privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅணு உலைகளை விட ஆபத்தானவை!

அணு உலைகளை விட ஆபத்தானவை!

-

ஜெயலலிதா-கருணாநிதி

ஓட்டுப் பொறுக்கி அரசியலில் என்னதான் கேவலமான நாய்ச் சண்டையில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஈடுபட்டிருந்தாலும், வேறு பல விடயங்களில் அண்ணனும் தங்கையுமாக உறவு கொண்டு, ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள். இதற்கு, பன்னாட்டு  இந்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்வதில் இருந்து சோனியா-மன்மோகன் கும்பலுக்குத் துணை நின்று ஈழத் தமிழரின் முதுகில் குத்துவது வரை எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். கருணாநிதி  ஜெயலலிதாவின் பாசப் பிணைப்புக்கு மிகச் சமீபத்திய சான்றாக, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி அவதூறு செய்து ஒடுக்குவதில் இருவரும் கை கோர்த்துக் கொண்டு செயல்படுவதைக் கூறலாம்.

இந்த வகையில் காங்கிரசு, பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் “தேசியக் கூட்டணி”யும் கருணாநிதி, ஜெயலலிதாவின் “திராவிடக் கூட்டணி”யும் ஒரே உத்தியைத்தான் பின்பற்றுகின்றன; இரண்டு கூட்டணிகளும் கூட்டுச் சேர்ந்து ஒரு மகாகூட்டணியும் அமைத்துக் கொண்டு செயல்படுகின்றன. கூடங்குளம் அணுஉலை பற்றிய அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக என்று மத்திய-மாநில அரசுகள் தனித்தனியே இரண்டு நிபுணர் குழுக்களை அமைத்தன. அவை கூடங்குளம் வளாகத்தில் விருந்துண்டு ஏப்பமும் அறிக்கையும் விட்டதோடு சரி. போராடிய மக்களை சந்திக்கவோ, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கவோ இல்லை.

இந்த நிலையில், அணுஉலை எதிர்ப்புப் போராட்டத் தலைமைக்கு எதிராக “அமைப்புசாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் அந்நியத் தொடர்பு, அந்நிய நிதி உதவி” என்ற அவதூறு கட்டவிழ்த்து விடப்பட்டது. மன்மோகன்  சோனியாவின் எடுபிடி நாராயணசாமி போதாதென்று சிதம்பரமும் மன்மோகனுமே இந்தப் பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கினர். சி.பி.ஐ., ஐ.பி. முதலிய மத்திய உளவுப் படைகளை ஏவி விசாரணை, சோதனை, வங்கிக் கணக்கு முடக்கம், ஜெர்மனி சுற்றுலாப் பயணி வெளியேற்றம் என்று அனைத்து ஊடக உதவியுடன் பல கூத்துக்களை நடத்தினர். கடைசியில் அவ்வாறான புகார்கள் எதற்கும் ஆதாரங்கள் இல்லை, “உறுதிப்படுத்தப்படவில்லை” என்று நாடாளுமன்றத்திலேயே அறிவித்து விட்டனர். ஆதாரம் எதுவுமின்றி நாராயணசாமி, சிதம்பரம், மன்மோகன் ஆகியோர் புளுகியதற்கோ, அதற்காக உளவுத்துறைகள் கேடாகப் பயன்படுத்தப்பட்டதற்கோ எந்த விளக்கமும் தரப்படவில்லை.

ஆனால், அணுஉலைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் அவதூறுப் பிரச்சாரம் என்ற தொடர் ஓட்டக் குச்சியை (பேட்டனை) ஜெயலலிதாவும், தமிழக உளவுத்துறையும் கையேற்றுக் கொண்டனர். அமைதிவழி  உண்ணாவிரதப் போராட்டங்கள் மட்டுமே நடத்தியவர்கள் மீது நூற்றுக்கணக்கான பொய் வழக்குகள் போட்டு, பல ஆயிரம் போலீசாரை குவித்து, அதிரடிப்படையின் அணிவகுப்பு மிரட்டல் விடுத்து, குழந்தைகளுக்குப் பால் உள்ளிட்ட உணவுப் பொருள், மின்சாரம், குடிதண்ணீர் வழங்கீட்டைத் தடுத்து, ஏதோ பயங்கரவாதத் தடுப்புப் போல பாசிச அடக்குமுறையை ஏவிவிட்டனர். இதனால் ஏற்பட்ட எதிர்ப்பலைகளைத் திசை திருப்பிவிடுவதற்காக வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்துடன், போராட்டத் தலைமைக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு, நக்சலைட்டுகள் ஊடுருவல்  அதனால் தீவிரவாத  வன்முறை போராட்டங்களில் குதிப்பார்கள் என்று ஜெயாவின் உளவுத்துறையும் போலீசும் பீதியூட்டும் செயல்களில் இறங்கின.

இந்த அவதூறுக்கு ஆதாரமாக உளவுத்துறையே “முன்னாள் நக்சல்பாரிகள்” என்று சொல்லும் மூன்றுபேரைப்  பிடித்து, அவர்களிடம் வன்முறைக்கு வழிவகுக்கும் கடிதமும், வரைபடமும் சிக்கியதாகவும், போராட்டக்காரர்களிடையே நக்சல்பாரிகள் உள்ளதான “வீடியோ” ஆதாரங்களை ஆய்வு செய்வதாகவும் பலவாறு புளுகுகிறது. பிடிபட்டதாகக் கூறப்படும் எவரும் நக்சல்பாரி அமைப்பினர் அல்ல. போலி ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதும் பொய் வழக்குகள் புனைவதும் ஜெயலலிதாவின் உளவுத்துறைக்கும் போலீசுக்கும் கைவந்த கலை. கலைஞர் மற்றும் சன் குழுமங்களின் வானொளி அலைவரிசைகள் ஜெயாவின் இந்த அவதூறுப் பிரச்சாரத்தை விசுவாசமாக ஒலிஒளிபரப்புகின்றன.

அப்பாவி முஸ்லீம் இளைஞர்களைப் பிடித்து தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொல்வது; ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்புகளுக்குப் பழிபோடுவது;  சீரழிந்த, அமைப்பு சாரா நபர்களைப் பிடித்து அவர்களைக் காட்டி நக்சல்பாரிகளை இழிவுபடுத்துவது  இதெல்லாம் போலீசு, உளவுத் துறையின் கைவரிசை.  வெளிநாட்டவர், நக்சல்பாரிகள் என்பதாலயே நாட்டு மக்களின் நியாயமான எந்தப் போராட்டங்களையும்  ஆதரிக்கக் கூடாதா? மக்கள் மீதான பாசிச அடக்குமுறைகளை எதிர்க்கக்  கூடாதா?  மக்களை ஒடுக்க முயலும் தேசிய, திராவிடக் கூட்டணிகள் அணுஉலைகளை விடவும் ஆபத்தானவை.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. இதை படிக்கும் போது மிகவும் பயமாக இருக்கிறது.
    இதை எப்படி எதிர்க்கொள்வது, எனக்கு இந்த காவலர்களை கண்டாலே உடலெல்லாம் நடுங்குகிறது. பயங்கரவாதி என்று சொல்லப்படுகிரவர்களிடம் கூட எனக்கு பயம் கிடையாது. ஆனால் காவல் துறை மிகவும் மோசமானது. மக்களின் எதிரி. உழைக்கும் மக்களை மோசமாக மிரட்டுகிறது. பாமரர்களை பயமுறுத்துகிறது. காவல் துறையில் நல்லவர்களே கிடையாது. கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறது . பொய் வழக்குகள் போடுகிறது . பெண்களை மிரட்டி வன் புணர்ச்சிகள் செய்கிறது. காவல் துறை மக்களின் நண்பன் இல்லை எதிரி .

    • ஓய் பறையரே

      மடியிலே கனமில்லாட்டா எதுக்குங்காணும் தானாக்காராள கண்டு பயப்படணம்.
      எங்காத்து மாமியே தன்னந்தனியா பஸ்ஸை புடிச்சு மாம்பலம் போய் போத்தீஸ்ல பட்டுப்புடைவையும் LKSல நகையும் வாங்கிண்டு நங்கநல்லூர் வரா.
      உமக்கு என்னங்காணும் பயம்?
      அதுசரி நம்மூர் பிள்ளையாண்டான் ஒருத்தன் சத்தீஸ்கர்ல IAS ஆபீஸராமே, அலெக்ஸ் பாலோ மேனனோன்னு பேராமே,
      அவனை நீங்க மெச்சிக்கற பயங்கரவாதிகள் தூக்கிண்டு போய்ட்டாளாமே?
      இதையெல்லாம் கேழ்க்கமாட்டேளே?

      எங்களவா ஒருத்தி நன்னா ராஜ்ய பரிபாலனம் பண்றா அது உமக்கு பொறுக்கலை. வயத்தெறிச்சல், போய் நாலு தம்ப்ளர் ஜெலுசில் குடியும்.

      அந்த விடியாமூஞ்சி உதயகுமாரன் கிட்டே சொல்லி CM கிட்டே முன்ன மாதிரி கொஞ்சம் மரியாதையா பேசி சமாதானமா போச்சொல்லுங்கோ. மன்னிச்சு உட்டுடுவா. இப்ப பாருங்கோ வெளியே தலை காட்ட முடியாம இடிஞ்சகரையிலே இஞ்சி தின்ன குரங்கு மாதிரி அடஞ்சு கிடக்கிறான்.
      கூடங்குளம் ஸ்டார்ட் ஆயி கரண்ட் வரத்தான் போறது.
      எல்லாரும் போய் ஜோலிய பாருங்கோ.

      எனக்கு இன்னிக்கு ரெண்டு ஆயுஷ்யோமம் ரெண்டு சிரார்த்தம்னு ஏகப்பட்ட வேலை இருக்கு ஓய். இப்பெல்லாம் எங்கள்வாளைவிட உங்கடவாள்தான் வைதீகத்துக்கு தட்சணை நிறைய தரா தெரியுமோ?

      • //எங்களவா ஒருத்தி நன்னா ராஜ்ய பரிபாலனம் பண்றா// வைதீகத்துக்கு தர்ற தட்சணை எல்லாம் கரண்ட் பில்லுக்கு போயடுதுனா பட்டு புடவைக்கு நகைக்கும் காசுக்கு எங்க ஒய் போவீர்?

        //எங்களவா ஒருத்தி நன்னா ராஜ்ய பரிபாலனம் பண்றா// ஆனா வெக்கமே படமாட்டீங்களாபா?

      • \\மடியிலே கனமில்லாட்டா எதுக்குங்காணும் தானாக்காராள கண்டு பயப்படணம்.
        எங்காத்து மாமியே தன்னந்தனியா பஸ்ஸை புடிச்சு மாம்பலம் போய் போத்தீஸ்ல பட்டுப்புடைவையும் LKSல நகையும் வாங்கிண்டு நங்கநல்லூர் வரா.
        உமக்கு என்னங்காணும் பயம்?//

        சந்தன வீரப்பன புடிக்க போன போலீஸ்காரங்க வாச்சாத்தில நடத்துன பாலியல் அட்டூழியம் ஞாபகம் இருக்கா.போற வழில நங்கநல்லூர்ல உங்காத்து மாமிய தூக்கி இருந்தாலோ, அந்த காட்டுப் பகுதிக்கு சுற்றுலா போகும் உங்களவா பொண்ணுங்களை தூக்கி இருந்தாலோ இப்படி பேசுவீரா.

        எங்களை பொறுத்தவரை அந்த வாச்சாத்தி ஆதிவாசி பெண்களும் உங்கள் ஆத்து பெண்களும் சகோதரிகளே.அவர்கள் மீதான அத்துமீறல்களை எதிர்த்து போராடுவதை கடமையாக வரித்துக் கொள்வதே மனசாட்சி உள்ளோரின் செயலாக இருக்கும்.

      • மிசுட்டர் பாப்பான்!!

        உங்க மாமி தனியா பஸ்ஸ பிடிச்சு மாம்பலம் போவுறது இருக்கட்டும் ..

        உங்களவா ராஜ்ய பரிபாலனம் பண்ணுறதும் இருக்கட்டும்…

        உங்க மாமியையும் போயஸ்தோட்டத்து மாமியையும் கூடங்குளத்துள மின் உற்பத்தி தொடங்குனதும் அணு உலைக்கு பக்கத்துல தங்க வையுங்களேன் ..

        பேஸா இருக்கும் ஓய் ..

        பக்கத்துல் பத்து 2000 வாட்ஸ் பல்ப் போட்டு உக்காந்துக்குடும் ஓய் ..

  2. //ஓட்டுப் பொறுக்கி அரசியலில் என்னதான் கேவலமான நாய்ச் சண்டையில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஈடுபட்டிருந்தாலும், வேறு பல விடயங்களில் அண்ணனும் தங்கையுமாக உறவு கொண்டு, ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள். இதற்கு, பன்னாட்டு இந்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்வதில் இருந்து சோனியா-மன்மோகன் கும்பலுக்குத் துணை நின்று ஈழத் தமிழரின் முதுகில் குத்துவது வரை எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். கருணாநிதி ஜெயலலிதாவின் பாசப் பிணைப்புக்கு மிகச் சமீபத்திய சான்றாக, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி அவதூறு செய்து ஒடுக்குவதில் இருவரும் கை கோர்த்துக் கொண்டு செயல்படுவதைக் கூறலாம்//

  3. அணு உலைகளை விட ஆபத்தானது எது…

    வினவும் அதன் நச்சுப்பிரச்சாரமும்…

  4. ///ஓட்டுப் பொறுக்கி அரசியலில் என்னதான் கேவலமான நாய்ச் சண்டையில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஈடுபட்டிருந்தாலும், வேறு பல விடயங்களில் அண்ணனும் தங்கையுமாக உறவு கொண்டு, ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள்///

    Unity in Diversity!!!!

  5. அனு உலையை விட ஆபத்தானது என்னான்னா காட்டில் ஒளிந்து கொண்டு ஒழுங்காக மக்கள் சேவையாற்றும் ஒரு கலக்டரை பிடித்துகொண்டு போனதுதான்!

    • ஓ!! … மக்களுக்கு சேவை செய்யிறது தான் கலெக்டர் வேலையா ?..

      அப்போ இங்க இருக்குற ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் எல்லாம் மக்களுக்கு சேவை செய்யிறதுக்கு தான் வர்றானா ?..

      தெரியாம போச்சே!! .. .

      நாட்டில் இருந்து கொண்டு கார்ப்பரேட்களுக்கு இந்தியாவின் தேசிய வளங்களை அள்ளிக் கொடுக்க தனது சொந்த நாட்டு பழங்குடியின மக்களை விரட்டியடிக்கவும் எதிர்க்கும் அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கவும் ஆயுதப்படை போலீசை அனுப்பி விடும் ஆளும் வர்க்க கலெக்டர்களை விட காட்டில் மக்களுடன் இருந்து மக்களைக் காப்பாற்றும் மாவோயிஸ்ட்டுகள் மேல் …

      • பாத்திய அறிவு எப்படி வேலை செய்யுதுன்னு…முதல்ல மாவோயிஸ்ட்டு இவன கடத்துனுண்டா…

    • Ram Kameswaran

      நீங்கள் சுட்டி கொடுத்துள்ள கட்டுரை பற்றி கொஞ்சம் சிந்தித்து பாருங்க.எல்லோரும் மாவோயிஸ்ட் டா மாறுங்கன்னு அந்த கட்டுரை சொல்லுது.அதுலேர்ந்து சில வரிகள்.

      Maharaj, a 2005-batch IPS officer, offered financial assistance to the jailed Maoists’ families and helped them lead a decent life.

      He has also helped send our children to schools and colleges. The physically challenged ones have got tricycles, which have given them a new life.”

      The family members are being imparted driving lessons so that they can eke out a living.

      அந்த குடும்பத்தினர் நல்ல வாழ்க்கை வாழ முடியாமல் வறுமையால் துன்பப் பட்டுள்ளனர்.அவர்கள் மாவோயிஸ்ட்களாக இல்லாமல் இருந்திருந்தாலும் இதெல்லாம் அரசு அவர்களுக்கு தந்திருக்க வேண்டுமில்லையா.அனைத்து குடி மக்களையும் நல்ல முறையில் வாழ வழிசெய்து தருவது அரசின் கடமையில்லையா.அதுக்கெல்லாம் பணமில்லன்னு சால்ஜாப்பு சொல்லாதீங்க.முதாலாளி வர்க்க கொள்ளையர்களுக்கு அரசு அள்ளிக் கொடுக்கும் கோடிகளை சாய்நாத் சொல்றாரு பாருங்க.

      http://www.thehindu.com/opinion/columns/sainath/article3223573.ece

      The total write-off on these three heads in eight years since 2005-06: Rs. 25.7 lakh crore.

      மாவோயிஸ்ட் டா மாறுனாத்தா இதெல்லாம் கிடைக்கும்னா எல்லோரும் மாவோயிஸ்ட் மாற வேண்டியதுதானா.

  6. //எனக்கு இன்னிக்கு ரெண்டு ஆயுஷ்யோமம் ரெண்டு சிரார்த்தம்னு ஏகப்பட்ட வேலை இருக்கு ஓய். இப்பெல்லாம் எங்கள்வாளைவிட உங்கடவாள்தான் வைதீகத்துக்கு தட்சணை நிறைய தரா தெரியுமோ?-பாப்பான்April 24, 2012 at 7:37 am//

    சாதி என்ன என்பதை கூறத் தயங்க வேண்டாம்: கி.வீரமணி -தினமணி

    //வளரத் திணறிய சிங்களன் தனக்கு இட ஒதுக்கீடு கொடுத்துக்கொண்டதை ஈழத் தமிழர்கள் எதிர்த்தனர். அப்போது அந்த இட ஒதுக்கீட்டை அநீதி, அநியாயம்னு சொல்லி நீங்க எதிர்த்தீங்க. இப்போ அதே இட ஒதுக்கீடு 100 % வரை இங்கே இந்தியாவில் கட்டாயம் வேண்டும்னு சொல்றீங்க. ஏன் ஊருக்கு ஒரு கொள்கை முரண்பாடு?? எல்லாம் பிழைக்கும் வழிதானோ? y குயில் 4/25/2012 8:04:00 AM //

    //ஊர் பொது காரியங்கள்/ பிரச்சினைகள் பற்றி பேசிட மக்கள் அனைவரும் பொதுஇடத்தில் கூடுகின்றனர்;

    அம்பி நீங்களெல்லாம் நாற்காலியில் உட்காரப்படாது.

    ஏன் சாமி? நிறைய பிராமனாள் சாமியெல்லாம் நாற்காலிகளில் உட்கார்ந்து இருக்கிறார்களே? நாங்கள் ஏன் உட்காரக் கூடாது?

    அவாள் எல்லாம் ஆண்டவனை நேரிடையாக தொடர்பு கொள்ளும் வரம் பெற்றவர்கள்.

    அந்தத் தகுதியை இந்து மதம் உங்களுக்கு கொடுக்க வில்லைஎன்று நோக்குதெரியாதோ?

    படவா ராஸ்கல்ஸ் – ஐயர் சாமி கிட்டே வாக்குவாதம் பண்ணிகொண்டா இருக்கிறாய். நாம கீழே தான் இருக்கணும். அல்லது சாமி குத்தம் ஆயிடும்.சின்ன பசங்க பேசறதை எடுத்துக்காதீங் க சாமி.

    நீங்க பஜனையை/பிரசங்கத்தை ஆரம்பிங்க சாமி.//

    “ கோயில்களில் ஆண்டவனை பூஜை செய்வதற்கு பிராமணனுக்கு ஒரு நீதி- மற்றவர்களுக்கு ஒரு நீதியா??? வெட்கப்படவேண்டும் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்பும் இந்நிலை தொடர்வதற்கு.”

    ஹி..ஹி..ஹி.. வேலிக்கு ஓனான் அல்லவா சாட்சியாக உள்ளது.??? கூபு / ஏசுபாபு/ குயிலுக்கு உள்ள உரிமை கடலூர் சித்தனுக்கும் கிடைக்குமா??? வாழ்க பத்திரிகை தர்மம்.

    http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=587353&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

  7. Both are same when it comes to Koodankulam and Sri Lanka issues. But i wonder, why Mu.Ka is favouring separate Tamil Ealam now, and arguing for it. To go one step ahead of Jaya?

Leave a Reply to செங்கொடி மருது பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க