உங்களின் ஏவுகனைகள் தோற்றுவிட்டன!

எங்களின் குரல்கள் கேட்கின்றதா?
காசா நிலத்தில், கட்டிடங்களின் இடிபாடுகளிலிருந்து அழைக்கிறோம்

எங்களின் உடல் முழுவதும்
குருதி வழிந்தோடுகிறது
மீண்டுமொரு ஏவுகனை தாக்குதலை சந்தித்ததால்
அதிர்ச்சியில் உடல் நடுங்குகின்றது

எங்களின் பிஞ்சு குரல்களில்
கொடூரமான வலி உள்ளது
இருப்பினும், எங்கள் குரல்கள்
உங்களுக்கு கேட்கும் என நம்புகிறோம்.

எங்கள் மீதான
இஸ்ரேலின் இன அழிப்புக்கு
கப்பல்களில் ஆயுதங்கள் வந்திறங்குகின்றன
கடல்வழி, வான்வழி, தரைவழி என
விதவிதமாய் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன

எங்கள் இனத்தை அழிக்க ஏதுவாய்
பள்ளி பருவத்தை தாண்டாத
எங்களை குறிவைத்து ஏவுகனைகள் பாய்கின்றன
இந்த முறையாவது
இவர்களை வீழ்த்திவிட மாட்டோமா என
பாசிஸ்ட்டுகள் கூச்சலிடுகின்றனர்.

ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!
உங்கள் துப்பாக்கிக்களின் தோட்டாக்கள் எங்கள் நெஞ்சை துளையிடலாம்
உங்களின் பாஸ்பரஸ் குண்டுகள்
எங்கள் உடலை ஊனமாக்கலாம்
உங்கள் பீரங்கி குண்டுகள்
எங்கள் உயிரை பலியிடலாம்
ஆனால், இவற்றில் எதுவுமே எங்கள் குரலை ஒடுக்கிவிடாது!

எத்தனை ஏகாதிபத்தியங்கள் உங்களுக்கு ஆயுத உதவி செய்தாலும் சரி,
உங்களின் பெரிய பீரங்கிகள் மீது கல்லெறியும்
எங்களின் சிறிய விரல்களில் மோதி
நீங்கள் ஏவிய ஏவுகனைகள் எல்லாம் தோற்று நிற்கின்றன.


துலிபா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க