எமதர்மன் போல விரட்டி விரட்டி வசூல் செய்யும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு !
அன்புடையீர் வணக்கம்,
கடந்த நான்கு மாத காலமாக கொரோனாவால் தமிழகத்தில் வேலையும் இன்றி, கையில் காசும் இன்றி அன்றாட சோற்றுக்கே குடும்பங்கள் பரிதவிக்கும் நிலை அனைவருக்கும் பொதுவாக இருக்கிறது.
இந்நிலையில் எக்விடாஸ், கிராம விடியல், உஜ்ஜிவன், போன்ற நுண்கடன் நிறுவனங்களும் மகேந்திரா பைனான்ஸ், முத்தூட் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ், காவிரி பைனான்ஸ் போன்ற வாகனக் கடன், வீட்டுக் கடன், தொழில் கடன், ஆகிய கடன் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களான பொதுமக்களை வட்டிக்கு மேல் வட்டி போட்டு வழிப்பறி செய்து வசூலித்து வருகிறது.
இதனை கண்டித்து ரிசர்வ் வங்கியும் உச்சநீதிமன்றமும் ஆகஸ்ட் 31 வரையில் வசூல் செய்யக் கூடாது, வட்டி வசூலிக்கக் கூடாது என்று எச்சரித்தது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது. இதனை மீறி இந்நிறுவனங்கள் பொதுமக்களை மிரட்டி வருகின்றன. இதனால் பொதுமக்கள் செய்வதறியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே மேற்கண்ட ரிசர்வ் வங்கியின் உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை அடிப்படையாகக் கொண்டு திருச்சி மாவட்ட ஆட்சியரும் தஞ்சை மாவட்ட ஆட்சியரும் கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் செயல்படும் நிதி நிறுவனங்கள் பல இடங்களில் பொதுமக்களிடம் கட்டாய வசூல் செய்து அடாவடித்தனம் செய்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனை கண்டிக்கும் முகமாக 22.06.2020 அன்று காலை 11 மணி அளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மக்கள் அதிகாரம் இயக்கத்தின் சார்பிலும் கண்டனம் தெரிவித்து மனு கொடுக்கப்பட்டது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மனுவை நேரில் வந்து பெற்றுக்கொண்ட உதவி ஆட்சியர் திரு பரிமளம் அவர்களிடம் தஞ்சை, திருச்சி போல கடலூரில் உத்தரவு போட வேண்டுமென்றும், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏழைகள் வாங்கிய சுய உதவி குழு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா சி. குமார், மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு, வட்டார ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், ரவி ராமலிங்கம், தனியார் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் குரு ராமலிங்கம், பாபு, ஷேர் ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்க தலைவர் குமரன், பேருந்து நிலைய உட்புற சிறு வியாபாரிகள் சங்க தலைவர் திரு சுகுமார், உன்னால் முடியும் தோழா மாற்றுத்திறனாளி சங்கத்தின் மாவட்ட தலைவர் முஸ்தபா, மற்றும் கடலூர் மாவட்ட திருவள்ளுவர் அச்சக உரிமையாளர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தலைவர் திரு கார்த்திகேயன் கஜேந்திரன், அம்ஜத் தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாவட்ட தலைவர் சுப்புராயன், சமூக நீதிப் பேரவை தலைவர் சாய்ராம், தமிழர் கழகத்தின் மாவட்டத்தலைவர் கு.பருதி வாணன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரவை பொறுப்பாளர்கள் தர்மராஜன் கணேசன் பாலசுப்பிரமணியன், குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி மன்சூர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சிராஜ்தீன், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி செயலாளர் வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பா கிருஷ்ணகுமார், திராவிடர் கழகத்தின் மாதவன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.
தகவல் : அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மக்கள் அதிகாரம், கடலூர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெருகி வரும் கொலை, கொள்ளை, வழிப்பறி என ரவுடியிசத்தை கட்டுப்படுத்தியும், இளைஞர்களுக்கு மறுவாழ்விற்கான வழிகளை ஏற்படுத்தி மக்களின் அச்சத்தை போக்குவது தொடர்பாக 23.06.2020 அன்று காலை 11 மணி அளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சிபிஎம் மாவட்ட தலைவர் தோழர் செல்லத்துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ மாவட்ட செயலாளர் தோழர் ஞானசேகரன், மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் மற்றும் பெரம்பலூர் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் சோபன் பாபு மற்றும் தோழர் வெங்கடாச்சலம், திராவிடர் விடுதலை கழகம் மாவட்ட தலைவர், தோழர் தாமோதரன், மற்றும் தோழர் ராஜேஷ் குமார், தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஐயா ராஜா சிதம்பரம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் ஐயா ராஜேந்திரன், டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கர் மன்றம் தோழர் ஆனந்தராஜ், திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாவட்ட தலைவர் தோழர் கலையரசி, எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயலாளர் திரு ஷாஜகான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, திரு அபூபக்கர் சித்திக், தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி. தோழர் செல்வமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் திரு. ஷர்புதீன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் கருணாநிதி, சி.ஐ.டி.யு தோழர் அகஸ்டின், திராவிடர் கழகத்தின் தோழர் தங்கராசு மற்றும் தோழர் ஆறுமுகம், பாளையம் தேமுதிக திரு. ஸ்ரீதரன், ஆகியோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.
மனுவில், “பெரம்பலூர் ரவுடிகளின் கூடாரமாக மாறி வருவதையும் மக்கள் பயமின்றி நிம்மதியாக வாழவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் கொலை சம்பவங்களை காவல்துறை ஏராளமான ரவுடிகளை கைது செய்து வருகிறது. இந்த ரவுடிகளின் குற்றப் பின்னணி கண்டறிந்து பிணையில் வரமுடியாத அளவுக்கு கடுமையான சட்டப்பிரிவுகளில், குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மீட்டு மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்து தருமாறும், குற்றவாளிகளுக்கு துணைபோன காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. அவர், “இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருப்பதும், குடிவெறி, கஞ்சா போதையில் சுற்றி திரிந்து ரவுடிகளாக மாறி வருகின்றனர். ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக” தெரிவித்தார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.
காணொளி மூலம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மனுவை முழுமையாக படித்து விட்டேன். நீங்கள் கூறியிருக்கும் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், ரவுடிகளை ஒடுக்குவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 35-க்கும் மேற்பட்ட தோழர்கள், தலைவர்கள் பதாகைகளை ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றது ரவுடிகளை கட்டுப்படுத்த மக்கள் மேற்கொள்ளும் முதல்கட்ட நடவடிக்கையாக உள்ளது.
இதற்கு முன்பு மக்கள் அதிகாரம் சார்பாக நகர் முழுவதும் ரவுடியிசத்தை கட்டுப்படுத்தவும், அதற்கு போலீஸ் உடந்தையாக இருந்தது, என சுவரொட்டி பிரச்சாரம் செய்தோம். காவல் துறையினரே அதை கிழித்து ரவுடிகளுக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதையும் வெளிப்படுத்திக் கொண்டனர். பெரம்பலூர் கொலை நகரமாக மாறி வருகிறது என திமுக மாவட்ட செயலாளர் தனது கண்டன அறிக்கையை கடந்த 10ஆம் தேதி வெளியிட்டுள்ளார். சிபிஎம் கட்சியின் மாவட்ட தலைவர் தோழர் செல்லத்துரை கட்சியின் சார்பாக புகார் மனு தலைமை செயலர் வரை அனுப்பியுள்ளார். வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் பல்வேறு தரப்பினரும் பல ரவுடிகளால் பாதிப்புகளுக்கு ஆளாகி ,குடும்ப உறவுகளை இழந்து அச்சத்தில் உள்ளனர்.
கல்வி, வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைக்கு அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். குடிவெறி, கஞ்சாபோதையை மறக்க பொழுதுபோக்கு அம்சங்களான உடற்பயிற்சி நிலையங்கள், பூங்காக்கள், நூலகங்கள், படிப்பகங்கள் என உருவாக்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ஜனநாயக இயக்கங்களுடன் இணைந்து ரவுடிகளுக்கு எதிராக போராடுவது, மக்களின் அச்சத்தை போக்க செயல்பட வேண்டும் என கூறினர்.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம் பெரம்பலூர், திருச்சி மாவட்டங்கள். தொடர்புக்கு : 94454 75157.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவப் போராளிகள் மீது பாயும் ஊபா (UAPA) சட்டம் ! தீவிரமடைந்துவரும் பாசிசத் தாக்குதல் !
கொரோனா தொற்றினால் நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து, வெளியே நடமாடக் கூட முடியாத சூழலில், நீதிமன்றங்கள் முறையாகச் செயல்பட முடியாத இந்த சூழலிலும் கூட மோடி அரசு குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக முன்னணியில் நின்று போராடிய மாணவர் இளைஞர்களை மிகக் கொடிய “ஊபா” (UAPA) சட்டத்தின் கீழ் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைப்பதில்தான் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
ஊபா சட்டம் எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்பது, மிகக் கொடிய பாசிச சட்டமாகும். இச்சட்டத்தின் கீழ் கைதானவர்களை விசாரணையின்றி 1 ஆண்டு வரை சிறையிலடைத்து வதைக்க முடியும். இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர், எந்த நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் பெற முடியாது. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் அதற்காக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள், இந்த நீதிமன்ற நடவடிக்கையைப் பொதுமக்களோ, பத்திரிகையாளர்களோ பார்ப்பதற்கு அனுமதியுமில்லை.
மாணவப் போராளிகள் மீது பாயும் பாசிச ஊபா சட்டம் :
கடந்த ஏப்ரல் 20-ம் தேதியன்று டெல்லி போலீசார் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களான மீரான் ஹைதர், சபூரா ஜர்கார் ஆகியோரை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். சபூரா ஜர்கார், எம்.பில் படித்து வரும் மாணவியாவார். இவர் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான மாணவர் போராட்டத்தை ஒன்றிணைத்த ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் நாடகத்துறை முன்னணியாளராவார். முனைவர் பட்டத்துக்கான ஆய்வு மாணவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் டெல்லிக் கிளை இளைஞரணித் தலைவருமான மீரான் ஹைதர், ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினராவார்.
சபூரா ஜர்கார்
அதே நாளில், ஐவஹர்லால் நேரு பல்கலைக் கழக முன்னாள் மாணவரான உமர் காலித் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26 அன்று ஜாமியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவரும், ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான ஷிபா உர் ரஹ்மான், ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு, மே 23 அன்று பிஞ்ரா டோட் (Pinjra Tod – கூண்டை உடைத்தெறி) எனும் ஜாமியா பல்கலைக்கழக விடுதி மாணவிகளது அமைப்பின் முன்னணியாளரான நடாஷா நார்வல், ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாமியா பல்கலைக் கழக மாணவர்களான மீரான் ஹைதர், சபூரா ஜர்கார், ஷிபா உர் ரஹ்மான் ஆகியோர், கடந்த பிப்ரவரியில் டெல்லியில் நடந்த மதவெறிக் கலவரத்தை தூண்டி விட்டு, திட்டமிட்ட சதிகளில் ஈடுபட்டார்கள்; ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக முன்னாள் மாணவரான உமர் காலித் இவர்களின் வழிகாட்டியாக இருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வரும்போது பெரிய அளவில் கலவரம் நடத்தச் சதித் திட்டமிட்டார்கள் – என்று இவர்கள் மீது டெல்லி போலீசு குற்றம் சாட்டுகிறது. இவர்கள் மீது தேசத்துரோகம், கொலை, கொலை முயற்சி, மதவெறியைத் தூண்டி கலவரத்தை நடத்த சதி, ஆயுதத் தடைச் சட்டம் முதலான பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதே போல, பிஞ்ரா டோட் அமைப்பைச் சேர்ந்த நடாஷா நார்வல், பிப்ரவரி 12 ஆம் தேதியன்று டெல்லியில் நடந்த குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் போராட்டக் களத்தில் முன்னணியில் இருந்து கலவரத்தைத் தூண்டினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வரும்போது பெரிய அளவில் கலவரம் நடத்தச் சதித் திட்டமிட்டார் என்று டெல்லி போலீசார் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகப் போராடிய டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடந்த டிசம்பர் 15-ஆம் தேதியன்று பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்து போலீசும், ஏ.பி.வி.பி. குண்டர்களும் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டனர். அதைத் தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் திரண்டு நடத்திய போராட்டம் மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. பெண்களால் தலைமை தாங்கப்படும் இப்போராட்டத்தில், சாதி – மத வேறுபாடுகளைக் கடந்து பல்லாயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் அன்றாடம் கலந்து கொண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என் பி ஆர்), தேசியக் குடிமக்கள் பதிவேடு (என் ஆர்.சி.) ஆகியவற்றுக்கு எதிராகக் கண்டனங்களை முழங்கினர்.
ஷாஹீன் பாக்கை முன்னுதாரணமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பெண்கள் அணி திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தினர். இஸ்லாமியப் பெண்களால் தொடங்கப்பட்ட இப்போராட்டம் மக்கள்திரள் போராட்டமாக தமிழகம் உட்பட இந்தியாவெங்கும் பரவத் தொடங்கியது. இத்தகைய மக்கள் திரள் போராட்டத்தைக் கண்டுதான் காவி பாசிச கும்பல் அஞ்சியது. இப்போராட்டங்கள் நாடு தழுவிய போராட்டமாக வளர விடாமல் தடுக்கவும், போராட்டத்தை இந்து – முஸ்லிம் மோதலாகத் திசைதிருப்பவும் இந்துவெறி பாசிஸ்டுகளால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதுதான் டெல்லி கலவரம்.
கடந்த பிப்ரவரி 24 முதல் 26 வரை நடந்த டெல்லி கலவரத்தில் ஆட்டோ ஓட்டுநர், மெக்கானிக் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்த அடித்தட்டு மக்களாகிய முஸ்லிம்களில் பலர் அடித்துக் கொல்லப்பட்டு, சாக்கடையில் விசியெறியப்பட்ட கொடூரம் அரங்கேறியது. இக்கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் முஸ்லிம்களாவர். நூற்றுக்கணக்கான வாகனங்களும், வர்த்தக நிலையங்களும், வழிபாட்டுத் தலங்களும் தீயிடப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளன.
இப்போது கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நிலவும் சூழலில், டெல்லி போலீசைக் கொண்டு குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்து, போராட்டக்காரர்கள் மீது எதிர்த்தாக்குதலைத் தொடுத்து அடுத்தடுத்து கைது செய்து கொண்டிருக்கிறார்கள்,
டெல்லி கலவரத்தையொட்டி ஏறத்தாழ 750-க்கும் மேலான முதல் தகவல் அறிக்கைகள் போலீசாரால் தயாரிக்கப்பட்டு, விசாரணை என்ற பெயரில் ஏறத்தாழ 1300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைதுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
போராளிகளைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட கோயபல்சு போலீசின் குற்றப் பத்திரிகை
கடந்த ஏப்ரல் இறுதியிலிருந்து சீருடை அணியாத டெல்லி போலீசார், வடக்கு டெல்லி பகுதியிலுள்ள பிரம்மபுரி, ஷிவ் விஹார், மாஜ்பூர், ஜாபராபாத யோம்பூர், சௌகான் பாங்கர், கராவல் நகர் மற்றும் பிற பகுதிகளிலிருந்து ஒவ்வொரு நாளும் 4 பேரைக் கைது செய்து வருகிறார்கள், அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்று தெரிவிக்காமலேயே சிறையிடப்படுகிறார்கள்.
இவர்களில் சிலர் விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் டெல்லி போலீசாரால் உருவாக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையானது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவப் போராளிகளையும் முஸ்லிம்களையும் குறிவைத்து பரபரப்பான சினிமா திரைக்கதை பாணியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அடுத்தடுத்து மாணவப் போராளிகள் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீது பல்வேறு கொடிய கிரிமினல் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் முதல் வாரத்தில் டெல்லி போலீசார் 6 குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளனர். இது, கடந்த பிப்ரவரியில் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடந்த மதவெறிக் கலவரம் தொடர்பானது. முதல் நான்கு குற்றப் பத்திரிகைகளும் குடியுரிமைச் சட்டத் திருந்த எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டக்காரர்கள் அனைவரும் முசுலீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. மற்ற இரு குற்றப் பத்திரிகைகளும் இந்துக்கள் எதிர்வினையாற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் திட்டமிட்டு மதவெறிக் கலவரத்தைத் தூண்டிவிட்டு அரங்கேற்றினார்கள். இந்துக்களோ, தங்களைத் தற்காத்துக் கொள்ள எதிர்வினையாற்றினார்கள் என்பதாக இவ்விரு வகையான குற்றப் பத்திரிகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
காவி கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட டெல்லி கலவரம்.
இக்கலவரம் பற்றி டெல்லி போலீசு குற்றப் பத்திரிகையில் குறிப்பிடுகையில், “இப்பகுதிகளில் காமெரா பொருத்தப்படவில்லை. பொருத்தப்பட்ட இடங்களில் அவை உடைத்தெறியப்பட்டுள்ளன. இருப்பினும், கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், பிப்ரவரி 24-ம் தேதியன்று முஸ்லீம் குண்டர்கள் கலவரம் – சூறையாடலில் ஈடுபட்டனர். இதனால் பெருமளவிலான உயிரிழப்பும் பொருட்சேதமும் இந்து சமூகத்தினருக்கு ஏற்பட்டது. பின்னர் இந்த கும்பல் யாரென்று அடையாளம் காணப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களது வாய்வழி சாட்சியங்களின் அடிப்படையிலும், வாட்ஸ் அப் குழுவில் அவர்கள் நடத்திய விவாதங்களின் அடிப்படையிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரும்போது மதவெறிக் கலவரங்களை தீவிரமாக்க வேண்டும் என்று சதித் திட்டம் தீட்டியிருப்பது நிரூபணமானது. இவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். 24.2.2020 அன்று நடந்த கலவரத்துக்குப் பின்னர், சில இந்து நபர்கள் 25, 26 தேதிகளில் கூட்டு சேர்ந்து எதிர் தாக்குதலை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, நேரடி சாட்சியங்கள் அடையாளம் காணப்பட்டு, சோதனையிடப்பட்டனர். முதல் நாளில் முஸ்லிம்கள் நடத்திய கலவரத்துக்கு எதிர்வினையாகவே இந்துக்கள் முஸ்லிம்களைத் தாக்கியுள்ளனர்” என்று கூறியிருக்கிறது.
இது மட்டுமின்றி தப்லிஹி ஜமாத் முஸ்லிம்களும் தியோபண்ட் முஸ்லிம்களும் டெல்லி கலவரத்துக்குக் காரணமானவர்கள் என்று புதியதொரு குற்றப் பத்திரிகையை டெல்லி போலீசு தயாரித்துள்ளது.
மெஹ்மூத் பராச்சா என்ற மூத்த வழக்கறிஞர், டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளைக் கையாண்டு வருகிறார். “கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களாவார்கள். சிதைக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் முஸ்லீம்களுடையவை. இப்படியிருக்க வன்முறைக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று யாராவது கூற முடியுமா?” என்று குற்றப் பத்திரிகைகளின் அண்டப்புளுகைச் சாடுகிறார்.
பிஞ்ரா டோட் என்ற அமைப்பானது ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிகளில் நிலவும் கடுமையான விதிமுறைகளை எதிர்த்து முன்னாள் – இந்நாள் மாணவிகளால் 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். அது கல்லூரி விடுதி மாணவிகளின் உரிமைக்கான அமைப்பாக மட்டுமின்றி, பெண்களுக்கு எதிரான பல்வேறு பிரச்சினைகளுக்காகவும் குரல் எழுப்பி போராடி வந்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த தேவாங்கணா காலிதா, நடாஷா நார்வால் ஆகிய இரு மாணவிகளும், கிழக்கு டெல்லியில் கலவரத்தைத் தூண்டினார்கள் என்று பொய்க் குற்றம் சாட்டப்பட்டு கடந்த மே 23 அன்று கைது செய்யப்பட்டனர். மறுநாளில் இவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. இருப்பினும், வன்முறையைத் தூண்டியதாக இன்னுமொரு புதிய வழக்கைப் போட்டு டெல்லி போலிசு இவர்களை மீண்டும் சிறையிலடைத்துள்ளது. இவர்களில் நடாஷா நார்வால் மீது தற்போது ஊபா சட்டம் ஏவப்பட்டுள்ளது.
மாணவர் போராட்டங்களைஒடுக்கும் போலீசு – கோப்புப்படம்.
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) லிபரேஷன் குழுவின் ஊழியரும் அனைத்திந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தலைவருமான சுவால் பிரீத் கவுர் என்ற பெண் தோழர் கடந்த ஏப்ரல் 27 அன்று கைது செய்யப்பட்டார். இவர் செல்போன், வாட்ஸ் அப் மூலம் டெல்லி கலவரத்தைத் தூண்டினார் என்றும், ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு, பிஞ்ரா டோட் குழு, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் பிறருடன் தொடர்பில் இருந்தார் என்றும் போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டெல்லி கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு குல்பிஷா பாத்திமா என்ற மாணவி கடந்த ஏப்ரல் முதல் சிறையிடப்பட்டுள்ளார். அவருக்கு பிணை வழங்கும் சாத்தியக் கூறு இருப்பதை அறிந்த போலீசு, அவர் மீது மேலும் புதிய வழக்குகளைப் போட்டு பிணை வழங்குவதை ரத்து செய்துள்ளது. ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த காலித் ஷைபி, ஆசிப் இக்பால் தன்ஹா உள்ளிட்ட மாணவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, குற்றச் சதி, ஆயுதத் தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் தாஹிர் உசைன், அவரது இளைய சகோதரர் ஷா ஆலம் உள்ளிட்ட 15 பேர், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான் ஆகியோர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரின் மீதும் எப்போது வேண்டுமானாலும் ஊபா சட்டம் ஏவப்படலாம் என்ற அச்சம் நீடிக்கிறது.
கபில் மிஸ்ரா. அனுராக தாக்கூர், பர்வேஷ் வர்மா போன்ற பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே வன்முறையைத் தூண்டி, டெல்லியில் இந்துவெறி கலவரத்தை முன்னின்று நடத்தியுள்ள போதிலும் அவர்கள் மீது எந்த வழக்கும் போடப்படவில்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முகமூடி அணிந்து கொண்டு ஏபிவிபி தலைவி கோமல் சர்மா மற்றும் பிற குண்டர்கள் கையில் தடியோடு நின்று கொண்டு போராட்டக்காரர்களையும் ஆசிரியர்களையும் தாக்கிய போதிலும் அவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீதும் முசுலீம்கள் மீதும் பொய்வழக்குகள் சோடிக்கப்பட்டு சிறையிடப்படுகிறார்கள்,
நாடெங்கும் தீவிரமடையும் ஊபா கைதுகள்
அசாமைச் சேர்ந்த க்ரிஷாக் முக்தி சங்கராம் சமிதி (KMSS) என்ற விவசாயிகள் சங்கத் தலைவரான அகில் கோகய், ஊழல் எதிர்ப்பு – தகவலறியும் உரிமைக்கான செயல்வீரராவார். இவர் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடியவர். கடந்த 2019 டிசம்பர் இறுதியில், இவர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA – ஊபா) கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து முனைவர் ஆனந்த தெல்தும்டே, கௌதம் நவ்லகா ஆகிய மனித உரிமைப் போராளிகளின் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. அவர்களது முன் பிணை (anticipatory bail) மனுக்களை, கடந்த மார்ச் 16-ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்ததோடு, அவர்கள் இருவரும் வரும் ஏப்ரல் 6-ம் தேதியன்று போலீசாரிடம் சரணடைய வேண்டுமென உத்தரவிட்டது. அதனடிப்படையில் இவர்கள் கடந்த ஏப்ரல் 14 அன்று தேசியப் புலனாய்வு முகமையிடம் (NIA) சரணடைந்து சிறையிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 20-ம் தேதியன்று காஷ்மீரைச் சேர்ந்த மஸ்ரத் ஜெஹ்ரா என்ற இளம் புகைப்பட பெண் ஊடகவியலாளர், முகநூல் வழியாக வதந்திகளைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிராகக் களத்தில் இறங்கிப் போராடுவோம்:
இந்திரா காந்தியைப் போல, திடீரென ஒருநாள் நள்ளிரவில் பாசிச அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கு மாறாக, படிப்படியாகவும், நிதானமாகவும், சட்டபூர்வ வழிகளிலும் மோடி கும்பல் பாசிச அடக்குமுறையை ஏவி வருகிறது. இதுதான் இந்துவெறி பாசிசத்தின் உத்தி.
பார்ப்பன பாசிசத்தின் இரும்புப் பிடியில் சிக்கி முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்டோரும், தொழிலாளர்களும், அறிவுத்துறையினரும், புரட்சியாளர்களும் அன்றாடம் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிராக முழக்கமிடும் எண்ணற்ற போராளிகள் சிறை வைக்கப்படுகிறார்கள். பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களின் கூர்முனையாக விளங்கும் அமைப்புகளும் அறிவுத்துறையினரும் “மாநகர நக்சல்கள்” என்று முத்திரை குத்தி வேட்டையாடப் படுகிறார்கள். இதை நீதிபதிகளும் மௌனமாக அங்கீகரித்துக் கொண்டிருக்கிறார்கள்
இது வெறும் மனித உரிமை மீறல் விவகாரம் மட்டுமல்ல. இந்தியாவின் அரசியல் – ஜனநாயக நிகழ்ச்சிப் போக்கை மாற்றியமைத்து பாசிசத் திணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும். கோழைகளாகவும் அடிமைகளாகவும் ஆகப் பெரும்பான்மையான ஊடகத்துறையினர் மாறியிருக்கும் சூழலில், பெரும்பான்மையான ஓட்டுக் கட்சிகள் பாசிசத் தாக்குதலுக்கு எதிராக ஏதும் பேசாமல் வாய்மூடிக் கிடக்கும் இன்றைய சூழலில், இத்தகையப் போராளிகளை விடுவிக்கக் கோரிப் போராடுவதென்பது, ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பாசிச எதிர்ப்புப் போராட்டமாகும்.
முன்னணியாளர்களைக் கைது செய்து சிறையிலடைப்பதன் மூலம் மக்களை அச்சுறுத்தி போராட்டத்தை முடக்கிவிடலாம் என்று பாசிச மோடி கும்பல் மனப்பால் குடிக்கிறது. அதைத் தகர்த்து, உழைக்கும் மக்கள் கோழைகள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டிய மகத்தான பணி நம்முன்னே காத்திருக்கிறது.
மனித உரிமை. ஜனநாயக உரிமைக்கான செயற்பாட்டாளர்களும் மாணவப் போராளிகளும் சிறையிடப்பட்டு, நாடும் மக்களும் பாசிச இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டுவரும் சூழலில், இவர்களது விடுதலைக்காக உரத்த குரலெழுப்புவோம். “பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையிடப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் போராளிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்! ஊபா (UAPA) உள்ளிட்ட பாசிச சட்டங்களை ரத்து செய்” என முழங்குவோம். மோடி கும்பலின் கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிராகக் களத்தில் இறங்கிப் போராடுவோம்!
***
பெட்டிச் செய்தி # 1 :
சபூராவுக்கு ஜெயில் சிரோஹிக்கு பெயில் போலீசு – நீதித்துறையின் இரட்டை அளவுகோல் !
டெல்லி போலீசின் சிறப்பு செல், டெல்லி கலவரத்தையொட்டிய முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல் தகவல் அறிக்கை எண் 59/2020 என்பது முதலில் பிப்ரவரி 27-ஆம் தேதியிடப்பட்டுள்ளது. அதில் மனிஷ் சிரோஹி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததொரு அறிக்கையானது மார்ச் 6-ஆம் தேதியிடப்பட்டுள்ளது. அதில் சபூரா ஜர்கார் மற்றும் பிறரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு வகையான முதல் தகவல் அறிக்கைகளிலும் 59/2020 என்ற ஒரே எண் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்துவாகிய மனிஷ் சிரோஹி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்திலிருந்து ஆயுதங்களை வாங்கி டெல்லிக்குக் கொண்டுவந்து விநியோகித்தவர் என்று இந்த முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. இவர் டெல்லியில் கலவரம் நடக்கும்போது கைது செய்யப்பட்டதோடு, அவரிடமிருந்து கைத்துப்பாக்கியும், வெடிகுண்டுகளும் கைப்பற்றதாகக் கூறுகிறது. மனிஷ் சிரோஹி, சபூரா ஜர்கார் ஆகிய இருவரையும் முதல் தகவல் அறிக்கை எண் 59/2020-இன் படியே டெல்லி போலீசின் சிறப்பு செல் கைது செய்துள்ளது.
ஜாமியா மிலலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் மாணவியான சபூரா சர்கார் மீது இதுவரை எந்த குற்ற வழக்கும் இல்லை. அவரிடமிருந்து எந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்படவுமில்லை ஆனால், டெல்லி கலவரத்துக்குப்பின் சில வாரங்கள் கழித்து கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது, “மதவெறிக் கலவரத்தைத் தூண்டினார்” என்றும், “பயங்கரவாதக் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்” என்றும் குற்றம் சாட்டப்பட்டு, மிகக் கொடிய பா சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டுள்ளார். கர்ப்பிணியான அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது. சிறையில் கைதிகள் நிரம்பி வழியும் நிலையில் கொரோனா தீவிரமடைந்துவரும் நிலையில், மனிதாபிமானமின்றி அவர் சிறையிடப்பட்டு வதைக்கப்படுகிறார்.!
ஆனால், ஆயுத சப்ளை பேர்வழியான சிராஹி மீது ஆயுதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் மட்டுமே வழக்கு போடப்பட்டுள்ளது. அவர் கைதாகும்போது அவரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ள போதிலும், அவர் மீது சாதாரண வழக்குதான் போடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது. காரணம், சிறையில் கொரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று நீதிமன்றம் நியாயம் கற்பிக்கிறது.
இந்து என்றால் ஒரு நீதியும், முஸ்லிம் என்றால் வேறொரு நீதியுமாக டெல்லி போலிசும் நீதித்துறையும் செயல்படுவதை நிருபிக்க இதைவிட வேறென்ன சான்று வேண்டும். மிகக் கொடிய பாசிச ஊபா சட்டத்தை மோடி அரசு ஏவி விடுவதையும் அதற்கு அடிபணிந்து இந்திய அரசியல், நீதி, சட்டம் உள்ளிட்ட கட்டமைப்பே பாசிசக் காட்டாட்சிக்குப் பாதையமைத்துக் கொடுப்பதையும் நிருபித்துக் காட்டுவதற்கு இதைவிட வேறேன்ன சான்று வேண்டும்?
***
பெட்டிச் செய்தி # 2 :
சிவப்பென்றால் சிலருக்குப் பயம் !
கொரோனா ஊரடங்கு பாசிசச் சூழலில், அசாமில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களில் சிலரை தேசியப் புலனாய்வு முகமை (NIA) கைது செய்து வருகிறது.
மே 1 அன்று தேசியப் புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், லெனின் உருவப் படத்தைத் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார் என்றும், அவர் தன் நண்பர்களை “தோழர்களே” என்று குறிப்பிட்டு செவ்வணக்கம் (லால் சலாம்) என்று வாழ்த்தியதாகவும் கூறியுள்ளது. அவரிடமிருந்து சோசலிசத்துக்கு ஓர் அறிமுகம். “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” ஆகிய புத்தகங்களைக் கைப்பற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தாக்குதலால் ஊரடங்கும் சமூக முடக்கமும் நிலவும் சூழலில், இத்தகைய இழிவான செயல்களில் பாசிச மோடி கும்பலும் தேசியப் புலனாய்வு முகமையும் மூர்க்கமாக இறங்க காரணம் என்ன 19 டிசம்பரில் போலீசால் படுகொலை செய்யப்பட்ட நக்சல்பாரி புரட்சிக் கவிஞர் சுப்பாரால் பாணிக்கிரகியின் பாடல் வரிகளில் கூறுவதென்றால் சிவப்பென்றால் சிலருக்குப் பயம்… பயம்…
சிவப்பு பயங்கரவாதப் பீதியூட்டி குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களையும், கம்யூனிஸ்டுகள், தொழிலாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மாணவர் – இளைஞர்களையும் மிரட்டிப் பணிய வைக்க பாசிச மோடி கும்பல் கீழ்த்தரமாக முயற்சிக்கிறது. அதன் கைப்பாவையான தேசியப் புலனாய்வு முகமை, மோடி கும்பலின் நோக்கத்திற்கேற்ப ஒரு கோமாளித்தனத்தை அரங்கேற்றுகிறது.
ஆனால், செவ்வணக்கம் என்று முழங்குவதையோ, தோழர்களே என்று அழைக்கும் உரிமையையோ யாராலும் பறித்திட முடியாது. ஏனென்றால், அது கோடிக்கணக்கான கம்யூனிஸ்டுகளின், உழைக்கும் மக்களின் சொத்து. மேலும், செவ்வணக்கம் என்று முழங்குவதும், கம்யூனிஸ்டு அறிக்கையை வைத்திருப்பதும் சட்டப்படியே கைது செய்வதற்கான குற்றமும் கிடையாது.
இக்ககைய பாசிச அச்சுறுத்தல்களின் மூலம் கம்யூனிஸ்டுகளையும் புரட்சிகர சிந்தனையையும் ஒடுக்கிவிட முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில், நாடெங்கும் எதிரொலிக்க முழங்குவோம், -தோழர்களே, செவ்வணக்கம்.
– புதியவன், சமூக அரசியல் ஆர்வலர்.
வினவு குறிப்பு: வினவு தளத்திற்கு பல்வேறு நண்பர்கள், தோழர்கள் கட்டுரைகளை அனுப்பி வருகிறார்கள். அப்படி அனுப்பும் போது அவர்கள் எழுதிய கட்டுரையின் கருப்பொருளுக்கான விவரங்கள், மேற்கோள்கள், கண்ணோட்டங்கள் எந்தெந்த ஆங்கில பத்திரிகைகள், இணைய தளங்களில் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு உரிய இணைய இணைப்புகள் (லிங்குகள்) அளிக்க வேண்டும். வினவு தளத்தில் வெளியாகும் சிறு செய்திப் பதிவானாலும் அதன் மூலாதாரம் எங்கிருக்கிறது என்பதற்கு இணைப்பும் நன்றியும் தெரிவித்தே வெளியிடுகிறோம். அப்படி இல்லாமல் அனைத்து விவரங்களையும் ஆங்கில இணைய தளங்களில் எடுத்து விட்டு நாம் சொந்தமாக சொல்வது போல எழுதுவது Plagiarism எனப்படும் கருத்து திருட்டாகும். வினவு தளத்தில் அதற்கு இடமில்லை என்பதை கட்டுரை அனுப்பும் தோழர்கள் கருத்தில் கொள்க. நன்றி
இந்தியாவில் அனைத்து உயிர்களுக்கும் முக்கியத்துவம் உள்ளதா?
மினியாபோலிசில் ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் உலகின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. அமெரிக்காவில் இனவெறி மற்றும் போலீசு மிருகத்தனத்தை கண்டிக்க அனைத்து தரப்பு அமெரிக்கர்களும் இன – நிற பேதமில்லாமல் பெரிய அளவில் எதிர்ப்பு பேரணிகளில் பங்கெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது சில கொள்ளை மற்றும் வன்முறை போன்ற விரும்பத் தகாத நிகழ்வுகள் இருந்தன. ஆனால் பெருமளவில் போராட்டங்கள் அமைதியாகவே நடத்தப்பட்டன. மேலும் அந்நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ள இனவெறி மீது கவனம் செலுத்தி விவாதம் தூண்டப்பட்டது.
ஜார்ஜ் ஃபிளாய்ட் 47 வயதான ஆப்பிரிக்க-அமெரிக்கர். அவர் போலீசு காவலில் இறந்தார். போலீசு அதிகாரி டெரிக் சவுவின் ஃபிளாய்டின் கழுத்தில் சுமார் ஒன்பது நிமிடங்கள் முழங்காலில் மண்டியிட்டு அழுத்திய போதும், ஃப்ளாய்ட் “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என தன்னை விடுவிக்குமாறு அதிகாரியிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். டெரிக் சவுவின் கைகளில் சிக்கி, மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டின் இறுதி தருணம், உலகெங்கிலும் உள்ள மக்களின் சமூக மற்றும் தார்மீக உள்ளுணர்வை உலுக்கியுள்ளது. போலீசு மிருகத்தனத்திற்கும், அதிகப்படியான அதிகாரத்தனத்துக்கும் எதிராக கண்டனங்களையும் போலீசு சீர்திருத்தங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளன.
ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் வரலாற்று ரீதியாக நீண்டகாலமாக உள்ள இனத்தை அடிப்படையாகக் கொண்ட இழிவை அம்பலப்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் ஒவ்வொரு நாட்டிலும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை குறிவைக்கும் போலீசு மிருகத்தனங்கள் குறித்த உரையாடலைத் தூண்டியுள்ளது. உலகளவில் ‘ஜார்ஜ் ஃபிளாய்ட் தருணங்களுக்கு’ இணைகள் உள்ளன.
ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம், இந்தியாவில் மத சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான ஒரு பக்கச் சார்பான போலீசு நடவடிக்கையை ஒத்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த தப்பெண்ணம் ஆதிக்க சித்தாந்தத்தால் ஆதரிக்கப்படுகிறது. அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்திய அரசின் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
போராட்டக்காரர்களால் அமெரிக்காவில் ஏற்பட்ட சீற்றத்திற்கு பதிலளிக்கும் விதமாக, போலீசு மிருகத்தனத்தை குறைக்க அரசு பல திட்டங்களை முன்வைத்துள்ளது. அதில் விவாதிக்கப்படும் மிக முக்கியமான இரண்டு எதிர்வினைகள்.. முதலாவதாக மினியாபோலிஸ் காவல்துறையில் நிதி ஆதாரத்தை வெட்டுவது, இரண்டாவதாக போலீசு படையை கலைத்துவிட்டு, புதிதாக விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு படையை உருவாக்குவது.
மினியாபோலிஸ் நகர சபை போலீசு படை கலைக்கப்படும் எனக் கூறியது, இன்று பாதுகாப்பு என்ற பெயரில் ஆபத்தான ஆயுதமேந்திய போலீசுடன் இணக்கமாக உள்ள பல நாடுகளில் சிந்திக்க முடியாத ஒன்றாகும். அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, இந்தியாவில் நிலைமை உள்ளது. போலீசின் அதீத அதிகாரம், மற்றும் சலுகை என்ற நிலையில், கட்டாய ஆதாரங்களை எதிர்கொள்வதில்கூட சிக்கல் உள்ளது.
மிகச் சமீபத்திய உதாரணம் வாஜா யூனுஸ் என்ற 27 வயது இளைஞர், 2003-ல் போலீஸ் காவலில் இறந்தார். அவர் மகாராஷ்டிராவில் உள்ள பர்பானியில் வசித்தவர், டிசம்பர் 2, 2002 அன்று கட்கோபர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். அவர் ஒரு மென்பொருள் பொறியாளராக இருந்தார். குற்றம் சாட்டப்பட்ட நால்வருடன் கைது செய்யப்பட்டார். யூனுஸ் காவலில் இருந்து தப்பித்ததாக போலீசார் கூறினாலும், ஜனவரி மாதம் விசாரணை நீதிமன்றத்தின் முன் முதல் வழக்கு சாட்சியாக அவருடன் கைதான டாக்டர் முகமது மாடின், ஜனவரி 6, 2003 அன்று யூனுஸ் தாக்கப்பட்டதைக் கண்டதாக சாட்சி கூறினார்.
அதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் கண்டுபிடிக்கப்படவேயில்லை. 2003 ல் யூனுஸ் உடன் குற்றம் சாட்டப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், போலீஸ்காரர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. நான்கு காவல் அதிகாரிகள் முதன்மையான குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும் இந்த மாத தொடக்கத்தில் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் எதிராக உயர் நீதிமன்றம் 2004 ல் ஒழுங்கு விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணை ஒருபோதும் மேற்கொள்ளப்படவில்லை, அதற்கு பதிலாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு காவல்துறை அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு மாறாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.
அப்பாவி வாஜா யூனுஸ் மீதான மோசமான தாக்குதல் மற்றும் சித்திரவதை ஒரு தவறி நிகழ்ந்த சம்பவம் அல்ல. பயங்கரவாத தாக்குதல்களில் முஸ்லிம் இளைஞர்கள் “இயற்கை” சந்தேக நபர்களாக கருதப்படுவது இந்தியாவில் ஒரு இயல்பான நடவடிக்கையாக, அந்த சமூகத்தை களங்கப்படுத்தும் நடவடிக்கையாக ஆகிவிட்டது,. பல அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் UAPA அல்லது POTA போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் கைதாகி, பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்காத போதும் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் விடுவிக்கப்படுகிறார்கள்.
ஒரு இயந்திர பொறியாளரான முகமது சலீம் அன்சாரி, 2016 ல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். பயங்கரவாத தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ், 23 ஆண்டுகள் சிறையில் இருந்த அவரை, உச்ச நீதிமன்றம் விடுவித்தது. அன்சாரி, மற்ற மூன்று முஸ்லீம்களுடன், மே 17 அன்று ஜெய்ப்பூர் சிறையிலிருந்து வெளியேறினார், மே 11 அன்று உச்சநீதிமன்றம் அவர்கள் அனைவரையும் விடுவித்தது, அவர்களின் ஆயுள் தண்டனையை ஒதுக்கி வைத்து, உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது. பாபர் மஸ்ஜித் இடிப்பின் முதல் ஆண்டு நினைவு நாளில் ரயில்களில் ஐந்து குண்டுவெடிப்புகளைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட 16 பேரில் அவர்கள் அடங்குவர், இந்த குண்டுவெடிப்பு இரண்டு பயணிகளைக் கொன்றது; எட்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.
2015 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், ஹிங்கோலியைச் சேர்ந்த ஷோயப் கான் (28), யவத்மாலைச் சேர்ந்த மவுலானா முஜீப்-உர்-ரஹ்மான் (30), மற்றும் பூசாத் பகுதியைச் சேர்ந்த அப்துல் மாலிக் (23) ஆகியோரை மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்து, அவர்களின் வழக்குகள் மகாராஷ்டிராவின் பயங்கரவாத எதிர்ப்புப் படைக்கு மாற்றப்பட்டன. ஜூன் 2019-இல், அவர்கள் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்; சிறையிலிருந்து ஒரு கொடூரமான காலகட்டத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.
ஊடகங்களும் காவல்துறையும் இந்தியாவில் முஸ்லீம் இளைஞர்களை பயங்கரவாத சித்திரத்தை தீட்டி, மூவரும் “ஜிஹாதி” பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினர். தங்களுக்கு சாதகமான அறிக்கையை பெற வேண்டும் என்பதற்காக, போலீசு காவலில் தனக்கு நேர்ந்த சித்திரவதைகளில் ஒரு மோசமான கதையை கான் விவரித்தார். டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸின் 2012 ஆய்வில், மகாராஷ்டிரா மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 10.6 விழுக்காடாக இருந்தாலும், அவர்கள் சிறைகளில் 30 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. முஸ்லீம்களுக்கு எதிரான காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் சார்புத்தன்மையான நடவடிக்கையால் TADA மற்றும் MCOC சட்டங்களின் கீழ் காவல்துறை பல கைதுகளைச் செய்தது, அரசு ரகசியங்கள் சட்டத்தின் கீழ்கூட கைதுகள் அரங்கேறின.
இந்த எல்லா நிகழ்வுகளிலும் இயங்கும் பொதுவான இழை அதன் மத அடையாளத்தின் காரணமாக சமூகம் எதிர்கொள்ளும் அவமானமும் களங்கமும் ஆகும். தாங்கமுடியாத சித்திரவதைக்குப் பின்னர் போலீசு அல்லது நீதித்துறை காவலில் இழந்த ஆண்டுகள் ஒருபோதும் மீட்கப்படாது, அவை எப்போதும் வீணடிக்கப்படுகின்றன. சித்திரவதை மற்றும் களங்கம் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் வாழ்நாள் முழுவதும் பயமுறுத்துகிறது. போலீசு காவலில் முஸ்லீம் இளைஞர்கள் பலியிடப்படுவது தற்செயல் நிகழ்வு அல்ல, ஆனால் முஸ்லீம் சமூகத்துடன் போலீசு நடவடிக்கைகளைப் பார்க்கும்போது நன்கு நிறுவப்பட்ட வடிவத்தை காண முடியும். வகுப்புவாத கலவரம் மற்றும் கும்பல் கொலை ஆகியவற்றின் பின்னணியில் இது தெளிவாகிறது. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை குறிவைத்து வகுப்புவாத கலவரங்களின் போது காவல்துறையின் பக்கச்சார்பான தன்மையை சுட்டிக்காட்டும் ஏராளமான ஆய்வுகள் மற்றும் ஆணைய அறிக்கைகள் உள்ளன.
ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை (1998) பம்பாய் போலீசு படை கலவரத்தை ‘சார்புத்தன்மையுடன் கட்டப்பட்டது’ என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இது 1992 ல் பம்பாயில் நடந்த கலவரத்திலும் மகாராஷ்டிராவின் பிற இடங்களிலும் வெளிப்பட்டது. நீதிபதி டி.பி.மடோனின் கமிஷன் பிவாண்டி கலவர(1970)த்தில் காவல்துறையின் பங்கு குறித்து கடுமையான கட்டுப்பாடுகளை நிறைவேற்றியது.
சீக்கிய எதிர்ப்பு கலவரத்தில், மூன்று விசாரணை கமிஷன்கள் – நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் (1987), நீதிபதி ஜெயின்-டி.கே. அகர்வால் கமிட்டி (1990), மற்றும் நீதிபதி ஆர்.எஸ். நருலா பனல் (1994) தங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்தார்கள். அனைத்து விசாரணை கமிஷன்களும் ஒருமனதாக 72 போலீசு அதிகாரிகளை குற்றஞ் சாட்டியுள்ளன, மேலும் காவல்துறையின் பாரபட்சமான பங்கை தெளிவாக கோடிட்டுக் காட்டின. இதேபோல், 20021 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் காவல்துறையின் பாகுபாடான பங்கைப் பற்றி பயங்கரமான அதிர்ச்சிகளைத் தரும் பல அறிக்கைகள் உண்மை அறியும் குழுக்களால் பகிரப்பட்டுள்ளன.
2014க்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட கும்பல் கொலை வழக்குகளில், காவல்துறையினர் பல மட்டங்களில் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்களை இரத்தவெறி கொண்ட கும்பலிலிருந்து பாதுகாப்பதில் இருந்து, குற்றவாளிகள் தண்டனையின்றி சுதந்திரமாக விலகிச் செல்ல அனுமதிக்கும் மோசமான விசாரணைகள் மற்றும் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களே கடுமையான குற்றத்துக்கு ஆளாகுதல் ஆகியவற்றில் போலீசின் பங்கு இருந்தது. உதவியற்ற நிலையில் இரத்தம் வழிந்து கொண்டிருந்த முகமது காசிம் மற்றும் சாமியுதீன் ஆகியோரை அவசரமாக இழுத்துச் செல்லும் குற்றவாளிகளுக்கு ஹப்பூர் காவல்துறையினர் பாதுகாப்பு கொடுத்ததை நினைவிலிருந்து யாராலும் அழிக்க முடியாது.
ஆல்வாரில் உள்ள ரக்பர் கான் மூன்று மணிநேரம் காவல்துறை தாமதமாக வந்ததால் உயிரை இழந்தார், அந்த நேரத்தில் ரக்பர் கான் கும்பலால் தாக்கப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ரத்தம் வழிய உயிரை விட்டார். அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், நீதி வழங்குவதற்கும் காவல்துறை ஒரு தடையாக இருந்ததை நிரூபிக்கப்பட்ட இதுபோன்ற பல சம்பவங்கள் கூறுகின்றன.
இந்த சம்பவங்கள் நிச்சயமாக அதிர்வுகளை ஏற்படுத்திய போதிலும், இந்தியாவில் ஏன் பெரிய அளவில் ‘ஜார்ஜ் ஃபிளாய்ட் தருணம்’ வரவில்லை என்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதாவது கருப்பினத்தாரின் உயிர்கள் முக்கியத்துவம் உள்ளவை என்கிற வரிசையில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் அல்லது இயக்கம் ஏன் இங்கே ஏற்படவில்லை? அரசியல் அறிவியலாளர் சுஹாஸ் பால்ஷிகரின் புத்திசாலித்தனமான நுண்ணறிவால் இதற்கு விளக்கம் கிடைக்கிறது. இதுபோன்ற எந்தவொரு எதிர்ப்பும் அல்லது கருத்து வேறுபாடுகளும் வளர்ந்து வரும் ஜனநாயகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்று அவர் விளக்கினார்.
விளிம்பு மக்களின் உரிமைகளுக்கான அக்கறை அல்லது குரல்களை, ஒழுங்கு அல்லது தேசத்திற்கு அச்சுறுத்தலாகக் காட்டுவதன் மூலம் அரசு சீராக செய்து வருகிறது. கவனமாக கட்டமைக்கப்பட்ட இந்த விவரிப்பு, விளிம்பு மக்களின் அவலங்கள் எவ்வளவு கொடூரமாக மீறப்பட்டாலும் பெரிய சமூகத்தில் பச்சாத்தாபத்தை உருவாக்குவதற்கான ஒரு தடையை உருவாக்கியுள்ளது. இந்த கொள்கை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித்துகள் போன்ற இரண்டாம் தர குடிமக்களின் சமூகத்தை உருவாக்குவதற்கான மைய யோசனையுடன் இணைந்திருக்கும் மேலாதிக்க சித்தாந்தத்துடன் ஒத்துப்போகிறது; ஆகவே, அமெரிக்காவின் பெரும்பாலான இடங்களில் எதிர்ப்பாளர்களின் சீற்றமும் வேதனையும் எதிரொலித்தன, சில இடங்களில் காவல்துறையினர் போலீசு மிதமிஞ்சி நடந்துகொண்டதை அடையாளமாக ஒப்புக் கொள்ள மண்டியிட்டார்கள். மன்னிப்பு கேட்க இது அவர்களின் வழி. ஆனால் இந்திய அரசோ எதிர்ப்பாளர்களை மிகவும் மோசமாக நடத்தியது.
சமீபத்திய உதாரணம் காவல்துறையினர் குடியுரிமை எதிர்ப்பு சட்ட எதிர்ப்பு போராட்டங்களை கையாண்ட முறை. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் அப்பாவி மாணவர்கள் மீது காவல்துறையினர் கையெறி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். இது பார்வை இழப்பு மற்றும் சில மாணவர்களின் மூட்டு இழப்பு போன்ற கடுமையான காயங்களுக்கு வழிவகுத்தது. போர்ட்லேண்ட் மற்றும் சியாட்டில் தற்காலிகமாக எதிர்ப்பாளர்கள் மீது கண்ணீர்ப்புகை பயன்பாட்டை தடைசெய்துள்ள நிலையில் இதுவும் உள்ளது.
டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் மீது கொடூரமான ஒடுக்குமுறை நடந்தது, இதற்காக காவல்துறை விமர்சனத்திற்கு உள்ளானது. பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சொத்துகள் எடுத்துக் கொள்ளப்படும் என்று எச்சரிக்கும் சுவரொட்டிகளையும் பெயர்களையும் வெளியிட்டது உத்தரபிரதேச போலீசு. உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டது மற்றும் அரசாங்கம் “தனியுரிமை, மரியாதை மற்றும் சுதந்திரத்தை பாதிக்கிறது” என்பதைக் கண்டறிந்து அதை “சட்டவிரோத நடவடிக்கை” என்று அழைத்தது.
சஃபூரா சர்கார்
ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவி சஃபூரா ஸர்கர் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் காவல்துறையினர் எவ்வளவு மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிய முடியும். அவர் மற்ற மாணவர்களுடன் தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.ஆர்.பி) ஆகியவற்றிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்திற்குப் பிறகு, கலிபோர்னியாவின் ஆளுநர் கழுத்தில் அழுத்தி பிடிக்கும் வழிமுறையை கைவிடுமாறு மாநில காவல்துறை பயிற்சித் திட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். கொடிய மோதல் கொலைகளின் அபாயத்தைக் குறைக்க சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான புதிய கொள்கைகள் குறித்து பிற அரசாங்கங்கள் விவாதித்தன. போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீசு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு காயங்கள் அல்லது இறப்புகளைக் குறைப்பதே இந்த நடவடிக்கைகள். அத்தகைய நடவடிக்கைகளுக்கு பதிலாக, உத்தரபிரதேசத்தில் மோதல் கொலைகள் அல்லது கூடுதல் நீதித்துறை கொலைகள் மாநில கொள்கையாக பயன்படுத்தப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தின் கட்டாய தலையீட்டின் காரணமாக, இரண்டு வருட காலப்பகுதியில் 3,500 க்கும் மேற்பட்ட போலீசு மோதல் கொலைகளும் குற்றவாளிகள் கிட்டத்தட்ட 80 பேர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த சந்திப்புகள் பெரும்பாலும் முஸ்லீம் இளைஞர்களை குறிவைத்து முஸ்லீம் சமூகத்தை அவர்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்காக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலே முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த சிக்கல்கள் பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. ஜனநாயக நிறுவனங்கள் செழித்து, நியாயத்துடன் செயல்பட, ஒருபுறம் பங்கேற்பு ஜனநாயகம் இருக்க வேண்டும், அங்கு மக்களுக்கு அச்சமின்றி பங்கேற்கவும் சுதந்திரம் உள்ளது. மறுபுறம் நிறுவன உள்கட்டமைப்பை உருவாக்கி, முதலீடு செய்து ஊக்குவிக்கும் ஒரு அரசு. சமூகத்தின் விளிம்புநிலை பிரிவுகளின் உரிமைகள் மீறப்படுவதில் தங்கள் பச்சாதாபத்தையும் சீற்றத்தையும் வெளிப்படுத்த தனிநபர்கள் பொது இடங்களை குடிமக்களாக மீட்டெடுக்க வேண்டும். இந்த ஆர்ப்பாட்டங்கள் அல்லது குரல்களை அரசால் ஒடுக்க முடியாது. பொறுப்புக் கூறலுக்காக ஜனநாயக நிறுவனங்களை அரசு தீவிரமாக வளர்த்து வலுப்படுத்த வேண்டும். உலகெங்கிலும் அடக்குமுறை மற்றும் அடிமைத்தனத்தின் நினைவுச் சின்னங்களை அகற்றுவதற்கான போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கோட்சே மற்றும் மனு சிலைகள் தற்போதைய சித்தாந்தத்தின் கீழ் வழிபடப்படுகின்றன. மேலும் இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம் என்று புகழப்படும்போது இது கவலைக்குரிய விடயமாகும். இந்தியாவும் ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு அளித்த ஆதரவிலிருந்து உத்வேகம் பெற்று சுதந்திரம், நீதி மற்றும் சகோதரத்துவத்திற்கு ஆதரவாக தனது சொந்த அரசையும் மக்களையும் மீட்டுக் கொள்ளும் என்று நம்புவோம்.
கட்டுரை:நேஹா தப்பாடே தமிழாக்கம்: கலைமதி
நன்றி: சப்ரங் இந்தியா
சமீபத்தில் மோடியின் வாரணாசி தொகுதியில் ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களை பதிவு செய்ததற்காக ஸ்க்ரோல் இணைய தளத்தின் நிர்வாக ஆசிரியர் சுப்ரியா சர்மா மீது முதல் தகவல் அறிக்கையை உ.பி போலீசு பதிவு செய்திருக்கிறது. ஊரடங்கின் போது மக்கள் படும் துன்ப துயரங்களையும், அரசு இயந்திரத்தின் நிர்வாக சீர்கேடுகளையும், இலஞ்ச ஊழல் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தியதற்காக இந்தியா முழுவதும் குறைந்தது 53 ஊடகவியலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் தொடுத்திருக்கின்றன.
மோடியின் வாரணாசி தொகுதியில் மோடி தத்தெடுத்த ஒரு கிராமத்தில் ஊரடங்கு சமயத்தில் அந்த மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்கே கடுமையாகப் போராடி வந்த சூழலை ஸ்க்ரால் இணையதளத்தின் ஆசிரியர் சுப்ரியா சர்மா அங்கு சென்று மக்களின் வாழ்நிலையை கண்டறிந்து எழுதினார். மோடி தத்தெடுத்த கிராமத்தின் நிலையை அம்பலப்படுத்தியதைக் கண்டு கடுப்படைந்த யோகி ஆதித்யநாத் அரசு, சுப்ரியா சர்மாவிற்கு நேர்காணல் அளித்த பெண் குடும்பத்தை மிரட்டி, சுப்ரியாவுக்கு எதிராக புகாரளித்து வழக்கு தொடரச் செய்துள்ளது. தமது வாழ்நிலையை வெளிப்படையாக எழுதியதன் மூலம், தம்மை பொதுவெளியில் அசிங்கப்படுத்தியதாக அந்தப் பெண் புகாரளித்துள்ளார்.
இத்தகைய முதல் தகவலறிக்கைகள் தொடங்கி கைது நடவடிக்கைகள், நீதிமன்ற சம்மன்கள், உடல் ரீதியான தாக்குதல்கள், சொத்துக்களை அழித்தல் மற்றும் கோவிட் -19 குறித்த அறிக்கைக்கு எதிரான அச்சுறுத்தல்கள் வரை என கடந்த மார்ச் 25 முதல் 2020 மே 31 வரை பல்வேறு ஊடகவியலாளர்கள் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டதாக புது டில்லியைச் சேர்ந்த உரிமைகள் மற்றும் அபாயங்கள் பகுப்பாய்வுக் குழு (Rights & Risks Analysis Group -RRAG)என்ற தனியார் சிந்தனைக்குழாம் அமைப்பு கூறியிருக்கிறது.
உ.பி-யில் 11 பேரும், ஜம்மு காஷ்மீரில் 6 பேர், இமாச்சல் பிரதேசத்தில் 5 பேரும், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிஸா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 4 பேரும், பஞ்சாப், டெல்லி, மத்தியப்பிரதேசம், கேரளாவில் தலா இருவரும், அந்தமான், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவரும் ஒடுக்குமுறைக்கு உள்ளானதாக ”இந்தியா: கோவிட்-19 ஊரடங்கின் போது ஊடகத்தின் மீதான ஒடுக்குமுறை” என்ற ஆய்வறிக்கையில் அந்த சிந்தனைக்குழாம் அமைப்பு கூறியிருக்கிறது.
“தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே கோவிட்-19 குறித்து தவறான தகவல் வெளியிடுவதாக கூறி ஊடக சுதந்திரத்தை இந்திய அரசாங்கம் நசுக்க முயன்றது. 31.03.2020 அன்று, தொற்றுநோய் பற்றிய திறந்த விவாதத்தில் உச்சநீதிமன்றம் தலையிட மறுத்து விட்டாலும் கூட பல்வேறு தவறான நிர்வாகக் குறைபாடுகள், ஊழல் முறைகேடுகள், புலம் பெயர்ந்தோர், தொழிலாளர்கள் மற்றும் வறிய குடிமக்கள் மீதான பட்டினிக் கொடுமைகள், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உடைகளும், கருவிகளும் இல்லாதது போன்ற செய்திகளை தெரிவித்த ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையை முழுவீச்சுடன் அரசு தொடங்கியது”என்று RRAG-ன் இயக்குனர் சுஹாஸ் சக்மா கூறினார்.
எனவே தான், உலகிலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான இடமாக இந்தியா மாறியுள்ளது. இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு ஊடகவியலாளர்கள் கேடு விளைவிப்பதாக அரசு மற்றும் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுவதற்கு நீண்ட காலம் எடுக்கவில்லை என்றும் சுஹால் சக்மா கூறினார்.
ஐபிசி, தகவல் தொழில்நுட்ப சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் / பட்டியல் சாதியினர் (வன்முறைகளைத் தடுக்கும்) சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் குறைந்தது 22 ஊடகவியலாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்.ஐ.ஆர்) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பட்டினிக் கொடுமைகள், அவர்களுக்கு ரேஷன் வழங்குவதில் நிர்வாகத்தின் தோல்வி, புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் கூடுதல், புலம்பெயர்ந்தோருக்கான துயர் நீக்க முகாம்களை நடத்துவதில் முறைகேடுகள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் நிர்வாக குளறுபடிகள் போன்றவற்றை வெளியிட்டதற்காகவோ அல்லது ஆளும் கட்சி அல்லது முதலமைச்சர்களை விமர்சித்ததற்காகவோ, இந்த வழக்குகள் புனையப்பட்டுள்ளன. அதிலும் ஒரு சில ஊடகவியலாளார்களை மிரட்டுவதற்கு மட்டுமே பல்வேறு முதல் தகவலறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்தது 10 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் உச்சநீதிமன்றத்தால் கைது நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊழல் மற்றும் இலஞ்ச முறைகேடுகள், உணவுப்பொருள் மற்றும் பாதுகாப்புக்கருவிகள் தட்டுப்பாடு போன்றவற்றை அம்பலப்படுத்தியது முதல்,“கோவிட்-19 நோயாளிகளிடம் கைப்பேசியில் மட்டுமே பேசிய குடும்பத்தினர் ஏன் தனிமைப்படுத்தப்பட்டனர்?” என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பியது வரை அனைத்திற்கும் கோவிட்-19 பற்றி வதந்தி பரப்பியதாகவும், ஊரடங்கை மீறியதாகவும் கூறி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
முசாஹர் (Musahar) சமூகத்தினர் (தலித்) உணவில்லாமல் புல்லை சாப்பிடுவதை வெளியிட்டது, தவறான தகவல் வெளியிடுவதாக குற்றச்சாட்டு, நிர்வாகத்தின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் குற்றச்சாட்டு அல்லது பி.பி.இ கருவிகள் போதுமான தரத்தில் இல்லை என்று கூறும் அதிகாரபூர்வ கடிதத்தை வெளியிட்டது போன்ற காரணங்களுக்காக ஏழு ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்ற சம்மன் அனுப்பப்பட்டது.
போலீஸ் காவலில் இருந்த இருவர் உட்பட ஒன்பது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் கிராமத் தலைவர் ஒருவரால் (சர்பஞ்ச்) ஒரு ஊடகவியலாளர் பிணைக் கைதியாக்கப்பட்டிருந்தார். தெலுங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ குறித்து எழுதியதற்காக மற்றொரு பத்திரிகையாளரின் வீடு இடிக்கப்பட்டது. ஊரடங்கின் போது “வனவிலங்குகளை வேட்டையாடும் போக்கு அதிகரித்ததாக” ஒரு கட்டுரையை வெளியிட்டதற்கு அருணாச்சல பிரதேசத்தில் ஒரு பெண் ஊடகவியலாளார் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்.
ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அனைத்திலும் இந்திய பத்திரிகை கவுன்சில் தலையிடுமாறு RRAG பரிந்துரைத்திருக்கிறது. மேலும் அரசியல் கட்சியினர் ஊடக சுதந்திரத்தில் தலையிடுவதை தடுத்து ஊடகவியலாளர்கள் பயமில்லாமல் பணி செய்வதற்கான நிலைமைகளை உருவாக்க இந்திய அரசாங்கத்திற்கு வலியுறுத்தி உள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை மோடி அரசாங்கத்திற்கு ஜால்ரா அடிக்கும் அளவிற்கு தான் ஊடக சுதந்திரம் இருக்கிறது. இந்நிலையில், ஊடக சுதந்திரத்திற்காக மோடி அரசாங்கத்திடம் கெஞ்சுவது என்பது ஆட்டை பாதுகாக்க ஓநாயிடமே முறையிடுவது போல தான். கொரொனா காலத்தில் மக்கள் படும் வதைகளை சமூகத்திற்கு தெரிவிக்க வேண்டுமானால் பத்திரிகையாளர்கள் அமைப்பாய் திரண்டு அரசை எதிர் கொள்வதும் அதற்கு மக்கள் ஆதரிப்பதும் அத்தியாவசியமானதாகும்.
கொரோனா முடக்கத்தால் கோடிக்கணக்கான மக்கள் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கும் நிலையில் அரசுத்துறை, தனியார்துறை வங்கிகள் நிதிநிறுவனங்கள் அனைத்தும் கடன் தவணைகளை வரும் ஆகஸ்ட் 31 வரை வசூலிக்கக்கூடாது என மத்திய மாநில அரசுகளும், ரிசர்வ் வங்கியும் அறிவித்துள்ளன. மாவட்ட ஆட்சியர்களும் இதனை நாளிதழ்கள் வாயிலாக அறிவித்துள்ளனர். ஆனால் இவற்றை சற்றும் சட்டை செய்யாமல் நுண்கடன் நிறுவனங்களும், நிதிநிறுவனங்களும் அடாவடித்தனமான வசூல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், அச்சுறுத்தி அவமானப்படுத்துகின்றனர்.
இது குறித்து எண்ணற்ற புகார்கள் வருகின்றன. பல பெண்கள் தொலைபேசியிலேயே கதறியழுகின்றனர். வேறு வழியின்றி புகார் கொடுக்கச் சென்றால் காவல்துறையினர் புகாரை வாங்க மறுப்பதுடன் மோசமாக அவமானப்படுத்துகின்றனர். அரசின் அறிவிப்பை சுவரொட்டியாக அச்சிட்டு ஒட்டியதற்காக மக்கள் அதிகாரம் தோழர்கள் மூவர் மீது சீர்காழி போலீசார் வழக்குப் போட்டு சிறையிலடைத்துள்ளனர்.
கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை மத்திய அரசு ஓசைப்படாமல் தள்ளுபடி செய்கிறது. ஆனால் ஏழை எளிய மக்கள் தாங்கள் வாங்கிய கடன்களை எப்பாடு பட்டாவது திருப்பிச் செலுத்தி விடுகின்றனர். இதனை அரசின் புள்ளிவிவரங்களே மெய்ப்பிக்கின்றன.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து மக்கள் உணவுக்கே அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் நிதிநிறுவனங்கள் கடன் வசூல் என்ற பெயரில் ரவுடித்தனமான முறையில் நடந்து கொள்வதை அரசும் மாவட்ட நிர்வாகங்களும் உடனே தடுத்து நிறுத்துவதுடன் அத்துமீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மக்கள் வீதிகளில் திரளும் கட்டாயம் ஏற்படும். இது மேலும் கொரோனா பரவலுக்கே வழிவகுக்கும்.
இவண், காளியப்பன், மாநிலப்பொருளாளர், மக்கள் அதிகாரம்.
கடந்த நான்கு மாத காலமாக கொரோனா பிரச்சனையில் வாழ்க்கையை ஓட்ட முடியாமல் பலரும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம். வேலை இல்லை காசு இல்லை. பல குடும்பங்கள் தவித்துக் கொண்டிருக்கின்றன இந்நிலையில் நுண் கடன் நிதி நிறுவனங்களால் சுய உதவி குழு கடன் மற்றும் வாகன கடன்களுக்காக வீட்டுக் கடனுக்காக நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கியவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.
இதில் ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று ஆகஸ்ட் 31 வரை தவணையும் வட்டியும் கட்ட தேவையில்லை, மீறி கட்டாயப்படுத்தும் வங்கிகள் நிதி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்று அறிவிப்பும் செய்திருந்தது.
இந்நிலையில் இந்த அறிக்கையை மீறி பல இடங்களில் நுண்கடன் நிதி நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் சுய உதவி குழுக்கள் போன்றவை மிரட்டி பணம் பறிப்பதை எதிர்த்து மக்கள் அதிகாரம் சார்பில் சுவரொட்டி இயக்கத்தை மேற் கொண்டது.
கடலூர் மண்டலத்தில் சீர்காழி வட்டார பகுதியில் கடந்த 17 ஆம் தேதி இரவு போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த தோழர்கள் கிஷோர் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோரை போலீஸ் மிரட்டி செல்போனையும் இரு சக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டு காலையில் ஆறு மணிக்கு ரவியுடன் வரவேண்டுமென்று விரட்டி அனுப்பியதோடு மட்டுமல்லாமல் சில இடங்களில் போஸ்டரையும் கிழித்தனர்.
அதிகாலையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் கிஷோர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் காவல் நிலையம் சென்ற போது அங்கே கிஷோரும் தமிழ்ச்செல்வன். வட்டார ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் மீது பொய் வழக்குப் போட்டது. போலீஸ் இரவுவரை இழுத்தடித்து இரவு 9 மணிக்கு கீழமை நடுவர் நீதிமன்றத்தில் முன்பாக ஆஜர்படுத்தியது. அப்போது முதல் தகவல் அறிக்கையை பார்த்த நீதிமன்ற நடுவர் தேவையில்லாத காரணங்களை கூறி உள்ளீர்கள் என்று விமரிசித்தார்.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
வட்டார ஒருங்கிணைப்பாளர் ரவி மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவே அவரை விடுதலை செய்கிறேன் என்றார். இவை மட்டுமில்லாமல் பொய் வழக்கை பற்றியும், போலீசாரின் தவறுகள் பித்தலாட்டங்களை பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்த நீதிமன்ற நடுவர், பின்னர் கிஷோர் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் சீர்காழி கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த செய்தி கிராமங்களிலுள்ள பொதுமக்கள் மத்தியில் காட்டுத்தீயாக பரவியது பல இடங்களில் பொதுமக்கள் சுய உதவிக்குழு ஊழியர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து விரட்டி அடித்து வருகிறார்கள்.
தகவல் : மக்கள் அதிகாரம், சீர்காழி – நாகை மாவட்டம். கடலூர் மண்டலம். தொடர்புக்கு : 98434 80587.
நோம் சாம்ஸ்கி (Naom Chomsky) ஏகாதிபத்தியம், புதிய தாராளவாதம் மற்றும் இராணுவ-தொழில்துறை-ஊடக கூட்டிற்கு எதிரான இவரது விமர்சனங்களுக்காக உலகம் முழுவதும் அறியப்பட்டவர். இவர் ஒரு அமெரிக்க மொழியிலாளர் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர். ‘தி வயர்’ இணையதளத்திற்காக, சமூக ஆராய்ச்சிக்கான டிரைகாண்டினெண்டல் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் ஜிப்சன் ஜான் மற்றும் பி.எம். ஜித்தீஷ் இருவரும் நோம் சாம்ஸ்கியிடம் நடத்திய நேர்காணலின் (தி வயர் இணைய தளத்தில் 18-05-2020 வெளியானது) தமிழாக்கம்.
***
உலகின்செல்வவளமிக்கமிகசக்திவாய்ந்தநாடானஅமெரிக்காஇந்தநாவல்கொரோனாநோய்த்தொற்றுப்பரவலை எதிர்கொள்வதில்ஏன்தோல்வியடைந்துள்ளது? இத்தோல்விஒருஅரசியல்தலைமைசார்ந்ததோல்வியாஅல்லதுஒருகட்டமைப்பின்தோல்வியா? மேலும், இந்தகொரோனாநோய்த்தொற்றின்நெருக்கடியிலும், டொனால்ட்டிரம்பின்மீதானமக்களின்நன்மதிப்பானதுமார்ச்மாதத்தின்போதுஉண்மையில்உயர்ந்திருந்தது. இதுநடக்கவிருக்கும்அமெரிக்கத்தேர்தலில்தாக்கத்தைஏற்படுத்தும்எனநீங்கள்கருதுகிறீர்களா?
நோம் சாம்ஸ்கி
இதற்கு விடையளிக்கும் முன், சற்று பின்னோக்கிச் சென்று இந்த தொற்றுநோயின் மூலக்காரணங்களை காண்பது மிக முக்கியமானது என கருதுகிறேன். உண்மையில், இது எதிர்பாராதது அல்ல. 2003-ஆம் ஆண்டில் சார்ஸ் (SARS) கொள்ளைநோய்க்குப் பின்னர், இதனை ஒத்த மற்றுமொரு தொற்றுநோய் வருவதற்கான சூழலையும் அது அநேகமாக சார்ஸ் கோரானா வைரஸின் வகையாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், அதுபற்றிய அறிவு போதுமானதாக இல்லை. யாராவது இதற்காக ஏதாவது செய்ய வேண்டும். மருந்துக் கம்பெனிகள் இதற்கு ஆர்வம் காட்டவில்லை. அவை சந்தையின் வழிகாட்டுதலில் செயல்படுகின்றன, எல்லாவற்றிலும் இலாபத்தை எதிர்ப்பாக்கின்றன. அரசாங்கம் இந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ஆனால், அது புதிய தாராளவாதக் கொள்கைகளால் தடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மையத்திற்கு (Centres for Disease Control) வழங்கும் நிதிகளை தொடர்ந்து குறைத்ததன் மூலமும், அமெரிக்க உளவு நிறுவனம் மற்றும் சுகாதார அதிகாரிகளின் முன்னெச்சரிக்கைகள் அனைத்தையும் ஒதுக்கித்தள்ளியதன் மூலமும், இந்த நிலைமையை டிரம்ப் மேலும் மோசமாக்கினார். ஆகையால், அமெரிக்கா எந்த முன் தயாரிப்பின்றி தனித்திருந்தது. ஆனால், சீன விஞ்ஞானிகள் இந்த நோயை உருவாக்கும் நோய்க்கிருமியை மிக விரைவாகக் கண்டுபிடித்து, அதன் மரபணுவை வரிசைப்படுத்தி, அது தொடர்பான எல்லா தகவல்களையும் பொது சமூகத்திற்கு ஜனவரி 10-ஆம் தேதி தெரியப்படுத்தினர்.
மேலும், ஒரே சமயத்தில் பெரும்பாலான நாடுகள் வினையாற்றியிருந்தால், இப்பிரச்சினையை மிக சுலபமாகக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க இயலும். ஆனால், அமெரிக்க உளவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்த முறையான எச்சரிக்கைகள் யாவற்றையும் டிரம்ப் அலட்சியப்படுத்தியதோடு, இதனை வெறும் ஒரு காய்ச்சல் என்றும் அது தானாகவே மறைந்துவிடும் என்றும் கூறினார். இறுதியாக இந்தப் பிரச்சினையில் அவர் கவனம் செலுத்திய போது, அதாவது மார்ச் மாதத்தில், நிலைமை மிகவும் காலம் கடந்ததாகிவிட்டது, பத்தாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இறந்து போய் விட்டனர், இந்தத் தொற்று நோய் பரவல் கைமீறிய நிலைக்கு சென்று விட்டது.
இதனால், அவை, முதலாளித்துவக் கோட்பாடு, முதலாளித்துவ வகையிலான காட்டுமிராண்டித்தனமான புதிய தாராளவாதம் மற்றும் மக்கள் நலனில் எந்த அக்கறையுமில்லாத ஒரு அரசாங்கம் ஆகிய மும்முனைத் தாக்குதலால் அமெரிக்கா பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஜனாதிபதி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது, அவர் அளிக்கும் ஒப்புதலில் எப்போதுமே ஒரு ஆதாயம் இருக்கும். ஆனால், டிரம்ப் விசயத்தில் அது விரைவாக மறைந்துவிடும். இதற்கு காரணம், கிரிமினல்தனமான குளறுபடியான அவரது செயல்பாடுகள். வருகின்ற தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை இவை வெகுவாக பலவீனப்படுத்தினாலும், நவம்பர் மாதத்திற்கு முன்னதாக பல சம்பவங்கள் நிகழக்கூடும்.
பலநாடுகளுக்குதொற்றுநோயைக்கண்காணிக்கவும்அதற்கெதிராகப்போராடவும்டிஜிட்டல்தொழில்நுட்பமும்அரசின்கட்டுப்பாடும்உதவுகின்றன, ஆனால், அதிகரித்துவரும்அதிகாரத்துவக்கட்டுப்பாடுமற்றும்அரசின்கண்காணிப்புபற்றியகவலையைவல்லுநர்கள்தெரிவிக்கின்றனர். நீங்கள்இதைஏற்கிறீர்களா?
இங்கே இவ்வாறு விவாதப் பிரதிவாதங்கள் செய்கின்ற சக்திகள் இருக்கின்றன. ஒருபுறம், வணிக உலகமும் அதன் புள்ளியியல் நிபுணர்களும் மிக அதிகமான அதிகாரத்துவக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒன்றை (அவர்கள் தீர்மானித்து வைத்திருக்கின்ற ஒன்றை) நிறுவ முயல்கின்றனர். மற்றொருபுறம், மிகவும் நியாயமான மற்றும் சுதந்திரமான உலகத்தை நோக்கி செல்ல விரும்புகின்றன மக்கள் சக்திகள். இறுதியில் என்ன நடக்கும் என்பது இந்த இரு சக்திகளுக்கு இடையிலான போராட்டத்தில்தான் அமைந்துள்ளது.
தற்போதையசூழலில்ஏழைமக்களின்அவலநிலையிலிருந்துஅவர்களைமேம்படுத்தஎன்னவிதமானபொருளாதாரநடவடிக்கைகளைமேற்கொள்ளவேண்டும்? ஒருபுதியசமூக–ஜனநாயகஅணுகுமுறை அல்லது அரசாங்கங்களால் மேற்கொள்ளப்படும் அதிக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பிணையெடுப்புகள் இவற்றில் எது அதற்கு சாத்தியமானது?
எவ்விதமான பொருளாதார நடவடிக்கைகள் தேவை என்பது நமக்கு தெரியும். தற்போதைய நெருக்கடிகளில் இருந்து என்ன வெளிவரும் என்பது நமக்கு தெரியாது. கடந்த 40 ஆண்டு புதிய தாராளவாதக் கால முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனத்தின் பயனாளர்கள்தான், தற்போதைய தொற்றுநோய் மற்றும் அதன் விளைவுகளுக்கு காரணமானவர்கள். தங்களது சொந்த நலனிற்காக கட்டியமைத்த இந்தக் கட்டமைப்பு தொற்றுக்குப் பின் இதுவரை இல்லாத கடுமையான வடிவத்தில் வெளிவருவதை உறுதிப்படுத்த இடைவிடாமல் அவர்கள் செயல்படுகிறார்கள்.
மற்றொருபுறம், மிகவும் வித்தியாசமான மற்றும் சிறந்த உலகை உருவாக்கக்கூடிய பிரபலமான மக்கள் சக்திகள் ஒரு அமைப்பாக வடிவம் பெற்று வருகின்றன. அமெரிக்காவின் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் ஐரோப்பாவின் யானிஸ் வாரோஃபாகிஸ் (Yanis Varoufakis) ஆகியோரால் துவக்கப்பட்ட முற்போக்கு சர்வதேசத்துடன் அது, சர்வதேச அளவில் நடந்து வருகிறது. இப்போது கிழக்கு உலகமும் அதில் இணைந்து வருகிறது.
இந்த நெருக்கடி எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமடைகிறதோ, அந்த அளவிற்கு நிலைமை மோசமடையும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த பெருந்தொற்றில் இருந்து மீள்வது என்பது மிக பயங்கரமான இழப்புகளுக்கு பின்னரே நடக்கும். உலகம் இப்போதைய போக்கிலேயே இயங்கினால், மிக நீண்டகாலத்தில் அல்ல வெகுவிரைவாகவே, துருவப் பகுதியில் உள்ள (அண்டார்ட்டிக்கா) பனிக்கட்டிகளும் இமயமலையில் பனிப்பாறைகளும் உருகுவதைத் தடுக்க முடியாது; அல்லது புவி வெப்படைதலின் பிற மோசமான விளைவுகள், தெற்காசியாவை மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றுவதையும் தடுக்க முடியாது. இந்த பயங்கரமான நிலையை உலகம் இன்னும் 50 ஆண்டுகளுக்குள் அடைந்துவிடும் என்று மிக அண்மை கால அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ராப்வால்லஸ்(Rob Wallace) போன்றதொற்றுநோயியல்நிபுணர்கள்லாபத்தினால்உந்தப்படும்முதலாளித்துவக்தர்க்கம்வனஉயிரினச்சூழலின்மீதுபடையெடுத்ததையும், மனித சமூகத்திற்கும்–வன உயிரிகளுக்கும் இடையில் மோதல்கள்அடிக்கடிநடப்பதையும், இதனால்வைரஸ்கிருமிகள்மனிதஇனத்தைதாக்குவதற்குவழிவகுப்பதையும் குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஆகையால், முதலாளித்துவநெருக்கடிஒருசுகாதாரநெருக்கடியின்வடிவத்தில் வெளிப்பட்டுள்ளது. இதனால், மனித சமூகம் பழைய ‘இயல்பு நிலைக்கு’ச் செல்ல முடியாது என்று கூறுகிறார். இது குறித்த உங்களது கருத்து?
ராப் வால்லஸ்
ராப் வால்லஸின் கூற்று முற்றிலும் சரியே. வன உயிரினங்களின் வாழ்விடங்களை அழித்தொழிப்பது மற்றும் மீட்டிருவாக்கம் செய்ய இயலாத அளவிற்கு நிலத்தை அழிப்பது போன்றவை அதிகரிக்க அதிகரிக்க, கண்கூடாக நாவல் கொரோனா வைரஸ் விசயத்தில் நாம் பார்த்த, இனம் விட்டு இனம் பரவும் இத்தகையை பரவல்களின் அபாயத்தை அதிகரிக்கவே செய்யும். தடைகளற்ற முதலாளித்துவத்தின் தற்கொலைப் போக்குகள் சுகாதார நெருகக்டியின் மூலமாக இன்னும் பலவழிகளில் அம்பலப்பட்டுள்ளது. 2003-ம் ஆண்டு சார்ஸ் தொற்றுநோய் பரவலின் போது, விஞ்ஞானிகள் மற்றொரு கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதை எச்சரிக்கை செய்தனர், அதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், யார் அவ்வாறு செய்ய முடியும்?
மிகப்பெரிய சூப்பர் பணக்கார மருந்து கம்பெனிகள் இவற்றை செய்வதற்கான மூலாதாரங்களைக் கொண்டிருந்தன, ஆனால், இலாபம் என்ற இயல்பான முதலாளித்துவ கோட்பாட்டினால் தடுக்கப்பட்டன. அரசாங்கம் இதில் அடியெடுத்து வைக்க முடியும், ஆனால், அது புதிய தாராளவாத பிளேக் நோயினால் தடுக்கப்பட்டுள்ளது. இதனால், தனது மேலாதிக்கத்தால் கட்டுப்படுத்தப்படும் உலகத்தில் அரசாங்கம் தலையிடக் கூடாது என தனியார்துறை அரசாங்கத்தை நிர்பந்திக்கிறது. ஆனால், தற்போது நடைபெறுவதைப் போன்று, இந்த கார்ப்பரேட் துறை பணக்காரர்கள் உருவாக்கிய நெருக்கடியில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதை மட்டுமே அரசாங்கம் செய்துவருகிறது.
தற்போது கணிக்கப்பட்டுள்ளது போல, இப்போது இருப்பதைக் காட்டிலும் மிக தீவிரமான ஒரு தொற்றுநோய் – புவி வெப்பமாவதால் மிகவும் பெருக்கப்பட்ட ஒரு தொற்று நொய் – வரலாம். விஞ்ஞானிகளுக்கு இதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியும், ஆனால், யாராவது செயல்பட தயாராக இருக்க வேண்டும். நம் கண் முன்னே இருக்கும் சரியான பாடங்களில் இருந்து கற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இல்லையெனில், அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.
பெரிய மருந்து கம்பெனிகளும் அரசாங்கமும் தான் இதற்கான ஒரே வாய்ப்புகள் என தற்செயலாக கூட நாம் கருதக்கூடாது. பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து பெரிய அளவில் மானியம் பெறுகின்ற பெரிய மருந்து கம்பெனிகள் தேவையா என்பது நியாயமான கேள்வி. தனியார் மேலாதிக்கத்திற்கும் குவிக்கப்பட்ட செல்வத்திற்கும் சேவை செய்யும் நிலைமைக்கு மாறாக, மனிதத் தேவைகளுக்கும் சமூகத்திற்கும் சேவை செய்யவைக்க, தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் கட்டுப்பாட்டிற்கு ஆட்படும் வகையில் இவற்றை ஏன் சமூக உடைமையாக்கக் கூடாது?
மேற்கூறியவற்றுள் பெரும்பாலானவை டிரம்ப் நிர்வாகத்தின் அருவருப்பான பக்கமும் ஏகாதிபத்தியத்தின் வழக்கத்திற்கு மாறான குரூரமான வடிவமும் ஆகும். ஆனால் இதைக் காட்டிலும் மிக அதிகமான துலக்கமாக வெளிப்படுகின்ற நடவடிக்கைகளும் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் மிக பணக்கார மற்றும் மிக வலிமைவாய்ந்த நாடான ஜெர்மனி, இந்த நெருக்கடியை நன்றாகவே சமாளித்து வருகிறது. அந்நாட்டிலிருந்து தெற்கில் மிக தொலைவில் இல்லாத நாடான இத்தாலி இந்த நோய்த்தொற்றினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. ஆனால் ஜெர்மனி தனது மருத்துவ சேவைகளை இத்தாலிக்கு வழங்குகிறதா? இதுநாள் வரை வழங்கியதாக தகவல் இல்லை.
நல்வாய்ப்பாக, இத்தாலி கியூபாவிடமிருந்து கணிசமான உதவியைப் பெறுகிறது. இதுதான் உண்மையான சர்வதேசியத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு, இது முதல்முறையாக நடைபெறுவது அல்ல. இச்சூழ்நிலைகள் எவ்விதமான சர்வதேசியம் தேவைப்படுகிறது என்பதையும் நம்மையெல்லாம் அழிக்கும் சுயநலத்தின் தன்மையையும் நமக்குக் காட்டுகிறது.
டிரம்ப், அமெரிக்காவிற்கு கடுமையான தீங்கை விளைவித்துக் கொண்டுள்ளார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை எனினும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு பாரதூரமான சேதத்தை அவரால் கூட விளைவிக்க முடியாது. அமெரிக்காவின் சக்தியோ மிக வலிமையானது. இராணுவ ஆதிக்கத்தில், அதன் வலிமை ஒப்பிட முடியாதது. பிற நாடுகள் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் ஒரே நாடு அமெரிக்காதான், மற்ற நாடுகள் எவ்வளவு தான் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த மூன்றாம் நாட்டின் பொருளாதாரத் தடைகளுக்குக் கட்டுப்படுகின்றன.
இசுரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான “இந்த நூற்றாண்டிற்கான ஒப்பந்தத்தை” அமெரிக்கா வெளியிட்ட போது, அதில் உள்ள விதிமுறைகளை மற்றவர்களும் பின்பற்ற வேண்டிய முறையாக மாறிவிட்டது. வேறு எந்த நாடாவது இந்த ஒப்பந்தத்தை வெளியிட்டிருந்தால், மற்ற நாடுகள் – இதனை கண்ணில் பட்டிருக்கும் பட்சத்தில் – அதை கேலிக்குரியதாகவே பார்த்திருப்பார்கள்.
அமெரிக்காவைச் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் உலகத்தின் பாதி செல்வத்தைக் கட்டுப்படுத்துகின்றன, மேலும், ஒவ்வொரு பொருளாதார வகையிலும் முதல் இடத்தையோ சில சமயங்களில் இரண்டாம் இடத்தையோ வகிக்கின்றன.
பிற நாட்டினருக்கு அமெரிக்காவைப் பார்க்கப் பிடிப்பதில்லை; அல்லது இன்னும் மோசமாகவே பார்க்கிறார்கள். இது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆனால், அவர்கள் அமெரிக்காவைக் கண்டு அஞ்சுகிறார்கள்; உலகளாவிய அரங்கில் அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் தீவிரமான போட்டியாளர்கள் யாரும் இல்லை.
பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 செயற்பாட்டாளர்களுக்காக குரல் கொடுத்துவரும் வழக்கறிஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் கணினிகள் ஸ்பைவேர் எனப்படும் வேவு பார்க்கும் பொருளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததை அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பு கண்டறிந்துள்ளது.
கடந்த ஜூன் 15, 2020 அன்று அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பு – சிட்டிசன்ஸ் லேப் எனும் இணையச் செயற்பாட்டாளர் குழுவுடன் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிடுள்ளது. அதில் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 11 சமூக ஆர்வலர்களுக்காக குரல்கொடுக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 9 பேரின் கணினிகள் வேவு பார்க்கப்படுவதை தமது ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஜனவரி 1, 2018 அன்று நடந்த பீமா கொரேகான் வன்முறைக்கு முந்தைய நாள் நடந்த எல்கர் பரிஷத் மாநாட்டை ஏற்பாடு செய்ததாகக் கூறி 5 சமூகச் செயற்பாட்டாளர்களை 2018-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் கைது செய்தது போலீசு. அதனைத் தொடர்ந்து அந்த வழக்கில் மேலும் 6 சமூகச் செயற்பாட்டாளர்களையும் இணைத்து அவர்களையும் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.
கைது செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் மட்டுமே எல்கர் பரிஷத்தோடு தொடர்புடையவர். மற்றவர்கள் தொடர்ச்சியாக மனித உரிமைப் பிரச்சினைகளுக்காகவும், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகவும், தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த ‘குற்றத்திற்காக’ இத்தகைய போலி வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தடைசெய்யப்பட்ட இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)-யோடு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது போலீசு.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்வதற்கு திட்டமிட்டதாகவும் அரசாங்கத்தை நிலைகுலையச் செய்யும் சதியில் பங்கெடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ஆதரவாக போலி கடிதங்களையும் அவர்களது கணினிக்குள் வைத்து வழக்கை ஜோடித்தது போலீசு.
கைது செய்யப்பட்டவர்களின் கணினிகளின் வன்தகட்டின் (Hard Disk) நகலை புனே போலீசு நீதிமன்றத்துக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் கொடுத்தது. அதனை வாங்கி ஆய்வு செய்த கேரவன் பத்திரிகை, அந்த வன்தகட்டில் ‘மால்வேர்’ என சொல்லப்படும் தகவல் திருட்டு மென்பொருட்கள் இருந்ததையும் அதன் மூலம் கோப்புகள் கையாளப்பட்டதையும் இந்த ஆய்வு அம்பலப்படுத்தியது.
இந்த ‘மால்வேர்’களை இயக்குபவர்கள், இதன் மூலம், தொலைவிலிருந்தே கணிணிக்குள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களை நுழைக்க முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களது கணினியிலிருந்து கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் கடிதங்கள் இப்படித்தான் கணினிக்குள் கொண்டு வந்திருக்கப்பட வேண்டும் என கணினி பாதுகாப்பு வல்லுனர்களும் வழக்கறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், வாட்சப் நிறுவனம், இஸ்ரேலின் மென்பொருள் நிறுவனமான என்.எஸ்.ஓ. உருவாக்கிய பெகாசஸ் என்னும் வேவுபார்க்கும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு நூறுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் வாட்சப் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டதாகக் கூறி அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தது. என்.எஸ்.ஓ நிறுவனமோ, தாம் அரசாங்கங்களுக்கு மட்டும்தான் அத்தகைய வேவுபார்க்கும் தொழில்நுட்பங்களை வழங்குவதாகத் தெரிவித்தது.
அச்சமயத்தில் இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த பெகாசஸ் ‘மால்வேர்’ செயலி மூலமாக கண்காணிக்கப்பட்டிருப்பதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தொடர்பு கொண்டு தாம் பிரச்சினை குறித்து தெரிவித்துவிட்டதாகக் கூறியிருக்கிறது வாட்சப். அந்த வகையில் வாட்சப் தொடர்பு கொண்டவர்களுல் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்த மூன்று செயற்பாட்டாளர்களும் அடங்குவர்.
இதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களும் வழக்கறிஞர்களும் கண்காணிக்கப்படலாம் என்ற சந்தேகத்தின் பெயரில், இவ்வழக்குகளுக்காக குரல் கொடுப்பவர்களின் கணிணிகளை அம்னெஸ்டி இண்டர்நேசனல் எனும் மனித உரிமைகள் அமைப்பும், சிட்டிசன்ஸ் லேப் என்ற இணையச் செயற்பாட்டாளர்கள் குழுவும் இணைந்து ஆய்வு செய்தன. இவர்கள் அனைவருக்குமே, கடந்த 2019 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மின்னஞ்சல்கள் மூலம் மால்வேர்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த மின்னஞ்சல்களில் இருக்கும் இணைப்பை அழுத்தினால் அது பின்னணியில், ‘நெட்வயர்’ எனும் வணிகரீதியான வேவுபார்க்கும் மென்பொருளை கணினியில் நிறுவும். அதன் மூலம் கணினி, கைப்பேசி ஆகிய அனைத்தையும் வேவுபார்க்க முடியும்.
வழக்கறிஞர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களுமான, நிகல்சிங் ரத்தோட், டிக்ரி ப்ரசாத் சௌகான், யக் மோஹித் சவுத்ரி, ராகினி அகுஜா, கல்வியாளரான பார்த்த சாரதி ரே, பத்திரிகையாளரான பி.கே.விஜயன், ஜக்லக் எனும் மனித உரிமைகள் அமைப்பின் வழக்கறிஞர்களான ஷாலினி கெராம், இஷா கந்தெல்வால் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகளுக்கும் ஜக்லக் அமைப்பின் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கும் மால்வேர் அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் அச்சமயத்தில் முக்கியமாக பேசப்படும் விவகாரங்கள் குறித்து தலைப்பிடப்பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றன. அது குறித்த ஆர்வத்தில் செயல்பாட்டாளர்கள் இணைப்பை அழுத்தினால் அந்த மால்வேர் மறைமுகமாக தரவிறக்கப்பட்டு பின்னணியில் இருந்து செயல்பட ஆரம்பிக்கும். அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், கணினி செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் கண்காணிப்பதோடு, இந்த மால்வேரை அனுப்பியவர்கள் விரும்பும் கோப்புகளை கணினிக்குள் நுழைக்கவும் வழியேற்படுத்திக் கொடுக்கவல்லவை.
பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரின் மீதும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளான பின்னரும்கூட 11 பேரும் பிணை வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவரகள். இந்தியச் சிறைகளில் கொரோனா தொற்று பெருமளவில் பரவிக் கொண்டிருக்கையில் அதற்கு மத்தியிலும் இவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றங்கள் மறுத்து வருகின்றன.
புனே போலீசுத்துறையின் வசம் இருந்த இந்த வழக்கை, அமித்ஷாவின் உள்துறைச் செயலகத்தின் கீழ் உள்ள தேசிய புலனாய்வு முகமை (NIA) கடந்த ஜனவரி 24, 2020 அன்று மராட்டிய அரசிடமிருந்து தன்னிச்சையாக எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை NIA கையிலெடுத்தவுடன் பீமா கொரேகான் வழக்கில் கலவரத்தைத் தூண்டிய வலதுசாரி கிரிமினல்களாகிய மிலிந்த் ஏக்பொடே மற்றும் சாம்பாஜி பீடே ஆகிய இருவரின் மீதான குற்றச்சாட்டுகளையும் புறக்கணித்தது.
தேசிய புலனாய்வு முகமைக்கு என ஒரு காவிப் பின்னணி இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டிலிருந்தே ஆளும் பாஜக – சங்க பரிவாரக் கும்பலுக்கு ஆதரவாக பல்வேறு வழக்குகளை நீர்த்துப் போகச் செய்தது. பல மாநில அரசுகளாலும் நடத்தப்பட்டு வந்த வழக்குகளை தன்னிச்சையாக கையெலெடுத்துக் கொண்டு, காவிக் கும்பலுக்கு ஆதரவான வகையில் வழக்கை திசை மாற்றிக் கொண்டு போவதே இதன் வாடிக்கையாக இருந்துவருகிறது. மராட்டிய தீவிரவாத எதிர்ப்புப் படைப்பிரிவினரால் வெற்றிகரமாக புலனாய்வு செய்யப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் விடுவிக்கப்பட்டது அதற்கு நல்ல உதாரணம். இந்த வழக்கில் குற்றவாளிக்குச் சாதகமாக நடந்து கொள்ளுமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் பேரம் பேசியது அச்சமயத்தில் வெளிவந்து என்.ஐ.ஏ-வின் யோக்கியதை அம்பலமாகியது.
செயற்பாட்டாளர்களின் கணிணிக்குள் அந்த ஆவணங்கள் எப்படி சென்றன என்பதை கேரவன் பத்திரிகை நடத்திய ஆய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது. செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாக உள்ளவர்களின் கணிணிகள் கண்காணிக்கப்படுவது அம்னெஸ்டி அமைப்பு நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
மோடியின் பாசிச ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுபவர்களை கண்காணிப்பதும், பொய் வழக்குகள் போட்டு முடக்குவதும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில், சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராளிகளை டில்லி போலீசு விரட்டி விரட்டி வேட்டையாடுவதில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.
இவை எங்கோ யாருக்கோ நடக்கிற ஒன்று என ஒதுக்கியிருந்தால், இந்தக் கைதுகள் அனைத்தும் படுகொலைகளாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை. அன்று நமக்குக் குரல் கொடுக்கவென யாரும் இருக்கப் போவதில்லை !
போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கோவிட் நோயாக இருக்கலாம்.
தாங்கள் கோவிட் நோய் கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் இருந்து மேற்சொன்ன அறிகுறிகள் தோன்றினால் உங்களை நீங்களே பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்வது சிறந்தது.
கோவிட் நோய் பின்வரும் படிநிலைப்படியே பெரும்பாலானோருக்கு வருகிறது.
காய்ச்சல்( fever) ( முதல் மூன்று நாட்கள்)
⬇️
இருமல்( cough with or without sputum) ( நான்கு முதல் ஏழு நாட்கள்)
⬇️
மூச்சு விடுவதில் சிரமம் ( shortness of breath) ( நான்கு முதல் ஏழு நாட்கள்) Respiratory rate more than 20 per minute
⬇️
ஆக்சிஜன் குறைபாடு ( Hypoxia) spO2 less than 95%
⬇️
மூச்சுத்திணறல் ( எட்டு முதல் பதினான்கு நாட்கள்)( Breathlessness)
⬇️
தீவிர மூச்சுத்திணறல் நிலை ( எட்டு முதல் பதினான்கு நாட்கள்) ( Acute respiratory distress syndrome)
⬇️
நுரையீரல் சுவாச செயலிழப்பு ( Respiratory Failure )
⬇️
மரணம் ( code BLACK)
எனவே காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய மூன்று முக்கிய அறிகுறிகளை முதல் வாரத்தில் பிடித்து எவ்வளவு சீக்கிரம் பரிசோதனை செய்து மருத்துவமனையை அடைகிறோமோ அது நல்லது.
முதல் வார அறிகுறிகளை அலட்சியம் செய்து பின்னாடி இரண்டாவது வாரம் மருத்துவமனையை அடைவது ஆபத்து.
கொரோனா “டேஞ்சர் சைன்ஸ்” கொரோனா அபாய அறிகுறிகள் அனைவரும் அறிய வேண்டியவை !
கொரோனா தொற்று “பாசிடிவ்” என்று கண்டறியப்பட்டவர்களும் அவர்களை கவனித்துக்கொள்பவர்களின் பிரத்யேக கவனத்திற்கு ;
❌ தொடர் இருமல்
❌தொடர்ந்து காய்ச்சல் (102 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் அடிப்பது)
❌ மூச்சு விடுவதில் சிரமம்
❌ நெஞ்சுக்கூடு பகுதியில் தொடர்ந்து வலி/அழுத்துவது போன்ற உணர்வு
❌ எழமுடியாத அளவு சோர்வு
❌ மன நிலையில் குளறுபடி
❌ பகல் நேரம் அதிக உறக்க உணர்வு வந்து உறங்குவது
❌வலிப்பு
❌ முதலில் ஆரம்பித்த தொற்று அறிகுறிகளான காய்ச்சல் / இருமல் போன்றவை மூன்று நாட்களுக்கு பிறகும் தொடர்வது
❌ முகம் மற்றும் உதடுகள் நீல நிறத்தில் மாறுவது
மேற்சொன்ன அபாய அறிகுறிகளை அனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம். இருப்பினும் கண்டெய்ண்மெண்ட் பகுதிகளில் வசிப்பவர்களும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் கட்டாயம் இவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மேற்சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் உடனே அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும்.
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.
கொரோனா காலத்திலும் பணி நியமனத்தில் ஊழலா? சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்.
கொரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில், மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களை வெளி கொணர்தல் முறையில், ஜென்டில் மேன் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழக அரசு நியமித்து வருகிறது.
மூன்று மாதத்திற்கு மட்டுமேயான இந்த தற்காலிக நியமனத்திற்கு, ஒரு மாத ஊதியத்தை கமிஷனாக இந்நிறுவனம் கோரி வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.
அந்நிறுவனத்தின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிறுவனத்திடம் இப்பொறுப்பை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்.
ஊழியர்களை எம்ஆர்பி மூலம் நேரடியாக நியமிக்க வேண்டும். ஆடியோ ஆதாரம் இணைக்கப் பட்டுள்ளது.
டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம். 9940664343
சாவர்க்கர் மீண்டும் செய்திகளில் வந்துள்ளார். கர்நாடகாவில் உள்ள எதிர்கட்சிகள், பெங்களூருவில் உள்ள ஏலாஹன்கா மேம்பாலத்திற்கு சாவர்க்கர் பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல இந்தியர்களை, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள சாவர்க்கர் தூண்டுதலாக இருந்தார் என கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
ஓராண்டுக்கு முன்னர்தான், மராட்டிய தேர்தலுக்கு ஓட்டு சேகரிக்கையில், சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று தனது தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியிருந்தது. பாஜகவின் எதிர்த் தரப்பினர், சாவர்க்கரை இந்து தேசியவாத சித்தாந்தியாகவும், இந்துத்துவா என்ற சொல்லைப் பயன்படுத்தி குறிப்பான வழியில் இந்துக்களை வரையறுத்த ஒரு வகுப்புவாதியாகவே பார்க்கின்றனர். முஸ்லீம் லீக்கின் தனி பாகிஸ்தான் கோரிக்கையை சித்தாந்த ரீதியில் ஏற்புடையதாகச் செய்த “இரு தேசக் கோட்பாட்டிற்கு”- கோட்பாட்டு அடித்தளமிட்டவர்.
அந்த சாவர்க்கர் துவக்கத்தில் இருந்தே வகுப்புவாத மனநிலை கொண்டிருந்தார் என்பதற்கு அவர் சிறுவனாக இருந்த போது மசூதி மீதான அவரது குழுவினர் தாக்குதலே சான்று. இந்துத்துவா வட்டாரங்களுக்குள்ளும் கூட அவர் இரண்டு விசயங்களுக்காக பாராட்டப்படுகிறார். முதலாவது, 1857 போராட்டங்களை “முதல் சுதந்திரப் போர் எனக் குறிப்பிட்ட அவரது நூல். மற்றொன்று அந்தமான் தீவுகளின் செல்லுலார் சிறையில் அடைக்கப்படும் முந்தைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அவர் காட்டிய எதிர்ப்பு. தனது சட்டப் படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என உறுதிமொழி எடுக்க சாவர்க்கர் மறுத்தது உண்மைதான்.
சாவர்க்கர் பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அது அவருக்கு 50 ஆண்டு சிறைதண்டனை பெற வழிவகுத்தது. அது அவருக்கு பெரும் துன்பத்தை விளைவித்தது. ஆனால் உண்மை என்னவெனில், அங்கு அவர்மட்டும் தனியாக அடைக்கப்படவில்லை. செல்லுலார் சிறையின் பெரும்பான்மையான சிறைவாசிகள் கொடூரங்களையும் துன்புறுத்தல்களையும் அனுபவித்தனர். ஆனால் அவர் சிறையிலிருந்த போது, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு மன்னிப்பு மனுக்கள் அனுப்ப முடிவெடுத்தவர்களில் சாவர்க்கரும் ஒருவர். அவரது மனுக்களில் தனது கடந்தகால நடவடிக்கைகளுக்காக மன்னிப்பு மட்டும் கேட்கவில்லை. கூடுதலாக, பிரிட்டிஷ் அரசு எந்த வகையில் விரும்புகிறதோ அந்த வகையில் சாம்ராஜ்ஜியத்திற்கு ஆதரவாக இருப்பதாக உறுதியும் அளித்தார்.
சாவர்க்கரின் ஆதரவாளர்கள் அவரது மன்னிப்புகளை “சாதுரியமான செயல்” என்று நியாயப்படுத்துவதோடு அவரை மராட்டிய மன்னன் சிவாஜியோடும் ஒப்பிடுகின்றனர். உண்மை என்னவெனில், அந்தமான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், சாவர்க்கர் பிரிட்டிஷாருக்கு முழு விசுவாசமாகவே இருந்தார். அதற்காக அவர்களிடமிருந்து மாதம் ரூ. 60 ஓய்வூதியத் தொகை பெற்றார். சுருக்கமாகச் சொன்னால், சுதந்திரப் போராட்டத்தை பலவீனமடையச் செய்ததைத் தவிர, அவர் “சாதுர்யமாக” செயல்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
இந்து தேசியவாதம் எனும் பிரிவினை சித்தாந்ததை முன்வைத்ததன் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியின் நுகத்தடியைத் தூக்கியெறிவதற்கான இந்தியாவின் போராட்டத்தைச் சிதைப்பதற்கான விதையை ஏற்கெனவே விதைத்திருந்தார். ஹிந்து தேசம், முசுலீம் தேசம் என தேசங்களின் கோட்பாட்டை பரப்புரை செய்தார். இந்தியாவை தனது தந்தையர் பூமியாகவும், புனித பூமியாகவும் யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே இந்து என வரையறுக்கவும் செய்தார். அவர் முன்னிலைப்படுத்திய இந்துத்துவா எனும் சொல், மெதுமெதுவாக இந்துயிசத்துக்கு ஒத்த பொருளுடைய சொல்லாகியது. சாவர்க்கரின் பார்வையில், இந்துத்துவா என்பது இந்துத் தன்மையின் முழுமை. ஆனால், இந்துயிசம் மதமாக இருக்கையில், இந்துத்துவா ஒரு அரசியலாக இருக்கிறது. அது ஆரிய இனம் என்று சொல்லப்படும் இனத்தின் மேன்மையையும், பிராமண கலாச்சாரத்தையும் முதன்மைப்படுத்தும் அரசியலாகும்.
சாவர்க்கர் தனது காலகட்டத்தில் நடந்த எந்த ஒரு முக்கியமான பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கங்களிலும் பங்கேற்கவில்லை என்ற உண்மையை அவரது ஆதரவாளர்கள் மேல்பூச்சு பூசி கடந்து செல்கின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க இந்தியர்களை சாவர்க்கர் ஊக்கமூட்டியதாக அவரைப்பற்றி மோடி கூறியதற்கு முரணாக இது இருக்கிறது.
1942-ம் ஆண்டு இந்து மகாசபையின் ஆதாரவாளர்களுக்கு தங்களது பணியிடங்களில் இருந்துகொண்டு வேலை செய்யுமாறும், பிரிட்டிஷ் அரசுக்கு தடங்கல் ஏற்படுத்தும் எதையும் செய்யவேண்டாம் என்றும் சாவர்க்கர் வழிகாட்டுதல் கொடுத்தார். அச்சமயத்தில் பிரிட்டிஷ் இராணுவத்துக்கு லட்சக்கணக்கான இந்துக்களை சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றியதன் மூலம் பிரிட்டிஷாரின் போர் தயாரிப்புகளுக்கு உதவி செய்தார்.
சுபாஷ் சந்திர போஸ் விவகாரத்தில் ஒரு சுவாரசியமான முரண்பாடு பற்றி குறிப்பிடுவது இங்கே மிகவும் அவசியமானது. சாவர்க்கர்தான் சுபாஷ் சந்திர போஸுக்கு ஒரு இராணுவத்தை உருவாக்குமாறு அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில், சுபாஷ் சந்திர போஸ் தனது இந்திய தேசியப் படையைக் கொண்டு பிரிட்டிஷை எதிர்த்துப் போரிடுகையில், சாவர்க்கர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியப் படைக்கு ஆள்சேர்த்துக் கொண்டிருந்தார்.
பகத்சிங்குடனான அவரது முரண்பாடும் சமமான அளவில் கவனிக்கத்தக்கது. சாவர்க்கரின் மன்னிப்பு மனுக்கள், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கோரியதோடு, அவர்களோடு இணைந்து பணிபுரிவதை முன்வைத்தன. ஆனால் பகத் சிங் பிரிட்டிஷாருக்கு எழுதிய கடிதத்தில், அவர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பதாலும், ஒரு கலகக்காரனாக, அவர் படையினரின் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்ள வேண்டுமென்றும், சாகும்வரை தூக்கிலிடப்படக் கூடாது என்றும் எழுதினார்.
இன்று, பிரிவினைக்காக இந்து தேசியவாதிகள் முசுலீம்களையும், காந்தியையும் குற்றம் சாட்டுகின்றனர். காங்கிரஸ் கட்சி “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கையில், இந்து மகாசபை முசுலீம் லீக்கோடு கூட்டணி வைத்து வங்காளம், சிந்து, மற்றும் வட மேற்கு முன்னணி மாகாணம் ஆகியவற்றில் அமைச்சரவையை உருவாக்கியது என்ற உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள இந்து தேசியவாதிகள் விரும்பவில்லை.
இந்து மகாசபை சிந்து மாகாணத்தில் முசுலீம் லீக்கோடு கூட்டணி அமைச்சரவையில் பங்கெடுத்திருந்த காலத்தில்தான், சிந்து சட்டசபை பாகிஸ்தான் உருவாக்கத்துக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவைப் பிரிப்பதில் பிரிட்டிஷாருக்கு இந்து மகாசபையையும் முசுலீம் லீக்கையும் விட மிகச் சிறந்த கூட்டாளிகள் இருந்திருக்க முடியாது.
சாவர்க்கரைப் புகழ்பவர்கள், அவரது வாழ்க்கையின் முதல் பாகத்தில் – சிறையில் அடைக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில் – கவனம் செலுத்துகின்றனர். பிரிட்டிஷாருக்கு எதிரான அவரது முயற்சிகள் எதுவாக இருந்தாலும், அப்போதும் அவர் அடிப்படையில் ஒரு வகுப்புவாதியாகவே இருந்தார். உதாரணத்திற்கு, 1857-ம் ஆண்டு நடைபெற்ற போரை, கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்துக்களும் முசுலீம்களும் இணைந்ததாகப் பார்த்தாரே அன்றி விவசாயிகளின் காலனிய எதிர்ப்புக் கலகமாகப் பார்க்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். சாவர்க்கரை “இந்து தேசியவாதத்தின் தந்தை” என்று குறிப்பிடுகிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.-க்கும் சாவர்க்கருக்கும் இடையில் சில மாற்றுக் கருத்துக்களும் உள்ளது. உதாரணத்திற்கு சாவர்க்கர் பசுவை பயன்பாடுள்ள விலங்காகப் பார்த்தாரே ஒழிய புனிதமிக்கதாகப் பார்க்கவில்லை.
சாதிய பாலியல் படிநிலைகளை அடிப்படையாகக் கொண்ட இந்து புனிதநூல்களை உயர்த்திப் பிடித்த சாவர்க்கர், புத்த மதம் மற்றும் அஹிம்சையினைக் கடுமையாக விமர்சித்தார். அஹிம்சைக் கோட்பாடே இந்தியாவை பலவீனமாக்கியதாக எண்ணினார். அவரது எழுத்துக்களில் அவர் தெளிவான ஆணாதிக்கவாதியாகவே இருந்தார். அதன் காரணமாகவே கடும் பழமைவாத, வகுப்புவாத அரசியலுக்கு அடித்தளமிட்டார். உதாரணத்திற்கு, மராட்டிய மன்னன் சிவாஜி, அவனது படையினரால் அவனுக்குப் பரிசாகக் கொண்டு வரப்பட்ட கல்யாணின் மருமகளை திருப்பியனுப்ப முடிவெடுத்ததை சாவர்க்கர் விமர்சித்தார். அந்தப் பெண் அவமானப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் அது மட்டுமே இந்து கோபத்திற்குப் பழிதீர்த்திருக்கும் என்று சாவர்க்கர் கருதினார்.
காந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு குறித்தும் பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்தக் குற்றத்திற்காக அவர் விசாரிக்கப்பட்டதோடு, உறுதியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். காங்கிரஸ் தலைவரான சர்தார் வல்லபாய் படேல், இந்தக் கொலை இந்து மகாசபையின் தீவிரவாதப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது என்பதில் தெளிவாக இருந்தார்.
இன்னும் சாவர்க்கரை புகழ்பாடுவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. அவரது உருவப்படம் ஏற்கெனவே நாடாளுமன்றத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது… ஆனால் இந்தியாவுக்கு அத்தகைய அடையாளம் தேவையா என்பதுதான் கேள்வி. இந்து தேசியவாதிகளுக்கு அவர் ஏற்கெனவே ஒரு அடையாளமாக இருக்கிறார். ஆனால் அவர் இந்திய தேசியவாதிகளுக்கு, மதச்சார்பற்ற- ஜனநாயக இந்தியாவுக்கான போராட்டத்தில் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்ளாத ஒருவர். இந்து தேசியவாதிகள் அவரது பிரிட்டிஷ் எதிர்ப்பு வாழ்க்கையின் குறுகிய பகுதியை ஒளிவட்டமிட்டுக் காட்டி, அவரை மேன்மைமிக்க நிலையில் வைக்கப் பார்க்கின்றனர். இதுவரை அவர் அடிப்படையான வகுப்புவாதியாகவே இருந்திருக்கிறார். மேலும் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியில், முசுலீம் லீக்குடன் கூட்டணி வைத்து பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையின் நோக்கமாகிய இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கான தர்க்கத்தை வழங்கினார்.
இந்த அனுபத்தை எழுதலாமா. அல்லது இது பலரை பயமுறுத்திவிடுமா என்று பல சிந்தனைகளுக்கு பிறகு இந்த எழுத்து யாரோ ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கருதி இதனை இங்கே பதிவு செய்கிறேன்.
நான் மனோபாரதி. அடையாறில் ஒரு ‘ப்ராண்டிங் ஏஜென்சி’ நடத்தி வருகிறேன். மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிக்கும் முன்பிருந்தே கோவிட்-19 தொடர்பான எல்லா விஷயத்திலும் ரொம்பவே கவனமாகவும் சூதனமாகவும் இருக்க பழகிக் கொண்டோம். லாக்டவுன் அறிவித்த பின்பு மே மாதம் வரை அலுவகத்திற்கு தேவையான அத்தியாவசிய வேலைகளை மட்டும் தேவையான நபர்களை வைத்து செய்து கொண்டோம். யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை. அரசு சில தளர்வுகளை கொண்டுவந்த பின்பு மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து நான்காவது வாரம் வரை மட்டும் அலுவலகத்திலிருந்து வேலை செய்தோம்.
மே 29ம் தேதி மாலை எனக்கு லேசான காய்ச்சல் இருப்பது போன்ற உணர்வு உள்ளுக்குள் ஏற்பட்டது. பயத்தின் காரணமாக அன்று இரவு திருவான்மியூரில் நான் எப்போதும் செல்லும் மருத்துவரிடம் சென்று செக்-அப் செய்துகொண்டபோது எனது உடலில் 97.1 temperature இருந்தது. ஜுரம் இல்லை, சளி இல்லை, தலைவலி இல்லை, இருமல் இல்லை. டாக்டர் மூச்சு விடச் சொல்லி பார்க்கும்போது ‘மூச்சு விடும்போது difficulty இருக்கா?’ என்று கேட்டார்.
‘அப்படி எதுவும் இல்லை டாக்டர். உங்களுக்கு எதுவும் தெரியுதா? கோவிட் இல்ல-ல்ல’ என்று பதட்டத்துடன் கேட்டேன்.
‘ஆன்டி-பயாடிக் தர்றேன். ஜுரம் இல்ல. அதனால இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது’ என்று கூறி ஒரு ஊசியும் சில மாத்திரைகளும் கொடுத்தார்.
மே 30ம் தேதி உடலில் சோர்வு ஏற்பட்டது. வீட்டில் சமைத்த உணவின் ருசி தெரியவில்லை. சமைக்கும் வாசனையும் சரியாக உணர முடியவில்லை. அன்று முழுவதும் உடல் சோர்வாகவே இருந்தது. பயம் அதிகரித்திருந்தது. அதன் காரணமாக வீட்டில் இருக்கும் மற்ற நண்பர்களுக்கு எதுவும் பரவிட கூடாது என்பதற்காக என்னை தனி அறையில் தனிமைப்படுத்திக்கொண்டேன். எனக்கென தனி தட்டும், நான் பயன்படுத்தும் கழிவறையை வேறு யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும், தனியாக வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்தும் வைத்துக்கொண்டேன். அன்று மாலை ஒரு அரைமணி நேரத்திற்கு உள்ளுக்குள் ஜுரம் இருப்பதாக உணர்ந்தேன். நெற்றியில் கழுத்தில் கை வைத்து பார்த்தபோது உடலில் உஷ்ணம் எதுவும் இல்லை. அன்றிரவு தூக்கம் சரியாக இல்லை. முனகிக் கொண்டும் அனத்திக் கொண்டும் இருந்தேன். மறுநாள் மே 31 காலை 5 மணி முதல் 7:30 மணிவரை தூங்கினேன்.
மே 31 காலை 8.30 மணிக்கு, முன்னர் சென்ற அதே டாக்டரிடம் சென்றேன். தூக்கமில்லை என்றும் அவ்வப்போது ஜுரம் வருவதுபோல் ஒரு உணர்வு இருப்பதையும் சுவையோ வாசனை உணர்வோ இல்லை என்பதையும் இரவில் தூக்கமில்லாமல் தவிப்பதையும் சுட்டிக் காட்டினேன். 98.3 temperature இருந்தது. மூச்சு விடுவதில் சிக்கல் எதுவும் இல்லை தெளிவாக இருப்பதாக டாக்டர் சொன்னார். மீண்டும் ‘கோவிட் 19’ இருக்கிறதா என்று கேட்டேன். அதிகமான ஜுரம் மற்றும் ‘ரன்னிங் நோஸ்’ இருந்தால் மட்டும் உடனே டெஸ்ட் எடுத்து விடுங்கள் என்று கூறினார். ஊசி போட்டுக் கொண்டேன். சில மாத்திரைகளை மாற்றி எழுதினார். தூக்கம் வர மாத்திரை கேட்டேன். வேணாம் என்று கூறி, ‘நிறைய தண்ணீர் குடிங்க. நல்லா சாப்புடுங்க’ என்று மட்டும் கூறி அனுப்பி வைத்தார். அன்றிரவு தூக்கம் சரியாக இல்லை. இரவில் புலம்பியதாக நண்பன் கூறினான். பயம் அதிகமாக இருந்தது.
ஜூன் 1 மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொண்டேன். முந்தைய தினம் போன்றே காலை 5 மணிமுதல் 8:30 மணிவரை தூங்கினேன். அதற்குமேல் உடல் சோர்வாக இருந்தது. பகல் முழுதும் சுறுசுறுப்பாக இருந்தேன். இரவில் மீண்டும் தூக்கம் வரவில்லை. ஜுரம் இல்லை. சளி இல்லை. தலைவலி இல்லை. சுவை மற்றும் வாசனை உணர்வு இல்லை. இருமல், தும்மல் இல்லை. விடிந்ததும் ஊருக்கு கிளம்பிவிடுவது என்று முடிவெடுத்துக் கொண்டேன். எனக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சொந்த ஊர்.
ஜூன் 2. காலையில் டிராவல்ஸ்-ல் பேசி வாடகை கார் ஒன்று பேசிவிட்டு அதன் தகவல்களை வைத்து இ-பாஸ் அப்ளை செய்தேன். 30 நிமிடத்தில் கிடைத்தது. மதியம் 2.30 மணிக்கு தேவையாக உடை, லேப்டாப், ஏற்கனவே வாங்கிய மாத்திரைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். கும்பகோணம் தாண்டி திருப்பனந்தாள் என்னும் ஊரில் கார்-ஐ நிறுத்தி இரண்டு இட்லி சாப்பிட்டு மாத்திரை போட்டுக் கொண்டேன். வலங்கைமான் செக்-போஸ்ட்-இல் போலீஸ் நிறுத்தினார்கள். இ-பாஸ்க்காக நான் கொடுத்த என்னுடைய அத்தனை தகவல்களையும் மீண்டுமொருமுறை சரிபார்த்தார்கள். என்னுடைய அம்மா நீடாமங்கலத்தில் துணை வட்டாட்சியராக இருந்ததாலும், அப்பா நீடாமங்கலத்தில் இந்தியன் வங்கியில் துணை மேலாளராக இருந்ததாலும் அங்கே இருக்கும் போலீஸ்காரர்களுக்கு எங்கள் குடும்பத்தை ஏற்கனவே பரிட்சயமாக தெரிந்திருந்தது. சென்னையிலிருந்து வந்திருந்த காரணத்தினால் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று temperature செக் செய்துவிட்டு வீட்டுக்கு செல்லும்படியும் செய்யவில்லையென்றால் மறுநாள் காலை மருத்துவ குழு வீட்டுக்கே வந்து அழைத்துச் செல்லும் என்றும் அறிவுறுத்தினார்கள். அதனால் என் அப்பாவுக்கு போன் செய்து மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வரும்படி கூறினேன்.
மன்னார்குடி வந்து சேர்ந்தபோது மணி இரவு 10.30. அங்கே எனக்கு temperature 98.4. என்னுடைய தகவல்கள் மீண்டும் ஒருமுறை சரி பார்க்கப்பட்டது. நான் வந்த காரை அனுப்பிவிட்டு நானும் அப்பாவும் மட்டும் அங்கே கோவிட்-19 டூட்டி-யில் இருந்த SI-யுடன் பேசிக்கொண்டிருந்தோம். அவரும் அப்பாவுக்கு நன்றாக தெரிந்தவர். மன்னார்குடி அரசு மருத்துவமனையில் Pregnancy Ward இருப்பதனால் கோவிட்-19 சோதனை கிட் அவர்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருக்கிறது என்றும் உடனடியாக நாங்கள் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார். மணி 11 ஆகிவிட்டதால், காலை செல்லலாம் என்று நாங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோம்.
மாதிரிப் படம்
ஜூன் 3. காலை 10 மணி. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம். voluntary testing கொடுப்பதற்கு வந்திருப்பதாக பெயரை பதிவு செய்துகொண்டோம். டெஸ்ட் எடுத்து ரிசல்ட் வரும்வரை இரண்டு நாள் அங்கேயே தங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அதற்கு தயாராகவே வந்திருந்ததால் அங்கேயே தங்கிவிட்டேன். மதியம் 3.15 மணியளவில் கோவிட்-19 டெஸ்ட் எடுத்தார்கள். அன்றிரவு தூக்கம் சரியாக வரவில்லை. சரியான நேரத்தில் சாப்பாடு தந்தார்கள். இத்தனை பெரியவர்களையும் குழந்தைகளையும் டெஸ்ட் செய்யும் இடம் இன்னும் கொஞ்சம் சுத்தமாக பராமரிப்பட்டிருக்கலாம்.
ஜூன் 4. மதியம் 4.30 மணி. ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. கோவிட்-19 பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் 108 ஆம்புலன்சில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திலிருந்து திருவாருர் மெடிக்கல் காலேஜ்-க்கு அழைத்து செல்வார்கள் என்றும் கூறினார்கள். அதற்கு முன் என் சென்னை முகவரி, ஆபிஸ் முகவரி, மன்னார்குடி வீட்டு முகவரி என்று எல்லாவற்றையும் கேட்டு பெற்றுக்கொண்டார்கள். அதே போல் நான் சந்தித்த நபர்கள், கூட தங்கியிருக்கும் நண்பர்கள் எல்லோருடைய தகவல்களும் வாங்கிக் கொண்டார்கள். 6:30 மணிக்கு திருவாரூர் மெடிக்கல் காலேஜில் தனி வார்டு-ல் சேர்த்தார்கள்.
எனக்கு ரிசல்ட் வரும்வரை இருந்த பதட்டம் ரிசல்ட் வந்ததும் இல்லை. சரி. பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. இனி சரியாவதை பற்றி யோசிப்போம் என்று மட்டும் நினைவில் நிறுத்திக் கொண்டேன்.
ஜூன் 4ம் தேதியிலிருந்து ஜூன் 13ம் தேதி வரை திருவாரூர் மெடிக்கல் காலேஜில் தங்கி சிகிச்சை பெற்றேன்.
ஜூன் 4. உடல் சோர்வைத் தவிர எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. பசி இல்லை. முக்கியமாக எனக்கு சத்து இல்லை. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக சரியாக சாப்பிடாததால் உடம்பு ரொம்ப சோர்வாக இருந்தது. இன்னொன்று மாத்திரை எடுத்துக் கொண்டதால் வாய் கசப்பாகவும் அதனால் சாப்பிட முடியாத நிலைமை இருந்தது. அன்றிரவு இசிஜி, XRAY, Blood Test, Pulse, Temperature, BP எடுத்தார்கள். எல்லாமே நார்மல்.
ஜூன் 5. டாக்டர்களிடம் சென்று பசிக்காகவும் உடல் சோர்வுக்காகவும் மருந்து கேட்டேன். இந்த ப்ராசஸ்-ல் இது வரத்தான் செய்யும், பல்லை கடித்துக் கொண்டு நன்றாக சாப்பிட்டு விடுங்கள் சரியாகி விடும் என்று கூறினார்கள். அன்றிரவுதான் வாழ்க்கையின் கோரமான பூதத்தை சந்தித்தேன். இருமல் ஆரம்பமானது. இருமல் என்றால் பேய் தனமான இருமல். இருமினால் எல்லோருக்கும் தொண்டையை அட்ஜஸ்ட் செய்த திருப்தி இருக்கும் அல்லவா. இது அப்படியில்லை. நெஞ்சில் துப்பாக்கியால் துளைத்ததுபோல ஒரு வலி, எவ்வளவு இருமினாலும் போதுமானதாக இல்லை. அதுமட்டுமின்றி சளி இருக்கா இல்லையா வெளியே வருமா வராதா என்ற சந்தேகத்தில் இருமி இருமி இரண்டு கண்களும் பிதுங்கி வெளியே நின்றது. சாதாரண ஜுரத்துக்கே நமக்கு யாரவது ஒத்தாசையாக இருந்து பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றிருக்கும். இது ஒரு கையறு நிலை. யாரும் நெருங்ககூட முடியாது.
ஜூன் 6. எனக்கு வயது 31. இத்துணை வருடத்தில் இப்படி ஒரு கோரமான கொடூரமான ஒரு இருமலை நான் உணர்ந்ததே இல்லை. கிட்டத்தட்ட மரணம் நெருங்குகிறது என்று ஒவ்வொரு இருமலுக்கு இடையிலும் நான் தீர்க்கமாக நம்பினேன். இன்னும் கொஞ்சம் அதிகமாக இருமினால் என் உயிர் பிரிந்துவிடும் என்று பயம் வலுத்துக் கொண்டே இருந்தது. நெஞ்சு வலி வேறு. இரவு உறங்கச் சென்றால் தூக்கத்தில் உயிர் பிரிந்துவிடும் என்று பயமாக இருந்தது. இருமலுக்கு மாத்திரை தந்தார்கள். சீக்கிரமே தூக்கமும் வந்துவிட்டது. நீண்டநாட்களுக்கு பிறகு ஆழ்ந்த உறக்கம்.
ஜூன் 7. இந்த ஒரு நாளில் மட்டும் நான் வாழ்வது அன்றுதான் கடைசி என்று என்னவோ சொல்லிக் கொண்டே இருந்தது. இருமலுடன் சேர்ந்து சளியும் வெளிவரத் துவங்கியது. சளியுடன் ரத்தம் அதிகமாக வந்தது. அதுதான் பயத்தை அதிகமாக்கி பீதியின் உச்சத்துக்கே கொண்டு சென்று விட்டது. பல நேரங்களில் இதுபோல் நடக்கும். வானிலை மாற்றம், பனிக்காலம் என பல சந்தர்ப்பங்களில் இப்படி ரத்தம் வரும். ஆனால் கொரோனாவை சிவப்பு கலரிலேயே நிறைய இடத்தில் காட்டி விட்டதால் பீதியாகிவிட்டது. இருமல், மரணபயம், பசியின்மை, உடல் சோர்வு, மாத்திரை, தூக்கம்.
ஜூன் 8. இருமல் வெகுவாக குறைந்திருந்தது. கால்களை தரையில் ஊன்றினால் நிதானமாக நடக்க முடிந்தது. கொஞ்சம் வலிமையாக இருப்பதாக உணர்ந்தேன். ஏதாவது சாப்பிட வேண்டும் போல் இருந்தது. முட்டையும் மதிய உணவும் சாப்பிட்டு நன்றாக தூங்கினேன். எழுந்து இரவு உணவு சாப்பிட்டு மீண்டும் தூங்கினேன்.
ஜூன் 9. ஜுரம் இல்லை. இருமல் இல்லை. சளி இல்லை. சுவாசப் பிரச்சனை இல்லை. பசித்தது. உடல் ஆரோக்கியமாக மாறுவதாக உணர்ந்தேன். நன்றாக சாப்பிட்டேன். மாத்திரை எடுத்துக் கொண்டேன். நன்றாக தூங்கினேன்.
ஜூன் 10 முதல் ஜூன் 12ம் தேதி வரை எல்லாமே மாறிவிட்டது. நன்றாக சாப்பிட்டேன். முழுக்க எனெர்ஜியுடன் இருந்தேன். எல்லோருக்கும் போன் போட்டு நன்றாக இருப்பதாக சொன்னேன். தூக்கம் வரும்போது தூங்கினேன். ஜூன் 12ம் தேதி காலை 7 மணிக்கு எனக்கு இரண்டாவது டெஸ்ட் எடுக்கப்பட்டது. ஜூன் 13ம் தேதி காலை நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. அன்று மதியம் 12 மணிக்கு திருவாரூரிலிருந்து கிளம்பி 1:00 மணிக்கு மன்னார்குடிக்கு 108 ஆம்புலன்ஸ்-ல் டிராப் செய்தார்கள். நிம்மதியாய் ஒரு குளியலை போட்டுவிட்டு மதிய உணவு சாப்பிட்டு தூங்கினேன். வாழ்க்கை வழக்கம் போல் மீண்டும் அழகானது.
உணவு.
காலை 6 மணிக்கு மஞ்சள் கலந்த பால்
காலை 8.30 மணிக்கு நெல்லித்தண்ணி, கபசுர குடிநீர், பொங்கல் (அ) இட்லி, சாம்பார்.
காலை 11 மணிக்கு வாழைப்பழம், அவித்த முட்டை (அ) சாத்துக்குடி ஜூஸ்.
மதியம் 12.30 மணிக்கு காய்கறி சூப்
மதியம் 1.30 மணிக்கு சாம்பார், சாதம், ரசம்,கூட்டு, நீர் மோர்
மாலை 4 மணிக்கு மஞ்சள் பால், சுண்டல், பிஸ்கட்
இரவு 9 மணிக்கு ஏதாவது உப்மா மற்றும் சாம்பார் அல்லது முட்டை குழம்பு.
சிகிச்சை.
ஜூன் 4 முதல் 13 வரை சிகிச்சையில் இருந்தேன். காலை ஒரு 12 மாத்திரைகளும், மதியத்திற்கு 4 அ 5 மாத்திரைகளும், இரவு 4 அ 5 மாத்திரைகளும் தந்தார்கள். சத்துக்கு, பாரா செட்டமால், சளி, இருமல், ஜிங்க் என்று தனி தனி மாத்திரைகள். அதில்லாமல் ஊசி எதுவும் போடவில்லை. தினமும் மருத்துவர்கள் PPE கிட் அணிந்து உள்ளே வந்து நலம் விசாரிப்பார்கள். சந்தேகத்தை பூர்த்தி செய்வார்கள். நம்பிக்கை சொல்வார்கள். எந்த இடத்திலும் யாருமே பயமுறுத்தவே இல்லை.
நான் சிகிச்சைக்காக சேரும்போது 11 பேர் இருந்தோம் நான் வெளிவந்த நாளில் 57 பேர் இருந்தார்கள். இதில் யாருமே உயிருக்காக போராடவெல்லாம் இல்லை. இதற்கு முழு பொறுப்பு மருத்துவர்களுடையது. 10, 10 நாளாக யாரோ குணமாகி போய்க் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இங்கே இருக்கும் மருத்துவர்களுக்கு எங்கள் முகமெல்லாம் ஞாபகம் இருக்குமா தெரியாது. வாய்ப்புகள் இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் கைகளில் ஒரு முத்தமிட்டு வந்திருக்க ஆசைப்பட்டேன். அவ்வளவு பேரும் ஏதோ போருக்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் சீக்கிரம் வென்று விடுவார்கள் என்று நம்புவோம்.
இந்த வைரஸ் கிருமி நம்மில் யாருமே எதிர்பார்க்காதது. இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இந்த மருத்துவர்களுக்குதான் எவ்வளவு நம்பிக்கை. எல்லாத்தையும் ஒரு கை பார்க்கிறேன் பார் என்று ஒவ்வொரு வருடமும் நல்ல மாணவர்களை தேர்ச்சி செய்து அனுப்பி வைத்துவிட்டு அடுத்த பேட்ச் மாணவர்களுக்கு தயாராகும் ஆசிரியர்கள் போல பலரையும் குணப்படுத்தி அனுப்பிவிட்டு நம்பிக்கையோடு அடுத்தடுத்த நோயாளிகளை வைத்தியம் பார்க்க பறந்துகொண்டிருக்கிறார்கள்.
தேவதைகள் என்றால் அப்படித்தானே.
சிகிச்சை கட்டணம்
Rs.0/- (ஜூன் 3 – ஜூன் 13, 2020)
நன்றி என் குடும்பம், நண்பர்கள் மற்றும் என்னுடைய பிசினஸ் க்ளையன்ட்ஸ். இவர்கள் தந்த நம்பிக்கையும் செய்த பிரார்த்தனைகளும்தான் எனக்கு மீண்டும் மீண்டும் என் மீதும் இந்த வாழ்க்கையின் மீதும் அதீத நம்பிக்கையை தந்துகொண்டே இருந்தது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் முத்தங்களும்.
Finally டெக்ஸாமெத்தாசோன் என்ற ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மருந்து ஒன்று கொரோனா வைரஸ் தொற்றி, தீவிர பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் உயிர் காக்கப் பயன்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மிக குறைந்த அளவு தரக்கூடிய ஸ்டீராய்ட் மருந்தான டெக்ஸாமெத்தாசோன், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் என்று பிரிட்டன் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளுக்குக் கொடுத்தால் மூன்றில் ஒரு பங்கு மரணங்களைக் குறைத்திருக்கலாம் எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
படம் : நன்றி – பி.பி.சி
பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும் என்கிறது இந்த ஆய்வுக் குழு.
ஏராளமான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு இந்த மருந்து பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
இதில் மிக குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இது ஏதோ புதிய, விலை உயர்ந்த மருந்து அல்ல என்பதுதான். ஏற்கனவே சந்தையில் உள்ள, மிக மிக விலை மலிவான மருந்து இது.
அதாவது 20 மாத்திரைகளின் விலை வெறும் ரூ. 3.74 தான். இந்த மருந்து 1960களில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. ஆர்த்திரிட்டிசிற்கும் ஆஸ்துமாவிற்கும் அளிக்கப்பட்டுவந்த ஸ்டீராய்ட் மருந்து இது.
மனித உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும்போது, அந்தப் போராட்டம் அளவு கடந்து செல்லுமானால், அதுவே உடலுக்கு சேதம் ஏற்படுத்துவதாக மாறிவிடும். இந்த சேதாரத்தைத் தடுப்பதற்கு இந்த மருந்து உதவி செய்வதாகத் தெரிகிறது.
நோய்க்கு எதிராக உடல் ஆற்றும் மிதமிஞ்சிய எதிர்வினைக்குப் பெயர் ‘சைட்டோகைன் புயல்’ (cytokine storm). இந்த மிதமிஞ்சிய எதிர்வினை மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது. இந்த சேதாரத்தைத் தடுப்பதற்கு இந்த மருந்து உதவி செய்வதாகத் தெரிகிறது.
தற்போது உலகில் கொரோனாவுக்கு ரெம்டிசீவர் மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதன் விலை இன்னும் தெளிவாகவில்லை. இந்த மருந்து கொரோனா அறிகுறிகளை 15 நாட்களில் இருந்து 11 நாட்களாகக் குறைக்கிறது என்பது மட்டுமே தெரியவந்துள்ளது. மரணத்தைக் குறைக்கிறதா என்பதைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை.
ஆனால், கொரோனாவைப் பொறுத்தவரை எதையும் முழுமையாகச் சொல்ல முடியாது என்பதையும் மனதில் கொண்டு இந்தச் செய்தியைப் படிக்கவும்.
இது தொடர்பான பிபிசி செய்திக்கான லிங்க் கீழே.
டெக்ஸாமெத்தாசோன்: கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிர் காக்கும் முக்கிய கண்டுபிடிப்பு