கோவிட் நோய் எவ்வாறெல்லாம் வெளிப்படலாம் ?
  • அதீத காய்ச்சல் (Fever)
  • இருமல் (cough)
  • மூக்கு ஒழுகுதல் (running nose)
  • தொண்டை வலி (sore throat)
  • உடல் சோர்வு/ தலைவலி (malaise/ headache)
  • நுகர்தல் திறன் இழப்பு/குறைபாடு (Anosmia)
  • சுவைத்தல் திறன் இழப்பு/ குறைபாடு ( Aguesia)

போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கோவிட் நோயாக இருக்கலாம்.

தாங்கள் கோவிட் நோய் கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் இருந்து மேற்சொன்ன அறிகுறிகள் தோன்றினால் உங்களை நீங்களே பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்வது சிறந்தது.

கோவிட் நோய் பின்வரும் படிநிலைப்படியே பெரும்பாலானோருக்கு வருகிறது.

காய்ச்சல்( fever) ( முதல் மூன்று நாட்கள்)
⬇️
இருமல்( cough with or without sputum) ( நான்கு முதல் ஏழு நாட்கள்)
⬇️
மூச்சு விடுவதில் சிரமம் ( shortness of breath) ( நான்கு முதல் ஏழு நாட்கள்) Respiratory rate more than 20 per minute
⬇️
ஆக்சிஜன் குறைபாடு ( Hypoxia) spO2 less than 95%
⬇️
மூச்சுத்திணறல் ( எட்டு முதல் பதினான்கு நாட்கள்)( Breathlessness)
⬇️
தீவிர மூச்சுத்திணறல் நிலை ( எட்டு முதல் பதினான்கு நாட்கள்) ( Acute respiratory distress syndrome)
⬇️
நுரையீரல் சுவாச செயலிழப்பு ( Respiratory Failure )
⬇️
மரணம் ( code BLACK)

எனவே காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய மூன்று முக்கிய அறிகுறிகளை முதல் வாரத்தில் பிடித்து எவ்வளவு சீக்கிரம் பரிசோதனை செய்து மருத்துவமனையை அடைகிறோமோ அது நல்லது.

முதல் வார அறிகுறிகளை அலட்சியம் செய்து பின்னாடி இரண்டாவது வாரம் மருத்துவமனையை அடைவது ஆபத்து.

படிக்க:
♦ கொரோனா பணி நியமன ஊழல் – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் !
♦ சாவர்க்கர், இரு தேசக் கோட்பாடு மற்றும் இந்துத்துவா | ராம் புனியானி

***

கொரோனா “டேஞ்சர் சைன்ஸ்” கொரோனா அபாய அறிகுறிகள் அனைவரும் அறிய வேண்டியவை !

கொரோனா தொற்று “பாசிடிவ்” என்று கண்டறியப்பட்டவர்களும் அவர்களை கவனித்துக்கொள்பவர்களின் பிரத்யேக கவனத்திற்கு ;

❌ தொடர் இருமல்
❌தொடர்ந்து காய்ச்சல் (102 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் அடிப்பது)
❌ மூச்சு விடுவதில் சிரமம்
❌ நெஞ்சுக்கூடு பகுதியில் தொடர்ந்து வலி/அழுத்துவது போன்ற உணர்வு
❌ எழமுடியாத அளவு சோர்வு
❌ மன நிலையில் குளறுபடி
❌ பகல் நேரம் அதிக உறக்க உணர்வு வந்து உறங்குவது
❌வலிப்பு
❌ முதலில் ஆரம்பித்த தொற்று அறிகுறிகளான காய்ச்சல் / இருமல் போன்றவை மூன்று நாட்களுக்கு பிறகும் தொடர்வது
❌ முகம் மற்றும் உதடுகள் நீல நிறத்தில் மாறுவது

மேற்சொன்ன அபாய அறிகுறிகளை அனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம். இருப்பினும் கண்டெய்ண்மெண்ட் பகுதிகளில் வசிப்பவர்களும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் கட்டாயம் இவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மேற்சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் உடனே அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க