Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 420

நாங்க தொட்டா சாமி கெட்டா போகும் ? புரட்சிகர பாடல்கள்

வம்பர் 7 புரட்சி தினத்தை ம.க.இ.க, பு.மா.இ.மு, பெ.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து சென்னையில் நடத்தின.

அந்நிகழ்ச்சியில் புரட்சிகர அமைப்பைச் சேர்ந்த இளம்தோழர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். கலை நிகழ்ச்சிகள் காணொளியின் இரண்டாம் பாகம் இது.

இளம் தோழர்கள் பாடிய 3 பாடல்கள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.

1. நவம்பர் 7 என்ற தினமின்று – மக்கள் விடுதலைக்கான தினமொன்று !
2. தொட்டால் என்னடா .. கை பட்டால் என்னடா .. நாங்க தொட்டா சாமி கெட்டா போகும் .. தொட்டால் என்னாடா ?
3. நீரில்லா நெல் வயலும் வெம்பி அழுகுதம்மா !

பாருங்கள் – பகிருங்கள்

முகநூலில் பார்க்க:

 

மக்களைக் கொல்லும் மருத்துவ மூடநம்பிக்கைகள் | ஃபருக் அப்துல்லா

நோய் குறித்தும், அதற்கான மருத்துவம் குறித்தும் பல்வேறு மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. இது அனைத்து தரப்பு மக்களிடமும் வெவ்வேறு வகைகளின் நிலைபெற்றுள்ளன. அவற்றை களைய முயல்வதே இப்பதிவின் நோக்கம்.

*****

“வேலூர் வாணியம்பாடியை அடுத்த் ஆலங்காயம் கொட்டாவூரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான சக்தி இளவரசி தம்பதியினரின் குழந்தை பிரித்திவிராஜ்.

ஒன்பது மாத குழந்தையான பிரித்விக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சலும் வயிற்றுப் போக்கும் இருந்துள்ளது. இது குறித்து இளவரசி தனது பெரியம்மாள் ஜெயலட்சுமியிடம் கூறியுள்ளார்.

அவர், ‘குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் உள்ள நாட்டு மருந்து வைத்தியசாலைக்கு குழந்தையை தூக்கிச்செல்’ என்றார். இளவரசி அவர் கணவருடன் அங்கு சென்றுள்ளார். அங்கு இருந்த நாட்டு வைத்தியர் குழந்தைக்கு ஒரு கயிறு கட்டிவிட்டு, மருந்தும் கொடுத்துள்ளார்.

ஆனால் சில நிமிடங்களில் குழந்தை மூர்ச்சையானதையடுத்து அத்தம்பதியினர் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடலை மடியில் ஏந்திப் பெற்றோர் கதறி அழுதனர்.

படம் – நன்றி : விகடன்

***

குழந்தை பிறந்த ஒரு வயது வரை மிக மிக முக்கிய காலக்கட்டம் அதை Infant period என்கிறோம்.

உடலில் ஒரு பாகத்தில் ஏற்படும் தொற்று மிக எளிதாக மொத்த உடலுக்கும் பரவி “அபாயகரமான நோய் தொற்றாக” மாறும் வாய்ப்பு உண்டு.

படிக்க :
டெங்கு குறித்த உண்மைகளும் மூடநம்பிக்கைகளும் !
மருத்துவத்தில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வு | ஃபருக் அப்துல்லா

குழந்தை பிறந்த முதல் ஒரு வருடத்திற்குள் இறக்கும் இறப்பு சதவிகிதத்தை Infant mortality rate என்கிறோம். இந்த காலத்தில் வரும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, சளி,  இருமல் போன்ற வியாதிகளை உடனே நவீன மருத்துவரிடம் சென்று காண்பிப்பதே சிறந்த விசயம்.

நாட்டு மருந்து கொடுக்கிறேன் என்று போலி மருத்துவர்களை நாடினால் உங்கள் குழந்தையை நீங்களே கொல்வதற்கு சமமாகும்

இந்த செய்தியில் ஒன்பது மாத குழந்தைக்கு காய்ச்சல் வயிற்றுப்போக்கு; மிக எளிதாக ஓ.ஆர்.எஸ் மற்றும் தகுந்த மருந்து கொடுத்தால் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய உயிரை கொன்று விட்டனர்

விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.

*****

96 படத்தில் ஒரு காட்சி ;

ராம் வீட்டில் ஜானு குளியலறைக்குள் செல்கிறாள். ஜானுவிற்கு ராம் டவல் மற்றும் சோப் எடுத்துக்கொண்டு செல்கிறான். அப்போது ஜானு கூறுகிறாள் “இங்க உள்ள டவல் சோப் இருக்கு ராம்”

ராம் “ஐயோ… அது நான் யூஸ் பண்ண டவல் மற்றும் சோப்” என்கிறான்.

ஜானு கிண்டலாக “பரவாயில்ல..உனக்கு சோரியாசிஸ் ஒன்னும் கிடையாதுல்ல?”

ராம் “இல்ல இல்ல” என்கிறான்

எப்போதும் பெரிய டைரக்டர்கள் கூட மருத்துவ விசயங்களை படத்தில் வைக்கும் போது ஃபெய்ல் ஆகி விடுவார்கள்.

உண்மையில், சோரியாசிஸ் என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் நோய் அல்ல.

சோரியாசிஸ் என்பது சுய எதிர்ப்பு சக்தி தனது தோலையே பாதிக்கும் ஆட்டோ இம்யூன் வகை நோயாகும். இது தொற்றும் நோயல்ல. ஆகவே, இந்த படத்தில் அறியாமல் வைக்கப்பட்டிருக்கும் இந்த காட்சி பிழையாகும்.

சோரியாசிஸ் பாதிக்கப்பட்ட அனைவரும் அரவணைப்புக்கு உரியவர்கள். அருவருப்புக்கு உரியவர்கள் அன்று.

இந்த பதிவு மருத்துவராக எனது பொறுப்பு.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.

அவர்கள் என்னைப் போலவே இருக்கிறார்கள்

ஜா புயல் நிவாரண மையத்தில் இருந்த நான்கு பெண்கள், இருள் காரணமாக, சாலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, வாகனம் மோதி அந்த இடத்திலேயே மரணம்.

நாகை மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது  நீர்முலை கிராமம். கஜா புயலால் அடியோடு பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவும் ஒன்று. வீடிழந்த மக்கள் நீர்முலையில் நான்குக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கியுள்ளனர். அப்படி, இவ்வூரின் அரசு ஆரம்ப சுகாதார நிலைய முகாமில் தங்கியிருந்த சுமதி (40), அமுதா(60), ராஜகுமாரி(39), சரோஜா(38) ஆகிய நான்கு பேரும், நவம்பர் 22-ம் தேதி இரவு 9.30 மணி அளவில், இரவு உணவை முடித்துவிட்டு சுகாதார நிலைய வாயிலில் உள்ள, சாலையின் ஓரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மின்சார வசதி இல்ல, வேறு எந்த வெளிச்சமும் இல்லை, நிவாரண உதவிகள் மூலம் கிடைக்கும் மெழுகுவர்த்திகள் எந்த மூலைக்கு? கடுமையான கொசுக்கடி வேறு. இதனால் நீர்முலை உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் சூழ்ந்திருக்கும் கும்மிருட்டுக்கு மத்தியில் மக்கள் சாலை ஓரங்களில் கூட்டம், கூட்டமாக அமர்ந்துதான் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் நேற்றும் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

அப்போது அந்த சாலை வழியே வேகமாக வந்த வேன் ஒன்று மோதியதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் இருவர் அந்த இடத்திலேயே இறந்துவிட, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மற்ற இருவரும், அங்கு சென்றதும் இறந்துவிட்டனர். மேலும் மணிகண்டன் என்ற 15 வயது சிறுவனுக்கு கால் முறிந்துவிட்டது.

கஜா புயலினால் ஏற்கனவே உயிரைத்தவிர அனைத்தையும் இழந்து விட்ட இந்த மக்கள் தற்போது உயிரையும் இழந்துவிட்டனர். ( புகைப்படம் மிகக் கோரமாக இருக்கிறது. அதனால் இணைக்கவில்லை). இது மற்றுமொரு விபத்து இல்லை. அன்றாடம் நிகழும் சாலை விபத்துகளின் பட்டியலில் இதை சேர்க்க முடியாது.

வாழ வழியில்லாமல் நடுரோட்டில் நிற்கும் அவர்கள் இந்த நான்கு உடல்களையும் எப்படி புதைப்பார்கள்? எப்படி எரியூட்டுவார்கள்? இந்த நான்கு பெண்களும் தனிமனிதர்கள் அல்ல… அவர்களுக்கு குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படிப் பிழைக்க போகிறார்கள்? அவர்களை யார் காப்பாற்றுவது?

♦♦♦

டெல்டா மாவட்டத்தின் எந்தத் தெருவில் நுழைந்தாலும் கஜா புயலால் பாதிக்கப் பட்டோர் முகாம் என்ற பெயர் பலகைகள் அரை கிலோமீட்டருக்கு ஒன்று தென்படுகின்றன. திரும்பிய பக்கமெல்லாம் முகாம்கள்.. முகாம்கள்.. முகாம்கள்.

வரும் நிவாரண வண்டிகளின் கண்களில் தென்பட வேண்டும் என்பதற்காக; அவர்களின் இரக்கத்தை கோர வேண்டும் என்பதற்காக… உள்ளடங்கிய கிராமங்களை சேர்ந்தவர்கள் முதன்மை சாலை அருகே அகதிகளைப் போல காத்திருக்கின்றனர். சாலையோரத்தில் பாத்திரத்தை வைத்து சமையல் செய்கின்றனர். வாகனங்களை நோக்கி கைகளை நீட்டியபடி ஓடிவருகின்றனர். இந்தக் காட்சி ஒவ்வொன்றும் நெஞ்சை அறுக்கிறது.

கீழத்தஞ்சையின் விவசாயத் தொழிலாளர்கள் கடும் உழைப்புக்கு பெயர் போனவர்கள். நாளொன்றுக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக கடைமடையில் நின்ற கால்கள், இன்று ஒரு பிஸ்கட் பாக்கெட்டுக்காக ஏங்கி நிற்கிறது. அவர்கள் சாலையில் நின்று கையேந்துவதை கண்டு மனம் பொறுக்கவில்லை.

தஞ்சை: நிவாரண முகாம் ஒன்றில் உணவுக்காக நீண்ட வரிசையில்… (படம் மங்கலாக்கப்பட்டிருக்கிறது)

தன்மானத்தை ஒதுக்கி வைத்து தங்கள் குழந்தைகளின் பசித்த வயிற்றை மனதில் கொண்டு சாலைகளில் நிற்கும் இவர்கள் என் அப்பாவை போல இருக்கிறார்கள். என் அண்ணனைப் போல இருக்கிறார்கள். என்னைப் போலவே இருக்கிறார்கள்

♦♦♦

குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்து செல்லும் பலநூறு நிவாரண வண்டிகள்… எண்ணற்ற ஊர்களில் இருந்து மக்கள் சேகரித்து அனுப்பும் பொருட்கள், ஏராளமான வெளிநாடுகளிலிருந்து வந்து சேரும் உதவித்தொகை… உண்மையில் சிவில் சமூகம் ஒரு இராணுவத்தை போல இணைந்து நின்று டெல்டா மக்களை அரணாக பாதுகாக்கிறது. அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை சரிசெய்யும் பணி மட்டுமே அரசுத் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. அதைத் தாண்டி அவர்கள் எதுவும் செய்வார்கள் என்ற நம்பிக்கைக் கூட இல்லை. இந்த அரசக் கட்டமைப்பின் பிரம்மாண்ட தோல்விக்கும், மனித மனதின் ஆதாரமான அறவுணர்ச்சிக்கும் இன்றைய டெல்டா மாவட்ட கிராமங்களே சாட்சி.

♦♦♦

ஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் குறித்து இரண்டு வதந்திகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. அவற்றை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

1 முதலில் நிவாரணப் பொருள் ஏற்றி வரும் வாகனங்களை மக்கள் மிரட்டி பொருட்களை வழிப்பறி செய்கின்றனர் என்பது. இது முற்றிலும் தவறானது; முழு பொய். இந்த மக்கள் யாரும் கொள்ளைக்காரர்கள் இல்லை; திருடர்கள் இல்லை.

நிவாரண வாகனங்களில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளையும், அரிசியையும், தண்ணீரையும் வைத்து அவர்கள் ஒன்றும் மாடி வீடு கட்டப் போவதில்லை. அவர்கள் இழப்பதற்கு ஏதுமற்றவர்கள். இருந்த கடைசி குடிசையையும் புயலுக்கு பறிகொடுத்து விட்டு நடுரோட்டில் நிற்கிறார்கள். கையேந்தி நிற்பவர்களை கயவர்களாக சித்தரிக்க வேண்டாம்.

படிக்க:
பத்திரிகையாளர்களும் நடுநிலைமையும் – வீடியோ
ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை

நான்கு நாட்களாக கடும் பசி. ஏதேனும் ஒரு வாகனம் வருமா என எதிர்பார்த்து காத்திருந்து; ஏற்கனவே காத்திருந்து கிடைத்த அனுபவத்தில்; இப்போது வரும் வாகனத்தைக் கூட விட்டுவிடக்கூடாது என்ற பரிதவிப்பில் அவர்கள் கேட்கிறார்கள். அந்த அவலத்தின் குரல் கோபமாகத்தான் வெளிப்படும். அதை மிரட்டல் என்றோ வழிப்பறி என்றோ அழைப்பது மோசமானது; தவறானது.

நாம் கொடுக்கும் இரண்டு கிலோ அரிசியையும் 4 மெழுகுவர்த்திகளையும் பெற்றுக்கொள்ள அவர்கள் ஆதார் அட்டையைக் காட்டி கையெழுத்துப் போட வேண்டும் என எதிர்பார்க்கும் மனநிலை தயவுசெய்து வேண்டாம்.

2 இரண்டாவது பிரச்சினை இன்னும் முக்கியமானது. நிவாரணப் பொருட்களை பங்கிட்டுக்கொள்வதில் சாதி பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கிராமங்களில் ஊர்த்தெரு முதலிலும் காலனி தெரு அதை தாண்டியும் இருக்கும். நிவாரண வண்டிகள் ஊரை நோக்கி வரும்போது முதலில் ஊர் தெரு இருப்பதால் அவர்கள் அதை முதலில் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் சேரிக்கு எதுவும் செய்வதில்லை என்றும் பல பதிவுகளை இங்கு கண்டேன். இது முற்று முழுதான உண்மையோ அனைத்து ஊர்களிலும் இதுதான் நிலைமை என்பதோ இல்லை.

நூற்றுக்கணக்கான கிராமங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் கண்ட பெரும்பாலான ஊர்களில் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு அந்த ஊரில் ஒரு குழு அமைத்திருக்கிறார்கள். குறிப்பாக புயலடித்த கணத்தில் இருந்து மக்களை காப்பாற்றி, பாதுகாத்து, நிவாரண வண்டிகளில் இருந்து பொருட்களைப் பெற்று பகிர்ந்தளித்து அந்த மக்களை உயிரோடு வைத்திருப்பது ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் இளைஞர் குழுக்கள்தான். சொல்லப்போனால் இழப்பதற்கு ஏதுமற்றவர்கள் என்ற அளவில் இந்த புயல் நேரத்தில் அவர்கள் ஒருங்கிணைந்து நிற்கிறார்கள். ஓரிரு இடங்களில் களநிலவரம் வேறாக இருக்கலாம். அதை பொதுமைப்படுத்த வேண்டாம்.

அரசாங்கம் கைவிட்டுவிட்ட நிலையில் சிவில் சமூகத்தின் அரவணைப்புடன் தற்போது உதவிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த சிவில் சமூகத்தின் பொது மனநிலையை; அறவுணர்ச்சியை எதிர் திசையில் செலுத்தும் இத்தகைய செய்திகளை நண்பர்கள்; தோழர்கள் பகிர வேண்டாம்.

எங்களுக்கு இவை போதும் மற்ற ஊர்களுக்கு கொடுங்கள் என்று சொன்னவர்களை நாங்கள் கண்டோம். காலையிலிருந்து சாப்பிடாத எங்கள் வாகனத்தின் ஓட்டுநர், மாலை தன் கைக்கு கிடைத்த ஒரு பொட்டலம் உணவை முகாமில் பசியில் வாடிய ஒரு குழந்தைக்கு தந்தார். அந்த முகாமில் சமைக்கப்பட்ட உப்புமாவை ஓட்டுனருக்கு மக்கள் தந்தார்கள். அது உழைக்கும் வர்க்கத்தின் ஆதார உணர்ச்சி. மதுரையில் இருந்து வந்துள்ள இளைஞர் குழு ஒன்று தலைஞாயிறு பகுதியில் தங்கி நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு உணவு சமைத்து தருகின்றனர். அந்த நிவாரண முகாமில் தான் நேற்று நாங்கள் சாப்பிட்டோம். இதுவே கள நிலவரம். இது பிளவுகளை இணைக்க வேண்டிய தருணம். மேலும் அதிகப்படுத்த வேண்டிய தருணம் அல்ல.

முகநூலில்: பத்திரிகையாளர், பாரதி தம்பி

பொன்னாரின் சன்னிதான அழுகை – என்ன மாதிரியான டிசைன் இது ?

4

ருமுடி தாங்கி கெடுமதியோடு அய்யனை காண பரிவாரங்களோடு போனார் பொன்னார்.  சபரி மலை அய்யப்பன் கோயிலை ஆர்.எஸ்.எஸ்-ன் கலவர மேடையாக்கி வரும் காவிகள், எங்களையா தடுக்குற பாரு! அண்ணன கூப்புட்டு வரோம் என்று புடைசூழ இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தாரு பொன்னார் என்று திட்டமிட்ட வேலையோடு பின்னால் வர, விதி வேறு மாதிரி  விளையாடிவிட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.பி. யதீஷ் சந்திரா, நிலவும் தடை உத்தரவு விவரங்கள், அமலில் இருக்கும் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை கவனத்துக்கு உள்ளாக்கினார். அமைச்சர் காரில் செல்ல தடை இல்லை அனுமதி உண்டு போகலாம்! திரண்டு வந்திருக்கும் பா.ஜ.க. பரிவாரங்களுக்கு வாகனத்தை அணிவகுக்க அனுமதி இல்லை, மற்ற பக்தர்களைப் போல அரசுப் பேருந்தில் அவர்கள் செல்லத் தடையில்லை எனச் சட்டப்படியான விளக்கங்களை சுட்டிக் காட்டினார்.

இருமுடியும் பக்தியும் இல்லாதவர்களுக்கு அய்யப்பன் கோயிலில் என்ன வேலை என்று மற்றவர்களைப் பார்த்து கேட்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் அமைச்சரை சாக்கிட்டுக் கொண்டு அங்கே திரள்வது எந்த வகை மனுதர்ம நியாயமோ? தூத்துக்குடியில் ஒருவர் தும்மினால் கூட யாரோ தூண்டி விடுகிறார்கள் என்றும், சமூக விரோதிகளால் சட்டம் ஒழுங்கிற்கு ஆபத்து என்றும் அடிக்கு ஒருதரம் கூவும் பொன்னார் வகையறாக்கள் தாங்களே பீத்திக் கொள்ளும் மதிக்கப்பட வேண்டியதாய் சொல்லும் சட்டம் ஒழுங்கின் படி நடக்கச் சொன்னதையே அமைச்சரை அவமரியாதை செய்து விட்டதாக புளுகாச்சி காவியத்தை அவிழ்த்து விடுகிறது காவிக் கும்பல்.

படிக்க:
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

சங்கிகளுக்கு சற்றும் குறையாமல் கடுமையான கட்டுப்பாடுகளால் சபரி மலையில் பத்தர்கள் வருகை குறைந்தது என்றும் சந்தடி சாக்கில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே சபரிமலைக் கோயிலுக்கு செல்ல பத்து முதல் அய்ம்பது வயது வரையிலான பெண்களுக்கு தடையிருந்தது. இது ஒரு பிரிட்டீஷ் ஆய்வறிக்கையில் தெரிய வந்தது என தமிழ் இந்து தடி எடுத்து கொடுக்கிறது.

யதீஷ் சந்திரா, ஐ.பி.எஸ்.

இப்படி பக்தர்கள் கூடுமிடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு அன்றாடம் சரண கோசம் பார்ப்பன மத வெறி போராட்டம், நாமா வளி பூசை, எங்களை மீறி யாராவது வந்தால் மரண கோசம் என அயோத்தி போல அட்டூழியம் செய்து அச்சுறுத்தும் காவிக் கும்பல்; அதன் அமைச்சர் பொன்னார்; சபரி மலை புனிதத்தை அழிக்கும் முயற்சி என கேரள அரசின் மீதே பழியை திருப்பி போடுகிறார்கள்.

மக்களால் கழுவி கழுவி ஊத்தப் படுவதை தவிர வேறு எந்த புனித தீர்த்தத்தாலும் பாவங்களை கழுவிக்கொள்ள முடியாத பா.ஜ.க. சபரி மலை விவகாரத்தை வைத்து புனிதம் தேடவும் அன்றாடம் தனக்கான நியூஸ் வேல்யூவ்வை ஏற்றிக் கொள்ளவும் சொகுசாக அரசு பாதுகாப்போடு கோயிலுக்கு போய் வந்ததைக் கூட ஒரு போராட்டம் போல சித்தரித்து, பொய் பிரச்சாரத்தின் மூலம் ஏதோ இந்துக்களின் பக்தி உரிமைக்கு கேரளா அரசால் பங்கம் வந்துவிட்டதைப் போல கள்ள ஆட்டம் ஆடுகிறது.

ஒவ்வொரு பா.ஜ.க. அமைச்சர்களும் தொகுதிக்குப் போய் மக்களைச் சந்திப்பதை விட சபரி மலைக்கு போவதிலேயே குறியாய் இருப்பதும் அங்கு வந்து சொகுசாக சாமி கும்பிட்டு விட்டு படியை விட்டு இறங்கியவுடன், படாத பாடு! சபரி மலையில் ஏகப்பட்ட கட்டுப்பாடு என்று பத்தர்களை படாத பாடு படுத்தும் இந்த காவிகள் டி.வி.க்கு பேட்டி தருவது ஒரு பிழைப்பாகவே இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்த சீன் தான் இப்போது பொன்னார் விவகாரம்.

அமைச்சருக்கு ஏற்பட்ட அவமரியாதை என்று சங்கிகள் என்னதான் சவுண்டு கொடுத்து ‘இந்துக்களை’ உசிப்பி விடப் பார்த்தாலும், பொன்னாரின் ‘இருமுடிக்கு’ அவர் தலையை தாண்டும் சக்தி இல்லை. ஏத்தி விடப்பா! தூக்கி விடப்பா! என்று என்னதான் சங்கிகள் டெரர் காட்டினாலும் ‘ஒழுங்கா பஸ்சை பார்த்து போங்கப்பா, இல்லை கேச போடுவன் வாங்கப்பா’ என்ற எஸ்.பி.யின் உத்தரவுக்கு முன்பு பா.ஜ.க-வின் போங்காட்டம் அடங்கி விட்டது. திரும்பி வரும் போது போலீசின் வாகன சோதனையையும் ஒரு பிரச்சனையாக்கி பிலிம் காட்டலாம் என்ற பொன்னாரின் எண்ணமும் மண்ணாகிப் போனது. பாவம்! பச்ச மண்ணு கோயிலுக்கு போய் அழுதாராம், இருக்கலாம்! “நான் பாட்டுக்கு சாமி கும்பிட்டு போய் இருப்பேன்  என்ன ஒரு சந்துல இழுத்துவிட்டு இப்போ என் அண்ணன் கிட்ட பேசிப்பாருடானு கடைசில மூஞ்சில எதையோ பூசிகிட்ட அவமானம் அவருக்கு இருக்காதா? பின்னே!

இந்த இடத்தில் எச்சு ராஜாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. பிள்ளையார் ஊர்வலத்தில், தடையை மீறி போகாதீர்கள் என தயை கூர்ந்த தமிழகத்து காக்கியிடம், “இந்துக்கள்னா எளப்பமாங்குறன்? மானம் இல்ல!, பாதிரியார் கிட்ட காச வாங்கிட்டு தடுக்கிறிங்களே! குட்கா ஊழல் டி.ஜி.பி. வீட்டுல ரைடு நடக்கறது! உங்களுக்கு வெட்கமா இல்ல? ஆல் ஆர் கரப்சன்! கோர்ட்டாவது மயிராவது” என்ற சண்ட பிரசண்ட கோவம் எங்கே? பொன்னாரின் சன்னிதான அழுகை எங்கே? தங்கள் கைக் காசை செலவு பண்ணியாவது ஒவ்வொரு இந்து டேஷ் பக்தர்களும் எச்சு ராஜாவை யதீஸ் சந்திரா வழி பம்பைக்கு அனுப்ப வேண்டியது பக்தாளின் கடமை. சாதுவாகக் காட்டிக் கொள்வது, கோபமாக பேசுவது ஆர்.எஸ்.எஸ். மதவெறி கும்பல் வன்மத்தின்
வெவ்வேறு வடிவங்கள். உள்ளடக்கம் குரூரமும், இந்து பாசிசமும்தான்.

ஊரை இழந்து உறவை இழந்து உயிரையும் இழந்து தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் மக்கள், அரசின் அலட்சியத்திற்கு எதிராகப் போராடுவதைப் பார்த்து வன்முறை, போராட்டம் தேவையில்லை என புத்தி சொல்லும் பொன்னார், ஒரு கோயிலுக்கு சகல வசதிகளுடன் போய் வந்ததையே ஒரு பிரச்சனையாக்கி தன்னை அவமதித்து விட்டதாக அண்டப் புளுகை அவிழ்த்து விட்டு அதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்பு என்று வெறியாட்டம் ஆடுவதை விட ஒரு சமூக விரோத வன்முறை இருக்க முடியுமா?

படிக்க:
பா.ஜ.க. மோடி அரசின் பாசிச அடக்குமுறைகள் | மக்கள் அதிகாரம் கண்டனம்
பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை !

டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் நிலைகுலைந்து போய் உள்ள, அவர்கள் பாஷையில் அந்த இந்துக்களுக்கு இந்த இந்துத்துவ கும்பல் கிழித்தது என்ன? இந்துக்களின் சொத்து கோயில் என்று கூவும் இந்தக் கும்பல் வீடு வாசலை இழந்த டெல்டா மக்களுக்காக கோயிலை திறந்துவிட போராடத் தயாரா? கஜா புயலை யாரும் அரசியலாக்க கூடாது என்று மக்கள் உரிமைகளை ஒடுக்கும் இந்தக் கும்பல் சபரி மலையை அரசியலாக்குவது மட்டும் சரியாம்!

துரை. சண்முகம்
கண்ணுக்கு நேரே நமது தமிழக மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரான ஒருவர் தமது எடுபிடிகளுடன் போய் அங்கே தங்கி மக்களுக்கு வேலை செய்யாதது அவருக்கு  அவமானமாகப் படவில்லை, இருமுடி கட்டிக்கொண்டு கோயிலுக்கு போன இடத்தில் ரெண்டு கொசு கடித்துவிட்டதாம்! அதுதான் இப்போது அவமரியாதையாம்! அதற்காக முழு அடைப்பாம்! எவ்வளவு வக்கிரம் பிடித்த ஒரு பாசிச கட்சி இந்த பா.ஜ.க. என்பதை பொன்னாரை விட வேறு யார் இவ்வளவு பொருத்தமாக நமக்கு விளக்க முடியும்?

பட்டுக்கோட்டை : 52 கோழி பண்ணைகள் அழிவு ! என்ன கடன் வாங்குனாலும் மீள முடியாது !

ஜா புயல் ஏற்படுத்தி இருக்கும் அழிவு கணக்கிட முடியாதவையாக இருக்கிறது. விவசாயம், வீடு, வேலை என அனைத்தும் இழந்து தெருவில் நிற்கிறார்கள் மக்கள். அவர்களுக்கென இருந்த ஒரே வாய்ப்பு தென்னை விவசாயம் அல்லது வெளிநாடுதான். இனி வெளிநாடும் செல்ல முடியாது. விவசாயமும் செய்ய முடியாது என்ற நிலை டெல்டாவில் உருவாகி இருக்கிறது.

தம்பிக்கோட்டை – கிருஷ்ணாபுரம் மற்றும் அதனைச் சுற்றி தென்னையினூடாக கறிக்கோழி வளர்ப்பது என்ற அடிப்படையில் தோப்பில் கோழிப்பண்ணை அமைத்து வருமானம் ஈட்டி வந்தார்கள். தற்பொழுது அதற்கும் வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தோப்பில் இருந்த கோழி பண்ணைகள் அனைத்தும் சாய்ந்து சில கோழிகள் மட்டும் வெளியில் திரிந்து கொண்டிருந்தன. அருகில் இருந்த இன்னொரு தோப்பில் கோழிப் பண்ணைத் தொழிலாளர்கள் மிச்ச மீதியிருந்த கோழியை ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த ஒய்.எஸ்.ஆர். ஃபாமின் விற்பனை பிரதிநிதி அருணகிரியிடமும், பட்டுக்கோட்டை மேலாளர் ரமேஷிடமும் கேட்டோம். “தென்னந்தோப்புல கோழிப்பண்ணை அமைக்கிற பழக்கம் இருபது வருஷமாவே நடைமுறையில இருக்கு. இந்த பகுதி மக்களுக்கு தோப்பும், கோழிப்பண்ணையும் தான் ஆதாரம். இதுதான் அவர்களின் வாழ்க்கை. வீடு, பண்ணைனு தினந்தோறும் இதிலேயே உழலக்கூடியவர்கள். யாரும் எதிர்பாக்கல இப்படி நடக்கும்னு.

அருணகிரி மற்றும் ரமேஷ்.

72-ல ஒரு புயல் வந்தப்ப நெல்லு எல்லாம் வீணாகிடுச்சினுதான் தென்னைக்கு மாறினதா சொன்னாங்க. இப்ப தென்னையும் இப்படி ஆனதால என்ன பண்றதுன்னு தெரியாம ஒடிஞ்சிட்டாங்க. தோப்புல இடம் சும்மா இருக்கேன்னு கோழிப்பண்ணை அமைச்சாங்க. இப்ப அதுவும் நாசமாயிடுச்சி.  ஒரு பண்ணை அமைக்கிறது சாதாரண விஷயம் இல்ல.

இந்த ஏரியாவுல ஆர்.எம்.பி. பிரீடிங் ஃபாம், ஒய்.ஆர்.எஸ் பிராய்லர், மணீஸ் பிராய்லர், சாமி ஃபீட்ஸ் போன்ற கம்பெனி இருக்கு. டெல்டா மாவட்டம் முழுவதும் எங்களுடைய கம்பனியும், ஆர்.எம்.பி. பிரீடிங் ஃபாமும்தான் முன்னணியில இருக்கு. இந்த கம்பெனிகளோட வேலையே பண்ணை வச்சிருக்கவங்ககிட்ட கோழிகுஞ்சி கொடுத்துடுவோம். அதை வளர்த்து தரணும்.

இந்த பட்டுக்கோட்டை வட்டாரத்துல மட்டும் மொத்தம் 52 பண்ணைகள் இருக்கு. இதுல எங்களுக்கு கிருஷ்ணாபுரத்துல இருக்க 13 பண்ணையில மட்டும் 70,000 குஞ்சிகள் வளர்க்க கொடுத்தோம். அதுல மிஞ்சினது 22,000 மட்டும்தான். மிச்சமெல்லாம் செத்துடுச்சி. இந்த பண்ணையில மட்டும் 7000 கோழி இறந்துடுச்சி. இப்ப மிச்சமிருக்கிறதைத்தான் புடிக்கிறோம். இதே நிலமைதான் மத்த கம்பெனிக்கும். கறிக்கோழி வர சமயத்துல புயல் வந்து கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்திடுச்சி.

பத்தாயிரம் சதுர அடி பண்ணையில இருந்த கோழியோட அழிவால சுமார் இருபது இலட்சம் வரை  எங்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கு. பண்ணை விவசாயிக்கு ஆறு – ஏழு இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொட்டாய் மற்றும் அதுல இருக்க எக்கியூப்மெண்ட் எல்லாம் விவசாயிங்களோடதுதான்.

அதாவது, பத்தாயிரம் சதுர அடியில ஒரு பண்ணை அமைக்க குறைந்தது ஐந்து – ஆறு இலட்சம் செலவு ஆகும். இந்த பத்தாயிரம் சதுர அடிக்கு 9000 கோழி குஞ்சி கொடுப்போம். அதை விவசாயிங்க வளர்த்துத் தரணும்.

ஒரு மூட்டை தீவனம் 2500 ரூபாய்.  மொத்தம் 9000 கோழி வளர்ந்து வருவதற்கு 400 மூட்டை தேவைப்படும். முப்பதாவது நாளில் இருந்து ஒரு நாளைக்கு இருபத்தி இரண்டு மூட்டை தேவைப்படும். கோழி ஏத்த இறக்க ஒரு நாள் கூலி ஒரு ஆளுக்கு 800 ரூபாய். அதற்கு பத்து ஆட்கள். மொத்தம் மூன்று நாட்கள் தேவைப்படும்.  அவர்களுக்கு கூலி ரூ 24,000. கோழி வளர்ப்பில் 45 நாட்களுக்கு மெடிசின் செலவு மட்டும் 12 ஆயிரம் ஆகும். லாரி ட்ரான்ஸ்போர்ட் செலவு தனி.

எங்களோட சூப்பர் வைசர் தினமும் விசிட் அடித்து அதன் வளர்ச்சியை கணக்கெடுப்பார்.  நாங்கள் கொடுக்கும் கோழிகளில் 500 கோழி நிச்சயம் இறந்துவிடும்.  கடைசியா 8500 கோழி ஏத்திடுவோம். ஒரு கிலோ கோழிக்கு 70 ரூபாய் வரை செலவு செய்யிறோம். அதற்கு மேல் வருவது எல்லாம் இலாபம்தான்.

இந்த பகுதியில மட்டும் 52 பண்ணைகள் இருக்கிறது.  அதிகபட்சமாக ஒருவர் 22 ஆயிரம் சதுர அடி அளவில் பண்ணை அமைத்துள்ளார். அதில் 18 ஆயிரம் கோழி வளர்க்க முடியும். டெல்டா முழுக்க 252 பண்ணைகள் இருக்கு. அதையெல்லாம் கணக்கிட்டு பார்த்தா மொத்தமும் மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்கிறார்.

அடைக்கலம், கோழிப் பண்ணை உரிமையாளர்.

னக்கு மொத்தம் மூனு ஏக்கர். அதுல ஒரு ஏக்கர் தென்னை போட்டிருக்கேன். அதுக்குள்ளதான் 6000 சதுர அடில பண்ணை வச்சிருக்கேன். எதிர்பாராத இந்த புயலால பத்து இலட்சத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பதான்  96,000 – க்கு தகரம் வாங்கி போட்டேன். அதுக்கு  ஜி.எஸ்.டி. வரி மட்டும் 16,000.  220 கட்டு கீத்து வாங்கினேன். ஒரு கட்டுக்கு ஐம்பது கீத்து இருக்கும். ஒரு கட்டோட விலை முன்னூறு ரூபா, மொத்தம் ரூ 66,000.  ஒரு தூண் 1200 ரூபா. மொத்தம் 80 தூண் ரூ 96,000. பத்தாயிரம் லிட்டர்ல இரண்டு டேங்க் 16,000. பண்ணைய சுத்தி கட்ட வலை வாங்கனும். அது கிலோ 320. அதேமாதிரி ட்ரிங்கர், ஃபீடர்னு சொல்லுவாங்க.  தீனி போடுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் 50 குஞ்சிக்கு ஒன்னு தேவை.  இரண்டும் சேர்த்து 510 ரூபா. இதுவே கிட்டதட்ட இரண்டரை இலட்சம் வந்துடும்.

இதெல்லாம்  ஆறு வருஷத்துக்கு முன்னாடி வாங்கிட்டேன். விலை குறைவு. இன்னைக்கு இதோட விலை ரொம்ப அதிகம். அதுபோக கோழி சூடு ஆகாம இருக்க தேங்காய் பஞ்சு அடியில போடனும். அது ஒரு லோடு 6000 ரூபா. மொத்தம் மூனு லோடு அடிக்கனும். அது இப்பதான் அடிச்சேன். 18,000 ஆயிடுச்சி.  இன்னைக்கு இருக்க நிலமையில திரும்ப ஒரு பண்ணை அமைக்கனும்னா சாத்தியமே கிடையாது. கடன்மேல கடன் வாங்கனும். முன்னாடி கல்தூண் போட்டோம். இன்னைக்கு அதெல்லாம் கிடைக்காது. எல்லாம் ஸ்டீல்தான். விலை அதிகம். எவ்ளோ கடன் வாங்கினாலும் இனிமே மீள முடியாது.

படிக்க:
பிரஜாபதி போலி மோதல் கொலையில் முதன்மை சதிகாரர் அமித்ஷா – சிபிஐ அதிகாரி கோர்ட்டில் சாட்சி
ஊழல் – வணிகம் – காவிமயமான கல்வி – நெல்லை கருத்தரங்க செய்தி

பண்ணை அமைக்க எந்த பொருளும் ஈசியா முடியாது. இவ்ளோ செலவு பண்ணி இரவு – பகலா பண்ணையிலேயே கிடந்து ஒரு கோழிய வளர்த்து தர்றோம். ஆனா எங்களுக்கு கெடக்கிறது வெறும் 40,000 தான். இதுல வேலை செய்யிறவங்களுக்கு கூலி, பராமரிப்பு எல்லாம் கழிச்சிட்டு பார்த்தா வெறும் 10,000 தான் மிஞ்சும். இதுக்காகத்தான் இவ்ளோ பாடுபடுறோம். ஆனா மொத்தமும் வந்து வாரிக்கிட்டு போயிடுச்சி இந்தப் புயல்.

இதுவரைக்கும் எங்களுக்கு அரசாங்கம் எதுவும் அறிவிக்கல. நாங்க பண்ணை உரிமையாளர்களே எல்லாம் சேர்ந்து போயிட்டு கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். மனுவ வாங்கிட்டு சரி செய்யிறோம் ன்னு சொல்லி அனுப்பிட்டாரு…” என்று சொல்லிக்கொண்டே “நீங்கதான் எதையாவது சொல்லி எங்களுக்கு பண்ணனும்” என்கிறார் சோகமாக!

ரிசர்வ் வங்கியா ? ரிலையன்ஸ் வங்கியா ?

அம்பானி – அதானி – ஆர்.எஸ்.எஸ். கூட்டணி ஆக்கிரமிப்பில் ரிசர்வ் வங்கி : ரிசர்வ் வங்கியா, ரிலையன்ஸ் வங்கியா ?

பா.ஜ.க. கூட்டணி அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஊடல் குறித்து, “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவே ரிசர்வ் வங்கியோடு மோடி அரசு முரண்பட்டு நிற்பதாக’’க் கூறுகிறது, ஆர்.எஸ்.எஸ். “தனது நிறுவன சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், நாட்டின் எதிர்கால நலன் கருதியும்தான் மோடி அரசோடு ஒத்துப்போக மறுப்பதாக’’க் கூறி வருகிறது, ரிசர்வ் வங்கி.

இந்த இரண்டு விளக்கங்களிலும் இம்மியளவும் உண்மை இல்லை. எனினும், இப்பிரச்சினையில் மோடி அரசு அம்பானி, அதானி உள்ளிட்ட சில குறிப்பிட்ட அதிகாரவர்க்கத் தரகு முதலாளிகளின் ஏஜெண்டாக நடந்துகொள்வதும், ரிசர்வ் வங்கியைத் தனது தலையாட்டி பொம்மையாக மாற்ற முயலுவதும்தான், ரிசர்வ் வங்கியின் வர்க்கச் சார்பைக் காட்டிலும் அபாயகரமானதாகும்.

வாராக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பது, கடன் வழங்குவதில் 11 பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது, ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரிக் கையிருப்பை அரசிற்கு மாற்றுவது, பணப் பட்டுவாடாவைக் கண்காணிக்கத் தனியொரு ஒழுங்குமுறை அமைப்பை நிறுவி ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை வெட்டுவது – இவைதான் பா.ஜ.க. கூட்டணி அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே எழுந்துள்ள ஊடலுக்குப் பின்னுள்ள காரணங்கள்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல்

கடந்த பிப்ரவரி மாதம் வாராக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையொன்றை வங்கிகளுக்கு அனுப்பியது. அதில், மார்ச் 1 ஆம் தேதிப்படி 2,000 கோடி ரூபாய்க்கு மேல் வாராக் கடன்களை வைத்திருக்கும் நிறுவனங்கள், அந்தத் தேதியிலிருந்து 180 நாட்களுக்குள் தமது கடன் நிலுவைகளைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், அக்கெடு தவறும்பட்சத்தில், அந்நிறுவனங்கள் மீது அடுத்த பதினைந்து நாட்களுக்குள் திவால் சட்டத்தின் கீழ் வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வழிகாட்டியிருந்தது. மேலும், வாராக் கடன் நிலுவைகளைத் திருப்பிச் செலுத்துவதற்குச் சலுகை அளிக்கக்கூடிய வகையில், அக்கடன்களை மறுசீரமைக்கக் கூடாது (restructure) என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்தச் சுற்றறிக்கை வங்கிகளுக்குக் கிடைத்த மாத்திரத்திலேயே, இதனை அமல்படுத்தக் கூடாதெனக் கோரித் தனியார் மின் உற்பத்தி நிறுவனச் சங்கங்கள், ஜவுளி ஆலை அதிபர் சங்கம், தமிழகத்தைச் சேர்ந்த தனியார் கரும்பாலை சங்கம், குஜராத்தைச் சேர்ந்த கப்பல் கட்டும் தொழில் அதிபர் சங்கம் ஆகியவை பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்தன. அவற்றுள், அலகாபாத் உயர் நீதிமன்றம் அச்சுற்றறிக்கையைத் தடை செய்ய மறுத்தாலும், “வங்கிகளிடம் பேசித் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்குமாறு” மோடி அரசிற்கு ஆலோசனை வழங்கியது.

இதனையடுத்துத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் சங்கம் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அவ்வழக்கில், இச்சுற்றறிக்கைக்கு எதிராகப் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தானே விசாரிக்கப் போவதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை நவம்பர் இரண்டாவது வாரத்திற்கு ஒத்தி வைத்தது.

உச்ச நீதிமன்றத்தின் தன்னிச்சையான இந்த உத்தரவு காரணமாக ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை மறைமுகமாக முடக்கப்பட்டு, வாராக் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டன.

படிக்க:
♦ ரிசர்வ் வங்கியையும் முதலாளிகளுக்குத் திறந்துவிடக் கதறும் சங்கிகள் !
♦ தேர்தல் என்பது பணநாயகமே – ரிசர்வ் வங்கி ஒப்புதல் !

வங்கிகளிடம் நிலுவையாக உள்ள மொத்த வாராக் கடனில் (9.61 இலட்சம் கோடி ரூபாய்) கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மட்டும் 7.03 இலட்சம் கோடி ரூபாய் என்ற உண்மையை உடைத்திருக்கிறார், சி.ஏ.ஜி. தலைவர். இதில் 32 தனியார் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அளிக்கப்பட்டு நிலுவையாக உள்ள கடன் தொகை 1.74 இலட்சம் கோடி ரூபாய். இந்த 32 தனியார் மின் உற்பத்தி திட்டங்களுள் 14 திட்டங்கள் லான்கோ, ஜி.எம்.ஆர்., ஜே.பி., அதானி, எஸ்ஸார் ஆகிய ஐந்து குழுமங்களுக்குச் சொந்தமானவை.

ஒருபுறம் உச்ச நீதிமன்றம் என்றால், இன்னொருபுறத்தில் மோடி அரசு, “தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களைத் திவால் சட்டத்தின் கீழ் ஏலத்திற்குக் கொண்டுவரக் கூடாது; தனியார் மின் உற்பத்தியாளர்களின் கடன்களை மறுசீரமைக்க வேண்டும்” என ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்ததோடு, அச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுமாறும் நிர்பந்தித்து வருகிறது.

மேலும், வாராக் கடன்களை அதிகமாக வைத்திருக்கும் 11 பொதுத்துறை வங்கிகள் புதிய கடன்களை வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை ரிசர்வ் வங்கி விலக்கிக் கொள்ள வேண்டும். வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்து சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்குக் கடன் கிடைக்குமாறு செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் உபரிக் கையிருப்பாக உள்ள மூன்று இலட்சம் கோடி ரூபாயில் ஒரு இலட்சம் கோடி ரூபாயை மைய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அடுத்தடுத்துப் பல நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது, மைய அரசு.

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் திணிக்கப்பட்டிருக்கும் சங்கிகளான குருமூர்த்தி, சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி ஆகியோரைக் கொண்டும், ரிசர்வ் வங்கிச் சட்டம் மைய அரசிற்கு அளித்திருக்கும் அதிகாரத்தைக் கொண்டும் இந்த நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது, மோடி அரசு. இந்தியப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் சிக்கியிருந்த 1991, 2008 காலக்கட்டங்களில்கூட அப்பொழுதிருந்த காங்கிரசு அரசு இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியதில்லை என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களே அதிர்ந்துபோய்க் குறிப்பிடுமளவிற்கு மோடி அரசின் நடவடிக்கைகள் அசாதாரணமாக அமைந்துள்ளன.

***

மும்பய் நகரில் நடந்த கருத்தரங்கமொன்றில், ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் மோடி அரசு தலையிடுவதை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசிய அவ்வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, “மைய வங்கிகளின் சுதந்திரத்தை மதிக்காத அரசாங்கங்கள் விரைவாகவோ தாமதமாகவோ நிதிச் சந்தையின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடுவதோடு, ஒரு முக்கியமான ஒழுங்கு நிறுவனத்தின் சுதந்திரத்தை மதிக்கத் தவறியதற்காக வருந்த நேரிடும்” எனக் குறிப்பிட்டு, மோடி அரசை மறைமுகமாக எச்சரிக்கவும் செய்தார்.

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா.

அவரது உரைக்குப் பிறகுதான் மோடி அரசு ரிசர்வ் வங்கியை ஆட்டிப் படைக்க முயலுவது வெளியுலகிற்குத் தெரியவந்தது.

இந்த உண்மை அம்பலமானதைச் சகித்துக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் ஒருபுறம் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை அந்நிய நாட்டுக் கூலிகளாக வசைபாடிவிட்டு, இன்னொருபுறம் நாட்டின் நலனுக்காகவே மோடி அரசு ரிசர்வ் வங்கியோடு சட்டத்திற்கு உட்பட்டுக் கலந்துரையாடிவருவதாகக் கதை கட்டின.

மேலும், “முதலாளிமார்களுக்குப் புதிய கடன்களை வழங்குவதன் மூலம் பொருளாதாரம் ஊக்கம் பெறும். அதன் மூலம் புதிய கடன்களை மட்டுமல்ல, பழைய கடன் களை அடைப்பதற்கான வாய்ப்பும் உருவாகும்” எனக் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் முட்டாள்தனமான, நகைக்கத்தக்க யோசனையையும் அவிழ்த்துவிட்டன.

பொருளாதார முடக்கத்திலிருந்தும் ஊழலிலிருந்தும் நாட்டை மீட்க வந்த தேவதூதனாகக் காட்டப்பட்ட மோடியின் ஆட்சியில், நாட்டின் ஜி.டி.பி. உயரவில்லை; மாறாக, வங்கிகளின் வாராக்கடன்தான் ஊதிப் பெருத்தது. ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த மோடி, அதற்கு நேரெதிராகப் பொதுமக்களுக்கு ஏற்கெனவே கிடைத்துவந்த வேலைவாய்ப்புகளையும் தட்டிப் பறித்தார்.

கருப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிக்கப் போவதாகக் கூறிக் கொண்டுவரப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், சரக்கு சேவை வரி விதிப்பும் விவசாயத்தையும், கைத்தொழிலையும் நாசப்படுத்திய சாதனையைச் செய்தன. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, திறன் மிகு இந்தியா என அடுத்தடுத்து மோடி அரசு அறிவித்த ஒவ்வொரு திட்டமும் வெறும் பஞ்ச் டயலாக்குகள் என்பதைத் தாண்டி வேறு எதையும் சாதிக்கவில்லை.

படிக்க:
♦ மோடியின் பணமதிப்பழிப்பு : எஸ்கேப் ஆகிறார் குருமூர்த்தி !
♦ மோடி – ஜிஎஸ்டி – பணமதிப்பழிப்பு – தீபாவளி : மாபெரும் சர்வே முடிவுகள்

ஊதிப் பெருக்கப்பட்ட 2ஜி ஊழலைவிட மிகப்பெரும் ஊழலாகப் பரிணமித்திருக்கிறது, வாராக் கடன் தள்ளுபடி. போஃபர்ஸ் ஊழலைவிட மிகப்பெரும் முறைகேடாக அம்பலமாகியிருக்கிறது ரஃபேல் போர் விமான பேர ஒப்பந்தம். “நானும் தின்ன மாட்டேன் மற்றவர்களையும் தின்னவிட மாட்டேன்” என வசனம் பேசி ஆட்சிக்கு வந்த யோக்கியவான் மோடியின் இலட்சணம் இதுதான்.

கடந்த நான்காண்டுகளில் பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரிகளின் மூலம் மைய அரசு பொதுமக்களிடமிருந்து அடித்த கொள்ளை ஏறத்தாழ 7.5 இலட்சம் கோடி ரூபாய். இந்த ஆண்டுக்கான வருமானத்தையும் சேர்த்தால், அவ்வரிக் கொள்ளை மட்டும் 10 இலட்சம் கோடி ரூபாயை எட்டுகிறது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மாதமொன்றுக்கு 80,000 கோடி ரூபாய் முதல் ஒரு இலட்சம் கோடி ரூபாய் வரை மறைமுக வரியாக வருமானம் ஈட்டி வருகிறது, மோடி அரசு. நேர்முக வரியாக 10 இலட்சம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இவற்றுக்கு அப்பால் மைய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு 50,000 கோடி ரூபாய் வரை இலாப ஈவாக அளிக்கின்றன.

வருடமொன்றில் சற்றொப்ப 20 இலட்சம் கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டும் மோடி அரசுக்கு, ரிசர்வ் வங்கியிடம் ஒரு இலட்சம் கோடி ரூபாயைக் கேட்க வேண்டிய தேவையென்ன? கடந்த நான்காண்டுகளில் வசூலிக்கப்பட்ட வரி வருமானம் – ஏறத்தாழ 80 இலட்சம் கோடி ரூபாய் எங்கே மாயமானது?

வரி வருமானத்தின் பெரும்பகுதியை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவழிப்பதாகக் கணக்குக் காட்டுகிறார்கள், சங்கிகள். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றிய கூலித் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய கூலியைக்கூட ஒழுங்காகக் கொடுக்காமல் நிலுவை வைத்திருக்கும் மோடி அரசு, மக்கள் நலத் திட்டங்களில்தான் பணத்தைக் கொட்டுகிறதாம், அதை நாம் நம்ப வேண்டுமாம்!

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் திணிக்கப்பட்டிருக்கும் சங்கிகள் (இடமிருந்து) குருமூர்த்தி, சச்சின் சதுர்வேதி மற்றும் சதீஷ் மராத்தே.

மோடி ஆட்சியில் ஒருபுறம் மக்கள் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் வெட்டப்படுகின்றன. இன்னொருபுறமோ மக்கள் நலத் திட்டம் என்ற பெயரில் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு வரிப் பணம் மொய்யாக எழுதப்படுகிறது. “பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஊழலைக் காட்டிலும் மிகப் பெரிய ஊழல்” எனக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், பத்திரிகையாளர் சாய்நாத்.

மகாராட்டிரத்தில் 2.8 இலட்சம் விவசாயிகள் சோயா பயிரிட்டுள்ளனர். இப்பயிர்க் காப்பீட்டிற்காக ஒரேயொரு மாவட்டத்தில் மட்டும் விவசாயிகளும் மத்திய மாநில அரசுகளும் இணைந்து ரிலையன்ஸ் இன்சூரன்சுக்கு செலுத்திய பிரிமியம் தொகை 173 கோடி. மாவட்டத்தில் மொத்த பயிரும் அழிந்துபோனாலும்கூட, விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் காப்பீடு நிறுவனம் 30 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாகத் தரும். எந்தவொரு முதலீடும் செய்யாமல் ரிலையன்சுக்குக் கிடைக்கும் இலாபம் 143 கோடி ரூபாய். ஒரு மாவட்டத்தின் கணக்கு இது. மாநிலம் முழுவதற்கும், நாடு முழுவதற்கும் கணக்குப் போட்டுப் பாருங்கள், இச்சட்டபூர்வ ஊழலின் பரிமாணம் தெரியும் என்கிறார் அவர்.

மோடி அரசு, இப்பொழுது, தேர்தலை முன்னிட்டு, மக்களின் பணத்தை ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்கும் மானியமாக எழுத முயலுகிறது. ரிசர்வ் வங்கியிடமுள்ள உபரிக் கையிருப்பைத் தட்டிப் பறித்து, அந்தப் பணத்தைக் கொண்டு ஏதோவொரு கவர்ச்சித் திட்டத்தை அறிவித்து எதிர்வரும் தேர்தல்களில் தனது வெற்றியை உத்தரவாதப்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகிறது. இந்த அயோக்கியத்தனத்தை எப்படி அனுமதிக்க முடியும்?

***

ங்கிகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கடன்களை வாரி வழங்க வேண்டும், அக்கடன்களை அவர்கள் திருப்பிச் செலுத்துவதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கக்கூடாது” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் கடன் கொள்கை!

கார்ப்பரேட் நிறுவனங்களின் கழுத்தில் துண்டைப் போட்டு, அக்கடன்களை வசூலிக்க முயற்சி செய்தார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் ரகுராம் ராஜனுக்குப் பதவி நீட்டிப்பு வழங்க மறுத்தது, மோடி அரசு.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்.

பா.ஜ.க.வின் சமூக அடித்தளமான வணிகர்கள், சிறுதொழில் அதிபர்களைக் கவருவதற்காக அறிவிக்கப்பட்ட முத்ரா கடன் திட்டம், பொதுத்துறை வங்கிகளின் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் இன்னொரு சுருக்குக் கயிறு என எச்சரித்திருக்கிறார், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் முன்பாக, வாராக் கடன் வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பட்டியல் இட்டு, அவை குறித்து ஒரு பல்நோக்கு விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தின் மீது இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் மோடி, இப்பொழுது உர்ஜித் படேல் வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையையும் ரத்து செய்யுமாறு மிரட்டுகிறார். “மோடியோடு ஒத்துழைக்காவிட்டால் பதவி விலகிச் செல்” என உர்ஜித் படேலை வெளிப்படையாகவே அச்சுறுத்துகிறார்கள், சங்கிகள்.

தனியார்மய-தாராளமய காலக் கட்டத்தில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் என்பது பன்னாட்டு ஏகபோக முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது அன்றி வேறொன்றுமில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பட்ஜெட் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் இந்தச் சுதந்திரம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, மோடியின் ஆட்சியில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் எந்த இலட்சணத்தில் இயங்கியது என்பதும் நாம் அறியாத இரகசியமல்ல.

உர்ஜித் படேல் குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பதோடு, ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் என்ற காரணங்களுக்காகவே ரகுராம் ராஜனுக்கு அடுத்து ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் மோடியின் ஆள் என நம்பப்பட்டதை நிரூபிக்கும் வண்ணம், மோடி அரசு இரவோடு இரவாக இந்திய மக்கள் மீது நடத்திய பணமதிப்பழிப்பு தாக்குதல் நடவடிக்கையை மறுபேச்சின்றி ஆதரித்தார்.

படிக்க:
♦ கார்ப்பரேட் வாராக்கடன் விவரங்கள் வெளியிட முடியாது – ரிசர்வ வங்கி
♦ நீரவ் மோடி – வங்கி மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் எது ?

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த குருமூர்த்தி, சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி ஆகியோர் நியமிக்கப்பட்டதையும், அக்கும்பல் மோடியின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்ததை எதிர்த்துவந்த காரணத்திற்காக நாச்சிகேட் மோர் இயக்குநர் குழுவிலிருந்து நீக்கப்பட்டதையும் சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டார்.

எனினும், வாராக் கடன்களை வசூலிப்பதிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் புதிய கடன்களை வழங்குவதிலும் மோடி அரசோடு ஒத்துழைக்க மறுக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகவே உர்ஜித் படேல் மீது ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆத்திரம் கொண்டிருப்பதோடு, அவரை மாற்றிவிட்டு வேறொரு தலையாட்டி பொம்மையை ஆளுநராக நியமித்து, ரிசர்வ் வங்கியைத் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் திட்டமிடுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், ரிசர்வ் வங்கியை, ரிலையன்ஸ் வங்கியாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். அத்திட்டம் நிறைவேறினால், பொதுத்துறை வங்கிகளும், அதிலுள்ள மக்களின் சேமிப்பும் கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக் களமாக மாற்றப்படும். பொதுத்துறை வங்கிகளைச் சட்டபூர்வமாகத் தனியார்மயப்படுத்தாமலேயே, அவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் கைகளில் ஒப்படைத்துவிடும் சதி அரங்கேற்றப்படும்.

– ரஹீம்
புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

பகுத்தறிவாளரின் பகுத்தறியும் தன்மை கேள்விக்குள்ளாகும் போது … | அன்னா

4
அன்னா

னது நாத்திகப் பயணம் ஆரம்பத்தில் கடவுளின் இருப்பைக் கேள்வி கேட்பதில் தொடங்கவில்லை. ஏன் மதங்களை வலுவாகக் கடைப்பிடிக்கும் அநேகமான சமூகங்களில் பெண்களின் நிலை மிகக் கீழ்த்தரமாக இருக்கிறதென்ற தேடலே முதல் படியாக இருந்தது. பள்ளிக் காலத்தில்  இராமாயணத்தில் சீதையைத் தீக்குளிக்கச் சொல்வது எந்த வகையில் நியாயம், வன்புணர்ந்த இந்திரனுக்கு எதுவும் தண்டனை கொடுக்காமல் அகலிகையின் மேல் ஒரு தவறும் இல்லாத போது, அவளை ஏன் கல்லாக்க வேண்டும் போன்ற கேள்விகள் இருந்தும் மதங்களையோ மதப் புத்தகங்களையோ பள்ளிக் காலங்களில் ஆழமாகப்  படித்ததோ, சிந்தித்ததோ இல்லை, அதற்கு நேரமும் இருக்கவில்லை. அப்போது எனக்குப் பெரியாரைத் தெரிந்திருக்கவில்லை.

Dawkins

அவ்வாறான தேடலில் முதலில் வாசித்த புத்தகங்களில் ஒன்று Genocide of women in Hinduism (இந்துமதத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட பெண்கள்) என்ற சீதனத்திற்காகக் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரி எழுதிய புத்தகம்.  அதன் பின்னான தேடலிலேயே எனக்கு முதலில் Dawkins – டாவ்கின்ஸ் -ஜப் பற்றித் தெரிந்தது.  2011 வரை வந்த‌ Dawkins இன் எல்லா புத்தகமும் என்னிடம் உண்டு.  The God Delusion – டி காட் டிலியூசன் புத்தகமெல்லாம் ஒரு இரண்டு, மூன்று நாட்களிலேயே வாசித்து முடித்தது, அதன் பின்  The Greatest Show On Earth – தி கிரேட்டஸ்ட் ஷோ ஆஃப் எர்த் – பிரசுரித்த பின் நடந்த book tour (புத்தக சுற்றுலா)இல் நியூசிலாந்து வந்த போது போய்ப் புத்தகத்தில்  autograph (கையெழுத்து) வாங்கியது, பின் 8-12 வயதுச் சிறுவர்களுக்காக The Magic of Reality (தி மேஜிக் ஆஃப் ரியாலிட்டி) புத்தகம் வெளிவந்த போது என் மகனுக்கு மூன்றே வயதான போது, அவனுக்கு நானே வாசித்துக் காட்டலாம் என்று வாங்கியதும் நினைவில் உள்ளன. அந்தளவு பிடித்திருந்தது Dawkins இன் புத்தகங்கள்.

அதன் பின் 2011 ஆண்டே  Dawkins இன் பால்வாத, இன வாதக் கருத்துகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கியது.  இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் எந்தளவுக்கு ஒடுக்கப்படுகிறார்கள் – இவர்கள் மேலைத்தேய நாடுகளில் சொகுசாக இருந்து கொண்டு தமது பாலியல் ஒடுக்குமுறையைக் கதைக்கிறார்கள் என்ற தொனியில் தொடங்கி, முஸ்லிம்களுக்கு நோபல் பரிசுகள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கவில்லை, அதனால் வெள்ளையர்களே புத்திசாலிகள் என்ற தொனியில் கதைத்தது, சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்கள் எல்லாம் பெரியதாக அவர்களைப் பாதிக்காது என்றது, பாலியல் வன்முறையாளர் எனக் குற்றம் சாட்டப்பட்ட  தனது பிரபல நண்பர்களின் பக்கம் பேசியது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

படிக்க:
கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் !
ஆரியபட்டரின் அறுபதாவது சீடர் ஸ்டீபன் ஹாக்கிங் !

முதலில் மிகுந்த அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. Oxford University (ஆக்ஸ்போர்டு பல்கலை) இல் Professor for public understanding of science (அறிவியலின் பொதுப்புரிதல் துறை பேராசிரியர்) ஆக இருந்து கொண்டு எப்படி இவ்வாறு சிந்திக்கலாம். ஒரு விஞ்ஞானிக்குத் தானும் மனிதன், தனக்கும் எத்தனையோ bias (பக்கச்சார்பு) இருக்கும். அதனால் கதைப்பதை, அதுவும் ஒரு பெரிய பதவியில் இருந்து கதைப்பதை சரியா எனச் சிந்தியாமல், கொஞ்சமும் பொறுப்பற்று நடப்பதை ஏற்றுக் கொள்ள கஷ்டமாகவே இருந்தது.  Dawkins ஆல் தான் நாத்திகரானேன் என்று சொல்ல முடியாது. ஆனால் Dawkins இன் எழுத்துகள் எனது சிந்தனையை, மதவாதக் கருத்துகளுடன் விவாதிக்கும் திறனை விருத்தியாக்க மிகவும் உதவியது என்றால் மிகையில்லை.. ஆனால் 2011-க்குப் பின் Dawkins இன் புத்தகங்கள் எதுவும் வாங்கியதில்லை.

Lawrence Krauss. Krauss

Dawkins இன் பின் அந்த லிஸ்டில் இப்ப பல விஞ்ஞானிகள் வந்தாயிற்று. தீவிர Dawkins ரசிகையாக இருந்த காலத்தில் தெரிய வந்த மற்ற ஒருவர் Lawrence Krauss (லாரன்ஸ் கிராஸ்). Krauss இன் A Universe from Nothing book tour க்கும் போயுள்ளேன். எத்தனையோ பாலியல் குற்றச்சாடுகளுக்குப் பின் இப்போ அண்மையிலேயே Krauss ஜ‌ப் பதவி நீக்கம் செய்துள்ளார்கள். பிரபல விஞ்ஞானிகளில் முதலில் தனது செய்கைகளுக்கு கொஞ்சமாவது விளைவுகளைச் சந்தித்தது Krauss தான் என நினைக்கிறேன்.

Richard Feynman (ரிச்சர்டு ஃபெய்ன்மென்) மற்றொரு பெண் வெறுப்புக் கருத்துகளை, பழக்க வழக்கங்களைக் கொண்ட‌ பிரபலமான இயற்பியலாளர். இப்போது உயிருடன் இல்லை. Feynman இன் கருத்துகளையும் பல தளங்களில் பகிர்ந்துள்ளேன். எனது வலைத்தளத்தில் இப்பவும் Feynman இன் Quotes (மேற்கோள்கள்) இருக்கிறதென்று நினைக்கிறேன். நீக்க வேண்டும்.

Richard Feynman

நான் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு செய்யும் காலங்களில் எனக்குப் மிகப் பிடித்த பொழுது போக்கு, மதவாதிகளுடன் அறிவியல் விவாதிப்பது. என் வலைப்பக்கத்திலேயே பல பதிவுகள் எழுதியுள்ளேன்.  In fact, பல சமயங்களில் அவர்களின் பக்கங்களில் எனது எதிர்க்கருத்துகளை வெளியிட மாட்டார்கள் என்பதால்தான் வலைப்பக்கமே தொடங்கினேன் என்று கூடச் சொல்லலாம். அப்பெல்லாம் இவர்களின் எழுத்துகள் எனது விவாத முறையை நெறிப்படுத்தி இருக்கின்றன. இவர்கள் இவ்வாறு பெண் வெறுப்பாளர்களாக, இனவாதிகளாக, பாலியல் வன்முறை செய்பவர்களாக இருப்பார்கள் எனத் துளி கூட எண்ணவில்லை.

அறிவு கொஞ்சம் முதிர்ச்சி அடையத் தான் விளங்கியது மதங்களைக் கடுமையாகப் பின்பற்றும் சமூகங்கள் மட்டுமல்ல எல்லா சமூகங்களிலும் எல்லா மனிதர்களிடையேயும் பால் ஒடுக்குமுறையாளர்களும் இனவாதிகளும் இருக்கிறார்கள் என்று. Charles Dawkin, Albert Einstein உட்பட‌விஞ்ஞானிகள் கூட இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.

படிக்க:
அறிவியலா? இறையியலா? புதிய கலாச்சாரம் செப்டம்பர் வெளியீடு
சாகித்ய அகாடமி புகழ் ஆயிஷா நடராஜனின் உண்மை முகம்

சமுதாயத்தில் நாம் காணும் பல இன, பால், சாதி சமத்துவமின்மைகளுக்கு முக்கியக் காரணம் வரலாற்று ரீதியாக, ஆண்டாண்டு காலமாகத் தொடரும் பாகுபாடுகள் தானே ஒழிய‌, உயிரியல் அல்ல.

அன்னா
(கட்டுரையாளர் குறிப்பு :  மாதவிடாய், கருப்பை, கருத்தரித்தல் தொடர்பாக உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் உயிரியலாளர் மற்றும் பெண்ணியவாதி. கருத்தாடல் பக்கத்தில் “அறிவியல்-பெண்ணியம்-சமூகம்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்)

கஜா புயல் : எங்களுக்கு மட்டும் ஆசையா இப்படி ரோட்டுல நின்னு சாப்பிடுவதற்கு !

முத்துப்பேட்டையிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கிராமம் ஆலங்காடு. அப்பகுதியின் தொடக்கமான செட்டித்தெரு பகுதியில் மக்கள் கூட்டமாக உணவு சமைத்து அதனை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளே சோற்றுக்கு வழியில்லாது தவித்துவரும் இந்த நேரத்தில் கூலி விவசாயிகளின் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அச்சாலையில் போகின்ற வாகனங்கள் அனைத்தின் முன்பும் கைகாட்டி நிறுத்துகின்றனர். அவற்றில் பல இவர்களைப் பார்த்ததும் வேகமெடுக்கின்றன. கிட்டத்தட்ட அவர்களை வாகனங்கள் இடித்துவிடும் என்ற நிலை வரும் நேரத்தில் விலகி விடுகின்றனர். சில வாகனங்கள் வேகத்தை குறைத்தால் அதில் நிவாரணப் பொருட்கள் ஏதேனும் தங்களுக்கு கிடைக்குமா என அவர்களிடம் கேட்கின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே கிடைத்த பொருட்கள் இருப்பின் அந்த வாகனத்தை அனுப்பி வைக்கின்றனர். பல ஊர்களில் இருந்து வரும் தன்னார்வலர்கள் ஒவ்வொருவரிடமும் தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்பதை கூறி நிற்கின்றனர்.

மக்களிடம் கேட்டதற்கு,

எங்கள் பகுதி முழுவதும் அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் விவசாயக் கூலிகள் நிறைந்த பகுதி, எங்களின் உடமைகள் அனைத்தும் சேதமாகிப் போய்விட்டது. பெரும்பாலும் கூரை வீடுகள். புயலில் கூரைகள் அனைத்தும் பறந்து விட்டன. அதுமட்டுமல்ல சமைத்து சாப்பிடுவதற்கு எந்தப் பொருளும் இல்லை. அனைத்தும் நாசமாகிப் போய்விட்டது. இங்கு இப்பகுதியில் உள்ள மாடி வீடுகளில் தான் புயலின் போது அனைவரும் தஞ்சமடைந்தோம். அதன் பின்னர் கடந்த ஏழு நாட்களாக எங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. அமைச்சர்கள் அதிகாரிகள் இவர்களெல்லாம் யாரைப் பார்வையிட செல்கிறார்கள் எனத் தெரியவில்லை. நாங்களும் கிடைத்த பொருள்களை வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தோம்.

அதுவும் கூட ஒவ்வொருவரும் தங்கள் கையில் கிடைக்கும் பணத்தை சேர்த்துப் போட்டு பொருட்கள் வாங்கி, ஊருக்கு மையமான இடத்தில்  உணவு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். ஆனால் இன்று அவர்களிடம் எஞ்சியிருந்த பொருட்களும் காலியாகி விட்டது. சிலர் தங்களிடம் இருந்த கடைசிப் பணத்தையும் போட்டுவிட்டனர். இந்த நிலையில்தான் ஈ.சி.ஆர். சாலையில் அனைவருக்கும் தெரியும்படி உணவு சமைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

எப்படியாவது தங்களின் துயரம் அந்த வழியாகச் செல்பவர்களுக்கு தெரியாதா? என்ற ஏக்கத்தை அவர்கள் சொல்லியதில் இருந்து உணர  முடிந்தது.

அப்படி இருந்தும் கூட யாரும் வாகனத்தை நிறுத்தி எந்த நிவாரணப் பொருளும் தராத காரணத்தால் தான் தாங்கள் இப்போது அனைத்து வாகனங்கள் முன்பும் கைகாட்டி ஏதாவது நிவாரணப் பொருள் கிடைக்குமா என கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

நாங்கள் அப்பகுதியை நெருங்கும் போதுதான் நாம் தமிழர் கட்சியின் நிவாரண வாகனம் சென்றிருக்கிறது. அதனை மறித்து தங்கள் நிலைமையை சொன்னபிறகு அதிலிருந்த ஒருமூட்டை அரிசியை அவர்களுக்கு தந்திருக்கின்றனர்.

நாம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில்தான் கவர்னரின் வாகனமும் கடந்து சென்றது. அதற்கு சற்று முன்னர்தான் டி.டி.வி. தினகரனின் வாகனமும் சென்றிருந்தது. இவ்வாறு பலரும் தங்களை கடந்து செல்கின்றனர்.

“எல்லாரும் இங்க மெயின் ரோட்டிலேயே பாத்துட்டு போறானுவோ.. உள்ள கொஞ்சம் எறங்கி பாத்தாதானே எங்க நெலமை தெரியும்… போட்டோ புடிக்கிற நீங்களும் கூட இங்க மட்டுதான் வார்ரீங்க.. வாங்க உள்ள போயி பாக்கலாம் எங்க நெலமைய சொல்லுங்க எல்லாருக்கும் தெரியட்டும்…” என அழைத்துச் சென்றனர். அங்கு ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளின் சேதத்தைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தனர்.

அரசு நிவாரணம் பற்றி …

“அங்காடியில (அரசு நியாயவிலை அங்காடியில்) மொதல்ல ரெண்டு மூட்ட அரிசி, பருப்பு எண்ணெ.. இதெல்லாம் குடுத்தாங்க அதுக்கப்புறம் எங்களுக்கு வேற எதுவும் குடுக்கல.. காய்கறி, மளிகை சாமான் எல்லாம் நாங்கதான் காசு போட்டு ஏற்பாடு செஞ்சோம். நீங்களே சொல்லுங்க ரெண்டு மூட்ட அரிசி எத்தனை நாளுக்கு போதுமானதா இருக்கும்? சொல்லுங்க நாங்க ஒரு நாப்பது குடும்பத்துக்கு மேல இங்க இருக்கோம்..” என நம்மையே திருப்பிக் கேட்டனர்.

“அது மட்டுமில்ல அரசாங்கம் எங்களுக்கு சொன்ன நிவாரணத்த இன்னும் தரவே இல்ல. பத்துகிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், வேட்டி, புடவ எதுவும் இன்னும் தர ஆரம்பிக்கல அத குடுத்தாக்கூட நாங்க வீட்டுலயே சமச்சி சாப்பிட்டுகிட்டு இருப்போம். எங்களுக்கு மட்டும் என்ன ஆசையா இப்புடி ரோட்டுல நின்னு சாப்புடனமுன்னு.” என கொந்தளித்தனர்.

படிக்க:
கஜா புயல் : எடப்பாடி பறந்து பார்த்தார் – மோடி வராமலேயே பார்த்தார்
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

உண்மையில் பலரும் தன்னார்வமாக வந்து இவர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் தேவையான உதவிகளை தங்களால் இயன்ற அளவு செய்கின்றனர் அது தற்போது அவசியமானதுதான். அதே நேரத்தில் தலைமைச் செயலர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரை அரசு ஊழியர் வலைபின்னலை வைத்துள்ள அரசு அவர்களை இன்று கையேந்த வைத்துள்ளது. இந்நிலைமை பொறுக்காமல்தான் பல இடங்களில் விவசாயிகள் போராட ஆரம்பித்துள்ளனர். ஆளும்கட்சி அமைச்சர்களை விரட்ட ஆரம்பித்திருக்கின்றனர். இந்த புயல் மக்களுக்கு பேரழிவை மட்டுமல்ல ஒரு பாடத்தையும் தந்துவிட்டு சென்றுள்ளது.

தற்போது எப்படி தங்கள் வீடுகளுக்கு மேற்பூச்சு செய்தோ அல்லது ஒருபக்கம் மட்டும் தார்பாய் கட்டியோ வாழ முடியாது என்பதோடு வீட்டை மறுகட்டுமானம் செய்ய வேண்டியது எவ்வளவு அவசியமோ, அது போல இந்த அரசிடம் தமது உரிமைகளை போராடித்தான் பெறவேண்டும் என்ற அவசியத்தையும் மக்கள் கற்று வருகின்றனர்.

டிகிரி காஃபி டிஸ்கசனும் ஹீரோ அந்தர குருசாமி உருவாக்கமும்

0

காரைக்குடி கோலா உருண்டையும் கோடம்பாக்கம் கதை இலாகாவும் ! நாடகம் பாகம் 2

முதல் பாகத்தின் இணைப்பு : பாகம் – 1

முதன்மைப் பாத்திரங்கள்: எழுத்தாளர் சுயமோகன், இயக்குநர் முறுக்குதாஸ், முறுக்குதாஸின் தனி உதவியாளர்கள் ஜகன், ஜோதி. நான்கு வருங்கால இயக்குநர்கள் பீட்டர், பல்லவன், தொல்காப்பியன், ஜிப்பா மணி மற்றும் தயாரிப்பு நிர்வாகி நிக்கில், தயாரிப்பு உதவியாளர் – கற்பூரம் என்ற செல்லம்.

காட்சி 7:  கதை துவங்கும் படலம்
இடம்: பிஷர்மேன் கோவ் விடுதியின் லக்சுரி அறை
நேரம்: மாலை 8 மணி

உதவி இயக்குநர்கள் நால்வரோடு, இயக்குநர் முறுக்குதாஸ் மற்றும் எழுத்தாளர் சுயமோகனும் விடுதி அறையின் முதல் அறையில் திண்டு மெத்தையில் அமர்ந்திருக்கின்றனர். திண்டின் மூலையில் இயக்குநரும், வயிற்றுப் பகுதியில் நான்கு இயக்குநர்களும் அமர்ந்திருக்கின்றனர். மூட்டு வலி காரணமாக சுயமோகன் மட்டும் சிங்கிள் சீட் சோபாவில் காலை நீட்டியபடி அமர்ந்திருக்கிறார்.

தொல்காப்பியன்: (சுயமோகனைப் பார்த்து) டைரக்டர் சாருக்கு ஃபேவரேட் நம்பர் 7-தான். கூட்டு நம்பர் 7 வர்ற மாறி ஃபர்ஸ்ட் ஃப்ளோர் 106, செகண்ட் ஃப்ளோர் 205, தெர்டு ஃப்ளோர் 304 கிடைக்கல. நிக்கில்-கிட்ட முன்னமே சொல்லியும் கோட்ட விட்டார். கடைசியல 203-ன்னு ஐஞ்சாம் நம்பர்தான் கிடைச்சிருக்கு! இது பெரிய குத்தமில்ல. “மாஜினி” படத்துக்கும் கூட்டு நம்பர் ராசி எண் 7 கிடைக்கலே. அவசரத்துக்கு டிரைடண்ட் ஓட்டல்ல இதே ஐஞ்சாம் நம்பர்லதான் ரூம் போட்டோம். படமும் மரண மாஸா ஓடிச்சு!

சுயமோகன்: பரவாயில்லை தொல்காப்பியன், அதிர்ஷடம்கிறது நம்பர்ல இல்லே, நம்ம கிரியேட்டிவிட்டியில இருக்குறத அழகா சொன்னீங்க. மகாபாரதத்துலயும் எண்கள், அவைகள் சொல்ற நல்ல காலம், கெட்ட காலத்துக்கு நிறைய தத்துவம் இருக்கு.

சூதாட்டத்துல தோத்த பிறகு பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழவும், ஓர் ஆண்டு யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழவும் ஒப்பந்தம் போட்டாங்க. மொத்தம் 14 வருசத்தை முடிச்சுட்டு வந்து கேட்டால், நாட்டையும் செல்வத்தையும்  அவங்களுக்கு தருவதா கௌவரர்கள் அக்ரிமெண்ட் போட்டாங்க.

பாரத மரபுல ராமாயண வனவாசம் 12 வருசம், மகாபாரத வனவாசம் 13, 14 வருசம் இந்த மூன்று எண்களுமே ரொம்ப முக்கியம். வெஸ்டர்ன் கன்ட்ரிஸ்ல பாத்தீங்கன்னா எல்லா ஓட்டலுங்கள்ளேயும் 13-ஆம் நம்பர் அறை இருக்காது. நம்ம நாட்டுலயம் அந்த காலனிய அடிமைத்தனத்தோட விருட்சமாக அதை ஃபாலோ பண்றாங்க. நம்பர் 13-ன்றது கிறிஸ்டியானிட்டி மரபுப்படி சாத்தானோட எண்.

(பிறகு தான் படித்திருந்த விக்கி மேட்டர் திடீரென நினைவுக்கு வர உடனே ஐ ஃபோனில் எடுத்து வாசிக்கிறார்.)

Some believe this is unlucky because one of those thirteen, Judas Iscariot, was the betrayer of Jesus Christ. From the 1890s, a number of English language sources relate the “unlucky” thirteen to an idea that at the Last Supper, Judas, the disciple who betrayed Jesus, was the 13th to sit at the table.

இப்படித்தான் ஏசுவைக் காட்டிக் கொடுத்த துரோகி யூதாஸ் அந்த விருந்து மேசையில 13-ஆவது இடத்துல உக்காராறு. அதான் பின்னாடி செமிட்டிக் மத வரலாற்றுல துரதிர்ஷ்டமான நம்பரா மாத்தீட்டாங்க.

தொல்காப்பியன் மைண்ட் வாய்ஸ்: டைரக்டரை குளிப்பாட்டுறதுக்கு நம்ம குத்தாலத்து துண்டோட வந்தா இந்த ஆள் மெயின் ஃபால்ஸ் அருவியே எடுத்துணு வர்ராறு….

முறுக்குதாஸ்: (சுயமோகனைப் பாத்து) சார், இதே டீடெயிலை நம்ம ஹீரோ கேரக்டருல எடுத்துனு வந்தீங்கன்ன படம் எங்கயோ போகும். அடுத்த புராக்ஜ்ட்ல, சூப்பர் ஸ்டார் சாருக்குதான் நம்ம கால்ஷீட்டு!

ரைட்டர் சார், இப்ப உங்ககிட்ட ஒண்ணு சொல்றேன். நம்ம படத்தோட ஹீரோ சார் 2:30 மணி நேர படத்துக்காக மட்டும் நம்மகிட்ட வர்ல! கால்ஷீட்டும் கொடுக்கல. அவர் மைண்ட ரீட் பண்ண லெவல்ல வெச்சு நான் சொல்றேன். அவரு மைண்டை ரஜினி சாரோட “காலா” படம்தான் டிஸ்டர்ப் பண்ணுது. கபாலியால ஏற்கனவே நம்ம ஹீரோ மெர்சலாயிட்டாரு!.

கபாலி, காலா படத்தால ரஞ்சித்தோட கேரியர் பிரமோட் ஆச்சோ இல்லையோ, சூப்பர் ஸ்டாரோட கேரியர் கோடம்பாக்கத்தலேர்ந்து கோட்டைக்கு தாவிருச்சு! நம்ம ஹீரோ தளபதி சார், அதை கரெக்டா ஸ்மெல் பண்ணிட்டார். அவர் டேஸ்ட்ட கதையில நாமளும் கரெக்டா ஃபாலோ பண்ணனும் சார்!

ஜிப்பா மணி: சரியான இடத்துல ஸ்பீடு பிரேக்க போட்டீங்க டைரக்டர் சார். இல்லேன்னா கதையில கவுந்திட்டிருப்போம் சார். ஹீரோவுக்குன்னு நினைச்சு கோக்கு மாக்கா ஒரு ஒன்லைன்ல சிக்கியிருப்போம். உங்க ’தாட்டு’-ன்றது ரஜினி திங்க் பண்ற லெவல் சார்! விளையாட்டுக்கு சொல்லலை, வரலாற்ற சொல்றேன்!

இருபது வருசத்துக்கு முன்னால ஒரு படம் பண்றதுக்கு சுந்தர் சி-யை கூப்புடுராறு ரஜினி சார்! அவராண்ட ரஜினி சார் ஒரு ஒன்லைன சொல்ராறு! அதான் சார் அருணாச்சலம் படம்! அந்தக் கதை சுந்தர் சி சாருக்கு சுத்தமா புடிக்கல. ஆனா ரஜின சாரண்ட அதக் காமிச்சிக்கல. “கதை சூப்பரோ சூப்பருன்னு” சொல்ராறு! காரணம், ரஜினி சாரப் பத்தி அவருக்கு பஞ்சு அருணாசலம் அண்ணேன் ஏற்கனவே சொல்லியிருக்காறு. சூப்பர் ஸ்டாரு எடுத்த முடிவ யாருக்காகவும் எதுக்காவும் மாத்திக்க மாட்டாறு! அத பிடிக்காதவங்க கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் அவங்க கூட டிராவல் பண்ண மாட்டாறு!

இது சுந்தர் சி சாருக்கு ஞாபகம் வந்து வாய உடாம உசாராணாறு! அதுனால அவர் அந்த படத்துக்கு டைரக்டரு ஆனாரு! அது மட்டுமில்ல, சூப்பர் ஸ்டார் சொன்ன கதைய பாலிஷ் போட்டு அவருக்கு புதுசா திருப்பிக் கொடுத்தாரு! ரஜினி சார் ஏற்கனவே நடிச்ச கதையெல்லாம் ஏழையா இருந்து பணக்காரனா ஆவாரு. இந்தக் கதையில இவர் பணக்காரனா இருந்து, செலவு பண்ணி ஏழையா ஆவாறு! புது ஒன்லைன் சார் இது!

முறுக்குதாஸ்: ரைட்டர் சார், இதான் சினிமா! ஒன்லைனே நம்மள பெரட்டிடும்! நம்மதான் உசாரா ஆவணும்! என்னோட முதல் படம் தீனா – தல சார் படம் 2001-ல வந்தது. இன்னமும் ஃபீல்டுல கிண்ணுண்ணு நிக்கறோம்ல. நாம சொல்லலை, நம்ம ஒர்க் சொல்லுது சார்!

அடுத்து ரமணா படத்துல விஜய்காந்த் சாரோட பொலிட்டிகல் கேரியருக்கு ஒரு டேக் ஆஃப் கொடுத்தோம்! அத வெச்சி புரட்சிக் கலைஞர் கோட்டையில கொடியேத்திருப்பாரு சார், கெடுத்தது அவரோட மச்சான் சதீஸ்!

சுயமோகன்: சரியா சொன்னீங்க சார்! உங்கள மாறி தமிழ் சினிமாவோட தலையெழுத்தை மாத்துன ஜாம்பவான்கள் எல்லாம் சொந்த சுகம், குடும்பம், குழந்தைங்கன்னு போயிருந்தா தமிழ் சினிமா நொடிஞ்சு போயிருக்கும். வாழ்க்கை, கலை வாழ்க்கை இரண்டுலயும் நம்மளோட உறவுகள பாத்து பாலன்ஸ் பண்ணனும் சார்! மகாபாரதம்கிற காவியமே இந்த உறவுச் சிக்கலில் இருந்துதான் வீரிட்டுக் கிளம்பிச்சு!

கீதையில பாத்தீங்கன்னா கிருஷ்ணன் “வருந்த தகாதவர்களுக்காக நீ வருந்துகிறாய். நீ  அறிவுடையவர் என்று சொல்லிக் கொள்பவர்களின் வார்த்தைகளைப் பேசுகிறாய். எனினும், உண்மையில் அறிவுள்ளவர்கள், இறந்தவர்களுக்காகவோ, வாழ்பவர்களுக்காகவோ வருந்துவதில்லை.

நானோ, நீயோ, மனிதர்களின் ஆட்சியாளர்களான இவர்களோ எப்போதும் இருந்ததில்லைன்னு” உறவுகளோட தற்காலிக சாஸ்வதத்தை அழகா விளக்குறார்.

முறுக்குதாஸ் மைண்ட் வாய்ஸ்: ஒண்ணுமே புரியலயே. ஒன்லைனுக்குள்ள போறதுக்குள்ள ஃபீல்ட விட்டே போயிருவேன் போலருக்கே!

முறுக்குதாஸ்: நீங்க சொல்றது நீட்டா இருக்கு சார். இதுல இருந்தே பல கதைங்களுக்கு ஒன் லைன பிடிக்கலாம்! ஆனா நம்ம கதையில ஹீரோ மண்ணுலதான் வாழ்றாரு! விண்ணுலகத்துல இருந்து வரல! முதல்ல நாம தரையில நிக்கணும் சார்! தூங்கும் போது கூட காலாட்டிக்கிணே இருக்கணும், இல்லாட்டி பாடை கட்டிருவானுங்க. அதான் சினிமா! உங்களுக்கு தெரியாதது இல்லே!

பல்லவன்:  ரைட்டர் சார்! இப்ப ட்ரண்டுக்கு சினிமா ஹீரோன்னா நம்ம பக்கத்து வீட்டு பையனாட்டம் இருக்கணும். கதைன்னா நம்ம வீட்டுல நடக்குற கதை மாதிரி ஃபீலாகணும்! இப்ப பேசறது உங்க சரக்குதான் சார். நீங்க எழுதாத கதையா? “அறம்” கதைங்கள்ள ஏதாச்சும் ஒன்னை திருப்பிப் போடுங்க சார்!

நம்ம கதை கள்ளவோட்டு கதை. அதால நல்ல ஓட்டு போட்டாலும் நாடு திருந்தாதுங்கிற மேட்டரை எந்தக் காரணத்துக்காகவும் இந்தக் கதைக்குள்ள நாம சொல்லக்கூடாது! இதான் சார் கதையோட அறம்! நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்ல! இதுல நீங்க லெஜ்ண்டு!

முறுக்குதாஸ்: பிடிச்சிட்டம்பா பல்லவா! இப்ப நீ சொன்னத அதே டோன்ல திரும்பவும் சொல்லு! டக்குணு சொல்லு!

பல்லவன் மைண்ட் வாய்ஸ்: என்னா சொன்னேன், ஒண்ணுமே சொல்லலையே! ரைட்டருக்கு ஒரு பிரேக் போடப் போனா இப்ப கிணத்துல விழுந்த கதையாயிருச்சே!

சுயமோகன்: கத இப்பதான் தெளிவா ஒரு ஸ்படிகம் போல தெரியுது. சபரி நதியை ராமன் கடக்குறப்போ அந்த நதி சான்றோரின் அறிவு போல ஆழமாவும், பளிச்சுனு ஸ்படிகமாவும் ஓடியதுன்னு கம்பர் சொன்னது நம்ம கதைக்கும் பொருந்தும் சார்!

கள்ள ஓட்டை எதிர்க்குது நல்ல ஓட்டு. கோழைத்தனத்தை எதிர்க்குது தைரியம், கெட்டதை எதிர்க்குது நல்லது, வில்லனை எதிர்த்து நாயகன். அந்த எதிர்ப்புக்கு பலமா ஒரு அறத்த செட் பண்ற எல்லா வாய்ப்பும் நம்ம கதையில இருக்கு! இப்டியே கன்டினியூ பண்ணலாம் சார்!

முறுக்குதாஸ்: சூப்பர் சார்! தம்பி செல்லத்த சூடா டிகிரி காஃபிய எடுத்துணு வரச் சொல்லுங்க!

(நல்லவேளை நம்ம தலை தப்பியதென்று செல்லத்தை அழைக்க விரைகிறார் பல்லவன்)

சுயமோகன்: சார், நம்ம ஹீரோ பக்கத்து வீட்டு பையன் மாதிரின்னா லயோலா விசுவல் கம்யூனிகேசன்ல படிக்கிற மாதிரி வெக்கலாமா? என்னோட பையன் ஆஜிதன் இப்போ மணிசாருகிட்டதான் இருக்கான். அங்க லயோலா விசுவல் ஸ்டூன்ஸ் டெய்லி பத்து பேர் வந்து சான்ஸ் கேக்க கார்ல வருவாங்க. அவங்களோட கேரக்டர இழைச்சு செஞ்சுரலாம் சார்!

முறுக்குதாஸ்: சார், நம்ப படத்தோட பட்ஜெட் 150 கோடி! 200 வரைக்கும் அத இழுத்துகிணு போலாம்! ஹீரோவ யூ.எஸ்-ஐயும் தாண்டி எங்க தேடலாம்ணு யோசிக்கிறேன். ஆனா இப்போதைக்கு அமெரிக்காவ தவிர வேற பெட்டரான எடம் தெரியல. அங்க இருந்து வாரார் சார் ஹீரோ! ஓட்டுப் போடறதுக்கு மட்டும்தான் வராறு! ஓபனிங்கிலேயே ஒரு டிவிஸ்ட்ட போட்டு அங்கயே கட் பண்றோம்.

ஹீரோ தரை இறங்குற ஃபிளைட்டோட சவுண்ட் பேக்ரவுண்டுல கேக்குது. அப்போ மும்பை, டெல்லி, கல்கத்தா, பெங்களூரு எல்லா சிட்டியிலயும் கார்ப்பரேட் கம்பெனிங்க அர்ஜண்ட் மீட்டிங்க போடுறாங்க!

சுயமோகன்: (குறுக்கிட்டு) சார், அவரை நானோ டெக்னாலாஜியில நோபல் பரிசு வாங்குற நாமினேஷன்ல இருக்குறாரு. அப்டியே உலகம் வியக்குற ஒரு டேட்டா சயிண்டிஸ்ட்டா காமிக்கலாமா?

பீட்டர்: ரைட்டர் சார், அல்ரெடி ஷங்கர் சார் இதே காரக்டரை காட்டிட்டாறு. எந்திரன்ல ரஜினி சார், ரோபா சயிண்டிஸ்ட்டா வராறு.  நம்ம தளபதி சார, நோபல் சயிண்டிஸ்ட்டா போட்டா ஏஜ் செட்டாகாது! அவருக்கு யூத் கெட்டப்புதான் செட்டாகும்.

தொல்காப்பியன்: டைரக்டர் சார், சி.ஐ.ஏ படைக்கு கமாண்டோ பயிற்சி கொடுக்கிற பெரிய கமாண்டோவோ காட்லாமா? யூத்துக்கு யூத்து, பிரெயினுக்கு பிரெய்னுன்னு, எல்லாத்தையும் கட் ஷாட்ல கொண்டாந்துரலாம்.

ஜிப்பா மணி: ஏம்பா தொல்லு, சி.ஐ.ஏ கமாண்டோ என்னா ஜிப்பா போட்டுக்கினா வருவாறு? சிக்ஸ் பேக் பாடி, ஆறடி உயரம் வேணாமா? நம்ம ஹீரோவை, காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரித்தான் ஏத்துக்குவாங்க!

(அந்நேரத்தில் உதவியாளர் செல்லம் உள்ளே வந்து டிகிரி காஃபி கோப்பைகளை வைக்கிறார்.)

முறுக்குதாஸ்: இல்லப்பா மணி, இதெல்லாம் பல ஜானர்ல பாத்துட்டோம். இன்னும் புதுசா வேணும்பா! இங்க எல்லா சிட்டியிலயும் கார்ப்பரேட்காரங்க, மீட்டிங்கில என்ன பேசுவாங்க! ஹீரோவ பாராட்டியா, புகழ்ந்தா, இல்லே அவர வரவேற்கிறதுக்கா? அந்த இடத்துல ட்ரீட்மெண்ட் என்ன?

(உதவி இயக்குநர்கள் நால்வரும், சுயமோகனும் எது சொன்னால் சரியாக இருக்குமென்று மோட்டு வளையைப் பார்க்க நிமிர்ந்தனர். பிறகுதான் அனைவருக்கும் நாம் இருப்பது ஒரு நட்சத்திர விடுதியென்பது தெரிய வந்தது. இயக்குநர் கேட்ட கேள்விக்கு யார் முதலில் சரியாகச் சொல்வது என்ற போட்டிக்கான அவஸ்தை தொடர்ந்தது)

முறுக்குதாஸ்: இது எப்டின்னு பாருங்க. அமெரிக்காவுலேர்ந்து வர்ற நம்ம ஹீரோவப் பாத்து எல்லாரும் பயப்படறாங்க! டெரர்ராவுறாங்க! என்ன நடக்குமோன்னு த்ரில்லாவுறாங்க!

சுயமோகன் மைண்ட் வாய்ஸ்: வர்றது ஹீரோவா, வில்லனா? ரொம்ப கன்பியூஸ் பண்றாரே! இருந்தாலும் டைரக்டர் என்னமோ முடிவு பண்ணிருக்காரு! நமக்குதான் சிக்க மாட்டேங்குது.

சுயமோகன்:  சார், நீங்க சொல்லும் போதே ஒவ்வொரு ஃபிரேமும் த்ரில்லா இருக்கு. உண்மையிலேயே ப்ளைட்ல வர்றது ஹீரோவா, வில்லனான்னு இன்னம் எனக்கு தெளிவு வரலை சார்! உங்ககிட்ட நான் உண்மைய சொல்றதுல வெட்கப்படறதுக்கு என்ன இருக்கு!

முறுக்குதாஸ்: சார், நம்ம ஹீரோ கார்ப்பரேட்டையே காலி பண்ற ஒரு கார்ப்பரேட் கில்லாடி. யாரும் நினைச்சுப் பாத்துராத மண்ட! அவன் மூளையைச் சொல்றேன் சார்!

சுயமோகன்: இப்ப புரியுது சார், பிடிச்சுட்டேன் சார்! லைஃப் ஜாக்கெட்டயும் கொடுத்து கடல்ல தள்ளி விடுறீங்க! கில்லாடி சார் நீங்க! என்னோட குரு நித்ய சைதன்ய யதியும் இப்படித்தான் மனவெளி புரளுகின்ற அத்துவானக் காட்டுல தள்ளிவிட்டு பனித்துளியில பிரம்ம ரகசியத்தை பாக்குற டெக்னிக்கை சொல்லிக் கொடுப்பாறு! கலை வேறயா இருந்தாலும் நீங்களும் சிலையை ஆழமா செதுக்குறீங்க சார்!

பீட்டர்: அப்புறம் என்ன சார், எல்லா சிட்டியிலயும் எம்.பி.ஏ பிசினஸ் படிக்கிற ஸ்டூடன்ஸ் பேசிக்கிற மாதிரி டயலாக்க கடகடன்னு எழுதிடுவீங்க!

சுயமோகன்: ஆமாமா, ஏற்கனவே மனசுல எழுதிட்டேன். பெங்களூரு ஐ.ஐ.எம்.-ல ஒரு புரபசர் நம்ம ஹீரோவோட கார்ப்பரேட் சாதனைகளை ஸ்டூடன்சுகிட்ட பேசுறாரு. மும்பையில நம்ம ஹீரோவ ஃபாலோ பண்ற ஸ்டூடன்சுக்கு ஒரு அசைன்ட்மெண்ட்டே கொடுக்கிறாங்க. ஹைதராபாத்துல ஒரு சீமாட்டி ஹீரோ காலி செஞ்ச போட்டி பிராண்டுகளோட கதையை சொல்றாங்க… இப்படியே போயிடலாம் சார்.

(அப்போது ஃபோனோடு முறுக்குதாஸின் உதவியாளர் ஜகன் வருகிறார்)

ஜகன்: அமீர்கான் சார் கூப்புடுராறு சார்! ஏற்கனவே ரெண்டு வாட்டி பேசுனாறு. நீங்க பிசின்னு நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணல! ஹீரோ (தளபதி) சாரோட நீங்க புதுசா படம் பண்றீங்களாம், அதைப் பத்தி உடனே பேசணும்கிறார்!

முறுக்குதாஸ்: (சுயமோகனைப் பார்த்து) பாருங்க சார், இப்பதான் கதை ஓபனிங்க பிடிச்சோம். அதுக்குள்ள பாலிவுட்லேர்ந்து ரைட்ஸ் கேட்டு ஃபோன்!… பிரச்சினையே இதான் சார்! இந்த அன்புத் தொல்லதான் நம்மள நிக்காம உழைச்சுக்கிட்டே இருக்கச் சொல்லது!

ரைட்டர் சார், நீங்க என்ன மாதிரியே சிந்திக்கிறீங்க. நீங்க ஒரு இலக்கியவாதின்னு மணி சார் சொன்னப்ப நான் கொஞ்சம் பயந்தேன். இப்பதான் தெரியுது. எதுல ஊத்துனாலும் தண்ணி மாறி அந்த ஷேப்புக்கு கரெக்டா அடாப்ட் ஆகிக்கிறீங்க. எனக்கு கதை பிரச்சன வுட்டுது. இந்த ஓபனீங்க நாலு சீனா டெவலப் பண்றீங்க! வழக்கமான கதை ஸ்ட்ரெக்சர் உங்களுக்குத் தெரியும். இதுல முதல் பிளாட் என்னானு நான் யோசனை பண்ணி வெச்சிருக்கேன். அமீர் சார் விசயத்தை பாத்துட்டு சீக்கிரம் உங்களோட ஜாயிண்ட் பண்றேன்.

(முறுக்குதாஸ் உதவியாளருடன் அவசரமாக வெளியே செல்கிறார்.)

காட்சி முடிகிறது.

காட்சி 9 – கண்ணீர் ஊற்றுப்படலம்

இடம்: ஃபிஷர்மேன் கோவ் விடுதியோடு இணைந்திருக்கும் வங்க கடற்கரை
நேரம்: இரவு 10: 45 மணி

நான்கு உதவி இயக்குநர்களும் சுயமோகனும் மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் ஒரு பழக்கூடை இருக்கிறது.

பீட்டர்: ரைட்டர் சார், டைரக்டர் சார் அடுத்த சீன்ல, ஹீரோ எந்த பூத்துல ஓட்டு போடுறாருன்னு அந்த லொகேசன டீடெய்ல் பண்ணச் சொல்லிருக்கார். கார்ப்பரேட் சி.இ.ஓ-ங்கிறதால நாம அண்ணா நகர், அடையாறு, சாந்தோம், ஆழ்வார்பேட்டன்னு யோசிக்கலாமா?

தொல்காப்பியன்: பீட்டர், இது ஹீரோயின் அறிமுகம் இல்லை. ஹீரோ இன்ட்ரடக்சன். அதுவும் கார்ப்பரேட் கம்பெனிகளே பயந்து நடுங்குற ஒரு ஹீரோ. அவரை ஹை கிளாஸ் மக்கள் கொண்டாடுனாலும், ஆக்சுவலா அவரோட வேரப் பாத்தீங்கன்னா பக்கா லோ கிளாஸ். அது படிச்சவங்களும், பாமர மக்களும் மீட் பண்ற பாயிண்டா இருந்தா நல்லதுப்பா!

சுயமோகன்: அந்த இடம் ஹிஸ்டாரிக்கலாவும் இருந்தா கேரக்டர் கனம் கூடுமில்லையா?

ஜிப்பா மணி: சார் பின்னிட்டீங்க. லொகேஷனயே கேரக்டரா மாத்துறீங்க! நாங்க பரங்கிமலையில பத்துப்படி ஏறதுக்குள்ள எங்களுக்கு மூச்சு வாங்குது. நிமிந்து பாத்தா நீங்க எவரெஸ்ட்டுல அசால்ட்டா நிக்கிறீங்க!

சுயமோகன்: (மகிழ்ச்சியான படைப்பு அவஸ்தை + நிம்மதியான பெருமூச்சுடன் நிதானமாக பேச ஆரம்பிக்கிறார்) அது வந்து பாத்தீங்கண்ணா “கருப்பு யானை” நாவல் எழுதுறப்பவே மெட்ராசோட ஹிஸ்டரியை ஜீரணிச்சிட்டேன். சென்னை திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப்பள்ளிதான் சார் நம்ம ஹீரோ வோட்டுப் போடற பூத். அந்த ஸ்கூலுக்கு அப்படி என்ன சிறப்புன்னு கேக்கிறீங்களா?

“கருப்பு யானை” நாவல் ராயப்பேட்டை பிரஸ்ல பிரிண்ட் ஆயிகிட்டிருந்துச்சு. அதோட மை காயறதுக்குள்ள ஆழ்வார்பேட்டையில இருக்குற கமல் சார் வாங்கி படிச்சிருக்கார். இதை அவரோட 59-வது பிறந்த நாள் பார்ட்டியில எங்கிட்ட சொன்னாரு. அவரே படிச்ச ஸ்கூலு சார் அது.

அவரு மட்டுமா கர்நாட சங்கீத வித்வான் ஜி.என்.பாலசுப்ரமணியம், நோபல் பரிசு சந்திரசேகர், பழம்பெரும் நடிகர் எஸ்.வி.ரங்கா ராவ் இவங்கெல்லாம் நடமாடுன குருகுலம் சார் அது.

பீட்டர்: சார் என்ன சொன்னாலும் இந்த ஸ்கூலும் இன்னொரு ஆழ்வார்பேட்டை மாறியே ஃபீலாகுது!

பல்லவன்: பீட்டர் அந்த ஸ்கூலுக்கு வர பசங்களப் பாத்தீங்கண்ணா, அயோத்யா குப்பம், மாட்டான் குப்பம், ஜாம் பஜார், ஐஸ் ஹவுஸ் எல்லாம் தரை ரேட்டுப்பா!

சுயமோகன்: (மகிழ்ச்சியோடு மெல்லிய புன்னகையுடன்) பல்லவன், “கருப்பு யானையை” அட்டை டூ அட்டை படிச்சிருக்கீங்க! நாவலோட பிளாட்டே திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ்தான். ஆனா முக்கியமான ஒன்ன எல்லாரும்  மிஸ் பண்றீங்க!

நம்ம தேசியக் கவி பாரதியாரு, லாவண்யான்னு ஒரு யானை அடிச்சு செத்துப் போனாரு. அந்த புண்ணிய பூமிதான் திருவல்லிக்கேணி.

ஜிப்பா மணி: சார், திருவல்லிக்கேணின்னா எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் பாய் கடை  பீஃப் பிரியாணிதான். அந்த பிளேட்டுக்கு வெளிய எங்க பார்வை போனதே இல்ல சார்!

தொல்காப்பியன்: ரைட்டர் சார், நீங்க ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க. இந்த ஹீரோ அறிமுக பிளாகை நீங்க ஊதித் தள்ளிருவீங்க! நாம, டைரக்டர் சாருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் சார்! ஓட்டுப் போட வந்த ஹீரோ, ஒரு கள்ள ஓட்டுதான….. அப்டீன்னு போகமா பயங்கரமா கோபப்படுறாரு. அந்த கோபத்தை ஸ்ட்ராங்கா நாம ஜஸ்டிபைஃ பண்ணனும் சார்!

பல்லவன்: ஆடியன்ஸ் கதறணும் சார்! இந்த அரசியல்வாதிங்கள விடக்குடாதுன்னு ஹீரோவப் பாத்து ஆடியன்சு கத்தணும் சார்! அதுக்கு வெயிட்டா ஒரு சீன் பிடிங்க சார்!

சுயமோகன்: அப்டியா, யோசிப்போம். இப்போ ஒரு வருசத்துக்குள்ள தமிழ் மனங்கள ஆழமா பாதிச்ச சம்பவங்கள்னு பாத்தா நிறைய இருக்கு! என்னோட அணுக்கமான வாசகருங்க கடலூர் சீனி, கோவை அரங்கப்பன் சொன்னத வெச்சுப் பாத்தா தூத்துக்கடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்ல ஒரு பெண்ணோட வாயில சுட்டாங்களே அதை சீனா வெச்சுரலாமா?

பீட்டர்: வெச்சுக்கலாம் சார். பட், தேவையில்லாம நம்ம மேல ஒரு பிளாக் மார்க் விழுந்துரும். அர்பன் நக்சலைட்டுங்கள ஆதரிக்கிறோம்னு சொல்லிடுவாங்க. ஆடியன்சு கதறணும், ஆனா அதுக்கு காரணத்த நாம சொல்லக் கூடாது. இவன்தான்னு நாம யாரையும் பழி போடக் கூடாது. அதுல நாம உசாரா இருக்கணும். ஆடியன்சுக்கு அவங்க மேலேயே கோபம் வரணும்! அதான் சார் கதையில நமக்கும் பிசினசுக்கும் பாதுகாப்பான ஏரியா!   

சுயமோகன்: சரி, அப்டின்னா ஒண்ணு பண்ணாலம். திருநெல்வேலி கலெக்டர் ஆபீசுல தீக்குளிச்ச இசக்கி முத்து ஃபேமிலி கதையை அப்டியே சென்னைக்கு மாத்திருவோம். அந்தக் கதைய ஹீரோவோட டிரைவர் சொல்ற மாறி வெச்சுரலாம். கதையைக் கேட்டு ஹீரோ ஷாக் ஆகுறார். இதுக்கு மக்கள் அப்போ என்ன பண்ணாங்க்கன்னு கேக்குறார். எல்லாரும் இந்த நியூச வாட்ஸ்ப்புல ஃபார்வர்டு பண்ணாங்க, வேற ஒண்ணும் பண்ணலேன்னு டிரைவர் சொல்றதா முடிச்சிடலாம்.

ஜிப்பா மணி: இப்ப பாத்து டைரக்டர் சார் இல்லையே சார். இருந்தா உங்களை தூக்கி கொண்டாடுவாரு சார். இந்த டர்னிங் பாயிண்டில கதை  மேல போயிடும் சார். மணி 1.30 ஆவுது. நாங்கதான் ராக்கோழி, நீங்க போய் ரெஸ்ட் எடுங்க சார்!

சுயமோகன்: நானாவாது படுக்குறதாவது! இனிமேதான் என்னோட தாய் வீட்டுக்கு போவணும். இலக்கியப் பணி தலைக்கு மேல இருக்கு.

(லேசான சோர்வுடன் சுயமோகன் படுக்கை அறைக்கு திரும்புகிறார்)

ஜிப்பா மணி: புரடெக்சன் செல்லம், மத்தியானமே எங்கிட்ட தனியா சொன்னான். ஏதோ மீதி அரை பாட்டில் ஃபாரின் சரக்கு இருக்காம். அதையாவது ஓபன் பண்லாம்.

தொல்காப்பியன்:  ரைட்டர் சார் சொன்ன கந்துவட்டி சீன் லைன் ஓக்கேதான். ஆனா ஹீரோ அமெரிக்காவுல இருந்து 15,000 கி.மீட்டர் பறந்து ஓட்டுப் போடறதுக்கு வராறாம். வரவருக்கு இசக்கிமுத்து செத்த கதைய அவர் டிரைவருதான் சொல்வாராம். ஏன் ஜனங்க இதுக்கு கொதிக்கலேன்னு ஹீரோ கேப்பாராம்,. வாட்ஸ் அப்லயே கொதிச்சிட்டாங்கன்னு டிரைவரு சொல்வராம். உடனே ஹீரோ ஃபீல் பண்ணுவாராம்.

சரி, இந்த ஹீரோ சார் மட்டும் அமெரிக்காவுல அப்ப என்ன புடுங்குனாருன்னு டிரைவரு ஃபீல் பண்ண மாட்டாரா?

காட்சி முடிகிறது

(தொடரும்)

  • தம்பி அழகு மதி – காளமேகம் அண்ணாச்சி

கஜா புயல் : எடப்பாடி பறந்து பார்த்தார் – மோடி வராமலேயே பார்த்தார்

ஜா புயல் ஏற்படுத்திய இழப்பால் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் இருந்து மக்கள் படும் அவதிகள் எந்த வகைப்படுத்தலிலும் அடங்க மறுக்கிறது. வீடிழந்தோர், வாழ்விழந்தோர், எதிர்காலம் கேள்விக்குறியானோர் என்ற பட்டியலில் தற்போது தற்கொலைகளும் சேர்ந்துள்ளன.

விவசாயி சுந்தர்ராஜன்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். விவசாயியான இவரின் வயது 57. இவர் தனக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்திருந்தார். தென்னை மரங்களில் பெரும்பாலானவை கஜா புயலில் முறிந்து விழுந்தன. அன்றிலிருந்து சுந்தர்ராஜனும் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் 21.11.2018 அன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இரவில் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடினாலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இறுதியில் சுந்தர்ராஜன் நேற்று 22.11.2018 காலை ஊரின் அருகே உள்ள ஒரு குளக்கரையில் பிணமாக கிடந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், தென்னை மரங்கள் சாய்ந்ததால் சுந்தர்ராஜன் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. அவருக்கு அம்சவள்ளி என்ற மனைவியும், சுதா என்ற மகளும், பிரபாகரன் என்ற மகனும் உள்ளனர். மரங்கள் முறிந்து விழுவதற்கு ஒரு புயல் போதுமானது என்றால் அந்த முறிவை சந்திக்கும் மக்களை தூக்கி நிறுத்த இங்கு எந்த ஆதார நம்பிக்கையும் இல்லை. இதுதான் நமது அரசு – சமுதாயத்தின் இலட்சணம்.

படிக்க:
♦ விவசாயிகள் கடன் தள்ளுபடியை விமர்சிக்கும் அரை வேக்காடுகள் !
♦ பயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் !

சுந்தரராஜனைப் போன்று மன உளைச்சலில் மரணத்தை தேடுவோர் எத்தனை பேர் இருப்பார்கள்?

ஒரத்தநாடு அருகே உள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 52 வயதான சிவாஜி. இவரது 1 ஏக்கர் தென்னந் தோப்பை கஜா புயல் தாக்கியதில் வீட்டோடு மரங்களும் சரிந்தன. வீடில்லாத நிலையில் இவர் தனது தம்பி வீட்டில் தங்கி இருந்தார்.

விவசாயி சிவாஜி மாரடைப்பில் மரணம்

நேற்று 22.11.2018 காலை தனது தோப்புக்குச் சென்று சாய்ந்து கிடந்த தென்னை மரங்களை பார்வையிட்டவர், வீடு திரும்பினாலும் தொடர் வேதனையில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் மயங்கி இறந்து போனார். இவருக்கு குணமதி என்ற மனைவியும், ஆனந்தன், கார்த்தி என்ற மகன்களும், பாரதி என்ற மகளும் உள்ளனர். சிவாஜியின் வேதனையை புரிந்து கொண்டு அவரது வாழ்வைத் திருப்பித் தரும் நம்பிக்கையை தருவதற்கு இங்கு யாரும் இல்லை.

தமிழகத்தை ஆளும் எடப்பாடி குறுநில மன்னர்களது குழாமின் கடிவாளத்தை வைத்திருக்கும் பாஜக ஆளுநர் புரோகித்தும் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்றார். அதிகாரிகள், காவலர்கள் படை சூழ நான்கு அடி நடந்து மூன்று மாவட்டங்களிலும் மூன்று இடங்களைப் பார்வையிட்டார். சில இடங்களில் அவரை சுற்றி வளைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். ஓரிடத்தில் அவரது பவனி பரிவார ஊர்வலத்தை எதிர்த்து சாலை மறியல் செய்தார்கள். அவருக்கு மக்கள் காண்பித்த இந்த எதிர்ப்பை “நிவாரணப் பணிகள் குறித்து கவர்னர் ஆய்வு செய்தார்” என்று ஊடகங்கள் தலைப்பை போடுகின்றன.

பரிவாரங்கள் புடைசூழ புரோஹித் ‘ஆய்வு’ப் பணி

அது மட்டுமா, சில இடங்களில் கையறு நிலையில் இருக்கும் பெண்கள் கதறியதை காலில் விழுந்து கதறினார்கள் என்று ஊடகங்கள் செய்தி போடுகின்றன. ஒரு ஹெக்டேர் நெற்பயிருக்கு ஒரு இலட்சமும், ஒரு ஹெக்டேர் தென்னைக்கு 10 லட்ச ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டுமென்று சில அப்பாவி விவசாயிகள் ஆளுநரிடம் கேட்டிருக்கின்றனர். அவரோ எல்லாம் நல்லபடியாக நடக்குமென்று ஆசியளித்து விட்டு தனது ‘ஆய்வு’ப்பணியை முடித்து விட்டு திரும்பினார்.

கஜா புயலின் சேதம் பிரம்மாண்டமாக இருந்தாலும், அந்த சேதத்தின் வீச்சு எப்படி என்று தமிழக அரசுக்குத் தெரியாது. இன்று வரை பெரும்பாலான கிராமங்களில் அரசின் நிவாரணப் பணிகளோ, அதிகாரிகளோ எட்டிப் பார்த்து விடவில்லை. இந்நிலையில் குடிசைகள், தென்னை, வாழை, நெற்பயிர், படகுகள், வலைகள், சிறு தொழில்கள், கூலித் தொழிலாளிகள் என இலட்சகணக்கான வாழ்க்கை குறித்து தமிழக அரசுக்கு எதுவும் தெரியாது.

ஆரம்ப நாட்களில் மக்கள் அமைச்சர் வந்த இடங்களில் எல்லாம் மறித்தார்கள். இதனால் ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்த எடப்பாடி அதையும் பாதியிலேயே முடித்து விட்டு திரும்பினார். ஏனெனில் நாகையில் மழையாம். கொட்டும் மழையில் மக்கள் அங்கே தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, சுற்றியடித்த புயலில் அவர்களது வாழ்க்கை சின்னா பின்னமாயிருக்கும் போது அதை நேரில் சென்று கூட எட்டிப் பார்க்க வக்கற்றது இந்த அதிமுக கொள்ளைக் கூட்டம்.

படிக்க:
♦ அரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி
♦ தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, தொழிலாளி சேமிப்பு – அத்தனையும் அழிந்தது !

ஹெலிகாப்டரிலேயே சேதத்தை பார்த்து விட்டேன் என்று எடப்பாடி சொல்வதற்கு எவ்வளவு வன்மம் வேண்டும்? ஆயிரம் கோடி ரூபாயை நிவாரண நிதியாக ஒதுக்கியதாக கூறும் எடப்பாடி, தில்லி சென்று தனது பாஜக எஜமானர்களை சந்தித்து 15,000 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார். நான்கு மாநில தேர்தலுக்காக வார்டு வார்டாக சுற்றும்  மோடி, வழக்கம் போல இந்த பேரிடர் பாதித்த பகுதிகளை பார்ப்பதற்கு வரவில்லை. ஆனாலும் தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதாம்.

எடப்பாடிக்கே தெரியாத அவர் பார்க்காத அவரது அரசாங்கம் கணக்கீடு செய்யாத பாதிப்புகள் குறித்து அவர் தில்லிக்கு ஒரு கணக்கு கொடுத்து நிவராணம் கேட்பாராம். ஏற்கனவே வர்தா, தானே, ஒக்கி புயலில் தமிழக அரசு கேட்ட தொகையில் 20-ல் ஒரு பங்கு மட்டும் மத்திய அரசு வழங்கியிருக்கிறது. பட்டேல் சிலைக்கு 3000 கோடி, நீரவ் மோடிக்கு 12,000 கோடி, மல்லையாவுக்கு 8,000 கோடி என்று அள்ளிக் கொடுத்தவர்கள் முக்கால் கோடி மக்கள் தொகையைக் கொண்ட டெல்டா மாவட்டங்களுக்கு என்ன ஒரு 500 கோடி ரூபாய் கொடுத்தால் அதிகம்.

தேசியப் பேரிடர் மோடியிடம் நிவாரணம் கேட்கும் தமிழகப் பேரிடர் எடப்பாடி

பிறகு எடப்பாடி கெஞ்சிக் கேட்ட பிறகு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசின் குழுவை அனுப்புவதாக மோடி பெரிய மனதுடன் சம்மதித்தாராம். வருகை தரும் மத்திய குழுவுக்கு உள்துறை அமைச்சகத்தின் நீதித்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமை வகிக்கிறாராம். அவர்கள் இன்று 23.11.2018 சென்னை வந்து விருந்தினர் மாளிகையில் அறுசுவை விருந்துண்டு, நாளை தஞ்சை சென்று பெரிய கோவிலில் வழிபட்டு பிறகு முதன்மைச் சாலையில் கேமராக்களோடு ஒரு வயல் பிக்னிக் செல்வார்கள். ஜிலேபியையும், சமோசாவையும் மட்டும் அறிந்தவர்களுக்கு நெல்லென்ன, தென்னை என்ன, மீனவர் வலை என்ன எல்லாம் ஏதோ ஒரு நேட்டிவிட்டி படம் பார்ப்பது போலத் தெரியும். பச்சை பசுமைகளை பார்த்து விட்டு சில பல செல்ஃபிக்களை எடுத்து விட்டு அவர்கள் திரும்புவார்கள். பிறகு பேரம் பேசும் தமிழக அரசு அதிகாரிகளோடு புன்சிரிப்புடன், போதும்ஜி ஒரு 300 கோடி ரூபாயை வெச்சுக்குங்க, இதுவே அதிகம் என்பார்கள்.

தி.மு.க ஆட்சியில் கொடுத்ததை விட நாங்கள் அதிகம் கொடுத்திருக்கிறோம் என்று கூவுகிறார் எடப்பாடி. இறந்தவர்களுக்கு பத்து இலட்ச ரூபாய், படுகாயம் அடைந்தோருக்கு ஒரு லட்சம், இறந்து போன மாடுகளுக்கு 30,000 ரூபாய், ஆடுகளுக்கு 3,000 ரூபாய், முழுவதும் சேதமடைந்த குடிசைகளுக்கு 10,000 ரூபாய், பாதி சேதமடைந்தால் 4,100 ரூபாய் என்றெல்லாம் கூறியிருக்கிறார். பாதிப்படைந்த கிராமங்களில் பலவற்றுக்கு கிராம நிர்வாக அதிகாரிகளே இன்னும் வராத நிலையில் இந்த இழப்பீட்டை எப்படி கணக்கீடு செய்வார்கள்? அதுவரை செத்துப்போன மாடு – ஆடுகளையும், சரிந்து கிடக்கும் மரங்களையும், பயிர்களையும் வைத்திருக்க வேண்டுமா?

படிக்க:
♦ மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

♦ எடப்பாடியும் ஜெயலலிதாவும் ஒண்ணு ! இதை அறியாதவன் வாயில மண்ணு !

எதை எதை வைத்து இழப்பீடு கணக்கிடுவார்கள், அதை யார் முடிவு செய்வார்கள்? ஒக்கி புயலின் போது ஏதோ ஏலம் விடுவதைப் போல உயிரிழந்தவர்களுக்கு நாளொரு தொகையை மாற்றி மாற்றி ஏற்றினார் எடப்பாடி. அதுவும் கேரள அரசு காணாமல் போன மீனவர்களுக்கு 20 இலட்ச ரூபாய் என அறிவித்த பிறகுதான்.

அரசின் இலட்சணம் இதுவென்றால் நமக்கு இன்றாவது ஏதாவது நிவாரணம் வராதா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறர்கள் டெல்டா மக்கள். சில நேரம் கோபமாய் போராடுகிறார்கள், சாலை மறியல் செய்கிறார்கள். இழந்த 20 வருட வாழ்க்கையை எப்படி மீட்க முடியும் என்ற கேள்விக்கு அவர்களிடம் விடையில்லை. ஆனால் என்ன செய்ய முடியும் என்று உழல்கிறார்கள். இனி மீத்தேன் எடுப்பதற்கு விவசாயம் தடையில்லை எனுமளவுக்கு தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக நிலைய வித்வான்கள், ”லா பாயிண்டுகளை” அடுக்குகிறார்கள். டெல்டா தத்தளித்துக் கொண்டிருக்கும் போது பாஜக மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் சபரிமலை சென்று அங்கு காரில் போக முடியவில்லை என்று ஒரு ஐபிஎஸ் அதிகாரியுடன் விவாதித்தாராம். அமைச்சரை எவன் கேள்வி கேட்டான் என்று இன்று குமரியில் வேலை நிறுத்தமாம். எத்தனை கொடிய மனம் இவர்களுக்கு?

இயற்கை சீற்றம் ஏற்படுத்திய அழிவுக்கு அரசு எப்படிக் கொடுக்க முடியும் என்று கத்துகிறார்கள். ஆம் இந்த அரசுகளே பெரும் இயற்கைப் பேரிடர் எனும் போது மக்களுக்கு கஜா புயல் எனும் இயற்கை பேரிடர் பெரிய பேரிடரல்ல. இன்று வரையிலும் டெல்டா மாவட்டங்களில் மக்கள் பெருங்கோபத்தோடும் எல்லா இடங்களிலும் சாலை மறியல் நடப்பதாவும் செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. சிதறிக் கிடக்கும் இப்போராட்டங்கள் ஒன்றிணையும் போது அது கஜா புயலை விட பெரும் சக்தியுடன் கிளம்பும். மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் அரசுகளுக்கு அப்போதுதான் மக்கள் சக்தியின் வலிமை புரியும்.

கஜா புயல் நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள்

மிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் தங்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் இவர்களுடன் இணைந்து வேலை செய்து வருகின்றனர்.

உருக்குலைந்த வீடுகளையும், சரிந்து விழுந்த மரங்களையும் அப்புறப்படுத்தும் பணியை பிரதானமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அனுப்பிவைக்கப்படும் நிவாரணப் பொருட்களை சேகரித்து, மக்களின் தேவையறிந்து சீராக விநியோகித்து வருகின்றனர்.

சீரமைப்புப் பணி

வேதாரண்யம் பகுதியில் சேதமடைந்த வீடுகளையும் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் தோழர்கள்.

வேதாரண்யம், ஆயற்குளம் கைகாட்டி பகுதியில் சீரமைப்புப் பணியில் ஈடுபடும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மற்றும் அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள்.

This slideshow requires JavaScript.

மீட்புப் பணியில் மாணவர்கள், இளைஞர்கள் களமிறங்குவோம்!
தேர்வுகளை தள்ளிவை! பு.மா.இ.மு. கோரிக்கை!!

நிவாரணப் பொருட்கள் விநியோகம்

சேகரித்த பொருட்களை தேவைக்கேற்ப கொடுப்பதற்காக வகை பிரிக்கும் பணியில் தோழர்கள்.

பட்டுக்கோட்டை வட்டார கிராமங்களில் விநியோகம்.

நிவாரண பொருட்கள் சேகரிப்பு

திருச்சியில் நிவாரண பொருட்கள் சேகரிப்பு
விருத்தாசலம்

மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலம் சார்பாக அனுப்பிவைக்கப்பட்ட பொருட்கள்.

சுல்தான் பாய் அன்பாய் கொடுத்த 140 பாய்கள்

ஞ்சையில் கஜா புயலால் துயறுரும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களைத் திரட்டிக்கொண்டிருக்கிறோம். நேற்று இரவு வேதாரண்யத்திலிருந்து தோழர் தனியரசு, உடனடியாக மக்கள் படுக்க கோரைப்பாய்கள் வேண்டுமெனக் கேட்டார். எனவே பாய் மொத்த வியாபாரம் செய்யும் சுல்தான் பாயை அணுகினோம்.

இவர் முன்னரே மிகச்சிறிய குறையுள்ள 40 புதிய பிளாஸ்டிக் பாய்களை இலவசமாகவே கொடுத்திருந்தார். ஒரு பாய் ரூ.100 என முடிவாயிற்று. எவ்வளவு தேவையெனக்கேட்டார். “தேவை நிறைய, ஆனால் இப்போது எங்களிடம் இருக்கும் பணத்திற்கேற்ப பாய்களைக் கொடுங்கள்” என தோழர் காளியப்பன் கூறிவிட்டு உதவிகள் கோரியும் நிவாரணப் பணிகள் குறித்தும், தொடர்ந்து பலருடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

படிக்க:
கஜா : ஆமை வேகத்தில் நிவாரணப் பணிகள் !
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

இதை கவனித்துக்கொண்டிருந்த சுல்தான்பாய் தோழர் காளியப்பனிடம் வந்து 100 பாய்களை இலவசமாகவே தந்துவிடுகிறேன் எனக் கூறிவிட்டு பாய்கட்டுகளை வெளியே எடுத்துவைத்துவிட்டு அதற்கு விளக்கம் சொன்னார்.

“வங்கியொன்றில் எனது மகளுக்காக பணம் சேமித்தேன். அதற்கு வட்டியாக ரூ. 10000 சேர்ந்திருக்கிறது. நாங்கள் வட்டி வாங்கமாட்டோம். அதனால் வங்கிக்கணக்கில் சேரும் வட்டியை பொதுக்காரியங்களுக்குச் செலவிடுவோமேயன்றி சொந்தக் காரியங்களுக்குப் பயன்படுத்தமாட்டோம்” எனக் கூறிவிட்டு ”கஜா புயலுக்கு உதவியதாகக் கணக்கெழுதிக்கொள்ளட்டுமா?” என மிகுந்த தயக்கத்துடன் கேட்டார்.

“உண்மையைத்தானே எழுதப்போகிறீர்கள், அதற்கென்ன தயக்கம்?” எனச் சொல்லிவிட்டு நன்றியுடன் விடைபெற்றோம்.

உதவ விரும்புவோர் எமது தோழர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மக்கள் அதிகாரம், சென்னை – 9176 801656
மக்கள் அதிகாரம், திருவாரூர் – 9962 366321, 9626 352829
பு.மா.இ.மு., வேதாரண்யம் – 6383 461270
தகவல்:

ஊழல் – வணிகம் – காவிமயமான கல்வி – நெல்லை கருத்தரங்க செய்தி

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் நெல்லைப் பகுதியின் சார்பில் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணி அளவில் நெல்லை சகுந்தலா இன்டர்நேசனில் உள்ள அரங்கில் ‘’உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள்’’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தூய சவேரியார் கல்லுாரியின் பொருளியல் துறை பேராசிரியர் அமலநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த் துறைத்தலைவர் பேரா. தொ. பரமசிவன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த் துறைத்தலைவர் பேரா. வீ. அரசு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறை பேரா. சோமசுந்தரம் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் முனைவர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். ஏறத்தாழ 75 பேர் பங்கேற்ற இக்கருத்தரங்கம் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது. நெல்லைப் பகுதியின் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், உயர் ஆய்வு மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

தலைமையுரை ஆற்றிய பேரா. அமலநாதன், உயர் கல்வியானது பெரும்பான்மை மக்கள் அறியாதவாறு அவர்களின் நலன்களுக்கு எதிராக எத்தகைய மாற்றங்களுக்கு தொடர்ச்சியாக உட்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும், இத்தகைய மக்களுக்கு எதிரான வணிகம் சார்ந்த மாற்றங்களை எதிர்கொள்வதில் ஆசிரிய அமைப்புகள் பலவீனமாக இருக்கின்றன என்பதையும், பொது வெளியில் அனைவரும் சேர்ந்த ஒரு அமைப்பின் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார்.

ஊழல் – வணிகம் – காவிமயமான கல்வி

இக்கருத்தரங்கில் வாழ்த்திப் பேசிய பேரா. தொ. பரமசிவன், கல்லூரி, பல்கலைக் கழகங்களில் கல்வி சார்ந்த மாணவர் – ஆசிரியர் பிரச்சினைகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து பல்வேறு காலங்களில் போராடியதே நம் தமிழக மண்ணின் வரலாறு என்று குறிப்பிட்டார்.

கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக வணிகமயமாகி வருவதுடன், சாதி சார்ந்தும் நடத்தப்படுவது தமிழகத்தின் நடைமுறையாக உள்ளதாகக் குறிப்பிட்டார். இத்தகைய போக்கிற்கு அதிகார வர்க்கம் பேரளவு உடந்தையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பேரா. தொ. பரமசிவன்

பல்கலைக்கழகங்களில் பெரிய அளவில் ஊழல் இருப்பதையும், துணைவேந்தர்கள் நியமனத்திலும் பேரளவு ஊழல் இருப்பதையும் ஆளுநரே ஒத்துக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினார். காவிக் கலாச்சாரவாதிகளை திருப்திப்படுத்தும் நோக்கில் துணைவேந்தர்கள் செயல்படுவதையும், அது ஆசிரியச் சமூகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளதையும் குறிப்பிட்டார் பேரா. பரமசிவன் அவர்கள்.

இத்தகைய உயர்கல்விச் சீரழிவு குறித்து சிந்திக்கவும், பங்கேற்கவும் வந்திருக்கின்ற சமூக உணர்வாளர்களான பேராசிரியர்களையும் மாணவர்களையும் நான் பாராட்டுகிறேன் என்று தனது வாழ்த்துரையை நிறைவு செய்தார் பேரா. தொ. பரமசிவன் அவர்கள். உடல்நிலை சரியில்லாத நிலையிலும், கருத்தரங்கில் வந்து பேரா. தொ. பரமசிவன் அவர்கள் கலந்து கொண்டது பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தியது.

தமிழகத்தில் பெருகிவரும் தனியார் கல்வி வணிகம்

அடுத்ததாக ‘தமிழகத்தில் பெருகிவரும் தனியார் கல்வி வணிகம்’ எனும் தலைப்பில் பேரா. வீ. அரசு தனது சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் உயர்கல்வியைத் தனியார் மயமாக்கும் போக்கினை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை பச்சையப்பா கல்வி அறக்கட்டளை போன்றவை எப்படித் தொடங்கி உயர்கல்வியைச் சீரழித்தன? கல்வியை சுரண்டலுக்கான மாதிரி நிறுவனங்களாக அவை எப்படி இருந்தன என்பதை குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது ஆசிரியர்க்கான பணியிடங்களை எப்படி விற்பனைப் பொருளாக மாற்றி கல்வியை, அரசு நிதியை நாசமாக்கின என்பதைக் கூறினார்.

பேரா. வீ. அரசு

நிலவுடைமையாளர்களும், மிகப்பெரிய தொழிலதிபர்களும், சாராய வியாபாரிகளும், எம்.ஜி.ஆர். போன்றோரிடம் அடியாட்களாக இருந்தவர்களும் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கி இன்று கல்வித் தந்தையர்களாக மாறிவிட்டனர் என்பதையும், அவர்களால் எப்படி அரசு புறம்போக்கு இடங்களும், ஏரிகளும், நீர் நிலைகளும் ஆக்ரமிக்கப்பட்டு, கல்வி நிறுவனங்கள் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், சங்கரா பல்கலைக்கழகம், சத்தியபாமா, சாஸ்திரா பல்கலைக்கழகங்களாக வளர்ந்தன என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இத்தகைய பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். – ன் சாகா பயிற்சி நடத்தும் அளவிற்கு காவிமயமாக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட்டார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர். காலத்தில் தொடங்க அனுமதிக்கப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் இன்று எண்ணிக்கையில் 850-ஐத் தாண்டி விட்டது. எந்தத் தரமும், தொழில்நுட்ப வசதியும், திறன்பயிற்சி இன்றியும் புற்றீசல்களாக வளர்ந்து வருகின்ற இத்தனியார் பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலை என்பது திறனற்ற வேலையில்லாப் பட்டதாரிகளை வெளியே அனுப்பும் வேலையை மட்டுமே செய்வதாகக் குறிப்பிட்டார். மாணவர்களிடமிருந்து கட்டணத்தைப் பெற்று பல்கலைக்கழகங்கள் தனது நிதியை பார்த்துக்கொள்ளுமாறு இன்றைய அரசுகள் கட்டாயப்படுத்துகின்றன. எத்தனையோ நாடுகளில் அருகில் உள்ள இலங்கை உட்பட உயர்கல்வியை இலவசமாக வழங்கி வருகின்றன. இத்தகைய மோசமான வணிகமய நெருக்கடிக்குள் சிக்கி இருக்கின்ற உயர்கல்வியை நம்மை போன்ற அனைவரும் இணைந்து போராடி மீட்க வேண்டும் என்று சொல்லி தனது உரையை நிறைவு செய்தார் பேரா. வீ. அரசு அவர்கள்.

தேவை : கல்வியாளர்களின் சுதந்திரமான, அச்சமற்ற, எதற்கும் விலைபோகாத உண்மைக் குரல்கள்!

பேரா. கருணானந்தன்.

இக்கருத்தரங்கிற்கு வாழ்த்துரையை சென்னை விவேகானந்தா கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறையின் தலைவர் பேரா. கருணானந்தன் அனுப்பி இருந்தார். தனது வாழ்த்துச் செய்தியில் இன்றைய நமது சமூகம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. நெருக்கடியான சூழலில், சமூகத்தின் மனசாட்சியாக இருக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு இருக்கின்றது. பெரும்பாலான ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளின் குரல்களாகி சீரழிந்திருக்கின்ற இச்சூழலில், கல்வியாளர்களின் சுதந்திரமான, அச்சமற்ற, எதற்கும் விலைபோகாத உண்மைக் குரல்கள் நம் மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்தவும், நம்பிக்கை ஊட்டவும் பெரிதும் உதவும். நமது நாட்டின், நாட்டு மக்களின் நிகழ்கால, எதிர்கால நலன்களுக்கு நம்மால் ஆன சிறிய பணி இது. உங்கள் பணிக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்தார்.

ஊழல், பாலியல் முறைகேடு – சீரழிக்கப்படும் பல்கலைக்கழகங்கள்

‘ஊழல், பாலியல் முறைகேடு – சீரழிக்கப்படும் பல்கலைக்கழகங்கள்’ எனும் தலைப்பில் பேரா. சோமசுந்தரம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கல்வி நிறுவனங்களில் நடைபெற்றுவரும் பல்வேறு சீர்கேடுகளுக்கு ஆசிரியர்களாகிய நாமும் பொறுப்பேற்க வேண்டும். ஆசிரியர்கள் அமைதியாகவும், சீரழிவின் ஒரு பகுதியாகவும் இருந்தால் அது கல்வியையும் சீரழிக்கும். கல்வி நிறுவனங்களில் தவறுகள் நடைபெறும்போது அது குறித்து வெட்கப்படும் மனநிலை அன்று ஆசிரியர் சமூகத்திடம் இருந்தது. இன்று பணம் கொடுத்து ஆசிரியப் பணிக்குள் போவது என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. தவறுகளுக்கு எதிரான அறச்சீற்றம் ஆசிரியர்களுக்கு வர வேண்டும். அத்தகைய அறநெறியும், போராட்டமும், கல்வி நிறுவனங்களது ஊழல் மற்றும் பாலியல் சீர்கேடுகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டும். அதற்காக நாம் ஒன்றிணைந்து போராடுவோம் என்று கூறினார் பேரா. சோமசுந்தரம்.

காவிமயமாக்கப்படும் உயர் கல்வி

நிறைவாக ‘காவிமயமாக்கப்படும் உயர் கல்வி’ எனும் தலைப்பில் முனைவர் இரமேஷ் கீழ்கண்ட தனது கருத்துரையை வழங்கினார். காவிமயமாகிவரும் உயர் கல்வி என்பது தனியார்மயம், ஊழல், பாலியல் மயமாகிவரும் உயர்கல்வி என்பதோடு தொடர்புடையதே. கடந்த பத்து வருடங்களாக கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பல்வேறு நியமனங்கள் அனைத்தும் தகுதியற்ற நபர்களையே நியமிப்பதாகவே இருக்கிறது. நெல்லை துணைவேந்தர் சாமியாடியது என்பது பல்கலைக்கழகங்களின் தன்மையை, தரத்தை சீரழிப்பதாக இருக்கிறது. பி.ஜே.பி. அரசு வந்த பிறகு இத்தகைய சீரழிவுப் போக்குகள் இன்னும் அதிகமாக நடக்கிறது.

முனைவர் ரமேஷ்.

தனது பல்வேறு மூட நம்பிக்கைகளை, அறிவியலுக்கு முரணான பிற்போக்கு கருத்துக்களை உயர்கல்வியின் பெரும் பொறுப்புகளில் இருக்கின்ற அமைச்சர்கள், அதிகாரிகள் பிதற்றுவதன் மூலம் அதையே உயர்கல்வியின் ஒரு அறிவாக மாற்ற முயற்சி செய்கின்றனர். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் மத பிற்போக்குவாதிகளின் நிகழ்ச்சி நிரல் என்பது உயர்கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல, பள்ளி நிறுவனங்களிலும் திணிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கல்வி வட்டத்தில், ஆசிரியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் வகுப்பு எடுக்கும் அவலம். ஆசிரியர்களது எதிர்ப்பிற்கு பின் அது விலக்கி கொள்ளப்படுகிறது. வரலாற்றை திரிப்பது, பொய்யான தகவல்களை உண்மையெனச் சொல்வது, சாதிப்பிரிவினைக்குக் காரணம் நம்மை ஆண்ட வெள்ளையர்கள் என்று சொல்வது என்ற உண்மைக்கு எதிரான தகவல்களை தொடர்ந்து பரப்பும் திருட்டுத்தனத்தை பார்ப்பனியவாதிகள் செய்து கொண்டே இருக்கின்றனர்.

பார்ப்பனியமயம் அல்லது காவிமயம் என்பதை அதோடு மட்டும் வைத்து நாம் பார்க்கக் கூடாது. மாறாக அது முழுமையாக தனியார்மயத்தை ஆதரித்து அதை வளர்க்கக் கூடியதாக இருக்கின்றது. அனைவருக்குமான கல்வி என்பதை மறுத்து, சிலருக்கான கல்வி எனும் பார்ப்பனிய சித்தாந்தத்தின் வழியில் தனியார்மயத்தை வேகமாக வளர்த்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவாரக் கும்பல்.

இவர்கள் தனியார்மயத்திற்கான, ஏகாதிபத்திய கட்டமைப்பிற்கான தரகு வேலையை மட்டுமே செய்கின்றனர். கடந்த அக்டோபர் மாத இறுதியில் ஹரித்துவாரில் நடைபெற்ற உயர்கல்விக்கான மாநாட்டில், பி.ஜே.பி. ஆளுகின்ற மாநிலங்களின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய உயர்கல்விக்கான அமைச்சர்கள், பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரதிநிதிகள், உயர்கல்வி செயலர்கள் கலந்து கொண்டனர். இதில் இவர்கள் பேசியது, ‘இந்திய உயர்கல்வியை இந்திய பாரம்பரிய கல்வியைக் கொடுக்கும் அமைப்பாக மாற்ற வேண்டும்’ என்பதே. ‘பாரம்பரிய கல்வி என்பது சமஸ்கிருதம், இராமாயணம், மகாபாரதம், வேதகால கருத்துக்கள், அதன் பார்ப்பனிய மதிப்பீடுகள் ஆகியவற்றைப் புகுத்துவது என்பதே இவர்கள் குறிப்பிடுகிற இந்திய பாரம்பரியக் கல்வி என்பதாகும்.

தனியார்மயம் என்பது பார்ப்பனியத்தின் அனைத்துக் கூறுகளையும் திட்டமிட்டுப் புகுத்துவதற்கு அவர்களுக்குப் பயன்படுகிறது என்பதே அவர்கள் தனியார்மயத்தை ஆதரிப்பதன் காரணம். காவிமயத்தின், தனியார்மயத்தின் நலன்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது என்பதை நாம் உணர வேண்டும். இதை எதிர்கொள்வதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், வெகுஜன அமைப்பினர் ஆகிய அனைவரையும் உள்ளடக்கிய போராட்ட முறையே சரியானதாக இருக்கும் என்று முனைவர் இரமேஷ் கூறினார்.

படிக்க:
உதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு !
கல்வி உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதா !

கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பேரா. நவநீதன் நன்றி கூறினார். தனது நன்றி உரையில், ‘சுயநிதிக் கல்லூரிகளில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் எப்படி கொத்தடிமையாக நடத்தப்படுகின்றனர், நிரந்தரமற்ற பணி, முறைப்படுத்தப்படாத ஊதிய உயர்வு, கல்வி ஆண்டின் இறுதியில் ஊதியத்தின் நிச்சமற்ற தன்மை ஆகியன குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

தகவல்: பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, நெல்லை.

பெண்கள் தற்கொலை : உலக சராசரியை விட இந்தியாவில் 210% அதிகம் !

ந்தியப் பெண்கள் கல்வி கற்றிருந்தாலோ, பொருளாதார விடுதலை அடைந்திருந்தாலோ, தற்போதைய நிலையை விட குடும்ப வன்முறைக்கு குறைவாக ஆட்பட்டாலோ, பெண்களின் தற்கொலை விகிதமும் பெருவாரியாக குறைய வாய்ப்பிருக்கிறது என துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் 2018-ல் பிரபல மருத்துவ இதழான லான்செட்டில் “பாலின வேறுபாடு மற்றும் இந்தியாவின் தற்கொலை மரணங்களின் நிலைமாற்றம் : உலகளாவிய நோய் பெரும்சுமை குறித்த ஆய்வு (1990-2016)” வெளியானது.

உலகில் தற்கொலை செய்து கொள்ளும் 10 பெண்களில் நால்வர் இந்தியப் பெண்கள்

அந்த அறிக்கையில், கடந்த 2016-ல் மட்டும் ஒரு லட்சத்திற்கு 15 பேர் என்ற கணக்கில் இந்தியாவில் பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது, உலக அளவில் பெண்கள் தற்கொலையின் சராசரியை விட 2.1 மடங்கு அதிகமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியா உலக அளவில் ஆறாவது இடம் வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

உலக அளவில் பெண்களை தற்கொலையிலிருந்து திருமணங்கள் தடுத்துவரும் நிலையில், இந்தியாவில் திருமணமான பெண்களே அதிக அளவில் தற்கொலை செய்திருக்கிறார்கள் எனக் குறிப்பிடுகிறது இந்த ஆய்வு.  குடும்பத்தால் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள், குழந்தைத் திருமணம், சிறுவயதில் தாய்மை அடைதல், தாழ்ந்த சமூக நிலை, குடும்ப வன்முறை மற்றும் பொருளாதார விடுதலையின்மை ஆகியவையே திருமணமான பெண்களின் தற்கொலைக்கு மிக முக்கிய காரணிகளாக அமைகின்றன என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

படிக்க:
♦ பெண்கள் மீதான பாலியல் வன்முறை | தியாகு | ஓவியா உரை
♦ பாலியல் வல்லுறவுக்கு காரணம் பெண்களே – அரியானா பாஜக முதல்வர்

பால்ய திருமணம் மற்றும் தாழ்ந்த சமூக நிலை:

சமீபத்தில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப மற்றும் சுகாதார கணக்கெடுப்பில், இந்தியாவில், 27% பெண்களுக்கு 18 வயது பூர்த்தியாகும் முன்பே திருமணம் முடிவடைவதும், அதில் 8% பெண்கள் 15 முதல் 19 வயதிற்குள்ளாகவே தாய்மையை அடைவதும் தெரிய வந்துள்ளது.

பெண்கள் மீதான குடும்ப வன்முறை அவர்களை தற்கொலைக்குத் தள்ளுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது

மேலும், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையானது அவர்களை தற்கொலைக்கு தூண்டுவதில் பெரும்பங்காற்றுகிறது. திருமணமான பெண்களில் சுமார் 29% பேர் தங்கள் கணவன்மார்களாலேயே வன்முறைக்குட்படுத்தப்படுகின்றனர். சுமார் 3% பேர் மகப்பேறு காலத்தில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலான பெண்கள் 15 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட பெண்களில், வெறும் 36% பெண்களே 10-ம் வகுப்பிற்கு மேல் கல்வி பயின்றவர்கள் ஆவர்.  இத்தகவல் மூலம் நாம் தெரிந்துகொள்வ து என்னவெனில், குழந்தைத் திருமணம், சிறுவயதில் தாய்மையடைதல் மற்றும் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் பெரும்பாலும் கல்வி மற்றும் பொருளாதார விடுதலையற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.

ஸ்னேகா(SNEHA) இந்தியா மற்றும் வி.எச்.எஸ் (Voluntary Health Services), சென்னை ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான லக்ஷ்மி விஜயக்குமார் கூறுகையில், “ஆண்களைப்போல் அல்லாமல் கல்வி என்பது பெண்களை தற்கொலையில் இருந்து தடுக்கும் ஒரு கருவியாக உள்ளது” என்றார். மேலும், ஆண்கள் தற்கொலைக்கு கடன் தொல்லைகளே பொதுவான காரணமாக இருப்பதாகவும் பெண்களுக்கு திருமணப் பிரச்சினைகளே காரணமாகவும் உள்ளது என்றும் குறிப்பிடுகிறார்.

குழந்தைத் திருமணங்களைத் தடுப்பது, பெண் கல்வியை ஊக்குவிப்பது மற்றும் வரதட்சணைக் கொடுமைகளை இல்லாதொழிப்பதன் மூலம்தான் இந்த தற்கொலைகளை தடுக்க முடியும் என்கிறார் லட்சுமி விஜயகுமார்.

ஆண்களின் மதுப் பழக்கம் பெண்களின் தற்கொலைக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.

பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கும், பெண்களின் தற்கொலைக்கும் மற்றுமொரு நேரடி காரணமாக அமைவது ஆண்களிடம் நிலவும் மதுப் பழக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

திருமணத்திற்கு பிறகு ஏற்படும் பாலியல் வன்முறைகள் மற்றும் ஆணாதிக்க வன்முறைகளை குறைப்பதன் மூலம் பெண்கள் தற்கொலையைக் குறைக்க முடியும். ஒரு தோராய மதிப்பீட்டின்படி, பாலியல் துன்புறுத்தல்கள் இல்லாமலிருந்தால் பெண்களின் மொத்த வாழ்நாள் பொழுதில் தற்கொலை முயற்சி வீதம் 28 %  குறையும்.

ஆண் பெண் வேறுபாடு

பெண்களின் தற்கொலை வீதம் குறைந்துள்ள அதே வேளையில் ஆண்களின் தற்கொலை வீதம் 30 வருடங்களாக குறையாமல் அதே நிலையில் உள்ளது.

பெண்களின் தற்கொலை வீதம் 1990-ல் 100,000-க்கு 20 பேர் என்றிருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு 100,000-க்கு 15 என்ற வீதத்தில் அது குறைந்துள்ளது. ஆனால் ஆண்களின் தற்கொலை வீதத்தில் எவ்வித வேறுபாடும் ஏற்படவில்லை. கடந்த 1990-ம் ஆண்டு 1,00,000-க்கு 22-ஆக இருந்தது 2016-ம் ஆண்டில் 21-ஆகவே இருக்கிறது.

உலக அளவில் ஆண்களின் தற்கொலை வீதம் பெண்களை விட 200% அதிகமாக உள்ளது. இந்தியாவில்தான் பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களின் தற்கொலை வீதம் வெறும் 50% மட்டுமே அதிகமாக உள்ளது.

15 முதல் 3 வயதில் ஏற்படும் மரணங்களுக்கான காரணங்களில், தற்கொலைதான் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வயதுக்குட்பட்ட ஆண்களின் மரணங்களில் 58% மரணங்கள் தற்கொலையாகவும், பெண்களில் 71% மரணங்கள் தற்கொலையாகவும் அமைகின்றன.

படிக்க:
♦ சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி
♦ நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

கணக்கில் காட்டப்படாத பெண்களின் தற்கொலைகள்

இந்த கணக்கீடுகள் அனைத்தும் இந்தியாவில் நிகழும் தற்கொலைகளின் பரப்பை புரிந்து கொள்ள உதவினாலும், இந்தக் கணக்கீடுகளில் தற்கொலை முயற்சிகள் மற்றும் கணக்கில் வராத தற்கொலைகள் விடுபட்டுள்ளன.

குடும்ப அமைப்பில் திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள் பெண் தற்கொலை செய்து கொண்டால், கணவனின் குடும்பம் பொறுப்பேற்க வேண்டும் என்பதால், பல தற்கொலைகள் வெளியில் சொல்லப்படாமலேயே போகின்றன.

கல்வி, திருமணம் என எல்லாவற்றிலும் பெண்கள் பெற்றோர்களின் வன்முறையை சந்திக்கிறார்கள்

கடந்த 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மதிப்பீட்டின்படி தேசிய குற்றப்பிரிவு ஆணையத்தில் பதியப்பட்ட பெண்கள் தற்கொலைகளின் எண்ணிக்கையை விட மதிப்பிடப்பட்ட தற்கொலைகளின் எண்ணிக்கை 37%  அதிகமாக உள்ளது.  இதே வேறுபாடு ஆண்களின் தற்கொலை வீதத்தில் 25% அதிகமாக ஆக உள்ளது.

CEHAT- என்ற அமைப்பின் ஒருங்கினைப்பாளரான சங்கீதா ரெஜெ கூறுகையில், விசமருந்தி தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்கள் பெரும்பாலும், எதிர்பாராதவிதமாக விஷமருந்திய சம்பவங்களாக காட்டப்படுகின்றன எனத் தெரிவித்தார்.

இவ்வாறு ’தற்செயலாக விஷம் குடித்த’ நிகழ்வு என்ற அடிப்படையில் மட்டும் மாதத்திற்கு சராசரியாக 25 பெண்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் குறிப்பாக 15-19 வயதுக்குட்பட்ட இளம்பெண்களின் மரணத்தில் 17%  மரணங்கள் தற்கொலையால் நிகழ்கிறது.

மேலும் ரெஜெ கூறுகையில், “ பெற்றோரின் தாக்குதல்கள் குறித்து பெருமளவில் பேசப்படுவதில்லை. ஆனால் பெற்றோர்கள் கடுமையாக தாக்குபவர்களாகவும், இவ்வயதினரை கட்டுப்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர்.  இந்த இளம்பெண்கள் தங்கள் பெற்றோர்களைத் தாண்டி தன்னிச்சையாக வும் சுதந்திரமாகவும் முடிவெடுக்க முடியாதவர்களாய் உள்ளனர்” என்றார். தேசிய சுகாதார கணக்கீட்டின் படி, பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டும், தாக்குதலில் 30%  தங்கள் பெற்றோர்களால் நிகழ்த்தப்படுகின்றது.

பிராந்திய வேறுபாடு

இந்தியாவின் 31 மாநிலங்களில் 26-ல் 15-29 வயதுடையவர்கள் மரணத்தில் தற்கொலையே பெரும்பங்கு வகிக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், தற்கொலை வீதம் வளர்ந்த, வளரும் மாநிலங்களை விட பின் தங்கிய மாநிலங்களில் குறைவாக உள்ளது.

நன்றி : படம் – லான்செட் மருத்துவ இதழ்

தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம், திரிபுரா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தற்கொலையில் முன்னணி மாநிலங்களாக உள்ளன.

“வளர்ந்த மாநிலங்களில் நகரமயமாக்கலும் அதன் நீட்சியாக ஏற்படும் ஜன நெருக்கடி, சிறிய குடும்ப அமைப்பு முறை மற்றும் அதீத செலவுகள் முதலியன தற்கொலைக்கான அடிப்படை காரணங்களை கட்டியமைக்கின்றன” என்று இந்திய பொது சுகாதார மையத்தின் பேராசிரியர் ராக்கி டண்டொனா கூறுகிறார்.

1996-2016 காலகட்டத்தில் உத்திரகாண்ட் (45%), சிக்கிம் (43%), ஹிமாச்சல பிரதேசம் (40%) மற்றும் நாகாலாந்து (40%) ஆகிய மாநிலங்களில் தற்கொலை விகிதம் வெகுவாக குறைந்திருக்கிறது.

இந்தியாவில் தற்கொலைகள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை:

15-39 வயதுக்குட்டவர்களின் மரணத்திற்கு தற்கொலை பிரதான காரணியாக உள்ளது. ஆனால் இது பற்றியான ஆய்வுகள் குறைவாக உள்ளன.  விவசாயிகள் மரணம் குறித்த பொதுமக்களின் கவனத்தைத் தவிர தற்கொலையிலிருந்து அவர்களை எப்படித் தடுப்பது என்பது குறித்த ஆய்வுகள் தேவை.

படிக்க:
♦ மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
♦ நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

கடந்த இருபது ஆண்டுகளில் ஆண்களின் தற்கொலை வீதம் குறையாதது குறித்து விரிவாகப் பார்க்க வேண்டியது இருக்கிறது. “இந்தியாவில் ஆண்களில் தற்கொலைகள் குறித்துப் பார்க்கையில் இளம் ஆண்கள் மிகவும் பாதிப்புக்க்குள்ளாகக் கூடியவர்களாக இருக்கின்றனர். மேலும் திருமணம் அவர்களை தற்கொலையிலிருந்து தடுக்கக் கூடியதாக இல்லை.” என்கிறது லான்செட் இதழின் ஆய்வு.

ஆண்கள் மன அழுத்தத்தை உள்ளுக்குள் வைத்துக் கொள்ளவே முயற்சிக்கின்றனர். உணர்ச்சி சார்ந்த பிரச்சினைகளில் உதவி கேட்பதில் தயக்கம் கொள்கின்றனர். “பல சம்பவங்களில் ஆண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்புவரை அவர்கள் பிரச்சினையில் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை.” என்கிறார் ராக்கி டன்டொனா.

கடந்த 2017-ம் ஆண்டு தற்கொலைகளை குற்றமற்றதாக்கியது, அதே போல தேசிய மனநலச் சட்டத்தைக் கொண்டுவந்தது ஆகிய நடவடிக்கைகள், மனநல சிகிச்சை கிடைப்பதற்கான வழிகளை மேம்படுத்தக்கூடும். மேலும் இது தற்கொலைக்கு முயன்றவர்களின் மீதான களங்கத்தையும் தற்கொலைகள் குறித்த முறையாக தெரிவிக்காமலிருப்பதையும் குறைக்கக்கூடும் என்கிறது லான்செட் ஆய்வு.

”தற்கொலையை தேசிய சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக முதலில் அறிவிக்க வேண்டும்” என்கிறார் ஹார்வர்டு சான் பொதுநல கல்விநிலையத்தின் உலகளாவிய சுகாதார மற்றும் மக்கள்தொகைத் துறையின் பேராசிரியர் விக்ரம் பட்டேல் தெரிவித்துள்ளார். இவர் இந்தியாவில் தற்கொலைகள் குறித்து 2014-ம் ஆண்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, கடந்த பத்தாண்டுகளில் தற்கொலை விகிதத்தைக்  குறைந்திருக்கும் சீனா மற்றும் இலங்கையிலிருந்து, எவ்விதமான தலையீடுகள் தற்கொலையை குறைத்திருக்கின்றன எனக் கண்டறிவதில் உத்வேகம் பெறவேண்டும் என்கிறார் விக்ரம் பட்டேல்.

*****

இந்த ஆய்வுகளில் பல்வேறு விசயங்கள் தெரிய வந்துள்ளன. குறிப்பாக நகரமயமான / நகரமயமாகும் மாநிலங்களில் தற்கொலை விகிதங்கள் அதிகமாக இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பப் பணியாக இருந்தாலும் சரி, ஆலைப்பணியாக இருந்தாலும் சரி, பிழிந்தெடுத்து சக்கையாக வெளியே அனுப்புகின்றன தனியார் நிறுவனங்கள். ஒரு பக்கம் வேலை அழுத்தமும் மறுபக்கம் பெரும் நுகர்வு வெறி உருவாக்கும் விரக்தியும் சேர்ந்து தற்கொலையை நோக்கித் தள்ளுகின்றன. இதற்கு தோதாக இந்திய மக்களின் மனதை நோய்வாய்ப்பட்டதாகவே பார்ப்பனியம் வைத்திருக்கிறது.

இந்தியாவில் பெண்களை, பெற்றோர்களும், சுற்றமும் அவர்களைப் பெருமளவில் ஒடுக்குவதிலும் முடக்குவதிலுமே கவனம் செலுத்துகின்றனர். அவர்களின் படிப்பை நிர்ணயித்துக் கொள்வதிலும், வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதிலும் முடிவுகளை பெற்றோரும் உற்றார் உறவினருமே முடிவெடுக்கின்றனர். பெண்களை பிள்ளை பெற்றுத்தரும் இயந்திரமாக மட்டுமே பார்க்கும் பார்ப்பனியம் இந்திய சமூகத்தில் ஊறிப் போயிருப்பதன் வெளிப்பாடு இது.

இந்திய ஆண்களின் தற்கொலையில் பெரும்பங்கு வகிப்பவை கடன் தொல்லைகளே என்கின்றனர் ஆய்வாளர்கள். இன்று புகுத்தப்பட்டிருக்கும் தனியார்மயம் தாராளமயத்தின் காரணமாக விவசாயம், சிறு தொழில்கள் அனைத்தும் கடுமையான நட்டத்தையே சந்திக்கின்றன. கடன் வாங்கி வட்டி கட்ட முடியாத ஆண்கள், வேறுவழியின்றி தற்கொலை முடிவெடுக்கின்றனர். இதை அரசே நடத்தும் மதுக்கடைகள் திட்டமிட்டு ஊக்குவிக்கின்றன.

முதலாளித்துவத்தையும், பார்ப்பனியத்தையும் ஒழித்துக்கட்டாமல் மனித உயிர்களின் இழப்பை எத்தனை சட்டங்கள் போட்டாலும் இந்தியாவில் தடுக்க முடியுமா என்ன?

நன்றி : IndiaSpend
சுருக்கப்பட்ட தமிழாக்கம்:

கிறிஸ்துவுக்காக மக்கள் செத்திராவிட்டால் கிருஸ்துவே இருந்திருக்க மாட்டார்

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 27 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி

”உலக தொழிலாளிகள் நீடூழி வாழ்க!” என்று கோசமிட்டான் பாவெல்.

உவகையும் சக்தியும் நிறைந்து விளங்கும் ஆயிரக்கணக்கான மக்களின் உள்ளத்தைக் கிளறும் ஜெயகோஷம் எதிரொலித்து விம்மியது.

தாய் நிகலாயின் கரத்தையும் வேறு யாரோ ஒருவனுடைய கரத்தையும் பற்றிப் பிடித்துக்கொண்டாள். கண்ணீர் முட்டித் ததும்பத் தொண்டை அடைத்துத் திணறினாள் அவள்; எனினும் அவள் கூச்சலிடவில்லை. அவளது முழங்கால்கள் நடுநடுங்கின. துடிதுடிக்கும் தன் உதடுகளை அசைத்து அவள் ஏதோ முணுமுணுத்தாள்.

“என் அருமைப் பிள்ளைகளே……”

நிகலாவின் அம்மை விழுந்த முகத்தில் ஒரு பரந்த புன்னகை பளிச்சிட்டுத் தோன்றியது. கொடியைப் பார்த்தவாறே அவன் எதோ முணுமுணுத்துக் கொண்டு அதை நோக்கிக் கையை நீட்டினான். திடீரென்று அதே கையால் தாயின் கழுத்தைச் சுற்றி வளைத்து அவளை முத்தமிட்டான். பிறகு கடகடவென்று சிரித்தான்.

“தோழர்களே!” என்று அந்தக் கூட்டத்தினரின் கர்ஜனைக்கிடையிலே குறுக்கிட்டு அமைதியாகச் சொன்னான் அந்திரேய்; “தோழர்களே! இன்று ஒரு புதிய கடவுளின் பேரால் அறிவும் ஒளியும் தரும் புதிய ஆண்டவனின் பேரால், சத்தியமும் நன்மையுமே உருவான சாமியின் பேரால் நாம் ஒரு அறப்போர் தொடங்கியிருக்கிறோம். நமது இறுதி லட்சியம் வெகு தொலைவில் இருக்கிறது. ஆனால் நமக்குக் கிடைக்கவிருக்கும் முள் கிரீடமோ(1) கையெட்டுத் தூரத்தில் தான் இருக்கிறது. சத்தியத்தின் வெற்றியில், உண்மையின் வெற்றியில் எவருக்கேனும் நம்பிக்கை குறைவாயிருந்தால், இந்தச் சத்தியத்துக்காகத் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணம் செய்ய எவருக்கேனும் தைரியம் அற்றிருந்தால், தன்னுடைய சுய பலத்திலேயே எவருக்கேனும் அவநம்பிக்கையிருந்தால், துன்பத்தைக் கண்டு எவரேனும் அஞ்சினால், தயை செய்து அவர்கள் ஒருபுறமாக ஒதுங்கி நிற்கட்டும். நமது வெற்றியிலே நம்பிக்கை கொள்பவர்களை மட்டுமே நாம் கேட்டுக் கொள்கிறோம். அறைகூவல் விடுக்கிறோம். எங்களது லட்சியத்தைக் காண முடியாதவர்களுக்கு எங்களோடு அணிவகுத்து முன்னேறுவதற்கும் உரிமை கிடையாது. ஏனெனில் அப்படிப்பட்டவர்களுக்குப் பின்னால் துயரம்தான் காத்து நிற்கும். எங்களது அணிவகுப்பில் சேருங்கள். தோழர்களே! சுதந்திர மக்களின் விழா நாள் நீடூழி வாழ்க! மே தினம் நீடூழி வாழ்க!”

கூட்டம் மேலும் அதிகரித்துக் குழுமியது. பாவெல் கொடியைத் தூக்கிப் பிடித்தான்; அவன் அதை உயரத் தூக்கியவாறு முன்னேறிச் சென்ற போது அந்தக் கொடியில் சூரிய ஒளி பட்டுப் பிரகாசித்தது: அந்தக் கொடி உவகையும் ஒளியும் நிறைந்து புன்னகை செய்தது.

பியோதர் மாசின் பாட ஆரம்பித்தான்.

போதும். போதும்! நேற்றையுலகின்
பொய்மை தன்னைப் போக்கவே……

பல்வேறு குரல்கள் அவனோடு சேர்ந்து, அந்தப் பாட்டின் அடுத்த அடியைப் பாடின;

பாத மண்ணை உதறித் தள்ளிப்
படையில் சேர வருகுவீர்

தாய் மாசினுக்குப் பின்னால் நடந்து வந்தாள். அவளது உதடுகளில் உவகை நிறைந்த புன்னகை பளிச்சிட்டது; அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் தன் மகனின் தலையையும், கொடியையும் அவள் மிகவும் சிரமப்பட்டு ஏறிட்டுப் பார்த்தாள். அவளைச் சுற்றி எங்குப் பார்த்தாலும் மகிழ்ச்சி நிறைந்த முகங்களும் பிரகாசமான கண்களுமே தெரிந்தன; அந்த முகங்களுக்கும் கண்களுக்கும் முன்னால் அவளது மகன் பாவெலும் அந்திரேயும் முன்னேறிச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் பாடிக்கொண்டே செல்வதை அவளால் கேட்க முடிந்தது. அந்திரேயின் இனிமையான குரல் பாவெலது கனத்த குரலோடு கலந்து கொண்டிருந்தது,

பட்டினியும் பசியுமாகப்
பாடுபடும் தோழர்காள்!
துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

மக்கள் அந்தச் செங்கொடியை நோக்கி விரைந்தோடி வந்தார்கள். ஓடி வரும்போதே அவர்கள் உற்சாகத்தோடு சத்தமிட்டார்கள், பின்னர் அவர்களும் அந்தப் பாட்டை உரத்த குரலில் பாட ஆரம்பித்தார்கள். எந்தப் பாடலை அவர்கள் தங்கள் தங்கள் வீட்டுக்குள் வெளிக்குத் தெரியாமல் பாடி வந்தார்களோ, அதே பாடல் இன்று தெருவில் எந்தவிதத் தங்குத் தடையுமற்று, பிரம்மாண்டமான அசுர வேகத்தோடு பொங்கிப் பிரவகித்து ஒலித்தது. கட்டுப்படுத்த முடியாத துணிவாற்றலோடு ஒலித்து விம்மியது. மேலும் அந்தப் பாடல் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் நெடிய பாதையில் வந்து கூடும்படி மக்களை அறைகூவி அழைத்தது. அந்தப் பாதை எவ்வளவு கரடு முரடான பாதையென்பதையும், அவர்களுக்கு வெளிப்படையாகச் சொல்லியது. அந்தப் பாடலின் நிதானமான செந்தழல் உளுத்து ஒடாகி உதவாக்கரையான சகலவற்றையும், அழுகி இறுகி அடைந்து போன சம்பிரதாய உணர்ச்சிகளின் குப்பை கூளங்களையும், மக்களின் மனத்திலே ஊடாடும் புதியதின் பயபீதியையும் பற்றிப் பிடித்து, அவற்றைச் சுட்டுச் சாம்பலாக்கிப் பொசுக்கித் தள்ளியது.

படிக்க:
ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா ?
விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !

பயமும் மகிழ்ச்சியும் கலந்த ஏதோ ஒரு முகம் திடீரென்று தாயின் அருகே வந்து எட்டிப் பார்த்தது. பிறகு நடுநடுங்கி உடைத்துப்போன குரலில் கேட்டது,

“மீத்யா! நீ எங்கே போகிறாய்?”

”அவன் போகட்டும்” என்று சொன்னாள் தாய். “நீ அவனைப்பற்றிக் கவலைப்படாதே. நானும் கூடத்தான் முதலில் பயந்து போனேன். அதோ முன்னால், கொடியைப் பிடித்துக் கொண்டு போகிறான் பார். அவன் தான் என் மகன்!”

“ஏ முட்டாள்களே! எங்கேயடா போகிறீர்கள்? அங்கே சிப்பாய்கள் நிற்கிறார்களடா!”.

நெட்டையாகவும் ஒல்லியாகவும் இருந்த அந்தப் பெண் பிள்ளை தாயின் கரத்தைத் தனது எலும்புக் கரத்தால் திடீரெனப் பற்றிப் பிடித்துக்கொண்டு சத்தமிட்டாள்:
”ஆஹா! அவர்கள் பாடுவதைக் கேளம்மா. என் மகனும் கூடப் பாடுகிறான்!”

”நீ ஒன்றும் பயப்படாதே” என்று சொன்னாள் தாய்; ”இது ஒரு புனிதமான காரியம். நினைத்துப்பார். கிறிஸ்துவுக்காக மக்கள் செத்திராவிட்டால், கிருஸ்துவே இருந்திருக்கமாட்டார்!”

இந்த எண்ணம் அவள் மனத்தில் திடீரென்று பளிச்சிட்டுத் தோன்றியது. அந்த எண்ணத்தில் பொதிந்திருந்த தெளிவான, எளிதான உண்மையை உணர்ந்து, அவள் ஒரே புளகாங்கிதம் எய்தினாள். தனது கையை அழுத்தமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தாள்.

“ஆமாம். கிறிஸ்துவுக்காக மக்கள் சென்று செத்திராவிட்டால் கிறிஸ்துவே இருந்திருக்கமாட்டார்!” என்று வியப்பு நிறைந்த புன்னகையோடு திரும்பவும் அதைக் கூறிக்கொண்டாள்.

சிஸோவ் அவள் பக்கமாக வந்தான்.

“இன்று பகிரங்கமாகவே புறப்பட்டுவிட்டீர்களா?’ என்று சொல்லிக்கொண்டே அவன் தன் தொப்பியை எடுத்து அந்தப் பாட்டின் சத்தத்திற்குத் தக்கவாறு ஆட்டிக்கொண்டான். ”பாட்டா பாடுகிறார்கள்! ஆஹா, இது எவ்வளவு அருமையான பாட்டு, அம்மா!”

பேரணியில் சேர வீரர்
ஜாரரசன் கேட்கிறான்;
ஜாரரசன் போர் நடத்தத்
தாரும் உங்கள் மக்களை!

“இவர்களுக்குக் கொஞ்சம் கூடப் பயமில்லையே!” என்றான் சிஸோவ்; “செத்துப்போன என் மகன் மட்டும் இருந்தால்…”

தாயின் உள்ளம் படபடத்துத் துடித்தது; எனவே அவள் வேகமாகச் சொல்ல முடியாமல் பின் தங்கிவிட்டாள். ஜனக்கூட்டம் அவளை நெருக்கித்தள்ளி, ஒரு வேலிப்புறமாக நெட்டித் தள்ளியது. அவளைக் கடந்து ஒரு பெரிய ஜனத்திரள் அலைமோதிக்கொண்டு முன்னேறியது. அந்தக் கூட்டத்தில் நிறைய பேர் இருந்தார்கள். அதைக் கண்டு அவள் ஆனந்தமுற்றாள்.

துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

ஏதோ ஒரு பிரம்மாண்டமான பித்தளையாலான எக்காளம் தனது அகன்ற வாயின் வழியாக, அந்தப் பாடலைப் பொழிந்து தள்ளுவது போலவும், அந்த எக்காள நாதத்தைக் கேட்டு ஜனங்கள் விழித்தெழுவது போலவும் விழித்தெழுந்து போருக்குக் கிளம்புவது போலவும் தோன்றியது. மேலும் அந்த எக்காள் முழக்கம் மற்றவர்களின் உள்ளத்தில், ஏதோ ஒரு இனந்தெரியாத இன்ப உணர்ச்சியையும் புதுமையையும் ஆர்வம் மிகுந்த குறுகுறுப்பையும் உண்டாக்குவது போலவும் தோன்றியது. ஒரு பக்கத்தில் அந்த நாதம் சிலர் மனத்தில் தைரியமற்ற நம்பிக்கைகளுக்கு இடம் கொடுத்தது. சிலர் மனத்தில், அவர்களது உள்ளத்தினுள்ளே நெடுங்காலமாகப் புழுங்கித் தவித்த கோப உணர்ச்சியையெல்லாம் மடை திறந்த வெள்ளமாகத் திறந்து விட்டுக்கொண்டிருந்தது.

காற்றிலே அசைந்தாடும் அந்தச் செங்கொடியையே எல்லோரும் ஏறிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“அதோ அவர்கள் போகிறார்கள்!” என்று யாரோ தன்னை மறந்த வெறிக்குரலில் கத்தினான். “தம்பிகளா! நீங்கள் அழகாயிருக்கிறீர்களாடா!”

அந்த மனிதனின் உள்ளத்தில் வார்த்தைகளின் சக்திக்கு மீறி வாய்விட்டுச் சொல்ல முடியாத எதோ ஒரு உணர்ச்சி மேலிட்டுப் பொங்கியது. எனவே அந்த உணர்ச்சியை வெளியிடுவதற்காக அவன் ஏதோ வஞ்சினமாகச் சபதம் சொல்லிக்கொண்டான். ஆனால் சூரிய உஷ்ணத்தால் கலைக்கப்பட்ட நாகப்பாம்பைப் போல் இருண்டு போன குருட்டுத்தனமான அடிமைத்தனம் நிறைந்த குரோத உணர்ச்சி புஸ்ஸென்று சீறி விஷ வார்த்தைகளைக் கக்கிற்று.

“மதத் துரோகிகள்!” என்று ஒரு வீட்டு ஜன்னலிலிருந்தவாறு தனது முஷ்டியை ஆட்டிக்கொண்டே ஒருவன் சத்தமிட்டடான்.

“சக்கரவர்த்திக்கு எதிராக, ஜார் மகாராஜனுக்கு எதிராகக் கிளம்புவதா? கலகம் செய்வதா?” என்று கூரிய குரல் தாயின் காதில் மாறி மாறி ஒலித்தது.

ஆணும் பெண்ணுமாக ஜனக்கூட்டம் தாயைக் கடந்து செல்லும்போது, அவள் கலவரமடைந்த பல முகங்களைக் கண்டாள். அந்த ஜனத்திரள் உருகி வழியும் எரிமலைக் குழம்பு போல் மேலும் மேலும் பொங்கி வந்தது. அந்தப் பாட்டினால் தனக்கு முன்னேயுள்ள சகல தடைகளையும் துடைத்துத் தூர்த்து, தனது மகத்தான சக்தியினால், நான் செல்லும் பாதையைத் தங்கு தடையற்றதாகச் செய்யும் அந்தப் பாட்டினால் – ஜனங்கள் கவர்ந்திழுக்கப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்கள்.

கொள்ளையும் கொலையும் நடத்தும் கொடியின் நிழலிலே நின்று அவர்கள் நம்மை எதிர்ப்பதைக் கைவிட்டு, சுதந்திரக் கொடியான நமது கொடியின் கீழ் வந்து, நம்முடன் கையோடு கைகோத்து, அணிவகுத்து நிற்க, அவர்களும் வந்து சேருவதற்கு இன்னும் அதிக நாள் இல்லை.

தூரத்திலே தலைக்கு மேலாக நிமிர்ந்து தோன்றும் அந்தச் செங்கொடியை அவள் பார்த்தபோது, தன் மனக்கண் முன்னால் தன் மகனது முகத்தையும் – அவனது தாமிர நிறமான நெற்றியும், நம்பிக்கையும் ஒளியாகப் பிரகாசமுற்ற அவனது கண்களும் – அவளது மனக்கண்ணில் தோன்றின.

கூட்டம் முழுவதும் அவளைக் கடந்து முன்னேறிச் சென்ற பின், அவள் அந்தக் கூட்டத்தின் பின்னால் வந்த ஜனங்களைப் பார்த்தாள். அவர்கள் அவசரம் ஏதுமின்றி சாவதானமாக நடந்து வந்தார்கள். அந்த அணிவகுப்பினால் நேரவிருக்கும் அபாயத்தைப் பற்றித் தெரிந்து கொண்டவர்கள் மாதிரி அதை எதிர்நோக்கி, விருப்பற்றுத் திருக்கத் திருக அங்குமிங்கும் பார்த்தவாறு அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்கும் ஏதேதோ விஷயங்கள் ஏற்கெனவே தெரிந்திருந்த பாவனையில் தீர்மானமாகப் பேசிக்கொண்டார்கள்.

”பள்ளிக்கூடத்திலே ஒரு பட்டாளம் தங்கியிருக்கிறது, இன்னொரு பட்டாளம் தொழிற்சாலையிலே தயாராய்க் காத்திருக்கிறது.”

”கவர்னர் வந்துவிட்டார்.”

அப்படியா?” “அவரை என் கண்ணாலேயே பார்த்தேன். இப்போதுதான் வந்தார்.”

”அவர்கள் நம்மைக் கண்டு பயப்படத்தான் செய்கிறார்கள். யோசித்துப் பார். இல்லையென்றால், கவர்னரும் சிப்பாய்களும் எதற்கு?” என்று ஒருவன் சொன்னான்.. சொல்லிவிட்டு உற்சாகத்தோடு ஏதோ வர்மம் கூறிக்கொண்டான்.

“அருமைப் பிள்ளைகளா!” என்று நினைத்துக் கொண்டாள் தாய்.

ஆனால் அவள் கேட்ட வார்த்தைகள் உயிரற்று உணர்வற்று ஒலிப்பவைபோல் இருந்தன. எனவே அந்தக் கூட்டத்தினரிடமிருந்து விலகிப் போவதற்காக நடையை எட்டிப்போட்டாள். அவர்கள் மிகவும் மெதுவாக ஆடியசைந்து நடந்து வந்ததால், அவள் அவர்களை முந்தி முன்னேறிச் செல்வதில் சிரமம் எதுவும் ஏற்படவில்லை .

திடீரென்று அந்த ஊர்வலம் எதனோடோ அதி கேவமாக மோதிக் கொண்டது போலத் தோன்றியது. அந்த அணிவகுப்பு முழுவதுமே திடுக்கிட்டுப் பின்னடித்தது. பய பீதி நிறைந்த கசமுசப்புக் குரல் லேசாக எழுந்து பார்த்தது. அந்தப் பாட்டும் கூட நடுநடுங்கி ஒலித்தது. இருந்தாலும் அந்த நடுக்கத்தைப் போக்குவதற்காக, சிலர் மிகவும் உரத்த குரலிலும், துரித கதியான சப்தத்திலும் அதைப் பாடத் தொடங்கினார்கள். ஆனால், மீண்டும் அந்தப் பாட்டு உள்வாங்கி மங்கியது. ஒருவர் பின் ஒருவராக அந்த மக்கள் பாடுவதை நிறுத்தத் தொடங்கினார்கள். அந்தப் பாட்டைப் பழைய உச்ச நிலைக்கு கொண்டு வருவதற்காக, சிலர் மட்டும் உத்வேகம் நிறைந்தவாறு பாடும் குரல் மட்டும் கேட்டது.

பட்டினியும் பசியுமாகப்
பாடுபடும் தோழர்காள்…..
துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

ஆனால் இந்தப் பொது முழக்கத்தில் ஒத்துழைப்பும் இல்லை உறுதி பெற்ற நம்பிக்கையும் இல்லை. ஏற்கெனவே அவர்களது குரல்களில் பயபீதி புரையோடிவிட்டது.

முன்புறத்தை தாயினால் பார்க்க முடியாததாலும் என்ன நேர்ந்துவிட்டது என்பதை அறிய முடியாததாலும் அவள் அந்தக் கூட்டத்தினரை முட்டித் தள்ளிக்கொண்டு, கூட்டத்தினூடே, புகுந்து முன்னே செல்ல முனைந்தாள். அவள் முன்னேற முன்னேற ஜனக்கூட்டம் அவளைப் பின்னடித்துத் தள்ளியது; அவர்களில் சிலர் முகத்தைச் சுழித்தார்கள். சிலர் தங்கள் தலைகளைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள். சிலர் அசட்டுத்தனமாய்ப் புன்னகை செய்தார்கள்; இன்னும் சிலர் கேலியாகச் சீட்டியடித்துக் கொண்டிருந்தார்கள். அவள் அவர்களது முகங்களைப் பார்த்தாள். அவளது கண்கள். வினாத் தொடுத்தான். வேண்டுதல் செய்தன. அழைப்பு விடுத்தன.

”தோழர்களே!” பாவெலின் குரல் கேட்டது. “ராணுவ வீரர்களும் நம்மைப்போல் மனிதர்கள்தான் அவர்கள் தம்மைத் தொடமாட்டார்கள்! அவர்கள் எதற்காக நம்மைத் தொட வேண்டும்? எல்லோருக்கும் பயன்பெறக்கூடிய உண்மையை நாம் எடுத்துக் கூறுவதற்காகவா? அந்த உண்மை நமக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவு அவர்களுக்கும் தேவை. அந்தத் தேவையை அவர்கள் இன்னும் உணராமல் இருக்கலாம். ஆனால் கொள்ளையும் கொலையும் நடத்தும் கொடியின் நிழலிலே நின்று அவர்கள் நம்மை எதிர்ப்பதைக் கைவிட்டு, சுதந்திரக் கொடியான நமது கொடியின் கீழ் வந்து, நம்முடன் கையோடு கைகோத்து, அணிவகுத்து நிற்க, அவர்களும் வந்து சேருவதற்கு இன்னும் அதிக நாள் இல்லை. அவர்கள் இந்த உண்மையை உணரும் காலத்தைத் துரிதப்படுத்துவதற்காக, நாம் நமது முன்னணியைவிடாது முன்னேறிச் செல்ல வேண்டும். முன்னேற வேண்டும். தோழர்களே! முன்னேற வேண்டும்!”

படிக்க:
எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

பாவெலின் குரல் உறுதி நிறைந்து ஒலித்தது. அவனது சொற்கள் தெளிவாகவும் கூர்மையாகவும் ஒலித்தன. எனினும், கூட்டம் கலைந்துவிட்டது. ஒருவர் பின் ஒருவராக அணி வகுப்பிலிருந்து வெளியே வந்து, வீடுகளை நோக்கி வேலிப்புறமாக ஒதுங்கி நழுவிச் செல்லத் தொடங்கினார்கள். இப்போது அந்த ஊர்வலம் கூரிய மூக்குடனும் அகன்ற உடலுடனும் இருப்பது போலத் தோன்றியது. அதன் தலைப்புறத்தில் பாவெல் நின்றுகொண்டிருந்தான், அவனுக்கு மேலாக, தொழிலாளி மக்களின் செங்கொடி பிரகாசமாக ஒளிசிதறிப் படபடத்துக்கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தின் நிலையைப் பற்றி வேறொரு உவமை கூடச் சொல்லலாம். ஏதோ ஒரு கரிய பறவை தனது அகன்ற சிறகுகளை விரித்து உயர்த்திப் பறப்பதற்குத் தயாராக நிற்பது போலிருந்தது அந்தக் கூட்டம். அந்தப் பறவையின் அலகைப்போல் நின்றிருந்தான் பாவெல்….

(தொடரும்)

அடிக் குறிப்புகள்:
(1) கிறிஸ்துவுக்கு முள் கீரிடம் சூட்டப்பட்டது. இங்கு உவமையாகக் கையாளப்படுகிறது. – (மொ -ர்.)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

டி.சி.எஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு குறைந்த ஊதியத்தில் 28,000 கூடுதல் அடிமைகள் !

டி.சி.எஸ் நிறுவனம் வழக்கமாக பட்டதாரிகளை மொத்த எண்ணிக்கையில் வேலைக்கு எடுத்து வருகிறது – 2017-ம் ஆண்டில் 20,000 பட்டதாரிகளையும் 2016-ம் ஆண்டில் 35,000 பட்டதாரிகளையும் வேலைக்கு எடுத்தது. 2015-ம் ஆண்டு 40,000 பட்டதாரிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

2018-ஆம் ஆண்டில் 1,800 பொறியியல் கல்லூரிகளில் 2.7 லட்சம் மாணவர்களில்  28,000 பட்டதாரிகளை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளனர். 50,000 பேர் நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்பெல்லாம், சுமார் 400 கல்லூரிகளில் வளாக நேர்காணல் மூலம் புதிய பட்டதாரிகளை பணியமர்த்தி வந்தது.

இங்கே முக்கிய பிரச்சினை வேலையற்ற பொறியியல் பட்டதாரிகளின் ரிசர்வ் பட்டாளமாகும். டி.சி.எஸ் 10 விண்ணப்பதாரர்களில் 1 பொறியியலாளரை தேர்வு செய்கிறது. தனியார் (இலாபத்திற்கான) பொறியியல் கல்லூரிகள் தொடர்பான  அரசின் கொள்கை இந்திய இளைஞர்களை ஐ.டி நிறுவனங்களுக்கு குறைந்த சம்பளத்தில் வழங்குவதற்கு வழிவகுத்தது. வேலைக்கு போட்டியிடும் பட்டதாரிகள் எண்ணிக்கையை அளவுக்கு அதிகமாக ஆக்கி அனைவருக்கும் சம்பளத்தை குறைக்க வழிவகுக்கிறது.

டி.சி.எஸ் இந்த ஆண்டு வேலைக்கு எடுக்கும் 28,000 ஊழியாளர்களில், 1000 பேருக்கும் மட்டும் ஒரு வருடத்திற்கு 6 லட்சம் ரூபாய் ஆரம்ப சம்பளத்தில் அதன் டிஜிட்டல் பிசினஸ் பிரிவில் அமர்த்தவிருக்கிறது. இது ஒரு திறமையான ஐ.டி ஊழியருக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை (வருடத்திருக்கு 12 இலட்சம்) விட குறைவாகவே உள்ளது. மீதி 27,000 பேருக்கு இதை விடக் குறைந்த சம்பளமே வழங்கப்படும்.

படிக்க :
♦ வெல்லம் தின்னும் டி.சி.எஸ் – விரல் சூப்பும் ஊழியர்கள் !
♦ 40 வயதுக்கு மேல் ஐ.டி துறையில் வேலை இல்லை – பங்கஜ்

முக்கியமாக, இந்த பட்டதாரிகளுக்கு டி.சி.எஸ் கொடுப்பதை வாங்கிக்கொள்வதைத் தவிர வேறெந்த வழியில்லை.  திறமையுள்ள ஊழியர்களுக்கு அரசு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிப்பது இல்லாததால், நிறுவனங்களால் இன்னும் அதிகமாக கொடுக்க முடியும் என்றாலும் நிறுவனங்கள் ஏழை படித்த இளைஞர்களின் நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒருவேளை தேவையை மட்டும் பூர்த்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28,000 பணியிடங்களுக்கு 30,000 விண்ணப்பங்கள் மட்டுமே வந்திருக்கும், நிறுவனம் அதிக ஊதியம் (வருடத்திற்கு ரூ 10 லட்சம்?) கொடுக்க வேண்டியிருந்திருக்கும்.

மற்றவர்கள்? அவர்களுக்கு மற்ற துறைகளில் வாய்ப்புகளை வழங்கியிருக்க வேண்டும்.

நடைமுறையில், பொறியியல் பட்டதாரிகளின் சம்பளத்தை குறைத்துக் கொடுத்து ஏமாற்றி ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சம்பாதித்து (அதன் மூலம் இந்தியாவை ஏழை நாடாக்கி) மேற்கத்திய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் சேவை வழங்கும் வாய்ப்பை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்திய அரசு வழங்கியிருக்கிறது.

ஒரு ஆரம்பநிலை திறன் ஊழியரின் சம்பளம் 2001-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை வருடத்திற்கு 3.3 இலட்சம் ரூபாய் என்றே தொடர்ந்தால் அது அடிப்படையில் அடிமைத்தனமே. 2001-ம் ஆண்டில் 3.3 இலட்சம் ரூபாய் என்பது தற்போது, 12 இலட்சம் ரூபாய்க்கு சமமானதாகும். மேலும் விவரங்களுக்கு டி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி! என்ற கட்டுரையை படிக்கவும்.  டி.சி.எஸ் ஒவ்வொரு ஆண்டும் ஆரம்ப நிலை ஊதியத்தை உயர்த்தாமல் இருப்பதால் அது இந்தியாவை எப்படி வறுமையை நோக்கித் தள்ளுகின்றது என்று அந்தக் கட்டுரை பேசுகிறது அறியலாம். இப்படி தொடங்கும் அடிமைத்தனம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அனைத்து மட்டங்களுக்கும் கடத்தப்படுகிறது.

காலின்ஸ் அகராதியில் அடிமைத்தனம் பற்றி சில வரையறைகள் :

  • “செல்வாக்கிற்கு கீழ்ப்படிதல் அல்லது நிபந்தனைக்கு அடிபணிதல்”
  • “குறைந்த ஊதியத்திற்கு மோசமான சூழ்நிலையில் வேலை செய்வது”
  • “ஒரு நபர் மற்றொருவர் மீது முழுமையான அதிகாரத்தை செலுத்துதல், அவருடைய வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் செல்வத்தைக் கட்டுப்படுத்துதல்”

1650-ம் ஆண்டில் வெள்ளையர்கள் இந்தியாவுக்கு வந்து இந்திய அடிமைகளை உருவாக்கினர். இது இரண்டாம் உலகப் போர் வரை தொடர்ந்தது, பின்னர் வெள்ளையர்கள் இந்தியா போன்ற நாடுகளை விட்டு தங்கள் சொந்த நாட்டிற்கு சென்றனர்.

1600-களில் வெள்ளையர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து ஆட்களை வாங்கி அமெரிக்கா என்ற ஒரு நாட்டைக் கட்டத் தொடங்கினார். ஆபிரகாம் லிங்கன் போன்றவர்கள் இதற்கெதிராக போராடி மாற்றும் வரை இந்த நிலைமை நிலவியது.

1950-களில் வெள்ளையர்கள் தங்கள் நாட்டில் இருந்து கொண்டே அடிமைகளை அவரவர் சொந்த நாடுகளில் இருக்க விட்டனர், நடுவில் இணைய இணைப்பை மட்டும் ஏற்படுத்திக்கொண்டனர். அடிமைத்தனம் வெர்சன் 1.0-லிருந்து 3.0-ற்கு மாற்றப்பட்டது, ஆனால் அடிமைத்தனம் தொடர்கிறது. டாட்டா, பிரேம்ஜி, நாராயண மூர்த்தி போன்றவர்கள் இந்த அடிமைத்தனத்திற்கு உதவியதோடு ஆன்லைன் அடிமைகளுக்கு கங்காணிகளாக இருப்பதன் மூலமும் தங்களை பணக்காரர்களாக்கிக்  கொண்டார்கள்.

– பிரசாந்த்
மொழிபெயர்ப்பு : மணி
நன்றி : new-democrats