privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுகடலூர் - அரியலூரில் டாஸ்மாக் முற்றுகை ! மக்கள் அதிகாரம்

கடலூர் – அரியலூரில் டாஸ்மாக் முற்றுகை ! மக்கள் அதிகாரம்

-

புறவழிச் சாலையில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை கிராமத்தின் நடுவே கொண்டு வந்து திணிக்கிறது தமிழக அரசு . அதனால் தமிழக முழுவதும் மக்கள் கடுமையாக எதிர்த்து போராடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம், ஓலையூர் கிராமத்திலும், கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிராமத்திலும் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி O8.04.2017 அன்று மக்கள் அதிகாரம் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் ஓலையூரிலும், கம்மாபுரத்திலும் திரண்டனர். ஓலையூர் கிராமத்தில் மக்கள் கடையை முற்றுகையிட முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கடையை திறந்த மூன்று நாட்களுக்குள்ளே 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள உளுத்தூர் பேட்டையில் இருந்து கூட வந்து மது பாட்டில்களை வாங்கி செல்வது வேதனை அளிக்கிறது என மக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர். கடைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதிதனால் வாகன நெறுக்கடியின் காரணமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன. உடனே கடையை அகற்றியாக வேண்டும் என்று ஊர் மக்கள் முடிவெடுத்து கடையை முற்றுகையிட்டனர், போலீஸார் தடுத்தனர்.

கடையை அகற்றாவிடில் வீடு திரும்புவது இல்லை என்று கடைக்கு அருகாமையில் அமர்த்துக்கொண்டு முழக்கமிட்டனர்.

தே போல் 10.04.2O17 அன்று கடலூர் மாவட்டம், கம்மாபுரத்தில் மக்கள் அதிகாரத்தோழர் அருள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடையை அகற்ற கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் இளைஞர் ஒருவர் போலீஸ்காரர்களை பார்த்து கடை வேண்டாம் என்று நாங்கள் போராடுகிறோம் நீங்கள் எதற்கு வந்து பேசுரிங்க சம்மந்தப்பட்ட அதிகாரியை வந்து பேச சொல்லுங்க என்று கேட்டுக்கொண்டு இருந்தபோதே போலீஸ்காரர் ஒருவர் அவரை கூட்டத்தின் நடுவே தள்ளிவிட்டார்.

உடனே கீழே விழுந்தவர் நிலைதடுமாறி போலீஸ்காரரின் சட்டையை பிடித்தார். ஆனால் அவர்கள் போராட்டத்தை கலைக்கவேண்டும் என்பதற்காக பெரும் திரளாக போரட்டத்தில் கூடியிடியிருந்த மக்களை தடி அடி நடத்தி வெறியாட்டம் போட்டு போலீசர் போராட்டத்தை கலைத்தனர். பின் மக்கள் அதிகார தோழர் அருள் உட்பட 7 பேரை காவல் துறை கைது செய்து கம்மாபுரம் காவல் நிலையத்தில் வைத்தனர், மாலை 6.00 மணிக்கு  6 பேரை மட்டும் விடுவித்தது போலீசு, சட்டையை பிடித்தவரை மட்டும் வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்திலேயே வைத்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க