உ.பி. மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களைத் தொடர்ந்து 1,240 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டனர்; 5,558 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்; 370 கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டன; பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 498 பேருக்கு தண்டம் விதித்தோ அல்லது அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது தொடர்பாகவோ நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
கொலை, கொலை முயற்சி, தீ வைத்தல், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்டுப் பல்வேறு கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சதாஃப் ஜாபர், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர்.தாரபுரி, தலித் விரிவுரையாளர் பவன் ராவ், மூத்த வழக்குரைஞர் முகம்மது ஷோயிப், அவரது உதவியாளர் ராஜீவ் யாதவ் உள்ளிட்டுப் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும், தன்னார்வத் தொண்டர்களும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்குகள் அனைத்துமே பொய் வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும், போராட முன்வரும் அனைவரையும் வன்முறையாளர்களாகப் பழி சுமத்திச் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடுக்கப்பட்டவை என்பது முதல் கட்ட நீதிமன்ற விசாரணையிலேயே அம்பலமாகி வருகிறது.
எடுத்துக்காட்டாக, நாகினா என்ற ஊரில் நடந்த போராட்டத்தையடுத்து 83 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது, போலீசார் மேல் துப்பாக்கிச் சூடு நடத்தியது, அரசு மற்றும் தனியார் சொத்துக்களைச் சேதப்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட 83 பேரில் 48 பேருக்குப் பிணை வழங்கியிருக்கும் பிஜ்னோர் மாவட்டக் குற்றவியல் நீதிமன்றம், தனது உத்தரவில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தரப்பிலிருந்து போலீசை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு எவ்விதமான ஆதாரத்தையும் அரசு தரப்பு தரவில்லை. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைப்பு உள்ளிட்ட வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதையும் அரசு தரப்பு காட்டவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது 13 போலீசார் கடுமையாகக் காயமடைந்ததாக அரசு தரப்பு கூறினாலும், அவர்களுள் 12 பேருக்கு சாதாரண சிராய்ப்புகள் மட்டும்தான் ஏற்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டு யோகி ஆதித்யநாத் அரசின் புளுகு மூட்டையை அம்பலப்படுத்தியிருக்கிறது.
படிக்க:
♦ நிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் !
♦ கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்
இது போல ராம்புர் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது 34 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் அனைவர் மீதும் கொலை, கொலை முயற்சி, கொள்ளை ஆகிய கிரிமினல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருந்தது, போலீசு. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றஞ்சுமத்தப்பட்ட 34 பேரில் 26 பேர் மீதான குற்றச்சாட்டுக்களை போலீசே கைவிட்டுவிட்டது.
முசாஃபர் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சதாஃப் ஜாபர், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தாரபுரி ஆகிய இருவரின் பிணை மனுக்கள் லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என போலீசே ஒப்புக்கொண்டு குற்றச்சாட்டுக்களைக் கைவிட்டுவிட்டது.
சுடலை
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |