Wednesday, November 5, 2025

பாசிசத்தை அரசியலமைப்பிற்கு உட்படுத்துங்கள்! – சந்திரசூட்

காஷ்மீர் சிறப்புச் சட்டங்கள் நீக்கப்பட்டதே "ஒரு பாசிச நடவடிக்கை" என்பதுதான் காஷ்மீரின் தன்னுரிமையை ஆதரிக்கின்ற ஜனநாயக சக்திகளின் கருத்து. ஆனால், சந்திரசூட்டோ 'சட்டத்திற்கு உட்பட்டு நடந்துள்ளதா?' என்று கேட்கிறார்.

நாட்டை முடக்குவோம்!

0
நாடாளுமன்றம் பாசிஸ்டுகளின் ‘விளையாட்டு மைதானம்’. அதில் அவர்களால் மட்டும் தான் ‘சிக்ஸர்’ அடிக்க முடியும்.

பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் “ஸ்டண்ட்” பலிக்காது!

ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியிலும் மெழுகுவர்த்தி ஊர்வலமும் பேரணியும்  நடத்திகொண்டிருக்கும் எதிர்கட்சிகளுக்கு பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்திற்குள் “ஸ்டண்ட்” அடிக்க முடியாது என்பது நன்றாக தெரியும்.

தேர்தல் ஆணையர்கள் மசோதா: தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்!

0
இச்சட்ட மசோதா, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விலக்கிவைக்கிறது. தலைமை நீதிபதிக்கு மாற்றாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு கேபினட் அமைச்சரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்கும் வகையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நூறு நாள் வேலை திட்டத்தை ஒழித்துக் கட்டத் துடிக்கும் பாசிச மோடி அரசு!

சென்ற ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.73,000 கோடி. ஆனால் இந்த ஆண்டு (2023) பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு ரூ.60,000 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் குறைவாகும். முதன் முதலில் 2006-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையும் இதே ரூ.60,000 கோடி தான்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: குட்டிச்சுவரைக் கட்டி அழாதீர்!

இந்த நாடாளுமன்றம் எப்பேர்ப்பட்டதாக இருக்கிறது, நாட்டின் 99 சதவிகித மக்கள் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரிந்துகொள்ள விரும்பாத ஒரு இடம். ஏனெனில் அவர்களது அன்றாடப் பிரச்சினைகளையும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளையும் பற்றி அங்கு விவாதிக்கப்படுவதாக அவர்கள் கருதுவதில்லை. அப்படிப்பட்ட நாடாளுமன்றத்தில்தான், மோடியை அம்பலப்படுத்த வேண்டுமென்பதற்காக, நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர், எதிர்க்கட்சிகள்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: உங்களுக்கும் நம்பிக்கையில்லை, எங்களுக்கும் நம்பிக்கையில்லை!

பாசிசம் என்ற கருநாகம் குடிபுகுவதற்கான கரையான் புற்றுதான் அரசியல்சாசனமும் அதன் அடிப்படையிலான நாடாளுமன்றமும். இந்த கரையான் புற்றைப் பாதுகாப்போம் என்று முழங்குவதன் பொருள் என்ன?

கட்சித் தாவல்களும் மத்திய புலனாய்வு முகமைகளும்!

0
எம்.எல்.ஏ-க்களின் குதிரை பேரமும் கட்சித் தாவல் நடவடிக்கைகளும் முந்தைய அரசாங்கங்களின் போதும் நடைபெற்றுள்ளன. ஆனால் பாசிச பா.ஜ.க அரசு அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்திய கலெக்டர்!

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் என்ன தவறு இருக்கிறது? என்கிறார் மாவட்ட ஆட்சியர் அனுராக் வர்மா. நகராட்சி ஆணையர் ராஜேஷ் ஷாஹி அளித்துள்ள விளக்கத்தில் “எல்லோரும் ஒன்றைச் செய்யும் போது நாம் மட்டும் செய்யாமல் இருக்க முடியாது என்பதால் கையை மடக்கி ‘துவஜ்’ செய்தோம். இதில் தவறு இருப்பதாக நாங்கள் உணரவில்லை" என்றார்.

பாசிச மோடி அரசை அம்பலப்படுத்திய முன்னாள் டிவிட்டர் சி.இ.ஓ!

"விவசாயிகளின் போராட்டம் குறித்தும் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து பதிவிடும் பத்திரிகையாளர்களின் கணக்குகளை நீக்கவும் இந்திய அரசு பலமுறை எங்களிடம் (டிவிட்டர்) கோரிக்கை வைத்தது. அதற்குப் பணியாவிட்டால் டிவிட்டரை முடக்குவோம் என்றும் அரசு மிரட்டியது" டிவிட்டரின் முன்னாள் சி.இ.ஓ ஜேக் டார்சி

டெல்லி: பாசிஸ்டுகளின் அதிகார வெறிக்கு நீதிமன்றம் தடைபோட முடியாது!

0
இந்திய அரசியலமைப்பு சாசனத்தையும் ஆளுநரையும் பயன்படுத்தி பா.ஜ.க ஆளாத மாநிலங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதன் மூலம் தனது கட்டுக்கடங்காத அதிகார வெறியை பாசிச மோடி அரசு வெளிப்படுத்தி வருகிறது.

ஒன்றிய அரசின் 12 துறைகளில் கார்ப்பரேட் நிபுணர்களை நியமிக்க முடிவு!

இது போன்ற தனியார் நிறுவனங்களில் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் வல்லுநர்களை ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நியமிப்பதன் மூலம் அவர்கள் தங்களுடைய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தேவையான கார்ப்ரேட் நல திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார்களே தவிர இவர்கள் கூறும்படியான அரசு பொதுத்துறையில் எந்த முன்னேற்றமும் இருக்க வாய்ப்பே இல்லை.

தோழர் விஜயகுமார் (எ) புஷ்கின் 124(A) தேசத்துரோக வழக்கில் கைது!

0
மே 2022-இல் உச்ச நீதிமன்றம் தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்யக்கூடாது என வழிகாட்டுதல் வழங்கியதையும் மீறி தமிழ்நாடு அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. காவிகளின் விசுவாசமான சேவை ஆளாக போலீசுத்துறை மாறிக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

ட்ரோன் மூலம் பழங்குடி கிராமங்களின் மீது குண்டு வீசும் மோடி அரசு!

பழங்குடி மக்களை அச்சுறுத்தி, அவர்கள் வாழும் இடங்களை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதே இத்தகைய பாசிச பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கமாக உள்ளது.

வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்க சதி செய்யும் சாதிய அரசு!

போலீசு, நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளும் பார்ப்பனிய - சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும், பாதுகாக்கும் கருவிகளாகவே உள்ளன.

அண்மை பதிவுகள்