மீண்டும் நாம் மனு தர்மப்படிதான் வாழ்கிறோமா ? பேராசிரியர் கதிரவன்

''சமூகநீதியை ஒழிக்கும் உயர்சாதி இடஒதுக்கீடு'' என்ற தலைப்பில் உரையாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் கதிரவன் உரையின் காணொளி...

”புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று, ”சமூகநீதியை ஒழிக்கும் உயர்சாதி இடஒதுக்கீடு” என்ற தலைப்பில் உரையாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் கதிரவன் ஆற்றிய உரையின் காணொளி …

உரையிலிருந்து சில துணுக்குகள்…

♣ எந்தக் கூலித்தொழிலும் செய்யாமல், எந்த வறுமைக் கோட்டுக்கும் கீழ் இல்லாமல், சாப்பாட்டு அரிசிக்கு  ரேஷன் கடையில் நிற்காமல், எந்த பிளாட்பாரத்திலும் படுத்து உறங்காமல் இருப்பவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு…

♣ உயர்ஜாதியினருக்கு அவுங்க பிக்ஸ் பண்ணி வச்சிருக்க ரேட்டு 8 இலட்ச ரூபாய். நம்மல்லாம் 2.5 இலட்சத்துக்கு மேல போனா இன்கம்டாக்ஸ் கட்டியாகனும். எந்த ஸ்கேல வச்சி பேலன்ஸ் பண்ண போறாங்க..?

♣ அகில இந்திய அளவில் பல்கலைக் கழகங்களில் மொத்தமுள்ள 14,18,000 பேராசிரியர் பணியிடங்களில்: தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான பணியிடங்கள் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. எல்லாம் சேர்த்து டோட்டல் 4,84,000. ஆனால், அதுல மிச்சம் இருக்கிற 10 இலட்சம் போஸ்ட் வெறும் 3% மட்டுமே இருக்கின்ற பிராமணர்கள் ஆக்கிரமிச்சிருக்காங்க… திரும்பவும் நாம் மனு சாஸ்திரப்படி, வருணாசிரம படிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறமோ என்ற அச்சம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.

அவரது பேச்சின் முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

தொகுப்பு:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க