எதற்கு வாழ்த்துகிறீர்கள்?
உலகம் அறிந்த தலைவர்
நாடு போற்றும் பிரதமர்
G20-இன் நாயகன்
சந்திரயான்-3 விட்ட சாதனையாளன்
தாடி வளர்க்கும் சன்னியாசி
‘பாரத’ பிரதமர் மோடிக்கு
இன்று பிறந்தநாளாம்!
காவி கும்பலும்
கார்ப்பரேட் களவாணிகளும்
போட்டி போட்டுக்கொண்டு
வாழ்த்து சொல்கின்றனர்!
எதற்காக இந்த வாழ்த்துக்கள் எல்லாம்?
பாரத தாயின் புகழ் பாடி
மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி
வேடிக்கை பார்த்ததற்கா?
ஏழைகளை ஒட்டச்சுரண்டி
இந்திய நாட்டை
அம்பானி-அதானி கார்ப்பரேட்களிடம்
அடகு வைத்ததற்கா?
“மனிதர்கள் மிருகமானால்”
என்ற படத்தை
குஜராத் கலவரத்தில்
நேரலையில் காட்டியதற்கா?
பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டிய மக்களை
பார்ப்பனியம் பழக...
எந்த ஆயுதமேந்த........
ஈரெட்டு இட்லிகளை
எடுக்க முடியும்
ஒரு அவியலில்..
வேகும் நேரத்தில்
விருப்பமான ஓர் முழு பாடலையும்
பாடிட முடியும் என்னால்..
புத்துணர்ச்சி தரும் புரட்சி பாடலாகவும் இருக்கலாம்
அல்லது
என் மீதான கழிவிரக்கத்தினைச்
சொல்லும் சோகப்பாடலாகவும் இருக்கலாம்...
அடுக்களைவிட்டு வெளியே போய்
முகங்கழுவி புத்துணர்ச்சி பெறுவதற்கான சிறிய அளவிலான நேரமும் கிடைக்கும்..
அதனாலேயே
இட்லி எனக்கு பிடித்தமானதாக இருக்கலாம்
அதற்காக
இட்லி அவித்து கொண்டே இருக்க முடியாது
காலம் முழுவதும்...
தோசை சுடுவதென்பது வரமுமல்ல
வட்ட தோசையாய் வராவிடில்
குறைசொல்ல...
மணிப்பூர் தாய்மார்கள் கும்பல் பாலியல் வன்முறையில்..... சிதறிய குருதியை துடைத்துக் கொண்டே சொல்லட்டுமா ? வந்தே மாதரம் !
அனிதா, ஜெகதீஷ் போல முடிவெடுக்காதீர்கள் என கலங்குபவர்களே! ஃபயாஸ்தின்கள் களமிறங்குகிறார்கள் கரம் கொடுப்போம்!
வியாக்கியானம் புதிதல்ல... முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டுகிறது என முன்னறிந்து சொன்ன மார்க்சின் தீர்க்கமாக பார்வை புதிது!
லட்சம் பேர் திரண்டோம் ஆலையை மூடினோம்! கோடிகளாய் திரள்வோம்! அவன் இடத்தை அவனுக்கே கல்லறையாக்குவோம்!
உன்னை தேர்ந்தெடுத்த - நாங்கள் பஞ்சத்தில் வாட நீ-லஞ்சத்தில் எங்களை வேட்டையாட கட்டுகிறாய்
ஒரு கோட்டை.
ராமனை அழைத்து செத்து செத்து வாழ்வதைவிட மலத் தொட்டியில் மாண்டு போவதே மேல்
அடிமை வர்க்கம் இருக்கும் வரை நீ அழிய போவதில்லை! அதிகார வர்க்கம் முடியும் வரை நீ அமைதி கொள்வதில்லை! ஆம்! மார்க்ஸ் வாழ்வார் மார்க்சியம் வாழதான் செய்யும்
20 மணி நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக அடைந்து காட்டிய சரித்திர வெற்றியின் கொண்டாட்ட தினம் அது.
உனது செம்படை இன்னும் உலக முதலாளித்துவ ஓநாய்களுக்கு அச்சுறுத்துலாகவே இருக்கிறது…ஏனென்றால், நீ ஒரு சர்வாதிகாரி அல்லவா! ஆம், முதலாளித்துவத்தைக் கொல்லவந்த பாட்டாளி வர்க்க பிரதிநிதியின் சர்வாதிகாரி!
நம் கேள்விகளுக்கு சங்கிகளின் தயார்நிலை பதில்களையும், நம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறையையும் முன் வைக்கிறது இந்தக் கவிதை !
தூத்துக்குடி தியாகிகளே, நீங்கள் இரத்தமாக வெளியேற்றப்பட்டீர்கள் ! நாங்கள்,
கண்ணீராக சிறை வைக்கப்பட்டிருக்கிறோம்!
ஆலைகள் மாறலாம், ஆடைகள் மாறலாம், அனைவரும் சுரண்டப்படுகிறோம் எனும் பொது அநீதிக்கெதிராக வர்க்கமாய் நாம் இணைந்துகொள்ள மறுப்பது, நமது சுவாசத்தை நாமே மறுப்பது.
சிலைகளை சிதைக்கலாம், சிதைக்க சிதைக்க சிவப்பே பெருகும்.. மறைக்க மறைக்க மார்க்சிய - லெனினியம் பரவும்... வெட்டிப் பிளந்துள்ளம் தொட்டுப் பார்ப்பினும் அங்கே எட்டிப் பார்ப்பது எங்கள் லெனினே!

























