Monday, June 15, 2026
முகப்பு பதிவு பக்கம் 249

அதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் !

சிறப்பு பொருளாதார மண்டலங்களின் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டதன் மூலம் அதானி பவர் லிமிடெட் நிறுவனத்தின் மூலப் பொருட்களின் மீதான வரியை ஈடுசெய்ததன் மூலமாக அதானி குழுமம் ரூ.500 கோடி பெற வழிவகுத்ததை அம்பலப்படுத்தி “எக்கனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் வீக்லி” (ஈ.பி.டபிள்யூ) பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்தது.

இச்செய்தியை வெளியிட்ட  ஈ.பி.டபிள்யூ பத்திரிகைக்கு அதானி குழுமம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.  அதனைத் தொடர்ந்து, அந்தக் கட்டுரையை தமது இணையதளத்தில் இருந்து நீக்க முடிவெடுத்தது ஈ.பி.டபிள்யூ நிர்வாகக் குழு. அந்தக் கட்டுரையை எழுதியவரும், ஈ.பி.டபிள்யூ-வின் ஆசிரியருமான பரஞ்சோய் குகா தாக்குர்தா நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது பதவியை இராஜினாமா செய்தார். பின்னர் அவரது கட்டுரையை தி வயர் இணையதளம் வெளியிட்டது.

படிக்க :
♦ நிலக்கரி சுரங்கங்களை குறிவைக்கும் அதானி நிறுவனம் !
♦ விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !

உடனடியாக தி வயர் இணையதளத்தின் மீதும், கட்டுரையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்த்தா மீது ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு வழக்குப் பதிவு செய்தது அதானி குழுமம். இந்த வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தி வயர் இணையதளமும், பரஞ்சோய் குகா தாக்குர்தாவும் அறிவித்தனர். இந்நிலையில் கடந்த மே 2019-ல் தி வயர் இணையதளத்தின் மீது போடப்பட்ட அவதூறு வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது அதானி குழுமம். அப்போதும் தாக்குர்தா மீதான வழக்குகளை திரும்பப் பெறவில்லை. இந்நிலையில் இவ்வழக்கை விசரித்து வந்த குஜராத் மாநிலம் கட்ச் மாவட்ட நீதிமன்றம் பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறது.

தனது உத்தரவில் நீதிபதி பிரதீப் சோனி “இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 500-ன் கீழ் பரஞ்சோய் தாகுர்த்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, அவரை தமக்கு முன்நிறுத்துமாறு டெல்லி நிஜாமுதீன் போலீசு நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளது”. ஆனால் இது குறித்து தமக்கு எதுவும் முறையான ஆவணங்கள் இன்னும் வரவில்லை என்று பரஞ்சோய் குகா தாக்குர்த்தா தெரிவித்துள்ளார்.

அதானி வழக்கு தொடுத்த அதே நேரத்தில், ரிபப்ளிக் டிவி பங்குதாரரும் பாஜக பிரமுகருமான இராஜீவ் சந்திரசேகர், பரஞ்சோய் குகா தாக்குர்த்தா மீது வழக்கு தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்குவதில் மோடி அரசும் கார்ப்பரேட்டுகளும் கைகோர்த்து நிற்பது அம்பலமான பல்வேறு விவகாரங்களில் இதுவும் ஒன்று!


கர்ணன்
செய்தி ஆதாரம் : Scroll

Stateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்

0
அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட அகதிகள் பற்றிய திரைப்படம்

வுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட அகதிகள் பற்றிய திரைப்படம்
அவுஸ்திரேலிய அரசு, தனது நாட்டில் வந்து தஞ்சம் கோரும் அகதிகளை, தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்து வருடக் கணக்காக கொடுமைப் படுத்துவதை Stateless என்ற பெயரில் படமாக்கி உள்ளார்கள். பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை Netflix இல் பார்க்கலாம்.

இந்தோனேசியாவில் இருந்து படகுகளில் வரும் அகதிகள் தடுப்பு முகாம்களில் அடைத்துக் வைக்கப்படுகின்றனர். அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் காரணமாக அகதிகள் அடிக்கடி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். படத்தின் தொடக்கத்திலேயே இரண்டு இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கூரையின் மேலே நின்று ஆர்ப்பாட்டம் செய்வதைக் காட்டுகின்றனர்.

அந்த தடுப்பு முகாமில் அவுஸ்திரேலிய பிரஜையான மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் உண்மையாக நடந்ததாக படத்தின் முடிவில் காட்டுகிறார்கள். அந்தப் பெண் தனது குடும்பத்தினருடன் முரண்பட்டதாலும், ஒரு cult அமைப்பில் நடந்த அத்துமீறல்களாலும் மனநலம் பாதிக்கப்பட்டு தப்பியோடுகையில் போலீசிடம் பிடிபடும் பொழுது தான் ஒரு ஜெர்மன் பிரஜை என்று பொய் சொல்லி விடுகிறாள். அதனால் அவளை விசா இல்லாத விரும்பத்தகாத வெளிநாட்டவரை தங்க வைக்கும் தடுப்பு முகாமுக்கு அனுப்பி விடுகின்றனர். இருப்பினும் கடைசி வரையில் யாரும் அவளது அவுஸ்திரேலிய ஆங்கில உச்சரிப்பு (accent) குறித்து சந்தேகப் படாதது ஆச்சரியத்திற்குரியது. அன்றைய காலத்தில், இந்த தவறானது ஊடகங்களில் வெளியாகி, அவுஸ்திரேலிய அரசுக்கு பெருத்த அவமானத்தை தேடித் தந்தது.

அரசு ஒரு தனியார் நிறுவனத்திடம் முகாமை காவல் காக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் காவலாளிகளில் சிலர் மனிதாபிமானமற்று நடந்து கொள்வதுடன், ஒரு கேள்வி கேட்ட அகதியை அடித்து நொறுக்குகின்றனர். அதற்காக சம்பந்தப்பட்ட காவலாளிகள் இடைநிறுத்தம் செய்யப்படவில்லை. அரசும் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டுகொள்வதில்லை.

காவலாளிகள் ஒரு அகதியை அடித்து காயப்படுத்திய புகைப்படம் அவுஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளிவருகிறது. அதைத் தொடர்ந்து யார் காமெரா வைத்திருந்தார்கள் என்று தேடிக் கண்டுபிடித்து விடுகின்றனர். அகதிகளை பார்வையிட வரும் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கொண்டு வந்த உணவுப் பொருளை சோதித்து அதற்குள் மறைத்து வைத்திருந்த மொபைல் தொலைபேசியை பறிமுதல் செய்கின்றனர். அதைத் தொடர்ந்து வெளியில் இருந்து பார்வையாளர்கள் வருவதையும், முகாம் தொலைபேசி பாவனையும் தடுக்கின்றனர். உணவுச்சாலையும் மூடப்படுகிறது. அகதிகள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து தான் உரிமைகளை வென்றெடுக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வரும் முக்கிய பாத்திரமான ஆப்கான் அகதி அமீரின் கதை படத்தில் தெளிவாக சொல்லப் படவில்லை. அமீர் முதலில் தனது மனைவி பிள்ளைகளை அனுப்பி விட்டு, பின்னர் இன்னொரு படகில் அவுஸ்திரேலியாவுக்கு வருகிறான். அங்கு வந்த பின்னர் தனது ஒரு மகள் மட்டுமே தப்பி வந்ததை அறிந்து கொள்கிறான். மனைவியும் இன்னொரு மகளும் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி விட்டனர். அமீர், இந்தோனேசியாவில் படகில் ஏறும் பொழுது தனது மனைவி பிள்ளைகளை அனுப்பி விட்டு அவன் மட்டும் ஏன் திரும்பிச் சென்று கடத்தல்காரர்களிடம் அடி வாங்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை இல்லை.

படிக்க:
♦ அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !
♦ ஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்!”

படத்தில் கூறப்படும் அமீரின் கதையானது அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சின் பார்வைக் கோணத்தில் இருந்து சொல்லப் படுவதாக நான் கருதுகிறேன். விசாரணை அதிகாரி அவனை ஒரு கடத்தல்காரன் என்று குற்றம் சாட்டி தஞ்சக் கோரிக்கையை நிராகரிக்கிறாள். அதற்கு காட்டப்படும் ஆதாரங்களிலும், சொல்லப்படும் கதைகளிலும் பல ஓட்டைகள் உள்ளன.

குடிவரவு அமைச்சு “நம்பத் தகுந்தது” எனக் காட்டும் ஆதாரங்கள் நம்பத் தகுந்தவை அல்ல. இதை படத்தில் முக்கியமான பாத்திரமாக வரும் இன்னொரு குடியேற்ற அதிகாரியே கூறுகிறார். உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தானில் அப்போதிருந்த தாலிபான் அரசுடன் தொடர்பு கொண்டு அமீரின் சகோதரனின் மரணச் சான்றிதழ் எடுத்த விடயம் நம்பத் தகுந்ததாக இல்லை. அத்துடன் Smart phone வந்திராத காலத்தில், இந்தோனேசியாவில் அகதிகளை ஏமாற்றி பணம் பறித்த கிரிமினலுடனான சந்திப்பை, யாரோ ஒருவர் பதிவு செய்ததாக விசாரணை அதிகாரி காட்டும் வீடியோ நம்பும்படியாக இல்லை. அநேகமாக அமீரின் தஞ்சக் கோரிக்கையை நிராகரிப்பதற்கு காரணம் தேடி, அவுஸ்திரேலிய அரசு தானாகவே ஒரு கற்பனைக் கதையை புனைந்துள்ளதாக தெரிகின்றது.

இது போன்ற சில குறைகள் இருந்தாலும், மொத்ததில் படம் சொல்ல வந்த விடயத்தை அழகாக சொல்லி விடுகின்றது. அதாவது அவுஸ்திரேலிய அரசு அகதிகளை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதை மனதில் பதியும் வண்ணம் படமாக்கி உள்ளனர்.

அத்துடன், இப்படியான சந்தர்ப்பங்களில் பன்னாட்டு அகதிகளுக்கு இடையில் ஏற்படும் சகோதரத்துவ உணர்வும் அழகாகக் காட்டப் பட்டுள்ளது. அவர்கள் தமக்குள் முரண்பட்டு மோதிக் கொள்ளாமல், அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அவசியம் பார்க்க வேண்டிய படம்.


கலையரசன்
கலையகம்

disclaimer

நூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்

ரு மதத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ள அதன் தோற்றம், வரலாறு, அதன் போதனைகள், வழிபாட்டுமுறைகள் ஆகியவற்றை மட்டும் வைத்துப் புரிந்து கொள்ள முடியாது.

மதம் தோன்றிய வரலாற்று சூழ்நிலை அக்காலகட்டத்தில் நிலவிய அரசியல் பொருளாதார சமூக நிலைமைகள், நிலவிய உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள், இவற்றின் மீது கட்டப்பட்ட மேல் கட்டுமானம், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நிலை, ஆளும் வர்க்கத்தின் செயல்பாடு, அன்றைய பண்பாடு, நாகரிகம் வளர்ச்சி நிலை இவற்றின் அடிப்படையில்தான் முழுமையான புரிதல் உருவாகும்.

இஸ்லாம் பிற மதங்களிலிருந்து அதன் பெயரிலேயே வேறுபடுகிறது. மனிதப் பிறவியை கடவுளாக கொள்ளாத மதம். இஸ்லாம் என்றால் அரபு மொழியில் அடிபணிதல் என்று பொருள். அல்லாஹ்வுக்கு அடிபணிதல்-Obedience , கீழ்ப்படிதல்-Submission, சரணடைதல்-Surrender. மனிதகுல வரலாற்றில் சமூக முன்னேற்றத்தில் ஒரு மதம் தோன்றி என்னென்ன பங்களிப்பை செய்தது, சமூக அமைப்பில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை முக்கியமாக பார்க்க வேண்டும்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்
♦ நூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா | காமராஜ்

அரேபிய பாலைவனத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக வாழ்ந்து வந்த பெது இன் இனக்குழுக்களின் வாழ்க்கை முறையை மனித மதிப்புகளை மாற்ற முகமது நபி விரும்பினார். நாடோடிகளாக வாழ்ந்து வந்த  இனக்குழுவினர் இடம் விட்டு இடம் மாறிக் கொண்டே வாழ்ந்து கொண்டிருந்தனர். கால்நடை மேய்ப்பதும் கொள்ளையடிப்பதும் இவர்களின் வாழ்க்கைத் தொழிலாக இருந்தது. பிற இனக் குழுக்களின் மீது திடீர் திடீரென படையெடுத்து சூறையாடுவது இவர்களின் பொருளாதார அடிப்படையாக இருந்தது.

உயர்ந்த பண்புகளை கொண்ட மதம், ஓர் ஆட்சி முறை, நீதிமுறை, சட்டம் ஒழுங்கை உருவாக்கிக் கொடுக்கும் ஒரு சித்தாந்தம், கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாட்டில்  பெது இன் நாடோடி இன குழுக்களையும், நகரவாசிகள், தெற்கத்தி குடியேறிகளையும் ஒருங்கிணைக்கும் வழிபாட்டுமுறை ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு மத அமைப்பு, மெக்காவின் அரேபியாவின் உடனடித் தேவையாக இருந்தது இந்தப் பின்புலத்தில்தான் இஸ்லாம் தோன்றியது. “அரசியலும் மதமும்; இஸ்லாமின் தோற்றம்” என்ற கட்டுரை எண்ணற்ற வரலாற்று விவரங்களோடு ஏராளமான  சான்றாதாரங்களை முன்வைத்து இஸ்லாம் மதத்தின் தோற்றுவாய் பற்றி தெளிவாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாம் தோன்றி வளர்ந்த விதம்; முகலாயர் சாம்ராஜ்யங்கள் எவ்வாறு உருவாகின, என்ற வரலாற்று விவரங்கள் “உலகளாவிய இஸ்லாம்” என்ற கட்டுரையில் சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடன் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய அரசியல் அதன் தோற்ற காலத்திலிருந்து இன்றுவரை சமத்துவ சமநிலை கொண்ட சமூக  அமைப்பை உருவாக்க இயலவில்லை. இதர மத நாகரிகங்களைப் போலவே வர்க்க வேறுபாடுகள், இருப்பவன்-இல்லாதவன்; ஏழை-பணக்காரன்; தொழிலாளி-முதலாளி; உழைப்பை சுரண்டுபவன்-சுரண்டப்படுபவன் என்ற ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை உருவாக்கிக் கொள்ள இஸ்லாம் அனுமதித்தது. உம்மா (இஸ்லாமிய சமுதாயம்) மற்றும் (Islamic Brother hood) இஸ்லாமிய சகோதரத்துவம்;  உலகு தழுவிய இஸ்லாம் அரசு Global islamic State என்ற கருதுகோள்கள் எல்லாம் கற்பனை இலட்சியத்தில் பிறந்தவை என்பதை இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

50-க்கும் அதிகமான இஸ்லாமிய நாடுகள் உள்ளன. நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவற்றில் இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம் மக்கள் கடும் ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இஸ்லாமிய நாடுகளுக்குள் மோதல்கள்; போர்கள்; ஈரான்-ஈராக் போர்; அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் ஆதிக்கத்தில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. முஸ்லீம்  நாடுகளுக்கு உள்ளேயே பிரிவினைப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இஸ்லாமிய நாட்டு முதலாளிகள் உலக முதலாளித்துவ சக்திகளுடன் இணைந்து உலகளாவிய முதலாளித்துவ சந்தை முறையில் முக்கிய பங்காளிகள் ஆகிவிட்டனர். புதிய உலகமய சூழ்நிலையில், இஸ்லாமியர்கள் தங்களை புதிய சிந்தனைகளுக்கு உள்ளாக்கி கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுடன் மத வேறுபாடுகளை களைந்து கொண்டு ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற வரலாற்றுக் கடமையை இந்நூலாசிரியர் வலியுறுத்துகிறார்.

கிறிஸ்தவர்களால் குருசேடர், முஸ்லிம்களால் புனித போர் ஜிஹாத் (Crusade Vs Jihad)என்ற சிலுவைப்போர்கள், எதனால் துவக்கப்பட்டது? அதன் அடிப்படை என்ன? ஐரோப்பா முழுவதும் கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியம் என்ற மதவெறி அலை வீசியது. “ஐரோப்பாவில் இஸ்லாம்” என்ற கட்டுரையில் மதவெறி அடிப்படையிலான பயங்கரவாத போர்க்களத்தை (infinite war) வரலாற்றுப் பின்புலத்தோடு இந்நூல் விவரிக்கிறது. அமெரிக்க பயங்கரவாதம் அதற்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாதம் தோன்றி வளர்ந்த பின்னணியையும்; அரபுகளின் ஜீவ மரண போராட்டத்தையும் பற்றி இந்நூலின் மூலமாக நாம் புரிந்து கொள்ள முடியும். 2001 செப்டம்பர் 11-ல் நடைபெற்ற நியூயார்க் மீதான விமானத் தாக்குதல் ஒரு பயங்கரவாத செயல்தான். ஆனால் இது சிலுவை போர்-புனித போரின் ஒரு அம்சம்தான்.

இந்தியாவில் இஸ்லாம் (கிபி 712- 1858) என்ற கட்டுரை முகலாயர்கள் நடத்திய படையெடுப்புகள்; முகலாய சாம்ராஜ்யம் உருவாகிய விதம் பற்றிய ஒரு தெளிவான புரிதலை நமக்கு தருகிறது. இந்தியா என்ற ஒற்றை நாடு வரலாற்றில் என்றுமே இருந்ததில்லை; மன்னர்களிடையே முரண்பாடுகளும், மோதல்களும், மத சண்டைகளும், சாதி சண்டைகளும் நிரம்பியிருந்தன. இந்தப் பின்னணியில் முஸ்லிம் படையெடுப்பாளர்கள் விரைவில் முன்னேறி தக்காணம் வங்காளம் என்று ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்ட முடிந்தது.

மாமேதை மார்க்ஸ் அவர்கள் இந்தியாவைப் பற்றி 1853 ஜூலை 22-ஆம் தேதி  வெளியிட்ட கட்டுரையில் (இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்) பின்வருமாறு  எழுதினார்.

“அரபுகள், துருக்கியர்கள், முகலாயர்கள் என ஒருவர் பின் ஒருவராக இந்தியாவை படையெடுத்து வந்து கைப்பற்றிய அனைவரும் வெகு விரைவில் இந்தியமயமாக்கப்பட்டனர். இப்படி படையெடுத்து வெற்றி கண்ட இந்த காட்டுமிராண்டிகள் அடிமைப்படுத்தப்பட்ட இந்தியர்களின் உயர்வான நாகரிகத்தால் வரலாற்றின் புற விதிகளால் அடிமையாக்கப்பட்டனர்”.
{“Arabs,Turks,Tartars,Mogals who had successively overrun India, soon became hinuized,barbarian conquerers being, by an external law of history conquered themselves by the superior civilization of their subject”  ( The future result of British Rule in India)Marx-Notes on Indian history.}

கிபி 1526-ல் இருந்து 1858 வரை சுமார் 332 ஆண்டுகள் முகலாயர்களின் ஆட்சி இந்தியாவில் நீடித்தது. கிபி 712-ல் முகமது பின் காசிம் சிந்து பிரதேசத்தை கைப்பற்றி, அதில் இருந்து ஏறத்தாழ ஆயிரத்து 145 ஆண்டுகள் இந்தியாவிற்கு இஸ்லாமிய தொடர்புகள் ஏற்பட்டு நிலைநாட்டப்பட்டன எனலாம்; முஸ்லிம் இந்தியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள்.

முகலாய மன்னர் பாபர் எந்த கோயிலையும் வழிபாட்டுத் தலங்களையும் இடித்து தள்ளியவர் கிடையாது. பாபர் மிகமிக நாகரீகமானவர், மதவெறி அற்றவர். பாபரின் விஜயத்தின் நினைவாக மிர்பாக்கி என்ற பாபரின் அதிகாரி அயோத்தியில் 1528-ஆம் ஆண்டு பாபர் மசூதியை கட்டினார். 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் முன்னிலையில் இந்துத்துவ வானரப் படைகள் வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கினர்.

தென்னிந்தியாவில் படையெடுப்புகள் மூலமாக  இஸ்லாம் பரவவில்லை திப்பு சுல்தானுக்கு முன் முகலாயர் ஆட்சி தெற்கே கோலோச்சவில்லை. பிறகு எப்படி கேரளம் தமிழகம் கர்நாடகத்தில் கூட இஸ்லாம் பரவியது என்ற வரலாற்று விவரங்களை “தமிழகத்தில் இஸ்லாம்” என்ற கட்டுரை தெளிவுபட கூறுகிறது. கொடூரமான ஒடுக்குமுறைக்கு ஆளான சமணர்கள், பௌத்தர்கள், தீண்டாமை கொடுங்கோன்மைக்கு இலக்கான தலித் மக்கள், நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு இருந்த நாடார் சாதியினர், கள்ளர் சாதியினர் தமிழகத்தில் இஸ்லாம் மதத்தை தழுவினர்.

மாப்பிள்ளை, லப்பைகள், ராவுத்தர்கள், மரைக்காயர்கள் என்றெல்லாம் அறியப்பட்ட மண்ணின் மைந்தர்கள் தான் தமிழக முஸ்லிம்கள். இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவர் காயிதேமில்லத் அவர்கள் அரசியல் நிர்ணய சபையில் தேசிய மொழி பற்றிய பிரச்சனையில் விவாதத்தின்போது இந்த நாட்டு மண்ணில் பேசப்படும் மொழிகளில் மிகவும் பழமையானதும் தொன்மையான மொழியாக இருப்பதும் தமிழ்தான் என்று எடுத்துரைத்தார் “இஸ்லாம் எங்கள் வழி இன்பத்தமிழ் எங்கள் மொழி. இதுவே தமிழ் முஸ்லிம்களின் முழக்கம்” என்றார்.

“விடுதலை இயக்கமும் முஸ்லிம்களும்'” என்ற கட்டுரையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பை பற்றி; மறுக்கமுடியாத ஆதாரங்களோடு இந்த நூலில்  பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு என்ன காரணம்? பிரிவினைக்கு வித்திட்டது யார்? தனிநாடு கேட்பதற்கான அடிப்படை உருவாக்கப்பட்டது எதனால்? என்ற விவரங்கள், வரலாற்று நிகழ்வுகள் மூலமாக இந்நூலாசிரியர் ஒரு தெளிவான ஆய்வை முன்வைத்துள்ளார்.

1925-ல் விஜய தசமி அன்று மகாராஷ்டிர பிராமணர்களின் தலைமையில் ராஷ்டிரிய சுயம் சேவக் சங் ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது.  “ஒத்துழையாமை இயக்கம் வார்த்த பாலில் வளர்க்கப்பட்ட முஸ்லிம் பாம்புகள் விஷம் கக்கி கொண்டிருக்கின்றன,  நாடுமுழுவதும் கலவரங்களை தூண்டி விடுகின்றனர்’’ என்று ஆர்எஸ்எஸ் ஸ்தாபகர் ஹெட்கேவார் துவக்கத்திலேயே கூறினார்; முஸ்லிம்  மக்கள் முதல் பிரதான எதிரிகளாகவும்; முஸ்லிம்களிடம் இருந்து விடுதலை பெறுவதே முழு விடுதலை என்ற கொள்கையை அடிப்படையாகவும் கொண்டு இந்த மதவெறி கும்பல் தங்களை வரித்துக் கொண்டது.

இந்துத்துவ பாசிச கும்பல், முஸ்லிம் வருகையால் இந்தியா இருளடைந்ததுவிட்டது  என்ற பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறது. இந்து புரோகித வர்க்கம் திணித்த ஒழுங்குமுறைகள்; வர்ணாசிரம கோட்பாடுகள்; அறிவியல் ஆய்வுக்கும் பகுத்தறிவுக்கும் மனுதர்ம கும்பல் காட்டிய அலட்சியம், இந்தியாவில் விஞ்ஞான கண்டுபிடிப்பு அறிவியல் வளர்ச்சி ஏற்பட மிகப் பெரும் தடையாக இருந்தது. இவர்களது மனுதர்ம கோட்பாடு மக்களின் சுதந்திர சிந்தனைக்கு பெரும் தடைக்கல்லாக இருந்தது.

படிக்க :
♦ அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !
♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

இந்திய நாகரீக வளர்ச்சிக்கு இஸ்லாமியர்கள் மிகப்பெரும் பங்களிப்பை செய்துள்ளனர். சீனர்களின் கண்டுபிடிப்பான வெடிமருந்து, காகிதம் ஆகியவை செய்யும் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். வெளிநாட்டு துப்பாக்கியை முதன் முதலில் கொண்டு வந்தவர் பாபர். கட்டிடக்கலை சிற்பக்கலை, ஓவியம், இசை போன்ற நுண்கலைகளை இந்தியாவிற்கு வழங்கியவர்கள் இஸ்லாமியர்களே. முஸ்லிம்கள் இந்தியாவை இருளுக்குள் தள்ளினார்கள் என்று சங்பரிவார் கும்பல் சொல்லும் குற்றச்சாட்டு எள்ளளவும் உண்மை இல்லை.

இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட்டுவிட்டால் சங்பரிவார் கும்பலின் இந்து ராஷ்டிர கனவு பலிக்காது. அதன் அடிப்படை தகர்ந்துவிடும் என்பதால் முஸ்லிம் மக்கள் மீது பொய்யையும், புனை சுருட்டும், கட்டுக்கதைகளையும் ஆர்எஸ்எஸ் கும்பல் அவிழ்த்து விடுகிறது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இஸ்லாமியரை குறிவைத்து தாக்குதல் தொடுக்கும் அரசியல் வகுப்புவாத பாசிச அமைப்புகள் இந்தியாவில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இஸ்லாமிய சமூகம் இந்தியாவில் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. தேசிய வாழ்வின் பல துறைகளிலும் முஸ்லிம்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் மற்றும் தொழில் துறைகளிலும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் போதுமான அளவில் இல்லை. கல்வித்துறையில் அவர்களுக்குள்ள கல்வி வாய்ப்புகள் மிகக் குறைவு. அனைத்துத் துறைகளிலும் ஒதுக்கப்பட்ட இஸ்லாமியர்கள் இந்திய சிறைச்சாலைகளில் நிரம்பி வழிகிறார்கள். நாடெங்கும் மிகப்பெரிய வலைப்பின்னலை உருவாக்கிக் கொண்டுள்ள இந்துத்துவ பாசிசத்தின் இருண்ட நிழல்கள் அவர்கள் மீது விழுந்து கொண்டிருக்கின்றன.

அதிகார வர்க்கத்தின் உச்சியிலும், காவல்துறையிலும் இந்துத்துவ வெறியர்கள் கோலோச்சிக் கொண்டு இருக்கின்றனர். இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலை கண்டுகொள்ளாமல் பாராமுகமாக இருந்து விடுகின்றனர். இத்தகைய உண்மையான காரணங்களால் இஸ்லாமிய சமூகம் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆகப்பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் மிகவும் வறிய நிலையில் ஏழ்மையில் உழன்று வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, இராணுவம் காவல்துறை, நீதித்துறை, ஆகியவற்றில் இஸ்லாமியர்களுடைய விகிதாச்சாரம் மிக மிகக் குறைவு என்பதை நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்கள் அளித்த அறிக்கை தெளிவாக விளக்குகிறது.

இஸ்லாமியர்கள் அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் அனைவருடனும் கைகோர்த்து ஒன்றிணைந்து நிற்க வேண்டியது அவசியம். முஸ்லிம்களின் தனித்தனியான முயற்சிகள் வெற்றி பெற இயலாது, மாறாக எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்து களத்தில் நிற்கும் உண்மையான அமைப்புகளில் பெருவாரியாக பங்கேற்க வேண்டும். இந்துத்துவ பாசிச சக்திகளை தனிமைப்படுத்த மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

தோழர் ஞானையா

இந்துத்துவ பாசிச கும்பல் தங்களது  திருவிளையாடல்களை, தமிழகத்தில் அரங்கேற்றி விடலாமென்று தீவிரமான முயற்சி மேற்கொண்டு வருகின்ற இந்த காலத்தில், அதைத்தடுத்து நிறுத்த வேண்டிய மகத்தான வரலாற்று கடமை அனைத்து ஜனநாயக சக்திகள்முன் உள்ளது. காலத்துக்கும், சூழலுக்கும் பொருத்தமான கருத்து ஆயுதம்  தோழர் ஞானையா அவர்கள் எழுதிய இஸ்லாமும் இந்தியாவும். ஒரு சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த நூலை இஸ்லாமிய சகோதரர்களும் சமத்துவ போராளிகளும் ஜனநாயக சக்திகளும் படித்து பயன்பெற வேண்டும்.

வரலாற்றில் வெற்றிபெறும் சக்திகளையும் தோல்வியுறும் சக்திகளையும் மிக எளிதாக இனம் கண்டு கொள்ள முடியும். தன்னைச் சுற்றிலுமுள்ள தனக்கு அனுசரணையாக இருக்கக்கூடிய சக்திகளை சாதுரியமாக தன்னுடனே சேர்த்துக் கொண்டு யார் வலுபெறுகிறார்களோ அவர்களே வளர்கிறார்கள். இந்துத்துவ பாசிச பயங்கரவாதத்தை வீழ்த்த போர்வாள் ஆகவும் கேடயமாகவும் இந்த நூல் பயன்படும்.

{இந்நூல் ஆசிரியர்  ஞானையா அவர்கள் தபால் தந்தி ஊழியர்  இயக்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றியவர். மாஸ்கோவில் உள்ள லெனின் அக்கடமி ஸ்கூல் ஆஃப் சயின்ஸ் (Lenin Academy of  school of sciences) என்ற கலாசாலையில் சமூகவியல் பயிற்சி பெற்றவர். பல இஸ்லாமிய நாடுகளுக்கும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்த நீண்ட அனுபவம் கொண்டவர். சுமார் 20 அரசியல் தத்துவார்த்த நூல்களை எழுதி உள்ளார்.}

நூல் : இஸ்லாமும் இந்தியாவும்
நுல் ஆசிரியர் : ஞானையா
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்
பக்கங்கள் : 336
விலை : ரூ.160.00
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்,
சென்னை – 600024.
தொடர்புக்கு : 98417 75112

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer

சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !

0

விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கக்கூடிய, அவர்களைக் கலந்து ஆலோசிக்காமலேயே அவர்கள் மீது அழுந்த திணிக்கப்பட்டிருக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் நீக்கக் கோரி நடந்து வரும் போராட்டம் இரண்டாவது மாதத்தை எட்டிவிட்டது. இது வரலாற்று முக்கியத்துவமிக்கது. வெறும் குறைந்தபட்ச ஆதார விலை பற்றியது மட்டுமல்ல, இப்போராட்டம். பொதுக் கொள்முதல் மற்றும் உணவுப் பொருள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுக் கட்டமைப்பின் எதிர்காலம் பற்றியதுமாகும்.

நாட்டின் தானியக் களஞ்சியமான வட இந்தியாவின் உணவுப் பொருள் உற்பத்திப் பொருளாதாரரீதியாகத் தாக்குப்பிடிப்பதை உத்தரவாதப்படுத்தாமல், பொதுக் கொள்முதல் மற்றும் விநியோக முறை தொடர்வதை உத்தரவாதப்படுத்த முடியாது. (இக்கட்டமைப்பு பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருந்தாலும், இதுதான் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலோருக்குக் குறைந்தபட்ச உணவுப் பாதுகாப்பை வழங்கக் கூடியதாக உள்ளது)

காலனிய காலத்தை மீண்டும் உருவாக்குதல்

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை உள்ளடக்கிய வடக்கத்திய தொழிற்துறை நாடுகள், தத்தமது நாடுகளைச் சேர்ந்த நுகர்வோருக்குத் தேவைப்படும் அளவிற்கு வெப்ப மண்டல, துணை வெப்ப மண்டலப் பயிர்களை விளைவிக்க இயலாத அதேசமயத்தில், அந்நாடுகளிடம் பால் பொருட்களும், தானியங்களும் மலைபோல் உபரியாகக் குவிந்துள்ளன. அந்நாடுகளில் நிலவும் தட்பவெப்பச் சூழல் காரணமாக, அவர்களது ஒற்றைப் பயிர் நிலங்களில் இவற்றைத் தவிர வேறு எதுவும் விளையாது என்பதால், அந்நாடுகள் இந்த உபரியை விற்றுத் தீர்க்க ஏற்றுமதிச் சந்தையைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

(இதற்காக) வளரும் நாடுகள் தமது சொந்த பொதுக் கொள்முதல் முறையைக் கைவிட்டுத் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை முன்னேறிய நாடுகளிடமிருந்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும், அதோடு, இந்தத் தொழிற்துறை நாடுகளால் விளைவிக்க முடியாத, அதேசமயம் அந்நாடுகளுக்குத் தேவைப்படும் பயிர்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யக்கூடிய வகையில் அந்நாடுகள் தமது உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் நிலங்களை ஏற்றுமதிப் பயிர்களை விளைவிக்கக் கூடிய ஒப்பந்த விவசாயத்திற்கு மாற வேண்டும் என்றும் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிற்துறை நாடுகள் வளரும் நாடுகளை இடைவிடாது தொடர்ச்சியாக நிர்பந்தித்து வருகின்றன. சுருங்கச் சொன்னால், காலனிய காலத்தில் நிலவிய பொருளாதாரச் சூழ்நிலையை மீண்டும் உருவாக்கி விட அந்நாடுகள் விரும்புகின்றன.

படிக்க : 
காட்டாமணக்கின் பெயரில் ஒரு ஏகாதிபத்திய சதி !
♦ மோடி அரசு: சர்க்கரை ஆலை அதிபர்களின் கூலிப்படை!

ஆசியாவின் பிலிப்பைன்ஸ் தொடங்கி ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா வரையிலும் பல பத்துக்கணக்கான நாடுகள் இந்த நிர்பந்தத்திற்கு அடிபணிந்தன. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தமது தானியங்களை எத்தனால் உற்பத்திக்குப் பெருமளவு திருப்பிவிட்ட அடுத்த ஒரு சில மாதங்களிலேயே, 2007-ம் ஆண்டின் இறுதியில் உலகச் சந்தையில் தானியங்களின் விலைகள் மும்மடங்காக உயர்ந்ததால், (மேற்குலக நாடுகளின் நிர்பந்தத்திற்குப் பணிந்து போன) மேற்கண்ட வளரும் நாடுகள் அதற்குரிய விலையைத் தந்தன. இறக்குமதியைச் சார்ந்து நின்ற 37 நாடுகளில் உணவுக் கலகங்கள் வெடித்ததோடு, அந்நாடுகளின் நகர்ப்புற ஏழைகள் கடுமையான பஞ்சப் பராரி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

வளரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்பை உலகச் சந்தையிடம் ஒப்படைத்துவிடும் அளவிற்கு, அவ்விடயம் மிகவும் சாதாரணமானது அல்ல என்றபோதும், உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் அந்நாடுகளின் தானிய பொதுக் கொள்முதல்-சேமிப்பின் மீது இடைவிடாத தாக்குதல் தொடுப்பது தொடர்ந்தே வருகிறது. ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு, இந்தியா இந்த அபாயத்தில் சிக்கிக் கொள்வதிலிருந்து ஏறத்தாழ தப்பித்துக் கொண்டது. 2008-க்கு முந்தைய ஆறு ஆண்டுகளாக மெய்யாகவே தேங்கிப் போயிருந்த கொள்முதல் விலைகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்த்தப்பட்டன.

பஞ்சாபில் தேங்கிப் போயிருந்த உணவு தானிய உற்பத்தி, பொருளாதாரம் சற்று முன்னேற்றம் அடைந்ததால், மீண்டும் வளர்ச்சி கண்டது. ஆனால், “வறுமைக் கோட்டுக்குக் கீழான” குடும்ப அட்டைகளைப் பெற முடியாதவாறு உண்மையான ஏழைகளுள் பலர் ஒதுக்கி வைக்கப்பட்டதாலும்; 2016 பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், அதனைத் தொடர்ந்து வந்த 2020 பெருந்தொற்று நோயும் உருவாக்கிய வேலைவாய்ப்பற்ற நிலையும் தற்போது ஒட்டுமொத்த நுகர்வை வரலாற்றில் காணாத அளவிற்குச் சுருக்கிவிட்டதாலும், (உற்பத்தி வளர்ச்சியடைந்த அளவிற்கு) உணவு தானியங்களை (ஏழைகள்) எடுத்துக் கொள்வதில் பெரிய முன்னேற்றம் காணப்படவில்லை.

நியாயமற்ற வர்த்தகச் சூழல்

எவ்விதமான காரணமும் இசைவும் இன்றி, நியாயமற்ற வர்த்தகத்திற்குள்,  சர்வதேச சந்தை விலையின் ஏற்றத் தாழ்வுகளுக்குள் நமது விவசாயிகள் தள்ளப்பட்டதோடு , அவை அவர்களை மீளமுடியாத கடன் வலைக்குள்ளும் துயரத்திலும் மூழ்கடித்தன. இதன் காரணமாக பஞ்சாபில் ஒரே கிராமத்தில் மட்டும் 59 விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்ட அவலம் நேர்ந்தது. வடக்கத்திய தொழிற்துறை நாடுகளுடனான வர்த்தகம் நியாயமற்றதுதான்.

ஏனென்றால், அத்தொழிற்துறை நாடுகள் 1990-களின் மத்தியிலேயே தத்தமது நாடுகளில் வழங்கப்பட்டு வந்த ஆதரவு விலை நடவடிக்கைகளை, தமது விவசாயிகளுக்கு நேரடியாகவே பணம் வழங்கும் பிரம்மாண்டமான மானியங்களாக மாற்றிக் கொண்டதோடு, தமது சுயநலத்திற்குப் பயன்தரத்தக்க வகையில் அத்தகைய மானியங்களை எள்ளளவும் குறைக்கக் கோர முடியாத கடப்பாடுகளாகக் குறிப்பிட்டு விவசாய ஒப்பந்தத்தையும் உருவாக்கிக் கொண்டன.

மற்ற வளரும் நாடுகளோடு சேர்ந்து இந்தியாவும் இதன் பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமெரிக்காவைப் பொருத்தவரை, அந்நாடு தனது இருபது இலட்சத்து இருபதாயிரம் விவசாயிகளுக்குக் கொடுக்கும் மானியம் என்பது, அந்நாட்டின் மொத்த விவசாய விளைபொருள் உற்பத்தி மதிப்பில் பாதிக்கும் மேலானது என்றாலும், அம்மானியம் அந்நாட்டின் பட்ஜெட் மதிப்பில் ஒரு சதவீதம்தான். இந்தியாவைப் பொருத்தவரை, நமது நாட்டின் 12 கோடி விவசாயிகளுக்கு, நமது நாட்டின் மொத்த விவசாய விளைபொருள் மதிப்பில் கால் பகுதியை மானியமாக அளிக்க வேண்டுமென்றால், மைய அரசு தனது பட்ஜெட்டில் ஏறத்தாழ 50 சதவீதத்தை இதற்காக ஒதுக்க வேண்டியிருக்கும். இது பொருளாதாரரீதியாகச் சாத்தியமற்றது என்பதோடு, நிர்வாகரீதியாக ஒரு பேய்க்கனவாகும்.

நியாயமான விலை குறித்த பிரச்சினை இது

சில்லறைத்தனமான பண உதவிகள் எதனையும் தாங்கள் விரும்பவில்லை என்பதை விவசாயிகள் மிகச் சரியாகவே தெளிவுபடுத்திவிட்டனர். நாட்டிற்காகத் தாங்கள் விளைவிக்கும் உயிராதாரமான பயிர்களுக்குச் செய்யப்படும் செலவுகளை ஈடுசெய்யக்கூடிய, பகட்டில்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான வருமானத்தைத் தரக்கூடிய நியாயமான விலை கிடைப்பதைத்தான் அவர்கள் கோருகிறார்கள். இந்தியச் சூழ்நிலையில், குறைந்தபட்ச ஆதார விலைதான் உண்மையில் நடைமுறை சாத்தியமானது. பஞ்சாபில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துகொண்டே செல்வது உண்மையான பிரச்சினைதான் என்றபோதும், இதற்கான தீர்வு, அரிசி உற்பத்தியைப் பாதிக்காத, அதேசமயம் தண்ணீர்ப் பயன்பாட்டைச் சிக்கனமாக்கக்கூடிய, முன்னேறிய விவசாயத் தொழில்நுட்பங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதுதான். தலைவலியைக் குணப்படுத்துவதற்குத் தலையை வெட்டிக்கொள்ள முடியாதுதானே!

துல்லியமாகச் சொன்னால், பயிர்களுக்கு நிர்ணயிக்கப்படும் ஆதார விலைதான் உண்மையான பிரச்சினையாகும். அதனை, முன்னேறிய நாடுகள் தன்னிச்சையாகவும் அபத்தங்கள் நிறைந்த கணக்கீடுகளின் அடிப்படையிலும் விவசாய ஒப்பந்தத்தில் உள்நோக்கத்தோடு முன்வைத்துள்ளன. 1986-88-ம் ஆண்டில் உலகச் சந்தையில் ஒரு விவசாய விளைபொருளின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டுதான் ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற முகாந்திரத்தைக் கொண்டு அமெரிக்கா மே 2018-ல் உலக வர்த்தகக் கழகத்தில் இந்தியாவிற்கு எதிராகப் புகார் ஒன்றைக் கொடுத்தது.

அப்பொழுது (1986-88) ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.12.50 தான். இதனை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் 2013-14 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் அரிசி மற்றும் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை முறையே ரூ.235, ரூ.354 ஆகத்தான் நிர்ணயிக்க முடியும். ஆனால், அவ்வாண்டில் அரிசிக்கும் கோதுமைக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஆதார விலை முறையே ரூ.1,348, ரூ.1,386. அமெரிக்காவின் புகார்படி பார்த்தால் ஒரு குவிண்டாலுக்கு ஏறத்தாழ ஆயிரம் ரூபாய் அதிகம். இந்த அபத்தமான கணக்கீடைக் கொண்டு அவ்வாண்டில் இந்தியாவில் விளைந்த மொத்த அரிசி, கோதுமை ஆகியவற்றின் மதிப்பைவிட, அரிசிக்கு 77 சதவீதம் அதிகமாகவும் கோதுமைக்கு 67 சதவீதம் அதிகமாகவும் ஆதார விலை அளிக்கப்பட்டிருப்பதாக இந்தியா மீது புகார் கொடுத்த அமெரிக்கா, இவ்வுயர்வு, 1986-88 ஆம் ஆண்டில் உலகச் சந்தையில் நிலவிய சராசரி விலையைவிட 10 சதவீதம் கூடுதலாக ஆதார விலையை நிர்ணயிக்கலாம் என்ற உலக வர்த்தகக் கழகத்தின் விதிகளுக்கு முரணானது என வாதிட்டது.

படிக்க :
♦ விவசாயிகள் வாழ்வை அழிக்கும் G-9 வாழை விவசாயம் !
♦ பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!

அமெரிக்கா, இது தொடர்பாக மேலும் பல புதிய கேள்விகளை இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. எளிதில் ஏமாறக்கூடிய வளரும் நாடுகளுக்குப் பெரிய நன்மைகள் கிடைக்காத வகையில் அறக்கேடான, அபத்தமான விதிகள் விவசாய ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த விலையில் விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. 2013-14 ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.60.50 என்றிருந்ததைக் கணக்கில் கொண்டால், அன்று தரப்பட்ட ஆதார விலை உலகச் சந்தையில் நிலவிய விலையைவிட மிகக் குறைவானதாகும் என்பதோடு, அந்த ஆதார விலையின் உண்மை மதிப்பு பூஜ்யத்திற்குக் கீழானதாகும்.

சரியான மதிப்பீடு

சர்வதேச நுகர்வில் தற்போது ஏற்பட்டிருக்கும் சுருக்கம் என்பது அரிசி, கோதுமையின் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துவிட்டதையும்; முன்னேறிய நாடுகள் தமது விவசாயத்திற்கு வழங்கிவரும் மானியங்கள் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்திருப்பதையும்; அந்நாடுகள் தமது விளைபொருட்களை நமது சந்தைகளில் கொட்டுவதற்கு எதையும் செய்யக்கூடிய அவர்களது வெறித்தனம் தீவிரம் அடைந்திருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது. தாம் எதிர்க்கும் இப்புதிய வேளாண் சட்டங்களால் பலனடையும் திறன் கொண்டவை உள்நாட்டு நிறுவனங்கள்தான் என்பதை நமது போராடும் விவசாயிகள் மிகச் சரியாக அடையாளம் காட்டியிருக்கும் அதேசமயம், அந்நிய வேளாண் தொழிற்கழகங்களும் மீப்பெரும் அபாயகரமானவைதான்.

பஞ்சாபிலும் அரியானாவிலும் அந்திய வேளாண் தொழிற்கழங்களோடு போட்டுக்கொள்ளப்பட்ட ஒப்பந்த விவசாயத்தின் இலாப நட்டங்களை விவசாயிகள் ஏற்கெனவே அனுபவித்திருக்கின்றனர். தமக்கு உகந்தது என்றால் ஒப்புக்கொள்ளப்பட்ட விலையைத் தரவும் ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்முதலைச் செய்யவும் மறுத்து பின்வாங்கிக் கொள்ளும் முகமற்ற, அதிகாரம் படைத்த தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களோடு தாம் வியாபாரம் செய்ய விரும்பவில்லை என்பதை அவர்கள் தெளிவாகவே கூறிவருகிறார்கள்.

பணம் வழங்குவதில் தாமதம் மற்றும் செயல் திறமையற்ற தன்மை உள்ளிட்ட குறைபாடுகள் இருந்தாலும், குறைந்தபட்ச ஆதார விலையில் அடிப்படையில் அரசின் முகவர்களிடம் விற்பதைத்தான் அவர்கள் தேர்வு செய்கிறார்கள். இப்புதிய சட்டங்கள் சந்தையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, இந்திய மற்றும் அந்நிய நிறுவனங்களைச் சந்தையில் நுழைய அனுமதிப்பதால், பொதுக் கொள்முதல் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை என்ற கட்டமைப்பே சீர்குலைந்துவிடும் என அவர்கள் எண்ணுவது மிகச் சரியானதுதான்.

பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்துவது

வடக்கத்திய நாடுகளிடமிருந்து மானியம் அளிக்கப்பட்ட தானியங்களை இறக்குமதி செய்வது இந்திய ஏழை நுகர்வோருக்குப் பலன் அளிக்கும் என இந்தியாவைச் சேர்ந்த பல அறிவுத்துறையினரும் வாதிட்டு வருகின்றனர். முன்னேறிய நாடுகளில் பசுமை ஆற்றலுக்கு ஆதரவாகவும் எத்தனால் உற்பத்திக்கு மென்மேலும் அதிக தானியங்களை ஒதுக்க வேண்டும் என்றும் பலம் வாய்ந்த குரல்கள் ஒலிப்பதை இவர்கள் மறந்துவிடுகின்றனர்.

தொடக்கத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் தானியங்களை இறக்குமதி செய்வதை இன்று அனுமதித்தால், அது நமது விவசாயிகளை மட்டும் நாசமாக்கிவிடாது. இறக்குமதியை நம்பியிருக்குமாறு தள்ளப்பட்ட பல்வேறு வளரும் நாடுகள் அனுபவித்ததைப் போன்ற, விலை உயர்வு மற்றும் நகர்ப்புற வறுமைத் துயர் ஆகிய சூழ்நிலைக்கும் விரைவாகவே வழி வகுக்கும். கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள் மற்றும் வறிய நுகர்வோர் ஆகியோர் மீது அக்கறை கொண்டுள்ள எவரும், உள்நாட்டு மற்றும் அந்நிய தொழிற்துறை மேட்டுக்குடிகளின் சூழ்ச்சிகளுக்கு எதிரான விவசாயிகளின் கோரிக்கைகளைக் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும்.


கட்டுரையாளர்: உத்சா பட்நாயக்
தமிழாக்கம் :  அறிவு

நன்றி : ஆங்கில இந்து, டிசம்பர் 30, 2020

அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !

7

The Nation wants to Know” – டைம்ஸ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் நடுத்தரவர்க்கத்தின் உச்சிமண்டை முடியைச் சிலிர்க்கச் செய்த அர்னாப் கோஸ்வாமியின் இந்தப் பேரிரைச்சலை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

ரோஜா’ திரைப்படத்தில் பற்றி எரியும் தேசியக் கொடியை, அரவிந்த் சாமி உருண்டு சென்று அணைத்து பெரிய திரையில் ஏற்படுத்திய ‘தேசபக்த’ உணர்ச்சியை, ஐந்தே வார்த்தைகளால் சின்னத் திரையில் ஏற்படுத்தியவர் அர்னாப் கோஸ்வாமி. அந்த அர்னாப் கோஸ்வாமியின் ‘தேசபக்தி’ தற்போது உலகுக்கே தெரியவந்து சந்தி சிரிக்கிறது.

அர்னாப் கோஸ்வாமி நடத்தி வரும் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் பார்வையாளர் கணக்கீட்டுப் புள்ளியை அதிகரிக்க “ஒளிபரப்பு பார்வையாளர் ஆய்வுக் கவுன்சில்”ன் (BARC) முன்னாள் தலைவர் பார்த்தோ தாஸ்குப்தாவுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் பார்த்தோ தாஸ்குப்தாவைக் கைது செய்தது மும்பை போலீசு. அந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கையில் பார்த்தோ தாஸ்குப்தாவின் வாட்சப் உரையாடல்களையும் ஆவணங்களாக சேர்த்துள்ளது.

அந்த வாட்சப் உரையாடல்கள் வீதிக்கு வந்ததன் விளைவாக அர்னாப் கோஷ்வாமியின் தேசபக்த முகமூடி கிழிந்துள்ளதோடு மட்டுமல்லாமல், பாசிஸ்ட்டுகளின் ஆட்சி எந்த அளவிற்கு தமது பாசிச நடவடிக்கைகளுக்கு ஊடகங்களோடு இயைந்து செயல்படுகின்றன என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது.

படிக்க :
♦ ரிபப்ளிக் டிவி : அர்னாப் கோஸ்வாமியின் டி.ஆர்.பி. தில்லுமுல்லு !

♦ அர்னாப் கைதும் பா.ஜ.க-வின் கண்ணீரும் : கேலிச்சித்திரங்கள்

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், நடந்த புல்வாமா தாக்குதல் குறித்து எதிர்கட்சிகள் உள்ளிட்டு பலரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். அப்போதெல்லாம் எதிர்க்கட்சியினருக்கும், சந்தேகம் கேட்டவர்களுக்கும் தேச விரோத முத்திரை குத்தி, நமக்கெல்லாம் காதில் இரத்தம் வரும் அளவிற்கு தேசபக்த வகுப்பெடுத்தவர் நமது அர்னாப் தான்.

இந்தத் தாக்குதல் நடந்து சரியாக ஒரு மணிநேரத்தில் ஒரு வாட்சப் செய்தியை பார்த்தோ தாஸ் குப்தாவிற்கு அனுப்புகிறார் அர்னாப் கோஸ்வாமி. “காஷ்மீரில் இந்த ஆண்டிலேயே மிகப்பெரிய தாக்குதல் நடந்து 20 நிமிடத்தில், சம்பவ இடத்திற்கு சென்ற ஒரே சேனல்” என்று குறிப்பிடுகிறார்.

அடுத்த ஒன்றரை மணிநேரத்தில் அனுப்பும் மற்றொரு வாட்சப் செய்தியில், “இந்தத் தாக்குதல் மூலம் நாம் தாறுமாறாக ஜெயித்திருக்கிறோம்” என்று குறிப்பிடுகிறார்.

தனது சேனலின் டி.ஆர்.பி ரேட்டிங் ஏறுவதற்காக, 40 இராணுவ வீரர்களை பலி கொண்ட ஒரு தாக்குதல் பயன்பட்டிருக்கிறது என்று யாரேனும் ஒரு மனிதன் மகிழ்ச்சியடைய முடியுமா? சம்பவ இடத்தில் இருந்து தமது சேனல் தான் முதலில் செய்தி தந்ததையும், இந்தத் தாக்குதல் தமக்கு தாறுமாறான வெற்றி என்றும் ஒரு மனிதனால் கூற முடியுமா? அர்னாப் போன்ற “தேச பக்தர்களால்” முடியும்.

அதைவிட, தாக்குதல் நடந்து 20 நிமிடத்தில் அங்கு அர்னாப்பின் ரிபப்ளிக் தொலைக்காட்சி சென்றிருக்கிறது என்பதே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 20நிமிடத்தில் ஒளிபரப்புச் சாதனங்களை தயார் செய்வதே கடினம் தான். ஆனால் நிகழ்வு நடந்த இடத்திற்கு அந்த நேரத்திற்குள் ரிபப்ளிக் டிவி சென்றிருக்கிறது எனில், தாக்குதல் நடத்தப்பட இருப்பது அர்னாபிற்கு முன்கூட்டியே தெரியுமா ? என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக எனக் கூறி பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை இரவோடு இரவாகத் தாக்கி அழித்ததாகவும், அதில் பல பாகிஸ்தான் தீவிரவாதிகள் இறந்ததாகவும் இந்திய அரசு தெரிவித்தது. இந்தத் தாக்குதல் நடவடிக்கை பயங்கர ரகசியமாக வைக்கப்பட்டு நடத்தப்பட்டதாகத் தெரிவித்தது மோடி அரசு.

அப்படி ரகசியமாக நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தப் பதிலடி தாக்குதல் குறித்து அர்னாப் கோஷ்வாமி மூன்று நாட்களுக்கு முன்பே பார்த்தோ தாஸ் குப்தாவிடம் தெரிவித்திருப்பது இந்த வாட்சப் உரையாடல்களில் அம்பலமாகியிருக்கிறது.

இது குறித்து, விரைவில் பெரிய சம்பவம் ஒன்று நடக்கவிருப்பதாக பார்த்தோ தாஸ்குப்தாவிடம் அர்னாப் தெரிவிக்கிறார். அதற்கு தாஸ்குப்தா, “தாவூத்தா” என்று கேட்கிறார். அதற்கு அர்னாப் பதிலளிக்கையில், “ இல்லை சார், பாகிஸ்தான். இந்த முறை பெரிய சம்பவம் நடத்தப்படும். அதே நேரம் காஷ்மீர் மீதும் பெரிய சம்பவம் நிகழ்த்தப்படும். மக்கள் மகிழும் வகையில் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.” என்கிறார்.

பாலகோட் தாக்குதலுக்கு ஒரு நாளுக்குப் பிறகு தாஸ் குப்தா, இதுதான் நீங்கள் கூறியதா என்று கேட்கிறார். அதற்கு அர்னாப் கோஸ்வாமி இன்னும் நிறைய வரவிருக்கிறது என்று கூறுகிறார். இன்னும் நிறைய வரவிருப்பதகாத அர்னாப் கூறுவதும் காஷ்மீர் மீதான பெரிய சம்பவம் என்பதும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து பறிப்பு என்பதாகப் புரிந்துகொள்ளலாம்.

அரசாங்கத்தால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஒரு தாக்குதல் – இரகசிய இராணுவ நடவடிக்கை மூன்று நாட்களுக்கு முன்பே ஒரு ஊடக நிறுவனத்திற்கு தெரிந்திருக்கிறது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலும், பாலக்கோட் பதில் தாக்குதலும்தான் மோடி மற்றும் சங்கப் பரிவாரத்தின் தேர்தல் பிரச்சார ஆயுதங்களாக இருந்தன. இத்தாக்குதல்கள் தொடர்பான எதிர்கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கேள்விகளுக்கு இன்று வரை மோடி அரசு முறையான பதிலளிக்கவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் அர்னாப் பார்த்தோ தாஸ் குப்தாவின் உரையாடல்கள் அவற்றுக்குப் பதிலளிக்கின்றன. இத்தாக்குதல்கள் அனைத்தும் திட்டமிடப்பட்ட நாடகமாக இருப்பதற்கான சாத்தியத்தை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

அர்னாப் கோஷ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சி தாக்குதல் நடந்த 20 நிமிடத்தில் ‘ஸ்பாட்டுக்கு’ சென்றதன் ரகசியமும், 3 நாட்களுக்கு முன்னரே பாலகோட் தாக்குதல் குறித்து அர்னாபுக்குத் தெரியவந்ததன் ரகசியமும், ‘முறையாக’ விசாரிக்கப்பட்டால், 40 இராணுவ வீரர்களின் உயிர்ப்பலிக்குக் காரணமான கும்பலைக் கையும் களவுமாகப் பிடிக்க முடியும்.

ஆனால் யார் விசாரிப்பது ? இந்த வாட்சப் உரையாடல்களின் மூலம் தேசத்தின் பாதுகாப்பு கேலிக் கூத்தானது அம்பலமானாலும் உச்சநீதிமன்றத்தின் கண்களில் மட்டும் அது படவே இல்லை போலும். தொட்டதற்கெல்லாம் தானாக முன்வந்து (Suo Motto) வழக்குப் பதிவு செய்யும் உச்சநீதிமன்றம் போலீசின் புனையப்பட்ட ஆதாரமற்ற கட்டுக்கதைகளுக்காக பல பத்து சமூக செயற்பாட்டாளர்களுக்குப் பிணை மறுக்கும் அதே உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை அப்படியே கடந்து சென்றிருக்கிறது.

படிக்க :
♦ அர்னாப் கோஷ்வாமி கைது : சிவசேனா கொடுத்த ஷாக் !!

♦ அலிகார் பல்கலையில் அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி குண்டர் படை அட்டூழியம் ! மாணவர்கள் மீது தேசதுரோக வழக்கு !

காஷ்மீரில் பிரிவு 370 நீக்கம் குறித்து அமித்ஷா அறிவிப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பாக பார்த்தோ தாஸ் குப்தாவும், அர்னாப் கோஸ்வாமியும் வாட்சப்பில் அது குறித்து பேசுகின்றனர். “அந்தச் செய்தியும் நம்முடையதுதான்” என்று குதூகலிக்கிறார் அர்னாப் கோஸ்வாமி.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்று காஷ்மீர் மக்கள் மீது தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதல், அம்மாநிலத்தின் அரசியல் கட்சிகளுக்குக் கூடத் தெரியாமல் ஒரு ஊடகத் தரகனுக்குத் தெரிந்திருப்பதுதான் இந்திய ஜனநாயகத்தின் இலட்சணம்.

வெளியான இந்த வாட்சப் உரையாடல்களில், அர்னாப் கோஸ்வாமி டி.ஆர்.பி ரேட்டிங்கில் தனது சேனலை மேலே கொண்டுவர பார்த்தோ தாஸ் குப்தாவின் உதவியைக் கேட்பதும், BARC-ல் தனது பதவிக்காலம் முடிந்ததும் பிரதம மந்திரி அலுவலகத்தில் ஊடக ஆலோசகர் பதவிக்கு அர்னாப்பிடம் பார்த்தோ தாஸ்குப்தா அடிபோடுவதும் என பரஸ்பர ‘உதவிகள்’ செய்யப்பட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

அதிகாரவர்க்கத்தினருக்கு இடையிலான தரகர்களாக ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் செயல்படுவது ஏற்கெனவே அம்பலமான ஒன்றுதான். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் சிக்கிய நீரா ராடியா டேப், ஊடகங்கள் குறித்த புனித பிம்பத்தை முதலில் உடைத்தது. அன்று, தரகு வேலை பார்ப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இதுதான் ஊடக தர்மம் என்று அதற்கு புதிய இலக்கணம் எழுதினார் பர்கா தத். இன்று அதற்கான பகிரங்கமான ஆதாரமாக வெளிவந்திருக்கிறது அர்னாபின் இந்த வாட்சப் உரையாடல்கள்.

This slideshow requires JavaScript.

பிரதம மந்திரி அலுவலகத்தில் ஊடக ஆலோசகர் பதவிக்கு தன்னை நியமிக்கப் பரிந்துரைக்குமாறு பார்த்தோ தாஸ் குப்தா அர்னாப்பிடம் கேட்டதற்கு ஒரு நாளைக்கு முன்னர்தான், அர்னாப் கோஷ்வாமி AS –ஐ சந்திக்கப் போவதாக அவரிடம் வாட்சப்பில் கூறியிருக்கிறார். பிரதம மந்திரி அலுவலகத்தில் ஆதிக்கம் செலுத்தவல்ல நபர்தான் அந்த AS என்பதை அனுமானிக்க முடிகிறது. இவர்களது உரையாடலில் பல இடங்களில் AS வந்து செல்கிறார்.

செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக ரஜத் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த மற்றொரு வாட்சப் உரையாடலில், “ ‘மோட்டா பாய்’ன் ஆதிக்கம் அங்கு செல்லுபடியாகவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனில் பாஜகவின் மோட்டா பாய் (பெரியண்ணன்) யார் ?

பாஜகவில் யார் அவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்று பாஜககாரர்கள் யாரைக் கேட்டாலும் அமித்ஷா என்று கூறிவிடுவார்கள். எனில், இந்த AS மற்றும் மோட்டா பாய் போன்ற குறியீடுகள் ஏன் Amit Shah-வைக் குறிப்பனவாக எடுத்துக்கொள்ள முடியாது ?

அரசாங்கத்தின் இலவச டிடிஎச் சேவையில் தமது சேனலைச் சேர்க்க, செலுத்த வேண்டிய ரு.52 கோடியை செலுத்தாமல் ரிபப்ளிக் டீவி முறைகேடு செய்திருப்பதாக, கடந்த 2017-ம் ஆண்டு, ஜூலை 7-ம் தேதி தூர்தர்ஷன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !

இந்தக் கடிதம் குறித்து பார்த்தோ தாஸ் குப்தா வாட்சப்பில் அர்னாப் கோஷ்வாமியிடம், “ரிபப்ளிக் தொலைக்காட்சி குறித்து சில புகார்கள் அமைச்சரவைக்கு வந்துள்ளன. அவை எங்களுக்கு அனுப்பப்படக் கூடும் என ஒரு இணைச் செயலர் கூறினார். ஆனால் அது எப்போதும் வரப் போவதில்லை என்று நினைக்கிறேன்.” என்று கூறுகிறார்.

அதற்கு அர்னாப், “அந்த இலவச டிஷ் டிவி விவகாரம் தானே, ரத்தோர் என்னிடம் அதுகுறித்துக் கூறினார். மேலும் அதனை அவர் புறந் தள்ளிவிட்டார்.” என்று கூறுகிறார். இங்கு குறிப்பிடப்படும் ரத்தோர், மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோராகத் தான் இருக்க முடியும். ஒரு துறைக்கு வரும் புகாரைப் புறந்தள்ளும் அதிகாரம் அந்தத் துறையின் அமைச்சருக்குத்தானே இருக்க முடியும்?

ஒரு தொலைகாட்சி குறித்து வரும் புகாரை அந்த தொலைக்காட்சிக்குத் தெரிவிப்பது அமைச்சரகத்தின் ஊழியர்களோ, அரசுத்துறை அதிகாரிகளோ அல்ல, ஒரு அமைச்சரே தெரிவிக்கிறார். அதோடு அவரே அந்தப் புகாரையும் புறந்தள்ளுகிறார்.

இதை அர்னாப் என்ற தனிநபரோ அல்லது ரிபப்ளிக் டிவி என்ற தனி ஒரு நிறுவனமோ சம்பந்தப்பட்ட பிரச்சினையாக சுருக்கிப் பார்த்துவிட முடியாது.

தற்போது வெளியாகியிருக்கும் வாட்சப் உரையாடல்கள், அர்னாப் மோடி அரசுக்கு இடையிலான உறவை மட்டும் அம்பலப்படுத்தியிருக்கின்றது. ஆனால் ஜீ நியூஸ், .பி.பி நியூஸ் என இன்னும் அம்பலப்படாத மோடியின் அடிவருடி ஊடகங்கள் எத்தனையோ ? நமக்குத் தெரியாது.

மோடி உள்ளிட்ட பாசிஸ்டுகள் அனைவரும் மக்கள் மீதான தங்களது தாக்குதல்களை வெறுமனே போலீசு மற்றும் இராணுவத்தின் துணையோடு மட்டும் அமல்படுத்துவதில்லை. மக்களின் ஒரு பிரிவினரின் அங்கீகாரத்தோடு தான் அமல்படுத்துகின்றனர். இந்த விசயத்தில் மக்களின் மத்தியில் அரசுக்கு ஆதரவாக ஒரு பொதுக்கருத்தை உருவாக்க ஊடகங்கள் என்றுமே பாசிஸ்ட்டுகளுக்கு உதவி வந்துள்ளன. ஹிட்லர் முதல் மோடி வரை நமக்கு எண்ணிலடங்காத உதாரணங்கள் இருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில், பாசிச மோடி அரசின் திடீர் தாக்குதல்களான பணமதிப்பழிப்பு, எல்லை பயங்கரவாதப் பூச்சாண்டிகள், காஷ்மீர் தனிச்சிறப்பு அந்தஸ்த்து நீக்கம், பாபர் மசூதி இடிப்பு வழக்கு, சி..., புலம்பெயர் தொழிலாளர்களை நாடோடிகளாக்கியது, வேளாண் மசோதா என அனைத்திலும் பெரும்பாலான ஊடகங்கள் மோடி அரசுடன் இணைந்து ஒத்து ஊதியிருக்கின்றன. மக்களைப் பிரிப்பதில் பெரும் பங்காற்றியிருக்கின்றன.

மோடியின் பாசிச ஆட்சியின் கீழ் மேற்கூறிய தாக்குதல்கள் மக்கள் மீது தொடுக்கப்பட்ட பின்னர், மோடி ஆதரவு ஊடகங்கள் அதற்கு முட்டுக் கொடுப்பதாகவே வெளிப்புறத்தில் நமக்கு ஒரு தோற்றம் தெரிகிறது. ஆனால், தற்போது அம்பலமாகியிருக்கும் அர்னாப் வாட்சப் உரையாடல்கள் நமக்கு வேறு ஒரு கோணத்தை சுட்டிக் காட்டியிருக்கின்றன.

அதாவது, மக்கள் மீதான தாக்குதல்கள் தொடுக்கப்படும் முன்னரே மோடியின் பாசிச அரசு ‘உரிய’ வழிமுறைகளில் ஊடகங்களுக்கு அவர்களுக்கான பாத்திரத்தை தெளிவாக விளக்கியிருக்கிறது என்பதையே இந்த உரையாடல்கள் காட்டுகின்றன.

மக்களிடம் பாசிஸ்டுகளுக்கான ஆதரவைத் தக்க வைப்பதற்கு ஏற்ற வகையில், பாசிஸ்ட்டுகள் முன்னெடுக்கும், மத வெறி, தேசிய வெறி உள்ளிட்ட ஆயுதங்களை கணிசமான கால இடைவெளியில் மக்கள் மனதில் தூவி வளர்க்கும் வேலையை திட்டமிட்ட வகையில் மோடி ஆதரவு ஊடகங்கள் செய்து வந்திருக்கின்றன.

இப்படிப்பட்ட இழிதொழிலைச் செய்வதற்கு பல மோடி ஆதரவு ஊடகங்களும் தயாராக இருப்பதைத்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் கோப்ராபோஸ்ட் இணையதளம் வெளிக் கொணர்ந்த மறைபுலனாய்வு நடவடிக்கை அம்பலப்படுத்தியது.

என்.., போலீசு, சி.பி.., அமலாக்கத்துறை, நீதித்துறை என அனைத்தும் பாசிச ஆட்சியாளர்களுக்குத் துணை நிற்பதை பல்வேறு தருணங்களில் கண்கூடாகப் பார்த்துவிட்டோம்.

ஊடகங்களைப் பொறுத்தவரையில், பெரும்பாலானவை மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவான மனநிலையில் மக்களை இருத்திவைக்கச் செய்வதற்கும், மோடி அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் கட்டுக்கதைகளைக் கட்டுவதற்கும், முன் தயாரிப்போடு செயல்பட்டு வந்திருக்கின்றன என்பதையே தற்போதைய வாட்சப் உரையாடல் காட்டுகிறது.

தற்போது நம் முன் அம்பலமாகி நிற்பது அர்னாப் கோஸ்வாமி மட்டுமல்ல – பாசிசம் நீடித்து நிலைப்பதற்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக் கொடுக்கும் ஊடகங்களின் பாத்திரமும் தான் !!


சரண்
நன்றி : The Wire, Newslaundry

வேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை !

அனைத்து பெண்கள் கூட்டமைப்பு
பத்திரிகை செய்தி
டெல்லியில் போராட்டங்களை வழிநடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஜனவரி 18-ம் நாளை பெண் விவசாயிகள் தினமாக அனுசரிக்க வேண்டும் என்ற அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் உள்ள பெண்கள் அமைப்புகள் இன்று (18.01.2021) போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று (18.01.2021) காலை 11.30 மணிக்கு சென்னை சின்னமலையில் ராஜீவ் காந்தி சிலை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கிய முற்றுகை போராட்டம் நடத்தியது.

This slideshow requires JavaScript.

திட்டமிட்டபடி காலை 11.30 மணிக்கு அனைத்து பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த  சுமார் 100 பெண்கள் சென்னை சின்னமலையில் ராஜீவ் காந்தி சிலை அருகில் ஒன்றுகூட முற்படும்போதே, ஆண் காவலர்கள் அவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை நெருங்கவிடாமல், விவசாயிகளுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பி பெண்கள் முன்னேறினர்.
பெண்களை தடுத்து நிறுத்திய ஆண் காவலர்களுக்கு எதிராகவும் பெண்கள் முழக்கமிட்டவுடன், பெண் காவலர்கள் பாய்ந்து வந்து கயிறுகளை கொண்டு வளைத்துப் பிடித்து கைது செய்ய முற்பட்டனர். ஆனாலும் பெண்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவலர்கள் பெண்களை கைது செய்து வேளச்சேரியில் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். ஆங்காங்கே போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த பெண்களை  போராட்டத்திற்குள் வரவிடாமல் காவல்துறை தடுத்து நிறுத்திவிட்டது. தோழர்கள் போலீஸ் அராஜகத்தைக் கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.

This slideshow requires JavaScript.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி போராடும் விவசாயிகளுக்கு அனைத்து பெண்கள் கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஆதரவு தெரிவிக்கும் !
தகவல்
அனைத்து பெண்கள் கூட்டமைப்பு.

பிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை

போலீசு காட்டுமிராண்டித்தனத்தை புகைப்படம் எடுப்பதையும் அதை சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் பதிவிடுவதையும் தடை செய்யும் வகையில்   பிரான்ஸ் அரசு அறிமுகப்படுத்தியுள்ள பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்துப் புதிய போராட்டங்கள் பிரான்சில் தொடங்கியுள்ளன. பிரான்ஸ் முழுவதும் பல்வேறு இடங்களில் பத்தாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

போராட்டக்காரர்கள், கோவிட்-19-லிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் அணிந்து கொண்டு, பிரச்சினைக்குரிய பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக பாரீசில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். (படம் : கிரிஸ்டோபர் எனா / AP Photo ]

கண்காணிப்பதற்கு நடைபாதை கண்காணிப்புக் கேமரா மற்றும் ட்ரோன் ஆகியவற்றைக் கண்காணிப்புக் கருவிகளாகப் பயன்படுத்துவதையும் தடை செய்யவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.

கடந்த சனிக்கிழமை (16-01-2021) அன்று பல்லாயிரம் பேர் பாரீஸ் நகரிலும், பிரான்சில் உள்ள பல்வேறு நகரங்களிலும் நடத்திய இந்தப் பேரணியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் செயற்பாட்டாளர்களுக்கும், அதிகாரவர்க்கத்தினருக்கும் இடையே வேறுபட்டது. பிரான்ஸ் முழுவதும் சுமார் 2,00,000 பேர் பேரணியில் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், போலீசோ வெறும் 34,000 பேர்தான் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டது.

“எங்கேயும் போலீசு, நீதி எங்குமில்லை” மற்றும் “அவசரநிலை, போலீசு அரசு” என்பது போன்ற முழக்கங்களைக் கொண்ட பேனர்களைக் கையில் ஏந்திக் கொண்டு பனிப் பொழிவுக்கு மத்தியிலும் பாரீஸ் நகரில் பேரணிக்கு வந்திருந்தனர்.

பேரணியில் பங்கெடுத்த லில்லெ நகரின் வடப்பகுதியைச் சேர்ந்த ஃப்ரான்கோய்ஸ் என்பவர், “இது ஒருவிதமான சர்வாதிகாரம், இந்தச் சட்டத்தைக் கொண்டு அவர்கள் எவ்வளவுதூரம் செல்வார்கள் என்று ஒருவர் கேட்கிறார். மனிதனின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான நாட்டிலேயே இதுதான் நிலைமை என்றால், நான் பிரெஞ்சுக்காரன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறேன்” என்றார்.

படிக்க :
♦ விடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் ! | படக்கட்டுரை

♦ பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’

நாடு முழுவதும் இந்தப் பேரணியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்களில் 75 பேரை போலீசு கைது செய்துள்ளது. அதில் பாரீசில் மட்டும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரார்ட் டார்மனின் தெரிவித்துள்ளார். போலீசு மற்றும் துணை இராணுவப்படையைச் சேர்ந்தவர்கள் 12 பேர் மோதல்களில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரிட்டனி நகரில் சுமார் 2400 பேர் பங்கேற்ற சட்டவிரோதமான புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போதான போலீசு நடவடிக்கைகள் போன்ற போலீசின் “பொறுத்தமற்ற” எதிர்வினைச் சம்பவங்கள் போராட்டக்காரர்களின் கோபத்தைத் தூண்டியிருக்கிறது.

மேலும் கடந்த நவம்பர் 21, 2020 அன்று நிராயுதபாணியான கருப்பின இசையமைப்பாளரை அவரது பாரிஸ் ஸ்டூடியோவிலேயே வைத்து வெள்ளை போலீசுக்காரர் தாக்கிய வீடியோ வெளியானதும், பிரான்சின் பாதுகாப்புச் சட்டத்தின் மீதான கோபம் அதிகரித்ததற்கான காரணமாகும்.  இந்தச் சட்டம் பலராலும் கண்டிக்கப்பட்டு, பலரும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் வலதுசாரியாக சரிவதை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

மேலும் கடந்த ஆண்டு நவம்பரில் டி லா ரிபப்ளிக் (De La Republique) எனும் இடத்தில் இருந்த அகதிகள் முகாமை போலீசு வன்முறையாகக் கலைத்தது உள்ளிட்ட பல்வேறு கேமராவில் பதிவான சம்பவங்கள் மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளன.

பாரீஸில் கடந்த நவம்பர் 21, 2020 அன்று இசை தயாரிப்பாளர் மிக்கேல் செக்லர் அவரது ஸ்டூடியோவின் வாயிலில் போலீசால் தாக்கப்படுகிறார். [ படம் : மிக்கேல் செக்லர் / GS Group / AFP]
முன்வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான பேரணியின் போது போராட்டக்காரர்களுக்கு அருகே நடந்து செல்லும் போலீசு அதிகாரிகள் [படம் : லெவிஸ் ஜோலி / AP Photo]
பங்கேற்றவர்கள் குறித்த கணக்கீடு அதிகாரவர்க்கத்தினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பெருமளவில் வேறுபட்டது. [படம் : லெவிஸ் ஜோலி / AP Photo]
பிரச்சினைக்குரிய பாதுகாப்பு மசோதா, போலீசின் காட்டுமிராண்டித்தன நிகழ்வுகளை மக்கள் ஆவணப்படுத்துவதை தடை செய்யும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். [படம் : லெவிஸ் ஜோலி / AP Photo]
பாரீஸ் நகரில் போராட்டக்காரர்கள் பேரணி செல்வதை போலீசு அதிகாரிகள் பார்வையிடுகின்றனர். போராட்டக்காரர்கள், அதிகமான கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்படுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். [படம் : கிறிஸ்டோப் எனா / AP Photo]
“புத்தாண்டை வரவேற்க நடனமாடியதற்காக சிறையில் இருக்கிறேன்” என்று எழுதப்பட்ட பதாகையை பிடித்திருக்கிறார் ஒரு போராட்டக்காரர். [படம் : கான்சலோ ஃபுயண்டெஸ் / Reuters]
நாடு முழுவதும் 75 பேரை கைது செய்த்து போலீசு. பாரீசில் மட்டும் 24 பேர் கைது செய்யப்பட்டனர். [படம் : கான்சலோ ஃபுயண்டெஸ் / Reuters]
அம்னெஸ்ட்டி இண்டர்நேசனல் மற்றும் பல்வேறு சங்கங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுவால் “சுதந்திரத்துக்கான பேரணிகள் ” அறைகூவல் விடுக்கப்பட்டன. [படம் : கிறிஸ்டோப் எனா / AP Photo]

தமிழாக்கம் : கர்ணன்
நன்றி : Aljazeera

கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

0

ந்திய நிறுவனமான பாரத் பயோடெக் சுயசார்பாக உருவாக்கியதாகக் கூறப்படும் கோவேக்ஸின் தடுப்பூசியையும்; இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், பன்னாட்டு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகா ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியுட் தயாரித்திருக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசியையும் அவசர காலத்தில் நிபந்தனைகளுக்குட்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கு மத்திய மருந்து மற்றும் தரநிர்ணயக் கமிட்டி அனுமதி அளித்திருக்கிறது.

இந்த அனுமதியின் முதற்கட்டமாக நாடெங்கிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட 3 கோடி பேருக்கு இத்தடுப்பூசிகளைப் போடும் நடைமுறையும் ஜனவரி 16, 2021 அன்று தொடங்கிவிட்டது.

இத்தடுப்பூசிகளின் செயல் திறன் குறித்தும், அவற்றுக்கு அவசர கதியில் அளிக்கப்பட்ட அனுமதி குறித்தும் பொதுவெளியில் பல்வேறு விமர்சனங்களும், சந்தேகங்களும், கேள்விகளும் நிலவிவரும் நிலையில் தொடங்கப்பட்டிருக்கும் தடுப்பூசித் திட்டம் முதல் நாளிலேயே பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

தமிழகத்தில் ஜனவரி 16, அன்று 16,600 முன்னணிப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டிய நிலையில், வெறும் 2,783 பேர்தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வந்துள்ளனர். குறிப்பாக, கோவேக்ஸின் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுவதற்கு மருத்துவர்கள் பலரே மறுத்திருப்பதாக ஆங்கில இந்து நாளிதழ் (ஜனவரி, 17, பக்.6) குறிப்பிட்டிருக்கிறது.

படிக்க :
♦ தடுப்பூசிகள் உண்மையிலேயே நோய்களைத் தடுக்கின்றனவா ?
♦ நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா

இத்தடுப்பூசிகளுக்குத் தரப்பட்ட அனுமதியை, இத்தடுப்பூசியைப் போடுவதற்கான திட்டத்தை யார் முழுமையாக அங்கீகரிக்க வேண்டுமோ, இத்தடுப்பூசி குறித்த நம்பிக்கையை யார் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டுமோ, அம்மருத்துவ உலகமே இத்தடுப்பூசித் திட்டத்தை ஆதரிப்பதில் இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் கு.கணேசன் இத்தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்தும் அவற்றுக்குத் தரப்பட்ட அனுமதி குறித்தும் விமர்சனக் கட்டுரையொன்றை தமிழ் இந்து நாளிதழில் எழுதியிருக்கிறார் (தமிழ் இந்து, 07.01.2021). வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ககன்தீப் காங், “கோவேக்ஸின் தடுப்பூசி கொரோனா நுண்கிருமிக்கு எதிராகச் செயலாற்றுகிறது என்பது குறித்த எந்தத் தரவுகளையும் நான் அறிந்திருக்கவில்லை” என்கிறார். “இந்தத் தருணத்தில் நான் யாருக்கும் கோவேக்ஸினைப் பரிந்துரைக்க மாட்டேன்” என்கிறார், அரசு மருத்துவ ஆராய்ச்சித்துறையின் தலைவர். “எந்த அறிவியல் தரவுகளின் அடிப்படையில் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டது?” என்ற கேள்வியை எழுப்புகிறார், அனைத்திந்திய மருந்து செயல்பாட்டுக் கூட்டமைப்பைச் சேர்ந்த மாலின் ஐசோலா (The Hindu, 04.01.2021, p.13).

“கோவேக்ஸினின் செயல்திறன் குறித்து மேலதிகமான தரவுகளைத் தருமாறு” (The Hindu, 02.01.2021, p.1) இந்தியத் தலைமை மருந்துகள் கட்டுப்பாடு ஆணையகம் கேட்ட இரண்டாவது நாளிலேயே அத்தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படுகிறதென்றால், இந்த அவசர அனுமதி குறித்து நிபுணர்களுக்கு மட்டுமல்ல, பாமரனுக்கும்கூடச் சந்தேகம் வரத்தான் செய்யும்.

இக்கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் நியாயமாகவும் நேர்மறையாகவும் பதில் அளிக்க யோக்கியதை அற்ற மோடி அரசு, கேள்வி எழுப்புவர்களைச் சுயசார்பு இந்தியாவிற்கு எதிரானவர்களாக, இந்தியா குறித்துப் பெருமை கொள்ளாத சிறுமதியாளர்களாக அவதூறு செய்து வருகிறது.

கோவேக்ஸின்

கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் அவசரச் சூழலுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டுப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு அனுமதி அளித்துள்ள மோடி அரசு, அந்நிபந்தனைகள் என்னென்ன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இவ்விரண்டு தடுப்பூசிகளுள் கோவேக்ஸினுக்கு அளிக்கப்பட்ட அனுமதியில், மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் (clinical trial mode), குறிப்பாக, உருமாறிய கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி என்ற வகையில் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்த வாரத்தைகளின் பொருள் என்னவென்றால், இத்தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் செயல்திறனையும் பரிசோதித்துப் பார்க்கும் சோதனைச் சாலை எலிகளாக இந்திய மக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதுதான்.

* * *

புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் எந்தவொரு தடுப்பூசியையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் முன், அத்தடுப்பூசியின் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு செயல்திறன் ஆகியவை குறித்து மூன்று கட்டப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அப்பரிசோதனைகளில் கிடைக்கும் முடிவுகள் மருத்துவ அறிவியல் உலகின் ஆய்வுக்கு முன்வைக்கப்பட்டு, அம்முடிவுகளை மருத்துவ அறிவியலாளர்களும் ஒவ்வொரு நாட்டின் மருந்து கட்டுப்பாடு துறையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் சட்டபூர்வ நடைமுறையும் மருத்துவ அறமுமாகும்.

முதல் இரண்டு கட்டப் பரிசோதனையைவிட மூன்றாவது கட்டப் பரிசோதனைதான் விரிவான அளவில் நடத்தப்படும். முதல் இரண்டு கட்டப் பரிசோதனைகளில் அத்தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பைத் தூண்டிவிடும் திறன் சோதிக்கப்படும்; மூன்றாவது கட்டப் பரிசோதனையில்தான் அத்தடுப்பூசியின் செயல் திறன் முழுமையாகப் பரிசோதிக்கப்படும். இதன் காரணமாகத்தான் மூன்றாவது கட்டப் பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் அச்சோதனையில் ஈடுபடுத்தப்படுவது வழமையாக உள்ளது.

கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் விடயத்தில் இந்த வழமையான சட்டபூர்வ, அறிவியல்ரீதியான நடைமுறை புறக்கணிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதைத்தான் எதிர்க்கட்சிகளும் பல்வேறு மருத்துவ அறிவியலாளர்களும் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றனர்.

கோவிஷீல்ட் தடுப்பூசியின் செயல்திறனைப் பரிசோதிப்பதற்கான மூன்றாவது கட்ட பரிசோதனை இந்தியாவில் முழுமையாகவும் தனியாகவும் நடத்தப்படவேயில்லை. ஆனால், மைய அரசோ, சீரம் நிறுவனம் அத்தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனைகளைச் சேர்த்து நடத்திவிட்டதாக சால்ஜாப்பு ஒன்றைச் சொல்லிவருகிறது. இந்த சால்ஜாப்பை உண்மையாக எடுத்துக்கொண்டாலும், கோவிஷீல்ட் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து இந்தியாவில் சேகரிக்கப்பட்ட தரவுகள் எதனையும் சீரம் நிறுவனம் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையிடம் சமர்ப்பிக்கவில்லை.

படிக்க :
♦ பதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் !
♦ கொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு !

இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் நடத்தப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகளை அப்படியே எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அந்நாடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளையும், அதனின் முடிவுகளையும் அப்படியே எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அப்பரிசோதனைகள் குறித்தே பல்வேறு விமர்சனங்களை, சந்தேகங்களை மருத்துவ அறிவியலாளர்கள் எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக, இம்மூன்று நாடுகளிலும் ஒருபடித்தான முறையில் இச்சோதனைகள் நடத்தப்படாததால், பரிசோதனையில் கிடைத்த முடிவுகளை நம்பகத்தன்மை கொண்டதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது மருத்துவ அறிவியலாளர்களின் வாதம். இங்கிலாந்து அரசு கோவிஷீல்ட் தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டிற்கு அனுமதித்துள்ள போதிலும், இன்னமும் அமெரிக்க அரசு அத்தடுப்பூசியை அமெரிக்காவில் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தடுப்பூசியின் செயல்திறன் குறித்து இன்னும் மேலதிகமான தரவுகளைக் கேட்டிருக்கிறது, அமெரிக்க அரசு.

கோவேக்ஸின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டால், அதனின் செயல்திறனைப் பரிசோதிக்கும் மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் இன்னும் முடிவடையவேயில்லை. இன்னும் சொல்லப்போனால், மூன்றாம் கட்டப் பரிசோதனையை நடத்துவதற்குத் தேவையான தன்னார்வலர்களை ஈடுபடுத்துவதுகூட இன்னும் முழுமையடையவில்லை. மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகள் மார்ச் மாதத்தில்தான் கிடைக்கும் என பாரத் பயோடெக் நிறுவனமே அறிவித்துள்ள நிலையில், அத்தடுப்பூசியைப் பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்திருக்கும் மைய அரசு, இத்தடுப்பூசி உருமாறிய கரோனை வைரஸுக்கு எதிராகவும் செயல்படும் என்ற நற்சான்றையும் அளித்திருக்கிறது.

கோவேக்ஸின் தடுப்பூசியின் செயல் திறன், அத்தடுப்பூசி உருமாறிய கொரோனா வைரஸுக்கு எதிராகச் செயல்படும் என மைய அரசு கூறியிருப்பது ஆகியவற்றை மட்டும் மருத்துவ அறிவியலாளர்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை. இத்தடுப்பூசியைத் தன்னார்வலர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை செய்வதற்கு அளிக்கப்பட்ட அனுமதி, அப்பரிசோதனைகள் நடத்தப்பட்ட முறை ஆகியவற்றையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.

கோவேக்ஸின் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து இன்னும் மேலதிகமான தரவுகளை, டிசம்பர் 30 (2020) அன்று நடந்த கூட்டத்தில் கேட்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறை, அதற்கடுத்த இரண்டொரு நாட்களிலேயே தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அத்தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கிறது. எனில், அந்த இடைப்பட்ட நாட்களில் நடந்தது என்ன என்ற கேள்வியைப் பலரும் எழுப்பி வருகிறார்கள்.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் கொரோனா தடுப்பூசியை சோதிக்க தன் உடலில் ஏற்றிக்கொள்ளும் தன்னார்வலர்
படம் : REUTERS/Eduardo Munoz

கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடனேயே, “ஆங்கில நாட்டுத் தயாரிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் சுதேசி நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படாதது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக” சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டரில் பதிவிட்டார். அப்பதிவு வெளியான 24 மணி நேரத்துக்குள்ளாகவே சுதேசி தயாரிப்பான கோவேக்ஸினுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தத் திடீர் அனுமதியின் பின்னே பா.ஜ.க.வின் சுயதம்பட்ட அரசியல் இருப்பதை மறைத்துக்கொண்டு, இது குறித்துக் கேள்வி கேட்பவர்களை அரசியல் செய்வதாக மலினமாகக் குற்றஞ்சுமத்துகிறது, மோடி அரசு.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கொரோனா வைரஸின் மாதிரியை மே 9, 2020 அன்று பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அளிக்கிறது. அம்மாதிரி தரப்பட்ட ஐம்பதாவது நாளிலேயே – ஜூன் 29 அன்று அந்நிறுவனத்தின் தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்திப் பரிசோதிக்கும் அனுமதியும் அளிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸின் மாதிரியைப் பெற்று, அதனை அழிக்கக்கூடிய தடுப்பூசியை ஆய்வகத்தில் உருவாக்கி, அதனை விலங்குகளிடம் செலுத்திப் பரிசோதித்துப் பின்னர் மனிதர்களிடம் செலுத்திப் பரிசோதிக்கும் அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்குக் குறைந்தது மூன்று மாதம் ஆகும் எனச் சுட்டிக் காட்டும் மருத்துவ அறிவியலாளர்கள், ஐம்பது நாட்களுக்குள்ளாகவே இவையனைத்தும் நடந்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றனர்.

பாரத் பயோடெக் நிறுவனம் செப்டெம்பர் 2020-ல் வெளியிட்ட அறிக்கையில், கோவேக்ஸின் தடுப்பூசியை மிருகங்களிடம் கொடுத்துப் பரிசோதித்துப் பார்க்கும் ஆய்வு ஜூன் 6-ஆம் தொடங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறது. அதேசமயம், ஜூன் 29 அன்று, அதாவது மிருகங்களின் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவதற்கு முன்பாகவே, கோவேக்ஸின் தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதித்துப் பார்க்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும், பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரஸின் மாதிரியைப் பெற்ற பத்தாவது நாளில், அதாவது மே 20, 2020 அன்று அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃபர்சன் தடுப்பூசி நிறுவனத்தோடு கூட்டுச் சேர்கிறது. அந்த அமெரிக்க நிறுவனம் கொரோனாவை அழிக்கக்கூடிய கரோவேக்ஸ் என்ற தடுப்பூசி மருந்தைத் தயாரித்திருப்பதாக முன்னரே அறிவித்திருந்தது. இதனையெல்லாம் இணைத்துப் பார்த்து, பாரத் பயோடெக் நிறுவனம் சுயசார்போடு தயாரித்திருப்பதாகக் கூறிவரும் கோவேக்ஸின் தடுப்பூசியின் ஆதிமூலம் கரோவேக்ஸாக இருக்கக்கூடும் என்ற ஐயப்பாடும் எழுப்பப்பட்டிருக்கிறது (All You Need to Know About Bharat Biotech and Covaxin During the Pandemic, The wire, 03/01/2021).

அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவரும் ஆகாஷ் சேதி, காயத்ரி லஹா என்ற இரண்டு பத்திரிகையாளர்கள் கோவேக்ஸின் தடுப்பூசி குறித்து வயர் இணைய தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரையொன்றில், “இத்தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல் திறனைப் பரிசோதிக்கும் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் கில்லுகர் மருத்துவமனை, ஜீவன் ரேகா மருத்துவமனை, பிரகார் மருத்துவமனை, ரானா மருத்துவமனை ஆகிய நான்கும் சிறிய மருத்துவமனைகள் என்றும், இம்மருத்துவமனைகள் எந்தவொரு மருத்துவக் கல்லூரியுடனும் இணைக்கப்படவில்லை” என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய இரண்டு நிறுவனங்கள் தயாரித்திருக்கும் கொரோனா தடுப்பூசிகளை அமெரிக்க மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பாக அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு நடத்திய கூட்டங்கள் தொலைக்காட்சிகளில் முழுமையாக ஒளிபரப்பப்பட்டன. மேலும், அத்தடுப்பூசிகள் தொடர்பாக நிபுணர்களும், பொதுமக்களும் எழுப்பிய கேள்விகளுக்கு நேரலையில் பதில்களும் அளிக்கப்பட்டன.

ஆனால், இந்தியாவிலோ கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகளின் முதல் இரண்டு கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் கிடைக்கப்பெற்ற தரவுகள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இத்தடுப்பூசிகள் குறித்து நடத்தப்பட்ட மருந்துக் கட்டுப்பாட்டுக் கமிட்டிக் கூட்டங்களின் கூட்டக் குறிப்புகள் முழுமையாக யாருக்கும் தரப்படவில்லை. இத்தடுப்பூசிகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதி குறித்து நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலும் அளிக்கப்படவில்லை.

மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் கோவேக்ஸின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட அரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், தடுப்பூசி செலுத்தப்பட்ட இரண்டாவது வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகும்கூட அவருக்குச் செலுத்தப்பட்டது தடுப்பூசியா அல்லது பொய் மருந்தா (placebo) என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

படிக்க :
♦ கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்
♦ இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம் ! சிறப்புக் கட்டுரை

இத்தடுப்பூசியின் மூன்றாவது கட்டப் பரிசோதனையில் பங்கேற்ற போபால் நகரை சேர்ந்த தன்னார்வலர் தீபக் மராவி (வயது 42) பலியானதை மறைக்க முயன்றதாகப் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தடுப்பூசிப் போடும் திட்டத்தின் இரண்டாவது நாளிலேயே இத்தடுப்பூசிகளால் 447 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதாகவும், அவர்களுள் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும், தடுப்பூசிப் போட்டுக் கொண்ட உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் இறந்து போனதும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

அனுமதியின் பின்னுள்ள வெளிப்படையற்ற தன்மை, தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து எழுப்பப்படும் கேள்விகள், மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட விதம் குறித்த விமர்சனங்கள் – இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால், மோடி அரசு இத்தடுப்பூசிகளுக்கு அவசர கதியில் அனுமதி அளித்திருப்பதன் உள்நோக்கத்தை யாரும் புரிந்துகொள்ள முடியும். தனது அரசின் பலமுனைத் தோல்விகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் தடுப்புக் கேடயமாக இத்தடுப்பூசிகளைப் பயன்படுத்திக் கொள்ள மோடியும் அவரது பரிவாரங்களும் முயலுகின்றன என்பதுதான் இந்த அவசர அனுமதியின் பின்னுள்ள உண்மை.

தமிழகத்தில் செங்கல்பட்டுக்கு அருகே தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்காக ஒரு தொழிற்பூங்காவையே அமைத்திருக்கும் மைய அரசு, கொரோனா தடுப்பூசியைத் தயாரிப்பதற்கு அம்மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல், ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு கொரோனா வைரஸ் மாதிரியை அளித்திருக்கிறது.

எந்த நிறுவனம் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கிறதோ, அந்த நிறுவனம்தான் தனது சொந்த செலவில் அத்தடுப்பூசியைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கும் அந்த நிறுவனம்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் மருத்துவ ஆய்வுலகில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. ஆயின், மோடி அரசோ, இத்தடுப்பூசிகளுக்கு அவசர அனுமதி அளித்திருப்பதன் மூலம், அவ்விரு கார்ப்பரேட் நிறுவனங்களின் மருத்துவ ஆய்வுக்கு மக்களின் வரிப்பணத்தை மொய்யாக எழுதியிருக்கிறது. மேலும், இந்திய மக்களைச் சோதனைச் சாலை எலிகளாகப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளித்திருக்கிறது.

இதனைத்தான் மோடி அரசு சுயசார்பு என்கிறது. நாம் அதனை கார்ப்பரேட் சார்பு எனக் குற்றஞ்சுமத்துகிறோம்.


அறிவு

ஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்!”

ரு தடவை ஸ்டாலின் ஒரு கோழியின் இறகுகளை பிடுங்கி அரசியல் கற்பித்ததாக மேற்கத்திய முதலாளியவாதிகளும், அவர்களது அடிவருடிகளான போலித் தமிழ்த் தேசியவாதிகளும் ஒரு நகைப்புக்கிடமான, பொய்யான புனைகதையை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

அதில் எந்த விதமான உண்மையும் இல்லை. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். இது விஷமிகளால் பரப்பப்படும் கட்டுக்கதை:

//ஒரு முறை ரஷ்ய அதிபர் ஒரு கோழியை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்து , அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி கீழே போட்டார். கோழி வலியால் கத்தியது, துடிதுடித்தது, முற்றிலும் பிடுங்கிய பின் அதை தூக்கி கீழே எறிந்துவிட்டார் . பின்பு அதன் முன்னால் சிறிது தானியத்தை தூவினார். அந்த கோழி அதை தின்று கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது … மேலும் சிறிது தானியத்தை தனது காலடி வரை தூவினார் அதை பொறுக்கியபடி … அந்த கோழி கடைசியில் அவர் காலடியில் வந்து நின்றது .

அப்போது ரஷ்ய அதிபர் கூறினார் . ” இதுதான் அரசியல் , மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கி பிழிந்து எடுத்து விட்டு , கடைசியில் சிறிது தானியம் போன்று எதையாவது தூவினால் தம் காலடியில் வந்து கிடப்பார்கள் ” என்று. “மக்கள் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் அவர்களின் சிறகுகள் பிய்த்து எறியப்படும். இனியாவது சிறுபான்மை இனத்தவர்கள் அற்ப சலுகைக்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும், அரசியல்வாதிகளின் பகட்டு பேச்சுக்கும் விலைபோகாவிட்டால் சரிதான். இனியும் திருந்தாத ஜென்மங்களே வாழ்ந்து தான் என்னபயன்” //

படிக்க:
♦ ஆதிக்க சாதிவெறிக் கும்பலின் அவதூறுகள் !
♦ வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !

உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கொர்பெசேவ் ஆட்சிக் காலத்தில் ஸ்டாலின் எதிர்ப்பு எழுத்தாளர் Chingiz Aitmatov எழுதிய புனைகதை, மேற்கத்திய தீவிர வலதுசாரிகளால் பரப்பப் பட்டது. அதை எந்த கேள்வியும் இல்லாமல் நம்பும் சில தமிழர்களும் சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

முதலாவதாக, அரசியல் தெரியாத முட்டாள்கள் யாரும் சோவியத் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப் படுவதில்லை. இது முழுக்க முழுக்க முதலாளித்துவ அரசியல்வாதிகளின் கண்ணோட்டத்தில் இருந்து சொல்லப் படுகின்றது.

முதலாளித்துவ நாடுகளில் இருப்பது போன்று, சோவியத் யூனியனில் “அரசு எதிர் மக்கள்” என்ற அரசியல் பேசப்படுவதில்லை. இன்னும் சொன்னால், ஸ்டாலின் காலத்தில் “அனைத்து மக்களுக்குமான நாடாக” சோவியத் யூனியன் இருக்கவில்லை. அது முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தினரின் தேசமாக இருந்தது.

தோழர் ஸ்டாலின்
மக்க்ள் மனதிலிருந்து நீங்காத தோழர் ஸ்டாலின்

அதன் அர்த்தம் முதலாளிய வர்க்கத்தினரும், அவர்களை ஆதரிப்பவர்களும் சம உரிமை கொண்ட மக்களாக கருதப் படவில்லை. ஆகவே இந்தப் புனை கதையில் சொல்லப் படும் “மக்கள்” யார் என்பது கேள்வி. இந்தக் கதையில் உவமை காட்டப்படும் கோழி முதலாளிய வர்க்கத்தினரை குறிக்கின்றதா என்பதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.

இரண்டாவதாக, “அரசு மக்களுக்கு சலுகைகள் கொடுக்கும்” முறை முழுக்க முழுக்க முதலாளித்துவ பொருளாதார அமைப்பு சார்ந்த விடயம். மேற்கத்திய நாடுகளில் கூட, பொருளாதாரம் முழுவதும் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தான் அரசு மக்களுக்கு சலுகைகள் வழங்குகின்றது.

ஒரு சோஷலிச நாட்டில் அந்த “சலுகைகள்” மக்களின் உரிமைகளாக கருதப் படுகின்றன. அவற்றை செயற்படுத்துவது அரசின் கடமை. அந்த வகையில் ஸ்டாலின் காலத்தில் கொல்ஹோஸ் போன்ற கூட்டுறவு பண்ணைகள் உருவாக்கப்பட்டன. அந்த பண்ணை அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள மக்கள், அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியதாக, அதாவது தன்னிறைவு கொண்டதாக இருக்க வேண்டும். தமக்கு தேவையான தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் எதற்காக அரசில் தங்கியிருக்க வேண்டும்?

இந்தக் கதையில் எந்த லாஜிக்கும் இல்லை. கொல்ஹோஸ் பண்ணைகள் தானியங்களை உற்பத்தி செய்வது மட்டுமல்லாது, உணவு பதனிடும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழிலகங்களையும் கொண்டியங்கின. அவர்களால் உற்பத்தி செய்ய முடியாத டிராக்டர் போன்ற இயந்திரங்களை மட்டும் அரசு வழங்கியது.

எந்த விதமான புரிதலுமின்றி, அடிப்படை அரசியல் அறிவில்லாமல் இது போன்ற கட்டுக்கதைகளை பரப்பி வரும் விஷமிகள் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது: “இனியும் திருந்தாத ஜென்மங்களே வாழ்ந்துதான் என்ன பயன்?”

முகநூலில் : கலையரசன்

disclaimer

டிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா ? || மனுஷ்யபுத்திரன்

சென்னை டாக்ஸ் யூ ட்யூபர்கள் கைதாகக் காரணமான மூவருடன் உறவுகொள்வது தொடர்பாக பேட்டி கொடுத்த பெண்ணின் நேர்காணலை பிஹைண்ட் வுட்ஸ் யூ ட்யூப் சேனல் வெளியிட்டிருக்கிறது. அந்தப் பேட்டி சுவாரசியமான ஒன்று. ஒரு சிறுகதை அல்லது நாவலில் வரும் பேட்டிபோல மிகுந்த புனைவுத்தன்மை கொண்டது.

முதலாவதாக, பிஹைண்ட் வுட்ஸில் அந்தப் பெண்ணை பேட்டி எடுக்கும் நபரின் அணுகுமுறை மிகவும் மோசமானது. தன்னை ஒரு காவல் துறை அதிகாரி அல்லது சினிமாவில் வரும் ரங்கராஜ் பாண்டே போன்ற எதிர்தரப்பு வக்கீலாக கற்பனை செய்துகொண்டு பேட்டி எடுக்கிறார். அந்தப் பெண்ணை மிக மோசமாக சித்தரிக்கும் நோக்கம் மட்டுமே அவரிடம் வெளிப்படுகிறது.

ஒரு இதழியலாளனாக நீங்கள் யாரை பேட்டி எடுத்தாலும் பேட்டி காண்பவரின் அடிப்படை கண்ணியத்தை மதிக்க வேண்டும். யூ ட்யூப் சீரழிவுக் கலாச்சாரத்தின் மற்றொரு அம்சம்தான் ஏதோ சமூகப்பொறுப்புடன் கேள்வி கேட்பதுபோன்ற இந்த பேட்டியும்.

இரண்டாவதாக, அந்தப்பெண் மிகுந்த குழப்பத்துடன் பேசுகிறார். இது ஒரு வேடிக்கை என்ற அளவில் கடந்து போய்விடும் என்று நினைத்த விஷயம் வைரலானதும் அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் காவல்துறைக்கு போகிறார். அவர் கொடுத்த ஒரு பேட்டிக்கு எதிராக அவரே புகார் செய்கிறார். ஒரு அபத்த நாடகத்தின் காட்சி இது. ஆனால் அந்தப் பெண் மோசமான நோக்கங்கள் உடையவராக தெரியவில்லை. கவன ஈர்ப்பிற்காக எதையாவது பேசுகிற , செய்கிற தலைமுறையின் பிரதிநிதி அவர். ஒரு வெற்று கேளிக்கை அல்லது எதிர் மனநிலை. இந்த மனநிலையின் விக்டிம் அவர்.

 

(பிஹைண்ட் உட்ஸ் நேர்காணல் வீடியோ)

மூன்றாவதாக, அந்தபெண் தனது செயல் குறித்து அளிக்கும் விளக்கங்கள். சென்னை டாக்ஸ்-சிற்காக எடுத்த ப்ராங் வீடியோவை பல சேனல்களுக்கும் அவர்கள் கொடுத்ததுதான் பிரச்சினை என அவர் திரும்பத் திரும்ப கூறுகிறார். அதில் எந்த அர்த்தமும் இல்லை. 1500 ரூபாய் ஊதியமாக சென்னை டாக்ஸால் தனக்கு கொடுக்கப்பட்டு ஒரு ஸ்க்ரிப்டட் வீடியோவாகத்தான் தான் பேசியதாக குறிப்பிடுகிறார். அது உண்மை எனில் மக்களின் இயல்பான வெளிப்பாடுகளை காட்டுவதாகச் சொல்லும் ப்ராங்க் வீடியோக்கள் சித்தரிக்கப்பட்ட நாடகங்கள் என்பது புலனாகிறது.

அது தனக்கு அளிக்கப்பட்ட ஸ்க்ரிப்ட் என்று சொல்லும் அந்தப்பெண் தான் பலராலும் பாலியல் ரீதியாக ஏமாற்றப்பட்டதாகவும் அதை வெளிப்படுத்தவே இப்படி பேசினேன் என ஒரு கட்டத்தில் அழுகிறார். அந்த அழுகை மனதை தொடுவதாக இருக்கிறது. ஆனால் இதில் எது ஸ்க்ரிப்டட் எது உண்மை என்ற குழப்பமும் உண்டாகிறது.
அந்தபெண் தன்னைப்பற்றி கூறும் தகவல்கள் சுவாரசியமானவை. தனக்கு யாருமில்லை என்று கூறும் அவர் அந்த வீடியோவில் கமெண்ட்ஸ் செக்‌ஷனில் தன் பெற்றோரைப்பற்றி மோசமாக எழுதப்பட்டதாலேயே புகார் கொடுத்ததாக கூறுகிறார்.

மேலும் தான் ஒரு ஆர்டிஸ்ட் என்றும், ஒரு படத்தில் நடித்திருப்பதாகவும் மெஹந்தி போடுவதில் தான் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் இப்படி பல்வேறு திறன்களைக்கொண்ட தனது பெயர் இதனால் கெட்டுவிட்டதாகக் கூறுகிறார். உண்மையில் இது வருந்தத்தக்க ஒன்று.

‘1500 ரூபாய்க்காகவா இப்படி பேசினீர்கள் ?’ என செய்தியாளர் கேட்கும்போது ‘ ஆமாம் நான் 33 ஏழைக்குழந்தைகளை வளர்க்கிறேன். அவர்களுக்கு பிஸ்கட் வாங்கவாவது அந்தப்பணம் பயன்படுமே” என்கிறார். நான் மிகவும் ஜெர்க் ஆன இடம் இதுதான். இது ஒரு பிரமாதமான சினிமா ஸ்க்ரிப்டுக்கான இடம்.

அந்தப்பேட்டியில் அந்தப்பெண் ” ஒரு பெண் இப்படிப்பேசினாள் என்பதற்காகத்தானே இப்படி தாக்குகிறீர்கள்..இதே ஒரு ஆண் பேசியிருந்தால் கண்டுக்க மாட்டீங்க’ என்ற ரீதியில் ஒரு பெண்ணிய கார்டை எடுக்கிறார். பாலியல் விக்டிம், ஏழைக் குழந்தைகளிடமிருந்து ஸ்க்ரிப்ட் இப்போது பெண்ணிய ஸ்க்ரிப்ட்டாக நகர்கிறது.
இதில் மற்றுமொரு ஹைலைட் “நான் ஐந்து கம்பெனிங்களோட அசோசியெஷன்ல இருக்கேன்…யாருக்காச்சும் வேலை வேணும்னா சொல்லுங்க வாங்கித் தரேன்”. உண்மையிலேயே செம கேரக்டர். சந்தேகமே இல்லை.

படிக்க :
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !
♦ வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !

சென்னை டாக்ஸில் அந்தப்பெண் பேசிய விஷயங்கள் அன்றாட வாழ்வில் ஆண்களும் பெண்களும் சகஜமாக உரையாடிக் கொள்ளும் பாலியல் குறித்த அதீத விருப்பங்களும் கதைகளும்தான். ஒரு அலைபேசியில் அந்தப் பெண் பேசிய விஷயங்களை அன்றாடம் பல்லாயிரம் காணொளிகள் வாயிலாக ஒரு சமூகமே கண்டு வாயரிஸத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் திடீரென எங்கிருந்தோ மர்மஸ்தானத்தில் கலாச்சார அதிர்ச்சி வெடித்துக்கொள்ளும். கையில் கிடைக்கும் யாரையாவது போட்டு அடுத்து துவைத்தால்தான் அது அடங்கும்.

அந்தப்பெண் பேசிய விஷயங்கள் எந்த சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும் என்று தெரியவில்லை. அதே சமயம் இதை ஒரு கலாச்சார புரட்சியாக கருதி யாரும் புல்லரிக்க வேண்டாம். மனித உடல்களும் காமமும் அந்தரங்கமும் கேளிக்கைப்பொருளாகும் ஒரு காலத்தின் இன்னொரு நீட்சிதான் இதுபோன்ற வெறும் கவன ஈர்ப்பிற்கான உரையாடல். அந்தப்பெண் மூவருடன் உறவுகொள்வேன் என்று சொல்லும்போது அதைக் கேட்பவர்கள் சில நொடிகள் அதை தாங்கள் கண்ட பல நூறு போர்னோ காட்சிகளோடு மனத்திரையில் விரித்து ஆர்கஸம் அடைவார்கள். அதுதான் இதில் இருக்கும் பிஸினஸ்.

பிரச்சினை, ப்ராங்க் வீடியோ எடுப்பவர்கள் திருட்டுத்தனமாக ஆபாசமாக புகைப்படம் எடுப்பவர்கள்போல மக்களின் இன்னோஸன்ஸை சுரண்டுகிறார்கள் என்பதுதான். ஒருவர் வேடிக்கையாக சொல்லும் ஒரு கமெண்ட் கூட எடிட்டிங்கில் விபரீதமான அர்த்தத்தைக் கொடுக்கும். வைரல் கண்டெண்ட் மூலம் கவனம் ஈர்க்கும் , காசு பார்க்கும் வெறி யூ ட்யூபர்களை எந்த எல்லைக்கும் போகவைக்கிறது. இது ஊடகம் சார்ந்த மாபெரும் சீரழிவு. இந்த சீரழிவு பாலியல் விஷயங்களில் மட்டுமல்ல, மோசனான அரசியல், சாதி, மத பேச்சுகள் என சமூக வலைத்தளங்களில் விரவிக்கிடக்கிறது.

கோவை 360 என்ற யூ ட்யூப் சேனலில் பரிதாபமான தோற்றத்தில் இருக்கும் ஒரு பெண் போகிற வருகிறவர்களையெல்லாம் ” நான் உன்னை லவ் பண்ணுகிறேன்’ என்றோ ” நீ என்னை ஏன் சைட் அடித்தாய்?” என்றோ ப்ராங்கிங் என்ற பெயரில் பிராண்டிக்கொண்டிருக்கும். பொதுவாக செருப்பாலடிக்கத்தோன்றும் பல அந்தரங்க அத்துமீறல்களை ஜாலி என்ற பெயரில் யூ ட்யூபர்கள் சரமாரியாக செய்துகொண்டிருக்கிறர்கள்.

கவன ஈர்ப்பிற்காக இன்ஸ்டாக்ராமில், டிக் டாக்கில் எந்த எல்லைக்கும் செல்வதுபோன்ற ஒரு மனநிலைதான் ப்ராங்க் வீடியோவில் இஷ்டத்திற்கும் பேசுவது. பத்து நிமிட புகழுக்காகவும் சில நூறு லைக்குகளுக்காகவும் மனிதர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள், தங்கள் சுய கெளரவத்தையும் கண்ணியத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்கள்.

நாம் எல்லோருமே டிக் டாக் இலக்கியா, ஜி.பி முத்து போன்றவர்களின் வெவ்வேறு வடிவங்களாகிக்கொண்டிருக்கிறோம். இந்தக் காலத்தில் இதெல்லாம் இன்னும் கற்பனை செய்ய முடியாத, விபரீத எல்லைகளை நோக்கியே செல்லும். எல்லோருக்கும் ஏதாவது ஒரு பைத்தியம். உலகமயமாதலுக்குப் பிந்தையை ஒரு உதிரிக் கலாச்சாரத்தின் நிழல்கள்.

மனுஷ்ய புத்திரன்

disclaimer

 

இந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் !

டந்தாண்டு மார்ச் மாதம், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடங்கிய நேரத்தில், டெல்லியின் நிஜாமுதீன் என்ற இடத்தில் தப்லிக் ஜமாத் அமைப்பு நடத்திய மதம் சார்ந்த கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உலகமுழுவதிலும் இருந்து இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத இந்து மதவெறி பாசிச மோடி கும்பலோ, பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்தி, தப்லிக் ஜமாத்தை சேர்ந்தவர்களை “கொரோனா பரப்பிகள்” என்று முத்திரை குத்தி சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை செவ்வனே செய்தது.

ABP இந்தி செய்தி நிறுவனமோ Warriors of Covid-19” என்றும் India TV சேனலோ “தற்கொலைப் படையினர்” என்றும் ஜீ நியூஸ், கொரோனா ஜிகாதிகள்” என்றும் தப்லிக் ஜமாத் அமைப்பினருக்கு பல பல பெயர்களையும் சூட்டி, மோடி அரசுக்கு துதிப்பாடின.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டது வெறும் தப்லிக் ஜமாத் அமைப்பினர் மட்டுமல்ல. ஏமன், எத்தியோபியா, சோமாலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து தங்கள் உயிரைக் காக்க பல்வேறு காலங்களில் இந்தியாவிற்கு வந்திருக்கும் அகதிகள் பலரையும் இந்த சம்பவம் பாதித்துள்ளது. சமுதாயத்தின் ஒரு பிரிவினரால் தாங்கள் “ஜமாத்கள்” என்று அழைக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர். (2019 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான், மியான்மர், திபெத், இலங்கை மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் இருந்து 41,000 அகதிகள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள் என்று UNHCR புள்ளிவிபரம் கூறுகிறது. உள்நாட்டுப் போரினால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் 2020-ம் ஆண்டில் முதலிடத்தில் சோமாலியா உள்ளது).

படிக்க :
♦ எது அபாயகரமானது? கரோனாவா, ஆர்.எஸ்.எஸ்.−இன் அவதூறா?
♦ அடுத்ததாக தாஜ்மகாலுக்கு குறிவைக்கும் சங்கிகள் !

டெல்லி நீதிமன்றம் 36 வெளிநாட்டவர்களை (தப்லிக் ஜமாத்தினரை) விடுவித்திருந்தாலும், டெல்லியின் கிர்கி பகுதி, மால்வியா நகர், போகல், ஜுங்புரா, வசிர்புர் பகுதிகளில் வாழ்ந்து வரும் பெரும்பாலான அகதிகள் அச்சத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.

கொரோனா தாக்குதலுக்கு ஆளாவோம் என்ற அச்சமல்ல; எங்கே எங்களை தப்லிக் ஜமாத்தை சேர்ந்த ஆட்கள் என்று முத்திரைக் குத்திவிடுவார்களோ என்று அஞ்சிதான் மார்ச் முழுக்க நாங்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்தோம்” என்கிறார் 42 வயதான சோமாலியா அகதி காத்ரா. அவரது 17 வயது மகள் அமிரா, “பல வாரங்களாக நாங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தோம். வீட்டில் இருந்த பொருட்களை வைத்துதான் சமாளித்தோம்” என்றார்.

காத்ரா மற்றும் அவரது மகள்கள் அமிரா, சமிரா ஆகியோர் தென் டெல்லியில் ஒரு சிறிய வீட்டில் ஒரு சோமாலியர் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் சோமாலியா உள்நாட்டு போரில் இருந்து தப்பிப் பிழைத்து, போரற்ற ஒரு அமைதியான வாழ்க்கையைத் தேடி 2014-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் எதிர்ப்பார்த்திருந்த அமைதி அவர்களுக்கு கிடைக்கவில்லை. பிப்ரவரி 2020 CAA எதிர்ப்புப் போராட்டத்தில் கலவரத்தை தூண்டிவிட்டது; அதற்கு அடுத்த மாதமே தப்லிக் ஜமாத் கொரோனாவை பரப்பியது என்று கூறியது அனைத்தும் அவர்களை (அகதிகளை) நிம்மதியிழக்க செய்திருக்கிறது.

டெல்லியில் இருந்த இந்த ஆறு வருடத்தில், நாங்கள் எங்கள் இனத்தின் வாயிலாகத்தான் நாங்கள் அடையாளப்படுத்தப்பட்டோம். இப்போதோ எங்களது மதமே எங்களுக்கு ஆபத்தாகிவிட்டது” என்கிறார் காத்ரா. கொரோனா பரப்பிகள் (தப்லிக் ஜமாத்) வரிசையில் தங்களையும் இணைத்துவிடுவார்களோ என்ற பயத்தினால், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணைம் வழங்கும் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களைக்கூட வாங்க வீட்டை விட்டு வெளியே வர தயங்கி இருக்கிறார்கள்.

இதே பயத்தில்தான் சோமாலியாவைச் சேர்ந்த 29 வயதான முஸ்தாப் அப்துல்லாஹி அகமதுவும் இருக்கிறார். சோமாலியாவில் பாலியல் வன்கொடுமை, கடத்தல், சித்திரவதை மற்றும் கொலைவெறிக்கு ஆளாகும் பானாதிரி பந்தபோ பஹர் சூஃபி (Banadiri Bandabow Bahar Sufi) என்ற சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர் முஸ்தாப். ஹாபர் கிதிர் (Habar Gidir) என்ற இராணுவத்தால் அவரது வீடு கைப்பற்றப்பட்டு, அவரது தந்தை கொல்லப்பட்ட பிறகு 2007 ஆம் ஆண்டு அவர் அங்கிருந்து தப்பித்திருக்கிறார்.

கடந்த 2007-ல் சோமாலியா தலைநகர் மொகாடிஷு அருகில் ஒரு அகதி முகாமில் அவர் தங்கியிருந்தபோது பல இளைஞர்களை போலவே இவரையும் அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு கடத்தியது, அங்கிருந்து எப்படியோ தப்பித்து முஸ்தாப் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். 2012-ல் மைசூரில் தன்னை இன ரீதியாக கிண்டல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை ஒரு கும்பல் கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் தனது முகத்தை அறுவைகிச்சை (Maxillofacial Surgery) செய்து சரிசெய்துள்ளார்.

என்னை நன்கு அறிந்த மக்கள் அக்கம் பக்கத்தில் இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே இருந்தேன்; வெளியே செல்வதை குறைத்து கொண்டேன். ஏற்கெனவே நடந்த டெல்லி கலவரமே எங்களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளிவிட்டது. மக்கள் அவர்களது சொந்த இனத்தையே கொல்லும்போது வெளிநாட்டு முஸ்லீம்களை சும்மா விட்டுவிடுவார்களா என்ன?” என்கிறார் முஸ்தாப்.

நாங்கள் ஏமனுக்கே திரும்பிச் செல்கிறோம்!

2014 ஆம் ஆண்டில் தனது குடும்பத்துடன் இந்தியா வந்திருக்கிறார் எத்தியோபிய அகதி ஹனன் அலி. மாணவர்களால் மட்டுமல்ல ஆசிரியர்களாலும் கிண்டலுக்கும் தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளவர் இங்கு அரசு பள்ளியில் தான் எதிர்க்கொண்ட இனவெறி சம்பவத்தை நினைவுக் கூறுகிறார். ஹனன் ஆறாம் வகுப்பு படிக்கையில், “படித்து என்ன சாதித்துவிட போகிறாய்?” என்று ஒரு ஆசிரியர் கேட்டிருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஹனன் தேசிய திறந்த பள்ளி நிறுவனம் ஒன்றில் சேர்ந்திருக்கிறார். ஏற்கெனவே இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹனனை தப்லிக் ஜமாத் விவகாரம் மேலும் அச்சத்திற்கு தள்ளியிருக்கிறது.

படிக்க :
♦ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !

இந்த துண்டு துணியே (அவருடைய பர்தா) திடீரென எங்களை சிக்கலுக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது. இதனை நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. ஆனால் இப்போது நாங்கள் எங்கள் இனத்தால் மட்டுமல்ல எங்கள் மதத்தாலும் தாக்கப்படுகிறோம்” என்கிறார் ஹனன்.

ஹனன் தங்கைகள் மற்றும் அவரது தாயார் அமினாக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன. Maulvis-களை கொரோனா பரப்பிகள் என்று ஊடகங்கள் தூற்றுவதை கண்டு அஞ்சி, அவர்கள் தங்கள் மருத்துவ சிகிச்சைக்கோ அல்லது மருந்துகள் வாங்கவோகூட மார்ச் மாதம் வெளியில் செல்லவில்லை. எத்தியோப்பியாவில் நடந்த இனக் கலவரத்தில் தனது கணவனையும் வீட்டையும் இழந்த அமினா, மீண்டும் இதுபோன்றதொரு இழப்பை சந்திக்க நான் விரும்பவில்லை என்கிறார் படபடப்புடன்.

2015 முதல் டெல்லியில் வசித்து வருகிறது 19 வயதான் ஃபர்ஹியா இப்ராஹிமின் குடும்பம். 2011 ஆம் ஆண்டு சோமாலியாவிலிருந்து தப்பித்து ஏமனுக்கு சென்ற அவரது குடும்பம், அங்கு ஏடனில் ஏற்பட்ட நெருக்கடியில் தனது தந்தையையும் சகோதரனையும் இழந்து கடைசியாக இந்தியாவிற்கு வந்திருக்கிறது. பல வருட போர்கள், பதட்டங்களுக்கு பிறகு அமைதியான வாழ்க்கையைத் தேடி வந்த இப்ராஹிமின் குடும்பத்திற்கு டெல்லி கலவரமும் தப்லிக் ஜமாத் சம்பவமும் மீண்டும் மனவுளைச்சலை தந்திருக்கிறது.

கலவரங்கள் எங்களை அச்சத்தில் ஆழ்த்தினாலும், அது ஒருநாள் முடிவுக்கு வந்துவிடும் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், தப்லிக் ஜமாத் சம்பவத்திற்கு பிறகு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு அதிகரிக்க தொடங்கியது. இது எந்தளவிற்கு என்றால், எனது தாய் ஏமனுக்கே மீண்டும் திரும்பிவிடலாம் என்று சொல்லும் அளவிற்கு!” என்கிறார் இப்ராஹிமின்.

கட்டுரையாளர் : தாருஷி அஷ்வனி
தமிழாக்கம் : ஷர்மி
நன்றி : The Wire

தஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் !

போகிப் பண்டிகையில் தேவையற்றதை எரிக்கும் விதமாக வேளாண் சட்ட நகலை எரிக்கும் போராட்டத்தை அகில இந்திய கிசான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுத்தது.

அதனடிப்படையில் கடந்த 13/01/2021 அன்று அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பி. மாசிலாமணி அவர்களின் தலைமையில் வேளாண் சட்ட நகலெரிப்புப் போராட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

படிக்க :
♦ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !

இந்தப் போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி தோழர் பி. பழனிவேல் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள், DYFI தோழர் சிவா, SFI மாவட்ட செயலாளர் தோழர் சுர்ஜித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் தோழர் பாலதண்டாயுதம், தோழர் மாரியப்பன் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் தங்க. சண்முகசுந்தரம், தோழர் ஆசாத் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

படங்கள்:

இந்தப் போராட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டு வேளாண் சட்ட நகல்கள் எரிக்கப்பட்டன.

தகவல்
மக்கள் அதிகாரம்
தஞ்சை மண்டலம்,
திருவாரூர்
தொடர்பு :
8220716242

வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !

47

09-01-2021

பத்திரிகை செய்தி:

வலது திசை விலகலில் இருந்து
கட்சியை மீட்டெடுப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே, ஜனநாயக சக்திகளே !

தமிழகத்தின் முன்னணி அரசியல் சக்திகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரும், புரட்சிகர மார்க்சிய லெனினிய குழுவாகிய, மாநில அமைப்புக் கமிட்டி, .பொ..(மாலெ), தமிழ்நாடு – (SOC – CPI (M-L), Tamilnadu) – ஆகிய எங்களது அமைப்பின் தலைமைக் குழுவில் இருந்த இரண்டு உறுப்பினர்கள் கடந்த அக்டோபர்-2019-ல் சில அமைப்புப் பிரச்சினைகளை எழுப்பினர். இது தொடர்பாக, அமைப்புக்குள் உட்கட்சி விவாதம் நடத்தி தீர்ப்பதற்குத் தலைமைக் குழு தயாராக இருந்தது.

அந்தச் சூழலில், எமது மக்கள் திரள் அமைப்புகளின் தலைமையில் கார்ப்பரேட்காவி பாசிசத்திற்கு எதிராக ஓர் எழுச்சிகரமான மாநாடு நடந்தேறிய மறுநாளே, அவ்விருவரும் மா...வின் மீது அவதூறுகளையும், இழிவான தாக்குதல்களையும், பல வடிகட்டிய பொய்களையும் வாரியிறைத்து, கட்சியில் இருந்து வெளியேறுவதாக எமது இணைய தளத்திலேயே விலகல் அறிக்கை (24.02.2020) வெளியிட்டு, அமைப்பின் மீது ஓர் அதிர்ச்சித் தாக்குதலைத் தொடுத்தனர்.

இந்தத் தாக்குதல் எமக்கும் எமது தோழர்கள் மற்றும் அமைப்பின் ஆதரவாளர்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் தோற்றுவித்தது. மாநாட்டின் வெற்றியைச் சீர்குலைத்தது.

இவ்விருவர் தொடுத்த திடீர்த் தாக்குதலைத் தொடர்ந்து, அமைப்புக்குள் இருந்த அக்கும்பலுக்கு ஆதரவான சிலரின் நெருக்கடி காரணமாகவும், மா...வில் மறைந்திருந்த ஒரு மா... உறுப்பினர் மற்றும் ஒரு மாற்று உறுப்பினரின் நெருக்கடி மற்றும் மிரட்டல் காரணமாகவும், அமைப்பில் இருந்து வெளியேறுவதாக பொதுவெளியில் அறிவித்த அவ்விருவர் மா... மீது வைத்திருந்த விமர்சனத்தை நாங்கள் ஏற்கவில்லை எனினும், அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தார்மீகப் பொறுப்பெடுத்து, மா... தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

மா...வில் இருந்து வெளியேறிய அவ்விருவரும் எழுப்பிய பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டும், உட்கட்சி விவாதத்தை நடத்தி, புதிய மா...வைத் தேர்வு செய்வதற்கான பிளீனத்தை நடத்த ஓர் இடைக்காலக் கமிட்டி (.கா..) தேர்வு செய்யப்பட்டது. இதன் பின்னர், மா...-வில் மறைந்திருந்த ஓர் உறுப்பினர் மற்றும் ஒரு மாற்று உறுப்பினர் ஆகியோர் இணைந்து மா...வில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்து மேலும் நெருக்கடி கொடுத்தனர். மா...விற்கு எதிராக, பல்வேறு சதி நடவடிக்கைகள் மூலமாக அணிகளின் மத்தியில் அவதூறு பிரச்சாரங்களை செய்ததன் மூலமும், அமைப்பு முறைகளை மீறி பலவாறாக கோஷ்டிகளைக் கட்டியும், தலைமையைக் கைப்பற்ற இவர்கள் முயற்சித்தனர். இப்பிரச்சினையில் தொடக்கத்தில் இருந்து, அமைப்பு பிளவுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில், சந்தர்ப்பவாதமாக அணுகி வந்த மா.., பின்னர் இ.கா.. மற்றும் மா...வில் மறைந்திருந்த துரோகக் கும்பலைக் கட்சியை விட்டு வெளியேற்றியது.

இதனைத் தொடர்ந்து, இந்த பிளவுவாதகலைப்புவாதசதிகார எதிர்ப்புரட்சி கும்பல், தங்களுக்கு விசுவாசமாக வளர்த்து வைத்திருந்த சிலரையும் இணைத்துக் கொண்டு, மா...வுடனும் மாவட்ட பொறுப்பாளர்களுடனும் முரண்பட்டிருந்த தோழர்களிடம் அவதூறு பிரச்சாரங்களை செய்து தங்களுடன் இணைத்துக் கொண்டு தாங்கள்தான் மா... என்று தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டனர். இதன் மூலம் மா...வைப் பிளவுபடுத்தியுள்ளனர். இதன் காரணமாக, இந்த பிளவுவாதகலைப்புவாதசதிகார எதிர்ப்புரட்சி கும்பலைக் கட்சியை விட்டு வெளியேற்றிய போது, அணிகளில் கணிசமானோர் அவர்களின் பின்னால் சென்றுள்ளனர்.

அமைப்பில் இருந்து வெளியேறியதாக பொதுவெளியில் அறிவித்திருந்த இருவரும், இந்தப் பிளவுவாத கும்பல்களின் சூத்திரதாரிகளாக பின்னணியில் இருந்து இயக்கி வந்துள்ளனர். மொத்தத்தில், இந்தக் கும்பல், தாராளவாத சந்தர்ப்பவாதத்தின் கடைக்கோடி நிலைக்குச் சென்று, கேடுகெட்டு, சீரழிந்து போய், அமைப்பை பிளவுபடுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது; பாட்டாளி வர்க்கக் கட்சியை ஒரு தாராளவாத பிரச்சார அரங்கமாக மாற்ற முயற்சித்துள்ளது.

இந்நிலையில், கட்சி பிளவுபட்டதற்கான காரணங்களான அமைப்பின் அகநிலையில் இருந்த தவறுகளைப் பரிசீலித்து புதிய தலைமையைத் தேர்வு செய்யும் பொருட்டு எமது அமைப்பின் 10-வது பிளீனம் ஜனவரி 01 முதல் 03-ம் தேதி வரை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த பிளீனம் மனந்திறந்த வகையில் பிரச்சினைகளை விரிவாகவும் ஆழமாகவும் பரிசீலித்தது.

கட்சியில் நிலவும் அகநிலைத் தவறுகளின் பொதுத்தன்மையைத் தொகுத்துப் பார்த்து, அமைப்பு வலது திசைவிலகல் அடைந்திருப்பதுதான் பிளவிற்குக் காரணம் என்பதைப் இப்பிளீனம் உணர்ந்தது. அந்த வகையில் வலது திசை விலகலை கீழ்க்கண்ட வகையில் வரையறுத்துள்ளது.

1992-க்குப் பின்னர், எமது அமைப்பினுடைய பொதுத்திசை வழியின் முக்கிய அம்சமான போர்க்குணம் வர்க்க அடித்தளம் என்ற மூல முழக்கங்களைக் கைவிட்டு, செயல்தந்திர அரசியலை மாநிலம் தழுவிய அளவில் பிரச்சாரமாக எடுத்துச் செல்லும் ஒரு தன்னெழுச்சி அரசியல் வழியை மா... நடைமுறைப்படுத்தியது. தொடக்கத்தில் சில கிளர்ச்சி நடவடிக்கைகளுடன் தொடங்கிய இந்தப் பாதை, 1997-இல் மேலும் திசை திரும்பி, வெறும் பிரச்சாரங்களை மையப்படுத்தியதாக மாறியது.

2015-இல் முன்வைக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்பட்ட கட்டமைப்பு நெருக்கடி என்ற புதிய செயல்தந்திரம், அதன் இயல்பிலேயே ஆளும் வர்க்க அரசியலின் ஒருசில கூறுகளை உள்ளடக்கியதாகவும், சோசலிசத்தை நோக்கிய புதிய ஜனநாயகப் புரட்சியை மாற்றாக முன்வைக்காமலும் அமைந்திருந்தது. இது கட்சியில் இருந்த தோழர்களின் சோசலிச உணர்வு குன்றுவதற்குக் காரணமாக அமைந்திருந்தது.

மேலும், அடிப்படை உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் முக்கியமானவை அல்ல, அரசியலைப் பிரச்சாரமாக எடுத்துச் செல்வதுதான் முக்கியமானவை என்று முன்னெடுத்துச் செல்லப்பட்ட செயல்தந்திர அரங்கின் செயல்பாடுகள் காரணமாக, அடித்தள உழைக்கும் வர்க்கத்துடன் ஐக்கியமும் நெருக்கமும் குறைந்து வரத்தொடங்கியது.

கடந்த 25 ஆண்டு காலமாகப் பின்பற்றப்பட்ட இந்தத் தன்னெழுச்சி வகைப்பட்ட பிரச்சார வேலைப்பாணியாலும், செயல்தந்திரத்தை முன்னெடுத்துச் சென்றதில் நடந்த மேற்கண்ட தவறுகள் காரணமாகவும், எமது மக்கள்திரள் அரங்கின் பிரபலத் தலைவர்களும், குட்டி முதலாளித்துவப் படிப்பாளிப் பிரிவினரும் கட்சி அமைப்பு முறைகளை மீறிய, கண்காணிப்புக்கு அப்பாற்பட்ட தனிச்சிறப்பான சலுகைகள் பெறும் நிலை உருவானது.

இவர்களைக் கையாளும் சந்தர்ப்பவாத அணுகுமுறைகள் வளர்ந்து மாநில அமைப்புக் கமிட்டியை விசாரிக்கும் விசாரணைக்குழு அமைத்தல், மாநில அமைப்புக் கமிட்டியைக் கண்காணிக்கும் கமிட்டி என்று பொருள்படும்படியான ‘ஆலோசனைக்குழு’ அமைத்தல் போன்ற கலைப்புவாத அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்டுவரும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளின் விளைவாக இந்தியாவின் அரசியல் பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்வதாக ஏற்றுக் கொண்டிருந்த மா..., கடந்த 8 ஆண்டுகளாக, மூன்றுமுறை அவகாசம் கேட்டும் ஆய்வை முடிக்காததாலும், புதிய நிலைமைகளுக்கு ஏற்ப புதிய செயல்தந்திர அரசியலை வகுத்து முன்வைப்பதாகச் சொல்லி, அதுவும் நிறைவேறாமல் இருந்ததாலும், முன்னணியாளர்கள் மத்தியில் அதிருப்தியும் சோர்வும் நிலவியது.

இதேவேளையில், 1993-க்குப் பிறகான மாநில அமைப்புக் கமிட்டிகள், உரிய காலத்தில் பிளீனத்தை நடத்தாமல் அதிகமான கால அவகாசத்தை எடுத்துக் கொண்டது, ஆண்டறிக்கைகளை முன்வைத்து, தன்னைப் பரிசீலனைக்கு உட்படுத்தாமல் இருந்தது, பிளீனங்களில் நடைமுறைக்கு சாத்தியமற்ற சில முக்கியமான தீர்வுகளை முன்வைத்ததால், அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனது போன்ற காரணங்களால் அணிகளின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன.

அதேவேளையில், அமைப்பை வழிநடத்திச் செல்வதில் அதிகாரத்துவ, அனுபவவாத, குறுங்குழுவாதத் தவறுகள் மற்றும் இவற்றின் காரணமாக, அணிகளுக்கும் தலைமைக்குமான இடைவெளி மிக அதிகமாக வளர்ந்திருந்தது என்பதை இந்தப் பிளீனம் அடையாளம் கண்டுள்ளது.

மேலும், அமைப்பில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாளுவதில் மா..க இழைத்துள்ள பல தவறுகள் பக்குவமின்மை என்ற வகையைச் சேர்ந்தவை என்பதையும், அமைப்பின் பல்வேறு மட்டங்களில் பக்குவமின்மை வளர்ந்துள்ளதையும் இந்தப் பிளீனம் அடையாளம் கண்டுள்ளது. இவையும் மா... மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன.

அமைப்பு விரிவடைந்த அளவுக்குப் போதுமான, தகுதியான இரண்டாம் தலைவர்கள் அனைத்து அரங்குகளிலும் இல்லாததாலும், குறிப்பாக, கீழ்மட்ட அணிகளைச் சோதித்து வழிகாட்டி இயக்கும் வேலையறிக்கை பரிசீலனை முறையை மா... படிப்படியாகக் கைவிட்டிருந்ததாலும், அமைப்பின் கீழ்மட்டங்களில் பல்வேறு தாராளவாத, சந்தர்ப்பவாத, குட்டி முதலாளித்துவக் கலாச்சாரம் பரவியிருந்தது.

மேற்கண்ட இந்தச் சூழலைத்தான் வலது திசைவிலகல் என்று பிளீனம் அடையாளம் கண்டுள்ளது. இந்த வலது திசைவிலகலைக் கேடாகப் பயன்படுத்திக் கொண்டுதான், ஒரு தாராளவாதக் கட்சியாக அமைப்பை மாற்றுவதற்கு இந்தச் சதிகார கும்பல் முயற்சித்து, கட்சியைப் பிளவுப்படுத்தியுள்ளது என்பதை பிளீனம் உணர்ந்துள்ளது.

இதே வேளையில், மா... .பொ.. (மாலெ), தமிழ்நாடு ஆகிய எங்களது அமைப்பு, இந்த வலது சந்தர்ப்பவாத தாராளவாத சீர்குலைவுவாத கலைப்புவாத சக்திகளுக்கு கடுகளவும் அடிபணிந்து செல்லாத, புரட்சிகர அடிப்படைக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருந்ததால்தான் கலைப்புவாதத்திற்குப் பலியாகாமல் கட்சி ஐக்கியத்தைக் கட்டிக்காத்து பிளீனத்தை நடத்தியுள்ளது.

குறிப்பாக, மாநில அமைப்புக் கமிட்டியாகிய எங்களது அமைப்பு, நக்சல்பாரி பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கிறது; மார்க்சியலெனினியமாசேதுங் சிந்தனை என்னும் சித்தாந்த அடிப்படையை உயர்த்திப் பிடிக்கிறது; எஃகுறுதிமிக்க போல்ஷ்விக் பாணியிலான லெனினியக் கட்சி அமைப்பு முறையை உயர்த்திப் பிடிக்கிறது; இந்தியாவில் சோசலிசத்தை நோக்கிய புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவதற்கான திட்டத்தை உயர்த்திப் பிடிக்கிறது; நாடாளுமன்ற சமரசப் பாதையை நிராகரித்து புரட்சியை நடத்துவதற்கான மக்கள்திரள் வழியை உயர்த்திப் பிடிக்கிறது ஆகிய அடிப்படை அம்சங்களில் ஊன்றி நின்றதால்தான், இந்தச் சதிகார கும்பலால் கட்சியின் தலைமையை முழுமையாகக் கைப்பற்ற இயலவில்லை என்றும், அதனால்தான் இச்சீர்குலைவு கும்பல் கட்சியைப் பிளவுபடுத்தும் சீர்குலைவு நடவடிக்கைகளில் இறங்கியது என்றும் உணர்கிறோம்.

இந்தச் சூழலில், 25 ஆண்டுகளாக நிகழ்ந்த வலது திசை விலகலுக்குப் பொறுப்பேற்று அணிகளிடம் மா... சுயவிமர்சனமாக முன்வந்துள்ளது. குறிப்பாக, மா... செயலரின் தவறுகள் இந்த திசைவிலகலில் முக்கியப் பங்காற்றியதையும் இந்தப் பிளீனம் விமர்சனமாக முன்வைத்தது. வலது திசைவிலகலின் பல்வேறு கூறுகளைக் கூர்மையாக, விரிவாக, ஆழமாகப் பரீசிலித்து அணிகள் மத்தியில் தன்னையும் மொத்த அமைப்பையும் விரிவான சுயபரிசீலனைக்கு மா... உட்படுத்தியது.

பிளீனத்தின் கூட்டத்தில் பல சுற்றுக்கள் நடந்த வாதப்பிரதிவாதங்களில், கட்சியின் அணிகள் ஜனநாயக பூர்வமாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர், தலைமையில் தவறுகளைக் கூர்மையாக விமர்சித்தனர். கலைப்புவாதத்திற்கு பலியாகி, அது தவறு என்று உணர்ந்து பின்னர் மா...வின் தலைமையை ஏற்றுக்கொண்ட அணிகளில் சிலர் தங்களது சுயவிமர்சனம் ஏற்றனர்.

தங்களது பகுதிகளில் இக்கலைப்புவாதிகளை அண்டாமல் சில மாவட்டப் பகுதி தோழர்கள் அமைப்பைக் கட்டிக்காத்துள்ளனர். சில மாவட்டப் பகுதிகளில் வழிகாட்டி இயக்குவதற்கான பொறுப்பாளர்கள் இல்லாத நிலையிலும், சில அணிகள் தமது சொந்த அனுபவத்தின் ஊடாகப் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, சீர்குலைவுவாதிகளை முறியடித்து, மா...வின் தலைமையை உறுதிப்படுத்தியுள்ளதை இந்தப் பிளீனம் அங்கீகரித்து அத்தோழர்களுக்குப் புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

மொத்தத்தில், கட்சியில் பிளவு ஏற்பட்டிருந்தாலும், சதிகாரக் கும்பல் வெளியேற்றப்பட்டது ஒரு நல்நிகழ்வே என்றும், இதன் மூலம் வேண்டாத கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு கட்சியானது தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இப்பிளீனம் உறுதிபடத் தீர்மானித்துள்ளது. கட்சியின் பிளவுக்கான காரணம் வலது திசைவிலகல் என்று அடையாளம் கண்டிருப்பதும், அதனைத் தீர்ப்பதற்கு சரியான வழிமுறைகளை இந்தப் பிளீனம் முன்வைத்திருப்பதும், மொத்த அமைப்பிற்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.

கட்சியில் ஏற்பட்டுள்ள வலது திசைவிலகலை முறியடித்து எஃகுறுதிமிக்க கட்சியைக் கட்டியமைப்பது, போர்க்குணம் வர்க்க அடித்தளம் என்ற பொதுத் திசைவழியின் மூல முழக்கத்தை உறுதியாக அமல்படுத்துவது; கோட்பாட்டை நடைமுறையுடன் இணைப்பது, கட்சியை மக்களுடன் இணைப்பது; கட்சியின் அனைத்து மட்டங்களிலும் மார்க்சிய லெனினிய சித்தாந்த மட்டத்தை உயர்த்துவது; இந்திய அரசியல் பொருளாதார சமூக நிலைமைகள் குறித்த ஆய்வினை முடிப்பது ஆகிய கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியும் அக்கறையும் கொண்ட ஒரு புதிய மாநில அமைப்புக் கமிட்டியை இந்தப் பிளீனம் தேர்வு செய்தது.

மா.., .பொ..(மாலெ), தமிழ்நாடு ஆகிய எமது அமைப்பில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவை முறியடித்து, கட்சி ஐக்கியத்தைப் பாதுகாத்து, வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்டெடுக்கும் வகையில் நடந்து முடிந்துள்ள இந்தப் பிளீனம், எமது அமைப்புக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள புரட்சிகர மாலெ இயக்க வரலாற்றிலும் முக்கியமான திருப்பு முனையாகும். திரிபுவாத, சந்தர்ப்பவாத, கலைப்புவாத, பிளவுவாத, சதிகார, எதிர்ப்புரட்சி கும்பல்களை புதைகுழிக்குத் தள்ளும் மரண அடியாகும்!

♠ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்டெடுப்போம் !
♠ கலைப்புவாதம் – பிளவுவாதம் – சீர்குலைவுவாதம் தாராளவாதம் சந்தர்ப்பவாதம் அதிகாரத்துவம் சமரசவாதம் அனுபவவாதம் குறுங்குழுவாதத்தை முறியடிப்போம் !
புரட்சிகர மக்கள்திரள் வழியில் கட்சியின் திசைவழியை உறுதி செய்வோம்
!
எஃகுறுதிமிக்க போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைப்போம்
!
மார்க்சிய
லெனினியமாசேதுங் சிந்தனையையும், நக்சல்பாரி பாரம்பரியத்தையும் உயர்த்திப் பிடிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம் !

*****

எமது தொழிற்சங்க அரங்கின் பொதுச்செயலாளராக இருந்தவரின் ஊழல் நடவடிக்கைகள் குறித்த எமது விளக்கம் மற்றும் சுயவிமர்சனம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே, ஜனநாயக சக்திகளே!

எமது தொழிற்சங்க அரங்கின் செயலாளராக இருந்த சுப.தங்கராசு என்பவர், பெல் நிறுவனத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வாங்கித் தரும் சொசைட்டியின் செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த வீட்டுமனை வாங்கும் விசயத்தில் அவர் ஊழல் செய்வதாக கடந்த அக்டோபர்-2019-ல் கட்சித் தலைமைக்கு புகார் வந்தது. புகார் கிடைக்கப்பெற்ற உடனே, தொழிற்சங்க தலைமைக்குழு மூலமாக இது குறித்து விசாரிக்க ஏற்பாடு செய்தோம். அவர்களும் விசாரணைக்குழு அமைத்து விசாரித்து, விசாரணை அறிக்கையும் சமர்ப்பித்தனர். அவ்வறிக்கையில் ஊழல் மட்டுமல்லாமல் அனாதீன நிலத்தை வாங்கியதும் தெரிய வந்தது.

மா...வில் இருந்து இருவர் வெளியேறியிருந்த சூழலில், அது தொடர்பான வேலைகள், மக்கள் திரள் அரங்கின் மாநாட்டு வேலைகள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த ஊழல் பிரச்சினை தொடர்பான விசாரணைக்குழு அறிக்கை மீது மா..க கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. புறநிலையாக பல்வேறு காரணங்கள் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாகவும் இந்த அலட்சியம் நடந்தது.

இந்த நிலையில், 2020 ஜூலை 29-31 தேதியிட்ட நக்கீரன் இதழில் இந்த ஊழல் குறித்த செய்தி வெளியானது. சமூக ஊடகங்களிலும் நூறு கோடி ஊழல் என்றும், இன்னும் பலவாறாக அவதூறாகவும் பலரும் எழுதினர். இதன் பின்னர், தொழிற்சங்கத் தலைமைக் குழுவானது தங்கராசுவை உடனடியாக இடைநீக்கம் செய்தது. முறைப்படியான நடவடிக்கைகளுக்குப் பின்னர், தங்கராசு தொழிற்சங்க அமைப்பில் இருந்தும் கட்சி அமைப்பில் இருந்தும் முழுமையாக நீக்கப்பட்டார்.

தங்கராசு விவகாரத்தில் மா... முறையாகச் சோதித்தறியாமல் பாரிய தவறிழைத்துள்ளதை உணர்ந்து சுயவிமர்சனம் ஏற்றது. குறிப்பாக, அவரை நேரடியாக இயக்கிய மாவட்டப் பொறுப்பாளர் மற்றும் மா... செயலர் ஆகிய இருவரும், இப்பிரச்சனையில் சொசைட்டி அலுவலகம் மற்றும் வசதிகளை அமைப்பு ரீதியாக உபயோகப்படுத்திய பயன்பாட்டுவாதம், தங்கராசு உடனான சமரசமான சகவாழ்வில் இருந்த குட்டி முதலாளித்துவத் தன்மை, முறையாக சோதித்தறியாதது, தனிச்சலுகை அளித்து அவரை நடத்தியது போன்றவற்றை சுயவிமர்சனமாக ஏற்றதை கடந்த 2021 ஜனவரி 1-3 தேதிகளில் நடந்த எமது அமைப்பின் பிளீனம் ஆகப் பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்டது.

மேலும், தங்கராசு மீது ஊழல் புகார் வந்தவுடன், விசாரணைக்குழு அமைப்பதில் மா.அ.க விரைந்து செயல்பட்டதை பிளீனம் அங்கீகரிக்கும் அதே வேளையில், அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்ததற்கான சுயவிமர்சனத்தை பிளீனத்தின் ஆகப் பெரும்பான்மை ஏற்கவில்லை.

ஓர் மா..க உறுப்பினர் மற்றும் மா...வின் செயலர் ஆகிய இருவரையும் இந்த மா...வின் பொறுப்புக்காலம் முடிவடையும் நிலையில் இருந்தாலும் மா...வில் இருந்து நீக்க வேண்டும் என்றும், புதிய மா...வுக்கு தேர்வு செய்யப்படக் கூடாது என்றும், இத்தவறு நிகழ்ந்த காலத்தில் பொறுப்பில் இருந்த மற்ற மூன்று மா... தோழர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், இந்தப் பிளீனம் ஆகப் பெரும்பான்மையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த ஊழல் பிரச்சினையானது, கட்சியின் வலது திசை விலகலின் ஓர் அங்கமாகவே உருவாகி, வளர்ந்து, வெளிப்பட்டுள்ளது என இந்தப் பிளீனம் பரிசீலித்து உணர்கிறது.

எமது அமைப்பில் 30-40 ஆண்டுக் காலமாகப் பணிபுரிந்து தலைமைக் குழுவிலும் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு, அற்ப அமைப்புப் பிரச்சினைகளை முன்வைத்து அமைப்பிலிருந்து விலகுவதாக பொதுவெளியில் அறிவித்துவிட்டு ஓடிப்போன இரண்டு மா... உறுப்பினர்களும், மா...விலியே மறைந்திருந்து மா... வுக்கு நெருக்கடி கொடுத்துவிட்டு ஓடிப் போயுள்ள மேலும் இரண்டு மா... உறுப்பினர்களும் இந்தப் பிரச்சினையை நன்கு அறிந்தவர்கள்தான்.

தங்கராசுவை முறையாக சோதித்தறியாமல் தாராளவாதமாக மா... நடந்துகொண்ட தவறில் இவர்களுக்கும் பங்கிருக்கிறது. ஆனால், தற்போது மா...மீது கேடாக அவதூறு பிரச்சாரம் செய்து தங்களை உத்தமர்களைப் போல காட்டிக் கொள்ளும் நயவஞ்சக கபட வேடதாரிகளாக இந்தக் கும்பலை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும் என்று இந்தப் பிளீனம் அறைகூவல் விடுக்கிறது. தங்கராசுவுடன் சமரசமாக நடந்து கொண்டு கலைப்புவாத நடவடிக்கைகளால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறரையும் இந்தப் பிளீனம் வன்மையாக க் கண்டிக்கிறது.

இவர்கள் தவிர்த்த, இப்பிரச்சினையில் ஏதேனும் ஒருவகையில் தொடர்புடைய இப்பிரச்சினை குறித்து கண்டிக்காத பிற தோழர்கள் மீதும் பிளீனம் தனது கண்டனத்தைப் பதிவு செய்கிறது. இந்த ஊழல் பிரச்சனையில் படிப்பினையாக, பிரபலமான முன்னணியாளர்களுக்கு சிறப்புச் சலுகைக் காட்டுவது, பயன்பாட்டுவாதம், தாராளவாதம், முறையாக சோதித்தறியாதது ஆகியவற்றுக்கெதிராக தோழர்கள் அனைவரும் அமைப்பு முழுவதும் விழிப்புணர்வுடன் இருந்து போராட வேண்டும். அமைப்பு முழுவதும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டு நெறிமுறை மற்றும் கண்ணோட்டத்தில் ஊன்றி நின்று குறிப்பாக தலைமையாக செயல்படக்கூடிய தோழர்கள் செயல்பட வேண்டும் என்று பிளீனம் ஆகப் பெரும்பான்மையாக முடிவு செய்கிறது.

மா...வின் மீதிருந்த அதிருப்தியின் காரணமாக, சதிகாரகலைப்புவாதக் கும்பலின் அவதூறுகளுக்கு பலியாகியுள்ள, புரட்சியை நேசிக்கின்ற தோழர்களே!

கட்சியைக் கைப்பற்றும் நோக்கில் நடைபெற்ற சதியை அம்பலப்படுத்தியுள்ளோம். சதிகாரர்கள், கலைப்புவாதிகள், சீர்குலைவுவாதிகள் ஆகியோரின் தன்மையை வெளிக் கொணர்ந்துள்ளோம். தற்போது அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கு கட்சி வலது திசைவிலகல் அடைந்திருப்பது அடிப்படை காரணமாக அமைந்துள்ளது என்று உணர்ந்துள்ளோம். இதில் இருந்து அமைப்பை மீட்டு சரியான மாலெ அடிப்படையிலான நமது மக்கள்திரள் வழியில் அமைப்பை நிலைநிறுத்த இந்தப் பிளீனம் உறுதி பூண்டுள்ளது. தவறுகளை அடையாளம் கண்டு சுயவிமர்சனத்துடன் திருத்திக் கொள்வதற்கான வழியைக் கண்டடைந்துள்ளது.

எனவே, நமது புரட்சிகரக் கட்சியின் அடிப்படையை, பாரம்பரியத்தினை உயர்த்திப் பிடித்து முன்னேறுவதற்கு, சீர்குலைவுவாதிகள் கலைப்புவாதிகளைப் புறக்கணித்துவிட்டு, மீண்டும் கட்சியில் இணைந்து செயல்பட முன்வாருங்கள் என இந்தப் பிளீனத்தின் மூலமாக அழைக்கிறோம்!

எமது அமைப்புக்குப் பலவகையிலும் உதவி வந்துள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளே, எமது அமைப்பை நேசிக்கும் உழைக்கும் மக்களே,

எமது அமைப்பின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திய சதிகாரர்கள் பிளவுவாதிகளை எமது அமைப்பிலிருந்து வெளியேற்றி, சரியான திசையில் நாங்கள் மீண்டும் பயணிக்கத் தொடங்கியுள்ளோம். எனவே, உங்களிடம் நிலவிய குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் கைவிட்டு எப்போதும் போல எங்களுக்கு ஆதரவாக நிற்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்! புரட்சியைச் சாதிக்கும் மகத்தான கடமையை நிறைவேற்ற எல்லா வகையிலும் எமக்கு உதவியாக நின்று தோள் கொடுப்பீர்கள் என்றும் நாங்கள் திடமாக நம்புகிறோம்!

புரட்சிகர வாழ்த்துகள்!

கும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் !

ருவர் கனமான சிமிண்ட் கல்லால் பின்னந்தலையில் பலமாக தாக்குகிறார். தாக்கப்பட்ட அந்த இளைஞர் நிலைகுலைந்து கீழே விழுகிறார். முடிவெட்டுகிற அம்பட்ட நாய் நீ, எங்க பொண்ணு உனக்கு கேக்குதா என்று கூறிக்கொண்டே 12 பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை செருப்புக் காலால் எட்டி உதைக்கின்றனர். நெஞ்சில் ஏறி மிதிக்கின்றனர். வயிற்றில் கற்களால் அடித்து காயப்படுத்துகின்றனர். தரதரவென்று இழுத்துச் சென்று மார்பில் கத்தியால் குத்துகின்றனர். வயிற்றிலும் கத்தி குத்து. அந்த இளைஞர் பரிதாபமாக ரத்தம் கசிந்து இறந்து போகிறார்.

இந்த சம்பவம் பிற்பகல் 1.30 மணியளவில் நடக்கின்றது. கொல்லப்பட்ட இடம் கரூர், கல்யாண பசுபதி ஈஸ்வரன் கோவில் எதிரில். கோவிலுக்கும் காவல்நிலையத்திற்கும் இடையில் உயிர்போகும் நிலையில் துடிதுடித்து கிடந்தார் 23 வயது ஹரிஹரன். கல்யாண பசுபதி ஈஸ்வரன் கோவிலை கருமாதி தளமாக மாற்றியிருக்கின்றனர் சாதி வெறி பிடித்த கும்பல்.

படிக்க :
♦ உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !
♦ மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது வேதாளம் !

ஹரிஹரன் ஏன் கொல்லப்பட வேண்டும்?

எவிடன்ஸ் குழுவினர் களஆய்வில் ஈடுபட்டனர். கரூர், தெற்குத் தெருவில் வசித்து வருபவர் ஜெயராமன். சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஹரிஹரன் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியாக சலூன் கடை வைத்துள்ளார்.
ஹரிஹரனின் வீட்டிற்கு அருகாமையில் தான் வேலன் என்பவர் குடியிருக்கிறார். வேலனின் மகள் மீனாவும் ஹரிஹரனும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு மீனாவின் குடும்பத்தினர் கடும் எதிர்பபு தெரிவித்து வந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீனாவின் தந்தை வேலன், பெரியப்பா சங்கர், சித்தப்பா முத்து, தாய்மாமன்கள் கார்த்திகேயன், வெள்ளைச்சாமி ஆகிய 5 பேர் ஜெயராமன் வீட்டிற்கு சென்று, உங்கள் மகனை ஒழுங்காக இருக்க சொல்லுங்கள். நாவிதர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். உங்கள் சாதி என்ன எங்கள் சாதி என்ன? உங்கள் மகன் எங்கள் பெண்ணிடம் பழகுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

சம்பவ இடத்தைப் பார்வையிடும் எவிடன்ஸ் கதிர் குழுவினர்

இதனை அறிந்த மீனா அலைபேசி மூலமாக ஹரிஹரனின் தாயார் சித்ராவை தொடர்பு கொண்டு, உங்கள் மகனை நான் காதலிக்கிறேன். என்ன நடந்தாலும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் 06.01.2021 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் 12 பேர் கொண்ட கும்பல் ஹரிஹரனை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். பொது மக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இந்த கொலை நடந்திருக்கிறது.

சங்கர் ஆணவக்கொலை என்பது ஒரு கூலிப்படை வேகமாக அரிவாளால் வெட்டி கொலை செய்து இடத்தைவிட்டு கிளம்பினார். ஆனால் ஹரிஹரன் சுமார் 30 நிமிடம் தாக்கப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். சுமார் 200 மீட்டர் இடைவெளியில் காவல்நிலையம் இருக்கிறது. அந்த பகுதியில் போலீசாரும் ரோந்து பணியில் இருந்திருக்கின்றனர். இரண்டு நிமிடத்தில் அந்த பகுதிக்கு வந்து அந்த இளைஞரை மீட்டிருக்க முடியும்.

கொல்லப்பட்ட இளைஞர் ஹரிஹரன்

அந்த பகுதியில் இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் எமது குழுவினரிடம் 12 – 15 பேர் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறினார்கள். ஆனால் மீனாவின் குடும்பத்தினரை மட்டும் குற்றவாளிகளாக வழக்கில் போலீசார் சேர்த்துள்ளனர். பிற உடன் வந்த கும்பலை வழக்கில் சேர்க்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. குற்றவாளிகளில் 3 பேரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரும் கும்பலோடு ஒரு இளைஞரை தாக்குகின்ற போது பொது மக்கள் அச்சமடைந்து தடுக்க வரமாட்டார்கள். இதனை உணர்ந்துதான் மீனாவின் குடும்பத்தினர் பெரும் இளைஞர் அடியாள் கும்பலோடு சேர்ந்து கொண்டு அந்த இளைஞர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. காதலிக்கும் இளைஞரை பொது இடத்திற்கு வரவைத்து கல்லால் அடித்து கொல்வது என்பது நாகரீகமற்ற படுபாதக செயல். தமிழ்நாட்டில் இதுபோன்ற கலாச்சாரம் துவங்கியிருப்பது பெரும் ஆபத்து என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

படிக்க :
♦ கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !

கும்பல் தாக்குதல், படுகொலை வன்முறையை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மிகப்பெரிய கலவர பூமியாக தமிழகம் மாறும்.
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மட்டும் 9 ஆணவக்கொலைகளும் மரணங்களும் நடந்துள்ளன. ஆனால் தமிழக அரசு இவற்றை தடுப்பதில் போதிய ஆர்வமும் அக்கறையும் காட்டவில்லை.

கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணவக்கொலையை தடுப்பதற்கு ஒவ்வொரு மாநில அரசுக்கும் 20 வழிகாட்டுதல் நெறிமுறைகளை தீர்ப்பாக வழங்கி நடைமுறைப்படுத்த வலியுறுத்தியிருக்கிறது. தமிழக அரசு இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கொண்டிருக்கிறது.

ஆய்வு முடிந்து திரும்புகையில் ஹரிஹரனின் உறவினர் ஒருவர் நாட்டில் உள்ள மக்களையெல்லாம் நாங்கள் அழகுபடுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் சாதி எங்களை அசிங்கப்படுத்துகிறது; அழிக்கிறது; கொலை செய்கிறது என்றார்.
மீனா சாட்சி சொல்ல வரமாட்டார். பார்த்தவர்கள் எல்லாம் பயந்து கிடக்கிறார்கள். ஒத்த குடும்பம் நீதிக்காக காத்துகிடக்கிறது. பார்ப்போம்.

முகநூலில் : எவிடென்ஸ் கதிர்

disclaimer

வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !

0

த்திய அரசால் இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க இன்று (12-01-2021) உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். மேலும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே தேங்கி நிற்கும் பேச்சுவார்த்தையை நடத்தி தீர்வு காண்பதற்காக கமிட்டி ஒன்றையும் ஏற்படுத்தியிருக்கிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்..பாப்டே, .எஸ். போபண்ணா, ராமசுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிவருவது தொடர்பான வழக்கில் மேற்கண்ட உத்தரவை வழங்கியுள்ளது.

இதற்கு முன்னரே, கடந்த திங்கள்கிழமை (11-01-2021) அன்று விவசாயிகள் போராட்டத்தைக் கையாளுவதில் “விளைவுதரும் நடவடிக்கைகள்” எதையும் எடுக்காமல் இருக்கும் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டித்தது. இது குறித்து இன்று (12-01-2020) தாம் முக்கிய முடிவெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

படிக்க :
♦ வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !
♦ வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !

அந்த வகையில் இன்று இந்த சட்டத்தை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த ஒரு கமிட்டி ஒன்றை அமைத்தும், அக்கமிட்டியில் இடம்பெறக்கூடிய நபர்களை முன்மொழிந்தும், அக்கமிட்டிக்கு இருதரப்பும் ஒத்துழைக்குமாறும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதையும் இதற்கு முன்னர் நேற்று மோடி அரசை ‘கண்டித்ததையும்’ சுட்டிக் காட்டி பலரும் இதை ஒரு தற்காலிக வெற்றியாகவோ, அல்லது மோடி அரசுக்கு ஒரு பின்னடைவாகவோ கருதுகின்றனர்.

ஆனால், விவசாயிகள் பிரச்சினை தொடர்பான விவகாரத்தில் இந்த இரண்டு நாட்களில் (ஜன. 11,12 – 2021) உச்சநீதிமன்றத்தின் திருவாயிலிருந்து உதிர்ந்த முத்துக்களில் இருந்து இவ்விவகாரத்தைப் பரிசீலித்தாலே இது திட்டமிட்ட நரித்தனம் என்பது புரியவரும்.

பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் அமைப்பதாகச் சொன்ன கமிட்டியில் இடம்பெற்றிருப்பவர்கள், விவசாய பொருளாதார அறிஞர் அஷோக் குலாட்டி, பாரதிய கிஷான் சங்கத்தின் பூபிந்தர் சிங் மண், சேத்கரி சங்க்தனாவைச் சேர்ந்த அனில் கான்வாட் மற்றும் பிரமோத் குமார் ஜோஷி ஆகியோர்தான். இவர்களில் பெரும்பான்மையினர் இதற்கு முன்னர் வெளிப்படையாகவே வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள் என்று தி வயர் இணையதளம் கூறுகிறது.

வேளாண் சட்டங்களை வெளிப்படையாக ஆதரித்தவர்களை வைத்து ஒரு கமிட்டி போடுவேன்; அவர்கள்தான் மத்தியஸ்தம் செய்வார்கள். அதனை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் ?

கடந்த 11-01-2021 அன்று உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையில் விவசாய சங்கங்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம், “ நாங்கள் போராட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. நீதிமன்றம் போராட்டங்களை நெறிப்பதாகப் புரிந்து கொள்ளவேண்டாம். ஆனால் நாங்கள் கேட்கிறோம். இந்தச் சட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டால், மக்களின் விருப்பத்தைக் கணக்கில் கொண்டு போராட்டத் தளத்தை மாற்றிக் கொள்வீர்களா?” என்று கேட்டுள்ளார் தலைமை நீதிபதி போப்டே.

அதாவது மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் போராட்டத்தை நடத்திக் கொள்ளவேண்டுமாம். இப்போது விவசாயிகளின் போராட்டக் களத்தை மாற்ற வேண்டும் என்று எந்த குடிமக்கள் வந்து போராட்டம் நடத்தினர் ? வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக போராட்டமும், பொதுக்கூட்டமும் நடத்தி அடி வாங்கியதும், விவசாயிகளின் போராட்டத்தை மக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி வழக்கு தொடுத்ததும் சங்கிகள் மட்டும்தான்.

ஆனால் நீதிபதிகளுக்கு ‘மக்களின்’ தேவைக்காக டெல்லி முற்றுகையை விவசாயிகள் கைவிட வேண்டுமாம்! எந்த மக்கள் ? வேறு யார் கார்ப்பரேட் மக்கள்தான்.

அடுத்ததாக, மக்களால் “தேர்ந்தெடுக்கப்பட்ட” அரசு இயற்றிய ஒரு சட்டத்தை நீதிமன்றத்தால் தன்னிச்சையாக நிறுத்தி வைக்க முடியுமா? அது அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானது என நிறுவினால்தான் ஒரு சட்டத்தை செல்லாததாக அறிவிக்க முடியும். அப்படியில்லாத சூழலில் சட்டத்தை நிறுத்தி வைப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று.

படிக்க :
♦ வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !
♦ மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும் ஏன்?

அப்படி சட்டப்படி சாத்தியமற்ற ஒன்றை அவசர அவசரமாக உச்சநீதிமன்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன ?

விவசாயிகள் சங்கம் ஜனவரி 26-ம் தேதி டெல்லிக்குள் நுழையப் போவதாக அறிவித்திருந்தது. பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், .பி, .பி ஆகிய மாநிலங்களில் உள்ள ஆண், பெண் விவசாயிகள், கூலி விவசாய தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுடன், வீட்டில் உள்ள முதியவர்களுடன் கூட்டம் கூட்டமாகப் பங்கெடுத்து நடத்தப்போகும் இந்த டெல்லி நுழைவுப் போராட்ட அறிவிப்பு, மத்திய அரசுக்கு ஒரு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

விவசாயிகள் போராட்டத்தை பிற போராட்டங்களைப் போல சிறு துப்பாக்கிச் சூடு நடத்தியோ, சங்க பரிவாரக் கும்பலை வைத்து கலவரம் விளைவித்தோ கலைத்து விடமுடியாது என்பதை பாஜக அரசு நன்கு உணர்ந்துள்ளது. அதே நேரத்தில் தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்காக இயற்றப்பட்ட இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும் முடியாது. விவசாயிகளும் விடாப்பிடியாக இருக்கின்றனர்.

ஆகவே விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க, இப்போராட்டங்களுக்கு எதிராக மக்கள் மனநிலையை மாற்றும் வகையில் பிரச்சாரம் செய்யத் துவங்கியது. குறிப்பாக பல்வேறு அவதூறுகளைப் பரப்பியது.

முதலில், இச்சட்டம் விவசாயிகளுக்கு ஆதரவானது என்றும், விவசாயிகள் புரிந்து கொள்ளாமல், எதிர்கட்சிகளின் சதிக்கு ஆட்படக்கூடாது என்றும் மோடி நீலிக் கண்ணீர் வடித்து வந்தார்.

அதன் பின்னர், விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகளும், தடை செய்யப்பட்ட அமைப்புகளும் ஊடுறுவிவிட்டதாக சங்க பரிவாரக் கும்பல் சமூக வலைத்தளங்களிலும், மோடி ஆதரவு ஊடகங்களிலும் கருத்துக்களைப் பரப்பத் துவங்கின. ஆனால் அதுவும் மக்கள் மத்தியில் எவ்விதத்திலும் எடுபடவில்லை.

தற்போது நீதிமன்றத்தின் மூலமாக, விவசாயிகளுக்கு எதிரான கருத்துக்கள் மக்கள் மத்தியில் உருவாக்கும் வேலையைத் துவக்கியிருக்கிறது. வெளிப்படையாகவே வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்களை வைத்து உச்சநீதிமன்றம் ஒரு கமிட்டியை அமைத்துள்ளதோடு, “பிரச்சினையை தீர்க்க உண்மையாக விரும்புவோர், தற்போது அமைக்கப்பட்டுள்ள கமிட்டியை ஏற்றுக் கொள்வார்கள்” என்றும் கூறியிருக்கிறது. இது ஒரு அப்பட்டமான மிரட்டல் அல்லவா ?

நாடெங்கும் நடக்கும் விவசாயிகள் போராட்டம்

நீ என்னோடு இல்லையெனில், எதிரியோடு இருக்கிறாய்” என்ற ஜார்ஜ் புஷ்இன் வார்த்தைகளை நீதிமன்றம் விவசாயிகளைப் பார்த்து தற்போது கூறியிருக்கிறது. இவர்கள் அமைத்த கமிட்டியை ஏற்றால்தான் பிரச்சினையை உண்மையாக தீர்க்க விரும்புவோராம். கமிட்டியில் இருப்பவர்களின் யோக்கியதையைக் கொண்டு கேள்வி எழுப்பினால், பிரச்சினையை உண்மையாக தீர்க்க விரும்பாதவராம்.

உச்சநீதிமன்றமும், மோடி அரசும் உருவாக்க விரும்பும் பிம்பம் அதுதான். “விவசாயிகள் உள்நோக்கத்தோடு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் போராடுகிறார்கள். உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்தும் போராட்டத்தைக் கைவிடாமல் நீடிக்கிறார்கள்” என்ற சிந்தனையை சாதாரண மக்களின் மனதில் ஏற்படுத்துவதற்கான முன்னடி வேலைகள்தான் உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவுகள்.

விவசாயிகள் இந்த விசயத்தில் தற்போது வரை, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாமல் தங்களது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று உரக்கக் கூறியிருக்கின்றனர். விவசாயிகளை நிலைகுலையச் செய்யும் ஆளும் வர்க்கம் மற்றும் அதிகார வர்க்கத்தின் இத்தகைய தாக்குதல்களின் தாக்கத்தில் இருந்து விவசாயிகளைக் காக்க வேண்டும்.

அதற்கு நாம் அனைவரும் தொழிலாளர்களாக, .டி. ஊழியர்களாக, மாணவர்களாக, சிறு வியாபாரிகளாக, சிறு தொழில்முனைவோராக நம் அனைவரின் மீதும் சுரண்டலைத் திணிக்கும் கார்ப்பரேட் கும்பலுக்கு எதிரான போரைத் துவங்க வேண்டும்.

வேளாண் சட்டங்களால் பயனடையத் துடிக்கும் அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கும் போராட்டத்தைத் துவங்க வேண்டும். கார்ப்பரேட் எஜமானர்கள் பணிந்துவிட்டால், அவர்களின் ஏவலாளிகளும் ஏவலாளிகளின் கைப்பாவைகளும் தாமாக அடங்கி விடுவார்கள். இதுதான் நமக்கு உணவிடும் விவசாயிகளை காக்க நம் முன் இருக்கும் ஒரே தீர்வு !


சரண்
செய்தி ஆதாரம்
:
The Wire, The Wire