உதவி செஞ்சா நாங்க எதுக்கு மறிக்க போறோம்?
எங்க ஊர்ல அஞ்சாவது வரைக்கும்தான் சார் இருக்கு. மேல படிக்கனும்னா நாச்சிக்குளம் வரைக்கும் போவனும். அப்படி படிச்சி இதுவரைக்கும் 6 பேர் பட்டதாரி, எஞ்சினியரிங் முடிச்சிருக்காங்க. ஆனா யாருக்கும் ஒழுங்கா வேலை கெடக்கல. எங்க ஏரியால இருந்து ஒருத்தவங்ககூட இது வரைக்கும் கவர்மெண்ட் வேலைக்கு போனவங்களே கிடையாது சார். ஏனோ எங்களுக்கு மட்டும் தர மாட்றாங்க.
என் பையனும் எஞ்சினியரிங் முடிச்சிட்டு மெட்ராசுக்கு போயிட்டான். வெறும் பதினொராயிரம் சார் அவனுக்கு சம்பளம். அவன் வாங்குற சம்பளத்த நாங்க எதிர் பாக்கல. இந்த வெலவாசில அவங்களுக்கே பத்தாது. அதால அவன் சம்பாதிக்கிறத கொண்டு அவன காப்பாத்திக்கிட்டா அதுவே போதும் சார் எங்களுக்கு.
இப்பக்கூட தீபாவளிக்கு பையன் வந்தான்… சுத்தமா காசி இல்லன்னு சொன்னான். இருக்கிறத பொரட்டிபோட்டு மூனாயிரம் கையில கொடுத்தனுப்சேன் சார். நாங்க எப்படி அவன் வருமானத்த எதிர்பார்க்க முடியும் சொல்லுங்க….
என்ன இந்த புயலுக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணி பேசினான். அதோட சரி. இப்ப வரைக்கும் பேச முடியல சார்… வீடு இடிஞ்சி சோத்துக்கு வழி இல்லாம போற வரவங்கள எதிர்பாத்து கெடக்கோம். இந்த நேரம் என் பையன் கூட இருந்திருந்தா தெம்பா இருந்திருந்திருக்கும். இப்பதான் சார் வருத்தப்படுறேன்’ னு சொல்லிக்கொண்டே இருந்தவரின் கண்களின் சாரை சாரையாக கண்ணீர் வழிந்ததை துடைத்துக்கொண்டே பேச முயற்சித்தார். தேம்பிய கண்கள் தொண்டையை அடைக்க அவரால் பேச முடியவில்லை. சுற்றி இருந்தவர்கள் மத்தியில் கனத்த மெளனம்..!
கொஞ்ச நேரம் கழித்து தோளில் இருந்த துண்டால் கண்களைத் துடைத்துக்கொண்டு பேசினார் சந்திரன்…. “எங்க உடம்பு வைரம் பாய்ஞ்ச உடம்பு… எவ்ளோ வெய்ய, மழை குளிர வேணா தாங்கும். ஆனா இனிமே இந்த காத்து மட்டும் வரக்கூடாது சார். எல்லாரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க. நாங்க உயிரோடவே வந்து பார்த்துட்டோம்.” என்கிறார் பயம் கலந்த சோகத்துடன் !