privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விதாய்மொழி, அரசுப் பள்ளிகளுக்காக தஞ்சை - திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம் !

தாய்மொழி, அரசுப் பள்ளிகளுக்காக தஞ்சை – திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம் !

-

1. தமிழில் கற்பிக்க மறுக்கும் மெட்ரிக் பள்ளிக் கொள்ளையர்கள் : தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக கட்டாயம் கற்க வேண்டும் என்ற 2005-ம் ஆண்டு சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி அமைப்புகள் வழக்கு தொடுத்திருப்பதையும், தமிழ் மொழிக்கு எதிராக செயல்படும் போக்கையும் கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் தஞ்சை கிளை சார்பில் 12/06/2014 அன்று மாலை தஞ்சை இரயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ம.க.இ.க தஞ்சை கிளைச் செயலாளர் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் கண்டன உரையாற்றினார்.

நோட்டிஸ்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சாவூர்.

2. அரசுப் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தில் தள்ளிய கல்வித்துறையை கண்டித்து திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்

னித உரிமை பாதுகாப்பு மைய திருவண்ணாமலை மாவட்ட கிளையின் சார்பாக 11.06.2014 அன்று அரசுப்பள்ளி தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்திலேயே திருவண்ணாமலை மாவட்டத்தை கடைசி இடத்திற்கு தள்ளிய கல்வித்துறை அதிகாரிகள்,ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போதிய ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பாததை கண்டித்தும் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட கிளையின் மாவட்ட அமைப்பாளர் தோழர் சரவணன் தலைமை தாங்கி பேசினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்க சென்றபோது ‘நீங்க கல்வி விசயமாக போராட்டம் செய்றீங்க நல்ல விசயம் தான். ஆனால் போராட்டம் எல்லாம் தப்பு, எல்லாம் தலைவிதிபடி தான் நடக்கும்’ என்று கூறிய காவல் துறைக்கு உறைக்கும் விதமாக, “தலைவிதி என்று நினைத்திருந்தால் சுதந்திரத்திற்காக போராடி இருக்க முடியுமா? பெரியாரும், அம்பேத்கரும் போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டில் படித்து வேலைக்கு போய் சம்பாதிக்கணும், ஆனா போராட்டம் கூடாதா ?” என்று பேசினார். “சமச்சீர் கல்வியை எங்களது அமைப்பும்,தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் இணைந்து போராடித்தான் நடைமுறைப்படுத்தினோம். போராடினால் தான் தீர்வு, போராடினால் மட்டும் தான் தீர்வு. தனியாக போராடாதீர்கள், எங்களோடு இணைந்து போராடுங்கள். இல்லையென்றால் கூடங்குளத்தில் போராடும் மக்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு அரசியல் பிழைப்புக்கு போய்விட்டதைப்போல் தான் நடக்கும்” என்று மக்களை போராட ஈர்க்கும் வகையில் உரையாற்றினார்.

அடுத்ததாக கடலூர் மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலர் தோழர் கருணாமூர்த்தி “அரசுப்பள்ளி சீரழிந்து வருவதற்கு காரணம் தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைதான். அவற்றை அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் அமல்படுத்துகின்றன. ஓட்டுபொறுக்கி கட்சிகளை சேர்ந்த MLA, MP-க்களே கல்வி வியாபாரிகளாக இருக்காங்க.சட்ட மன்றம், நாடாளு மன்றம், நீதி மன்றம் அனைத்தும் மறுகாலனியாக்கத்தின் கருவிகளாக உள்ளன. இந்த பிரச்சினையை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்வதன் மூலம்தான் அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வியை கொண்டு வரமுடியும். இதற்கு தேவை ஒரு புதிய ஜனநாயக புரட்சி” என்று பேசினார்.

அடுத்து பேசிய புதிய ஜனநாய தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர்.முருகேசன், அரசுப்பள்ளி தேர்ச்சியின்மைக்கு காரணமான ஆசிரியர்கள், அதிகாரிகளின் போக்கை இடித்துரைத்தும் தனியார் பள்ளி கொள்ளைக்கான காட்ஸ் ஒப்பந்தத்தை பற்றியும் அதன் விளைவாக அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்மயமாக்கப் படுவதையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தனியார் பள்ளியில் அரசு செலவில் படிக்க, மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் இரண்டு ஆண்டுக்கு 56,000 ரூபாய் ஒதுக்குவதிலிருந்து அவர் தனியார் பள்ளியின் ஏஜண்டாக செயல் படுகிறார் என்றும் அரசுப்பள்ளியில் போதுமான ஆசிரியர் இல்லாத சூழ்நிலையிலும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கஷ்டப்பட்டு பாடம் நடத்தி மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க வைத்தால் அவர்களை தனியார் முதலாளிகளின் கொள்ளைக்கு தள்ளிவிடும் இந்த செயலை கண்டித்தும்,விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் என தங்களுடைய கோரிக்கைகளுக்காக தனித்தனியாக போராடுவதை தவிர்த்து நமது பொது எதிரியான தனியார்மயத்திற்கு எதிராக் ஒன்றுபட்டு போராடுவதன் மூலம் தான் நம்முடைய கோரிக்கைகளை வெல்லமுடியும் என்றும் பேசினார்.

இறுதியாக மனித உரிமை பாதுகாப்பு மைய திருவண்ணாமலை மாவட்ட கிளையை சேர்ந்த வழக்கறிஞர் தோழர் கண்ணன்: சூத்திரனும்,பஞ்சமனும் படிக்க கூடாது, படித்தால் நாக்கை வெட்டணும் என்று அன்றைக்கு பார்ப்பனியம் உழைக்கும் மக்களுடைய கல்வி உரிமையை பறித்தது என்றால் இன்றைய சுதந்திர இந்தியா காசில்லாதவனுக்கு கல்வி இல்லை என்ற சூழலை உருவாக்குகிறது. எதற்கெடுத்தாலும் மேலை நாடுகளை பார் என்று சொல்லும் அறிவு ஜீவிகள் அந்நாடுகளில் கடைபிடிக்கப்படும் தாய்மொழி வழிக்கல்வி, அருகமைப்பள்ளி, பொதுப்பள்ளி என்ற விஞ்ஞானபூர்வ முறையில் அனைவருக்கும் கல்வி கொடுக்காதது ஏன்? 1994-காட்ஸ் ஒப்பந்தத்தின் விளைவாக காசில்லாதவன் படிக்க முடியாது என்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும், சமச்சீர் கல்வியின் வெற்றிக்கு மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆற்றிய பங்கையும், அரசுப்பள்ளி ஆசிரியர்களையும், ஒழுங்கீனங்களையும் கண்டித்து உரையாற்றினார்.

ஆர்பாட்டத்தில் பெற்றோர்கள், மாணவர்கள், பெண்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். அந்த வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை நிறுத்தி, “தோழர் நீங்க நாக்கை புடுங்கிக்கொள்கிற மாதிரி அதிகாரிகளை பேசுறீங்க” என்று பாராட்டினார்.

தோழர்கள் பேருந்து பிரச்சாரம் செய்த போது மாவட்ட ஆட்சியர் தனியார் பள்ளிக்கு ஆதரவாக செயல்படுவதை விளக்கி பேசியது மக்களிடம் ஆதரவு, வரவேற்பும் பெற்றது. பெண் ஆசிரியை ஒருவர், “40,000  ரூபாய் நாங்க மட்டும் தான் வாங்குறோமா, வேற அதிகாரிங்க வாங்கலையா” என்றதற்கு “மற்ற அதிகாரிகள் தவறு செய்தால் அந்த துறையை மட்டும் தான் பாதிக்கும். ஆனால் ஆசிரியர்கள் தவறு செய்தால் ஒட்டு மொத்த சமுகமே பாதிக்கும்” என்று தோழர்கள் பதில் சொன்னதை அங்கிருந்த பொது மக்கள் ஆதரித்து, “அவர் சொல்வது சரிதான், நீ சும்மா இரும்மா, அவர் பேசட்டும்” என்றனர்.

துண்டுப் பிரசுரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
மனித உரிமைபாதுகாப்புமையம்-தமிழ்நாடு
திருவண்ணாமலை மாவட்ட கிளை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க