உப்பிட்டவரை .. ஆவணப்படம் || மதுரை திரையிடல் || அனைவரும் வாரீர்
ம.க.இ.க -வின் “உப்பிட்டவரை...” ஆவணப்படத் திரையிடல் மற்றும் கருத்துரை நிகழ்வு மதுரை மூட்டா அரங்கில் எதிர்வரும் 22-10-2021 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. உழைப்பின் வாசனையை அறிய அனைவரும் வாரீர் !
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழுவின் தயாரிப்பில், உப்பளத் தொழிலாளர்களின் வாழ்நிலையை பதிவு செய்யும் “உப்பிட்டவரை…” ஆவணப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த ஆவணப்படத்தின் திரையிடல் மற்றும் கருத்துரைக் கூட்டம் எதிர்வரும் 22.10.2021 அன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
உழைப்பின் வாசனையையும், உழைக்கும் மக்களின் வாழ்க்கை வலிகளையும் உணர அனைவரும் வாரீர் !
உப்பிட்டவரை … ஆவணப்பட திரையிடல் மற்றும் கருத்துரை
இடம் : மூட்டா அரங்கம், காக்கா தோப்பு தெரு, மதுரை நாள் / நேரம் : 22.10.2021 / மாலை 5:30 மணி
நிகழ்ச்சி நிரல் :
தலைமை உரை :
தோழர் ராமலிங்கம் (ம.க.இ.க மாநில ஒருங்கிணைப்பாளர் – தமிழ்நாடு)
கருத்துரை :
தோழர் லஜபதிராய், (உயர்நீதிமன்ற வழக்கறிஞர், மதுரை)
தோழர் ஸ்ரீரசா (ஓவியர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)
தோழர் திவ்யபாரதி (ஆவணப்பட இயக்குனர்)
தோழர் கதிரவன் (மக்கள் கலை இலக்கியக் கழகம்)
நன்றியுரை :
தோழர் முத்தையா (மக்கள் கலை இலக்கியக் கழகம், மதுரை)