நாங்குநேரி-பெரும்பத்து சாதிவெறி, கொலைவெறியாட்டம்
உண்மை அறியும் குழு அறிக்கை
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவிற்கு உட்பட்ட இந்திரா காலனி மற்றும் பெரும்பத்து கிராமம் ஆகியவற்றில் கடந்த மார்ச் 02, 2026 அன்று இரவு சுமார் 7.30 மணி அளவில் 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் பிரதான சாலையில் நின்று கொண்டிருந்த இந்திரா காலனி பறையர் சாதியைச் சேர்ந்த ஜான் மார்க் (வயது 47) என்பவரையும், அவ்வழியாக வந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளி திரிநாத் கட்டா (வயது 50) என்பவரையும் வெட்டிக் கொன்றது. மேலும் பெரும்பத்து ஊரில் இயங்கிக் கொண்டிருந்த தேநீர்க் கடையில், தேநீர் அருந்திக் கொண்டிருந்த நாடார் சாதியைச் சேர்ந்தவர்களான இராமசாமி, கணேசன் ஆகியோரையும், தேநீர்க் கடை உரிமையாளர் பிரபாகரன் மற்றும் நெல்சன் ஆகியோரையும் சரமாரியாக வெட்டியது. மேலும் அங்கே நின்றிருந்த பிரபாகரன் மனைவியின் அருகில் மூன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற கும்பல் காட்டு வழியாக சென்று, கோனார் சாதியைச் சேர்ந்த புளியங்குளம் சசிகுமாரை வெட்டிவிட்டு, அவரது பைக்கை வழிப்பறி செய்து கொண்டு தப்பிச் சென்றது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நெல்சன், கணேசன் இருவரும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இராமசாமி, பிரபாகரன், சசிகுமார் ஆகியோருக்கு வள்ளியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் மறவர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை வெறியாட்டத்தால் நாங்குநேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது. நாங்குநேரி நகரம் மற்றும் கிராமங்களில் மாலை 6 மணிக்கு மேல் அச்சத்தின் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டும், மக்கள் வெளியே வரமுடியாத சூழலும் நிலவுகிறது.
இது தொடர்பாக உண்மையை அறியும் வகையில் குழு அமைக்கப்பட்டு 12.03.2026, 13.03.2026, 14.03.2026 ஆகிய மூன்று நாட்கள் பாதிக்கப்பட்ட ஊர்களில் மக்களை சந்தித்தோம். பாதிக்கப்பட்ட நபர்கள், குடும்பங்கள், உறவினர்கள், கொலையாளிகளின் தாய்மார்கள், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்தோம். இவர்கள் அனைவரும் தெரிவித்த கருத்துக்களில் இருந்து உண்மையை அறியத் தொடங்குவோம்.

வெளியீடு :
நாங்குநேரி-பெரும்பத்து சாதிவெறி, கொலைவெறியாட்டம்
உண்மை அறியும் குழு அறிக்கை
முதல் பதிப்பு : ஏப்ரல் 2026
வெளியிடுவோர் :
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி – நெல்லை மாவட்டங்கள்
தொடர்புக்கு : 93853 53605
நன்கொடை : ₹ 20
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











