privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மணப்பாறை டாஸ்மாகை மூடு ! மக்கள் போராட்டம் - படங்கள்

மணப்பாறை டாஸ்மாகை மூடு ! மக்கள் போராட்டம் – படங்கள்

-

ணவை ஒத்தக்கடை டாஸ்மாக் கடையை (கடை எண் 10,400) மூட வலியுறுத்தி 28-09-2016 அன்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

shutdown-tasmac-manaparai-siege-01அமையபுரம், வேங்கைகுறிச்சி, பழைய கோட்டை பஞ்சாயத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் ஜென்ம விரோதியாக தமிழக அரசின் இந்த டாஸ்மாக் கடை இருக்கிறது. குறிப்பாக பெண்கள், சிறுவர், சிறுமிகளுக்கு மீளாத துயரத்தை அன்றாடம் ஏற்படுத்தும் வகையிலேயே மேற்கண்ட டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

தினம்தோறும் பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்திகளை பார்க்கும் போதே மனம் பதறுகிறது. வெட்டிக் கொலை, குத்திக் கொலை, வன்புணர்ச்சி, ஆசிட் வீச்சு என பல குற்றங்களுக்கு டாஸ்மாக் போதையே  காரணமாக அமைகிறது.

இத்தகைய பாதிப்புகளில் மக்கள் குமுறிக் கொண்டு இருந்த சூழலில் தான் மக்கள் அதிகாரம் அப்பகுதி மக்களோடு கைகோர்த்தது.

shutdown-tasmac-manaparai-siege-03தொடர்ச்சியாக அரசின் சட்டவிரோத, சமூக விரோத செயல்களை துணிவோடு எதிர்க் கொண்டு போராடி வரும் “மக்கள் அதிகார”த்தை பல கிராமங்களில் மக்களே விரும்பி அழைத்து டாஸ்மாக்கை மூட உதவ கோரினர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்டு 22 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் நேரடியாக சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ஆய்வு செய்த அதிகாரிகள், “மேற்கண்ட கிராமங்களில் பள்ளியோ, மருத்துவமனையோ, பிற அடிப்படை வசதிகளோ இல்லை. அதனால் டாஸ்மாக் கடை இருக்கலாம்” என முடிவு செய்தனர். அதிகாரிகளின் இத்தகைய கோமாளித்தனமான முடிவுகளை கண்டிக்கும் வகையிலும் அரசை எச்சரிக்கும் வகையிலும் செப்டம்பர் 12 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன் பல்வேறு கட்சிகளின் ஆதரவோடு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

shutdown-tasmac-manaparai-siege-02“எதுவெல்லாம் ஊரில் இல்லை என்றாயோ அதை முதலில் கொண்டுவா, போதை வேண்டாம், டாஸ்மாக் வேண்டாம்” என எச்சரித்தனர். “உடனடியாக கடையை மூடாவிட்டால் முற்றுகையிடுவோம்” என அப்போதே எச்சரிக்கப்பட்டது.

கேளாத காதில் ஊதிய சங்காகவே அதுவும் அமைந்தது. இதனை தொடர்ந்து கடையை மூடும் முற்றுகை போராட்டம் நடத்த 1 வாரம் முன்னதாகவே அறிவிப்பு வெளியிட்டு அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களை திரட்டினோம்.

செப்டம்பர் 27-09-2016 அன்று முற்றுகை என அனைத்து கிராமங்கள், நகரம் என சுவரொட்டி ஒட்டப்பட்டது. திட்டமிட்ட நாளன்று காவல்துறை படையோடு வந்து அந்த கிராம மக்களை அச்சுறுத்தும்படி குவிந்தனர், கடையைச் சுற்றி தடுப்பரண் அமைத்தனர்.

shutdown-tasmac-manaparai-siege-04இவர்களின் சதிவேலையை முன்னரே அறிந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து பேரணியாக கடையை நோக்கி முழக்கங்களுடன் முன்னேறினர். பள்ளி சிறுவர், சிறுமிகள், முன்வரிசையில் நிற்க அதனை தொடர்ந்து பெண்கள் அணி வகுத்தனர். தோழர்கள் படை அரணாக இருபுறமும் அணி வகுக்க குடிமகன்கள் சுற்றி நின்று கவனிக்க பேரணி நகர்ந்தது.

மக்களின் ஆவேசமான பேரணியும் முழக்கம், கொடி, பேனர்களுடன் முன்னேறுவதை கவனித்த காக்கிச்சட்டைகள் தாம் அமைத்த தடுப்பரண் வரைக்கூட பொறுமை காக்கவில்லை. தடுப்பரணை தாண்டி அதிகாரிகள், தாசில்தார், டாஸ்மாக் அதிகாரிகள் என பேரணியை இடைமறித்து நைச்சியமாக பேசி போராட்டத்தை கைவிட வைக்க முயற்சித்தனர். “உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, அதிகாரம் இல்லை, அவகாசம் வேண்டும் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு” என அனைத்து ஆயுதங்களையும் வீசி பார்த்தனர்.

அனைத்தையும் ஏற்க மறுத்து மக்கள் ஆவேசமாக முன்னேற முயன்றனர். கையில் சாணிவாளி, துடைப்பம் சகிதமாக பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி கொடுத்த, அறிவிப்பு வெளியிட்ட பெண்களை சகிக்க முடியாமல் அனைவரையும் கைது செய்ய தனது போக்கிரித்தனத்தை போலீசு காட்டியது. பெண்கள், குழந்தைகள் முதியோர் என பேதம் பார்க்காமல் அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர். எதிர் கொண்டு போராடிய 32 நபர்களை கைது செய்து மக்களை விரட்டியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கைது செய்தபின் கூடியிருந்த மக்களிடம், “மக்கள் அதிகாரம் அமைப்பினர் தேடப்படும் குற்றவாளிகள், கொள்ளையர்கள்” என அவதூறு பிரச்சாரத்தை கிளப்பி இவர்களோடு சேராதீர்கள் என மக்களை மிரட்டியுள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“எந்த ஊரில் தேடப்படும் குற்றவாளிகள் ஊர்முழுக்க போஸ்டர் ஒட்டி போலீசை வரவழைத்து போராடுவார்கள்” என போலீசாரின் முகத்தில் கரியை பூசி உள்ளனர்.

shutdown-tasmac-manaparai-siege-12கைது செய்து வையம்பட்டி திருமணமண்டபத்தில் அடைக்கப்பட்ட பிறகும் எமது போராட்டம் தொடர்ந்தது. பறிமுதல் செய்த மெகா பேனர், படம் பிடித்த கேமரா, மெமரிகார்டு அனைத்தையும் கொடுத்தால்தான் முகவரி உள்ளிட்டவைகளை அளிக்க முடியும், மதிய உணவும் அருந்த மாட்டோம் என முடிவாக அறிவித்தனர்.

எரிச்சலடைந்த வையம்பட்டி ஆய்வாளர் “நான் எத்தனையோ போராட்டங்கள், கட்சியை பார்த்து இருக்கிறேன். உங்களை போல பார்த்தில்லை. எதுக்கும் கட்டுப்பட மாட்டேங்கீறிங்களே“ என தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக புலம்பினார்.

shutdown-tasmac-manaparai-siege-11அவரை அருகில் அழைத்து உட்காரவைத்து ஜனநாயம், மக்கள் சமத்துவம் பற்றி பேசி, “எங்கள் உரிமைக்காக போராடுகிறோம். நீங்கள் பொறுமையாக அணுக வேண்டும்” என போதிக்கப்பட்டது. “நான் பொறுப்பேற்கிறேன், உடனடியாக பிடித்தவர்களை வெளியே அனுப்புகிறேன். படக்கருவிகளை கொடுக்கிறேன் ஒத்துழைப்பு கொடுங்கள்” என்றார். அதன் பிறகே போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது.

மாலை 6.45 வரை வெளியே விடலாமா, சிறையில் அடைக்கலாமா ? என மேலதிகாரிகள் தீவிர ஆலோசனை செய்தனர். இறுதியாக விடுதலை செய்தனர். விடுதலை செய்யப்பட்ட பின் ஒத்தக்கடை டாஸ்மாக் வழியாக முழக்கம் மிட்டவாறே போராட்டம் முடியவில்லை மீண்டும் தொடருவோம் என கிராமங்கள் வழியாக சென்று கைதான மக்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அடுத்த கட்ட போராட்டம் பற்றி விரைவில் போராட்ட கமிட்டி கூடி முடிவு செய்ய உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!

இப்போராட்டத்தை மக்கள் அதிகாரம் மணப்பாறை பகுதி ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமை ஏற்று நடத்தினார். மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர்.தர்மராஜ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி, ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்(பெண்கள், சிறுவர், சிறுமியர்) கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

மக்கள் அதிகாரம், மணப்பாறை,
திருச்சி மாவட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க