Monday, June 15, 2026
முகப்பு பதிவு பக்கம் 248

கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து : சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் !

ன்பார்ந்த மாணவர்களே, பேராசிரியர்களே !!

தமிழகத்தின் தாய்ப் பல்கலைக் கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் பயிலும் மெரினா வளாக முதுகலை மாணவர்கள் விடுதியில் உணவகத்தை இழுத்து மூடி விட்டு, மாணவர்களை பட்டினியில் தள்ளி உணவகத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தையும் மாணவர்களையே கட்டச் சொல்லும் நிர்வாகத்தின் வழிப்பறிக் கொள்ளை அரங்கேறி வருகிறது.

மேலும், 2020 மார்ச் மாதம் பாதியிலிருந்து கொரோனா ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் இழுத்து மூடப்பட்டு இணைய வழியில் கல்வி நடந்து வந்த சூழலில், பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் அனைவரும் சொந்த ஊரில் இருந்த நிலையிலும், ஏப்ரல் முதல் தற்போதைய நவம்பர் 2020 வரையிலான உணவக தொழிலாளர்களுக்கான சம்பளத்தை மாணவர்களையே கட்டச் சொல்லி விடுதி நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

மேலும், ஜனவரி 2020 – லேயே விடுதியை காலி செய்துவிட்டு சென்ற ஒரு மாணவரின் கணக்கில் ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரை ரூபாய் 8500 பில் போட்டிருக்கிறார்கள்.

படிக்க:
♦ பாரதியார் பல்கலைக்கழக ஊழல் ! தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !
♦ வேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

சென்னை பல்கலைக்கழகத்திற்கு சொந்தமாக தரமணி, கிண்டி, மெரினா வளாகம் ஆகிய மூன்று இடங்களிலும் உணவுடன் கூடிய விடுதியில் மாணவர்கள் தங்கிப் பயின்று வருகிறார்கள். இதில் சுமார் 35 மாணவர்களை உள்ளடக்கிய மெரினா வளாகத்தில் தற்போது ஆய்வியல் மாணவர்கள் உட்பட 27 மாணவர்கள் தற்சமயம் பல்கலைக்கழகத்தில் தங்களுக்கு நடைபெறும் நேரடி வகுப்புகளின் காரணமாக விடுதியில் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவை வழங்க மறுக்கும் நிர்வாகம், விடுதி தொழிலாளர்களுக்கான சம்பளத்தை மட்டும் மாணவர்கள் பாக்கெட்டிலிருந்து தட்டிப் பறிக்கிறது. தற்போது மேனேஜராக நிர்வாக பொறுப்பிலிருக்கும் ஆதி கண்ணன் அவர்களிடம் கேட்டால் அனைத்தும் பதிவாளர் சொல்லித்தான் செய்கிறேன் என்கிறார்.

இந்நிலையில் விடுதியில் தண்ணீர் வரவில்லை என்று கூறியபோது ஃபீஸ் கட்டினால் சரிசெய்வோம்என்கிறார். ஒரு அடிப்படை பிரச்சனைக்கும், ”பணத்தை கட்டு.. தீர்க்கலாம்” என்று நடைமுறையில் தனியார் நிர்வாகமாகவே மாறி நிற்கிறார்கள்.

எங்கள் பிரச்சனைகளை தீர்க்க பல்கலைக்கழகத்தின் பதிவாளரை பலமுறை விடுதி மாணவர்கள் சந்திக்க முயன்றும் இதுவரை எங்களை ஒருமுறைகூட அனுமதிக்கவில்லை. கடிதங்கள் அளித்து வெறுத்துப் போனதுதான் மிச்சம்.

இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் இருந்து கீழ்க்கண்ட கோரிக்கைகள் அடிப்படையில் போராட்டத்தை துவக்கினோம். ஆனால், பதிவாளர் தரப்பு முறையாக பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பாமல் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை துறைத் தலைவர்களை வைத்து மிரட்டுகிறார்கள். தொடர்ந்து நாங்கள் பல்கலைக்கழக சேப்பாக்க வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நேற்றைய இரவைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் நாளாக தொடர்நது நடைபெற்று வருகிறது.

கோரிக்கைகள் :

*விடுதி உணவகத்தை உடனடியாக திறந்து மாணவர்களுக்கு உணவளி !
* ஊரடங்கு காலத்தில் செயல்படாத விடுதிகபோடப்பட்டிருக்கும் போட்டிருக்கும் விடுதி கட்டணத்தை ரத்து செய் !
* ஊரடங்கில் விடுதி ஊழியர்களுக்கான சம்பளத்தை மாணவர்களிடமிருந்து பறிப்பதை தடுத்து நிறுத்தி நிர்வாகமே வழங்கு !

எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து எங்கள் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

படிக்க :
வன்முறை பூச்சாண்டி காட்டி டெல்லி போராட்டத்தை கலைக்க முயலும் மோடி அரசு !
கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !

மேலும் இந்த கட்டணக் கொள்ளை என்பது எங்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவாகவே இந்த ஊரடங்கில் அரசு பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகங்கள் வரவில் எத்தகைய நெருக்கடியும் ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். அதற்கு மாணவர்களின் தலையை உருட்டுகிறார்கள்.

உதாரணமாக சிதம்பரம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் முடிவதற்குள்ளாகவே அடுத்த செமஸ்டருக்கான கட்டணத்தை கட்ட சொல்லியிருக்கிறார்கள். குறிப்பிட்ட தேதியை அடுத்து தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளுக்கு ரூ. 25 ஃபைன் கட்ட வேண்டும் என்றிருக்கிறார்கள். இவ்வாறு அரசு மற்றும் தனியார் கல்லூரி பல்கலைக்கழக நிர்வாகங்கள் தங்களது நெருக்கடிக்கு மாணவர்களிடம் தீவிரக் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.

எனவே எங்களின் கோரிக்கைகளுக்காக அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென்று இதன் வழியாக கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

இப்படிக்கு
மெரினா வளாக விடுதி மாணவர்கள்
சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு : சிவப்பிரகாசம்96001 62343

வன்முறை பூச்சாண்டி காட்டி டெல்லி போராட்டத்தை கலைக்க முயலும் மோடி அரசு !

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்படுத்தப்பட்ட போலீசுடனான மோதல்களைக் காரணம் காட்டி, விவசாயிகளுடனான வேளாண் சட்டத் திருத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் தனது கை ஓங்கியிருப்பதாகக் கருதுகிறது மோடி அரசு. மேலும் விவசாய சங்கங்கள் குறித்த அவதூறுகளையும் பாஜக மற்றும் தமது அடிவருடி ஊடகங்களின் மூலமும் செய்து வருகிறது.

கடந்த 26-01-2021 அன்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் போலீசால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட மோதல் சம்பவங்களைத் தொடர்ந்து இதனை விவசாயிகளின் வன்முறையாக சித்தரிக்கத் துவங்கியது மோடி அரசு.

மோடி அரசுக்கு ஒத்து ஊதும் வண்ணம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ஊடகங்களும் இதனை “விவசாயிகளின் வன்முறை” என்றே குறிப்பிட்டன. இதன் போக்கில் இது விவசாய சங்கங்களின் ஜனநாயக விழுமியங்களின் மீதான கேள்வியாக மாற்றப்பட்டது.

படிக்க :
♦ கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !

♦ தில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் !

இதன் விளைவாக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் கமிட்டியிலிருக்கும் ஒரு சில விவசாயிகள் சங்கங்கள், டெல்லியில் நடந்த மோதலில் பாஜக – சங்க பரிவாரக் கும்பலின் சதி குறித்தும் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டத்தில் ”வன்முறை” வெடித்ததற்கு காரணமாக ஒரு சில விவசாய சங்கங்களை, வேறு சில விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டின.

இந்தக் குற்றச்சாட்டுகளையே பெரும் பிளவாகக் காட்டும் வேலையை மோடி அரசு தற்போது துவங்கியிருக்கிறது. அதனை அரசாங்கத் தரப்பிலிருந்தும், பாஜக தரப்பிலிருந்து முன்னெடுத்திருக்கிறது. இப்படிக் காட்டுவதன் மூலம், விவசாயிகள் சங்கங்கள் மற்றும் போராட்டங்களின் மீதான மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் சீர்குலைத்துவிட முடியும் என்று நம்புகிறது.

விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் இருந்து வரும் குரல்கள்தான் விவசாயிகள் களத்தில் நிற்பதற்கான உத்வேகத்தை அவர்களுக்கு வழங்குகின்றன. இந்த அடித்தளத்தைக் கலைக்க விரும்புகிறது மோடி அரசு.

மேலும் விவசாய சங்கங்களின் இடையே உள்ள சிறு சிறு கருத்து வேறுபாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு முன்னரே அவர்கள் கொடுத்த சலுகைகளை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது மோடி அரசு. இது குறித்து மோடி அரசின் பிரதிநிதிகள் சிலரிடம் பேசிய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தளம் விரிவாகக் கூறியிருக்கிறது.

“பேச்சுவார்த்தை மேஜையில் அரசாங்கத்தின் கை இப்போது ஓங்கியுள்ளது. எங்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் வேளாண் சங்கத் தலைவர்கள், போராட்டக்காரர்கள் மீதான தங்களது பிடிப்பை இழந்துவிட்டனர். இந்த வாய்ப்பை கருணைமிக்க வெளியேறும் வழியாக கருதிக் கொண்டு அரசாங்கம் ஏற்கெனவே முன் வைத்தனவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்று அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பில் மாற்றுக் கருத்து கொண்டுள்ளோரையும் தனித்தனியாகப் பார்த்துப் பேசி அவர்களை போராட்டத்தில் இருந்து விலகச்செய்வதற்கான முயற்சிகளில் அரசுத் தரப்பு ஈடுபட்டுள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தளம் தெரிவிக்கிறது.

அரசுத் தரப்பில் இருந்து இத்தகைய வேலைகளைச் செய்து கொண்டிருக்கையிலேயே அக்கம்பக்கமாக பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பல், ஊடக விவாதங்களின் மூலமாகவும், சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் விவசாயிகள் சங்கத்தில் இருக்கும் சிறு சிறு சலசலப்புகளை பூதாகரமாக காட்டி பேசி வருவதோடு அவர்கள் பலமிழந்துவிட்டதாகவும் பேசி வருகிறது.

ஜனவரி 26, 2021 அன்று டெல்லியில் நடத்தப்பட்ட விவசாயிகளின் டிராக்டர் பேரணி, சரியான ஒரு போராட்டத்தை முன்னெடுத்த நாளாக வரலாற்றில் பதிவாக வேண்டுமே தவிர விவசாயிகளின் போராட்டங்கள் பின்வாங்க அடித்தளமிட்ட நாளாக அடையாளப்படுத்தப்பட்டு விடக் கூடாது. அதற்கு உடனடியான தேவை விவசாய சங்கங்களை அனைத்து ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து ஆதரித்து அவர்களுக்கு ஊக்கமளிப்பதுதான்.

பெரும்பான்மை மக்களாகிய நாம் விவசாயிகளுடன் இருக்கிறோம் என்பதை அவர்களிடம் உறுதியாகக் காட்டும்போது, உத்வேகமாக வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தை வெற்றியை நோக்கி எடுத்துச் செல்ல முடியும்.


கர்ணன்

செய்தி ஆதாரம் : Indian express

கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !

6

டெல்லியில் நேற்று (26-01-2021) நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியை வன்முறைக் களமாக மாற்றியிருக்கிறது போலீசு. தீரமிக்க போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்திவரும் விவசாயிகள், வன்முறையாளர்களாகவும் சட்டத்திற்குக் கட்டுப்படாதவர்களாகவும் காட்டப்பட்டு வருகின்றனர். இதன் விளைவாக இந்தப் போராட்டத்தில் இருந்து பின்வாங்குவதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பிலிருக்கும் இரண்டு முக்கிய விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மோடி அரசும், அதன் ஆதரவு ஊடகங்களும், நீதிமன்றமும் விரும்பியது இத்தகைய பிளவைத்தான். இந்தப் பிளவை இதற்கு முன்னரே நைச்சியமான முறையில் ஏற்படுத்த முயற்சித்த மத்திய அரசின் முயற்சிகளை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முறியடித்தது. பெரும்பான்மை விவசாய சங்கங்களின் உறுதி, விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு மக்களிடையேயும் சர்வதேச அளவிலும் கிடைத்த ஆதரவு ஆகியவை இந்தப் பிளவு முயற்சிக்கு விவசாய சங்கங்களின் தலைமைகளே விரும்பினாலும் துணைபோக முடியாத வகையில் நெருக்கடியைக் கொடுத்து வந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம்,  விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கமிட்டியை அமைப்பதாகவும் அதன் காரணமாக போராட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறும் விவசாயிகளிடம் மிகவும் இறங்கிப் பேசுவதாகக் காட்டிக் கொண்டே, விவசாயிகள் மீது “பேச்சுவார்த்தையை விரும்பாத வீம்பு பிடித்தவர்கள்” என்ற முத்திரையைக் குத்தியது.

படிக்க :
♦ டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!

இந்நிலையில் நேற்று (26-01-2021) நடந்த டிராக்டர் பேரணியில் விவசாயிகள் அனுமதி வழங்கப்படாத செங்கோட்டை பகுதிக்குச் சென்றதையும் அங்கிருந்த தடுப்புகளை அகற்றி உள்ளே நுழைந்ததையும், தங்களைத் தாக்கிய போலீசுடன் மோதலில் ஈடுபட்டதையும் வன்முறை என்று சித்தரித்து விவசாயிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

போதாத குறைக்கு, செங்கோட்டையில் இந்தியக் கொடியை இறக்கி காலிஸ்தான் கொடியை ”காலிஸ்தான் தீவிரவாதிகள்” ஏற்றியதாகவும் மோடியின் அடிவருடி ஊடகங்கள் அலறத் துவங்கின. விவசாய சங்க கொடிதான் அது என்பதையும் இந்தியக் கொடியை விட உயரம் குறைவான கம்பத்தில்தான் ஏற்றப்பட்டது என்பதையும் பலரும் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் சங்கிகளின் அவதூறுகளும் பொய்களும் குறையவில்லை.

மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு, பாசிசத்தின் கொடுங்கொன்மையின் கீழ் அரசியல் சாசனச் சட்டம் அவமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் குடியரசு தினம் கொண்டாடப்படுவது என்பது உண்மையில் குடியரசு தினத்திற்குத் தான் அவமானம் என்பது ஒருபுறமிருக்க, எந்தக் கொடி உயரத்தில் ஏற்றப்பட்டிருந்தது என்பதா இப்போதைய பிரச்சினை?

இந்தப் பிரச்சினையில் விவசாயிகள் போராட்டத்தில் சீர்குலைவு சக்திகள் உள்ளே நுழைந்து பேரணிக்குத் தீர்மானிக்கப்பட்ட பாதையை விட்டு விலகியதாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். மேலும் அனுமதி மறுக்கப்பட்ட பாதையில் செல்ல வழிகாட்டியதாக சில விவசாய சங்கங்கள் மீது சக விவசாய சங்கங்களும் குற்றம் சாட்டியிருக்கின்றன.

டெல்லியில் நேற்று நடந்த போலீசு – விவசாயிகள் மோதலை, “விவசாயிகளின் வன்முறை” என ஒட்டுமொத்த மோடி அடிவருடி ஊடகங்களும் கதற, தங்களை லிபரல் ஊடகங்கள் எனக் காட்டிக் கொள்ளும் என்.டி.டி.வி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ‘நடுநிலை’ ஊடகங்களும் அந்த அலறலுக்கு கோரஸ் பாடிக் கொண்டிருக்கின்றன.

பிற அரசியல் கட்சித் தலைவர்களும் “அமைதி வழி“ குறித்து வகுப்பெடுக்கத் துவங்கினர். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்ட கல்லூளி மங்கன்களின் தலைவரான அடிமை எடப்பாடியோ தமிழகத்தில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேரணி நடத்திய தமிழக விவசாயிகள் மீது போலீசை ஏவிக் கொண்டிருந்தார். எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் ”வன்முறை அரசின் திசை திருப்பல் முயற்சிக்கு வித்திடும்” என்று தனது “அட்வைசை” விவசாயிகளுக்குத் தெரிவித்திருக்கிறார்.

நடந்தது விவசாயிகளின் வன்முறை என்று இவ்வாறாக “நிரூபிக்கப்பட்ட” பின்னர், விவசாயிகள் வன்முறைக்கு எந்த விவசாயிகள் சங்கத்தினர் காரணம் என்பதாக கேள்வி முன்வைக்கப்பட்டது. இதுதான் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்படுவதற்கான அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்விக்கு விவசாய சங்கங்கள் நிதானமாக பதில் சொல்ல முடியாதபடிக்கு, “விவசாயிகள் வன்முறை” ஓலம் முதல் அனைத்து வகையான நெருக்கடிகளையும் இந்த கேடுகெட்ட ஊடகங்களும், “நடுநிலை” அரசியல் கட்சிகளும் ஏற்படுத்திவிட்டன.

தற்போது வரை இரு விவசாய சங்கங்கள், “இந்தப் போராட்டத்தில் கட்டுப்பாட்டுக்கு உட்படாதவர்க்ளுடன் இணைந்து பயணிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தில் சங்க பரிவாரக் கும்பலும், கார்ப்பரேட் கும்பலும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு பிளவை, ஒரு உடைப்பை, மேற்குறிப்பிட்டவர்களின் “வன்முறை” கோசங்கள் ஏற்படுத்தியுள்ளன.

விவசாயிகள் டெல்லியில் பேரணியை முடித்துவிட்டு, கண்டிப்பாக மீண்டும் டெல்லி எல்லைக்கு திரும்புவதாக உறுதியளித்துதான் இந்தப் பேரணியை விவசாயிகள் நடத்தினர். அப்படி இருக்கையில், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவை மீறி சில சங்கங்களோ அல்லது அவற்றின் சிறு பிரிவினரோ செங்கோட்டை இருந்த பகுதிக்குள் சென்றாலும் அவர்கள் மீண்டும் மாலையில் சிங்கு, டிக்ரி, காசிப்பூர் எல்லைக்குத் திரும்புவதாகத் தானே கூறியிருக்கிறார்கள். பின்னர் எதற்கு அவர்கள் மீது தேவையில்லாமல் தடியடி நடத்தவேண்டும் ?

படிக்க:
♦ பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !
♦ வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !

செங்கோட்டை பகுதிக்குள் விவசாயிகள் பேரணி நுழைவதற்கு முன்னரே, வருமானவரித்துறை அலுவலகப் (ITO) பகுதிக்குள் பேரணி நுழைந்ததுமே தடியடியையும் கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசி, விவசாயிகளுடனான மோதலை உண்டாக்கியிருக்கிறது மோடியின் டெல்லி போலீசு.

வன்முறையை விவசாயிகள் மீது கட்டவிழ்த்து விட்டது போலீசு. அதற்குப் பதிலடி கொடுத்த விவசாயிகளை வன்முறையாளர்கள் என்று கதறும் ஊடகங்கள், கையில் தடிக்கம்புடனும் கண்ணீர்ப் புகை குண்டுகளுடனும் காத்துக் கிடந்த போலீசு வெறியர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிப்பதில்லை. ஏனெனில் போலீசின் கைகளில் இருக்கும் லத்திக் கம்புகள் அவர்களது “மூலதனத்தை”யும் காக்கின்றனவே.

அமைதியான முறையில் முடிந்திருக்க வேண்டிய விவசாயிகளின் பேரணியை திட்டமிட்டு சீர்குலைத்து, விவசாயிகளின் மீது “வன்முறையாளர்கள்” முத்திரையை குத்தியிருப்பதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு போராட்டத்திற்கான முடிவுரையை எழுதத் துவங்கியிருக்கிறது கார்ப்பரேட் ஆதரவு மோடி அரசு !

திட்டமிட்ட வகையில் துவக்கப்பட்டு, கட்டுக்கோப்பான முறையில் நடத்தப்பட்ட விவசாயிகளின் போராட்டம் ஒரு அவலமான முறையில் முடிவுக்குக் கொண்டு வருவதை அனுமதிக்கப் போகிறோமா என்பதுதான் இப்போது நம் முன் உள்ள கேள்வி.

விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை துவக்கத்தில் இருந்தே உதாசீனப்படுத்தி வந்த மோடி அரசு, அவர்களது கோரிக்கையை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக நிற்கின்றது. தனக்குப் படியளக்கும் கார்ப்பரேட் கடவுளர்களான அம்பானி, அதானியின் நலன்தான் தனக்கு முக்கியம் என்பதை சொல்லாமல் சொல்லி வந்திருக்கிறது மோடி அரசு.

எஜமானன் சுட்டிக் காட்டும் நபர்களைப் பாய்ந்து தாக்கும் விசுவாசமான ஏவல் நாயைப் போல, போராடும் விவசாயிகளின் கழுத்தில் தாவிக் கடிக்கச் சாதகமான தருணத்துக்காக காத்திருந்த மோடி அரசுக்கு இந்த ”வன்முறை” தருணம் பொன்னான வாய்ப்பாக இருக்கிறது.

இதை முறியடிக்க வேண்டுமெனில், விவசாயிகளைக் காக்க வேண்டுமெனில், விவசாயிகளின் இந்தப் போராட்டம் முடிவுறாமல் தடுக்கப்பட வேண்டுமெனில், மோடி அரசு எனும் ஏவலாளியைச் சாடுவதோடு நின்றுவிடாமல் அதனை ஏவிய எஜமானர்களின் “கைகளை” முறிக்க வேண்டும். அதாவது வேளாண் சட்டத்தை நிறைவேற்றுவதால் பலனடையப் போகும் கார்ப்பரேட் கும்பலின் மூலதன நலன்களைப் பதம் பார்க்க வேண்டும். அந்நிறுவனங்களின் பொருட்களை நிராகரிக்க வேண்டும்.

இதை ஏற்கெனவே தங்களது “ஜியோ” எதிர்ப்பு மூலமாகச் செய்து காட்டியிருக்கின்றனர் விவசாயிகள். முகேஷ் அம்பானி வெளிப்படையாகவே கதறியதும், நீதிமன்றத்தில் வேளாண் சந்தையில் தாம் மூலதனமிடவில்லை எனப் பச்சையாகப் புளுகியதும் அதன் விளைவு தான்.

விவசாயிகளுக்கு எதிராக கிளப்பிவிடப்பட்டிருக்கும் “வன்முறை” எனும் ஓலங்களை புறக்கணித்து, அவர்களுக்கு ஆதரவாக அனைத்துப் பிரிவு மக்களும் களமிறங்குவதோடு, அம்பானி, அதானி உள்ளிட்ட வேளாண் சட்டத்தால் பயன்பெறப் போகும் கார்ப்பரேட்டுகளை நேரடியாக காரணத்தைக் குறிப்பிட்டு புறக்கணிப்பதன் மூலம் மட்டுமே வேளாண் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறச்செய்ய முடியும் !

இது விவசாயிகளின் போராட்டம் மட்டுமல்ல.. நமக்குமான போராட்டம்தான். கார்ப்பரேட்டுகளின் கைகளில் கொடுக்கப்பட்ட பின்னர் நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 92 ரூபாய்க்கு வந்து நிற்கும் பெட்ரோல் விலையைப் போல அரிசியின் விலை ஏறிக் கொண்டே போவதை அனுமதிக்கப் போகிறோமா ? பெட்ரோல் இல்லையெனில் நடந்து கூடப் போகலாம்! உணவின்றி வாழ முடியுமா?


சரண்

 

திருவாரூரில் தடையைத் தகர்த்து விவசாயிகள் பேரணி !

மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டம் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய விவசாயத்தை அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் தாரை வார்த்து விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகள் ஆக்கி விவசாயிகளின் நிலத்தை பறிக்கும் மிக மோசமான சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் கடந்த 62 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

கடுமையான குளிரிலும் உயிர்த்தியாகம் செய்தும் பூமிப்பந்தில் இதுவரை கண்டிராத வகையில் போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகளை ஆதரித்தும் மோடி அரசை கண்டித்தும் அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக 26/01/2021 அன்று, திருவாரூரில் மாபெரும் டிராக்டர் பேரணி காவல்துறையின் தடையையும் மீறி நடந்தது. இந்த மாபெரும் பேரணியில் பல்வேறு விவசாய சங்கங்களோடு இணைந்து பல தொழிற்சங்க அமைப்புகள், மாணவர் அமைப்புகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்பினரும் அவர்களுடன் நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.

படங்கள் :

இந்தப் பேரணிக்கு போலீசு அனுமதி கொடுக்காத சூழலில், தடையை மீறி இந்தப் பேரணி துவங்கியது. உழவர் பேரணியில் கலந்து கொண்ட வந்தவர்களில் பலரையும் தண்டலை என்ற இடத்தில் தடுத்து நிறுத்தியது எடப்பாடி அரசின் போலீசு.

மோடி அரசுக்கு எதிராகவும் எடப்பாடி அரசுக்கு எதிராகவும் இதுபோன்ற போராட்டங்களை ஒடுக்கும் காவல்துறைக்கு எதிராகவும் விண்ணைப் பிளக்கும் முழக்கங்களோடு இந்தப் பேரணியில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் கண்டன உரையாற்றினர்.

போலீசின் தடைகளைத் தகர்த்து முன்னேறிச் சென்ற விவசாயிகளையும் முன்னணியாளர்களையும் இன்று அதிகாலையில் கைது செய்தது போலீசு.

தகவல்
மக்கள் அதிகாரம்
தஞ்சை மண்டலம், திருவாரூர்.
82207 16242

தில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் !

PP Letter headபத்திரிகைச் செய்தி

27.01.2021

தில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் !
டிராக்டர் பேரணிக்கு அனுமதியளித்துவிட்டு நயவஞ்சகமாக தாக்குதல் நடத்திய பாசிச மோடி அரசு !

மாணவர்கள் – தொழிலாளர்கள் – விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை முறியடிப்போம் !
பாசிச மோடி அரசை வீழ்த்துவோம் !

னவரி 26-ம் தேதி “குடியரசு நாளன்று” விவசாயிகள் மீது கட்டவிழ்த்து வன்முறையை விட்டிருக்கிறார் மோடி. அறுபது நாட்களுக்கு மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு தங்கள் வாழ்வாதாரத்தையே அழிக்கும் மூன்று வேளாண் திருத்தச்சட்டங்களுக்கு எதிராக கடும் குளிரில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். கடும் குளிரிலும் விபத்துக்களிலும் தன்னை மாய்த்துக் கொண்டும் இறந்து போனவர்களின் எண்ணிக்கை நூற்று அறுபதைத் தாண்டி விட்டது.

வேளாண் திருத்தச்சட்டங்களை திரும்பப்பெறு என்பதுதான் விவசாயிகளின் ஒற்றை முழக்கம். அதை நிறைவேற்றாமல் சதித்தனமாக, புரோக்கர்கள்தான் போராடுகிறார்கள்; தீவிரவாதிகள்தான் போராடுகிறார்கள் என்று அரசும் ஊடகங்களும் விவசாயிகள் மீது அவதூறுகளை அள்ளிவீசினர். ஆனாலும் உறுதியாக விவசாயிகள் களத்தில் இருந்தனர். நாட்டு மக்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். மோடி அரசுக்கு விவசாயிகளின் கோரிக்கையை பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லாததால்தான் திட்டமிட்டே விவசாயிகளை அலைக்கழித்து தாமதப்படுத்தி அவமானப்படுத்தியும் வந்தது.

சனவரி 26 டிராக்டர் பேரணிக்கு அனுமதியும் கொடுத்து விட்டு விவசாயிகள் மீது போலீசை ஏவிவிட்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தி அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்ட இச்செயல் கழுத்தறுப்பு, மாபெரும் நம்பிக்கை துரோகம். அரசே ஒரு வன்முறைக்கருவி என்பதை அரசின் செயல்பாடுகள் எப்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றன.

மெரீனாவில் ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைக் கோரிக்கைக்காக ஒன்று திரண்ட மக்கள் மீது திட்டமிட்டே வன்முறையை ஏவி பல பெண்களை மானபங்கம் செய்தும் மீனவர் குடியிருப்புக்களை எரித்து நாசம் செய்தும் பல இளைஞர்களை கொடுங்காயப்படுத்தியும்தான் அப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது, பேச்சுவார்த்தை மூலம் அல்ல. அப்போதும் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டனர் என்று தனது பயங்கரவாத செயல்களை எல்லாம் நியாயப்படுத்தியது அரசு.

சி...-க்கு எதிரான மக்கள் போராட்டத்திலும் கூட ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் போலீசோடு இணைந்து தாக்குதல் நடத்தி முசுலீம் மக்களின் குடியிருப்புக்களை எரித்தார்கள்.

படிக்க :
♦ சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !
♦ கிரிமினல்களின் கூடாரமாகும் சங்கபரிவாரம் !

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக அமைதியாக நூறு நாட்கள்வரை போராடி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை துடிதுடிக்கக் கொன்றும் நூற்றுக் கணக்கானவர்களை முடமாக்கியும் போட்டது இந்த அரசுதான். அப்போதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டனர் என்று அரசும் ஊடகங்களும் அவதூறு செய்தனர்.

அதே அரசும் ஊடகங்களும்தான் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டனர் என்கின்றன. எல்லாவிதமான அமைதிவழிப் போராட்டங்களையும் மக்கள் கோரிக்கைகளையும் வன்முறை மூலம் நசுக்கி மக்களின் உரிமைகளை அழித்தொழிப்பதே பாசிச மோடி அரசின் ஒரே நோக்கம்.

நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்கள் போராடுகிறார்கள். தொழிலாளர் நல திருத்தச் சட்டங்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் போராடுகிறார்கள். மறுகாலனியாக்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட சிறுமுதலாளிகளும் வியாபாரிகளும் போராடுகிறார்கள். ஆனாலும் நமது கோரிக்கைகள் நிறைவேறவில்லை.

தனித்தனியாக நடத்தப்படும் அனைத்துப் போராட்டங்களையும் வன்முறை மூலமாக ஒடுக்குகிறது பாசிச மோடியின் அரசு. உண்மையான மக்கள் பிரச்சினையை மறைக்க தேசத்துரோகம் என்ற முத்திரையை குத்தி ஒடுக்குகிறது. நேற்றைய தினம் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட பாசிச மோடி அரசின் அரச பயங்கவாத நடவடிக்கையை கண்டிப்பதுடன் வேளாண் திருத்தச் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் வலியுறுத்துகிறது.

மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், சிறுமுதலாளிகள் என பாதிக்கப்படும் அனைத்து மக்களும் ஒன்று திரளவேண்டும். அரசை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே வேளாண் திருத்தச்சட்டங்களை ரத்துச் செய்வது மட்டுமல்ல, நாட்டின் பெரும்பான்மை மக்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு காவு கொடுக்கும் பாசிச மோடி அரசினை வீழ்த்தவும் முடியும்.

தோழமையுடன்
சி.
வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு புதுவை

கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்

♦ அதானி அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக விவசாயிகளையும் இந்திய விவசாயத்தையும் ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!
♦ விவசாயிகளின் டிராக்டர் பேரணியை திட்டமிட்டு சீர்குலைத்து போலீசு தடியடியைக் கட்டவிழ்த்துவிட்ட மோடி அரசை வீழ்த்துவோம் !

கருத்துப்படம் : மு. துரை

நூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி லகரி || காமராஜ்

இந்திய துணைக் கண்டத்தில் அழிக்க முடியாத வரலாற்று தடங்களை பதித்த மாபெரும் போராட்ட எழுச்சி பற்றிய  வரலாறு.  உழைக்கும் மக்கள் நடத்திய போராட்டங்களின் உண்மை கதைகள், அந்தப் போராட்டக்களத்தில் களமாடிய மாவீரர்களின் அனுபவங்கள், சுய தேடல்கள், அழுத்தமான மனப்பதிவுகள் ஒரு விரிவான நேர்காணல் ஆக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வார குத்தகை விவசாயிகளும் கிராமப்புற ஏழை மக்களும் நடத்திய  மாபெரும் போராட்டம். போர்க்குணமிக்க போராட்டத்தில் உருக்கி வார்க்கப்பட்ட புதிய வார்ப்புகள், நெஞ்சுரம் மிக்க போராளிகளாக, தன்னல உணர்ச்சியை போரிட்டு வென்ற மாவீரர்களாக திகழ்ந்த பொதுவுடமையாளர்கள், இந்தப் போராட்டத்தில் இடம் பெற்றிருந்தார்கள்.

பழமை (பழைய வரலாறு) மறக்கப்படும் ஒரு அபாயகரமான சூழலில், மிக மிக தேவைப்படும் ஒரு குரலாக இந்த நூல் வெளிவருகிறது. பிற்போக்கு சக்திகள் அணி திரண்டு வரும் சூழலுக்கு மத்தியில், இது  இன்னும் ஆழமான பொருத்தத்தை பெறுகிறது.(இந்த நூலுக்கான அறிமுக உரையில் தோழர் சுமித் சர்க்கார் )

நில உரிமையாளருக்கு உண்மையான சாகுபடி செய்பவருக்கும் இடையில் உள்ள ஓர் உறவு முறை, வார குத்தகை முறை என்பது ஒரு நீண்ட வரலாறு கொண்டது. அன்றைய நாட்களில் வார குத்தகை விவசாயிகள், கூலி விவசாயிகள் உதவியோடு நிலம் பயிரிட்டு வந்த வழக்கத்தை இது எடுத்துக் காட்டுகிறது. நிலத்தின் விளைச்சலை பொறுத்து நான்கில் ஒரு பங்கு, எட்டில் ஒரு பங்கு அல்லது பன்னிரண்டில் ஒருபங்கு நில வாடகை செலுத்தப்பட்டு வந்தது.

விளைச்சலில் பாதியை சாகுபடியாளர்கள் தருவது போன்ற ஒப்பந்த விதிமுறைகளின்படி கூலி தொழிலாளர்களை வைத்து சாகுபடி செய்யப்பட்ட இடங்களில், விதைகளை சாகுபடி செய்பவர்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இரும்பு முனை கொண்ட கலப்பை, மரக் கலப்பை, நுகத்தடி, கிணற்றில் இருந்து பாசனத்துக்கு நீர் இறைக்க தோல்பை, கயிறு ஆகிய பொருட்களை நிலவுடைமையாளர்கள் தந்துவிட வேண்டும். இந்த முறை பல நூற்றாண்டுகள் வரை நீடித்து வந்தது.

பாரம்பரியமாக இருந்து வந்த வார குத்தகை முறையானது 1793-ல் காரன்வாலிஸ் கொண்டுவந்த நிரந்தர குடியிருப்பு சட்ட வடிவத்தில் ஒரு மாற்றத்திற்கு உள்ளானது. சாகுபடி வேலைகள் அதற்கான செலவு என முழுமையும் படிப்படியாக குத்தகைதாரர் மீது விழுந்தது. நிலத்தின் உரிமையாளர்களே பயிர்களுக்கும் உரிமையாளர் ஆனார். இதுதான் குத்தகைதாரர்கள் இடம் ஏற்பட்ட முதல் அதிர்ச்சி ஆகும். சிறிது சிறிதாக சேர்ந்த நூற்றாண்டுகால அதிருப்தி தீப்பொறியாக வெடித்து, வங்காள விவசாயிகளின் மகத்தான  எழுச்சியாக வெடித்தது.

தெபாகா உழவர் பேரெழுச்சி நடைபெற்று பல்லாண்டுகள் உருண்டோடி விட்டபோதும், “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற அடிப்படைக் கோரிக்கை இதுவரை முழுமையாக அடையப்படவில்லை. வார குத்தகை விவசாயிகள் தங்கள் விவசாயம் செய்துவரும் நிலத்திற்கு இன்னும்கூட உரிமையாளர்களாக ஆக முடியவில்லை. இப்போதும்கூட விளைச்சலில் 25 விழுக்காடு விவசாயத்தில் ஈடுபடாத நில உரிமையாளர்களுக்கு போய் சேருகிறது. “நிலமற்ற விவசாயிகளின் நெஞ்சில் நிலத்திற்கான தாகம் இன்னமும் அப்படியே இருக்கிறது” என்று அந்த மாபெரும் விவசாயிகள் எழுச்சியின் தளகர்த்தர் தோழர் அபானி லகரி கூறுகிறார்.

எரிமலையாய் வெடித்து சிதறிய வங்கத்தின் உழவர் பேரெழுச்சி கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தது.

1. விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு உரிமை வேண்டும்.
2. தானிய கடனுக்கு வட்டி இல்லை.
3. அறுவடை முழுவதும் விவசாயிகளுக்கு சொந்தம்.
4. நிலத்தில்  இருந்து வெளியேற மாட்டோம்.
5.உழுபவனுக்கே நிலம் சொந்தம்.

போராட்டத்தின் விளைவாக, விவசாயிகள் விளைச்சலை தங்கள் சொந்த களஞ்சியங்கள் எடுத்துச் சென்றார்கள். சட்டவிரோத பறிமுதல் முடிவுக்கு வந்தது. தானிய கடனுக்கு வசூலித்து வந்த வட்டி கொடுமை முடிவுக்கு வந்தது. நிலபிரபுத்துவ கொடுங்கோலர்கள் தங்கள் கிராம வீடுகளை காலி செய்து விட்டு நகரங்களுக்கு ஓடிவிட்டனர்.

வங்காளத்தின் 19 மாவட்டங்களில் 60 லட்சம் மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கு கொண்டனர். போர்க்குணமும், அளவற்ற வீரமும், வலிமையும் கொண்ட மாபெரும் கிளர்ச்சிப் போராட்டத்தில் வார குத்தகை விவசாயிகளும், கிராம கைத்தொழில் தொழிலாளர்களும், ஆதிவாசிகளும் உணர்வுபூர்வமாக நின்று களமாடினார்கள்.

இந்த நூற்றாண்டில் வங்கத்தில் நடைபெற்ற மாபெரும் மக்கள் எழுச்சி, அரச பயங்கரவாதத்தால் ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. ஆற்று வெள்ளம் போல் ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. நிலப்பிரபுத்துவ தரகு முதலாளித்துவ பிரதிநிதியாக செயல்பட்ட காங்கிரஸ் கட்சியும், முஸ்லிம் லீக்கும் இரக்கமற்ற அரச பயங்கரவாதத்திற்கு பல்லக்குத் தூக்கினர்.

எளிய மக்களின் உரிமை வாழ்வுக்காக தங்களது இளமை காலத்தை அர்ப்பணித்த தியாக சீலர்கள் மக்களை அணிதிரட்ட எத்தகைய இன்னல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்கள். கிராமப்புறங்களில் பணியாற்றும்போது கடுமையான சோதனைகளை எதிர் கொண்டார்கள் .

போராட்ட தலைவர்களில் ஒருவரான தோழர் சுசில்சென்  பின்வருமாறு பதிவு செய்துள்ளார். “சில நேரங்களில் ஏராளமான பன்றிகள் மத்தியில் நாங்கள் இரவை கழிக்க நேர்ந்தது உண்டு. சில நேரங்களில் மாட்டுத் தொழுவத்தில் வைக்கோல் மெத்தைகளில் ஆடு மாடுகள் ஆகியவற்றின் அருகில் துங்க நேர்ந்தது. விவசாயிகள் உண்டுவந்த உணவே நாங்களும் பங்கிட்டுக் கொண்டோம். அப்போது விவசாயிகள் உண்டுவந்த உணவு என்பது சணல் இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட கஞ்சி மட்டுமே. அவர்களுக்கு சாப்பிட கிடைக்காத நாட்களில் நாங்களும் பட்டினி இருந்தோம். அடக்குமுறை, அநீதி ஆகியவற்றின் ஒவ்வொரு வடிவத்திற்கு எதிராகவும் அவர்களை அணிதிரட்டி வந்தோம். இதற்குக் காரணம் நாங்கள் கம்யூனிஸ்டுகள் என்ற உண்மையை ஒவ்வொரு நொடியும் நாங்கள் உணர்ந்து இருந்தோம்”

விடுதலைப் போராட்ட சூறைக்காற்று சுழன்றடித்த அந்த காலகட்டத்தில் அனைத்து வங்காள மாணவர் சங்கமானது (All Bengal Students Association) அனுசீலன் சமதியின் மாணவரணியாகவும் ஆதரவு அமைப்பாகவும் இருந்தது. தீவிரமான கனவுகளால் தூண்டப்பட்ட ஒரு இளைஞன், தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது எப்படி என்ற உணர்ச்சி மிகுந்த வரலாறு, இந்த நேர்காணலின் வழியிலேயே நம்மால் உணர முடிகிறது.

“ஒருநாள் விடுதியிலிருந்து கிராமத்தில் உள்ள என் வீட்டிற்கு வந்திருந்தேன். நான் ஒரு திட்டம் வைத்திருந்தேன், சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். கடைசியாக அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நாள் மதியம் என் அம்மா தூங்கிக் கொண்டிருந்தார். எங்கள் குடும்ப நகைகள் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது? அலமாரியின் சாவி எங்கே இருக்கும், அந்த விஷயம் எல்லாம் எனக்கு தெரியும். எனக்கு பூணூல் சடங்கு நடந்தபோது அணிவிக்கப்பட்ட மோதிரத்தை தங்க நாணயத்தை மட்டுமே எடுத்துக் கொள்வது என்றுதான் முதலில் முடிவு செய்து இருந்தேன். அதை எடுக்கத் தொடங்கியபோது ஏன் என்னுடையது மட்டும் எடுக்க வேண்டும். என் அம்மா மற்றும் சகோதரிகளின்  நகைகளையும் ஏன் எடுக்க கூடாது? தாய் நாட்டின் விடுதலை என்ற புனித லட்சியத்திற்கு தானே இதை செய்கிறோம், ஆகவே எல்லா நகைகளையும் எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிட்டேன்.

என் அப்பாவின் தலையணையின் கீழ் ஒரு கடிதத்தை மட்டும் எழுதி வைத்துவிட்டு வந்தேன். நாட்டு விடுதலைக்காக நடத்தப்படும் போராட்டத்திற்காக இவை அனைத்தையும் செலவு செய்யப்படும் என்று”

அனுசீலன் சமதியின் ஆயுதக் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்காக, தேசவிடுதலைப் புரட்சியாளர்களுக்கு ஆயுதம் வாங்குவதற்கு தேவையான நிதி இல்லாத சூழ்நிலையில், இளம் மாணவரான அபானி லகரி அவர்கள் இதை செய்தார். தன் சகோதரிகளின் திருமணத்திற்காக, எளிய நடுத்தர வர்க்கப் பின்னணி கொண்ட அவருடைய தந்தை சிறுக சிறுக சேமித்த நகைகளை தேச விடுதலைப் போராட்டத்திற்காக எடுத்துச் செல்கிறார்.

தாய் நாட்டின் விடுதலைக்காக, சர்வ பரி தியாகம் செய்யத் தயாராக இருந்த அந்த இளம் புரட்சியாளரின் செயல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. தன் குடும்ப உறவுகளை விட தேச விடுதலையை தன் உயிர் மூச்சாகக் கொண்ட மாவீரர்களின் தியாக உணர்வை எண்ணிப்பார்க்கையில், அத்தகைய வாழ்க்கையை  ஒப்பிடும்போது, குற்ற உணர்வு நம்மை வாட்டுகிறது.

வங்காள விவசாயிகளின் போராட்ட எழுச்சியை நேரில் பார்த்த கவிஞரும், எழுத்தாளருமான குலாம் குத்தூஸ் அவர்கள் “தலைமையிடம் இருந்து ஊக்கமும் அனுமதியும் கிடைத்திருந்தால் விவசாய போராளிகளால் நிச்சயம் ஒரு சில ஏனான்-களை (சீனாவின் ஏனான் பிரதேச விவசாயிகள் எழுச்சி) உருவாக்கி இருக்க முடியும்” என்று கூறுகிறார் .

“மாக்சிய சமூக அறிவியல் வழிப்பட்ட பாதையில் நடைபோடுவது ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களுக்கு உள்ள ஒரே வழி என்று நான் நம்புகிறேன். பாராளுமன்ற ஜனநாயகம் என்ற சறுக்கல் பாதையை நம் வளர்ச்சியை தடுத்துவிட்டதோ என்று நான் அஞ்சுகிறேன். சொத்து சேர்ப்பதற்கும், அதிகாரத்திற்குமான ஆசைதான் கம்யூனிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்தி உள்ளதா, சுரண்டலற்ற ஒரு சமூகத்தை நிர்மாணிக்க வேண்டும் என்ற கருத்தியலுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கம்யூனிஸ்டுகள், சுயநலமிகள் மத்தியில் காணாமல் போய் விட்டார்களா?

வெளிப்படையான எளிய வாழ்க்கை முறையும், தங்கள் தத்துவத்தின் மீது கொண்டிருந்த ஆழமான பற்றுறுதி, ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளை நோக்கி மக்களை ஈர்த்து வந்தது. வாழ்க்கையின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் எங்களைப் போன்ற பல பேருக்கு இந்த கேள்வி முக்கியமான ஒன்றாகும். என் மூச்சு இருக்கும் வரையிலும் ஒரு புதிய பாதைக்கான தேடலில் நாங்களும் சக பயணிகளாக தொடர்ந்து வருவோம் என என் சார்பிலும் நீண்ட நெடுங்காலமாக என்னுடன் இருக்கும் என் தோழர்கள் சார்பிலும் நான் உறுதி கூறுகிறேன்” என்று தனது நேர்காணலில் முத்தாய்ப்பாக தோழர் அபனி லஹரி அவர்கள் குறிப்பிடுகிறார்.

அடிபணியாத தீரத்தோடும் சுய நம்பிக்கையோடும் ஒரு முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் ஒரு தலைமையை வரலாறு நிச்சயம் உருவாக்கும். வரலாறு என்பது உருவாக்கப்படுவது; ஆனால் அது சுயமாக உருவாகாது; அதற்கு மனித தலையீடு மிக அவசியமாகும்.

இந்தியத் துணைக் கண்டத்தை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கின்ற மாபெரும்  விவசாயிகளுடைய போராட்டம் கடந்த 58 நாட்களாக டெல்லி தலைநகரில் நடைபெற்று வருகிறது. கடும் குளிரும் உறையவைக்கும் பனிப்பொழிவும் அவர்களது போராட்ட உணர்வை அசைத்துப் பார்க்க முடியவில்லை. போராட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் மோடி வித்தைகள் செல்லுபடியாகவில்லை.

சமகாலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகளின் இந்த பேரெழுச்சி இன்னும் பல போராட்டங்களை முன்னெடுக்க திறவுகோலாக இருக்கும். மாபெரும் வங்காள உழவர் போராட்ட வரலாற்றுப் படிப்பினைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டியது இன்றைய வரலாற்றின் தேவை ஆகும்.

சமதர்ம லட்சியத்திற்காக போராடும் அனைவரும் இந்தப் போர்க்குணமிக்க வரலாற்றுப் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். வர்க்க அடித்தளத்தில் ஊன்றி நின்று, போர்க் குணத்தோடு சமத்துவ பயணத்தில் பீடுநடை போட தோழர் அபானி லஹரி அவர்களின் இந்த வரலாற்றுப் பதிவு ஊக்கத்தையும் , உற்சாகத்தையும் தரும்.

 

நூல் : “தெபாகா எழுச்சி”
வங்காள ஏழை விவசாயிகளின் போராட்டம் 1946-1950

நுல் ஆசிரியர் : அபானி லகரி
பக்கங்கள் : 280
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
விலை : ரூ. 250.00
கிடைக்குமிடம் : சிந்தன் புக்ஸ்
132/251, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 86.
தொடர்புக்கு : 94451 23164.

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer

டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !

டெல்லியில் மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டத்தில் டெல்லிக்குள் டிராக்டர் பேரணிக்காக நுழைய முயன்ற விவசாயிகள் மீது தடியடி நடத்தத் துவங்கியிருக்கிறது டில்லி போலீசு. விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியிருக்கிறது.

இன்று அதிகாலை முதலே உற்சாகமாக டிராக்டர் பேரணிக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்ட விவசாயிகளை டெல்லியின் எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பரண்களை வைத்து ஆயுதப்படை போலீசையும் எல்லையில் குவித்து வைத்துள்ளது மோடி அரசு.

டிக்ரி எல்லையில் உள்ளே நுழைந்த விவசாயிகள்

காலையில் 10.15 மணியளவில், சிங்கு எல்லையில் உள்ளே நுழைய முயன்ற விவசாயிகளின் பேரணியை தடுத்து நிறுத்த போலீசு போட்டிருந்த தடுப்பரண்களை போலீசு அகற்ற வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். அதற்கு 45 நிமிடங்கள் காலக் கெடுவும் கொடுத்திருந்தனர்.

டிக்ரி எல்லையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் நிற்கும் டிராக்டர்கள்

45 நிமிடங்களாக போலீசு எந்த தடுப்பரண்களையும் அகற்றாத நிலையில், அங்கிருந்த தடுப்பரண்களை விவசாயிகள் அகற்றத் துவங்கினர்.

காசிபூர் எல்லையில் தடுப்பரண்களை அகற்றும் விவசாயிகள்

அதனைத் தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசு ஏவல் படை, விவசாயிகள் மீது தடியடி நடத்தத் துவங்கியது. அது மட்டுமல்லாமல், அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியது.

தடுப்பரண்களை அகற்றும் விவசாயிகள் மீது போலீசு தடியடி நடத்தியது.

 

போலீசு வன்முறையைத் தூண்டினாலும், விவசாயிகள் பதட்டமின்றி தடுப்பரண்களை அகற்றிவிட்டு முன்னேறினர். சிங்கு எல்லையில் இருந்து முன்னேறிய விவசாயிகள் சிங்கு எல்லையை அடுத்த சஞ்சய் காந்தி போக்குவரத்து நகருக்கு வந்தடைந்தனர். அங்கும் போலீசு விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி விவசாயிகளின் பேரணியை சீர்குலைக்கவும் அவர்களை விரட்டியடிக்கவும் முயற்சித்து வருகிறது.

தடையை தகர்த்து டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளை டெல்லி ஸ்வரூப் நகர் மக்கள் மலர்தூவி வரவேற்கின்றனர்.

கார்ப்பரேட்டுகளின் அடிமையான மோடி அரசுக்கும், கார்ப்பரேட்டுகளும் நேரெதிராக எழுந்து நிற்கின்றனர் விவசாயிகள். எப்படியாவது அவர்களை ஒடுக்கி கார்ப்பரேட்டுகளின் பாதங்களில் இந்திய விவசாய உணவுப் பொருள் உற்பத்தையை அடகு வைக்கத் துடிக்கிறது மோடி அரசு. அதனைச் செய்து முடிக்க எத்தகைய படு பாதகச் செயலையும் செய்யத் தயங்காது மோடி அரசு. விவசாயிகளுக்கு ஆதரவாக நம் குரல்களை எழுப்புவோம்.

கர்ணன்

தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா?

1

விவசாயிகள் படும் பாடையும் அவர்களின் துயரத்தையும் பற்றிப் பேசுகையில், “இவனோடும் சண்டை, நமக்கு இயற்கையோடும் சண்டை” என்ற துன்பியல் வரிகள் நினைவுக்கு வருவது தவிர்க்கவே முடியாத ஒன்று. மோடி அரசின் மூன்று வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் விவசாயிகளின் தலைக்கு மேலே கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக விவசாயிகளை இயற்கையும் தன் பங்குக்குத் துயரத்தில் மூழ்கடித்துவிட்டது.

எட்டு ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டுதான் மேட்டூர் அணை பருவத்தே திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடி பரப்பு அதிகமானதோடு, விளைச்சலும் ஹெக்டேருக்கு 6 டன் என்பதைத் தாண்டி, 6.2 டன்னாக அதிகரித்திருந்தது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய நான்கு டெல்டா மாவட்டங்களில் மட்டும் சம்பா சாகுபடி பரப்பு 10 இலட்சம் ஏக்கரைத் தாண்டியதோடு, விளைச்சலும் நட்டமின்றி இருக்கும் என விவசாயிகளால் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், விவசாயிகளின் இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாக முடிந்துபோனது.

படிக்க :
♦ கொரோனாவிலும் குறையாத இலாபம் ! அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு !

♦ லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !

குறுவை விளைச்சல் எதிர்பார்த்ததையும்விட அதிகமாக இருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு, தனியார் வியாபாரிகள் விளைந்த நெல் மூட்டைகளைக் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் கீழாகக் குறைத்துக் கேட்டதால், விவசாயிகளுக்கு அரசிடம் விற்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. தமிழக அரசோ வரத்துக்கு ஏற்றபடி உடனுக்குடன் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதனால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் ஒரு வாரம் பத்து நாள் எனக் காத்திருந்து நெல் மூட்டைகளை விற்க நேர்ந்தது.

நெல் மூட்டைகளைப் பல நாட்கள் திறந்த வெளியில் போட்டு வைத்திருந்ததால், அவை திடீர் மழையில் நனைந்து, நெல்லின் ஈரப்பதம் அதிகரித்தது. அதிகரித்த ஈரப்பதத்தைக் காட்டி நெல்லைக் கொள்முதல் செய்ய அதிகார வர்க்கம் மறுத்தது. இப்படித் தமிழக அரசு குறுவை நெல் கொள்முதலில் திட்டமிட்டுச் செய்த பல்வேறு “குளறுபடிகள்”, புறக்கணிப்பு, தாமதங்களின் மூலம் விவசாயிகளை நட்டமடையச் செய்தது என்றால், பருவம் தவறிப் பெய்த ஜனவரி மாத கனமழை சம்பா விளைச்சலை அடியோடு நாசப்படுத்திவிட்டது,. நிவர், புரெவி புயல்களில் தப்பிப் பிழைத்த பயிர்களைக்கூட ஜனவரி மாத கனமழை விட்டுவைக்கவில்லை.

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்டு 14 மாவட்டங்களில் 8 இலட்சம் ஏக்கரில் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்லும், பிற விளைபொருட்களும் முற்றிலும் நாசமடைந்துவிட்டதாக ஆரம்பகட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாதிப்பின் வீச்சு

காவிரி டெல்டாவைச் சேர்ந்த தஞ்சை மாவட்டத்தில் 25,000 ஏக்கருக்கும், நாகை மாவட்டத்தில் 1,25,000 ஏக்கருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 1,50,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல்வயல்கள் நீரில் மூழ்கி, விளைச்சல் வீணாகிப் போயிருக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் 5,000 ஹெக்டேர் பரப்பளவுக்கும் மேலான நெல்வயல்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகவும்; நெல்லுக்கு அப்பால் வாழை, கரும்பு, பருத்தி, மக்காச் சோளம் ஆகிய பயிர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

கடலூர் மாவட்டக் கடைமடைப் பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கரிலும் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரிலுமாக 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்கள் தேசமடைந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3.34 லட்சம் ஏக்கர் நெல் பயிரிடப்பட்டதில், தோரயமாக 1 லட்சம் ஏக்கர் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்திருக்கக்கூடும் என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்த நிலையில், ஜனவரி மாத மழையால் சுமார் 75,000 ஏக்கரில் விளைந்து நின்ற நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டதாகவும்; நெல் தவிர, சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, எள், மக்காச்சோளம் ஆகிய தானியங்களும் அழுகிவிட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களையொட்டி அமைந்திருக்கும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலைப் பயிர்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டில் சுமார் 1.25 ஏக்கர் பரப்பளவில் குண்டு மிளகாய் எனச் சந்தையில் அழைக்கப்படும் இராமநாதபுரம் முண்டு மிளகாய் பயிரிடப்படிருந்தது. மிளகாய்ச் செடிகள் காய்க்கத் தொடங்கிய பருவத்தில் டிசம்பர் இறுதியிலும், ஜனவரி தொடக்கத்திலும் பெய்த மழையால் ஏறத்தாழ 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற மிளகாய்ச் செடிகள் அழுகிப் போயிருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் மானாவாரி பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. இதில் சுமார் 60 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்தும்; 40 ஆயிரம் ஹெக்டேரில் மக்காச்சோளமும்; 20 ஆயிரம் ஹெக்டேரில் பாசிப் பயறும்; மீதமுள்ள நிலங்களில் கம்பு, வெள்ளைச்சோளம், சின்ன வெங்காயம், மிளகாய், சூரியகாந்தி, பருத்தி, எள், குதிரைவாலி, சிவப்புச் சோளம், சீனி அவரை, கொத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு மானவாரிப் பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், இவையனைத்தும் ஜனவரி மாத மழையில் நாசமாகிவிட்டன.

இந்தப் பயிர்களில் சின்ன வெங்காயம், உளுந்து, பாசி ஆகியவை மார்கழி மாதம் 10-ம் தேதியையொட்டி அறுவடைக்குத் தயாராக இருந்தன. ஆனால், விடாது பெய்த மழை காரணமாக உளுந்து, பாசி பயிர்களில் முதிர்ந்த காய்களின் நெத்துகள் வழியே ஈரப்பதம் ஏற்பட்டதால் முளைத்துவிட்டன. பொன் நிறத்தில் காணப்பட வேண்டிய வெள்ளைச்சோளம் கருமை நிறத்துக்கு மாறிவிட்டது. சின்ன வெங்காயம், ஈரப்பதம் காரணமாக நிலத்திலேயே அழுகி துர்நாற்றம் வீசியது. கொத்தமல்லிச் செடிகள் அதிக ஈரப்பதத்தால் குறைந்த இலைகளுடன் அழுகிப் போயின. மிளகாய் செடிகள் முளைக்காமல் போனதாகத் தெரிவிக்கிறார்கள் அம்மாவட்ட விவசாயிகள்.

தென்காசி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் வரை விவசாயப் பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து மற்றும் பாசிப்பயறுச் செடிகள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தொடர் மழையால் நனைந்து முளைத்துவிட்டதாகக் குமுறுகிறார்கள் விவசாயிகள்.

ஒரு ஏக்கரில் நெல் பயிரிடுவதற்குத் தோரயமாக 35,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறும் விவசாயிகள், இந்தத் தொகைக்குத்தான் பயிர்க் காப்பீடும் செய்திருக்கிறார்கள். மானாவாரிப் பயிர்களை எடுத்துக் கொண்டால், ஏக்கருக்குக் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்யாமல் வெள்ளாமை பார்க்க முடியாது. ஒரு ஏக்கரில் 4 முதல் 5 டன் வரை உளுந்து விளைந்தால், தமக்கு 28,000 முதல் 35,000 ரூபாய் வருமானம் கிட்டும் என்றும், முதலீடுபோக குறைந்தபட்சம் 15,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை இலாபம் கிட்டியிருக்கும் எனக் கூறுகிறார்கள், தென் மாவட்ட விவசாயிகள்.

படிக்க :
♦ கஜா புயல் தாக்குதலிலிருந்து மீளாமல் தவிக்கும் டெல்டா மக்கள் !

♦ கஜா புயல் : மாந்தோப்பு விவசாயியின் கண்ணீர்

விவசாயிகள் கூறும் இந்தக் கணக்குப்படிப் பார்த்தால், ஜனவரி மாத கனமழையால் நெல் விவசாயிகளும், தோட்டப் பயிர்களைப் பயிரிட்ட விவசாயம் அடைந்திருக்கக்கூடிய நட்டம் இரண்டாயிரம் கோடி ரூபாயைத் தொடக்கூடும். நிவர், புரெவி புயல்களால் ஏற்பட்ட அழிவையும் இதோடு சேர்த்தால், இந்த நட்டக் கணக்கு மூவாயிரம் கோடியையும் தாண்டக்கூடும்.

கந்துவட்டிக்குக் கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் குறு, சிறு, நடுத்தர விவசாயிகளால் இந்த நட்டத்தை எப்படித் தாங்க முடியும்? விதை நெல்லுக்குக்கூடப் பயன்படாது என்றபடி சம்பா சாகுபடி அழிந்து நிற்கும் நிலையில், எதிர்வரும் நாட்களில் சோத்துக்கு என்ன வழி? தண்ணீரில் அழுகிப் போன பயிர்கள் வைக்கோலுக்குக்கூடப் பயன்படாது என்பதால், மாட்டுத் தீவனத்திற்கு என்ன செய்வது? அடுத்த பட்டத்திற்கு யாரிடம் கடன் கேட்பது எனக் கலங்கி நிற்கிறார்கள் விவசாயிகள். நிலவுடமையாளர்களின் நிலையே இதுதான் என்றால், கூலி விவசாயத் தொழிலாளர்களின் உடனடி எதிர்காலத்தை நினைத்துப் பார்ப்பதே அச்சமூட்டக்கூடியதாக உள்ளது.

எடப்பாடி அரசின் மெத்தனம், அலட்சியம்

14 மாவட்ட விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையை நாசப்படுத்திவிட்ட இத்துயரத்தைப் பேரிடராக அறிவித்திருக்க வேண்டும். ஆனால், மைய அரசோ இதுவரை மதிப்பீட்டுக் குழுவைக்கூட அனுப்பி வைக்கவில்லை. மதிப்பீட்டுக் குழு வந்தாலும், அதனின் கணக்கீடும் பரிந்துரையும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகத்தான் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. பாதிப்பு குறித்த கணக்கீடைத் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கும் தமிழக அரசோ, இதுவரை இடைக்கால நிவாரணம் எதனையும் அறிவிக்கவில்லை.

நிவர், புரெவி புயல்களாலும் மற்றும் ஜனவரி மாத மழையாலும் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 ரூபாய் நிவராணமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரி வருகிறார்கள்.

“எதிர்பார்த்திருந்தபடி நெல் அறுவடையாகியிருந்தால், நெல்லை விற்கும் காசோடு, வைக்கோலை விற்பதன் மூலமும் ஒரு தொகை கிடைக்கும். இப்பப் பயிரெல்லாம் அழுகிட்டதால வைக்கோலும் போச்சு. அதனால், எங்களடோ உழைப்பு, இலாபம் அனைத்தையும் கணக்கில் எடுத்து முழுமையான நிவாரணம் வழங்கணும்” என்கிறார், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி வீரசேனன். எனவே, விவசாயிகள் கோரும் நிவாரணம் முப்பதாயிரம் என்பது மூலதனச் செலவுக்குக் குறைவானது மட்டுமல்ல, அவர்களின் உழைப்பின் உற்பத்தி மதிப்புக்கும் குறைவானதுதான்.

ஆனால், அ.தி,மு.க. அரசோ, விவசாயிகளின் கோரிக்கையை அடியோடு புறக்கணித்துவிட்டு, நிவர், புரெவிப் பயுல்களால் பாதிப்படைந்த ஐந்து இலட்சம் விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் அளவிற்கு உள்ளீட்டுப் பொருட்களுக்கான மானியத்தை அளித்துவிட்டு, “இம்மானியத்தால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000; நெல் அல்லாத நன்செய் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.10,000; மானாவாரிப் பயிர்களுக்கு ரூ.25,000 வரை நிவாரணமாகக்  கிடைக்கும் என்றும் இம்மானியம் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் மதிப்பைவிட அதிகமென்றும்” தம்பட்டம் அடித்துவருகிறது.

இந்த உள்ளீட்டு மானியம் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் வழிகாட்டும் மதிப்பீட்டைவிட அதிகம் என்பதை மறுப்பதற்கில்லைதான். அதேசமயத்தில், இந்த மானியம் தமிழக விவசாயிகள் கோரிவரும் நட்ட ஈட்டிற்கு அருகில்கூட வரவில்லை என்பதையும் மறுக்க முடியாது. தமிழக அரசு அறிவித்திருக்கும் உள்ளீட்டு மானியத்தின்படி நெல்விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்குக் கிடைக்கும் நிவாரணம் வெறும் ரூ.8,000/-தான். மீதமுள்ள 22,000 ரூபாய் நட்டத்தை விவசாயிகள்தான் சுமக்க வேண்டும் எனக் கைக்கழுவி விட்டிருக்கிறது எடப்பாடி அரசு.

இந்தப் பஞ்சு மிட்டாய் மானியமும் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தரப்பட்டிருக்கிறதா என்றால், அதுவும் கிடையாது. “இந்த இரண்டு புயல்களால் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 6,000 விவசாயிகள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகக் கணக்கு எடுக்கப்பட்டிருப்பதாக” கூறுகிறார், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலர் விமல்நாதன் (ஜூ.வி, 20.01.2021).

இன்னொருபுறத்திலோ, தமிழக அரசு, மைய அரசிடம் நிவர் புயல் நிவாரணமாகக் கோரியிருந்த 3,758 கோடி ரூபாயில் இதுவரை ஒரு சல்லிக்காசுக்கூடத் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அ.தி.மு.க. அடிமை அரசும் அதை வலியுறுத்திப் போராடியதாகத் தெரியவில்லை. சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு எத்தனை சீட் ஒதுக்குவது, இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அதிகாரச் சண்டை, சசிகலா விடுதலை, அ.தி.மு.க., அ.ம.மு.க. இணைப்பு என்ற பஞ்சாயத்துக்கள்தான் அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நடந்து வருகிறதேயொழிய, இரண்டு ஆளுங்கட்சிகளும் தமிழக விவசாயிகளின் வேதனையைத் துடைப்பதை ஒரு பொருட்டாகக் கருதவேயில்லை.

மோடி மற்றும் எடப்பாடி கும்பலின் இந்த அலட்சியமும் புறக்கணிப்பும் தனது முதல் பலியை டெல்டாவில் வாங்கிவிட்டது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்ற விவசாயி, மழையால் தனது பயிர்கள் நாசமானதால் வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல்போகுமே என்ற மன உளைச்சலின் காரணமாக ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். தமிழக விவசாயிகள் அடைந்திருக்கும் வேதனை எத்துனை பாரதூரமானது என்பதைத்தான் ரமேஷ் பாபு-வின் தற்கொலை எடுத்துக் காட்டுகிறது. இந்த அகாலச் சாவுகள் ரமேஷ் பாபுவுடன் நின்றுவிடுமா அல்லது தொடர்கதையாக நீளுமா என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

தமிழக விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமாயின், புயல் மற்றும் மழை நிவாரணத் தொகையை விவசாயிகள் கோருகிறபடி ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாயாக அதிகரித்துக் கொடுத்தால் மட்டும்போதாது. அவர்கள் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் நிதி நிறுவனங்களிடமும், கந்து வட்டிக் கும்பலிடமும் வாங்கிய கடன்களை ரத்து செய்வதாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.

படிக்க :
♦ ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !

♦ நெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு !

புயல் மற்றும் மழை பாதித்த பகுதிகள் எங்கும் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தைத் தீவிரமாகவும் விரிவாகவும் நடைமுறைப்படுத்துவதோடு, அதற்கான கூலியையும் அதிகரித்துக் கொடுக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு, குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்காவது அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் ரேஷனில் இலவசமாக வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். எதிர்வரும் குறுவை, சம்பா சாகுபாடிக்குத் தேவையான விவசாய வங்கிக் கடன்கள், விவசாய இடுபொருட்களுக்கான மானியங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கான இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுவதன் வழியாகவே, மூன்று வேளாண் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்துவரும் போராட்டத்திற்குத் தமிழக விவசாயிகளின் பங்களிப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.


அறிவு

ஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்

ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட மராட்டிய மாநிலம் சந்திரப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் உரிமை செயற்பாட்டாளரான காஞ்சன் நானாவரெ, இன்னும் விசாரணையே துவங்காத நிலையில், சிறையிலேயே மரணமடைந்துள்ளார்.

சமூகச் செயற்பாட்டாளரான காஞ்சன் நானாவரெ-யை மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 2014-ம் ஆண்டில் கைது செய்தது போலீசு. பிறவியிலேயே இதய நோயோடு பிறந்த காஞ்சன் நானாவரெ கடந்த ஆறு ஆண்டுகளாக சிறையில் நீதிமன்றக் காவலில் விசாரணைக் கைதியாக இருந்து வந்துள்ளார்.

படிக்க :
♦ “ஸ்வாட்டிங்” : சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவம்!

♦ சமூக செயற்பாட்டாளர்கள் கைது : ஆர்.எஸ்.எஸ்-ன் சதிப் பின்னணி என்ன ?

செயற்பாட்டாளர் நானாவரெ மற்றும் அவரது கணவர் அருண் பெல்கே ஆகிய இருவரையும் ஆறாண்டுகளுக்கு முன்னர் ஊபா சட்டத்தில் கைது செய்தது போலீசு. அவர்கள் இருவரும் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு இருந்ததாகக் கூறி அவர்கள் இருவரையும் மாவோயிஸ்ட்டுகளின் பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பல்வேறு வழக்குகளைத் தொடுத்தது போலீசு.  செயற்பாட்டாளர்களை ஒடுக்க அவர்கள் முசுலீமாக இல்லாத பட்சத்தில் அவர்கள் மீது குற்றம்சுமத்த போலீசு வைத்திருக்கும் ஆயுதம்  மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு என்பதுதான்.

இந்த வகையில் நானாவரெ மீது மொத்தம் 9 வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளில் 6 வழக்குகளில் ஆதாரமில்லாத காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார். இன்னும் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் மீது கட்சிரோலி தாக்குதல், புனே மற்றும் கொண்டியா வழக்குகள் விசாரணையில் உள்ளன.

கடந்த அறு ஆண்டுகளில் பல முறை பிணை கேட்டு விண்ணப்பித்துள்ளார் காஞ்சன் நானாவரே. ஒவ்வொரு முறையும் பிணை மறுக்கப்பட்டுள்ளது என்கிறார் அவரது வழக்கறிஞர் பார்த் ஷா. கடந்த அக்டோபர் மாதத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மோசமாகி வரும் நானாவரெவின் உடல்நிலையை முன் வைத்ததோடு கூடுதலாக அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவர்களின் பரிந்துரையையும் முன் வைத்து பிணை கேட்டுள்ளனர். ஆனால் அந்த முறையீடு இன்னும் முழுமையாக விசாரித்து முடிக்கப்படவில்லை.

மும்பை உயர்நீதிமன்றம் அவரது பிணை கோரிக்கை மனுவை கேட்பிற்கு எடுத்துக் கொண்ட போது, இருதய மாற்று அறுவை சிகிச்சை தான் அவர் உயிர் வாழ்வதற்கு ஒரே தீர்வு என்று வலியுறுத்தப்பட்டது. நீதிமன்றமும் அவரது உடல் நிலையை கண்காணிக்க ஒரு குழுவை நியமித்தது. ஆனால் அந்தக் குழு இதில் கவனத்தை செலுத்த பல மாதங்கள் எடுத்துக் கொண்டது. அச்சமயத்தில்தான் காஞ்சன் நானாவரே மரணமடைந்துள்ளார்.

ஜனவரி 24-ம் தேதிதான் அருண் பெல்கேயின் குடும்பத்தாருக்கு காஞ்சன் நானாவரேயின் உடல்நிலை மோசமாகி வருவது குறித்து சிறைத்துறை எழுதிய கடிதம் வந்து சேர்ந்தது. அதே நாளின் பிற்பகுதியில் அவரது குடும்பத்தினருக்கு வந்த தொலைபேசி அழைப்பு காஞ்சன் மரணித்த செய்தியைக் கூறியிருக்கிறது.

காஞ்சன் நானாவரெ கடந்த 2004- ம் ஆண்டு முதல் மாணவர்கள் உரிமைச் செயற்பாட்டாளராக செயல்பட்டு வருகிறார். அவருடன் அன்று முதல் பணியாற்றி வந்த அம்ருதா சொனூலே தாங்கள் இருவரும், பிற நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் இணைந்து விவசாயிகள், ஆதிவாசிகள் மற்றும் தலித் சமூகத்தினரின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துப் போராடியதை நினைவு கூர்கிறார்.

“தேசபக்தி யுவா மன்ச்” எனும் அமைப்பில் இணைந்து இப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பின்னாட்களில் “தேசபக்தி யுவா மன்ச்” அமைப்பு மாவோயிஸ்ட்களின் முன்னணி அமைப்பு என குற்றம் சாட்டப்பட்டது. நானாவரெயும் அவரது கணவர் அருண் பெல்கெயும் 2008-ம் ஆண்டில் முதன்முறையாக கைது செய்யப்பட்டனர். சுமார் 7 மாதங்கள் வரை ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட இவர்களிருவரும் அதன் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

சிறையில் காஞ்சன் நானாவரெயின் உடல்நிலை பாதிப்படைந்து அவர் சசூன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை ஒட்டி, அவரைச் சந்திக்க அம்ருத் சொனுலே மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். காஞ்சனை சந்திக்க  அவரை அனுமதிக்கவில்லை. மாறாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவிருப்பது குறித்து மட்டும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அடிக்கடி தலைவலி வந்தது குறித்து அவர் குறிப்பிட்டதாகவும், அவருக்கு இரத்த உறைவுகள் ஏற்பட்டது குறித்தும் தெரிவித்துள்ளனர். அருண் பெல்கேவுக்கும் காஞ்சன் நானாவரேயை  சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் உடனடியாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை. அருண் மரணப்படுக்கையிலிருக்கும் தனது துணைவர் காஞ்சனை சந்திக்கும் முன்னரே காஞ்சன் மரணித்துவிட்டார்.

இதுவரை போடப்பட்ட எந்த வழக்குகளிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை.

படிக்க :
♦ எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!

♦ மராட்டியம் : மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சிறார்களைக் கொன்ற போலீசு பெற்றோர்களை மிரட்டுகிறது !

சரியாகச் சொல்வதானால், ஒரு நிரபராதியை சிறையில் அடைத்து அவருக்கான முறையான மருத்துவத்தை மறுத்து அவருக்கு மரண தண்டனையை வழங்கியிருக்கிறது போலீசு மற்றும் நீதிமன்றக் கூட்டணி. அவர் செய்த ஒரே “குற்றம்” மாணவரகள், பழங்குடியின, தலித் மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்தது மட்டுமதான். அதற்குப் பரிசுதான் ஊபா மற்றும் மருத்துவம் மறுக்கப்பட்டதன் விளைவாக நடத்தப்பட்ட படுகொலை.

சமூகச் செயற்பாட்டாளர்களான வரவர ராவ், ஆனந்த் தெல்தும்டே, ஸ்டான் சுவாமி,  சுதா பரத்வாஜ் உள்ளிட்டவர்களை பீமா கொரேகான் வழக்கில் ஜோடித்து இணைத்து அவர்களை ஊபா சட்டத்தில் கைது செய்து தற்போது பிணை மறுத்து வருகிறது. சிறைக்குள் விசாரணைக் கைதியாக பல்லாண்டுகள் அடைத்து வைத்து அவர்களது செயல்பாடுகளை முடக்குவதோடு, மன உளைச்சலாலும் உடல் நலிவாலும் அவர்கள் மரணிக்க வேண்டும் என்பதுதான் ஆளும் வர்க்கத்தின் நோக்கம் !


கர்ணன்

செய்தி ஆதாரம் : The Wire

 

 

 

வேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இரண்டு மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. பல விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இந்நிலையில் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டெல்லியின் வீதிகளில் பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கின்றன விவசாய சங்கங்கள்.

இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜனவரி 23 அன்று அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சின்னமலை அருகே ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைப்பெற்றது. அதில் அகில இந்திய விவசாயிகளின் போராட்ட  ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள், ஜனநாயக சக்திகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தலைமையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்துக்கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
9176801656.

கொரோனாவிலும் குறையாத இலாபம் ! அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு !

ணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் உருக்குலைந்து போயிருந்த, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இந்த கொரோனா பொதுமுடக்ககாலத்தில் கிட்டதட்ட அழிவின் விழும்பு நிலைக்கே சென்றுவிட்டனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் பெரும்பான்மையானோர்க்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடியவை இந்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தான்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து அவர்களுக்கான ஊக்கத்தொகையாக ரூ. 3 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கீட்டின் பலன் 32 சதவீதம் பேருக்கு மட்டும்தான் சென்றடைந்திருக்கிறது என்பதுதான் இத்திட்டத்தின் இலட்சணம். இதனை லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

கொரோனா ஊரடங்கின் காரணமாக பல தொழிலாளர்கள் வேலையிழந்தனர். தனியார் நிறுவனங்களில் வேலை செய்த தொழிலாளர்கள், சாதாரண ஏழை மக்கள் பொதுமுடக்கத்தினால் வேலை இழந்துள்ளனர். வேலை இழப்புக்கு உள்ளான தொழிலாளர்களுக்கு தனியார் நிறுவனங்கள் எந்த இழப்பீடும் தரவில்லை. அரசின் நிவாரணமும் கிடைக்கவில்லை.

படிக்க :
♦ ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை !
♦ ஆத்ம நிர்பர் அல்ல ! இது கார்ப்பரேட் நிர்பர்

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)’ வெளியிட்ட அறிக்கையின்படி, 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் வேலை நேரம் 5.6சதவீதம், இரண்டாவது காலாண்டில் 17.3 சதவீதம்,மூன்றாவதில் 12.1 சதவீதம் குறைந்துள்ளது என கூறுகிறது. மூன்றையும் சேர்த்து சராசரியாக 11.7 சதவீத வேலை நேரத்தை தொழிலாளர்கள் இழந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் முறையே 3.1சதவீத, 27.3 சதவீத ,18.2 சதவீத வேலைநேரத்தை தொழிலாளர்கள் இழந்துள்ளனர். இழந்துள்ள வேலை நேரத்தை ஊதியமாக கணக்கிட்டால் தொழிலாளர்கள் இழந்துள்ளதன் தீவிரம் புரியும். இந்தியாவில் 16.2 சதவீத வருமானத்தை தொழிலாளர்கள் இழந்துள்ளனர்.

இப்படி ஒருபுறம் தொழிலாளர்கள் வருமானத்தை இழந்திருக்கும் நிலையில், மறுபுறத்தில் இந்தியாவின் பங்குச்சந்தை சமீப காலமாக தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. சென்செக்ஸ் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 50,000 புள்ளிகளை எட்டி புதிய உச்சத்தையடைகிறது.

சென்செக்ஸ் புள்ளிகளை பார்க்கும்போது, பிரச்சினைகள் முடிந்துவிட்டதாக ஒருவர் நினைக்கலாம். உண்மையில் அவை இப்போதுதான் தொடங்குகின்றனஎன்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.

கொரோனாவிலும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய முதலாளிகள்

இத்தகைய ஏற்றத்தாழ்வு பொது முடக்கம் தளர்ந்து உற்பத்தி தொடங்கிய இன்றைய நிலைமைகளைவிட, பொதுமுடக்க காலத்தின் போது அதிகமாகக் காணப்பட்டது. உண்மையில் பொதுமுடக்கம் என்பது முதலாளிகளுக்கு பணம் பறிக்கும் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்பதையே அவர்களே வெளியிட்டுருக்கும் பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வெளியிட்ட அறிக்கையில் இந்த நிதியாண்டின் ஏப்ரல் ஜூன் காலாண்டில் பெரும் முதலாளிகளின் நிறுவனங்கள் ரூ.1.33 லட்சம் கோடிகளை லாபமாக ஈட்டியுள்ளன என தெரிவிக்கிறது.

மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 1897 நிறுவனங்களில் கடந்த 2020 ஜூன் மாதத்தோடு முடிவடைந்த காலாண்டின் முடிவில் 27 சதவீத வருமான வீழ்ச்சியையும், செப்டம்பர் மாதத்தோடு முடிந்த காலாண்டில் 6 சதவீத வீழ்ச்சியையும் சந்தித்துள்ளதாக சிஎம்ஐஇ தெரிவித்தது. வருமானம் வீழ்ச்சி அடைந்தாலும் பெரு முதலாளிகளது இலாபம் குறையவில்லை. இது எப்படி சாத்தியம் ?

பொதுமுடக்கக் காலத்தில் தனியார் நிறுவனங்கள் தங்களின் செலவினங்களை பெருமளவு வெட்டிச் சுருக்கியதே அந்த லாபத்திற்கான காரணம். குறிப்பாக, பெருவாரியான தொழிலாளர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பியது; பெருமளவு பணிகளை குறைந்த கூலியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் நிறைவேற்றியது; மூலப்பொருட்கள் பயன்பாடு மற்றும் இருப்பு வைத்துக் கொள்வதில் உள்ள செலவினங்களை குறைத்துக் கொண்டது ஆகியவையே இதற்கு முக்கியக் காரணம் ஆகும். இவையே தனியார் நிறுவனங்களின் இலாப பெருக்கத்திற்கு காரணிகளாக உள்ளன.

இப்படித்தான் தொழிலாளர்களின் வாழ்நிலை கடும் பாதிப்பில் இருக்கும்போது மிகப்பெரிய முதலாளிகளின் சொத்து அதிகரிக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள 1சதவீத பணக்காரர்கள் பொருளாதார நெருக்கடி, பொதுமுடக்கம், உள்நாட்டு உற்பத்தி சரிவு போன்றவற்றால் பாதிக்கப்படவேயில்லை.

சுவிஸ் வங்கி அறிக்கையின்படி கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டமான, 2020 ஏப்ரல் ஜுன் இடைப்பட்ட காலத்தில் உலக பணக்காரர்களின் சொத்து 27.5சதவீதம், அதாவது 10.2 டிரில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. உலக பணக்காரர்களின் எண்ணிக்கை 2189 ஆக உயர்ந்திருக்கிறது.

படிக்க :
♦ லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !
♦ உச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை !

யுபிஎஸ் (UBS), பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (Price Waterhouse Cooper’s -PWC) அறிக்கையில் இந்திய பணக்காரர்களின் நிகர வருமானம் ஏப்ரல் ஜுலையில் மட்டும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 423 பில்லியன் டாலர். நாடு முழுவதும் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு பொதுமுடக்கம் கடும் அமலில் இருந்த காலகட்டத்தில் பணக்காரர்களின் வருமானம் இவ்வளவு உயர்ந்துள்ளது.

பெருமுதலாளிகளும் கார்ப்பரேட்டுகளும்தான் வேலை வாய்ப்பை உருவாக்குபவர்கள். இவர்களுக்கு சலுகைகள் வழங்குவதின் மூலம் ஏழை மக்களுக்கும் அந்த பயன் சென்றடையும் என்கிறார்கள் முதலாளித்துவவாதிகளும் ஆட்சியாளர்களும். இதனை “டிரிக்கிள் டவுன் கோட்பாடு” (Trickle Down Theory) என்று குறிப்பிடுகின்றனர்.

அதாவது, ஓட்சை பசியிலிருக்கும் குருவிகளுக்குக் கொடுப்பதற்கு பதிலாக, வயிறு கொழுத்த குதிரைக்கு தேவைக்கும் அதிகமான உணவாகக் கொடுத்தால், குதிரை போடும் சாணத்தில் இருக்கும் செரிக்காத ஓட்ஸை குருவிகளும் கொத்தித் தின்று பசியாறலாம் என்பதுதான் இந்தக் கோட்பாட்டின் அடிநாதம். இது ஒரு அப்பட்டமான பொய் என்பது இன்று இந்தக் கோட்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வின் மூலம் கண்கூடாகத் தெரிகிறது.

ஆக்ஸ்பாம்’ அறிக்கையின்படி இந்தியாவின் 1சதவீத பணக்காரர்கள் நாட்டின் 43 சதவீத சொத்துக்களுக்கு சொந்தக்காரர்கள். அடி நிலையிலுள்ள 50சதவீத மக்கள் மொத்தமாகச் சேர்த்தே வெறுமனே 2.8சதவீத சொத்துக்களை மட்டுமே வைத்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய பாரபட்சமாகும்.

இந்தப் பாரிய ஏற்றத் தாழ்வின் அடித்தளம் இந்த முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக். “அரசியல், பொருளாதாரம், சுகாதாரம் போன்ற நெருக்கடிகள் எதுவானாலும் அவை பணக்காரர்களுக்கு வாய்ப்புகளை தந்து பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியுள்ளது” எனக் கூறும் பிரபாத் பட்நாயக், “மனிதகுலம் சந்திக்கும் துன்ப, துயரங்களை பயன்படுத்தி மூலதனக் குவிப்பை செய்வது முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத குணாம்சமாக இருக்கிறது” என்கிறார்.

கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி இந்தியாவிலும் ஆத்மநிர்பார் எனும் பெயரில் நாட்டுச் சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது மோடி அரசு. கொரோனா ஊரடங்கின் மூலம் பல்வேறு கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

அதில் ஒன்றுதான் தற்போது விவசாயிகள் எதிர்த்துப் போராடிவரும் வேளாண்சட்ட மசோதாக்கள். கார்ப்பரேட்டுகளின் பிடியில் உணவு தானியங்கள் சென்றால், இந்தியா பஞ்சம் மற்றும் பசிப் பட்டியலில் முன்னேறி சோமாலியாவை விட மோசமான நிலைமையை சந்திக்கும்.

பிரச்சினைகளின் அடிக்கொல்லியான முதலாளித்துவக் கட்டமைப்பின் இருப்பை கேள்விக்குள்ளாக்குவதுதான் பிரச்சினைகளுக்கு நாம் தீர்க்கமாகக் காணக்கூடிய தீர்வாக இருக்க முடியும்.

மூர்த்தி

லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !

4

லகின் முதல் சோசலிசக் குடியரசை அமைத்த பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் மறைந்து 97 ஆண்டுகள் கடந்து விட்டன. ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிந்ததோடு முதலாளித்துவ சுரண்டலையும் துடைத்தெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியை அமைத்தவர் தோழர் லெனின்.

மார்க்சிய சித்தாந்தத்தை ரசிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு பருண்மையாகப் பிரயோகித்து புரட்சியை சாதித்தது மட்டுமல்லாது, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை இயங்கியல்பூர்வமாக அன்றைய நிலைமைகளையொட்டி வரையறுத்தவர் தோழர் லெனின்.

அவரது காலத்தில் ரசிய சமூக ஜனநாயகக் கட்சிகள் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கக் கட்சி குறித்தப் பார்வையை விமர்சனப் பூர்வமாக அணுகி புரட்சியை சாதிப்பதற்கு ஏற்ற ஒரு கட்சியையும் அதற்கான கோட்பாடுகளையும் வகுத்தார்.

படிக்க :
♦ அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !
♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

லெனினுக்கு முன்னரே பிளக்கனோவ் உள்ளிட்ட பல்வேறு மார்க்சிய அறிஞர்கள் இருந்தாலும் லெனினால் மட்டும் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது ? எது அவரை புரட்சியை சாதித்த மாபெரும் தலைவராக உயர்த்தியது ? அவரது சமகாலத்திய பிற மார்க்சிய அறிஞர்களுக்கும் லெனினுக்கும் என்ன வித்தியாசம் ? இக்கேள்விகளுக்கு தோழர் லெனினின் வாழ்க்கைத் துணைவர் தோழர் நதேழ்தா க்ரூப்ஸ்கையா, லெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார் ?” என்ற நூலில் பதிலளிக்கிறார்

கற்றலில் இருந்துதான் அனைத்துமே துவங்குகிறது. ஒரு புரட்சியை சாதிக்கவல்லவராக வளர்ந்த லெனின், முதலில் மார்க்சியத்தை எவ்வாறு கற்றறிந்தார் என்பதைப் புரிந்து கொண்டால்தானே அவர் புரட்சியை எவ்வாறு சாதித்தார் எனக் கற்றுக் கொள்ள முடியும். லெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார் என்பதை விளக்குகிறார் குரூப்ஸ்கையா.

விளாதிமீர் இல்யீச் (லெனின்) இவற்றைத் (மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்களை) தமது நூல்களில் பயன்படுத்தினார், இவற்றைத் திரும்பத் திரும்பப் படித்தார், இவற்றில் தமது குறிப்புகளை எழுதினார். அவர் மார்க்ஸை நன்றாகக் கற்றறிந்து மட்டும் இருக்கவில்லை; அவரது சித்தாந்தத்தை நன்றாகப் பகுத்தாராய்ந்தும் இருந்தார். என்கிறார் குரூப்ஸ்கையா.

பொதுவுடைமைக் கல்வியை எப்படிக் கற்க வேண்டும் என்று இளைஞர்கள் மத்தியில் தோழர் லெனின் உரையாற்றியதையும் அந்நூலில் பின்வருமாறு எடுத்தாண்டுள்ளார்.

“ “1920-ம் ஆண்டு பொதுஉடைமை இளைஞர் சங்கத்தின் மூன்றாம் அகில ருஷ்ய மாநாட்டில் உரையாற்றும் போது, “மனிதகுலத்தின் அறிவு அனைத்தையும் பெற வேண்டும். இவ்வாறு பெறும்போது பொதுஉடைமை முறையை ஏதோ குருட்டுப் பாடமெனக் கற்கக் கூடாது; மாறாக அது நீங்களாகவே யோசித்த ஒன்றாக இருக்க வேண்டும்; நிகழ்காலக் கல்வியின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது தவிர்க்க முடியாதபடி பெறப்பட்ட முடிவுகளை உட்கொண்ட ஒன்றாக இருக்க வேண்டும். இத்தகைய திறமையைப் பெறுவது அவசியம்” என்று விளாதிமீர் இல்யீச் கூறினார். ”

ஒரு விசயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அதனை அதன் அனைத்துக் கோணங்களில் இருந்தும் பார்த்தால்தான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

அதே போல, மார்க்சிய சித்தாந்தத்தைப் படிக்கும் போதும் அதனை அனைத்துக் கோணங்களில் இருந்தும் படித்து தர்க்கரீதியில் அதனைப் புரிந்து கொள்ளவேண்டும் என்கிறார் லெனின்.

மார்க்ஸ் எழுதியவற்றை தோழர் லெனின் படித்த முறை குறித்து குரூப்ஸ்கையா விளக்கும்போது, மார்க்ஸ் எழுதியவற்றை மட்டும் லெனின் படிக்கவில்லை. முதலாளித்துவ முகாமிலுள்ள அவரது எதிரிகள் மார்க்ஸைப் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் எழுதியவற்றையும் படித்தார். அவர்களுடன் ஏற்பட்ட தர்க்கத்தில் மார்க்சியத்தின் அடிப்படைகளை விளக்குகிறார். என்கிறார் தோழர் குரூப்ஸ்கையா.

மேலும், “ மாறுபட்ட கருத்துக்களின் விளைவாகத் தோன்றுவதே உண்மை” என்று ஒரு பிரெஞ்சுப் பழமொழி கூறுகிறது. இல்யீச் (லெனின்) இதை விருப்பத்துடன் மேற்கோள் காட்டினார். தொழிலாளர் இயக்கத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றிய பல வர்க்கத்தினரின் கருத்துக்களையும் வெளிக்கொணர்ந்து அவற்றை எப்பொழுதும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப்பார்த்து ஆராய்ந்தார். லெனின் அதைத் தமக்கே உரித்தான பாணியில் செய்தார்.என்கிறார்.

பல்வேறு வர்க்கங்களின் கருத்துக்கள் என்பவை, வெவ்வேறு வர்க்கங்களின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகள் மற்றும் பிற இயக்கங்கள் மார்க்சிய சித்தாந்தத்தின் மீதும், கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் வைக்கும் விமர்சனங்களாக வெளிப்படுகின்றன.

தங்கள் மீதான விமர்சனங்களையும் கம்யூனிசத்தின் மீதான விமர்சனங்களையும் மார்க்சும் எங்கெல்சும் எப்படி எதிர்கொண்டனரோ, அதற்குச் சற்றும் குறையாமல் தம் மீதான விமர்சனங்களையும், மார்க்சிய சித்தாந்தத்தின் மீதான விமர்சனங்களையும் காத்திரமாக எதிர்கொண்டு கூர்மையாக பதிலளித்தார் தோழர் லெனின்.

தோழர் லெனின் விமர்சனங்களை எதிர்கொண்டது பற்றி குரூப்ஸ்கையா கூறுகையில்,

“ “விமர்சகர்களின்” கூற்றுகளை அவர் கவனமாகப் படிப்பார். மிகவும் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுவார். பிறகு அவற்றை மார்க்ஸின் கருத்துக்களோடு ஒப்பிடுவார். பலதரப்பட்ட விமரிசனங்களை விரிவாக ஆராய்ந்த அவர் அவற்றிற்கு எதிராக முக்கியமான, உடனடியாகத் தீர்க்கவேண்டிய கேள்விகளைத் தொடுத்து அவர்களது வர்க்கத் தன்மையைக் காட்ட அவர் முயன்றார். குறிப்பிட்ட சில பிரச்சினைகளை லெனின் அடிக்கடி வேண்டுமென்றே வலியுறுத்துவார். தொனி எப்படியிருந்தாலும், குறித்த பொருளினின்று நழுவாமல் இருக்கும் ஒருவர் கடுமையாகவும் முரடாகவும் இருக்கலாம் என்பதே அவர் கருத்து.

பி.. ஸோர்கேயின் கடிதங் களுக்கு முகவுரை எழுதும்போது அவர் மேரிங்கை மேற் கோள் காட்டிக் கூறுகிறார்: “மார்க்சும் எங்கெல்சும் ‘நல்ல தொனியுடன்’ எப்பொழுதும் இருக்கவில்லை என்று மேரிங்க் கூறுவது சரிதான். தாங்கள் பிறரைத் தாக்கும்போது, தொனி பற்றி வெகுவாகச் சிந்தனை செய்யாத அவர்கள் தங்களைப் பிறர் தாக்கும்போது விம்மியழவும் இல்லை.” வெடுவெடுப்பான நடை லெனினது இயல்பாகும். அவர் அதை மார்க்ஸிடமிருந்து கற்றார்.

தாமும் எங்கெல்சும் ‘சமூக ஜனநாயகவாதிகளால்’ ‘படுமோசமான’ முறையில் நடத்தப்பட்டு வந்ததை விடாது எதிர்த்ததாகவும் இதுபற்றிய தங்கள் கருத்துக்களை அடிக்கடி கடுமையாக வெளியிட்டதாகவும் மார்க்ஸ் கூறுகிறார்” என்று லெனின் எழுதினார். கடுமையான தொனியைக் கண்டு லெனின் பயப்படவில்லை. ஆனால் விமர்சனம் மையப்பொருளிலிருந்து நழுவாமல் இருக்க வேண்டும் என அவர் கருதினார் என்று நினைவு கூர்கிறார் குரூப்ஸ்கையா.

படிக்க :
♦ மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !
♦ ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்த இளம் எங்கெல்ஸ் || தோழர் லெனின்

புரட்சி குறித்த மார்க்ஸ் எங்கெல்ஸின் கருத்துக்களை அன்றைய சமூக ஜனநாயகவாதிகள் அப்படியே ரசியாவிற்குப் பொருத்த முயன்றதை வன்மையாகக் கண்டித்தார் லெனின். ரசிய நிலைமைகளையும் சர்வதேச அளவில் முதலாளித்துவம் அடைந்த மாற்றத்தையும் எதார்த்த நிலைமையில் இருந்து மார்க்சிய கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்து தீர்வை முன் வைத்தார். அதன் மூலம்தான் ரசியப் புரட்சி சாத்தியமானது.

மார்க்சியத்தின் மூல ஆசான்கள் அவர்களது காலத்திய முதலாளித்துவத்தை எந்தக் கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு முறையிலிருந்து பரிசீலித்தார்களோ, அந்தக் கண்ணோட்டத்தை அந்த ஆய்வுமுறையை மார்க்ஸ் எங்கெல்ஸின் எழுத்துக்களில் இருந்து லெனின் கற்றுக் கொண்டார்.

மார்க்ஸும் எங்கெல்ஸும் அவர்களது சமகாலத்து முதலாளித்துவம் குறித்து எழுதியதை அப்படியே பெயர்த்தெடுத்து ரசியாவில் அதனை லெனின் நடைமுறைப்படுத்தவில்லை. ஒருவேளை லெனின் அப்படியே எடுத்துப் பொருத்தியிருந்திருப்பாரெனில், வரலாறு ஒரு பிளக்கனோவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தோடு மட்டுமே லெனினையும் கடந்து சென்றிருக்கும். இன்று அவர் பாட்டாளி வர்க்க ஆசானாக அறியப்பட்டிருக்க மாட்டார்.

இன்று புரட்சியின் நாயகனாக முதலாளித்துவத்தாலேயே தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய இடத்தில் லெனின் நிற்பதற்கான காரணம், அவர் தமது நாட்டினையும், உலக முதலாளித்துவத்தையும் பரிசீலிப்பதில் சரியான சமூக அறிவியலை மார்க்சியத்தை பிரயோகித்தார். அத்தகைய சமூக அறிவியல்பூர்வமான ஆய்வுதான் “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” எனும் லெனின் எழுதிய நூல்.

முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்ததை முன்வைத்ததோடு லெனின் நின்றுவிடவில்லை. ஏகாதிபத்தியமாக வளர்ந்த முதலாளித்துவத்தின் தன்மைகளையும், அதன் பலவீனமான கண்ணியையும் கண்டறிந்தார். அதன் விளைவுதான் ரசிய சோசலிசப் புரட்சி.

ரசிய நிலைமைகளில் மார்க்சியத்தைப் பிரயோகிப்பது குறித்த லெனினின் கருத்துக்களையும் தமது நூலில் சுட்டிக்காட்டுகிறார் குரூப்ஸ்கையா. மார்க்சியத்தை ரசியாவிற்குப் பிரயோகிப்பது பற்றி லெனினின் பார்வை குறித்து அவர் எழுதுகையில்,

“ “ஸோர்கேயின் கடிதங்கள்” என்ற நூலுக்கான முகவுரையில் லெனின் கூறுகிறார் :

பிரிட்டிஷ், அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்துக்கு மார்க்சும் எங்கெல்சும் கூறிய ஆலோசனைகளை அப்படியே இலகுவாகவும் நேரடியாகவும் ருஷ்ய சூழ்நிலைகளில் உபயோகிக்கலாம் என்று எண்ணுவது, மார்க்சியத்தை அதன் ஆராய்ச்சி முறைகளை அறிந்து கொள்வதற்கோ அல்லது குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தொழிலாளர் இயக்கங்களின் திட்டமான வரலாற்று ரீதியான தனிச்சிறப்புகளை ஆராய்வதற்கோ உபயோகிப்பது அல்ல; மாறாக அறிவுஜீவிகளைப் போல ஏதோ சில்லரை குழுப் பிரச்சினைகளின் கணக்கைத் தீர்த்துக் கொள்ளுவதற்காக உபயோகிப்பதாகும்.” ”

நதேழ்தா க்ரூப்ஸ்கையா, “லெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார்” என்று குறிப்பிட்டுக் கூறுவதன் பொருள், மார்க்சிடமிருந்து மார்க்சியத்தை இம்மி பிசகாமல் எப்படி கற்றுக் கொண்டார் என்பதுதானே தவிர, மார்க்ஸின் எழுத்துக்களை எப்படி படித்துத் தெரிந்து கொண்டார் என்பது பற்றியது அல்ல.

மார்க்சின் எழுத்துக்களில் இருந்து மார்க்சியத்தை தாம் கற்றுக் கொள்வதை, “மார்க்ஸிடம் ஆலோசனை பெறுவதாக” லெனின் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டி, இக்கட்டான கொதிப்பான சூழல்களில் அவற்றுக்கான விடை காண்பதற்கு அவர் எப்படி மார்க்ஸை நாடினார் என்பது குறித்தும் இந்த நூலில் சுட்டிக் காட்டுகிறார் குரூப்ஸ்கையா.

மார்க்சின் நூல்களில் இருந்து மார்க்சியத்தைப் பயில்வது என்றால் எப்படி ? மார்க்சியத்தை சமகாலச் சூழலுக்குச் சரியாகப் பொருத்துவது என்றால் என்ன? லெனின் அதைச் செய்தார் என்று வெறுமனே சொல்லிக் கடந்து விடுவது எளிது. ஆனால் எப்படி அதைச் செய்தார் என்பதை புரட்சியை விரும்பும் ஒவ்வொரு தோழருக்கும் கற்றுத்தருவது அவசியமான மற்றும் சற்று அதிக உழைப்பைக் கோருகிற பணியுமாகும்.

அதையும் தமது நூலில் சாரமாக விளக்கியிருக்கிறார் குரூப்ஸ்கையா. மார்க்சியத்தை லெனின் கற்றுக் கொண்ட முறை பற்றிக் கூறுகையில்,

“ …. எந்த ஒரு சூழ்நிலையிலும், அதையத்த சூழ்நிலை சம்பந்தப்பட்ட மார்க்ஸின் நூல்களை எடுத்து, அவற்றைக் கவனமாகப் பகுத்தாராய்ந்து, அந்நூலில் காணப்பட்டுள்ள சூழ்நிலைமையைத் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைமையுடன் ஒத்துநோக்கி, இவ் விரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் வெளிக்கொணருவதே லெனின் கடைப்பிடித்த கற்றல்முறை. லெனின் இதை எப்படிச் செய்தார் என்பதற்கு 1905 – 07 புரட்சியில் இம் முறையை அவர் கடைப்பிடித்ததே ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.”

“ …… (1905-ம் ஆண்டு) புரட்சி தோல்வியடைந்ததையடுத்து ருஷ்யாவில் எழுந்த பிரச்சினைகளை பற்றி மார்க்ஸ் கூறியவற்றையும், இயங்கியல் மற்றும் வரலாற்றுரீதியான பொருள் முதல் வாதத்தையத்த விஷயங்களையும் அதே சமயத்தில் ஆராய்ந்த லெனின் வரலாற்றுரீதியான வளர்ச்சியைக் கற்றறிய இயங்கியல் பொருள்முதல்வாதத்தை எவ்வாறு உபயோகிப்பது என்பதை மார்க்ஸிடமிருந்து கற்றறிந்தார்.”

“……. இவ்வாறு மார்க்ஸை கற்கும் இந்த முறைதான், மார்க்சியத்தைத் திரித்துரைப்பதை எதிர்த்துப் போராடவும், அதன் புரட்சிக் கருத்துக்களை உறிஞ்சி சாரமற்றதாக்கும் முயற்சிகளைத் தடுக்கவும் லெனினுக்கு உதவியது. அக்டோபர் புரட்சிக்கு ஏற்பாடு செய்வதிலும் சோவியத் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் லெனினது “அரசும் புரட்சியும்” என்ற நூல் எத்தகைய பிரமாண்டமான பங்கு வகித்தது என்பது நமக்குத் தெரியும். அரசு பற்றிய மார்க்ஸின் புரட்சிகர போதனையை ஆழ்ந்து கற்றதின் அடிப்படையில் தோன்றியதே இந்த நூல்.”

“….. பாட்டாளி வர்க்கம் சர்வாதிகாரத்துக்கு வந்துள்ள சகாப்தத்தில் லெனின், சமூகஉடைமை கட்டுமான வேலைகளில் மார்க்சியத்தைக் கொண்டுவர முடிந்தது. ஏனென்றால் மார்க்ஸ், எகெல்ஸின் ஆராய்ச்சி உரைகளில் கூறப்பட்டுள்ளனவற்றை லெனின் அப்படியே எழுத்துக்கு எழுத்து கடைபிடிக்கவில்லை. மாறாக அவற்றின் புரட்சிசாரத்தை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்டார்என்று குறிப்பிடுகிறார் தோழர் நதேழ்தா க்ரூப்ஸ்கையா.

தாம் மார்க்சியத்தைக் கற்று நடைமுறைப்படுத்தி அதனை சாதிப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை லெனின். மார்க்சியத்தை தொழிலாளர்களுக்கு எளிமையான வகையில் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தையும் உணர்ந்திருந்தார். புரட்சியை சாதிக்கப் போகிறவர்களும், சமூக மாற்றத்தின் உந்து சக்தியாக இருப்பவர்களுமான தொழிலாளர்களுக்கு மூலதனம் முதல் பகுதியை எளிமையாக விளக்க முற்பட்டார்.

படிக்க :
♦ பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்
♦ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !

மார்க்சியப் பார்வை என்றும், மார்க்சியத்தின் சாரம் என்றும் நாம் எதைக் குறிப்பிடுகிறோம்? சித்தாந்தமாகட்டும், கட்சி அமைப்பாகட்டும், போராட்டங்களாகட்டும், புரட்சியாகட்டும் இவை அனைத்தையும் இயங்கியல் பொருள்முதல்வாத, வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்படி பார்ப்பதுவே அதன் பொருளாகும்.

லெனின் இதனை வலியுறுத்தியது பற்றிக் கூறுகையில்,

1921-ல் தொழிற்சங்கங்கள் பற்றிய விவாதத்தில், எந்தப் பொருளையும் சம்பவத்தையும் இயங்கியல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து ஆராய்வதற்கான முறைகளைப் பற்றிப் பேசம் போது லெனின் குறிப்பிட்ட ஒன்றே இதற்குச் சிறந்த உதாரணமாகும். லெனின் கூறினார்: “ஒரு பொருளை உண்மையாகவே அறிய வேண்டுமானால் அதைப் பல கோணங்களிலிருந்து அணுக வேண்டும். அதைப் பற்றிய எல்லாவற்றையும், எல்லா நேரடித் தொடர்புகளையும், எல்லா மறைமுகத் தொடர்புகளையும் ஆராய வேண்டும். இதை நாம் முற்றிலும் தீரச் செய்ய முடியாது. ஆயினும் இவ்வாறு அழ்ந்து ஆராய்வதால் பெருந்தவறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும், உணர்ச்சியற்றுச் செயல்படுவதைத் தடுத்துக்கொள்ளலாம். இது முதலாவது;

இரண்டாவதாக, இயங்கியல் தர்க்கப்படி ஒரு பொருளை அதன் வளர்ச்சி நிலையிலும் ‘இயங்கு நிலையிலும்’ (ஹெகல் அவ்வாறு சில சமயங்களில் கூறினார்), மாறும் நிலையிலும் வைத்துக் காண வேண்டும்

மூன்றாவதாக, ஒரு பொருளை முழுமையாக ‘வரையறுக்கும்’ போது மனித குலத்தின் முழு அனுபவத்தையும் பயன்படுத்த வேண்டும். இந்த அனுபவம் உண்மையின் அளவுகோலாகவும், அப்பொருளுக்கும் மனிதனின் தேவைகளுக்குமிடையே உள்ள தொடர்பை நடைமுறையில் நிர்ணயிக்கவும் பயன்படுகிறது.

நான்காவதாக, காலஞ்சென்ற பிளெகானவ் ஹெகலைப் பின்பற்றிக் கூறியது போல் ‘புறநிலை உண்மை என்று எதுவும் இல்லை. உண்மை எப்பொழுதும் திட்டவட்டமானது’ என்பதை இயங்கியல் தர்க்க வாதம் கற்பிக்கிறது.”

என்று சுட்டிக் காட்டுகிறார் குரூப்ஸ்கையா.

இங்கு லெனின் பொதுவான சொல்லாடலாக “பொருள்” எனும் பதத்தைப் பயன்படுத்தியுள்ளார். நமது சமூக நிலைமைகள், கட்சி, புரட்சி என அனைத்தையும் அந்தச் சொல்லில் பொருத்தி புரிந்து கொள்ளலாம்.

தோழர் லெனின் ஒவ்வொன்றையும் தர்க்கரீதியில், இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்தார். தமது கற்றலையும் அவ்வழியிலேயே மேற்கொண்டார்.

ஒருவரை நினைவுகூர்வது என்பது அவரது வாழ்வை கிரகித்துக் கொள்ள முயற்சிப்பதுதான். அந்த வகையில் தோழர் லெனினின் 97-ம் ஆண்டு நினைவு கூர்தலில் அவர் மார்க்சியத்தைக் கற்றுக் கொண்ட முறையைக் கற்றுக் கொள்வதற்கு “லெனின் மார்க்ஸை எவ்வாறு பயின்றார்?” எனும் நூல் கண்டிப்பாகப் பயன்படும். மார்க்சியத்தைக் கற்றுக் கொள்ள விரும்பும் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.

லெனின் மார்க்ஸை எவ்வாறு பயின்றார்?” எனும் நூலைப் பயில்வோம் ! தோழர் லெனினை உண்மையாக நினைவுகூர்வோம் !!

வினவு

சங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்

அறிவுத் துறையினரை முடக்கத் துடிக்கும் இந்துத்துவ பாசிஸ்டுகள் !

கன்னட எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியரும் பகுத்தறிவாளருமான கே.எஸ்.பகவானின் ”ராமர் கோயில் ஏன் தேவையில்லை” (Rama Mandira Yeke Beda) என்ற நூல் சமூகத்தின் ஒரு பிரிவினரின் உணர்வினை புண்படுத்துவதாகக் கூறி, பொது நூலகத்திற்கு வாங்கும் நூல் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது கர்நாடக அரசு.

“இந்த நூல் பொதுமக்களின் (இந்துக்களின்) உணர்வினை புண்படுத்தக்கூடும். எனவே இவ்வகையான புத்தகங்களை பொது நூலகத்தில் வைக்க நான் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டேன்” என்கிறார் கர்நாடக கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார்.

படிக்க :
♦ அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !

♦ கர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக !

இந்துத்துவா வலதுசாரி கும்பல் சமூக ஊடகங்களில் இப்புத்தகத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை தொடங்கிய பிறகுதான், இப்புத்தகத்தை தேர்வு செய்த கன்னட எழுத்தாளர் டொட்டரங்கே கவுடா (Doddarange Gowda) தலைமையிலான பொது நூலக புத்தக தேர்வுக்கான கமிட்டி கே.எஸ்.பகவானின் புத்தகத்தை வாங்குவதற்கான பரிந்துரையை திரும்பப் பெற்றிருக்கிறது.

இராமாயணம் மற்றும் ராமர் கோயில் குறித்த அரசியல் விமர்சனத்தின் தொகுப்பான இப்புத்தகம், “சமூகத்தின் ஒரு பிரிவினரின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது” என்பதால் தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது என்று புத்தக தேர்வுக்கான கமிட்டி ஜனவரி 19, 2021 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கே.எஸ்.பகவானின் ”ராமர் கோயில் ஏன் தேவையில்லை” (Rama Mandira Yeke Beda) என்ற நூல்

“பொது நூலக பட்டியலில் இருந்து எனது நூல் நீக்கப்பட்டதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். பொது நூலகம் என்பது எல்லோருக்குமானது; அங்கு அனைத்து வாதங்களையும் படிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. பொது நூலகத்தை ஒரேயொரு சித்தாந்தத்திற்காக இந்த அரசாங்கம் எப்போதும் பணயம் வைக்க முடியாது” என்கிறார் எழுத்தாளர் பகவான்.

“இந்த இரண்டாண்டுகளில் எனது புத்தகம் ஏற்கனவே மூன்று பதிப்புகள் முடிந்து, நான்காவது பதிப்பிற்கு சென்றுவிட்டது. மக்களின் மத உணர்வினை புண்படுத்தக்கூடாது என்பதே எனது நோக்கம். இந்த புத்தகத்தை படித்து பாருங்கள், வால்மீகியின் இராமாயண எல்லைக்குட்பட்டே நான் எழுதியுள்ளேன்” என்கிறார் அவர்.

‘ராமன் மது அருந்துகிறான்’ என்ற எழுத்தாளர் கே.எஸ்.பகவானின் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வரியைக் கண்டித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணையதளத்தில் ஒன்றான இந்து ஜாக்ரன் வேதிகே (Hindu Jagran Vedike) கடந்த 2019-ஆம் ஆண்டே புகார் ஒன்றை அளித்திருந்தது; மேலும் அப்புத்தகத்திற்கு தடையும் கோரியது.

கே.எஸ்.பகவான்

“பதிப்பகத்தாரால் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர், கே.எஸ்.பகவானின் புத்தகத்தினை வாங்க புத்தக தேர்வுக்கான கமிட்டி முடிவு செய்தது. அப்புத்தகம் ஒரு பிரிவினரின் உணர்வுகளை புண்படுத்தும்படி இருந்தாலும், வாசகர்களுக்கு பல்வேறுப்பட்ட கருத்துகளை வழங்கக்கூடும் என்பதால் இப்புத்தகம் எங்களது பொது நூலகத்தின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்று நாங்கள் கருதினோம்” என்ற கவுடா, இந்துத்துவ சக்திகளிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் வந்ததால், தற்போது நூல் பெறும் பரிந்துரையை திரும்பப் பெற்றிருக்கிறோம் என்கிறார்.

30 ஆகஸ்ட், 2015-ம் ஆண்டு அறிஞரும் கன்னட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி இந்துத்துவா கும்பலால் கொலை செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே எழுத்தாளர் பகவானுக்கும் சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் பல வந்திருக்கின்றன.

2017-ம் ஆண்டில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட பின்னர், கர்நாடக சிறப்பு விசாரணைக் குழு (SIT) நடத்திய விசாரணையில் எழுத்தாளர் பகவானைக் கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இத்திட்டத்தின் பின்னணியில் இருந்த இந்து யுவசேனா உறுப்பினர் ஒருவரை சரியான நேரத்தில் கைது செய்ததன் மூலம் கொலை நடக்காமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜக உறுப்பினர்கள் சிலர் ராமர் கோயிலுக்கு நிதி திரட்டுவதற்காக அண்மையில் எழுத்தாளர் பகவானின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். இது குறித்து எழுத்தாளர் பகவான் கூறுகையில், “மரியாதைக்குரிய விதத்தில் நான் அவர்களை வரவேற்று, ராமர் கோயில் கட்ட நிதி கொடுக்க மாட்டேன் என்றதோடு, எனது புத்தகத்தை படிக்குமாறும் பரிந்துரைத்தேன்” என்கிறார் எழுத்தாளர் பகவான்.

படிக்க :
♦ அதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் !

♦ அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !

சமீபத்தில் எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய Walking with the comrades என்ற புத்தகம் இந்துத்துவா கும்பலின் அச்சுறுத்தலால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது பொது நூலகப் பட்டியலில் இருந்து எழுத்தாளர் பகவானின் புத்தகம் நீக்கப்பட்டிருக்கிறது. சகல துறைகளிலும் காலூன்றி இராமராஜியத்தை நிறுவத் துடிக்கும் பாஜக இந்துத்துவா கும்பல். கீழிருந்து மக்களைத் திரட்டி போராடுவதன் மூலமே இந்துத்துவ பாசிச சக்திகளை வீழ்த்த முடியும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.


ஷர்மி
செய்தி ஆதாரம் : The Wire

உச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை !

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி, ஒன்றரைக் கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஜனவரி 26 குடியரசு தினத்தன்று பீரங்கிப் பேரணிக்கு இணையாக டிராக்டர் பேரணி நடத்தப்போவதாகவும் 2024 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் வரையில் போராடப்போவதாகவும் விவசாயிகள் உறுதியுடன் அறிவித்துள்ள சூழலில், இதை எப்படிக் கலைப்பது என்று தெரியாமல் திணறிவருகிறது மோடி அரசு.

போராட்டக் களத்திலிருந்து பெண்களையும் குழந்தைகளையும் முதியவர்களையும் வெளியேறுமாறு கூறி விவசாயிகளின் மேல் அக்கறைப்படுவதாகக் காட்டிக்கொண்டது உச்சநீதிமன்றம்.பெண்களை வீட்டிற்குள் அடங்கியிருக்க வேண்டியவர்களாகக் காட்டும் உச்சநீதிமன்றத்தின் ஆணாதிக்கத் திமிர் சமூக வலைத்தளங்களில் அடித்துப் பெயர்க்கப்பட்டது.

தாமாக முன் வந்து, வேளாண் சட்ட ஆதரவாளர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்து, விவசாயிகள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக வேண்டும் என்றும், முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ”பணிவான” மிரட்டலோடு கேட்டது. விவசாயிகள் அக்கமிட்டி குறித்து அதன் முகத்திலேயே காறி உமிழ்ந்துவிட்டனர்.

இப்படி பல வகைகளில் மோடி அரசு போராடும் விவசாயிகள்  மீது தாக்குதல் தொடுக்க நியாயம் கற்பிக்கும் வகையிலான அனைத்து வேலைகளையும் நைச்சியமாகச் செய்து வருகிறது உச்சநீதிமன்றம்.

படிக்க :
♦ வேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை !

♦ சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !

உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்கையில், கடந்த 2020 – டிசம்பர் 31-ம் தேதியன்று சி.பி.எம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது சொந்த வலைத்தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரையோ உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் சேவையை விஞ்சுமளவிற்கு இருக்கிறது.

இக்கட்டுரையில் “இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகள் நியாயமானவை, பகுத்தறிவுள்ள எந்த அரசாங்கமும் இதை ஏற்றுக்கொள்ளும்.” என்று இந்தப் போராட்டத்தின் அவசியம் குறித்து எழுதியுள்ள சீத்தாராம் யெச்சூரி, இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக விவசாயிகளே முன் வைக்காத ஒன்றை முன் வைக்கிறார்.

“எல்லோரும் கேட்பது ஒன்றுதான். இந்த மூன்று வேளாண் சட்டங்களும் இப்போது திரும்பப் பெறப்பட வேண்டும். பின்னர் விவசாயிகள், விவசாய சங்கங்கள், கார்ப்பரேட்டுகள், அனைத்து பங்குதாரர்களிடமும் விவாதித்து புதிய சட்டங்களை வடிவமைத்து நாடாளுமன்றத்தில் விவாதித்து அதை நிறைவேற்ற வேண்டும்.” (அழுத்தம் எம்முடையது) என்கிறார் யெச்சூரி.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திதான் விவசாயிகள் போராடுகிறார்களே ஒழிய, புதிய சட்டங்கள் தங்களுக்கு வேண்டும் என யாரும் கோரவில்லை. அப்படியிருக்கும்போது புதிய வேளாண் சட்டங்களை யாருக்காக, எதற்காக இயற்ற வேண்டும் என்கிறார் யெச்சூரி ?

அதற்கான பதில் அடுத்த வரியில் வருகிறது. இந்தப் புதிய சட்டத்தை விவசாயிகள், விவசாய சங்கங்கள் மட்டுமின்றி கார்ப்பரேட்டுகள் உள்ளிட்ட அனைத்துப் பங்குதாரர்களையும் உள்ளடக்கி விவாதம் நடத்தி வடிவமைக்க வேண்டும் என்கிறார்.

இந்த மூன்று வேளாண் சட்டங்களும் நடைமுறைக்கு வந்தால் தாங்கள் கார்ப்பரேட்டுகளிடம் கொத்தடிமைகளாக்கப்படுவோம் என்பதையும் இச்சட்டங்கள் வேளாண்துறையையே கார்ப்பரேட்டுகளிடம் முற்றாக தாரைவார்க்கிறது என்பதையும் உணர்ந்துதான் விவசாயிகள் போராடி வருகிறார்கள். மோடியின் உருவ பொம்மையுடன் அம்பானி, அதானி உருவ பொம்மையையும் சேர்த்துக் கொளுத்துகிறார்கள். அம்பானியின் ஜியோ நிறுவனத்தைப் புறக்கணிக்கிறார்கள்.

இப்படியிருக்கும் போது, “கார்ப்பரேட்டுகளையும் உள்ளடக்கி” ஒரு விவாதம் நடத்தி ‘சுமூகமாக’ பிரச்சனையை தீர்க்க சொல்கிறார் யெச்சூரி. பிரச்சினைக்குள் தலையைக் காட்டாமல் ஒதுங்கியிருந்த கார்ப்பரேட்டுகளைத் தங்களது அனுபவத்தில் இருந்து அடையாளம் கண்டு, வீதியில் நிறுத்தியிருக்கும் விவசாயிகளின் வர்க்க உணர்வை விட சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளரின் வர்க்க உணர்வு பின் தங்கியுள்ளது மட்டுமல்ல. சமரசவாத, தாராளவாத கருத்தாக்கத்துக்குள் புதைந்து போய் இருக்கிறது.

மாபெரும் கார்ப்பரேட் மதயானைகளுக்கு முன்னர் விவசாயிகளை எறும்புகளைப் போல நிற்க வைக்கின்றன இச்சட்டங்கள். ஆனால் யெச்சூரியோ கார்ப்பரேட்டுகளையும் விவசாயிகளையும் ஒரே மேசையில் உட்காரவைத்துப் பேசி முடிவெடுக்க வேண்டும் என்கிறார். தோழரின் ‘ஜனநாயக உணர்வையும்’ ‘வர்க்க உணர்வையும்’ நினைத்தால் நமக்கே புல்லரிக்கிறது.

படிக்க :
♦ அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !
♦ Stateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்

மேற்கு வங்கத்தில் டாடாவின் நேனோ ஆலைக்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தியதோடு, அதை எதிர்த்துப் போராடிய சிங்கூர் விவசாயிகளை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்ற பின்னர் இன்று வரை மேற்குவங்கத்தில் எழுந்து நின்று மூச்சுக் கூட விட முடியாத அளவிற்கு அடி வாங்கியிருந்தும், மக்களின் வாழ்வு ‘உய்ய’ கார்ப்பரேட்களின் தயவைக் காத்து நிற்பதைக் கைவிடத் தயாராக இல்லை என்பதையே யெச்சூரியின் இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சி.பி.எம். கட்சியின் விவசாய அமைப்புகளும், தொழிலாளர் அமைப்புகளும் பெருமளவில் வீதியில் இறங்கி பாசிச மோடி அரசுக்கு எதிராகவும், கார்ப்பரேட் கொள்ளைகளுக்கு எதிராகவும் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது உயிரை துச்சமாக மதித்து போராடும் விவசாயிகளோடு உடன் நிற்கின்றனர்.

அப்படிப்பட்ட தியாக உணர்வும் போராட்ட உணர்வும் கொண்ட இலட்சக்கணக்கான தோழர்களை அணிகளாகக் கொண்ட கட்சியின், தலைமைப் பொறுப்பில் இருப்பவரது சிந்தனையின் வலதுசாரி சரிவை விட அதைக் கண்டு கொள்ளாமல் கண்டிக்காமல் இருக்கும் கட்சியின் நிலைதான் மேலும் அபாயகரமானது.


தீரன்

செய்தி ஆதாரம்
: Frontierweekly