Tuesday, July 1, 2025
முகப்பு பதிவு பக்கம் 420

ஜி.எஸ்.டி : ஏழைகள் மீது மோடி அரசு தொடுத்த தாக்குதல் !

ஜி.எஸ்.டி ஓராண்டு நிறைவு : உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டும் மோடி அரசின் சாதனை

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி “நள்ளிரவில் ஜி.எஸ்.டி” என்று உழைக்கும் மக்கள் மீதான அடிமைச் சங்கிலியை மாட்டி விட்டார் மோடி. அதன் ஓராண்டு நிறைவை பெரிய சாதனையாக அறிவித்து ஜூலை 1-ம் தேதியை ஜி.எஸ்.டி நாளாக மோடி அரசு கொண்டாடியிருக்கிறது.

ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ 1 லட்சம் கோடியை தாண்டியது என்று மார் தட்டினார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. “ஜி.எஸ்.டி வரி விதிப்பின் முதல் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ 89,885 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த மாத சராசரியை ரூ 1 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு பாடுபடுவோம்” என்கிறது மோடி அரசு.

“ஆண்டுக்கு ரூ 12 லட்சம் கோடி வசூல் என்ற இலக்கைத் தாண்டி ரூ 13 லட்சம் கோடியை எட்டப் போகிறது. இதை பா.ஜ.க மட்டுமல்ல மக்களே கொண்டாடுகிறார்கள்” என்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். இங்கு மக்கள் என்பதை பா.ஜ.கவின் புரவலர்களான முதலாளிகளும், அவர்களுக்கு சேவை செய்யும் மேட்டுக்குடிகளும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில், உழைக்கும் மக்களிடமிருந்து வரி வசூலை தீவிரப்படுத்தியது மோடி அரசை பொறுத்தவரையில் பெரிய சாதனைதான்.

GST என்பது மறைமுக வரியாகும். நாம் வாங்கும் ஒவ்வொரு ரூ 100 மதிப்பிலான பொருளுக்கும் சராசரியாக ரூ 18-ஐ வரியாக வசூலிக்கிறது அரசு. இத்தகைய மறைமுக வரி விதிப்பு உழைக்கும் ஏழை மக்கள் மீது அதிகமாகவும், பணக்காரர்கள் மீது குறைவாகவும் சுமையை ஏற்றுகிறது (பார்க்க அட்டவணையில் தரப்பட்டுள்ள உதாரணம்)

வர்க்கம்

மாத வருவாய்

மளிகை செலவு

ஜி.எஸ்.டி வரி

வருவாயில் வரி %

தொழிலாளி

ரூ 10,000

ரூ 5,000

ரூ 900

9%

நடுத்தர வர்க்கம்

ரூ 50,000

ரூ 10,000

ரூ 1,800

0.9%

பணக்கார முதலாளி

ரூ 1 கோடி

ரூ 1 லட்சம்

ரூ 18,000

0.018%

இந்த கணக்குப்படி ஒரு ஏழை தொழிலாளி கட்டும் வரியின் சதவீதம் நடுத்தர வர்க்கத்தின் வரிச் சுமையை விட 10 மடங்கு அதிகம், கோடீஸ்வர முதலாளி தொழிலாளியை விட 500 மடங்கு குறைவான சதவீதம் வரி கட்டுகிறார். இதை பெட்ரோல்/டீசல் மீதும், தொலைபேசி சேவை மீது வசூலிக்கப்படும் மறைமுக வரிக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

இவ்வாறு வரவுக்கும் செலவுக்கும் போதாமல் போராடிக் கொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்திடமிருந்து அதிக சதவீதம் வரி வசூலிப்பதுதான் ஜி.எஸ்.டி என்ற மறைமுக வரி.

இதற்கு மாறாக, தனிநபர் வருமான வரி ரூ 2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு 0% ஆகவும், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான வருமானம் பெறும் ஒரு ஊழியருக்கு 5% ஆகவும், ரூ 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானம் ஈட்டும் ஓரளவு வசதியான நபருக்கு 20% ஆகவும், ரூ 10 லட்சத்துக்கு அதிகமான வருமானத்தை குவிக்கும் முதலாளிகளுக்கு 30% ஆகவும் வசூலிக்கப்படுகிறது.

பணக்கார முதலாளிகள் வருமான வரியை கட்டாமல் ஏய்ப்பதன் மீதான நடுத்தர வர்க்கத்தின் கோபத்தை பயன்படுத்தி “வருமான வரியையை ரத்து செய்ய வேண்டும்” என்று சுப்பிரமணிய சுவாமி முதலான பார்ப்பன ஆளும் வர்க்க அறிவுஜீவிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். பணக்கார முதலாளிகளின் வரி ஏய்ப்பை தடுத்து நிறுத்தி வசூலிக்க துப்பில்லாத அரசு பணக்கார முதலாளிகள் மீதான வரியை குறைக்கவும், ரத்து செய்யவும் முன் வருகிறது; ஏழை மக்கள் வாங்கும் பொருட்கள் மீது வலுக்கட்டாயமான வரி வசூலிப்பை சுமத்துகிறது.

மேலும், கார்ப்பரேட் லாபத்தின் மீதான வரியை 30%-லிருந்து 25% ஆக குறைப்பதாக ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதி அளித்தது மோடி அரசு. அதன் படி ரூ 500 கோடி வரை ஆண்டு விற்பனை செய்யும் நிறுவனங்களின் லாபத்தின் மீதான வரி 25% ஆகக் குறைக்கப்பட்டு விட்டது.

இவ்வாறு ஜி.எஸ்.டி வரி வசூலில் சாதனை படைக்கும் மோடி அரசு, தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பை உறிஞ்சி லாபத்தை குவிக்கும் முதலாளிகள் மீதான வரி விதிப்பை தொடர்ந்து குறைத்து வருகிறது. அதாவது, உழைக்கும் மக்களிடமிருந்து அதிக வரி வசூல், முதலாளிகளுக்கு வரிக் குறைப்பு இதுதான் ஜி.எஸ்.டி வரி விதிப்பின் சாதனை. ஆனால், ஜி.எஸ்.டி-யை எதிர்ப்பதாக பத்திரிகை செய்திகள் அனைத்தும், அது சிறு வியாபாரிகள், சிறு முதலாளிகளை பாதிக்கிறது என்ற ஒற்றை பரிமாணத்தில் மட்டும் கூறுகின்றன. சாதாரண உழைக்கும் மக்களிடம் அரசு அடிக்கும் கொள்ளை குறித்து ஊடகங்கள் எதுவும் வாய் திறப்பதில்லை.

சரி இப்படி சாதனை படைக்கும் வசூல் வேட்டை எதற்கு பயன்படுகிறது?

முதலாளிகளுக்கு மானியங்கள் வழங்குவதற்கும், உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகள் காண்டிராக்ட் மூலம் லாபம் சம்பாதிப்பதற்கான திட்டங்களுக்கும், மக்களை அடக்கி ஒடுக்குவதற்கும் இவ்வாறு வசூலிக்கப்படும் வரிப் பணம் பயன்படுத்தப்படுகிறது.

  • வங்கிகளுக்கு முதலாளிகள் கட்டாத வாராக்கடன்களை சரிக்கட்ட மோடி அரசு ஒதுக்கிய ரூ 2.11 லட்சம் கோடி எங்கிருந்து வந்தது? மக்களின் வரிப்பணத்தில் இருந்து வருகிறது.
  • இசுரேலிடமிருந்து ரூ 10,000 கோடி செலவில் பராக் ஏவுகணைகளை (இன்னும் பிற நாட்டு ஆயுத உற்பத்தி முதலாளிகளிடமிருந்து பல்வேறு ஆயுதத் தளவாடங்களை) வாங்குவதற்கான பணம் இதிலிருந்துதான் போகிறது.
  • தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்த அதிகாரிக்கும் போலீசுக்கும் சம்பளம் எங்கிருந்து செல்கிறது?
  • ஸ்டெர்லைட்டுக்கும் (அது போன்ற கார்ப்பரேட்டுகளுக்கும்) மின்சாரம், சாலை வசதி போன்ற மானியங்களுக்காக வரி வசூலை அதிகரிக்க வேண்டியிருக்கிறது.
  • சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைக்கான செலவு எங்கிருந்து செய்யப்படுகிறது? சென்னை மெட்ரோ ரயில், அகமதாபாத்-டெல்லி புல்லட் ரயில் என்று தனியார் நிறுவனங்களுக்கு கொட்டிக் கொடுக்கும் திட்டங்களுக்காக மக்கள் மீது வரி போட்டு கசக்கிப் பிழிகிறது மோடி அரசு.

அரசு மருத்துவமனைகளை தனியார் மயப்படுத்தி, மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டம் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுப்பதற்கு தேவைப்படும் அதிக பணத்துக்கு கூடுதல் வரி விதிப்பு தேவைப்படுகிறது. மருத்துவம் என்கிற செலவினத்தின் மீதும் வரி விதிக்கிறது. இப்படி உழைக்கும் மக்களின் கண்ணைக் குத்துவதற்காக உழைக்கும் மக்கள் மீதே வரி போட்டு வசூலிக்கிறது அரசு.

ஒட்டுமொத்தமாக, நடுத்தர மற்றும் சாமானிய மக்களிடமிருந்து வசூலிக்கும் வரியில் பெரும்பகுதி ஆளும் வர்க்கத்தின் ஆதாயத்துக்காக செலவிடப்படுகிறது. அரசுப் பள்ளி, மருத்துவமனை, குடிநீர் வினியோகம் போன்ற மக்களுக்கான சேவைகளை கைவிட்டு படிப்படியாக தனியார்மயமாக்குகிறது, அரசு.

முதலாளிக்கும் உழைத்துக் கொடுத்து, அரசுக்கும் வரி கட்டிய பிறகு, வருமானம் போதாமல் செலவுகளை சரிக்கட்ட ஓவர் டைம் பார்க்கிறது, உழைக்கும் வர்க்கம்; அதுவும் போதாமல் கந்து வட்டியில் சிக்குகிறது. முதலாளி வர்க்கமோ, தொழிலாளியிடம் கறந்த பணத்தை வைத்து ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்கிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மாளிகைகள் கட்டிக் கொள்கிறது. சில நூறு கோடி ரூபாய் செலவில் திருமண விழாக்கள் நடத்துகிறது. இந்த ஊதாரி முதலாளிகளை மக்களிடம் கறந்த வரிப்பணத்தில் குளிப்பாட்டுகிறது, அரசு.

இந்த அரசும் அதிகாரிகளும் முதலாளித்துவ வர்க்கத்தின் நிர்வாகக் குழுதான் என்பதை பலமுறை நிரூபித்து விட்டார்கள். ஆனால் முதலாளிகளுக்கான உயிர்நீர் தொழிலாளிகளின் உழைப்பில்தான் உருவாகிறது. எனவே, வரி யார் மீது எப்படி விதிக்கப்பட வேண்டும் என்று கோருவதற்கும், தீர்மானிப்பதற்கும் தொழிலாளி வர்க்கத்துக்கு முழு உரிமையும் உள்ளது.

தொழிலாளி வர்க்கம் மறைமுக வரி விதிப்பை எதிர்க்கிறது. பணக்காரர்கள் மீது விதிக்கப்படும் அதிகரித்துக் கொண்டே போகும் நேர்முக வரி விதிப்பின் மூலம் அரசு தனக்குத் தேவையான வருவாயை ஈட்டும்படி கோருகிறது. தொழிலாளர்களின் உழைப்பில் சுரண்டி சேர்க்கும் உபரியின் மீது வரி விதிக்கப்பட வேண்டுமே தவிர, அவர்களது கூலியின் ஒரு பகுதியை வரியாக சுரண்டக் கூடாது என்று கோருகிறது.

– பிரவீன்
புதிய தொழிலாளி ஜூலை 2018 இதழ்
நன்றி : new-democrats தளத்தில் வெளியான கட்டுரை

அடக்குமுறைதான் ஜனநாயகமா ? திருச்சி செப் 8 மக்கள் அதிகாரம் மாநாடு

ன்பார்ந்த பெரியோர்களே,

ஆள்பவர்களும், அதிகாரிகளும் எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் மக்கள் எதுவும் செய்யக் கூடாது. அடிமாடு போல் கிடந்து சாக வேண்டும். இதுதான் ஆள்பவர்களின் எதிர்பார்ப்பு. விளை நிலங்களை அழித்து, விவசாயிகளை அகதிகளாக்கி, காடு, மலை, நீர் ஆதாரங்களை அழித்து சுற்று சூழலை நாசமாக்கி எட்டுவழிச்சாலை எதற்கு? என பேசினால் அவன் தேசதுரோகி. குருவி போல் கட்டிய வீடு பறிபோகிறது பிள்ளை குட்டிகளோடு நாங்கள் எங்கே செல்வோம்? என தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அழும் தாய்மார்களின் கண்ணீரை துடைக்க யாரும் செல்லக்கூடாது. சென்றால், அவன் வெளியூர்காரன், சமூக விரோதி, நக்சலைட் என போலீசு தடுத்து கைது செய்கிறது. இந்த அக்கிரமம் வெள்ளைக்காரன் ஆட்சியில்கூட கிடையாது.

சாலையின் முக்கிய பயன்பாடு பொருள்களை கொண்டு செல்வதுதான். சேலத்தில் புதிய தொழிற்சாலைகள் உருவாகாத போது, எதற்காக பத்தாயிரம் கோடி செலவில் சேலம் சென்னை எட்டுவழிச்சாலை? விரைவாக சென்னைக்கு வந்து என்ன செய்யப்போகிறார்கள்? சுங்க கட்டணம் வசூல் செய்து கொள்ளை அடிக்கவும், ஆம்னி பஸ்களும், சொகுசு கார்களும், அதிகாரிகளும், அமைச்சர்களும்தான் பயணிப்பார்கள். பன்னாட்டு கம்பெனிகள் கஞ்சமலை, கவுத்தி வேடியப்பன் மலைகளை பிளந்து இரும்பு தாதுக்களை கொள்ளையடிக்கதான் எட்டுவழிச்சாலை. சென்னை சேலம் இடையே ஏற்கனவே உள்ள மூன்று வழித்தடங்களை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய என்ன முயற்சி எடுத்தார்கள் என்ற மக்களின் நியாயமான கேள்விகளுக்கு அதிகாரிகள் அமைச்சர்கள் பதில் சொல்ல முடியவில்லை.

நிலம், நீர், காற்று நஞ்சாகி எதிர்கால தலைமுறைகளை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு என நடந்த நூறாவது நாள் முற்றுகை போராட்டத்தில் எடப்பாடி அரசாங்கம் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்தது. கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக யார் போராடினாலும் இதுதான் கதி என தூத்துக்குடிமாடல் படுகொலையை, அடக்குமுறையை தமிழகம் முழுவதும் அமுல்படுத்த முயலுகிறது தமிழக போலீசு. இதைப் பற்றி பேசினால் தேசத்துரோக வழக்கு. பேசுவதற்கு இடம் கொடுத்த அரங்கத்தின் மீது வழக்கு. எதிர்கட்சிகள் ‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு“ என சட்டமன்றத்தில் பேச அனுமதி கிடையாது. அரசுக்கு எதிராக முகநூலில் பதிவிட்டால், முழக்கமிட்டால், பிரசுரம் கொடுத்தால், போஸ்டர் ஒட்டினால், கார்ட்டூன் வரைந்தால், கருப்பு கொடி காட்டினால் கைது, சிறை. பொதுக்கூட்டம் இரண்டு மணி நேரத்தில் முடிக்க வேண்டும். இரண்டு பேர்தான் பேச வேண்டும். அதிக மக்கள் வரக்கூடாது. மாற்று கட்சி நபர்கள் பேசக்கூடாது என எப்போதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் கை கால்கள் வெட்டப்படுகின்றன. இம் என்றால் சிறை ஏன் என்றால் என்.எஸ்.ஏ., குண்டாஸ். இந்த நிலை நீடிக்கலாமா? இந்திய ஜனநாயகத்திற்கு பேராபத்து, என பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து நாட்டு மக்களை எச்சரிக்கிறார்கள்.

விவசாயம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விலைவாசி, வளர்ச்சித்திட்டம், ஊழல் ஒழிப்பு, கருப்பு பண மீட்பு, ஸ்கில் இந்தியா, மேக் இன் இந்தியா, சுவட்ச் பாரத், என அனைத்திலும் மோடி அரசு படு தோல்வியை அடைந்துள்ளது. தோற்றுப்போன பிரதமரை தூக்கி நிறுத்த அரசின் விளம்பர செலவு ரூபாய். 4343 கோடி. ஸ்விஸ் வங்கியிலிருந்து கருப்பு பணத்தை மீட்கவில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கவில்லை. படித்த இளைஞர்களை பக்கோடா விற்க சொல்கிறார். 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் கருப்புபணம், கள்ள நோட்டு ஒழியவில்லை. ஜி.எஸ்.டி.யால் விலைவாசி குறையவில்லை. பல ஆயிரம் சிறு தொழில்கள்தான் அழிந்தன. பல இலட்சம் பேர் வேலையிழந்தார்கள். ஸ்விஸ் வங்கியில் ஒன்றரை மடங்கு கருப்பு பணம் அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசல், மின்சாரம், சாராயம் கொண்டுவர முடியவில்லை. உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறையும் நிலையில் இந்தியாவில் தினமும் ஏறிக்கொண்டே இருக்கிறது. வாங்கும் சக்தியே இல்லாத இந்தியாவில் மேக் இன் இந்தியா என்ற முழக்கம் அர்த்தமற்றதாகிவிட்டது. கல்யாணமே ஆகாத ஒருத்தனுக்கு பிறக்க போகும் குழந்தைக்கு கல்வி கடன் கொடுத்தது போல் கட்டிடமே இல்லாத அம்பானி பல்கலைகழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை மோடி அரசு அள்ளி கொடுப்பதுதான் கல்விக் கொள்கை.

ஜனநாயகத்தில் ஓட்டுப்போடுவதோடு மக்களின் பங்களிப்பு முடிவதல்ல. பெரும்பான்மை மக்களை பாதிக்கும் வளர்ச்சி திட்டங்களை வேண்டாம் என முடிவு செய்யும் உரிமையும்,  போராடும் உரிமையும் மக்களுக்கு உண்டு.

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற மோடி ஆட்சியில்தான் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக விளை நிலங்கள் பறிப்பு, விவசாயிகள் தற்கொலைகள், எண்ணற்ற போராட்டங்கள் நடக்கின்றன. நான்கு ஆண்டுகள் எதுவும் செய்யாமல் தற்போது விவசாய விளைபொருளுக்கு ஒன்றரை மடங்கு ஆதார விலை உயர்வு என்ற அறிவிப்பால் பயனில்லை. அரசு கொள்முதல் செய்யாமல் விலை உயர்த்தி என்ன பயன்? குஜராத்தி, பனியா, பார்சி, சிந்தி, மார்வாடி  வகுப்புகளைச் சேர்ந்த அதானி, அம்பானி, அகர்வால், நீரவ் மோடி, லலித் மோடி,  டாடா, பிர்லா போன்ற ஒரு குறிப்பிட்ட பிரிவு முதலாளிகளின் நலனுக்காகத்தான் மோடி அரசு சேவகனாக செயல்படுகிறது. அவர்களின் வளர்ச்சிதான் இந்தியாவின் வளர்ச்சி என முன்னிறுத்திருகிறது. அவர்கள் தான் இந்தியாவை ஆள்கிறார்கள். அவர்களின் எடுபிடிகள்தான் ஆர்.எஸ்.எஸ்.யும், பி.ஜே.பி.யும். இந்த முதலாளிகளுக்கு அரசு கொடுத்த பத்து இலட்சம் கோடி வங்கி கடன் இன்று வாராக்கடனாகி நிற்கிறது. பொதுத்துறை வங்கிகள் திவாலாகும் அபாய நிலையில் எல்.ஐ.சி. பணத்தை அவற்றில் முதலீடு செய்து எல்.ஐ.சி.யையும் ஒழிக்க முயல்கிறது மோடி அரசு.

பா.ஜ.க. மோடி அரசு தனது தோல்விகளை மறைத்து, மக்களை திசை திருப்பி தலித்துக்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக சாதி மத கலவரங்கள் ஏற்படுத்தி அதன் மூலம் வாக்கு வங்கியை அடைய விரும்புகிறது. மேலும் அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பதற்றத்தில் தான்தோன்றித் தனமாக அடக்குமுறைகளை ஏவுகிறது நீதித்துறை உட்பட அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். சார்புடையவர்களை நியமித்து அரசு கட்டமைப்பையே இந்துத்துவ பாசிசமயமாக்கி வருகிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற இந்துத்துவா வெறியூட்டப்பட்ட குண்டர்படை தலித்துக்கள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி கொல்கிறது. பிணையில் வந்த கொலையாளிகளுக்கு பா.ஜ.க. அமைச்சர் மாலை போட்டு வரவேற்கிறார்.

உ.பி., பா.ஜ.க., எம்.ஏல்.எவும் அவன் சகோதரனும் மனு கொடுக்க வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதல்வர் எந்த நடவடி்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற உத்திரவில்தான் சி.பி.ஐ. அவர்களை கைது செய்தது. ஜம்முவில் ஆசிபா என்ற எட்டு வயது சிறுமியை போலீசார், பூசாரி உட்பட பலர் வல்லுறவு செய்து கொலை செய்த கொடூரம் நமது இரத்தத்தை உறைய செய்தது. ஆனால் பா.ஜ.க. அமைச்சர் தலைமையில் குற்றவாளிகளை கைது செய்யக்கூடாது என சங்பரிவார் ஜம்முவில் ஊர்வலம் நடத்தியது. மராட்டியத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பீமா கோரேகான் விழாவில் இந்தாண்டு தலித்துக்கள் மீது சங்பரிவார் கும்பல் திட்டமிட்டு கலவரத்தை நடத்தி உள்ளது.

கவுரி லங்கேஷ், கல்புர்க்கி, பன்சாரே, தாபோல்கர் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், பகுத்தறிவாளர்கள், எழுத்தாளர்கள் இந்துத்வா சங்பரிவார் அமைப்புகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பல மொழி பேசும், வேறுபட்ட கலாச்சாரங்களை உடைய பல மாநில மக்கள் கூட்டமைப்பாக இணைந்து வாழும் இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே கட்சி, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற ஆர்.எஸ்.எஸ். இந்துத்வா கொள்கைய அமல்படுத்துவதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

கொள்ளையடித்த ஊழல் சொத்துக்களை பாதுகாக்க மோடியின் அடிமைகளாக மாறிய அ.தி.மு.க., பா.ஜ.க.வின் கூலிப்படையாக போராடும் மக்களை அடக்கி ஒடுக்கி வருகிறது. விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ், எடப்பாடி சம்பந்தி சுப்பிரமணி, கருர் அன்புநாதன், நத்தம் விசுவநாதன், டி.டி.வி., கிறிஸ்டி. எஸ்.பி.கே என நடத்தப்பட்ட ரெய்டுகள் மூலம் அ.தி.மு.க.வையும் தமிழக ஆட்சி அதிகாரத்தையும் பா.ஜ.க. கைபற்றி உள்ளது. டி.ஜி.பி. மீது குட்கா வியாபாரிகளிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு, ஆளுநருக்கும் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் எதிராக பாலியல்  குற்றச்சாட்டுகள்..! எதற்கும் குற்ற வழக்கில்லை, யாரும் சிறை செல்லவில்லை, எல்லாக் குற்றவாளிகளும் பதவியை அலங்கரிக்கிறார்கள். தூத்துக்குடியில் போலீசு நடத்திய வன்முறை வெறியாட்டத்தையும், எட்டு வழிச்சாலைக்கு நிலத்தைப் பறிகொடுக்கும் விவசாயிகளின் கதறலையும் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. போராட்டச் செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளுக்கு அரசு கேபிள் துண்டிக்கப்படுகிறது. பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் மோடியே திரும்பிப் போ என ஒட்டு மொத்த தமிழகமும் கருப்புக்கொடியுடன் முழங்கியது. தமிழகம் இந்துத்துவ பாசிசத்தின் எதிர்த்துருவம். இதுதான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.கவை ஆத்திரம் கொள்ள வைக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடங்கி, டாஸ்மாக் எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, காவிரி உரிமை, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பெட்ரோகெமிக்கல் மண்டலம், நியூட்ரினோ எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு என்பன போன்ற மக்களின் தன்னெழுச்சியான எதிர்ப்புகள் கார்ப்பரேட் கொள்ளைக்கு தடையை ஏற்படுத்துகிறது.

அதிகரித்துவரும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு அடக்குமுறைதான் ஒரே வழி என மோடி அரசு செயல்படுத்துகிறது. அ.தி.மு.க. எடப்பாடி அரசு கூலிப்படையாக செய்து முடிக்கிறது. பிரதமர் இந்திராகாந்தி அவசரநிலையை திடீரென்று நாட்டின் மீது திணித்தார். இன்று கருத்துரிமை மறுப்பு, கைதுகள், ஊடகங்களின் இருட்டடிப்பு, ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகள் நடத்தும் தாக்குதல்கள், கொலைகள்  முதல் எல்லாவிதமான அதிகார முறைகேடுகளும் அன்றாட நடப்புகளாக நமக்குப் பழக்கப்படுத்தப்படுகின்றன. இவற்றை எதிர்த்து விடாப்பிடியாகப் போராட முடியாமல், கைதுக்கும் சிறைக்கும் அஞ்சிக் களைத்துச் சோர்ந்து விடுவோம், பாசிசக் கொடுங்கோன்மைக்கும், அடிமைத்தனத்துக்கும் நாம் பழகிவிடுவோம் என்ற மோடி, எடப்பாடி அரசுகளின் எதிர்பார்ப்பை முறியடிக்க ஒன்றிணைவோம். ஆர்.எஸ்.எஸ் பாசிசத்திற்கும், கார்ப்பரேட் கொள்ளைக்கும் எதிரான போராட்டத்தில் தமிழகத்தை முன்னணியில் நிறுத்திக் காட்டுவோம். இது மக்கள் நலனில் அக்கறை கொண்ட எல்லா கட்சிகள் அமைப்புகள் செயல் வீரர்களின் கடமை.

ஜனநாயகத்தில் ஓட்டுப்போடுவதோடு மக்களின் பங்களிப்பு முடிவதல்ல. பெரும்பான்மை மக்களைப் பாதிக்கும் வளர்ச்சி திட்டங்களை வேண்டாம் என முடிவு செய்யும் உரிமையும்,  போராடும் உரிமையும் மக்களுக்கு உண்டு. படித்தாலும் உழைத்தாலும் சொந்த ஊரில் வாழ முடியாது என்றால் நாங்கள் எங்கே செல்வது? சாதாரண மக்கள் சட்டப்படியேகூட வாழமுடியவில்லை அடக்குமுறைதான் ஜனநாயகம் என்றால் பா.ஜ.க மோடி, அ.தி.மு.க. எடப்பாடி அரசுகள் அதிகாரத்தில் தொடர அனுமதிக்கக்கூடாது.

பிரசுரம் பி.டி.எஃப். கோப்பு – PP_TRICHY SPECIAL CONVENTION

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

__________________________________________________________________

IS IT NOT REPRESSION IN THE NAME OF DEMOCRACY?

COMMON FOLK CANNOT EVEN LIVE BY LAW!
CAN THIS SAD TREND BE ALLOWED TO GO ON?

SPECIAL CONVENTION

2018 SEPTEMBER 8, SATURDAY – 5 PM ONWARDS

  • PEOPLE’S PARTICIPATION IN DEMOCRACY DOES NOT END WITH JUST CASTING THEIR VOTES.
  • PEOPLE HAVE THE RIGHT TO DECIDE AGAINST DEVELOPMENT SCHEMES WHICH ADVERSELY AFFECT A MAJORITY OF THEM, AND THE RIGHT TO PROTEST AGAINST THEM.
  • IF WE CANNOT LIVE ON OUR OWN NATIVE SOIL WHETHER FOR STUDIES OR FOR WORK, WHERE CAN WE GO?
  • COMMON FOLK CANNOT EVEN LIVE BY LAW.

IF IT IS BRUTAL REPRESSION IN THE NAME OF THE DEMOCRACY, THE MODI AND EDAPPADI REGIMES SHOULD NOT BE ALLOWED TO CONTINUE.

Dear Friends,

The powers that be and the bureaucracy can do whatever they want; but people should do nothing; they must suffer and perish like cattle – this is what our rulers expect. Why destroy fertile land, displace peasants, and trample upon mountains, forests and sources of water and spoil environment for the sake of the Chennai-Salem Eight-Lane Road project? – whoever raises this question is branded anti-national. Whoever reaches out to wipe the tears of mothers, who wail in anguish over losing their houses built by them like sparrows build their nests and having nowhere to go after being rendered homeless, is branded an outsider, anti-social and naxalite, stopped in his tracks and thrown into prison. An outrage unheard of even under the British Raj.

The primary utility of a road is transport of goods. No new industries have come up in Salem to warrant a Salem-Chennai eight-lane road at a cost of Rs. 10,000 crores. What is anyone going to do by speeding breakneck from Salem to Chennai or vice versa? Only one thing is certain: the toll plazas en route are going to give a bonanza of a collection. Omnibuses and luxury cars, ministers and bureaucrats would gleefully take the road. The Multi-National Companies, the Corporates, thirsting to slit open the Kanjamalai and Gauti Vediyappan Hills to mine iron ore would aspire to carry the loot swiftly along the projected eight-lane road. The ministers or the bureaucrats do not reply when people ask: What did the authorities do to improve the existing three-lane roads between Salem and Chennai?

The people of Thoothukkudi waged a protracted, yet peaceful struggle demanding the closure of the Sterlite Copper Smelting factory which was polluting land, water, and air and therefore was a threat to future generations. On the hundredth day the struggle took the form of a symbolic siege on the District Collectorate when the Edappadi Government resorted to firing on the protesting people and killed 13 people in a coldblooded and treacherous manner. The Government of Tamilnadu carried out this operation gun down in order to terrorize people who dare to challenge corporate interests. The Tamilnadu police is seeking to employ the Thoothukkudi model of repression all over Tamilnadu by slapping sedition charges against those who speak about it and foisting cases against those who let out halls for meetings.

The opposition is disallowed from raising the Thoothukkudi firing issue on the floor of the assembly. If you post something against the government on the Facebook, raise slogans or distribute pamphlets, stick posters, draw a cartoon, or show black flags in order to protest against the government you may possibly land in prison. If at all a public meeting is permitted to be held it should be finished within two hours, only two speakers can speak and not too many people should attend, people belonging to other parties should not speak – such unjust and unreasonable restrictions are unheard of in a free land. The limbs of democracy have been cut off. For a mere murmur u could be imprisoned and for a mere why u could be detained under the Goondas’ Act. Can this state of affairs be allowed to perpetuate? Senior sitting justices of the Supreme Court have met the media to warn the countrymen against the danger of the grave threat to Indian democracy.

The Modi government has dismally failed in every respect, be it agriculture, economy, employment, price line, development plan, eradication of corruption, unearthing of black money, Skill India, Make in India, or Swach Bharath! Miserable failure all the way! In order to lift the down-and-out Prime Minister, public money to the tune of 4343 crores of rupees has been spent on advertisements. No recovery of black money from the Swiss banks has materialized. The promise of two crore new jobs per year has not been fulfilled.  The PM advises educated youth to sell ‘pakoda’. Demonetization declaring 500 and 1,000 rupee notes invalid has failed to tackle the problems of black money and counterfeit currency. The price line has not come down on account of the GST. Many thousands of small-scale industries perished and many lakhs of workers lost their employment. The quantum of black money actually increased one and a half times. Petrol and diesel, electricity and liquor could not be brought into the GST net. The price of petrol in India has been steadily rising in spite of the down trend over the rest of the world. The Make in India slogan has proved to be meaningless in India, a country of little purchasing power. The Government’s education policy is such that it has given away one thousand crore rupees to Ambani’s University which so far has no building to house it, just as sanctioning an education loan for a child yet to be born of someone yet to be married.

We will leave no stone unturned in our endeavor to make Tamilnadu stand in the forefront of the fight against corporate looting and RSS fascism, This is the bounden duty of the activists of all the parties and organizations who are concerned with the interests of the people.

Contrary to Modhi’s promise of doubling the income of farmers, it is under his regime that farmlands are being grabbed for the sake of corporate capitalists, famers have been committing suicide, and innumerable protests are the order of the day. After doing nothing for the past four years now the announcement of raising the support price one and a half times for agricultural produce can only be a futile exercise. What is the use of merely announcing a price rise without government procurement of the produce? The Modi government is only serving the interests of Adhani, Ambani, Agarwal, Neerav Modi, Lalit Modi, Tata, Birla and other capitalists belonging to a certain section comprising Gujarathi, Bania, Pharisee, Sindhi and Marwari clans. It portrays their development as the country’s development. It is they who rule India, The RSS and the BJP are only their agents. The loan of ten lakh crores of rupees the government gave these capitalists is now unrealized debt. The public sector banks are on the wedge of insolvency. The government is trying to salvage them by investing LIC money in them, thereby endangering the LIC, too.

The BJP government led by Modi is trying to cover up its failure, diverting the attention of the people by inciting caste and communal riots against Daliths and Muslims and seeking to secure a vote bank. It unleashes indiscriminate measures of repression due to the fear of being defeated and losing power. It is appointing RSS loyalists everywhere including the judiciary and thereby turning the state structure itself into a Hindutva-fascist one. In the states ruled by the BJP, bigotist Hindutva goons in the name of Cow Guards assault Dalits and  Muslims causing many a death. The murderers released on bail are warmly welcomed with garlands by a BJP minister.

When a BJP minister in UP and his brother molested a girl who had come to them with a petition, the UP Chief Minister did not take any action in the case  The CBI arrested the culprits only after judicial intervention. In Jammu the blood-chilling outrage of the eight-year-old Asifa having been sexually assaulted by the police, the priest and several others and finally killed shocked the whole country. But the Sangh Parivar took out a rally in Jammu led by a BJP minister demanding not to arrest the accused. In Maharashtra during the annual Bhima Koregaon festival the Sangh Parivar deliberately assaulted two Dalits, inciting violent riots.

Historians, rationalists and writers like Gauri Lankesh, Kalburgi, Bhansare and Tabolkar were shot dead by Hindutva Sangh Parivar outfits. There have been countrywide protests against implementing the RSS Hindutva ideology of one nation, one leader, one party, one election, one language, one culture in India which comprises people of several states living jointly together in a collective with their many languages and different cultures.

The ADMK rulers who have turned into henchmen of the BJP rulers for safeguarding their ill-gotten wealth earned through corruption are out crushing the people’s struggles. The BJP has usurped the ADMK party and the government power in Tamilnadu through raids conducted on Vijayabaskar, Sekar Reddy, Rammohan Rao, Edappadi’s co-father-in-law Subramani, Karur Anbunathan, Natham Viswanatthan, TTV, Christie, SPK and others. The DGP has himself been accused of accepting bribes from Gutka peddlers. There are sex-related charges against the Governor of the State, and Vice Chancellors of Universities themselves! No criminal case! No imprisonment! All the criminals are not only scot-free, but decorating their posts as ever.

The media in general are blacking out the truth of the spree of violence by the police in Thoothukkudi, and the cries of anguish from the farmers being robbed of their land. The TV channels broadcasting news of the protests and the struggles are denied the State Cable service. Media persons are being threatened.

The whole of Tamilnadu united to raise the slogan “Go back Modi” with black flags. Tamilnadu is the oppositre pole of Hindutva fascism. And this fact angers the RSS and the BJP. Beginning with the Jallikkattu struggle, the anti-Tasmac, the anti-Neet struggles, the Cauvery Rights, the opposition to the Hydrocarbon and Methane extractions, to the Petro-Chemical zone, to the Neutrino project and the anti-Sterlite uprising, the resistance to the Eight-Lane Road – all these and other spontaneous struggles of the masses go to put a spanner in the Corporate wheel of exploitation.

The Modi Government is of the view that the only solution to the problems lies in repression. The Edappadi government being a mercenary is carrying out the writ of the former. Prime Minister Indhra Gandhi imposed emergency all of a sudden. But we are now being acclimatized and accustomed as daily affairs to the denial of the right to freedom of thought and expression, to the arrests, to media blackouts, to the assaults and murders by the RSS fascists and to all sorts of abuses of power. Let us unite to frustrate the Modi-Edappadi expectation of making us lose faith in carrying on the struggle, getting exhausted and tired due to fear of arrest and prison. Let us unite to falsify their hope of getting us accustomed to fascist tyranny and slavery. We will leave no stone unturned in our endeavor to make Tamilnadu stand in the forefront of the fight against corporate looting and RSS fascism, This is the bounden duty of the activists of all the parties and organizations who are concerned with the interests of the people.

MAKKAL ADHIKARAM, TAMILNADU  9962366321.

விளம்பரம் – சிலைகளுக்கு 18,000 கோடி – கேரளாவுக்கு 600 கோடி ! கருத்துப் படம்

’வளர்ச்சி’ நாயகன் மோடி அவர்களது அரசின் முன்னுரிமை

விளம்பரத்திற்கு செலவு செய்த தொகை ரூ 4,200 கோடி

கும்பமேளாக்களுக்கு ஒதுக்கிய தொகை ரூ 4,200 கோடி

மராட்டிய சிவாஜி சிலைக்கு தொகை ரூ 3,600 கோடி

பட்டேல் சிலைக்கு செலவழிக்கும் தொகை ரூ 2,989 கோடி

வரைபடத்தில் இருக்கும் அம்பானி ஜியோ பல்கலைக்கு ரூ 1,000 கோடி

இந்தியை திணிப்பதற்கு ரூ 800 கோடி

ஆனால்………கேரளாவின் பேரிடருக்கு கொடுத்த தொகை ரூ 600 கோடி

வரைபடம்: வேலன்
சமூகவலைத்தளங்களில் பலராலும் பிரபலமாக்கப்பட்ட கருத்துப்படத்தின் தமிழாக்கம்.

இணையுங்கள்:

கோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு !

4
“செய்திக்கு என்ன விலை?” – காலச்சுவடு ஆகஸ்டு 2018 இதழில் ஒரு கட்டுரையின் தலைப்பு. கோப்ராபோஸ்ட்டின் “ஆபரேஷன் – 136” புலனாய்வு அம்பலப்படுத்தலை ஹாங்காங்கில் வாழும் திருவாளர் மு.இராமநாதன் என்பவர் எழுதியிருக்கிறார்.

“செய்திக்கு என்ன விலை?” – காலச்சுவடு கட்டுரை இணைப்பு

M.Ramanathan
மு.இராமநாதன்

கோப்ராபோஸ்ட் இதழின் நடவடிக்கையை பெரிய ஊடகங்கள் எவையும் கண்டுகொள்ளவில்லை என்ற ’மாபெரும்’ உண்மையை கண்டுபிடித்த காலச்சுவடு எழுத்தாளர் பிறகு அதன் வரலாற்றை சுருங்கச் சொல்கிறார். எனினும் அச்சுருக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., மோடி போன்ற நாமங்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன.

மேலை நாடுகளில் இக்குற்றச்சாட்டு வெளியாகியிருந்தால் அவை தேசிய அளவில் விவாதமாகியிருக்கும் என்ற பி.பி.சி.யின் விமர்சனத்தைக் கூறும் இராமநாதன் எப்படியாவது தினமலர், சன் டிவி பக்கம் வருவார் என்று எதிர்பார்த்தால்?
அவர் வண்டியை வேறு எங்கோ ஓட்டுகிறார்.

ஹாங்காங்கில் டி.வி.பி. எனும் தொலைக்காட்சியின் நட்சத்திர அறிவிப்பாளர் ஸ்டீபன்சான், ஒரு வணிக மையத்தில் புத்தாண்டு நிகழ்ச்சியை நடத்தி அந்த வணிக மையம் வழங்கிய பணத்தை தனி வருமானமாக பெற்று கொண்டாராம். இலஞ்ச ஒழிப்புத் துறை தொடுத்த வழக்கில் ஹாங்காங் உயர்நீதிமன்றம் இந்த வருமானத்தை கையூட்டு, ஸ்டீபன்சான் குற்றவாளி என தீர்ப்பளித்ததாம். மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் அவர் குற்றவாளி இல்லை என விடுவித்ததாம்.

“ஆபரேஷன் 136” என்பது பா.ஜ.க.விற்கு ஆதரவாக செய்தி வெளியிட முடியுமா என கார்ப்பரேட் ஊடகங்களின் முதலாளிகள் அல்லது தலைமை நிர்வாகிகளை அம்பலப்படுத்திய கோப்ராபோஸ்ட்டின் நடவடிக்கை. இதில் நிறுவனங்களின் முதலாளிகளை கழட்டிவிட்டு சாமர்த்தியமாக நெறியாளர்களை இழுப்பது ஏன் மிஸ்டர் இராமநாதன்?

kalachuvadu kannan_CI
காலச்சுவடு ஆசிரியர் கண்ணன்

ஜெயலலிதாவை ஏ-ஒன் குற்றவாளியாக உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறதே என்று கேட்டால் அ.தி.மு.க. அடிமைகள் இறந்தவரை தண்டிக்க முடியாதென கோர்ட் கூறியதாக தொலைக்காட்சிகளில் ஜல்லியடிப்பதற்கும் இந்த சைனீஷ் ஃபிரைடு ரைஸ் தேசத்திலிருந்து இவர் அடிப்பதற்கும் என்ன வேறுபாடு?

அடுத்ததாக இராமநாதன் அய்யா கச்சிதமாக தி இந்துவின் நடுப்பக்க ஆசிரியர் திருவாளர் சமஸ் அவர்களை இறக்குகிறார். மேதகு சமஸ் பணியாற்றும் திவ்யமான தி இந்து பத்திரிகையும் கூட கோப்ராபோஸ்ட் குறித்து ஒரு கொட்டாவியைக் கூட விடவில்லை. இவ்வளவிற்கும் இந்துவைப் படிப்பவர்களின் அதி தீவிர அரசியல் நடவடிக்கையே சில பல கொட்டாவிகள் விடுவதுதான்.

“இந்திய ஊடகத்துறை பணக்கலாச்சாரத்தில் மூழ்கி வருடங்கள் பல ஆகிவிட்டன” என்று சமஸின் மேற்கோளை – இதுவும் ‘மாபெரும்’ கண்டுபிடிப்புதான் – காட்டி விட்டு அடுத்து மெயின் பிக்சருக்கு வருகிறார் காலச்சுவடு கட்டுரையாளர்.

“யாருடைய எலிகள் நாம்?” எனும் அவரது நூலில் திருவாளர் சமஸ் அய்யா அவர்கள் இப்படிக் கூறுகிறாராம்:

samas (4)
திருவாளர் சமஸ்

“நீங்கள் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய கிராமப்புறப்பகுதியில் வசிப்பவராக இருக்கலாம். முக்கியமான பொதுநிகழ்ச்சி ஒன்றை நீங்கள் நடத்தலாம். ஆனால், அது குறித்த செய்தி ஊடகங்களில் இடம்பெற வேண்டும் என்றால் கூட, உங்கள் பகுதிக்கான செய்தியாளருக்கு நூறோ இருநூறோ அடங்கிய உறையைக் கொடுத்தால்தான் அந்த நிகழ்வு செய்தியாக வெளிவரும். ‘கவர் கொடுத்தால்தான் கவரேஜ்’. இதுதான் பெரும்பாலான, குறிப்பாக பிராந்திய ஊடகங்களின் இன்றையநிலை.”

பிராந்திய ஊடகங்களின் இன்றைய நிலை என்ற குறிப்புதான் முக்கியமானது. தந்தி, மாலைமுரசு, தினகரன் இன்னபிற உள்ளூர் பத்திரிகைகளின் உள்ளூர் பத்திரிகையாளர்களை மாபெரும் ஊழல்வாதிகளாகக் காட்டி விட்டு தேசிய பத்திரிகையான தி இந்து, தினமணி, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பரிசுத்தவான்களை சமஸ் வேறுபடுத்துவதுதான் நமது இராமநாதன் அய்யாவுக்கு பிடித்திருக்கிறது. தொலையட்டும்.

அடுத்தபடியாக உள்ளூர் அளவில் செய்தி சேகரிப்பதற்கு வரும் பரிதாபமான உள்ளூர் பத்திரிகையாளர்களின் மாபெரும் பயங்கரமான ஸ்காண்டல்களில் இரண்டை எடுத்துக் காட்டாக கூறுகிறார் இராமநாதன்.

ஒன்று கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அறக்கட்டளை அமைப்பினர் சென்னையில் 2009-ஆம் ஆண்டிற்கான “இயல் விருது”களை வழங்கும் விழாவைப் பற்றியது. அந்த ஆண்டில் ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி இருவரும் விருது பெறுகின்றனர். இந்த விழாச் செய்தி ஊடகங்களில் வரவில்லையாம்.

காரணம் விழா முடிந்த பிறகு ஏற்பாட்டளர்கள் யாரும் வரிசையில் நின்ற பத்திரிகையாளர்களுக்கு “உறைகள்” கொடுக்கவில்லையாம். அப்படி ஒரு வழக்கம் இருப்பதே அவர்களுக்கு தெரியாது என்று எழுதுகிறார் அறங்காவலர்களில் ஒருவரான எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.

இரண்டாவதிலும் கூட ஹாங்காங் ஆள்தான் வருகிறார். ஆனால் ஃபிரைடு ரைஸ் அல்ல! சுத்த சைவமான குஜராத் பனியா! அங்கே “ஹெல்ப் த பிளைண்ட் பவுண்டேஷன்” (Help the Blind Foundation) எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை டி.கே.பட்டேல் என்பவர் நடத்தி வருகிறாராம். அன்னார் சர்வதேச வங்கி ஒன்றில் பதவி வகித்தவராம்.

Help the Blind Foundation இணைப்பு

HSBCஅந்த சர்வதேச வங்கி எது? ஹெச்.எஸ்.பி.சி. எனப்படும் HSBC – The Hongkong and Shanghai Banking Corporation Limited. இந்த வங்கியில்தான் அன்னார் பட்டேல் மூத்த பொருளாதார நிபுணராக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கிறார்.

இவரது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர் அமைப்பு, கல்லூரிகளில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு உதவி வருகிறதாம். அவ்வகையில் திருவண்ணாமலை அருகே ஆரணி சூசை நகரில் பார்வையற்ற மாணவர்களுக்கு (பெண்கள்) விடுதி கட்டியதாம். ஒன்றரை கோடி ரூபாயில் 2015-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இவ்விடுதியை திறக்கும் விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்டனராம். எனினும் விழாவன்று எந்த நிருபரும் செய்தி சேகரிக்க வரவில்லையாம்.

நிருபர்களுக்கு அழைப்பிதழோடு “உறையும்” கொடுத்து கவனித்திருக்க வேண்டும், ஹாங்காங்கில் வசித்த அமைப்பாளருக்கு இந்த சூட்சுமம் தெரியவில்லை என்றாராம் ஒருவர்.

ஜெயமோகன்
சாருநிவேதிதா – ஜெயமோகன்

இந்த இரண்டு சான்றுகளில் ஒன்று இலக்கியம், மற்றொன்று தொண்டு. தமிழகத்தில் இலக்கியவாதிகளை யாரும் கவனிப்பதே இல்லை, அவர்களை கவனிக்காத சமூகம் உருப்படவே உருப்படாது என்பது காலஞ்சென்ற சுந்தர ராமசாமி முதல், கணந்தோறும் நினைவுபடுத்தும் ஜெயமோகன், சாருநிவேதிதா வரையிலும் அதிகம் பயன்படுத்தப்படும் தேய்ந்து போன அசட்டு வழக்கு.

பிறகு தொண்டு அதுவும் பார்வையற்ற மாணவர்களுக்கான உதவி என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் மனம் ‘ கனியச்’ செய்கின்ற தொண்டு. இந்த இரண்டிலும் தமிழக உள்ளூர் செய்தியாளர்கள் பணம் வாங்காததால் செய்தி வெளியிடவில்லை எனும் அளவுக்கு கொடூரமான மனம் படைத்தவர்கள்! இதை ஹாங்காங் பால்கனியில் நின்று அய்யா இராமநாதன் அவர்கள் நமக்காக அறம் பாடுகிறார்.

அந்த பாடலில் மெய்மறந்தால் அப்படியே அண்ணா ஹசாரே ஃபிளாஷ்பேக்கில் தலை காட்டுகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழல், வரி ஏய்ப்பு இன்ன பிற மோசடிகளை மறைத்து விட்டு கலெக்டர் ஆபிசின் சிப்பந்தி வாங்கும் நூறு இறுநூறுதான் இலஞ்சம், இந்தியாவின் நோய் என்று அண்ணா ஹசாரே துவங்கி ஆழ்வார்பேட்டை கமலஹாசன் வரைக்கும் பேசிக் கொன்றார்களே, அதே கொலையைத்தான் ஹாங்கிங்கில் இருந்து கொண்டு இராமநாதனும் நாகர்கோவிலில் இருந்து கொண்டு காலச்சுவடும் செய்கிறார்கள்.

உள்ளூர் செய்தியாளர்கள் காசு வாங்குகிறார்களா இல்லையா என்பதா இங்கு பேசுபொருள்? கோப்ராபோஸ்ட்டின் பத்திரிகையாளர் புஷ்ப ஷர்மா சந்தித்தவர்கள் யாரும் இந்த உள்ளூர் செய்தியாளர்கள் அல்ல.

வருடம் பத்தாயிரம் கோடி ரூபாய் வருமானத்தைக் கொண்ட டைம்ஸ் குழுமத்தின் முதலாளி வினீத் ஜெயின் அவர்களில் முதன்மையானவர். இவரிடம் மோடி ஜால்ரா செய்தி போட 500 கோடி ரூபாய் டீல் பேசிய புஷ்ப ஷர்மா அதில் 50 கோடி பணத்தை ரொக்கமாக முதல் கட்டத்தில் தருவேன் என்று சொன்னதையும் கூட முதலாளி ஜெயின் ஏற்றிருக்கிறார். அதாவது கருப்பு பணமாக!

டால்மியா, அதானி, அம்பானி அல்லது எஸ்ஸார் குழுமத்திடம் பணமாகக் கொடுத்து விட்டால் அவர்கள் அதை டைம்ஸ் நிறுவனத்திற்கு மாற்றிக் கொடுத்து விடுவார்கள் என கோப்ராபோஸ்ட் செய்தியாளர் முன்வைக்கும் ஆலோசனையை ஜெயின் ஏற்றுக் கொள்கிறார்.

இவ்வளவிற்கும் ஐந்தாண்டுகளுக்கு முன் அன்னா ஹசாரேவும், பாபா ராம்தேவும் ஊழல் மற்றும் கருப்புப் பண பிரச்சினையை முன்வைத்து புழுதியைக் கிளப்பிக் கொண்டிருந்த போது அவர்கள் சார்பாக பிரச்சாரம் மேற்கொண்டது மட்டுமின்றி கருப்புப் பண மீட்பு என்பதை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டு வந்ததிலும் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் டைம்ஸ் நௌ சேனலுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இவ்வளவு பெரிய ஃபிராடுகளை காப்பாற்ற ஹாங்காங் ரேடியோ செட்டு எப்படி கோல்மால் செய்கிறது பாருங்கள்!

டைம்ஸ் ஆப் இந்தியா : பத்திரிகை அல்ல ! கார்ப்பரேட் + காவிகளின் விளம்பர நிறுவனம் ! வினவு கட்டுரை இணைப்பு

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ஊடக நிறுவனங்களின் தலைமை பீடங்களை பொறி வைத்துப் பிடித்த கோப்ராபோஸ்ட் பற்றி இந்திய ஊடகங்கள் எழுதவில்லை என்று பிலாக்கணம் வைக்கும் நமது ஹாங்காங் அங்கிளும், அங்கிளுக்கு ஆலோசனை கொடுத்த ஆசிரியர் கண்ணனும் கூட்டணி சேர்ந்து அதை காலச்சுவடில் எழுதி கடமையாற்ற வேண்டும் என எவர் அழுதார்? பகிரங்கமாக ஒரு நீதியைக் கொன்று போடும் உங்கள் கொடுமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

இப்படி முதலாளிகளின் ஊழலை மறைத்து அதுவும் காவி பயங்கரவாதிகளுக்கான சொம்பு வேலை பார்க்கும் மோசடியை ஏதோ தினத்தந்தியின் உசிலம்பட்டி நிருபர் கவர் வாங்குகிறார் என்று மடை மாற்றுவது நிச்சயமாக பார்ப்பனிய சூழ்ச்சியில்தான் வரும்! இல்லையென்றால் கோப்ராபோஸ்ட்டின் தமிழக அம்பலப்படுத்தல்களில் வரும் தினமலரை முன்னர் கண்ட பட்டியலில் அய்யா இராமநாதன் சேர்க்காததன் மர்மம் என்ன?

காலச்சுவடின் தோற்றம் தொட்டு இன்று வரை கடைசிப் பக்கங்களில் “உண்மையின் உரைகல்” தினமலரின் ‘கவர்’ விளம்பரத்தை தவறாது காணலாம். வேறு வேலையில்லாமல் “காலச்சுவடு” பத்தரிகையை அட்டை டு அட்டை படிக்கும் அப்பாவி இலக்கியவாதிகள் அனைவரும் தினமலர்தான் காலச்சுவடின் நிரந்தர புரவலர் என்பதறிவர்!

அப்படி இருக்கும் போது கோப்ராபோஸ்ட்டில் இடம்பெற்ற தினமலரை நைசாக காலச்சுவடில் கட் பண்ணுவதன் நோக்கம் என்ன என்று…. நுண்ணுணர்வு வேண்டாம், சாதா உணர்வு இருப்போருக்கே புரியும் விசயம் அல்லவா?

கோப்ராபோஸ்ட் செய்தியாளர் சந்தித்த தினமலரின் ஆதிமூலம் லேசுப்பட்டவர் அல்ல. தினமலரின் நிறுவனர் ராமசுப்பையரின் பேரன். அந்த வகையில் முதலாளிக் குடும்பத்தின் முக்கியஸ்தர். தினமலரின் வர்த்தகப் பிரிவு இயக்குநராக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் புது தில்லி சென்று இந்தியப் பிரதமர் மோடியை தமிழக ஊடக முதலாளிகள் இரகசியமாக சந்தித்து ஆசி பெற்றார்கள் அல்லவா, அதில் தினமலர் சார்பாக மூன்று பேரும், அந்த மூன்றில் இந்த ஆதிமூலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்தும் தினமலர் – சன் குழுமம் : வினவு கட்டுரை இணைப்பு

சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் மோடி ஆதரவு அலை அடிப்பதாக துணிந்து புளுகி வந்தது தினமலர். அந்தப் பச்சைப் பொய்களுக்குப் பின்னணி என்னவென்பதை ஆதிமூலம் தனது சொந்த வாயால் இரகசிய கேமரா முன் விவரிக்கிறார்.

கோப்ராபோஸ்டின் பத்திரிகையாளர் ‘ஆச்சார்ய அடல்’ முன்வைத்ததைப் போன்ற பிரச்சாரப் பணிகளை தமது பத்திரிகை முந்தைய காலங்களில் செய்திருப்பதாக குறிப்பிடுகிறார் ஆதிமூலம். சென்ற தேர்தலுக்கு முன் மோடியைச் சந்திக்க தெரிவு செய்யப்பட்ட வெகுசில பத்திரிகையாளர்களில் தாங்களும் இருந்ததாக பெருமையோடு குறிப்பிடுகிறார்.

ஆக இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கோப்ராபோஸ்டில் சிக்கிய முதலை ஏதோ ஒரு பத்திரிகை ஆசிரியர் இல்லை, சாட்சாத் முதலாளி என்பதால்தான் காலச்சுவடின் தலைமை, கோப்ராபோஸ்ட் கட்டுரையை எழுதுவதற்கு முன்வந்திருக்கும் என்பது உறுதி!

ஆகஸ்டு 15 தினமலரின் முதல் பக்கத்தில் பாபா ராம்தேவின் பதஞ்சலி குரூப் விளம்பரம் மின்னுகிறது. இந்த பாபா குரூப் விளம்பரம் யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது?

ஊடகங்களை கொலை செய்வது எப்படி ? மோடி கையேடு : வினவு கட்டுரை இணைப்பு

ஏ.பி.பி. தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நெறியாளரான புன்ய பிரசூன் பாஜ்பாய் தனது நிகழ்ச்சியில் மோடியின் பிம்பத்திற்காக சட்டீஸ்கரைச் சேர்ந்த ஒரு பெண் தனது சீத்தாப்பழ விவசாயத்தில் இரட்டிப்பு இலாபம் வந்ததாக சொல்வது அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தால் என்பதை அம்பல்படுத்துகிறார். பிறகு அவரது வேலை போனது. அதற்கு முன்னர் என்ன நடந்தது?

இதே நேரத்தில் ஏ.பி.பி. சேனலின் மிகப்பெரிய விளம்பரதாரரான ‘பதஞ்சலி புராடக்ட்ஸ்’ நிறுவனம், தன்னுடைய அனைத்து விளம்பரங்களையும் திடீரென நிறுத்திக்கொண்டது.

அப்பேற்பட்ட பதஞ்சலி புகழ் தினமலர் பா.ஜ.க. மோடி வகையறாக்களுக்கு காசு வாங்கிக் கொண்டு வேலை செய்வது மட்டுமா அதன் குற்றம்?

தமிழர்களை ‘டமிலர்கள்’ என விளித்துக் கிண்டல் செய்வதில் துவங்கி, மக்களின் உயிராதார போராட்டங்களைத் தீவிரவாதச் செயல்களாக சித்தரிப்பது வரை தினமலரில் வெளியாகும் ஒவ்வொரு வார்த்தைகளிலும், வார்த்தைகளுக்கு இடையிலான இடைவெளியிலும் பொங்கி வழிவதன் பெயர் பார்ப்பனத் திமிர்.

பெரியார் இயக்கங்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளின் மீது மட்டுமில்லாமல் மொத்தமாக தமிழர்களின் மீதே ஆழ்ந்த வன்மம் தினமலருக்கு உண்டு. அந்த வன்மம் பார்ப்பனியம் தமிழகத்தின் பொது அரங்கில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டதில் இருந்து முளைவிடுகிறது. இது தான் ஆர்.எஸ்.எஸ். – இந்துத்துவ கும்பலோடு தினமலர் கைகோர்க்கும் புள்ளி.

இப்பேற்பட்ட தினமலரிடம் காசு வாங்கிய காலச்சுவடு கோப்ராபோஸ்ட் நடவடிக்கையில் இந்திய ஊடகங்கள் குறித்து கவலைப்படுவதும், அதற்கான காரணமாக உள்ளூர் பத்திரிகையாளர்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதும் எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?

தினமலரிடம் காசு வாங்கி அதன் பேர் ரிப்பேர் ஆனதை மறைப்பதன் பெயர் “பெய்டு நியூசில்” வராதா? இதைத்தானே கார்ப்பரேட் ஊடகங்களும் செய்கின்றன? மேலதிகமாக உள்ளூர் செய்திகள் கூட நிர்வாகங்களின் முடிவுகளுக்கு ஏற்பவே வெளிவருமே அன்றி அவை முற்றிலும் உள்ளூர் செய்தியாளர்களின் கையில் இல்லை!

திருவாளர் சமஸ் பணிபுரியும் தி இந்து நிறுவனம் கூட மோடி மனங்கோணாத செய்திகளையே வெளியிடுகிறது. தினத்தந்தியின் ‘பிரத்யேக’ மோடி நேர்காணலை மாபெரும் செய்தியாக இந்துவும் வெளியிட்டது. மற்றபடி காற்று, நெருப்பு, குப்பை, பாலிதீன் மற்றும் மக்கள் மீது விமர்சனங்களைச் செய்யும் தி இந்து பத்திரிகை மோடி அரசின் மீது மட்டும் விமர்சனங்களை செய்யவே செய்யாது! காரணம் பயம் மட்டுமல்ல, விளம்பரம் மூலம் வரும் பணமும்தான்.

மீண்டும் நாம் ஹாங்காங்கிற்குத் திரும்புவோம்!

பார்வையற்ற மாணவர்களுக்கு சேவையாற்றும் ஹாங்கிங்கின் “ஹெல்ப் த பிளைண்ட் பவுண்டேஷன்” Help the Blind Foundation எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை ஏற்கனவே பார்த்தோம் அல்லவா!

இந்த தொண்டு நிறுவனம் ஹாங்காங், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ‘சேவை’ செய்கின்றது. இந்நிறுவனத்தை உருவாக்கிய மகாத்மா திருவாளர் டி.கே.பட்டேல் குஜராத்தைச் சேர்ந்தவர். அதாவது 2002 முசுலீம் மக்கள் இனப்படுகொலை புகழ் மோடி மற்றும் மோடியின் ஸ்பான்சர் அதானியின் குஜராத்தைச் சேர்ந்தவர்.

அன்னார் அவர்கள் ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் மூத்த பொருளாதார நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சரி அந்த பொருளாதார பணி என்னவாக இருக்கும்? நமக்குத் தெரியவில்லை.

ஆனால் அன்னார் பணியாற்றிய வங்கி உலகறிந்த ஒன்று. ஆம். உலகிலேயே மோசடி வங்கி என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் முதல் ஐந்தில் இடம் பிடிக்கும் பெருமை இந்த வங்கிக்கு நிச்சயமாக உண்டு.

ஹெச்.எஸ்.பி.சி. வங்கியின் ஊழல்கள் வரிஏய்ப்பு சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள், கருப்புப் பண பதுக்கல் இன்னபிற மோசடிகளின் சிறு பட்டியல்:

2017-ஆம் ஆண்டில் ஹாங்காங்கின் அமைச்சர் பேட்ரிக் ஹோ (Patrick Ho Chi-ping) என்பவர் எண்ணைக் கிணறுகளின் உரிமம் பெறுவதற்காக ஆப்பிரிக்க நாடுகளின் அதிபர்களுக்கு இலஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்த சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைகளுக்கு ஹெச்.எஸ்.பி.சி. வங்கி மிக உதவிகரமாக இருந்துள்ளது.

Patrick Ho challenges six of eight charges against him in US$2.9 million corruption scandal
Former Hong Kong minister Patrick Ho fails to have corruption charges against him thrown out of court
China’s gift to Europe is a new version of crony capitalism

ஹெச்.எஸ்.பி.சி-யின் சுவிஸ் துணை நிறுவனம் தனது அதிஉயர் பணக்கார வாடிக்கையாளர்களுக்கு பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பின் மூலம் கருப்புப் பணம் சேர்க்கவும், கருப்பை வெள்ளையாக்கவும் உதவிவந்தது 2015-ஆம் ஆண்டு அம்பலமானது.

HSBC files timeline: from Swiss bank leak to fallout
The HSBC files: what we know so far
இந்திய முதலாளிகளின் சுவிஸ் வங்கி ரகசியங்கள்

2016-ம் ஆண்டில் ஹெச்.எஸ்.பி.சி. நிறுவனத்தின் அந்நிய செலவாணி வர்த்தகத்தின் தலைவர் மார்க் ஜான்சனும் அவருடைய சக ஊழியர் ஸ்டூவர்ட் ஸ்காட்டும் வங்கியின் வாடிக்கையாளர்களை மோசடி செய்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு எ.ஃபி.ஐ. FBI கைது செய்தது. தங்களது சொந்த நலனுக்காகவும், வங்கியின் வர்த்தக நலன்களுக்காகவும் அந்நிய செலவாணி சந்தையை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

FBI arrests senior HSBC banker accused of rigging multibillion-dollar deal

2012-ம் ஆண்டு சட்டவிரோத போதைப் பொருள் பரிவர்த்தனைகளுக்கும், தீவிரவாதிகளின் பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஹெச்.எஸ்.பி.சி. வங்கி உதவிகரமாக இருந்தது ஆதாரப்பூர்வமாக அம்பலப்பட்டதையடுத்து அமெரிக்க அரசு 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்தது.

HSBC to pay $1.9 billion U.S. fine in money-laundering case

ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணப்படம்:

Netflix documentary re-examines HSBC’s $881 million money-laundering scandal

இந்தோனேசியாவில் பாமாயில் உற்பத்தியாளர்களுக்கு நிதியளித்ததன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிவதற்கு ஹெச்.எஸ்.பி.சி. வங்கி காரணமாக இருப்பதாக கிரீன்பீஸ் அமைப்பு குற்றம் சாட்டுகிறது.

HSBC funding destruction of vast areas of Indonesian rainforest, new report claims

மேலும் ஹெச்.எஸ்.பி.சி. வங்கி குறித்த இதர ஊழல்கள்:

HSBC ‘sorry’ for aiding Mexican drugs lords, rogue states and terrorists
Make informed decisions. Become an FT Subscriber.
HSBC to pay $1.9bn in US money laundering penalties
Gupta money scandal: HSBC accused of ‘possible criminal complicity’

மேற்கண்ட இணைப்புக்களை பொறுமையாக நீங்கள் படித்தால் திருவாளர் பட்டேல் பணிபுரிந்த வங்கியின் வரலாற்றை படித்தறியலாம்.

சரி, இந்த வங்கியில் பணியாற்றும் ஒரு மூத்த பொருளாதார நிபுணர் என்ன பணிகளைச் செய்து வரவேண்டும்? எந்த நாட்டிற்கு கடன் கொடுக்க வேண்டும், எப்படி கடனை மீட்க வேண்டும், கடன் வாங்க வைக்க யாருக்கு கையூட்டு கொடுக்க வேண்டும், கருப்புபண முதலைகளின் பணத்தை பாதுகாப்பாக வைப்போம் என எப்படி நம்ப வைக்க வேண்டும்……இவற்றைத் தவிர இங்கே பொருளாதரப் பணி என்னவாக இருக்க முடியும்?

அல்லது அய்யா பட்டேல் நடத்தும் பார்வையற்ற தொண்டிற்கு படியளக்கும் பெருமகன்கள் யார்? அவர்களுக்கும் இந்த வங்கிக்கும் தொடர்பு உண்டா இல்லையா? பட்டேல் அவர்களின் தனிப்பட்ட சொத்து விவரம் என்ன? டிரஸ்டின் அறங்காவலர்கள் யார்? அவர்களின் சொத்து என்ன?

ஆக இத்தனை மகோன்னதமான வங்கியில் அதுவும் உயர் பணியில் பணிபுரிந்த ‘நல்லவர்’ திருவண்ணாமலையில் வந்து ஒரு விடுதியைக் கட்டி அந்த விடுதி திறப்பு விழாவிற்கு செய்தியாளர்களை வரவழைத்து ‘உறை’ கொடுக்கவில்லை, அப்படி கவர்கொடுக்கும் கலாச்சாரம் இருப்பதே அவருக்கோ அவரது நிறுவனத்திற்கோ தெரியவில்லை என்று ஹாங்காங் அங்கிளும், காலச்சுவடு ஓனரும் நமக்கு அறம் பற்றிய வகுப்பு எடுக்கின்றனர்!

அந்த வகுப்பின் பெயர் “செய்திக்கு என்ன விலை?”. பதிலுக்கு நாம் என்ன செய்யலாம்? நீங்களே கூறுங்கள்!

  •  இளநம்பி
    (வினவு புலனாய்வு குழு உதவியுடன்)

அடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16

டல் பிகாரி வாஜ்பாய் 16.08.2018 அன்று மறைந்து போனார். மோடியின் ஆட்சி நாடு முழுவதையும் இந்துத்துவமாக்கும் முயற்சியில் இருப்பதால் வாஜ்பாயியும் முன்னாள் பிரதமர் என்பதைத் தாண்டி மாபெரும் தேசபக்தர், அரசியல் சாணக்கியர், தவறான கட்சியில் இருக்கும் நல்லவர் என்ற புகழாரங்கள் வலிந்து கொட்டப்படுகின்றன. இவையெல்லாம் உண்மையா? இல்லை பாதி உண்மை, பாதி பொய்யா? இல்லை முழுப் பொய்யா?

வாஜ்பாய் யார் என்பதை அறிந்து கொள்ள நீங்கள் வாதிட வேண்டாம். அவரது வரலாற்றை அறிந்து கொண்டாலே போதும். இந்த வினாடி வினா அதற்கு ஒரு துவக்கமாக இருக்கட்டும்.

கேள்விகள்:

  • 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தனது அண்ணன் பிரேமுடன் கைது செய்யப்பட்ட 16 வயது வாஜ்பாயி, 23 நாட்களுக்குப் பிறகு ஏன் விடுதலை செய்யப்பட்டார்?
  • 1957 மதுரா பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனசங்கத்தின் சார்பில் (பா.ஜ.க-வின் முந்தைய அவதாரம்) போட்டியிட்ட வாஜ்பாயியை தோற்கடித்தவர் மதச்சார்பற்ற கொள்கையை கடைபிடித்த சுயேட்சை வேட்பாளர், அவர் யார்?
  • 1968-ல் வாஜ்பாயி, பாரதிய ஜனசங்கத்தின் தேசியத் தலைவரானார். 1960-களில் பாரதிய ஜனசங்கம் நடத்திய முக்கியமான போராட்டம் எது?
  • 1977-ம் ஆண்டில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய வாஜ்பாயியின் குறிப்பிடத் தக்க பணி எது?
  • 1979-ம் ஆண்டில் ஜனதா அரசாங்கம் கலைக்கப்பட்டதற்கு முதன்மைக் காரணம் எது?
  • 1951-ல் ஆர்.எஸ்.எஸ்-ஆல் ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனசங்க கட்சிக்கு வாஜ்பாயியோடு அனுப்பட்ட தீனதயால் உபாத்யாயா எப்படி இறந்து போனார்? (இவர் இறந்து கிடந்த முகலேஸ்வரி ரயில்நிலையத்தின் பெயர் இன்று இவரது பெயரால் பண்டித தீனதயால் உபாத்யாயா சந்திப்பு என்று அழைக்கப்படுகிறது.)
  • 1939-ம் ஆண்டு வாஜ்பாயி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்வதற்கு காரணமான பாபா சாகேப் ஆப்தே எனும் உமர்கந்த் கேசவ ஆப்தேவின் வாழ்நாள் பணி எது?
  • வாஜ்பாயியை ஆசிரியராகக் கொண்டு 1948 ஜனவரி 14 அன்று துவக்கப்பட்ட “பான்ஞ்சைன்ய” எனும் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்தி வார பத்திரிகையின் முதல் அட்டைப்படத்தில் இடம் பெற்றவர் யார்? (2013-ம் ஆண்டில் இப்பத்திரிகையின் விற்பனை விநியோகம் 50,000 மட்டுமே)
  • வாஜ்பாயி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, 1984 தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள் எத்தனை?
  • 1996 தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாரதிய ஜனதாவை குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா பதவியேற்க அழைத்தார். வாஜ்பாயியும் ஏற்றார்? எத்தனை காலம் பிரதமராக பதவியேற்றார்? ஏன்?
  • 1998 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்ற வாஜ்பாயி 13 மாதங்களுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று பதவி விலகினார் ஏன்?(இந்த நிகழ்வில் ஒரு புகழ்பெற்ற தேநீர் விருந்திற்கு சம்பந்தம் உள்ளது)
  • 1999 பாராளுமன்றத் தேர்தலில் வாஜ்பாயி தலைமையில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இத்தேர்தலில் பா.ஜ.க பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு?
  • வாஜ்பாயி பிரதமராக இருந்த 1999-ம் ஆண்டில் ஆப்கானுக்கு இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்திய தீவிரவாதிகள் மசூத் ஆசாரை விடுவிக்குமாறு மிரட்டினர். வாஜ்பாயி அரசு என்ன செய்தது?
  • வாஜ்பாயி பிரதமராக இருந்த 1999 – 2004 காலத்தில் நடந்த ஊழல்கள் என்ன?
  • மோடி முதலமைச்சராக இருந்தபோது நடந்த 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலையை வாஜ்பாயி கண்டித்தாரா?

பெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா ? நவீன மருத்துவமா ?

ரு ஆணும் பெண்ணும் கூடி அதனால் பெண்ணிற்கு கரு உருவாகி அது ஈறைந்து திங்கள் தாயின் வயிற்றினுள் வளர்ந்து கர்ப்ப கால இறுதியில் பிறப்பதே இயற்கையான பிரசவம்.

இந்த இயற்கையான பிரசவம் இரண்டு வகைப்படும். ஒன்று பெண்ணின் ஜனனக்குழாய் எனும் வெஜைனா வழி குழந்தை பிறப்பது மற்றொன்று சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை செய்து அடிவயிற்றுப் பகுதியில் இருந்து மேலாக குழந்தையை எடுப்பது.

முதலாவது பிரசவத்தை சுகப்பிரசவம் என்றும் இரண்டாவது வகை பிரசவத்தை ஆபரேசன் செய்து எடுத்தது என்றும் கூறுவார்கள்.

இந்த சிசேரியன் எனும் சிகிச்சை நம்மிடையே பரவலாகி முப்பது வருடங்கள் தான் இருக்கும் அதற்கு முன்பு முழுக்க முழுக்க இயற்கை வழி டைப் ஒன்று பிரசவம் தான். அதாவது சுகப்பிரசவம் அவ்வாறு சுகப்பிரசவம் பார்ப்பதையே தொழிலாக மருத்துவச்சிகள் செய்து வந்தார்கள். பரம்பரை பரம்பரையாக அவர்களின் வேலை இதுதான்.

இப்படி சிசேரியன் கண்டறியப்படாத காலத்திலும் பெண்களுக்கு சிசேரியன் தேவைப்படக்கூடிய பல பிரச்சனைகள் இருந்தன பொதுவாக நமது நாட்டு பெண்கள் உயரம் குறைவானவர்கள். குறுகலான இடுப்பெலும்பு கொண்டவர்கள்.

குழந்தை தலை கீழே இருக்காமல் குதம் கீழே இருக்கும் தன்மை (breech), கால்கள் கீழே இருக்கும் தன்மை (footling), இரண்டு குழந்தைகள்(twins), குழந்தையின் தலையும் தாயின் இடுப்பெலும்பும் ஒத்துப்போகாத தன்மை (cephalo pelvic disproportion), நஞ்சுக்கொடி கீழிறங்கி இருக்கும் தன்மை (placenta previa), நஞ்சுக்கொடி கழன்று கீழிறங்கி தொங்குதல்(abruptio placentae) இப்படி கர்ப்ப காலத்தில் குழந்தை மற்றும் நஞ்சுக்கொடி எப்படி இருக்கிறது என்பதெல்லாம் மருத்துவச்சிக்கு தெரியாது.normal_spontaneous_vaginal_delivery

ஏன் மருத்துவருக்கு கூட அப்போது தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. காரணம் – ஸ்கேன் வசதி அப்போது கிடையாது. அது போக நாம் எந்த பிரச்சனையை கண்டுபிடித்தாலும் அதற்கு சிகிச்சை ஒன்று தான் இருந்தது சுகப்பிரசவம் மட்டுமே ஒரு வழி.

ஆகவே குதம் கீழே இறங்கிய நிலையில் உள்ள குழந்தையாக இருந்தாலும் சரி,
இரட்டையர்களாக இருந்தாலும் சரி, தலையும் இடுப்பெலும்பும் ஒத்துப்போகாத தன்மை இருந்தாலும் சரி, தாய்க்கு வலி வந்தவுடன் மருத்துவச்சி பிரசவம் பார்க்க ஆரம்பிப்பார்.

குழந்தை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வெளி வராமல் போனால், பெரிய உசுர காப்பாத்தியாகணும் என்று கையை உள்ளே விட்டு குழந்தையின் கையையோ காலையோ பிடித்து இழுத்து வெளியே போடுவார். இதில் குழந்தை சாகும். சில நேரங்களில் பிரசவம் நடக்க தாமதமானால் குழந்தை உள்ளேயே காட்டுப்பீ (meconium) போய் அதை தின்று செத்துவிடும்.

தாய்க்கு அதிர்ஷ்டம் இருந்தால் ரத்த போக்கு பெரிதாக இல்லாமல் பிழைக்கலாம். இல்லாவிட்டால் அந்த இருவருக்கும் ஈமச்சடங்குகள் முடித்து விட்டு அடுத்த கல்யாணத்துக்கு மாப்பிள்ளை ரெடியாகிவிடுவார்.

சில கேஸ்களில் குழந்தை பிழைத்து, தாய் இறக்கும் சூழ்நிலையில், காலம்பூராவும் சித்தி கொடுமையில் குழந்தை வாழும்.

சரி, நான் மேற்சொன்ன எந்த பிரச்சனைகளும் இல்லாத ஒரு பெண் பிரசவம் ஆகிறாள். குழந்தையும் சரியாக பிறக்கிறது.

ஆனால் நஞ்சுக்கொடி வெளியேறாமல் போகும். கன நேரத்தில் ஒரு லிட்டருக்கும் மேல் உதிரப்போக்கு ஆகும். கண்ணுக்கு முன்னே தாய் மரணமடைவதை அந்த மருத்துவச்சிகள் வேடிக்கை தான் பார்க்க முடியும்.Twins baby

இது post partum hemorrhage. இதன் தாக்கத்தை நேரில் பார்த்தவர்களால் தான் கூற முடியும். பதினைந்து நிமிடங்கள் போதும். பிரசவ வீட்டை இழவு வீடாக மாற்ற.

இப்படி பல பேரை காவு கொடுத்தார்கள் நம் முன்னோர்கள். அவர்களை குறை கூற முடியாது. காரணம் அதை எப்படி தடுப்பது என்று அவர்களுக்கு தெரியாது.

சரி, குழந்தையும் நன்றாக பிறந்து விட்டது. தாயின் நஞ்சுக்கொடியும் பிரச்சனையின்றி வெளியே எடுக்கப்பட்டு விட்டது. ரத்த போக்கு இல்லை.

இப்போது நமது மருத்துவச்சிகள் தங்கள் கையில் வைத்திருக்கும் பழைய பிளேடு, அருவாமணை இவற்றைக் கொண்டு நஞ்சுக்கொடியை நறுக்குவர். பின்பு அந்த நஞ்சுக்கொடியில் சாணியை பூசுவர்.

ஆக, நன்றாக பிறந்த குழந்தைக்கு ரண ஜன்னி எனும் neonatal tetanus வந்து சாகும். தாய்க்கு பிறப்புறுப்பில் சீல் பிடித்து கிருமித்தொற்று பரவி sepsis வந்து மரணம் வரும். இப்படி கர்ப்ப காலத்தில் நடக்கும் மாற்றங்கள், பிரசவத்தின் போது நடக்கும் பிரச்சனைகள் , பிரசவம் முடிந்ததும் வரும் கிருமித்தொற்று போன்ற எதற்கு விடை தெரியாமல் தான் நம் முன்னோர்கள் இருந்தார்கள்.

இதன் பயனாய் ஒவ்வொரு ஆயிரம் பிரசவத்திற்கும் 300 முதல் 400 குழந்தைகள் இறந்து வந்தன. அதாவது இரண்டு பிறப்பு என்றால் ஒரு இறப்பு. ஒரு லட்சம் பிறப்பிற்கு 500 க்கும் மேல் தாய்மார்கள் இறந்து வந்தனர்.

நவீன மருத்துவத்தின் பரவலாக்கத்தால் விளைந்த நன்மைய பாருங்கள் ஸ்கேன் கண்டுபிடிக்கப்பட்டது. கர்ப்ப காலத்தின் போது வரும் பிரச்சனைகள், நீர் சத்து குறைபாடு, குழந்தை குதம் கீழே இருத்தல், குழந்தை தலைகீழாக இல்லாமை, நஞ்சுக்கொடி கீழே இறங்கி இருத்தல் போன்ற பல விபரீதங்கள் முன்னரே காண முடிந்தது.

சிசுவின் இதய துடிப்புகளை அளக்கும் டோகோகிராப் பயன்பாடு, டாப்லர் கருவி கண்டுபிடிப்பு போன்றவற்றால் சிசுவுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல் கண்டறியபப்டுகிறது.

சிசேரியன் கண்டுபிடிப்பால் இந்த பிரச்சனைகள் இருக்கும் தாய்மார்கள் சிசேரியன் எனும் உயிர் காக்கும் சிகிச்சை மூலம் பிரசவம் புரிந்து உயிருடன் வாழ்கின்றனர்.

நிச்சயம் இது இல்லை என்றால் பிரசவத்தின் போது செத்திருக்க வேண்டிய பலரை காத்த பெருமை சிசேரியனுக்கு உண்டு. இறைவனுக்கே புகழனைத்தும். மேலும் பிரசவத்தின் போது ஆகும் உதிரப்போக்கை தடுக்க உடனடியாக ஆக்சிடோசின் போன்ற மருந்துகள் போடப்படுகின்றன.

உதிரப்போக்கை ஈடு செய்ய உதிரம் ஏற்றப்படுகிறது. சுத்தமான உபகரணங்கள். ஒரு முறை உபயோகித்த பொருளை மீண்டும் உபயோகிக்காமல் இருப்பதால் தொற்று கிருமிகள் வருவதில்லை.

கர்ப்ப காலத்தில் தாய்க்கு இரண்டு முறை ரணஜன்னி தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தைக்கு டெடானஸ் வருவதில்லை. இந்தியாவில் இந்த குழந்தைகளுக்கு வரும் டெடானஸ் நோய் ஒழிக்கப்பட்டுவிட்டது.

இப்படி நவீன மருத்துவ அறிவியலின் பயனாலும் சிசேரியன், ஸ்கேன், ரத்த ஏற்றுதல், போன்ற கண்டுபிடிப்புகளாலும் நமது சமுதாயம் பயனடைந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தான் மரபு வழி பிரசவம் என்று முற்றிலும் தவறான கருத்துகளை மக்களிடம் பரப்பி அதன் மூலம் மீண்டும் நம்மை ஒரு நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுக்கிறார்கள்.

மக்கள் இவர்களிடம் தெளிவாக இருந்து விலகிக்கொள்ளுங்கள்.

நன்றி: ஃபேஸ்புக்கில் – Dr.ஃபரூக் அப்துல்லா, MBBS.,MD., சிவகங்கை.

ரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா ?

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ 70-க்கு வீழ்ச்சியடைந்தற்கான உடனடி காரணம் துருக்கி நாணயமான லிராவின் மதிப்பு 45% வீழ்ச்சியடைந்தது என்று படித்திருப்பீர்கள்.

இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை நோக்கி

துருக்கி லிரா ஏன் வீழ்ச்சியடைந்தது என்று பார்க்கலாம். துருக்கி என்ற நாடு, அந்த நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமை இவற்றை நமது நாட்டோடு ஒப்பிட்டால்தான் இதை புரிந்து கொள்ள முடியும்.

துருக்கியின் மக்கள் தொகை சுமார் 8 கோடி (இந்தியாவின் பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடக் கூடியது), இந்திய மக்கள் தொகையில் 15-இல் ஒரு பங்கு. மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-இல் ஒரு பங்கு.

எனவே, ஒரு நபருக்கான ஆண்டு வருமானம் ($11,114) இந்தியாவை ($2,134) விட 5 மடங்கு அதிகம். இரண்டு நாடுகளுமே அன்னிய முதலீட்டைச் சார்ந்து, மலிவான உள்நாட்டு உழைப்பையும், திறன்சார் உழைப்பையும் விற்பதை மட்டுமே ஆதாரமாக கொண்டுள்ளன.

துருக்கி அதிபர் எர்டோகன் இசுலாமிய மதவாதத்தை தூண்டி, சிறுபான்மை மக்களை படுகொலை செய்து, அரசியல் எதிரிகளை அடக்கி ஒடுக்கி, ஜனநாயக நிறுவனங்களை துவம்சம் செய்து சர்வாதிகாரத்தை தன் கையில் குவித்திருக்கிறார்.

1994 முதல் 1998 வரை இஸ்தான்புல் மேயராக இருந்த அவர் 2002-இல் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2007, 2011 தேர்தல்களிலும் வெற்றி பெற்று 2014-இல் நாட்டின் அரசியல் சட்டத்தை திருத்தி நாட்டு அதிபராக பதவி ஏற்றார். 2018-இல் அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2028 வரை பதவியில் நீடிக்கும் வகையில் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்.

மோடி பயணிப்பது எர்டோகன் போட்ட பாதையில் என்று  உங்களுக்கு தோன்றினால் அதில் தவறு ஏதும் இல்லை.

இது தொடர்பாக மைக்கேல் ராபர்ட்ஸ் என்ற மார்க்சிய பொருளாதார அறிஞர் ஆகஸ்ட் 11, 2018 அன்று எழுதிய  Turkey Total Meltdown கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே

துருக்கி : ஒட்டு மொத்த வீழ்ச்சி

துருக்கிய லிரா முழு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் டாலருக்கு எதிரான தனது மதிப்பில் 40%-ஐ இழந்திருக்கிறது. சென்ற வாரத்தில் 20% வீழ்ச்சியடைந்திருக்கிறது.  சமீபத்திய தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட  துருக்கியின் எதேச்சதிகார அதிபர் ரிசல் தயீப் எர்டோகனின் தாறுமாறான பொருளாதார கொள்கையும், துருக்கிய நிறுவனங்களும் தனிநபர்களும் செய்த வினைகளும் நாட்டைச் சுட ஆரம்பித்திருக்கின்றன.

Turkish Lira
கடந்த 5 ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்து வந்துள்ள துருக்கியின் லிரா.

அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பிரன்சன் கைது செய்யப்பட்டதில் பங்கு வகித்ததற்காக துருக்கியின் நீதித்துறை அமைச்சர் அப்துல்ஹமித் குல் மீதும், உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு மீதும் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை அமெரிக்கா சுமத்தியது இந்த நெருக்கடியை வெளிக் கொண்டு வந்தது.

பாதிரியார் பிரன்சன் கடந்த 20 ஆண்டுகளாக துருக்கியில் ஒரு சிறு கிருத்துவ சபையை நடத்தி வந்தார். எர்டோகன் ஆட்சிக்கு எதிரான சதித் திட்டத்தில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் அக்டோபர் 2016-இல் கைது செய்யப்பட்டார்.

பிரன்சன் இந்த குற்றச்சாட்டுக்களை “அவதூறு” என்று மறுத்திருக்கிறார். சிரியா தொடர்பான எதிரெதிர் நிலைப்பாடுகள், அமெரிக்க ஆயுதங்களை வாங்குவது போன்ற துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பல சச்சரவுகளில் ஒன்றுதான் பிரன்சனின் கைது.

இந்நிலையில், துருக்கிய ஸ்டீல் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதம் ஆக உயர்த்துவதாக அமெரிக்க வர்த்த அமைச்சர் வில்பர் ராஸ் அறிவித்தார். இதற்கு முன்பு அமலில் இருந்த 25% வரி அமெரிக்காவுக்கு துருக்கியின் ஏற்றுமதிகளை குறைப்பதற்கு போதுமானதாக இல்லையாம்.

“துருக்கியில் இருந்து இறக்குமதி ஆகும் ஸ்டீல் மீதான வரியை இரட்டிப்பது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக வர்த்தக அமைச்சகம் கருதும் இந்த இறக்குமதிகளை மேலும் குறைக்கும்” என்று ராஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

லிராவின் தற்போதைய வீழ்ச்சிக்கு இவை தூண்டுதல்களாக இருந்தாலும் துருக்கிய பொருளாதாரத்தின் வேகமான சீர்குலைவுதான் அதன் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக அச்சுறுத்துகிறது. 2016-இல் தனக்கு எதிரான தோல்வியடைந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பிறகு எர்டோகன் பொருளாதாரத்தை ஊதிப் பெருக்கும் வகையில் கடன்களை  வாரி வழங்க ஆரம்பித்தார். அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேரை சிறையில் அடைத்து, அதை விட அதிகமான எண்ணிக்கையிலானவர்களை கல்வித்துறையிலிருந்தும், அரசு பதவிகளிலிருந்தும் பணிநீக்கம் செய்தார்.

வட்டி வீதங்களை குறைந்த அளவில் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, வேகமாக அதிகரித்து வந்த பண வீக்கத்தை கட்டுப்படுத்த துருக்கியின் ரிசர்வ் வங்கி எடுத்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். “அனைத்து தீமைகளுக்கும் தாயும் தந்தையும் வட்டி வீதங்களே” என்பது அவரது கோட்பாடு.

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி வீதங்களை உயர்த்தியதால் டாலர் வலுவடைந்து வந்த நேரத்தில்,  எர்டோகனின் பொருளாதார நடவடிக்கைகளை துருக்கியின் முதலாளித்துவ பொருளாதாரத்தால் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது.

Turkey Corporate debt
துருக்கியின் கார்ப்பரேட் கடன் விகிதம்

துருக்கியின் தொழில்துறை வளர்ச்சி, கட்டுமானம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றுக்குத் தேவையான நிதி ஆதாரத்தில் பெரும்பகுதி, அமெரிக்க, ஐரோப்பிய முதலீட்டாளர்கள் மூலமாக வெளிநாட்டில் இருந்து வருகின்றன. துருக்கி எரிசக்தி ஆதாரங்களை சொந்தமாக கொண்டிருக்கவில்லை; மனிதத் திறமையையும், மலிவான உழைப்பையும் சார்ந்து மட்டுமே ஏற்றுமதி செய்ய முடிகிறது.

இந்நிலையில், துருக்கியின் குடிமக்களும் நிறுவனங்களும் டாலரிலும், யூரோக்களிலும் பெருமளவு கடன் வாங்கி குவித்திருக்கின்றனர். [இது இந்தியப் பொருளாதாரத்தின் நிலையை ஒத்திருக்கிறது]

கடந்த இரண்டு ஆண்டுகளில் துருக்கிய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என்ற தோற்றம் கடன், அன்னிய நிதி முதலீடுகள் என்ற பலவீனமான அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டது. ஏற்றுமதியை விட அதிக அளவு இறக்குமதிகள் வந்து குவிந்தன.

துருக்கிய மூலதனத்தின் இலாப வீதம் வெகுவாக சரிந்தது. உலகச் சந்தையில் டாலர் மதிப்பு அதிகரிப்பும் வட்டி வீதங்கள் உயர்த்தப்படுவதும் துருக்கிய பலூனை வெடிக்க வைத்து உலக முதலாளித்துவத்தின் நிதர்சனங்களை எர்டோகனுக்கு உணர்த்தின.

துருக்கியின் வங்கிகளும், கார்ப்பரேட்டுகளும் இப்போது படு மோசமான சுழலில் சிக்கியுள்ளனர். துருக்கியின் நிதி அல்லாத நிறுவனங்களின் அன்னிய நாணய கடன்கள், அவர்களது அன்னியச் செலாவணி கையிருப்புகளை விட $20,000 கோடி அதிகமாக உள்ளன.

அந்நியச் செலாவணி கையிருப்புக்கும் குறுகியகால வெளிநாட்டுக் கடன்களுக்குமான ஒப்பீடு

அந்த நாட்டின் வங்கிகளும், கார்ப்பரேட்டுகளும் பல நூறு கோடி டாலர் அன்னியக் கடன்களை விரைவில் கட்ட வேண்டியிருக்கிறது. அடுத்த ஒரு ஆண்டில் துருக்கியின் வங்கிகள் $5,100 கோடி கடன் கட்ட வேண்டியிருக்கிறது. இன்னும் $1,850 கோடி கடன் நிதித்துறை அல்லாத கார்ப்பரேட்டுகள் வசம் உள்ளது.

கார்ப்பரேட் கடன் விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 62 சதவீதமாக இருக்கும் நிலையில்தான் (அவற்றில்பாதி டாலர், யூரோ போன்ற அன்னிய நாணயங்களில் கட்ட வேண்டியவை) கடன்காரர்கள் கழுத்தில் துண்டை போடுகின்றனர்.

இந்தக் கடன்களை துருக்கியால் கட்ட முடியாது என்று அன்னிய முதலீட்டாளர்கள் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர். அதன் குறுகிய கால வெளிநாட்டுக் கடனுடன் ஒப்பிடும் போது துருக்கியின் அன்னியச் செலாவணி கையிருப்பு மேலும் குறைந்துள்ளது.

இது எல்லாம் சேர்ந்து துருக்கியிலிருந்து மூலதனம் வெளியேற காரணமாக அமைந்தன. எனவே லிரா மண்ணைக் கவ்வியது.

இப்போது சர்வதே மூலதனத்தின் இன்னொரு கவலை என்னவென்றால் துருக்கியின் வங்கிகளும், கார்ப்பரேட்டுகளும் கடன் கட்டத் தவறினால், அவற்றுக்குக் கடன் கொடுத்திருக்கும் ஐரோப்பிய வங்கிகளின் நிலைமையும் மோசமாகும். இழப்புகளும், கடன் கட்ட தவறுதலும் இவ்வாறு நாடு கடந்து பரவுவது “தொற்று” என்று அழைக்கப்படுகிறது. துருக்கியின் வங்கிகளில் சில வெளிநாட்டவர்க்கு சொந்தமானவை, மேலும் துருக்கிக்கு பெருமளவு கடன் கொடுத்திருக்கும் வங்கிகள் ஸ்பெயினின் BBVA, இத்தாலியின் யூனிகிரெடிட், பிரான்சின் BNP பாரிபா ஆகியவை.

வெளிக்கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய கால அட்டவணை

துருக்கியின் வங்கிகளிடம் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக தோன்றுகிறது. மேலும் ஐரோப்பிய வங்கிகள் துருக்கிக்கு கொடுத்திருக்கும் கடன்கள் அவற்றின் மொத்த கடன் பட்டியலில் ஒரு சிறு பகுதிதான்.

ஆனால், ‘இலாபங்கள் கையைக் கடிக்கும் நேரத்தில் சிறிதளவு’ இழப்புகள் கூட நிலைகுலையச் செய்து விடலாம். ஐரோப்பிய வங்கிகளின் வாராக் கடன்கள் ஏற்கனவே அதிகரித்து வருகின்றன (கடன் கையிருப்பில் ‘வாராக்’ கடன்களின் %, வரைபடத்தை பார்க்கவும்)

இந்த நாணய நெருக்கடியில் இருந்து எர்டோகன் எப்படி விடுபட முடியும்? இதற்கான முதலாளித்துவ தீர்வின் முதல் படி வட்டி வீதங்களை விண்ணளவுக்கு உயர்த்துவதன் மூலம் இனிமேலும் கடன் வாங்குவதை தடுத்து நிறுத்துவது ஆகும் [இந்திய ரூபாயின் வீழ்ச்சியை தடுக்க ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் எழுதியிருக்கிறது].

அதன் பிறகு அரசு செலவினங்களை கடுமையாக வெட்டி, வரிகளை உயர்த்த வேண்டும் (அதாவது நிதிச் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும்). இந்த ‘சேமிப்புகளை’ பயன்படுத்தி வங்கிகளுக்கு நிதி வழங்கி அவை தமது வெளிநாட்டு கடன்களை அடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் கிரீஸ் நாட்டைப் போல சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தி நிற்க வேண்டும்.

துருக்கி கடனாளிகளால் ஐரோப்பிய மண்டல வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை

சர்வதேச நாணய நிதியத்தின் விதிகளின்படி, துருக்கி தனது கடன்களை அடைப்பதற்கு $2,800 கோடி வரை கடன் வாங்க முடியும். ஆனால், அந்த வசதியை பயன்படுத்த வேண்டுமானால் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும்.

இதுதான் துருக்கியின் நெருக்கடிக்கான முதலாளித்துவ தீர்வு. இது பொருளாதாரத்தில் படு தீவிரமான வீழ்ச்சியை ஏற்படுத்தும், துருக்கி மக்களை கடுமையாக பாதித்து எர்டோகனின் ஆதரவை அரிக்கும்.

இதற்கு மாற்றாக, மூலதன கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் நாட்டிலிருந்து பணம் வெளியேறுவதை தடுக்கலாம். ஆனால், அப்படி செய்தால் பிற நாடுகளும், வெளிநாட்டு வங்கிகளும் கடன்களை ரத்து செய்து விடுவார்கள், பொருளாதாரம் முட்டுச் சந்தில் சிக்கிக் கொள்ளும்.

இதை எதிர்கொள்ள பாகிஸ்தான் செய்தது போல ரசியா, சீனா அல்லது சவுதி அரேபியாவிடமிருந்து நிதி உதவி பெற முயற்சிக்கலாம். ஆனால், இந்த நாடுகளுடனும் எர்டோகனின் உறவு மோசமாக உள்ளது.

இவை எதையும் கண்டு கொள்ளாத எர்டோகன் ‘கடவுள்’ மீதும் தன் மீதும் நம்பிக்கை வைக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு சொல்கிறார். [மோடி, மோடி என்று ஜெபிக்கும் படி பக்தாக்களுக்கு பா.ஜ.க. சொல்வதைப் போல]

துருக்கியின் நெருக்கடியை விட சர்வதேச முதலாளித்துவம் எதிர்கொண்டிருக்கும் பெரிய பிரச்சனை வளரும் நாடுகளின் அதிகரித்து வரும் கடன் நெருக்கடி.

மே மாதம் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்ற துருக்கியின் பொதுத் தேர்தலுக்கு பிறகு இதைத்தான் நான் சொல்லியிருந்தேன்.

“உலகளாவிய வட்டி வீதங்களின் அதிகரிப்பும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடங்கிய கடுமையான வர்த்தகப் போரும் துருக்கி போன்ற வளரும் முதலாளித்துவ பொருளாதாரங்களை வெகுவாக பாதிக்கப் போகிறது. அன்னிய கடன் வாங்குவதற்கான வட்டி வீதம் கடுமையாக அதிகரிக்கும், அன்னிய முதலீடுகள் வெளியேற ஆரம்பிக்கும். அர்ஜென்டினாவில் இது ஏற்கனவே நடந்து விட்டது. அதை அடுத்து உக்ரைன், தென் ஆப்பிரிக்கா போன்றவை அடங்கிய கடன் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நாடுகளின் வரிசையில் துருக்கியும் இப்போது முன்னணிக்கு வந்திருக்கிறது.”

அதாவது, லிராவின் வீழ்ச்சி ஒரு தொடக்கம் மட்டும்தான். இன்னும் நிறைய காத்திருக்கிறது.

நன்றி : new-democrats தளத்தில் வெளியான கட்டுரை
மேலும் :Turkey: total meltdown

கருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்

வ்வொரு ஆண்டும் ’சுதந்திர’ தின விழா முடிந்த பிறகு உயர்நீதிமன்ற நீதிபதிகள், போலீசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டும் நேற்று  நடைபெற்ற சுதந்திர விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடியாரும், துணை முதல்வர் தர்மயுத்தம் ‘புகழ்’ ஓ.பி.எஸ்-ஆரும் கலந்து கொண்டு  நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் கவர்னர் மாளிகையின் தோட்டத்திலே ரோஜா மலர்ச் செடிகளை நட்டு மைய அரசின் தாமரை தோட்டத்து சேவகர்கள் தாங்கள் என்பதை பணிவன்புடன் நிரூபித்தனர். நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தில் போடப்பட்டிருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான இருக்கைகள் மட்டும் காலியாக இருந்தன.

கவர்னருக்கு மட்டுமல்ல, புதியதாக பணியிலமர்ந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கும் கூட  இந்த வெற்றிருக்கைகள் அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். ‘பொறுப்பற்ற’ கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் அடிப்பது போன்றே சமூகத்தின் ’பொறுப்பு மிக்க’ மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளே ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றால் அதிர்ச்சி இருக்காதா என்ன?

’முன்னெச்சரிக்கை நோட்டீசு’ எதுவும் கொடுக்காமல், ’முன் அனுமதி’ எதுவும் வாங்காமல் திடீரென ஸ்டிரைக் அடிக்கும் அளவிற்கு அப்படி என்னதான் நிகழ்ந்துவிட்டதாம்? கடந்த ஆகஸ்ட் 12, 2018 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தஹில்ரமணி அவர்கள் ஆளுநர் மாளிகையில் வைத்துப் பதவியேற்றார்.

அங்கே அமைச்சர்கள், போலீசு அதிகாரிகள் ஆகியோருக்கான இருக்கைகள் பின்னால்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இருக்கைகளைப் போட்டிருக்கின்றனர், கவர்னர் மாளிகை ஆபிசர்ஸ். இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் தகவல்படி, மேடையில் கவர்னரின் செயலாளர் ராஜகோபால் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுடன் அருகில் இருந்திருக்கிறார். ராஜகோபாலுடன் நெருங்கிய பிணைப்பு கொண்ட டி.ஜி.பி. தர போலீசு அதிகாரியான ஜாங்கிட்-க்கு நீதிபதிகளின் இருக்கைக்கு முன் வரிசையில் இடம் தரப்பட்டிருக்கிறது.

அது கவர்னரின் ஆவலின்படி நடந்ததா அல்லது குளறுபடியால் நடந்ததா என்ற கேள்வி இந்த இடத்தில் தேவையில்லை என்பதால் அதனை விட்டுவிட்டு நமது நீதிபதிகளின் வருத்தத்திற்குள் செல்லலாம்.

நீதிபதி எம்.எஸ். ரமேஷ் இதுகுறித்து பத்திரிகைகளிடம் கூறுகையில், “அரசியல் சாசன ஆளுகையாளர்களுக்கும், போலீசு அதிகாரிகளுக்கும் இடையிலான படிநிலை குறித்து கவர்னர் மாளிகைக்குத் தெரியாதா? அல்லது, மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் போலீசு அதிகாரிகளுக்கும் கீழான மட்டத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருப்பதாக அவர்களின் புரிதல் இருக்கிறதா?” என பொங்கியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் தஹில்ரமணி.

மேலும், ‘தி இந்து’ பத்திரிகையைச் சேர்ந்த இம்ரானுல்லாவிடம் கூறுகையில், “நான் ஒரு தனிநபராக எந்தப் பகுதியில் இருக்கை கொடுத்திருந்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியாக, இன்று (12.08.2018) அக்கறையின்றி பின்பற்றப்பட்ட நடைமுறை கண்டிப்பாக பிரச்சினையே. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராகினும் அவர்களிடமிருந்து நீதிபதிகள் விளக்கம் கோரமுடியும்.” என்று கூறியிருக்கிறார்.

சினிமா தியேட்டரில் முன்னிருப்பவரின் தலை மறைத்தால் ”கொஞ்சம் கீழே இறங்கி உக்காருங்க” என்று சொல்லிவிடலாம். இங்கு நீதிபதிகளுக்கு தலை மறைப்பது பிரச்சினையில்லை. யாரு ’பெரிய தலை’ என்பதுதான் பிரச்சினையாகிப் போய்விட்டது. அதற்கு கவர்னர் மாளிகையிலிருந்து உரிய பதில் வரவில்லை என்ற பிறகுதான் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு ஸ்டிரைக்கை அடித்துள்ளனர்.

ஸ்டிரைக் என்றவுடன் ஒரு கொசுவர்த்திச் சுருள் நம் மூளையில் புகைகிறது. கடந்த 2017 நவம்பரில் செவிலியர்கள் ஊதியம் போதாது என்று போராட்டம் நடத்தியதற்கு அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வெகுண்டெழுந்து கொட்டிய வார்த்தைகள் காதில் வந்து மோதுகின்றன. ”ஊதியம் போதவில்லை என்றால் வேறு வேலை பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்டிரைக் நடத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று பொரிந்து தள்ளினார்.

மாதம் தொடங்குகையில் சுளையாக ரூ. 2,25,000 சம்பளம் வாங்கும் மாண்புமிகு நீதிபதிகள்தான் ’உழைப்பிற்கான கூலி கிடைக்கவில்லை’ என போராட்டத்தில் ஈடுபட்ட – மாதம் ரூ.7000 சம்பளம்பெறும் செவிலியர்களிடம் அந்த வார்த்தைகளை உதிர்த்தனர்.

இன்று “தங்களுக்கான ’மரியாதை’ கிடைக்கவில்லை” என ’மானமிகு’ ஆளுனர் அவர்களின் மனம் புண்படும்படி, திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கும் நீதிபதிகளை முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், இன்னாள் உச்சநீதிமன்ற ’இளம்’ நீதிபதியுமான இந்திரா பானர்ஜிக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தினால், என்ன வாசகங்களை உதிர்த்திருப்பார்?

“உங்களுக்குத்தான் மாதம் பிறந்தால் ரூ.2,25,000 சம்பளம், அரசு வீடு, அரசு கார், ஒரு டவாலி, தனி மரியாதை என எக்கச்சக்கமான மரியாதை கொடுக்கப்பட்டு வருகிறதே. ’ஆஃப்ட்ரால்’ ரெண்டு ’ரோ’ பின்னாடி தள்ளி உக்கார வச்சதால இப்போ மரியாதை பத்தலைன்னு சொல்றீங்களே. உங்களுக்கு மரியாதை பத்தலைன்னா வேற வேலை பாத்துட்டு போக வேண்டியதுதானே?” என்று கேட்டிருப்பாரா? எப்படிச் சொல்வார்? தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு தக்காளிச் சட்னி எனும் கைப்பிள்ளையின் நீதிதானே இது?

இனி, கேள்வி:

தங்களுக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை என கவர்னரின் டீபார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகளின் செயல் எத்தகையது? உங்கள் கருத்து என்ன?

  • அவமதித்த கவர்னருக்கு சரியான பதிலடி
  • நீதிபதிக்கு வந்தால் ரத்தம், மக்களுக்கு வந்தால் தக்காளி சட்னி
  • இவங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்
  • ஐயோ, பாவம் நீதிபதிகள்

இரண்டு பதில்கள் தெரிவு செய்யலாம்

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

  • வினவு செய்திப் பிரிவு

மரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா ?

0

குற்றவாளிக்கு மரண தண்டனை அல்லது கொடூரமான சித்திரவதை தருவதன் மூலம்
பாலியல் வன்முறைகள் சமூகத்தில் குறையுமா? – (பாகம்
1)

லங்கையிலோ இந்தியாவிலோ நடக்கும் ஆயிரமாயிரம் பாலியல் வன்முறைகள் / பாலியல் வன்முறையுடன் சேர்ந்த கொலைகளில் ஏதாவது ஓரிரண்டு மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

அப்போது அவ்வாறு செய்தவர்களைத் தூக்கில் போடுங்கள் என்று பலர் முழங்குகிறார்கள். அதற்கும் மேலாக அண்மைக்காலங்களில் அவர்களின் பிறப்புறுப்பை அறுத்துவிட்டு தூக்கில் போடுமாறும் கோசமிடுகிறார்கள்.

இது தொடர்பில் சில நாட்களுக்கு முன் ஒரு தமிழ் குறும்படம் யூடியூபில் வைரலாகியுள்ளது. கொஞ்சமும் ஆழமாகச் சிந்திக்காமல், படக்கருவைப் பற்றிய எந்தவொரு அடிப்படை அறிவுமில்லாமல், சும்மா கண்ணில் பட்ட ஓரிரு தரவுகளை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட படமாகவே இதைக் கருதுகிறேன்.

படத்தின் கதைப்படி இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்முறைக் கொலைகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படாததால் அல்லது அளித்தாலும் மனித உரிமை அமைப்புகள் அதைத் தடுப்பதால் குற்றம் செய்வோருக்கு சட்டத்தின் மேல் பயம் குறைந்து விட்டதாம்.

அதனால் கருவிலேயே பெண் சிசுக்கருவைக் கலைப்பதற்கும் மேலாக கருப்பைக்குள் ஊசி ஏற்றி பெண் சிசுவை ஆண் சிசுவாக மாற்ற அறிவியல் வழி அமைத்துக் கொடுக்குமாம்.

அதன்படி 50 ஆண்டுகளில் இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 250 பெண்கள்தான் இருப்பார்களாம். கதைக் காலம் கி.பி. 2067. ஆண்களைத் திருமணம் செய்யப் போதுமான அளவு பெண்கள் இல்லாததால், ஒரு பெண் இரு ஆண்களைக் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் வந்து விடுமாம். மொத்தத்தில் பெண்களைப் “பாதுகாக்க” வேண்டும் என்று யாரும் யோசிக்காததால் இப்படி ஆகிவிடுமாம்.

படத்தில் பல பிரச்சனைக்குரிய விடயங்கள் உள்ளன. சமூகம் பெண்ணுக்கு சம மனித அந்தஸ்து வழங்குவதில் கவனம் செலுத்தாமல் பெண்ணைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதே பிரச்சினைக்குரியது.

இருதார மணங்கள், ஓரினச்சேர்க்கை பற்றிய கதையாசிரியரின் தவறான கருத்துகள், காதலிப்பதாகச் சொல்லும் கணவன் கூட உறவில் பெண்ணின் சம்மதத்தை வலியுறுத்தாமை, பெண்ணைப் “பாதுகாக்க” ஒன்றுக்கு மூன்று போலிஸ்காரர்கள்; ஆனால் அப்போதும் கூட தெருவில் போகும் போது சீண்டும் ஆண்களைக் கண்டிக்காமை என கதையாக்கத்தில் உள்ள பல பிரச்சனைகளை விமர்சிக்கலாம்.

ஆனால் கொடிய பாலியல் வன்முறைக்குச் சித்திரவதையுடன் கூடிய மரணதண்டனை வழங்கப்படாததால்தான் இந்தப் பிரச்சனை நீடிக்கிறது எனும் கதையின் சாரம்சத்தை இக்கட்டுரைத் தொடரில் விரிவாக அலசலாம் என நினைக்கிறேன்.

சித்திரவதை செய்து கொலை செய் என்று இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு சொல்கிறார்களா? அதனால் கொஞ்சமாவது பலன் கிடைக்குமா? என்றெல்லாம் இவர்கள் யோசித்திருப்பார்களா, தெரியவில்லை.

Death Sentenceஉணர்ச்சிகளால் தூண்டப்பட்டு அறிவார்ந்து யோசிக்காமல் எடுக்கும் எந்த முடிவுகளும் அநேகமாக நியாயமாகவோ சரியாகவோ இருக்காது. மனித உரிமை அமைப்புகள் சொல்வது போல் மரண தண்டனை மனிதாபிமானமற்ற தண்டனைதான். மாற்றுக் கருத்தில்லை. மரண தண்டனை என்பது ஒருவகைப் பழிவாங்கலே தவிர நீதியானதல்ல. ஆதாரபூர்வமான எதிர்க்கருத்துகள் இருந்தால் சொல்லுங்கள், விவாதிப்போம்.

இந்த ஆட்கொல்லி தண்டனையால் பயனில்லை எனப் பல நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டன. ஆனால் பாலியல் வன்முறைகளுக்கு எவ்வாறு நிரந்தர தீர்வுகள் எடுக்கலாம் என்பதைப் பற்றி சிந்திக்காமல் இந்திய அரசாங்கமும் சிறுமி ஆசிபாவிற்கு நடந்த கொடூரத்துடன் மக்களின் கோசமும் சேர 12 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுவர்களைப் பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கலாம் எனத் தீர்மானம் எடுத்திருக்கிறது.

மரண தண்டனை மனிதாபிமானமற்றதென்பதைத் தாண்டி மரண தண்டனையால் உண்மையில் பலன் ஏதாவது இருக்கிறதா என யோசித்துப் பாருங்கள். குற்றங்கள் சமூகத்தில் குறைகின்றனவா என்பது முக்கியமா அல்லது குற்றவாளியைக் கொன்று போடுவது முக்கியமா? குற்றம் செய்தவன் கொடூரமான முறையில் பழிவாங்கப்படுவது தான் முக்கியம் என்று நினைக்கிறீர்களா? மரண தண்டனையால் சமூகத்தில் மிகச் சாதாரணமாக இருக்கும் பெண் வெறுப்பும் பாலியல் வன்முறையும் முடிவுக்கு வந்து விடுமா? குறைந்தது மரண தண்டனை கொடுக்கும் சட்ட வல்லுநர்களும் நீதிபதிகளும் நியாயமாகச் செயற்படுகிறார்களா?

அநேகமான பாலியல் வன்முறைகள் புகார் செய்யப்படுவதில்லை, புகார் செய்யப்பட்டவற்றில் 90%-க்கு மேற்பட்ட பாலியல் குற்றங்கள் பெண்களுக்கோ, சிறுவர்களுக்கோ தெரிந்தோராலேயே நடத்தப்படுகிறது.

அது தந்தையாகவோ, துணைவனாகவோ, சகோதரர்களாகவோ வேறு உறவினர்கள் – நண்பர்களாகவோ கூட இருக்கலாம். 10%-க்கும் குறைவான பாலியல் வன்முறையே அந்நியர்களால் நடத்தப்படுகிறது.

ஆனால் பலதரப்பட்ட சமூகத்தவரும் குற்றவியல் / நீதி அமைப்புகளும் அந்த சிறுபான்மையான பாலியல் குற்றங்களிலேயே கவனம் செலுத்துகின்றன. பாலியல் வன்முறைக்கான சட்டங்கள் அனைத்தும், அந்நியரால் நடத்தப்படும் வன்முறை சூழல்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரியான சட்டங்கள் / தண்டனைகள் பாலியல் அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பதற்குத் தேவையான சமூக மாற்றங்களை வழங்குவதில் தோல்வியே அடைந்துள்ளன.

நிற்க‌. மரண தண்டனை கிடைக்கும் எனத் தெரிந்தால் தம் உறவினர்களின் அத்துமீறல்கள் குறித்து புகாரளிக்க அநேகமானோர் முன்வரமாட்டார்கள். கூடவே மரண தண்டனை கிடைக்கும் எனத் தெரிந்தால் பாதிக்கப்பட்டவரை வன்முறை செய்தவன் கொலை செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டெனவும் கருதப்படுகிறது.

கொடுக்கப்படும் மரண தண்டனைகளாவது குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் பக்கச் சார்பற்று, பாரபட்சங்கள் பார்க்காமல் கொடுக்கப்படுகிறதா? டில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் நீதித்துறை அவ்வாறு செயல்படவில்லை என்றே சொல்கின்றன.

2013-இலிருந்து 2015 வரையான காலத்தில் மரண தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளிகளில் 75% பேர் தாழ்த்தப்பட்ட சாதியை அல்லது சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தோர். அதில் 63% பேர் அவர்களின் குடும்பத்தின் பிரதான வருமானத்தை ஈட்டுவோர். 88% அதற்கு முன் எந்தக் குற்றமும் செய்ததாகச் சான்றுகள் இல்லாதோர். 300க்கும் மேற்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்போரில் 12 பேர் பெண்கள். அவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சாதியினைச் சேர்ந்தோர்.

இப்படி எல்லா வகையிலும் விளிம்புநிலையிலுள்ள மனிதருக்கே மிக அதிகமாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. சாதி / மத / வர்க்க அடிப்படையில் மேல் மட்டத்திலுள்ளோர் குற்றம் செய்யவில்லை என்பதல்ல. அவர்கள் இலகுவாக தப்பித்துச் செல்வதற்கே நீதி அமைப்பு பயன்படுகிறது. எந்த வகையில் இது மனிதாபிமானது?

மரண தண்டனை கிடைக்கும் என்ற‌ பயத்தால் பாலியல் வன்முறை / கொலைக் குற்றங்கள் குறையும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தண்டனையின் தீவிரம், தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை, குற்றத்தின் பின் தண்டனை கொடுக்க எடுக்கும் காலம் இவை மூன்றுமே சட்டத்தின் மூலம் குற்றங்களைக் குறைக்க உதவுவன.

இதில் ஒரு குறிப்பிட்ட அளவு தீவிரமான தண்டனைகளுக்கு மேல் தண்டனைகளின் தீவிரத்தைக் கூட்டுவதால் குற்றங்கள் குறையப் போவதில்லை. தண்டனைகளின் தீவிரத்தை விட‌ தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தண்டனை கொடுக்க எடுக்கும் கால அளவுமே குற்றங்களைக் குறைக்க வல்லது.

தண்டனை நிச்சயம் என்றால் குற்றங்கள் குறையலாம் என்று ஆதாரங்கள் சொல்கின்றன‌. சரி, ஆனால் பாலியல் வன்முறை செய்தால் கட்டாயம் பிடிபடுவோம் / தண்டனை கிடைக்கும் என்று நீங்கள் யாராவது நம்புகிறீர்களா என்ன?

2015-2016 இல் நடத்தப்பட்ட National Family Health Survey (NFHS)-இன் படி இந்தியாவில் 99% ஆன பாலியல் வன்முறைகள் புகாரளிக்கப்படுவதே இல்லை. இத்தகவலைத் திரும்பவும் ஒருமுறை உள்வாங்கிக் கொள்ளுங்கள். நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைகளில் ஒரே ஒரு சதவீதமானவை மட்டுமே புகாரளிக்கப்படுகின்றன.

தேசிய குற்றப் பதிவு மையம் (NCRB) 2016-ம் ஆண்டு தரவுகளின் படி புகாரளிக்கப்பட்ட பாலியல் வன்முறைகளுக்கு விசாரித்து தண்டனைகள் கொடுக்கப்பட்டது வெறும் 18.9% வழக்குகளில் மட்டுமே. திரும்பவும் ஒருமுறை வாசியுங்கள். புகாரளிக்கப்படுவதே ஒரே ஒரு சதவீத வன்முறைகள்தான்.

அந்த ஒரு சதவீதத்தில் 19% ஆன குற்றங்களுக்கே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. அதாவது நாட்டில் நடக்கும் ஆயிரம் பாலியல் வன்முறைகளில் இரண்டிற்கும் குறைவான குற்றங்களுக்கே குற்றவாளிக்குத் தீர்ப்பளிக்கப்படுகிறது. இந்த இலட்சணத்தில் பாலியல் வன்முறை செய்தால் பிடிபடுவோம் என எவராவது நினைக்க முடியுமா என்ன?

மொத்தத்தில் மரண தண்டனை பயத்தால் பாலியல் வன்முறை / கொலைக் குற்றங்கள் குறையப் போவதில்லை. மாறாக அரசாங்கம் குற்றவியல் / நீதி அமைப்புகளை வலுப்படுத்த முயல்வதோடு பாலியல் வன்முறை செய்தோர் பொறுப்பேற்கவும் தேசிய அளவிலான தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தவிர எல்லா சமூகங்களிலும் பாலியல் வன்முறை மிகப் பரவலாக இருப்பதைத் தனியே சட்ட அமைப்புகளைச் சீர்திருத்துவதால் மாற்ற முடியாது. பாலியல் வன்முறை ஒரு சமூகப் பிரச்சனை.

அதன் தீர்வில் சமூகம் ஒரு பங்காக இருக்க வேண்டும். சமூகத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகள் ஒரு தனி நபரின் செயல்களுக்கு அப்பாற்பட்டது. நமது ஆணாதிக்க சாதி-மத / கலாச்சார நம்பிக்கைகள், நடைமுறைகள், கட்டமைப்புகள் அனைத்தும் இவ்வன்முறை நிலைத்திருப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஒரு பிரச்சனைக்குத் திடீர் தீர்வுகள் எதுவும் கிடையாது. இதை உணர்ந்து சமூக உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமூகத்தில் படிப்படியான மாற்றங்களைக் கொண்டு வந்தாலே கொஞ்சம் கொஞ்சமாக‌ மாற்ற முடியும்.

மேலும் படிக்க :

(தொடரும்)

  •  அன்னா

அன்னா: மாதவிடாய், கருப்பை, கருத்தரித்தல் தொடர்பாக உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் உயிரியலாளர் மற்றும் பெண்ணியவாதி. வினவு கருத்தாடல் பக்கத்தில் “அறிவியல்-பெண்ணியம்-சமூகம்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

மரபுவழி பிரசவம் : முகலாய ராணி மும்தாஜ் மரணம் கற்றுத்தரும் பாடம் என்ன ?

ரு முக்கியமான வரலாற்று ஆவணம் – இண்ட்ரஸ்டிங் கேஸ் ஸ்டடி
வரலாற்றில் இருந்து பாடம் கற்பது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்..

இயற் பெயர் : அர்ஜூமந்த் பானு
பாலினம் : பெண்
பிறந்தது : 27 ஏப்ரல் 1593
இறந்தது : 17 ஜூன் 1631 தனது 38 வது வயதில்
14ஆவது குழந்தையை பிரசவிக்கும் போது பிரசவ உதிரப்போக்கு காரணமாக இறக்கிறார் இந்தப்பெண்.

இவரது இறப்பில் என்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள்?

இந்த பெண் வேறு யாரும் இல்லை. அப்போது இந்திய நாட்டை ஆட்சி செய்து வந்த முகலாய சக்கரவர்த்தி ஷாஜகானின் பட்டத்து ராணி – மும்தாஜ் மஹல்.

taj-mahal-birthsபட்டத்து ராணி என்றால் எத்தனை பவர்ஃபுல் என்பது, அடுத்த நூற்றாண்டில் இங்கிலாந்தின் குயின் எலிசபெத் எத்தனை பவர்ஃபுல்லாக இருந்தார் என்பதை அறிந்தால் தெரியும். இத்தனை சர்வ வல்லமை பொருந்திய சாம்ராஜ்யத்தின் பட்டத்து ராணி எப்படி இறந்தார்?

  • தனது 38வது வயதில் (High maternal age)
  • 14வது குழந்தையை ஈனும் போது (High order birth )
  • பிரசவத்திற்கு பின் நேரும் அபாயகரமான உதிரப்போக்கினால் (Post partum hemorrhage) வந்து இறந்தார்

தனது காதல் மனைவியின் இறப்பை தாங்க இயலாத ஷாஜகான் ஒரு வருடம் துக்கம் அனுஷ்டித்திருக்கிறார். அவர் துக்கம் முடிந்து மீண்டும் மக்களுக்கு காட்சி அளித்த போது நரை முடி கூனுடன் வெளியே வந்தததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரலாற்றை படியுங்கள்…

  • நாம் 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மகப்பேறு பிரசவங்கள் எப்படி இருந்திருக்கும்?
  • பெண்கள் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள் ? என்று எங்கும் போய் பார்க்க தேவையில்லை
  • மும்தாஜ் எனும் பட்டத்து ராணிக்கு எந்த மாதிரி வைத்தியம் அந்த காலத்தில் கிடைத்திருக்கும்?
  • சாதாரண மக்களை விடவும் சிறப்பான சிகிச்சை கண்டிப்பாக கிடைத்திருக்கும்?
  • பிறகு ஏன் மரணம் நடந்தது ?

இப்போது நவீன மருத்துவம், தாய்களின் இறப்பை கொண்டு கணித்து தாயின் வயது அதிகமாக அதிகமாக பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள் (complication) கூடும் என்கிறது.

மேலும், எத்தனை அதிகமான முறை ஒரு தாய் பிரசவக்கிறாளோ அதற்கு ஏற்றாற் போல் தாய்க்கோ குழந்தைக்கோ பிரச்சனை வரும் என்கிறது. அந்த பட்டத்து ராணிக்கு உணவில் அன்பில் எந்த குறையும் இருந்திருக்காது.

14-வது பிரசவம் வரை தாக்கு பிடித்திருக்கிறார். கண்டிப்பாக கர்ப்ப காலத்தில் நல்ல ரத்த சோகை (anemia) இருந்திருக்கும். அதை சரி செய்யும் மருத்துவம் அப்போது இல்லை. பிரசவித்து விட்டு ரத்த போக்கு அதிகமாக வர அதை சரி செய்யும் சிகிச்சையும் அப்போது இருந்திருக்கவில்லை. இறந்து விட்டாள்.

இந்தியாவில் இன்றும் பல பெண்கள் கர்ப்பகாலத்தின் போது இரத்த சோகைக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். (மாதிரிப் படம்)

அவளது மரணத்தை அக்காலத்தில் மன்னர்களுக்கும் பேரரசர்களுக்கும் கிடைத்த மருத்துவத்தின் அளவுகோலாக கொள்ளலாம். கண்டிப்பாக சாதாரண மனிதர்களுக்கு அதை விட மிகவும் குறைவான மகப்பேறு சிகிச்சையே கிடைத்திருக்கும்.

இப்போது யோசித்து பாருங்கள். இந்தியாவின் 18 ஆம் நூற்றாண்டு தாய் சேய் இறப்பு விகிதங்களை.

எப்படியும் ஒரு இலட்சம் பிரசவங்களில் 1000 முதல் 2000 தாய்மார்கள் நிச்சயம் இறந்திருப்பார்கள் என்பது எனது கணிப்பு.

சரி, இப்போது மும்தாஜ் பெற்ற அந்த 14 பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்று பார்ப்போம். அப்போது இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant mortality rate மற்றும் under 5 mortality rate) கிடைத்து விடும்.

மும்தாஜின் முதல் குழந்தை – ஹூருன் நிசா பேகம் (30.3.1613 – 5.6.1616)
மூன்று வயதில் பெரியம்மை வந்து இறந்து விட்டாள் ( அந்த காலத்தில் ஏது தடுப்பூசி ? இப்போது இந்த பெரியம்மை உலகத்தை விட்டே ஒழிக்கப்பட்டுவிட்டது )

இரண்டாவது பெண் ஜஹனரா பேகம் (23.3.1614 – 16.9.1681) இவர் தான் தனது தாய் மரணத்திற்கு பிறகு ஷாஜகானுக்கு மிகவும் விருப்பமான மகள். மூன்றாவது மகன் தாராஹ் சுகோஹ் ( 20.3.1615 – 30.8.1659) அடுத்து நான்காவது மகன் ஷா ஷூஜா ( 23.6.1616-7.2.1661) அடுத்து ஐந்தாவது பெண் ரோஷனரா பேகம் (3.9.1617- 11.9.1671) தனது அக்கா ஜனஹராவுக்கு பிறகு பவர்ஃபுல் லேடியாக விளங்கியவர் இவர்.

அடுத்து ஆறாவதாக “தல” அவுரங்கசீப் பிறக்கிறார்
(3.11.1618- 3.3.1707) இவர் தன் தந்தை நோய்வாய்பட்டவுடன் அவரை ஓரம்கட்டிவிட்டு அரியணைக்கு ஏறினார்.

இதுக்கப்புறம் தான் கதை ஆரம்பிக்குது பாருங்க…

ஏழாவது குழந்தை – மகன் இசாத் பக்ஷ் – (18.12.1619- 1621) ஒரு வயது முடிந்திருக்கும் சூழ்நிலையில் நோய் வந்து இறக்கிறார் இந்த இளவரசர். எட்டாவது சுரய்யா பானு பேகம் என்ற பெண் சிசு பிறந்து ஏழு வருடங்கள் வாழ்ந்து பெரியம்மை வந்து இறக்கிறாள். ஒன்பதாவது – பெயரிடப்படாத ஆண் மகவு. பிறந்தவுடன் இறக்கிறது.

பத்தாவது பிறந்த முரத் பக்ஷ் – 1624 ஆம் ஆண்டு பிறக்கிறார். 1661 ஆம் ஆண்டு தனது அண்ணன் அரசர் அவுரங்கசிப் ஏதோ காரணத்தால் இவரை கொன்றுவிட ஆணையிடுகிறார். (என்ன காரணமோ தெரியல) 11-வது மகன் லுஃப்த் அல்லாஹ் – ஒன்றரை வயதில் நோய்வாய்பட்டு இறக்கிறான்.12-வது பெண் குழந்தை தவுலத் அஃப்சா தனது ஒரு வயதுக்குள் நோய் வந்து இறக்கிறாள்.

13-வது ஹுசன் அரா பேகம். இவளும் தனது ஒரு வயதை தாண்டாமல் நோய் வந்து சாகிறாள். 14-வதும் கடைசியுமான பிரசவத்தில்… கவுஹர் அரா பேகம் எனும் பெண் குழந்தையை பெற்று போட்டு விட்டு தாய் இறக்கிறாள்.

இவ்வளவு தாங்க கதை…

யோசிச்சு பாருங்க..
14 ல அஞ்சு குழந்தை ஒரு வயச தாண்டல…
2 குழந்தை பத்து வயச தாண்டல..

பெரியம்மை தடுப்பு மருந்து கண்டறிந்த விஞ்ஞானி எட்வர்டு ஜென்னர்

இப்படி தான் நமது முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். பெண்களை குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரமாக மட்டுமே பாவித்து வந்தனர் ஒரு பெண்ணிற்கு அதற்கு மேல் என்ன வேலை என்று கேட்கிறீர்களா? ப்ளீஸ் டேக் டைவர்சன்.

அந்த காலத்தில் ஷாஜகானே நினைத்திருந்தாலும் தனது மனைவியை பிழைக்க வைப்பது சிரமம் தான். அத்தனை சிகிச்சை முறைகள் அப்போது கிடையாது.

மும்தாஜுக்கும் அவரது அரண்மனையில் வைத்து மரபு வழி பிரசவம் தான் பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அனீமியாவை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வசதிகள் கிடையாது. ரத்தம் ஏற்ற முடியாது. ரத்த போக்கை தடுக்க முடியாது. தடுப்பூசி கிடையாது. எந்த உயிர்கொல்லி நோயையும் தடுக்க முடியாது.

நோய் வந்தால் அரசன் ஆண்டி இருவரும் ஒன்று தான்.

இன்று ஏழை பணக்காரன் பாகுபாடின்றி அரசு அனைவருக்கும் இலவசமாக மகப்பேறு சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை வழங்கிவருகிறது.

இந்த கேஸ் சினாரியோ வழி நாம் அறிவது ;

  • மருத்துவமனை பிரசவமே பாதுகாப்பானது.
  • தாயின் வயது கூடக்கூட பிரசவத்தின் போது தாய் சேய் மரணம் நிகழ வாய்ப்பு அதிகம்.
  • கர்ப்பத்தின் எண்ணிக்கை கூடக்கூட பிரசவத்தின் போது பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகம்.
  • பிரசவத்தின் போது ஏற்படும் உடனடி பிரச்சனைகளை கண்டறிந்து உயிர் காக்கும் சிகிச்சைகளை மருத்துவமனைகளில் மட்டுமே செய்ய முடியும்.

இந்த பதிவை இதுவரை இந்த உலகை விட்டு; பிரசவத்தின் போதும் கர்ப்பத்தின் போதும் இறந்த மும்தாஜ் மஹல் போன்ற லட்சக்கணக்கான தாய்மார்களுக்கு காணிக்கையாக்குகிறேன். உங்களால் தான் நாங்கள் பாடம் கற்கிறோம். நன்றி தாய்மார்களே!

Dr.ஃபரூக் அப்துல்லா

நன்றி: ஃபேஸ்புக்கில் Dr.ஃபரூக் அப்துல்லாMBBS.,MD., சிவகங்கை.

 

உணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் !

ள்ளி கல்லூரி விடுமுறையின் போது மாணவர்கள் என்ன செய்வார்கள்? பெற்றோர்களின் விருப்பம் என்ன? நீட் முதல் பரதம், டென்னிஸ், நீச்சல், இசை என்பதை நடுத்தர வர்க்கம் விடுமுறைக்காலத்தின் சுய முன்னேற்றமாக வைத்திருக்கிறது. சில பல ஆயிரங்களோடு அந்த பயிற்சி ஏதோ முடிந்தாலும் மாணவர்கள் அதில் என்ன பெற முடியும்?

ஆனால் உங்கள் பிள்ளைகளை இத்தகைய விடுமுறைகளின் போது உடலுழைப்பு சார்ந்த வேலைகளுக்கு அனுப்பினால் அது உருவாக்கும் ஆளுமையே தனி! குடும்ப அமைப்புக்களில் பாராட்டி சீராட்டி வளர்க்கப்படும் நமது பிள்ளைகள் இத்தகைய வேலைகளைச் செய்யும் போது பல நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இந்த உலகம் எப்படி இயங்குகிறது, நமது சமூகத்தின் உழைக்கும் மக்கள் எப்படி அயராமல் வேலை செய்கிறார்கள், பணி நேரத்தில் எந்திரம் போல வேலை செய்து உடலை உழைப்புக்கு பழக்குவது, மக்களிடையே புரியும் விதத்தில் பேசக் கற்றுக் கொள்வது, நடைமுறை சார்ந்த திறமைகள் பலவற்றைக் கற்பது, தனியாக வேலைக்கு செல்வதன் மூலமும், வேலை சார்ந்த பிரச்சினைகளை சந்திப்பதன் மூலமும் பொறுமை, விடா முயற்சி, தைரியம் போன்றவற்றை சுயமாக தரிசிப்பது என்று அளப்பறிய பலன்கள் இருக்கின்றன.

இங்கே கல்லூரி மாணவி கவிமதி தனது விடுமுறைக் காலத்தில் ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய அனுபவத்தை தருகிறார்! அடுத்த விடுமுறையின் போது நீங்களும் முயன்று பாருங்கள்!

– வினவு

ல்லூரி முதல் வருடம் வெற்றிகரமாக (எந்த அரியரும் இல்லாமல்) முடிந்தது. கோடை விடுமுறையில் எந்த ஊருக்கு என்று பேசிக்கொண்டிருந்த பொழுது, வேலைக்கு போகலாம் என்ற அப்பாவின் யோசனை முதலில் இடியாக இருந்தாலும் பிறகு யோசிக்கும்படியாக இருந்தது..

கடைகளுக்கு பொருள் வாங்க செல்லும்போது அழகாக வரவேற்ற முகங்கள், வேலை தேடி செல்லும்போது வேண்டா வெறுப்பாக பார்த்தது. முதலில் எனது நகரின் முக்கியமான தெருவில் இருக்கும் துணிக்கடைக்கு சென்றேன். நாளை வேலைக்கு வா என்று சொல்வார்கள் என்ற கனவில் சென்றேன் நான்.

கோடை விடுமுறையில் எந்த ஊருக்கு என்று பேசிக்கொண்டிருந்த பொழுது, வேலைக்கு போகலாம் என்ற அப்பாவின் யோசனை முதலில் இடியாக இருந்தாலும் பிறகு யோசிக்கும்படியாக இருந்தது..

வேலை தேடி வந்திருக்கிறேன் என்று சொன்னவுடன், ‘ஓரமா நில்லுமா’ என்றுதான் பேசவே ஆரம்பித்தார்கள். காலேஜில் சேர்வதற்கு விண்ணப்ப படிவம் தருவதுபோல் வேலைக்கு கூப்பிடுவதற்கும் விண்ணப்ப படிவம் தரவேண்டும் என்பது ஆச்சரியமாக இருந்தது.

விண்ணப்பத்தில், ஜாதி, சமயம் என்ன என்றெல்லாம் கேட்கப்பட்டிருந்தது. விண்ணப்பம் கொடுத்த பிறகாவது கூப்பிடுவார்கள் என்று பார்த்தால், ஏற்கனவே வரிசையில் 50 பேர் இருந்தார்கள். கொடுத்து விட்டு வந்துவிட்டேன். 2… நாள் கூப்பிட வில்லை. திரும்பவும் சென்றேன். எச்.ஆர்-இடம் கேட்டு நாளை சொல்கிறோம் என்றார்கள்

அடுத்த நாளும் கூப்பிடவில்லை. ஒரு நாள் கழித்து சென்றேன். எச்.ஆர் இருந்தார்.
12 -ஆவது முடித்திருக்கிறேன். தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தெரியும் என்றேன். முதல் கேள்வியாக ‘லீவுக்கு மட்டும்தான் வருவியா?’ என்றார். ஆமாம், என்றால் வேலை கொடுக்க மாட்டாரே. ‘இல்லை, நான் வீட்டிலிருந்து கரஸில் படிக்க போகிறேன். நிரந்தரமாக வேலைக்கு வருவேன், என்றேன். அவர்,’ காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வேலை, சீக்கிரம் கூப்பிடுகிறோம்’ என்றார்.

அவர்களும் கூப்பிட வில்லை, நானும் போகவில்லை. வீட்டிற்கு மளிகை சாமான் வாங்குவதற்காக நானும் அம்மாவும் அருகில் இருக்கும் கடைக்கு செல்வது வழக்கம். அந்த கடையின் எதிரே ஒரு ஓட்டலில் பில்லிங் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற போர்டு தொங்கி கொண்டிருந்தது. சென்று கேட்டவுடன், அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வர கூறிவிட்டார்கள்.

ஓனருக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுப்பது, தன்னை பெரிய ஆளு என்று நினைத்து கொண்டிருக்கும் சில டான்களுக்கு சாப்பாடு என்ன வேண்டும் என்று கேட்பது, டைம் பாஸ் ஆகாத கஸ்டமர்களின் மொக்க கேள்விகளுக்கு பதில் சொல்வது, மெனு போர்டு எழுதுவது, வேலை செய்பவர்களின் புலம்பலை கேட்பது, இதெல்லாமும் எங்கள் வேலை.

ஷிப்ட் மாறி மாறி வரும் என்றும் கூறினார்கள். விடியற்காலை எழுந்து குளித்து தயாராகி முதல் நாள் காலையில் 6 மணிக்கு வேலைக்குச்சென்றேன். கணினியில் அடிப்படை அறிவு இருந்தாலும், வேலையை எண்ணி பயமாக இருந்தது. வேலைக்கு சென்றவுடன், ஏற்கனவே இரண்டு பேர் பில்லிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் சென்று பணிவாக ‘வேலைக்கு வர சொல்லியிருந்தார்கள்’ என்றேன். நாங்களே நேத்துலர்ந்துதான் வரோம் என்றார்கள் அவர்கள். அவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு விடுமுறைக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

அவர்கள் ஷீலா, அரித்ரா. ஒரு மணி நேரத்தில் பில் எப்படி போடுவது என்று கற்றுக் கொண்டேன். அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம், குடும்பத்தில் ஒருவர் புதியதாக வந்ததை போல விசாரித்தார்கள்.

காலை உணவு, என்ன வேண்டுமோ எடுத்து கொள்ளலாம். ஆனால், பரோட்டா, மல்லி இட்லி போன்ற விலையுயர்ந்தவற்றை எடுக்கக்கூடாது என்று பரோட்டா மாஸ்டர் கூறினார். நான் இரண்டு இட்லி சாப்பிட்டேன். அனைவரும் நன்றாக பேசினார்கள். பயம், கூச்சம் எல்லாம் முதல் நாளிலேயே மறைந்துவிட்டது எனக்கு.

பரோட்டா மாஸ்டர்

அரித்ராவும், ஷீலாவும் பக்கத்து ஊரிலிருந்து வந்தார்கள். ஷீலாவுக்கு இயேசு பக்தி அதிகம். கண்டிப்பாக இயேசு அருளோட நான் 1000 மார்க் எடுப்பேன் என்று அடிக்கடி சொல்வாள். அரித்ரா, மார்க் வந்தா என்ன வரலனா என்ன.. எனக்கு என் ஆளு இருக்கான். என்று இருப்பாள்.

அங்கு வேலை செய்யும் ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள ஒவ்வொன்று இருந்தது. ஓனர்கள் இருவருமே நன்றாக பேசுவார்கள். பில் போடுவது மட்டும் அங்கும் வேலையல்ல. ஓனர் இல்லையென்றால், நாங்கள் தான் ஓனர்போல கேஷ் டேபிளில் உட்கார்ந்து சீன் போட்டுக்கொண்டு இருப்போம்.

ஐஸ் கிரீம், கூல் ட்ரிங்ஸ் எடுத்து கொடுப்பது, ஓனருக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுப்பது, தன்னை பெரிய ஆளு என்று நினைத்து கொண்டிருக்கும் சில டான்களுக்கு சாப்பாடு என்ன வேண்டும் என்று கேட்பது, டைம் பாஸ் ஆகாத கஸ்டமர்களின் மொக்க கேள்விகளுக்கு பதில் சொல்வது, மெனு போர்டு எழுதுவது, வேலை செய்பவர்களின் புலம்பலை கேட்பது, இதெல்லாமும் எங்கள் வேலை.

தனராஜ் அண்ணன், சவுந்தர்யா அக்கா (இடது) மற்றும் வனஜா அக்கா -கேஷியர் (வலது)
சவுந்தர்யா அக்கா, கிளீனர் அக்கா.

இவருக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. இரண்டு பேரும் அரசு பள்ளியில் படிக்கிறார்கள். கணவர் ஐஸ் வியாபாரம் செய்கிறார். இவரது லட்சியம் என்று இவர் அடிக்கடி கூறுவது, ‘மாமியார் மண்டய போடறதுக்குள்ள லைப்ல செட்டிலாயிடணும்’ இதற்காகவே உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்பார்.

ஓனர் எவ்வளவு திட்டினாலும் ‘ஏன்னா..? எப்ப பாத்தாலும் என்னையே திட்டுற? வேற யாரும் கண்ணுக்கு தெரியலயா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்பார். இவர் கணவரை பற்றி பெருமையாக பேசுவார். ‘என் வீட்டுகார் சண்டயில டி.வி.ய ஒடச்சிட்டு, அவரே நைட்டெல்லாம் உட்கார்ந்து சரி பண்ணாரு’ என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.

தனராஜ் அண்ணா

இவர் என்னதான் வேலை செய்கிறார் என்றே தெரியாது. ஒருநாள் ரூம்பாய் என்பார். ஒருநாள் சப்ளையர் வேலை செய்வார். ஒருநாள் பார்சல் வேலை செய்வார். ஆல் ரவுண்டர் என்றே கூறலாம். இவருக்கு சொந்தத்தில் திருமணம் நடந்ததால், மகளுக்கு சிறிது மனம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை ஒரு குறையாகவே சொல்ல மாட்டார். அவரது அம்மா என்றால் கொள்ளை பிரியம் அவருக்கு. அம்மாவுக்கு ஒரு டச் போன் வாங்கி கொடுத்து வேலையில் இருக்கும்போதெல்லாம், போன் செய்து, ‘அம்மா நான் நைட் வந்துடுவேன், சாப்பாடு செஞ்சு வை ‘ என்று கொஞ்சுவார்.

உடன் வேலை செய்பவர்கள் கலாய்த்தாலும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார். மற்றவர்களை பயங்கரமாக கலாய்ப்பார். ஒருநாள் லாட்ஜில் ரூம் கேட்டு இரண்டு டூரிஸ்ட்கள் வந்தார்கள். விலையை கேட்டதும் சென்று விட்டார்கள். அவர்கள் சிறிது தூரம் சென்றதும், ‘அப்படியே நேரே போனீங்கனா காமாட்சி அம்மன் கோவில் வரும், அங்க போயி ப்ரீயா படுத்துக்கோங்க’ என்றார். ஓட்டலே சிரிப்பில் வெடித்தது.

வனஜா அக்கா, கேஷியர். 

ஓனருக்கு அடுத்து இவர்தான் ஓட்டலில் டான். அவர்கள் வெளியே சென்றுவிட்டால் மளிகை, காய்கறி கடன் காரர்களை சமாளிக்கும் மிகப் பெரிய பொறுப்பு இவருக்குதான். இவருக்கு ஒரு மகள். எல்லா வேலை செய்பவர்களும் தனது குடும்ப கஷ்டங்களை, வேலையிடத்தில் நடக்கும் சண்டைகளை இவரிடம் தான் கொட்டுவார்கள்.

இவரை நல்ல நாட்டாமை என்றே கூறலாம். இவரின் தந்திரமான பேச்சினால்தான் ஓட்டலுக்கு தினசரி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ‘என்கிட்டருந்து கத்துக்கோடி’ என்று என்னிடம் அடிக்கடி கூறுவார். ஒருநாள் இந்த ஓட்டல் எதிர்லயே நான் ஒரு ஓட்டல் வெக்கிறேன் என்று ஓனரை அடிக்கடி நையாண்டியுடன் பயமுறுத்துவார்.

சாந்தி அக்கா பாஸ்கரன் அண்ணா
பாஸ்கர் அண்ணன், சப்ளையர்.

இவருக்கு எங்கள் வயதில் ஒரு மகன், காலேஜ் மூன்றாம் வருடம் படிக்கும் ஒரு மகள். மகன் ஒரு வேலையும் செய்யமாட்டான் என்று பெருமையாக கூறுவார். ‘நான் அவன ஒண்ணும் கேக்கமாட்டேன். ஏன்னா நான் எப்படி எங்கப்பன மதிக்காம இருந்தனோ அத மாரிதான் அவன் இருக்கான், எனக்கிது தேவதான்’ என்பார்.

இவர் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து , சைக்கிளில் சுற்றியுள்ள கிராமங்களுக்கெல்லாம் சென்று டீ வியாபாரம் செய்துவிட்டு மதியம் ஓட்டல் வேலைக்கு வருகிறார். கேட்கும்போதே தலை சுற்றியது எனக்கு. இவ்வளவு கடினமான வாழ்க்கையிலும், நிமிடத்து ஒரு ஜோக் சொல்லுவார். இவருடன் இருந்தால் சிரித்துக் கொண்டே இருக்கலாம்.

சாந்தி அக்கா

அமைதிக்கு பெயர்தான் சாந்தி என்பதற்கு எடுத்துக்காட்டு இவர். அமைதியாக வேலைகளை செய்வார். அவர் மகளும் நான் பயின்ற பள்ளியில் தான் படித்துக் கொண்டிருக்கிறாள். தினமும் அவரே வந்து பேசுவார். கோலம் அவ்வளவு அழகாக போடுவார். அவர் கோலம் போடும் அழகை பார்ப்பதற்காகவே அனைவரும் வந்து வாசலில் நின்றுவிடுவார்கள்.

அமிர்தம் ஆயா, கிளீனர்.
அமிர்தம் ஆயா.

டோராவுக்கு வயதானால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார். அவர் தேவையில்லாமல் பேசி ஒரு மாதத்தில் நான் பார்க்கவே இல்லை. ஓனரின் செல்ல ஆயா அவர். அவர் பெருக்கினால் அந்த இடத்தில் ஒரு தூசியைக்கூட கண்டுபிடிக்க முடியாது. வேலையில் எப்படி சுத்தமாக இருக்க வேண்டுமென்பதை தினமும் வாழ்ந்து காட்டினார் அவர்.

சக்திவேல் அண்ணா

பார்சல் கட்டுபவர். 5 நிமிடம் கூட ஓட்டல் சமையலறையில் நிற்க முடியாது. வேர்வை உடை முழுவதையும் நனைத்துவிடும். அந்த அனலில் வேலை பார்ப்பவர் இவர். இவர் 10, 20 இட்லியையும் அழகாக மடித்து, சட்னி வைத்து பார்சல் போட்டு தருவார். அது ஒரு கலை.

செந்தில் அண்ணா

இவர் செந்தில் அண்ணா, ஊர் ராமேஸ்வரம். இங்கேயே தங்கியிருக்கிறார். மகள்களுக்கு திருமணம் முடித்து விட்டாராம். குடும்ப சூழ்நிலையால் வந்திருப்பதாக கூறுவார். அவர் பேசும் தமிழ் கேட்பதற்கு நன்றாக இருக்கும். 1500 ரூபாய் ஜியோ போனில் காஞ்சிபுரத்தை வளைத்து வளைத்து போட்டோ எடுத்து வைத்திருப்பார். ஓட்டலுக்கு மாடு, இலை சாப்பிடவந்தால், அதையும் விட மாட்டார். நல்ல புகைப்படக்காரர்

ராஜி அக்கா

ஓட்டலின் சொர்ணா அக்கா. ராங்காக பேசினால் கஸ்டமர்களாக இருந்தாலும் விளாசுவார். பில்லிங்கும் போடுவார். என்னை மிரட்டி, சாப்பாடு அயிட்டங்களின் விலைகளை என் மண்டையில் ஏற்றியது இவரே. பிரச்னை என்றால் முன்னால் இறங்கி உதவி செய்வார். ஒருநாள் ஒரு க்ளீனர் அக்காவின் தாடையில் கணவர் அடித்து, பேச முடியாமல் இருந்தவரை மருத்துவமனைக்கு கூட்டி சென்றார். அப்போது, ‘ பயப்படாம வாடி, உனக்கு வாய்தான். எனக்கு மண்டையிலேயே கிழிச்சு தையல் போட்டு வெச்சிருக்கு’ என்றார்.

வாட்ச் மேன் தாத்தா

சிரிப்புடன் தினமும் வரவேற்பார். குடித்து விட்டு வேகமாக வண்டி ஓட்டியதில் கீழே விழுந்து கை உடைந்து மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால், 20 நாளில் திரும்பவும் வேலைக்கு வந்தார்.

ஒருநாள் வேலையில் இருக்கும்போது, பொறியியல் படிக்கும் என் பள்ளி தோழி வந்தாள், ‘நாங்க நாலு வருஷம் கழிச்சி செய்யப்போற வேலய நீ இப்போவே செய்யுற’ என்றாள். என் தோழியின் அப்பா ஒருநாள் வந்தார். என் அருகில் வந்து, ‘ உங்க ஓட்டலாமா?’ என்று இரகசியமாக, உண்மையை சொல்ல நச்சரித்தார். உண்மையை சொன்னவுடன் சப்பென்று சென்றுவிட்டார்.

வேலை செய்பவர்கள் மட்டுமல்ல, சில தினசரி வாடிக்கையாளர்களும் நன்றாக பேசுவார்கள்.

ஐஸ்கிரீம் தாத்தா

தினமும் வருவார். காபி மட்டுமே குடிப்பார். குடித்துவிட்டு ஐஸ்கிரீம் பெட்டி பக்கத்தில் உட்கார்ந்து விடுவார். குறைந்தது 50 ரூபாய்க்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டுதான் கிளம்புவார். சாப்பிடுவது மட்டுமல்லாமல் என்னை, அது என்ன ப்ளேவர் என்று கேட்பார். நானும், இது பேரு ப்ளாக் கரன்ட், திராட்சை போட்ருக்கும் உள்ள சாக்லேட் இருக்கும் என்றெல்லாம் சொல்வோன். சரி குடு, சாப்ட்டு பாக்லாம், என்பார். சாப்பிட்டுவிட்டு, சூப்பரா இருக்கு என்று சொல்லிப் போவார்.

சில தாதாக்களும் வருவார்கள். வரும்போதே போனில், ‘ டேய்ய்ய்.. அங்க நா வந்தனா ஒருத்தனும் இருக்கமாட்டீங்க’ என்று கத்திக்கொண்டு வருவார்கள். எங்கே என்று ஒருநாளும் சொன்னதில்லை. கடைசியில் அவர்கள் இங்கு வருவதெல்லாம் விலை கம்மியாக கிடைக்கும் காபிக்காகத்தான்.

இவர்களுக்கு நடுவே, சில தாதாக்களும் வருவார்கள். வரும்போதே போனில், ‘ டேய்ய்ய்.. அங்க நா வந்தனா ஒருத்தனும் இருக்கமாட்டீங்க’ என்று கத்திக் கொண்டு வருவார்கள். எங்கே என்று ஒருநாளும் சொன்னதில்லை. கடைசியில் அவர்கள் இங்கு வருவதெல்லாம் விலை கம்மியாக கிடைக்கும் காபிக்காகத்தான்.

போலீஸ் சிலர் வந்து கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ஓ.சி.யில் சாப்பிட்டு விட்டு செல்வார்கள். இதில் அந்த சாம்பிராணி யூஸ் பண்ணாதீங்க ஸ்மெல் நல்லால்ல என்று சஜ்ஜஸ்ஸன் வேறு கொடுப்பார்கள்.

ஒருமாதம் வேலை. காலேஜ் நெருங்கியதும் விடைபெற்றேன். வேலை செய்த சம்பளத்துக்காக இரண்டு நாள் அலையவிட்டார்கள். பிறகு 20 நாளுக்கான ரூ 4,000 சம்பளத்தை மட்டும் கொடுத்தார்கள். மீதி பத்து நாளுக்கான சம்பளம் அடுத்த மாதம்தானாம்.

  • கவிமதி

வரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு !

1

ன்று வரை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நமது தொலைக்காட்சி நெறியாளர்கள் எப்படி சொல்கிறார்கள்? “மே 22 ஏற்பட்ட கலவரத்தை அடுத்து…” இதுதான் அவர்கள் சூட்டியிருக்கும் காரணப் பெயர். பா.ஜ.க.வினரோ ரஜினியோ, மற்றவர்களோ கலவரம், சமூகவிரோதிகள், விஷமிகள், பயங்கரவாதிகள் என்று போராடும் மக்களை கொச்சைப் படுத்துவது, மிரட்டுவது, போலீசாரின் வன்முறையை நியாயப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவை அனைத்தும் இன்று நேற்று நடக்கும் ஒன்றல்ல.

ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள், ஊடகங்கள், பொதுப்புத்தி அனைத்திலும் இந்த மதிப்பீட்டிற்கு ஒரு  தொடர்ச்சி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் தொட்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியம், காங்கிரசுக் கட்சியினரால் தலைமை வகிக்கப்பட்ட இந்திய அரசியல் வெளியிலேயே இந்த அடிமைக் கருத்து மனோபாவம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டது.

உண்மையில் 1947 ஆகஸ்டு 15-ம் நாளில் நாம் பெற்றது அரசியல் சுதந்திரமல்ல! அது ஆங்கிலேயர்கள் தமது இந்திய வாரிசுகளிடம் அதிகாரத்தை கைமாற்றிக் கொடுத்த நிகழ்வு மட்டுமே! நமது கல்வி முறை போதிக்கின்றபடி காந்தியும், காங்கிரசும் நாட்டுக்காக போராடி சுதந்திரத்தைப் பெற்று தந்துவிடவில்லை. சொல்லப்போனால் ஆங்கிலேயர்கள் மனங்கோணாமல் அவர்களுக்குரிய அனைத்து நலன்களையும் பாதுகாப்பதாக உறுதி ஏற்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்ட ஒரு அடிமை நிகழ்வுதான் ஆகஸ்டு 15 அதிகார மாற்றம்.

இந்திய அரசியல் வானில் வசந்தத்தின் இடிமுழக்கமாக வந்த நக்சல்பாரி இயக்கதோடு உருவான, இந்திய பொதுவுடமைக் கட்சி (மா.லெ)யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகப் பணியாற்றிய காலஞ்சென்ற தோழர் சுனிதி  குமார் கோஷ் (Suniti Kumar Ghosh, 1918-2014) அவர்களின் ஆய்விலிருந்து இந்த நிகழ்வைப் பார்ப்போம். அவர் எழுதிய “நக்சல்பாரி முன்பும் பின்பும்” என்ற வரலாற்று நூலில் இதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

ஒரு காலனியாதிக்க நாட்டின் சுதந்திரம் என்பது காலனியவாதிகள் கட்டியமைத்த அரசியல், பொருளாதார அமைப்பை முற்றிலும் மாற்றியமைத்து அரசியல் அதிகாரத்தை கட்டியமைப்பது. இதுதான் விடுதலை அடையும் ஒரு நாட்டின் தேசியப் புரட்சி என்றழைக்கப்படுகிறது.

(கருப்பு வண்ணத்தில் இருக்கும் பத்திகள் சுனிதிகுமார் கோஷின் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டவை)

”1947-ம் ஆண்டில் நடந்த “காலனியமுறை ஒழிப்பு உண்மையானதா அல்லது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப் பட்ட சூழ்ச்சிகரமான ஏய்ப்பு நடவடிக்கையா என்பதும், அது தனது நேரடி ஆட்சியைத் தொடரவியலாமல் இருந்த காரணத்தால் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முனையை மழுங்கச் செய்வதற்காகப் போலியாக பின்வாங்கியதா…”

தோழர் சுனிதி குமார் கோஷ்

என்று கேட்கும் கோஷ்,

”ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்திய மக்கள் ஆகியோருக்கு இடையில் நிலவிய ஒப்பீட்டளவிலான பலத்தையும், இவ்விரு சக்திகளுக்கு இடையிலான போராட்டத்தின் வெற்றி, தோல்வியையும் சார்ந்திருந்தது”

என்கிறார். ஐரோப்பாவில் இருந்து உலகெங்கும் காலனிகளை உருவாக்கிய ஐரோப்பிய அரசுகள் அந்தந்த நாடுகளின் உள்ளூர் அதிகார வர்க்கத்தினரைக் கொண்டே ஆட்சி அமைப்பைக் கட்டி அமைத்தனர். உள்ளூர் மக்களின் எதிர்ப்பை தவிர்ப்தற்கு இந்த உள்ளூர் பிரமுகர்களின் ஆதரவு தேவையாக இருந்தது.

ரொனால்டு ராபின்சன் சரியாகவே கூறினார்: ”…. தொடக்கம் முதலே அந்த ஆட்சியானது தொடர்ச்சியாக எதிர்க்கப்பட்டது. அதுபோலவே எதிர்ப்பைத் தவிர்ப்பதற்கும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் தொடர்ச்சியாக உள்ளூர் ஒத்துழைப்புத் தேவையாக இருந்தது ஏகாதிபத்தியத்தின் பொருளாதார பலமும், இராணுவ மற்றும் ஆட்சி முறைக் கட்டமைப்பும் கைப்பற்றப்பட்ட நாடுகளில் உள்ள உள்ளூர் அதிகார வர்க்கத்தினரின் ஒத்துழைப்போடுதான் கட்டியமைக்கப்பட்டது.1

காலனிய நாடுகளில் மக்களில் யார் ஏகாதிபத்தியங்களை எதிர்க்கிறார்கள்? யார் ஆதரிக்கிறார்கள்? இது வர்க்க ரீதியாக பிரிந்திருக்கிறது. காங்கிரசு உள்ளிட்ட கட்சிகளை நாம் அப்படி ஆய்வு செய்து பார்த்தால் அவர்களின் உண்மை நிலை புரியும். தோழர் மாவோ அதை சரியாக குறிப்பிடுகிறார்.

”மேற்கத்திய முதலாளித்துவ வர்க்கம் கிழக்குலகில் இருவகைப்பட்ட மக்கள் பிரிவினரை உருவாக்கியது. ஒன்று, குறுகிய சிறுபான்மையினரான ஏகாதிபத்தியத்தின் அடிமைச் சேவகர்கள். மற்றொன்று ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பெரும்பான்மையினரை உள்ளடக்கிய உழைக்கும் வர்க்கம், உழவர்கள், நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவ வர்க்கம், தேசிய முதலாளிகள் மற்றும் இவ்வர்க்கங்களின் பின்னணி கொண்ட அறிவுஜீவிகள்.”

இந்நிலையில் இந்தியாவில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை ஆதரித்த சமூகப்பிரிவினர் யார்?

1947, ஆக-14 நள்ளிரவில் சுதந்திர அறிவிப்பு… கிடைத்தது சுதந்திரமா?

அந்தக் குறுகிய சிறுபான்மையானது மன்னர்கள், நிலப்பிரபுக்கள் உள்ளிட்ட நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினரையும், தேசிய முதலாளிகளுக்கு எதிர்மறையான பெரும் தரகு முதலாளித்துவ வர்க்கத்தினரையும், அன்னிய ஆட்சியாளர்களின் விழுமியங்களை முற்றிலுமாக உள்வாங்கியிருந்தவர்களும், அவர்களது ஆட்சியின் நற்பயன்கள் மீதும் முற்போக்குத் தன்மையின் மீதும் முழு நம்பிக்கை வைத்திருந்தவர்களும், ஒடுக்கப்பட்ட வேறு நாதியற்ற மக்களாக விளங்கிய இந்நாட்டின் உழைக்கும் மக்கள் மீது முழுமையான அவமதிப்பைக் கொண்டிருந்தவர்களுமான பெரும் அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட வசதி படைத்த சமூகப் பின்னணியைக் கொண்ட அறிவுஜீவிகளையும் கொண்டிருந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு ஆங்கில ஏகாதிபத்தியம் போரில் வெற்றி பெற்றாலும் பின்னடைவுக்குள்ளானது. பழையபடி தனது காலனிய நாடுகளை கட்டி ஆளமுடியவில்லை. காரணம் புதிதாக முன் அரங்கிற்கு வந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், சர்வதேச கம்யூனிச இயக்கம் – சோசலிச நாடுகள், காலனிய நாடுகளில் தீவிரமாக நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள், தனது சொந்த ஆயுதப்படைகளின் பிடிமானம் உடைபடுதல் ஆகியவை காரணமாக சிக்கலை சந்தித்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் முதன்மையான பிரச்சினையாக இந்திய மக்கள் இருந்தனர்.

அந்தச் சிக்கலை முடிந்த முட்டும் குறைப்பதற்கு அவர்களுக்கு உதவியது யார்?

போரின் முடிவில் ஆங்கிலேயர் ஆட்சி அல்லாத இரு சக்திகள் இந்தியாவில் வினையாற்றின. ஐரோப்பாவில் போர் முடிவுற்ற பிறகு வைசிராய் வேவெல் காங்கிரசு கட்சியின் செயற்குழு உறுப்பினர்களைச் சிறையிலிருந்து விடுவித்து ஜூன் – ஜூலை வாக்கில் சிம்லாவில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். வி.பி.மேனன்  எழுதியது போல காங்கிரசு கட்சி எவ்வித நிபந்தனை ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தது.2 ”ஜப்பானுக்கு எதிரான போரை வெற்றிகரமாக நிறைவேற்றவும், ஆதரிக்கவும் தாங்கள் முழுமனதுடன் ஒத்துழைப்பதாகக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், காங்கிரசு தலைவர்கள் வைசிராயின் ஆட்சி மன்ற குழுவில் (இந்திய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்டு ஆட்சிமன்றக் குழுவை மாற்றியமைப்பதற்கு வைசிராய் எண்ணியிருந்தார்), இடம் பெறுவதற்கு ஆவலாய் இருந்தனர். (காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் அகிம்சைக் கோட்பாடு குறிப்பிடத்தக்க வகையில் இலகுவாக இருந்தது.) பெருமகிழ்ச்சியடைந்த நேரு கூறியதாவது, “நாங்கள் சிம்லாவில் வெற்றி பெறவேண்டும் என்று விரும்புகிறோம் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” ஆனால் மறுசீரமைக்கப்பட்ட ஆட்சிமன்றக் குழுவிற்கு அனைத்து முசுலீம் உறுப்பினர்களையும் நியமிக்கும் உரிமையைத் தனக்கு வழங்கவேண்டும் என்று லீக் (முசுலீம் லீக்) கோரியதால் சிம்லா மாநாடு தோல்வியுற்றது.

காந்தியுடன் முகமது அலி ஜின்னா.

”நாட்டில் அமைதியான சூழலைப் பேணிக் காக்கக் காங்கிரசு தலைவர்கள் பணியாற்றவேண்டும்” என்று வேவெல் கேட்டுக் கொண்டார். நாட்டில் போருக்குப் பிந்தைய எழுச்சியைக் கண்டு வேவெல் அஞ்சினார். அது போலவே காந்தியும் அஞ்சினார்.3 காங்கிரசு கட்சியின் தலைவர் அப்துல் கலாம் ஆசாத் வைசிராய்க்கு எழுதியதாவது:

”காங்கிரசுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட தொடர்புகள் கடந்த கால கசப்பான சம்பவங்களை பெரிதும் மறக்கடித்து நம்பிக்கை, நல்லெண்ணம் கொண்ட ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது.4

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அரசியலமைப்பு பிரச்சனைகள், எதிர்கால நிர்வாகக் கட்டமைப்பு, இராணுவ மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் இன்ன பிற விஷயங்களான கல்வி, தொழில்துறைத் திட்டம் ஆகியவற்றைக் குறித்த விவாதங்களில் கலந்து கொள்ளுமாறு காங்கிரசு தலைவர்களை அழைக்கத் தவறிய தில்லை . ஜூன் 1944-ல் டாடா இயக்குனரும், பம்பாய் திட்டம் ஆசிரியரும், நேருவால் போற்றப்பட்டவரான சர் ஆர்தேசிர் தலால் என்பவரைத் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையில் பொறுப்பேற்கும் வகையில் வைசிராயின் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.

காங்கிரசு இப்படி காலனியவாதிகளோடு நெருக்கமாக இருந்த போதும் இந்திய மக்கள் ஆங்கிலேய ஆட்சி மீது கடுங்கோபத்தில் இருந்தனர். கலகம் செய்தனர்.

நிலவிய புரட்சிகர சூழ்நிலையைச் சரியாகவே புரிந்து கொண்ட நேரு ஆங்கிலேய ஏகாதிபத்திய வாதிகளோடு கைகோர்த்து அச்சூழ்நிலையை நீர்த்துப் போகச் செய்வதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இந்தியா ‘எரிமலையின் விளிம்பில் இருப்பதாகவும் ”நாம் எரிமலையின் உச்சியில் வீற்றிருப்பதாகவும்” நேரு கூறினார். மத்திய சட்ட அவையில் உள்ள ஐரோப்பியக் குழுவின் தலைவரான பி. ஜே. கிரிபித்ஸ் என்பவரும் கூட “பலரின் கருத்துப்படி இந்தியா புரட்சியின் விளிம்பில் இருக்கிறது” என்று கூறினார்.5

ஜூன் 2, 1947 அன்று மவுண்ட் பேட்டன் உடன் விவாதிக்கும் நேரு உள்ளிட்ட இந்திய தலைவர்கள்.

இவர்கள் அஞ்சியது போல இந்தியா வெடித்தெழும் நிலையில் எரிமலையின் விளிம்பில் நின்றது. இந்த பெருங்கோபத்திற்கு காரணம் ஆங்கிலேயர்களின் ஆட்சி மற்றும் சுரண்டல் ஒருபுறம் என்றால், மறுபுறம் போருக்காக இங்கிலாந்து இந்திய மக்களை கசக்கி பிழிந்ததால ஏற்பட்ட கடுங்கோபம். இது முதன்முதலில் கொல்கத்தாவில் வெடிக்கிறது. நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய ஐ.என்.ஏ அதிகாரிகளை விடுவிக்க கோரி கொல்கத்தா மக்கள் கலகத்தை துவங்கினர்.

வழக்கு விசாரணையை சந்தித்துக் கொண்டிருந்த இந்தியத் தேசிய இராணுவத்தினர் (ஐ.என்.ஏ) அதிகாரிகளை விடுவிக்க வலியுறுத்தி நடைபெற்ற மாணவர் பேரணி மீதான போலீசு துப்பாக்கிச்சூடு தான் அதற்கு உடனடிக் காரணமாக இருந்தது. ஒரு மாணவரும், ஒரு இளைஞரும் துப்பாக்கி சூட்டிற்கு இரையாகினர். பலர் காயமுற்றனர். இந்நிகழ்வு கல்கத்தாவையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தீப்பிழம்பாக மாற்றியது. நகர வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. இரயில்கள் நிறுத்தப்பட்டன. தடுப்பரண்கள் அமைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வீதியோரப் போர்கள் நடந்தேறின. அனைத்துச் சமூக பாகுபாடுகளும் மறைந்து போயின.

… ஏறத்தாழ 150 போலீசு மற்றம் இராணுவ வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. அதிகாரபூர்வக் கணக்கீட்டின்படி ஒரு அமெரிக்கர் உள்ளிட்ட 33 பேர்கள் கொல்லப்பட்டனர். 200 பொது மக்கள், பல போலீசுக் காரர்கள், 70 ஆங்கிலேயப் படை வீரர்கள் மற்றும் 37 அமெரிக்கப் படை வீரர்கள் காயமுற்றனர்.6 ஒட்டு மொத்த வங்காளத்திலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளின் அதிர்வலைகள் பரவின.

அப்போது வங்க மக்களின் உணர்ச்சிக்கு சான்று தெரியவேண்டுமா? அல்லது போலீசு தடியடிக்கு பின்வாங்காத தூத்துக்குடி மக்களின் உணர்ச்சியை வங்கத்தில் காண வேண்டுமா?

மக்களின் உணர்வுகளைக் குறித்து விவரித்த வங்காள ஆளுநர் கேஸி எழுதியதாவது: ”வடக்கு மற்றும் தெற்குக் கல்கத்தா ஆகிய இவ்விரு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் சிறப்புக் கூறு யாதெனில் மக்கள் தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போது, கலையாது நின்றனர் அல்லது சிறிது தூரம் பின்வாங்கி மீண்டும் தாக்குவதற்கு முன்னேறினர்…

நவம்பர் 24 – அன்று ஆங்கிலேய அரசு படைகள் தலைவர் (Commander -in-Chief) ஆச்சின்லெக் இந்தியாவிற்குள் நிலவிய உள்நாட்டுச் சூழலைக் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வைசிராய் அவ்வறிக்கையைப் பொதுவாக ஒப்புக் கொள்வதாக தெரிவித்தார்.

இந்த எழுச்சியின் அனல் ஆங்கிலேயர்களை மட்டுமல்ல, காங்கிரசு, கம்யூனிஸ்டு கட்சியையும் தொட்டது. இரு கட்சி பிரமுகர்களும் போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களிடம்  பிரச்சாரம் மேற்கொண்டனர்.  ஆனால் ஆங்கிலேயர்களின் மதிப்பீடோ நிலைமையை சமாளிக்க முடியாது என்கிறது.

ஆச்சின் லெக் எழுதியதாவது: ‘இந்தியப் படைகள் முற்றிலுமாக நம்பவியலாதவையாக மாறும்பட்சத்தில் இப்போது கைவசம் உள்ள ஆங்கிலேய ஆயுதப் படைகளால் உள்நாட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவோ அல்லது அத்தியாவசியத் தகவல் தொடர்பு சாதனங்களைப் பாதுகாக்கவோ இயலாது. இப்படைகளைச் சிறிது சிறிதாகப் பெருக்கிப் பயன்படுத்துவதும் பலனளிக்காது. உள்நாட்டுச் சூழலை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் அத்தியாவசியத் தகவல் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்துவதற்கும் இந்தியாவை மீண்டும் வென்றெடுப்பதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரத்தை மேற்கொள்வது தவிர வேறு வழியில்லை.7

இந்திய தேசிய இராணுவ அணிவகுப்பை பார்வையிடும் நேதாஜி.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தினரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு போட்டு தண்டிக்கும் செயல் இந்தியா முழுவதும் பெருங்கோபத்தைக் கிளப்பியது. காந்தி – காங்கிரசு உருவாக்கியிருந்த அஹிம்சைப் போராட்டம் மக்களிடையே ஆதரவு பெறவில்லை என்பதே ஐ.என்.ஏ வீரர்களை விடுவிக்குமாறு மக்கள் நடத்திய போராட்டத்திற்கு காரணம்.

ஆர்.பி. தத் கூறியது போல, ஐ.என்.ஏ. குறித்த முன்னுதாரணமும், ‘தொடர்ச்சியாக நடைபெற்ற ஐ.என்.ஏ. தலைவர்கள் மீதான வழக்கு விசாரணைகளும் போர்க்குணம் மிக்க தேசபக்தியின் மீதும், பழைய அகிம்சாவாதப் போராட்டத்திற்குப் பதிலாக ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியின் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்த கருத்தியல் மீதும் நம்பிக்கைத் தீயை மூட்டின.8

படைகளின் முதன்மைத் தலைவர் ஆச்சின் லெக்கிற்கு நேரு பின்வருமாறு எழுதினார்: ”சில வாரங்களுக்குள்ளாகவே ஐ.என்.ஏ. குறித்த செய்திகள் இந்தியாவிலுள்ள கிராமங்களின் மூலை முடுக்குகள் வரை பரவிவிட்டது. எங்கெங்கும் அவர்கள் மீதான நன்மதிப்புப் பெருகியதோடு அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமும் தோன்றி விட்டது. மக்களிடையே பரவலாக எழுந்துள்ள ஆர்வக்கிளர்ச்சி வியப்பளிக்கக்கூடியதுதான். இருப்பினும் அதைவிட வியப்பளிக்கக் கூடியது யாதெனில் பெரும் எண்ணிக்கையிலான நிரந்தர இந்திய இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் மத்தியில் இதே போன்ற ஆர்வக்கிளர்ச்சி தோன்றியுள்ளது என்பதே. ஏதோ ஒரு உணர்வு அவர்களது ஆழ்மனதைத் தொட்டுவிட்டது. 9

ஐ.என்.ஏ மீதான இந்திய மக்களின் ஆதரவோடு பிரச்சினை முடிந்துவிடவில்லை. அன்றைக்கிருந்த பிரிட்டீஷ் இந்தியப் படை வீரர்களிடம் அது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. வர இருக்கின்ற நாட்களில் பல நகரங்களில் படை வீரர்கள் செய்யப் போகும் கலகத்திற்கு இது ஒரு துவக்கமாக இருந்தது.

ஐ.என்.ஏ. க்கு ஆதரவு (பிரிட்டிஷ் இந்திய ஆயுதப் படைகள் மத்தியில்) பெருகி வருவதாக நவம்பர் 26, 1946 அன்று ஆச்சின் அத்தின்லென் வேவெலுக்கு எழுதினார்.

இந்நிலையில் கொல்கத்தாவில் எழுந்த போராட்டத் தீயை தணிப்பதற்கு காங்கிரசும், காந்தியும் பெரிதும் முயன்றனர்.

காங்கிரசு செயற்குழு கல்கத்தாவில் கூடி ”சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வழிகாட்டும் நெறியாக” அகிம்சைவாதத்தின் மீது தனது நம்பிக்கையை வலியுறுத்தி, ”பொதுச் சொத்தை தீயிட்டுக் கொளுத்துவது என்பது போன்ற செயல்கள் அகிம்சை வாதத்திற்குள் அடங்காது எனத் தெளிவு படுத்தியது.

“அமைதியான சூழலைக் காப்பதன் அவசியத்தை” நேரு வலியுறுத்திக்கொண்டே இருந்தார்…. “நாட்டை ஆளுகின்ற பணியினை உடனடி யாகத் தங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்றும் “தலைமையேற்கத் தகுதிவாய்ந்த அரசியல் தலைவர்களிடம் அப்பணியினை விட்டுவிட வேண்டும்” என்றும் அவர் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.10 ‘தன்னால் இயன்றவரை மோதலைத் தவிர்ப்பதற்கும், தீவிர எண்ணம் கொண்டோரைக் கட்டுப்படுத்துவதற்கும்” முயன்று கொண்டிருப்பதாக நேரு பிரிட்டிஷ் அமைச்சரவையின் முக்கிய உறுப்பினரான சர் ஸ்டாபோர்ட் கிரிப்ஸ்சிடம் (அவர் மூலமாக பிரிட்டிஷ் அமைச்சரவை முழுமைக்கும்) டிசம்பர் 3, 1945 அன்று உறுதி அளித்தார்.11

”பயனற்ற தகராறுகளில் தங்களுடைய ஆற்றலை விரயம் செய்ய வேண்டாம்” என்று சர்தார் பட்டேல் இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார்.

நேதாஜி , காந்தியுடன் படேல்.

ஆனால் மக்கள் காங்கிரசு தலைவர்களின் வேண்டுகோள்களையும், காட்டிக் கொடுப்புகளையும் புறக்கணித்தனர்.

சட்டம் ஒழுங்கையும், அகிம்சை வழியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற காங்கிரசு தலைவர்களின் போதனைகளை புறக்கணித்த கொல்கத்தா…. பிப்ரவரி 11-18 1946 ஆகிய நாட்களில் கிளர்ந்தெழுந்தது. ஐ.என்.ஏ வின் அப்துல் ரஷீத்திற்கு விதிக்கப்பட்ட ஏழாண்டு கடுங்காவல் தண்டனைக்கு எதிராக மாணவர்களால் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் இக்கிளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. போராட்டத்தின் காரணமாக நகர வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போனது. இரண்டு நாட்களுக்கு கொல்கத்தாவை ஒட்டியிருந்த பகுதிகளில் உள்ள பஞ்சாலைகளும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன. இரயில்கள் ஓடவில்லை . ஆயுதந்தாங்கிய போலீசாருடனும் கவச வாகனங்களில் அணிவகுத்த இராணுவ படைகளுடனும் மக்கள் கடுமையான தெருமுனைப் போர்களில் ஈடுபட்டார்கள்… இந்துக்கள் மற்றும் முசுலீம்கள் இடையே நிலவிய உறுதியான ஒற்றுமை முக்கியக் கூறாக விளங்கியது…. அதிகாரபூர்வ புள்ளி விபரங்களின்படி 84 பேர் பேர் கொல்லப்பட்டனர்; 300 பேர் காயமுற்றனர். நவம்பர் மாதத்தில் ஏற்பட்டவாறே இப்போதும் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் தோன்றிய ஏகாதிபத்திய எதிர்ப்பு அலை வங்காளம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வங்கக் கடலோரம் துவங்கிய எழுச்சி விரைவிலேயே அரபுக் கடலோரம் மும்பையை தொட்டது. பின்னர் அதுதான் புகழ்பெற்ற கடற்படை வீரர்களின் எழுச்சியாக பரிணமித்தது. அதன் பிறகு நாடெங்கும் உள்ள படை வீரர்களின் அணிகள் கலகம் புரிய ஆரம்பித்தனர். தனது சொந்தப் படையே தனக்கு எதிராக திரும்புவதுதான் ஒரு ஆளும் வர்க்கத்திற்கு முற்றிலும் தோல்வியடையும் தருணம்!

பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிரான மும்பை எழுச்சியை வன்முறையாகச் சித்தரிக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு.

பிப்ரவரி 18, 1946 அன்று துவங்கிய மும்பை கிளர்ச்சிதான் அவற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அனைவரையும் ஈர்ப்பதாகவும் இருந்தது. ராயல் இந்தியன் கடற்படையின் (Royal Indian Navy) வீரர்கள் முதலில் மும்பையிலும் பின்னர் கராச்சி, கல்கத்தா (கொல்கத்தா), மதராஸ் (சென்னை) ஆகிய நகரங்களிலும் கலகம் புரியத் துவங்கினர். மோசமான உணவு, நிறவெறிக் கொள்கை, ஆங்கிலேய அதிகாரிகளால் சுமத்தப்பட்ட அவமானங்கள் போன்ற பல்வேறு குறைகளைக் கொண்டிருந்த கலகக்காரக் கடற்படையினர் சுபாஷ்போசின் வீரதீரச் செயல்களாலும், ஐ.என்.ஏ.வின் முன்னுதாரணத்தாலும் உந்தப்பட்டனர்.12

பிப்ரவரி 22, 1946 நாளுக்குள்ளாக கலகக்காரக் கடற்படையினர் ஆங்கிலேய கடற்படையினுடைய துணைத்தலைவரின் (Vice – Admiral) முன்னணி கப்பல் உள்ளிட்ட மும்பையில் இருந்த ஏறக்குறைய 22 கப்பல்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மொத்தமாக ராயல் இந்தியன் கடற்படையை சார்ந்த 78 கப்பல்கள், 20 கடற்கரையோர படை அமைப்புகள், 20,000 கடற்படை வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் உள்ள ராயல் இந்தியன் விமானப் படை முகாம்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் குதித்தனர். கட்டளை பிறப்பிக்கப்பட்ட பிறகும் கூட இந்திய இராணுவப் படைவீரர்கள் மும்பை மற்றும் கராச்சியிலுள்ள ராயல் இந்தியன் கடற்படை வீரர்களைச் சுட மறுத்தனர்.

இராணுவத்தை அனுப்பி கடற்படை வீரர்களின் கலகத்தை ஒடுக்கிவிடலாம் என்று மனப்பால் குடித்தது பிரிட்டீஷ் இந்திய அரசு. ஆனால் இராணுவம் சுடவில்லை என்பதோடு இராணுவத்தில் இருந்த வெள்ளையின வீரர்களுக்கும் கடற்படை வீரர்களுக்குமான மோதலாக அது மாறியது.

மும்பை வீதிகளில் பிரிட்டிஷ் படைகள். மக்கள் எழுச்சியை நசுக்க இராணுவத்தின் கனரக வாகனங்கள் வந்தன!

பிப்ரவரி 21 அன்று கடற்படை வீரர்களின் போராட்டமானது அவர்களுக்கும், இந்திய இராணுவப்படை வீரர்கள் சுட மறுத்ததால் வரவழைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயப் படைகளுக்கும் இடையிலான மோதலாக வெடித்தது.13

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த எழுச்சிக்கு மும்பை தொழிலாளிகள் கடற்படை வீரர்களுக்கு முக்கிய அரணாக திகழ்ந்தனர். முழு மும்பையுமே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றது.

தாங்கள் சார்ந்திருந்த சமூகங்களைப் பாராமல் மும்பையில் தொழிலாளர்களும், இளைஞர்களும் கடற்படையின் வீரதீரர்கள் பக்கம் நின்று, அவர்களுக்கு உணவு கொண்டு சென்று, தடுப்பரண்கள் நிறுவி, ஆயுதந்தாங்கிய போலீசாருடனும், கவச வாகனங்கள், கனரக கவச வாகனங்கள் ஆகியவற்றுடன் வந்திருந்த பல ஆங்கிலேய இராணுவப் படைகளுடனும் கடுமையாக மோதினர்.

ஏற்கனவே பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுடன் இந்தப் போராட்டத்தை எப்படி தணிப்பது என்று பேசிக் கொண்டிருந்த காங்கிரசும், முசுலீம் லீக்கும் மும்பை எழுச்சியை குலைப்பதற்கு புயலாய் வேலை செய்தன. ஆனால் மும்பை அதனை சட்டை செய்யவில்லை.

தற்போது தூத்துக்குடியை நினைவுபடுத்தும் அப்போதைய மும்பை வீதியில் மக்களைச் சுடும் பிரிட்டிஷ் படைவீரர்கள்.

பிப்ரவரி 22 அன்று மிகப் பெரிய காங்கிரசு மற்றும் முசுலீம் லீக் தலைவர்களின் எதிர்ப்புக்கு இடையில் மும்பை பொது வேலைநிறுத்தத்தை மேற்கொண்டது.

காங்கிரசு மற்றும் முசுலீம் லீக் தலைவர்களைப் புறக்கணித்த மும்பையின் ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கமும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியால் (சி.பி.ஐ) ஆதரிக்கப்பட்ட, கடற்படை மையப் போராட்டக் குழுவால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு, இணங்கப் போராட்டத்தில் குதித்தது. இரண்டு நாட்களாக நகரின் வீதிகளில் மோதல்கள் நிகழ்ந்தன. அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்களின்படி ஏறக்குறைய 1,500 பேர் மோதல்களில் பலத்த காயமுற்றனர் . அவர்களில் 200 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.

”ஆயிரக்கணக்கானோரைச் சுட்டுக் கொன்றபிறகுதான் ஆங்கிலேயக் கனரக கவச ஊர்திகள் தெருக்களைக் கைப்பற்ற முடிந்தது” என எழுதினார் கிளர்ச்சியின் தலைவர்களுள் ஒருவரான பி.சி.தத். ”இந்திய விடுதலை இயக்கத்தின் கொந்தளிப்பான வரலாற்றில் நிராயுதபாணிகளாகத் தலைமையின்றித் தவித்த மக்களுடனான மோதலில் ஆட்சியாளர்கள் கனரக கவச ஊர்திகளை பயன்படுத்தியது இதுவே முதல்முறையாக இருந்தது. பிப்ரவரி 21 கடற்படை வீரர்களின் நாளாக இருந்தது. பிப்ரவரி 22 மும்பைத் தொழிலாளர்களின் நாளாக இருந்தது.”14

மும்பை மட்டுமல்ல, இன்றைய பாகிஸ்தானில் இருந்த கராச்சியிலும் கடற்படை வீர்கள் மோதலைத் துவங்கினர். அவர்களை சுடுவதற்கு கூர்கா படை வீரர்கள் மறுத்தனர். இந்தியாவின் தேசிய இனங்கள் அனைத்தும் மத வேறுபாடுகள் இன்றி ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து ஒன்றிணைந்து போர் புரிந்த நாட்கள் அவை.

பிரிட்டிஷ் படைகளை பிடறிதெறிக்க தெருக்களில் ஓடவிட்ட மும்பை மக்கள்.

மும்பைக்கு அடுத்தபடியாகக் கராச்சிதான் கடற்படை வீரர்களுக்கும், ஆங்கிலேயப் படைவீரர்களுக்கு இடையில் நடைபெற்ற உண்மையான மோதல் களமாக விளங்கியது. துணிவாகப் போரிட்ட இந்துஸ்தான் என்ற பழைய போர்க்கப்பலில் இருந்த கடற் படையினரைச் சுட பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளுக்கு கீழ்ப்பணிய குர்கா படைவீரர்கள் மறுத்தனர். பின்னர் குர்கா படை வீரர்கள் மாற்றப்பட்டு ஆங்கிலேயப் படைவீரர்கள் கொண்டு வரப்பட்டனர்.

கடல், தரை இராணுவப் பிரிவுகளோடு விமானப் படையும் போராட்டத்தில் இணைகிறது.

……..பல்வேறு இடங்களில் கலகக்காரக் கடற்படை வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டனர். பம்பாயில் நடைபெற்ற ஆதரவு தெரிவிக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அது போலவே பூனே, கல்கத்தா, மதராசு மற்றும் அம்பாலாவில் நடைபெற்ற போராட்டங்களிலும் விமானப்படை வீரர்கள் பங்கேற்றனர். தத்தாவை மேற்கோள் காட்டுவோமானால், ”பம்பாய்க்குச் செல்ல உத்தரவிடப்பட்டிருந்த ராயல் இந்திய விமானப்படையின் ஒரு படையணி ஜோத்பூரில் முடங்கிவிட்டது. ஒவ்வொரு விமானமும் மர்மமான முறையில் இயந்திரக் கோளாரைச் சந்தித்தது.”15

இதோ உ.பி நகரங்களில் நிலை கொண்டிருந்த விமானப்படை வீரர்கள் ஐ.என்.ஏ பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அனுப்புகின்றனர்.

உத்தரபிரதேசத்தின் அப்போதைய ஆளுநராக இருந்த ஹாலட் அலகாபாத், பாம்ராலி, கான்பூர் ஆகிய இடங்களில் நிறுத்தப் பட்டிருந்த விமானப்படை வீரர்கள் ஐ.என்.ஏ. பாதுகாப்பு நிதிக்குத் தங்களுடைய பங்களிப்புகளை அனுப்பியிருந்தனர் என்று நவம்பர் 19, 1945 என்று வேவெலுக்குத் தெரிவித்தார். 16 ஐ.என்.ஏ. வீரர்கள் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவதைக் கல்கத்தாவில் இருந்த இந்திய விமானப்படை முகாம் எதிர்த்தது. ஐ.என்.ஏ. பாதுகாப்பு நிதிக்கு அனுப்பப்பட்ட குறிப்பில் அது வீரம் செறிந்த தேசபக்தி மிகுந்த மைந்தர்களின் பாதுகாப்பிற்காக ” எனக் குறிப்பிட்டிருந்தது.17

அடுத்ததாக போலீசாரும் களத்தில் குதிக்கின்றனர்.

மும்பை எழுச்சியில் களப்பலியான மக்கள்.

சில இடங்களில் காவல் துறையினரும் கலகம் விளைவித்தனர். மார்ச் 1946-ல் காவல் துறையினர் அலகாபாத் மற்றும் டில்லியில் பட்டினிப் போர் நடத்தினர். ஏப்ரல் மாதத்தில் 10,000 காவல்துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் மாதத்தில், பாட்னா மற்றும் பெகுசாரையில் இராணுவக் காவல்துறையினர் வேலை நிறுத்தம் செய்தனர்…….

….வீரஞ்செறிந்த கடற்படை வீரர்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியவில்லை . குண்டுவீசும் விமானங்களை அனுப்பிக் கடற்படையை அழிப்போம் என்ற அட்மிரல் கோட்ப்ரீயின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை. அவர்கள் தங்களை வழிநடத்த வருமாறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துத் தங்களால் இந்திய தேசிய கடற்படை என்று மறு பெயர் இடப்பட்டிருந்த கடற்படையை அவர்களிடம் ஒப்படைப்பதாக உறுதியளித்தனர். ஆனால் சி.பி.ஐ. உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்சியும் கலகக்காரக் கடற்படை வீரர்களுடன் தொடர்பு வைத்திருந்தும் அவர்களுக்கு செவி மடுக்கவில்லை .

இதுதான் அன்றைய அவலநிலை. காங்கிரசு, முசுலீம் லீக் போன்ற கட்சிகள் ஆங்கிலேயரின் தாளத்திற்கு வாத்தியம் இசைத்த போதும், உழைக்கும் மக்களிடம் வேர் விட்டிருந்த கம்யூனிஸ்டுக் கட்சியும் இந்த போராட்டத்திற்கு தலைமையேற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் தனது இன்னுயிரை பணயம் வைத்து போராடிய வீரர்கள் என்ன செய்வார்கள்? நாடெங்கும் எழுச்சி ஏற்பட்டிருந்தாலும் ஒரு புரட்சிகரக் கட்சி வழிநடத்துவதற்கு இல்லை எனும் போது அவர்கள் என்ன செய்ய முடியும்?

மும்பையில் இந்திய கடற்படை வீரர்கள், பிரிட்டிஷ் படைகளை 6 மணிநேரம் எதிர்த்து போரிட்டதை பதிவு செய்துள்ள, ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்டு பத்திரிக்கை.

தத் எழுதியதாவது “அறுதிப் பெரும்பான்மையினர் மரணம் வரை போரிடவே விரும்பினரே தவிர சரணயடைவதற்காக அல்ல.”18 இறுதியாகக் கடற்படை மைய போராட்டக் குழுவானது காங்கிரசு மற்றும் லீக்கிடம் சரணடைகிறோமே தவிர ஆங்கிலேய ஆட்சியிடம் அல்லவென கூறிச் சரணடைய முடிவெடுத்தது. மக்களுக்கு விடுத்த கடைசி அறிக்கையில் அவர்கள் கூறியதாவது: ”முதன்முறையாக படைவீரர்களின் குருதியும் மக்களின் குருதியும் ஒரே நோக்கத்திற்காக இரண்டறக் கலந்து ஆறாக ஓடியது. படைகளில் அங்கம் வசிக்கும் நாங்கள் இதை மறக்கவே இயலாது. எங்களுடைய சகோதரர்களும், சகோதரிகளுமாகிய நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். நமது மாபெரும் மக்கள் வாழ்க. ஜெய்ஹிந்த்.”19

சரணடைந்த வீரர்களை பிரிட்டிஷ் இந்திய அரசு என்ன செய்தது?

சரணடைந்ததற்கு பின்பு மனிதவேட்டை தொடங்கிற்று. 2000க்கும் மேற்பட்ட கலகக்காரர்கள் தளைப்படுத்தப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஏறக்குறைய 500 பேருக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டு சாதாரணக் குற்றவாளிகளாக நடத்தப்பட்டனர். “எவ்விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது” என உறுதியளித்திருந்த மூத்த காங்கிரசு தலைவர்கள் அவ்வாக்குறுதியை காப்பாற்ற ஒன்றுமே செய்யவில்லை.20

கடற்படைக் கலகத்தின் போது துரோகவேலை பார்த்த காங்கிரசு தலைவர்களின் பங்கை சுனிதி குமார் கோஷ் ஆணவப்படுத்துகிறார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கடற்படைக் கலகத்தின் போது காங்கிரசு தலைவர்கள் ஆற்றிய பங்கு என்ன ? சர்தார் பட்டேல், அபுல் கலாம் ஆசாத், எஸ். கே. பாட்டீல் (பம்பாய் மாகாணக் காங்கிரசு  கமிட்டிச் செயலாளராகவும் பின்னர் மைய அரசின் அமைச்சராகவும் இருந்தவர்) போன்ற காங்கிரசு தலைவர்களும், முஸ்லீம் லீக்கைச் சார்ந்த ஜின்னா மற்றும் சுந்தரிகரும் கடற்படை மையப் போராட்டக் குழு விடுத்திருந்த பிப்ரவரி 22 வேலைநிறுத்தத்தை வெளிப்படையாக எதிர்த்துக் கடற்படை வீரர்களை ஆங்கிலேயரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தினர்.

பம்பாய் ஆளுநருடன் பாட்டீல் இரகசிய ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தார். காங்கிரசும், லீக்கும் மக்களை எதிர்த்துப் போரிடும் பொருட்டு காவல்துறைக்கும், ஆங்கிலேய இராணுவப் படைகளுக்கும் உதவுவதற்காக ஆங்கிலேய அரசுக்கு “தன்னார்வத் தொண்டர்களை” அனுப்பின.21

பிப்ரவரி 22 அன்று வேவெலுக்கு எழுதிய கடிதத்தில் கோல்வில்லே கூறும்போது, தான் “பல தன்னார்வத் தொண்டர்களைக் கண்டதாகவும் அவர்களுடைய பணி குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டவாறு இருந்தது எனினும்… பயனுள்ளதாக இருந்தது” என்று எழுதினார்.”

மும்பை கடற்படை வீரர்களின் வீரஞ்செறிந்த எழுச்சியை ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, காங்கிரசும் காந்தியும் இதர தலைவர்களும்தான் சேர்ந்து கருவறுத்தார்கள்.

காங்கிரசு மற்றும் லீக் தலைவர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையில் பம்பாய் பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியது. தொழிலாளர்களும், மாணவர்களும் காங்கிரசு மற்றும் லீக் தன்னார்வத் தொண்டர்களின் துணைகொண்டு ஒடுக்க முனைந்த ஆங்கிலேய இராணுவப் படைகளுடனும், ஆயுதந்தாங்கிய காவல் துறையினருடனும் தெருமுனைப் போர்களில் இறங்கினர்.

பம்பாய் அரசாங்கத்தின் அனுமதி பெற்று பிப்ரவரி 26 அன்று பம்பாயில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நேருவும், பட்டேலும் ‘பம்பாயில் பரவலாக நடைபெற்ற மக்கள் போரை’ அதாவது ‘ஏகாதிபத்திய எதிர்ப்புக் கலகப் பதாகையை உயர்த்திப் பிடிக்கத் துணிந்த கடற்படை வீரர்கள், தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தை’ வன்மையாகக் கண்டித்தனர். அடுத்த நாள் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நேரு ”இது போன்ற வேண்டுகோளை (வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தருமாறு பம்பாய் நகருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு) விடுப்பதற்கு ராயல் இந்தியன் கடற்படையின் மையப் போராட்டக்குழுவுக்கு எவ்வித உரிமையும் இல்லை. நான் இது போன்ற செயல்களை அனுமதிக்க மாட்டேன்.22 நேருக்களுக்கு மட்டுமே வேலை நிறுத்தங்களுக்கு அழைப்புகள் விடுக்கும் உரிமை இருந்தது போலும்!

அகிம்சையின் தூதுவர் காந்தி கண்மூடித்தனமான வன்முறைக் கோரதாண்டவத்தைக் கட்டவிழ்த்துவிட்டதற்காகக் கலகக்காரர்களைக் கண்டித்தார். மக்களை உண்மையில் பலி வாங்கிய ஆங்கிலேய ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த உண்மையான வன்முறைக் கோரதாண்டவத்தை அவர் கண்டிக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, “வன்முறை நடவடிக்கைக்காக இந்துக்களும் முசுலீம்களும் பிறரும் ஒன்று சேர்வது பாவகரமான செயல்..” இந்தியாவிற்கு  விடுதலை வழங்குவோம் என்ற ஆங்கிலேயரின் கூற்றுக்களை நம்ப மறுத்தவர்களையும் அவர் தொடர்ந்து கண்டித்தார். ஒன்றுபட்ட மக்களின் வன்முறைப் போராட்டம் பாவகரமானது எனினும், அகிம்சையின் இறைத்தூதர் இந்தியாவின் பிரச்சனைகளுக்கு தீர்வாகச் சில இலட்சம் மக்கள் கொல்லப்படக்கூடிய நிகழ்வுகளான இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையிலான வகுப்புக் கலவரங்களையும் ”சகோதர யுத்தத்தையும்” எதிர்நோக்கி இருந்தார்.

மும்பை கடற்படை வீரர்களின் வீரஞ்செறிந்த எழுச்சியை ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, காங்கிரசும் காந்தியும் இதர தலைவர்களும்தான் சேர்ந்து கருவறுத்தார்கள். முசுலீம் லீக் அதற்கு ஒத்தூதியது. கம்யூனிஸ்ட் கட்சியோ வீரர்களைக் கைவிட்டது. இந்தியா முழுவதும் இப்படி படையணிகளில் ஏற்பட்ட கலகம்தான் ஆங்கிலேயரை ஆட்சி மாற்றம் குறித்து உடன் முடிவெடுக்குமாறு நிர்பந்தித்தது. சுடுவதற்கு படை இல்லாதபோது ஒரு ஏகாதிபத்தியம் எப்படி ஆள முடியும்? ஆனாலும் காங்கிரசு என்ற துரோகப் படை இருந்த படியால் ஆங்கிலேயர்கள் தனது நலன்களை பாதுகாத்துக் கொண்டே ஆட்சியை தனது காங்கிரசு அடிமைகளுக்கு கைமாற்றிக் கொடுத்தனர்.

சுனிதி குமார் கோஷின் ”நக்சல்பாரி முன்பும் பின்பும்” நூலில் அவரால் எடுத்தாளப்பட்ட ஆதார நூல்களின் பட்டியல்:

  • 1 – Ronald Robinson, ‘Non-European Foundations of European Imperialism’, in R Owen and B Sutcliffe (Eds), Studies in the Theory of imperialism, p. 120
  • 2 – Transfer of Power , XII, pp. 790-1; Selected Works of Jawaharlal Nehru, XIV, p.47.
  • 3 – Transfer of Power, IV, pp.333-8; 340-4,365-9; V, pp. 1-2,127,424,431; Collected Works of Mahatma Gandhi (CWMG), LXXX, pp.444- 5; HM Seerbhai, Partition of India, p.32 and fn 15.
  • 4 – Transfer of Power, VI, p.455; S Gopal (Ed.), Selected Works of Jawaharlal Nehru, XIV, p.497 – emphasis added.
  • 5 – Cited in RP Dutt, Freedom for India, front cover page.
  • 6 – Transfer of Power, VI, p.713.
  • 7 – Ibid, pp.543, 582.
  • 8 – RP Dutt, Freedom for India, London, 1946.
  • 9 – Selected Works of Jawaharlal Nehru (SWJN), XV, p.92-emphasis added.
  • 10 – See SWJN, XIV, pp. 195, 207, 229, 231, 241, 252, 254, 491, 493, passim. Emphasis added.
  • 11 – Cited in RJ Moore, Escape from Empire, p. 76.
  • 12 – BC Dutt, Mutiny of the Innocents, p.61; Hindusthan Standard (a daily now extinct), 21.1.1947
  • 13 – See SWJN, XV, p. 1, note 2.
  • 14 – BC Dutt, op cit, pp. 174,175.
  • 15 – BC Dutt, op cit, pp. 174,175
  • 16 – Transfer of Power VI, pp. 507-8.
  • 17 – SWJN,XIV,p.543,fn.4.
  • 18 – Dutt, op cit, p.181
  • 19 – Ibid, p. 185.
  • 20 – Ibid, pp.185-6
  • 21 – See Bombay governor John Colville’s report to Viceroy Wavell, February 27,1946, Transfer of Power, VI, pp.1079-84; See especially p.1082
  • 22 – SWJN, XV, pp. 4,13; Transfer of Power, VI, p. 1083-emphasis added.

நூல்: நக்சல்பாரி முன்பும் பின்பும்
ஆசிரியர்: சுனிதிகுமார் கோஷ்
தமிழாக்கம்: கோவேந்தன்

பக்கங்கள்: 560
விலை: 350

வெளியீடு: விடியல் பதிப்பகம்
23/5, ஏ.கே.ஜி. நகர், 3வது தெரு,
உப்பிலிபாளையம் அஞ்சல்,
கோயம்புத்தூர் – 641015
தொலைபேசி: 0422 – 2576772, 6789 457941

NSA-தகர்ப்பு : மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை – தோழர் இராஜு உரை !

NSA-வில் கைது  செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை ! கொலைகார போலீசை கைது செய் ! மக்கள் அதிகாரம் இராஜு உரை !

வன் குற்றவாளியோ அவனே அந்த வழக்கை விசாரித்தால் எப்படி இருக்கும்? அத்தகையதொரு சூழலின் நேரடி சாட்சியம்தான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகளும், கைதுகளும். படுகொலை செய்த போலீசு, மக்களையும் மக்களுக்கு ஆதரவாக நின்ற புரட்சிகர, ஜனநாயக அமைப்பினரையும் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கைது செய்து சிறையிலடைத்தது.

குறிப்பாக மக்கள் அதிகாரம் தோழர்களை வீடு வீடாகச் சென்று கைது செய்து அச்சுறுத்தியது. மக்கள் அதிகாரம் அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்றும் அது பயங்கரவாத அமைப்பு என்று பரப்புரை செய்தது. தூத்துக்குடி போராட்ட பேரணியில் கலந்து கொண்ட 6 மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சியது.

இத்தனை ஒடுக்குமுறைகளையும் சட்டரீதியாகவும், மக்கள் மத்தியில் பிரச்சாரமாகக் கொண்டு போய் எதிர்கொண்டது மக்கள் அதிகாரம் அமைப்பு. குற்றம் செய்த போலீசு அதிகாரவர்க்கத்தின் பொய்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்று அறைகூவியது. இது தொடர்பாக போலீசு போட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தையும், பிற பொய்வழக்குகளையும் எதிர்த்தும், போலீசின் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்வைத்து வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு கடந்த ஆகஸ்ட் 14, 2018 அன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள் சிடிசெல்வம், பஷீர் அகமது ஆகியோர் வழங்கினர். இத்தீர்ப்பில் மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகள் செல்லாது என்றும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கில், போலீசுத் துறையின் கீழ் செயல்படும் சிபிசிஐடி போலீசே குற்றத்தில் சம்பந்தப்பட்ட போலீசை விசாரிப்பதை ஏற்கமுடியாது என்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணையை சிபிஐ எடுத்த நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்றம்.

இந்த தீர்ப்பு வெகு சாதாரணமாகக் கிடைத்த தீர்ப்பல்ல. தூத்துக்குடி படுகொலையில் போலீசே குற்றவாளி என்பதை நிரூபிக்கவும், சட்டவிரோதமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்கவும், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது எவ்விதமான ஆதாரமும் இல்லாமல் போடப்பட்ட பொய் வழக்குகளைத் தகர்க்கவும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் பெரும்பங்கு செலுத்தியுள்ளனர்.

இந்த வழக்குகள் கடந்து வந்த பாதையையும், போலீசின் பொய்கள் முறியடிக்கப்பட்ட பின்னணியையும் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இராஜு.

பாருங்கள் ! பகிருங்கள் !

  • வினவு களச் செய்தியாளர்

நேபாளத்தில் திருடப்படும் புத்தர் சிலைகள் – படக்கட்டுரை

நேபாளம், முஸ்டாங்கைச் சேர்ந்த வறண்ட மற்றும் தனித்த மலைத்தொடர்கள் வெளி உலகின் பார்வையிலிருந்து தொலைதூரத்தில் உள்ளன.  இமயமலையின் மிக உயரமான இப்பகுதிக்கு செல்ல கடினமான வண்டிகள் மட்டுமே செல்லக்கூடிய கரடுமுரடான பாதை மட்டுமே உள்ளது.  ஆனால் யாரையும் எளிதில் வரவேற்காத கடுமையான இப்பகுதி அரிய கலைப்பொருட்களை கொள்ளையர்கள் திருடுவதிலிருந்து தடுக்கப் படுவதில்லை.

உலகளாவிய கலைப்பொருட்கள் சந்தையில் இமயமலையில் உள்ள தெய்வங்களின் சிலைகள் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்டவை. ஆனால் நேபாள மக்களைப் பொறுத்த வரையில் உயிருள்ளதாக கருதப்படும் அந்த தெய்வங்கள் அவர்களது சமூகத்திடமிருந்து களவாடப்படுகின்றன.

நேபாளத்தில், 1980–ம் ஆண்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்கள் கொள்ளையர்களால் களவாடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கணக்கிடுகின்றனர். அவற்றில் சில கலைப்பொருட்கள் சட்டரீதியாக விற்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானவை கொள்ளையடிக்கப்பட்டு ஆண்டுக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிழற்சந்தையில் விற்கப்படுகின்றன.

நேபாளிலுள்ள லோ மந்தாங்கில்(Lo Manthang) உள்ள பண்டைய மடாலயத்தில் புத்த பிக்குகள் வழிபாட்டு சடங்கை நடத்துகின்றனர். 14 -ஆம் நூற்றாண்டு முதல் இந்த இமயமலைப்பகுதியில் திபெத்திய புத்த மதச்சடங்குகள் மாறாமல் அப்படியே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. எனினும், சமீபத்திய சிலைத் திருட்டுகள் அவர்களது பண்டைய வாழ்க்கை முறை மற்றும் சமயச் சடங்குகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

முஸ்டாங்கில் உள்ள நாமைகல்(Namygal) மடாலயத்தைச் சேர்ந்த செப்பு தாது கோபுரம் (copper stupa) ஒன்றில் மறைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியாக வடிக்கப்பட்ட கடவுளர் சிலைகளை காட்டுகிறார் துறவி ஒருவர். இவ்வகையிலான அரிய சிலைகள் திருடர்களால் தீவிரமாகத் தேடப்பட்டு வருவதால் அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான கட்டாயச்சூழல் மடாலயத்திற்கு ஏற்பட்டுள்ளது.

முஸ்டாங்கில் குன்றொன்றின் மீது கட்டப்பட்ட ஒரு மடாலயக்கூடத்தில் கைவிடப்பட்ட பண்டைய கவசமொன்றை டாஷி பிஸ்டா (Tashi Bista) ஆய்வு செய்கிறார். அரிய பழங்கால கலைப்பொருட்கள் அப்பகுதியிலிருந்து திருடப்படுவதைத் தடுக்க முஸ்டாங் உள்ளூர்வாசியான அவர் பல்லாண்டுகளாக போராடி வருகிறார். 14 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கேடயங்கள் மற்றும் உடற்கவசம் அருகே அந்த கவசம் இங்கே படத்தில் காணப்படுகிறது.

முஸ்டாங்கிலிள்ள பழங்கால மடாலயமொன்றில் மறைவான அறையில் வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆளுயர தர்மபாலர்களை (Dharmapalas) சூரிய ஒளி வெளிச்சப்படுத்திக் காட்டுகிறது. இப்பாதுகாப்பு தெய்வங்கள் மடாலயங்களையும், அவற்றைச் சுற்றி வசிப்பவர்களையும் தீங்குகளிடமிருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டவை. இருப்பினும், வழிபாட்டுத்தலங்களிலுள்ள பல சிலைகளை கொள்ளையர்கள் திருடிச் செல்வதால் சிலைகள் தங்களை தாங்களே காத்துக் கொள்ள துறவிகள் வேண்டுகின்றனர்.

சாம்டாலிங்கை (Samdaling) சேர்ந்த பண்டைய தாது கோபுரங்களின் சுவர்களில் உள்ள ஓட்டைகளை பாறைகள் மூடியிருக்கின்றன. புத்த வழிபட்டாளர்களால் வைக்கப்பட்ட புத்த சிலைகளை திருடுவதற்காக இந்த சுவர்களை கொள்ளையர்கள் உடைத்திருக்கின்றனர். உலகலாவிய நிழற்சந்தையில் இச்சிலைகளை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க முடியும்.

சாம்டாலிங்கில்(Samdaling) திருடர்களால் உடைக்கப்பட்ட ஒரு தாது கோபுரத்தில் களிமண் வழிபாட்டு வார்ப்புகளும், 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மையான ஆடைகளும் இன்னும் மிச்சம் இருக்கின்றன. எந்த கலைப்பொருட்களும் அங்கு இருந்திருக்கவில்லை என்றாலும் உலகளாவிய நிழற்சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய புத்தரின் செம்பு மற்றும் வெண்கலச் சிலைகள் இந்த தாது கோபுரங்களில் இருப்பதாக நம்பப்படுகிறது.

முஸ்டாங், லு மந்தாங்கை (Lo Manthang) சேர்ந்த இளம் பிக்குகள் ஒரு வழிபாட்டு நடைமுறையை பின்பற்ற முயல்கின்றனர். தொடர்ந்து வழிப்பாட்டு இடங்களிலிருந்து ஏராளமான சிலைகள் களவாடப்படும் நிலையில், புத்தமும், இமயத்தின் தொலைதூர பகுதிகளின் பழங்கால வாழ்க்கை முறையும் பாதிக்கப்படுவதாக குறிப்பாக இளம் தலைமுறையினர் தங்கள் மூதாதையர்கள் வழிபட்ட பல சிலைகள் இல்லாமல் வளர்ந்து வருவதாக பலர் அச்சமடைகின்றனர்.

முஸ்டாங் மலைத்தொடரொன்றில் புத்த பிக்குகள் வழிபாடு செய்கின்றனர். இத்தொலைதூர பகுதிகளில் உள்ள மடாலயங்களில் சிலைத் திருட்டு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தங்கள் தெய்வங்களின் பாதுகாப்பிணை அதிகரிக்க துறவிகள் வழிபாடு செய்கின்றனர்.

காத்மண்டுவிலுள்ள மூன்று தொல்பொருள்கள் அங்காடிகளில் மே மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் போது மீட்கப்பட்ட 100 சிலைகளை ஒரு செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் காட்டுகின்றனர். ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகள் பற்றிய நடப்பு நிகழ்ச்சிகளுக்கான அல் ஜசீராவின் வார தொலைகாட்சி நிகழ்ச்சி “101  கிழக்கு” புலனாய்வு செய்து கொடுத்த தகவலின் பேரால் முறைகேடான அரிய பொருட்கள் விற்பனைகள் பற்றிய அந்த ஆய்வு செய்யப்பட்டது.

நேபாளத்தின் முஸ்டாங் பள்ளத்தாக்கிற்குள் செங்குத்தான பாறையொன்றின் மீது கட்டப்பட்ட பண்டைய மடாலயமொன்றிற்கு வருகை தரும் பார்வையாளர்களை பயங்கரமான இந்த சிலைகள் எதிர்கொள்கின்றன. ஆனால் திபெத்திய மக்களால் தெய்வங்கள் என நம்பப்படும் சிலைகளை கொள்ளையர்கள் உடைப்பதிலிருந்தோ திருடுவதிலிருந்தோ அச்சுறுத்தும் இந்த அடையாளங்கள் கிஞ்சித்தும் தடுப்பதில்லை.

திருடர்களைத் தடுப்பதற்காக கடவுளரின் முகங்கள் மீது வண்ணம் பூசும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் நேபாளத்தின் நம்கியால்(Namgyal) மடாலயத்தை சேர்ந்த பிக்குகள். உலக கலைப்பொருள் வணிகர்களால் செப்பு மற்றும் வெண்கல சிலைகள் மிகுந்த ஆவலுடன் தேடப்படுகின்றன. வழிப்பாட்டுத் தலங்களில் உள்ள சிலைகளைத் திருடுவதற்கு கொள்ளையர்களை பல நேரங்களில் அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

நேபாளத்தின் லோ மந்தாங்கில்(Lo Manthang) உள்ள புத்த மடாலயமொன்றில் தூய்மையான பொன்னால் பொறிக்கப்பட்ட பண்டைய கையெழுத்துப்படியான டாஷி பிஸ்டாவை(Tashi Bista) காட்டுகிறார் புத்த துறவியான சிமி குறுங்(Chime Gurung). ஒரு தாது கோபுரத்திலிருந்து அதன் சகோதரி புத்தகம் திருடப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த கையெழுத்துப்படி மட்டுமே பாதுகாக்கப்பட்டது.

  • வினவு செய்திப் பிரிவு

நன்றி : அல்ஜசீரா Nepal’s stolen gods புகைப்படக் கட்டுரையின் தமிழாக்கம்

ஆச்சாரமான அய்யராத்து உணவகங்கள் – அருவெறுப்பின் உச்சம் !

பெங்களூருவைச் சேர்ந்ததொரு உணவக நிறுவனம், ஒரு புதிய உணவுச் சேவையை சுதந்திர தினத்தன்று தொடங்கவிருப்பதாக விளம்பரம் செய்திருக்கிறது. அதன் பெயர் ”சுத்தமான பிராமண மதிய உணவுச் சேவை” (A Pure Brahmin Lunch Box Service)

கடந்த 07-08-2018 அன்று வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான முனைவர் கார்த்திக் நவாயனா இந்த விளம்பரம் அடங்கிய பேனரின் புகைப்படத்தை டிவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.

சுத்தமான பிராமண உணவு வகைகளை, பெங்களூரு ஜே.பி. நகர், பி.டி.எம். லே-அவுட், புட்டெனஹள்ளி, பிலேகாஹள்ளி ஆகிய பகுதிகள் உள்ளிட்ட பெங்களூருவின் பல்வேறு பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் உள்ள வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே வந்து விரைவாக ’டோர்-டெலிவரி’ செய்வதாக அந்த விளம்பர பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுத்தமான சைவ உணவு ரூ.40, ரூ.45, ரூ.60 ஆகிய விலைகளில் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய பிராமண உணவு சேவை வழங்குவதற்கு இந்நிறுவனம் மட்டுமே வழங்கவில்லை. இதுவே முதல் நிறுவனமும் அல்ல. இதற்கு முன்னரும் இத்தகைய ’சேவை’ நிறுவனங்கள் நிறைய உண்டு.

சென்னையைச் சேர்ந்த “அக்‌ஷயா எஸ் வீட்டு உணவு வழங்கல் சேவைகள்” நிறுவனமும் பிராமண உணவுகளை வழங்குவதில் ஏற்கெனவே மிகப் பிரபலமானது. இது போன்ற’ பிராமண உணவு சேவைகளை வெளிநாடுகளிலும் வழங்கி வருகின்றனர் பலர். அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரைப் பகுதியில் ’மைலாப்பூர் எக்ஸ்பிரஸ்’ என்ற உணவு நிறுவனம் சுத்தமான தமிழ் பிராமண (Tam-Brahm) உணவுச் சேவையை வழங்கி வருகிறது.

இத்தகைய பிராமண உணவு சேவைகள் உணவு வழங்கல் செயலிகளான ஸ்விக்கி, சொமாட்டோ ஆகியவற்றிலும் இருக்கின்றன. பெங்களூரு இந்திராநகரில் உணவு வழங்கல் சேவையில் உள்ள ’பிராமண வீட்டு உணவு’ நிறுவனம் ஒரு உதாரணம்.

பெங்களூரில் மட்டுமே பல சிறு உணவகங்களும் உணவு வழங்கல் நிறுவனங்களும் வீட்டுத் தயாரிப்பு உணவு வழங்கல் சேவைகளை வழங்கி வருகின்றன. சுத்தமான ஜெயின் உணவு சேவைகள் ஏற்கனவே பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் இந்த விளம்பரத்திற்கு சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். ஜெயின் உணவு, ஹலால் உணவு என இருக்கும்போது பிராமண உணவு இருப்பதில் என்ன தவறு இருக்கிறது எனக் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் பெரும்பான்மையானவர்கள், இந்த விளம்பரத்தை சாதிவெறியைக் கக்குவதாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.

சுத்தமான பிராமண சமையல் என்று இந்த விளம்பரத்தில் எதைக் குறிப்பிடுகிறார்கள்? வெறும் சைவ உணவையா அல்லது பிராமணர்களால் சமைக்கப்பட்ட சைவ உணவையா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

’சாதியரீதியான உணவுக்கு’ எதிராக பல்வேறு தலித் செயற்பாட்டாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இத்தகைய ’தனிச்சிறப்பான உணவு’ என்பதுதான் பொதுவான உணவுத் தெரிவிலிருந்து தலித் மக்களை விலக்கி வைப்பதற்கான பாரம்பரிய வழிமுறை என்று கூறுகின்றனர். ’தாழ்த்தப்பட்ட மக்கள்’ உணவு வகைகள் இந்திய சமையல் கலாச்சாரத்திலிருந்து திட்டமிட்டவகையில் விலக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் உணவைப் பொருத்தவரையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது. சந்திரபான் பிரசாத் என்ற தொழில்முனைவர் ஒருவர், தலித் உணவுகளுக்காக தனியாக இணையதளம் (Dalitfoods.com) திறந்தார். தலித் உணவு வகைகளை விற்பனை செய்வதற்கான ஒரு இணையதளமாக அது செயல்பட்டு வருகிறது. (அந்த இணையதளம் செயல்படவில்லை) ”Stir Fry Simmer” ஆவணப்படத்தைப் போன்று  உணவு தொடர்பான சில ஆவணப்படங்கள் உணவுக்குப் பின்னர் மறைந்திருக்கும் அரசியலை வெளிக் கொண்டு வர முயற்சித்திருக்கின்றன.

– நன்றி: நியூஸ் 18 ஆங்கில இணையதளத்தில் வந்த  செய்தியின் தமிழாக்கம்.
Bengaluru Service Offering ‘Pure Brahmin Meals’ Home Delivered Sparks Outrage

உணவு மட்டுமல்ல, தங்கும் வீடு முதல், ஒய்வுக் காலத்தில் தங்குவதற்காக சிறப்பு வசதி செய்யப்பட்ட வீடுகள், முதியோர் இல்லங்கள் பிராமணர்களுக்காகவே என பிரத்யேகமாக தனிச் சந்தையைப் பிடித்திருக்கின்றன. தனி பங்களாக்களை கட்டி ’வில்லாக்களாக’ விற்பனை செய்யும் பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அக்ரஹாரங்களாக பல்வேறு சமுதாய  குடியிருப்புகளை (Community Homes) கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

***

த்துணவு சமையலர் பாப்பாள் அம்மாளின்  சமையலில் பல்லி இருந்ததாக சதி செய்த சாதி வெறியர்கள், தற்போது மாணவர்கள், ஆசிரியர்கள், சாதிவெறி பிடித்த மக்களைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக்திலேயே போராட்டம் செய்திருக்கின்றனர். எப்படியும் பாப்பாள் அம்மாளின் சமையைலை அவர்கள் ஏற்கப் போவதில்லை! அவரை எப்படி பணிநீக்கமோ இல்லை இடமாற்றமோ செய்யப் போகிறோம் என்பதே அவர்கள் முன் உள்ள கேள்வி! ஒரு அருந்ததியப் பெண் சமையலை எப்படி ஆதிக்கசாதி கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சாப்பிடலாம் என்பதிலிருந்து தெரிவது என்ன? என்ன உணவு என்பதை விட யார் சமையல் செய்கிறார்கள் என்பதே அவர்களது ஆதிக்க சாதிப் புனிதத்தின் தூய்மையாம்.

“கண்ணை மறைக்கும் காவிப் புழுதி” நூலின் அத்தியாத்திலிருந்து சில வரிகள்:

குடியிருப்பு, தொழிலில் மட்டுமல்ல; உண்பது, உடுத்துவது, கேளிக்கை, சுடுகாடு என மொத்த வாழ்க்கையிலும் பார்ப்பனியத்தின் தனித்தன்மை காப்பாற்றப்பட்டு வருகிறது. நீர் கலந்து தயாரிக்கப்படும் ‘கச்சா’ உணவு தீட்டு. நெய் அல்லது சுத்தமான எண்ணெயில் தயாரிக்கப்படும் ‘பக்கா’ உணவு சுத்தமானது. கச்சா உணவை தன் சாதியினரிடமும், பக்கா உணவை தனக்கு கீழ் உள்ள சாதியிலும் பெற்றுக் கொள்ளலாம். வட இந்திய ’உயர்’ சாதியினரிடம் இந்த ‘உணவுத் தீண்டாமை’ இன்றும் நிலவுகிறது.

பார்ப்பன ‘மேல்’சாதியினர் ‘பச்சரிசி’ உண்பதற்குக் காரணம், புழுங்கல் அரிசி சூத்திர – பஞ்சமர்களால் அவிக்கப்படுவதினால்தான். பூமிக்குக் கீழே விளையும் கிழங்கு பயிறு வகைகளை சமீபகாலம் வரை பார்ப்பனர்கள் உண்பதில்லை. இப்படித் தீட்டுப்பட்ட காய், பயிறு வகைகள் இன்றைக்கும் கோவில் கருவறைகளில் நுழைய முடியாது. சமீபகாலம் வரை உணவு விடுதிகளில் இருந்த ‘பிராமணாள் கபே, சைவாள் கபே’ போன்ற பெயர்கள் யாத்திரை வரும் பார்ப்பனர்களின் புனிதத்தைக் காப்பாற்றத்தான் ஏற்படுத்தப்பட்டன. பார்ப்பன இலக்கியங்கள் குறிப்பிடும் ‘அதிதி பூசை’ (விருந்தினர்களை உபசரித்தல்) பார்ப்பன ‘மேல்’சாதியினரை மட்டும் குறித்தது. சேவைச்சாதியினர் சமைத்து மிகுந்துபோன உணவை தானமாகப் பெறுவார்கள். பூசை – புனஸ்காரங்களுக்கு வரும் ஐயர் பச்சரிசியை மட்டும் தானமாகப் பெறுவார்.

வட இந்தியாவின் பார்ப்பன – ‘மேல்’சாதி அரசியல் தலைவர்கள் பலரும் எங்கு சென்றாலும் தன் சாதி சமையற்காரரையும் கூடவே அழைத்துச் செல்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன கமலபதி திரிபாதி என்ற உத்திரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அதற்கோர் உதாரணம். அமெரிக்காவில் கணிப்பொறி அடிக்கிற அம்பி கூட ‘வடமாள், கொண்டின்ய கோத்திரம், மிருகசீரிஷ நட்சத்திரம், எம்.சி.ஏ. புத்திரனுக்கு இதே உட்பிரிவில் வெல்  – எஜுகேட்டட் பெண் தேவை’ என்றுதான் மணவிளம்பரம் கொடுப்பான். ‘அனைத்து வசதிகளுடன் கூடிய பங்களா வாடகைக்கு உள்ளது. பிராமின்ஸ் மற்றும் சைவாள் தொடர்பு கொள்க’ – இவ்விளம்பரம் சென்னையில் அடிக்கடி வெளிவரும்.

ஆகவே இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் கூட “சாதிப்புனிதம் மற்றும் தூய்மை” எனும் இழிவான சாதிவெறியை  இங்கேயும்,கடல் கடந்தும் இவர்கள் எப்படி கடைபிடிக்கிறார்கள் என்பதற்கு இந்த செய்தியும் ஒரு சான்று! மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம்கள்,தலித்துகள் கொல்லப்படுவதும், சுத்தமான பிராமண உணவு கிடைக்கும் என்பதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்!

பிராமணர்களுக்கான வீடுகள்:
Brahmins Villas in Coimbatore | Satkrut Homes Ltd

Shankara Agraharam Retirement Homes

  • வினவு செய்திப் பிரிவு